செவ்வாய், 24 செப்டம்பர், 2013


பஞ்சாட்சர மந்திரங்களை உச்சரித்தல்,திருநீறு தரித்தல்,ருத்ராடம் அணிதல் இம்மூன்றையும் ஒருவன் ஒருசேர செய்வது: திரிவேணி சங்கமத்தில் நீராடுவதன் புண்ணியத்தைப் பெற்றுத்தரும். ருத்ராட்சங்களை எண்ணற்ற அளவில் உடலில் தரித்துக் கொள்பவன்,மகேசனைப் போல அனைத்துத் தேவர்களாலும் தலை தாழ்ந்து வணங்கப்படுகிறான். ஒருவன் எவ்வகைப் பிறவி எடுத்திருந்தாலும் சரி, அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில்,நரகங்களிலிருந்து விடுபடுகிறான். எவ்வகை வர்ணத்தை(ஜாதியை)ச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி;எவ்வகை ஆசாரத்தைக் கடைபிடிப்பவராயினும் சரி; பெண்களாயினும் சரி; அவர்கள் ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரித்து,ருத்ராட்சங்களை அணிந்து கொள்ளலாம். ருத்ராட்சத்தை ஒருவன்/ள் ஒரு பகலில் அணிந்திருப்பானாயின், அவன் இரவில் செய்த பாவங்களை அது எரித்துவிடும்.இரவில் அணிந்திருப்பானாகில் அது அவன் பகலில் செய்த பாவங்களை எரித்துவிடுகிறது.ஆதலால் ஒருவன் எந்நேரமும் ருத்ராட்சங்களை அணிந்து கொண்டிருக்க வேண்டும். ருத்ராட்சமும் திருநீறும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை; ருத்ராட்சங்களைக் கைகளிலும்,தோள்களிலும் அணிந்தவன் எவ்வித உயிரினங்களாலும் கொல்லப்படமாட்டான்.அவன் இவ்வுலகில் ருத்ரனைப் போல வலம் வருகிறான். ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும்,அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான்.அவனை அகால மரணமோ,துர்மரணமோ நெருங்குவதில்லை. நமது ஆன்மீக குரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் சொன்னது:ருத்ராட்ச உபநிஷத்து என்று ஒரு உபநிஷத்து இருந்தது.யாராவது வைத்திருக்கிறீர்களா? ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிப்போமா? ஓம்சிவசிவஓம்

பஞ்சாட்சர மந்திரங்களை உச்சரித்தல்,திருநீறு தரித்தல்,ருத்ராடம் அணிதல் இம்மூன்றையும் ஒருவன் ஒருசேர செய்வது: திரிவேணி சங்கமத்தில் நீராடுவதன் புண்ணியத்தைப் பெற்றுத்தரும். ருத்ராட்சங்களை எண்ணற்ற அளவில் உடலில் தரித்துக் கொள்பவன்,மகேசனைப் போல அனைத்துத் தேவர்களாலும் தலை தாழ்ந்து வணங்கப்படுகிறான். ஒருவன் எவ்வகைப் பிறவி எடுத்திருந்தாலும் சரி, அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில்,நரகங்களிலிருந்து விடுபடுகிறான். எவ்வகை வர்ணத்தை(ஜாதியை)ச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி;எவ்வகை ஆசாரத்தைக் கடைபிடிப்பவராயினும் சரி; பெண்களாயினும் சரி; அவர்கள் ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரித்து,ருத்ராட்சங்களை அணிந்து கொள்ளலாம். ருத்ராட்சத்தை ஒருவன்/ள் ஒரு பகலில் அணிந்திருப்பானாயின், அவன் இரவில் செய்த பாவங்களை அது எரித்துவிடும்.இரவில் அணிந்திருப்பானாகில் அது அவன் பகலில் செய்த பாவங்களை எரித்துவிடுகிறது.ஆதலால் ஒருவன் எந்நேரமும் ருத்ராட்சங்களை அணிந்து கொண்டிருக்க வேண்டும். ருத்ராட்சமும் திருநீறும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை; ருத்ராட்சங்களைக் கைகளிலும்,தோள்களிலும் அணிந்தவன் எவ்வித உயிரினங்களாலும் கொல்லப்படமாட்டான்.அவன் இவ்வுலகில் ருத்ரனைப் போல வலம் வருகிறான். ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும்,அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான்.அவனை அகால மரணமோ,துர்மரணமோ நெருங்குவதில்லை. நமது ஆன்மீக குரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் சொன்னது:ருத்ராட்ச உபநிஷத்து என்று ஒரு உபநிஷத்து இருந்தது.யாராவது வைத்திருக்கிறீர்களா? ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிப்போமா? ஓம்சிவசிவஓம்

திங்கள், 16 செப்டம்பர், 2013

சனி, 14 செப்டம்பர், 2013


திருமந்திரம் / பத்தாம் திருமுறை / சிறு விளக்கம் அருளாளர்கள் மொழிவன எல்லாம் " மந்திரங்கள் " மந்திரம் என்ற சொல்லுக்குப் பொருள் , நினைப்பவரைக்காப்பது என்பதாம். மந்திரங்களை செபிப்பதுடன் நினைப்பதற்கு ஆற்றல் அதிகம். மந்திரங்களாக விளங்கும் அருள் நூல்களை வழங்கிய பெருமக்களை நிறைமொழி மாந்தர் என்பர். திருஞானசம்பந்தர் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை பகிர்ந்தளித்தார். திருமுறை ஆசிரியர்கள் இருபத்து எழுவருள் ஒருவராகிய திருமூலர் அருளிச் செய்த திருமந்திரம் பத்தாம் திருமுறையாகிய செந்தமிழ் மந்திரமாகும், இரு மூவாயிரம் பாடல்களாகவும், ஒன்பது தந்திரங்களாகவும் உள்ளடக்கியது. முதல் தந்திரம் நிலையாமையை பற்றி கூறுவதால் ஞானம் பெற அறம் உணர்த்துகிறது. இரண்டாம் தந்திரம் புராணங்களின் வழியே சிவபராக்கிரமங்களையும் அவர் தம் புகழையும் பேசுகிறது. மூன்றாம் தந்திரம் பெருமானை அடையும் யோக சாதனங்களைக் குறிப்பிடுகிறது. நான்காம் தந்திரம் மந்திர யந்திர வழிபாட்டு முைறகளை விளக்குகிறது. ஐந்தாம் தந்திரம் சைவத்தின் பிரிவுகளையும், சிைய, கிரியை , யோகம், ஞானம் என்னும் நால்வகை நெறிகைளயும், தெளிவிக்கின்றது. ஆறாம் தந்திரம் சிவமே குருவாக நின்று அருள் புரிவதையும் சற்குருகிைடப்பது அவரவர் தவத்தின் பயனாகும் என உணர்த்துகிறது. ஏழாம் தந்திரம் அண்டமும் பிண்டமும் இலிங்க உறருவாய் உள்ளதையும், சிவபூசை குருபூசை குருபூசை செய்யவேண்டிய அவசியத்தையும் அறிவிக்கிறது. எட்டாம் தந்திரம் உயிர் எடுக்கும் உடல்பற்றிய அன்னமயகோசம், பிராணமய கோசம், மனோமயகோசம், விஞ்ஞான மயகோசம், ஆனந்தமயகோசம், பற்றிய விளக்கங்களைகூறுகிறது. ஒன்பதாம் தந்திரம் அகர,உகர மகரமாகிய ஓங்காரப் பிரணவமே எல்லாவற்றிற்கும் மூலம் என்பதையும் தூலபஞ்சாக்கரம், சூக்கும பஞ்சாக்கரம் முதலிய ஐந்தெழுத்து உண்மைகளையும், ஐந்தொழில் நடத்தையும், சிறப்புற விளக்குகிறது. இம்மந்திரம் ஒன்றுதான் திருமந்திரம் எனப்படுகிறது. இதனை நாமும் தினமும் ஓதி உவகை பெறுவோம்

'Thiruppugazhil Manolayam' by Mrs Vasantha Panchapakesan

poomalai: இன்னொரு திருஞானசம்பந்தர்?|Another Lord ?-Aanmeega Dinakaran

poomalai: இன்னொரு திருஞானசம்பந்தர்?|Another Lord ?-Aanmeega Dinakaran

வியாழன், 12 செப்டம்பர், 2013


PARAMANANDA THEEBAM MOOLAMUM URAIYUM by santhanamala kumarasamy

Daily one Thirumandiram

in/2013/09/view-maanikkavachakar-on-scribd_12.html">poomalai

maanikkavachakar by ganesh59


arulsivam by ganesh59


Yoga Vasishtam by ganesh59


saivasiddhantam by ganesh59

Thiruvasagam


Tiruvacakam by ganesh59


saivavinavidai by ganesh59


Abirami Andhadhi by ganesh59

sidhargal padal


Siddhar Paadalgal by ganesh59

புதன், 11 செப்டம்பர், 2013


திரு ஐந்தெழுத்தின் உயர்வு தீமைகள் வராமல் தடுக்கும் படைக்கலம் சைவ மதத்தின் மூல ஆதாரமான திரு ஐந்தெழுத்தின் மகத்துவம் சொல்லில் அடங்கா.சிவாயநம - நமசிவய - என்ற ஐந்தெழுத்து திரு நீறு, உருத்திராட்சம் ஆகியவை அணிவது தகவு எனும் வேலியாகும், இராணுவ வீரர்களுக்கு உரிய ஆடையை அணிந்த உடனே வீரவுணர்வு மேலிடுவது போல உணர்க, திரு அப்பர்பெருமானும் தனது பதியத்தில் படைக்கல மாகஉன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவிற் கொண்டேன் இடைக்கலம் அல்லேன் எழுயிறப் பும்உனக்கு ஆட்செய்கின்றேன் துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் தூநீறு அணிந்துள் அடைக்கலம் கண்டாய்அணிதில்லைச் சிற்றம்பலத்து அரனே - திருநாவுக்கரசர் பெருமான் எப்பொழுதும் மனதால் தொழுது வாயால் துதித்து, உடலால் வணங்கித் திருநீறு அணிந்து தங்களின் உடைமைப் பொருளாக உள்ளேன், காத்தருள் புரியுங்கள் சிற்றம்பலத்து பெருமானே. எல்லா வகையான தீமைகளிலிருந்தும் ந்ம்மைக் காப்பது திருஐந்தொழுத்து என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும், இதைவிட வேறு மந்திரம் வேண்டாம். வேறு உபாயமும் வேண்டாம் நமக்கு. இந்த ஐந்தொழுத்தைச் சொல்லிக் கடலில் கல்லையும் மிதக்கச் செய்து கரையேறியவர் திருநாவுக்கரசு சுவாமிகள். அவர் கூறிய இந்த ஐந்தொழுத்து மந்திரமான சிவாயநம என்பதே நமது படைக்கலமாகும்

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

Thirumandiram perumai


வேத(தேவ) மந்திரம் என்ற திருமந்திரம் தேவமொழிகளில் உள்ள ஆகமங்களின் தமிழ் மொழிபெயர்ப்புதான் திருமந்திரம், திருமூலர் அருளிய திருமந்திரம் எத்தனையோ காலம் கடந்து நாம் இன்னும் படிக்கும்படி இருப்பது என்பதே மிகப்பெரிய சான்று, இது இறைவன் கருனையால் இயற்றப்பட்டது.திருமந்திரத்திற்கு மறு மந்திரம் இல்லை என்பர் பெரியவர்கள், அது மகத்தான உண்மை. திருமந்திரம் சைவ சித்தானந்தம், சிவநெறி ஆகியவைகளை கடந்து தமிழ் மொழிக்கு கிடைத்த பொக்கிசம் என்றால் மிகையாகது. திருமூலர் அருளிய பல தத்துவங்களை நாம் தற்போது நடைமுறையில் நமக்கு அருளியது திருமந்திரம் என்று தெரியாமலே இன்றளவும் பயன் படுத்துகிறோம். உதாரணமாக. " அன்பே சிவம்" "தத்துவம்சி நீ அதுவானாய்" " ஒன்றே குலம் ஒருவனே தேவன்" " நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" " சீவன் (ஆத்மா) சிவனோடு கலத்தல்" " உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்" " யார்க்கும் இடுமின் அவர்இவர் என்னன்மின்" " பசுவுக்கு ஒர் வாய்உைற" " உண்ணும் போது ஒரு கைப்பிடி" ..... போன்றன. எம்பெருமான் கருனை பெற யாகமோ, பெருந்தவமோ, சாதாரண மக்களுக்கு தேைவயில்லை, தண்ணீரும், பூவும், பச்சிலை, (வில்வ இைல) போதும் என்கிறது திருமந்திரம், அத்துடன் துணிந்தவர்களுக்கு யோகம், குண்டலினி போன்ற கடுைமயான பயிற்சி முறைகளையும் கூறுகிறது. இன்றைய அறிவியலில் ஆராய்ந்து அறிந்த உண்ைமகளையும் அன்றே திருமந்திரத்தில் கூற்ப்பட்டுள்ளது. இதயம் இடப்பக்கம் உள்ளது பற்றியும், வயிற்றில் வளரும் கரு ஆணா, பெண்ணா, திருநங்கையா,என்பதையும், கர்ப்பம் தரிப்பது, ஊணமான குழந்தைக்கு காரணம், மற்றும் மனிதனின் முதிர்வு இறப்பின் இரகசியங்களையும் அதன் பிரணய சுவாசத்தின் மூலம் கணக்கிட்டு கூற்படுகிறது. அறநெறி நல்லொதழுக்கம், பற்றியும், தான சிறப்பு, பிறா் மனை நோக்கா, மது, அைசவ உணவு நெறி, என்பனவும், கொலை, களவு, வட்டி வாங்கல், போன்ற படுபாதக செயல்கள் பற்றியும், அரசனின் கடமை, கோவில் அைமப்பு, அந்தணர் வாழ்வு, ஒழுக்கம், போலிசாமியார் , செல்வ நிைல, மகளிர் ஒழுக்கம், அறம் போன்ற எல்லா மனித சமுதாயத்திற்கு தேவையான அனைத்து விசயங்களையும் காணலாம், திருமூலர் திருமந்திரம் சைவ நெறி, சிவனை அைடதல் என்பன தவிர்த்து, அதாவது ஒரு குறிப்பிட்ட மதத்தினை வலியுறுத்துவது மட்டுமன்றி அவற்றையெல்லாம் கடந்து, பொது மறையான திருக்குறளையும் தாண்டும் அளவிற்கு உலக மக்களுக்கு வாழ்க்கையின் அறநெறி ஒழுக்கம், ஒப்புறவு ஈதல், போன்ற அனைத்தும் உள்ளடக்கி உள்ளது திருமந்திரம், திருமூலரின் திருமந்திரத்தை படித்து, அறிந்து, கொள்வார்களாயின், மகாதவம் செய்த புண்ணியமும், ஈசனின் திருவடியை காண அருள் பெற்றவர்களாவார்கள், என்பது அசைக்கமுடியாத உறுதி. " திரு மூலரின் திருவடி போற்றி" " திருமந்திரத்தின் மேன்மை போற்றி" " ஓம் சிவ சிவ ஓம்" அன்புடன் சிவனடிமை சிவ, வை,பூமாலை, சுந்தரபாண்டியம்.

திங்கள், 9 செப்டம்பர், 2013

என்.கணேசன்: திருநீறு அணிவது எதற்காக?

என்.கணேசன்: திருநீறு அணிவது எதற்காக?: அறிவார்ந்த ஆன்மிகம் - 18 “ நீ ரில்லா நெற்றி பாழ் ” என்று பாடினார் ஔவையார். ” மந்திரமாவது நீறு" என்று பாடினார் திருஞானசம்பந்த...

சனி, 7 செப்டம்பர், 2013


சித்தர்கள் சித்தர்கள் ஜமாதி அடைந்த ஏதேனும் ஒரு கோவிலுக்கு அருகில் வாழ்ந்து வரும் மக்கள் அக் கோவிலில் எழுந்தருளியுள்ள சிவனையோ, முருகனையோ அம்பாளையோ அல்லது அங்கு சமாதி அடைந்துள்ள சித்தர்களையோ உண்மையான பக்தியுடன் அக்கோவில் வளாகத்தில் உட்கார்ந்து தினமும் அரைமணி நேரம் கண்மூடி தியானம் செய்து வந்தால் காலப்போக்கில் அங்கு அருளாட்சி செய்துவரும் சித்தர் பரம்பொருளின் திருவருள் துணை கொண்டு அந்த பக்தர்களு்க்கு அமைதியான வாழ்வை அளிப்பதுடன் மரணமில்லாத பெருவாழ்வையும் தவ நெறியையும் தொட்டிக்காட்டி அருள்பார் ந்னறி ; பதினென் சித்தர்கள் வரலாறு

Pathinen-Sitharkal-Varalaru by Vmani Ayyar

">

புதன், 4 செப்டம்பர், 2013

Thirupattur

"திருப்பட்டூர்'

இது தஞ்சாவூர் கோயிலுக்கும் முற்பட்டதாக தெரிய வருகிறது. இங்குள்ள நந்தியை தடவிக் கொடுத்தால், நிஜ காளையை தடவிக் கொடுத்த உணர்வு ஏற்படுகிறது, பிரதோஷ நாளில் இந்த நந்தியை மக்கள் மொய்ப்பர். குரு பரிகார தலம்: அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் பிரம்மா இங்கு இருக்கிறார். குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும். குழந்தைகளுக்காக பைரவர் வழிபாடு: சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர். அர்த்தஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச்சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை. ஞானஉலா அரங்கேற்றம்: சுந்தரருடன், சேரமான் கயிலாயம் சென்றபோது, சிவனை பெண்ணாக உருவகப்படுத்தி சிற்றிலக்கியம் இயற்றினார். அதை ஐயனார் இத்தலத்தில் அரங்கேற்றம் செய்தார். இவர், இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் "ஞானஉலா அரங்கேற்றிய ஐயனார்' என்ற பெயரில் அருளுகிறார். ஆடி சுவாதியில் "திருக்கயிலை ஞானஉலா' விழாவன்று சுந்தரருக்கும், சேரமானுக்கும் பூஜை நடக்கும். அன்று, சேரமான் கையில் ஞானஉலா சுவடி வைத்து, கயிலாயத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். ஏழாம் தேதி பிறந்தவரா? ராஜகோபுரத்தில் இருந்து 7 நிலைகளைக் கடந்து, 300 அடி தூரத்தில் பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார். ஆனாலும், சுவாமி சன்னதிக்குள் சூரிய வெளிச்சம் இருக்கும்படியாக, கோயில் கட்டப்பட்டுள்ளது. சூரியனுக்குரிய ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது. இதன் மீது வரும் சூரியன், ஏழு நிலைகளையும் கடந்து, தினமும் பிரம்மபுரீஸ்வரரை தரிசிப்பதாக ஐதீகம். பங்குனியில் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். ஏழு நிமிடங்கள் இந்த ஒளி இருக்கும். ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமைவர். இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர். ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இக்கோயில் உள்ளது குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும். திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம். மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை ஸ்தலம். தலபெருமை: வித்தியாசமான அமைப்பு: குருர் பிரஹ்மா; குருர் விஷ்ணு; குருர் தேவோ மகேச்வர; குரு ஸாட்ஷாத் பர ப்ரஹ்மை தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ'' என்ற குருமந்திரப்படி அமைந்த கோயில் இது. கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது. முருகன் வணங்கிய சிவன்: முருகப்பெருமான், அசுரர்களை அழிக்கச் செல்லும்முன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி, அதன்பின் படை திரட்டிச் சென்றாராம். இதனால் "திருப்படையூர்' எனப்பட்ட தலம் "திருப்பட்டூர்' என மருவியதாகச் சொல்வர். முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கிருக்கிறார். எல்லாமே மஞ்சள் நிறம்: பிரம்மா மங்கலம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால், பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை படைத்து, மஞ்சள் பிரசாதம் தருகின்றனர். மற்ற சன்னதிகளிலும் மங்கல சின்னமாகிய மஞ்சள் நிற வஸ்திரங்களையே பயன்படுத்துகின்றனர். பிரம்மன் வழிபட்ட பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள ஈஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தீஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள், சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர். பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார். குருவுக்கு அதிதேவதை பிரம்மா. எனவே, வியாழன் இங்கு விசேஷம். யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம். அதுபோல், தலையெழுத்து மாற தகுதியுள்ளவர்கள், குறைந்த பாவக் கணக்கில் இருப்பவர்கள், பக்திமான்களின் தலைவிதி மாற்றப்பட்டு விடுகிறது. உதாரணமாக நோய் தாக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அது மாறிப் போகிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற விதியுள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும். விரயச் செலவுகள் தடுக்கப்படும். பெயிலாகிக் கொண்டிருக்கும் மாணவன் நன்றாக படிக்க ஆரம்பித்து உயர்நிலைக்குச் செல்வான். நியாயமற்ற கோரிக்கைகளை பிரம்மன் கவனிப்பதில்லை என்பதுடன், மேலும் நமது நிலையை மோசமாக்கி விடுவார். நரசிம்மர் மண்டபம்: நரசிம்மரின் லீலைகளை விளக்கும் வகையில் ஒரு மண்டபத்தில் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், துரோபாவம் என்ற வகையில் நரசிம்மர் அவதாரமானது, இரண்யனுக்கு நல்லொழுக்கம் போதித்தது, அவன் கேட்காததால் சம்ஹாரம் செய்தது, பிரகலாதனுக்கு அருள் செய்தது ஆகிய காட்சிகள் சிற்பங்களாக எழிலுற வடிக்கப்பட்டுள்ளன. நாத மண்டபத்தில் ராவணன், அகந்தையினால் மேருமலையை சிவ, பார்வதியுடன் சேர்ந்து தூக்குவது போலவும், அது முடியாமல் போகவே சாமகானம் இசைத்து சிவனை வசப்படுத்தும் முயற்சியில் இம்மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைந்ததாகவும் கூறப்படுகிறது. பிரம்மன் வழிபட்ட சோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. இந்த மண்டபத்தின் உச்சி மரத்தால் ஆனது. எலும்பு நோய்க்கு பூஜை: பதஞ்சலி மகரிஷி ராமேஸ்வரம் உட்பட 10 தலங்களில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில் இத்தலமும் ஒன்று. இவர் ஐக்கியமான இடத்தில் ஒரு லிங்கமும், ஓவியமும் உள்ளது. அமாவாசையன்று இந்த லிங்கத்திற்கு, தயிர் சாதம் படைத்து பூஜை நடக்கும். வைகாசி சதயத்தன்று இவரது குருபூஜை நடக்கிறது. சித்தர்பாடலில் இத்தலம் "பதஞ்சலி பிடவூர்' எனக் கூறப்பட்டுள்ளது. மனஅமைதி கிடைக்க, எலும்பு தொடர்பான நோய் நீங்க, கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, குருவருள் கிடைக்க திங்கள், வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகின்றனர். பதஞ்சலியின் ஜீவசமாதி: ஜோதிடக்கலையின் தந்தையும், பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவர் பத்து இடங்களில் ஜீவசமாதி அடைந்ததாக ஒரு தகவல் உண்டு. அதில் இத்தலமும் ஒன்று. பதஞ்சலி முனிவரின் சமாதி இக்கோயிலுக்குள் இருக்கிறது. அவர் யோகசூத்ரம் என்ற நூலை எழுதியவர். முக்தியடைந்தாலும் கூட இன்றும் உயிருடன் இருந்து அவர் அருள்பாலிக்கிறார். வேதங்களை ஈசன் அம்பிகையிடமும், அம்பிகை பிரம்மாவிடமும், பிரம்மா நந்தியிடமும், நந்தி தேவர் ரிஷிகளிடமும் சொன்னதாக காஞ்சிப்பெரியவர் சொல்வார். அது இங்கு தான் நிகழ்ந்திருக்குமோ என எண்ண வேண்டியுள்ளது. ஏனெனில் இங்கு பிரம்மபுரீஸ்வரர், பிரம்மநாயகி, பிரம்மா, பிரம்மாண்ட நந்தி, பதஞ்சலி ரிஷி ஆகியோர் உள்ளனர். இவ்வகையில் இது மிக விசேஷமான கோயில். பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களும் இங்கு உள்ளன. எனவே ஜோதிர்லிங்கங்களை தரிசித்த பலன் இங்கு சென்றாலே கிடைத்து விடுகிறது. தெற்கு நோக்கி இருக்க வேண்டிய காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். பிரம்மனுக்கு 36 தீபம் (27 நட்சத்திரம், 9 கிரகம்) ஏற்றி, 108 புளியோதரை உருண்டைகளை படைத்து வழிபடுவது சிறந்தது. ஒன்பது முறை பிரம்மனை வலம் வர வேண்டும். தல வரலாறு: பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார். படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார். அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், ""ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்,'' எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார். படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார். பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார். மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார். என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக,'' என வரமும் கொடுத்தார். அன்று முதல் இந்த பிரம்மன், தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அருள் செய்கிறார். பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்மநயாகி அல்லது பிரம்ம சம்பத்கவுரி எனப்படுகிறாள்

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

poomalai: thirupattur Bragadheswarar

poomalai: thirupattur Bragadheswarar: இது தஞ்சாவூர் கோயிலுக்கும் முற்பட்டதாக தெரிய வருகிறது. இங்குள்ள நந்தியை தடவிக் கொடுத்தால், நிஜ காளையை தடவிக் கொடுத்த உணர்வு ஏற்படுகிறது, ப...