வியாழன், 26 பிப்ரவரி, 2015

பாவங்கள் தீர்தர நல்வினை நல்குவார் எம்பெருமானார்


பாவங்கள் தீர்தர நல்வினை நல்குவார் எம்பெருமானார் " பாவங்கள் தீர்தர நல்வினை நல்கிப் பல்கணம் நின்று பணியச் சாவமதாகிய மால்வரை கொண்டு தண்மதில் மூன்றம்எரித்த தேவர்கள் தேவர் எம்பெருமானார் தீதில் பெருந்துறையாரே." சம்பந்தர் தேவாரம் - 1 மூவர்மற்றும் தேவர்கள் ஆகிய அனைவருக்கும் தலைவராய் விளங்கும் சிவபெருமானார் நம்முடைய பாவங்கள் தொலைவதன் பொருட்டு நல்வினைகள் செய்வதற்கு அருள் புரிகின்றார் என்கிறார் திருஞான சம்பந்தர். " அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர் உய்வினை நாடாது இருப்பது உன்தமக்கு ஊனமன்றே கைவினை செய்து பிரான்கழல் போற்றுதும் நாம் அடியோம் செய்வினை வந்துஎமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்" - சம்பந்தர் தேவாரம் நாம் முற்பிறவிகளில் செய்துள்ள வினைகளுக்கு ஏற்பவே இப்பிறவியில் நோய் மற்றும் இன்ப துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். இந்த உண்மையை யாவரும் அறிவோம், இப்பிறவியில் நமக்கு வரும் துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கு உரிய வழியை தேடாமல் இருப்பது நம்முடைய குறையே ஆகும். புண்ணிய செயல்களை செய்து சிவபெருமானுடைய திருவடியை போற்றுவோம், இவ்வாறு செய்தால், நாம் செய்த பழவினைகள் நம்மை வந்து அணுகா. இது திருநீலகண்டத்தின் மீது ஆணை. நாம் பலபிறவிகளில் செய்துள்ள மொத்த தீவினைகளின் பயனை அனுபவிப்பது என்பது இயலாத ஒன்றாகும். நாம் தாங்க மாட்டோம். என்பது சிவபொருமானாருக்கு நன்கு தெரியும். இதன் பொருட்டு நல்வினைகளை செய்து பாவங்களை தீர்ப்பதற்கு பலப்பல சந்தர்ப்பங்களை இறைவர் நமக்கு அருளியுள்ளார். இந்த அரிய சந்தர்பங்களை பயன்படுத்தி நாம் புண்ணியங்களை பெருக்கி கொள்ள வேண்டும். புண்ணிய செயல்களில் மனம் பழகப்பழக பாவங்கள் செய்யும் நிலை இல்லாமல் போகும். பாவச் செயல்களைச் செய்வதற்கு மனம் கூசும், இப்படி பாவங்களிலிருந்து விலகி, புண்ணியச் செயல்களில் மட்டும் ஈடுபடும் ஆன்மாக்களின் மீது இறையருள் தானே பதியும். இறையருள் பதிந்த ஆன்மா பிறவா நிலையை அடையும். இதனையே "முத்திப்பேறு" என்கிறோம். பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பெற்ற கைதி, தன் தவற்றை உணர்ந்து சிறையில் நல்லபடியாக நடந்து கொண்டால் அவனுடைய சிறைவாசம் குறைக்கப்படுவதுபோல் நம் செய்த பாவச் செயல்களை உணர்ந்து நல்லொழுத்துடன் வாழ்ந்தால் இறைவர் நம் பாவங்களை குறைத்து புண்ணியச் செயல்களாக மாற்றுவார். அநேக பாவங்கள் செய்திருந்தாலும் அவற்றை தவறு என்றுணர்ந்து அவற்றிலிருந்து உய்வடையும் பொருட்டு நல்வினைகளைச் செய்தால் இனிமேல் தீவினைகள் நம்மை பாதிக்காமலிருக்கும் என்பதை மேற்கண்ட பாடல் வாயிலாக நாம்அறியலாம். இனி நம் பாவங்கள் தீர்தர செய்ய வேண்டிய சில நல்வினைகள் யாவை என்பதைக் காண்போம். 1. சிவாலயத் திருப்பணிகள்: சிவபெருமானார் எழுந்தருளியுள்ள சிவலாயங்களை புதுப்பித்தல், மிக மேலான நல்வினை - புண்ணியச் செயல் ஆகும். பூசையில்லாமல் விடப்பட்டதும், சிதலமடைந்ததுமான சிவலாயங்களை திருப்பணி செய்து, பூசைகள் நடைபெற வழிவகுப்பது தலையான நல்வினையாகும். இதனை வலியுறுத்தும் பதினொராம் திருமுறைப்பாடல். "காணீர் கதியொன்றும் கல்லீர் எழுந்தஞ்சும் வல்ல வண்ணம் பேணீர் திருப்பணி பேசீர் அவன்புகழ் ஆசைப்பட்டுப் பூணீர் உருத்திர சாதனம் நீறெங்கும் பூசுகிலீர் வீணீர் எளதோ மருதப் பிரான்கழல் மேவுதற்கே. - பட்டினத்தடிகள் மும்மணிக்கோவை மருதப்பெருமானாராகிய சிவனாரின் திருவருளைப் பெறுவதற்கு கீழ்கண்ட ஐந்து நல்வினைகளை (புண்ணியங்களை) செய்ய வேண்டும் என்கிறார் கடவுள் நிலையறிந்து அம்மயமான பட்டினத்து அடிகள் 1. திருஐந்தெழுத்தினை ஓதுதல் 2,சிவலாயத் திருப்பணிகளை செய்தல் 3, சிவபெருமானுடைய திருப்புகழினை பேசி மகிழ்தல் 4,உருத்திராட்சம் அணிந்து கொள்வது 5, உடலில் திருவெண்ணீறு அணிந்து மகிழ்தல் 2, சிவலாயத்தை தூய்மை ெசெய்தல்: சிவபெருமானார் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஆலங்களை பெருக்குதல், மெழுகுதல், தேவையற்ற மரம், செடி, கொடிகளை அகற்றி தூய்மை செய்தல் ஆகிய நல்வினை செயல்களாகும். அன்று மலர்ந்த பூக்களை எடுத்து மாலையாக தொடுத்தல், வாயாரப் புகழ்ந்து பாடுதல், தலையால் வணங்குதல், செலவில்லாத புண்ணியச் செயல்களாகும், இவற்றை இயம்பி நிற்கும் அரிய தமிழ் திருமுறை பாடல். "நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்து ஏத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச் சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீயென்றும் ஆரூரா என்றென்றே அலறா நில்லே. " திருநாவுக்கரசர் தமிழ் திருமுறை - 6 3, மலர் தொண்டு செய்தல்: சிவலாயத்திற்கு வேண்டிய பூக்களை கொடுத்து உதவுதல் மேலான புண்ணியமாகும். ஆலயத்தில் உள்ள பூக்களை அதிகாலையில் எடுத்து, மாலையாக தொடுத்தளிக்கலாம். நம் வீட்டில் பூச்செடிகள் வைத்தும், பூக்கும் பூக்களை ஆலயத்திற்கு அளிக்கலாம், நறுமணமுள்ள மலர்களையே ஆலயத்திற்கு அளிக்க வேண்டும், " நறுமாமலர் கொய்து" என்பார் அப்பர் அடிகள். 4, இறைவருடைய திருநாமத்தைச் சிந்தித்தல்: " நற்றவா உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே" - சுந்தரர் காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே. - சம்பந்தர் தேவாரம் 3 "பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணிநின்று அறுப்பது நமச்சிவாயவே" - நாவுக்கரசர் நம்முடை ய தீவினைகளை நீக்கி, நல்வினை பெருகுவதற்கு இறைவருடைய திருநாமத்தை சிந்தித்தல் (செபித்தல்) அவசியமாகும். பெரும் பொருள் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. பாவங்கள் தொலைந்து நல்வினை பெருக உரிய வழியும், எளிய வழியும் இதுவே எனலாம். ஒரு நாளைக்கு காலை, நண்பகல், மாலை இரவு என நான்கு வேளைகளிலும் ஓதி நலம் பெறலாம். 5. சிவலாய வழிபாடு மற்றும் சிவத்தல யாத்ததிரை செய்தல்: பெற்ற பயன்களில் தலையாயது சிவபெருமானாருடைய ஆலயத்தை வலம் வந்து மலர் தூவி வழிபடுவது என்கிறார் அப்பர் சுவாமிகள். "ஆக்கையால் பயன் என் அரன் கோயில் வலம் வந்து பூக்கையால் அட்டிப் போற்றி என்னாத இவ் ஆக்கையால் பயன் என். - நாவுக்கரசர் குறைந்தது ஒருநாளைக்கு இரண்டு வேளையாவது ஆலயம் சென்று தொழ வேண்டும். என்பது அப்பர் பெருமானார் அருள்வாக்கு. மனிதன் தவிர மற்ற உயிரிகள் இதனை செய்ய இயலா. மனிதப் பிறவியில் மட்டுமே இது முடியும். "நாடு நகரமும் நல்திருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெருமான் என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே, - திருமூலர் திருமந்திரம் சிவத்தலயாத்திரை செய்வது நல்வினை பெறுவதற்கு சிறந்த வழியாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், பட்டினத்து அடிகள் போன்ற பலரும் சிவத்தல யாத்திரை செய்துள்ளதை நாம் அறிவோம், 6, சிவலாயத்தில் விளக்கேற்றல்: விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்நெறி ஞானமாகும்" திருநாவுக்கரசர் நமிநந்தி அடிகள், கலிய நாயனார், கணம்புல்லர்,ஆகியோர், சிவலாயத்தில் தொடர்ந்து விளக்கேற்றி நற்பேறு பெற்றதை பெரியபுராணம் வாய்லாக அறியலாம், கலய நாயனார் சிவலாயத்தில் " குங்குலியம்" எனப்படும் நறுமணத்தை அளிக்கும் திருத்தொண்டினைச் செய்து நலம் பெற்றார், இவ்வாறு இயன்ற சிவத்தொண்டுகளை செய்து நல்வினைகளைப் பெறலாம். 7. தமிழ் வேதப் பதியங்களை பாராயணம் செய்தல்: மிகச் சிறந்த புண்ணியச் செயல் இதுவும் ஒன்றாகும், நம்முடைய பழைய வினைகள் யாவும் இல்லாது ஒழியும் என்கிறார் ஞான சம்பந்தர். " ஒருநெறிய மனம் வைத்துணர் ஞானசமபந்தன்உரை செய்த திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே." சம்பந்தர் பதிகப பாராயணமும் மனிதப் பிறவியில் தான் இயலும். பேசும் திறம் பெற்ற நாம் இதை செய்தே ஆக வேண்டும். "...... வருங்கலை ஞான சமபந்தன் தமிழின் ஒலிகெழுமாலை யென்றுரை செய்த பத்தும் உண்மையினால் நினைந்து ஏத்தவல்லார் மேல் மெலிகெழுதுயர் அடையா வினைசிந்தும் விண்ணவர் ஆற்றலின் மிகப் பெறுவாரே". கலைஞானம் மிகுந்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருக்கழுமலப்பதிகத்தை உண்மையான அன்புடன் நினைந்து பாராயணம் செய்பவர்கட்குச் சோர்வை அளிக்கும் துன்பங்கள் வாரா. வினைகள் அழியும். விண்ணவர்கள் மேம்பட்ட ஆற்றலை பெறுவார்கள். " தமிழ் நாடு ஞானசம்பந்தன் சொல்லிவை பாடுவார்க்கு இல்லை பாவமே." 8. அடியார் தொண்டு செய்தல்: சிவபெருமானாரை இடைவிடாது மனத்தில் நினைந்து வாழும் சிவனடியார்களை " நடமாடக்கோயில்" என்கிறார், திருமூல நாயனார். இத்ததையவர்கட்கு எந்த உதவியைச் செய்தாலும் அது இறைவருக்கு சென்று சேரும் என்கிறார். "நடமாடக் கோயில் நம்பற்கு ஒன்று ஈயின் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே." - திருமந்திரம் மெய்பொருள் நாயனார் எப்படி வாழ்ந்தார் என்று பெரிய புராணம் கூறுவதைக் காண்போம். "தேடியமாடு நீடுசெல்வமும் தில்லை மன்றுள் ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று நாடியமனத்தோடு நாயன்மார் அணைந்த போது கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவறக் கொடுத்து வந்தார். பெரியபுராணம் திருமறை 12 சித்த்தை சிவன்பால் வைத்த சிவனருட் செல்வர்கள் மெய்பொருள் நாயனாரிடம் ஏதேனும் வேண்டும் என்று வந்தபோது குறைவின்றி கொடுத்து வாழ்ந்தார் என்கிறது , இத்துடன் சிவனாடியார் பிள்ளைக்கரி கேட்டபோது தன் பிள்ளையே கறியாக்கி சமைத்து கொடுத்த சிறுத்தொண்ட நாயனார் வழியாகவும், சிவனாடியார் தொண்டே மகேசன் தொண்டு வாழ்ந்த அப்பூதியடிகள் வரலாற்றின் மூலம் சிவனடியார் தொண்டின் பெறுமையை நன்கு அறியலாம். 9. சான்றோர்களுடன் மட்டுமே சேரவேண்டும்: சான்றோர்களுடன் தான் உறவு வேண்டும் என்று வள்ளலார் கூற்று ஒருமையுடன் நின் திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தன் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்து புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பதிலிருந்து சான்றோர் உறவு எப்படி இருக்க வேண்டும் என்று அறியலாம் "வென்றிலேன் புலன்கள் ஐந்தும் வென்றவர் வளாகந் தன்னுள் சென்றிலன் ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன்" திருமறை 4 புலன்களை வென்ற சான்றோர்களுடன் தொடர்பு கொண்டு வாழ வேண்டும். மனம் நல்லதில் மட்டும் நாட்டம் கொள்ளும், நல்லதில் மட்டும் நாட்டம் கொள்ளும் வழியைத்தான் திருநாவுக்கரசர் "செந்நெறி" என்கிறார். இத்துடன் சுந்தரரும் " உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே." என்கிறார். 10. ஏழை எளியவர்கட்கு உதவுதல்: ஒருவரிடம் தேவைக்கு மேல் செல்வத்தை இறைவர் அளிப்பதன் காரணம் ஏழைகட்கு உதவுவதற்குத்தான் என்கிறார் திருநாவுக்கரசர் இப்படி உதவினால் இறைவர் மேலும் மேலும் செல்வத்தை அளிப்பார் என்றும் கூறியுள்ளார, அப்படி தேவைக்கு மேல் சேர்ந்துள்ள செல்வத்தை ஏழை எளிய மக்களுக்கு அளிக்காதவர்கட்குக் கடும் நரகங்களை வைத்துள்ளார் இறைவர் என்றம் அருளியுள்ளதை நாம் சிந்திக்க வேண்டும். ஏழைகளையும் படைத்து நம்மிடம் தேவைக்கு மிஞ்சிய செல்வத்தையும் அளித்து நல்வினை தேடிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆம். இதனால் நம் பாவங்கள் தீரும். நாம் செய்த தீவினைகள் நம்மை வந்து தீண்டா. இவற்றையெல்லாம் இயம்பி நிற்கும் நாவரசரின் அரிய பாடல் " இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார் கரப்பர் தங்கட் கெல்லாம் கடும் நரகங்கள் வைத்தார்," - அப்பர் தேவாரம் " யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி" - திருமூலர் திருமந்திரம் கொடுத்துக் கொடுத்துப் பழகிவிட்டால் பிறர் பொருள் மீது ஆசை வராது. ஆசைதான் பாவச் செயல்கள் செய்யத் தூண்டுகிறது. ஆசை அழியுமானால் தீவினை செய்யாமல் வாழலாம். 11. பிராணிகட்கு உணவிடுதல்: உலகத்தில் உள்ள உயிரினங்கள் மற்றும்தாவரங்கள் ஆகிய யாவும் ஒன்றை ஒன்று சார்ந்தே வாழும்படி இறைவர் படைத்துள்ளார். மனித வாழ்வில் பிராணிகள் பங்கு அதிகம். இவற்றிக்கு அன்றாடம் ஒருபிடி உணவு கொடுப்பது பாவங்கள் தீரும் வழியாகும். " யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை" - திருமூலர் திருமந்திரம் கூறும் வாக்கு பிராணிகளில் பசு மட்டும் அல்ல, காகத்திற்கு உணவிடுவது நம் இந்துமதத்தின் ஒரு மரபாகவே உள்ளது. மேலும் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் வளர்ப்பதும் இதன் நோக்கம் தான்.எனவேதான் ஆன்மீகத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் வாகனமாக ஒவ்வொரு பிராணிகளை இணைத்துள்ளார்கள் முன்னோர்கள் 12. தாவரங்கள் வளர்த்தல்: உலகம் நலமாக திகழ்வதற்கு தாவரங்கள் பங்கு மிகமிக அதிகமாகும். உலக உயிர்கள் வாழ்வதற்கு இவற்றின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாகும். சுவாசிக்கும் காற்று முதல் உயிர் வாழ்க்கைக்கு தேவையான யாவற்றையும் தாவரங்கள் தான் நமக்கு தருகின்றன. இதனை உணர்ந்த ஞானிகள் தாவரங்களைப் போற்றி பாதுகாப்பது பெரும் புண்ணியம் என்று கூறியுள்ளார்கள். "கரகத்தால் நீர்அட்டி காவினை வளர்ப்பீர்" - திருமூலர் திருமந்திரம் நான்காம் நூற்றாண்டிலேயே ஆளுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்று கூறியுள்ள தமிழர்களின் தொலை நோக்கு பார்வையைப் பாராட்ட வேண்டும். ஓவ்வொரு சிவாலயத்திலும் "தலமரம்" என்று சொல்லி மரங்களை தெய்வமாகவே போற்றியுள்ளதை நாம் மனத்தில் கொள்ளவேண்டும், மரம் வளர்ப்பது பாவங்களை தீர்க்கும் நல்வினையாகும். 13, உலக நன்மைக்கு வேண்டுவது: இறைவருடைய கருனையால் நடத்தப்படும் இந்த உலகமே இறைமயம் தான். உலகம் நலமாக இருக்க வேண்டும் என்று நாம் மனதால் வேண்டவேண்டும், நாம் நலமாக வாழ்வோம். உலகத்தில் நாமும் ஒருவர்தான், இதனை விளக்கும் பாடல் "வையம் நீடுக மாமழை மன்னுக மெய்விரும்பிய அன்பர் விளங்குக சைவநன்னெறிதாம் தழைத்து ஓங்குக தெய்வ வென்திருநீறு சிறக்கவே" வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசுசெய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்" பன்னிரு திருமுறையில் சேக்கிழார் அவர்களின் கடைசி வாழ்த்து பாடல் வழிதெரியாதவர்கட்கு வழிகாட்டலாம். அறியாமையில்உள்ளவர்கட்கு நல்ல அறவுரைகள் வழங்கலாம், பிரிந்த இருவரைச் சேர்த்து வைக்கலாம், நடைபாதையில் கிடக்கும் வேண்டாத தீங்குவிளைவிக்கும் பொருட்களை அப்புறப் படுத்தலாம். இனிய சொல்லே பேசுதல், இப்படி செலவில்லாத ஏராளமான நல்வினைச் செயல்களைச் செய்யலாம், நாம் தவறுகளைச் செய்யும் பொழுது இறைவர் மனசாட்சியாய் இருந்து " இதுதவறு" என்று உணர்த்துகிறார். ஆணவம் மற்றும் பேராசை காரணமாக நாம்தான் அதைப் பொருட்படுத்தாமல் செயல்படுகிறோம், " பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி" என்னும் தொடரை மனத்தில் வைத்து, உலகிற்கு நலம் தரும் புண்ணியச் செயல்களை மட்டுமே செய்து வரவேண்டும், மறந்தும் மற்ற உயிர்கட்கு தீமையைச் செய்துவிடக் கூடாது, கருணை நிறைந்த ஆன்மா இறைவருடைய கருணையை எளிதில் பெற்றுவிடுகிறது, செல்வம் நிறைந்தவர்கள் , பொருட் செல்வங்களாலும், அதனால் முடியாதவர்கள் தங்களால் முடிந்த அளவு சேவை மனப்பான்மையையும் கொண்டு பிறர் மனம் நோக வண்ணம் இனிது பேசியும் , உதவிகள் செய்தும், முடிந்த அளவு உழவாரப்பணிகள் செய்து, பாவச்செயல்ளை தீர்க்க வல்ல புண்ணிச் செயல்கள் செய்து, நாமும் நலமுடன் வாழ்ந்து, பிறரையும் நலமுடன் வாழச்செய்து, இறையருளைப் பெற்று இனிவரும் பிறவிக்கும் காரணமாய் அமைந்து மேலான நிலையை அடைய உதவுபவை இப்புண்ணிய செயல்களே என்பதை அறிந்து செயல்படுவோம். திருச்சிற்றம்பலம் நன்றி: தமிழ்வேதம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

புதன், 25 பிப்ரவரி, 2015

என்.கணேசன்: ருத்ராட்சம் அணிவதன் பலன்கள்!

என்.கணேசன்: ருத்ராட்சம் அணிவதன் பலன்கள்!: அறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...

என்.கணேசன்: வாரணாசியில் நடமாடும் சிவன்!

என்.கணேசன்: வாரணாசியில் நடமாடும் சிவன்!: 12 மகாசக்தி மனிதர்கள் த ன்னிடம் அளவற்ற சக்திகள் இருந்தாலும் அதை ஒரு பொருட்டாக த்ரைலங்க சுவாமி நினைத்தவரல்ல. பொருளாசை, புகழாசை, மற்...

புண்ணாக்குச் சித்தர் பாடல்


புண்ணாக்குச் சித்தர் பாடல் இவரைப் பிண்ணாக்கீசர் என்றும் குறிப்பிடுவர். பாம்பாட்டிச் சித்தரின் சீடரான இவர், கன்னடத்துக்காரர் எனப் போகர் குறிப்பிடுகின்றார். ஓர் ஆத்தி மரமே இவரின் வசிப்பிடமாக இருந்தது என்றும், தீவிர வைணவ பக்தர் என்றும் கூறுவர். இவருக்குப் பசி எடுத்தால் ‘கோபாலா’ என்று அழுவாராம். மற்றபடி மௌனம்தான். தாம் அடைக்கலமாயிருந்த ஆத்தி மரத்திலேயே சமாதியானதாகக் கூறப்படுகிறது. இவருக்குப் பிண்ணாக்கீசர் அல்லது புண்ணாக்குச் சித்தர் என்று பெயர் வந்ததற்கான காரணம் புலப்படவில்லை. இவரது பாடல்கள் ஞானம்மா என்பவரை முன்னிறுத்திப்பாடப்பட்டவை. இவர் இப்படி முன்னிறுத்திய ஞானம்மா யாரென்பதைத் தம் முதல் பாட்டிலேயே தெரிவிக்கின்றார். ‘தேவி மனோன்மணியாள் திருப்பாதங் காணவென்று தவித்திருந்தேனே’ என்று கூறுவதன் மூலம் மனோண்மணியம்மையை இவர் ஞானம்மா என்று குறிப்பிடுவது புலனாகிறது. அஞ்ஞானத்தைக் கடந்து அறிவை மிகச் செலுத்தி மெய்ஞ்ஞானம் கண்டு கொண்டால் அதுதான் விலையில்லாத ரத்தினமாகும் என்று கூறுகின்றார். காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்றும், ‘ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி’ என்றும் கூறும் சித்தர் வாக்கியத்தை, “காத்தடைத்து வந்ததிது கசமாலப் பாண்டமிது ஞானம்மா ஊத்தச் சடலமிது உப்பிலாப் பொய்க்கூடு இப்பாடல் ‘கசமாலம்’ என்ற சென்னைத் தமிழ் வழங்குவதிலிருந்து இவர் சென்னைப் பகுதியில் நடமாடிய பிற்காலச் சித்தராய் இருக்கலாமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. அல்லது போகர் குறிப்பிடும் பிண்ணாக் கீசரிலும் இவர் மாறுபட்ட வேறு சித்தராய் இருத்தல் வேண்டும். 20 கண்ணிகள் ஒரு பாடலும், 45 பாடல்களில் ஒரு முப்பூச் சுண்ணச் செயநீர் பாடலும் இவர் இயற்றியதாகக் காணப்படுகிறது. ஆயினும், இரண்டின் நடையையும் ஒப்புநோக்கக் கால வேறுபாடு தெள்ளெனப் புலப்படும். ஆகவே, முப்பூச் சுண்ணச் செயநீர் பாடிய புண்ணாக்குச் சித்தரும், மனோன்மணியாளைப் பாடிய புண்ணாக்குச் சித்தரும் வேறு வேறானவர் என்பது ஏற்பதற்குரியது. இப்பாடல் தொகுதி பிற்காலப் புண்ணாக்குச் சித்தருடையது. தேவிமனோன்மணியாள் திருப்பாதம் காணஎன்று தாவித்திரந்தேளே - ஞானம்மா சரணம் சரணம் என்றே. 1 அஞ்ஞானமும்கடந்து அறிவை மிகச்செலுத்தி மெய்ஞ்ஞானம் கண்டுகொண்டால் - ஞானம்மா விலையிலா ரத்தினமடி 2 முட்டையினுள்ளே முழுக்குஞ்சு இருப்பதுபோல் சட்டையாம் தேகத்துள்ளே - ஞானம்மா தானுயிரு நிற்பதடி. 3 விட்டகுறைவாராமல் மெய்ஞ்ஞானம் தேராமல் தொட்டகுறை ஆனதினால் - ஞானம்மா தோன்றுமெய்ஞ் ஞானமடி. 4 தம்முளம் அறியாமல் சரத்தைத்தெரியாமல் சம்சாரம் மெய்யென்று - ஞானம்மா சாகரத்திலே உழல்வார். 5 இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம் துட்டர்க்கு உபதேசம் - ஞானம்மா சொன்னால் வருமோசம். 6 முத்தி பெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும் நித்திரையும்விட்டு - ஞானம்மா நினைவோடு இருக்கணுமே. 7 நினைவைக் கனவாக நீயெண்ணியே பார்க்கில் சினமாய்வரும் எமனும் - ஞானம்மா தெண்டநிட்டுப் போவானே. 8 யோக விளக்கொளியால் உண்மை தெரியாமல் மோகம் எனும் குழியில் - ஞானம்மா மூழ்கியேபோவார்கள். 9 சாத்திரம் கற்றறியாத சாமியார் தானாகி ஆத்திதேட நினைத்து - ஞானம்மா அலைவார் வெகுகோடி. 10 பூச்சும்வெறும்பேச்சும் பூசையும் கைவீச்சும் ஏச்சுக்கு இடந்தானே - ஞானம்மா ஏதொன்றும் இல்லையடி. 11 கலத்தை அலங்கரித்துப் பெண்கள் தலைவிரித்து கணக்கைத் தெரியாமல் - ஞானம்மா கலங்கி அழுதாரடி. 12 மேளங்கள் போடுவதும் வெகுபேர்கள் கூடுவதும் நாளை எண்ணாமலல்லோ - ஞானம்மா நலிந்தே அழுவாரடி. 13 கோவணமும் இரவல் கொண்டதூலம் இரவல் தேவமாதா இரவல் - ஞானம்மா தெரியாதே அலைவாரே. 14 செத்தவரை மயானம் சேர்க்கும்வரையில் ஞானம் உத்தமர்போலப் பேசி - ஞானம்மா உலகில் திரிவாரடி. 15 காட்டில் இருந்தாலுங் கனகதவஞ் செய்தாலும் காட்டில் குருவில்லாமல் - ஞானம்மா கண்டறிதல் ஆகாதே. 16 நல்ல வெளிச்சமது ஞான வெளிச்சமது இல்லாவெளிச்சமது - ஞானம்மா ஈனவெளிச்சமடி. 17 சம்சாரமென்றும் சாகரமாமென்றும் இம்சையடைவோர்கள் - ஞானம்மா இருந்து பயன் ஆவதென்ன. 18 காத்தடைத்து வந்ததிது கசமாலப் பாண்டமிது ஊத்தச் சடலமிது - ஞானம்மா உப்பிலாப் பொய்க்கூடு. 19 அஞ்சுபேர்கூடி அரசாளவே தேடி சஞ்சாரஞ் செய்ய - ஞானம்மா தானமைத்த பொய்க்கூடே. 20

பிறவாமையைப் பெறுவதற்கு எளிய வழி


பிறவாமையைப் பெறுவதற்கு எளிய வழி ஒரு நாள் திருநாவுக்கரசு சுவாமிகள் சிவலாயம் ஒன்றில் திருப்பணி முடித்து வருங்கால் தன் எதிரில் ஒரு பெரியவர் அப்பர் பெருமானிடம் அய்யா முதுமை அடைந்து விட்டேன், எனக்கு விரைவில் பிறப்பற்ற இறப்பு கிடைக்குமா? என்று வினவினார், அப்பர் சுவாமிகளிடம். உடனே அப்பர் சுவாமிகள் அப்பெரியவரிடம் கேட்டார், " அய்யா ! தாங்கள் இந்நாள் வரை தினமும் ஒருபொழுதேனும் இறைவனின் திருநாமமாகிய திருஐந்தெழுத்தை வாயாரா கூறி வந்துள்ளீர்களா?, அனுதினமும் இறைவனுடைய பெருமைகளையும், கேட்டும் ஏனையோருக்கு கூறியும் பாடியும் உள்ளீர்களா? , தினமும் உணவு அருந்தும் முன் அருகிலுள்ள சிவலாயம் சென்று வலம் வந்து அவரை சேவித்துள்ளீர்களா? , இறைவனுக்கு மலர் பறித்து அவன் பாதங்களில் சமர்த்துள்ளீர்களா?, சைவ நெறியின் அடையாள சின்னமாகிய அனுதினமும், சிவாயநம என்று கூறி திருநீரு அணிந்து வந்துள்ளீர்களா?, சிவத்தின் அடையாள சின்னமான உத்திராட்சம் அணிந்து வந்துள்ளீர்களா?" என்றார், அதற்கு அப்பெரியவர் அய்யா இவற்றை எல்லாம் ஒருநாளும் ஒரு பொழுதேனும் செய்ததும்இல்லை, கேட்டதும் இல்லை என்றார், உடனே அப்பர் பெருமான் மனம் நொந்து " அய்யா, இவ்வளவு காலமும் இதையெல்லாம் செய்யாமல் வீணாக காலத்தை கழித்து விட்டீரே ! கிடைத்தற்கரிய வாய்ப்பை இதுவரை நலுவ விட்டுவிட்டேரே! செய்த பாவங்களை குறைக்க எடுத்த மனிதப் பிறவியை வீணே துலைத்து விட்டு மேலும் மேலும் பாவ சுமைகளை ஏந்தியுள்ளீர்களே ! " என்றார். இதன் பொருட்டு அப்பர் பெருமான் பாடிய பாடல் "திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில் தீவண்ணர் திறம் ஒருகால் பேசாராகில் ஒருகாலுந் திருக்கோவில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்திட்டு உண்ணாராகில் அருநோய்கள் கெட வெண்ணீ றணியாராகில் அளியற்றார் பிறந்த வாறு ஏதோ என்னில் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே " நாவுக்கரசர் தமிழ் வேதம் 6 இறைவருடைய திருநாமமாகிய திரு ஐந்தெழுத்தை சொல்லாமலும், இறைவருடைய பெருமைகளை ஒரு முறையாவது பேசாமலும், தினமும் ஒருமுறையாவது சிவாலயத்தை வலம் வராமலும் , உண்பதற்கு முன் இறைவருக்கு மலர் பறித்து இடாமலும், சைவ சின்னமான திருவெண்ணீரு அணியாமலும் வாழ்பவர்கள் நோய்களால் துன்புற்று இறப்பர், மீண்டும் மீண்டும் பிறப்பர், அப்பிறவியிலும் பயனின்றி மீண்டும் இறப்பர், இதுவே இவர்களுக்கு தொழிலாகி விடும். மிக முக்கியமான செயல் திருஐந்தெழுத்தைச் சொல்லுவதாகும், இதனால் நோய்களும் நீங்கும், இனிமேல் பிறக்கவும் நேரிடாது. இதனை சொல்பவர், திருநாமத்தை சொல்லி (சிவாயநம) (நமசிவாய) செபித்து, பிறவாமையை அடைய திருநாவுக்கரசர் சுவாமிகள் ஆவார், பெரும் பொருள் செலவு செய்து அர்த்தமற்ற சடங்குகள் ஆரவாரத்துடன் செய்வதால் பிறவாமையைப் பெற்றுவிட முடியாது. திருச்சிற்றம்பலம் நன்றி: தமிழ்வேதம் மேலும் பல ஆன்மீகத் தகவல்களுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

மனோபாவங்களில் மகேசனைக் காண்போம்


மனோபாவங்களில் மகேசனைக் காண்போம் " அரிது அரிது மாநுடராதல் அரிது" என்பார் ஒளவையார், மற்ற எல்லா பிராணிகளையும் விட மிக உயர்ந்த பிறப்பு மானிடப் பிறப்பு மட்டுமே ஆகும். " மற்ற உயிரை எல்லாம் மானிடம் வென்றதம்மா " என்பார் கம்பர், மனித வாழ்விற்கு அடிப்படையாக இருப்பதோடன்றி, மனிதனையே இயக்கிக் கொண்டிருக்கும் பேராற்றல் மனம். மனம்தான் மக்களை மாக்களிடமிருந்து உயர்த்தி காட்டுவது ஆகும். மனம் என்றால் என்ன? என்பதிலிருந்து மனோபாவத்தை பற்றி பார்ப்போம். " கடிகாரத்தின் முள் காலங்காடடிச் செல்வதற்க அதற்குள் ஒரு சுருள் விசை (ஸ்பிரிங்) இருப்பது போலவே நமது உடலுக்குள்ளும் ஓர் இயந்திரம் இயங்குகிறது, அதற்கு பெயர் "மனம்" என்று தபோவனம் தவத்திரு ஞானானந்தகிரி அவர்கள் கூறுகிறார், "மனம்" இச்சொல் நிலைபேறுடைய மனிதப்பிறவியின் தன்மையை உணர்த்தும் பெருமை மிக்க சொல்லாகும். மனம் என்பதை பிரித்தால் மன்- அம் என்று அமையும், மன் என்பது நிலைபேறு என்று பொருளைத் தரும், நிறை போற்றுவதற்குரிய பிறவி மனிதப் பிறவி மட்டுமே ஆகும். மனம் என்ற சொல்லின் அடியாகவே மனிதன் என்ற சொல்லும் தோன்றி இருக்க வேண்டும். மனத்தை உடையவன் மனத்தன் என்று இருந்து பின்பு மனிதன் என்றாகியிருக்கலாம், மனிதன் என்ற சொல்லுக்கு நினைப்பவன் என்பது பொருள். ஆடு,மாடு முதலிய விலங்குகள் கால்நடைகள் எனப்படுகின்றன. மனிதனும் காலால் தானே நடக்கிறான்? மிருகங்களை மட்டும் கால்நடைகள் என்று ஏன் குறிப்பிடுகிறோம்? காலால் மட்டுமே நடப்பவை விலங்குகள் அவற்றுக்கு "மனநடை" " நா நடை", "ஓழுக்க நடை" முதலியன கிடையாது. நாநடை , ஓழுக்க நடை முதலியவைகள் உடையவன் உதாரணமாக நடை தவறி விட்டான் என்றால் கால்நடப்பதையா குறிக்கும்? இல்லை ஒழுக்க நடையைக் குறிப்பதுதாக் அதன் பொருள். மனிதர்கள் மட்டும் இறைவன் கொடுத்த வரப் பிரசாதங்களில் ஒன்று மனம் ஆகும். நமக்கும் விலங்குகளுக்கும் வித்தியாசம் என்ன? ஒன்றே ஒன்றுதான் அதுதான் இறைவனை நினைக்கும் மனம் ஆகும். உண்பது, உறங்குவது, மக்களை பெறுவது உலாவுவது முதலிய யாவும் விலங்குகளுக்கும் நமக்கும் பொதுவாக அல்லவா உள்ளது. ஆகவே மனிதர்களாகிய நாம் எந்த வகையில் விலங்குகளைவிட உயர்ந்தவன் என்ற வினா எழுகின்றது அல்லவா? " நான் யார்?" என் உள்ளம் யார், உடல், உயிர் எதற்கு? எங்கிருந்து வந்தோம்? எதற்காக பிறந்தோம்? பிறவியின் பயன் என்ன? குரு என்பவர் யார்? இறைவன் யார்? அவரை அறிவது அடைவது எவ்வாறு? என்பன போன்ற வினாக்களை உள்ளுக்குள் கேட்டுக் கொண்டு அவை பற்றி ஆழமாக நினைத்து தகுந்த விடைகளை அறிந்து அறவொழுக்கத்தில் நிற்பவன் தான் உண்மையான மனிதன், இல்லையேல் மனித உடம்பெடுத்த விலங்குதான்.மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையில் இட்ட எல்லைக்கல் தான் மனம். அந்த மனத்தில் தெய்வீக மனேபாவம் தோன்றி இருந்தால் அவன மனிதன், இல்லை என்றால் அவன் எத்தனை அறிஞானாயினும் விலங்கோடு ஒப்பாவான், " உடம்பினை பெற்ற பயனாவ தெல்லாம் உடம்பினில் உத்தமனைக் காண்" என்கிறது ஒளவைக் குறள். இப்பிறவியின் பயன் இறைவனைக் காண்பாதும் அவரை அடைவதுமே ஆகும். மனத்தில் தோன்றும் எண்ணங்களை பாவம் என்றும் கூறுவதுண்டு. இந்த பாவத்திற்கு பல பெயர்கள் உள்ளன. அவை பக்தி, சிந்தனை, நட்பு, பாசம், காதல், அன்பு, பகை, எண்ணம், மனோசக்தி, மனஉறுதி, நினைத்தல், அழுத்தம், யோசனை என்பன ஆகும், மனம் பாலைப் போன்றது. அது நீரிலும் விசத்திலும் அமிர்தம் எனப்படும் தேனிலும் சேரும், சேரும் இடத்திறகு தக்கவாறு மாறும் இயல்பை உடையதுதான் மனம். ஆகவே தான் மனத்தை புகழ்ந்தும், இகழ்ந்தும் பாடினார்கள் நமது பெரியோர்கள். " தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்கிறது சங்க நூல்,மனமே நண்பன் - மனமே பகைவன் என்கிறது கீதை." அறன் ஒன்றும் " தரு மனத்தான்" என்று மனத்திற்கு " திரு" என்ற அடைச் சொல் தருகிறார் கம்பர். சொர்க்கத்தை நரகமாக மாற்றவும், நரகத்தை சொர்க்கமாக மாற்றவும் வல்லமை படைத்தது மனம். அனுபவத்தின் ஆனந்தம் நிலவும், மனச்சக்தி, மனச் செயல், மனச் சாரம், என்று மூன்று வகையில் பாகுபாடு செய்து மனத்தை அறிதல் ேவ்ண்டும். இறைவனை அறிய , அடைய மனமே மார்க்கம் வழிகாட்டி, புலப்படுத்தும் கண்ணாடி, மனஒளி இறைவனை உருவகப்படுத்தவும், சிந்திக்கவும் தரிசிக்கவும் உதவுகிறது. பரிசுத்தமான மனச் சக்தி உள்ளொளியில் புலப்படுத்துகிறது. மனம் வெளிபடல் , வியாபித்தல், பங்கேற்றல் ஆகிய தன்மைகளால் மலர்ச்சி அடைகிறது. தன்னைத்தானே அலசிப்பார்த்து ஆய்ந்து சிந்தித்து, தெளிவுறுதல் வேண்டும். " மனத்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் - இனந்தூய்மை தூவா வரும்" - திருக்குறள் 455. மனத்தினுள் விளக்கொற்றி உன்னுவார் உள்ளதுள்ளார் - என்பார் நாவுக்கரசர். தேவையற்ற மனநிலைகளை மாற்றி இறைவனை நினைத்து, கிடைப்பதற்கு அரிதாகிய மனிதப் பிறவியின் பயனை அடைவோமாக. தெய்வீகச் சிந்தனையே மனோபாவம் ஆகும். " உடம்பினை முன்னம் இழுக் கென்றிருந்தேன் , உடம்பினுள்ளே உட்பொருள் கண்டேன் உடம்பிளே உத்தமன் கோயில் கொண்டான் உடம்பினில் இருந்து யான் ஓம்புகின்றேனே" என்கிறது திருமந்திரப் பாடல் இறைவனை மனத்தில் நினைப்போம், மனோபாவமே எளிய வழிபாடு ஆகும், இந்த புனிதம் நிறைந்த நிலை மனோபாவம் என்பது இதன் மூலமாக மகேஸ்வரனைத் தரிசிக்கலாம், மாசற்ற கொள்கை மனத்தின் அடைந்தக்கால் ஈசனை காட்டும் உடம்பு. ஒளவை கூற்று. நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்டவன் என்கிறது பெரிய புராணம் மனோபாவங்களில் ஈசனை காணலாம் என்பது ஆன்றோர் அருள் வாக்கு மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்கிற தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. மன் ஒடுங்கினால் ஈசன் அருள் கிடைக்கும், இனி பிறவா நிலை கிட்டும் என்பது உறுதி. எனவே மனத்தினை ஒருங்கினைத்து தெய்வீக மனோபாவத்தினை வளர்த்து பிறவி பெருங்கடல் நீந்துவோம். நன்றி: அமைதி ஆன்மீகம் மேலும் பல ஆன்மீக தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

புதன், 18 பிப்ரவரி, 2015


எப்போதும் ஜெயிக்க சில டிப்ஸ்:- 1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள். 2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள்எவ்வளவு சுவையாக இருந்தாலும்உண்ணாதீர்கள். 3. உங்களுக்கு என்ன வயதானாலும்பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும்பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள். 4. வருமானத்திற்கான வழி மிகவும்முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள். 5. முடிந்தவரை கடன்களைக்கட்டி விடுங்கள். வேண்டாதசெலவுகளை நிறுத்தி விடுங்கள். 6. விடியும் முன்னால்எழுந்து விடுங்கள். ஒருநாளின்அலுவல்களை முன்கூட்டியே திட்டமிடுங்கள். 7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள்சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக்குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள். 8. எக்காரணம் கொண்டும்காலை உணவைத் தவிர்க்காதீர்கள். 9. நிற்கையில் நேராக நில்லுங்கள்.பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். 10. புன்னகை முகமும் இதமான பேச்சும்உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும். 11. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்லுங்கள். 12.சிறு குறிப்போ, கடிதமோ,கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள். 13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள். 14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள். 15. மற்றவர்களின் தவறுகளை மன்னியுங்கள். கசப்பான சம்பவங்களை திரும்ப திரும்ப நினைத்து அசைபோடவேண்டாம். 16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும். தேவையின்றி மற்றவர்களிடம் எதையும் பகிர வேண்டாம். 17. குடும்பம், தொழில் என்கிற எல்லையைக்கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள். 18. மாதம் ஒரு முறையாவது உங்கள்தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள். 19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள். 20. முடிந்த அளவு அடுத்தவர்க்கு உதவிடுங்கள். 21. சகிப்புத்தன்மை, பொறுமையை வளர்த்துக்கொள்ளுங்கள். ~Leaders never stop learning

மஹா சிவராத்திரி!!!


மஹா சிவராத்திரி!!! (17-02-2015) பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகின்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சிவபெருமான் ஆனந்த தாண்டவக் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். மகா சிவராத்திரியன்று கோயில் நாள் முழுவதும் திறந்திருக்கும். அன்று நடராஜருக்கு தினமும் நடக்கும் ஆறுகால பூஜைகளுடன் இரவில் 4 கால சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. ஒவ்வொரு கால பூஜைக்கு முன்னால் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து வேதபாராயணங்கள், திருமுறை பாராயணங்கள் பாடப்படும். காலை முதல் ருத்ரயாகம் உள்ளிட்ட சிறப்பு யாகங்கள் நடத்தப்படுகின்றன. சிவராத்திரியன்று காலை 6 மணிக்கு திறக்கப்படும் இக்கோயில் மறுநாள் மதியம் உச்சிக்காலம் வரை திறந்திருக்கும். மாலையில் பாட்டும், பரதமும் கோயிலில் களைகட்டும். சிவராத்திரியன்று தான் புகழ் பெற்ற நாட்டியாஞ்சலி விழா துவங்குகிறது. விடிய விடிய ஆடல் கலைஞர்கள் நாட்டியமாடி தங்களது நாட்டிய கலையை இறைவனுக்கு சமர்ப்பிக்கின்றனர். இரவில் கோயில் இரண்டாவது வெளி பிரகாரத்தில் விவேகானந்தர் பேரவை சார்பில் லட்சதீபம் ஏற்றப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் தீபங்களை ஏற்றுவார்கள். லட்ச தீபங்களின் ஒளியில் நடராஜர் கோயில் வளாகம் ஜொலிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இரவு முழுவதும் நடக்கும் 4 கால பூஜையின் போது ஒவ்வொரு கால பூஜை முடிந்தவுடன் பக்தர்கள் 4 வீதிகளிலும் வலம் வருவார்கள். சிவதரிசனத்திற்கு லிங்கோத்பவ காலம் மிக மிக உகந்தது. மகா சிவராத்திரியன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1.00 மணி வரை உள்ள நேரமே லிங்கோத்பவ காலமாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்த நேரத்தில் தான் சிவன் ஜோதிலிங்கமாக தோன்றிய நேரமாக கருதப்படுகிறது. இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் கூட இந்த லிங்கோத்பவ காலம் வரையிலாவது விழித்திருந்து வழிபாடு செய்தால் நல்லது. மகாசிவராத்திரியன்று கண் விழித்து நான்கு கால பூஜைகளையும் காண்பது சிறப்பு. அதில் 3வது காலமான லிங்கோத்பவர் காலத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பு. மகாசிவராத்திரியன்று முறையாக விரதம் இருந்து, இரவு முழுவதும் கண்விழித்து இறைவனின் நாமத்தை சொல்லி வழிபடுவதால் அளவற்ற நன்மை கிடைக்கும். சிவராத்திரி வழிபாட்டினால் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், நல்ல மக்கட்பேறு பெறலாம். தீரா நோய்கள் நீங்கும். முடிவாக இனிப் பிறவா தன்மை பெறலாம் என்பது முன்னோர்கள் கூற்று. சிவராத்திரி விரதத்தால் நமது புலன்களை வென்று மனதை அடங்கி நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம் பெறலாம் என்பதில் ஐயமில்லை

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

ஐந்துக்கு இரண்டு பழுதில்லை


ஐந்துக்கு இரண்டு பழுதில்லை சைவப் பெருங்கடியினருக்கு மகா மந்திரமாக விளங்குவதும் சைவ மதத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான சிவ பஞ்சாட்சரம் எனப்படும் " நமசிவாய" எனும் திருவைந்தெழுத்தாகும், " நமசிவாய" என்பதைத் தூல பஞ்சாட்சரம் எனவும் சிவாய நம எனபதை சூக்கும பஞ்சாட்சரம் எனவும் சிவாய நம என்பதை காரண பஞ்சாட்சரம் எனவும் " ஓம் சிவாய நம " என்பதை மகா காரண பஞ்சாட்சரமாகிய முக்தி பஞ்சாட்சரம் ஆகவும் கூறுவர், சிவ ஓம் சிவ என்பதை மகா பஞ்சாட்சரம் எனவும் இந்த பஞ்சாட்சரம் மந்திரமாக விளங்குவதை இறைவனது திருநாமமாகவும் விளங்குவதை: காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே" ---- ஞான சம்பந்தர் " நமசிவாயவே ஞானமும் கல்வியும் " என்பார் அப்பர் சுவாமிகள் " உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே - என்பார் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆன அஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆன அஞ்செழுத்துளே ஆயான மூவரும் ஆன அஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும் என்பார் சித்தர் சிவவாக்கியர் " நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்று மாணிக்க வாசகப் பெருமான் திருவாசகத்தில் சிவபுராணத்தில் கூறியுள்ளார், அப்பர் பெருமானை கொதிக்கும் எண்ணெய்யில் அழுத்திய பொழுதும், யானையினை ஏவியபொழுதும், ஒரு பெரும் கல்லோடு சேர்த்து கட்டி கடலில் அழுத்திய பொழுதும் அவரை காப்பாற்றியது ஐந்து எழுத்து மந்திரமாகிய " நமச்சிவாயவே ஆகும். இதைப் போல பல்வேறு மகான்களின் வாழ்க்கையிலும் இவ்வாறு நிகழ்ந்துள்ளது. "ஐந்துக்கு இரண்டு பழுதில்லை " என்பார்கள். அதாவது ஐந்து என்பது மெய் , வாய் , கண், மூக்கு செவி என்னும் ஐம்புலங்களாம், இவற்றிலல் கண் வாய் என்னும் புலன்கள் இரண்டாகும். இந்த இரண்டையும் பழுதில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் நாம் பார்க்கும் பொழுதும் பேசும் பொழுதும், பழுது ஏற்படும் போல் அறிந்தால் மூடிக்கொள்ள வேண்டும். அதற்காகவே கண்ணுக்கு இமைையும், வாய்க்கு உதடுகளையும் இறைவன் வழங்கியிருக்கிறார், இதற்கு தான் " ஐந்துக்கு இரண்டு பழுதில்லை" என்பார்கள். நமசிவாய என்ற இம்மந்திரத்தின் உயர்வை யசூர் வேதமும், திராவிட வேதமாகிய (சைவ) திருமுறைகளும் போற்றி புகழ்கின்றன, சைவ சித்தாந்த சாஸ்திரங்களான சிவஞான சித்தியார், உண்மை விளக்கம் முதலிய நூல்களும் பஞ்சாட்சரத்தின் பொருளை விளக்கி கூறுகின்றன. நடராஜ பெருமானின் திரு உருவமே பஞ்சாட்சரத்தை விளக்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. சிவபெருமானின் எழுத்து வடிவினன் எப்படி என்றால்? திரு வடியில் --- " ந" உதிரத்தில் ---- " ம" தோளில் ----- "சி" முகத்தில் ------ " வா" முடியில் ----- " ய" தூல பஞ்சாட்சரமாகிய " நமசிவாய " என்பதை உலகியல் வாழ்வில் பட்டுள்ள நம் போன்றவர்கள் உபதேச முறையில் தக்க குருவிடம் கேட்டு ஓத வேண்டும், தக்க குருவைத் தேடலும் குருமுகமாக உபதேசம் பெறுதலும் கடினம் என்று நினைத்து நம்மில் பலர் பஞ்சாட்சரத்தை தினமும் ஓதுவதில்லை. மூர்த்தி, தலம், தீர்த்தம், முறையாக தொடங்கினால் சற்குருவும் தானாகவே வருவார், திருமூலர் பெருமானும் தாயுமான சுவாமிகளும் கூறுவர், இது வரையில் பஞ்சாட்சரத்திலும் உயிரான இரண்டு எழுத்தான "சிவ" என்ற மந்திரச் சொல்லை நாம் அடிக்கடி சொல்லலாம், சிவ என்பது மகாகாரண பஞ்சாட்சரம் " சி" என்பது மகாமறு. இது பெருவெழுத்து என்றும் பேசா எழுத்து என்றும் வழங்கும், வா என்றால் அருள் என்றும், பொருள். அதாவது "சி" சிவம் " வ" அருள். " ய" உயிர் " ந" மறைப்பாற்றல் , "ம" மலங்கள் என்றும் கூறுவார்கள், இதில் சிவபெமானின் அருள் என்பதே சிவா என்பது ஆகும். இதைப் போலவே ஸ்ரீராமனும் அவர்நாமமும் ஒன்றே தான், ஓம் நமோ நாராயணா என்பதில் உள்ள " ரா" என்ற அட்சரத்தையும் , பஞ்சாட்சரமான " நமசிவாய" என்பதில் உள்ள "ம" என்ற எழுத்தையும் சேர்த்து "ராம" என்றானது என்பர், நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே "ராம" என்றிரண்டெழுத்தினால்! ---- என்பார் கம்ப இராமயணத்தில் கம்பர் பாலிலிருந்து தயிர், தயிரிலிருந்து மோர், மோரிலிருந்து வெண்ணெய் வெண்ணெய்யிலிருந்து நெய் ஆகிறது, அதில் பால், தயிர், வெண்ணெய் மூன்றும் மறைந்து மோர், நெய் இரண்டும் தான் மிஞ்சுகின்றன. அதுபோலவே பஞ்சாட்சரமாகிய ஐந்தெழுத்தைக் கூற முடியாவிட்டால் சிவா என்ற இரண்டு எழுத்தையாவது கூறி அ(சி)வன் அருளை பெற முயற்சிக்கலாம் அல்லவா?, ஸ்ரீ சிவபெருமானும் அவரின் திருநாமமும் ஒன்றே ஆகும்,, ஆகவேதான் சிவ சிவ என்கிலர் தீவினையாளர் " சிவ சிவ' என்றிட தீவினை மாளும், " சிவசிவ என்றிடத்தே வருமாவர் - சிவசிவ என்ன சிவ கதி தானே என்று திருமூலர் திருமந்திரத்தில் கூறுகிறார். ஆகவே இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தான் " ஐந்துக்கு இரண்டு பழுதில்லை" என்ற பழமொழி உருவானது. நன்றி: அமைதி தரும் ஆன்மீகம் மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

திங்கள், 16 பிப்ரவரி, 2015

ஆத்ம தண்டனை


ஆத்ம தண்டனை அயோத்தியில் ஸ்ரீராமபிரான் தன் நாட்டு மக்களின் மனநிலை அறிய விரும்பினார், ஆகவே ஒரு நாள் அவர் அரசகோலகளின்றி சாதாரண மனிதனைப் போல தம்பி லட்சுமணனையும் அழைத்துக் கொண்டு ஊரை வலம் வந்து கொண்டிருந்தார், அவரின் மனம் தொட்ட காட்சியினை கண்டார். பசுமை நிறைந்த வனத்தின் ஒரத்தில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அங்கே பல நாடுகள் கடந்து வந்த வெளியூரைச் சேர்ந்த துறவி ஒருவர் புதிதாக வந்திருந்தார், துறவி ஆற்றில் நன்றாக அமிழ்ந்து ஸ்நானம் செய்தார், ஆசார - அனுஷ்டானங்களை முடித்து பிறகு பையில் இருந்து சமித்துக்களை எடுத்து தீ வளர்த்தார். இவர் ஹோமம் செய்யப் போகிறார் என்று நினைத்த ராமபிரானுக்கு மறுபட்ட செயல் நடந்தது. அந்த துறவி இரண்டு பாத்திரங்களை எடுத்து அவற்றில் நீரை நிறைத்து மற்றொன்றில் மாவைப் போட்டு நீரைத் தெளித்து பிசைந்து அந்த மாவினால் ஆறு ரொட்டிகளைச் செய்தார். முதல் இரண்டு ரொட்டியில் நெய்யைத்தடவியும், இரண்டில் தேனையும் தடவியும், மீதி இரண்டில் ஊறுகாையைத் தடவியும் தீயில் வாட்டினார், பிறகு கரையில் அமர்ந்து ஜபம் செய்தார், சிறிது நேரம் கழித்து கண்விழித்தார், துறவி ரொட்டி தட்டை எடுத்தார், அந்த நேரத்தில் அவ்வழியாக ஓர் ஊனமுற்றவர் சென்று கொண்டிருந்தார், துறவி அவரை அழைத்து ஊறுகாய் தடவிய இரண்டு ரொட்டிகளைக் கொடுத்தார், அடுத்த நான்கு ரொட்டிகளில் தேன் தடவிய இரண்டு ரொட்டிகளை எடுத்தார், அப்போது அவ்வழியாக வந்த சிறுமிக்கு கொடுத்தார், அடுத்து நெய் தடவியதை எடுத்தார், ஆற்றில் மீன்களுக்கு இரண்டு ரொட்டிகளை கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளிப் போட்டுவிட்டு மூட்டையை பழையபடியே கட்டி வைத்துவிட்டு அடுப்பில் இருந்த சாம்பலை எடுத்து தண்ணீரில் கரைத்து மடமடவென்று அருந்திவிட்டு அந்த கிண்ணத்தை பையில் வைத்துவிட்டு யாத்திரைக்கு புறப்பட்டார் துறவி. இந்த காட்சியை கண்ட ஸ்ரீராமபிரான் ஆச்சரியப்பட்டு, விபரம் புரியாமல் அவரை நெருங்கி " சுவாமி நீங்கள் செய்த மூன்று வகையான ஆறு ரொட்டிகளையும் மூன்று விதமானத் தானம் செய்து விட்டீர்கள், பிறகு அடுப்பு சாம்பலை நீரில் கரைத்து அருந்திவிட்டு பயணம் செய்யப் புறப்பட்டுவிட்டீர்கள், நீங்கள் ஏன்இவ்வாறு செய்தீர்கள் என்று புரியவில்லை? விளக்கம் தருக என வேண்டினார், " ஆமாம் அப்பா, நான் ஸ்நானம் செய்த பின் ஜபம் செய்யும் போது இப்படி ஓடியது இரண்டு ரொட்டியைத் தேன் தடவியும், இரண்டை நெய்த் தடவியும், சாப்பிட வேண்டும் என்று மனம் விரும்பியது, அதை திருப்திபடுத்தவே அந்த ரொட்டிகளை செய்தேன்,என்றார், துறவி, பிறகு ஏன் சுவாமி நீங்கள் அவற்றை உட்கொள்ளவில்லை? என்று ராமர் கேட்டார், துறவியாகிய நான் எல்லா புலன்களையும் அடக்கிவிட்டேன் ஆனால் மனதை மட்டும் வெல்ல சிறிது சிரமப்பட்டேன், அதன் விளைவாகவே ரொட்டி செய்தேன் மனதை சமாதனப்படுத்திவிட்டேன் உடனே .............. " சாம்பலாகப் (மண்ணாக) போகும் இந்த சரீரத்திற்குள் இருந்து கொண்டு உடன் பிறந்தே கொல்லும் வியாதியைப் போல நான் கூறுவதை கேட்காமல் என் பாழ் மனமே, இன்று உனக்கு இந்தச சாம்பல்தான் ஆகாரம் என்று மனத்திற்கு தண்டனை அளித்தேன், என்று விளக்கம் கூறினார், சலனப்படும் மனதை அடக்கினால் ஆசை நீங்கப் பெறும், என்பதை உணராலாம். பற்று நீக்கின் தானம் வளரும், ஆத்மா சுகப்படும்.நன்றி: படித்தததில் பிடித்தது அமைதி தரும் ஆன்மீகம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

அவனவன் தலையெழுத்து ........... பிரம்மனின் விளக்கம்


அவனவன் தலையெழுத்து ........... பிரம்மனின் விளக்கம் நாரதர் பூலோகத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்தாராம், ஒரு மண்டை ஓடு தெண்பட்டதை எடுத்து அதை அதன் மேல் உள்ள எழுதியிருந்ததை படித்தார், " பிறந்தது முதல் வறுமை வாட்டும், சில ஆண்டுகள் சிறைவாசம், கடைசியில் கடலில் கோர மரணம், அதன் பின் இவனுக்கு யோகம், " என்றதை அறிந்து நாரதருக்கு ஒன்றும் புரியவில்ைல, இறந்த பின் ஒருவனுக்கு என்ன யோகம் வேண்டிக்கிடக்கிறது ? பிரம்மதேவர் தவறுதலாக அப்படி எழுதி விட்டார் ேபால் இருக்கிறது என்று நினைத்துக் ெகாண்டு நேராக அவர் பிரம்ம தேவரின் எதிரில் போய் நின்றார், பின் அவரிடம் " இந்த மண்ைட ஓட்டை முதலி் உமது கரத்தில் பிடியுங்கள்" அந்த ஓட்டில் என்ன எழுதியிருக்கிறது என்று படியுங்கள் என்றார், உடனே அவர் " இதில் என்ன எழுதியிருக்கிறது ? சரியாகத்தானே உள்ளது இது பற்றி உங்களுக்ெகன்ன சந்தேகம் என்றாராம். அதற்கு நாரதர் " கடலில் கோர மரணம் அடைந்த பின் அவனுக்கு யோகம் என்று எழுதி இருக்கிறீர்களே அந்த யோகத்தினால் அவனுக்கு என்ன சுகம் கிடைக்கப் போகிறது? " என்று வினவினார், உடனே பிரம்மா விளக்கம் கூறினார், " அதுதான் இதில் உள்ள விசேசம் , மண்ைட ஓட்டை வேறு யாரும் இங்கு எடுத்து வர முடியாது, அப்படி வந்தாலும், நான் அதை என் காரத்தால் வாங்கி இருக்க மாட்டேன், ஆனால் மண்டை ஓடு எனக்கே திரும்பி வந்து என் கரத்தால் யான்அதை வாங்கி விட்டதால் இது இனி மண்டை ஓடு அல்ல! " பிரமம கபாலம்" ஆகிவிட்டது. வாழ் நாள் முழுவதும் கடமைக்காக பாடுபட்ட காரணத்தால் இவன் இனி பிறவி எடுத்து துன்பப் படக்கூடாது என்று ஒரு யோகம் கிடைக்கக் கூடாதா? " இந்த மனிதனுக்கு இனி பிறவி கிடையாது. இதைவிட இந்த மனிதனுக்கு வேறு என்ன யோகம் வேண்டும்? ........ " பிரம்மனின் இந்த விளக்கத்தைக் ேகட்டு சிந்தித்தப்படியே நடந்தார் நாரதர், நன்றி; படித்ததில் பிடித்தது ..... அமைதி தரும் ஆன்மீகம் மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

சனி, 14 பிப்ரவரி, 2015

மகா சிவராத்திரி வேடனின் மனதை மாற்றிய சிவன்


மகா சிவராத்திரி வேடனின் மனதை மாற்றிய சிவன் சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்களில் சிறப்புப் பெற்றதாக சிவராத்திரி விரதம் போற்றப்படுகிறது. சிவராத்திரி புராணமானது பட்ச, மாத, வருஷ சிவராத்திரி தினங்கள் என்று பலவிதமான சிவராத்திரி விரதங்கள் விளங்குகின்றது. இவற்றில் தலையாயது மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தியில் இரவில் கொண்டப்படும் சிவராத்திரி விரதமேயாகும், இதனை மகா சிவராத்திரி என்பர். சிவராத்திரி என்னும் விரத காலம் உயிரையும், உடலையும், மனதையும் தூய்மைப்படுத்தி மேன்மை தரும் சாதனமாகும், இதில் உண்பது உறங்குவது, மனதை அலைபாய விடுவது, கேளிக்கைகளில் ஈடுபடுவது ஆகியவை விலக்கப்பட்டுள்ளன. மனதை ஒருமுகப்படுத்தி உறக்கத்தை விடுத்து சிவபெருமானை அர்ச்சிக்க வேண்டும். ஆடிப்பாடுதல், தியானம் செய்தல், அபிசேக ஆராதனை அர்ச்சனை செய்தல், வேதம் ஓதுதல், புராணங்களைப் படித்தல், கேட்டல், சிவலாயங்களுக்கு சென்று தரிசனம் செய்தல், என்று சமய நூல்கள் கூறும் புண்ணிச் செயல்களைச் செய்தல் வேண்டும், சிவபொருமானின் பெருமைகளை விளக்கும் நாடங்களை பார்ப்பதும், கதைப் பாடல்களை கேட்கும் மரபும் தொன்றுதொட்டு இருக்கிறது. வேடனுக்கு மோட்சம் தந்த சிவன் வில்வ வன வேடன் என்பவனுக்கு சிவராத்திரி பலனை அளித்து மோட்சம் தருவதற்காக சிவபெருமான் வேடன் வேடம் பூண்டு பூலோகம் வருகிறார், காட்டில் வேட்டைக்கு மிருகங்கள் ஏதும் கிடைக்க விடாமல் வேடனுக்கும் சோதனையை ஏற்படுத்துகிறார் சிவபெருமான். வில்வ வன வேடனைப் படிப்படியாக மேன்மை படுத்துகிறார், சிவன். புலி வேடம் தாங்கி வேடனை வில்வ மரத்தின் மீது விரட்டுகிறார் சிவன். அந் நாள் இரவு முழுவதும் மரகத்தில் இருக்க புலி மூலம் மிரட்டி மரத்திலேயே இரவை கழிக்கும் சூழலுக்கு ஆளாக்கிறார் சிவனார். ஒரு கட்டத்தில் புலி மறைகிறது, அந்த இடத்தில் சிவலிங்கம் தோன்றுகிறது, அச்சமயம் இரவு முழுவதும் விழித்திருக்க அம்மரத்திலிருந்த வில்வ இலைகளை பிடிங்கி பிடிங்கி கீழே போட்டுக் கொண்டு தனது தூக்கத்திலிருந்து பாதுகாக்க இவ்வாறு செய்து இரவு பொழுதினை கழிக்கிறான் வேடன். இவ்வாறு இரவு நேரம் கழிந்து பகல் உதயமாகும் அதிகாலை வேளையில் வேடனைத்தேடி அவன் மனைவி மக்கள் காட்டுக்கு வருகின்றனர், வேடன் தன் தூக்கம் கலைய இரவில் நடக்கும் அர்த்த சாம பூசைகளை தன்னை அறியாமலேயே வில்வ இலையால் அர்ச்சித்தது கண்டு சிவன் சிவசக்தி ரூபமாய் அவர்களுக்கு காட்சி தந்து தன்னை அறிந்தோ அறியாமலோ இரவு முழுவதும் வில்வ இலையால் அர்ச்சித்து ஆராதனை செய்ததினை பலைனை வேடனுக்கு உணர்த்தி அவனுக்கு மோட்சம் கிடைக்க அருள் செய்தார், நன்றி : தி இந்து - ஆனந்த ஜோதி மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

தீபாராதனை


தீபாராதனை உலகம் முழுவதும் நிறைந்த இறைவனை ஆவாஹனம் செய்து வழிபடும் இடம் ஆலயம். ஆன்மா என்பது ஜோதி வடிவம் ஆகும், இதை எளிமையாக உணர்த்துவதுதான் ஆலங்களில் தீபாராதனை வழிபாடு நடக்கிறது. தீபாவளித் திருநாள், கருத்திகைத் திருநாள் என்று துவங்கி இல்லத்தில் தினமும் நாம் செய்யும் தீபாராதனை வரையில் தினமும் பூசை மற்றும் பண்டிகைகள் என்று அனைத்துமே தீபாராதனையில் சமர்ப்பணம் ஆகிவிடுகிறது. இதில் குறிப்பாக ஆலய தீபாராதனைகளில் ஒரு நீண்ட தத்துவமே அடங்கி உள்ளது. ஆலயத்தில் அலங்கரிக்கப்பட்ட மூர்த்திகளுக்கு முன்பு திரையிடப் படுகிறது. இறைவனின் உள்ளத்தில் உலக சிருஷ்டிசெய்யும் எண்ணத்தை இது தெரிவிக்கிறது. திரைக்கு உள்ளே முதலில் குருக்கள் பூஜையைத் தொடங்க மணியை அடிக்கிறார். எல்லையில்லா பிரம்மத்திடம் முதலில் ஒலி (ஓம்) பிறக்கிறது. மணி நாதத் தத்துவத்தை நினைவுபடுத்துகிறது. இது ஒரு காரணம் ,மற்றொன்று, உலகாயத வேலைகளில் மூழ்கியிருக்கும் மக்கள் மணியோசை கேட்டு தெய்வ சிந்தனையில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் மணி அடிக்கப் படுகிறது. பின்னர் திரை விலக்கி ஒரு தீபம் காட்டப்படுகிது, தமஸோமா ஜ்யோதிர்கமய"என்பது வேதவாக்கியம், இருளிலிருந்து ஒளிக்கு அழைத்து செல் என்பது இதன் பொருள். நம்மை மாயை என்ற அஞ்ஞான இருள் விலக்கி, ஞான ஒளி பிரகாசிக்க செய்ய வேண்டும் என்பதே தீபாராதனையின் தத்துவத்தின் முதல்படி, ஒரே பரம்பொருள் பல மூர்த்திகளாக விளங்கின்றன. அதைத்தான் "ஏகம் சத் - விப்ராபஹூதா வதந்தி " என்று வேதத்தில் கூறப்படுகிறது. எனவே ஈசனை எந்த உருவில் வணங்கினாலும் அது இறுதியில் ஒரு பரம்பொருளையே போய் சேரும் என்பதும் இதன் தத்துவக் கருத்தாகும். "ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க" - திருவாசகம் ஒன்றே! பல உருவே! அருவே! - அபிராமி அந்தாதி " ஏக நானேனெவ்வுயிர்களுந்தானே யென்பதும் அன்பினுக்கெளியவன்" - திரு விளையாடல் புராணம் பின்னர் ஐந்து தட்டுகள் உள்ள தீபம் காட்டப்படுகின்றன. சிவபெருமானின் ஐந்து முகங்களையும், அதிலிருந்து பஞ்ச பூதங்கள் படைக்கப்படுவதையும் உணர்த்துகின்றன. " பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி! நீரிடை நான்காய் திகழந்தாய் போற்றி! தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி! - திருவாசகம் திட விசும்பு, எரி ,வளி, நீர், நிலம், இவை மிகைப்படா பொருள் முழுவதுமாய் அவை அவைதோறும் உடல் மிசை உயிரேனக் காத்து எங்கும் பரந்துளன் - நம்மாழ்வார் (திருவாய்மொழி) முதன் முதல் பிரம்ம ஒசையாகி ஓங்காரமாய் இருந்து பிறகு ஒளியாக பல தீபமாகி ஆத்மாக்களாக மாறி புல்-பூண்டு ெசெடி - தாவரம் முதல் தேவர்கள் வரையில் பலவாக மாறியது, ஒரே பரம் பொருளிலிருந்து அனைத்தும் தோன்றியது என்பதையே அடுக்கு ஆரத்தியில்தீபங்கள் பல தட்டுக்களில் இருந்தாலும் அவை உருவமற்ற ஒரே பரம்பொருளின் வடிவத்தை குறிப்பிடுகிறது. அடுத்து கும்ப ஆர்த்தி கும்பம் உலகத்தையும் அதன் மீதுள்ள தீபம் அதை இயக்கும் சக்தியையும் குறிக்கிறது. "(அண்டம்) சிறியவாகப் பெரியோன்" - திருவாசகம் "அண்டம் ஒர் அணுவும் பெருமை கொண்டு" - திருவிசைப்பா அண்டங்கள் எல்லாம் அணுவாக அணுக்களெல்லாம் அண்டங்களாகப் பெரிதாய் சிறிதாயினானும் " திருவிளையாடல் புராணம் " வெளிப்படையாக இல்லாத உருவம் கொண்ட நான் உலகமெங்கும் பரவியிருக்கிறேன் , சகல ஜீவ கோடிகளும் என்னுள் அடங்கியுள்ளன " - கீதை " உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே " - கம்பராமாயணம் உலகம் முழுவதையும் படைத்து காத்து அழிக்கும் விளையாட்டே என்று செய்யும் தலைவரின் திருவடிகளுக்கே நாங்கள் அடைக்கலம் என்கிறது. அடுத்தபடி நாக தீபம் ஊர்வனவற்றையும் , மயுர தீபம், பறவை இனத்தையும், குக்குட தீபம் ரிஷப தீபம், கஜ தீபம் கால்நடை இனத்தையும், புருஷா மிருக தீபம் மிருகம் கலந்த நரசிம்ம ரூபத்தையும் நினைபடுத்தவும், பருஷதீபம் பிறவியின் பெருமையை: "உடம்பினை பெற்றப் பயனாவது எல்லாம் உடம்பினில் உத்தமனைக் காண்" - ஒளவை குறள் புல்லாகி பூண்டாய் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகி பறவையாய் பாம்பாகிக் கல்லாய் மனிதாராய் பேயாய் கணங்களாய் வல் அசுராகி முனிவாராய் தேவராய் செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் " - திருவாசகம் உயிரின் வளர்ச்சிக்கு இறைவன் அடிப்படை என்பதை எல்லா உயிர்களிலும் ஆத்மா சுடர் உள்ளது என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது. இவைகள் உருவத்தில் வேறுபட்டிருந்தாலும் பஞ்ச பூதங்களுக்கு உட்பட்டு இயங்குகின்றன என்பதை உணர்த்தும் வகையில் அவற்றின் மீது பிரடையும் அதில் ஐந்து தீபங்களும் அமைந்துள்ளன. காற்றில் பெருவலி இருவராகி மண்ணகத்து ஐவர் நீரில் நால்வர், தீயதனில் மூவர், விண்ணகத்தில் ஒருவர் - அப்பர் இப்படியாக ஒரே பரம்பொருளிலிருந்து தோன்றி ஆத்மா பல நிலைகளைக் கடந்து சிந்தனையால் இறைவனை அறிந்து கொள்கிறது. " சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்" - திருவாசகம் இந்த ஆன்மா ஒரே ஆர்த்தியாக காட்டப்பட்டு அதன் பக்குவ நிலையை உணர்த்தும் பொருட்டு அத்ன மீது விபூதி தெளிக்கப்படுகிறது. " ஈறிலாதவன் ஈசன் ஒருவனே" - அப்பர் , விபூதி என்பது நமது நிலையை உயர்த்தும் நிலையை சுந்தரமாவது நீறு என்று சம்பந்தர் கூற்றை அறியலாம் அடுத்தபடியாக ஏழு கிளைகளையுடைய கற்பூர ஆர்த்தி காட்டப்படுகிறது, மனிதன் ஏழு நிலையைக் கடந்தவன் என்பதை எடுத்துக் காட்டுகிறது, இறை அருள் என்ற விபூதி கைவர பெற்ற உயிர் பத்து வித குணங்களைக் கொள்கிது. இவை : 1, தத்துவ ரூபம், 2,த்ததுதரிசனம், 3,தத்துவ சக்தி, 4. ஆன்மா ரூபம், 5. ஆம்மதரிசனம், 6. ஆன்சுத்தி, 7. சிவரூபம், 8.சிவதரிசனம் 9. சிவயோகம், 10. சிவபோகம், என்பன இதைக் குறிக்கும் வகையில் இரண்டு மூன்று நான்கு, ஐந்து ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து , பதினொன்று என்று வரிசையாக தீபங்களாக காட்டப்படுகின்றன. " எங்கும் நிறைந்தே இருக்கின்ற சோதியை அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய்" குதம்பை சித்தர் பக்குவம் அடைந்த ஜீவன் இறைவன் சொரூப நிலையைப் பெறுவதால் இறை வடிவமாகப் போற்றப்படுகிறது. எட்டுத்திசைகளிலும் உள்ளவர்கள் போற்றுவதைக் குறிக்கும் வகையில் அஷ்டமங்கலம் காட்டப் படுகிறது. " எல்லாம் உனக்கே" என்று இறைவனிடம் கூறி தன்னையே இறைவனிடம் அர்ப்பணிப்பதன் சின்னமே பூசையின் முடிவில் காட்டப்படும் கற்பூர தீபம். பூசை முறையில் இந்த தியான பாவனை உச்சகட்டமாகும். தியானத்தின் சின்னமாக மற்ற வழிபாடுகளில் ஏதாவது ஒன்று பிரசாதமாக மிஞ்சும், ஆனால் கற்பூரமம் எரிந்து தீர்ந்தால் அதில் ஒன்றும் மிஞ்சாது. எல்லாவற்றையும் சமர்ப்பித்துக் கொள்வதையும், மேலான தியாகத்தையும் விளக்குகின்ற சிறந்த எடுத்துக் காடடாக விளங்குகிறது. " தீதனையாக் கற்பூர தீபமென நான் அகண்ட சோதியுடன் ஒன்றித்துத் துரிசறுப்ப தெந்நாளோ" தாயுமானவர் , ஆகவே ஆலய தீபாராதனையில் இத்தனை தத்துவங்கள் அடங்கியுள்ளன, என்பதை அறிவோம், திருச்சிற்றம்பலம் நன்றி: அமைதிதரும் ஆன்மீகம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

திங்கள், 9 பிப்ரவரி, 2015

அணிகலன்களின் தத்துவங்கள்


அணிகலன்களின் தத்துவங்கள் சாதாரணமாக நாம் அணியும் "அணிகலன்" களில் ஆண்டவனை அறியும் - அடையும் வழிகளைச் சொன்னவர்கள் நமது ஆன்றோர்கள். அணிகளும், அணி கலன்களும் ஆடைகளும் புருசனாம் ஸ்ரீ பகவானை நினைக்க வைக்கும் நினைவு முத்திரைகள் ஆகும். அணிகலன்கள் கூறும் அர்த்தமுள்ள தத்துவங்களை ஒவ்வொன்றாக ஆய்ந்து அறிவோமானால் அது பல தத்துவங்களை நமக்கு புலப்படுத்தும். மலர்கள்: மலர்களை முதலில் இறைவனுக்கு சமர்ப்பணம் செய்துதான் பிறகு நாம் அணியவேண்டும், மலர்களைப் போல மானிடனும் பலப் பருவங்களை கடந்து இளமைப் பருவம் அடைகிறான், முடி நரைப்பது என்ற செயல் மானிடர்களக்கு மட்டுமே உண்டு, நரை வந்து விட்டால் துன்பமும் வரத்தொடங்கிவிடும். ஆகவே மலர் வாடும் முன் சமர்ப்பணம் செய்து விடுவது போலவே, இளமை முடிந்து முதுமைத் துவக்கத்தின் முத்திரையாம் நரை, நரை வரும் முன்பே மாந்தர்களே உள்ளம் என்ற மலரைப் பகவானுக்கு சமர்ப்பணம் செய்யுங்கள் என மலர்த் தத்துவம் கூறுகிறது. திலகம்: நமது பாரத தேசத்து பெண்களின் அணிகலன்களுக்கு எல்லாம் அழகுகூட்டுவது குங்குமம் ஆகும், அதனால்தான் குழந்தைப் பருவத்தில் நெற்றியில் அஞ்சனத் திலகமும், பின் பருவம் மடைந்தபின் சாந்துப் பொட்டும், திருமணம் ஆனதும் மஞ்சள் குங்குமத் திலகமும் அணியப்படுகிறது. திலகம் இட்டுக் கொள்வதால் நெற்றியில் வசிப்பதாக வேதங்கள் சொன்ன அலட்சுமியினால் ஏற்படக்கூடிய தீமைகள் விலகி நீண்ட ஆயுளும் சகல பாக்யங்களும் பெருகும். சுமங்கலி பெண்கள் நெற்றியில் குங்குமத்திலகமிட்டுப் பின்னர் தலையில் வகிடு தொடங்கும் பகுதியில் திலகம் அணிகின்றனர் அதுவே உச்சித் திலகம்.பிரமதேவனின் எழுத்தை அழிக்கும் திறன் கற்புத்தீயின் வடிவமான குங்குமத் திலகத்திற்கு உண்டு. சுமங்கலிப் பெண்கள் நிச்சயம் குங்குமத் திலகம் அணிய வேண்டும். திருமண்: ஸ்ரீ வைணவர்கள் அணியும் திருமண்ணை சரீரத்தின் பன்னிரு உறுப்புகளில் அணியும் போது ஸ்ரீமன் நாராயணனின் பன்னிரு திருநாமங்களைக் கூறியவாறு அணிவதனால் திருமண் அணிந்த நிலையை திருநாமம் என்றே அன்புடன் மனித குலம் அழைக்கிறது. திரு என்றால் ஸ்ரீமகா விஷ்ணுவையும் மண் என்றால் பூமியில் சேரப் போகும் சரீரத்தையும் குறிக்கும், நாம் ஜீவன் அந்தர்யாமியான ஸ்ரீ பகவானின் ஒர்அம்சம். தினமும் ஸ்ரீ பகவானின் திருநாமங்களைக் கூறியவாறு திருமண் அணிந்துகொள்ளவேண்டும். இல்லையேல் அரிதான மானிடப்பிறவி வீணாகும் எனபதை கூறுகிறது திருமண் தத்துவம். திரு நீறு: சரீரத்தின் பதினான்கு இடங்களில் திருநீறு அணிந்து கொள்ள வேண்டும், திருநீற்றை ஒருவருக்கு தரும்போதும், நாம் அணியும் போதும் சிவபொருமானுடைய ஐந்தெழுத்தை "நமசிவாய" என்னும் மந்திரத்தை ஓதுதல் வேண்டும். அதனால் திருநீற்றுக்கு பஞ்சாட்சரம் என்ற பெயரும் அமைந்தது. சிவனின் உருவமான ஜோதியின் மறு உருவமே திருநீறு, திருநீற்றை நெற்றியில் இட்டால் விஞ்ஞான, அஞ்ஞான மருத்துவ ரீதியாகவும் பற்பல பலன்கள் கூறப்படுகின்றன. " மனிதா உன் சரீரம் வாக்கு மனம் இம்மூன்றும் நிர்மலமாக , வெண்மையாக தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக திருநீறு அணிந்து கொள் என்கிறது திருநீற்றுத் தத்துவம். சந்தனம்: சந்தனம் இயற்கையான தாவரத்திலிருந்து கிடைப்பது. அதன் நறுமனம் மிக ரம்மியமானது. சந்தனம் போல் நறுமணம் போன்று நற்குணங்களைக் கொண்டவனாக இரு என்பதை விளக்கிறது சந்தனத்தத்துவம். தோடு: மாதர்கள் அணியும் ஆபரங்களுள் முக்கியமானது தோடு. " தோடுடைய செவியன்" என்று 1ஆம் திருமுறையில் திரு ஞானசம்பந்தர் தோடு அணியும் சக்தியையும், சக்தியை இடப்பாகமாக கொண்ட சிவனையும் சேர்த்துப் பாடியுள்ளது தோடு மாந்தர்களின் கூற்றுக்கு உதாரணமாக தத்துவத்தை காட்டுகிறது. " தேவா ரென்பர்தம் பாவையர்க் கன்று காதோலைப் பாவித்த தயவாளர்" - மதுரை கலம்பகம் 29ம் பாடல் சிவபொருமான் விஷத்தை உண்டு தேவமகளிரின் மாங்கல்யத்தை போன்ற காதோலையை காப்பாற்றிய தயாபரன் ஆனான் என்று குமரகுருபரர் கூறினார், பதிவிரதைகள் ஒருபோதும் தோடின்றி இருக்கக் கூடாது என்கிறது அருணா மோதினீ.எல்லா செல்வங்களைவிட சிறந்த செல்வம்செவிச் செல்வம் என்கிறார் வள்ளுவர், அந்த செவிச் செல்வத்தை உணரும் உறுப்பணியும் அணிகலமே தோடு என்பதாகும், குருநாதனின் ஞான மொழிகளுடன் ஸ்ரீ பகவானின் திரு நாமங்களும் ஒன்றிணைந்து நம் செவியில் என்றென்றும் ஒலிக்க வேண்டும் , அப்போது சாதாரண செவி திருமகள் வீற்றிருக்கும் செல்வச் செவி ஆகும். மூக்குத்தி: மூக்குத்தியதிலும் கல்வாழை விசிறி போன்ற மூக்குத்தி விசேஷச் சக்தி வாய்ந்தது. காஞ்சி காமாட்சி காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி, திருச்சானூர் அலமேலு, கன்னியகுமரி வாலையம்மன் இவ்வாறு எந்தத் தேவியரைத் தரிசனம் செய்தாலும் மூக்குத்தி இல்லாத அன்னையாக பார்க்கவே முடியாது. காரணம் தெய்வீக சுமங்கல ஆபரணங்களில் மூக்குத்தியும் மங்கல பொருள்களில் ஒன்று. சுவாசத்துடன் கலப்பது போல எல்லா நறுமணத்தையும் சுவாசம் செய்யும் போது ஸ்ரீபகவானுக்கு அர்ப்பணம் செய்வது போல நினைத்து விடு. இரு விழிப்பார்வைகளை நாசியில் செலுத்தி விடு. மனம் வாக்கு காயம் இம்மூன்றும் ஒருநிலைப்படுத்தி யோகம் செய் என்று மூக்குத்தி தத்துவம் கூறுகிறது. இக் கருத்தையே உட்கருத்துடன் கொண்டு செளந்தர்யலஹரி 61ஆம சுலோகத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் கூறியுள்ளார். கண் மை: " குரு க்ரு பாஞ்சல பாயோ மேரே பாயி" என்ற பாடலில் சகோதரா குருதேவரின் அருள் நோக்கு என்ற கண் மை யை நீ அணிந்து கொண்டால்தான் பிறவி பூரணம் ஆகும் , எல்லா இடங்களிலும்ஸ்ரீ ராமனின் வடிவம் தெரியும் என்கிறார் கபீர்தாசர். "கருப்பு வண்ணனாயினும் அஞ்ஞான இருளை போக்கும் சிறந்த ஞான தீபம் ஸ்ரீ கிருஷ்ணபிரான் என்கிறது ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம். பக்தி என்ற கண்மையை அணிந்த பின் அஞ்ஞானம் என்ற இருள் அகன்று நீக்கமற எங்கும் கண்ணனின் வடிவமே தெரியும் என்பதை " கண்ணுள் நீங்கா நெஞ்சுள்ளும் நீங்கவே" என்கிறார் நம்மாழ்வார். கண்மை கூறும் அரிய தத்துவம் " என்னை அணியும் போது இறைவனின் கருமை நீலத்திரு மேனியையும், அவர் தெய்வீக லீலைகளையும் நினைத்துக் கொண்டு அணிந்து கொள் அப்போதுதான் நமக்கு பிறவிப் பயன் கிட்டும். திருமாங்கல்ய நாண்: திருமணத்தில் முக்கியமானது திருமாங்கல்ய நாண் கட்டுவதுதான். அதைத்தான் மங்களசூத்திரம் தாலி, மாங்கல்ய சரடு என்று பலவகையான அழைப்பார்கள். திரு என்றால் திருமகளை நினைவுபடுத்தும், மாங்கல்யம் என்பது ஆத்மாவின் நாயகனான இறைவனை நினைவு படுத்தும். மா- என்றால் ஸ்ரீ மகாவிஷ்ணு ஆத்மா என்று பொருள் கலயம் என்றால் கலசம் - பாதுகாப்பு என்று பொருள். வடமொழியில் புருசன் என்றால் ஆத்மா என்று பொருள் , கணவன் தான் மனைவியினுடைய ஆத்மா என்பதால் தான் கணவனை புருசன் என்று அழைத்தார்கள். மாங்கல்யம் தந்த நாநே, மாங்கல்ய மந்திரத்தின் கருத்து - இதை உன் கழுத்தில் கட்டுகிறேன், செளபாக்கியவதியே நீ நூறு ஆண்டுகள் சுமங்கலியாக சுகமாக வாழ்ந்திருப்பாயாக என்பது தான் அதன் கருத்து. மூன்று முடிச்சு என்பது மூன்று குணங்களையும் கடந்து விடச் சொல்கிறது. மற்றொரு தத்துவம் " பெண்ணே உன் உடல் பொருள், ஆவி மூன்றுக்கும் நான் பொறுப்பேற்கிறேன்" என்று கணவன் கூறுவதாகக் கருத்து. பிறிதொரு தத்துவம் கணவன் பெரியோர்கள், தெய்வம் ஆகிய மூன்றுக்கும் கட்டுபட்டவன் ஆகஇருப்பான் என்பதற்கு நான் பொறுப்பு என்று கணவனே மூன்று முடிச்சு போட்டு உறுதி கூறுவதாக கருத்து. திருமாங்கல்ய சரடின் நிறம் மஞ்சளாக இருக்க வேண்டியதன் தத்துவம் - மஞ்சள் நிறம் தெய்வீக நிறம், மஞ்சள் கிழங்கு மாங்கல்ய சரடு உடன் இணைத்து திருமணம் செய்விப்பதும் உண்டு. தீவினை என்கிற கிருமிகளை அழிக்கம் சக்தியின் வடிவம் தான் மஞ்சள். ஆடைகள்: முடிவில்லாத சிவபிரானுக்கு திசைகளே ஆடைகள் ஆகும் என்கிறார் திருமூலர்,சிவபிரானார் திகம்பரமாக உள்ளார் என்று மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் சொல்கிறது. திக் - அம்பரம் - திசையாகிய ஆடை என்று பொருள் அத்திசைகள் பகலில் வெண்ணிறமாகவும், இரவில் கருநிறம் உடையதாகவும், அந்திப்பொழுதில் செந்நிறமடைந்து செவ்வாடையாகவும் சிவபெருானுக்கு அமைகிறது. என்கிறார் நான் மணிமாலையில் குமரகுருபரர் "ஆத்மாவிற்கு சரீரம் என்பது ஆடையைப் போன்றது என்றும் அவை நைந்து போன பின் ஆத்மா பதிய சரீரத்தை அடையும் என்றும் பகவத் கீதை அருளிகிறது. வளைகாப்புத் தத்துவம்: வளை என்றால் வட்டத்தையும் பாசம், பக்தி, சங்கு,அன்பு சக்கரம், சங்கம் போன்றவற்றையும் குறிக்கும், திருமணம் நடந்ததும், மணமக்களுக்கு கையில் காப்பு கட்டுவார்கள் பெண்ணுக்கு தற்காப்பு வேண்டும், அவளைக் காப்பேன் என்ற உத்தரவாதத்திற்காகவே கணவன் கையில் காப்பு கட்டப்படுகிறது. காப்பேன் என்ற உறுதியுடன் காப்புக் கட்டப்பெற்ற கணவன் அன்புடன் வாழ்க்கை நடத்தினார் என்பதற்கு அடையாளமாக அம்மங்கை தாய்மை அடைந்து விட்டால் ஒரு குறித்த காலத்தில் சுமங்கலிப் பெண்கள் பலரும் கூடி வளையல்களை அணிவிப்பார்கள், இந்த செயலில் ஒரு மிகப் பெரிய தத்துவக் கருத்தே அடங்கி இருக்கிறது. " பெண்ணே கணவனிடம் காட்டிய பாசத்தினால் உன்னை சுற்றி ஒரு வட்டம் நீயே இட்டுக் கொண்டாய், அதுவே தாய்மை ஆகும், வளைந்த நிலையில் உள்ள சங்கு சக்கர வடிவம் கொண்ட இந்த வளையல்களை தீர்க்க சுமங்கலியாக நாங்கள் உனக்கு வளையல் அணிவித்தல் என்ற காப்புச் செய்கிறோம். அந்த வளைகாப்புக்கு காரணமான ஸ்ரீமன் நாராயணனே உனக்கு பாதுகாப்பு என்று சுமங்கலிகள் வாழ்த்துவதைப் போலும் - பிறக்கப் போகும் குழந்தை ஆதியந்தம் இல்லா வளையல் வட்டம் போல் உனக்கு ஆதியந்தமில்லா பெரும் வழியைக் காட்ட ட்டும், என்று வளைகாப்புத் தத்துவம் சொல்கிறது. உன் கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று திருவாசகத்தில் கூறியுள்ளதை போல பெண்ணே உன் கையில் அடைக்கலமான வளையல் உனக்கு எதை நினைவூட்டுகிறது தெரியுமா? உன்னை நம்பிப் பிறக்கப் போகம் குழந்தையைக் காப்பாற்றுவாய் அது போல் வட்டமான இந்த புவியை இறைவன் காப்பாறகிறான், என்கிறது. வளைகாப்பு வளையல் உலகம் பூஜ்ய வடிவம் அதைப் படைத்த இறைவனும் பூஜ்ய வடிவம், பூஜ்யம் என்பது ஆதியந்தமற்றது. வளையல் பூஜ்யத்தின் வடிவம் அதுபோல தாய்மையானது இன்பமும் பற்றும் இல்லாத பரிபூரண அன்பு நிலையான பூஜ்ய ரூபமாகும், வளை - காப்பு - அன்பினால் கிடைத்த மேலான ஐஸ்வர்யம் - அன்புக்கு ஐந்து ஞானேந்திரியங்கள் வலது கை விரல்களிலும் அடங்கிவிடும் என்பது கருத்து. ஒட்டியாணம்: குழந்தையாகப் பிறந்தது முதல் அரைஞான் அணிவிப்பது ஆதி கால முதல் தொடரும் பழக்கம், தங்கத்தினால் வெள்ளியால் கருப்பு கயிற்றினால் இது அணியப்படுகிறது. யோகத்தில் இறங்கினால் தான் ஞானம் கிட்டும், ஞானம் கிடைத்தால்தான் பிறவித் தொடரிலிருந்து விடுதலை அடைய முடியும், யோகத்தின் முதல் படி அளவாக நடப்பது ஆகும். உணவில் உறக்கத்தில் உறவில் நடப்பதில் பேசுவதில் இப்படி எல்லா செயல்களிலும் அளவாக இருக்க வேண்டும் என்று ஸ்ரீமத் பகவத் கீதை அருளுகிறது. அறை என்றால் பாதி இடை, வயிறு என்று பொருள் தராசு முள்ளைப் போன்றது அரைஞாண் , சரீரம் பெருக்காது, மெலிந்து இருக்க வேண்டும் என்பதை அரைஞான் நினைவு படுத்தும் அளவுகோல் ஆகிறது. யோகப்பயிற்சி செய், சரீரத்தை பாதுகாத்திடு, மீண்டும் மனிதப் பிறவி கிடைப்பது அரிது என்கிறது இந்த அரைஞாண். கொலுசு: இன்று கொலுசு என்று அழைக்கப்படும் பாத அணியை கிண்கிணி என்று அன்று அழைத்தார்கள், பெரியாழ்வாரின் திருமொழி அருணகிரி நாதரின் கந்தரலங்காரம் போன்ற பல திருநூல்களில் கொலுசை புகழ்ந்து பாடியுள்ளதைக் காணலாம், " கீதம் தெய்வீக வடிவம்" நடை கூட தெய்வீகமாக இருக்க வேண்டும் அப்போதுதான் திருமகள் அவர்களிடம் குடியிருப்பாள், நிதானமாக நடந்தால் கொலுசிலிருந்து தெய்வீக ஓசை வரும், அந்த ஓசையை கேட்டதும், கணபதி, கந்தன், கண்ணன், ராமன், ஐயப்பன் போன்றவர்கள் குழந்தையாக இருந்து நடந்தால் வரும் கொலசின் ஓசையை போலவே உள்ளதே என்று சிந்தனை தெய்வீகமாக மாறிவிட வேண்டும், அப்போது நம் மனக் கண்ணில் அந்த தெய்வீக வடிவங்கள் தெரிய வேண்டும், என்பதே கொலுசு கூறும் கோபுரத்தத்துவம். மெட்டி: திருமங்கை என்ற மன்னனை ஆழ்வாராக மாற்றிய பெருமை மெட்டியையே சாரும், பெண்ணுக்கு பெருமையும், மங்கலமும் தரக்கூடிய அணிகலன்களுள் முக்கியமானது இந்த சின்ன மெட்டி. திருமணம் ஆனதும் கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் பெண்கள் மெட்டி அணிவர், அந்த விரலில் மட்டும் மெட்டி அணிய வேண்டும், என்று பெரியோர்கள் சொல்லி வைத்ததற்கு காரணம் உண்டு. கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் தான் கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றன. இம்மெட்டி நடக்கும் போது அழுத்தப்படுவதால் கருப்பை வளர்ச்சிக்கு இந்த அழுத்தம் பெரிதும் உதவுகின்றது, அதனால்தான் திருமணத்தில் பெண்கள் காலில் மெட்டியை அணிகின்றனர். காலில் கீழ்ப்பகுதியில் இதயம் முதல் மூளை நரம்புகள் வரை எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் மிக நுண்ணிய நரம்பு ஸ்தானம்உள்ளன. மெட்டி தேய்ந்த பிறகு தூக்கி எறியக் கூடாது. அதை அப்படியே கடையில் கொடுத்து உருக்கி வரும் புது வெள்ளியால் தான் மறுபடியும் மெட்டி செய்ய வேண்டும். எந்த காரணம் கொண்டும் மெட்டியை காலிலிருந்து நீக்கலாகாது என்பர் பெரியோர்கள். அக்காலத்தில் மணமகனுக்கும் மெட்டி உண்டு என்று திருமங்கை ஆழ்வாரின் வரலாற்றிலிருந்து தெரிய வருகிறது. திருசிற்றம்பலம் நன்றி: அமைதி தரும் ஆன்மீகம் என்ற நூல் மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015


பாம்பாட்டிச் சித்தர்பாடல் பாம்பாட்டி ஒருவர் பாம்புகள் பிடிப்பதில் வல்லவர். எத்தகைய கொடிய விஷமுள்ள பாம்பும் இவர் கண் பார்வைக்கும், கைப்பிடிக்கும் தப்பித்துச் செல்ல முடியாது. பக்கத்திலுள்ள காடு ஒன்றில் நவரத்தினப் பாம்பொன்று இருப்பதாகக் கேள்விப்பட்டு அக்காட்டினுள் சென்றார். இரவு நேரம். இருட்டில் பாதை தெரியாமல் தட்டுத் தடுமாறிக்கொண்டு காட்டினுள் நடந்து கொண்டிருந்த பாம்பாட்டியின் எதிரே பிரகாசமான ஒளியுடைய பாம்பொன்று மெல்ல ஊர்ந்து கொண்டு சென்றது. அதன் அழகில், அதன் ஒளியில் ஆட்பட்டு அதனைப் பிடிக்கவும் செய்யாமல் பிரமிப்புடன் நின்று கொண்டிருந்தார். தேடிப்போன புதையலைக் கண்ணெதிரே கண்டுங்கூடக் கைப்பற்ற முடியாதவராகி ஏதோ சிந்தைனையில் அப்படியே ஆடாமல் அசையாமல் நின்றார். கொஞ்ச நேரத்தில் அந்தப் பாம்பு தவயோகி ஒருவராக வடிவமெடுத்து நின்றது. அவர்தான் சட்டைமுனி சித்தர். இந்த சட்டைமுனி சித்தர் அந்தப் பாம்பாட்டிக்கு நல்லறிவு புகட்டினார். உலக நிலையாமையைக் கூறினார். பின்னர் அவருக்குத் தீட்சையளித்து மறைந்தார். நடந்தது கனவா! நினைவா! என்று திகைத்து நின்ற பாம்பாட்டி மெய்ஞானம் கைவரப்பெற்று நாட்டினுள் சென்றார். அக்காலத்தில் அந்நாட்டு அரசன் மரணமடைந்து விடவே அனைவரும் பெருந்துக்கத்தில் இருந்தனர். அவர்களின் துக்கம் தீர்க்கவும், தாம் பெற்ற தவ சக்தியைப் பரிட்சித்துப் பார்க்கவும் இறந்த அரசனின் உடலில் புகுந்து அதிசயம் நிகழ்த்தினார். எல்லோருக்கும் மகிழ்ச்சி. பிழைத்து எழுந்த மன்னர் அருகில் இருந்த செத்த பாம்பொன்றைக் கண்டார். பாம்பே! நான் எழுந்து விட்டேன். நீயும் எழுந்திரு என்றார். என்ன ஆச்சிரியம்; செத்த பாம்பு நெளிந்தது. அனைவரும் வியப்படைந்தனர். பாம்பு, கூட்டத்தைப் பார்த்துப் பயந்து ஓட முயற்சித்தது. மன்னர் அந்தப் பாம்பைப் பார்த்தார். பாம்பே எங்கே போகிறாய். இறந்துபோன நீ இப்பொழுது எழுந்து விட்டாய். இன்னுமா உலக ஆசை உனக்கு விடவில்லை? உலக வாழ்வில் ஏமாந்து போகாதே என்று சொன்னவர். ‘ஆடு பாம்பே’ என்று ஆணையிட்டார். மன்னரின் கட்டளைக்குக் கட்டுப்பட்ட பாம்பு மகுடி வாசிக்காமலேயே ஆடத் தொடங்கியது. பாம்பை முன்னிலைப்படுத்தி அற்புதமான தத்துவப் பாடல்களைப் பாடத் தொடங்கினார். தான் ஒரு சித்தர் என்பதையும் மன்னர் உடம்பில் தான் புகுந்திருப்பதையும் குறிப்பாக உணர்த்திப் பாடினார். ஆனால் அவர் பாடியதன் பொருள் யாருக்கும் புரியவில்லை. பிழைத்து விட்டாரே தவிர, அவருக்குக் கிறுக்கு பிடித்து விட்டது போலும் என்று கூறிக் கூட்டத்தினர் கலைந்து சென்றனர். மன்னரின் செயல்கள் மகாராணிக்கு ஆச்சரியமாயிருந்தது. முரட்டுப் பிடிவாதமும், பெண்கள் சுகமும் என்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்த இவர் எப்படி இப்படி தத்துவ அறிவு பெற்றார் என்று சந்தேகப்பட்டாள். “நாடுநகர் வீடுமாடு நற்பொருளெல்லாம் நடுவன் வரும்பொழுது நாடிவருமோ கூடுபோனபின் பவற்றாற் கொள்பயனென்னோ கூத்தன் பதங்குறித்துநின் றாடாய்பாம்பே” ராணிக்கு ஒரே அதிர்ச்சி. தன் மனதில் எழுந்த சந்தேகத்திற்குப் பதிலளிப்பது போல் இப்படிப் பாடுகின்றாரே, மா, பலா, வாழை, பெண்கள் என்று கனிரசமும் காமரசமும் பருகி வாழ்ந்தவர் இன்று கூத்தன் பதத்தை அல்லவா பாடுகின்றார் என்று வியப்படைந்தாள். அவர் வியப்பை அதிகமாக்குவதைப் போல் மேலும் சில பாடல்களைப் பாடினார். “மாடகூட மாளிகைகள் வண்ண மண்டபம் மதில்சூழ்ந்த வரண்மனை மற்றும் முள்ளவை கூடவாரா வென்றந்தக் கொள்கை யறிந்தோர் குலவாமல் வெறுப்பாரென் றாடாய் பாம்பே” “மலைபோன்ற செம்பொற்குவை வைத்திருப்பவர் மறலி வருகையில் வாரிச்செல்வரோ அலை யாமலகத்தினை யத்தன் பால்வைத்தோர் அழியாரென்றே நீ துணிந்தாடாய் பாம்பே” “பஞ்சணையும் பூவணையும் பாயலும் வெறும் பாழ்சுடு காடதிலே பயன் பெறுமோ மஞ்சள் மணம்போய் சுடு நாறு மணங்கள் வருமென்று தெளிந்து நின்றாடாய் பாம்பே” “முக்கனியுஞ் சக்கரையு மோதகங்களும் முதிர்சுவைப் பண்டங்களு முந்தியுண்டவாய் மிக்கவுயிர் போனபின்பு மண்ணை விழுங்க மெய்யாகக் கண்டோமென் றாடாய் பாம்பே” ஆகா எத்தனை தத்துவார்த்தமான பாடல்கள். பெண்ணாசை விலக்கலைப் பற்றியும் பாடத் தொடங்குகின்றார். ஆசையினால் பாசம் அளவிறந்த கர்மமிது ஆசைவிட்டுப் போவது அரிதரிது - ஆசை அறுங்காத லாகி அரனடியைப் போற்றி உறங்கி உறங்காது இரு” “தந்தைதாய் பந்துசனம் தாரம் சகோதரர்கள் விந்துநிலை அறியா வீணரே - விந்து வெறும் பாழ் என்று எண்ணியே மெய்யுணர்வை நாடி உறங்கி உறங்காது இரு” பாம்பாட்டிச் சித்தர் விருத்தாசலத்தில் சித்தியடைந்ததாகச் சில நூல்களும் துவாரகையில் சித்தியடைந்ததாக சில நூல்களும்சங்கரன் கோ விலில் சித்தி அடைந்ததாகவும் பல குறிப்புகள் கூறுகின்றன. பாம்பாட்டி சித்தரின் பாடல்கள் பெரும்பாலும் தாயுமான சுவாமிகளின் பாடல்களை அடியொற்றியே இருப்பதால் இவர் அவரின் காலத்திற்குப் பிற்பட்டவராக இருக்கலாம் என்ற முடிவுக்கு வரவேண்டி உள்ளது. “வெயில்கண்டமஞ்சள் போன்ற மாதரழகை விரும்பியே மேல்விழுந்து மேவுமாந்தர் ஒயில்கண்டே யிலவுகாத் தோடுங்கிளிபோல் உடல் போனாலோடு வாரென்றாடாய் பாம்பே” போதும் என்று அவரை கையெடுத்துக் கும்பிட்ட ராணி, ஐயா, தாங்கள் யார்? எங்கள் அரசரா? அல்லது யாராவது மகானின் ஆத்மா இந்த உடலில் புகுந்துள்ளீரா? என்று கேட்டாள். சித்தரும் அவளுக்கு நடந்த உண்மைகளைக் கூறினார். சில காலம் இவ்வுடலில் வசிக்க வேண்டிய கட்டாயத்தையும் கூறி அவளுடன் இல்வாழ்க்கையைத் தாமரை இலைத் தண்ணீர் போலத் தொடர்ந்தார். இவர் சித்தராய்த் திரிந்த காலத்து இவருடைய சீடர்களாய் இருந்தவர்கள் தம் குருநாதர் நீண்ட நாட்களாய் வராமை கண்டு பின்னர்த் தம் குருவருளால் அவரிருக்குமிடமறிந்து, அவர் தம் பழைய உடலுக்குத் திரும்பும்வண்ணம் பொருளமைந்த சில பாடல்களைப் பாடினார்கள். பின்னர் அன்றிரவு வெட்டியான் வேடம் பூண்டு நான்கு சாமத்துக்கும் பின்வரும் நான்கு வெண்பாக்களைப் பாடிப் பறையடித்துக் குருவை மீட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. “ஆலஞ்சரீரம் அநித்தியம் என்று எண்ணாக் காலன் தினம் வருவான் காணுங்கள் - காலன் கலங்காத கண்டன்நற் கண்மணியைப் போற்றி உறங்கி யுறங்காது இரு” “வானமணித் தேவர் வனத்திலுள வைவேடர் ஞானமணி யைத்திருட நன்னினார் - ஞானம் நிறுங்காலம் தானறிந்து நல்லுணர்வை நாடி உறங்கி உறங்காது இரு” ஆசையினால் பாசம் அளவிறந்த கர்மமிது ஆசைவிட்டுப் போவது அரிதரிது - ஆசை அறுங்காத லாகி அரனடியைப் போற்றி உறங்கி உறங்காது இரு” “தந்தைதாய் பந்துசனம் தாரம் சகோதரர்கள் விந்துநிலை அறியா வீணரே - விந்து வெறும் பாழ் என்று எண்ணியே மெய்யுணர்வை நாடி உறங்கி உறங்காது இரு” பாம்பாட்டிச் சித்தர் விருத்தாசலத்தில் சித்தியடைந்ததாகச் சில நூல்களும் துவாரகையில் சித்தியடைந்ததாக சில நூல்களும் கூறுகின்றன. பாம்பாட்டி சித்தரின் பாடல்கள் பெரும்பாலும் தாயுமான சுவாமிகளின் பாடல்களை அடியொற்றியே இருப்பதால் இவர் அவரின் காலத்திற்குப் பிற்பட்டவராக இருக்கலாம் என்ற முடிவுக்கு வரவேண்டி உள்ளது. தாயுமானவரின் சித்தர் கனம் பகுதியைப் போலவே இவரும் ‘சித்தர் வல்லபங்கூறல்’ பகுதியைப் பாடியுள்ளார். இஃதோர் கலம்பக உறுப்பாய் பிரபந்தம் பாடுதலின் பாற்பட்டதாகும். நாங்களெல்லாம் சித்தர் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாவோம். எங்களுக்கு அபூர்வ சக்திகள் பல உண்டு. அவைகள் என்ன தெரியுமா? தூணைச் சிறுதுரும்பாகத் தோன்றிடச் செய்வோம், துரும்பைப் பெருந்தூணாகத் தோன்றிடச் செய்வோம், ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றிக் காட்டுவோம். எட்டுமலைகளைப் பந்தாய் எடுத்தெறிவோம், ஏழுகடல்களையும் குடித்து, ஏப்பம் விட்டுக் காட்டுவோம், வானத்தை வில்லாக வளைத்திடுவோம், மூண்டெரியும் அக்கினிக்குள்ளே மூழ்கிவருவோம், தண்ணீருக்குள் மூச்சடக்கியும் இருப்போம், இந்த நிலவுலகை மட்டுமல்லாது இன்னுமுள்ள உலகமத்தனையும் பொன்மயமாக்கிக் காட்டுவோம், பிரம்மா போல புதுப்புது உயிர்களைப் படைத்துக் காட்டுவோம், சூரியனின் செங்கதிரையும் நிலவைப் போல தன்கதிராய் மாற்றிக் காட்டுவோம், கொடிய மிருகங்களான புலி, யானை, யாளி, சிங்கம் முதலான விலங்குகளை எங்களுக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம். சக்தி வாய்ந்த கடவுளுக்குச் சமமாக நாங்கள் இருப்பதால் அவரை எங்களுடன் விளையாடவும் அழைப்போம், இந்த உலகத்தை இல்லாமற்கூட செய்து காட்டுவோம், எத்தனை பெரிய வித்தகரும் அறுபத்து நான்கு கலைகளை மட்டுமே அறிவார். நாங்களோ அதற்கும் மேலாக ஒரு கலையையும் அறிவோம். இதற்கெல்லாம் காரணம் நாங்கள் இறைவன் மேல் பற்றும் ஏனைய பொருள்களின் மேல் பற்றும் இல்லாதவர்களாயிருப்பதே என்று சித்தர்களின் வல்லபத்தைக் கூறி முடிக்கின்றார் பாம்பாட்டிச் சித்தர். பாம்பாட்டிச்சித்தரின் விடுகதைகள் பெரும்பாலானப் பாடல்கள் விடுகதை நோக்கிலேயே அமைந்துள்ளன. உதாரணமாக சருர குணம் சொல்லும் பகுதியில், பரியாசம் போலவே கடித்த பாம்பு பலபேரறியவே மெத்தவீங்கிப் பரியார மொருமாது பார்த்தபோது பையோடே கழன்ற தென்றாடாய் பாம்பே என்ற பாடலில் பெண்ணொருத்தி விளையாட்டு போலவே ஆடவனொருவனைப் புணர அது கர்ப்பமாய் உருக்கொள்ள இதற்குப் பரிகாரம் என்னவென்று யோசிக்கும் வேளையில் அது பிரசவமாகி குழந்தை பிறந்து விட்டது என்பதுதான் தெளிபொருள். விடுகதையில் வரும்போது பாம்பு ஒன்று விளையாட்டாய் ஒன்றைக் கடித்துவிட, அதனால் பாம்புக்கு வீக்கமேற்பட்டு விட்டது. இதற்கு என்ன வைத்தியம் என்று தேடியபோது, கடிபட்ட அந்த விறப்பையிலிருந்த வீக்கத்திற்குக் காரணமான பொருள் வெளியேறி விட்டது. அது என்ன? இதற்கு விடையறிய பாடலிலேயே ‘மாது’ என்ற வார்த்தையை யூகத்திற்கொரு பொருளாகச் சொல்லிப் பார்க்கிறார். மேலே சொன்ன விடுகதையை பெண்ணுக்குப் பொருத்திப் பார்க்க வேண்டும். பெண்களின் அல்குலை பாம்புக்கு ஒப்பிடுவர். அந்தப் பாம்பானது விளையாட்டாய் கடித்த பொருள் ‘ஆணின் கற்பு’. பெண்ணானவள் ஆணோடு புணர்ந்தது. யாருக்கும் தெரியாமல் இரகசியமாய்ச் செய்த இந்தச் செயல் பலரறியும்படி உடலானது வீங்கிக் காட்டிக் கொடுத்து விட்டது. அதாவது கர்ப்பமடைந்து வயிறு வீங்கி விட்டது. இதனை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் கர்ப்பத்தில் தங்கியிருக்கும் சிசுவானது கர்ப்பபையை விட்டு வெளியே பிரசவமாகி வந்துவிட்டது. அவளது பிரச்சனையும் தீர்ந்தது. எப்படி இருக்கிறது விடுகதை? ‘நாலுத்தெருவிலே நாலுகம்பம் நடுத்தெருவிலே பொன்னுக்கம்’ என்று விடுகதையொன்று போட்டுவிட்டு நம்மை விடை காணச் சொல்கின்றார் பாம்பாட்டிச் சித்தர். கடுவெளிச் சித்தரைப் போன்று இவரும் குயவனார் மண் தோண்டி விடுகதையைப் பாடுகின்றார். ‘ஊத்தைக் குழிதனிலே மண்ணையெடுத்தே உதிரப் புனலிலே யுண்டை சேர்த்தே வாய்த்த குயவனார் அவர் பண்ணும் பாண்டம் வறையோட்டுக்கு மாகாதென் றாடாய் பாம்பே’ இதில் மட்பாண்டம் செய்யும் மூலப்பொருள் கூறப்படுகிறது. இப்படி ஊத்தைக் குழியிலே மண்ணை எடுத்துக் குருதிப்புனலிலே உண்டையாக்கி குயவனார் செய்த மட்பாண்டம் இறுதியில் பிச்சையெடுக்கும் திருவோடு அளவுக்குக்கூடப் பயனாவதில்லை என்று கூறுகின்றார். இரண்டு பேர் மண் சேர்த்துப் பிசைய ஒருவர் பானை செய்து அவரே பத்து மாதம் சூளையில் வைத்துப் பக்குவமாய் இறக்கி வைத்தாலும் அந்தப் பானையானது இறுதியில் அரைக்காசுக்குக்கூட உதவாது என்று இந்த உடல் நிலையாமையைக் கூறுகின்றார் பாம்பாட்டிச் சித்தர். ‘இருவர் மண்சேர்த்திட வொருவர் பண்ண ஈரைந்து மாதமாய் வைத்த சூளை அருமையா யிருப்பினு மந்தச்சூளை அரைக்காசுக் காகா தென் றாடாய்ப் பாம்பே’ மனிதர் என்னதான் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேடினாலும் அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு என்று இந்தச் சித்தர் அறுதியிட்டுக் கூறுகின்றார். நாறுகின்ற மீனைப் பல தரம் நல்ல தண்ணீர் ஊற்றிக் கழுவினாலும் அதனது இயல்பான நாற்றம் போகாது. அதுபோல மனிதன் என்னதான் பரிகாரங்கள் செய்தாலும் அவன் செய்த பாவ வினைகள் அவனை விட்டகலாது அவனைத் தண்டித்தே தீரும் என்பதை, “நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால் நாளுங் கழுவினு மத னாற்றம் போமோ ஊறுமுடல் பலநதி பாடிக் கொண்டதால் கொண்டமல நீங்கா தென்றா டாய் பாம்பே” என்னதான் புனித நீராடினாலும் பாவங்கள் தண்டனைக் குரியவையே என்பது பாம்பாட்டியாரின் தீர்ப்பாகும். பொம்மலாட்டம் தெரியுமா? திரைக்குப் பின்னாலிருந்து சூத்திரதாரி ஒருவன் இயக்க, பாவைக் கூத்தாடும் நாடகக் காட்சியைப் போன்றது நமது வாழ்க்கை என்பதைப் பின் வரும் பாடலால் விளக்குகின்றார். “மரப்பாவை போலவொரு மண்ணுருச் செய்து வளமான சீவனென்னுந் சூத்திர மாட்டித் திரைக் குள்ளிருந்தசைப் போன் தீர்ந்த பொழுதே தேகம் விழுமென்று தெளிந் தாடு பாம்பே” இன்னும் இந்த உடல் நிலையில்லாது என்பதை, “சீயும் மலமுஞ் செந்நீரும் நிணமும் சேர்ந்திடுதுர் நாற்றமுடைக் குடமதுஉடைந்தால் நாயும் நரியும் பேயும் கடுகும் நமதென்றே தின்னு மென்றடாய் பாம்பே” எவ்வளவு சீரும் சிறப்புமாய் வளர்த்த இந்த உடலானது உலகில் பார்க்கின்ற பொருளையெல்லாம் தனதென்றே சொந்தம் கொண்டாடும், சீழும் குருதியும் மலமும் சேர்ந்த இந்த நாற்றக்குடமான உடல் இறந்து விட்டால் நாயும், நரியும், பேயும், கழுகும் என்னுடையது இந்த உடல் என்று பங்கு போட்டுச் சாப்பிட ஆரம்பித்து விடும். இப்பொழுது சொல்லுங்கள், இந்த உடல் நம்முடையதா? அல்லது நாய் நரிகளுக்குச் சொந்தமானதா? என்று கேள்வி விடுக்கின்றார் பாம்பாட்டி. நன்றி;ஞானக்கோவை வை,பூமாலை சுந்தரபாண்டியம்

மனதை மாற்றிய திருமறை


மனதை மாற்றிய திருமறை நினைவாற்றல் சக்தியில் கெட்டிக்காரராக விளங்கியவர் கல்வியில் படுமட்டம் என்றால் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். அதைவிட ஆச்சரியம் படிப்பதில் படுமட்டமாக இருந்த அவர் பிற்காலத்தில் ஒரு ஞானியாக உருவெடுத்தது, அவரை ஞானியாக்கியது போதி மரம் இல்லை, ஒரு பழைய புத்தகம், பொழுது போக வேண்டும் என்பதற்காக இல்லத்தில் உபயோகப்படாமல் இருந்த பழைய புத்தகத்தை வெங்கட்ராமன் என்ற அந்தச் சிறுவன் வாசிக்க நேர்ந்தது. ஓவ்வொது பக்த்தில் உள்ள பாடல்கையும் அவற்றின் தெளிவுரைகளையும் படிக்கப் படிக்க ஏதோ ஒரு புதிய உலகத்தில் பயணம் செய்வதைப்போன்ற உணர்வு தோன்றியது, வெங்கட்ராமனுக்கு. அதுதான் அவர்படித்த முதல் ஆன்மீக புத்தகம். என்னுடைய ஞானத் தந்தையைத் தேடி புறப்பட்டு விட்டேன். மூல முதல்வனின் ஆசைப்படியே இல்லத்தை விட்டு புறப்பட்டு விட்டேன் என்று துண்டு காகிதத்தில் எழுதி வைத்து விட்டு வீட்டில் கூறிக்கொள்ளாமல் புறப்பட்ட அவரைப் பிற்காலத்தில் நாடே தேடி வந்தது. அவர் வந்து சேர்ந்த இடம் எது தெரியுமா? சாதாராண வெங்கட்ராமனின் பிற்கால திருநாமம் யாது தெரியுமா? அவரை ஞானியாக மாற்றிய திருமறை எது என்று தெரியுமா? அதன் விடைதான் இது: அவர் வந்து சேர்ந்த ஞானபூமியே திருவண்ணாமலை, சாதாரண வெங்கட் ராமனை ஸ்ரீரமண மகிரிசியாக மாற்றியது அவர் படித்த திருமூலரின் திருமறையும், சேக்கிழார் அருளிய பெரியபுராணமும் தான், பகவான் ஸ்ரீரமண மகரிசியாக மாறியவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி என்ற கிராமத்தில் பிறந்து ஏழை குடும்பத்தில் பிறந்து, திருவண்ணாமலை சென்று பாதாள லிங்கம் இருந்த படுபாதாளத்தில் தவம் புரிந்து ஆன்மீக ரிசியாக வந்தவர் தான் பகவான் ரமண மகாரிசி ஆவார், ஒருமுறை உறவுமுறைப் பெரியவர் ஒருவர் திருவண்ணாமலையில் இருந்து வந்திருக்க அவர் வாயிலாகத் திருவண்ணாமலை பற்றிய ஆவல் அதிகரித்தது. பின்னர் பெரியபுராணம் போன்ற நூல்களைப் பயின்று வர, இறையடியார்கள் மீதும், இறைவனைப்பற்றி அறிதலிலும் நாட்டம் ஏற்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பழக்கமும் ஏற்பட்டது. அவரது 17ஆம் அகவையில் மதுரையிலிருந்த அவருடைய சிற்றப்பா வீட்டில் ஒருநாள் திடீரென ஒரு மரண அனுபவம் அவருக்குக் கைகூடிற்று. அவ்வனுபவத்தில் மரணிப்பது எது? உடல் தானே மரணிக்கின்றது. நான் மரணிப்பவன் அல்லன். ஆகவே உண்மையான நான் யார் என விசாரித்து நான் உடலல்லன், ஆன்மா என்ற உண்மையை அறிந்தார். இந்த ஆன்மாவே எல்லாம் வல்ல பரம்பொருளாயிருக்க வேறொன்றும் இல்லாத நிலையில் எல்லாவற்றையும் அறிந்து தெளிந்தார். இவ்வாறு ஆன்மிகத் தெளிவு பெற்ற பின் தன் சுற்றமெல்லாந் துறந்துவிட்டு இரயில் ஏறித் திருவண்ணாமலையை வந்தடைந்தார். அங்கு திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில் சிறிது காலம் தியானம் செய்தார். பின்னர் சிறுபிள்ளைகளின் விசமச் செய்கைகளினால் அங்கிருந்த பாதள லிங்கத்தினருகில் சென்று தியானத்தமர்ந்தார். பின்னர் விருபாக்ஷி குகை, கந்தாச்ரமம், பாலாக்கொத்து எனப் பல இடங்களில் வாசம் செய்து இறுதியில் திருவண்ணாமலையடிவாரத்தில் தங்கினார். அங்கேயே ரமணாச்சிரமம் உருவானது. இவரது சீடர்களில் ஒருவரான காவ்ய கண்ட கணபதிமுனி என்ற சமஸ்கிருத பண்டிதர் ஒருவராலேயே இவருக்கு ”ரமண மஹரிஷி” எனப் பெயர் சூட்டப்பட்டது. அது வரை அவரை பிராம்மண சுவாமி என்றே அழைத்தனர். ரமணரின் முக்கியமான உபதேசம் 'நான் யார்' என்னும் ஆன்ம விசாரம். ஞான மார்க்கத்தில் தன்னை அறிதல் அல்லது முக்தி பெறுதலே இவ்வழியின் நோக்கம். உபநிடதங்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம். இவரது உபதேசங்களின் தொகுப்பான 'நான் யார்?' என்ற புத்தகம் முதன்மையானதாகும். ஆதி சங்கரரின் ஆக்கமான 'ஆத்ம போதம்' தனை தமிழில் வெண்பாக்களாக ரமணர் வழங்கியுள்ளார். ஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது. தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை உணரவேண்டும். அதனைப் பயில்க. தியானிக்கப்படும் பொருள், நுண்மையாக இருந்தாலும் சரி - ஒன்றான தன்மையை அழிந்து நாமே இருமையை உருவாக்குகிறோம் திருசிற்றம்பலம் ேமலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

திருஐந்தெழுத்தின் பெருமை


திருஐந்தெழுத்தின் பெருமை தமிழ் வேதங்களான திருமுறைகள் கூறும் திருஐந்தெழுத்தின் பெருமையினை தேவாரப்பதியங்களில் தனித்தனி பதியங்களாகக் கண்டாலும் நம் மனத்தில் சிறப்பு பெறும் இடங்கள் திருமந்திரத்தில் திருமூலர் கூறும் பெருமை: "உச்சியும் காலையும் மாலையும் ஈசனை நச்சுமின் நச்சி நமஎன்று நாமத்தை விச்சுமின் விச்சி விரசுடர் மூன்றினும் நச்சுமின் பேர்நந்தி நாயகனாகுமே. திருமந்திரம் இரவும் பகலும் சந்திக்கும் நேரம் காலை, உச்சிப் பொழுது, மற்றும் மாலை ஆகிய மூன்று காலங்களிலும் சிவாயநம என்னும் ஆதி மந்திரத்தை சொல்லி சிவபெருமானாரை வழிபட வேண்டும். காலை - சூரியன், உச்சி - நெருப்பு, மாலை - சந்திரன் என்றவாறு இந்த மூன்று வேளைகளிலும் மூன்று கண்களாக சூரியன், நெருப்பு, சந்திரன் நினைந்து வழிபட்டால் இந்த மூவரையும் சேர்த்து வணங்குவதே ஆகும், திரு ஐந்தெழுத்தின் சொல்லும் வகையும பயனும்: எளிய வாது செய்வார் எங்கள் ஈசனை ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த் தெளிய ஓதி சிவாயநம என்னும் குளிகை இட்டுப் பொன்னாக்குவன் இக்கூட்டையே. திருமந்திரம் வீணாக விவாதம் செய்வதை விட்டுவிட்டு அஞ்ஞான இருளை நீக்கும் ஞான ஒளியாகிய ( அறிவுமயமான) சிவபெருமானாரை மனத்தில் நினைந்து உருகும் மனத்துடன் ஐந்தெழுத்தை கணிக்க வேண்டும் (செபித்தல்) நாமாவளியைச் சிந்திக்கும் பொழுது மனதில் வேறு நினைவுகள் இருக்கக் கூடாது. சிவாயநம என்னும் மந்திரத்திற்குரிய சிவபெருமானாரையே நினைத்து உருகிய உள்ளத்துடன் செபித்தல் வேண்டும். இதனால் ஆணவம் நீங்கும், ஆணவம் நீங்கிய உயிர் சிவமாய் விளங்கும், இரசகுளிகையால் செம்பில் உள்ள களிம்பு நீங்கி செம்பு பொன்னாவது போல என்று உணர்க. உயிர் சிவமானால் உடம்பும் சிவகாயமேயாகும். தேவாரப்பதிகத்தில் திருநாவுக்கரசர்: "சித்தம் ஒருக்கிச் சிவாயநம என்றிருக்கின் அல்லால் அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே" - திருமறை 4 - பதிகம் 94 பாடல் 5 உனதருளால் திருவாய்ப் பொலியச் சிவாயநம என்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர்அரனே, பாடல் 6 செலவில்லாத எளிய வழி இதுவாகும் ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று வேளையாவது செபித்தல் வேண்டும். மந்திரமும் நான்கு வேதங்களும் திருஐந்தெழுத்தே ஆகும் மந்திர நான்மறை யாகி வானவர் சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே, - திருமறை 3 பதி 22, பாடல் 2 மந்திரங்களாகவும், நான்கு வேதங்களாகவும் ஆகித் தேவர்களுடைய சிந்தையினுள்ளும் நின்று, அவர்களை ஆட்கொண்டு நன்னெறி பயப்பது திருஐந்தெழுத்தே ஆகும். செந்தீ வளர்த்திச் செம்மை நெறியில் நிற்கும் வேதியர்க்கும் காலை, நண்பகல், மாலை ஆகிய மூன்று சந்தியா காலங்களிலும் செபிக்க வேண்டிய மந்திரம் சிவாயநம என்னும் ஐந்தெழுத்தே. சுந்தரர் பெருமான் " நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லுமு நா நமச்சிவாயவே - சுந்தரர் நாம் மறந்தாலும் நம்முடைய நாவில் ஐந்தெழுத்தே வெளிப்ட வேண்டும், இடரினும் தளரினும்,தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும், திருஐந்தெழுத்தே நம் வாயில் வெளிப்பட வேண்டும், இதனால் பிறவியில்லாமல் போகும், திருச்சிற்றம்பலம் நன்றி: தமிழ் வேதம் மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

ஞானதானம்: தேகமே திருக்கோயில்

ஞானதானம்: தேகமே திருக்கோயில்: தேகமே திருக்கோயில்      தன்னைத் தான் அறிவது ஞானம். தன்னை அறிந்தால் தலைவனான கடவுளையும் அறியலாம்.      அன்றும், இன்றும், என்றும் கடவ...

வியாழன், 5 பிப்ரவரி, 2015

தமிழகத்துச் சிவஞானியார்


தமிழகத்துச் சிவஞானியார் தமிழகத்து சிறந்த சிவஞானியாராகத் திகழ்ந்தவர் தருமை ஆதீன 13 வது சந்நிதானம் தவத்திரு ஞான சம்பந்த தேசிகர் ஆவார், தவத்திரு ஞான சம்பந்த தேசிகர் காசிக் கங்கை நீரைத் தங்கள் ஆன்மார்த்த மூர்த்தியின் திருமுன்பிற்கு வருவித்து, அதில் தமக்கு முற்பட்ட மகா சந்நிதானங்களையும் நினைந்து நினைந்து மூழ்கியவர், இச்செயலுக்கு பெரிதும் முன்னின்று உதவியவர், ஆதீனத்திருக்கூட்டத்து அடியவருள் ஒருவராகிய விருத்தாசலத் தம்பிரான் சுவாமிகள். மகா சந்நிதானம் அவர்கள் தம் ஆன்மார்த்த மூர்த்தியுடன் காசியாத்திரை சென்று திரும்புவதில் இடர்பாடுகள் உள்ளன என எண்ணினார், " தமது ஆதீனத் திருக்கூட்டத்தில் யாரேனும் கங்கையைத் தருமைக்கு கொண்டுவரும் ஆற்றல் படைத்தவர் ஒருவராகினும் இல்லையோ" என்று கேட்டார்கள். அச்சமயத்தில் அங்கிருந்த விருத்தாசலத்தம்பிரான் மாசிலாமணி தேசிகர் சுவாமிகள் " திருவருளையும் குருவருளையும் துணைக் கொண்டு அடியேன் இப்பணியை நிறைவேற்றுகிறேன், " என்றார், அதன்படி குருமகா சந்நிதானத்திடம் உத்தரவு பெற்றுக் கொண்டு திருவாங்கூர் மன்னரது ஆட்சிக்குட்பட்ட பத்மநாதபுரத்திற்கு சென்றார்கள். அங்குள்ள சிவலாயத்திற்கு சென்று சிவபெருமானார் திருமுன் நின்று தம்மை மறந்து சாராங்கி வாத்தியத்துடன் திருமுறைப்பாடல்களை கண்ணீர் மல்க இனிமையாக பாடி பரவச முற்றிருந்தார், இந்நிலையில் இவருடைய தோளில் இறைவர் நின்று நடனம் புரிந்தார், ஆலய வழிபாட்டிற்காக வந்த அரசன் இக்காட்சியினைக் கண்டு வியந்து போனார், தம்பிரான் சுவாமிகளை வணங்கி அரண்மனைக்கு அழைத்து சென்று உபசரித்து " அடியேனால் ஆகத்தக்க பணி ஏதேனும் உண்டோ? " என கேட்டார், தம்பிரான் சுவாமிகள் கங்கை நீர் தருமைக்கு வரவேண்டிய நிலைமையை தெரிவித்தார்கள், உடனே அரசன் யானைகள் ஒட்டங்கள், பலவற்றை அனுப்பி அளவற்ற பாத்திரங்களால் கங்கை நீரைக் கொணரச் செய்து தருமை ஆதீனத்தின் பூசை முற்றத்தில் ஏராளமாக நிரப்பி வைக்கப்பட்டது. முன் கூறியது போல குருமகாசந்நிதானம் அவர்கள் கங்கை நீரில் மூழ்கி மகிழ்ந்தார்கள், இதிலிருந்து நாம் உணரக்கூடியவை: விருத்தாசலத் தம்பிரான் சுவாமிகள் திருமுறைகள் மீது அளவற்ற பற்றுக் கொண்டவர் சாரங்கி வாத்தியம் வாசிப்பதிலும் வல்லவர், தம்முடைய அரிய வேலை கங்கை நீரைக் கொண்டு வருவது என்பதே தனது ஆத்மானந்த குறிக்கோளும், மகா சந்நிதானத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவது தனது பொறுப்பு என்று உணர்ந்தார், பத்மநாபபுரம் சிவலாயத்தில் எழுந்தருளியுள்ள இறைவர் முன்பு திருமுறைப் பாடல்களை சாரங்கி மூலம் இசைத்து பாடி உள்ளம் உருகினார், தம்மையே மறந்திருந்தார், அந்நிலையில் அரசரை அங்கே வரவழைத்தது இறையருள் , திருமுறைப் பாடல்கள் இறையாற்றலை நாம் உணர்வதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? முதலில் இறைவர் மீதும் தாம் எடுத்துக் கொண்ட பணி மீதும் உறுதியான நம்பிக்கை , திருமுறைப்பாடல்கள் இறைவரை ஈர்க்கும் என்ற தளராத எண்ணம், இத்துடன் அப்பாடல்களில் மனம் ஒன்றி பாட வேண்டும் ,இறைவரை நம்பால் கொண்டு வரும் ஆற்றல் பெற்றவை நம் தமிழ் வேத திருமுறைப்பாடல்கள். " தம்மை மறந்து நின்னை நினைப்பவர் செம்மை மனத்திலும் தில்லை மன்றிலும் நடமாடும் அம்பலவாண!" - கோயில் நான் மணிகமாலை பட்டினத்து அடிகள் நன்றி ! தமிழ் வேதம் திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவாயம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு: http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.