புதன், 29 ஏப்ரல், 2026

தாடலை போல் ஆன்மாவும் சிவமும்

 

முத்தி நிலையில் ஆன்மாவும் சிவமும்

 சைவ சித்தாந்த சிந்தனைகள்



முத்தி நிலையில் ஆன்மாவும் சிவமும் நிற்கும் முறைமை

திருவருட் பயன் பாடல் 74

" தாடலை போல் கூடியவை தான் நிகழா வேற்றுஇன்பக்

கூடலை நீ ஏகம் எனைக் கொள் "

    ெதளிவுரை ; தாடலை = தாள் + தலை = தாடலை

தாள் ,தலை என்னும் இரண்டு சொற்கள் கூடி இரண்டாக காணப்படாமல்தாடலை என்னும் ஒரு சொல்லாய் நிற்கின்றன.

  இந்த சொற்புணர்ச்சி போல் உயிரும், சிவமும் ஆகிய இரண்டு பொருள்கள் தம்முட் கலந்து வேறாய் நில்லாத பேரின்பப் புணர்ச்சியையே ஒன்றாதல் ஆகிய முத்தி நிலை என்று கொள்ளவேண்டும்.

   உயிர் சிவத்தோடு கூடி நிற்கும் முறைமைக்கு இவ்வாறு சொற்புணர்ச்சி ஒன்றை உவமையாக எடுத்துக்காட்டுகிறார். தாடலை என்பது தாளும்(பாதமும்), தலையும் என இரு சொல்லே, ஆயினும் அவை இரண்டு என வேறாக காணப்படாமல்ஒரு சொல் போலவே நிற்கின்றன. தாடலை என்பது ஒரு சொல் என்றோ, இரு சொல் என்றோ காெள்ளமுடியாது அது போல உயிரும், இறையும் முத்தி நிலையில் கூடும் போது ஒரு பொருளாக ஆகி விடாமலும், இரண்டு பொருளாக நில்லாமலும் வேறின்றி நிற்கும். சிவம் சிவாநுபவத்தை வழங்குபவனாக, உயிர் அவ்வின்பத்தைதுய்ப்பவனாக என்ற வகையில் இரு பொருள்களாக இருந்தாலும், உயிருக்கு தன்னை பற்றிய உணர்வு தோன்றாது அவ்வின்பத்திலேயே மூழ்கி விடுவதால் அங்கு சிவம் என்ற ஒரு பொருளே உள்ளது போலத் தோன்றும், முத்தி நிலையில் ஆன்மாவும் சிவமும் நிற்கும்முறைமை இதனால் கூறப்படுகிறது.

   தாடலை என்பது போல வேறு புணர்மொழிகள் உண்டு ஆயினும் தாள் என்பது இறைவன் திருவடியையும், தலை என்பது உயிர்களையும் குறிப்பதற்கு பொருந்தி வருவதால் இந்த சொற்களை எடுத்தாளப்பட்டது.

  தாளின் கீழ் தலை வைத்தல் என்பது ஆன்மாவின் செயலாய் ஆன்மா முனைப்பு அடங்கி அருள் வழி நிற்றலைக் குறிக்கும். தலைமீது தாள் வைத்தல் என்பது ஞானாசிரியனாகிய சிவத்தின் செயலாய் பாசத்தை நீக்கி அருள் வழங்குதலை குறிக்கும்

திருச்சிற்றம்பலம்


சைவ சித்தாந்த முத்தி

 சிவப்பிரகாசம் கூறும் சைவ சித்தாந்த முத்தி


சைவ சித்தாந்தத்தில் முத்தி (முக்தி) என்பது ஆன்மா ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று பாசங்களில் (மலங்களில்) இருந்து விடுபட்டு, இறைவனின் திருவடிகளைச் சார்ந்து, சிவானந்தப் பெருவாழ்வை அனுபவிப்பதாகும். இது 'சிவமாம் தன்மை' (சிவத்தோடு ஒன்றி நிற்றல்) எனப்படுகிறது.

சைவ சித்தாந்த முத்தியின் முக்கிய அம்சங்கள்:

பொருள்: பசுவாகிய உயிர், பதி (சிவன்) அருளால் பாச நீக்கம் பெற்று, பேரானந்தம் அடைவதே முத்தி.

மலம் நீங்குதல்: ஆன்மாவை மறைத்துக்கொண்டிருக்கும் ஆணவ மலம் (அறியாமை) முழுமையாக அழியும்.

சிவமாம் தன்மை: முத்தி நிலையில் ஆன்மா சிவனைப் போலவே அறிவும் ஆற்றலும் பெற்று, அதே சமயம் சிவனுடன் ஐக்கியமாகி (ஒன்றிணைந்து) சிவானந்தத்தை அனுபவிக்கும்.

சிவத் திருவடி சார்பு: ஆன்மா தன் தனித்தன்மையை இழந்து, சிவனுடைய திருவடியில் நிலைபெறும்.

சம்பந்தம்: இது பதி-பசு-பாசம் என்ற முப்பொருள்களின் அடிப்படையில் விளங்கும். 

முத்தி நிலைகள்:

சைவ சித்தாந்தம் முத்தியை 'சிவமாம் தன்மை' என்று கூறினாலும், அது சிவனுக்குச் சமமான நிலை அல்ல, சிவனுடன் ஒன்றிநிற்கும் நிலையாகும்

 இவ்வுலகில் வாழ்கின்ற உயிர்கள் இன்பத்திலும துன்பத்திலும் மாறிமாறி  உழன்று வருவதால் இவ்வுலக வாழ்வு குறை உடையது என்பதை எலலாச்சமயங்களும் சுட்டிக் காட்டுகின்றன. எனவே இவ்வுலக வாழ்வின் கட்டிலிருந்து விடுபட்டு நீங்கிப் பேரின்ப வாழ°வேனும் வீடுபேற்றை உயிர்கள் எய்த வேண்டும் என்னும் பொதுமைக் கொள்கையில் எல்லா சமயங்களும் ஒன்றுபடுகின்றன.

  ஒவ்வொரு சமயமும் அதன் கொள்கைகளை விளக்கி அவற்றை உள்ளவாறு உணர்தலே ஞானம் என்றும், அந்த ஞானத்தை அடைவிக்கும் செயல்களே தவம் என்றும் அத்தகைய தவத்தை மேற்கொண்டால் தான் வீடுபேறு அல்லது முத்தி அடைய முடியும் என்றும் கூறுகின்றன. அம்முத்திநிலை எத்தகைய தன்மையுடையது என்று விளக்குவதில தான் சமயங்கள் வேறுபடுகின்றன.

   இங்ஙனம் பல்வகையிலும் ேவறுபட்ட கொள்கைகளை உடைய சமயங்கள் கூறுகின்ற முத்தி நிலைகளை கூறி, அவற்றின் மேம்பட்ட சைவ சித்தாந்தத்தின் முத்தி நிலைக் கொள்கையே சிறந்தது என்று சிவப்பிரகாசம் எடுத்துக்காட்டுகிறது.

  மக்களிடத்துத் துய்க்கும் இன்பமே முத்தி என்பது உலகாயதர் கொள்கை, உருவம் முதலிய ஐந்து கந்தகங்களும் கெடுவதே முத்தி என்பது நான்கு வகை பெளத்தர்கள் கொள்கை. முக்குணங்களும் கெடுவதே முத்தி என்பது சமணரின் கொள்கை. வினைகள் கெடுவதே முத்தி என்பது பிராபகர சமத்தின் கொள்கை, ஆணவ மலம் முற்றும் அழிந்து போவதே முத்தி என்பது அகச்சமயமான பேதவாதம் கூறும். இவ்வுடல் முத்தி நிலையிலும் அழியாது நிலை பெற்றிருக்கும் என்பது சிவசமய வாதிகளின் கொள்கை, ஆன்மா என்ற ஒன்றே அழிந்து போவது முத்தியாகும் என்பது பாற்கரமியவாதத்தின் கொள்கை. உயிர் பசு கரணம் கொட்டுச் சிவ கரணம் பெறுவதே முத்தி என்பது அகச் சமயமான சிவ சங்கிராந்த வாதிகளின் கொள்கை, உயிர் ஒன்றையும் அறியாமல் கல்லைப்போல கிடக்கும் நிலையே முத்தி என்பது பாடாணவாதத்தின் கொள்கை. இவ்வாறு பத்து வகையாக சொல்லப்பட்ட முத்திகள் குற்றமுடையன.

   ஆணவம், கனமம், மாயை ஆகிய மும்மலங்களிலிருந்தும் விடுதலை பெற்று உயிர் அருளோடு கூடி, சிவ பரம்பாெருளோடு பேரின்பத்தை எய்துவே சித்தாந்தத்தின் முத்தி கொள்கையாகும். இதுவே முத்தி பற்றிய சிறந்த கொள்கையாகும்.

   மும் மலங்களோடு அவற்றின் விளைவுகளாகக் கூறபட்ட ஏனைய காரியங்களோடு பொருந்துவதனால் ஆன்மா தனக்கென ஒரு செயல் இன்றி பாசத்தினால் ஈர்க்கப்பட்டு பாச மயமாய நிற்கும். ஆன்மா மேற்கொள்ளும் இடையறாத உண்மை ஞான யோகங்களின் முன் இம் மும் பமலங்களின் குண பேதங்கள் தீ முன்னர் பஞ்சத் துய்ப் போலும்ஆகும். இந்நிலையே திரி மலம் அகலும் நிலை ஆகும். இவ்வாறு திரி மலமும் அகன்ற நிலையில் ஆன்மா அருளோடுங் கூடின இடமே முத்தியாகும். அதாவது ஆன்மாக்கள் சிவனைப் பெறுமிடத்து சிவனுடைய அருட் சத்தியினடமாகச சென்று பெற வேண்டும். இது பற்றிய திருவாசகம் சிவபுராணம் அவனருளாலே அவன்தாள் வணங்கி என்று கூறும். 

  பிறவி பிணயை தருவதாகிய வினைப் போகங்கள் அறவே அழியுமாறு அவச் செயலை போக்கும் தவச் செயல்களை மேற்கொண்டு அருட் சத்தியைவழியிடமாகக் கொண்டு சிவமாம் பேற்றை சார்ந்து சிவபோகமாகிய முத்தி பேற்றை அடைவர் இதுவே அருள்சேர் முத்தி என்பதாகும்

 ஆன்மா பாசத்தில் அழுந்திருக்கும் நிலை கட்டு நிலை, பதியில் அழுந்திருக்கும் நிலை வீட்டு நிலை அல்லது முத்தி நிலை எனப்படும். கட்டு நிலையில் பாசமே தானாய் நின்ற ஆன்மா முத்திநிலையில் பாசத்திற்கு செல்லாது பதியே தானாய்  நிற்கும். அதாவது வீட்டு நிலையில் ஆன்மா திரிமலம் ஆகிய பாசத்தினின்று அகன்று திருவருள் பெற்று, அறிபவனாகிய தன்னையும், தனது அறிவையும் அறியாது சிவம் ஒன்றே அறிந்து அதனுடன் இரண்டறக் கலந்து நிற்கும் நிலையே சித்தாந்த முத்தி நிலையாகும். இம்முத்தி நிலையே இவ்வுலகத்திற்கு மீண்டும் வாராத நிலை என்றும் இன்பத்தில் இருக்கும் நிலை எல்லாப் பேறுகளிலும் மேலான பேறு பெற்ற நிலையாகும். 

சித்தாந்த முத்தயே நன் முத்தி ஏனைய முத்தி யெல்லாம் முத்தியல்ல என்பதனை சிவஞான சித்தியாரும் கூறுகிறது. சிவனது திருவருளே திருவடியாக சொல்லப் படுமாதலால் அடிசேர் முத்தி என்று சித்தியார் கூறுகிறது. 

  நண்ணரிய சிவாந்த ஞான வடிவமாகி

  அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்திருந்தார்  என்று திருநாவுக்கரசர் சிவத்துவம் பெற்றதை சேக்கிழார் பெருமான் அருளிச் செய்வர். எனவே நம் சிவகாம தோத்திர சாஸ்திரங்கள் புராணங்கள் அனைத்தும் சைவ சித்தாந்த முத்திப்பேறே முத்தி பேறு என்பதை அறியலாம்,.

  இங்ங்னம் முப்பொருள்கான பதி, பசு பாசம் பற்றிய இருப்பையும், அவைகளின் இலக்கணங்களையும் சிவப்பிரகாசம் விரிவாக விளக்கி காட்டுகிறது. ஆன்மா அடையும் கேவல, சகல நிலைகளையும் பின் திரிமலம் அறுத்து ஞானம் பெற்று இறைவன் திருவடி அடையும் சுத்தநிலையையும் அவத்தைகள் மூலமாக எடுத்துரைக்கிறது, எனவே சைவ சித்தாந்த முத்தியே ஞான முத்தி சிவனருள் முத்தி

திருச்சிற்றம்பலம்

நன்றி உமாபதியாரின் சிவப்பிரகாசம்

வியாழன், 16 ஏப்ரல், 2026

சிவ ஞானத்தை அடைய

 சிவ ஞானத்தை அடைய


 இறைவனை அறிய முதலில் உன்னைஅறி

உன்னை அறிய குருவை தேடு

உலகில் ஈடுஇணை அற்றது  இறை நிலையே

இறைவனை பிடிக்க வேண்டின் குருவை பிடி குருவே துணை

அன்பில்லா இடத்தில் சிவத்தை அறிய / அடைய முடியாது

அன்பேயே கொடு அன்பையே பெறு

அன்பும் அமைதியும் சிவனின் இருப்பிடம்

உன்னில் நிறைந்த பொருள் சிவம் அதுவே ஜீவனுடன் கலந்துள்ளது

உடலை இயக்குவது உயிர் அந்த உயிரை இயக்குவது சிவமே

இறைவனை அடைய இறைவனாகிய குருவே உதவ முடியும்

இறைவனை அடைய இறைவன் நாமம் மட்டுமே உதவும்

இறைவனின் ஒர் நாமத்தை தேர்வு செய் அதில் லயப்்பட்டு கரைந்து விடு

மன விடுதலை இறைவனால மட்டும் தான் தரமுடியும்

சிந்தித்தால் மட்டுமே சிவம்

உன்னை ஜீவனாக பார்க்காதே சிவமாக பார் சிவனாகி போ

மன விடுதலை இறைவனால் மட்டுமே தரமுடியும்

சித்தத்தை சிவன்பால் வை. 

சிவனை அறிந்தபின் நாம் எவரையும் அறிய வேண்டோம்

சுத்த சிவம் எழுவது குருவுக்குள்ளே

உருகி உருகி அழைக்க சிவம் பெருகி பெருகி நிற்பான்

அன்பே சிவம் சிவமே அன்பு 

பக்தி மற்றும் சரணாகதி: சிவபெருமானை முழுமையாக நம்பி, அவரிடம் சரணடைவது முதல் படியாகும்.

தியானம் (Meditation): மனதை அடக்கி, சிவபெருமானின் வடிவம் அல்லது "சிவாயநம" என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து தியானம் செய்வது சிவஞானத்திற்கு வழிவகுக்கும்.

நிஷ்காமிய சேவை: தன்னலமற்ற செயல் (Selfless service) மூலம் அகங்காரம் நீங்கி, சிவனருள் கிடைக்கும்.

நூல் கல்வி மற்றும் அனுபவம்: சிவ புராணங்கள், சைவ சித்தாந்தம் போன்றவற்றைப் படித்து, அதன்பின் ஞானத்தை அனுபவபூர்வமாக உணர்வது.

யோகப் பயிற்சி: உடலையும் மனதையும் கட்டுப்படுத்தி, மூச்சுப் பயிற்சி (Pranayama) மற்றும் சக்கர தியானம் மூலம் சிவ சக்தியை உணரலாம்.

வாழ்க்கை முறை: பொய், வன்முறை தவிர்த்து, உண்மை, தூய்மை மற்றும் பிறருக்கு உதவுதல் போன்ற தர்மங்களை கடைப்பிடிப்பது. 

 உண்மையான ஞானம் சற்குருவின் அருளாலும், தொடர்ச்சியான பயிற்சியாலும் மட்டுமே கிடைக்கும்

திருச்சிற்றம்பம்


சற்குருவைப் பேதித்தால் எல்லாம் பிழையாகும்.

 சைவ சித்தாந்த துளிகள்


சாதித்த தெல்லாம் தவமேனும் சற்குருவைப் பேதித்தால் எல்லாம் பிழையாகும்.

  ஒருவன் பொறிகளை தன் வசப்படுத்தி சாதித்தன எல்லாம் தவமே ஆனாலும் உபதேசம் அருளும் ஞானாசிரியனை சிவத்தின் வேறாகக் கருதி முரண்பட்டால் அத்தவம் அனைத்தும் பிழைபடும். வேத விதிப்படி யாகம்செய்த தக்கனுக்கு முப்புரம் எரித்த நிகழ்வானது அவன் செய்த சிவநிந்தையால் சிவபெருமான் ஆணை வந்து பொருந்திய தன்மையால் விளங்கியது போலாம் 

  தவம் என்று இ்ங்கு குறிப்பிட்டவை இறப்பில் தவம் என்று சிறப்பிக்கப்டும் சரியை, கிரியை, யோகம்ஆகியன. இம்மூன்றும்சைவமாம் சமயம் சாரும் நல்லூழ் கைகூடப் பெற்று பல பிறவிகளில் தொடர்நதுஇயற்றப்பெறுவன. ஆகையால் இவற்றை சாதித்தல் அதாவது முற்றுப்பெற செய்தல் அரிதாகும். எனவே சாதித்ததெல்லாம் தவமேனும் என்று அதன் அருமைகாட்டி கூறபடகிறது.

 அரிய தவங்களை ஆன்மா சாதித்தாலும் தானாகவே சுதந்திரமாக சாதிக்கவி்ல்லை சிவபெருமான் தோன்றா துணையாக விளங்கி தவநெறியினை அறிவித்து அந்நெறியில் ஆன்மாவை செலுத்துவான். அவன் அருளால் ஆன்மா தவப்படிமுறையில்  இயற்றி முற்றவிக்கிறது.

இவ்வாறு தோன்றாதுணையாக இருந்து ஆன்மா தவநெறியை முற்றவிக்க அருள்செய்த முதல்வனேசற்குருவாக எழுந்தருளி ஞானத்தை உணர்த்துவான். எனவே இந்நிலையில் மாணாக்கன் சற்குருவோடு முரண்பட்டு எதிர்த்தால் அது சிவபிரானையே எதிர்ப்பதாகும.யாரை தோன்றா துணையாக கொண்டு தவத்தை இயற்றினானோ அந்த முதல்வனையே எதிர்த்தால் செய்நன்றி கொன்ற குற்றம் பொருந்தி இயற்றி தவம் அனைத்தும் பிழைபட்டுபோகும் எனவே சாதித்தது எல்லாம் தவமெனும சற்குருவை பேதித்தால் எல்லாம் பிழையாகும் என்று கூறப்படுகிறது  

  அறிவுக்கு அறிவாக விளங்கும் சிவபிரானே குருவாக எழுந்தருளி ஞானத்தை உணர்ததுவான் தன் முதல் குருவுமாய் தவத்தினில் உணர்த்த என்னும சிவஞான போதத்தால் பெறப்படும். இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆ்ண்ட குருமனிதன் தாள் வாழ்க என்னும் இரண்டு அடிகளையும் இணைதத்து நோக்கினால் இவ்வுண்மை விளங்கும்  

  சற்குருவை எதிர்த்தால் சிவபிரானை எதிர்த்தலே ஆகும் என்று உண்மை இனிது விளங்கும். சிவநிந்தை செய்த தக்கன் வரலாறு சான்றாக காட்டப்பட்டது.

 ஞானாசிரியன் கருணையை மறந்து மாறுபடுதல் எவ்வளவு பிழை என்பதனை உணர்க

திருச்சிற்றம்பலம்

நன்றி சித்தாந்த சிகாமணி

திங்கள், 13 ஏப்ரல், 2026

சைவ சித்தாந்தம் / நிட்டைபேறு

 நிட்டை பேறு


சைவ சித்தாந்தம் / நிட்டைபேறு

 நிட்டை என்பது நிலைப்பேறு ஆகும்.உண்மை ஞானம் நான்கினுள் ஒன்று, கேட்டு சிந்தித்துத் துணிந்த பொருளுடன் பிரிவின்றி நிற்றல். முத்தியே நிலைபேறு. ஈறில்லாதவன் ஈசன் ஒருவனே என்பதால் அந்த ஈசனாகிய சிவபெருமான் திருவடிப்பேறே நிட்டை .நிட்டை பேறு என்பது சைவ சித்தாந்தத்தில் ஞான பாதத்தின் உச்சக்கட்ட நிலையான, இறைவனுடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலை (சமாதி) ஆகும். இது கேட்டல், சிந்தித்தல், தெளிதல் ஆகியவற்றிற்குப் பின் வரும் இறுதி நிலையான ‘நிட்டை கூடல்’ ஆகும். இது தியானம், நோன்பு, நிலைபேறு, அல்லது தற்போதத்தை (அகங்காரம்) இழந்து சிவனை உணரும் நிலை எனப் பொருள்படும்

படிநிலைகள்: ஞான நெறியில் சரியை, கிரியை, யோகக் பயிற்சிகளுக்குப் பின், பக்குவம் பெற்ற சாதகன் அடையும் நான்காவது மற்றும் இறுதி நிலை.

  சிவபெருமான் எப்ேபாதும் ஒரு நிலையில்விளங்கும் சத்து. உயிர்களோ சார்ந்ததன் வண்ணம் விளங்குவன. நிலையற்ற அசத்தாகிய உலகத்தைச் சார்ந்து அசத்தாம் தன்மை கொண்டு உழன்று வரும் உயிர்கள் சத்தாகிய சிவத்தைச் சார்வதன் மூலம் நிலைப்பேற்றினை அடைய முடியும்.

  நிலைப்பேறாம் நிட்டை கூடுதல் இறுதிநிலை. சிவஞானிகளுக்கு மட்டுமே இந்தச் சாதனையினை நிகழ்த் இயலும். அவர்களுக்கே கூட நிட்டை கூடும் இறுதிநிலையில் இடையூறுக்கு காரணம் பண்டைப்பயிற்சியாம் உடல் சார்பே. உடல்சார்புக்கு காரணமாய் விளங்கும் மலவாதனையை முற்றிலுமாக நீக்கி,உடல் சார்பினைபற்றறக் களைந்து சிவபொருமான் திருவடியைச் ேசர்வதற்கு தக்க உபாயங்களைத் தெரிவிக்கும் நூல்கள் உபாய நிட்டடை வெண்பா.

  இப்போது நாம் செய்து வருகின்ற சிவவழிபாடுகள் யாவும் ஞான நிட்டையினையே இலக்காக கொண்டுள்ளன. எனவே இலக்கினை பற்றித் தெளிவாக அறிந்து கொண்டால் தான் இலக்கினை நோக்கிச் செய்யும்பயணமாகிய சரியை, கிரியை, ஆகியன ஊக்கமுடன் செம்மையாகநடைபெறும். பயணத்தை நோக்கபவர் சென்றடையும் இடம் தொலைவில் இருப்பினும் அவ்விடத்தினை அடையும் போது தோன்ற வாய்ப்புள்ள இடர்பாடுகளையும், அவற்றை களையும் முறையினையும் முன்னரே உணர்ந்து கொள்வது நன்மைதானே ேமலும் சிவனடியார் பெருமக்கள் தம் பக்தியைப் பெருக்கி நிட்டைக்கும் தமக்கும் உள்ள தொலைவினைக் சுருக்கிக் கொள்ள அவனருள் ேவண்டி நிற்றலன்றோ இயல்பு. அதற்கு நல்ல துணையாக விளங்கும் ஈடு இணையற்ற சாத்திரம் உபாய நிட்டை வெண்பா. நிட்டை கூடுதல் பெருநிலையாக இருக்கவும், அந்நிலையினை எல்லோரும் இப்போதே எய்தலாம் என்று கூறிவருகின்ற போலி கருத்துக்களும் இருந்து வருகின்றன.போலி நிட்டையினை மறுத்து உண்மை நிட்டையானது சரியை, கிரியை, யோகம் என்னும் சிவவழிபாடுகளைப் படிமுறையில் உரிய தீக்கைகளைப் பெற்று செம்மையாக இயற்றுவதன் மூலமே எய்தப்பெறும்.

திருச்சிற்றம்பலம்

தகவல் தொகுப்பு; பாண்டார சாஸ்திரம்

செவ்வாய், 7 ஏப்ரல், 2026

ஐந்து ஐந்தாக அமைந்த பொக்கிஷங்கள்

 ஐந்து ஐந்தாக அமைந்த பொக்கிஷங்கள்


அன்பு நண்பர்களே , வணக்கம் .


ஐந்திற்குள் அடங்கிய (இயற்கையின் ஐந்து நிலைக்குள்) அனைத்தும் என்னென்று பார்ப்போம்.

ஐந்தாக அமைந்தவைகள்


* பஞ்சபுராணம் –                                                                                                                            தேவாரம்,திருவாசகம்,திருவிசைப்பா,திருப்பல்லாண்டு,                       பெரியபுராணம்.

 

* பஞ்ச கங்கை –                                                                                                                              ரத்ன கங்கை,தேவ கங்கை,கயிலாய கங்கை,உத்ர கங்கை, பிரம்ம    கங்கை.

 

* பஞ்சாங்கம் –                                                                                                                                  திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.



* பஞ்ச ரிஷிகள் –                                                                                                                            அகத்தியர்,புலஸ்தியர்,துர்வாசர்,ததீசி, வசிஷ்டர்.


* பஞ்ச குமாரர்கள் –                                                                                                                    விநாயகர்,முருகர்,வீரபத்திரர்,பைரவர்,சாஸ்தா.


* பஞ்ச நந்திகள் –                                                                                                                            போக நந்தி, வேத நந்தி, ஆத்மா நந்தி,மகா நந்தி,தர்ம நந்தி,


* பஞ்ச மூர்த்திகள் –                                                                                                                    விநாயகர், முருகன்,சிவன்,அம்பாள் ,விஷ்ணு.


* பஞ்சாபிஷேகம் –                                                                                                                      வில்வ இலை கலந்த நீர் , ரத்தினங்கள் போடப்பட்ட நீர்,பச்சை            கற்பூரம், குங்குமப்பூ கலந்த நீர் ,கிராம்பு,கொரோசனம் கலந்த நீர் ,    விளாமிச்சை வேர் , சந்தனாதி தைலம் ஆகியவாசனை

பொருட்கள் கலந்த கந்த தோதகம்.

 

* பஞ்ச பல்லவம் –                                                                                                                       அரசு,அத்தி,வில்வம்,மா,நெல்லி.

 

* பஞ்ச இலைகள் –                                                                                                                        வில்வம்,நொச்சி,விளா,துளசி,கிளுகை.


* பஞ்ச உற்சவம் –                                                                                                                          நித்ய உற்சவம்,வார உற்சவம்,பட்ச(மாதம் இருமுறை)உற்சவம்,    மாதாந்திர உற்சவம், வருடாந்திர உற்சவம்.

 

* பஞ்ச பருவ உற்சவம் –                                                                                                          அமாவாசை,பௌர்ணமி, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை                     அஷ்டமி,மாதப்பிறப்பு.


* பஞ்ச பூதங்கள் –                                                                                                                          நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்.


 


* பஞ்ச சபைகள் –                                                                                                                          ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை.

 

* பஞ்ச ஆரண்யம் –                                                                                                                      உஷத் காலம், கால சாந்தி, உச்சிகாலம், சாயரட்சை,                                    அர்த்தஜாமம்.


* பஞ்ச முகங்கள் (சிவன்)-                                                                                                       தத் புருஷம்,அகோரம்,சத்யோஜாதம்,வாமதேவம்,ஈசானனம்.


 


* பஞ்ச முகங்கள் (காயத்திரி)-                                                                                              பிரம்மன்,விஷ்ணு,சதாசிவன்,ருத்ரன்,ஈஸ்வரன்.


* பஞ்ச மாலைகள் –                                                                                                                      இண்டை, தொடை, தொங்கல், கண்ணி, தாமம்.

* பஞ்சமா யக்ஞம் –                                                                                                                      பிரம்ம யக்ஞம், பிதுர் யக்ஞம், தேவ யக்ஞம், பூத யக்ஞம்,                       மானுஷ்ய யக்ஞம்.

 

* பஞ்ச ரத்தினங்கள் –                                                                                                                   வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.


* பஞ்ச தந்திரங்கள் –                                                                                                                    மித்ரபேதம், சுகிர்லாபம், சந்திவிக்ரஹம், லப்தகானி, அசம்ரேசிய காரித்வலம்.


 


* பஞ்ச வர்ணங்கள் –                                                                                                                   வெண்மை,கருமை,செம்மை,பொன்மை,பசுமை.

 

* பஞ்ச ஈஸ்வரர்கள் –                                                                                                                  பிரம்மா,விஷ்ணு,ருத்ரன்,மகேஸ்வரன்,சதாசிவன்.

 

* பஞ்ச கன்னியர்கள் –                                                                                                               அகலிகை, திரௌபதி, சீதை, மண்டோதரி, தாரை.

 

* பஞ்ச பாண்டவர்கள் –                                                                                                              தர்மன், அர்ச்சுனன், பீமன், சகாதேவன், நகுலன்.

 

* பஞ்ச ஹோமங்கள் –                                                                                                                கணபதி ஹோமம், சண்டி ஹோமம், நவக்ரஹ ஹோமம், மகா சுதர்சன ஹோமம், ருத்ர ஏகாதச ஹோமம்.

 

* பஞ்ச சுத்திகள் –                                                                                                                ஆத்ம சுத்தி, ஸ்தான சுத்தி, திரவிய சுத்தி, மந்த்ர சுத்தி, லிங்க சுத்தி.

 

* பஞ்ச கோசம் –                                                                                                          அன்னமய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம்.


 

* பஞ்ச காவ்யம் (பசு)-                                                                                                                பால், தயிர், நெய், கோமியம், சாணம்.

 

* பஞ்ச லோகம் –                                                                                                                             தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, ஈயம்.

 

* பஞ்ச ஜீவநதிகள் –                                                                                                                     ஜீலம், ரவி, சட்லெட்ஜ், பீஸ்(பீயாஸ்), ரசனாப்.


 


* பஞ்ச ஆயுதங்கள்(மகாவிஷ்ணு) –                                                                                சங்கு, சக்கரம், கதை, வாள், வில்.


 


* பஞ்ச நிலங்கள் –                                                                                                                           குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.


* பஞ்ச காப்பியங்கள் –                                                                                                              மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, சிலப்பதிகாரம்.

 

* பஞ்சமா பாதகங்கள் –                                                                                                           காமம், கள்ளுண்டல், களவு, கொலை, பொய்.

 

* பஞ்ச சயனம் –                                                                                                                              அழகு, குளிர்ச்சி, வெண்மை, மென்மை, மணம்.

 

* பஞ்ச புராண ஆசிரியர்கள் –                                                                                                நால்வர், கரு ஆருத்தேவர், சேத்தனார், சேக்கிழார், கச்சியப்பர்

வெள்ளி, 3 ஏப்ரல், 2026

பரம்பொருளே வழிபாட்டிற்கு உரியவன்

 பரம்பொருள் தனக்கு உவமை இல்லாதவன் என்றும், தான் பிறரைத் தொழாதவன் என்றும், பிறப்பு இறப்பு அற்றவன் என்றும் கண்டோம். எது பரம்பொருள்? எது முழுமுதல்? எது உண்மையான கடவுள்? எத்தகைய கடவுள் முழுமுதல் கடவுள் எது வழிபடுவதற்கு உரியது அல்ல? என்பதனைச் சித்தாந்த சைவ மெய்கண்ட நூலான சிவஞான சித்தியார் விளக்குகின்றது.

உலக உயிர்வகைகள் எல்லாம் நால்வகையிலேயே தோன்றுகின்றன. அவை முட்டை வழி தோன்றுவன, வியர்வை வழி தோன்றுவன, விதை, வேர், கிழங்கு வழி தோன்றுவன, கருப்பையில் தங்கித் தோன்றுவன என்பனவாம். முட்டை வழி பறவைகளும், ஊர்வனவும், நீர்வாழ்வனவும் தோன்றும். வியர்வையிலே கிருமி, பேன், புழு, வண்டு, சில ஊர்வனவும், விட்டில் பூச்சி முதலியனவும் தோன்றும். வித்து அல்லது விதை, வேர், கொம்பு, கொடி, கிழங்குகள் போன்றவற்றில் தாவரங்கள் தோன்றும். கருப்பையில் தங்கி வானவர்கள், மாந்தர்கள், நாற்கால் விளங்குகள் தோன்றும். இவ்வாறு தோன்றுவனவே நால்வகைத் தோற்றத்துக்கு உட்படுவன எனப்படுபவை. இவை அனைத்துமே உயிர் வகைகள்தாம். இவை எழுவகைப் பிறப்பிற்கு உட்பட்டு இறத்தலை அடையும். எழுவகை பிறப்பு எனப்படுவது வானவர், மாந்தர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பவையாகும். இவை அனைத்தும் பிறப்புத் இறப்புக்கு உட்படுவதனால் இவை ஒருபோதும் பரம்பொருளாக, வழிபடும் முழுமுதல் பொருளாக ஆக முடியாது என்று சிவஞான சித்தியார் எனும் மெய்கண்ட நூல் குறிப்பிடுகின்றது.

பிறந்து இறப்பது எல்லாம் பரம்பொருளாகாது என்ற தெளிவின்மையினால் தான் இன்று வழிபாட்டில் பல்வேறு குளறுபாடுகள் ஏற்பட்டு இருக்கின்றன. மருத்துவத் தன்மை வாய்ந்த தாவரங்கள் இன்று கடவுளாக மாறியிருக்கின்றன. விதை, வேர், கிழங்கு போன்றவற்றில் இருந்து தோன்றி மடியும் வேப்பிலை, அரச மரம், ஆல மரம், கொன்றை மரம், வில்வம், அறுகம் புல், துளசி, எருக்க வேர், வன்னி, போன்ற தாவரங்கள் பரம்பொருளினைப் போன்று எண்ணப்பட்டு வழிபாட்டிற்குரியனவாகி நிற்கின்றன. சித்த மருத்துவத்திற்கும், பெருமானின் திருநீராட்டிற்கும் பயன்படுத்தப்பட்ட மூலிகைகளான அவை இன்று கடவுளர்களாக மாறியிருக்கின்றன. பரம்பொருளை வழிபடுவதை விடுத்துத் தாவரங்களை வழிபட்டு, உண்மை வழிபாட்டிற்கு வேறுபட்டு நிற்கின்றனர்.

சித்தாந்த சைவத்தில் அடையாளங்களும், சின்னங்களும், உருவகமும் முதன்மை பெறுகின்றன. அவற்றில் புராண அடிப்படையில் உணர்த்தப் படும் உண்மைகள் உருவகமாக உணர்த்தப்படுகின்றன. கட்டியமாக ஓம்காரத்தை யானை முகம், குண்டலினியை உணர்த்தும் பாம்பு, திருந்திய உயிரை உணர்த்தும் மயில், சேவல், ஆடு, சுண்டெலி போன்றவை. இவை அனைத்தும் உயிர்வகைகளே! இவற்றை வழிபடுவது பயனற்றது! இவற்றைப் பரம்பொருளாக வழிபடுவது ஆகாது என்று சைவம் குறிப்படுகின்றது.
தவிர, கருடன், பல்லி, தவளை, மீன் போன்றவை நம்பிக்கையின் அடிபடையில் சகுணங்களாக இடம்பெறுவனவே யன்றி, அவை ஒருபோதும் நம் பிறவி அறுவதற்குத் துணை நிற்க இயலாது. ஏனெனில் அவையும் பிறப்பு இறப்புக்கு உட்படுபவைகளே!

அன்னையும் பிதாவும் முன்னேறிதெய்வம் என்று நன்றியினால் நம் பெற்றோர்களையும் நம் முன்னோர்களையும் வணங்க வேண்டுமே தவிர, அவர்கள் நம் வழிபாட்டிற்குரிய முழுமுதல் பொருளாக முடியாது. கரணியம் அவர்களும் பிறப்புக்கும் இறப்பிற்கும் உட்படுபவர்களே! உலகக் கல்வி ஆசான்களும் சமயக் கல்வி ஆசான்களும் வணக்கத்திற்கு உரியவர்களேயன்றி பரம்பொருளைப் போன்று வழிபாட்டிற்கு உரியவர்கள் அன்று! இன்று பலரும் பரம்பொருளை வழிபடாது தத்தம் சமய ஆசான்களைக் கடவுள் என்று எண்ணி வழிபடுவதும் தவறு என்று சித்தாந்த சைவம் குறிப்படுகின்றது. பிறப்பு இறப்பினுக்கு உட்படும் சமய ஆசான்களைப் போன்றே காவல் தெய்வங்களாகவும், நடுகல் தெய்வங்களாகவும், கிராமத்துத் தேவதைகளாகவும், வானுலகில் வாழ்கின்ற வானவர்களாகவும் (தேவர்களாகவும்) பிறந்து இறக்கின்ற அனைவருமே உயிர்வகைகள்தாம். இவற்றிற்கு இறைவன் சிற்சில ஆற்றல்களைக் கொடுத்திருப்பினும் முழுமுதற் பரம்பொருள் என்று சைவர்களுக்கு வழிபாட்டிற்கு உரியவன் சிவப்பரம் பொருளே! அவனே பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பாற்பட்டவன். மற்றைய அனைத்தும் உயிர் வகைகளே! அவை வணக்கத்திற்கு உரியவையே அன்றி வழிபாட்டிற்கு உரியவை அன்று என்பதே சித்தாந்த சைவத்தின் தலையாய கொள்கை!
திருச்சிற்றம்பலம்