திங்கள், 31 மார்ச், 2014

மணிராஜ்: கலங்காமல் காக்கும் கஜசம்ஹாரமூர்த்தி

மணிராஜ்: கலங்காமல் காக்கும் கஜசம்ஹாரமூர்த்தி

கரு முதல் திரு வரை " அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, மானிடராய் பிறந்த காலை கூன் செவிடு அற்று பிறத்தல் அரிது " என அவ்வை பாடி பாடலின்படி மனிதராகப் பிறந்த நாம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து இறைவன் திருவடியில் ஆனந்தமாய் இருக்க வேண்டும். நம்வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கை பகுதிகளை பன்னிரண்டு பகுதிகளாக பிரித்து பன்னிரு திருமறை நூலின் அடிப்படையில் நம்தேவைகளுக்கு ஏற்ப அந்தந்த நிலைகளில் வாழ்வில் தடுமாறா வண்ணம் நம் சைவ நெறி ஞானப் பெருமக்கள் கூற்றின்படி வாழ்க்கையை நடத்திச் சென்றால் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து முடிவில் திரு என்னும் ஞானத்திருவடியை அடைந்து மீண்டும் பிறாவாநிலை பெற்று வீடுபேற்றை அடையலாம் என்கின்றனர் சைவநெறி அருளாளர்கள் , மனித வாழ்வை கீழ்கண்டவாறு 12 பகுதிகளாக பிரிக்கலாம், 1, குழந்தைப் பேறு 2.குருவருள் 3. வினை நீக்கம். 4. நோயின்றி பாதுகாப்பு 5.கல்விச் செல்வம் 6. செல்வம் 7, திருமணம் 8. திருத்தலச் செலவு ( திருத்தல பயணம்) 9.திருமேனி காண்டல் 10. இறைவனை போற்றி பரவுதல் 11. அடியார்களை வழிபடுதல் 12. வீடு பேறு மனிதராகப் பிறந்த ஒருவர் எவ்வாறு வாழ்வை அமைத்துக் கொள்ளவேண்டுமெனில் நம் வாழ்க்கையில் பெறும் பேறுகளில் தலையாய பேறு மக்கட் பேறு. அதுவும் திருவருளை சிந்திக்கும் ஞானக் குழந்தையை பெறுதல் வேண்டும். ஞானமுள்ள அக்குழந்தைக்கு ஏழு வயதில் முறைப்படி குருநாதரிடம் தீக்கை பெறுவது. அவ்வாறு பெறுவதன் மூலம் திருவருளை எளிதில் பெறலாம். குரு உபதேசத்தின் பயனாக குழந்தையின் வினை நீக்கம் செய்யப்படுகிறது. வினை நீக்கம் செய்யப்பட்டதின் பலனாக உடலில் ஏற்படும் நோய்கள் நீக்கப் படுகிறது. நோயிலிருந்து நீக்கப்பட்ட குழந்தைகள் நல்ல கல்வி கிடைக்க பெறுவது நன்கு கற்றுத் தேறி வாலிபப் பருவத்தில் நேர்மையாக உழைத்து செல்வத்தை சேர்க்க மார்க்கம் பெறப்படும். சேர்த்த செல்வத்தை கொண்டு நல்ல இல்வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்வது, திருமணத்தின் பின்பு தான் தேடிய செலவத்தின் பயனாக திருத்தல செலவுகள் மேற்கொள்ளவதன் பயனாக இறைவனது திருமேனியை கண்டு வழிபடுவது, திருமேனியை கண்ட ஆனந்தத்தில் அன்பால் போற்றுவது, திருவடியைப் போற்றியதன் பயனாக அவனடி மறாத திருத்தொண்டர்களை சிவமாகவே ( சிவனடியார்களை) கண்டுஅவர்களை உள்ளும் புறமும் போற்றுவது. அடியார்கள் நடுவுள் இருக்கும் அருளை பெற்றதின் பயனாக இறுதியில் சிவபெருமானின் திருவடியை அடைவது என வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவது நம்மை பெற்ற தாயை விட மிகச் சிறந்தவர் நமது சிவபெருமான் நாமும் சிவமாம் தன்மையை பெற வேண்டும். அதன் பெருட்டே அந்த சிவனாரும் ஒன்றாய், உடனாய், வேறாய், இருந்து இடையறாது அருள் செய்து கொண்டே இருக்கிறார். நாம் எத்தகைய குற்றம் செய்திருப்பினும் மனம் திருந்தி உண்மையான அன்போடு திருவடியை வணங்கி சரணடைந்து, ஓம் நமசிவாய, சிவாய நம, சிவ சிவ எனச் சொல்லி வழிபாட்டால் அக்குற்றங்களிலிருந்து நம்மை காப்பாற்றுவார் மேலும் இனிமேல் நாம் தவறுகள் செய்யாமலும் தடுப்பார். "தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே ஆவா என்று அங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய் " ஞான சம்பந்தர் பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே ................... திருநாவுக்கரசர் பின்னை என் பிழையை பொறப்பானைப் பிழையெலாம் தவிரப் பணிப்பானை ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, சுந்தரமூர்த் தி சுவாமிகள் பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ .................... மாணிக்க வாசகர் மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின் கண்ணுதலான் பெருங்கருனை கைக் கொள்ளும்...................... பெரிபுராணம் ஓம் நமசிவாயம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாயம்

ஞாயிறு, 30 மார்ச், 2014


ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் தெரியுமா? ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் ஓம் என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம். ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் விஷ்ணு, ஓம் சிவாயநம என்று சொல்லும் போது, அந்தந்த தெய்வங்களிடம் என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என்று பொருள் தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறோம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குரிய பலன் உறுதியாகக் கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமானந்தமும் ஏற்படும். ஓம் என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம். ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம், வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம். வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம். கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று. மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும். மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும். எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும், குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும். உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும். வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும். வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும். சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும். ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும். பின் ஒம் ஓம் ஒம் என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும். வாகனம் ஓட்டும்போதும், தெருவில் நடக்கும்போதும் எந்த மந்திரமும் ஜபிக்கக் கூடாது.

சனி, 29 மார்ச், 2014

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): முற்பிறவி நினைவுகள் உண்மையா?

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): முற்பிறவி நினைவுகள் உண்மையா?

பட்டினத்தார் பாடல் இளமை முதலே இவர் வாழ்வில் அற்புதங்கள் பல நிகழ்ந்ததாய்ச் சொல்லப்படுகின்றது. வானுலக தேவர்களில் ஒருவரான குபேரன் தான் இப்பூவுலகில் பட்டினத்தாராக அவதரித்தார் என்று திருவெண்காட்டுப் புராணம் கூறும். இவரது பெற்றோர்கள் சிவநேசன்-ஞானகலாம்பை ஆவர். இவர்களின் தவப்பயனாய்ப் பிறந்தவரே பட்டினத்தார். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் திருவெண்காடர். கப்பல் வணிகம் மூலம் பெரும் பொருள் ஈட்டிய சிவநேசர் காலமாக உரிய வயதில் ஞானகலாம்பை சிதம்பரச் செட்டியார் சிவகாமியம்மையின் புதல்வியான சிவகலை என்பவரை திருவெண்காடருக்கு மணமுடித்தார். இல்லற வாழ்க்கை இனிதே நடந்தாலும் குழந்தையில்லா ஏக்கம் திருவெண்காடரை வாட்டியது. இறைவனிடம் முறையிட்டார். இறைவன் தாமே குழந்தை வடிவாய் சிவசருமர் என்ற சிவபக்தர் மூலம் திருவெண்காடரைச் சேர்ந்தார். அன்பு மகனை மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்தார். குழந்தை பெரியவனானதும் வியாபாரம் செய்ய அனுப்பினார். திரைகடலோடித் திரவியம் தேடிச் சென்ற மருதவாணன் கப்பல் நிறையத் தவிடு மூட்டையும் வரட்டிகளையும் ஏற்றிக்கொண்டு திரும்பி வந்தான். மருதவாணனுக்குப் பித்துப் பிடித்து விட்டதோ என்றஞ்சிய அவர் வீட்டினுள்ளே சிறை வைத்தார். வரட்டிகளை வெளியே எறிய வரட்டிக்குள் வைரக்கற்கள் சிதறின. தவிடெல்லாம் தங்கமாக மின்ன திகைத்துப்போன திருவெண்காடர் தம் மகனைப் பாராட்டத் தேடுகையில் அவரோ தம் அன்னையாரிடம் சிறு பேழையைக் கொடுக்கச் சொல்லிக் கொடுத்து விட்டு மறைந்து விட்டிருந்தார். மைந்தன் கொடுத்துவிட்டுச் சென்றிருந்த பேழையில் காதற்ற ஊசியும் ஓர் ஓலைச்சீட்டும் இருந்தது. அதில் ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’* என்று எழுதப்பட்டிருந்தது. வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து கொண்ட திருவெண்காடர் தமது மைந்தனாக இதுநாள் வரை இருந்தது திருவிடைமருதூர் பெருமான்தான் என்பதை உணர்ந்து மனம் வருந்தித் துறவறம் பூண்டார். *“காதற்ற ஊசியும் வாராதே காணும் கடைவழிக்கே” பட்டினத்தாரின் இந்த வாசகமும் பாடலும் புதுச்சேரி கருவடிக்குப்பம் சுடுகாட்டில் உள்ள அரிச்சந்திரன் கோவிலில் கல்வெட்டாய் பதிக்கப்பட்டு உலக நிலையாமையை உணர்ந்து நடக்க வேண்டுகிறது. இந்தத் துறவு நிலை வருவதற்கு முன் தன் மனம் இருந்த நிலையை பொருளாசை, பெண்ணாசை, வித்தையாசை என்று மனம் ஆசையின் வாய்க்கப்பட்டு அலைக்கழிப்புற்ற நிலையை அழகிய கண்ணிகளாகப் பாடுகின்றார். “அறியாமை யாம் மலத்தால் அறிவுமுதல் கெட்டனடா பிறியா வினைப் பயனால் பித்துப் பிடித்தனடா” “மாமாயை என்னும் வனத்தில் அலைகிறண்டா” “மண்ணாசைப் பட்டேனை மன்ணுண்டு போட்டதடா” “பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே” “மக்கள் சுற்றத் தாசை மறக்கேனே என்குதே; திக்கரசாம் ஆசையது தீரேனே என்குதே” “வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே; சித்து கற்கும் ஆசை சிதையேனே என்குதே” “மந்திரத்தில் ஆசை மறக்கேனே என்குதே சுந்தரத்தில் ஆசை துறக்கேனே என்குதே” “கட்டுவர்க்கத்து ஆசை கழலேனே என்குதே செட்டுதனில் ஆசை சிதையேனே என்குதே” இதுமட்டுமா, இந்த ஆசையைத் தூண்டும் ஐந்து புலனும் அவருக்கு அடங்கா நிலையையும் தெரிவிக்கின்றார். “ஐந்து புலனும் அடங்கேனே என்குதே; சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே” காமக் குரோதம் கடக்கேனே என்குதே நாமே அரசென்று நாள்தோறும் எண்ணுதே அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே என்று அழுகிறார்.

2014 மகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: ஆன்மா என்பதற்கு விளக்கம்

2014 மகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: ஆன்மா என்பதற்கு விளக்கம்: நமது பூமியில் உள்ள காற்று மண்டலத்திற் குள் பலவித செடிகள் , மரங்கள் வெளியிட்ட உணர்வின் அலைகள் பரவியிருக்கின்றன. அவ்வாறு பலவிதமான உணர்வ...

உயிர்


சாலையில் செல்லும்போது ஒருவன் விபத்துக்குள்ளாகிறான் உடனே அந்நிகழ்ச்சியை கண்டவர்கள் அவன் சுவாசத்தோடு இருந்தால் உடனே அவனுக்கு உயிர்இருக்கிறது, உடனே ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்லுங்கள் என்கிறன்றனர். அந்த உயிர் என்பது என்ன? அது எங்கு இருக்கிறது. கை கால் இழந்தவனும் உயிருடன் தான் இருக்கிறான். இதயத்ைத மாறறு சிகிச்ைச பெற்றவனும் உயிருடன்தான் இருக்கிறான் ஆக உயிர் கை கால்களிலும், இதயத்திலும் இல்லை. கைகால்களை இழப்பதால் உயிர் குறுகிப்ேபாவதும் இல்லை. உயிர் யானை போன்ற பெரிய ஜீவன்களிடத்திலும் எறும்பு போன்ற மிகச்சிறியஜீவன்களிடத்திலும் உள்ளது. ஆகையால் உயிரில் சிறியது பெரியது என இல்லை. அப்படியானால் அந்த உயிர் என்பது யாது? எங்குள்ளது ? என்பது நமக்கு புலப்படுவதில்ைல. ஆனாலும் உடலளவில் அதனை உணர முடிகிறது. ஆனால் காண முடிவுவதில்லை. அது இயக்கிக் கொண்டு இருக்கிறது. என இறுதி வரை உணராது வாழ்ந்து மடிபவர் நம்மிடையே பலர். நாம் செய்த சாதனைகளால் நம் உயிர் மகிழ்கிறது. பிறர் கூறும் தகாத வார்த்தைகளை கேட்டுக்போது உயிர் துவள்கிறது. உதவி,தானம், தருமம், செய்யும் ேபாது உயிர் நிறைகிறது. நோய் நொடியில் உயிர் கலங்குகிறது. பண வரவால் உயிர்இனபுறுகிறது. பண விரயத்தால் உயிர் வாடுகிறது. இவ்வாறு இன்ப துன்பங்களை உடல்வழி அனுவிப்பது உயிர். அதன் வழி நல்லது , கெட்டது என அறிவது உயிர் , உடலுள் எது அனுபவித்து அறிகிறதோ அதுவே உயிர். இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றுபோல் உணரும் உயிர் பக்குவப்பட்டது என உணராலாம். நாம் சூட்டும் பெயர்கள் உடலுக்கே, உயிருக்கில்லை. உயிர் என்றும் நிலைத்த பொருள் ஆகையால் இறப்பு என்பது உடலுக்கே, உயிருக்கன்று. ஒர் உடலை விட்ட உயிர் வேறிடத்தில் இளமையுடைய உடலை எடுத்துப் பிறக்கும்.அப்போது அது வேறுபெயரால் அழைக்கபடும். ஆகையால் மரணபயம் என்பது அறியாமையே. நம்உயிர் என்றும் வாழக்கூடியது ஆனால் உடலுக்கல்ல. உடல்பெற்ற உயிர் அனைத்தும் ஒத்துப்போகும்விசயங்கள் நான்கு,அவை மூச்சு, உணவு, உணர்வு, இனவிருத்தி.ஓர் உயிர் மூலமே மற்றோர் உயிர் இம்மண்ணில் பிறக்கிறது. தாவரங்களும் உயிருடன் இருந்த விதை மூலமே செடியாகி உயிர்பெற்று மண்ணில் மரமாகவோ, செடியாகவோ வளரத் தொடங்கிறது. அது வரை விதைகள் உறங்கும் நிலையில்தான் இருக்கின்றன. இவ்வாறு ஒரு உயிர் ஒரு ஜீவன் அல்லது பொருளிருந்து பிரிந்து மற்றொரு ஜீவனில் பிற்க்கிறது. புது உயிரை நாம் தோற்றுவிக்க இயலாது. இறைவன் என்று உள்ளானோ அன்றே உள்ளது உயிர். நாம் இந்த உடல் வழி இன்ப, துன்பம் அனுபவிக்கும் போதே நன்மை செய்து புண்ணியம் பெற வேண்டும் அது மறுபிறவிக்கு நன்மை தரும். பாவங்கள் செய்தால் தீமை கிடைக்கும். இறை வழிபாட்டை " நான்" என்ற அகங்காரம் இன்றி செய்தால் முக்திக்கு வழி பிறக்கும். இறையுணர்வு மட்டுமே உயிர் உணரும் இன்பங்களில் நிலையானதாகும். ஏனைய இன்பங்கள் நிலையானைவயல்ல. எனவே நம் உயிர் நம்மிடம் இருக்கும் போதே பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாது இறைவழிபாட்டில் நாட்டம் கொண்டால் அடுத்த பிறப்பு அற்ற நிலையே அல்லது மறுபிறப்பில் முக்தி சித்தி கிடைக்க வழிபிறக்கும். திருச்சிற்றம்பலம் , ஓம் நமச்சிவாயம்.

வியாழன், 27 மார்ச், 2014


சித்தர் தாயுமான சுவாமிகளின் இறைவேட்கை அகங்காரம் ஆணவத்தைக் காட்டிலும் கொடியது, இந்தஇயல்பினை கட்டுபடுத்த இயலாது என வருந்தி இறைவனிடம் முறையீடு செய்தவர் தாயுமானவ சித்தர், மெய்யறிவு பெறுவதற்கு எவ்விதப் பயிற்சியும் பெறாமை கருதி வருந்தியவர், இறையருள் பெறும் பக்குவம் எப்போது வாய்க்குமோ என்று ஏங்குகிறார், " எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே" என்னும் கொள்கையுடைய தாயுமானவ சித்தரின் அருள் வேட்கை அளப்பரியதாகும். திருச்சியில் கேடியப்ப பிள்ளையின் மைந்தராக இறையருளால் பிறந்த தாயுமானவர் தந்தை காலமானபோது திருச்சி மன்னராக இருந்த விஜயரங்க சொக்கநாத நாயக்க அரசில் கணக்கராகப் பணியமர்த்தப்பட்டார், சிவபிரான போதம் அறிந்த தாயுமானவரால் அரசாங்க கணக்குகளில் ஈடுபாடு கொள்ள முடியவில்லை, சிவநெறிச் சிந்தனையும் சித்தர் ஈடுபாடும் காலாவதியாகும் மனித வாழ்வின் அற்பக் கணக்குளின் கூட்டல் கழித்தலில் இருந்து பலநேரம் தாயுமானவரை ஒதுங்கியிருக்க செய்தன, அரசு அலுவலோடு இறைப்பணியையும் செய்து வந்தார், மெளனகுரு சுவாமிகளிடம் தன்னை மாணாக்கராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டி தாயுமானவரை சீடராக ஏற்று அவருக்கு யோக ஞான முறைகளையும் உபதேசித்தருளினார். அரண்மனை உத்தியோகத்திலிருந்து நீங்கி விராலிமலைக்கு வந்து நிஸ்டையில் ஆழ்ந்தார் தாயுமானவர். விராலிமலை சித்தர்களின் வாசஸ்தலமாக அந்நாளில் விளங்கி வந்தது. சித்தர் பலரும் தங்கள் சித்திகளுக்கான பயிற்சிக்களமாக அங்கே வாழ்ந்து கொண்டிருந்தபோது சித்தர்களின் தொடர்புகளால் தாயுமானவரும் சித்தரானார். இறவாமை பற்றி சாகாக்கலை கண்டறிந்த சித்தர்களின் ரகசியம் பலவற்றை அவர்களின் அனுபவ வெளிப்பாடாக தாயுமானவர் கண்டறிந்தார். ஆன்மா முக்தியடைய உடம்பு அதற்கு ஒரு கருவியாக வந்தது முக்தியடைவது ஆன்மா மட்டுமே என்பதை உணர்ந்தார் தாயுமானவர். மனமடக்க தியான நிலையே மாற்று என உணர்ந்து தாயுமானவரின் மனம் மோகனத்தில் பற்றிக் கொண்டது, வெயிலின் ஒளியிலே காய்ந்த பலகாலம் சிதையாமலிருப்பது போல சூரியப் பிரகாசமான சிவஜோதியில் திளைப்பவரும் உடலும் ஆன்மாவும் ஒருநாளும் அழிவதில்லை, முக்திக்கு வழி அறியாமல் ஐம்புலங்களைக் காத்து வாழ்வதுதான், ஐம்புலங்களின் உணர்வுகளை வழியோடு தெரிந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கற்றுக் கொண்டு விட்டால் இந்த உடலுக்கு இறப்பே இல்லை என்பதை உணர்ந்தார் தாயுமான சித்தர். உணர்வும் நினைவும் நடுங்கிய பின்னர் மனமானது சுத்த சூனியமான பரவெளியில் திளைத்திருக்கும் இந்நிலையில் மனம் செயலாற்று வெறுமையாக இருக்கும், மெய்யுணர்வாக விளங்கும் பரம்பொருளை தரிசிப்பதற்கு இந்த மன வெறுமை நிலையே தேவைப்படுகிறது என்பதை அறிந்து தெரிந்தார். தாயுமானவர் என்றைக்கும் அழியாத சிவராஜயோகம் வேண்டினார். சிவராஜயோகம் என்பது யோகத்தை கருவியாக கொண்டு சிவத்தியானம் சமாதி என்பனவற்றை முயன்று அடைதலாகும். அகங்காரம் ஆணவத்தை காட்டிலும் கொடியது இந்த இயல்பினை கட்டுபடுத்த இயலாது என வருந்தி இறைவினிடம் முறையீடு செய்தார். மெய்யறிவு பெறுவதற்கு எவ்வித பயிற்சியும் பெறாமை கருதி வருந்தினார். இறையருள் பெறும் பக்குவம் எப்போது வாய்க்குமோ என்று ஏங்கினார். மனம் இறைவனின் திருவடியில் இடும் பலியாகவும் அன்பு அபிசேக நீராகவும் உயிர் நைவேத்தியமாகவும் பிராணனையும் அறிவையும் தூபதீபமாகவும் கொண்டு துதிப்பாதாக கூறுகிறார் தாயுமானவர். உடலும் உயிரும் உடைமைகளும் மனிதனுக்கு சொந்தமானவையல்ல அவை இறைவனுக்கு சொந்தமானவை அவனிடம் ஒப்படைக்கப் படவேண்டியவை என்று கூறித் தன்னை சேர்த்து கொள்ளும்படி இறைவனிடம் முறையிடுககிறார் தாயுமானவர். தாயில்லாச் சேய் போல் அலைந்து துன்புற்ற தன்னை தாயைக் காட்டிலும் கருனை காட்டி மீட்கும்படி சிந்தை நைந்துருக இறைவனிடம் முறையிட்டவர் தாயுமானவர். இறப்பதும், பிறப்பதும் ஆன்மாவின் முடிவல்ல. உடல் மாயை அழிக்கூடியது இந்தச் சித்த தத்துவத்தை உணர்ந்து உலகுக்குரைத்தவர் ஞானாசிரியர் தாயுமானவர் அவருடைய அருட்புலம்பல்களில் சில: என்னை மாயையினின்றும் நீக்கி ஆணவலக் கட்டை அறுத்து நேரே அறிவு வொளியில் எம்மை சேர்த்து வைக்கும் தூக்கி திருவடியை வணங்கும் நாள் எந்நாளே? கருப்கைக்கு இனிஇடம் காட்டாமல் எப்போதும் கருப்பூர மணம் வீசும் கடத்தப் பெருமானின் திருமுகத்தையேகண்டு என் குற்றத்தை ஒழிப்பது எந்நாளோ? மண் முதலிய ஐந்து பாதங்களான உடலுடன் கூடி உலகில் அலைந்து வருந்திய துன்பம் ஒழிய பிரகணத்தலைவரான சிவபெருமானின் திருவருளை நாடும் நாள் எந்நாளே? தீமை விளைவிக்கும் காரணமான பேராசையாம் புலைத்தொழிலியல் பின் அறிவு சென்று விடாது திருவருளால் நன்னெறியில் சேரும் நாள் எந்நாளே? குருடனுக்கு உலகம் முழுவதும் இருள் மயமாக இருக்கும் அதுபோல என் அறிவில் ஆணவ தொடர்பால் விளைந்த அஞ்ஞான மயமாக இருட்கடல் வற்றிப் போவது எந்நாளோ? உலகத் தொடர்புடன் ஆசையின்றி முற்றத் துறந்த சிவனாரும் செல்வம் பெற்ற நல்லதவததவரான பட்டினித்தாரும் அவருடைய மாணவரான பத்திரகிரயார் ஆகியோரின் பண்பை உணர்வது எந்நாளோ? கண்ணால் கண்டவை நிலையில்லாமை என்றும், எங்கும் நிறைந்துள்ள சிவமே நிலையானது என்றும் கூறிய சிவவாக்கியரின் திருவடியை அடையும் நாள் எந்நாளோ? காக்கை, நரி, செந்நாய், கழுகு என்ற இவை சுடுகாட்டில் கூட்டாக கூடி ஒரு நாள் தின்று ஏப்பம் இடுவதற்கு விருந்தாய் இருக்கும் இந்த உடலை "சீ" என்று வெறுப்பது எந்நாளோ.? என் அறிவை ஐம்பொறிகளின் வழியே செல்லவிடாது அடக்கி என்னை போலவே மனித வடிவம் கொண்டுவந்த மவுன குருவின் திருவருள் நிறைவிலே அடியேன் கலந்திடும் நாள் எந்நாளோ? கொடிய பிறப்பிணியை ஒழித்து உலகத்து அடியார்களை ஆட்கொள்ளும் ஞான அரசன் திருஞானசம்பந்தரின் திருவருளை பெறும் நாள் எந்நாளோ? மயக்கும் மாதரால் மயங்கிய நிலைப்பற்றி அருட் புலம்பல்: இளமைப் பருவத்தில் பசுமையான கொங்கைகளால் ஆடவரை மயக்கும் மாதரின் பாழான மயக்கம் நஞ்சு என்று உணர்ந்து வெறுத்து ஒதுக்கி இறைவன் திருவருளை அடையும் நாள் எந்நாளோ? கச்சினால் கட்டப்பட்டுள்ள முலையையும் கரும்புசாறு போன்ற இனிய சொல்லையும் உடைய மங்கையர் மயக்கத்தை நீங்குவது எந்நாளோ? மன்மதனை போன்ற மிக்க காமம் உடையவனை வா என்று சாடை காட்டி இருண்ட கண்களான வலையில் சிக்கிக் கொள்ளுமாறு வீசும் மின்னல் போன்ற மங்கையர் பெயரை மறந்து இறைவன் திருவருளை அடைவது எந்நாளோ? கற்கண்டின்னைப் போன்று இன்சொல்லைப் பேசி ஆடவரின் மனக்கருத்தை உணர்ந்து அடிமையாக்கும் மான் விழியுடைய மங்கையரின் நடிப்பை நீங்குவது எந்நாளோ? விழிகளில் உண்டாகும் வெண்மையான பூழை மறைந்திட அறியாமையைத் தீட்டிய பெண்களின் மயக்கத்தினின்று தப்பி பிழைக்கும் நாள் எந்நாளோ? கரைவைத்த புடவையின் கொச்சத்தில் ஆடவரின் உள்ளத்தையெல்லாம் பிணித்து வைத்துக்கொள்ளும் வஞ்சத்தில் வல்ல மாதர் கட்டினின்று நீங்குவது எந்நாளோ? ஆடவரின் வறுமையைக் காட்டி வஞ்சம் செய்யும் அணிகளைஅணிந்து மங்கையரிடத்து விருப்பம் என்ற பாழ் நிலத்தை நீக்கி பரமன் திருவருளான நிலத்ததில்வளர்ச்சி யடைவது எந்நாளோ? ஆணவம், கன்மம், மாயை, என்னும் மும்மலச சேற்றில் உண்டான முழுக் கம்பீர பாகம் என்னும் நரகத்தை போன்ற மலவுடலில் வெறுப்பு அடைவது எந்நாளோ? உடலில் உண்டாக்கின்ற தீய நாற்றம் அனைத்தையும் மஞ்சளை பூசி நாற்றத்தை மறைத்து பொய்யைப் பேசும் வாயுடைய மங்கையரின் பொல்லாங்கை நான் நீங்குவது எந்நாளோ? ஆடவரின் உறுதியான மனம் என்ற பறவை அகப்பட்டு கொள்ளும்படி கூந்தலான காட்டில் மலர் மாலையான வலையை வைக்கும் மங்கையரின் தந்திரத்தை கடக்கும் நாள் எந்நாளோ?

புதன், 26 மார்ச், 2014

ஞாயிறு, 23 மார்ச், 2014

அன்பும் பற்றும்


அன்பும் பற்றும் " பிள்ளையாரப்பா........ ! நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் உனக்கு பாலாபிசேகம் செய்கிறேன்," " என்மகள் திருமணம் நடந்து விட்டால் நான் பழனிக்கு வந்து மொட்டை போட்டுக்கொள்கிறேன்." என பலர் தங்கள் விருப்பங்களுக்கேற்ப ஆண்டவனிடம் வேண்டுதல் ைவ்பபர், இந்த வேண்டுதல்கள் அனைத்தும் இறைவன் பால் கொண்ட அன்பாக கருதமுடியாது. அவையெல்லாம் வேண்டுதல்கள் அவையே அந்தந்த தேவையின் பொருட்டு ஏற்பட்ட பற்றைத்தான் காட்டும், இவற்றில் முன்னது " தான்" என்ற பற்று. பின்னது தன் மகள் மீது உள்ள பற்று , நம் வழிபாடுகள் உறவுகள் அனைத்தும் இன்ற பற்றை அடிப்படையாக வைத்தே அமைந்துள்ளன. அன்பு வேறு, பற்று வேறு தன்னைப் பெற்ற தாயிடம் பால் குடித்த ஞானசம்பந்தர் உமையிடமும் ஞானப்பால் உண்டார். பின் அவர் சமணத்தை அறத்து, சைவத்தைக் காக்க மதுரை வருகின்றார். மதுரைக்கு அரசி மங்கையர்கரசி அவரே ஞானசம்பந்தரை எதிர்கொண்டு அழைக்கின்றார், "அச்சிறு குழந்தையைக் கண்டதும் அன்பின் மிகுதியால் மங்கையர்கரசியிடமும் பால் சுரந்ததாம் !" இப்படிப் பாடுகிறார் கற்பனைக் களஞ்சயம் சிவப்பிரகாசர். இதுதான் உண்மை அன்பு. எதையும் எதிர்பாராது விளைவது அன்பு, மறு தேவையை ( பிரதி பிரயோஜனம் ) எதிர்பார்த்து உண்டாவது பற்று. அதுவே பாசம் எனப்படுகிறது, நாம் மற்றவர் மீது கொண்டுள்ளது பற்று. பற்றையே பாசத்தையே அன்பு என எண்ணி வாழ்கிறோம். ஆம் பற்றைப் பெருக்கி அதனையேய அன்பு என மயங்கி வாழ்கிறோம் இவ்வுலகமே பற்று என்கிறார் மாணிக்க வாசகர். " வைத்த நிதி, பெண்டீர், மக்கள் குலம், கல்வி, என்னும் பித்த உலகில் பிறப்போடு இறப்பு என்னும் சித்த விகாரக் கலக்கம் தெளித்த ........ " என்றும் " எந்தை எந்தை சுற்றம் மற்றும் எல்லாம் என்னுடைய பந்தம் அறுத்து .............. " என்றும் பாடியுள்ளார், நாம் பெற்ற கல்வி, செல்வம், உறவு அனைத்தும் பற்று. அந்த மனக் குழப்பத்தைத் தெளித்தவன் இறைவன் என்று அவர் பாடுகிறார். இவ் உலகப் பொருள் அனைத்தும் பறறு, பாசம், இவற்றை விட்டு விலகுவோம், இதைக் கடந்து அன்பு உள்ள நெகிழ்வு மனஇளக்கம், இது எல்லோரிடத்தும் எல்லா உயிரிடத்தும் காட்டக் கூடியது. இதற்கு மட்டுமே கட்டுப்பட்டவன் இறைவன், அதனால்தான் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டனர், முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி, மயிலுக்கு தன்னுடைய அங்கியை வழங்கினான் ஒரு மன்னன். அந்த உள்ள நெகிழ்வு அது, அன்பினால் தான் அவனை அடைய முடியும், "அன்பே சிவமாகிறது " என்றார் திருமூலர். மாணிக்கவாசகரும் " அன்பாய அன்பருக்கு அவரினும் அன்ப போற்றி " எனப்பாடுகிறார். அன்பை உடையவர் அன்பர். அவரிடத்தும் அன்பாக இறைவன் இருப்பார் இருக்கின்றார். ஞானசம்பந்தரது பல்லக்கை அப்பர் சுமந்தார். தொண்டருக்கு தொண்டர் ஆனார் அவர் , அவருக்கும் தொண்டன் இறைவன் அப்பரின் பால் அன்பு கொண்டு அவரை காணாமலே அவர்மீது அன்பு கொண்டு அவர் நாமத்தைக் கொண்டே உழவாரப்பணிகள் செய்துவந்தார் அப்பூதியடிகள், இப்படி போட்டி போட்டுக் கொண்டு அன்பை பொழிபவன் இறைவன். அதுபோல அடியாருக்கு நான் அடியேன் என்றார் சுந்தரர், அவருக்கும் அடியாரானார் சேரமான் பெருமான், அவருக்கும் அடியவன் இறைவன், இவரில் யாருக்கு யார் அடியார்? அன்பினால் விளைந்த இணைப்பு இது. எதையும் எதிர்பாராத அன்பு இது. " அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவலார் அன்பே சிவமா வதாரும் அறிகலார் அன்பே சிவமாவதாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே. " திருமூலர் எனவே நாமும் பற்றைவிட்டு எதையும் எதிர்பாராது அன்பை அனைவரிடமும் காட்டுவோம். அவ்வன்பே இறையைக் காட்டும், அவ் அன்பே இறையாக வரும், அன்பே சிவம் - சிவமே அன்பு திருச் சிற்றம்பலம்

அன்பும் பற்றும்


அன்பும் பற்றும் " பிள்ளையாரப்பா........ ! நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் உனக்கு பாலாபிசேகம் செய்கிறேன்," " என்மகள் திருமணம் நடந்து விட்டால் நான் பழனிக்கு வந்து மொட்டை போட்டுக்கொள்கிறேன்." என பலர் தங்கள் விருப்பங்களுக்கேற்ப ஆண்டவனிடம் வேண்டுதல் ைவ்பபர், இந்த வேண்டுதல்கள் அனைத்தும் இறைவன் பால் கொண்ட அன்பாக கருதமுடியாது. அவையெல்லாம் வேண்டுதல்கள் அவையே அந்தந்த தேவையின் பொருட்டு ஏற்பட்ட பற்றைத்தான் காட்டும், இவற்றில் முன்னது " தான்" என்ற பற்று. பின்னது தன் மகள் மீது உள்ள பற்று , நம் வழிபாடுகள் உறவுகள் அனைத்தும் இன்ற பற்றை அடிப்படையாக வைத்தே அமைந்துள்ளன. அன்பு வேறு, பற்று வேறு தன்னைப் பெற்ற தாயிடம் பால் குடித்த ஞானசம்பந்தர் உமையிடமும் ஞானப்பால் உண்டார். பின் அவர் சமணத்தை அறத்து, சைவத்தைக் காக்க மதுரை வருகின்றார். மதுரைக்கு அரசி மங்கையர்கரசி அவரே ஞானசம்பந்தரை எதிர்கொண்டு அழைக்கின்றார், "அச்சிறு குழந்தையைக் கண்டதும் அன்பின் மிகுதியால் மங்கையர்கரசியிடமும் பால் சுரந்ததாம் !" இப்படிப் பாடுகிறார் கற்பனைக் களஞ்சயம் சிவப்பிரகாசர். இதுதான் உண்மை அன்பு. எதையும் எதிர்பாராது விளைவது அன்பு, மறு தேவையை ( பிரதி பிரயோஜனம் ) எதிர்பார்த்து உண்டாவது பற்று. அதுவே பாசம் எனப்படுகிறது, நாம் மற்றவர் மீது கொண்டுள்ளது பற்று. பற்றையே பாசத்தையே அன்பு என எண்ணி வாழ்கிறோம். ஆம் பற்றைப் பெருக்கி அதனையேய அன்பு என மயங்கி வாழ்கிறோம் இவ்வுலகமே பற்று என்கிறார் மாணிக்க வாசகர். " வைத்த நிதி, பெண்டீர், மக்கள் குலம், கல்வி, என்னும் பித்த உலகில் பிறப்போடு இறப்பு என்னும் சித்த விகாரக் கலக்கம் தெளித்த ........ " என்றும் " எந்தை எந்தை சுற்றம் மற்றும் எல்லாம் என்னுடைய பந்தம் அறுத்து .............. " என்றும் பாடியுள்ளார், நாம் பெற்ற கல்வி, செல்வம், உறவு அனைத்தும் பற்று. அந்த மனக் குழப்பத்தைத் தெளித்தவன் இறைவன் என்று அவர் பாடுகிறார். இவ் உலகப் பொருள் அனைத்தும் பறறு, பாசம், இவற்றை விட்டு விலகுவோம், இதைக் கடந்து அன்பு உள்ள நெகிழ்வு மனஇளக்கம், இது எல்லோரிடத்தும் எல்லா உயிரிடத்தும் காட்டக் கூடியது. இதற்கு மட்டுமே கட்டுப்பட்டவன் இறைவன், அதனால்தான் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டனர், முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி, மயிலுக்கு தன்னுடைய அங்கியை வழங்கினான் ஒரு மன்னன். அந்த உள்ள நெகிழ்வு அது, அன்பினால் தான் அவனை அடைய முடியும், "அன்பே சிவமாகிறது " என்றார் திருமூலர். மாணிக்கவாசகரும் " அன்பாய அன்பருக்கு அவரினும் அன்ப போற்றி " எனப்பாடுகிறார். அன்பை உடையவர் அன்பர். அவரிடத்தும் அன்பாக இறைவன் இருப்பார் இருக்கின்றார். ஞானசம்பந்தரது பல்லக்கை அப்பர் சுமந்தார். தொண்டருக்கு தொண்டர் ஆனார் அவர் , அவருக்கும் தொண்டன் இறைவன் அப்பரின் பால் அன்பு கொண்டு அவரை காணாமலே அவர்மீது அன்பு கொண்டு அவர் நாமத்தைக் கொண்டே உழவாரப்பணிகள் செய்துவந்தார் அப்பூதியடிகள், இப்படி போட்டி போட்டுக் கொண்டு அன்பை பொழிபவன் இறைவன். அதுபோல அடியாருக்கு நான் அடியேன் என்றார் சுந்தரர், அவருக்கும் அடியாரானார் சேரமான் பெருமான், அவருக்கும் அடியவன் இறைவன், இவரில் யாருக்கு யார் அடியார்? அன்பினால் விளைந்த இணைப்பு இது. எதையும் எதிர்பாராத அன்பு இது. " அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவலார் அன்பே சிவமா வதாரும் அறிகலார் அன்பே சிவமாவதாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே. " திருமூலர் எனவே நாமும் பற்றைவிட்டு எதையும் எதிர்பாராது அன்பை அனைவரிடமும் காட்டுவோம். அவ்வன்பே இறையைக் காட்டும், அவ் அன்பே இறையாக வரும், அன்பே சிவம் - சிவமே அன்பு திருச் சிற்றம்பலம்

அன்பும் பற்றும்


அன்பும் பற்றும் " பிள்ளையாரப்பா........ ! நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் உனக்கு பாலாபிசேகம் செய்கிறேன்," " என்மகள் திருமணம் நடந்து விட்டால் நான் பழனிக்கு வந்து மொட்டை போட்டுக்கொள்கிறேன்." என பலர் தங்கள் விருப்பங்களுக்கேற்ப ஆண்டவனிடம் வேண்டுதல் ைவ்பபர், இந்த வேண்டுதல்கள் அனைத்தும் இறைவன் பால் கொண்ட அன்பாக கருதமுடியாது. அவையெல்லாம் வேண்டுதல்கள் அவையே அந்தந்த தேவையின் பொருட்டு ஏற்பட்ட பற்றைத்தான் காட்டும், இவற்றில் முன்னது " தான்" என்ற பற்று. பின்னது தன் மகள் மீது உள்ள பற்று , நம் வழிபாடுகள் உறவுகள் அனைத்தும் இன்ற பற்றை அடிப்படையாக வைத்தே அமைந்துள்ளன. அன்பு வேறு, பற்று வேறு தன்னைப் பெற்ற தாயிடம் பால் குடித்த ஞானசம்பந்தர் உமையிடமும் ஞானப்பால் உண்டார். பின் அவர் சமணத்தை அறத்து, சைவத்தைக் காக்க மதுரை வருகின்றார். மதுரைக்கு அரசி மங்கையர்கரசி அவரே ஞானசம்பந்தரை எதிர்கொண்டு அழைக்கின்றார், "அச்சிறு குழந்தையைக் கண்டதும் அன்பின் மிகுதியால் மங்கையர்கரசியிடமும் பால் சுரந்ததாம் !" இப்படிப் பாடுகிறார் கற்பனைக் களஞ்சயம் சிவப்பிரகாசர். இதுதான் உண்மை அன்பு. எதையும் எதிர்பாராது விளைவது அன்பு, மறு தேவையை ( பிரதி பிரயோஜனம் ) எதிர்பார்த்து உண்டாவது பற்று. அதுவே பாசம் எனப்படுகிறது, நாம் மற்றவர் மீது கொண்டுள்ளது பற்று. பற்றையே பாசத்தையே அன்பு என எண்ணி வாழ்கிறோம். ஆம் பற்றைப் பெருக்கி அதனையேய அன்பு என மயங்கி வாழ்கிறோம் இவ்வுலகமே பற்று என்கிறார் மாணிக்க வாசகர். " வைத்த நிதி, பெண்டீர், மக்கள் குலம், கல்வி, என்னும் பித்த உலகில் பிறப்போடு இறப்பு என்னும் சித்த விகாரக் கலக்கம் தெளித்த ........ " என்றும் " எந்தை எந்தை சுற்றம் மற்றும் எல்லாம் என்னுடைய பந்தம் அறுத்து .............. " என்றும் பாடியுள்ளார், நாம் பெற்ற கல்வி, செல்வம், உறவு அனைத்தும் பற்று. அந்த மனக் குழப்பத்தைத் தெளித்தவன் இறைவன் என்று அவர் பாடுகிறார். இவ் உலகப் பொருள் அனைத்தும் பறறு, பாசம், இவற்றை விட்டு விலகுவோம், இதைக் கடந்து அன்பு உள்ள நெகிழ்வு மனஇளக்கம், இது எல்லோரிடத்தும் எல்லா உயிரிடத்தும் காட்டக் கூடியது. இதற்கு மட்டுமே கட்டுப்பட்டவன் இறைவன், அதனால்தான் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டனர், முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி, மயிலுக்கு தன்னுடைய அங்கியை வழங்கினான் ஒரு மன்னன். அந்த உள்ள நெகிழ்வு அது, அன்பினால் தான் அவனை அடைய முடியும், "அன்பே சிவமாகிறது " என்றார் திருமூலர். மாணிக்கவாசகரும் " அன்பாய அன்பருக்கு அவரினும் அன்ப போற்றி " எனப்பாடுகிறார். அன்பை உடையவர் அன்பர். அவரிடத்தும் அன்பாக இறைவன் இருப்பார் இருக்கின்றார். ஞானசம்பந்தரது பல்லக்கை அப்பர் சுமந்தார். தொண்டருக்கு தொண்டர் ஆனார் அவர் , அவருக்கும் தொண்டன் இறைவன் அப்பரின் பால் அன்பு கொண்டு அவரை காணாமலே அவர்மீது அன்பு கொண்டு அவர் நாமத்தைக் கொண்டே உழவாரப்பணிகள் செய்துவந்தார் அப்பூதியடிகள், இப்படி போட்டி போட்டுக் கொண்டு அன்பை பொழிபவன் இறைவன். அதுபோல அடியாருக்கு நான் அடியேன் என்றார் சுந்தரர், அவருக்கும் அடியாரானார் சேரமான் பெருமான், அவருக்கும் அடியவன் இறைவன், இவரில் யாருக்கு யார் அடியார்? அன்பினால் விளைந்த இணைப்பு இது. எதையும் எதிர்பாராத அன்பு இது. " அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவலார் அன்பே சிவமா வதாரும் அறிகலார் அன்பே சிவமாவதாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே. " திருமூலர் எனவே நாமும் பற்றைவிட்டு எதையும் எதிர்பாராது அன்பை அனைவரிடமும் காட்டுவோம். அவ்வன்பே இறையைக் காட்டும், அவ் அன்பே இறையாக வரும், அன்பே சிவம் - சிவமே அன்பு திருச் சிற்றம்பலம்

அன்பும் பற்றும் " பிள்ளையாரப்பா........ ! நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் உனக்கு பாலாபிசேகம் செய்கிறேன்," " என்மகள் திருமணம் நடந்து விட்டால் நான் பழனிக்கு வந்து மொட்டை போட்டுக்கொள்கிறேன்." என பலர் தங்கள் விருப்பங்களுக்கேற்ப ஆண்டவனிடம் வேண்டுதல் ைவ்பபர், இந்த வேண்டுதல்கள் அனைத்தும் இறைவன் பால் கொண்ட அன்பாக கருதமுடியாது. அவையெல்லாம் வேண்டுதல்கள் அவையே அந்தந்த தேவையின் பொருட்டு ஏற்பட்ட பற்றைத்தான் காட்டும், இவற்றில் முன்னது " தான்" என்ற பற்று. பின்னது தன் மகள் மீது உள்ள பற்று , நம் வழிபாடுகள் உறவுகள் அனைத்தும் இன்ற பற்றை அடிப்படையாக வைத்தே அமைந்துள்ளன. அன்பு வேறு, பற்று வேறு தன்னைப் பெற்ற தாயிடம் பால் குடித்த ஞானசம்பந்தர் உமையிடமும் ஞானப்பால் உண்டார். பின் அவர் சமணத்தை அறத்து, சைவத்தைக் காக்க மதுரை வருகின்றார். மதுரைக்கு அரசி மங்கையர்கரசி அவரே ஞானசம்பந்தரை எதிர்கொண்டு அழைக்கின்றார், "அச்சிறு குழந்தையைக் கண்டதும் அன்பின் மிகுதியால் மங்கையர்கரசியிடமும் பால் சுரந்ததாம் !" இப்படிப் பாடுகிறார் கற்பனைக் களஞ்சயம் சிவப்பிரகாசர். இதுதான் உண்மை அன்பு. எதையும் எதிர்பாராது விளைவது அன்பு, மறு தேவையை ( பிரதி பிரயோஜனம் ) எதிர்பார்த்து உண்டாவது பற்று. அதுவே பாசம் எனப்படுகிறது, நாம் மற்றவர் மீது கொண்டுள்ளது பற்று. பற்றையே பாசத்தையே அன்பு என எண்ணி வாழ்கிறோம். ஆம் பற்றைப் பெருக்கி அதனையேய அன்பு என மயங்கி வாழ்கிறோம் இவ்வுலகமே பற்று என்கிறார் மாணிக்க வாசகர். " வைத்த நிதி, பெண்டீர், மக்கள் குலம், கல்வி, என்னும் பித்த உலகில் பிறப்போடு இறப்பு என்னும் சித்த விகாரக் கலக்கம் தெளித்த ........ " என்றும் " எந்தை எந்தை சுற்றம் மற்றும் எல்லாம் என்னுடைய பந்தம் அறுத்து .............. " என்றும் பாடியுள்ளார், நாம் பெற்ற கல்வி, செல்வம், உறவு அனைத்தும் பற்று. அந்த மனக் குழப்பத்தைத் தெளித்தவன் இறைவன் என்று அவர் பாடுகிறார். இவ் உலகப் பொருள் அனைத்தும் பறறு, பாசம், இவற்றை விட்டு விலகுவோம், இதைக் கடந்து அன்பு உள்ள நெகிழ்வு மனஇளக்கம், இது எல்லோரிடத்தும் எல்லா உயிரிடத்தும் காட்டக் கூடியது. இதற்கு மட்டுமே கட்டுப்பட்டவன் இறைவன், அதனால்தான் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டனர், முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி, மயிலுக்கு தன்னுடைய அங்கியை வழங்கினான் ஒரு மன்னன். அந்த உள்ள நெகிழ்வு அது, அன்பினால் தான் அவனை அடைய முடியும், "அன்பே சிவமாகிறது " என்றார் திருமூலர். மாணிக்கவாசகரும் " அன்பாய அன்பருக்கு அவரினும் அன்ப போற்றி " எனப்பாடுகிறார். அன்பை உடையவர் அன்பர். அவரிடத்தும் அன்பாக இறைவன் இருப்பார் இருக்கின்றார். ஞானசம்பந்தரது பல்லக்கை அப்பர் சுமந்தார். தொண்டருக்கு தொண்டர் ஆனார் அவர் , அவருக்கும் தொண்டன் இறைவன் அப்பரின் பால் அன்பு கொண்டு அவரை காணாமலே அவர்மீது அன்பு கொண்டு அவர் நாமத்தைக் கொண்டே உழவாரப்பணிகள் செய்துவந்தார் அப்பூதியடிகள், இப்படி போட்டி போட்டுக் கொண்டு அன்பை பொழிபவன் இறைவன். அதுபோல அடியாருக்கு நான் அடியேன் என்றார் சுந்தரர், அவருக்கும் அடியாரானார் சேரமான் பெருமான், அவருக்கும் அடியவன் இறைவன், இவரில் யாருக்கு யார் அடியார்? அன்பினால் விளைந்த இணைப்பு இது. எதையும் எதிர்பாராத அன்பு இது. " அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவலார் அன்பே சிவமா வதாரும் அறிகலார் அன்பே சிவமாவதாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே. " திருமூலர் எனவே நாமும் பற்றைவிட்டு எதையும் எதிர்பாராது அன்பை அனைவரிடமும் காட்டுவோம். அவ்வன்பே இறையைக் காட்டும், அவ் அன்பே இறையாக வரும், அன்பே சிவம் - சிவமே அன்பு திருச் சிற்றம்பலம்

அன்பும் பற்றும் " பிள்ளையாரப்பா........ ! நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் உனக்கு பாலாபிசேகம் செய்கிறேன்," " என்மகள் திருமணம் நடந்து விட்டால் நான் பழனிக்கு வந்து மொட்டை போட்டுக்கொள்கிறேன்." என பலர் தங்கள் விருப்பங்களுக்கேற்ப ஆண்டவனிடம் வேண்டுதல் ைவ்பபர், இந்த வேண்டுதல்கள் அனைத்தும் இறைவன் பால் கொண்ட அன்பாக கருதமுடியாது. அவையெல்லாம் வேண்டுதல்கள் அவையே அந்தந்த தேவையின் பொருட்டு ஏற்பட்ட பற்றைத்தான் காட்டும், இவற்றில் முன்னது " தான்" என்ற பற்று. பின்னது தன் மகள் மீது உள்ள பற்று , நம் வழிபாடுகள் உறவுகள் அனைத்தும் இன்ற பற்றை அடிப்படையாக வைத்தே அமைந்துள்ளன. அன்பு வேறு, பற்று வேறு தன்னைப் பெற்ற தாயிடம் பால் குடித்த ஞானசம்பந்தர் உமையிடமும் ஞானப்பால் உண்டார். பின் அவர் சமணத்தை அறத்து, சைவத்தைக் காக்க மதுரை வருகின்றார். மதுரைக்கு அரசி மங்கையர்கரசி அவரே ஞானசம்பந்தரை எதிர்கொண்டு அழைக்கின்றார், "அச்சிறு குழந்தையைக் கண்டதும் அன்பின் மிகுதியால் மங்கையர்கரசியிடமும் பால் சுரந்ததாம் !" இப்படிப் பாடுகிறார் கற்பனைக் களஞ்சயம் சிவப்பிரகாசர். இதுதான் உண்மை அன்பு. எதையும் எதிர்பாராது விளைவது அன்பு, மறு தேவையை ( பிரதி பிரயோஜனம் ) எதிர்பார்த்து உண்டாவது பற்று. அதுவே பாசம் எனப்படுகிறது, நாம் மற்றவர் மீது கொண்டுள்ளது பற்று. பற்றையே பாசத்தையே அன்பு என எண்ணி வாழ்கிறோம். ஆம் பற்றைப் பெருக்கி அதனையேய அன்பு என மயங்கி வாழ்கிறோம் இவ்வுலகமே பற்று என்கிறார் மாணிக்க வாசகர். " வைத்த நிதி, பெண்டீர், மக்கள் குலம், கல்வி, என்னும் பித்த உலகில் பிறப்போடு இறப்பு என்னும் சித்த விகாரக் கலக்கம் தெளித்த ........ " என்றும் " எந்தை எந்தை சுற்றம் மற்றும் எல்லாம் என்னுடைய பந்தம் அறுத்து .............. " என்றும் பாடியுள்ளார், நாம் பெற்ற கல்வி, செல்வம், உறவு அனைத்தும் பற்று. அந்த மனக் குழப்பத்தைத் தெளித்தவன் இறைவன் என்று அவர் பாடுகிறார். இவ் உலகப் பொருள் அனைத்தும் பறறு, பாசம், இவற்றை விட்டு விலகுவோம், இதைக் கடந்து அன்பு உள்ள நெகிழ்வு மனஇளக்கம், இது எல்லோரிடத்தும் எல்லா உயிரிடத்தும் காட்டக் கூடியது. இதற்கு மட்டுமே கட்டுப்பட்டவன் இறைவன், அதனால்தான் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டனர், முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி, மயிலுக்கு தன்னுடைய அங்கியை வழங்கினான் ஒரு மன்னன். அந்த உள்ள நெகிழ்வு அது, அன்பினால் தான் அவனை அடைய முடியும், "அன்பே சிவமாகிறது " என்றார் திருமூலர். மாணிக்கவாசகரும் " அன்பாய அன்பருக்கு அவரினும் அன்ப போற்றி " எனப்பாடுகிறார். அன்பை உடையவர் அன்பர். அவரிடத்தும் அன்பாக இறைவன் இருப்பார் இருக்கின்றார். ஞானசம்பந்தரது பல்லக்கை அப்பர் சுமந்தார். தொண்டருக்கு தொண்டர் ஆனார் அவர் , அவருக்கும் தொண்டன் இறைவன் அப்பரின் பால் அன்பு கொண்டு அவரை காணாமலே அவர்மீது அன்பு கொண்டு அவர் நாமத்தைக் கொண்டே உழவாரப்பணிகள் செய்துவந்தார் அப்பூதியடிகள், இப்படி போட்டி போட்டுக் கொண்டு அன்பை பொழிபவன் இறைவன். அதுபோல அடியாருக்கு நான் அடியேன் என்றார் சுந்தரர், அவருக்கும் அடியாரானார் சேரமான் பெருமான், அவருக்கும் அடியவன் இறைவன், இவரில் யாருக்கு யார் அடியார்? அன்பினால் விளைந்த இணைப்பு இது. எதையும் எதிர்பாராத அன்பு இது. " அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவலார் அன்பே சிவமா வதாரும் அறிகலார் அன்பே சிவமாவதாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே. " திருமூலர் எனவே நாமும் பற்றைவிட்டு எதையும் எதிர்பாராது அன்பை அனைவரிடமும் காட்டுவோம். அவ்வன்பே இறையைக் காட்டும், அவ் அன்பே இறையாக வரும், அன்பே சிவம் - சிவமே அன்பு திருச் சிற்றம்பலம்

வெள்ளி, 21 மார்ச், 2014

மணிராஜ்: உலக வளம் காக்கும் உலக வன தினம் ..!

மணிராஜ்: உலக வளம் காக்கும் உலக வன தினம் ..!

யோகத்தின் எட்டு அங்கங்கள் இராஜயோகம் - அஷ்டாங்க யோகம் என்றும் கூறப்படும், இதில் முதலாவது இயமம் : இது அனைத்திலும் மிக முக்கிய மானது. ஏனெனில் முழுவாழ்க்கையையும் இது அடக்கியாள வேண்டுவது, இதில் ஐந்து பிரிவிகள் உள்ளன. 1) உள்ளம், உரை, செயலினால் எவ்வுயிரையும் துன்புறுத்தாமை. 2) உள்ளம்,உரை, செயலினால் பிறர் பொருளை கவராமை. 3) உள்ளம்,உரை, செயலினால் முழு பிரமசரியம் அனுஷ்டித்தல் 4) உள்ளம்,உரை, செயலினால் உண்மை அனுஷ்டித்தல் 5)பிறர் கொடுக்கும் பரிசுகளை பெற்றுக்கொள்ளாமை. இரண்டாவது யோகம் நியமம் உடலைப் பேணல் , நித்தமும் நீராடல் சுத்தமான உணவு கொளல் மூன்றாவது யோனம் ஆசனம் உடலை அமர்த்தும் நிலை, இடுப்பு , தோள்கள், தலை, இவற்றை நேராக வைத்து, முதுகு தண்டக்கு தொந்தரவு கொடாமல் விடுதலை அளித்தல் நான்காம் யோகம்: பிராணாயாமம் மூச்சை சரிவர அடக்கி ஆளுதல், (பிராணன் என்னும் உயிர் சக்தியை அடக்கி யாழ்வதற்காக) ஐந்தாம் யோகம் : பிரத்தியாகாரம் மனத்தை புறத்தே புலன்கள் வழி செல்லாது தடுத்து அதை உள்முகமாக திருப்புதல், மனத்தில் உள்ள பொருளை அறிய சிந்தித்தல் ஆறாவது யோகம் : தாரணை ஒரு பொருளின் மீது மனத்தை குவித்தல் ஏழாவது யோகம் : தியானம் மனத்தை குவித்து நிறுத்தி இடைவிடாது சிந்தித்தல் எட்டாவது யோகம்: சமாதி நமது முயற்சிகள் அனைத்திற்கும் குறிக்கோளான " ஞானஒளி " பெறுதல் , இராஜயோகத்தின் மூலம் கடவுளை அடைய விரும்புகிறவன் உடலாலும், மனத்தாலும், அறத்தாலும், (நற்குணங்களாலும்) ஞானத்தாலும், வலிமை பெற்று, இருக்க வேண்டும்,இப்பாதையில் ஒவ்வொரு அடியையும் கவனமாக வைத்து மேலே செல்லுதல் வேண்டும்.

வியாழன், 20 மார்ச், 2014


"கர்மா " சித்தாந்தம் பலரும் கர்மா சித்தாந்த்தை முன் ஜென்ம வினை என்கின்றனர். அந்தந்த ஜென்மத்திலேயே ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு தகுந்த விளைவு உண்டு. அவனுக்கு கிடைப்பது உறுதி அது உடனேயோ அல்லது பிறகோ ஏன் அடுத்த ஜென்மத்திலும் நடக்கலாம். இதையே நாம் நம் விதி என்கிறோம். இதைத்தான் புறநானூறும் " தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்கிறது. தீமையும் நன்மையும் அடுத்தவரகளால் வருவதில்லை. நமக்கு வரும்தீவினைகள் அனைத்தும் சூழ்நிலை கேற்ப வந்தாலும் அது நம் செய்த வினைப்பயனாலேயே வருகின்றது என்கின்றனர் சான்றோர்கள், வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்ற முதுமொழி வழியாகவும் அறியலாம். இதனையே வள்ளுவர் பெருமானும், " தீயவை செய்தார் கெடுதல் நிகழ்தன்னை வியாது அடிஉறைந்தற்று " ஒருவனது நிழல் அவனை தொடர்வது போல அவனுடைய பாவ புண்ணிய செயல்கள் அனைத்தும் தொடரும். ஒருவன் தீமையே செய்கினும் நன்றாகவே மனை,மக்களோடு, செல்வ செழிப்போடு வாழலாம் ஏனெனில் அவன் முன் செய்த நல் வினைகளினால் நன்றாகவே ஒரு குறையுமின்றி வாழ்கிறான் ஆனால் அவன் தற்போது செய்யும் அறமற்ற பாவ காம குரோத தீய செயல்களால் அவனுடைய பாவச் செயலான கர்மா வினை மற்றொரு பிறவி எடுத்து அதை அனுபவித்தே ஆகவேண்டும். அவன் நல்ல செழிப்புடன் இருக்கும்போது நல்ல தான தர்மம் ஞாயமான புண்ணிய செயல்களை செய்து வந்தானானால், அவனுக்கு பிறவி என்னும் பிறாவா பெருங்கடல் கிடைத்து பிறப்பற்ற நிலை அடைவது உறுதி, அதுபோல இப்பிறவியில் கஷ்டமான நிலையில் நன்மை செய்தும், அறச்செயல்கள் செய்து வந்தானானால் அவனுக்கு மறுபிறவி உண்டெனில் செல்வ செழிப்பு வாழ்வோ அல்லது ஞான உபதேசம் பெற்றவனாயின் அவனுக்கும் பிறப்பற்ற நிலை அமையும் " இதுவே கர்மா சித்தாந்தம்" இந்த கர்மா சித்தாந்தத்தை தெளிவாக உணர்வது மனிதர்களை நல்வழி படுத்த உதவும். அது இன்றில்லாவிட்டாலும் என்றாவது தங்கள் செய்கைகளுக்கு பலனை அனுபவித்தே ஆகவேண்டும். என்பதை மனிதன் உறுதியாக உணர்ந்தால் அவன் அறிந்து தவறு செய்யமாட்டான் ஆன்மீக மார்ககத்தில் செல்பவர்கள் கர்மாவை சரியாக புரிந்து கொள்ளுதல் அவசியம். அது தவறுகளை தவிர்க்கும் எல்லா சந்தர்ப்பத்திலும் சரியான பாதையில் பயணிக்க உதவும் கருவியே கர்மா வினை சித்தாந்தம்.

சனி, 15 மார்ச், 2014

ஓர் உருவக அணி


ஓர் உருவக அணி ஓர் உருவக அணி ஆன்மாவை தேரில் இருப்பவனாகவும், உடலைத் தேராகவும், புத்தியை தேரோட்டி யாகவும், மனத்தை கடிவாளமாகவும், புலங்களை குதிரையாகவும், சித்தரியுங்கள். குதிரைகள் நன்றாய் வசப்பட்டும், கடிவாளஙங்கள் பலமாகவும், தேரோட்டம் (புத்தி) அதை இறுக்கிப் பிடித்தும் இருந்தால் தேரில் உள்ளவன் தனது குறிக்கோள் ஆகிய எல்லாம் வல்ல இறைவனை அடைகின்றான். ஆனால் குதிரைகள் (புலங்கள்) வசப்படாமலும், கடிவாளங்கள், (மனது) சரியாகவும் இயக்கப்படாமலும், இருந்தால் தேரில் உள்ளவன் அழிவை அடைகிறான்

முக்தி அடைய நமஸ்காரம் போதும் பரமேஸ்வரன் மீது ஒரு ஸ்லோகம் இருக்கிறது. அதில் பக்தர் இப்படிச் சொல்கிறார். திரிபுர சம்ஹாரம் செய்த பிரபுவே, என்னுடைய இரண்டு அபராதங்களை க்ஷமிக்க வேண்டும். அந்த இரண்டு அபராதங்கள் என்ன? போன ஜன்மத்தில் நான் உன்னை நமஸ்கரிக்காதது ஓர் அபராதம். வரப்போகிற ஜன்மத்தில் உன்னை நான் நமஸ்கரிக்காமல் இருக்கப்போவது இரண்டாவது அபராதம். போன ஜன்மத்தில் நான் உன்னை நமஸ்கரிக்கவில்லை என்று எப்படித் தெரிகிறது என்கிறாயா? எனக்கு இப்போது ஒரு ஜன்மம் ஏற்பட்டிருப்பதிலிருந்தே அது தெரிகிறது. போன பிறவியில் உன்னை நமஸ்கரித்து இருந்தால் அப்போதே எனக்கு மோஷம் கிடைத்திருக்கும். இந்த மறு பிறவியே ஏற்பட்டிராது. அது சரி, அடுத்த ஜன்மாவில் நமஸ்கரிக்க மாட்டேன் என்றது ஏன் தெரியுமா. இந்த ஜன்மாவில் உன்னை நமஸ்கரித்துவிட்டேன் அல்லவா. அதனால் எனக்குப் பிறவியே தர மாட்டாய். மறு ஜன்மாவே இல்லாதபோது அப்போது உனக்குச் செய்ய வேண்டிய நமஸ்காரம் மட்டும் எப்படி இருக்கும். இப்படியாக போன ஜன்மா, வருகிற ஜன்மா இரண்டிலும் உன்னை வணங்காத குற்றத்தை மன்னித்துவிடு. இந்த ஸ்லோகத்திலிருந்து என்ன ஏற்படுகிறது? மனப் பூர்வமாக ஈஸ்வரனை நமஸ்காரம் செய்துவிட்டால் போதும். அவர் நம்மை ஜனன மரண சக்கரத்திலிருந்து விடுவித்துவிடுவார். நம் பாவங்களையெல்லாம் போக்கி முக்தி தந்துவிடுவார். இந்த ஸ்லோகத்தைச் சொன்னவர் கவித்வ சமத்காரத்தில் பாடியவரில்லை. அவர் பழுத்த அநுபவசாலி, எனவே அவரது வார்த்தையைப் பரிபூர்ணமாக நம்பி நாமும் ஈஸ்வரனிடத்தில் சரணாகதி என்று விழுந்து நமஸ்காரம் பண்ணுவோம். நமஸ்கரித்தால் மோக்ஷம் நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் பண்ணினால் அப்படியே கிடைக்கும். சந்தேகமில்லை. நமஸ்காரம் செய்வதாகத் தண்டம் சமர்ப்பித்தல் என்பார்கள். தண்டம் என்றால் கழி அல்லது கோல் என்று அர்த்தம். கையில் பிடித்திருக்கிற ஒரு கோலை விட்டுவிட்டால் அது அப்படியே தடாலென்று கீழே விழுந்துவிடும். அப்படியே இந்த சரீரத்தை நமதல்ல, இது ஈஸ்வரனுடையது என்கிற எண்ணத்துடன் கீழே போடுவதுதான் நமஸ்காரம். நம் சரீரம் வெறும் மரக்கோல்தான். உதவாத பொருளை அது தண்டமாகிவிட்டது என்கிறோம். அப்படி தண்டமான வஸ்துதான் நம் சரீரம். இதைத் தூக்கிப் பிடித்து நிறுத்தி வைத்து ஆட்டுகிற சக்தி ஈஸ்வரன் கொடுத்ததே ஆகும். இந்த உடம்பை ஏதோ நாமே தூக்கி நடத்துகிறோம் என்ற எண்ணத்தை ஒழித்துவிட்டு, அதற்கு அடையாளமாக ஈஸ்வரன் முன் இந்தச் சரீரத்தைக் கீழே போட வேண்டும். அதுதான் தண்டம் சமர்ப்பிப்பது. ஜுரம் வந்திருக்கிறது. இதிலிருந்து நம்மைக் கடைத்தேற்றுவதற்காக, நமக்கு வந்திருக்கிற சம்ஸார ஜுரத்தைப் புரிந்துகொண்டு, அதற்கு அடையாளமாக ஸ்வாமியின் முன் தண்டாகாரமாக விழுந்து நமஸ்கரிக்க வேண்டும். நாம் செய்கிறோம் என்கிற எண்ணம் போய்விட்டால் அதுவே ஸதாகால நமஸ்காரம். அந்த அநுபவம் நமக்கு ஸித்திக்காத போதிலும் ஈஸ்வர சந்நிதியிலிருந்து அப்படி பாவித்து வணங்கித் தரையோடு, தரையாக எளிமையாகக் கிடக்க வேண்டும். இங்கே வணங்கிவிட்டால், அப்புறம் வெளியே எங்கேயும் வணங்காமல் இருக்கலாம். பொறுப்பை உன்னிடமே பூரணமாகப் போட்டேன் என்பதற்கு அடையாளம் சரீரத்தைத் தரையில் போடுவது, கொஞ்சம் பொறுப்பை நமக்கு வைத்துக்கொண்டால்கூட ஸ்வாமி தம் பங்கைக் குறைத்துக்கொண்டுவிடுவார். இதில் அரைகுறைக்கு இடமே இல்லை. நம்முடைய நல்லது பொல்லாதது அவ்வளவும் அவர் விட்டபடி என்று சகல பொறுப்பையும் அவரிடம் தள்ளுவதற்கு வெளி அடையாளமாக உடம்பைத் தரையில் தள்ளி நமஸ்காரம் பண்ண வேண்டும். அப்படிச் செய்தால் நம் பாரம் அனைத்தையும் கிருபா சமுத்திரமான ஸ்வாமியே ஏற்று அநுக்கிரகிப்பார். -சுடுகாட்டு சித்தன்-

வெள்ளி, 14 மார்ச், 2014


திரு ஐந்தெழுத்தின் ஆற்றல் " கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சி வாயவே. திரு ஞானசம்பந்தர் அறியாமையால் கொலைத்தொழிலை செய்பவரானும், நற்குணங்களும், நல்லொழுக்கமும் இல்லாதவர்களாயினும், திருஐந்தெழுத்தைச் சொல்வார்களே ஆனால் எல்லா விதமான தீமைகளிலிருந்தும் நீங்குவார்கள் என்பது ஆன்றோர்கள் வாக்கு யாவருக்கும் நன்ைமயையே செய்யும் சிவபொருமானின் திருப்பெயராகிய "நமசிவாய" எனும் திருஐந்தெழுத்து அத்தகைய மேன்மையுடையதாகும். மிக எளிய வழிையத்த திருஞானசம்பந்தப் பெருமான் கூறியுள்ளார். தீமைகளிலிருந்து விடுபட ஆயிரக்கணக்கில் பொருட் செலவு செய்ய வேண்டியதில்லை. நான் தீயவன் நற்குணங்களே இல்லாதவன் என்று கவலைப் படவேண்டாம். பிராயசித்தம் / கழுவாய் என்னும் பெயரால் வெற்றுச் சடங்குகளை ெசய்து ஏமாந்து விட வேண்டாம், போலி வேடதாரிகளை கண்டு மோசம் போக வேண்டாம். இதோ இறைவரால் ஞானப்பால் ஊட்டப் பெற்றவரும், எலும்பை பெண்ணாக்கியவருமாகிய திருஞானசம்பந்த பெருமான் நமக்காக அருளியுள்ள இப்பாடலை துணையாகக் கொள்ளுங்கள் திரு ஐந்தெழுத்தினை "சிவாயநம" காலையும் மாலையும் 108 முறை உச்சரிங்கள் தீமைகள் யாவும் நீங்கி நலம்பல பெற்று நீடூழி வாழ்வீர்கள். திருச்சிற்றம்பலம் நன்றி ; தமிழ் வேதம்

வியாழன், 13 மார்ச், 2014


திருமந்திரத்தில் ஒரு மந்திரம் அணுவில் அணுவினை ஆதிப்பிரானை அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு அணுவில் அணுைவ அணுகவல்லார் கட்கு அணுவில் அணுவை அணுகலும் ஆமே, அணுவிற்குள் அணுவாய் இறைவர் இருக்கின்றார் என்கிறார் திருமூலர் ஐந்தாம் நூற்றாண்டிலேயே. பத்தாவது தமிழ்வேதமாக விளங்கும் திருமந்திரத்தில் 1) அணுவைப் பிளக்க முடியும் என்றும், 2) அணுவிற்குள் இறைமை உள்ளது என்றும் கூறியுள்ளதை எண்ணி எண்ணி வியக்கின்றோம். இறைமை அணுவிற்கு அணுவாயும், அணுவிற்கு அப்பாலாயும் உள்ளது. பொருட்கள் எல்லாம் அணுக்களால் ஆனவை என்பது அறிவியல் உண்மை. அணுவினுள் அணுவாய் சிவபெருமானார் விளங்கின்றார் என்பது தற்காலத்தில் அறிவியல் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே உலகில் உள்ள எல்லாமே இறைமயம்தான் என்பதை உணர்ந்து வாழ்ந்து நலம் பெறுவோமாக. நன்றி ; தமிழ் வேதம்

செவ்வாய், 11 மார்ச், 2014


முக்தி " முக்தி என்றால் பூரண விடுதலை. நற்செயல்கள் தீய செய்கைகளினால் ஏற்படும் தளைகளிலிருந்து விடுதலை பெறுதல், தங்கச் சங்கிலயையும், இரும்பு சங்கிலி போல் ஒரு தளைதான் காலில் குத்திய முள்ளை மற்றொரு முள்ளால் எடுத்து விட்டு பிறகு இரண்டையும் எறிந்து விடுவது போல் தான் என்று பகவான் இராமகிருஷ்ணர் கூறுவது உண்டு. ஆதலால் தீய பழக்கங்களை நற்பழக்கங்களினால் போக்கி விட்டு பிறகு நற்பழக்கங்களையும் போக்கி விட வேண்டும், எல்லாம் பற்றற்ற நிலை பெற்ற பின்தான் முக்தி என்ற விடுதலை கிடைக்கும். ஒருவன் கேட்டல், சிந்தித்தல், தியானித்தல், இவற்றால் ஞானம் பெற முடியும். இதனை ஒரு சத்குரு மூலம் தான் பெறமுடியும் - உணரமுடியும்- முக்தி பெற வேண்டுமென்ற விருப்பத்தோடு சத்குருவிடம் வேதாந்த்தை கேட்டு அறிந்தால் மட்டுமே அவன் முக்தி அடைவான்.

குரு " நம்மிடம் நான்கு மனேபாவங்கள் உள்ளன. ஒன்று நம்மைப்பற்றி நாம் பிறரிடம் கூறுவது இரண்டு நம்மைப் பற்றி நாம் வெளியில் மறைப்பது மூன்று நம்மைப்பற்றி பிறர் அறிந்தது. நான்காவது நம்மைப் பற்றி நமக்கே தெரியாதது இந்த நான்காவது மனோபாவத்தை அறிந்து திறப்பவர் தான் குரு. குரு என்ற வார்த்தையில் " கு" என்றால் இருளைப் போக்குவது . "ரு" என்றால் ஒளியைத்தருவது. குருவைத்தமிழில் ஆசிரியர் என்போம். ஆசு என்றால் குற்றம் ; இரியர் என்றால் இல்லாதவர்; நீக்குபவர். நம்மிடம் உள்ள ஆணவமே இருள் என்றும் குற்றம் என்றும் சொல்லப்படுகிறது. அந்த இருளை நீக்கி ஞானத்தை தருபவன் ஞானாசிரியன். இறைவனையும் அவனை அடையும் வழியையும் ஒருவனுக்கு ஏற்றபடி உணர்த்துபவனே ஞானாசிரியன். - ஞானகுரு -. ஒருவனுக்கு ஆசிரியர் பலர் இருக்கலாம் ஆனால் ஞானாசிரியர் ஒருவன்தான் அவன் இறைவன்தான். நம் மனம் பக்குவப்பட்டதை அருகில் உள்ள எவரும் உணரார். நம்முள் உள்ள இறைவன் மட்டுமே உணர்வான் . ஆக அவனே " மனித வடிவில் " வெளிப்பட்டு ஞானத்தை தருவான். அவன் நமக்கு சொல்வதை , உணர்த்துவதை நாம் வேதமாக கொள்ள வேண்டும். நம் மனம் பக்குவப்படுவதை உணரும் இறைவன் ஒரு மனித வடிவில் வெளிப்படுவான் ஆகவே ஞானகுருவைத் தேடி நாம் எங்கும் அலையவேண்டாம் இறைவனே நம்முன் மனித வடிவில் குருவாக வருவான் வேதாந்த கருத்துக்கள் மூலம் நம் ஆணவ இருளை அகற்றி நம்மனம் பக்குவப்படுத்துவார், அப்போது நம்மனம் பக்குவப்படும் நிலையை உணர்வேண்டும்.

குரு " நம்மிடம் நான்கு மனேபாவங்கள் உள்ளன. ஒன்று நம்மைப்பற்றி நாம் பிறரிடம் கூறுவது இரண்டு நம்மைப் பற்றி நாம் வெளியில் மறைப்பது மூன்று நம்மைப்பற்றி பிறர் அறிந்தது. நான்காவது நம்மைப் பற்றி நமக்கே தெரியாதது இந்த நான்காவது மனோபாவத்தை அறிந்து திறப்பவர் தான் குரு. குரு என்ற வார்த்தையில் " கு" என்றால் இருளைப் போக்குவது . "ரு" என்றால் ஒளியைத்தருவது. குருவைத்தமிழில் ஆசிரியர் என்போம். ஆசு என்றால் குற்றம் ; இரியர் என்றால் இல்லாதவர்; நீக்குபவர். நம்மிடம் உள்ள ஆணவமே இருள் என்றும் குற்றம் என்றும் சொல்லப்படுகிறது. அந்த இருளை நீக்கி ஞானத்தை தருபவன் ஞானாசிரியன். இறைவனையும் அவனை அடையும் வழியையும் ஒருவனுக்கு ஏற்றபடி உணர்த்துபவனே ஞானாசிரியன். - ஞானகுரு -. ஒருவனுக்கு ஆசிரியர் பலர் இருக்கலாம் ஆனால் ஞானாசிரியர் ஒருவன்தான் அவன் இறைவன்தான். நம் மனம் பக்குவப்பட்டதை அருகில் உள்ள எவரும் உணரார். நம்முள் உள்ள இறைவன் மட்டுமே உணர்வான் . ஆக அவனே " மனித வடிவில் " வெளிப்பட்டு ஞானத்தை தருவான். அவன் நமக்கு சொல்வதை , உணர்த்துவதை நாம் வேதமாக கொள்ள வேண்டும். நம் மனம் பக்குவப்படுவதை உணரும் இறைவன் ஒரு மனித வடிவில் வெளிப்படுவான் ஆகவே ஞானகுருவைத் தேடி நாம் எங்கும் அலையவேண்டாம் இறைவனே நம்முன் மனித வடிவில் குருவாக வருவான் வேதாந்த கருத்துக்கள் மூலம் நம் ஆணவ இருளை அகற்றி நம்மனம் பக்குவப்படுத்துவார், அப்போது நம்மனம் பக்குவப்படும் நிலையை உணர்வேண்டும்.

திங்கள், 10 மார்ச், 2014


கடவுளை காணும் கருவி " தியானம் " தியானம் மனம் அமைதியாக இருக்கும் போதுதான் தியானம் கைகூடும், நமக்கு வெளியே கடவுளை காண முடியாது, நமது ஆன்மாக்களே வெளியிலிருந்து தெய்வத் தன்மையை வழங்குகின்றன, நாமே கோவில்க்ள இதைப் போன்றுதான் கோவில்கள் அமைக்கப்பட்டன, திருமூலரும் இதன்பொருட்டு " " உள்ளம் பெருங்கோவில் ஊன் உடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய்கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தோர்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காள மணிவிளக்கே. என்றார் மனத்தின் சக்தியை ஒருமுனைப்படுத்தலே நமக்கு கடவுளைக காண உதவும் கருவியாகும். நீங்கள் உங்களுடைய ஆன்மாவைத் தெரிந்து கொண்டால் முக்காலத்திலும் உள்ள எல்லா ஆன்மாக்களையும் தெரிந்து விடுவீர். ஒரு முனைப்படுத்தி குவிந்த மனம் , ஆன்மாவின் ஒவ்வொரு மூலையையும் காண்பதற்கு விளக்குபோல் உதவும். அமைதியான இடத்தில் அமைதியான மனத்துடன் ஆன்மா மீது தியானம் செய்யுங்கள் அதன் மீது உங்கள் மனத்தை ஒருமுனைப்படுத்துங்கள் அதனுடைன் ஐக்கியமாகுங்கள். பேச்சு இல்லா மெளனம் உண்மையை தெரிவிக்கும் பேச்சில் உங்களது சக்தியை செலவழிக்காதீர்கள் மெளனமாக இருந்து உங்கள் சக்தியை சேகரித்துக் கொண்டு ஆன்மீகச் சக்தியின் " மின் உற்பத்தி செய்யும் டைனமோ" வாக ஆகிவிடுங்கள். தியானம் தொடங்கும் முன் உங்கள் மனம் அடங்கி ஒருநிலைப்பட கீழ்கண்ட பாடல் கொண்டு பிராத்தனை செய்யுங்கள் " எவ்வுயிரும் இன்புற்று இருக்க எவ்வுயிருக்கம் அமைதி நிலவுக எவ்வுயிரும் ஆனந்தம் பெறுக எத்திசை உயிர்களும் இவற்றை பெறுக" இவ்வாறு பலதடவை மனத்தில் தியானத்தால் நலம் பெறலாம் ஞானம் பெறுவதற்கே இந்த பிராத்தனை .

வியாழன், 6 மார்ச், 2014

பெண்ணின் பெருமை


பெண்ணின் பெருமை உலக மகளிர் தினம் கொண்டப்படும் இந்நாளில் பெண்களுக்கென்று தனிப்பெருமை இதிகாச காலத்திலேயே இருந்தது, இதிகாச காலங்களில் பல சரித்திரக்கதைகள் பெண்ணின் கற்பு பற்றியும் அவர்களால் நாட்டிற்கும் வீட்டிற்கும் ஏற்பட்ட பெருமைகளை எண்ணி மாலாது. உலக காவலனான சிவபெருமானே பெண்ணிற்கு தனது மெய்யில் பாதியையும் தலையிலும் இடம் கொடுத்தான், காலப்போக்கில் பெண்கள் ஆண்களுக்கு அடிமை என்று ஏற்பட்டு பெண்களுக்கு சமூகத்திலும் சமுதாய அமைப்பிலும் உரிய இடம் கொடுத்து இன்றும் தேசிய அமைப்பிலும் உலக அளவிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் உலக மகளிர் தினம் வருகிற 8ம்தேதி கொண்டாடப்படுகிறது.இவ்வாறு பெண்ணின் பெருமையைப்பற்றி மகான் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பெண்ணின் பெருமைபற்றி ஒரு நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின் தொகுப்பு மூலம் மகளிர் பெருமையை காண்போம் பேண் என்ற சொல்லில் இருந்து வந்ததே பெண் என்ற சொல். பேண் என்றால் விரும்புதல் என்பது பொருள். தந்தை தாய் பேண் என்ற வாக்கில் அறியலாம்." கைத்தல நிறைகனி அப்பமோடு அவல் பொறி ,,,,,,,,,,,அடி பேணி " என்று அவ்வையாரின் பாடல் வாயிலாகவும், "முத்தத்தரு,,,,, அடிபேண ' அருணகிரியார் பாடல் வாயிலாகவும் பேணி என்ற சொல்லிற்கு பெண் என்ற சொல்லை அறியலாம், விண்ணலகமும் மண்ணுலகமும் பெண்ணுலகத்தால் வாழ்ந்ததை அறியலாம், தந்தைக்கும் தாய்க்கும் உள்ள உரிமை பெருமையினை தாய்க்கு முதலாவது தருவதை நாம் நடைமுறையில் காணலாம். தாய்நாடு, தாய்மொழி என்று தான் வழக்கில் உள்ளன, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் , அம்மையே அப்பனே என்று வள்ளலாரும் மணிவாசகரின் கூற்றிலும் அவ்வையாரின் கூற்றின் வழியே அறியலாம். தாய்மையை சந்நியாசியும் வணக்கதக்கவர்கள். சிவனுக்கு ஒரு ராத்திரி சக்திக்கு நவராத்திரி , நாம் வாழும் பூமியை நிலமகள் என்றும் பருகும் நீரை கங்காதேவி என்றும் கூறிவதில் பெண்ணிற்கு உள்ள பெருமை சிறப்பு பெரும். சர்வமும் சக்தி மயம் " ஆவதும் ( குடும்பம் ) பெண்ணாலே அழிவதும் ( கணவனது கஷ்ட நஷ்டங்கள் ) பெண்ணாலே என்ற பொன்மொழி உண்டு. " பெண்ணின் பெருந்தக்க யாவுள " எனவும், வாழ்க்கை துணை நலம் என்று வள்ளுவர் வாக்கு வழியாகவும் பெண்ணின் சிறப்பு அறியலாம்.பெண்கள் தங்களின் கற்பு நெறியால் ஆண்களை காத்தது ஆண்களுக்கு பெருமை சேர்த்தது எல்லாம் கோவலன் கண்ணகி சத்தியவான் சாவித்திர , அரிச்சந்திரன் கதை வழியாக அறயலாம். பெண்ணறிவு நுண்ணறிவு - பெண்கள் தங்கள் மதி நுட்பத்தால் தன் கணவன்மார்களை காத்தது அவர்களின் வரலாற்று வழியாக அறியலாம், பெண்கள் தன் கணவர்களுக்காக கெளரி விரதம் இருந்து தனது தாலி பாக்கியம் நிலைக்க விரதம் இருந்து பெருமை சேர்ப்பது தற்போது நடைமுறையில் உள்ளதை அறியலாம். படிக்காசு புலவர் மாதர்களின் பெருமைகளை தங்களது கற்பு நெறியால் "வெண்தனலையும் சந்தனமாக்கியவர்கள் " என்று சீதையையும், சந்திரமதியையும் சுட்டிக்காட்டியுள்ளார் மேலுமும் " வேடனை எரித்தாள் " - நளனின் தமயந்தி நள ராசனால் விட்டு செல்லும்போது மலைப்பாம்பு தன்னை விழுங்கியபோது காப்பாற்றி வேடன் அவளை சீண்ட தூண்டியபோது அவனை எரித்தாள். மூவருக்கு பக்கமுடன் அமுது அளித்தாள் - அக்ரி முனிவரின் மனைவி அனுசூயா தேவியின் கற்பை சோதிக்க எண்ணிய மும்மூர்த்திகள் அமுது கேட்டபோது குழந்தையில்லாவீட்டில் விருந்து உண்ண மறத்தபோது அவர்களை மூவரையும் குழந்தைகளாக மாற்றி அமுது ஊட்டினாள் ஒருத்தி என பலவேறு நிகழ்வுகளை பெண்ணின் பெருமைபற்றி படிக்காசு புலவர் பாடல் வாயிலாக அறியலாம் என்று வாரியார் சுவாமிகள் பெண்ணின் பெருமையினை சிறப்பித்துள்ளார்

Sadhananda Swamigal: சித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி மு...

Sadhananda Swamigal: சித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி மு...: நிச்சயம் உங்களுக்கு சித்த தரிசனம் பெற வைக்கும்,ஒரு எளிய பயிற்சி முறை .. ! மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் - சுமார் நாற்பது ஆண்ட...

செவ்வாய், 4 மார்ச், 2014


சதுரகிரியும், திருவண்ணாமலையும், எத்தனை முறை சென்றாலும் , ஒவ்வொரு முறையும் அதன் பிரம்மாண்டத்தை உணர்த்துவதில் தவறியதே இல்லை. இன்று மகாலிங்க மலையைப் பற்றி - நீங்கள் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர். திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர். [theerththam.jpg] தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம் * மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவி மலை' என்கின்றனர். *சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது. *ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும். * பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது. *இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள். *மகாலிங்கம் கோயிலின் வடக்கே "ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது. * சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும். * ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது. * சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர். இருப்பிடம்: மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம். அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் - செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி - கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி - அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது. அங்கிருந்து தாணிப் பாறைக்கு - மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள். திறக்கும் நேரம்: காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.போன்: 98436 37301, 96268 32131 மலைக்கு மேலே - சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் ' உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ - நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும். சதுரகிரி தல வரலாறு : சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள். வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான். சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான். சிவபெருமான் அவனை தேற்றி, "" நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன. இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு. இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி. கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம். இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும். இரட்டை லிங்கம்: ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார். ""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது. பிலாவடி கருப்பு: வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,'' என்றார். வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை "பிலாவடி கருப்பர்' என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது. பெரிய மகாலிங்கம்: நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது. தவசிப்பாறை: மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது. [p91a.jpg] தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக் கிரக கல்' என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் "வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது. சுந்தரமூர்த்தி கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை' என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம். பார்வதி பூஜித்த லிங்கம் : சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர். இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது. லிங்க வடிவ அம்பிகை சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது. சதுரகிரியில் தீர்த்தங்கள் சந்திர தீர்த்தம் சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் 'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம். கெளண்டின்னிய தீர்த்தம். சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம். கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும் உண்டு. சந்தன மகாலிங்கம் தீர்த்தம். இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும். இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும். இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய 'திருமஞ்சனப் பொய்கை' உண்டு. காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட 'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக் காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது. இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட 'பொய்கைத் தீர்த்தம்'', ''பசுக்கிடைத் தீர்த்தம்'', 'குளிராட்டித் தீர்த்தம்' போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள். பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன. அபூர்வ மூலிகைகள் : இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும். பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன. தவிர கோரக்க முனிவரால் 'உதகம்' என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது. இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் 'உதகம்' என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது. விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக பயன்படுத்த வேண்டும். சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது. இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும். அதேபோல் 'ஏர் அழிஞ்ச மரம்' என்றொரு மரம் உண்டு. இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் வந்து ஒட்டிக்கொள்ளும். இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை. சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும். இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும். இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் - " மதி மயக்கி வனம்" என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். நான் கேள்விப்பட்ட வரை , எங்கள் அருகில் இருக்கும் கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். "மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து" என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. எதுவும் கோவில் கூட இல்லை. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார். இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் - சித்தர்கள், ரிஷிகள் - மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். ஏற்கனவே நாம் " கட்டை விரல் அளவில் காட்சி தந்த சித்தர் பற்றிய பதிவை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம். இவை அத்தனையும் சர்வ நிஜம். இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் - மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும். உங்கள் தேடல் , பக்தி உண்மை எனில் - நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும். இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருப்பதால் , இப்போதெல்லாம் சதுரகிரியில் கூடும் கூட்டத்திற்கு குறைவில்லை.. சதுரகிரி மலை - ஒரு ஆன்மிக உலா
சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை. சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது. சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களின் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி இங்கு வருகின்றனர்.

எல்லாம் சிவனென்ன நின்றாய் ஆதி மூலம் ஆன சிவனே அவரவர் குலதெய்வமாகவும், ஆங்காங்க உள்ள சிறு தெய்வமாகவும் உள்ளார். நாம் வழிபடும் குலதெய்வ வழிபாடும் சிறுதெய்வ வழிபாடும் சைவசமயத்தவரிடம் மட்டுமே காணப்படுவதை நாம் அறியலாம், எல்லாம் சிவமாக காண்பதால் தான் சிவராத்திரியன்று குலதெய்வ வழிபாடும் ஆங்காங்க உள்ள சிறுதெய்வ வழிபாடும் சிறப்பாக அன்றுதான் கொண்டாடப்பட்டுவருகிறது. ஆதியில் பல குழுக்களாக வாழ்ந்துள்ள நம் முன்னோர்கள் அவரவர்களின் தம்முள் ஒரு தலைவனை தேர்ந்தெடுத்து கொண்டும் அவரே அக்குழுவை முன்னின்று காத்து வந்தமையால் அவனை நினைத்து வணங்குவது சிறுதெய்வ வணக்கம். இவையே பிற்காலத்தில் கோயில்களில் இடம் பெற்றுள்ளன. தம்குலத்தில் வாழ்ந்து மறைந்த ஒருவரை நினைத்து அவர் வழிவந்தோர் அவரை வணங்கியுள்ளனர். அவர் தன் குலத்தை காக்கிறார். அது குலதெய்வ வணக்கமாகிறது. இதுபோல ஊர்காவல் தெய்வங்கள் பல உள்ளன இவையும் முத்தி என்னும் வீடுபேறு தர இயலாதன ஆகவே இவை சிறுதெய்வங்களாக எண்ணப்டுகின்றன. ஊரைக்காப்பது ஊர் காவல் தெய்மாகி வழிபட்டு வந்துள்ளது. ஒருவருக்கு சிறுதெய்வமான ஒன்று மற்றொருவருக்கு குலதெய்வமாகிறது. அதுபோல ஒருவருக்கு குலதெய்வமாக உள்ளது மற்றெருவருக்கு சிறுதெய்வமாக ஆகிறது. நம் முன்னோர் வணங்கிய குலதெய்வத்தை நாமும் வணங்கவது இயல்புதானே. நமது ஊர்காவல் தெய்வத்தையும் நவக்கிரகங்களையும் வணங்குவதில் தவறில்லை. வணங்குதல் வேறு; வழிபடுதல் வேறு, சிவராத்திரியில் நள்ளிரவில் அனைத்து சிவலிங்கங்களிலும் சிவன் எழுந்தருள்கிறார். அனைத்து சிறு தெய்வங்களையும் அன்று வணங்குகின்றனர். ஆகவே அனைத்து சிறு தெய்வ மேனியிலும் சிவனே இறங்குகின்றார் எனவே நம் குலதெய்வ மேனிகளையும் சிவவடிவமாகவே பாவித்து வணங்க வேண்டும். அப்படி வணங்கும்போது அவ்உருவில் நம் அளவில் சிவனே வந்திறங்கி அருள்வான். அப்போது அந்த தெய்வங்களளே மகிழும். இதையே " யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவார்" என்கிறார் சிவஞான சித்தர். இதை அப்பரும் " எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றி " என அருளி செய்துள்ளார். நீங்கள் எந்த தெய்வத்தை வணங்கினாலும் அவ்வடிவில் அத்தெய்வமாக வருவது மாதொரு பாகனாகிய சிவபெருமான்தான் என்கிறது சிவஞான சித்தியார். எல்லா வடிவும் அவன் வடிவுதான் எதனுள்ளும் உள்ளீடாக இருப்பதும் அவன்தானே. கோபுரத்தை வழபடும்போது கோபுர வடிவில் உள்ள சிவனையும், திருவண்ணாமலையில் மலையே சிவமாக எண்ணி வழிபடவதை நாம் அறியலாம். அதுபோன்றே குலதெய்வத்தை வழிபடும் போது அதனுள் உள்ள சிவனருளையும் கண்டு வழிபட்டால் அதுவும் சிவவழிபாடாக மாறிவிடும். இதனையோ லிங்கத்தை வழிபடுவதால் அதனுள் உள்ள சிவத்தை , அருளை உணர்ந்து வழிபடுவது சிறந்தது. அதுபோலவே ஓர் உருவத்தை வழிபடுவதைவிட அவ்வுருவில் உள்ள சிவனருளை கண்டு வழிபடுவதே சிறந்தது. அதுவும் சிவ வழிபாடே . உயிரின் பக்குவ நிலையை இதன்மூலம் அறியலாம்,