சனி, 30 டிசம்பர், 2023

திருவாரூர்–பிறக்க முக்தி

திருவாரூர்–பிறக்க முக்தி

தியாகராஜர்(வன்மீகநாதர்) & கமலாம்பிகை



திருவாரூர் தியாகராஜர் கோவில்-பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலம்

நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம்

மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேர்

தியாகராஜரின் தலவரலாறு இன்றும் அறியப்படவில்லை-ஞானசம்பந்தர் திருவாரூரில் கோவில் கொண்டது எந்நாளில் என 10 பாடல்களை பாடியுள்ளார்.

எமபயம் போக்கும் திருத்தலம் .

சுந்தரருக்காக சிவனே வீதியில் நடந்து சென்று பெண் கேட்ட திருத்தலம்.

சுந்தரமூர்த்தி நாயனார் பொருட்டுப் பரவை நாச்சியாரிடம் சிவபெருமான் இருமுறை நள்ளிரவில் தூது நடந்து சென்ற திருவீதியை உடையது.

காஞ்சிபுரத்தில் ஒருகண் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார் “மீளா அடிமை“ என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி மற்றொரு கண்பார்வையும் பெற்றது, இத்தலத்தில்தான்.

நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம்.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம்.

நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம் .

பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம்.

திருவாரூர் கோவில் அளவும் , தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும்.

இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 15 தீர்த்த கிணறுகள், என பிரமாண்டமான கட்டட அமைப்பாகும்.

365 சிவலிங்ககளையும், 86 விநாயக சிலைகளையும் கொண்ட திருத்தலம்.

இக்கோயிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன.

ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர்.

வான்மீகி நாதர் சந்நிதி மிகவும் பழமையானது. இதில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியது- இதனால் சிவபெருமானைப் புற்றிடங்கொண்டார் என்ற பெயரால் அழைக்கிறார்.

தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும். பங்குனி உத்திரம் திருவிழா சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் தரிசனம் செய்யலாம்.

உமையோடும் முருகனோடும் இணைந்து காட்சி தரும் சிவனுக்கு சோமஸ்கந்தர் எனப் பெயர். அவரே இங்கு எழுந்தருளி இருக்கும் தியாகராசர் ஆவார்.

சுந்தரர், அடியார்களின் “திருத்தொண்டத் தொகை”யைப் பாடுவதற்கு, பெருமை இப்பதிக்கேயுரியது

சுந்தரர் (ஆற்றில் இட்டு குளத்தில் எடுத்த பன்னீராயிரம் பொன்):

சுந்தரர் திருமுதுகுன்றம் சென்று பொன் வேண்ட, இறைவன் பன்னீராயிரம் பொன் அருளினார். சுந்தரர், மேலும் பல தலங்களைத் தரிசிக்க எண்ணி இருந்ததால், பொன் கட்டிகளை திருவாரூரில் தான் பெறுமாறுச் செய்தருள இறைவனிடம் வேண்டினார். இறைவன் அசரீரியாய் ‘இவற்றை மணிமுத்தா நதியில் இட்டுப் பின் திருவாரூர்க் குளத்தில் பெற்றுக் கொள்வாய்’ என அருளிச் செய்தார்.

சுந்தரர் பொன்னை மணிமுத்தா நதியில் இட்டார்.

பல தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டுத் திருவாரூர் வந்து சேர்ந்தார்.

பரவையாரிடம் கமலாலயக் குளத்தில் பொன்னை வருவித்துத் தருவேன் எனக் கூறி, திருக்குளம் சென்றார். குளத்தில் பொன் கட்டிகளை தேடத் துவங்கினார்.

பொன் தந்த பொன்னார் மேனியன்: இறைவன் சுந்தரரின் தேவாரம் கேட்கும் பெரும் விருப்பத்தால் பொன்னைத் தருவித்துத் தராமல் இருந்தருளினார். பரவையார் புன்சிரிப்புடன் ‘ஆற்றில் இட்டு குளத்தில் தேடுகிறீரோ’ என உரைத்தார்.

சுந்தரர் ‘பொன்செய்த மேனியினீர்’ என்னும் பதிகம் பாடி விண்ணப்பிக்க, இறைவன் மிக மகிழ்ந்து பொன்னை வருவித்து அருளினார்.

திருச்சிற்றம்பலம்

சனி, 23 டிசம்பர், 2023

நம் நால்வா் வாழ்வு காட்டும் உண்மை:

 நம் நால்வா் வாழ்வு காட்டும் உண்மை:


எங்கும் நிறைந்த இனிய ஈசனின் பேரருளால்
பரமன் பாலைக்கொடுத்து திருஞானசம்பந்தரை ஆட்கொண்டாா்.
"போதையாா் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லாதெனத், தாதையாா் முனிவுறத் தான்எனை ஆண்டவன்" என்பது திருஞானசம்பந்தா் அகச்சான்று.
சூலைகொடுத்து திருநாவுக்கரசரை ஆட்கொண்டாா்
"சூலை தீா்த்து அடியேனை ஆட்கொண்டாரே" என்பது திருநாவுக்கரசா் நற்சான்று.
ஓலை கொடுத்துச் சுந்தரரை ஆட்கொண்டாா்.
"அன்று வந்தெனை அகலிடத்தவா் முன் ஆளதாக என்று ஆவணம் காட்டி" என்பது சுந்தரா் சொல்மாலை.
காலைக்காட்டி மணிவாசகரை ஆட்கொண்டாா்.
"இணையாா் திருவடி என்தலைமேல் வைத்தலுமே, துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்" என்பது மணிவாசகா் மணிமொழி.
இந்நால்வரும் சைவசமய ஆசாாியா்களாவா்.
ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகையில் அவரவா் தன்மைக்கு ஏற்ப ஆட்கொண்டுள்ளாா்.
"ஆட்பாலவா்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும் கேட்பான்புகில் அளவில்லை கிளக்கவேண்டா" என்பது ஞானசம்பந்தாின் நல்வாக்கு.
திருஞானசம்பந்தா் வாழ்வில் துன்பமே இல்லாத நிலையைக் காணமுடிகிறது.
திருநாவுக்கரசா் வாழ்வில் அடிமுதல் முடிவுவரை துன்பங்கலந்த நிலையையே காண்கிறோம்.
"என்னை வகுத்திலனேல் இடும்பைக்கு இடம் யாது சொல்லே" என்பது அப்பா் அநுபவ வாக்கு.
சுந்தரா் வாழ்வில் துன்பமும் இன்பமும் கலந்தே நடையிடுகிறது.
"பாடிய அடியேன் படுதுயா்களையாய் பாசுபதா பரஞ்சுடரே" என்பதும் "கஸ்தூாி கமழ் சாந்தும் பணித்தருள வேண்டும்" என்பதும் சுந்தரா் அநுபவ அருள்மொழி.
மணிவாசகா் வாழ்வில் முன்னா் இன்பமும் பின்னா்த் துன்பமும் கலந்து வருவதைக் காண்கிறோம்.
"இன்றோா் இடையூறு எனக் குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே" என்பது மணிவாசகாின் மணிமொழிச்சான்று

வெள்ளி, 22 டிசம்பர், 2023

திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி

'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி 



திருவாதிரை களி வந்த கதை 

சேந்தனார் என்ற விறகு வியாபாரி இருந்தார். மிகச் சிறந்த சிவ பக்தன். தினமும் விறகு வெட்டி, விற்று, அதில் வரும் பணத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார். தினமும் ஒரு சிவனடியாருக்காவது உணவளிக்காமல் சாப்பிடுவதில்லை என்பதை கொள்கையாக வைத்திருந்தார். ஒரு நாள் மழை பெய்கு விறகு முழுவதம் நனைந்து ஈரமானதால், அவற்றை விற்க முடியவில்லை. இதனால் வீட்டு செலவிற்கு பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் கவலையில் இருந்த சேந்தனாரிடம் சிவனடியார் ஒருவர் வந்து பசிக்கிறது என உணவு கேட்டுள்ளார்

வீட்டில் எந்த பொருட்களும் இல்லாத நிலையில் சேர்ந்தனாரின் மவைவி, அரிசி மாவு, வெல்லம் சேர்த்து களியும், அதோடு எஞ்சி இருந்த 7 காய்கறிகளை சேர்த்து கூட்டு ஒன்று சமைத்து சிவனடியாருக்கு படைத்தனர். மறுநாள் அந்த ஊர் கோவில் அர்ச்சகர் பூஜைக்காக கோவிலை திறந்த போது, அங்கு களி, காய்கறி கூட்டு சிதறி கிடைப்பதை கண்டு ஆச்சரியமடைந்தார். சேந்தனாரின் பக்தியை சோதிக்க சிவ பெருமானே அடியாராக வந்ததையும் புரிந்து கொண்டார்.

     சேந்தனாரை ஆட்கொள்ள சிவபெருமான் இந்த திருவிளையாடலை நிகழ்த்திய தினம் மார்கழி திருவாதிரை. இதன் நினைவாகவே இந்த நாளில் சிவபெருமானுக்கு திருவாதிரை களி செய்து படைக்கும் வழக்கம் வந்தது.

திருச்சிற்றம்பலம்


 

திருவாதிரை


திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர்.


ஆருத்ரா தரிசனம்


மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் மற்றும் ஆரூர் கோயில் கொண்டருளிய நடராஜப் பெருமானைமற்றும் தியாகராஜர் பெருமான் தரிசக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.


மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்புகள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் மற்றும் திருவாரூர் நடப்பது மிகவும் சிறப்புடையது. திருவாதிரை தினத்தில்் தியாகராஜ சுவாமி வட பாத தரிசனம் காட்டப்படும். திருவாதிரை தினததில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.இதை ஆருத்ரா தரிசனம் செய்வதற்காக செல்வர். ஆருத்ரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல். இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க பிறநாடுகளில் இருந்து அடியார் கூட்டம் தொன்று தொட்டு இங்கு செல்வது வழக்கம். திருவாரூர் பஞ்சபூத தலத்தில்் பூமி தலமாக இருக்கிறது் பிறந்தாலும் பேசினாலும்் முக்தி தரும் தலம், சிதமபரம் பஞ்சபூதத தலஙகளில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முத்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.


சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. சைவர்களுக்கு மட்டுமல்லாமல் வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியதாகும். சுவர்க்க வாயிலில் ஏகாதசி விரதம் இம்மாத்திலேயே கடைப்பிடிக்கப்படுகின்றது. கண்ணன் கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று கூறியுள்ளார். ஆண்டாளும் தனது திருப்பாவையில் மார்கழி மாதத்து மதி நிறைந்த நன்னாள் என வர்ணிக்கின்றாள். இதனை சிறப்புடைய மார்கழி மாதத்து ஆதிரை நாள் என்று அழைக்கப்படும்.


மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் கடைப்பிடிப்பதால் திருவாதிரை திருவிழா என போற்றப்படுகின்றது. 


இதன் காரணமாக சிவாலயங்களில் உள்ள நடராஜருக்கு ஆருத்ரா அபிஷேகம் நடப்பெறும். ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.




இதை முன்னிட்டு உத்திரகோச மங்கை திருக்கோயிலில் இருக்கும் நடராஜருக்கு (மார்கழி 12) டிசம்பர் 27ஆம் தேதி சந்தன காப்பு களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மகா அபிஷேகமும், காலை ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.


ஆருத்ரா தரிசன பலன்கள் :


ஈசனின் ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம். உத்திரகோசமங்கை திருத்தலத்தில் இருக்கும் மரகத நடராஜரை தரிசிக்க இம்மையிலும் நன்மை தருவார். பிறவிப்பிணி தீரும் என்பது நம்பிக்கை.


ஆருத்ரா தரிசனம் : சிதம்பரம், உத்திரகோசமங்கை திருக்கோயிலில் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். 


சிவபெருமானின் ரூபத்தை பெரும்பாலான சிவாலயங்களில் சிவ லிங்கமாக தான் காட்சி தருவது வழக்கம். ஆனால் சில சிவாலயங்களில் இருக்கும் சிவனின் நடராஜர் ரூபம் மிக சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.


அப்படி நடராஜர் ஸ்வாமிக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை மட்டுமே சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படும். அந்த சிறப்பு வாய்ந்த நாளில் மிக முக்கிய நாளாக ஆருத்ரா அபிஷேப் பெருவிழா ஆண்டு தோறும் மார்கழி மாதம் கொண்டாடப்படுகின்றது.


சிவாலயங்களில் மிக முக்கியமாக பஞ்ச சபைகளான


1. திருவாலங்காடு -இரத்தின சபை


2. சிதம்பரம் - கனக சபை

3. மதுரை -ரஜித சபை (வெள்ளி அம்பலம்)


4. திருநெல்வேலி - தாமிர சபை


5. திருக்குற்றாலம் - சித்திர சபை

குறிப்பாக இந்த ஐந்து சபைகளில் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருவது வழக்கம்.


ஆனந்தத் தாண்டவமாடிய கனகசபை சிதம்பரம், திருஆலங்காடு திருத்தலத்தில் ஊர்த்துவத் தாண்டவமாடிய ரத்தினசபை, மதுரையில் பாண்டியனின் வேண்டுதலுக்காக இடக்கால் மாறி ஆடிய வெள்ளிசபை திருஆலவாய், நெல்லையில் தாமிர சபை , குற்றாலத்தில் சித்திர சபை ஆகிய பஞ்ச சபைகளிலும் ஆருத்ரா அபிஷேகம், தரிசனமும் வெகு சிறப்பாக நடைபெறும்.


திருவாதிரை நாளில் உளுந்து மாவினால் செய்த களி நெய்வேத்தியமாகப் படைக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

 'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி ' என இதனை தென் தமிழகத்தின் சொலவடையில் பதிவு செய்துள்ளனர்


திருச்சிற்றம்பலம்



திருவாதிரை


திருவாதிரை



திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர்.


ஆருத்ரா தரிசனம்


மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் மற்றும் ஆரூர் கோயில் கொண்டருளிய நடராஜப் பெருமானைமற்றும் தியாகராஜர் பெருமான் தரிசக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.


மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்புகள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் மற்றும் திருவாரூர் நடப்பது மிகவும் சிறப்புடையது. திருவாதிரை தினத்தில்் தியாகராஜ சுவாமி வட பாத தரிசனம் காட்டப்படும். திருவாதிரை தினததில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.இதை ஆருத்ரா தரிசனம் செய்வதற்காக செல்வர். ஆருத்ரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல். இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க பிறநாடுகளில் இருந்து அடியார் கூட்டம் தொன்று தொட்டு இங்கு செல்வது வழக்கம். திருவாரூர் பஞ்சபூத தலத்தில்் பூமி தலமாக இருக்கிறது் பிறந்தாலும் பேசினாலும்் முக்தி தரும் தலம், சிதமபரம் பஞ்சபூதத தலஙகளில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முத்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.


சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. சைவர்களுக்கு மட்டுமல்லாமல் வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியதாகும். சுவர்க்க வாயிலில் ஏகாதசி விரதம் இம்மாத்திலேயே கடைப்பிடிக்கப்படுகின்றது. கண்ணன் கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று கூறியுள்ளார். ஆண்டாளும் தனது திருப்பாவையில் மார்கழி மாதத்து மதி நிறைந்த நன்னாள் என வர்ணிக்கின்றாள். இதனை சிறப்புடைய மார்கழி மாதத்து ஆதிரை நாள் என்று அழைக்கப்படும்.


மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் கடைப்பிடிப்பதால் திருவாதிரை திருவிழா என போற்றப்படுகின்றது. 


இதன் காரணமாக சிவாலயங்களில் உள்ள நடராஜருக்கு ஆருத்ரா அபிஷேகம் நடப்பெறும். ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.




இதை முன்னிட்டு உத்திரகோச மங்கை திருக்கோயிலில் இருக்கும் நடராஜருக்கு (மார்கழி 12) டிசம்பர் 27ஆம் தேதி சந்தன காப்பு களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மகா அபிஷேகமும், காலை ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.


ஆருத்ரா தரிசன பலன்கள் :


ஈசனின் ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம். உத்திரகோசமங்கை திருத்தலத்தில் இருக்கும் மரகத நடராஜரை தரிசிக்க இம்மையிலும் நன்மை தருவார். பிறவிப்பிணி தீரும் என்பது நம்பிக்கை.


ஆருத்ரா தரிசனம் : சிதம்பரம், உத்திரகோசமங்கை திருக்கோயிலில் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். 


சிவபெருமானின் ரூபத்தை பெரும்பாலான சிவாலயங்களில் சிவ லிங்கமாக தான் காட்சி தருவது வழக்கம். ஆனால் சில சிவாலயங்களில் இருக்கும் சிவனின் நடராஜர் ரூபம் மிக சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.


அப்படி நடராஜர் ஸ்வாமிக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை மட்டுமே சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படும். அந்த சிறப்பு வாய்ந்த நாளில் மிக முக்கிய நாளாக ஆருத்ரா அபிஷேப் பெருவிழா ஆண்டு தோறும் மார்கழி மாதம் கொண்டாடப்படுகின்றது.


சிவாலயங்களில் மிக முக்கியமாக பஞ்ச சபைகளான


1. திருவாலங்காடு -இரத்தின சபை


2. சிதம்பரம் - கனக சபை

3. மதுரை -ரஜித சபை (வெள்ளி அம்பலம்)


4. திருநெல்வேலி - தாமிர சபை


5. திருக்குற்றாலம் - சித்திர சபை

குறிப்பாக இந்த ஐந்து சபைகளில் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருவது வழக்கம்.


ஆனந்தத் தாண்டவமாடிய கனகசபை சிதம்பரம், திருஆலங்காடு திருத்தலத்தில் ஊர்த்துவத் தாண்டவமாடிய ரத்தினசபை, மதுரையில் பாண்டியனின் வேண்டுதலுக்காக இடக்கால் மாறி ஆடிய வெள்ளிசபை திருஆலவாய், நெல்லையில் தாமிர சபை , குற்றாலத்தில் சித்திர சபை ஆகிய பஞ்ச சபைகளிலும் ஆருத்ரா அபிஷேகம், தரிசனமும் வெகு சிறப்பாக நடைபெறும்.


திருவாதிரை நாளில் உளுந்து மாவினால் செய்த களி நெய்வேத்தியமாகப் படைக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

 'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி ' என இதனை தென் தமிழகத்தின் சொலவடையில் பதிவு செய்துள்ளனர்


திருச்சிற்றம்பலம்

திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர்.


ஆருத்ரா தரிசனம்


மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் மற்றும் ஆரூர் கோயில் கொண்டருளிய நடராஜப் பெருமானைமற்றும் தியாகராஜர் பெருமான் தரிசக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.


மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்புகள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் மற்றும் திருவாரூர் நடப்பது மிகவும் சிறப்புடையது. திருவாதிரை தினத்தில்் தியாகராஜ சுவாமி வட பாத தரிசனம் காட்டப்படும். திருவாதிரை தினததில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.இதை ஆருத்ரா தரிசனம் செய்வதற்காக செல்வர். ஆருத்ரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல். இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க பிறநாடுகளில் இருந்து அடியார் கூட்டம் தொன்று தொட்டு இங்கு செல்வது வழக்கம். திருவாரூர் பஞ்சபூத தலத்தில்் பூமி தலமாக இருக்கிறது் பிறந்தாலும் பேசினாலும்் முக்தி தரும் தலம், சிதமபரம் பஞ்சபூதத தலஙகளில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முத்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.


சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. சைவர்களுக்கு மட்டுமல்லாமல் வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியதாகும். சுவர்க்க வாயிலில் ஏகாதசி விரதம் இம்மாத்திலேயே கடைப்பிடிக்கப்படுகின்றது. கண்ணன் கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று கூறியுள்ளார். ஆண்டாளும் தனது திருப்பாவையில் மார்கழி மாதத்து மதி நிறைந்த நன்னாள் என வர்ணிக்கின்றாள். இதனை சிறப்புடைய மார்கழி மாதத்து ஆதிரை நாள் என்று அழைக்கப்படும்.


மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் கடைப்பிடிப்பதால் திருவாதிரை திருவிழா என போற்றப்படுகின்றது. 


இதன் காரணமாக சிவாலயங்களில் உள்ள நடராஜருக்கு ஆருத்ரா அபிஷேகம் நடப்பெறும். ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.




இதை முன்னிட்டு உத்திரகோச மங்கை திருக்கோயிலில் இருக்கும் நடராஜருக்கு (மார்கழி 12) டிசம்பர் 27ஆம் தேதி சந்தன காப்பு களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மகா அபிஷேகமும், காலை ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.


ஆருத்ரா தரிசன பலன்கள் :


ஈசனின் ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம். உத்திரகோசமங்கை திருத்தலத்தில் இருக்கும் மரகத நடராஜரை தரிசிக்க இம்மையிலும் நன்மை தருவார். பிறவிப்பிணி தீரும் என்பது நம்பிக்கை.


ஆருத்ரா தரிசனம் : சிதம்பரம், உத்திரகோசமங்கை திருக்கோயிலில் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். 


சிவபெருமானின் ரூபத்தை பெரும்பாலான சிவாலயங்களில் சிவ லிங்கமாக தான் காட்சி தருவது வழக்கம். ஆனால் சில சிவாலயங்களில் இருக்கும் சிவனின் நடராஜர் ரூபம் மிக சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.


அப்படி நடராஜர் ஸ்வாமிக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை மட்டுமே சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படும். அந்த சிறப்பு வாய்ந்த நாளில் மிக முக்கிய நாளாக ஆருத்ரா அபிஷேப் பெருவிழா ஆண்டு தோறும் மார்கழி மாதம் கொண்டாடப்படுகின்றது.


சிவாலயங்களில் மிக முக்கியமாக பஞ்ச சபைகளான


1. திருவாலங்காடு -இரத்தின சபை


2. சிதம்பரம் - கனக சபை

3. மதுரை -ரஜித சபை (வெள்ளி அம்பலம்)


4. திருநெல்வேலி - தாமிர சபை


5. திருக்குற்றாலம் - சித்திர சபை

குறிப்பாக இந்த ஐந்து சபைகளில் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருவது வழக்கம்.


ஆனந்தத் தாண்டவமாடிய கனகசபை சிதம்பரம், திருஆலங்காடு திருத்தலத்தில் ஊர்த்துவத் தாண்டவமாடிய ரத்தினசபை, மதுரையில் பாண்டியனின் வேண்டுதலுக்காக இடக்கால் மாறி ஆடிய வெள்ளிசபை திருஆலவாய், நெல்லையில் தாமிர சபை , குற்றாலத்தில் சித்திர சபை ஆகிய பஞ்ச சபைகளிலும் ஆருத்ரா அபிஷேகம், தரிசனமும் வெகு சிறப்பாக நடைபெறும்.


திருவாதிரை நாளில் உளுந்து மாவினால் செய்த களி நெய்வேத்தியமாகப் படைக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

 'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி ' என இதனை தென் தமிழகத்தின் சொலவடையில் பதிவு செய்துள்ளனர்


திருச்சிற்றம்பலம்

சனி, 16 டிசம்பர், 2023

சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும்இல்லை

  " சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும்இல்லை



 சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும்இல்லை

பாறையில் விதை விதைத்தால் ..... பலன் உண்டோ?

  செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று

  பத்தி செய்மனப் பாறைகட்கு ஏறுமோ

அத்தன் என்று அரியோடு பிரமனும்

 துத்தியஞ்செய நின்றநற் சோதியே ............தி,மு,5 பதி, பொது


   ( மனப்பாறைப்பட்டு =பாறைபோான்ற கல்மனம் உடையவர்கட்கு,  அத்தன் = தலைவன்., துத்தியம் செய = போற்றித்துதித்தல், தேஎன்று = பெருந்தெய்வம் என்று)


  செத்துச் செத்து பிறக்கும் சிறுதேவதைகளையே கடவுள் (முழுமுதற் பொருள்) என்று எண்ணி பக்தி செய்யும் கல்போன்ற மனம் உடையவர்களுக்கு முழுமுதற் பொருள் சிவபெருமானார் என்று திருமாலேோடு, பரமனும்துதித்து போற்றுவது பொருந்துமோ?

  கடவுள் நிலை உணர்ந்து அமமயமான அருளாளர்கள் முழுமுதற் பொருள் / பெருந் தெய்வத்திற்கும், செத்துச் செத்துப் பிறக்கும் சிறு தேவதைகட்கும் இலக்கணம் கூறியுள்ளார்கள்.

  செத்து செத்து பிறப்பவை யாவும் சிறு தெய்வங்களாகும். அவை பிறக்கும் இறக்கும் மேல் வினையும் செய்யும்,வேதனைப்படும்,

  பிறப்பும் இறப்பும் / முதலும் முடிவும் இல்லாததது தான் பெருந்தெய்வம் அதுவே முழுமுதற்கடவுள்

  தோற்றம் உண்டானால் இறப்பும் நேர்ந்தே தீரும். பிறந்தால் இறப்பு நிச்சயம் உண்டு. தோற்றம் உடையவையெயல்லாம் பிறந்து, குழந்தையாய் வளரும் இவைகட்கு பிள்ளைத்தமிழ் உண்டு.  ஆனால் சிவபெருமானார் பிறந்திருந்தால் தானே குழந்தையாய் இருந்திருப்பார் அதனலாேயே அவருக்கு பிள்ளைத்தமிழ் ஏதும் கிடையாது. திருநாவுக்கரசர் திருவாரூர் திருத்தாணடகத்தில் தி,மு 6ல் சிவபெருமானார் பிறாவதவர் என்பதை பாடி யுள்ளதைக் காணலாம். "பாலனாய் வளர்ந்திலாப் பான்மையான் " என்கிறார்.

   ஒரு ஊருக்கு ஒரு தலைவன்,ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஆட்சியர் ஒரு மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சர், ஒரு நாட்டிற்கு ஒரு அரசன் அல்லது பிரதமர், இதைப்போல அகில் உலகங்களையும் ஆளக்கூடிய கடவுளும் ஒருவரே. அவரைத்தான் சிவபெருமான் என்கிறோம். இவரே முழுமுதற்கடவுள்.

  மனிதர்கள், தேவர்கள், முனிவர்கள், ரிசிகள், திருமால், பிரம்மா, கிரகங்கள், தேவேந்திரன் சூரியன், சந்திரன் மற்றமுள்ள எல்லா தெய்வங்களும் தேவதைகளும் சிவபெருமானாரைத்தானே தொழுகின்றன, ஆனால் இப்பெருமான் தொழக்கூடியவர் எவரும் இல்லையே என்பதை மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த திருமூலர் கூறியுள்ளார.

 " என்னால் தொழப்படும் எம் இறை மற்றவன்

  தன்னால் தொழப்படுவார் இல்லை தானே "   திருமந்திரம் (தி,மு10)


 " சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும்இல்லை

   அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை ,,,  திருமந்திரம்


  பிரமனும் மாலும் மேலைமுடியோடு பாதம்

  அறியாமை நின்ற பெரியோன்      ....  திரு,மு, 4/14/02


 ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்

  ஈறில்லாதவன் ஈசன் ஒருவனே    ...... 05/100/03


  அவனை ஒழிய அமரரும் இல்லை

 அவனன்றி ெசய்யும் அருந்தவம் இல்லை

 அவனன்றி மூவரல் ஆவது ஒன்றில்லை

  அவனன்றி ஊர்புகுமாறு அறியேனே......  திருமந்திரம் 


 சிவபெருமானை அன்றி வேறு பெருந்தெய்வம் உலகில் இல்லை. முத்திக்கடவுள் என்று இவருக்கு ஒர் பெயரும் உண்டு. இவரைத்தவிர ேவறு யாராலும் பிறப்பை அறுக்க முடியாது என்கிறார் திருமூலர்.

  இவரை வழிபடுவதால் நாம் அடையும் பலன்கள்

 1. இம்மண்ணில் மீண்டும் பிறக்க மாட்டார்கள்

 2. சிவனுலகு அடைந்து இன்பமாய் வாழ்வர்.

 3. மனச்சோர்வு அடையார்.

  4. பசியால் வருத்தப்பட மாட்டார்கள்

  5. நோயால் வருந்த மாட்டார்கள்.

     இந்த உண்மைகள் எல்லாம் கல்போன்ற மனம் உடையவர்களுக்கு  சொன்னால் கேட்க மாட்டார்கள் என்கிறார் அப்பர் அடிகள்.

  பஞ்சு மென்மையானது அதனை தண்ணீரில் போட்டால் ஈர்த்துக் கொள்ளும் , கல்லை தண்ணீரில் போட்டால நீரை ஈர்க்காது. அதைப் போல கல்போன்ற மனம் உடையவர்களுக்கு உண்மைகள் புகா.

 பாறையில் விதை விதைத்தால் முளைக்காது. கல்மனம் உடையவர்கள் மனத்தில் சிவ பெருமானரை பற்றி மேற் கூறிய உயர்ந்த உண்மைகள் நிற்காது. இவர்கள் செத்து செத்து பிறக்கும் சிறு தெய்வங்களையே வழிபடுபவர்கள் என்கிறார் நாவரசர் அப்பர் அடிகள்.

திருச்சிற்றம்பலம்

(நன்றி தமிழ் வேதம்)


ஆத்தடி விநாயகர் கோவில.....................அன்றும் (2021),,,,,,, இன்றும்(2023)


அன்று (2021)  உழவாரப்பணி மூலம் பூச்செடிகள் நடுதல் 























இன்று(2023)  
(2023)

இன்று 16,12,23 சனிக்கிழமை சுந்தரபாண்டியம் பெரியகோவில் வர்ண பகவான் தாக்கம் நீங்க ேவண்டும் கார்த்திகைப் பொங்கல்

 இன்று 16,12,23 சனிக்கிழமை சுந்தரபாண்டியம் பெரியகோவில் வர்ண பகவான் தாக்கம் நீங்க ேவண்டும் கார்த்திகைப் பொங்கல்

All reactions:
Kadal Kani, M. Gurunathan and 5 others

ஆன்மா ஞானம் விளங்க குருஅருள் பெறுதல்


 ஆன்மா ஞானம் விளங்க குருஅருள் பெறுதல்

  இறைவன் திருவருளால் ஆன்மா பல்வேறு பிறவிகளிலே பிறந்தும் இறந்தும் இரு வினைகளைப் புரிந்தும் அவ்வினைகளின் பயன்களை அநுபவித்து வருகின்ற சகல நிலை நீங்குவதற்கு, இருவினை ஒப்பு, மலபரிபாகம, சத்தி நிபாதம் இவற்றின்  வழி முதல்வனது ஞானம் விளங்க அந்தஞானத்தின் முன் மாயா கருவிகளும் மாயா உலகமும் புலனாகாது முதல்வனது நிறைவில் தோய்ந்து நிற்பது சுத்த நிலை எனப்படும் இந்நிலையில் தான் உயிராகி ஆன்மா முத்திக்கு தகுதியடைந்து தயாராக உள்ள நிலை

 பாசப்பற்று விடுதற்பொருட்டும், முதல்வன் பேரருளை அடைவதற்கும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகை நெறிகள் துணைபுரிகின்றன. உலகப்பயன் நோக்கி சிவனை வழிபடுதல் உபாயம் என்றும்,அப் பயன்கள் யாதொன்றயும் விரும்பாது அன்பே காரணமாக சிவனை வழிபடுதல் உண்மை என்றும் கூறப்படும். இச்செயலே சிவ புண்ணியத்தை விளைவிக்கும் இச் சிவ புண்ணியங்களால் இருவினை ஒப்பும், இருவினையொப்பால் மலபரிபாகமும், சத்திநிபாதமும் நிகழும், இம்மூன்றும் முன்னும்பின்னும் அல்லது ஏக காலத்தில் நிகழலாம் இதுவேஞானம் பெறுவதற்குரிய பக்குவ நிலையாகும். 

  இருவினையொப்பு ;சரியை, முதலிய தவங்களின் வழி நல்வினைப்பயனாகிய இன்பத்தில் விருப்பும், தீவினைப்பயனாகிய துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாது, அவற்றால் உள்ளம் வேறுபடாது ஒன்றுபோல கருதி அவற்றின் மேல் பற்றுச் செய்யாது இருக்கும் மனநிலை உண்டாகும். அதுவே இருவினை ஒப்பு ஆகும். இது "ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நாேக்குதல் " என சொல்லப்படும். இதனால் ஆன்மாவிற்கு  ஞான வேட்கை உண்டாகும்.

மலபரிபாகம் 

   இருவினை ஒப்பாவது அனுக்கிரக காரணம் அன்று, மலபரிபாகம் படுவதற்கே துணையாகும்,இருவினை ஒப்பு நிகழவே ஆணவத்தின் சத்தி மெலிந்து ஆன்மாவின் அறிவைத் தடுத்து ைவத்திருந்த அதன்பிணிப்பு நெகிழ்ந்து நீங்கும் நிலையை அடையும், அந்நிலை " மலபரிபாகம்" எனப்படும். பரிபாகம் என்பதற்கு பக்குவம் என்று பொருள். மலசக்தி நீங்கக்கூடிய பக்குவத்தை அடைந்தள்ளது என்பதைக் குறிக்கும்.

சத்தி நிபாதம்

   மலப்பரிபாகம் சிறிது சிறிதாக நிகழ நிகழ அதற்கேற்ப அதுவரை ஆன்மாவில் மறைந்திருந்து பக்குவப்படுத்தி வந்த திரோதன சத்தி சிறிது சிறிதாகத் தன் தன்மை மாறி அருட் சக்தியாக மாறும். மலசத்தி தேய்நது வரும்நிலையை மலபரிபாகம் என்றாற்போல அருட்சத்தி விளங்கி வரும் நிலையை "சத்திநிபாதம்" என்பர் , இது மலபரிபாகத்தின் தன்மையைப் பொறுத்துத்தான் சித்திநிபாதம் நிகழும்.இதனை சத்தி வீ்ழ்தல் என்பது பொருளாகும். இதனை சத்தி  வீழ்ச்சி என்பதற்கு மக்கள் கூட்டம் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் ஒரு கல் அக்கூட்டத்தில் வீழ்ந்தால் என்னவாகும் மக்கள் எல்லாம் அஞ்சி அகல ஒதுங்குவார்கள். அதுபாேல சத்திநிபாதம்  ஒருவருக்கு நிகழுமாயின் உலகியல் உணர்வில் ஓர் அதிர்ச்சி உண்டாக உலகியலில் இருந்து நீங்குவதாகும். எனவே சத்தி வீழ்ச்சி என்றே கூறப்படுகிறது. இந்த சத்திநிபாதம் ஆன்மாவின் பக்குவநிலைக்கு ஏற்ப மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என படிமுறைகிளல் உயர்ந்து நிற்கும். இவ்வாறு ஆன்மா ஞானம் பெறுவதற்கு இருவினை ஒப்பு, மலபரிபாகம், சத்திநிபாதம் எல்லாம் ஆன்மாவின் அறிவினில் விளங்குதல் வேண்டும். அப்போதுதான் ஆன்மா ஞானம் பெறுவதற்கான படி நிலையை அடையும்.

 குருவருள்

 இறைவனது அருளே உயிர்க்கு அருளவேண்டி வடிவு கொள்கிறது. உயிர் பெத்தநிலையில் திரோதன சத்தியையும், முத்தியில் தடையில்லாத சிவஞான சத்தியையும் உருவாகக் கொண்டு உயி்ர்கட்கு அருள்புரிய  கர்த்தா ஆசாரிய மூர்த்தமாய் திருமேனி கொண்டு எழுந்தருளி மயக்கமாய் வந்து, தடுக்கும் கேவலம், விகற்பமாய் வந்து தடுக்கும் சகலம் ஆகிய நிலைகள் சேராதவாறு அருளில் நிறுத்தி மலங்களை போக்கியருள்வான். அதனால் ஆன்மா தன்னுடைய சிற்றறிவினை ஒழித்து மெய்ஞானம்பெறும். பெருகிய ஞானத்தால் பெருமானின் திருவடியை அடைந்து பேரின்பத்தில் திளைக்கும். சுத்த நிலையாகிய இந்நிலையே பிறவி ஒழிந்த இறைவனோடு கலந்திருக்கும் அருள் நிலையாகும்.  இவ்வருள் நிலை, சரியை, கிரியை, யோகம் நிலைகளில் நின்று முதிர்ச்சி பெற்றயாளருக்கே வாய்க்கும் என்று சிவ ஆகமங்கள் சொல்லும்.

திருச்சிற்றம்பலம்

நன்றி சிவப்பிரகாசம் நன்நூல்


புதன், 13 டிசம்பர், 2023

சிவ பூசை தத்துவம்

சிவ பூசை தத்துவம்



* ஆச மனம் சமர்ப்பிப்பது * பூசை செய்பவனின் ஆனம்மாவை மலங்களிலிருந்து நீக்கு வதற்காக செய்வது
*அர்க்கயம் * / பூ சமர்ப்பித்தல் / சதாசிவனுடைய நிலையை அடைவதற்காக செய்வது
* ஸ்தானம் (கங்கை அபிசேகம் செய்வித்தல்) * / ஆன்மாவினுடைய மலங்களை போக்குவதற்காக செய்வது
* சந்தனம் பூசுதல்& வஸ்தரிம். ஆபரணம்,மலர் அலங்காரம், தூபமிடல், * / சுத்த வித்தியா புவனத்தல் ஆன்மா அடையும் போகம்
* தீபம் இடுதல்* மலங்கள் அற்று சுத்த ஞானத்தை கொடுக்க வல்ல செயல்

சிவபூசை ெசய்வது
ஆவாஹனம் , ஸ்தாபனம், ஸந்நிதானம், ஸந்நிரோதனம், முதலியன அதனதன் முத்திரைகளுடனும்,இருதயம் முதலிய அங்க மந்திரங்களாலும், தன்னுடைய மனதில் சிவபொருமானை முழுவதும் பாவிதது / பெருமானுடன் ஐக்கித்தை உணர்வதன் மூலமும் பாத்யம், அரக்கியம், ஆசமனம் முதலிய உபகரணங்களாலும் உன்னை வழிபடுவது ஒன்றே இந்த பிரவியின் பயன்
8ஆவாஹனம் *என்பது வழிபடுவோனின் ஆன்மாவல் சித்தாமாகிய (சிவபெருமானை) பிரகாசிக்க ெசய்வதே.
* ஸ்தாபனம்* ஆன்மாவில் ஈஸ்வரனைஸ்தாபித்து இருக்க செய்வதே
* ஸந்நிதானம் * ஆன்மாவை ஈஸ்வரனிடத்தில் நிலைபெற்று இருக்கச் செய்வதே
*நிரோதனம்* தன்னுடைய ஆன்மாவை சிவபொருமானிடத்தில் இலயத்து அடங்கி இருக்கச் செய்வதே


திருச்சிற்றம்பலம்

திங்கள், 4 டிசம்பர், 2023

* **வன்னிமரத்தின் சிறப்பு***

*  **வன்னிமரத்தின் சிறப்பு***



*வன்னிமரம் பல திருக்கோயிலில் இருக்கிறது  விருத்தாஜலம் வேதபுரீஸ்வரர் திருக்கோயில்      கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம் விசேஷமானது                            அவிட்டம் நட்சத்திரம் பரிகார விருட்சம் வன்னிமரம்

 *வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவமாக போற்றப்படுகிறது. அது துர்க்கை கோயில் கொண்டிருக்கும் இடமாகும்.*

✰ வன்னிமரம் பூக்காது. காய் காய்க்காது. இது ஒரு அற்புதமான மரம். இது வெற்றியை தேடி தரும் மரம். இது சிவாலயங்களில் இருக்கும். நம்மை ஆளும் உமாதேவி வன்னி மரத்தடியில் தான் வாசம் செய்கிறாள்.

✰ வன்னி மரத்தடியில் விநாயகர் இருப்பது சிறப்பு வாய்ந்தது. பால், பன்னீர், இளநீரால் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி வழிபட்டால் கணவன், மனைவி கருத்து வேறுபாடு மறைந்து, குடும்பம் ஒற்றுமை பெறும். குழந்தை பேறு கிட்டும்.  வன்னி மரத்து விநாயகரை வழிபட அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

✰ ராமபிரான், இராவணுடன் போருக்கு செல்லும் முன், வன்னி மரத்தை வணங்கி விட்டு, சென்றதாக புராணத்தில் கூறப்படுகிறது. வன்னிமரம் சிவ பெருமானின் அம்சம். இந்த மரத்தடியில் தியானம் செய்தால் கேட்டது கிடைக்கும்.

✰ வில்வத்திற்கு அடுத்தது வன்னிமரம் தான் சிவனுக்கு உரியது. வில்வ மரம் எந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்ததோ அந்த அளவுக்கு வன்னி மரமும் சிறப்பு வாய்ந்தது. சிவனுக்கு பிடித்த மரங்களில் வன்னி மரமும் ஒன்று.

✰ வன்னிமர இலையை வடமொழியில் சமிபத்ரம் என்று கூறுவார்கள். இது விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கும் விருப்பத்திற்குரிய இலையாகும். விஜயதசமியின் போது துர்க்காதேவி மகிஷனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி மரத்தடியில் நடக்கும். வன்னி வெற்றியை தரும் மரம் என்பதால் அந்த மரம் இருந்தால் அங்கு வேல் வாங்குவது விஷேசம்.



திருவிளக்கு வழிபாட்டு தீபாராதணையும் சைவ சித்தாந்தமும்

 திருவிளக்கு வழிபாட்டு தீபாராதணையும் சைவ சித்தாந்தமும்









இறைவனைப் பூஜிக்கும் முறைகளில் தீபாராதனை சிறப்பான இடத்தைப் பெறுகிறது. இறைவனே தீப வடிவில் விளங்குகிறார்.இறைவன் முருகனை அருணகிரிநாதர், “தீப மங்கள ஜோதி நமோ நம”என்று போற்றுகிறார்.


மாணிக்கவாசகப் பெருமானும் இறைவனை “ஒளி வளர் விளக்கே”என்றும்; “சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே” என்றும் பலவாறு போற்றியுள்ளார். ஒளி வடிவமான இறைவனை தீபங்களால் ஆராதனை செய்வதே தீபாராதனை என வழங்கப்படுகிறது.


   விளக்கு வழிபாடு தமிழகத்தில் மிகப்பழங்காலந்தொட்டு நடைபெற்று வருகின்றது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே விளக்கு வழிபாடு நடைபெற்றிருக்கின்றது. பெருங்கற்சின்னம், முதுமக்கள் தாழி முதலிய அகழ்வாய்வுப் பொருள்களில் பலவகையான விளக்குகள் கிடைத்துள்ளன. எனவே, அக்காலத்தில் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வழிபாட்டுக் குரியனவாக இருந்துள்ளன.


திருமுறைகளில் விளக்கு வைத்து வழிபாடு செய்தல் விரிவாகப் பேசப் பெறுகின்றன. திருஞானசம்பந்தர் காலத்திலேயே கார்த்திகை மாத விளக்கு வழிபாடு தொன்மையானது எனக் கூறப்பட்டுள்ளது. ‘தொல் கார்த்திகை நாள்… தையலார் கொண்டாடும் விளக்கீடு’ என்பது அவர் வாக்கு.


1. வீடுகளில் விளக்கு வழிபாடு 2. பொது இடங்களான மண்டபங்கள், கோவில் மண்டபங்கள் முதலிய இடங்களில் பலர் கூடி விளக்கேற்றி வழிபடுதல், 3. கோவில்களில் விளக்கு இடுதல், 4. பூசை நேரங்களில் பலவகையான அலங்கார தீபங்கள் காட்டுதல்-என்று விளக்கு வழிபாட்டை வகைப்படுத்திக் கொள்ளலாம்.


1. வீடுகளில் மாலைநேரம், சிறப்பு நாட்கள் முதலிய காலங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்தல் நல்லது. வீட்டுக்கு மங்கலம், எட்டுத் திருமகளிரும் (அஷ்ட லக்ஷ்மிகள்) அருள் செய்வர்.


2. கூட்டு வழிபாட்டைப் பலரும் ஒரே தன்மையான விளக்குகளை வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றிப் பற்றவைத்து குங்குமம் அல்லது மலர்களால் அருச்சனை செய்து வழிபடலாம். ‘விளக்குப் போற்றி’ என்று நூல்கள் வந்துள்ளன. ஒருவர் போற்றி சொல்ல மற்றவர் பிந்தொடர்ந்து சொல்லி நிறைவின் போது படையலிட்டுக் கற்பூரங்காட்டி வழிபடலாம். பலரும் ஒன்று சேர்வது சமுதாய ஒற்றுமைக்குக் காரணமாக அமையும். ஐந்து திரியிட்டுச் சுடரேற்றி வழிபடும் விளக்கில் மலைமகள், கலைமகள், அலைமகள் மூவரும் அமர்ந்து அருள் செய்வர்.


3. திருக்கோவில்களில் விளக்கு வைப்பது புண்ணியமாக முன்பு கருதப்பட்டது. திருமறைக்காட்டில் எலி ஒன்று கோவிலில் எரிந்து கொண்டிருந்த விளக்கில் நெய் உண்ணப் புகுந்த்து. சுடர் மூக்கைச் சுடர் திரியை எலி தூண்டியது. அணையும் விளக்கு நன்றாக எரியத் தொடங்கிற்று. இந்தப் புண்ணியத்தால் எலி அடுத்த பிறப்பில் மூன்று உலகங்களையும் ஆளுகின்ற மாவலிச்சக்கரவர்த்தியாக ஆயிற்று.


     “நிறை மறைக்காடு தன்னில் நீண்டுஎரி தீபம் தன்னைக்

      கறைநிறத்து எலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட

      நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவான் உலகம் எல்லாம்

      குறைவறக் கொடுப்பர்போலும் குறுக்கைவீரட்டனாரே”

                                           என்பது திருநாவுக்கரசர் தேவாரப் பாடல் ஆகும்.

              நாயன்மார்களில் கலியநாயனார் நமிநந்தியடிகள், கணம்புல்ல நாயனார் ஆகியோர்கள் கோவிலில் விளக்கு எரித்து இறைவன் திருவருள் பெற்றவர்கள் ஆவர். கோவில்களில் வைக்கப்பெறும் விளக்கினை நந்தியா தீபம், சந்தியா தீபம் எனக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. அணையாமல் எரியும் தீபம் நந்தியா தீபம், நந்தா தீபம், நுந்தா தீபம் எனப் பலவாறாக வழங்கப்பெறும். பூசை வேளைகளான காலை, நண்பகல், மாலை, இரவு முதலிய சந்திகளில் வைக்கப் பெறும் தீபம் சந்தியா தீபம் ஆகும்.


பூசைகளின்போது கோவில்களில் கடவுளரின் திருவுருவத்தின் முன் பலவித அலங்கார தீபங்கள் காட்டப்பெறுகின்றன. அவை அனைத்தும் ஆழமான பொருள் உடையன. தத்துவம் உடையன. கோவில் கருவறையில் வழிபாட்டுக்கு உரிய திருவுருவங்கள் அமைந்திருக்கும். கருவறையின் முன் உள்ள மண்டபம் ஒன்றில் வாகனம் அமைந்திருக்கும். வாகனம் மூலமூர்த்தியை நோக்கியே பார்த்துக் கொண்டிருக்கும். வாகனத்திற்குப் பின் பலிபீடம் இருக்கும். சிவன் கோவிலாக இருந்தால் மூலமூர்த்தியாகிய சிவலிங்கம் பதி, வாகனமாகிய எருது பசு, பலிபீடம் பாசம்,


     “ஆய பதிதான் அருட்சிவ லிங்கம்

      ஆய பசுவும் அடல்ஏறு எனநிற்கும்

      ஆய பலிபீடம் ஆகும்நல் பாசமாம்

      ஆய அரன் நிலைஆய்ந்து கொள்வார்கட்கே”

                    என்பது திருமூலர் திருமந்திரப் பாடலாகும்.


பிறகோவில்களிலும் இவ்வாறே மூலமூர்த்தியைப் பதியாகவும் வாகனத்தைப் பசுவாகவும், பலிபீட்த்தைப் பாசமாகவும் கொள்ள வேண்டும்.

           பூசைக் காலங்களில் முதலில் திரை போடப்பெறும், பின் அலங்காரதீபம் காட்டும் போது திரை நீக்கப்பெறும், தீபம் காட்டும் அருச்சகர் பலவித அலங்கார தீபங்களை முறையாகக் காட்டுவார். ஆன்மாவின் பிரதிநிதியாகிய வாகனம், மூலமூர்த்தியைக் காணமுடியாமல் ஒரு மறைப்பு. திரோதானம் உண்டாக்குகிறது; அது ஆணவ மலம் எனும் தடையாகும். ஆணவ மலம் எனும் தடை நீங்கினால் – திரைநீங்கினால் மூலமூர்த்தியைக் காணலாம். அதுவும் நன்றாக காணமுடியாது. அருச்சகர் தீபம் காட்டினால் நன்றாகக் காணமுடியும். அருச்சகர் ஞானாச்சாரியரைக் குறிக்கும். விளக்கு ஞானத்தைக் குறிக்கும். மலம் நீங்க-ஞானாச்சாரியர் ஞானத்தைக் கொடுக்க – இறைவனைக் காணலாம்.


உலகத்தில் வெளிச்சம் வருதலும் இருள் நீங்குதலும் ஒரே சமயத்தில் நடைபெறும். அதுபோல ஞானாச்சாரியரால் ஞானம் வருதலும் மலம் நீங்கலும் ஒரேசமயத்தில் நடைபெறும். கோவிலில் திரை நீங்குதலும் அருச்சகர் அலங்கார தீபம் காட்டுதலும் ஒரேசமயத்தில் நடைபெறும். எனவே, விளக்கு ஞானத்தின் அறிகுறியாகும்.


“ஞான விளக்கை ஏற்றி வெளியாக உள்ள கடவுளை அறிந்து கொள்க, ஞானமாகிய விளக்கினால் முன்பு இருந்த துன்பங்கள் நீங்கும். இவ்வாறு ஞானமாகிய விளக்கின் தன்மையை அறிந்து கொண்டவர்களே வாழ்க்கையில் விளக்கம் பெற்றவர், ஞான விளக்கில் விளங்கித் தோன்றும் விளக்காக மாறுவார்கள்’ என்ற பொருளில்;


     “விளக்கினை ஏற்றி வெளியை அறமின்

      விளக்கினின் முன்னை வேதனை மாறும்

      விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்

      விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!”


என்று திருமூலர் பாடியுள்ளார். ‘விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்’ என்று திருநாவுக்கரசரும் பாடியுள்ளார். எனவே, கோவிலில் காட்டப்பெறும் அலங்கார தீபம் ஞானத்தின் அறிகுறியாகும்.


பதினாறு வகை உபசாரங்களில் ஒன்று தீபாராதனை. பூசைக் காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன. தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனைத் தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு. பல அடுக்குகளைக் கொண்ட நட்சத்திர தீபம் முதல் பல தீபங்கள் காட்டப் பெறுகின்றன.


நட்சத்திரங்கள் இறைவனை வழிபட்டு ஒளி பெறுகின்றன என்ற கருத்தில் நட்சத்திர தீபம் காட்டப் பெறுகின்றது. ஒன்பது தீபங்கள் நவசக்திகளைக் குறிக்கும்.


ஏழு தீபங்கள் சப்தமாதர்களைக் குறிக்கும். ஐந்து தீபம் – நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தி அதீதகலை என்ற ஐந்து கலைகளைக் குறிக்கும். மூன்று தீபம் சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று ஒளிகளைக் குறிக்கும். ஒற்றைத் தீபம் சரசுவதியையும், சுவாகாதேவியையும் சுட்டும்.


ஐந்து தட்டுக்களில் தீபம் ஏற்றி நான்கு திசைகளில் நான்கு, நடுவில் ஒன்று என்ற முறையில் அமைத்த – அவ்வமைப்புக்கு ஒற்றை விளக்குக் காட்டிப் பின் நடுத்தட்டு முதலாக ஐந்து தட்டுகளையும் தீபத்துடன் காட்டப் பெறும். ஐந்தும் இறைவனுடைய ஐந்து முகங்களைக் குறிக்கும். மந்திரங்களுள் பஞ்சப்பிரம மந்திரங்கள் சிறப்புடையன.


1. ஈசானம் 2. தத்புருடம் 3. அகோரம் 4. வாமதேவம் 5. சத்யோசாதம் என்ற ஐந்தும் பஞ்சப்பிரம மந்திரங்கள் எனப்படும். ஏனைய மந்திரங்களுக்கு முன்னே தோன்றியதாலும், ஏனைய மந்திரங்களுக்குக் காரணமாக இருப்பதாலும் பஞ்சப் பிரம மந்திரங்கள் சிறந்தன என்று சிவஞானசித்தியார் குறிப்பிடுகின்றது. அந்தந்த மந்திரங்களால் அந்தந்த முகத்தைத் தரிசிப்பது என்ற முறையில் ஐந்து தட்டுத் தீபங்கள் காண்பிக்கப்படுகின்றன. இறுதியாக கும்ப தீபம் காண்பிக்கப் பெறும்.


கும்ப தீபம் சதாசிவ தத்துவத்தை குறிக்கும். அனைத்தும் சதாசிவத்துள் ஒடுங்கும் என்ற முறையில் அமைந்த்து. விரிவாகப் பலவாறாக இருக்கும் தீபங்கள் முதல் கும்பதீபம் இறுதியாகக் புருட தீபம், மிருக தீபம், பட்ச தீபம், வார தீபம், ருத்ர தீபம் முதலிய தீபங்களும் விரிவாகக் காட்டும்போது காட்டப் பெறுவதுண்டு. அந்தந்தத் தீபத்திற்குரியவர்கள் அந்தந்த உருவில் வந்து இறைவனை வழிபடுகிறார்கள் என்பது கருத்து.



தீபாராதனை செய்யும்போது மூன்று முறை காட்டவேண்டும். முதன் முறை காட்டுவது உலக நலங்கருதியது. இரண்டாம் முறை கோவில் உள்ள ஊர்மக்கள் நலங்கருதியது. மூன்றாம் முறை ஐம்பெரும் பூதங்களால் இடையூரின்றி நலம் பயக்க வேண்டும் என்பது கருதியது. காட்டும்போது இடப்பக்கத் திருவடியில் தொடங்கி இடை, மார்பு, கழுத்து, நெற்றி, உச்சி என்ற முறையில் உயர்த்தி வட்டமாக வலப்பக்கம் தோள், மார்பு, இடை, பாதம் என்ற அளவில் ‘ஓம்’ என்னும் பிரணவ வடிவில் காட்ட வேண்டும். மூர்த்தி பேதங்களுக்குக்கேற்பத் தீபாராதனை முறையில் வேறுபாடு உண்டு. தீபாராதனைக்குப்பின் கற்பூரம் காட்ட வேண்டும்.


தூய கற்பூரம் எரிந்தபின் எஞ்சியிருப்பது ஒன்றும் இல்லை. அதுபோல ஆன்மா-பாச ஞானம், பசு ஞானம் நீங்கி இறைவனின் திருவடியில் இரண்டறக் கலந்து இன்பம் துய்த்தல் வேண்டும்.


     “தீது அணையாக் கர்ப்பூரதீபம் என நான் கண்ட

      சோதியுடன் ஒன்றித் துரிசு அறுவது எந்நாளோ?”

என்று தாயுமானவர் இதனையே பாடியுள்ளார். அறியாமை நீங்கி இறையருள் பெறுவதே விளக்கு வழிபாட்டின் அடிப்படையாகும்.


     “ஆதிப்பிரானே! என் அல்லல் இருள் அகலச்சோதிப்

      பிரகாசமாய்த் தோற்றுவித்தால் ஆகாதோ? 

      ஏதும் தெரியாது எனைமறைத்த வல்இருளை

      நாத! நீ நீக்கஒரு ஞானவிளக்கு இல்லையோ ?”         (தாயுமானவர்). 

–திருச்சிற்றம்பலம்–