சனி, 29 டிசம்பர், 2012


செவ்வாய், 25 டிசம்பர், 2012


திருப்பள்ளியெழுச்சி (சிவன்) போற்றியென் வாழ்முத லாகிய பொருளே! புலர்ந்தது; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! 1 அருணண்இந் திரன்திசை அணுகினன் இருள்போய் அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழ, நயனக் கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம் திரள்நிறை அருள்பதம் முரல்வன இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே அலைகட லே! பள்ளி எழுந்தரு ளாயே! 2 கூவின பூங்குயில்; கூவின கோழி குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்; ஓவின தாரகை ஒளியொளி உதயத்து ஓருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவ! நற் செறிகழல் தாளிணை காட்டாய்! திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்! எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே! 3 இன்னிசை வீணையர், யாழினர், ஒருபால்; இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்; துன்னிய பிணைமலர்க் கையினர், ஒருபால்; தொழுகையர், அழுகையர், துவள்கையர் ஒருபால்; சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒருபால்; திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும் எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே! 4 பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறி யோம் உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா! சிந்தனைக் கும்அரி யாய்! எங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே! 5 பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார் பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும் மைப்பறு கண்ணியர்; மானுடத் தியல்பின் வணங்குகின் றார்அணங் கின்மண வாளா! செப்புறு கமலங்கள் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! இப்பிறப்பு அறுத்துஎமை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! 6 அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் இதுஅவன் திருவுரு; இவன்அவன்; எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும் மதுவளர் பொழில்சூழ் திருஉத்தர கோச மங்கையுள் ளாய்! திருப் பெருந்துறை மன்னா எதுஎமைப் பணிகொளும் ஆறது கேட்போம்; எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! 7 முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்; மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்? பந்தணை விரலியும் நீயும்நின் னடியார் பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே! செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி, அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய் ஆரமு தே! பள்ளி எழுந்தரு ளாயே! 8 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொரு ளே!உன் தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே! வண்திருப் பெருந்துறை யாய்! வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே! கடலமு தே! கரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்! உல குக்குயி ரானாய்! எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! 9 புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாம் போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் படவும்நின் னலர்ந்தமெய்க் கருணையும் நீயும் அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்! ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே. 10

திங்கள், 24 டிசம்பர், 2012


காஞ்சி காமகோடி மகான் மகா சுவாமிகளின் சொற்பொழிவுகளிடமிருந்து எடுக்கப்பட்ட ஆன்மீக பொன்மொழிகள், 1) சாஸ்திரங்களைத் தெளிவாக அறிந்து அதன்படி மக்களை வழிநடத்தி அதை அஞுசரிப்பவர்தான் ஆசார்யார் 2) சாஸ்திரம் மட்டும் தெரிந்து கொண்டிருந்தால் அவர் வித்வான்தான் 3) சாஸ்திரம் மட்டடும் தெரிந்தால் அவர் - வித்வான். சாஸ்திரம் அஞுபவிப்பவர் - ஞானி சாஸ்திரம் உபதேசம் செய்பவர் - பிரசாரகர் 4) முதலில் அழகாகத் தோன்யதுதான் அப்புறம் உபத்திரமாக போகிறது 5) அவரவர்கள் இருக்கிற இடத்தில் இருந்தால் தான் செளக்கியம் 6) பரமாத்மாவிடம் நம்மையறியாமல் சித்தத்தை சேர்ப்பதுதான் பக்தி 7) உண்மை என்பது அறிவுதான் என்றால் அறிகிற அந்த சக்தியே உண்மை - அதுவே சத்தியம் 8) ஆசைகளை அடக்கி, மாயையை உடைத்தெறி 9) நிறைநது நின்ற ஒன்றை தெரிந்து விட்டால் நிறைந்து போகிறது. 10) சாதாரணமாக ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீட்சண்யம் இருக்கும் 11) மனத்தை அடக்கி, நிலைநிறுத்தி ஈசனிடம் சேர்ப்பது பிராணாயமம் , தியானம் நிஷ்னம் - இதை சொல்வது யோக பாதம் 12) மனத்தை வெற்றி கொண்டவர் உலகத்தை வெற்றி கொள்வான். அந்த வெற்றிக்கு உதவுவது ஞானம் 13) ஈசனை தவிர வேறு பொருள் இல்லை என்ற அனுபவம் வந்து விட்டால் ஆசைக்கு இடமில்லை 14) தினமும் கொஞ்ச நேரமாவது சிவ நாமம் சொன்னால் எல்லா சேமமும் கிடைக்கும் 15) பிறக்கு உதவி செய்யும் போது, இருவரும் மனநிறைவு பெறுவர் 16) நல்ல எண்ணங்கள் இருந்தால் நல்ல செயல்கள் தானாகப் பெருகும் 17) பரோபகாரம் எதுவும் செய்யாத நாளெல்லாம் நாம் இருந்தும் செத்த நாளே 18) அன்பில்லா வாழ்கை வீண் வியர்த்தம் 19) சாந்தம் வந்தால் எல்லா பற்றும் போய்வடும் 20) அழிவில்லாத கடவுடளிடம் செலுத்தும் அன்புக்க அழவேது? 21, நிறை வேறாத ஆசைகளின் இரண்டு உருவங்கள் தான் துக்கமும், கோபமும் 22. நம்மிடமே ஏராளமான தோஷங்களை வைத்துக் கொண்டு பிறருக்கு உபதேசம் செய்தால் அது பிரயோசனப்படாது. 23. கல்விக்கு இரண்டு அம்சங்கள் உண்டு ஒன்று- குருபக்தி, மற்றொன்று விநயம் 24. தாய், தந்தை , குரு இம்மூவரிடமும் அசையா பக்தி கொண்டால் மேன்மை தரும். 25. மான, அவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டை செய்தல் வேண்டும் 26. எக்காலத்திலும், எவ்விஷயத்திலும் திருப்தியை ஏற்படுத்தக் கூடிய தானம் - ஞான தானம் 27.உபகாரம் செய்தால் நமக்கு சித்திக்கிற சித்த சுத்தியே பிரயோசனம் 28. கீர்த்தனம் என்றால் பகவான் புகழைப் பாடுவது 29. வழிபாடு தனியாகச் செய்வதைவிட கூட்டு வழிபாட்டில் உற்சாகம் இருக்கிறது. 30. வாக்கு, மனம், சரீரம், மூன்றும் ஒருவருக்கு சத்தியத்திலே நிலைதது விட்டால் அவர் சொல்வதெல்லாம் சத்தியமாகி விடும். 31, பக்தியுடன் மனசை கடந்து விட்டால் ஞானம் 32. "தான்" என்பதே இல்லையேல் ஒருவன் பரமாத்வே ஆகிவிடுகிறான் அதுதான் அத்வைதம் 33. சேக்கிழார் ரொம்ப அழகாக வேதத்தை ஒரு பெரிய நதியாகவும் அதிலே சைவம் வைஷ்ணவம் முதலிய சம்பிரதாயங்களை பல படித்துறைகளாகவும் சொல்லியிருக்கிறார். 34. வியாதியை போக்க - வைத்தியன். யாகம் வாங்க - பணக்காரன். துக்கம், பிறவிப்பிணி நீக்க - பரமேஸ்வரன் 35. நாம் செய்கின்ற காரியங்களை சுத்தமாக சித்த சுத்தியோடு தர்மமான முறையில் செய்ய ஈஸ்வர பக்தி வேண்டும் 36. சேராததை முடித்து வைப்பது எதுவோ அதுதான் மாயை, எது இன்னதென்று சொல்ல முடியாததே அதுதான் மாயை 37. பரன் என்றால் பெரியவர் பரம புருஷன் என்றால் பெரிய ஆள் - பெரிய ஆள் என்பதே பெருமாள் என்றானது. 38. பிறப்பு என்பது காமனால் உண்டாகிறது. இறப்பு என்பது காலனால் உண்டாகிறது. 39. பிறவி என்று எடுத்துவிட்டால் ஆனந்தம் எப்போதோ கொஞ்சம்தான் ஆனால் துக்கம்தான் அதிகமாக இருக்கிறது. 40, அழியாத வஸ்துவினிடத்தில் பரியம் வைத்தால் அந்த பரியம் அழியாமல் இருக்கும் 41. ஒன்றை ஆராய்ந்து ஒன்றை அறிகிற ஒன்றை செய்கிற, சக்தி யெல்லாம் ஈஸ்வர சக்தியிலிருந்து பிரகாசிக்கின்றன. 42. குருவினடத்திலே அபசாரம் பண்ணி விட்டு ஈஸ்வரவனிடத்தில் போனால் ஒன்றும் நடக்காது. 43. தெய்வ பக்தி, குருபக்தி ஆகிய இரண்டும் ஒவ்வொருவருக்கும் அவசியம் 44. விஞ்ஞான அறிவின் மூலம் வெளியில் இருக்கிற எத்தனையோ பூதங்களை அடக்கும் நாம் நம்மை ஆட்டி வைக்கும் மனம் என்னும் பூதத்தை அடக்க முடியவில்லை. 45, கஷ்டத்தையோ, துக்கத்தையோ, காமத்தையோ தெரிந்து கொள்ள அறிவு சக்தி இல்லையெனில் வாழ்வில் பிரயோசனம் இல்லை 46. புறக்கண்ணால் பார்க்க முடியாததை எல்லாம் அகக் கண்ணால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பார்த்து விடலாம், 47. தவறுகளுக்கு எல்லாம் பிராயசித்தமாக இருப்பது காயத்ரி ஜபம் 48. ஓர் அழகியை பார்த்தால் காமம் வரும் துஷ்டனை நினைத்தால் கோபம் வரும் பரமனை நினைத்தால் மனசு சுத்தமாகும் 49. மனசு அடங்கினால் சுவாசம் அடங்கி உள் உணர்ச்சிக்கு ஏற்றபடி வெளிக் காரியங்கள் நடப்பதை பார்க்கலாம் 50.பக்தி வர வேண்டுமானால் சாந்தம் வரவேண்டும், சத்தியம் வரவேண்டுமானால் சிவச் சின்னங்களை அணிய வேண்டும் 51விதிப்படி மூச்சை வெளியே விடுவதானலும் உள்ளே அடக்குவதனாலும் அமைதி பெறும் 52 தயை (ஈகை) உள்ள இருதயமே வெளியில் தெரியும் அழகு 53 நாக்கை சுத்தமாக்க சிவநாமம். இருதயத்தை சுத்தமாக்க - சிவபக்தி - தியானம் 54 சிவ என்ற இரண்டு எழுத்தை சொன்னாலே பாவம் விலகும் 55 பஸ்மம், ருத்திராட்சம், வில்வம் ஸ்படிகம் ,லிங்கம் , பஞ்சாட்சரம் ஆகியஐந்தும் சிவ சின்னங்கள 56 மூச்சி இல்லாமல் மனிதன் இல்லை வேதம் இல்லாமல் ஈசுவரன் இல்லை 57ஞானம் என்ற நெருப்பினாலே உலகங்களை எல்லாம் எரித்து விடலாம் சிவம் தான் மிஞ்சும் 58 காரியங்களுடைய காரணத்தை தேடிக் கொண்டு போனால் கடைசியில் கிடைப்பது மெய்யான பொருள் 59 நாம் எத்தனையோ காரியங்களை செய்து வருகிறோம், ஆனால் நாம் செய்கிறோம் என்ற அகம்பாவம் நமக்கு வரக்கூடாது 60 நமக்கு அகம்பாவம் இல்லை என நினைத்தாலேயே அகம்பாவம் இல்லாத உயர்ந்த குணத்திலிருந்தே அகம்பாவம் வந்து விடுகிறது 61 உண்மை என்பது வெண்மை அந்த வெண்மை என்பது நீறு அந்த திருநீறு தான் ஆண்டவன் 62 உண்மை பொருளை பூசிக் கொண்டால் உண்மை பொருளின் நினைவு வரும் அதனால்தான் நீறு பூச சொல்கிறது சைவம் 63 சித்தம் என்ற நிலைக் கண்ணாடி மூலம் பரம்பொருள் என்ற உண்மை வஸ்துவை பார்க்கவேண்டும் 64 நல்லது - காரணம் இல்லாத அருள். கஷ்டம் - காரணத்துக்காக ஏற்படும் அருள் 65 உண்மையிலேயே நம்முடைய கெட்ட குணம் எவ்வளவு நல்ல குணம் எவ்வளவு என்று பிரித்துப் பார்த்தால் கெட்ட குணமே மலைபோல் இருக்கும் 66ஒரு முகப்படுத்த சித்தம் ஆடாமல் இருக்க வேண்டும் கெட்ட எண்ணம் என்ற அழுக்கு படிந்திருந்தால் ஒன்றும் தெரியாது 67 தினமும் படுக்கும் முன் அன்று நாம் செய்த தப்பை குறித்துக் கொண்டு நாளை முதல் பண்ணாமல் இருக்க பகவானை பிராத்திக்க வேண்டும் 68 நாம் பண்ணின பாவத்திற்காக அழுது கொண்டிராமல் அந்தமாதிரி புத்தியைஇனி கொடுக்கவேண்டாம் என பிராத்திப்பது நமது கடமை 69 ஆண்டவன்தான் இந்த உலகத்திற்கு எல்லாம் மேலான காரணம் அவன் ஒருவனே உண்மை பொருள் 70 வாழ்வில் ஆனந்தம் வேண்டுமென்றால் உண்மையான அந்த பொருளுக்காகத்தான் வாழ வேண்டும் 71 இந்த பொய்யான உடம்பிற்கு மெய் என்று பெயர் பெயராவது மெய் என்று இருக்கட்டும் இந்த உடம்பிற்கு 72 ஒரே தெய்வத்தை பல ரூபத்தில் வழிபடுவது பல தெய்வங்கள் இருப்பதாக என்னுவதாகாது 73 அன்டை வீட்டுக்காரனை சகோதரானாக நினை 74 விரோதியை ந்ண்பனாக நினை 75 உன்னிடம் மற்றவர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று நினைக்கிறாயோ அப்படியே மற்றவர்களிடமும் நீயும் இரு 76 சாப்பிடுகிறவனை விட சாப்பாடு போட்டவனுக்குத்தான் அதிக ஆனந்தம் இருக்கிறது 77 மந்திரங்கள் எல்லாவற்றிக்கும் மூலமாக இருப்பது பிரணவம் 78 திரு நீறும் திருமண்ணும் ஒரே தத்துவத்தைதான் காட்டுகின்றன 79 நமக்கு சரீரம் தான், உயிர் தெரியவில்லை, அதனால் தான் சரீரத்திற்கு மெய் என்று பெயர் வைத்தார்கள் 80 நமக்கு தெரியாமல் இருக்கின்ற உயிர் போய் விட்டதனால் அப்பவும் இந்த மெய் (உடம்பு) ஒன்றுக்கும் பிரயோசனமற்றபெர்ய்யாகி விடுகிறது 81 பக்தி பண்ணுவதற்கு பலன் பக்தியால் கிடைக்கிற மன நிறைவுதான் 82 சுக துக்கங்களில் சலனமடையாமல் தானும் மற்றவர்களையும் ஆனந்தமாக இருக்க செய்வது தான் யோகம் 83 சித்த சுத்தி மோட்சத்திலேயே கொண்டு போய் சேர்க்கும் 84 தனது என்ற விருப்பு வெறுப்பில்லாமல் சாஸ்திரத்திற்கு கட்டுபடுவது முக்கியம் 85 ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது 86 நம் கோபம் எதிராளியை மாற்றாது அவனுக்கும் நம்மிடம் கோபத்தை உண்டாக்குவதுதான் அதன் பலன் 87 ஒருவன் தப்புப் பண்ணிகிறான் என்றால் கோபம் கொள்கிறோமே அப்படியானால் நாம் தப்பு பண்ணாதவர்களா? 88 அன்பினாலேயே பிறரை மாற்றுவது தான் நமக்கு பெருமை அதுதான் நிலைத்து நிற்கும் 89 நாம் தப்பே செய்யவில்லை யென்றால் அன்பு மயமாகி விடுவோம் 90 நம் கோபத்தினால் நமக்கே தான் தீங்கு செய்து கொள்கிறோம் 91 அன்பு நமக்கு ஆனந்தம் எதிராளிக்கும் ஆனந்தம் 92 ஆசை என்று அலைந்தால் சாந்தி என்பதே ஒருநாளும் இல்லை 93 துக்கம் உன்னிடம் ஒட்டாமல் பிரிந்து தள்ளிவிட்டால் அதுவே யோகம் 94 கானல் நீர் போன்றதே உலக மாயையும் 95 ஆசைக்கும் துவேசத்துக்கும் காரணம் அகங்காரம் அது தொலைந்தால் எந்தக் காரியத்திலும் உயர்வு தாழ்வு தெரியாது 96 நமக்கு அது வேண்டும் இதுவேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிறவரையில் நாம் தரித்ததிரர்கள் தான் 97 எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாது என்று நிச்சயிப்பதில் சாஸ்திரமே நமக்கு பிரமானம் 98 தியானம் பண்ணாமல் வெறும் பூசை மட்டும் செய்தால் மதத்தை வளர்க்க முடியாது 99 துக்கம், கோபம் இவற்றோடு உயிர் பிரிந்தால் அதே தன்மையோடே ஜனனம் வரும் 100 ஜன்னம் எடுத்தது ஜன்மத்தை போக்கிக் கொள்ளத்தான், 101 மூச்சு இல்லாமல் மனிதன்இல்லை சேதம் இல்லாமல் ஈஸ்வரன் இல்லை

வியாழன், 15 நவம்பர், 2012

Saliyar Samuga varalaru pardiya ceppadu


சாலிய இன மக்களின் வரலாறு கூறும் பட்டயம் கண்டுபிடிப்பு தினமணி நாளிதழ் மூலம்துரை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப் பட்ட செப்பேட்டு பட்டத்தினையும் அதன் செய்தி துளியினையும் முகநூல் அன்பர்களுக்காக வெளியிடுகிறேன் அன்பன். வை, பூமாலை சுந்தரபாண்டியம்

சனி, 13 அக்டோபர், 2012

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): பைரவர் அருளை நமக்கு அருளும் பைரவ சஷ்டி!!!

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): பைரவர் அருளை நமக்கு அருளும் பைரவ சஷ்டி!!!: ஆன்மீகக்கடலின் அத்தனை பதிவுகளையும் வாசித்துவிட்டவர்கள் இந்தப்பதிவின் மூலமாக வழிகாட்டப்பட்டிருக்கும் ஸ்ரீகாலபைரவர் வழிபாட்டைப்...

வெள்ளி, 28 செப்டம்பர், 2012


ஆன்மீக அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் தங்களின் வாழ்க்கையில் சனி திசையால் படும் கஷ்டங்களை நிவர்த்தி செய்து அதன் தாகத்தை குறைக்க தேய்பிறை அஸ்டமி சனிக்கிழமைகளில் கால பைரவருக்கு முறைப்படி பூஜை செய்து தங்களின் கஷ்டங்களில் குறைத்து நிவாரணம் பெற வேண்டுகிறோம், இதில் கண்ட செய்தி துளியின் மூலம்அருள்மிகு வைகுண்டமூர்த்தி அய்யனார் கோவிலில் கால பைரவருக்கு பரிகார பூஜை செய்து மூலம் பயன் பெற அன்புடன் வேண்டுகிறோம் அன்புடன், வை, பூமாலை சுந்தரபாண்டியம்

புதன், 19 செப்டம்பர், 2012



உ ஓம் மகா கணபதியே ஹ! விநாயகர் சதுர்த்தி இந்து மத சடங்குகளில் நாம் எந்த ஒரு காரித்தை தொடங்கினாலும் முதலில் விநாயகரை வணங்கிவிட்டு விநாகர் துதி பாடல்கள் ஓதித்தான் தொடங்குவது நமது இந்துமத வழிமுறையாகும், ஏன் எந்த ஒரு எழுத்தொரு ஏட்டிலும் எழுதும் முதல் எழுத்து பிள்ளையார் சுழி ("உ")போட்டுத்தான் எழுத்து பதிவினை தொடங்குவதும், மத சடங்குகள் யாகங்கள் செய்யும் போது பிள்ளையார் சிலை அல்லது மஞ்சள், கழிமண் அல்லது பசுஞ்சாணம் இவற்றினால் பிள்ளையார் பிடித்து, அதன் மேல் அருகம் புல் சொருகி அதனையே விநாயகராக்கி வேத மந்திரங்கள் ஒலித்துதான் வேலையை - யாகங்களை - சமய வழி பாடுகளை தொடங்குவது நமது இந்து முறை வழிமுறையாகும், இது மட்டுமல்லாது காட்சிக்க எளியவனாய் எங்கும் பார்க்கும் நோக்கும் இடங்களில் குளக்கரைகள் அரசமரம் வேப்பமர அடிவாரங்கள் முச்சந்திகள் என பார்க்கும் இடமெல்லாம் பிள்ளையார் கோவிலாகத்தான் காணப்படும், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முழுமுதற்கடவுளான விநாயகர் பிறந்த தினமே விநாயகர் சதுர்த்தியாக உலகம் முழுவதுமுள்ள இந்துக்களால் மிக விமர்சியாகக் கொண்டாடப்படுகிறது, சதுர்த்தி விரத வரலாறு. நான் முகனின் கொட்டாவியில் பிறந்த சிந்தூரணை சம்காரஞ் செய்ய கஜாணன மூர்த்தியாய் அவதாரம் செய்த நாள் ஆவணி மாதம் பூர்வ பட்ச சதுர்த்தி இந்நாளில் சிவபெருமானும் உமாதேவியாரும் அக்கடவுளைப் பூசித்தனால் இவ்வுலகில் யாவரும் ஆண்டுதோறும் இந்நாளில் விநாகய சதுர்த்தி விரத மேற் கொள்ளப் பட்டு அந்நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் பெயர் காரணம். தன்னை வணங்கிணவர்க்கு விக்கினத்தை நீக்குவோனும், அவ்வாறு வணங்காதவர்க்கு விக்கினத்தை தருபவரும், தனக்கு மேல் நாயகரில்லாதவரும் ஆதலால் இப்பெயர் வந்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. விநாயகரை பிள்ளையார் என்று கூறினாலும், இவரை பல பெயர் கொண்டு தங்களுக்கு ஏற்ப நற்செயல்கள் புரிந்த காரணத்தாலும், செல்லப் பெயராகவும் பற்பல நாமங்களில் அழைக்கப் பட்டு வழிபடுகின்றனர். சிந்தாமணி விநாயகர். வக்ர துண்ட விநாயகர், கலாதார், பாலசந்திரன், கபில விநாயகர், சமுகர், கஜானன், தூமகேது, உண்டுவிநாயகர், சித்தி விநிாயகர், ஆழக்கரிசி விநாயகர், வல்லப விநாயகர், வழிவிடுவிநாயகர் என பல பெயர்களால் அழைக்கப் படுபவர். விநாயகர் திருவிளையாடல் இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தி முனிவரிடம் இருந்த கமண்டல நீரை காக உருவம் கொண்டு கவித்து, தென்னாட்டில் காவேரி நதியாக பாயச்செய்தும் சீர்காழியில் உள்ள நந்தவனத்தை செழிக்க செய்தும், திருவிளையாடல் புரிந்தார், விநாயகர் அகத்தியரின் கமண்டலத்தை கவித்ததால் கோபம் கொண்ட அகத்தியர் அவரை தலையில் கொட்ட முயன்றபோது அவரின் கைக்கு தப்பித்து தரிசனம் கொடுத்தவர் விநாயகர், பிள்ளையார் வழிபாட்டிற்கென சில அம்சங்கள் சிதறு தோங்காய் போடுதல், நெற்றியில் குட்டிக் கொள்தல், தோப்புக்கரணம் போடுதல் ஆகியவை எத்தெய்வத்திற்கும் இல்லாத வழிமுறை வழிபாடாகும் மற்ற சுவாமிகளை தரிசனம் செய்வதென்றால் அதற்காக காலம் பார்த்து குளித்து முழுகி அர்ச்சனை சாமான்கள் வாங்கி கோவிலுக்குப்போய் பிரகாரம் சுற்றி வரும்போது முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டு சுவாமி சன்னதிகளை தூரத்திலிருந்தே தரிசிப்போம் ஆனால் விநாயகர் கோவில் விநாயகர் சன்னதியில் மட்டுமே பக்கத்தில் நின்று தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். அத்தோடு இல்லாமல் காண்போருக்கு எளியவராய் செல்லும் வழிகளிலெல்லாமும், முச்சந்தி அரச-வேப்பமரத்தடியிலும் குளத்தங்களைகளிலும், நாம் நினைக்கும் இடமெல்லாம் பிள்ளையார் இருப்பார் ,அவரை பார்த்த மாத்திரத்ததில் கைகூப்பி விட்டு, நெற்றியில்- தலையில்- குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு விட்டு நடையை கட்டிவிடுகிறோம். இதிலேயே நமக்கு சொல்லத் தெரியாத ஒரு நிமமதி சந்தோசம் கிடைக்கிறது. பிள்ளையாரை நினைக்கும்போது அவ்வையாரையும் நாம் சேர்த்து நினைத்தால் இரட்டிப்பு அநுக்கிரகம் கிடைக்கும். விநாயகர் அகவல் பாடி நாம் எளிய தமிழில் வணங்க அகவல் தந்தவர் அவ்வையார் . அவ்வையின் அகவலில் மகிழ்ந்த விநாயகர் அவரை தம் துதிக்கையினால் தூக்கி ஏந்தி கயிலையில் சிவபெருமான் முன்னிலையில் ஆதியுலா அரங்கேற்றம் செய்ய எழுந்தருளும் சேரமான் பெருமான் ஸ்ரீசுந்தரர் ஆகியோர் செல்லும் முன்பே அங்கு கொண்டு சேர்த்த பெருமை விநாயகருக்கே சாரும். விநாயகர் பற்றிய துதிப்பாடல்கள் வேத மந்திரம், சுக்லம் பரதம் விஷ்னும சசிவர்ணம் சதுர்பஜம் ப்ரசன்ன வதனம் த்யோயேத் ஸ்வவிக்னோப சாந்தயே காயத்திரி மந்திரம் ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தன்னோ தந்திப் பிரசோயாத் திருமந்திரம் ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்திரன் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றிகின்றேனே! - திரு மூலர் கபிலர் திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை - கபிலர் ஒளவையார் பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ்மூன்றும் தா -அவ்வையார் வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக் கொண்டு துபபார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு - அவ்வையார் கல்லுருவ ஞானக் கனிவே கரிமுகமே தொல்லுலகத் துன்பந்தீர் தூயவ - இல்லமெலாம் குழும் கலைதேர் தொழிழே அருளன்பு வாழும் கருணை வழி! - விணமணி
பிள்ளையார் நோன்பு இந்து மத வழிபாட்டில் தென்தமிழ்நாட்டிலும் வடநாட்டிலும் பிள்ளையார் நோன்பு வெகு சிற்ப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, பிள்ளையார் நோன்பு முறை சமூகம் முழுவதிலும் ஒரே அமைப்பில் இருப்பதால் நோன்பு நாள் மாலையில் விநாயகப் பெருமானது திரு உருவத்தை வீட்டில் புனிதமான இடத்தில் எழுந்தருளுவித்து நிவேதனத்திற்காக எள்,நெல் முதலியனவும், பொரி பணிகாரம் அப்பம் வெல்லப்பாகு கடலைஉருண்டை முதலியனவும் ஆசாரத்துடன் நிவேதித்து ஆவாரம் பூவால் செண்டு கட்டி தாமரை இழை தூபம் ஏற்றி வாழைப்பழம் கனிவகைகள் வைத்தும் தேங்காய் மற்றும் தூப தீப வகைகளுடன் சுவாமி முன் வைத்து தோத்திரங்கள் ஓதி வணங்கிய பின் சுவாமிக்கு படைத்த நிவேத்தியங்களை உண்டு நோண்பை முடிப்பர் வை.பூமாலை சுந்தரபாண்டியம்


உ ஓம் மகா கணபதியே ஹ! விநாயகர் சதுர்த்தி இந்து மத சடங்குகளில் நாம் எந்த ஒரு காரித்தை தொடங்கினாலும் முதலில் விநாயகரை வணங்கிவிட்டு விநாகர் துதி பாடல்கள் ஓதித்தான் தொடங்குவது நமது இந்துமத வழிமுறையாகும், ஏன் எந்த ஒரு எழுத்தொரு ஏட்டிலும் எழுதும் முதல் எழுத்து பிள்ளையார் சுழி ("உ")போட்டுத்தான் எழுத்து பதிவினை தொடங்குவதும், மத சடங்குகள் யாகங்கள் செய்யும் போது பிள்ளையார் சிலை அல்லது மஞ்சள், கழிமண் அல்லது பசுஞ்சாணம் இவற்றினால் பிள்ளையார் பிடித்து, அதன் மேல் அருகம் புல் சொருகி அதனையே விநாயகராக்கி வேத மந்திரங்கள் ஒலித்துதான் வேலையை - யாகங்களை - சமய வழி பாடுகளை தொடங்குவது நமது இந்து முறை வழிமுறையாகும், இது மட்டுமல்லாது காட்சிக்க எளியவனாய் எங்கும் பார்க்கும் நோக்கும் இடங்களில் குளக்கரைகள் அரசமரம் வேப்பமர அடிவாரங்கள் முச்சந்திகள் என பார்க்கும் இடமெல்லாம் பிள்ளையார் கோவிலாகத்தான் காணப்படும், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முழுமுதற்கடவுளான விநாயகர் பிறந்த தினமே விநாயகர் சதுர்த்தியாக உலகம் முழுவதுமுள்ள இந்துக்களால் மிக விமர்சியாகக் கொண்டாடப்படுகிறது, சதுர்த்தி விரத வரலாறு. நான் முகனின் கொட்டாவியில் பிறந்த சிந்தூரணை சம்காரஞ் செய்ய கஜாணன மூர்த்தியாய் அவதாரம் செய்த நாள் ஆவணி மாதம் பூர்வ பட்ச சதுர்த்தி இந்நாளில் சிவபெருமானும் உமாதேவியாரும் அக்கடவுளைப் பூசித்தனால் இவ்வுலகில் யாவரும் ஆண்டுதோறும் இந்நாளில் விநாகய சதுர்த்தி விரத மேற் கொள்ளப் பட்டு அந்நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் பெயர் காரணம். தன்னை வணங்கிணவர்க்கு விக்கினத்தை நீக்குவோனும், அவ்வாறு வணங்காதவர்க்கு விக்கினத்தை தருபவரும், தனக்கு மேல் நாயகரில்லாதவரும் ஆதலால் இப்பெயர் வந்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. விநாயகரை பிள்ளையார் என்று கூறினாலும், இவரை பல பெயர் கொண்டு தங்களுக்கு ஏற்ப நற்செயல்கள் புரிந்த காரணத்தாலும், செல்லப் பெயராகவும் பற்பல நாமங்களில் அழைக்கப் பட்டு வழிபடுகின்றனர். சிந்தாமணி விநாயகர். வக்ர துண்ட விநாயகர், கலாதார், பாலசந்திரன், கபில விநாயகர், சமுகர், கஜானன், தூமகேது, உண்டுவிநாயகர், சித்தி விநிாயகர், ஆழக்கரிசி விநாயகர், வல்லப விநாயகர், வழிவிடுவிநாயகர் என பல பெயர்களால் அழைக்கப் படுபவர். விநாயகர் திருவிளையாடல் இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தி முனிவரிடம் இருந்த கமண்டல நீரை காக உருவம் கொண்டு கவித்து, தென்னாட்டில் காவேரி நதியாக பாயச்செய்தும் சீர்காழியில் உள்ள நந்தவனத்தை செழிக்க செய்தும், திருவிளையாடல் புரிந்தார், விநாயகர் அகத்தியரின் கமண்டலத்தை கவித்ததால் கோபம் கொண்ட அகத்தியர் அவரை தலையில் கொட்ட முயன்றபோது அவரின் கைக்கு தப்பித்து தரிசனம் கொடுத்தவர் விநாயகர், பிள்ளையார் வழிபாட்டிற்கென சில அம்சங்கள் சிதறு தோங்காய் போடுதல், நெற்றியில் குட்டிக் கொள்தல், தோப்புக்கரணம் போடுதல் ஆகியவை எத்தெய்வத்திற்கும் இல்லாத வழிமுறை வழிபாடாகும் மற்ற சுவாமிகளை தரிசனம் செய்வதென்றால் அதற்காக காலம் பார்த்து குளித்து முழுகி அர்ச்சனை சாமான்கள் வாங்கி கோவிலுக்குப்போய் பிரகாரம் சுற்றி வரும்போது முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டு சுவாமி சன்னதிகளை தூரத்திலிருந்தே தரிசிப்போம் ஆனால் விநாயகர் கோவில் விநாயகர் சன்னதியில் மட்டுமே பக்கத்தில் நின்று தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். அத்தோடு இல்லாமல் காண்போருக்கு எளியவராய் செல்லும் வழிகளிலெல்லாமும், முச்சந்தி அரச-வேப்பமரத்தடியிலும் குளத்தங்களைகளிலும், நாம் நினைக்கும் இடமெல்லாம் பிள்ளையார் இருப்பார் ,அவரை பார்த்த மாத்திரத்ததில் கைகூப்பி விட்டு, நெற்றியில்- தலையில்- குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு விட்டு நடையை கட்டிவிடுகிறோம். இதிலேயே நமக்கு சொல்லத் தெரியாத ஒரு நிமமதி சந்தோசம் கிடைக்கிறது. பிள்ளையாரை நினைக்கும்போது அவ்வையாரையும் நாம் சேர்த்து நினைத்தால் இரட்டிப்பு அநுக்கிரகம் கிடைக்கும். விநாயகர் அகவல் பாடி நாம் எளிய தமிழில் வணங்க அகவல் தந்தவர் அவ்வையார் . அவ்வையின் அகவலில் மகிழ்ந்த விநாயகர் அவரை தம் துதிக்கையினால் தூக்கி ஏந்தி கயிலையில் சிவபெருமான் முன்னிலையில் ஆதியுலா அரங்கேற்றம் செய்ய எழுந்தருளும் சேரமான் பெருமான் ஸ்ரீசுந்தரர் ஆகியோர் செல்லும் முன்பே அங்கு கொண்டு சேர்த்த பெருமை விநாயகருக்கே சாரும். விநாயகர் பற்றிய துதிப்பாடல்கள் வேத மந்திரம், சுக்லம் பரதம் விஷ்னும சசிவர்ணம் சதுர்பஜம் ப்ரசன்ன வதனம் த்யோயேத் ஸ்வவிக்னோப சாந்தயே காயத்திரி மந்திரம் ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தன்னோ தந்திப் பிரசோயாத் திருமந்திரம் ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்திரன் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றிகின்றேனே! - திரு மூலர் கபிலர் திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை - கபிலர் ஒளவையார் பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ்மூன்றும் தா -அவ்வையார் வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக் கொண்டு துபபார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு - அவ்வையார் கல்லுருவ ஞானக் கனிவே கரிமுகமே தொல்லுலகத் துன்பந்தீர் தூயவ - இல்லமெலாம் குழும் கலைதேர் தொழிழே அருளன்பு வாழும் கருணை வழி! - விணமணி
பிள்ளையார் நோன்பு இந்து மத வழிபாட்டில் தென்தமிழ்நாட்டிலும் வடநாட்டிலும் பிள்ளையார் நோன்பு வெகு சிற்ப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, பிள்ளையார் நோன்பு முறை சமூகம் முழுவதிலும் ஒரே அமைப்பில் இருப்பதால் நோன்பு நாள் மாலையில் விநாயகப் பெருமானது திரு உருவத்தை வீட்டில் புனிதமான இடத்தில் எழுந்தருளுவித்து நிவேதனத்திற்காக எள்,நெல் முதலியனவும், பொரி பணிகாரம் அப்பம் வெல்லப்பாகு கடலைஉருண்டை முதலியனவும் ஆசாரத்துடன் நிவேதித்து ஆவாரம் பூவால் செண்டு கட்டி தாமரை இழை தூபம் ஏற்றி வாழைப்பழம் கனிவகைகள் வைத்தும் தேங்காய் மற்றும் தூப தீப வகைகளுடன் சுவாமி முன் வைத்து தோத்திரங்கள் ஓதி வணங்கிய பின் சுவாமிக்கு படைத்த நிவேத்தியங்களை உண்டு நோண்பை முடிப்பர் வை.பூமாலை சுந்தரபாண்டியம்

சனி, 8 செப்டம்பர், 2012

What is aanmeegam? | எது உண்மையான ஆன்மீக வாழ்கை தெரியுமா?

What is aanmeegam? | எது உண்மையான ஆன்மீக வாழ்கை தெரியுமா?

Temple News | News | Om Mantra | ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் தெரியுமா?

Temple News | News | Om Mantra | ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் தெரியுமா?

Srivilliputhur Palgova | ஸ்ரீவில்லிப்புத்தூரில் பால்கோவா சிறப்பு பெறுவது ஏன் தெரியுமா?

Srivilliputhur Palgova | ஸ்ரீவில்லிப்புத்தூரில் பால்கோவா சிறப்பு பெறுவது ஏன் தெரியுமா?

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): தினசரி வாழ்வில் நாம் செய்ய வேண்டிய கடமைகள்-2

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): தினசரி வாழ்வில் நாம் செய்ய வேண்டிய கடமைகள்-2: 21.நம்மில் பலர் அசைவம் சாப்பிடும் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார்கள்;அது தப்பில்லைதான்;ஆனால்,நமது பிறந்த ஜாதகப்படி சில பரிகார...

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

கல்விச் செருக்கு படித்த குப்பைகளை நம் தலைகளில் திணித்து
இருக்கின்ற மூளையை வெளியே தள்ளி விடுகின்றது.
-         கோல்டன்
கேலியின் பெருமை கேட்பவர் செவியைப் பொறுத்தது. அது ஒரு போதும் சொல்பவர் நாவில் இல்லை.
-         ஷேக்ஸ்பியர்
சணலை  நெருப்பில் இருந்து ஒதுக்கி வைக்கவும். இளைஞனை சூதாட்டத்தில் இருந்து ஒதுக்கி வைக்கவும்.
-         ஃபிராங்க்ளின்

சனி, 18 ஆகஸ்ட், 2012

Daily tips


நாம் வாழும் போது உலகம் முழுவதையும் வளைத்துக் கட்டிக் கொள்ள விரும்புகிறோம். ஆனால் இறந்த பிறகு தான் எவ்வளவு சிறிய இடம் நமக்குப் போதுமானது என்று தெரிகிறது.
-         மாசிடோனிய மன்னர் பிலிப்

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012



Lost jewelry was the most common property insurance claim.
தினமும் ஒரு துளி
கடலில் மூழ்கினால் முத்து எடுக்கலாம்
கடனில் மூழ்கினால் சொத்தை இழக்கலாம்
துளித்தவர் : ??????????

வை,பூமாலை. சுந்தரபாண்டியம்

poomalai: தினமும் ஒரு துளி

poomalai: தினமும் ஒரு துளி: தினமும் ஒரு துளி தினமும் ஒரு துளி ஏழ்மை கடவுளின் விருப்பமல்ல, நீ நிரந்தரமாக ஏழையாக இருக்க வேண்டுமென்று யாரும் சொல்லவில்லை. உன் மனத்த...

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

தினமும் ஒரு துளி

தினமும் ஒரு துளி
துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு!
ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!
தெளித்தவர் : பெஞ்சமின்

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): நாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா? பகுதி 2

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): நாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா? பகுதி 2: ஐம்புலன்களும் ஒன்றாக ஒரே நேரத்தில் செயல்படுவது தாம்பத்திய நடவடிக்கையில் ஈடுபடும்போது மட்டுமே! இன்றைக்கு அரசியல் நம்மை ஆட்டிப்படைக்கிற...

சனி, 28 ஜூலை, 2012


ஆழ் மனதின் அற்புதங்கள் - 2 ஆழ் மன சிந்தனைக்கு அதன் வெற்றிக்கு அடிப்படையாக அமைவது குறிக்கோளுடன் சேர்ந்த எண்ணமும் முக்கியத்துவம் பெறுகிறது, குறிக்கோளின் வலுவினை விளக்க கீழ்கண்ட எடுத்துக்காட்டு உதாரணமாக அமைகிறது, ஒரு தடவை அமெரிக்க ஜனதிபதி ஜான்கென்னடி ஒரு பள்ளியில் பள்ளி மாணவர்களுடன் சகசமான முறையில் உறையாடும் போது ஒரு மாணவனைப் பார்த்து புன்னகையுடன் - உன் எதிர்காலம் என்ன? - என்று கேட்டார் உடனே அவன் பளீரென்று இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்க வேண்டும் இது தான் என் லட்சியம் என்றான், உடனே ஜனதிபதியும் நன்று என்று வாழ்த்தி சென்றார், அந்த பள்ளி மாணவனின் லட்சியம் - குறிக்கோள் - எண்ணம் ஜனதிபதியாகவேண்டுமென்ற உயர்ந்தஆழ்மன சிந்தனை அவனை அமெரிக்க ஜனதிபதியாகவே ஆக்கியது, அது வேறுயாருமல்ல ..... அவன்தான் புகழ்பெற்ற பில்கிளிண்டன் எனவே தீர்ககமான தீர்மாணமே புகழின் உச்சிக்கும் தான் நினைத்த செயலுக்கு கால்கோளாக அமைகிறது,மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற பழமொழியும் இதனையே விளக்கிறது. எண்ணமே திண்ணமாகி அதுவே மனத்திரையில் ஆழமாக பதிந்து நம் எண்ண உணர்வுகளே - இந்தபிரபஞ்மென்ற வாயுமண்டலத்தில் எலக்ட்ரானிக் - அலைவரிசைகள் போல நம் மூளைியின் அலை வரிசைகளினால் தூண்டப்பட்டு அது வே செயலாக மாறுகிறது. ஒருவரின் எண்ணங்கள் முற்பிறவியில் தான் எதன்பால் மிகுந்த அன்பு செலுத்தி அதனையே சர்வ சதா காலமும் எண்ணிக்கொண்டவனின் எண்ணங்களே அடுத்த பிறவியில் அதுவாகவே பிறப்பான் என்பது மூததையர்கள் கண்ட உண்மை இதனையே விஜய் டிவி மகான்கள் என்ற நிகழ்ச்சியில் மான - மீன் கதையாக ஒரு ஆச்சாரியார் விளக்குவது ஒளிபரப்பட்டது, அதில் ஒரு மகா முனிவர் கடுமையாக தவங்கள் பெற்று காட்டில் தனியாக ஒரு ஆஸ்ரமத்தில் வாழ்ந்து வரும்போது அதிகாலையில் அருவியில் நீராட சென்றுள்ளார் அப்போது அவர் பார்வையில் அருவியின் அருகிலுள்ள சுனையில் நிறைமாத மான் ஒன்று நீர் அருந்திக் கொண்டிருந்தது இதனை ஒரு சிறுத்தை பார்த்து விட்டது அதனைக் கண்ட மான் உடனே உயிர் பதறி பாறையின் இடுக்குக்ள வழியாக தாவித்தாவி சென்றது, இதன் வேகத்திலும் பயத்திலும் தன் குட்டியை ஈன்றுவிட்டது பின்னும் ஓடும் போது தாய்மானை சிறுத்தை கடித்து உணவாக்கி விட்டது, இந்த நிகழ்வை கண்டு கொண்டிருந்த முனிவர் அனாதையாக உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் குட்டி மானை தானே எடுத்து வந்து ஆசிரமத்தில் வைத்து வளர்த்து வந்தார், தானே நேரிடையாக உணவழித்து அதனுடன் தன் வாழ்நாள் முழுவதும் அதனுடனயே கழித்து வந்தார், மான் வளர்ச்சி பெற்றது, முதிர்ச்சி பெற்ற முனிவரோ நமக்கு பின் இந்த மானின் கதி என்ன? என்பது பற்றி கவலையிலேயே தன் உயிர் பிரிந்தது, அன்னாரின் ஆழ்மனம் அந்த மான் மீதே இருந்ததால் அடுத்த பிறவியில் மானாகவே பிறந்தார் என கதையை சிந்தனையின் வழியே செயல் என்று கதையை முடித்தார், இது போன்று மீன் கதையை கூறுகையில் யோக ஆசனநிலை - தவ நிலை என்ற அடிப்படையில் ஒரு முனிவர் தன் ஆழ்மனதை உள்ளடக்கி நீருக்கு அடியில் தவம் செய்து கொண்டிருந்தார், அப்போது அவரின் எண்ண அலைகள் தனது ஞான உலகிலிருந்து பிரிந்து சுற்றுப்புறத்தின் பால் கவனம் ஈர்க்கப்பட்டது. அப்போது தனது உடலை சுற்றி ஒரு மீனின் சந்ததிகள் சுமார் ஆயிரக்கணக்கான மீன்கள் உணவை தேடுவதும், சந்தோசமாக அங்குமிங்கும் கூட்டமாக அலைவதைப் பார்த்து அந்த நிலை வாழ்க்கையின் பால் மனம் ஈர்க்கப்பட்டார். உடனே தான் செய்த தவத்தை விட்டுவிட்டு திருமணம் செய்யவேண்டுமென்ற எண்ணம் கொண்டு தான் பெற்ற தவ வலுமையால் இளமை உருவம் கொண்டு ஒரு மன்னனின் பெண்களான சுமார் 100 பேரை மனமுடித்து இல்லரத்தில் தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்து தான் எண்ணம் கொண்ட மீன் குஞ்சுகள் போல் சுமார் ஆயிரக்கணக்கான வம்சா வாரிசுகளை பெற்றார், எனவே இந்த தவ முனியின் எண்ணமும் சிந்தனையும் ஆழ்மன சிந்தனையின் செயலாகவே வெற்றி கண்டது. என்று விளக்கமளித்தார் ஆச்சாரியார், எனவே ஆழ்மனதின் சிந்தனைகள் குறிக்கோள்களாகவும்,குறிக்கோள்கள் சிந்தனை படலங்களாகவும் அதுவே காந்த அலைகளாகவும் மாறி உண்மை நிகழ்வுகளாகவே அமைய வழி செய்கிறது. எந்த காரியமும் என்னால் முடியும் அது நடந்தே தீரும் என நம்பிக்கை உண்டு என்று மீீண்டும் மீண்டும் கூறி ஆழ்மனதை திடப்படுத்தினால் அதுவே மந்திர சக்தியாக மாறி அற்புதமாக மாற்றிக் காட்டுகிறது, இந்த முன்னேற்ற பாதையில் பயணிக்க குறுக்கீடுகளாக மூன்று எதிரிகளை சந்திக்கலாம், அதில் ஒன்று உங்களது எதிர்மறையான சிந்தனைகள் - நன்மையையோ நோக்கி பயணிககையில் நன்மையான பயன்கள் எவ்வாறு உருவாகிறதோ அது போலவே உங்களின் எதிர்மறை ஆழ்மனச்சிந்தனையால் எதிர்மறை விளைவுகளையும் சந்திக்க முடியும், எனவே இதனை முறியடிப்பது உங்கள் சிந்தனையில்தான் உள்ளது. இதற்கு அடுத்தாற்போல் - அவ நம்பிக்கை - பொதுவாக மனிதர்கள் அவநம்பிக்கையில் - நம்பிக்கையுடையவர்களாகவும், நம்பிக்கையில் அவநம்பிக்கை யுடையவர்களாகவும் வாழ்கின்றனர், எனவே அவர்களின் தோல்விக்கு இதுவும் காரணமாகிறது. அடுத்து முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது - தன்பயம் - தன்பயம், மனிதன் உயர்ந்த குறிக்கோள் கொள்ளாமல் இருப்பதற்கும் பெரிய காரியங்கள் செய்யாமற் போவதற்கும் காரணம் அவன் உள்ளத்தில் புதைந்திருக்கும் அச்சமே. மற்றவர்களின் விமர்சனத்தால் நம் அச்ச உணர்வு மிகப்படுகிறது. இதுவே ஆழ்மன சிந்தனைக்கு தடைகல்லாகவும், உஙகள் மனக்கவலைக்கு ஆஸ்திவாரமாகவும் செயல்படுகிறது. இநத தடைகள் எல்லாம் மீறி எதனையும் என்னால் சாதிக்க முடியும் இறைவன் கருணை மிக்கவன் நாம் விரும்பியதை நிச்சயம் குறைவற்று கொடுப்பார் எனக்கு இறைவன் தந்த வலிமை இருக்கிறது என்ற உங்கள் கருத்தை ஆழ்மனக் கட்டளையாக கொடுத்து கொண்டே மனச்சித்திரத்தை ஒடவிட்டு நீங்கள் வணங்கும் இறைவனிடம் உங்கள் கனவை நிறைவேற்ற விண்ணப்பம் செய்யுங்கள். இரவில் உறங்குவதற்கு முன், படுக்கையில் அமர்ந்தவாறே கண்களை மூடி கவனத்தை உங்கள் மூச்சில் குவியுங்கள் சில நொடிகளில் உங்கள் எணண அலைகள் அடங்கி கவனம் ஒரிடத்தில் குவியும் இதுவே தியான நிலைக்கு வந்துவிட்டிர்கள் இந்நிலையில் எவ்வளவுக் கெவ்வளவு உணர்ச்சியோடு நிறைவேற போகிறது என்ற நம்பிக்கையோடு கட்டளை கொடுக்கிறீர்களே அவ்வளவு விரைவில் உங்களுக்கு தேவையான அறிவு,திறமை,ஆற்றல், வசதி, வாய்ப்பு முதலீடு போன்ற அனைத்தும் உங்களை தேடி வரும் அன்பன் வை,பூமாலை சுந்தரபாண்டியம்

வெள்ளி, 27 ஜூலை, 2012


சைவமும், சாலிய சமுதாயமும்
சைவ மதத்தின் தூண்கள் என்று போற்றப்படும் சமயக்குறவர்கள் வாழ்ந்த காலத்திலிருந்தே சாலியர் சமுதாயம் சைவ மதத்தில் வேறூண்றி தழைத்து, ஆன்மிகத்தில் - சிவத்தொண்டு செய்யும் சிவனாடியார்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர், சாலியர் சமுதாயத்தின் வம்சாவழி சாலிய மகரிஷி வழித்தோன்றவர்களே எனவே சாலியர்களின் கோத்திரம் சாலியமகிரிஷி கோத்திரம் என்று வழங்கப்பட்டு வருகிறது,இதன் வசம்சாவழியில் தான் சாலிய இனத்தை சேர்ந்தவரான 63 நாயன்மார்களில் ஒருவரான நேசநாயனாரும், இவரும் அக்காலத்தில் தற்போது சாலிய இனத்தவரின் குலத்தொழிலான நெசவு தொழிலையே செய்து சிவனாடியார்களுக்கு கோவனம் என்றளக்கப்படும் சிற்றடையை சிவனடியார்களுக்கு வழங்கி சிறப்புடன் சிவத்தொண்டு புரிந்து வந்துள்ளது பெரியபுராணம் காட்டுகிறது, இதன் மூலம் சாலியரின் சைவத் தன்மைக்கு முத்திரை பதிக்கப் பட்டுள்ளது. அந்நாள் முதல் இந்நாள் வரை சைவ மதத்தில் சாலியர் சமூகம் முக்கிய பங்கினைக் கொண்டு சிவனடியார்களுக்கு சிவத் தொண்டும், சிவன் கோவில்களையே அடிப்படையாகக் கொண்டே குல தெய்வங்களும் அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர், அக்காலத்தில் சாலிய சமூக முன்னோர்கள் சைவ மதத்தின் அடையாளங்களான ருத்ராட்சம் அணிதல், பூணுல் போடுதல் போன்ற சைவ அடையாளங்களுடன் வாழ்ந்து கொண்டு தேவாரம் திருவாசகம் இசையுடன் பஜனைப்பாடல்கள் பாடுவதற்கென்றே ஏழுர் சாலிய சமுதாய ஊர்களில் பஜனை மடங்களும் நாயன்மார்கள் பெயரில் திருச்சபை மன்றங்களும் இன்றளவும் இயங்கி வருவதை நாம் காண்கிறோம். இதற்கு உதாரணத்திற்கு கூற வேண்டுமானால் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணக்கவாசகர் திருச்சபை, முகவூரில் நாவுக்கரசர்-அப்பருக்கு மன்றமும், சுந்தரபாண்டியத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் திருசசபை, ஸ்ரீவி,மற்றும் சத்திரப்பட்டியில் தேவார- திருவாச பக்த சபா போன்றவை இன்றளவும் நடைபெற்றுக்கொண்டு வருகிறது, சாலிய சமுதாயத்தில் இன்றளவும் சிவ வழிபாட்டுத்தளங்களில் தேவார பாடகள் பாடும் ஓதுவார்கள் போன்று தேவார - திருவாசப்பாடல்களை இராஜபாளையம்,ஸ்ரீவி,சத்திரப்பட்டி, வ,புதுப்பட்டி, சுந்தரபாண்டியம் மற்றும் ஏழுர் சாலிய சமுதாய மக்களால் பாடப்பட்டு வருகிறது, இதற்கு தேவார இன்னிசை மாமணி திரு, புதுப்பட்டி மோகன் என்பவரே முன் உதாரணமாகும் அவருடைய தேவார இன்னிசையில் மயங்காதார் யார் உளர். சுந்தரபாண்டியம் சாலியர் சமூகமும்-சுந்தரமூர்த்தி நாயனாரும் இதன் அடிப்படையில் சுந்தரபாண்டியத்தில் சைவ மத சிவத் தொண்டாக பெரிய புராணத்தின் பாட்டுடைத்தலைவான சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருச்சபை என்ற அமைப்பு பாக்கியநாதசாமி கோவில் பஜனை மடத்தில் உருவாக்கப்பட்டு ஒரு நூற்றாண்டை நெருங்கி நடைபெற்று வருகிறது, இவ்விடத்தில் தான் சிவ ஆலய முக்கிய விழாக்களில் ஒன்றான மகளாய அமாவாசை கழித்த நவராத்திரி விழாவின் சதுரகிரி கொழுபூஜை விழாவின் அங்கமான சிவனடியார்கள் திருக்கூட்டம் சதுரகிரி மலைக்கு செல்லும் அங்கு கொழு பூஜை முடிந்து மலையிலிருந்து அடிவாரம் வந்தது முதல் சுமார் ஒரிரு மாதங்கள் வரை சாலிய சமுதாயம் அமைந்துள்ள ஏழுர் - மற்றும் அதைச்சார்ந்த சிற்றூர் மற்றும் அதன் ஒவ்வொரு பகுதியிலும் திருக்கூட்ட சிவனடியார் திருக்கூட்ட பூஜை சிற்ப்புடன் முடிந்து இவ்வூரில் தான் முடிவு பெறும், இந்நிகழ்ச்சி இன்றுவரை நடைபெறுகிறது ( தற்போது காளிமுத்து சுவாமிகள் ஆஸ்ரமத்தில் நடைபெறுகிறது) சதுரகிரி மலையிலும் ஒவ்வொரு நாளும் அங்கு தங்கியிருந்து சமையல் செய்து விரதம் இடுவோர் முதலில் திருக்கூட்டத்திற்கு சமையல் செய்த அன்னத்தின் ஒருபங்கு அன்னத்தை திருக்கூட்டத்திற்கு ( சுந்தரமூர்த்தி சுவாமி கோவிலுக்கு முன்பாக) வழங்கி விட்டுத்தான் தாங்கள் விரத நோண்பு மேற்கொள்வார்கள், இது போன்று சுந்தரபாண்டியத்தில் இந்த பஜனை மடத்தில் எப்போதும் சிவனடியார்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் இவர்களுக்கு சிவனடியார்களில் ஒரிருவர் தினமும் அந்திப்பொழுதில் அன்னக்காவடி எடுத்துச்சென்று சுந்தரபாண்டியம் சாலிய சமுதாய இல்லங்களில் அன்னம் பெற்று உடனிருக்கும் சிவனடியார்களுக்கும் வயதுமுதிர்ந்த இயலாதவர்களுக்கும் இந்த அன்னம் அன்னதானமாக வழங்கப்பட்டுவந்தது, அந்த அன்னக்காவடி எடுக்கும் சிவனடியார்கள் காவடியை சுமந்து கொண்டு ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமச்சிவாயத்தையும் சாம்போ சதா சிவ சாம்போ சிவ என்ற சிவநாமங்களை பாடிக்கொண்டு அன்னம் பெற்று வருவார்கள், அப்போது அநேக இல்லங்களில் அன்னக்காவடிக்கு உணவு போட்ட பின்தான் இரவு உணவு உண்பார்கள் அப்படி அன்னக்காவடி வர நேரம் ஆகிவிட்டலும் அந்த அன்னத்தை எடுத்து தனியாக வைத்து விட்டுத்தான் தாங்கள் உணவு உண்பார்கள்.அந்த அன்னக்காவடியின் மணியுடன் கூடிய தாண்டாயுதமும் அதன் குண்டாபாத்திரமும் இன்னும் சிவனடியார்கள் நினைவு சின்னமாக சுந்தரபாண்டியம் பஜனை மடத்தில் உள்ளது
,இவ்வாறு சிவனடியார்கள் சிவத்தொண்டு வளர்ந்து வரும் நாட்களில் தான் பெரியபுராணத்தின் பாட்டுடைத்தலைவன் என்று போற்றப்படும் சுந்தரருக்கு திருச்சபை நிருவி அவருக்கு வருடாவருடம் குருபூஜை நடத்த திருச்சபை முயன்றது, இதன் பொருட்டு சுந்தரரையே தனது குருவாக கொண்டு நேசித்து அவரையே தியானித்து தனது குருவான சுந்தர மூர்த்தி சிவபொருமானால் ஆட்கொள்ளப்படப்போகிறார் எனவே அவருக்கு முன்னரே தான் முத்தி பெற வேண்டுமென்று தனது தவவண்மையால் ஆடித்திங்கள் 10ம் நாள் சித்திரை நட்சத்திரத்தில் முத்தி பெற்ற பெருமிழலைக் குறும்ப நாயனாருக்கும், ஆடித்திங்கள் 11ம் நாள் சுவாதி நட்சத்திரத்தில் முத்திபெற்ற சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் அவருடைய ஆன்மீக நண்பரும் சிவத்தொண்டருமான சேரமான் பெருமாள் நாயனருக்கும்( சுந்தரரின் வேண்டுகோளின்படி சேரமான் பெருமானையும் சிவனிடம் ஆட்கொள்ளவேண்டியதின் பெயரில் முக்தி பெற்றவர்) ஆகிய மூவருக்கும் இவ்விரு நாட்களிலும் சுந்தரபாண்டியம் ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள் சபையின் திருமாடலாயத்தில் இத்துடன் கூறப்பட்ட அழைப்பிதழில் கண்டவாறு சிறப்பு பூஜைகளும் தேவார இன்னிசை நிகழ்ச்சியும், ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெற்றது, மேலே கூறப்பட்ட மூவருக்கும் இங்குதான் உற்சவ மூர்த்தி விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இரண்டாம் நிகழ்ச்சியில் அலங்கார சப்பரத்தில் சுந்தரபாண்டியம் திருவீதிகளில் ஊர்வலமாக திருவீதி உலா நடைபெறுகிறது, அன்னார்களின் திருவுருவ விக்ரங்களை இங்கு காணலாம் இந்த சிறப்பு வாய்ந்த சிவ விழா நூற்றாண்டை நோக்கி பயனிக்கிறது, வளரட்டும் சிவத்தொண்டு!பெறுவோம் சிவனருள்!!

திங்கள், 16 ஜூலை, 2012

சனி, 14 ஜூலை, 2012

Shimla Slideshow | TripAdvisor™

Shimla Slideshow | TripAdvisor™: TripAdvisor™ TripWow ★ Shimla Slideshow ★ Directory of 928 trips to Shimla, India by real travelers. Stunning free travel slideshows on TripAdvisor

May 6, 2012 Slideshow Slideshow

May 6, 2012 Slideshow Slideshow: TripAdvisor™ TripWow ★ May 6, 2012 Slideshow Slideshow ★ to srivilliputtur (near Loutolim) and Coimbatore. Stunning free travel slideshows on TripAdvisor

Myself Slideshow: Vpoompalani’s trip to Coimbatore, Tamil Nadu, India was created by TripAdvisor. See another Coimbatore slideshow. Create a free slideshow with music from your travel photos.

ஆழ் மனதின் அற்புத சக்திகள்


ஆழ் மனதின் அற்புத சக்திகள் நீங்கள் ஒரு தொழிலைச் செய்ய எண்ணும் போது என்ன மனப்பாண்மையில் ஈடுபடுகிறீர்களோ, அதற்கேற்ப உங்கள் செயல் வெற்றி - தோல்வியை அடைகிறது, வெற்றி மனப்பான்மையுடன் செயல் பட்டால் வெற்றியும், தோல்வி மானப்பான்மையுடன் தன்னம்பிக்கையற்று செயல்பட்டால் தோல்வியையும் அடைகிறீர்கள், ஆகவே வெற்றியும், தோல்வியும் உங்கள் மனப்பான்மையிலிருந்து உருவெடுக்கிறது, மன்ப்பான்மை என்பது, உங்கள் உள்ளத்தில் தொடர்ந்து நிலைபெறும் சிந்தனைதான் மனப்பான்மையாக மாறுகிறது, வெற்றி என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கும் மனச்சித்திரங்களே வெற்றி சிந்தனை , இது மீண்டும் மீண்டும் பதிவாகும் போது வெற்றி மனப்பான்மையாகமாறுகிறது, நீங்கள் விரும்பினால் மனச்சித்திரத்தை மாற்றி ஆழ் மனம் (இதனை சமயோசித அறிவாகக் கொள்ளலாம்) கட்டளை உஙகளுக்கு கைகொடுக்கும், ஆழ்மனக் கட்டளை மூலமும், மனச்சித்திரங்கள் மூலமும் வெற்றி மனோபாவத்தை உருவாக்கிட முடியும், நீங்கள் ஆழ்மனச்சக்தியை பெருக்கி கொண்டால் உழைப்பில் பத்தில் ஒருபங்கு குறைந்தாலும், விளைவு பத்து மடங்காக உயர்ந்திட முடியும், கடும் உழைப்பிற்கு ஈடு இணை இல்லை என்பதை ஆழ்மனத்திற்கு ஈடு இணை இல்லை என்ற புது பழமொழியை புரிந்து கொள்ளலாம், ஆழ்மனதை ஒரு தேவதை என்றே கூறலாம், அது ஆற்றல் மிக்க தேவதை, உங்களுக்கு விசுவாசமான தேவதை. நீங்கள் கேட்பதை பெற்றுத தரும் சக்தி உண்டு,ஆக அது தேவதையோ, அரக்கனோ என்பது நீங்கள் கொடுக்கும் கட்டளையைப் பொருத்தது. உங்கள் கட்டளையின் எண்ணம் முறன்பாடானால் கிடைப்பதும் முறன்பாடாகவே அமையும், உங்களின் ஆழ்மனச்சக்தி பெருகி விட்டால் நீங்கள் நினைத்ததை விரும்பியவாறு அடைய முடியும். இதன் கருத்தை கொண்டே ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு " Positive thinking always ever success Nagative thinking always never success" எவராயினும், எந்நிலையிலும், ஆழ்மனக்கட்டளையை நம்பிககையோடு கொடுத்து அடையப்போகிறோம் என்னும் விசுவாசத்தை வளர்த்து நினைத்ததை நினைத்தபடியே அடைய முடியும். வேண்டியதை விரும்பியபடியே பெற முடியும். ஒரு குறிக்கோளுக்கான கட்டளையை மட்டும் தேர்வு செய்து கொள்ள வேண்டும், மற்ற விருப்பு வெறுப்பு ஆசைகளை விலக்கி வைத்துவிட்டு, உறங்குவதற்கு முன் படுக்கையில் சம்மனமிட்டு - தியானத்திற்கு அமர்வது போன்று - சுவாசத்தில் ஆழ்மனதை முழுவதையும் கவனத்தில் குவித்தால் எண்ண அலைகள் அடங்கும், நீங்கள் தேர்ந்தெடுத்த ஆழ்மனக்கட்டளையை உணர்ச்சியுடன் , ஒலி நயத்துடன், உதட்டசைவுடன் உருவேற்றுக. உங்கள் குறிக்கோள் நிறைவேறி விட்டது போன்ற நிலையை மனச்சித்திரமாக கற்பனையில் காண்க. இதனை உறங்குவதற்கு முன்பும், உறங்கி எழுந்த பின்னும் தினமும் 30 நிமிடங்கள் கட்டளை கொடுத்தால், உங்கள் ஆழ்மனம் அற்புதமாக செயல்பட தொடங்கிவிடும். ஆழ்மனம் என்பது ஐம்புலங்களால் அறிய இயலாது ஆனால் அதன் விளைவை ஐம்புலங்களால் அறிய முடியும், நிறைவேற போகிறது என்ற நம்பிக்கையுடன் கட்டளை கொடுங்கள். அப்போது ஆழ்மனத்தின் அற்புத சக்தி வெளிப்படும். ஆழ்மனக்கட்டளையை குறிக்கேளுக்கும். தேவைக்கு தக்கபடி நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். உருவாக்கிய கட்டளைகளை உங்களை சுயகருத்தேற்றம் செய்யும் போது வெற்றி உங்களை அடையும். நம் வாழ்க்கை என்பது நம்எண்ணத்தால் உருவாக்கப்படுகிறது. எண்ணத்திற்கேற்ப வாழ்க்கை. எண்ணம் என்பது தொடர்மன சித்திரமே. எணணம் - செயல் ஆகிறது, செயல் - பழக்கம் ஆகிறது, பழக்கம் - வழக்கமாகிறது. வழக்கம் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. ஆழ்மனக்கட்டளை , மனச்சித்திரம் இவ்விரு உத்திகளையும் ஒரே சமயத்தில் தொடர்ந்து பயன்படுத்தும்போது உங்கள் மனோசக்தி பெருக்கம் அடைகிறது. சிந்தனையிலிருந்து - செயல் பிறக்கிறது. மனத்தின் எண்ணமே செயலுக்கு ஊக்கம் . எண்ணம் திண்ணம் பெறும்போது நிைன்த்ததை அடைய வெற்றியாக முடிகிறது. ஆழ்மனக்கட்டளையும. மனச்சித்திரமும் சேர்ந்தது தியானம் - தியானம் தவம் எனப்படுகிறது. தவ வலிமையால் நம் முன்னோர்கள் நம்ப வியலாத அற்புதமான சாதனைகளை செய்ததனர் என்பதை நாம் அறிவோம். ஆழ்மன கட்டளை கொடுக்கும்போதே அதற்கேற்ப மனச்சித்திரம் வரைவதன் மூலம் நீங்கள் அற்புதங்களை நிகழ்த்துபவராக மாறிவிடுகிறீர்கள். உங்களின் நீண்டகால குறிக்கோள்களான தியானம் செய்யும் போது உங்களது நம்பிக்கை ஒரு மந்திர சக்தியாகவே பெருக்கெடுக்கிறது. எனவே ஆழ்மன சிந்தனை - தியானம் மூலம் வெற்றி நிச்சயம்

வியாழன், 12 ஜூலை, 2012


ஸ்ரீ பகவத் கீதையில் தியான யோகம், தொடர்ச்சி 1)தியானத்தில் மனைத் கட்டுப்படுவத்து கடினம்,அது சலனமுடையது,ஐயமில்லை,ஆனால்பழக்கத்தாலும், பற்றின்மையாலும் கட்டி விடலாம் 2)சுயக்கட்டுபாடு இல்லாதவனுக்கு யோகம் அரிதென்று, ஆனால் கட்டுபாட்டுடன் இருப்பவனுக்கு முயற்சியால் அடைய வழி உண்டு 3) நம்பிக்ைகயுடையவன் முயற்சியுள்ளவன் யோகத்தினின்று ஒருபொழுதும் தோற்று்ப்போவது இல்லை, 4)யோகத்தில் தவறியவன் புண்ணியம் செய்வோரின் உலங்களை அடைந்து அங்கு கணக்கில்லா வருடங்கள் வாழ்ந்து தூய்மையுைடய செல்வந்தர்கள் வீட்டில் பிறக்கிறான் 5)யோகியனவன் யோகிகளின் குலத்திலேயே பிறக்கிறான்,இவ்வுலகில் இதுபோன்ற பிறவிகிைடப்பது அரிது, 6)அவ்வாறு பிறப்பவன் பூர்வ ஜன்மபுத்திைய பெறுகிறான், அவன் மறுபடியும் வெற்றிக்கு முயற்சி ெசய்கிறான் 7)தனது பழைய பழக்கத்தால் தன் வசமின்றி யோகப்பாதையில் ஈர்க்கப்படுகிறான், யோகத்ைத பயில ேவண்டுமென்ற ஆவலினால் அவன் வேகத்ைதயும்கடந்து செல்கிறான் 8) ஊக்கத்தோடு முயன்று, மனதை தன் வசப்படுத்தி பாவம் நீஙக பெற்ற யோகியானவன் அப்ேபாது பல பிறவிகளில் ெபற்ற பக்குவத்தால் மேலான நிலையை அைடகிறான் 9) தவஞ்செய்ேவாைரக்காட்டிலும் யோகி சிறந்தவன்,ஞானிகளிலும் அவன் சிறந்தோனாக கருத்ப்படுகிறான்,கருமிகளிலும் அவன் சிறந்தோன், 10) எவனொருவன் பரமாத்மாவில் நம்பிக்கை கொண்டு ேபாற்றுகிறானோ அவன் மிக மேலான யோகியாவான்

செவ்வாய், 10 ஜூலை, 2012

ஸ்ரீபகவத் கீதையில் தியான யோகம்


ஸ்ரீபகவத் கீதையில் தியான யோகம் -

 ஸ்ரீபகவத் கீதையில் தியான யோகம் பற்றி வழங்கப்பட்ட நெறிமுறைகளும் அதன்பயன்களும் 1) புத்தியால் அறியப்படுவதும், புலன்களைக் கடந்து நிற்பதுமாகிய, பேரின்பத்தை எங்கு காணப்படுமோ, அந்நிலை அறிந்த பின் இவன் உண்மையிலிருந்து வழுவுவதில்லை
 2) எந்த ஒரு பேரின்ப நிலையை அடைந்த பிறகு , அதைவிட அடைவதற்கு மேலான பேரின்பம் வேறொன்றும் இல்லை என எண்ணுகிறானோ, அப்பேரின்பத்தில் நிலைத்த பிறகு மிகப்பெரிய துக்கம் வந்தாலும் கலங்குவதில்லை
3) எண்ணங்களுக்கு ஆதாரமாக இருக்கும் ஆசைகள் அனைத்தையும் துறந்து மனதால் இந்திரியக் கூட்டத்தை எல்லா பக்கங்களிலும் வசப்படுத்தும்
4) உறுதி பூண்ட மதியால் மனதைமெதுவாக பரமாத்மாவில் பொருத்திய பின் வேறு எதைப் பற்றியும் சிந்தித்தல் கூடாது,
5) எங்கெங்கே மனம் சஞ்சலமாய் உறுதியின்றி உழலுகிறதோ, அங்கங்கே அதைக் கட்டுப்படுத்தி ஆத்மாவின் வசம் அழைத்துச் செல்க
 6) தியானத்தால் மனம் சாந்தமாகி ரஜோ குணம் அமைதி பெற்று, மாசு நீங்கி பிரம்மமேயாகி இந்த யோகிக்கு மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது,
 7) யோக நிலையில் பாபங்கள் நீங்கப் பெற்று ஆத்மாவில் நிலைபெற்று பிரம்ம சம்பந்தத்தால் உண்டாகும் உன்னதமான சுகம் எளிதில் கிடைக்கிறது
8) யோத்தில் கலந்தவன் எங்கும் சமப் பார்வையுடையவனாய், எல்லா உயர்களிடத்தும் தானிருப்பதையும் தன்னுள் எல்லா உயிர்களும் இருப்பதையும் காண்கிறான்,
9) எவனொருவன் தன்னை பரமாத்மாவிலும், பரமாத்மாவில் தன்னையும் காண்கிறானோ அவனை விட்டு பரமாத்மா ஒருபோதும் விலகுவதில்லை, அவனும் அதனை விட்டு விலகுவதில்லை
10) இன்பமாயினும், துன்பமாயினும் எதிலும் ஆத்ம சமத்துவம் மற்றும் சமப்பார்வை பெற்றவன் பரமயோகியாகக் கருதப்படுவான்
அதன்பயன்கள;
1)தியானத்தில் மனைத் கட்டுப்படுவத்து கடினம்,அது சலனமுடையது, ஐயமில்லை,ஆனால்பழக்கத்தாலும், பற்றின்மையாலும் கட்டி விடலாம்

2)சுயக்கட்டுபாடு இல்லாதவனுக்கு யோகம் அரிதென்று, ஆனால் கட்டுபாட்டுடன் இருப்பவனுக்கு முயற்சியால் அடைய வழி உண்டு

3) நம்பிக்ைகயுடையவன் முயற்சியுள்ளவன் யோகத்தினின்று ஒருபொழுதும் தோற்று்ப்போவது இல்லை,
4)யோகத்தில் தவறியவன் புண்ணியம் செய்வோரின் உலங்களை அடைந்து அங்கு கணக்கில்லா வருடங்கள் வாழ்ந்து தூய்மையுைடய செல்வந்தர்கள் வீட்டில் பிறக்கிறான்
5)யோகியனவன் யோகிகளின் குலத்திலேயே பிறக்கிறான்,இவ்வுலகில் இதுபோன்ற பிறவிகிைடப்பது அரிது,
 6)அவ்வாறு பிறப்பவன் பூர்வ ஜன்மபுத்திைய பெறுகிறான், அவன் மறுபடியும் வெற்றிக்கு முயற்சி ெசய்கிறான்
7)தனது பழைய பழக்கத்தால் தன் வசமின்றி யோகப்பாதையில் ஈர்க்கப்படுகிறான், யோகத்ைத பயில ேவண்டுமென்ற ஆவலினால் அவன் வேகத்ைதயும்கடந்து செல்கிறான்
8) ஊக்கத்தோடு முயன்று, மனதை தன் வசப்படுத்தி பாவம் நீஙக பெற்ற யோகியானவன் அப்ேபாது பல பிறவிகளில் ெபற்ற பக்குவத்தால் மேலான நிலையை அைடகிறான்
9) தவஞ்செய்ேவாைரக்காட்டிலும் யோகி சிறந்தவன்,ஞானிகளிலும் அவன் சிறந்தோனாக கருத்ப்படுகிறான்,கருமிகளிலும் அவன் சிறந்தோன்,
10) எவனொருவன் பரமாத்மாவில் நம்பிக்கை கொண்டு ேபாற்றுகிறானோ அவன் மிக மேலான யோகியாவான்

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

திங்கள், 9 ஜூலை, 2012

Thank you for your visiting our website


ஸ்ரீபகவத் கீதையில் தியானம்


ஸ்ரீபகவத் கீதையில் தியானம் 1) தனிமையான இடத்திலே அமர்ந்து, மனதையும், உடலையும், வசப்படுத்தியவனாய், ஆசையும், தேவைகளும் அற்று யோகியானவன் எப்போதும் மனதை பரம்பொருளில் லியக்கச் செய்தல் வேண்டும். 2) சுத்தமான இடத்தில், சமமான இடத்திலும், மான்தோல், தர்ப்பை , துணி இவற்றின் மீது தனக்கோர் உறுதியான ஆஸனம் அமைத்துக் கொண்டு அமர்தல் வேண்டும் 3)அங்கு அமர்ந்து மனதை ஒருமுகமாக்கி உள்ளத்தையும், புறச் செயல்களையும், நன்கு கட்டுப்படுத்தி ஆஸனத்தில் அமர்ந்து, மனம் நன்கு தூய்மையடைய யோகத்தைப் பயில வேண்டும் 4) உடம்பையும், தலையையும், கழுத்தையும், சமமாக அசைவின்றி வைத்துக் கொண்டு உறுதி உடையவனாய் மூக்கு நுனியைப் பார்ப்பதைப் போன்று திசைகளை நோக்காமல் கட்டுபாட்டுடன் ஒருநிலைப்படுத்த வேண்டும் 5) பேராமைதி உடையவனாய், அச்சத்தைப் போக்கி, பிரம்மச்சாரி விரத்தில் நிலை கொண்டு, மனதை வசப்படுத்தி, பரமாத்மாவிடம் சித்தத்தை இசைத்து, ஆத்மாவினை மேலாக்கி யோகியாய் அமர வேண்டும் 6)இங்ஙனம் எப்போதும், மனதை கட்டுப்படுத்தி ஆத்மாவில் யோகமுற்றிருக்கும்யோகி, பரமாத்மாவிலிருக்கும் பேரமைதியில் நிலைத்து, அதன் மூலம் மோக்ஷ நிலையை எய்த வேண்டும் 7)உணவு, புலன் நுகர்ச்சி இவற்றில் கட்டுப்பாடும், செயலில் தேவையான அளவுமட்டும் ஈடுபாடும் உறக்கம், விழத்தல், இவற்றில் ஒழுக்கம், உடையோனுக்கு யோக மார்க்கம் துயர் நீக்கும் சாதனமாகும், 8) எப்போதும் சித்தம் முழுவதும் உள்ளடக்கி பரமாத்மாவிலேயே நிலை பெறுகின்றதோ, அப்போது அனைத்து விருப்பங்களில் பற்றற்ற நிலை ஏற்படுகின்றது, அந்நிலை எய்ததியோர் யோகி என்பர் 9) சித்தத்தை அடக்கி, ஆத்மாவில் கலந்து நிற்கும், யோகிக்கு காற்றில்லாத இடத்தில் நிற்கும் விளக்கின் ஒளிக்கு உவமையாக கூறப்படுகின்றது, 10) சித்தத்தில் எழும் எண்ணங்கள் அனைத்தும், யோகப் பயிற்சியினால் முழுவதும் நிறுத்தப்படும் பொழுது, யோகி தன்னில் தன்னை அறிந்து சந்தோசப்படுகின்றான், தொடரும்......................

Oom Siva Oom


Jeeva Samathi valipadu


ஞாயிறு, 8 ஜூலை, 2012


தவயோகம் தவமும் - யோகமும் தியானத்தின் அங்கங்கள்தான் தவமும் யோகமும். ஜோதி வடிவான சிவத்தை அடைய மேற்கொள்ளும் வழிபாட்டு முறைகளே தியானம்,தவம் யோகம்.தியானத்தின் போது அபரீதமான சக்தியை பெற முடியும், தியானத்தின் மூலம் நமது ஆறாவது அறவின் கதவை திறக்கவும், விரிவடையும் செய்து ஆத்மாவின் பேரோளியை பெற தியானம் என்னும் திறவுகோல் உதவுகிறது, தியானத்தின் முதிர்ச்சியில் எண்ண அலைகள் குறையும், சுவாசத்தின் அளவு குறையும்,நம் புருவங்களுக்கிடையே ஒரு ஜோதி ஒளி தென்படும், இந் நிலையில் சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது, இந்நிலையில் தான் ரிஷிகள் தவத்தின் உச்ச நிலையைப் பெற்று ஒளியின் பிளம்பான சிவத்தை அடைந்து - முக்தி நிலை பெற்றார்கள், இந்த நிலையின் அடிப்படையான தியானத்தின் தொடர் நிலைகள்: முதல் நிலை: அடிப்படை நிலை - ஆன்மிக அறிவு உண்டாகும் நிலை - தியானத்தின் பயிற்சி நிலை எனலாம் இரண்டாம் நிலை: உடலில சக்ரா நிலை - உடலில் சக்தி மையமாக செயல்படுகின்றன - ஆத்ம சக்தி வளர்தல் மூன்றாம் நிலை: ஒளி (ஜோதி) நிலை - இந்நிலையில் 7 நிலைகள் உண்டு என்கின்றனர் யோகிகள். ஆத்மா வாயில் திறக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு, உயர்நிலை அடைகிறது, இதனால் அன்பு, அமைதி, ஆரோக்கியம் நேரிடையாக உண்டாகிறது. நான்காவது நிலை: அறிவொளி - யோக நிலை - முதிர்வு - முக்தி நிலை எனலாம்- இந்நிலையில் உடல், மனம், அறிவாற்றல், ஆகியவை விழிப்புணர்ச்சி எல்லையை அடைகிறது, நம் ஜீவ ஒளி - பேரோளியுடன் ஒன்றிணைந்து பேரோளியாக மாறுகிறது, இது வே ஆன்மீகத்தின் உச்ச நிலை, இதுவே யோகா ஆன்மீகம் ஒன்றிய ஐக்கிய நிலையாக ஆகிறது, தவ நிலையின் உச்சியில் யோகம் சிவத்துடன் ஒன்றி ஐக்கியமாகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த தவத்ததினை பின்கண்டவாறும் சிறப்புகளுடன் மூன்று வகையாக பிரித்துள்ளனர் ஆன்றோர்கள். மூவகை தவங்களாவன: 1) மானசம் - மனதால் செய்யும் தவம். 2) வாசிகம் - வாயினால் செய்யும் தவம். 3) காயிகம் - உடம்பால் செய்யும் தவம் மானசம்: உயிர்களிடத்தில் அன்பு, தான தருமங்களில் விருப்பம் கொள்ளுதல், பிறர் செய்த தீமையைப் பொறுத்தல், உண்மையில் நாட்டம் கொள்ளுதல், சிவத்தைச் சிந்தித்தல், புலங்களை அடக்குதல், உலகம் நலமாக இருக்க வேண்டுதல் வாசிகம்: உண்மை பேசுதல், தீய சொற்களையும் கடுஞ் சொற்களையும் பேசாதிருத்தல் ஐந்தெழுத்து (சிவாய நம) ஓதுதல், தோத்திரப் பாடல்கள் பாடுதல், நீதிகளை எடுத்துரைத்தல், நல்லனவற்றையே பேசுதல், திருமுறைப்பாடல்கள் மந்திர ஆற்றல் வாய்ந்தவை, அப்பாடல்களை வாய்விட்டுப் படிக்க ேவ்ண்டும், அவ்வாறு படிக்கும் பொழுது உண்டாகும் ஒலி அலைகள் நம்மை சுற்றிலும் ஒரு பாதுகாப்புச் சுவர் போல் அமையும், காயிகம்:சிவபெருமானாரைப் பூசித்தல், ஆலயம் வலம் வருதல், ஆலயத்தை தூய்மை செய்தல், சிவத்தலயாத்திரை செல்லுதல், மலர்மாலை தொடுத்தல், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தல், பிராணிகளுக்கு உதவுதல், சான்றோர்களையும், பெற்றோர்களையும் வணங்குதல். இத்தகைய நல்லனவற்றை அன்றாடம் செய்வதும் உண்மையான தவம் ஆகும் என்றும், போலி வேடம் கொண்டு காவி தரித்துக்கொண்டு உலகமக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பது தவமன்று, யோகம்: தவத்தின் உச்சி யோகம். யோகம் என்றால் ஒன்றுதல் என்று பொருள், ஜீவன் , சிவத்துடன் ஒன்றுவது யோகம் எனப்படுகிறது, யோகம் என்பதனை அகவழிபாட்டு முறைமூலம் தொடங்கி தவயோகத்தை பெறுதல் வேண்டும். வழிபாடு என்பது அகவழிபாடு, புறவழிபாடு என இரண்டாக பிரிக்கப்படுகிறது, கடவுளை தன்னின்றும், பிரியாத தன்மை கொண்டு வழிபடுவது அகவழிபாடு, கடவுளை தன்னின்று வேறுபடுத்தி வழிபடுவது புறவழிபாடு, ஒவ்வொருவரின் உடம்பில் உள்ள உயிரே சிவம்- ஆத்மாவே சிவம் - உடம்பே கோவில் . எனவே நம் உடம்பில் இருக்கும் ஆத்மா என்ற ஜீவ ஒளியான சிவத்தை அகவழிபாடாக வழிபடுதல் வேண்டும் புற வழிபாட்டின் நோக்கமே அகவழிபாட்டை அடைவதுதான், நாம் புறவழிபாட்டோடு நின்று விடுகிறோம், புறவழிபாட்டுடன் ஒன்றி அகவழிபாட்டின் மூலம் சிவம் என்ற ஜீவ ஒளியை தியானம் தவம் யோகம் என்ற வகையில் ஐக்கியமாகி ஒன்றிடுவோம்.

Pullankulal songs - Krishnan songs


சனி, 7 ஜூலை, 2012



Jeeva samathi





ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சதுரகிரிக்கு(வத்ராப்)ச் செல்லும் வழியில் இருக்கும் கிராமம் எஸ்.ராமச்சந்திராபுரம் ஆகும்.இந்த கிராமத்தில் கண்மாய்க்கு அருகில் அமைந்திருக்கும் சிவாலயமே சடையாண்டி கோவில் ஆகும்.இந்த சடையாண்டி கோவில் ஒரு ஜீவசமாதி ஆகும்.மிகவும் சக்தி வாய்ந்த,மிகவும் சிவ அருளாற்றல் மிக்க ஜீவசமாதியாக அமைந்திருக்கிறது. சடையாண்டி என்பவர் ஒரு பழுத்த சிவபக்தர் ஆவார்;இவர் 1700களின் இறுதியில் சதுரகிரியில் முக்தியடைந்தார்;அந்த முக்தியடைந்த இடத்துக்கு அவரது அடியார்கள் அமாவாசை தோறும் சென்று வழிபட்டு வந்தனர்;ஒரு கட்டத்தில் சதுரகிரியின் மலை மீது சென்று வழிபட முடியாத சூழ்நிலையில்,சடையாண்டி சாமிகளிடமே அவரது பக்தர்கள் ஆலோசனை கேட்டனர்;அதன்படி,அவர் சதுரகிரியில் முக்தி அடைந்த இடத்திலிருந்து பிடி மண் எடுத்துக்கொண்டு வந்து,எஸ்.ராமச்சந்திராபுரத்தில் கி.பி.1812 ஆம் ஆண்டில் சடையாண்டி கோவிலைக் கட்டினர்;அதே ஆண்டில் மேலும் விரிவாக இரண்டாவதாகவும் கட்டினர். நூறாண்டுகளுக்குப் பின்னர், கி.பி.1912 ஆம் ஆண்டில் கோவிலை புனர்நிர்மாணம் செய்யும் சூழ்நிலையில்,எஸ்.ராமச்சந்திராபுரத்தில் தெருவுக்குள் அவரது பிடிமண்ணைக் கொண்டு வந்து வழிபட்டனர்.இவ்வாறு வழிபட்டவர்கள் புலவர் வீட்டு வகையறாக்கள் ஆவர்.இவர்கள் காலப்போக்கில்,பிழைப்புக்காக சுந்தரபாண்டியம்,சக்கம்பட்டி என சில ஊர்களுக்குச் சென்றுவிட்டனர்.அவ்வாறு சென்றாலும் ஆண்டுக்கு ஒருமுறை இங்கு வந்து வழிபட்டனர்.கி.பி.1912 ஆம் ஆண்டில் கோவில் மறுநிர்மாணம் ஆனது;கி.பி.2002 இல் புதுப்பிப்புப் பணி நடைபெற்றது.தற்போது சடையாண்டி சாமிகளை வழிபடும் குடும்பங்கள் சக்கம்பட்டியில் சுமார் 100 குடும்பங்களும்,சுந்தரபாண்டியம் மற்றும் எஸ்.ராமச்சந்திராபுரத்தில் சுமார் 75 குடும்பங்களும், W.புதுப்பட்டியில் சுமார் 45 குடும்பங்களும் இருக்கின்றன.சடையாண்டி சுவாமிகளின் அருளாசி இந்தக் குடும்பங்களுக்கு பரிபூரணமாக இருப்பதால்,இவர்களின் குடும்பங்களில் பிறக்கும் முதல் குழந்தைக்கு சடையாண்டி என்ற பெயரையே சூட்டினர்.பெண் எனில்,சடைபாக்கியம் அல்லது சடையம்மாள் என்று சூட்டினர். எந்த ஒரு முக்கிய காரியமாக இருந்தாலும்,பூ கட்டி பார்ப்பது இந்த குடும்பங்களின் வழக்கம் ஆகும்.அப்படி பூகட்டிப் பார்த்ததில்,வெள்ளைப் பூ வந்தால்,சடையாண்டி சுவாமிகளின் அருளாசி இருப்பதாக அர்த்தம் ஆகும். சிவராத்திரியன்று நான்கு கால பூஜைகளும் ,அன்னதானமும் இங்கு நடைபெற்றுவருகிறது.ஒவ்வொரு மாதாந்திர வெள்ளிக்கிழமை மற்றும் கார்த்திகை நாட்களில் விரதம் இருப்பவர்களும் உண்டு.நாமும் இதே போல விரதம் இருந்து இவரை வழிபட்டால்,சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தின் அருளாசி கிடைக்க இவர் வழிகாட்டுவார். இந்த சடையாண்டி சுவாமிகளை வழிபட்டவர்கள்,மதுரையில் மஹால் வடம்போக்கித் தெருவில் சடையாண்டி டெக்ஸ் என்ற பெயரிலும்,ஜக்கம்பட்டியில் சடையாண்டி ஸ்டோர்ஸ் என்ற பெயரிலும் வர்த்தக நிறுவனங்கள் நடத்தியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் வரும் நவராத்திரி நிறைவடைந்ததும் வரும் கார்த்திகையன்று வருடாந்திரகுருபூஜை விழா நடைபெற்றுவருகிறது. சதுரகிரிக்குச் செல்லுவோர்,க்ருஷ்ணன் கோவிலில் இறங்கி வத்ராப் செல்லும் பேருந்தில் செல்வர்;அப்படிச் செல்லும்போது வரும் நான்காவது நிறுத்தமே எஸ்.ராமச்சந்திராபுரம் என்னும் பட்டியக்கல் ஆகும்.இந்த பஸ் நிறுத்தத்தில் இறங்கி,ஊருக்குள் சென்றால் இந்த ஜீவசமாதியை அடையலாம். ஓம்சிவசிவஓம்

ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும் ஓம் ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது.நமது உடலின் தன்மை,சமன்பாடு,நெகிழ்வுத் தன்மை,பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.இது வேகஸ் நரம்பு மூலமாக உள்காது,இதயம்,நுரையீரல்,வயிறு,கல்லீரல்,சிறுநீரகப்பை, சிறுநீரகங்கள்,சிறுகுடல்,பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புக்களையும் இணைத்து நன்மையை நல்குகிறது. இப்படி ஓமின் பெருமையை விஞ்ஞான ரீதியாக விளக்கிக் கொண்டே போகலாம்.அவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார் அனில் குர்ஜர்.அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார் அவரது பிரின்ஸிபல் சித்தார்த் லடாகே.இவர்களின் ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது.மந்திரங்களின் மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப் புதுமைகள் இன்னும் அதிகமாக வரவிருக்கின்றன. ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஆதாரம்: ஞான ஆலயம் பக்கங்கள்

20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன் மூளையிலும் நரம்புமண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக ஆராயப்பட்டன.இந்த ஆய்வின் முடிவில், 1.ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது. 2.எதன் மீதும் செய்யப்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கிறது. 3.ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம்,உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.

poomalai

poomalai

ஸ்ரீமத் பகவத் கீதையில் தியான யோகம் 1) கர்மத்தின் பலனை சாராது தனக்கு விதிக்கப்பட்ட கடமையை மட்டுமே செய்வன் துறவி, அவனே யோகி. வேள்வித் தீ வளர்க்காமல் இருப்பவனோ செயலை புறக்கணிப்பவனோ யோகி ஆகான் 2) எதனை சந்நியாசம் என்கிறார்களோ அதுவே யோகம் ஆசைகளை துறக்காதவன் ஒருபோதும் யோகி ஆகமாட்டான் 3) தியான யோகத்தில் முன்னேற முனிவனுக்கு கர்மம் உபாயமாகிறது, தியான சித்தியடைந்தவனுக்கோ செயலற்றிருப்பது உபாயமாகிறது, 4) ஒருவன் எப்பொழுது மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்தையும் புறக்கணித்து விட்டு இந்திரியப் பொருட்களிலும் கர்மத்திலும் பற்றுதலின்றி இருக்கின்றானோ அப்போது பூரண யோக நிலையை அடைந்து விட்டான் என்று சொல்லப்படுகிறது, 5) உன்னை நீயே உயர்த்திக் கொள். நீ உன்னை ஒருபோதும் தாழ்த்திக் கொள்ளாதே, உன் மனமே உனது நண்பன் . உன் மனமே உனது பகைவன். 6) எவனொருவன் தன் மனதை ஜெயித்து விட்டானோ அவனுக்கு அனுடைய மனமே நண்பனாகச் செயல்படுகின்றது. மனதை வெல்லாதவனுக்கு மனம் எப்போதும் பகைவன் போல் செயல்பட்டு கேடு விளைவிக்கின்றது, 7) தன்னை வென்று பேரமைதியில் நிலைபெற்று குளிர் வெப்பம் சுகம் துக்கம் மானம், அவமானம் இவற்றில் சமநிலை பெற்றவனிடம் பரமாத்மா ஒளிர்கின்றது. 8) சாஸ்திர அறிவிலும், அனுபவ அறிவிலும் திருப்தி கொண்டவனாய் அசைவுகளுக்கு அப்பாற்பட்டு புலன்களை ஜயித்து திருப்தி கொண்டவனாய் அசைவுகளுக்கு அப்பாற்பட்டு புலன்களை ஜெயித்து கல்லையும் மண்ணையும் பொன்னையும் ஒன்றுபோல் காணும் யோகியே, யோக நிலையுற்றான் எனப்படுவான். 9) தனிமையான இடத்தில் அமர்ந்து மனதையும் உடலையும் , வசப்படுத்தியவனாய் ஆசையும் தேவைகளும் அற்று யோகியானவன் எப்போதும் மனதை பரம்பொருளில் லயிக்கச் செய்தல் வேண்டும். 10) சுத்தமான இடத்திலும், சமமான இடத்திலும் துணி, மான்தோல், தர்ப்பை இவற்றின் மீது தன்கோர் உறுதியான ஆஸனம் அமைத்துக் கொண்டு மனதை ஒருநிலையில் குவிய வைத்தல் வேண்டும்

ஞாயிறு, 1 ஜூலை, 2012

மெடிடேஷன் குரு - தியானம் தமிழில்.


தியானம் மெடிடேஷன் குரு - தியானம் தமிழில். தியானம் தூக்கத்ன் பொழுது நம்ம அறியாமல் நாம் தியானத்தில் ஈடுபடுகிறோம். தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறங்குவது. உறக்கத்தின் பொழுத குறைந்த அளவுதான் பிரபஞ்ச சக்தியைப் பெறமுடிகிது. தியானத்தில் ஈடுபடும் போழுது அபரிதமான சக்தியைப் பெறமுடியும். இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பல மடங்கு விரிவடையச் சேய்கிறது. நம்முடைய "ஆறாவது அறிவின்" கதவைத் திறக்கவும் விரிவடையச் செய்யவும் இது உதவுகிறது. தியானத்தின் மூலம் நமக்கு கிடைக்கபெறும் அதீதமான சந்தி நம்மை சங்தோஷப்படுத்தும். நம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முழு மனநிறைவுடன் காணப்படுவொம். மேலும் பல சிகரங்களைத் தோடச்செய்யும். தியானம் என்பது ஒரு பயணம். தியானத்தின் போழுது, நாம் உணரும் வகையில் நம் உடலிலிருந்து மனதிற்கு பயணிப்போம். மனதிலிருந்து, அறிவாற்றலுக்கு அறிவாற்றலிலிருந்து நமக்குள் பின்பு அதையும்க தாண்டி Meditation "தியானம்" மேற்கொள்ள முதலில் நம் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட செயல்களை நிறுத்தவேண்டும் அதாவது உடல் அசைவுகளையும் பார்ப்பது, பேசுவது, யோசிப்ப்து போன்ற செயல்களையும். "தியானம்" செய்யும் முறையை நாம் தெரிந்து கொள்ளலாம். தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டூப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது. எந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம். நமக்கு சௌகரியமான முறையில். அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ண்து கொள்வது முக்கியம். தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற்கோள்ளலாம். நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம். வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள். கால்களை சம்மண மிட்டுக்கோள்ளுங்கள். இரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கோள்ளுங்கள். கண்களை மேதுவாக மூடுங்கள். அமைதியாக சகஜ நிலைக்கு வாருங்கள். உங்கள்க முழு உடலையும் இலக்காக்கி கொள்ளுங்கள். மனதையும் இலக்காக்கி கொள்ளுங்கள். கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது. கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம். மந்திர்ங்களை ஒதும பொழுதோ அல்லது முணுமுணுக்கும் பொழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது. ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும். நம்முடைய உடல் முறறிலும் சகஜநிலையில் இருக்கும்பொழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும். மனம் மறுற்ம் அறிவு நிலைக்கு. மனம் என்பது பல எண்ணங்களின் கலவை. மனத் தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்த வண்ணமே உள்ளன. நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனத்திற்குள் எழுந்தபடியே இருக்கும். மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்லவேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்கத் தூவங்க வேண்டும். கவனித்தால் என்பது நமக்கு இருக்கும் இயற்கையான குணம். இதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்கத் தூவங்கவேண்டும். மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணிச் சேய்யக்கூடாது. காற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்குத் தேரிந்து நடந்திடக்கூடாது. மூச்சுக்காற்றை சுவாசிப்பதும்,வெளியனுப்புவதும் தண்னிச்சையாக நடைபெற வேண்டும். நம்முடைய இயற்கையான சுவாசத்தைக் கவனித்தல் மட்டுமே போதுமானது. இதுதான் முக்கியம். இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்கச் சிறங்த வழி. எண்ணங்களுக்குப் பின் ஓடாதீர்கள். கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள். எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள். இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். சுவாசத்துடன் மட்டுமே இருங்கள். அப்பொழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும். இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளிகீற்றைப்போல் திடப்படுத்திக்கொள்ளும். இந்நிலையில் ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது. எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார். இந்த நிலையைத்தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது "எண்ணங்கள் அற்ற நிலை" என்றோ கூறுகிறோம். இதுதான் தியான நிலை. இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும். தியானம் அதிகமாகச் செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பேறும். பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாகப் பாயத் துவங்கும். இதைத் தேய்வீக வடிவம் என்றும் கூறலாம்.

மெடிடேஷன் குரு - தியானம் தமிழில்.


http://meditationguru.com/meditationtamil.html தியானம் மெடிடேஷன் குரு - தியானம் தமிழில். தியானம் தூக்கத்ன் பொழுது நம்ம அறியாமல் நாம் தியானத்தில் ஈடுபடுகிறோம். தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறங்குவது. உறக்கத்தின் பொழுத குறைந்த அளவுதான் பிரபஞ்ச சக்தியைப் பெறமுடிகிது. தியானத்தில் ஈடுபடும் போழுது அபரிதமான சக்தியைப் பெறமுடியும். இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பல மடங்கு விரிவடையச் சேய்கிறது. நம்முடைய "ஆறாவது அறிவின்" கதவைத் திறக்கவும் விரிவடையச் செய்யவும் இது உதவுகிறது. தியானத்தின் மூலம் நமக்கு கிடைக்கபெறும் அதீதமான சந்தி நம்மை சங்தோஷப்படுத்தும். நம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முழு மனநிறைவுடன் காணப்படுவொம். மேலும் பல சிகரங்களைத் தோடச்செய்யும். தியானம் என்பது ஒரு பயணம். தியானத்தின் போழுது, நாம் உணரும் வகையில் நம் உடலிலிருந்து மனதிற்கு பயணிப்போம். மனதிலிருந்து, அறிவாற்றலுக்கு அறிவாற்றலிலிருந்து நமக்குள் பின்பு அதையும்க தாண்டி Meditation "தியானம்" மேற்கொள்ள முதலில் நம் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட செயல்களை நிறுத்தவேண்டும் அதாவது உடல் அசைவுகளையும் பார்ப்பது, பேசுவது, யோசிப்ப்து போன்ற செயல்களையும். "தியானம்" செய்யும் முறையை நாம் தெரிந்து கொள்ளலாம். தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டூப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது. எந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம். நமக்கு சௌகரியமான முறையில். அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ண்து கொள்வது முக்கியம். தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற்கோள்ளலாம். நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம். வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள். கால்களை சம்மண மிட்டுக்கோள்ளுங்கள். இரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கோள்ளுங்கள். கண்களை மேதுவாக மூடுங்கள். அமைதியாக சகஜ நிலைக்கு வாருங்கள். உங்கள்க முழு உடலையும் இலக்காக்கி கொள்ளுங்கள். மனதையும் இலக்காக்கி கொள்ளுங்கள். கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது. கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம். மந்திர்ங்களை ஒதும பொழுதோ அல்லது முணுமுணுக்கும் பொழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது. ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும். நம்முடைய உடல் முறறிலும் சகஜநிலையில் இருக்கும்பொழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும். மனம் மறுற்ம் அறிவு நிலைக்கு. மனம் என்பது பல எண்ணங்களின் கலவை. மனத் தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்த வண்ணமே உள்ளன. நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனத்திற்குள் எழுந்தபடியே இருக்கும். மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்லவேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்கத் தூவங்க வேண்டும். கவனித்தால் என்பது நமக்கு இருக்கும் இயற்கையான குணம். இதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்கத் தூவங்கவேண்டும். மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணிச் சேய்யக்கூடாது. காற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்குத் தேரிந்து நடந்திடக்கூடாது. மூச்சுக்காற்றை சுவாசிப்பதும்,வெளியனுப்புவதும் தண்னிச்சையாக நடைபெற வேண்டும். நம்முடைய இயற்கையான சுவாசத்தைக் கவனித்தல் மட்டுமே போதுமானது. இதுதான் முக்கியம். இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்கச் சிறங்த வழி. எண்ணங்களுக்குப் பின் ஓடாதீர்கள். கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள். எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள். இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். சுவாசத்துடன் மட்டுமே இருங்கள். அப்பொழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும். இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளிகீற்றைப்போல் திடப்படுத்திக்கொள்ளும். இந்நிலையில் ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது. எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார். இந்த நிலையைத்தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது "எண்ணங்கள் அற்ற நிலை" என்றோ கூறுகிறோம். இதுதான் தியான நிலை. இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும். தியானம் அதிகமாகச் செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பேறும். பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாகப் பாயத் துவங்கும். இதைத் தேய்வீக வடிவம் என்றும் கூறலாம்


சாஸ்திர அறிவிலும், அனுபவ அறிவிலும் திருப்தி கொண்டவனாய், அசைவுகளுக்கு அப்பாற்பட்டு புலன்களை வென்று கல்லையும் மண்ணையும் பொன்னையும் ஒன்றுபோல் காணும் யோகியே யோக நிலையுற்றான் என்கிறது பகவத் கீதை (அத் -6) இந்த யோக நிலை கீழ்கண்டவாறு எட்டு நிலைகளை கொண்டது அவை: 1) யமா: அஹிம்சை, சத்யம், திருடாமை, பிரம்மச்சரியம் பேராசையின்மை 2) நியமா: சுத்தம்( உள்ளும் புறமும்), திருப்தி, தவம், சுயமாய் கற்றல், இறைவனிடம் சரணாகதி 3) ஆசனா: யோகாசங்கள் 4) ப்ராணயாமா : மூச்சுப்பயிற்சி மற்றும் மூச்சு கட்டுப்பாடு 5) ப்ரத்யாஹரா: மனதை கட்டுப்படுத்துல் 6) தாரணா: மனதை ஒரிடத்தில் குவித்தல் 7) தியானம்: தியானம் (மெடிட்டேஸன்) 8) சமாதி: முக்தி நிலை - இறைநிலையடைந்து ஐக்கியமாதல்

சனி, 12 மே, 2012


அன்புடையீர் இக் கலியுகத்தில் தோன்றி சிவத்தொண்டையே பிரதானமாகக் கொண்டு வாழ்ந்து நாயன்மார்கள் வரிசையில் பின் தொடர்ந்த சிவத் தொண்டர் ஸ்ரீலஸ்ரீ காளிமுத்து சுவாமிகளை பற்றி தென்மாவட்டங்களில் அதிலும் சதுரகிரி மலையேறி சுந்தரமகாகலிங்க சுவாமியை தரிசணம் செய்ய சென்றவர்கள் யாரும் காளிமுத்து சுவாமிகளின் கஞ்சி மடத்தை அறியாதார் இருக்க மாட்டார்கள் சித்தர் வாழும் சதுரகிரிமலையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அன்னதானம் செய்து வரும் பணியை இன்னும் தொடர காரணமாக இருந்து நடத்த ஒரு காளிமுத்து ஆஸ்ரமம் அமைத்து இன்றுவரை சிறப்போடு நடந்து வருகிறது, அவரது சீடரான ஸ்ரீலஸ்ரீ சத்திவேல் சுவாமிகளும் அன்னாரை தொடர்ந்து சிவ தொண்டு சிறக்க அரும்பணி ஆற்றினார் கல்லூரியில் பேராசியராக இருந்தும் இந்த சிவத் தொண்டை திறன்பட நடத்தி சிவமோட்சம் பெற்றார் இவர்களது குருபூஜை வருகிற 26-5-12 சனிக்கிழமை காளிமுத்து சுவாமிகள் ஆஸ்ரமத்தில் நடைபெற உள்ளது , சிவத் தொண்டர் அனைவரும் கலந்து குருபூஜையை சிறப்பித்து அன்னார்களின் அருள் ஆசிகளை பெற அன்புடன் அழைக்கிறேன் அதன் அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளேன்

புதன், 28 மார்ச், 2012

வள்ளற் பெருமானின் திருநெறிகள்

வள்ளற் பெருமானின் திருநெறிகள் 1) கடவுள் ஒருவரே- அவரே அருட்பெருஞ்ஜோதி 2) எல்லா உயிர்களும் நமக்குச் சகோதரர்களே 3) சாதி சமய மத இன தேச வேறுபாடுகளை காணற்க 4) தெய்வ வழிபாட்டிற்காக உயிர் பலி இடுவதை விலக்கு 5) புலால் உண்ணற்க - எவ்வுயிரையும் கொலை செய்யற்க 6) பசித்தாரது பசியைப் போக்குதலே உண்மையான ஆன்மீக வழிபாடு 7)இறந்தவர்களை தகனம் செய்யாது புதைத்திடுக 8)இந்திரிய கரண ஜீவ ஆன்ம நித்திய ஜீவகாருண்ய ஒழுக்கத்தினை கடைபிடிக்க 9) உண்மை அன்பால் கடவுள் வழிபாடு செய்க 10)உயிர்குலமே கடவுள் விளங்கும் ஆலயம்

சனி, 24 மார்ச், 2012

நான் கண்ட மகான் வள்ளலார் இராமலிங்க அடிகளார்

அருள்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருனை அருள் பெருஞ்ஜோதி!
நான் கண்ட மகான் வள்ளலார் இராமலிங்க அடிகளார் வள்ளல் என்றாலே வாரி வழங்கும் கொடைத் தன்மையையும், அன்பின் நெகிழ்ச்சியையும் குறிக்கும், ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் வயிற்றுப் பசிக்கு அன்னம் வழங்வதோடு அல்லாமல் ஞானப் பசிக்கு ஆன்மிகத்தையும் ஊட்டி மக்களிடம் ஜீவகாருண்ய கருத்துக்களை வழங்கிய மகான் தான் வடலூர் வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகளார் எல்லா உயிர்களிடத்தும் பாரபட்ச அன்பை காட்டிய அன்னை தெரசா போலும், ஏழை எளிய மக்களுக்காக பூமிதானம் பெற்று உழைத்து உண்டு மகிழ பூமிதான இயக்கத்தின் பெருந்தகை அண்ணல் வினேபா பாபுஜி போல் சாதிமத பேதமின்றி எல்லா இனத்தவருக்கும் பசி என்னும் கொடு நோயை போக்கிட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை ஏற்படுத்தி , புண்ணியங்களில் எல்லாம் சிறந்த புண்ணியமான பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது என்ற கொள்கைக்கு ஏற்ப இராமலிங்க அடிகளார் அன்னதானச்சாலை ஒன்றை வடலூரில் அமைத்து மக்கள் வழங்கும் பொருளுதவியைக் கொண்டு சாதிமத இன பாகுபாடு இன்றி மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் தொண்டு இன்றும் தொடரச் செய்தவர் வள்ளல் இராமலிங்க அடிகளார், அன்பின் வெளிப்பாடு கருணையின் வெளிப்பாடு தூய வெண்மை நிறமாகக் கொண்டதால் வள்ளலார் என்றும் தூய வெண்மையானஆடையினையே அணிந்து வந்து அமைதியையும் கருணை உணர்வையும் வெளிப்படுத்தினார், வள்ளலார் பசிப்பிணியை அகற்றியோடு அல்லாமல் தூய தமிழால் எளிய தமிழில் வெண்பாக்கள் மூலம் ஆன்மிக கருத்துக்களையும் மக்களிடம் புகட்டினார் கடவுள் ஒருவரே கடவுளை உண்மையான அன்புடன் ஒளிவடிவில் வழிபடவேண்டும் இறைவனை ஒளி வடிவமாக போற்றி வழிபட வழிகாட்டியவர், சத்திய தருமச் சாலைக்கு அருகில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை என்னும் எண்கோண வடிவிலான ஒர் ஒளித் திருக்கோவில் அமைத்து கடவுளை ஒளிச் சுடராக வழிபட செய்தவர், சாதி மதம் இனம் மொழி தேசம் என்ற வேறுபாடுகளை கடந்து அனைவரும் பிராத்தனை செய்ய வழிகோல் அமைத்தார், இதில் மையத்தில் கடவுளை ஜோதி வடிவில் பிரதிஸ்டை செய்து வள்ளலார் ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்தார் அது அணையாத தீபமாக இன்றுவரை பராமரிக்கப்பட்டு கடவுளே ஜோதிமயமாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது, மக்களிடம் தீப விளக்கை தொடர்ந்து வழிபட்டு வரச் செய்து தெய்வ பாவனையை இந்த தீபத்தில் கண்டு ஆராதியுங்கள் நான் இப்போது இந்த உடம்பில் உள்ள நான் இனி அன்பு செய்யும் எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என செய்தி அளித்தார் அன்னார் கூற்றின்படியே வள்ளலார் 1874ம் வருடம் தைமாதம் 19ம் தேதி புனர் பூச நட்சத்திரத்தன்று இரவு 12 மணிக்கு சித்தி வளாகத் திருமாளிகை அறைக்குள் புகுந்து மறைந்தார்,அன்றுமுதல் வள்ளலார் உருவமாக நமது கண்களுக்கு தோன்றாமல் அருட்பெருஞ்ஜோதியாக விளங்கிகொண்டுள்ளார். மேலும் அன்னை தெரசாவின் கொள்கையின் வடிவாக உருவான செஞ்சுலுவை சங்கத்தின் கொள்கைகளை வள்ளல் இராமலிங்கஅடிகள் அவர்களின் வாய்லாக தெள்ளத்தெளிவாக தோன்றுகிறது, இயலாதவருக்கு உதவுதல், நரபலி தவிர்த்தல் புலால் உண்ணாமை எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் போன்ற சிறந்த குணங்களையே வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து வாழ்ந்து ஆன்மிகத்திலும் சிறந்த கருத்துக்களை, எளிய தமிழில் இயற்றிய ஆன்மிகக் கவிஞர் ஆவார், இவர் தன்னுடைய திருவருட்பாவில் அரிய மூலிகைகளையும் மருத்துவ முறைகளையும் எழுதியிருக்கிறார்,அதில் சில மூலிகைகளும் அவற்றால் நமக்கு கிடைக்கும் பயன்களும் பற்றி தினத்தந்தி ஆன்மிக மலரில் வெளியிட்ட விபரத்தையும் இத்துடன் இணைத்துளளேன் படித்து பயன்பெறுங்கள், வள்ளல் அடிகளார் தேசத்தந்தை காந்தியடிகள் அன்பின மறுபிறவி அன்னை தெரசா பூமிதான ஜோதி வினேபாஜி போன்று நம் தமிழ் இனத்திற்கு பெருமை சேர்த்த வள்ளல் பெருமான் போல் நாமும் வாழ முயன்று அன்னாரின் புகழுக்கு உறுதுணை செய்வோம், அருட் பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி!