வியாழன், 31 மார்ச், 2016

உண்மை உயர்வு தரும்.

உண்மை உயர்வு தரும்.
(கதையும் கருத்தும்)

ஒரு ஊரில் பல பாவங்களையும் அஞ்சாமல் ஒருவன் செய்து வந்தான். அவனுடைய குருநாதர் பலமுறை இப்படி பாவங்களை செய்யக்கூடாது என்று அறிவுரை கூறிவந்தார், அவன் அதற்கு செவி சாய்க்கவில்லை. கடைசியில் ஒன்றை மட்டும்கடைப்பிடிக்குமாறு கூறினார். செய்யும் பாவத்தொழில்களில் பொய் சொல்வதையாவது விட்டு விடு என்று அழுத்தமாகக் கூறினார்.  சீடனும் இதற்கு ஒப்புக்கொண்டான். " எந்த நிலையிலும் பொய் சொல்ல மாட்டேன்" என்று சத்தியமும் செய்து கொடுத்தான். ஒருநாள் இரவு அந்த ஊர் அரண்மனையில் திருடுவதற்கு சென்று ஒரிடத்தில் ஒளிந்திருந்தான்.

  அந்த நேரத்தில் நகரச் சோதனைக்காக மாறு வேடத்தில் அங்கு வந்த அரசன் திருடனைக் கண்டார். ஏன் இங்கே ஒளிந்திருக்கிறாய் என கேட்ட அரசனுக்கு அவன் " அரண்மனையில் திருடுவதற்காக வந்தேன் " என்று உண்மையைக் கூறினான் திருடன்.
 அரசன் திடுக்கிட்டான்,இவனுடைய செயல் முழுவதையும் கவனிக்க நினைத்த  அரசன் " நானும் இங்கே திருடுவதற்காகத்தான் வந்துள்ளேன். நீ திருடிக்கொண்டு வருவதில் பாதியை எனக்கு கொடு நான் உன்னை காட்டிக் கொடுக்க மாட்டேன் " என்றான் அரசன். 
 திருடன் அதற்கு உடன்பட்டு, மாறுவேடத்ததில் இருந்த அரசனைக் காவல் வைத்துவிட்டு, அரண்மனைச் சுவரில் துளைபோட்டு உள்ளே நுழைந்தான். அங்கே இருந்த ஒரு இரும்பு பெட்டியை உடைத்தான், உள்ளே இருந்த விலை உயர்ந்த 5 இரத்தினக்கற்களுள் நான்கினை மட்டும் எடுத்துக் கொண்டான். பங்கு போட வசதிக்காக 4 எடுத்துக் கொண்டான். மீத முள்ள இரத்தினக் கல்லை பெட்டியிலேயே வைத்து விட்டு வெளியே வந்தான். மாறு வேடத்தில் இருந்த அரசனுக்கு 2 கற்களை கொடுத்து விட்டு திரும்பினான். இவனுடைய முழு முகவரியையும் அரசன் கேட்டுத் தெரிந்து கொண்டான். பிறகு அரன்மனைக்கு சென்று பெட்டியைப் பார்த்தான் ஒரு இரத்தினக்கல்இருக்க கண்டு மகிழ்ந்தான்.
  மறுநாள் காலையில் மந்திரியை அழைத்து, " நம் அரன்மனையில் திரு்ட்டு போயிருப்பதாக தெரிகிறது. பெட்டியை திறந்து பார் " என்றார் அரசர். மந்திரி அவ்வாறே பெட்டியை திறந்து பார்த்தார் அதிலிருந்த ஒரு இரத்தினக்கல்ைல தான் எடுத்துக் கொண்டு அரசனிடம் " பெட்டியிலிருந்த இரத்தினக்கற்கள் எல்லாம் திருடு போய் விட்டன " என்றார்.
   அரசன் இரவு நடந்தவற்றை எல்லாம் மந்தரிக்கு எடுத்துரைத்தார். மந்திரியை வேலையிலிருந்து நீக்கி விட்டு, உண்மையைச் சொல்லிய அந்த திருடனை அழைத்து வந்து மந்திரியாக்கினார். 

 கருத்து ; உண்மை உயர்வைத் தரும் எனும் என்னும் தத்துவத்தை யாவரும் மனதில் இருத்த வேண்டும். குழந்தைகளுக்கு இளமை முதலே இதுபோன்ற கதைகளை சொல்லி அவர்களை நல்வழிப்படுத்தி வரவேண்டும். அவர்களுடைய வாழ்வு உயரும். செல்வம் சேர்த்து வைப்பது மட்டும்தான் பெற்றோருடைய கடமை என்று தற்காலத்தில் எண்ணுவதால் தான் இளைஞர் சமுதாயம் குறிக்கோள் இன்றி திசைமாறிச் செல்கிறது.

திருச்சிற்றம்பலம் / ஓம் நமசிவாய ஓம்
தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி ; தமிழ் வேதம்

சித்தருக்குக் கிட்டிய சித்தி (சதாசிவ பிரம்மேந்திரர்)


சித்தருக்குக் கிட்டிய சித்தி
(சதாசிவ  பிரம்மேந்திரர்)

நெரூரில் சமாதி கொண்ட சித்தர் சதாசிவ பிரம்மேந்திரர். இவரைப் பற்றி பல வரலாற்றுச் செய்திகள் சொல்லப்படுகின்றன. தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் பிரதிஷ்டை செய்தவர் இந்த சதாசிவ பிரம்மேந்திரர் என்கிறார்கள். இவர் நிகழ்த்திய அற்புதங்கள் இன்றும் பேசப்படுகின்றன. இவருடைய சமாதியின் மேல் வளர்ந்திருக்கும் விருக்ஷம் பட்டுப் போனது, இப்போது மீண்டும் துளிர்த்து வளர்வதைக் காண மக்கள் வந்து போகிறார்கள். நெரூர் காவிரிக் கரையில் அமைதியான சூழலில், வயல்களும், தோட்டங்களும் சூழ்ந்த இயற்கை அழகு கொஞ்சுகின்ற இடத்தில் அமைந்திருக்கிறது இவரது சமாதி. இவரது சித்துக்களில் ஒன்றை பார்க்கலாம்.
காவிரியாறு ஈரோட்டைத் தாண்டி கொடுமுடி எனும் தலத்துக்கு வருகின்ற இடத்தில், ஆற்றின் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது அகத்தியம்பாறை எனும் இடம். ஆற்றின் நடுவே அமைந்துள்ள இந்தப் பாறையின் மீது மோதி காவிரி வெள்ளம் கிழித்துக் கொண்டு இருபுறமாக விரைந்து செல்லும் அழகைப் பார்த்து ரசிக்கலாம். அந்த பாறையின் மீதுதான் சதாசிவ பிரம்மேந்திரர் வந்து அமர்ந்து தியானத்தில் இருப்பாராம். பிறரால் தொல்லை ஏற்படாத ஏகாந்தமான இடமாக இந்த இடத்தை பிரம்மேந்திரர் தேர்ந்தெடுத்ததில் வியப்பில்லை. அப்படி அவர் தியானத்தில் தன்னை மறந்து, இவ்வுலக புறவாழ்வை, தன் உடலை மறந்த நிலையில் பிரம்மத்தில் ஈடுபட்டிருக்கும்போது சுற்றுப் புறத்திலோ, தன் உடலுக்கோ எது நேரினும் அதனை உணரமுடியாத ஆழ்ந்த தியான நிலை. அப்போது அவர் உடல் வெறும் கட்டை, அதற்கு ஏற்படும் துன்பம் அவரை எட்ட முடியாத நிலை.

அப்படியொரு நாள் ஆழ்ந்த தியானத்தில் இருந்த சதாசிவ பிரம்மேந்திரரை ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஒவ்வொரு நாழிகைக்கும் அதிகரித்து இறுதியில் பாறையின் மீது ஆழ்நிலை தியானத்தில் இருந்த யோகியாரை அடித்துக் கொண்டு போய்விட்டது. அவர் உடல் என்னாயிற்று. அவர் உயிர் என்னவாயிற்று என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. சில நாட்களில் ஆற்று வெள்ளம் வற்றியதும், பாறையில் அமர்ந்து தியானத்திலிருந்த அந்த யோகி எங்கே, என்னவானார் என்று சிலர் தேடத் தொடங்கினார்கள். ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவர் எங்கு சென்றாரோ, கரை ஏறினாரோ, தன்னை மறந்து இருந்த நிலையில் நீரில் மூழ்கி இறந்து போய் உடல் எங்காவது கரை ஒதுங்கியதோ. அல்லது ஆற்று நீரோடு போய்விட்டதோ? தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை என்றதும், மக்களும் சோர்ந்து போய் தேடுதலை விட்டுவிட்டார்கள். மறந்தும் விட்டார்கள்.

சில காலம் ஆனபின்பு ஆற்றில் மணல் அள்ள மாட்டு வண்டிகள் வந்த வண்ணம் இருந்தன. மணல் கொள்ளை என்பது இப்போதுதான், ஆனால் அந்த நாளில் வீடு கட்ட, மற்ற கட்டடங்கள் கட்ட மணலை ஆற்றிலிருந்து வண்டிகளில் எடுத்துப் போனார்கள். அப்படி மணல் எடுத்துப் போக வந்த ஆட்கள் ஆற்றில் நல்ல மணல் மேடிட்டுக் கிடந்த இடம் நோக்கிப் போய் அங்கு மண்வெட்டியால் மணலைத் தோண்டி எடுத்து வண்டிகளில் கொட்டிக் கொண்டிருந்தார்கள். மேடு கரைந்தது. வண்டிகளில் மணல் நிறைந்தது. சற்று ஆழத் தோண்டிய ஒரு இடத்தில் மணல் எடுத்தவன் ஓங்கி மண்வெட்டியால் வெட்டியபோது, மணல் அல்லாத ஏதோவொரு பொருளின் மீது மண்வெட்டி பட்டதை உணர்ந்தான். உடனே அந்த இடத்தை ஜாக்கிரதையாக தோண்டி மணலை விலக்கிப் பார்த்தான். அங்கு ஒரு மனிதரின் தலை. அதில் மண்வெட்டியின் வெட்டுப் பட்டு குருதி கசிந்தது.

சுற்றிலும் இருந்த மணலை விலக்கி அந்த மனிதரை வெளியே எடுத்தனர். ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாறையின் மீது யோகத்தில் ஆழ்ந்திருந்த சதாசிவ பிரம்மேந்திரர்தான் அவர். இத்தனை நாள் மணலுக்கடியில் தன்னுணர்வு இன்றி சதா சிவ தியானத்தில் ஆழ்நிலையில் உறைந்திருந்திருக்கிறார். பரப்பிரம்மமான ஞானி ஒருவர் மணலுக்கடியில் யோக நிலையில் இருந்தவர் தலையில் மண்வெட்டி பட்டு இரத்தம் கசிகிறது, அந்த ஞானி உயிருடன் தான் இருக்கிறார் எனும் செய்தி ஊருக்குள் கசிந்தது.

கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து பார்த்தனர். செய்தி சுற்றுப்புறங்களுக்கும் பரவியது. கொடுமுடிக்கருகில் ஆற்றுக்கிடையே இருந்த பாறையில் ஒரு ஞானி தவத்தில் இருந்தார். அவரை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது என்றார்கள். இவர் அவராகத்தான் இருக்க வேண்டும். இவர்தான் சதாசிவ பிரம்மேந்திரர். ஞானி அல்லவா, உணவு, நீர் இன்றி உயிர்வாழும் சக்தி வேறு யாருக்கு உண்டு. அவரை மணலுக்குள்ளிருந்து வெளியே கொணர்ந்து, உடலுக்கு சூடேற்றி, உண்ண ஆகாரம் கொடுத்து அவரை மக்கள் சுயநிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

சுய நினைவு திரும்பி சுற்றிலும் நிற்கும் மக்களை ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்து தான் எங்கிருக்கிறோம், தனக்கு என்னவாயிற்று என்பதை உணராமல், உடனே புறப்பட்டு யாரிடமும் எதையும் கேட்காமல் மெளனியாக கால்போன போக்கில் வேகமாகச் சென்று மறைந்து விட்டார் இந்த ஞானி சதாசிவ பிரம்மேந்திரர். இப்படியொரு வரலாறு இந்த யோகியைப் பற்றி இன்றும் பேசப்படுகிறது.



புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்.

தஞ்சாவூர் மாரியம்மன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படும் இந்த மாரியம்மன் கோயில் இருக்குமிடம் புன்னைநல்லூர். தஞ்சையிலிருந்து கிழக்கே சுமார் 3 கி.மீ. தூரத்தில் இருக்கும் இவ்வூர் வழியாகத்தான் திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் செல்லும். இந்த மாரியம்மன் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன். இவ்வாலயம் எழுந்த வரலாற்றையும், இவளை வழிபட்டு பலனடைந்த பலருடைய வரலாற்றுச் செய்திகளும் ஏராளம். ஒரு ஆங்கிலேய அதிகாரிகூட இவளை வழிபட்டு தன் கண்பார்வை பெற்றதாக செவிவழிச் செய்திகள் உண்டு. இன்னொரு சிறப்பும் இந்த கோயிலுக்கு உண்டு. நாகூர் தர்காவுக்கு இந்துக்களும் சென்று வழிபடுவது போல, இந்த மாரியம்மனை இதர மதத்தாரும் வந்து வழிபடுவதை நாம் பார்க்க முடிகிறது.

ஒரு முறை மராத்திய மன்னன் தன் குதிரையிலேறி தன் சிறு பெண் குழந்தையுடன் இராமேஸ்வரம் சென்று திரும்பினார். ஊர் திரும்பிய பின் அந்தப் பெண் குழந்தையின் கண்களிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது. அரச குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்தனர். அரண்மனையில் சித்த வைத்தியம், யுனானி வைத்தியம், ஆயுர்வேதம் ஆகியவைகள் இருந்தும் எந்த வைத்தியராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது சமயபுரம் மாரியம்மனின் நினைவு மன்னனுக்கு வந்தது. சமயபுரத்தாள் பக்தன் மன்னன். உடனே அந்த மாரியம்மனிடம் வேண்டிக் கொண்டான், தன் மகளின் கண் உபாதையை அம்மா சரிசெய்ய வேண்டுமென்றும், தங்கத்தால் ஒரு கண் செய்து அம்மனுக்குக் காணிக்கை அளிப்பதாகவும் அம்மனிடம் வேண்டிக் கொண்டான். அப்போது அவன் கனவில் சமயபுரம் மாரியம்மன் தோன்றி, நீ சமயபுரம் தேடி அத்தனை தூரம் வருவானேன், உன் அருகிலேயே புன்னைமரக் காட்டில் நான் இருக்க வெறு இடம் தேடி போவானேன், என்றாள். கண் விழித்துப் பார்த்த மன்னனுக்கு மர்மம் புரியவில்லை. தன் ராஜ்யத்திலேயே புன்னைமரக் காட்டில் இருப்பதாகச் சொன்னாளே, அது எங்கிருக்கிறது. அங்கு அன்னை மாரியம்மா எங்கிருக்கிறாள் என்பதை அறியாமல் போனேனே என்று வருந்தி, அந்த இடத்தைக் கண்டுபிடிக்கத் தன் புரவியில் ஏறி புன்னைமரக் காடு இருக்கும் திசை நோக்கிச் சென்றான்.
தஞ்சை நகரத்திலிருந்து சில கல் தொலைவிலேயே இருந்த ஒரு பகுதி புன்னை மரக்காடாக இருந்து வந்தது. அந்த காட்டிற்குள் அன்னை சொன்ன இடம் எது என்றறிய மன்னன் தேடிப் போனான். அப்போது வழியில் ஒரு சிறு பெண் நின்று கொண்டிருக்க, அந்தப் பெண் அந்தக் காட்டிற்குள் எப்படி வந்தாள் என்று வியந்து மன்னன் அந்தப் பெண்ணை விசாரிக்க, அவள் தன்னுடைய இருப்பிடம் இங்குதான் என்று ஓரிடத்தைக் காண்பித்து ஓடிவிட்டாள். அந்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்திருந்தது. அதனருகில் ஒரு மரத்தினடியில் அவதூதராக ஒரு சித்தர் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் கண்டான். அவரைக் கண்டதுமே அவர் ஒரு மகான் என்பதை உணர்ந்த மன்னன் அவரை வணங்கி தொழுது நின்றான். கண்விழித்துப் பார்த்த அவரை மீண்டும் மன்னன் வணங்கி அவர் ஆசி வேண்டி நின்றான். தன்னுடைய கனவில் சமயபுரம் மாரியம்மன் தோன்றி சொன்ன செய்தியையும் சொல்லி, பின்னர் தன்னை அங்கு ஒரு சிறு பெண் அழைத்து வந்து தன் இருப்பிடம் இதுதான் என்று அந்த புற்றைக் காட்டிவிட்டு மறைந்து போனாள் எனும் செய்தியைச் சொல்ல, அந்த மகான் எழுந்து அந்த புற்றை மாரியம்மனாக உருவாக்கினார். மன்னனுடைய எண்ணத்தை உணர்ந்த அந்த மகான் அஷ்ட கந்தங்கள் எனும் எட்டு வாசனை திரவியங்களான சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோஜனை, அகில், சந்தனம், குங்குமப்பூ, பச்சை கற்பூரம் ஆகியவைகளைக் கொண்டு அந்த புற்று மண்ணோடு கலந்து புற்றை மாரியம்மன் உருவம் சமைத்தார். உடனே சர்வ சக்தி படைத்த ஜன ஆகர்ஷண சக்கரம் ஒன்றை தயார் செய்து அம்மன் முன்பாக வைத்து அதனைத் தொடர்ந்து பூஜை செய்து வருவோர்க்கு மனக்குறை தீரும் என்று சொன்னார். சமயபுரம் மாரியம்மனே இங்கும் வந்து கொலுவீற்றிருப்பதையும், மருந்துகளாலும், ஆகர்ஷண சக்கரத்தாலும் சக்தி படைத்த அந்த புற்று மாரியம்மன் வேண்டிய வரம் தருவாள் என்பதை மன்னன் உணர்ந்தான். அப்படி புற்றை அம்மனாக மாற்றியவர்தான் சதாசிவ பிரம்மேந்திரர். சித்தர் பெருமான் சொன்னபடி அந்த மாரியம்மனைப் பணிந்து வேண்டி வந்த மன்னனுக்கு அவன் மன சஞ்சலம் விலகும்படி அவன் பெண் குழந்தையின் கண் பார்வை சரியானது. மாரியம்மனின் சக்தியையும், சித்தரின் திருவிளையாடலையும் எண்ணி மன்னன் மனம் மகிழ்ந்தான்.

அந்தப் புற்றின் மேல் ஒரு ஆலயத்தை எழுப்பச் செய்தான் மன்னன். அங்கு முறையாக பூஜைகள் நடைபெற கட்டளை பிறப்பித்தான். மன்னன் குடும்பத்தாருக்குக் குல தெய்வமாக இருந்து புன்னைநல்லூர் மாரியம்மன் காத்து வந்தாள். இந்த அம்மனுக்கு ஐந்தாண்டுகளுக்கொரு முறை தைலாபிஷேகம் எனும் புனுகுச் சட்டம் அணிவிப்பது நடைபெறுகிறது.

இங்கு வந்து வேண்டிக் கொண்டவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதைக் கேள்விப்பட்டு மக்கள் வெள்ளம் போல இங்கு வந்து தரிசித்துச் செல்கிறார்கள். சதாசிவ பிரம்மேந்திரரின் அருள் விளையாட்டுக்களில் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன் உருவமும் ஒன்று என்பதை இன்றும் மக்கள் வியந்து போற்றி வணங்கி வருகிறார்கள்.

தொகுப்பு ;வை.பூமாலை,சுந்தரபாண்டியம்
நன்றி ;தமிழ் ஹிந்து

புதன், 30 மார்ச், 2016

கொடுப்பவர் கொடுத்தே தீர்வர் கிடைப்பது கிடைத்தே தீரும்,

கொடுப்பவர் கொடுத்தே தீர்வர்
கிடைப்பது கிடைத்தே தீரும்,



யாருக்கு எதைத் தர வேண்டும், எப்படித் தர வேண்டும் என்பது இறைவனுக்குத் தெரியும். இறைவன் கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்ததை, யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
காசியபர் எனும் அந்தணர், கல்வி கேள்விகளில் சிறந்தவர். என்ன காரணத்தாலோ, அவருக்கு பார்வை குறை ஏற்பட்டு, ஒரு கட்டத்தில், முழுவதுமாகவே தெரியாமல் போனது.
இதனால், பார்வை திரும்ப கிடைக்க வேண்டி, திருச்செந்தூர் முருகப் பெருமானை சரணடைந்தார். அதிகாலையில் எழுந்து, கடல் மற்றும் நாழிக்கிணற்றில் நீராடுவதும், அவன் நாமத்தை பாராயணம் செய்வதுமாக திருச்செந்தூரான் சன்னிதியே கதியென்று கிடந்தார்.
பிரார்த்தனையின் பலனாக, திடீரென்று ஒரு நாள், அவருக்கு மங்கலாகப் பார்வை தெரியத் துவங்கியது. மகிழ்ச்சியில் கூத்தாடினாலும், 'திருச்செந்தூரா... உன் அருளால், என் பார்வை முழுமையாகத் தெரியாதா...' என வேண்டி, கண்ணீர் விட்டார்.
அப்போது, கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் அருளாடி, 'காசியபா... என் பக்தனும், இந்நாட்டு அரசனுமான ஜகவீரன் இங்கு வருகிறான்; அந்த உத்தம பக்தனின் கை, உன் மீது பட்டதும், உனக்குப் பார்வை முழுமையாகத் தெரியும்...' என்றார்.
அதைக் கேட்டதும், அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்பட்டாலும், அதேசமயம் கலக்கமாகவும் இருந்தது. காரணம், பார்வையற்றவர்களை அரசர் பார்க்க கூடாது என்பது அக்கால சம்பிரதாயம்.
இந்த மனப் போராட்டத்தில் காசியபர் அமர்ந்திருக்க, சிறிது நேரத்தில்,கோவிலுக்கு வந்தார் அரசர் ஜகவீரன். அவரிடம் அருள் வாக்கு பற்றிய தகவல் எடுத்துரைக்கப்பட்டது. ஆனால், அரசரோ, 'நான் அரசன் என்பதால், அதிகாரம் வேண்டுமானால் என்னிடம் இருக்கலாமே தவிர, அற்புதம் செய்யக் கூடிய அளவிற்கெல்லாம் என்னிடம் சக்தி கிடையாது...' என்று சொல்லி, சாமி தரிசனம் செய்வதில் முனைப்பாக இருந்தார்.
அன்றிரவு, அரசர் ஜகவீரன், கோவிலிலேயே தங்க வேண்டி இருந்ததால், சண்முக விலாச மண்டபத்தில் வந்து அமர்ந்தார். திடீரென்று அவருக்கு என்ன தோன்றியதோ, 'அந்த பார்வையற்றவரை அழைத்து வாருங்கள்...' என்றார்.
அரசு பணியாளர்கள், சம்பிரதாயத்தை எடுத்துச் சொல்லி மறுத்த போதும், பிடிவாதமாக அவரை அழைத்து வரச் சொன்னார் அரசர்.
காசியபரைப் பார்த்ததும், மனம் கசிந்த அரசர், 'நீங்கள் நாளைக் காலை நீராடி, முருகன் சன்னிதிக்கு வாருங்கள்; அவன் திருவருள்படி நடக்கட்டும்...' என்றார்.
மறுநாள் காலையில், 'முருகா... உன் சொற்படி இவருக்குப் பார்வை வராவிட்டால், நான், என் தலையை அறுத்துக் கொண்டு இறப்பேன்...' என்று கூறி, விபூதியை எடுத்து காசியபரின் கண்களில் ஊதி, அவர் கண்களை, தன் கைகளால் மெல்ல வருடினார் அரசர்.
அடுத்த வினாடி, காசியபருக்கு பார்வை திரும்பியது. அனைவரும் அரசரை வாழ்த்த, அவரோ, 'முருகன் எனக்களித்த உயிர்ப்பிச்சை இது; ஆறுமுகனின் அருள் இதை விடப் பெரியது...' எனக் கூறி, அமைதியாக வெளியேறினார்.
அரசரின் கரங்களால், காசியபரின் துயர் தீர்த்த ஆறுமுகன், நம் துயரையும், எவர் மூலமாகவாவது களைவார்.
ஜகவீரன் எனும் அந்த அரசரின் மகன் தான், வீரபாண்டிய கட்டபொம்மன்! 

தொகுத்தவர்;வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

பாட்டி வைத்தியம்



சில வகை கீரைகளின் மருத்துவ குணங்கள்

முருங்கைக்கீரை- இது ஒரு சத்து நிறைந்த கீரை, ஆண்மையை வளர்ப்பது, குருதியை தூய்மைப்படுத்தும் இரும்புச் சத்துக் காெண்டது, உடல் வெப்பத்தை தணிப்பது, மலச்சிக்கலை பாேக்குவது. மாதவிடாய் தறுவாயில் வலியிருந்தால்
முருங்கைக்கீரை சாற்றில் உப்பு போட்டு அருந்தினால் வலி மறையும். வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும். பிற மருந்துகளின் பக்க விளைவுகளை அகற்ற இதன் சாறு உதவும். தாெடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய நாேய்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம். சிறு நீரை பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் மாத்திரைகளை நினமும் எடுத்துக் காெள்வதிலிருந்து தப்பிக்கலாம். கருவுற்றாேர் வாரம் ஒரு முறை சாப்பிட்டால் நீர் இறங்கும். கை பாத வீக்கத்தை தடுக்கும்.சோகையை பாேக்கும்.

புளிச்ச கீரை: உடலுக்கும் குடலுக்கும் வளமூட்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். வயிற்றுக் கடுப்பு உள்ளவர்கள் இக்கீரையை ெவங்காயம், வெந்தயம் போட்டு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடனே நிவாரணம் ெதரியும்.
குடல் பலவீனத்தால்  ஏற்படும் பேதி நிற்கும், குருதிப் பாேக்கை குறைக்கும்.

சிறுகீரை - உடல் தளர்ச்சியை  பாேக்கி ஊக்கமூட்டுவது, மலச்சிகலை போக்குவது, குடலின் பலத்தை அதிகரிப்பது, உடல் பித்தத்தை குறைப்பது.

வெந்தயக்கீரை - முருங்டகை போலவே இரும்புச் சத்துடையது. உடலுக்கு ஊக்கத்தை அளிப்பது, வயிற்றுப்புண்ைண
ஆற்றுவதில் சிறந்தது, கண்ணிற்கு மிகவும் நல்லது,பேதி சயமயத்தில் சப்பிட்டால் பேதியை கட்டுபடுத்தவல்லது.

அரைக்கீரை : நீலிக்கு அடுத்து விஷங்களை முறிக்கும் ஆற்றல் அரைக்கீரைக்கு  உண்டு. ஆங்கில மருந்துகளின் வேகத்தை பக்க விளைவிகளை முறியடிக்கும், தேமல், சாெறி சிரங்கு உள்ளவர்கள் இந்தக்கீரையை தினசரி உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால்  குணமாகிவிடும்.
அகத்திக் கீரை  ;  வெப்பத்தை தணிக்கும், உள் சூட்டை அகற்றுவதால் இதற்கு அகத்தி என்ற பெயர் ஏற்பட்டது, அனைத்து வகையான சத்துக்களையும் உடையது இந்தக் கீரைதான்.குடல் குருதியை தூய்மைப்படுத்தும், குடற்புழுவை கொல்லும், பித்தத்ைத தணிக்கும். தலைச்சுற்று, மயக்கம் ஆகியவற்ைறப் ேபாக்கும், உடலில் எந்த வகையில் விஷம் ேசர்ந்திருந்தாலும் அதை முறிக்கும் தன்மை இதற்குண்டு, ஆனால் இதை அடிக்கடி சாப்பிட்டால் பேதி ஏற்படும்.

பசலக்கீரை -பருப்புக்கீரை / 

குளிர்ச்சி தருவதில் சிறந்தது, நீர் உடலினர் அடிக்கடி சாப்பிடக்கூடாது. நீரைப் பெருக்கும். பால் சுரக்கும். வயிற்று புண்ணாற்றும், கண்ணாெளி தரும்.

மணத்தக்காளி கீரை - அல்சரை ஆற்றுவதில் முதன்ைமயானது, குடலுக்கு பலமளிப்பது,பெண்மையை வளர்ப்பது, மங்ைகயருக்கு மார்பை வளரச்செய்வது, கருப்பை குறைபட்டை  நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது.

பாலக்கீரை - உடலுக்கு வலுவூட்டுவது, மலச்சிக்கலைப் ேபாக்கும். குளிர்ச்சியைத்  தரும். குடல் நாேய்களுக்கு நல்லது.

குமட்டிக் கீரை - இது தாமிரச் சத்துடையது. குருதியை தூய்ைமப் படுத்துவது மலத்தை இளக்கும் தன்மை உடையது கருவுற்ற மகளிருக்கு இது நல்லது, உடல் நீரை அதிகரிக்கவல்லது.

தொய்யல் கீரை: - தொய்ந்து  போன  நாடி நரம்புகைள வலுவாக்கும், உடலுக்கு ஊக்கமூட்டுவது, குளிர்ச்சியானது, செரிப்பாற்றலை மிகுவிக்கும், மலச்சிக்கலை பாேக்கும், வாத நாேயாளிக்கு ஏற்றது, பேறு காலத்திற்கு பின்பு மகளிர் சாப்பிட ஏற்றது. உடலைத் தேற்றும்.

மருந்துக்கு பதில் கீரை வாங்கி சாப்பிடுங்கள் :
காய்கறி வகைகளில் கீரை வகைகளுக்கு  முக்கிய இடம் உண்டு. மருந்துக் கடைகளுக்குச் ெசன்று அதிக விலையில்  சத்து மருந்துகைள வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக கீரை சாப்பிட்டால் பாேதும்.
தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து  விடும். விலையும் குறைவு. இதில் பக்க விளைவுகளுக்கு இடமே இல்லை.
அந்தளவுக்கு கீரைகளில்  அற்புதமான மருத்துவ குணங்கள் பாெக்கிஷமாக பாெதிந்து கிடக்கின்றன.
    கீரை உணவு அனைவருக்கும் ஏற்றது. ஆனால் பெரும் பாலான குழந்ததைகள் கீரையை பார்த்தால் ஏதோ இலை தழை என்று நினைத்து  பயந்து ஓடி விடுகின்றன. குழந்ைதகள் மட்டுமல்ல, இளம் சிறுவர்களும், சிறுமிகளும் கூட கீரை வைத்தால் 
 தாெட்டு கூட பார்ப்பதில்லை. இதை பொற்றாேர்தான் மாற்ற வேண்டும்.
சின்ன வயதில் இருந்தே குழந்தைகளுக்கு கீரை உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும். கீரை உணவு எந்தளவுக்கு சா்பிடுகிறோமோ அந்தளவுக்கு ஆரோக்கியம் அமையும்.

தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

செவ்வாய், 29 மார்ச், 2016

ஏழ்மை வெட்கத்திறிகுரியது அல்ல !

ஏழ்மை வெட்கத்திறிகுரியது அல்ல !

இந்தியா முழுவதும் ஜெகஜோதியாக நடந்து கொண்டிருப்பது கல்வி வியாபாரமும், கல்யான சந்தையில் வரதட்சணை என்ற பெயரில் நடக்கும் மணமகள் வியாபாரமும் தான்.
  தனியார் சுயநிதிக்கல்லூரிகள் வந்தபின் மருத்துவம், பொறியல்  படிப்பவர்கள் எண்ணிக்கை பலமடங்காக பெருகிவிட்டது. இதில் படிப்பவர்கள் அனைவரும் கல்வி நோக்கோடு படிப்பவர்களா? என்பது சந்தேகம் தான்? அவர்களும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளையே கொண்டவர்களாகவே திகழ்கின்றனர்.
  இன்றைய கல்வி சந்தையில் பணக்காரர்களின் பிள்ளைகளுக்கும், ஏழை மாணவர்களுக்கும் இடையே பொருளாதார இடைவெளி பூதாகரமாக தெரிகிறது.
  தினந்தோறும் ஒரு புதிய சுடிதாரில்  வரும் பணக்கார மாணவிகளும், வருடம் முழுவதும் ஆறு சுடிதாா் கூட இ்ல்லாத ஏழை மாணவிகளுக்கும் பளி்ச சென்று வித்தியாசம் தெரிகிறது. பைக்கிலும், காரிலும் வரும் பணக்கார இளைஞனுக்கும் ,தினம் பஸ்ஸிலும், சைக்கிளிலும், இரயிலும் வரும் ஏழை இளைஞனுக்கும் இடைவெளி கூடிவிட்டது.
   எவ்வளவு கெட்டாலும், தாங்கிப் பிடிக்கும் பணவசதி உடைய பிள்ளைகளைப் பற்றி கவலை இல்லை. நடுத்தர, ஏழை மாணவ, மாணவியர் தாழ்வு மனப்பான்மை கொள்வது தடுக்கப்பட வேண்டியது அவசியமே.
  பணத்தை வீசுயெறயும் ஒருவன் பின்னால் பத்துபேர் நிற்கிறார்களே என்று கூச்சப்படாதீர்கள், படிப்பில் கெட்டிக்காரராய் உங்களை நிரூபித்தால் அதே பத்துப் பேர் உங்கள் பின்னால் சந்தேகம் கேட்டு வருவார்கள் என்பதை உணர வே்ண்டும்.
  பணக்கார பிள்ளைகள் மகாலட்சுமியால் பலரை ஆளுகிறார்கள்,
 ஏழைப்பிள்ளைகள் சரஸ்வதியால் பலரை ஆளட்டுமே.
  இராமேஸ்வரத்தில் சிறு வயதில் வீடு வீடாக பேப்பர் போட்டு படித்து மேதையானவர்தான் பாரதப் பிரதமரும், அணு விஞ்ஞானியுமான திரு அப்துல்கலாம்,
  வயலில்வேலை பார்த்தபடியே மண்வெட்டியில் கரித்துண்டால் எழுதி எழுதிப் படித்தவர்தான் ஆப்ரகாம் லிங்கன்.  ஆப்ரகாம் லிங்கனின் தாடியை பற்றி மட்டும் தெரிந்தால் போதாது. அவரின் தன்னம்பிக்கையையும் தெரிய வேண்டாமா?


   ஆப்ரகாம் லிங்கனின்  தந்தை ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி, ஆனால் அவரது மகனோ அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியானார்.
  உழைப்பாலும், முயற்சியாலும் உயர்ந்த ஜனாதிபதி லிங்கனை அவமானப் படடுத்தும் எண்ணத்துடன் அமெரிக்க பாராளு மன்றத்தில் ஒருவர், " மிஸ்டர் லி்ங்கன் உங்களை இங்கே பலபேர் பராட்டி பேசினார்கள், அதுகுறித்து நீங்கள் மகிழ்ந்து விட வேண்டாம், உங்கள் பழமை, வறுமை, குறித்து நினைவு கொள்ளுங்கள்,உங்கள் அப்பா எனக்கு தைத்துக் கொடுத்த   "சூ" இன்னும் எனது காலில் இருக்கிறது, ஞாபகம் இருக்கட்டும் " என்று லிங்கன் தந்தை செருப்பு தைக்கும் தொழிலாளி என்பதை குத்திக் காட்டினார்.
  இதற்கு லிஙகனோ சற்றும் பதட்டப் படாமல், எழுந்து, " நண்பரே, என் தந்தை மறைந்து பல காலம் ஆயிற்று, ஆனால் அவர் தைத்துக் கொடுத்த "சூ" 
இன்னும் உங்களிடம்உழைக்கிறது என்றால் அவர் எவ்வளவு தேர்ந்த சிறந்த தொழிலாளி என்பது தெரிகிறது. அவருக்கு மகனாகப் பிறந்தது குறித்து நான் பெருமை அடைகிறேன். அதுமட்டுமல்ல இப்போது உம் " சூ" கிழிந்து போனாலும் என்னிடம் கொடுங்கள் அதை நான்சரி செய்து தைத்துக் தருகிறேன். அந்தத்  தொழிலும் நான் நன்கு அறிவேன். எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும், நாடாளவும் தெரியும், இரண்டுமே நன்றாகத் தெரியும் என்றார்.  ஏழ்மையிலும் தனது தானும் உயர்ந்தவன் தான் என்ற தன்நம்பிக்கையும் விடாமுயற்சியும் அவருக்கு அவ்வாறு சபையிலேயே தைரியம் அளித்தது கண்டு யாவரும் வியந்தனர்.
  ஏழ்மையோ வறுமையோ வெட்கத்திற்குரியது அல்ல, தாழ்வு மனப்பான்மையை தூரம் தள்ளினால் வெற்றி நிச்சயம்.

படித்ததில் பிடித்தது " சுகி சிவத்தின் / வெற்றி நிச்சயம்  கட்டுரை
தொகுத்தவர் ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

இறையும் இசையும்


இறையும் இசையும்  

இசை என்பது இசைப்பது என்னும் பொருளையுடையது. ஒருவரது எண்ணங்களை , கருத்துக்களை, அறிவியலை மற்றொரு வருடைய கருத்தாகிய அறிவுடன் இசைப்பது. அறிவே இயற்றமிழ், அவ்வறிவை இசைப்பாடல்களால் மற்றவருக்கு இசைவிக்கும் பாடல்களே இசைத்தமிழ் பாடல்களாகும். நடிப்பால் மெய்ப்பாட்டால் அறிவைப் புரிந்து கொள்வதற்கு இசைப் பாடல்களும், நாடகமும் பெரிதும் துணைபுரிவன. இசைத்தமிழும் நாடக் தமிழும் இயலாகிய அறிவியலைத் தொல்காப்பியர் காலம் முதல் இன்று வரை வளர்த்து வந்துள்ளது. காமத்தை வளர்ப்பதே இசை என்ற சமணர்கள் வாதத்தையும், கடந்து நமது சைவ சமயாச்சாரியார்கள் இசைப் பாடல்களாலேயே சைவத்தை , சிவபக்தியை வளர்த்தனர். 

      இசையையும் நாடங்களையும் பயன்படுத்துவோரைப் பொறுத்துப் பயன்களும் விளையும் . இக்கருத்தைத் தெளிவிக்க நீதி வெண்பாவில் ஒரு பாட்டு உண்டு. 

" வல்லவர்பாற் கல்வி மதமா ணவம் போக்கும் 
அல்லவர்பாற் கல்வி யவையாக்கும் - நல்லிடத்தில் 
யோகம் பயில்வார் உயர்ந்தோர் இழிந்தோர்கள் 
போகம் பயில்வார் புரிந்து. "
நீதி வெண்பா - 70 
 எனவே சைவர்கள், சைவக் கருத்துக்களையும் தத்துவ அறிவியலையும் வளர்ப்பதற்கு இசைக்கலையைப் பெரிதும் பயன் படுத்தி கொண்டார்கள். இந்நிலை கி.பி. 3ஆம் நூற்றாண்டு காரைக்கால் அம்மையார் காலத்திலிருந்தே தொடங்கியிருக்கிறது. அவர் தான் தமிழ் இசைப்பாடல்களின் முன்னோடியாக திகழ்ந்துள்ளார். கி.பி. 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இசைத்தமிழை திரு ஞானசம்பந்தர் வளர்த்தார். ஏறத்தாள பத்தாம் நூற்றாண்டின் இறுதிவரை வாழ்ந்த திருமாளிகைத்தேவர் முதல் சேதியாராயர் வரை திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆசிரியர்கள் இசைத்தமிழையும், இன்னுயிரான சைவத்தையும் வளர்த்தனர். 
    இறைவனே ஏழிசையாயும், இசைப்பயனாயும் இருக்கின்றான் என்பார் சுந்தரர், கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகவும், பண் ஒன்றே இசைபாடும் அடியார்கள் குடியாக திருபுள்ளிருக்கு வேளூரில் இருப்பவன் என்று சம்பந்தரும், " நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகி " (அபிராமி அந்தாதி 49,) என்று அபிராமி அம்மையை அபிராமிப் பட்டரும் போற்றியுள்ள திறத்தால், இறையும் இசையும் இசைந்துள்ள பாங்கை நாம் உணரலாம். சைவ மதத்தினர் மட்டுமன்றி வைணவ அடியவர்களும் இசை மூலம் இறைவரை கவர்ந்தள்ளனர். ஆண்டாள் பாடிய திருப்பாவை இறைவரின் அவதாரமாகிய ஆண்டாள் நாச்சியாரே இசையைப்பாடி இறைவரைக் கவர்ந்துள்ளார் என்பது யாவரும் அறிந்ததே. இறைவர் துயில் எழுப்ப திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் அனைத்தும் இறையும், இசையும் இணைபிரியாத தன்மையினை விளக்கும், 
   இறைவன் அந்தணன் உருக்கொண்டு மாணிக்கவாசகரிடம் வந்து, திருவாசகம் முழுவதையும் மாணிக்கவாசகர் சொல்லி பாட ஏடும் எழுத்தாணியும் கொண்டுஎழுதினார், மாணிக்கவாசகர் பாட அதையும் இறைவரே தானே எழுதியது, இறைவர் தமிழ் இசையில் கொண்ட அளப்பரிய பந்தத்தைக் காட்டுகிறது. இத்துடன் இறைவரை தன் பக்தி நெறியில் ஆழ்படுத்த ஈர்க்க மூவர் பாடிய தேவாரப்பாடல்கள் அனைத்தும் இறையும், இசையும் சேர்ந்த பண்பினை காட்டுகிறது. வாய்வழிச் செய்தியாக ஆன்மிக ஆன்றோர்கள் கூறுவது 
 "அப்பர் என்னைப் பாடினார், 
சம்பந்தர் தன்னைப்பாடினார், 
சுந்தரர் பொன்னைப்பாடினார்."
பின் இறைவர் சுந்தரரைக் வேண்டிக்கொண்டபடி "அடியாரையும் பாடினார்" 
என்ற கூற்றை நாம் இசைப்பாடல்களில் இறைவருக்கு தந்த ஈர்ப்பைக் காணலாம். 
"தமிழோடு இசைப்பாட மறந்தறியேன்," என்ற திருநாவுக்கரசரின் பாடல்வரிகள் தமிழ் இசையின் மூலம் இறைவரை ஆட்கொள்ள முழு ஆயுதம் தமிழ் இசைப்பாடல்களே என்பதை உணரலாம். தோத்திரப் பாடல்கள் யாவும் இறைவரின் திருவாக்குகளே என்று இறைவரே கூறியது என்பதும் காணலாம், இவ்வலிமை அறிந்த செந்தமிழ் மந்திரங்கள் பன்னிரண்டும் திருமறைகளாக தோன்றின, 

 இறைவரை தம் பாடல்களால் வசப்படுத்தி அரிய பெரிய செயல்களை செய்துகாட்டிய சமயக்குறவர்களின் பெருமையை சொல்லவும் வேண்டுமோ என்று திருவிளையாடல் புராண அருளாசிரியர் பரஞ்சோதி முனிவர் கூறும் பாடல்;
"தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் / முதலை
உண்ட பாலனை அழைத்ததும் எலும்பு பெண் உருவாக்
கண்டதும், மறைக் கதவினைத் திறளந்ததும் / கன்னித்
தண்டமிழ்ச் சொலோ? மறுபுலச் சொற்களோ ? சாற்றீர் " என்கிறார்.

பரவை நாச்சயாரிடம் சுந்தரர் பொருட்டு இறைவனே தூது சென்றார், அவிநாசியில் முதலை உண்ட பார்ப்பனச் சிறுவனை, சுந்தரர் செந்தமிழ் பாட, மாண்டவன் மீண்டான், 
எரிக்கப்பட்ட அங்கம், திருஞானசம்பந்தரின் பசுந்தமிழால் பூம்பாவைப் பெண்ணாக உருக்கொண்டு மீண்டு வந்தது, 
திருமறைக்காட்டில் பூட்டிய திரு்க்கோவில் கதவம் திறக்க திருநாவுக்கரசர்  செந்தமிழ் பாடித் திறக்கச் செய்தார், 
திறந்த திருக்கதவும் திருக்காப்பிடவும், திறக்கவும் ஆளுடைய பிள்ளையார் செந்தமிழ் மந்திரமாக பாடியுள்ளார், இவை எல்லாம் கன்னித்தணடமிழ் பாக்களின் சிறப்பினையும், இப்பாடல்களால் இறைவர் கட்டுண்டு, பாடிய அடியார்கள் வேண்டியதை அருளியது, தமிழ் இசைப்பாடல்களால் அன்றோ !இசையில் மயங்கிய இறைவர் வேண்டுவோர் வேண்டதக்கது அருளியது இசையின் மகத்துவம் அன்றோ!  அதுவும் திருமறை தேவாரப்பாடல்கள் அனைத்தும் இறைவரை ஈர்த்து,ஞான ஒளியையும், அருள் மழையையும் தருவன என்பதைக் காணலாம்.

எனவே இறையும், இசையும் ஒன்ரோடென்று இணைந்து, இறைவழிபாட்டிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிந்து, செந்தமிழ் மந்திரப்பாடல்கள் பாடி இறையோடு இணைவோம்.
 திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் 
தொகுப்பு ; வை.பூமாலை,சுநதரபாண்டியம்.
மேலும் பல ஆன்மிகத்தகவலுக்கு 
http://vpoompalani05.blogspot.in/
 http://vpoompalani05.wordpress.com 
http://www.vpoompalani05.weebly.com

திங்கள், 28 மார்ச், 2016

டென்ஷன் டென்ஷன்.

டென்ஷன் டென்ஷன்.


நரம்புகள் விம்மிப் புடைக்கும் அளவுக்குச் சில நிகழ்ச்சிகள் நம்மை டென்ஷனாக்கி விடுகின்றன. பல சமயத்தில் படபடப்பு உச்சக்கட்டத்துக்குப் போய் கைகால்களெல்லாம் உதற ஆரம்பித்து விடுகின்றன.  இன்னும் சில சமயம் இரண்டடி தள்ளி நிற்பவனுக்குக் கேட்கும் அளவுக்குக்கூட நம் இதயம் வேகமாகத் துடிக்கிறது.  ஏதோ இனம் புரியாத கவலைக் கடலுக்குள் மூழ்குவது போன்ற பீதி நம் நெஞ்சைக் கவ்விக்கொள்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் டென்ஷன்!

பல சமயங்களில் நாம் டென்ஷன் ஆவதே தேவையில்லாத விஷயங்களால்தான்  உதாரணத்துக்கு ஒரு சம்பவம்.. .


பேராசிரியர் ஒருவர் மாற்றலாகி வேறு ஊரிலிருக்கும் கல்லூரிக்குப் போகிறார்.

அவரை வழி அனுப்புவதற்காக அவருடன் பணிபுரியும் நான்கு பேராசிரியர்களும் ரயில் நிலையத்துக்கு வந்திருக்கிறார்கள். ரயில் புறப்பட கொஞ்சம் நேரம் இருக்க.. . பேராசிரியர்கள் பிளாட்பாரத்தில் நின்று ஜாலியாக பேச ஆரம்பிக்கிறார்கள். பேச்சு சுவாரஸ்யத்தில் ரயில் நகர ஆரம்பித்துவிட்டதையும் அவர்கள் கவனிக்கவில்லை.

சடாரெனப் படபடப்பு வந்துவிடுகிறது. எந்த கம்பார்ட்மெண்ட்டில் ஏறினாலும் பரவாயில்லை...

அடுத்த ஸ்டேஷனில் சரியான கம்பார்ட்மெண்ட்டுக்கு வந்துவிடலாம்  என்று நெரிசலில் முட்டிமோதி நான்கு பேராசிரியர்கள் எப்படியோ ரயிலேறி விடுகிறார்கள்.

ஆனால், கையில் பெட்டி படுக்கையுடன் இருந்த ஒரு பேராசிரியரால் மட்டும் ரயிலில் ஏற முடியவில்லை.  அவரைப் பார்த்துப் பரிதாபப்பட்ட போர்ட்டர் ஒருவர், கவலைப்படாதீர்கள்... பத்து நிமிடத்தில் இன்னும் ஒரு ரயில் இருக்கிறது. அதிலே நீங்கள் போய்விடலாம் என்று ஆறுதல் வார்த்தைகள் சொல்கிறார்.

அதற்கு அந்தப் பேராசிரியர், "அடுத்து பத்து நிமிடத்தில் இன்னொரு ரயில் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், நான் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. என் சக பேராசிரியர்களை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது. காரணம், அவர்கள் என்னை வழியனுப்ப வந்தவர்கள். ஆனால், இங்கே ஏற்பட்ட அமளி துமளியில் அவர்கள் ரயிலில் ஏறிவிட்டார்கள்" என்றார்.

இப்படித்தான் படபடப்பும் டென்ஷனும் சாதாரண விஷயங்களைக்கூட நம் கண்ணிலிருந்து மறைத்து விடுகின்றன.  நாம் பதட்டத்தில் இருக்கும்போது, எத்தனை கஷ்டப்பட்டு ஒரு வேலையைச் செய்தாலும் சரி, அதனால் ஏற்படும் பலன் பெரும்பாலும் பூஜ்யமாகத்தான் இருக்கும்.

ஒரு சமயம் நான்கு குடிகாரர்கள் ஒன்றாக மது அருந்தப் போனார்கள். போதை தலைக்கேறும் மட்டும் குடித்த அவர்கள், வீட்டுக்குத் திரும்புவதற்காகப் புறப்பட்ட நேரத்தில் நன்றாக இருட்டிவிட்டது. ஆற்றைக் கடந்துதான் மறு கரைக்கும் போக வேண்டும்  எனவே பரிசல்காரனைத் தேடினார்கள். அவனைக் காணவில்லை.

ஆனால் பரிசல் மட்டும் இருந்தது.

பரிசலைத் தாங்களே ஓட்டிச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில், பரிசலில் ஏறி உட்கார்ந்து துடுப்புப் போட ஆரம்பித்தார்கள். ஒரு மணி நேரம் ஆனது.. . இரண்டு மணி நேரமானது.. . மூன்று மணி நேரமும் ஆனது ஆனால் மறுகரை மட்டும் வரவே இல்லை.  அதற்குள் மெல்லப் பொழுதும் விடிந்து... போதையும் மெல்லத் தளிய... அப்போதுதான் கரையில் இருக்கும் மரத்தில் பரிசல் கட்டப்பட்டிருப்பதை அந்த குடிகாரர்கள் கவனித்தார்கள்.

குடிகாரர்கள் கண்களை போதையும் இருட்டும் மறைத்தது போல, பதட்டம் நம்முடைய கண்களைப் பலசமயம் உண்மையையும் நிதர்சனத்தையும் பார்க்கவிடாமல் மறைத்துவிடுகிறது.


புத்த மதத்தில் ஒரு பிரிவாக விளங்கும் ஜென் இலக்கியத்தில் உள்ள ஒரு கதை இது.


ஒர் அரசர் தன் நாட்டுக்கு முதலமைச்சர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க நினைத்தார். சம தகுதிபெற்ற நான்கு பேர் அவரது அமைச்சரவையில் இருந்ததால், ஏதாவது ஒரு பரீட்சை வைத்து அந்த நால்வரில் ஒருவரை முதலமைச்சராக தேர்ந்தெடுக்க முடிவெடுத்தார்.

ஒரு நாள் அந்த நால்வரையும் அழைத்து, ”என்னிடம் ஒரு பூட்டு இருக்கிறது. கணித முறைப்படி வடிவமைக்கப்பட்ட இந்த விஞ்ஞானப் பூட்டைத் திறக்க நாளை காலை உங்கள் நால்வருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். யார் இந்தப் பூட்டைக் குறைவான நேரத்தில் திறக்கிறாரோ அவரே நாட்டின் முதலமைச்சர் ” என்று அறிவித்தார்.


முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில், அன்று இரவு முழுதும் விடிய விடியப் பூட்டு பற்றிய ஓலைச்சுவடிகளையும் கணிதம் பற்றிய எல்லாக் குறிப்புகளையும் அந்த அமைச்சர்கள் தேடினார்கள். எதுவும் கிடைக்கவில்லை.

அந்த நால்வரில் ஒருவர் மட்டும், ஒரு சில ஓலைச்சுவடிகளைப் புரட்டிவிட்டுத் தூங்கப் போய்விட்டார்.

மறுநாள் அரசவையில். . .

கணிதத் தந்திரத்தால் மட்டுமே திறக்கக்கூடிய பூட்டை அரசரின் சேவகர்கள் தூக்கிக் கொண்டு வந்து நால்வரின் முன்பும் வைத்தார்கள். எதிரே அரசர் வீற்றிருந்தார்.

பூட்டின் பிரமாண்டம் எல்லோரின் படபடப்பையும் இன்னும் அதிகரித்தது. கையோடு எடுத்து வந்த ஓலைச்சுவடிகளை அவர்கள் முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தார்கள்.

ஆனால், கணிதப் பூட்டைத் திறக்கும் வழி மட்டும் அவர்களுக்குப் புலப்படவில்லை தோல்வியை ஒப்புக்கொண்டார்கள்.


இரவிலே நன்றாகத் தூங்கிய அந்த ஓர் அமைச்சர், கடைசியாக எழுந்து வந்தார். அவர் பூட்டின் அருகில் வந்து பார்த்தார். என்ன ஆச்சரியம்  பூட்டு பூட்டப்படவே இல்லை. சாவியே இல்லாமல், சூத்திரமே இல்லாமல் அவர் பூட்டை எளிதாகத் திறக்க, அரசர் அவரையே முதலமைச்சர் ஆக்கினார்.

பிரச்னையைத் தீர்க்க வேண்டுமானால், முதலில் பிரச்சனையைப் புரிந்து கொள்ள வேண்டும். பிரச்சனையைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், மனம் பதட்டம் இல்லாமல் சமன் நிலையில் இருக்க வேண்டும்.
நன்றி ;
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் சுவாமி சுகபோதானந்தா

தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

திருவாசகத்தில் மாணிககவாசகர் காட்டும் சிவனாரின் வரலாறுகள்

திருவாசகத்தில் மாணிககவாசகர் காட்டும் சிவனாரின் வரலாறுகள்

1, சிவனாரின் கிராத வேடம்
 தவம் செய்து கொண்டிருந்த அரிச்சுணனின் தவத்தைக் கலைக்க பன்றி உருவுடன் வந்த மூகாசுரனைச் சிவபிரான் வேட்டுவ உருவுடன் வந்து அம்பு எய்திக் கொன்ற வரலாறு கிராத வேடம் எனப்படும். இதன் பொருட்டு விழித்த விஜயனும் தானும் அம்பு விட இருவரின் அம்பும் அசூரனான மூகாசுரன் ேமல் பட பன்றிக்காக இருவரும் சண்டையிட விஜயன் வில்லால் அடித்தது  இதுவே  " இறைவனை வில்லால் அடித்தான் விஜயன் " என்ற கூற்று  காணப்படுவதைக் காணலாம்.

2, மெர்கணி அருளிய மேனி

சிவதரிசனம் ெசய்த பின்னரே உண்ணும் நியமத்தை வைத்திருந்த செட்டியார் ஒருவர் வெளியூர் சென்ற போது சிவ பூசை செய்ய சிவலிங்கம் எங்கே தேடியும் இல்லாத போது  அவருடைய மைத்துனர் அவருக்கு தெரியாமல் குதிரைக்கு கொள் வைக்கும்  பையை ஓர் இடத்தில் வைத்து சிவலிங்கம் போல் காட்சி தரும்படி அமைத்து அந்த செட்டியாருக்கு இதோ சிவலிங்கம் என்று காட்டி, சிவ பூசை செய்ய செய்தனன். செட்டியார் பூசை முடித்து உணவு உண்ட பின், மைத்துனன் நகைத்து இது சிவலிங்கம் மன்று, குதிரை உணவு தின்னும் உணவு கொள்ளுப் பை  என்று கூறி நகைத்து கொள்ளுப்பையை எடுக்க  முயன்றான். ஆனால் அக்து அசையாமல் உண்மையான சிவலிங்கமாகவே காணப்பட்டது. மொக்கனி என்பது குதிரையின் கொள்ளுப்பை  எனவே மொக்கனி / சிவலிங்கமாக ஆன பின் மொக்கனிஈசனார் என்னும் பெயர் பெறறது. இதுவும் ஒரு மணிவாசகர் கூறும் மொக்கனிஈசர் வரலாறு.

3. ஐயாறப்பர் தனிற் சைவனானது.
திருவையாற்றில் ஐயாறப்பருக்கு  பூசை செய்யும் ஆதி சைவர்  ஒருவர் தனியாக காசிக்கு சென்றார். திரும்பி வர நெடுநாள் ஆகியும், அவர் வராமையால் அவருக்கு  உரிய காணி ( நிலம்) முற்றும் தமக்கு உரிமை ஆகும் படி அவருடன் வசித்த மற்ற 28 ஆதி சைவர்களும் உரிமை யாக்கிக் கொண்டனர். காசிக்கு சென்ற ஆதி ைசவரின் மனைவியும் மைத்துனனும் மிக வருத்தத்துடன் ஐயாறப்பரிடம் வேண்டினார்.  பெருமான் காசிக்கு சென்ற ஆதி சைவராகவே  கங்கை நீருடன் காசியிலிருந்து வருவது போலவே நேரில் வந்து, சிவலிங்கத்திற்கு பூசை செய்தார். பின் சான்றோர்கள் முன்னிலையில் ஆதிசைவருக்கு நேர்ந்த துயர நிகழ்வு ஆன காணி நிலத்தை மற்ற ஆதி சைவர்களிடமிருந்து மீட்டிக் கொடுத்தார். இது கண்டு ஆதிசைவரின் மனைவியும் குடும்பத்தாரும் மகிழ்ச்சி அடைந்து போது, காசிக்கு சென்ற ஆதிசைவரே அவர்கள்  முன் வந்து சேர , அந்த அதிர்ச்சியில் மூழ்கியிருந்த அவர்தம் மனைவி மற்றும் ஏனையோர் தங்களுக்கு காணி நில்த்தைத மீட்டிக்கொடுத்தது, ஐயாறப்பர் என்பதை கண்டனா்.  அப்போது பெருமான் அடியார் குறை தீ்ர்க்கும் ஐயாறப்பர் என்ற வரலாறு காணும் படி மணிவாசகர் தம் திருவாசகத்தில் காட்டுகின்றாா்.

4. குற்றாலத்தில் குறியாய் இருத்தல்
முன் ஒருகால் திரு முற்றம் என்னும் பெயர் கொண்ட தலத்திற்கு அகத்திய முனிவர் சென்றார். அத்தலத்தில் திருமால் கோயில் கொண்டிரு்ந்தார்.  அகத்தியரை கண்ட திருமாலின் அடியார்கள் அவருடைய திருநீற்று பட்டையினையும் கண்டிகையையும் பார்த்து நீர் இத் தலத்தில் அணுகல் ஆகாது  நீர் ஒரு சைவர், எ்னறனர். நீர் இங்கிருந்து நீங்குக. என்று அவரை வெரட்டினா். வெரட்டப்பட்ட அகத்தியர், திருமாலின் அடியார் போல் வேடம் கொண்டு, அந்த தலத்திற்கு மறுபடியும்,வந்தார். யாம் அழகர் மலையிலிருந்து வருகிறோம். வைணவர்கள்  உடனே பூசைக்கு வேண்டிய பொருட்களை கொண்டு வந்தனா். பூசைக்கு அகத்தியரிடம் கொடுத்தனா். அப்போது அகத்தியர் அவர்களை பார்த்து, " யாம் செய்யப்போகும் பூசையைப் பாருங்கள்  " என்று சொல்ல சிவபொருமானை மனதில் கொண்டு, திருமாலின் திருமுடிமேல் தனது கையை வைத்து, " குறுகு, குறு " கென அழுத்தினார். உடனே திருமாலின் உருவம்,சிவலிங்கமாக   குறுகியது. இதைக் கண்ட வைணவர்கள், இவன் முன் வந்த அகத்திய முனிவனே என்று கண்டு கொண்டனா். அவரை வளைத்துக் கொண்டனா். அப்போது முனிவரின் வெகுளித்தீ அவர்களை சுட்டெரிக்க அவர்கள் ஒடி மறைந்தனர். என்பது வரலாறு. அத்தலம் தான் இப்போது குறுகு குறுகென ஆன குற்றாலம்  என வழங்கப்படுகிறது.
   இவ்வரலாற்றினை வரிவை கந்த பூராணம் 2/28 திருக்குற்றால படலத்தில் காணலாம்.


 6, புலி முலை புல்வாய்க்கு அருளியது
  ஒரு காட்டில் ஒரு பெண்மான் தன் கன்றை ஒரு புதரில் மறைத்து வைத்துவிட்டு, நீர் பருகும் போது வேடன் ஒருவன் அம்பால் கொல்லப்பட்டு மாண்டது. தாயை இழந்த மான் கன்றை ஒரு பெண்புலி பால்கொடுத்து வளர்க்கும் படி சிவபிரான் அருளினார். இவ்வரலாறு திருவிளையாடல் புராணத்திலும் காணலாம்.

7. உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்
  இராவணன் மனைவி வண்டோதரி சிவபக்தி மிக்கவள். அவர் ஐந்தெழுத்து மந்திரம் ஓதுபவள். தான் விரும்பிய போதெல்லாம் சிவபிரான் தனக்கு காட்சி தந்தருள ேவண்டு மென வரம் பெற்றவள். ஒரு நாள் தனது பள்ளி யறையில் இருந்து கொண்டே சிவதரிசனம் காண விரும்பினாள். ெபருமானும் பள்ளிக் குப்பாயத்தினராய் காட்சி கொடுத்தார். வண்டோதரி ஆனந்த பரவசம் அடைந்தவளாய் உரத்த குரலில் தோத்திரம் செய்தனள். இந்த ஆரவாரத்தை அடுத்த அறையில் இருந்த இராவணன் கேட்டு என்ன ஆரவாரம் என வினவிக் கொண்டே அங்கு வர இறைவர் குப்பாய ஆடவன் உருவை நீக்கி குழந்தை உருவெடுத்தனர்.
 அங்கு வந்த ராவணன் " இக் குழந்தையின் ஆரவாரம் தானா? என்று வினவினான். வண்டோதரி தனது சேடி ஒருத்தி மறு நாட்காலையில் வருவதாகச் சொல்லி அக் குழந்தையை தன்னிடம் அடைக்கலமாக கொடுத்துச் ெசன்றனள் எனக் கூற  இலங்ேகசன் தன் பள்ளி அறைக்கு மீண்டனன். உடனே குழந்தையும் மாயமாகி மறைந்தது.
    இதன் குறிப்பு "எவ்வுருவும் தன்னுருவாய்  இலங்ைக அழகமா வண்டோதரிக்கு பேரருள் இன்ப மளித்த பிரானை "
என குயில் பத்து பதிகத்திலும், பள்ளிக்கு பாயத்தர்  என அன்னை பத்து பதிகத்திலும் உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என திருவெம்பாவையிலும் பித்த வடிவு கொண்டு இவ்வுலசிற் பிள்ளையுமாய்  உத்திரகோசமங்கை வள்ளல் புத்தி புகுந்த வா  என்று திருப்பூ வல்லியிலும் காணக் கிடைக்கின்றன.

8. தாயான தத்துவன்  வரலாறு
 சுவாமி இடத்தில் அன்பு மிக்க ஒரு மாது பிரசவ காலத்தில் தன் தாய் வந்து உதவப் பெறாமல் சங்கடப்படும் ேபாது, சுவாமியே அவள் தாய் போல் வந்து மருத்துவம் பார்த்து ஆதரித்து பிரசவம் பார்த்தார். என்பது வரலாறு  அந் நிகழ்வு நடந்த இடம் திருச்சிராப்பள்ளி, இதனால் சுவாமிக்கு தாயுமானவன் எனப் பெயர் வந்தது. இதுவே தாயான தத்துவன் வரலாறு.

9. இந்திரனை தோள் நெரித்தது
  முன்பு ஒரு காலத்தில் இந்திரன் சிவபிரானை மதியாமல் திருமாலை வைத்துக் கொண்டு யாகம் ெசய்ய ஆரம்பித்தான். இதனால் சிவபிரான் கோபம் முற்று இந்திரனை மமதையை அடக்க அவனது தோளை நெெரித்தார்.  இதன் வரலாறு திருவுந்தியார்  பாடலில் காணலாம்..

10. அத்தி உரித்தது.
  பிரேதவரிடம் வரம் பெற்ற கயாசுரன் என்பவன் ேதவர்களை அழிக்க தொடங்கினான். பெருமான் யானை உருவம் கொண்ட அவனை கிழித்து யானையின் தோலை போர்வையாக ேபார்த்தி கொண்டார்.

11. பாலகனார்க்கு பாற்கடல் ஈந்தது
  உபமன்யு முனிவர் குழந்தை பருவத்தில் பால் வேண்டி அழுத போது, சிவபெருமான் திருப்பாற்கடலையே அவர் பருக  வரவழைத்து தந்தனர்.
  " பாலுக்கு பாலகன் வே்ண்டி அழுதிட  பாற்கடற் ஈந்த பிரான் "  என்ற பாடல் வாயிலாக அறியலாம்

12. பிரமன் தலை அறுபட்டது
  பிரமனுடைய தான் தான உயர்ந்தவன் என்ற அகந்தயை அடக்க பிரான் பிரமனுடைய உச்சித்தலையில் உள்ள வாய் சிவபிரானை இகழ்ந்து பேச பெருமான் வைரவர் கடவுளை ஏவி அவர் உச்சி தலையை நகத்தால் களைந்தனா்.

13.  வெள்ளம் தரும் ........  வள்ளல்
  சிவபுரம் என்னும் ஊருக்கு  திருப்பெருந்துறை என்ற  பெயரும் உ்ண்டு. சிவபுரத்து அந்தணர்களுக்கு பாண்டிய மன்னன் அளித்த நிலங்களை சில ஆண்டுகளுக்கு பின் அவ் வூர் அதிபன் என்ற " லுண்டாக்கன் " என்பவன் ைகப்பற்றிக் ெகாண்டான். அந்தனர்கள இந்த அநீதியை அப்போதுள்ள பாண்டிய மன்னனிடம் முறையிட்டனா். இந்த விசாரனையில்  அந்த நிலங்கள் அனைத்தும் தனக்கு உரியது என்றும், இதற்கு உறுதி சான்றாக இந் நிலங்களில் எங்கு , எவ்வளவு ஆழத்தில் வெட்டினாலும், நீர் வராது என்று வாதித்தான். அப்போது அந்தணர் பிள்ளைகளுக்கு வேத பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியார் சாட்சியாக வந்து, இந்த  நிலங்களில் எங்கு வெட்டினாலும், ஒரு முழ ஆழத்திற்குள் தண்ணீர் வந்து விடும் என்று கூற, அதன்படி ஒேர  வெட்டில் நீர் பொங்கி கிளம்பி  எங்கும் வெள்ளமாய் பரவியிற்று இதைக்கண்ட  லுண்டாக்கன் அச்சம் உற்றான். இவ்வேளையில்  சாட்சி சொன்ன வாத்தியார் யாரும் காணா வண்ணம் மறைந்தார்.. அந்த வாத்தியார் சிவபிரானே என தெளிந்த பாண்டியனும் அந்தணரும் வியப்புற்றனர். எங்கும் வெள்ளமாய் பரவிய  காரணத்தால் சிவபுரம் ெபருந்துறை ஆயிற்று. இதுவே தற்போது திருப்பெருந்துறை என வரக் காரணமாய்  ஆயிற்று.

திருச்சிற்றம்பலம் \ ஒம் நமசிவய ஓம்\
தொகுப்பு ;வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி.  திருவாசக ஒளி நெறிக்கட்டுரை
ேமலும் பல ஆன்மிகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com


ஞாயிறு, 27 மார்ச், 2016

பிறவி நோய் நீங்கும் வழி

பிறவி நோய் நீங்கும் வழி


கல்லோடுகட்டிக் கடலில் இட்டாலும் நற்றுணையாவது நமச்சிவாயவே


இந்து சைவ மதத்தின் சின்னங்களான விபூதி, ருத்ராக்ஷம் தரிப்பது எவ்வளவு முக்கியமானதோ அதைப்போலவே பஞ்சாக்ஷர ஜபம் செய்வதையும் நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள  வேண்டும். அதைக் காட்டிலும் உயர்ந்த மந்திரம் எதுவும் இல்லை. நான்கு வேதங்களுக்கு நடுவில் இருக்கும் ஸ்ரீ ருத்ரத்தின் மத்தியில் இருப்பது இதன் பெருமையைக் காட்டுகிறது. அதுவே மெய்ப்பொருளாகவும் விளங்குகிறது. அதனால் தான் சம்பந்தரும், " வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே" என்று அருளினார். எப்படிப்பட்ட பாதகங்கள் செய்தவரையும் உய்விக்கும் மகா மந்திரம் இது.    " உ(ன்)னை நான் மறக்கினும் சொல்லும் நா  நமச்சிவாயவே" என்றார் சுந்தரர். இப்படிப்பட்ட   உயர்ந்த மந்திரத்தை ஜபம் செய்யாமல் இருப்பவர்கள் இக்காலத்தில் ஏராளம் உண்டு அல்லவா?

நம்முடைய திருமுறைகளில் பெரும்பாலனவை வினை நீக்கம் பற்றியே அருளப்பட்டுள்ளன. வினை கழிய என்ன செய்வது என்று நமது அருளாளர்களே குறிப்பிட்டுள்ளார்கள். அது கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுவதே ஆகும். கைவினை செய்தல் என்றால், திருக்கோவில்களில் அலகிடுதல், மெழுகுதல், பூப்பறித்து பூமாலை சாற்றுதல், பாமாலை பாடுதல், தலையார கும்பிடுதல், கூத்தாடுதல், போன்ற தொண்டுகளை செய்து இறைவன் திருவடியை போற்றி பரவுதன் மூலம் வினைப்பயின்று இன்னும் பிறவாமை என்ற  நீக்கம் பெறலாம், எ்னபது தெளிவு், நாம் இந்த மானிடப்பிறப்பு பிறந்ததன் பயன் பெற உடலுறுப்புக்ள நலமடையவும், நம் உடல் உறுப்புக்ளால் வழிபாட்டிற்கு எவ்வாறு பயன்பட செய்ய வேண்டும் என்று திருமுறைகள் கூறுவதைப் பார்ப்போம்.
யாக்கை ஆகிய நம் உடம்பு இறைவன் நிமித்தம் பயன்பாட்டுத்தன்மை எத்தகையது என்பதை திருமுறைகள் காட்டும் நெறி
 தலை; தலையை தாழ்த்தி வணங்க வேண்டும் " தலையே நீ வணங்காய் .............. தலைவனை " ,,,,, அப்பர்
" சிரங்குவிவார் ஓங்குவிக்கும் ......... "  சிவபுராணம்
கண்கள் ;  கண்காள் காண்மின்களோ .... கடல் நஞ்சுண்ட கண்டனை தன்னை ................"   அப்பர் அடிகள்
செவி ; "செவிகாள் கேண்மின்களோ ..... எரிபோல் மேனிபிரானை"
வாய் ; வாயே வாழ்த்து கண்டாய் ..... மதயானை உரிபோர்த்தானை
மூக்கு ; மூக்ேக நீ முரலாய் ..... முது காடுறை முக்கண்ணனை
நெஞ்சு ; நெஞ்சே நீ நினையாய் ....... நிமிர் புன்சடை நின்மலனை
கைகள் ; கைகாள் கூப்பி தொழீர் ....... பாம்பணிந்த பரமனை ஆக்கை (உடல்) ; ஆக்கையால் பயன் என் ..... அரன் கோவில் வலம் வருதல் 
கால்கள் ; கால்களால் பயன் ... கோவில்கோபுரங்களை வலம் வரல்

 அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அவ்வாறு பிறந்தக்கால் கூன், செவிடு, முடம் அற்று பிறத்தல் அரிது. இவ்வாறு ஒச்சமின்றி பிறந்த நம் உடல் ெகாண்டு ஈசனை வணங்க பயன்படுத்தாத இந்த ஆக்கையினால் பயன் என்ன? " உற்றார் ஆர் உளரோ ... உயிர் கொண்டு போம் பொழுது குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ " அப்பர்  திருமுறை பாடல் 
இதனையே பட்டினத்து அடிகளும் "ஊரும் சதமல்ல , உற்றார் சதமல்ல, ............................... கச்சியப்பா நீ யே சதம் " என்கிறார், எனவே இப்பிறப்பின் பிறவி பயனை அடையவும், இன்னும் பிறவா நிலை பெறவும் நம் பெற்ற ஆக்கையால் ஆலவாய் சுந்தரனை வணங்கி பாடி பிறவி பயன் பெற்று இனி பிறவாத தன்மை வந்து ஏய்தல் வேண்டும்.

சுந்தரரர் இதனையே " ..... பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன் ............. " என்னிறார்.


பெருமானது புகழைப் பேசாத வாயும் ஒரு வாயா? அவனை வாழ்த்துவதற்காகவே  மனிதப் பிறவிக்குப் பேச்சினைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டாமா? வாயற்ற ஜீவனுக்கும் நமக்கும் பிறகு என்னதான் வித்தியாசம்? இன்னும் சொல்லப்போனால் உண்ணுவதும்  உறங்குவதும்  தமது இனத்தைப் பெருக்குவதும் மட்டுமே செய்யும் அவை நம்மைப் போன்று  மனம்,மெய்,மொழிகளால் பாதகங்கள் (தீவினைகள் ) செய்வதில்லையே! எனவே அவை நம்மைக் காட்டிலும் உயர்ந்தவை எனக் கொள்வதில் என்ன  தவறு?          

 " பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாள் " என்றார் அப்பர் பெருமான். அவ்வாறு பேசாதவர்கள் வாய் இருந்தும் ஊமைகள் அல்லவா!

தினந்தோறும் இறைவனது திருக்கோயிலுக்குச் சென்று  அலகிட்டு,மெழுகி, உழவாரத் தொண்டு செய்து, பூமாலைகளும்,நறும் சாந்தமும்,நீரும் சமர்ப்பித்து, வாயார அவனைத் துதித்து வந்தால் வாழ்க்கை நிலைபெறும். ஈடேறும். நமது வாழ் நாட்கள் எவ்வளவு என்று யாருக்குத் தெரியும்? எனவே ஒவ்வொரு நாளையும் இறைத் தொண்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பார் சம்பந்தர்.

நாம் உண்ணும் உணவு இறைவன் அருளால் கிடைத்தது என்பதை மறக்கலாகாது. மழை இறைவனது அருட்கொடை. வானம் பொய்த்தால் உலகே அழியும். ஆகவே, "பயிர் காட்டும் புயலாக " விளங்கும் பெருமானை நன்றியறிதலுடன் உண்பதன் முன் மலரிட்டு அர்ச்சித்து, நிவேதித்து, அதன் பிறகே உணவு உட்கொள்வதை நியமமாகக் கொள்ள வேண்டும்.
நமது வினையின் பயனாக உடல் ரீதியாகத் துன்பப்படுகிறோம். எத்தனையோ நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. அதனைத் தாங்கும் ஆதிக் கவசமாகத் திருவெண்ணீறு அணிய வேண்டும். முன்பெல்லாம், நோய்வாய்ப் பட்டவர்களுக்கு மந்திரித்து விபூதி கொடுத்து வந்தார்கள். மருந்தையே நாடிஇருக்கும் இக்காலத்தில் அவ்வழக்கம் குறைந்து புதுப் புது நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. அதனால் நாம்  மன அமைதி இழந்து தவிக்கிறோம்.

மொத்தமாகச் சொல்லப்போனால், பஞ்சாக்ஷரம் சொல்லாமலும், பெருமான் புகழை வாயாரச் சொல்லாமலும் ,நித்தலும் திருக்கோயிலுக்குச் செல்லாமலும், உண்பதன் முன் பெருமானை மலரிட்டு வணங்காமலும் , திருநீறு அணியாமலும் பிறவியைக் கழிப்பவர்கள் மீண்டும் பிறவி எடுத்துத் துன்பப் படுவர். நோய்கள் நலியப் பெறுவர். இவ்வாறு பிறப்பதும் இறப்பதுமே தொழிலாகக் கொள்பவர்கள் ஆகி விடுகிறார்கள் என்பதைப் பின்வரும் அப்பர் தேவாரப் பாடல் அழகாக நமக்கு உணர்த்துகிறது:

"திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில்
 தீவண்ணர் திறம் ஒருகால் பேசாராகில்                              
ஒருகாலும் திருக் கோயில் சூழாராகில்
உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணாராகில்
அரு நோய்கள் கெட வெண்ணீறு அணியாராகில்
 அளியற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்          
பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும்
செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே. "



பிறவியாகிய பெரும் பிணி வராமல் இருக்க அப்பர் பெருமான் நமக்கு உபதேசிக்கும் நல்வழியை நாம் பின்பற்றிப் பிறவாமையாகிய பெரு வரம் பெறுவோம்.

திருச்சிற்றம்பலம்.
தொகுப்பு ;வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

கோடைக்கு ஏற்ற பானம் பதனீர்

கோடைக்கு ஏற்ற பானம் பதனீர்

பதநீரின் மருத்துவ குணங்கள் :
நம் நாட்டில் பெரிய அளவில் இதை உற்பத்தி செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்தினால் இதன் செயல்பாடுகள் அளப்பரியது பல்வேறு நோய்களை நீக்கவல்லது எனலாம். இந்த பதநீரிலும், பனை வெல்லத்திலும் எல்லாவித ஊட்டசத்தும் உள்ளது என கண்டு அறிந்திருக்கிறார்கள்.
தொழு நோயை நீக்கும் பதநீர் :
நாளும் ஒரே பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கி காலை ,மாலை அருந்தி பனைஓலைப்பாயில் படுத்து பனைவிசிரியியை பயன்படுத்தி பனைஓலையில் உணவு உண்டு பனைஓலை குடுசையில் 96 நாள்கள் தாங்கி இருந்தால் தொழு நோய் நீங்கும் என ஒருமருத்துவ் குறிப்பு உண்டு .
மாதவிடாய் தடை :
மாதவிடாய் தடைபட்டு அதனால் கருப்பை சார்ந்த வலி . வாய்வு , காட்டி முதலியவற்றினால் பெண்கள்அவதிபடுவார்கள் அது மட்டும் அல்லாமல் இந்த காலத்தில் மார்பகம் விம்மி பருத்து ஒருவிதமான சன்னி நோய்போல உண்டாகும் இந்த நோய்களுக்கு பனையின் குருத்தை அதன் உள்பகுதியை உட்கொண்டால் மாதவிடாய் சிக்கலின்றி வெளியேறி நோயை நீக்கும் .
இரத்த கடுப்பு :
வெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை,மாலை இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர இரத்த கடுப்பு .மூல சூடு தணியும். அதேபோல மஞ்சளை பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண் ,வெப்ப கழிச்சல் , சீத கழிச்சல் நீங்கும் .
பதநீர் :
இந்த பதநீர் ஒரு சிறப்பான நம் தேசிய குடிநீர் எண்பது நாம் அறிந்ததே இந்த பதநீரை இறக்க தமிழ் நாட்டில் தடை உள்ளது காரணம் வேலைவாய்ப்பில்லாத தமிழர்கள் வேலை பெற்றுவிடுவார்கள் என்பதாக இருக்குமோ ? அதுமட்டும் அல்லாமல் இந்த பதநீர் இறக்குவதால் மற்ற மயக்கப் பொருட்கள் (அரசுவிற்பதுதன் ) விற்பனை குறையும்தானே ?அதனால் முதலாளித்துவம் பயனடையாது தானே ? வருகிற புதிய அரசாகிலும் இந்த பதநீர் இறக்க மக்களுக்கு வாய்பளித்து பனைபொருட்களை சந்தை படுத்த நடவடிக்கை எடுக்கலாம்.
ஒருகுவளை ( 250 மிலி ) பதநீரில் உள்ள சத்துகள் :
1. சக்கரை 28 .8 கிராம்
2. காரம் 7 .௨ கிராம்
3. சுண்ணாம்பு சத்து 35 .4 மி.கிராம்
4. இரும்பு சத்து 5 .5 மி.கிராம்
5. பாசுபரசு 32 .4 மி.கிராம்
6. தயமின் 82 .3 மி.கிராம்
7. ரிபோபிலவின் 44 .5 மி.கிராம்
8. அசுகர்பிக் அமிலம் 12 .2 மி.கிராம்
9. நிகோடினிக் அமிலம் 674 .1 மி.கிராம்
10. புரதம் 49 .7 மி.கிராம்
11. கலோரிகள் 113 .3 மி.கிராம்
இதில் நார் சத்து மிகுந்திருப்பதால் பெண்களின் கருக்காலத்தில் உண்டாகும் மலச்சிக்கலை நீக்குகிறது. இதில் உள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகளை வலுபடுத்துகிறது.
பாலுணர்வை அதிகரிக்க :
இதில் இயல்பாகவே அனைத்து சத்துகளும் நிரம்பி இருப்பதால் பாலுணர்வை கூட்டுகிறது என்கிற மருத்துவகுரிப்புகளும் காண கிடைக்கிறது சித்த மருத்துவம் என்பது வரட்டுத்தனமான கோட்பாடுகளை கொண்டிருக்கவில்லை இதில் முறையான அறிவியல் ஆய்வுகள் கொட்டிகிடப்பதால் நம் மக்கள் விழித்தெழுந்து நம் சித்த மருத்துவத்தை மீட்டு பயன்படுத்திட வேண்டும்.
பனை மரத்தில் கிடைக்கும் பதநீரை பனை மர ஓலையில் ஊற்றி அதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே தனிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும்கூட இந்த பானம் தாகத்தை தீர்த்து உடலுக்கு குளிமையை ஏற்படுத்தி வலிமையை சேர்க்கும் அளவுக்கு ஆற்றல் படைத்தது.
மேலும் இந்த பதநீரையும் நுங்கையும் கலந்து குடித்தால் முகத்தை அழகுற வைக்கவும் மூளை சுறுசுறுப்பாக இயங்கவும் கண் பார்வை அதிகரிக்கவும் செய்கிறது. சிறு குழந்தைகளுக்கு நுங்குகளை சிறிதாக நசுக்கி கொடுக்க வேண்டும் அப்போது தான் எளிதில் ஜீரணமாகும்.

தொகுப்பு ;வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

சனி, 26 மார்ச், 2016

சித்தர் தாயுமான சுவாமிகளின் இறைவேட்கை

சித்தர் தாயுமான சுவாமிகளின் இறைவேட்கை


அகங்காரம் ஆணவத்தைக் காட்டிலும் கொடியது, இந்தஇயல்பினை கட்டுபடுத்த இயலாது என வருந்தி இறைவனிடம் முறையீடு செய்தவர் தாயுமானவ சித்தர், மெய்யறிவு பெறுவதற்கு எவ்விதப் பயிற்சியும் பெறாமை கருதி வருந்தியவர், இறையருள் பெறும் பக்குவம் எப்போது வாய்க்குமோ என்று ஏங்குகிறார், ” எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” என்னும் கொள்கையுடைய தாயுமானவ சித்தரின் அருள் வேட்கை அளப்பரியதாகும்.
திருச்சியில் கேடியப்ப பிள்ளையின் மைந்தராக இறையருளால் பிறந்த தாயுமானவர் தந்தை காலமானபோது திருச்சி மன்னராக இருந்த விஜயரங்க சொக்கநாத நாயக்க அரசில் கணக்கராகப் பணியமர்த்தப்பட்டார், சிவபிரான போதம் அறிந்த தாயுமானவரால் அரசாங்க கணக்குகளில் ஈடுபாடு கொள்ள முடியவில்லை, சிவநெறிச் சிந்தனையும் சித்தர் ஈடுபாடும் காலாவதியாகும் மனித வாழ்வின் அற்பக் கணக்குளின் கூட்டல் கழித்தலில் இருந்து பலநேரம் தாயுமானவரை ஒதுங்கியிருக்க செய்தன,
அரசு அலுவலோடு இறைப்பணியையும் செய்து வந்தார், மெளனகுரு சுவாமிகளிடம் தன்னை மாணாக்கராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டி தாயுமானவரை சீடராக ஏற்று அவருக்கு யோக ஞான முறைகளையும் உபதேசித்தருளினார். அரண்மனை உத்தியோகத்திலிருந்து நீங்கி விராலிமலைக்கு வந்து நிஸ்டையில் ஆழ்ந்தார் தாயுமானவர். விராலிமலை சித்தர்களின் வாசஸ்தலமாக அந்நாளில் விளங்கி வந்தது. சித்தர் பலரும் தங்கள் சித்திகளுக்கான பயிற்சிக்களமாக அங்கே வாழ்ந்து கொண்டிருந்தபோது சித்தர்களின் தொடர்புகளால் தாயுமானவரும் சித்தரானார்.
இறவாமை பற்றி சாகாக்கலை கண்டறிந்த சித்தர்களின் ரகசியம் பலவற்றை அவர்களின் அனுபவ வெளிப்பாடாக தாயுமானவர் கண்டறிந்தார். ஆன்மா முக்தியடைய உடம்பு அதற்கு ஒரு கருவியாக வந்தது முக்தியடைவது ஆன்மா மட்டுமே என்பதை உணர்ந்தார் தாயுமானவர். மனமடக்க தியான நிலையே மாற்று என உணர்ந்து தாயுமானவரின் மனம் மோகனத்தில் பற்றிக் கொண்டது, வெயிலின் ஒளியிலே காய்ந்த பலகாலம் சிதையாமலிருப்பது போல சூரியப் பிரகாசமான சிவஜோதியில் திளைப்பவரும் உடலும் ஆன்மாவும் ஒருநாளும் அழிவதில்லை, முக்திக்கு வழி அறியாமல் ஐம்புலங்களைக் காத்து வாழ்வதுதான், ஐம்புலங்களின் உணர்வுகளை வழியோடு தெரிந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கற்றுக் கொண்டு விட்டால் இந்த உடலுக்கு இறப்பே இல்லை என்பதை உணர்ந்தார் தாயுமான சித்தர். உணர்வும் நினைவும் நடுங்கிய பின்னர் மனமானது சுத்த சூனியமான பரவெளியில் திளைத்திருக்கும் இந்நிலையில் மனம் செயலாற்று வெறுமையாக இருக்கும், மெய்யுணர்வாக விளங்கும் பரம்பொருளை தரிசிப்பதற்கு இந்த மன வெறுமை நிலையே தேவைப்படுகிறது என்பதை அறிந்து தெரிந்தார். தாயுமானவர் என்றைக்கும் அழியாத சிவராஜயோகம் வேண்டினார். சிவராஜயோகம் என்பது யோகத்தை கருவியாக கொண்டு சிவத்தியானம் சமாதி என்பனவற்றை முயன்று அடைதலாகும்.
அகங்காரம் ஆணவத்தை காட்டிலும் கொடியது இந்த இயல்பினை கட்டுபடுத்த இயலாது என வருந்தி இறைவினிடம் முறையீடு செய்தார். மெய்யறிவு பெறுவதற்கு எவ்வித பயிற்சியும் பெறாமை கருதி வருந்தினார். இறையருள் பெறும் பக்குவம் எப்போது வாய்க்குமோ என்று ஏங்கினார். மனம் இறைவனின் திருவடியில் இடும் பலியாகவும் அன்பு அபிசேக நீராகவும் உயிர் நைவேத்தியமாகவும் பிராணனையும் அறிவையும் தூபதீபமாகவும் கொண்டு துதிப்பாதாக கூறுகிறார் தாயுமானவர். உடலும் உயிரும் உடைமைகளும் மனிதனுக்கு சொந்தமானவையல்ல அவை இறைவனுக்கு சொந்தமானவை அவனிடம் ஒப்படைக்கப் படவேண்டியவை என்று கூறித் தன்னை சேர்த்து கொள்ளும்படி இறைவனிடம் முறையிடுககிறார் தாயுமானவர். தாயில்லாச் சேய் போல் அலைந்து துன்புற்ற தன்னை தாயைக் காட்டிலும் கருனை காட்டி மீட்கும்படி சிந்தை நைந்துருக இறைவனிடம் முறையிட்டவர் தாயுமானவர். இறப்பதும், பிறப்பதும் ஆன்மாவின் முடிவல்ல. உடல் மாயை அழிக்கூடியது இந்தச் சித்த தத்துவத்தை உணர்ந்து உலகுக்குரைத்தவர் ஞானாசிரியர் தாயுமானவர்
அவருடைய அருட்புலம்பல்களில் சில:
என்னை மாயையினின்றும் நீக்கி ஆணவலக் கட்டை அறுத்து நேரே அறிவு வொளியில் எம்மை சேர்த்து வைக்கும் தூக்கி திருவடியை வணங்கும் நாள் எந்நாளே?

கருப்கைக்கு இனிஇடம் காட்டாமல் எப்போதும் கருப்பூர மணம் வீசும் கடத்தப் பெருமானின் திருமுகத்தையேகண்டு என் குற்றத்தை ஒழிப்பது எந்நாளோ?

மண் முதலிய ஐந்து பாதங்களான உடலுடன் கூடி உலகில் அலைந்து வருந்திய துன்பம் ஒழிய பிரகணத்தலைவரான சிவபெருமானின் திருவருளை நாடும் நாள் எந்நாளே?

தீமை விளைவிக்கும் காரணமான பேராசையாம் புலைத்தொழிலியல் பின் அறிவு சென்று விடாது திருவருளால் நன்னெறியில் சேரும் நாள் எந்நாளே?

குருடனுக்கு உலகம் முழுவதும் இருள் மயமாக இருக்கும் அதுபோல என் அறிவில் ஆணவ தொடர்பால் விளைந்த அஞ்ஞான மயமாக இருட்கடல் வற்றிப் போவது எந்நாளோ?

உலகத் தொடர்புடன் ஆசையின்றி முற்றத் துறந்த சிவனாரும் செல்வம் பெற்ற நல்லதவததவரான பட்டினித்தாரும் அவருடைய மாணவரான பத்திரகிரயார் ஆகியோரின் பண்பை உணர்வது எந்நாளோ?

கண்ணால் கண்டவை நிலையில்லாமை என்றும், எங்கும் நிறைந்துள்ள சிவமே நிலையானது என்றும் கூறிய சிவவாக்கியரின் திருவடியை அடையும் நாள் எந்நாளோ?

காக்கை, நரி, செந்நாய், கழுகு என்ற இவை சுடுகாட்டில் கூட்டாக கூடி ஒரு நாள் தின்று ஏப்பம் இடுவதற்கு விருந்தாய் இருக்கும் இந்த உடலை “சீ” என்று வெறுப்பது எந்நாளோ.?

என் அறிவை ஐம்பொறிகளின் வழியே செல்லவிடாது அடக்கி என்னை போலவே மனித வடிவம் கொண்டுவந்த மவுன குருவின் திருவருள் நிறைவிலே அடியேன் கலந்திடும் நாள் எந்நாளோ?

கொடிய பிறப்பிணியை ஒழித்து உலகத்து அடியார்களை ஆட்கொள்ளும் ஞான அரசன் திருஞானசம்பந்தரின் திருவருளை பெறும் நாள் எந்நாளோ?

மயக்கும் மாதரால் மயங்கிய நிலைப்பற்றி அருட் புலம்பல்:
இளமைப் பருவத்தில் பசுமையான கொங்கைகளால் ஆடவரை மயக்கும் மாதரின் பாழான மயக்கம் நஞ்சு என்று உணர்ந்து வெறுத்து ஒதுக்கி இறைவன் திருவருளை அடையும் நாள் எந்நாளோ?

கச்சினால் கட்டப்பட்டுள்ள முலையையும் கரும்புசாறு போன்ற இனிய சொல்லையும் உடைய மங்கையர் மயக்கத்தை நீங்குவது எந்நாளோ?

மன்மதனை போன்ற மிக்க காமம் உடையவனை வா என்று சாடை காட்டி இருண்ட கண்களான வலையில் சிக்கிக் கொள்ளுமாறு வீசும் மின்னல் போன்ற மங்கையர் பெயரை மறந்து இறைவன் திருவருளை அடைவது எந்நாளோ?

கற்கண்டின்னைப் போன்று இன்சொல்லைப் பேசி ஆடவரின் மனக்கருத்தை உணர்ந்து அடிமையாக்கும் மான் விழியுடைய மங்கையரின் நடிப்பை நீங்குவது எந்நாளோ?

விழிகளில் உண்டாகும் வெண்மையான பூழை மறைந்திட அறியாமையைத் தீட்டிய பெண்களின் மயக்கத்தினின்று தப்பி பிழைக்கும் நாள் எந்நாளோ?

கரைவைத்த புடவையின் கொச்சத்தில் ஆடவரின் உள்ளத்தையெல்லாம் பிணித்து வைத்துக்கொள்ளும் வஞ்சத்தில் வல்ல மாதர் கட்டினின்று நீங்குவது எந்நாளோ?

ஆடவரின் வறுமையைக் காட்டி வஞ்சம் செய்யும் அணிகளைஅணிந்து மங்கையரிடத்து விருப்பம் என்ற பாழ் நிலத்தை நீக்கி பரமன் திருவருளான நிலத்ததில்வளர்ச்சி யடைவது எந்நாளோ?

ஆணவம், கன்மம், மாயை, என்னும் மும்மலச சேற்றில் உண்டான முழுக் கம்பீர பாகம் என்னும் நரகத்தை போன்ற மலவுடலில் வெறுப்பு அடைவது எந்நாளோ?

உடலில் உண்டாக்கின்ற தீய நாற்றம் அனைத்தையும் மஞ்சளை பூசி நாற்றத்தை மறைத்து பொய்யைப் பேசும் வாயுடைய மங்கையரின் பொல்லாங்கை நான் நீங்குவது எந்நாளோ?

ஆடவரின் உறுதியான மனம் என்ற பறவை அகப்பட்டு கொள்ளும்படி கூந்தலான காட்டில் மலர் மாலையான வலையை வைக்கும் மங்கையரின் தந்திரத்தை கடக்கும் நாள் எந்நாளோ?
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

வெள்ளி, 25 மார்ச், 2016

Patti vaithiyam

பாட்டி வைத்தியம்


பாட்டி வைத்தியம்
1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்uக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
6. உதட்டு வெடிப்புக்கு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
7. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
8. குடல்புண்க்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
9. வாயு தொல்லைக்கு வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
10. வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
11. மலச்சிக்கல் செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
12. சீதபேதிமலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
13. பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
14. மூச்சுப்பிடிப்புக்கு சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
15. சரும நோய்க்கு கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
16. தேமல் வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
17. மூலம் கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
18. தீப்புண் வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
19. மூக்கடைப்புக்கு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
20. வரட்டு இருமல் எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்
21. நரம்பு சுண்டி இழுத்தால் ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.
22. பல்லில் புழுக்கள் சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.
23. உடல் பருமன் குறைய வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.
24. தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.
25. வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.
26. கணைச் சூடு குறைய சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.
27. வலுவான பற்கள் வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.
28. உடல் சூடு ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
29. கற்கண்டு சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.
30. கக்குவான் இருமல் வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.
31. உள்நாக்கு வளர்ச்சி உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.
32. இரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.
33. உடலில் தேமல் மறைய தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும்.
வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். ஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும். மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும். 1 துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.
குறிப்பு: சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது.
34. மலேரியாவால் தாக்கப்பட்டவடர்கள் தினமும் துளசி இலையை சிறிதளவு காலையில் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வந்தால் ஓரிரு நாட்களில் நோய் நீங்கிவிடும்.
மலேரியா போன்ற நோய்கள் பரவக் கொசுக்களே மூல காரணம். துளசியின் வாடை பட்டால் கொசுக்கள் அவ்விடத்திற்கு வராது. கொசு தொல்லையை நீக்க வீட்டில் துளசி செடிகளை வளர்க்கலாம்.
35. தீக்காயங்கள் பட்டவுடன் முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
தீப்பட்ட புண்ணின் மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புண் குணமாகி விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி நீங்கும். தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும். முட்டைக்கோஸ் இலைகளை சிறுசிறு துண்டுகளாக்கி, முட்டையில் உள்ள வெள்ளைக் கருவுடன் கலந்து தீக்காயங்கள், புண்கள், காயங்கள் மீது தடவினால் விரைவான குணம் கிடைக்கும். தீப்புண்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவைத் தடவி குணப்படுத்தலாம்.
தொகுப்பு . வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

காரைக்கால் அம்மையார்

காரைக்கால் அம்மையார் - Karaikkal Ammaiyar 
(63 நாயன்மார்கள் வரிசையில்)
குருபூசை: பங்குனி - சுவாதி(26.03.16) சனிக்கிழமை


சோழமண்டலத்திலே, காரைக்காலிலே வைசியர்குலத்திலே, தனதத்தன் என்பவன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் புனிதவதியார் என்கின்ற ஒரு புத்திரியார் பிறந்தார். அத்தனதத்தன் அப்புத்திரியாரை நாகப்பட்டணத்தில் இருக்கின்ற நிதிபதி என்பவனுடைய புத்திரனாகிய பரமதத்தனுக்கு விவாகஞ்செய்து கொடுத்துத் தனக்கு வேறு பிள்ளையின்மையால் அவரை நாகபட்டணத்திற்குப் போகவிடாமல், தன்னுடைய வீட்டுக்கு அருகிலே ஒருவீடு கட்டுவித்து, அளவிறந்த திரவியங்களையும் கொடுத்து, கணவனோடும் அதிலிருத்தினான். பரமதத்தன் அந்தச் செல்வத்தை விருத்தி செய்து இல்லறத்தை ஒழுங்குபெற நடத்தி வந்தான். அவன் மனைவியாராகிய புனிதவதியார் பரமசிவனுடைய திருவடிகளிலே அன்பு மேன்மேலும் பெருக, இல்லறத்திற்கு வேண்டுவனவற்றை வழுவாது செய்வாராயினார். தம்முடைய வீட்டுக்குச் சிவனடியார்கள் வரின், அவர்களைத் திருவமுது செய்வித்து, அவரவர் வேண்டியபடி பொன் இரத்தினம் வஸ்திரம் முதலாயின உதவுவார்.

இப்படி நிகழுங்காலத்தில் ஒருநாள் பரமதத்தனிடத்திற் காரியமூலமாக வந்தவர்கள் சிலர் அவனுக்கு இரண்டு மாம்பழங்கொடுக்க; அவன் அவைகளை வாங்கிக்கொண்டு அவர்கள் கருத்தை முடித்து, அவைகளை மனைவியாரிடத்திற்கு அனுப்பிவிட்டான். மனைவியார் அவைகளை வாங்கி வைத்த பின்பு, சிவனடியார் ஒருவர் பசியினால் வருந்தி, அவர் வீட்டிற்சென்றார். புனிதவதியார் அவ்வடியவருடைய நிலையைக் கண்டு, கலத்தை வைத்துச் சோறு படைத்து, அந்நேரத்திலே கறியமுது பாகம் பண்ணப்படாமையால், "சிவனடியவரே பெறுதற்கு அரிய விருந்தினராய் வந்தபொழுதே, இதைப் பார்க்கிலும் பெறவேண்டிய பேறு நமக்கு ஒன்றும் இல்லை" என்று நினைந்து, தம்முடைய கணவன் அனுப்பிய மாம்பழங்கள் இரண்டினுள் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து படைத்து, அவ்வடியாரைத் திருவமுது செய்வித்தார். அடியவர் சோற்றை மாங்கனியோடு உண்டு, புனிதவதியாருடைய செய்கையை உவந்து போயினார்.

போயபின், பரமதத்தன் நடுப்பகலிலே வீட்டுக்கு வந்து போசனம்பண்ணும் பொழுது, மனைவியார் எஞ்சியிருந்த மாங்கனியைக் கொண்டுவந்து, கலத்திலே வைத்தார். பரமதத்தன் மிக இனிய அந்தக்கனியை உண்டு அதன் இனிய சுவையினாலே திருத்தியடையாமல் மனைவியாரை நோக்கி, "மற்றக் கனியையுங் கொண்டுவந்து வை" என்றான். மனைவியார் கொண்டு வரச் செல்பவர் போலப் போய் நின்று, கொண்டு, சோகித்து, தம்மை விசுவசிக்கின்ற மெய்யன்பர்களுக்கு உற்றவிடத்து உதவும் பரமசிவனுடைய திருவடிகளைத் தியானித்தார். உடனே, அக்கடவுளுடைய கருணையினால், அதிமதுரமாகிய ஒருமாங்கனி அவர் கையில் வந்திருந்தது.

அவர் அதைக் கொண்டுவந்து, கணவனுடைய காலத்திலே படைக்க; அவன் அதை உண்டு, அதன் சுவை தேவாமிர்தத்தைப்பார்க்கிலுஞ் சிறந்தமையால் "இது முன் நான் தந்த மாங்கனியன்று இது மூவுலகங்களிலும் பெறுதற்கு அரியது, இதனை நீ எங்கே பெற்றாய்" என்றான். மனைவியார் அதைக்கேட்டு, தமக்குத் திருவருள் உதவிய திறத்தை வெளிப்படுத்துவது தகுதியன்று என்று நினைந்தமையால் நிகழ்ந்ததைச் சொல்லமாட்டாதவரும், கணவனுக்கு உண்மையை மறைத்துக் கூறுதலும் தகுதியன்று என்று நினைந்தமையால் அதனைச் சொல்லாது விட மாட்டாதவருமாய் வருந்தி நின்று பின் நிகழ்ந்தபடி சொல்வதே கடன் என்று துணீந்து, "நீர் தந்த கனிகளில் ஒன்றை ஓரடியாருக்குக் கொடுத்து விட்டமையால், அதற்கு நான் யாது செய்வேன் என்று கவன்று, பரமசிவனைத் தியானித்துக் கொண்டு நின்றேன். அவருடைய திருவருளினால் இந்தக் கனி அவருடைய திருவருளினாலே அழைத்துத் தா" என்றான். புனிதவதியார் அவ்விடத்தைவிட்டுப் போய், பரமசிவனைத் துதித்து, "இன்னும் ஒரு கனி தந்த தருளீராகில், அடியேனுடைய வார்த்தை பொய்யாய்விடும்" என்று விண்ணப்பஞ்செய்ய; சுவாமியுடைய திருவருளினாலே ஒரு மாங்கனி அவர்கையில் வந்திருந்தது. அவர் அதைக் கொண்டு வந்து, கணவன்கையிற் கொடுக்க; அதன் ஆச்சரியமடைந்து வாங்கினான். வாங்கிய பழத்தைப் பின் காணாதவனாகி, மிகுந்த பயங்கொண்டு, மனந்தடுமாறி, அப்புனிதவதியாரைத் தெய்வமென நினைந்து, அவரைப் பிரிந்து வாழவேண்டும் என்று துணிந்து, தன்கருத்தைப் பிறருக்கு வெளிப்படுத்தாமல், அவரோடு தொடர்பின்றி ஒழுகினான்.

ஒழுகு நாளிலே, ஒரு மரக்கலஞ் செய்வித்து, தான் செல்ல விரும்பிய தேசத்திலே விரும்பப்படுகின்ற அரும்பண்டங்களை அதனிடத்து நிறைய ஏற்றி, சுபதினத்திலே சமுத்திரராஜனாகிய வருணனைத் தொழுதுகொண்டு, மாலுமி முதலியோரோடும் ஏறி, அத்தேசத்தை அடைந்து, வாணிகஞ்செய்து, சிலநாளாயின்பின், மீண்டும் அம்மரக்கலத்தில் ஏறி, பாண்டியநாட்டிலுள்ள ஓர் நகரத்தை அடைந்து, அங்குள்ள ஒருவைசியனுடைய மகளை விவாகஞ்செய்து கொண்டு, பெருஞ்செல்வத்தோடும் வாழ்ந்திருந்தான். அவனுக்கு அம்மனைவி வயிற்றிலே ஒரு பெண்குழந்தை பிறந்தது. அவன் தான்கூடி வாழ்தற்கு அஞ்சி நீங்கிய மனைவியாரைத் தான் வணங்கும் தெய்வமாகக்கொண்டு, அவருடைய புனிதவதியார் என்னும் பெயரையே அந்தப் பெண்ணிற்கு இட்டான்.

பரமதத்தன் இப்படியே இங்கே இருக்க, புனிதவதியார் காரைக்காலிலே கற்பினோடு இல்லறத்தை வழுவாது நடத்திக் கொண்டு வந்தார். அவருடைய சுற்றத்தார்கள், வாணிகத்தின் பொருட்டுச் சென்ற பரமதத்தன் பாண்டிநாட்டிலே ஓர் நகரத்திலே செல்வத்தை விருத்திசெய்துகொண்டு வாசகஞ்செய்கின்றான் என்று கேள்வியுற்று, அவனிடத்திற் சிலரை அனுப்பி, அவனுடைய நிலையை உணர்ந்து, கவலை கூர்ந்து, புனிதவதியாரைத் தாமே அவனிடத்திற்குக் கொண்டுபோய் விடவேண்டும் என்று நினைந்து, சிவிகையில் ஏற்றிக்கொண்டு சென்று, அவனிருக்கின்ற நகரத்திற்குச் சமீபித்து, தாம் புனிதவதியாரைக் கொண்டுவந்தமையை அவனுக்கு ஆள் அனுப்பித் தெரிவித்தார்கள். அவன் அதனை அறிந்து அச்சங்கொண்டு, தன்னுடைய இரண்டாம் மனைவியோடும் மகளோடும் புனிதவதியாரிடத்திற்கு வந்து, "அடியேன் உம்முடைய கருணையினாலே வாழ்கின்றேன். இந்தப் பெண்ணுக்கு உம்முடைய பெயரையே இட்டேன்" என்று சொல்லிக்கொண்டு, அவருடைய பாதங்களிலே விழுந்து சாஷ்டங்கமாக நமஸ்கரித்தான். உடனே புனிதவதியார் தம்முடைய சுற்றத்தார்களிடத்திலே அச்சத்தோடும் ஒதுங்கி நிற்க; அவர்கள் வெள்கி, பரமதத்தனை நோக்கி, "நீ உன்னுடைய மனைவியை வணங்குவதென்னை" என்றார்கள். அதற்குப் பரமதத்தன்" இவரிடத்திலே ஒரு பெரிய அற்புதத்தைக் கண்டபடியால், இவர் தெய்வப் பெண்ணேயன்றி மானுடப் பெண்ணல்லர் என்று துணிந்து, இவரைப் பிரிந்தேன். இவரை நான் தொழுந்தெய்வம் என்று கொண்டமையால், நான் பெற்ற இந்தக் குழந்தைக்கு இவர் பெயரைத் தரித்தேன். அதுபற்றியே இவருடைய திருவடியையும் வணங்கினேன். நீங்களும் இவரை வணங்குங்கள்' என்றான், அதுகேட்ட சுற்றத்தார்கள் 'இது என்ன ஆச்சரியம்" என்று திகைத்து நின்றார்கள். புனிதவதியார் கணவன் சொல்லிய வார்த்தையைக் கேட்டு, பரமசிவனுடைய திருவடிகளைச் சிந்தித்து, "சுவாமி! இவனுடைய கொள்கை இது, இனி இவன்பொருட்டுத் தாங்கிய அழகு தங்கிய தசைப் பொதியை நீக்கி, தேவரீரைச் சூழ்ந்து நின்று துதிக்கின்ற பேய் வடிவை அடியேனுக்குத் தந்தருளல்வேண்டும்" என்று பிரார்த்தித்தார். அந்தக்கணத்தே, அக்கடவுளுடைய திருவருளினாலே, மாமிசம் முழுதையும் உதறி, ஏற்புடம்பாக, மண்ணுலகமும், விண்ணுலகமும் வணங்கும் பேய்வடிவமாயினார். அப்பொழுது தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். தேவதுந்துபிகள் ஒலித்தன. அதுகண்ட சுற்றத்தார்களெல்லாம் அஞ்சி, அவரை நமஸ்கரித்துக் கொண்டு போய் விட்டார்கள்.

புனிதவதியார் தமக்குச் சிவபெருமானுடைய திருவருளினாலே கிடைத்த ஞானத்தைக்கொண்டு, அற்புதத்திருவந்தாதியும் திருவிரட்டைமணிமாலையும் பாடி, திருக்கைலாச கிரிக்குப் போகவிரும்பி, மனசிலும் பார்க்க மிகுந்த வேகத்தோடு சென்று, அந்தத்திருக்கைலாசகிரியின் பக்கத்தை அடைந்து, அங்கே காலினால் நடத்தல் தகுதியன்றென்று ஒழிந்து, தலையினாலே நடந்துபோய், மலையிலேறினார், ஏறும்பொழுது, உமாதேவியார் அதைக் கண்டு, எம்போலிகள் புனிதவதியாருடைய திடப்பத்தியைக் குறித்து உலகமாதாவாகிய உமாதேவியாரே ஆச்சரியம் அடைந்தாராயின், நாம் எவ்வளவு ஆச்சரியம் அடைதல் வேண்டுமென்று சிந்திக்கச் செய்யும் பொருட்டுத் தாம் ஆச்சரியமுடையவராகி, அவரது பத்தி மகிமையை உயர்வொப்பில்லாத பரமசிவனுடைய திருவாக்கினாலே நமக்கு உணர்த்துவித்து நம்மை உய்விக்கத் திருவுளங்கொண்டு, அக்கடவுளை வணங்கி நின்று, "சுவாமீ! இங்கே தலையினால் நடந்து ஏறிவருகின்ற எற்புடம்பை யுடையவரது அன்பின் மகிமை இருந்தபடி என்னை" என்று விண்ணப்பஞ்செய்ய, பரமசிவன் "இங்கே வருகின்றவள் நம்மைத் துதிக்கின்ற அம்மை என்றறி இந்தப் பெருமை பொருந்திய வடிவத்தையும் வேண்டிப் பெற்றாள்' என்றார். பின் புனிதவதியார் சமீபத்தில் வந்தவுடனே உலகமெல்லாம் உய்யும் பொருட்டு, அவரை நோக்கி, "அம்மையே" என்று அழைத்தார். அது கேட்ட புனிதவதியார் "அப்பா" என்று சொல்லிக்கொண்டு அவருடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரித்து எழுந்தார். சுவாமி அவரை நோக்கி, "உனக்கு வேண்டும் வரம் யாது" என்று வினாவ; புனிதவதியார் வணங்கி நின்று, "சுவாமி! அடியேனுக்கு இறவாத பேரின்பமயமாகிய அன்பு வேண்டும்; இனி பிறவாமை வேண்டும்; பிறக்கினும் தேவரீரை ஒரு காலமும் மறவாமை வேண்டும்; இன்னும் தேவரீர் திருநிருத்தஞ் செய்யும்பொழுது, தேவரீருடைய திருவடியின் கீழே சிவானந்தத்தை உடையேனாகி, தேவரீரைப் பாடிக் கொண்டு இருத்தல் வேண்டும்." என்று விண்ணப்பஞ்செய்தார். சுவாமி அவரை நோக்கித் "தென்றிசையிலுள்ள ஆலங்காட்டிலே நம்முடைய நடனத்தைத் தரிசித்து, பேரானந்தத்தோடு நம்மைப் பாடிக்கொண்டிரு" என்று அருளிச்செய்தார். அதுகேட்ட காரைக்காலம்மையார் சுவாமியை நமஸ்கரித்து அநுமதி பெற்றுக்கொண்டு, திருவாலங்காட்டுக்குத் தலையினால் நடந்து சென்று, சுவாமியுடைய திருநடனத்தைத் தரிசித்து, "கொங்கை திரங்கி" என்னும் மூத்த திருப்பதிகத்தையும், "எட்டியிலவமீகை" என்னுந் திருப்பதிகத்தையும் பாடினார். அவர் சுவாமியுடைய தூக்கிய திருவடியின் கீழே சிவானந்தத்தை அநுபவித்துக் கொண்டு எக்காலமும் இருக்கின்றார்.

திருச்சிற்றம்பலம்
தொகுத்தவர் ;வை.பூமாலை,சுந்தரபாண்டியம்
நன்றி ; சைவம் டாட் காம்