செவ்வாய், 30 டிசம்பர், 2014

தமிழ் வேதங்களில் தனிமனித ஒழுக்கம்


தமிழ் வேதங்களில் தனிமனித ஒழுக்கம் "கூறுமின் ஈசனைச் செய்மின் குற்றேவல் குளிர்மின் கண்கள் தேறுமின் சித்தம் தெளிமின் சிவனைச் செறுமின் செற்றம் ஆறுமின் வேட்கை அறுமின் அவலம் இவை நெறியா ஏறுமின் வானத்து இருமின் விருந்தாய் இமையவர்க்கே, --- பொன் வண்ணத்து அந்தாதி (தமிழ் வேதம் 11 ) தனிமனிதர்களின் தொகுப்பு அல்லது கூட்டம் தான் சமுதாயம் என்பது. வானுலகில் இன்புற்றிருப்பதற்கு உரிய வழி பொருளற்ற சடங்குகளும் சம்பிரதாயங்களும் இப்பாடலில் சொல்லப்படவில்லை என்பதை நாம் தெளிவாக கொள்ள வேண்டும் சேரமான் பெருமாள் நாயனார் உடலுடன் கயிலையை அடைந்தவர். அவர் சொல்வதைத்தான் நாம் கொள்ள வேண்டும். அமெரிக்கா சென்றவர் சொல்லும் வழியைத்தான் அமெரிக்கா செல்ல இருப்பவர் கேட்க வேண்டும்.சமயக் கொள்கைகளை தங்களின் சுயலாபத்திற்காக வளைத்துக் கொண்டவர்களின் சொற்களை கேட்டு ஏமாந்து போகிறவர்கள் அப்பாவிகள். வளர்ந்த நாடுகளைவிட தமிழர்கள் ஆதிகாலம் தொட்டே உயர்ந்த பண்பாட்டுடனும், தனி மனித ஒழுக்கத்தை இறைவழிபாட்டுடன் இணைத்துக் கூறினார்கள் வாழ்ந்தும் காட்டினார்கள். காரணம் இறைவழிபாட்டினை மனித வாழ்விலிருந்து பிரித்து விடமுடியாது, இறையுணர்வு இல்லையானால் மனிதன் மிருகமாக வாழநேரிடும் என்பதை நன்கு உணர்ந்தவர்கள் நமது சிவஞானியர்கள். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேரமான் பெருமான் நாயனார் தமிழகத்தில் மூவேந்தர்களில் சேரர் குடியில் தோன்றி சிவ வழிபாடு செய்து வந்தவர், இவருடைய சிவபூசையின் முடிவில் நடராசப் பெருமான் சிலம்பொலி கேட்கச் செய்தார். ஆழ்ந்த இறைபக்தியுடைய இப்பெருமானார் அருளியுள்ள இப்பாடலில் பொதிந்துள்ள தனி மனித ஒழுக்க கோட்பாடுகளைக்காண்போம். 1,கூறுமின் ஈசனை: முழுமதற் பொருளாய் விளங்கும் சிவபெருமானாரைத் துதியுங்கள் பிற்ப்பும்,இறப்பும் இல்லா பெருந்தெய்வம் ஆகும். மற்றவையெல்லாம் சிறுதெய்வங்கள் எனப்படும், சிறு தெய்வங்கள் யாவும் பிறக்கும் இறக்கும் வேதனைப்படும் மேல்வினையும் செய்யும், ஒரு நாட்டிற்கு பிரதம மந்திர் இருப்பது போல அகில உலகங்களுக்கு எல்லாம் ஒரே கடவுள் தான். இரண்டு இல்லை, அந்த பிறப்பு இறப்பு இல்லாதவர் அவரே சிவம் என்கிறார், சிறுதெய்வ வழிபாடு மக்களிடையே பரவுமானால் உயர்ந்த பண்பாடு போய்விடும், சிறுதெய்வ வழிபாட்டால் உயிர்பலி இடுதல் போன்ற பண்பாடற்ற தலைதூக்கும் அதனாலேயே ஆரம்பத்திலேயே பெருந்தெய்வ வழிபாட்டைக் கூறியுள்ளார். 2, செய்மின் குற்றேவல்: சிறு சிறு தொண்டுகளைச் செய்யச் சொல்கிறார். சிவாலயத்தை தூய்மை செய்தல், மலர் எடுத்தல் வலம் வருதல் போன்ற சிறுசிறு தொண்டுகள் செய்வதால் மனத்தில் அன்பு வளரும் தன்னலம் குறையும் ஆணவம் மறையும். 3, குளிர்மின் கண்கள்: இறைவருடைய திருஉருவத்தைக் கண்டு கண்கள் குளிர வேண்டும் இதனால் நம்மிடம் உள்ள மிருகப் பண்பு குறையும் மனித நேயம் பெருகும். 4,தேறுமின் சித்தம்: மனத்தை ஒரு நிலையில் நிறுத்துங்கள் என்பதை கவனிக்க வேண்டும் நாம். மனம் போகும் போக்கில் அலையவிடக் கூடாது, மனம் தான்மனிதனுடைய எல்லா செயல்களுக்கும் காரணம். அதை நம்கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்கிறார், 5, தெளிமின் சிவனை: முழுமுதற் பொருள் எது என்பதில் ஒரு தெளிவு வேண்டும், பிறப்பும்இறப்பும் இல்லாதவரும் காலத்தை கடந்து நிற்பவரும் சிவபெருமானார்ஒருவரே என்பதில் தெளிவு வேண்டும். " சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடுஒப்பார் இங்கு யாவரும் இல்லை -- திருமூலர் " அயனும் புடையும் எம் ஆதியை நோக்கில் இயலும் பெருந்தெய்வம் யாதும் ஒன்றில்லை - திருமூலர் இந்த தெளிவு இல்லாத பாமர மக்கள் சிறுதெய்வ வழிபாட்டில் சிக்கித் தவிப்பதை போலி வேடதாரிகளை நம்பி மோசம் போவதையும் இன்றை சூழ்நிலை. பெருந்தெய்வமான சிவபெருமானாரால் முடியாத ஒரு செயலை சிறுதெய்வங்கள் செய்து விட முடியாது என்னும் தெளிவு நமக்கு வேண்டும். 6, செறுமின் செற்றம்: பகைமை உணர்வை நீக்க வேண்டும். பகைமை உணர்வுதான் இன்றைய காலத்தில் எல்லா கொடுமைகளுக்கும் காரணம் என்பதை நாம் அறிவோம். மனித இனம் மாதவ நிலையை அடைவதற்கு பெரும் தடையாக இருப்பது பகைமை உணர்வுதான். கணவன் மனைவியிடையே பிரிவு உற்றார் உறவினரிடையே சண்டை, சமுதாயத்தில் சண்டை மாநிலங்களுக்கிடையே சண்டை, மதவாதிகளிடையே சண்டை நாடுகளுக்கிடையே கடும் போர் ஆகிய யாவற்றிக்கும் காரணம் பகைமை உணர்வுதான்.ஆக சாதி,மதம்,மொழி, இனம் நாடு ஆகியவற்றால் மனித இனம் வேறபட காரணம் பகைமை உணர்வே. 7, ஆறுமின் வேட்கை : ஆசையை அடக்குங்கள் என்கிறார் நாயனார் ஆசையுடையவன் விலங்கு அன்புடையவன் மனிதன் அருள் உடையவன் தேவன் உரியது அல்லாதவற்றை விரும்புவது தான்மட்டும நலமாக வாழ வேண்டும் என எண்ணுவது ஆசையாகும், ஆசை வளர வளர மனித மனம் மிருகத்தன்மை அடையும் ஆசை மிகும் பொழுது நல்லது தீயது என்பதே தெரியாமல் போய்விடும். "ஈசனோடாயினும் ஆசையை அறுமின் - திருமூலர் ,,10 இவ்வுலக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இறைவழிபாடு கூடாது என்கிறார் திருமூலர் பிறர் கெட்டாலும் தான் வாழ வேண்டும் என்னும் குறுகிய நோக்கம் தான் ஆசை எனப்படுகிறது, இதனால் சமுதாயச் சீரழிவே ஏற்படும் ,இத்தகைய ஆசையை ஒழிக்க வேண்டும், 8, அறுமின் அவலம்: துன்பத்திலிருந்து நீங்க வேண்டும், துன்பத்தில் முழ்கிவிடக் கூடாது, இன்பமும் துன்பமும் பாலத்தின் கீழே ஓடும் நீர்போல் விரைவில் நீங்குவிடும். துன்படுவதால் உடலில் நோய் பெருகும் வாழ்நாள் குறையும். "இறைமை " என்ற பேரின்ப வெள்ளத்திலிருந்து பிரிந்து வந்த ஒருதுளிதான் நாம், நமக்கு உள்ளும் புறமும் வள்ளலாய் இறைவர் விளங்குகின்றார், விரைவில் நலம் பெறுவோம் என்று உறுதியாக நம்பினால் துன்பத்திலிருந்து விடுபடுவது எளிதே ஆகும். இதுபோன்ற கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு மட்டுமா பொருந்தும்? உலகில் உள்ள எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தும்தானே. இத்தகைய கருத்துக்கள் சாதி, சமயம், இனம் மொழி நாடு ஆகியவற்றைக் கடந்ததல்லவா. திருமுறைகளின் உயர்வை உணர்வதற்கு நம் அறிவு போதாது எனலாம். திருச்சிற்றம் தென்னாடுடைய சிவனே போற்றி நன்றி : தமிழ் வேதம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

அஸ்டமா சித்திக்ள்


அஸ்டமா சித்திக்ள் கிடைத்தற்கரிய பிறவி மனிதப் பிறவி, இப்பிறவியில் நம் கரும வினைகளை குறைத்து பிறவா நிலை எனும் வீடுபேற்றை அடைய குரு அருள் கொண்டு திரு அருள் பெற, சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் வழிகளை பின்பற்றி யோகிகளான ஞானிகள் அஸ்டாமா சிக்திகள் என்னும் 8 சித்திகளை பெற்ற சித்தர் பெருமக்களே ஆவர், இதனை திருமூலர் திருமந்திரத்தில் அணிமாதி சிக்திகள் ஆனவ கூறல் அணுவின் அணுவின் பெருமையின் நேர்மை இணுகாத வேகார் பரகாயம் மேவில் அணுவின் தனை எங்கும் தான் ஆதல் என்று எட்டே, 1) அணிமா: அணுவின் அணுவாகும், சித்தி அணுமா அடுத்தவர் கண்ணுக்கு தெரியாது இருத்தல்,அணுவைப் போல மிக நுன்னிய நிலைக்கு உடலைக் கொண்டு சென்று கண்களுக்கு புலப்படாதருத்தல் 2)மகிமா: ஒரே நேரத்தில் பல இடங்களில் தெரிவது, பெரியதினும் பெரியதாகும் சித்தி மகிமா,உடலை மலையைப் போல பிரமாண்டமாகப் பெரியதாக்குதல் 3)இலகிமா: உடலை லெகுவாக்கி கொளல், புகைபோல மிகமிக நொய்தாகச் செய்தலும், விளங்குவதும், கனமான பொருட்களை பஞ்சுபோல லெகுவாக செய்தலும்,உடையது இலகிமா. காற்றைப் போல உடலை லேகுவாக்கி, இந்நிலையில் காற்றில் மிதப்பதும், தண்ணீரில் நடப்பதும் சாத்தியமாகும் கொண்ட சித்தி. 4, கரிமா: அசைக்க முடியாத தன்மை, உடலை கடினமானதாக இயக்கிக் கொள்ளல்,இதுவே கரிமா சித்தி 5,பிராப்தி:நினைத்த நேரத்தில் எங்கும் செல்லல் மேலுள்ள ஆகாயத்தை தீண்டுதல், பூமியில் இருந்து கொண்டே விரல் நுனியால் சந்திரனை தொடும்தன்மை கொண்ட சித்தி. இயற்கை சக்திகளையும், மற்ற எல்லா பொருட்களையும் தன் வசப்படுத்துதல் தன்மன சக்தியினால் எதனையும் மாற்றுதலும், அடைதலும் கொண்ட சித்தி, 6, வசித்துவம்:எல்லாவற்றையும் தன் வசப்படுத்தி எங்கும் தானாக இருக்கும் சித்தி,அனைத்து உயிரினங்களையும்தன் வசம் வசியப்படுத்துதல் 7,பிரகாமியம்: ஐம் பூதங்களிலும் வியாபித்து எழுதல், கூடுவிட்டு கூடு பாயும் தன்மை கொண்ட சித்தி 8,ஈசத்துவம்: அனைத்தையும் தன்வசப்படுத்துதல் உயிர்கெல்லாம் தலைவனாகுதல், படைத்தல், காத்தல், அழித்தல் மறைத்தல், அருளல், ஆகிய ஐந்தொழில்களான செயல்களை செய்யும் சித்தி, இதுவே இறை சக்தி என்ற ஈசத்துவ சித்தி, மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

சனி, 27 டிசம்பர், 2014


பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்துள்ள பிரபந்தங்களுள் ,பதினொன்றாம் திருமுறையில் உள்ள " கோயில் நான்மணி மாலை " என்பதும் ஒன்று. கோயில் என்பது சிதம்பரத்தைக் குறிக்கும். தில்லைச் சிற்றம்பலத்தே நடம் புரியும் ஆனந்த சபேசனைப் பேசாத நாட்கள் எல்லாம் பிறவாத நாட்களே என்பார் அப்பர் பெருமான். அவன் புகழை எப்படிப் பேசுவது? அது அளவிடமுடியாத, எவராலும் சொல்லமுடியாத புகழ் அல்லவா என்றுகூடத் தோன்றும். அவனோ தோன்றாப் பெருமையன். வானோர்க்கும் அரியவன். மறைகளுக்கும் எட்டாதவன். அவன் புகழைப் பாடவோ பேசவோ புண்ணியம் வாய்ந்தவர்கள் உண்மை அடியார்கள் அல்லவா? அவர்கள் வாய் மூலமாவது ஒருசில புகழையாவது நாம் கேட்டு உய்யலாம். அது நமது பாவ வினைகளை ஓடச் செய்யும் சுலபமான வழிதானே! இதைத்தான் பட்டினத்தாரும், " வினை கெடக் கேட்பது நின் பெருங் கீர்த்தி" என்றார். மனித உடல் அன்றாடும் பாவக் குப்பைகளை சேர்க்க வல்லது. இதற்குக் " குப்பாயம் " என்ற பெயர் திருவாசகத்தில் காணப்படுகிறது. ஒழுக்கமின்மை, பொய், சூது , கடும் பிணிகள் ஆகியவற்றை ஏற்றி வினையாகிய மீகாமன் , கலத்தைச் செலுத்தும்போது, புலன்களாகிய சுறா மீன்கள் அதனைத் தாக்குகின்றன. பிறவியாகிய பெரும் கடலில் அதனைக் கொண்டு தள்ளத் துவங்குகின்றன. குடும்பம் என்ற நெடும் கல் விழுந்து அக்கலத்தின் கூம்பு முறிகிறது. உணர்வுகளாகிய பாய்மரம் கிழித்து எறியப்படுகிறது. கலமானது தலைகுப்புற விழ ஆயத்தமாகும்போது, " தெய்வ நாயகமே, தும்பை மாலையை விரும்பிச் சூடிய பன்னகாபரணா , தில்லை அம்பலவாணா , உனது அருளாகிய கயிற்றைப் பூட்டி , இக்கலம் கவிழாமல் காத்து அருள்வாயாக " என்று மனதாரப் பிரார்த்தனை செய்கிறார் பட்டினத்து அடிகள். பெருமானது புகழ் எப்படிப்பட்டது? பட்டினத்தார் அருளுவதைக் கேட்போம்: " எல்லா சராசரங்களும் உன்னிடத்துத் தோன்றி உன்னிடத்தில் அடங்குவன. ஆனால் நீயோ ஒன்றினும் அடங்காதவன். தோன்றும் பொருள் அனைத்திலும் நீயே நீக்கமற நிற்கின்றாய். நின்பால் எனக்கு அன்பு பெறுவதற்கு நீயே அருளல் வேண்டும். உன் அருட் செல்வம் கிடைத்துவிட்டால் வேறு எனக்கு என்ன வேண்டும்? நின் தெய்வக்கூத்தையும், எடுத்த பொற்பாதத்தையும் கண்ட கண்களுக்கு வேறு ஒரு பேறு உளதோ? உன்னை நினைப்பதே சிறந்த தவம். { " தில்லை நகரில் செம்பொன் அம்பலம் மேவிய சிவனை நினைக்கும் தவம் சதுராவதே." } எனினும் ,எளியேனது சிந்தையில் தேவரீர் தோற்றுவித்தபடி , " நான் முகனின் தந்தையாம் திருமாலுக்குச் சக்கரம் கொடுத்ததையும், குபேரனுக்குச் சங்கநிதியையும்,பதும நிதியையும் கொடுத்த வள்ளன்மையையும், மார்க்கண்டனுக்காகக் காலால் காலனைக் கடந்ததையும், உலகம் யாவற்றையும் ஆல நஞ்சு அழிக்க வந்தபோது, அதனை அமுதாக உண்டு காத்த கருணையையும் ஒருநொடியில் மூன்று புரங்களையும் எரித்த வீரத்தையும் , தாருகா வன முனிவர்கள் ஏவிய யானையைப் போர்த்த பெருமையையும் , பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்த திருவிளையாடலையும் , கயிலையை எடுத்த அரக்கனது ஆணவத்தை அடக்கி அவனுக்கு இரங்கியதையும், தாதையின் தாளைத்தடிந்த வேதியச் சிறுவனுக்கு அருளி, அவனுக்குச் சண்டீச பதம் தந்ததையும், சிறுத் தொண்டர் மனையில் உண்டு பேரருள் செய்ததையும்,வேதாரண்யத்தில் விளக்கைத் தூண்டிய எலியை அரசனாக்கிய கருணையையும், கங்கையும் பாம்பும் செஞ்சடையில் பகைதீருமாறு ஒருசேர வைத்த பண்பையும் மலையான் மகளுக்குப் பாகம் ஈந்த பெருமையையும் , தில்லையில் " அம்பலத்து ஆடும் நாடகத்தையும் " போற்றுவதற்கு அடியேனுக்கு ஆற்றல் இல்லை . என்றாலும் ஆசையால் இவ்வாறு போற்ற எண்ணினேன். " என்கிறார் அடிகள். இத்தனை பெருமையும் ,கருணையும் வாய்ந்த ஒப்பற்ற கடவுளைத் தொழாது வேறு கடவுளர்களைத் தொழுவோரும் உளரே என்கிறார் அவர். அப்படிச் சொல்ல காரணம் இல்லாமல் இல்லை. ஆல நஞ்சு எழுந்தபோது எந்தத்தேவரும் அதனை எதிர்க்கவோ, பிறரைக் காக்கவோ முடியாதபோது, கயிலை நாயகனையே சரண் அடைந்தனர். அவ்வாறு நஞ்சுண்டு அவர்கள் காக்கப்பட்டிராவிட்டால் அப்போதே மாண்டிருப்பார்கள் அல்லவா? ஆகவே, கருணைக்கடலான நீல கண்டனைத் தொழுவதே நன்றியுடையவர்க்கு அடையாளம். மறைகளின் பிறப்பிடமாகவும், மறையோர்கள் தங்கள் கதி எனத் தொழப்படுவனுமான தில்லைக் கூத்தனை வணங்குவதே முறையாகும் என்று நம்மை எல்லாம் நல்வழிப்படுத்துவார் பட்டினத்துப் பிள்ளையார். வாழ்வாகவும் தங்கள் வைப்பாகவும் மறையோர் வணங்க ஆள்வாய் திருத்தில்லை அம்பலத்தாய் உன்னை அன்றி ஒன்றைத் தாழ்வார் அறியாச் சடில நஞ்சுண்டிலை ஆகில் அன்றே மாள்வர் சிலரையன்றோ தெய்வமாக வணங்குவதே.

பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்துள்ள பிரபந்தங்களுள் ,பதினொன்றாம் திருமுறையில் உள்ள " கோயில் நான்மணி மாலை " என்பதும் ஒன்று. கோயில் என்பது சிதம்பரத்தைக் குறிக்கும். தில்லைச் சிற்றம்பலத்தே நடம் புரியும் ஆனந்த சபேசனைப் பேசாத நாட்கள் எல்லாம் பிறவாத நாட்களே என்பார் அப்பர் பெருமான். அவன் புகழை எப்படிப் பேசுவது? அது அளவிடமுடியாத, எவராலும் சொல்லமுடியாத புகழ் அல்லவா என்றுகூடத் தோன்றும். அவனோ தோன்றாப் பெருமையன். வானோர்க்கும் அரியவன். மறைகளுக்கும் எட்டாதவன். அவன் புகழைப் பாடவோ பேசவோ புண்ணியம் வாய்ந்தவர்கள் உண்மை அடியார்கள் அல்லவா? அவர்கள் வாய் மூலமாவது ஒருசில புகழையாவது நாம் கேட்டு உய்யலாம். அது நமது பாவ வினைகளை ஓடச் செய்யும் சுலபமான வழிதானே! இதைத்தான் பட்டினத்தாரும், " வினை கெடக் கேட்பது நின் பெருங் கீர்த்தி" என்றார். மனித உடல் அன்றாடும் பாவக் குப்பைகளை சேர்க்க வல்லது. இதற்குக் " குப்பாயம் " என்ற பெயர் திருவாசகத்தில் காணப்படுகிறது. ஒழுக்கமின்மை, பொய், சூது , கடும் பிணிகள் ஆகியவற்றை ஏற்றி வினையாகிய மீகாமன் , கலத்தைச் செலுத்தும்போது, புலன்களாகிய சுறா மீன்கள் அதனைத் தாக்குகின்றன. பிறவியாகிய பெரும் கடலில் அதனைக் கொண்டு தள்ளத் துவங்குகின்றன. குடும்பம் என்ற நெடும் கல் விழுந்து அக்கலத்தின் கூம்பு முறிகிறது. உணர்வுகளாகிய பாய்மரம் கிழித்து எறியப்படுகிறது. கலமானது தலைகுப்புற விழ ஆயத்தமாகும்போது, " தெய்வ நாயகமே, தும்பை மாலையை விரும்பிச் சூடிய பன்னகாபரணா , தில்லை அம்பலவாணா , உனது அருளாகிய கயிற்றைப் பூட்டி , இக்கலம் கவிழாமல் காத்து அருள்வாயாக " என்று மனதாரப் பிரார்த்தனை செய்கிறார் பட்டினத்து அடிகள். பெருமானது புகழ் எப்படிப்பட்டது? பட்டினத்தார் அருளுவதைக் கேட்போம்: " எல்லா சராசரங்களும் உன்னிடத்துத் தோன்றி உன்னிடத்தில் அடங்குவன. ஆனால் நீயோ ஒன்றினும் அடங்காதவன். தோன்றும் பொருள் அனைத்திலும் நீயே நீக்கமற நிற்கின்றாய். நின்பால் எனக்கு அன்பு பெறுவதற்கு நீயே அருளல் வேண்டும். உன் அருட் செல்வம் கிடைத்துவிட்டால் வேறு எனக்கு என்ன வேண்டும்? நின் தெய்வக்கூத்தையும், எடுத்த பொற்பாதத்தையும் கண்ட கண்களுக்கு வேறு ஒரு பேறு உளதோ? உன்னை நினைப்பதே சிறந்த தவம். { " தில்லை நகரில் செம்பொன் அம்பலம் மேவிய சிவனை நினைக்கும் தவம் சதுராவதே." } எனினும் ,எளியேனது சிந்தையில் தேவரீர் தோற்றுவித்தபடி , " நான் முகனின் தந்தையாம் திருமாலுக்குச் சக்கரம் கொடுத்ததையும், குபேரனுக்குச் சங்கநிதியையும்,பதும நிதியையும் கொடுத்த வள்ளன்மையையும், மார்க்கண்டனுக்காகக் காலால் காலனைக் கடந்ததையும், உலகம் யாவற்றையும் ஆல நஞ்சு அழிக்க வந்தபோது, அதனை அமுதாக உண்டு காத்த கருணையையும் ஒருநொடியில் மூன்று புரங்களையும் எரித்த வீரத்தையும் , தாருகா வன முனிவர்கள் ஏவிய யானையைப் போர்த்த பெருமையையும் , பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்த திருவிளையாடலையும் , கயிலையை எடுத்த அரக்கனது ஆணவத்தை அடக்கி அவனுக்கு இரங்கியதையும், தாதையின் தாளைத்தடிந்த வேதியச் சிறுவனுக்கு அருளி, அவனுக்குச் சண்டீச பதம் தந்ததையும், சிறுத் தொண்டர் மனையில் உண்டு பேரருள் செய்ததையும்,வேதாரண்யத்தில் விளக்கைத் தூண்டிய எலியை அரசனாக்கிய கருணையையும், கங்கையும் பாம்பும் செஞ்சடையில் பகைதீருமாறு ஒருசேர வைத்த பண்பையும் மலையான் மகளுக்குப் பாகம் ஈந்த பெருமையையும் , தில்லையில் " அம்பலத்து ஆடும் நாடகத்தையும் " போற்றுவதற்கு அடியேனுக்கு ஆற்றல் இல்லை . என்றாலும் ஆசையால் இவ்வாறு போற்ற எண்ணினேன். " என்கிறார் அடிகள். இத்தனை பெருமையும் ,கருணையும் வாய்ந்த ஒப்பற்ற கடவுளைத் தொழாது வேறு கடவுளர்களைத் தொழுவோரும் உளரே என்கிறார் அவர். அப்படிச் சொல்ல காரணம் இல்லாமல் இல்லை. ஆல நஞ்சு எழுந்தபோது எந்தத்தேவரும் அதனை எதிர்க்கவோ, பிறரைக் காக்கவோ முடியாதபோது, கயிலை நாயகனையே சரண் அடைந்தனர். அவ்வாறு நஞ்சுண்டு அவர்கள் காக்கப்பட்டிராவிட்டால் அப்போதே மாண்டிருப்பார்கள் அல்லவா? ஆகவே, கருணைக்கடலான நீல கண்டனைத் தொழுவதே நன்றியுடையவர்க்கு அடையாளம். மறைகளின் பிறப்பிடமாகவும், மறையோர்கள் தங்கள் கதி எனத் தொழப்படுவனுமான தில்லைக் கூத்தனை வணங்குவதே முறையாகும் என்று நம்மை எல்லாம் நல்வழிப்படுத்துவார் பட்டினத்துப் பிள்ளையார். வாழ்வாகவும் தங்கள் வைப்பாகவும் மறையோர் வணங்க ஆள்வாய் திருத்தில்லை அம்பலத்தாய் உன்னை அன்றி ஒன்றைத் தாழ்வார் அறியாச் சடில நஞ்சுண்டிலை ஆகில் அன்றே மாள்வர் சிலரையன்றோ தெய்வமாக வணங்குவதே.

பாதாள லிங்கள்கள் எவ்வாறு தோன்றிருக்கலாம்


பாதாள லிங்கள்கள் எவ்வாறு தோன்றிருக்கலாம் மனதை அடக்கத் தெரிந்தவன் மகான் என்று கூறுகிறோம், நம்மால் மனதை அடக்க முடியாதா என்ற கேள்வியும் எழுகிறது. சூழ்நிலை காரணமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கற்பனையில் மனதை சிதறவிட்டுக் கொண்டிருக்கிறோம், இன்றைய காலகட்டத்தில் மனதை அடக்கி ஆள்பவர்கள் ஒரு சிலரே இருக்கிறார்கள். அந்த காலத்தில் முனிவர்கள் சித்தர்கள் மனதை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மகோன்னத நிலையை அடைந்தார்கள் என்று கேள்விப்படுகிறோம். தற்போதைய காலகட்டத்தில் சில சிவன் கோவில்களில் பாதாள லிங்கம் என்று பாதாளத்தில் ஒரு சன்னதி அமைக்கப்பட்டு இருப்பதை காணலாம். அப்படிப்பட்ட கோவில்களில் ஒரு சித்தர் ஐக்கியமாகி இருப்பது தெரியவருகின்றன, மானிட சரீர ரகசியம் அறிந்தவர்கள் உடலை பிறர் கண்களுக்கு புலப்படாமல் மறைத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். மானிட சரீர ரகசியத்தை உலகத்துக்க யோக சூத்திரமாக அருளிய தவசித்தர் பதஞ்சலி முனிவர். முற்கால சித்தர்கள் தங்களின் தவயோக நிலையினை பாதாள குகைகள் அல்லது செயற்கையான குகைகள் அமைத்து அங்கு தங்களின் உடலை ஐக்கியமாக்கி கொண்டவர்கள் சித்திர் பெருமக்கள், இன்றைய காலகட்டத்திலும் அண்ணாமலையில் பாதாளலிங்கத்தில் யோகம் செய்தவர் தவ சீலர் ரமணர் என்பதை நாம் அறியலாம்,இவர்களுக்காக இறைவன் தன் காட்சிதந்து அவரைகள் முத்தியடையவும் சூச்சமயமான உலகில் இன்றும் உலகிவரவும் அருள்பாவித்துள்ளதை இன்றும்அறியலாம், தில்லையில் சிவத்தாண்டவம் காண்ட சித்தர்கள் பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள விஷ்ணு பகவான் சிவபெருமானின் சிவத்தாண்டவத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தததைக்கண்ட ஆதிசேஷனும் தானும் அம்பலவாணனின் சிவத்தாண்டவம் காண ஆவல்கொண்டான், சிவன் அவருக்கு காட்சி கொடுத்து "பூமியில் பதஞ்சலி முனிவராகஅவதாரம் எடுக்கும்போது தில்லையம்பலத்தில் சிவத்தாண்டவம் காணும் பேற்றினை கொடுப்பேன், என்று அருள்பாலித்தார். அதேபோல்தவம் இருந்த வியாக்கிரபாத முனிவருக்கும் அருளினார். வியாக்மகிரபாத முனிவர் சிபிசக்கரவர்த்தியின் சாபத்தால் அவயம் இழக்கப்பட்டார், மனம் நொந்த அவர் தில்லைவனத்தில் நந்தவ பூக்களைக்கூட மரம் கொடிகளில் பறிக்க முடியாமல் அவயம் இழந்ததமையால் கஷ்டப்பட்டார், அப்போது ஒரு அதிசயம் நடந்தது. அவருக்கு புலிக்கால்களும் இருளை ஊடுருவி பார்க்கும் ஒளி மிகுந்த கண்களும் இறைவனால் கிடைக்கப் பெற்றார், அப்போது அங்கே வந்த பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதரும் தில்லைவனத்தில் நடராஜபெருமானை வழிபட்டு வந்ததால் அவர்களுடைய ஆசை நிறைவேறியது, சிவபெருமானின் சிவ தாண்டவத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள், இவர்கள் இருவரும் சித்தர்களாக போற்றப்படுகிறார்கள். திருச்சிற்றம்பலம் மேலும் ஆன்மீக தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

வெள்ளி, 26 டிசம்பர், 2014

ஈசனை பேசா நாள் எல்லாம் பிறவா நாளே 2


பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்துள்ள பிரபந்தங்களுள் ,பதினொன்றாம் திருமுறையில் உள்ள " கோயில் நான்மணி மாலை " என்பதும் ஒன்று. கோயில் என்பது சிதம்பரத்தைக் குறிக்கும். தில்லைச் சிற்றம்பலத்தே நடம் புரியும் ஆனந்த சபேசனைப் பேசாத நாட்கள் எல்லாம் பிறவாத நாட்களே என்பார் அப்பர் பெருமான். அவன் புகழை எப்படிப் பேசுவது? அது அளவிடமுடியாத, எவராலும் சொல்லமுடியாத புகழ் அல்லவா என்றுகூடத் தோன்றும். அவனோ தோன்றாப் பெருமையன். வானோர்க்கும் அரியவன். மறைகளுக்கும் எட்டாதவன். அவன் புகழைப் பாடவோ பேசவோ புண்ணியம் வாய்ந்தவர்கள் உண்மை அடியார்கள் அல்லவா? அவர்கள் வாய் மூலமாவது ஒருசில புகழையாவது நாம் கேட்டு உய்யலாம். அது நமது பாவ வினைகளை ஓடச் செய்யும் சுலபமான வழிதானே! இதைத்தான் பட்டினத்தாரும், " வினை கெடக் கேட்பது நின் பெருங் கீர்த்தி" என்றார். மனித உடல் அன்றாடும் பாவக் குப்பைகளை சேர்க்க வல்லது. இதற்குக் " குப்பாயம் " என்ற பெயர் திருவாசகத்தில் காணப்படுகிறது. ஒழுக்கமின்மை, பொய், சூது , கடும் பிணிகள் ஆகியவற்றை ஏற்றி வினையாகிய மீகாமன் , கலத்தைச் செலுத்தும்போது, புலன்களாகிய சுறா மீன்கள் அதனைத் தாக்குகின்றன. பிறவியாகிய பெரும் கடலில் அதனைக் கொண்டு தள்ளத் துவங்குகின்றன. குடும்பம் என்ற நெடும் கல் விழுந்து அக்கலத்தின் கூம்பு முறிகிறது. உணர்வுகளாகிய பாய்மரம் கிழித்து எறியப்படுகிறது. கலமானது தலைகுப்புற விழ ஆயத்தமாகும்போது, " தெய்வ நாயகமே, தும்பை மாலையை விரும்பிச் சூடிய பன்னகாபரணா , தில்லை அம்பலவாணா , உனது அருளாகிய கயிற்றைப் பூட்டி , இக்கலம் கவிழாமல் காத்து அருள்வாயாக " என்று மனதாரப் பிரார்த்தனை செய்கிறார் பட்டினத்து அடிகள். பெருமானது புகழ் எப்படிப்பட்டது? பட்டினத்தார் அருளுவதைக் கேட்போம்: " எல்லா சராசரங்களும் உன்னிடத்துத் தோன்றி உன்னிடத்தில் அடங்குவன. ஆனால் நீயோ ஒன்றினும் அடங்காதவன். தோன்றும் பொருள் அனைத்திலும் நீயே நீக்கமற நிற்கின்றாய். நின்பால் எனக்கு அன்பு பெறுவதற்கு நீயே அருளல் வேண்டும். உன் அருட் செல்வம் கிடைத்துவிட்டால் வேறு எனக்கு என்ன வேண்டும்? நின் தெய்வக்கூத்தையும், எடுத்த பொற்பாதத்தையும் கண்ட கண்களுக்கு வேறு ஒரு பேறு உளதோ? உன்னை நினைப்பதே சிறந்த தவம். { " தில்லை நகரில் செம்பொன் அம்பலம் மேவிய சிவனை நினைக்கும் தவம் சதுராவதே." } எனினும் ,எளியேனது சிந்தையில் தேவரீர் தோற்றுவித்தபடி , " நான் முகனின் தந்தையாம் திருமாலுக்குச் சக்கரம் கொடுத்ததையும், குபேரனுக்குச் சங்கநிதியையும்,பதும நிதியையும் கொடுத்த வள்ளன்மையையும், மார்க்கண்டனுக்காகக் காலால் காலனைக் கடந்ததையும், உலகம் யாவற்றையும் ஆல நஞ்சு அழிக்க வந்தபோது, அதனை அமுதாக உண்டு காத்த கருணையையும் ஒருநொடியில் மூன்று புரங்களையும் எரித்த வீரத்தையும் , தாருகா வன முனிவர்கள் ஏவிய யானையைப் போர்த்த பெருமையையும் , பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்த திருவிளையாடலையும் , கயிலையை எடுத்த அரக்கனது ஆணவத்தை அடக்கி அவனுக்கு இரங்கியதையும், தாதையின் தாளைத்தடிந்த வேதியச் சிறுவனுக்கு அருளி, அவனுக்குச் சண்டீச பதம் தந்ததையும், சிறுத் தொண்டர் மனையில் உண்டு பேரருள் செய்ததையும்,வேதாரண்யத்தில் விளக்கைத் தூண்டிய எலியை அரசனாக்கிய கருணையையும், கங்கையும் பாம்பும் செஞ்சடையில் பகைதீருமாறு ஒருசேர வைத்த பண்பையும் மலையான் மகளுக்குப் பாகம் ஈந்த பெருமையையும் , தில்லையில் " அம்பலத்து ஆடும் நாடகத்தையும் " போற்றுவதற்கு அடியேனுக்கு ஆற்றல் இல்லை . என்றாலும் ஆசையால் இவ்வாறு போற்ற எண்ணினேன். " என்கிறார் அடிகள். இத்தனை பெருமையும் ,கருணையும் வாய்ந்த ஒப்பற்ற கடவுளைத் தொழாது வேறு கடவுளர்களைத் தொழுவோரும் உளரே என்கிறார் அவர். அப்படிச் சொல்ல காரணம் இல்லாமல் இல்லை. ஆல நஞ்சு எழுந்தபோது எந்தத்தேவரும் அதனை எதிர்க்கவோ, பிறரைக் காக்கவோ முடியாதபோது, கயிலை நாயகனையே சரண் அடைந்தனர். அவ்வாறு நஞ்சுண்டு அவர்கள் காக்கப்பட்டிராவிட்டால் அப்போதே மாண்டிருப்பார்கள் அல்லவா? ஆகவே, கருணைக்கடலான நீல கண்டனைத் தொழுவதே நன்றியுடையவர்க்கு அடையாளம். மறைகளின் பிறப்பிடமாகவும், மறையோர்கள் தங்கள் கதி எனத் தொழப்படுவனுமான தில்லைக் கூத்தனை வணங்குவதே முறையாகும் என்று நம்மை எல்லாம் நல்வழிப்படுத்துவார் பட்டினத்துப் பிள்ளையார். வாழ்வாகவும் தங்கள் வைப்பாகவும் மறையோர் வணங்க ஆள்வாய் திருத்தில்லை அம்பலத்தாய் உன்னை அன்றி ஒன்றைத் தாழ்வார் அறியாச் சடில நஞ்சுண்டிலை ஆகில் அன்றே மாள்வர் சிலரையன்றோ தெய்வமாக வணங்குவதே.

ஈசனை பேசா நாள் எல்லாம் பிறவா நாளே


ஈசனை பேசா நாள் எல்லாம் பிறவா நாளே பெறுதற்கரிய பிறப்பு மானிடப்பிறப்பு, அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது, அவ்வாறு பிறந்தாலும், கூன், செவிடு, குருடு அற்று பிறப்பது அரிது, என்பது அவ்வையின் திருவாக்கு. இப்படி பெறுதற்கரிய மானிடப் பிறப்பை பிறந்து விட்டால் அப்பிறப்பில் செய்யத பாவ கர்ம வினைகளையும், முற்பிறப்பில் பெற்ற பாவ கர்மங்களையும், இப்பிறப்பு புண்ணியத்தால் ஈசனை நினைந்து, தொழுது, புகழ்பரப்பி நம்பாவ கர்ம வினைகளை குறைத்துக் கொள்ள வேண்டும், வள்ளல் பெருமானும் ஈசனை " அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிய வேண்டும், எப்போதும் எங்கு சென்றாலும், எவ்வேளையிலும், உன்னை மறவாமலும், உனது புகழை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமென இறைவனிடம் வேண்டினார், இதன் நிமித்தமாக பட்டிணத்து அடிகளார் ஈசனை - நமச்சிவய மந்திரத்தை - நினையாமலும், கற்காமலும் சொல்லாமலும் இப்பிறப்பில் இருந்ததை மன்னித்து அருள கச்சியப்ப ஏகாம்பர நாதனை வேண்டும் பாடல் " கல்லாப்பிழையும், கருதாப்பிழையும், கசிந்துருகி நில்லாப்பிழையும் நினையாப்பிழையும் நின் அஞ்செழுத்தைச் சொல்லாப்பிழையும் துதியாப்பிழையும் தொழாப்பிழையும் எல்லாப்பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி யேகம்பனே." ஈசனுடைய திருநாமமாகிய நமசிவாய என்ற அஞ்செழுத்தை கல்லாததும், கருதாததும் கசிந்துருகாமலும் நினையாமலும், அனுதினமும் இமைப்பொழுதும் சொல்லாததும், துதியாததும், தொழாததும் ஆகிய எல்லாப்பிழைகளையும் பொறுத்தருள வேண்டுக்கூறுகிறார், எனவே இறைவனுடைய திருநாமத்தை எப்போதும் சொல்லாமல்இருப்பது பிழையாகும் , அப்படி பிழைகள் செய்து நம் கர்ம வினைகள் இப்பிறவியிலும் மேலும் மேலும் சேர்ப்பது பிறப்பின் பயனை ஏய்த முடியாது, நம் பாவ வினைகள் கழியாது, இப்பிறப்பிலும் முற்பிறப்பிலும் நம் பாவ கர்மங்களை களைய ஈசனை திருஐந்தெழுத்து மந்திரமான நமச்சிவ மந்திரத்தை இமைப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருந்தால் நம் கர்ம வினைகள் அதற்கொப்ப களையப்படும், இவ்வாறு இல்லை யெனில் அரிதற்கரிய இம்மானிட பிறப்பை பிறந்தும் பிறவா நிலையைத்தான் நாம் பெற்றதாவோம் என்று அப்பர் பெருமானார், 6ம் திருமுறையில் தில்லையம்பலனை வேண்டி பாடிய திருத்தாண்டப்பதிகம் பாடலில் "கற்றானைக் கங்கை வார்சடையான் தன்னைக் காவிரி சூழ் வலஞ்சுழியும் கருதினானை அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வானை ஆருரும் புகுவானை அறிந்தோம் அன்றே மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதனை வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப் பெற்றானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவவா நாளே. எல்லாம் வல்லவன் கங்கையை கொண்டவன், நீண்ட சடையை உடையவன், காவிரியால் சூழப்பட்ட திருவலஞ்சூழி என்ற திருத்தலத்தை உகந்தருளி இருப்பவன், பொருள் அற்றவருக்கும், அலந்தாருக்கும் அருள்பவன், தனக்கு உவமை இல்லாதவன், தேவர்களால் வணங்கி போற்றப்படுபவன், திருவாரூரில் உகந்து தங்கி யிருப்பவன் ஆகிய எம் பெருமானை எல்லோருக்கும் மேலானவன் என்று தெரிந்தும், அப்பேர்பட்ட எம்பிரானை - ஈசனை - அவன் நாமமாகிய நமச்சிவ எனும் மந்திரத்தை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே, திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

வியாழன், 25 டிசம்பர், 2014

திருமுறை தேவாரப்பாடல் கூறும் சுகப் பிரசவம்


திருமுறை தேவாரப்பாடல் கூறும் சுகப் பிரசவம் பெண்கள் பிள்ளை பேறு காலங்களில் சுகப் பிரசவம் அடையும் பொருட்டும், பிள்ளைப்பேறு பெறு அடையும் பொருட்டும் ஞானசம்பந்தர் தேவாரப்பாடல்களில் இதற்காகவே சில பதியங்கள் முக்கிய திருத்தலங்களில் பாடியுள்ளார், கருவுற்ற தாய் மார்களின் கருவேலைப்பளுவினாலோ, பயத்தினாலோ, விதி வசத்தினாலோ, கலையாமல் பாதுகாத்துத் தரும் அற்புதப்பதியங்களில் ஒன்று திருக்காவூரில் எழுந்தருளியுள்ள கர்ப்பபுரீஸ்வரர் உடனுறை கருக்காத்த நாயகி ஐ வேண்டி பாடியுள்ள இப்பதிக பாடல்களை கருவூற்ற பெண்கள் பாராயணம் செய்து அனுதினமும் பாடி பூசித்து வந்தால் சுகப்பிரசவம் அடைவார்கள் என்பது தொன்று தொட்டு நம்பப்படும் தெய்வ நம்பிக்கை. "முத்திலங்கு முறுவல் உமை அஞ்சவவே மத்த யானை மறுகவ்வுரி வாங்கியக் கத்தை போர்த்த கடவுள் கருவாவூர் எம் அத்தர் வண்ணம்அழலும் அழல் வண்ணமே." முத்துப் போன்ற புன்னகை உடைய உமாதேவியார்அஞ்சும்படியான யானையின் தோலினை ஆடையாக அணிந்துள்ள திருக்காவூரில் எழுந்தருளியுள்ள ஈசனார், நெருப்பை ஒத்த செஞ்சனல் கொண்ட சென்னிறம் கொண்டவர் ஆவார், "வெந்த நீறு மெய் பூசிய வேதியன் சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன் கந்த மெளவல் கமழுங் கருகாவூர் எம் எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே." திருநீறு மெய் முழுவதும் பூசியுள்ள வேதியன் என் ஈசன், சிந்தையில் இருத்தி நினைக்கின்றவர்களின் மனத்தில் நின்று அவர்கள் விரும்பும் செல்வத்தை அருள்புரிபவன், நறுமணம் கமழும் முல்லை மலர்கள் பூத்திருக்கும் திருக்காவூரில் எழுந்தருளியிருக்கும் என் தந்தையான ஈசன், எரிகின்ற செந்தணலின் செந்தீயின் நிறத்தை கொண்டவன், மேலும் மற்றும் திருத்தலமான சிற்றேமம் என்னும் சிவத்தலத்தில் பாடியுள்ள பதிகப்பாடல்கள் மூலமும் சுகப்பிரசவமும் பிள்ளைப்பேறும் கிடைக்கும் என்பதை அங்கு நடந்த வரலாற்று கதை வழியாகவும் நம்பப்படுகிறது. இத்தலம் திருஞானசம்பந்த சுவாமிகளால் பாடல் பெற்றதலமாகும, சிற்றேமம் என்ற தலத்தில் வாழ்ந்த வணிகர் பொருளீட்டும் பொருட்டு வேறு நாடு சென்றார் , அச்சமயம் அவர் மனைவி கருவுற்றிருந்தாள், அப்பெண் சிவத்தொண்டு செய்து வாழ்ந்து வந்தாள், கணவன் வருவதற்குக் காலம் கடந்தமையால் வாழ்க்கை நடத்த இவளல் இயலவில்லை, இறைவனிடம் மனம் ஒன்றி வழிபட்டு முறையிட்டாள், நாள்தோறும் ஒரு பொற்காசு வைத்துஉதவினார் இத்தலத்து ஈசன், ஆதலால் இவருக்கு பொன்வைத்த நாதர் எனப் போற்றப்படுகிறார், இறைவி அகிலாண்ட ஈசுவரியம்மன், பிள்ளைப் பேற்றுக்காலம் வந்ததும் இறைவருடைய ஆணைப்படி இறைவி, அகிலாண்டேசுவரியே தாயாக வந்து உதவி செய்தாள் என்பது அத்திருத்தலத்தின் வரலாறு. இத்தலத்து பதிகத்தை கருவுற்ற தாய்மார்கள் அன்றாடம் படித்து வந்தால், இறையருளால் பிள்ளைப்பேறு இனிதே எளிதாக நடைபெறும் என்பது தின்னம். " நிறைவெண்திங்கள் வாள்முக மாதர் பாட நீள்சடைக் குறைவெண்திங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான் சிறைவண்டுயாழ்செய் பைம்பொழிற் பழனம்சூழ் சிற்றேமத்தான் இறைவன் என்றே உலகெலாம் ஏத்தநின்ற பெருமானே," முழுநிலவு போன்ற ஒளி பொருந்திய முகமுடைய உமாதேவியார் இசைபாட சடை முடியில் பிறைச் சந்திரனை அணிந்து நடனம் ஆடும் இயல்புடையவராய், சிறகுகளையுடைய வண்டுகள் யாழ் போன்ற ஒலிக்கும் பசுமையான சோலைகளும் வயல்களும் சூழ்ந்த சிற்றேமத்தில் வீற்றிருக்கும் இறைவர், உலகெலாம் ஏத்திப்போற்றுகின்றசிவபெருமானார் ஆவாரே, திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

செவ்வாய், 23 டிசம்பர், 2014

பன்னிரு திருமுறைகளின் பாடல்கள் பாடுவதன் பெருமை


பன்னிரு திருமுறைகளின் பாடல்கள் பாடுவதன் பெருமை திருமுறை பாடல்கள் யாவும் அறிவு கொண்டு பாடப்பட்டவை அல்ல, அவை சிவபெருமானாரே தக்க அருளாளர்கள் மூலமாக பாடியவை என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும். "வேந்தன் அருளாலே விரித்த பாடல் இவை" இறைவரால் ஆட்கொள்ளப்பட்ட அருளாளர்கள் சீவபோதம் (மனித உணர்வு ) அகன்று , சிவபோதத்தில் ( இறை உணர்வு ) மூழ்கிய நிலையில் பிறந்தவை திருமுறைப்பாடல்கள். இந்த உண்மையை திருஞானசம்பந்தர் திருவாக்கினால் அறியலாம். "தன்இயல்பு இல்லா சண்பையர் கோன் சீர்ச்சம்பந்தன் இன்னிசை ஈரைந்து " முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாகிய சிவபரம் பொருளால் ஆட்கொள்ளப்பட்டு அவருடைய கருணை வெள்ளத்தில் மூழ்கி திளைத்த அருளாளர்கள் தாம் பெற்ற பேரின்பத்தினை நாமும் பெறுதல் வேண்டும் என்னும் நல்ல உயர்ந்த நோக்கத்துடன் அருளப்பட்டவைதான் தேவாரத்திருமுறைகள். அந்த அருளாளர்கள் பெற்ற பேரின்பம் அவர்களுடைய உள்ளத்தினின்றும் தோத்திரப்பாடல்களாக ஊற்றெடுத்து பெருவெள்ளமாக தமிழகம் எங்கும் பரவி ஓடியது. இப்பாடல்கள் யாவும் மனித இனம் நலம் பெறுவதற்காகவே இன்றளவும் நின்று நிலவுகின்றன. தமிழ் வேத திருமுறைப்பாடல்கள் பாடுவதால், 1, இறையருள் தானே கைகூடும் என்கிறார் திருஞானசம்பந்தர் " பாடி நின்று ஆடுவார் அழையாமே அருள் நல்குமே" என்கிறார் தமிழ் திருமுறைப்பாடல்களை மனம் கசிந்து பாடியும் தம்மை மறந்து ஆடுதலையும் செய்யும் அன்பர்களுக்கு சிவபெருமானார் தாமே முன்னின்று அருள் புரிவார். 2, நம்முடைய வினை விரைவில் நீங்கிவிடும் " பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர் ஓட்டினார் வினை ஒல்லையே" - சம்பந்தர் கடவுளை வணங்கம் பொழுது பாடல்கள் பாடி வணங்க வேண்டும் என்கிறார் சம்பந்தர், நமக்காக பிறரைப் பாட செய்வது வழிபாடு ஆகாது, நமக்காக பிறர் சாப்பிட முடியாதன்றோ! நம் வாயினால் பாடி பணிந்தால் நம்முடைய வினைகள் விரைவில் நீங்கிவிடும் 3, சிவகதி (பிறவாமை ) கிடைக்கும் " ஞானசம்பந்ன் சொல் சித்தம் சேரச் செப்பு மாந்தர் தீவினை நோயிலராய் ஒத்தமைந்த உம்பர் வானில் உயர்வினொடு ஓங்குவாரே" " அந்திவண்ணன் தன்னை அழகார் ஞானசம்பந்தன் சொல் சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதி சேர்வாரே" மனம் ஒன்றே வேண்டும் என்கிறார் சம்பந்தர், மனம் பாடலில் திளைக்க வேண்டும், அப்படி பாடினால் தீவினைகள் நீங்கும், தேவர் உலகில் இன்பமாய் வாழ்ந்து பிறப்பும் இறப்பும் இல்லாத சிவப்பேற்றை (சிவகதி) அடையலாம். 4. மறுபிறப்பு இல்லையாகும், திருஞானசம்பந்தரிடம் ஒருவர் " இறவாமலிருக்க வழி சொல்லுங்கள் " எனக் கேட்டார். அதற்கு சம்பந்தர் " இது என்ன பெரிய காரியம் பிறவாமல் இருந்தால் இறப்பு வராது" என்றார், அவர் பிறவாமலிருக்க வழியை கூறுங்கள் என்றார் " தமிழ் வேத திருமுறைப்பாடல்கள் பாடிக்கொண்டு வந்தால் மீண்டும் பிறப்பு இல்லையாகும், " என்றார் சம்பந்தர் "கடியார்ந்த பொழிற் காழிக் கவுணியன் சம்பந்தன் சொல் மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே" வந்தால் போக வேண்டும் வாங்கினால் கொடுக்க வேண்டும், பிறந்தால் இறக்க வேண்டும், பிறக்க வில்லை என்றால் இறக்க வேண்டியதில்லை அல்லவா? 5, பாடுவர்கட்கு அருளும் வகைகள் எல்லை இல்லாதன விளக்கினாற் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றி யாகும் துளக்கில் நல்மலர் தொடுத்தால் தூயவிண் ஏறலாம் விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும் அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே" - அப்பர் அடிகளார் சிவாலயத்தை பெருக்கித் தூய்மை செய்பவர் வாழ்வில் துன்பம் ஒழிந்து இன்பமடைவர் சிவாலயத்தை மெழுகினால் பெருக்குவதால் கிடைக்கும் பயனைவிட பத்து மடங்கு அதிக நலம் பெறலாம் அன்று மலர்ந்த தூய, நறுமண மலர்களை எடுத்து மாலையாக்கி சாத்துவோர் மேலான சிவலோக வாழ்வை பெறுவர் இறைவரை வாயார வாழ்த்தி பாடல்கள் பாடினால் அளவில்லா நலன்களை இறைவர் அருளுவார் " கீதம் சொன்னார்க்கு அளப்பில் அடிகள் தாம் அருளுமாறே" என்றாகும் 6. எல்லாவகை செல்வங்களையும் பெறலாம் "செல்வன்ஞானசம்பந்தன் செந்தமிழ் செல்வமாம் இவை செப்பவே" - சம்பந்தர் அருட்செலவராக விளங்கும் ஞான சம்பந்தர் அருளிய இச் செந்தமிழ் பாடல்களை பாடினால் எல்லா வகை செல்வங்ளையும் பெறலாம். அருட்செல்வம், பொருட்செல்வம், மக்கட் செல்வம, முத்திச் செல்வம் ஆகிய யாவற்றையும் பெறலாம், இம்மையில் பொருட்செல்வத்தையும் மறுமையில் முத்திச் செல்வத்தையும் அளிக்கும் அளவிலா ஆற்றல் உடையவை தமிழ் வேத திருமுறை தேவாரப் பாடல்கள் வாயாரப்பாடுவோம்! வளங்கள் பல பெறுவோம் !! திருச்சிற்றம்பலம் நன்றி : தமிழ் வேதம் மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

திங்கள், 22 டிசம்பர், 2014

மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம்


மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன? சத்குரு: காரண அறிவு மந்திரங்கள் என்றாலே சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது. ‘வெறும் ஒரு சத்தம் என்னை எந்தவிதத்தில் மாற்றிவிடும்?’ என்று அது கேட்கிறது. அனைத்து மந்திரங்களுமே உச்சகட்ட விடுதலையை அடைவதற்காக உச்சரிக்கப்படுவதில்லை. வேண்டிய செல்வங்களை அடைவதற்காகவும், எதிர்மறைத் தன்மையைப் போக்குவதற்கும் கூட பல மந்திரங்கள் இருக்கின்றன. ஞானயோகி சிவ ஷம்போ என்று சொன்னவுடன், மான் இறந்து விழுந்தது. வாயடைத்துப் போன ஞானயோகி, “இந்த மந்திரத்தின் பயன்தான் என்ன?” என்றார். தினசரி விஷயங்களை இது போன்ற மந்திரங்கள் மூலம் நாம் திறம்பட கையாள முடியும். வெகு சில மந்திரங்கள்தான் ஆன்மீகம் காட்டும் நல்வாழ்வை நோக்கி உங்களை இட்டுச் செல்லும். எந்த ஒரு மந்திரமோ, அல்லது கடவுளோ அல்லது மதமோ, உங்களுக்குள் பேராசையை அல்லது உங்கள் பயத்தை அல்லது எல்லைகளை உருவாக்கினால், அவற்றுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லை. ஒருவேளை உங்களது உடனடித் தேவைகள் மட்டும் அவற்றால் தீரலாம், ஏனென்றால் நீங்கள் அந்த மந்திரத்தின் மூலம் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரை அழித்துவிடவோ அல்லது உங்களுக்குத் தேவையான பணத்தை சம்பாதித்து கொள்ளவோ முடியும். மந்திரங்கள் ஜெபிப்பவர்களைப் பார்த்து ஏன் சிலர் கேலியும், கிண்டலும் செய்கிறார்கள்? ஒரு ஞானயோகி தன்னைப் புரிந்து கொள்ள தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துகிறார். பொதுவாக ஞானயோகிகளுக்கு யோகத்தின் வேறு அமைப்புகள் மீது எந்தவிதமான மரியாதையும் இருக்காது. ஞானத்தைத் தவிர மற்ற அனைத்துமே முட்டாள்தனமானது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் பக்தர்களைப் பார்த்து சிரிக்கிறார்கள்; கிரியா யோகிகளையும், கர்ம யோகிகளையும் பார்த்து நையாண்டி செய்கிறார்கள். ஒருமுறை ஒரு ஞானயோகி சிவனிடம் சென்று, “உங்கள் பக்தர்கள் மந்திரங்களை ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்த உலகத்தில் ஒலி மாசுபாடுதான் அதிகரிக்கிறது. ஒருவர் தான் இருக்கும் நிலையைத் தாண்டி மற்றொரு பரிமாணத்திற்கு செல்ல வேண்டுமென்றால், அனைத்தையும் கடந்து பார்க்கக் கூடிய விழிப்புணர்வு அவருக்கு இருக்க வேண்டும். வெறும் மந்திரங்களை மட்டுமே ஜெபிப்பதால் அவர்களால் எங்கு செல்ல முடியும் என்று நினைக்கிறீர்கள்? அவர்களை இந்தப் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்தச் சொல்கிறீர்களா?” என்றார். அதற்கு சிவன் தரையில் ஊறிக் கொண்டிருந்த ஒரு புழுவைக் காட்டி, “அந்தப் புழுவுக்குப் பக்கத்தில் போய் ‘சிவ ஷம்போ’ என்று சொல்லுங்கள்” என்றார். அந்த ஞானயோகி நம்பிக்கை இல்லாமல் தன் தலையை ஆட்டிக் கொண்டே, புழுவுக்கு அருகில் சென்று சிவ ஷம்போ என்று உச்சரித்தார். உடனே அந்தப் புழு இறந்துபோனது. அதிர்ச்சியடைந்தார் ஞானயோகி. “என்ன இது? நான் மந்திரத்தைச் சொன்னவுடன், அந்தப் புழு இறந்துவிட்டதே,” என்றார். அதற்கு சிவா சிரித்துக் கொண்டே, ஒரு பட்டாம்பூச்சியைக் காட்டி, “அந்த பட்டாம்பூச்சி மீது கவனம் செலுத்திக் கொண்டே சிவ ஷம்போ என்று சொல்லுங்கள்” என்றார். ஞானயோகி, “முடியாது. நான் அந்தப் பட்டாம்பூச்சியைக் கொல்ல விரும்பவில்லை,” என்றார். அதற்கு சிவா, “முயற்சித்துத்தான் பாருங்களேன்,” என்றார். பட்டாம்பூச்சியைப் பார்த்து சிவ ஷம்போ என்றார் ஞானயோகி, அந்த பட்டாம்பூச்சியும் இறந்தது. அதிர்ச்சியுற்ற ஞானயோகி, “இந்த மந்திரம் ஒருவரைக் கொல்லத்தான் செய்கிறதென்றால், ஏன் ஒருவர் இதை உச்சரிக்க வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு சிவா புன்னகைத்துக் கொண்டே, அருகில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு புள்ளிமானைக் காட்டி, “அந்த புள்ளிமானைப் பார்த்து, சிவ ஷம்போ என்று சொல்லுங்கள்” என்றார். ஞானயோகி, “முடியாது. நான் மானைக் கொல்ல விரும்பவில்லை” என்றார். அதற்கு சிவா, “அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது. மந்திரத்தைச் சொல்லுங்கள்” என்றார். ஞானயோகியும் சிவ ஷம்போ என்று சொன்னவுடன், மான் இறந்து விழுந்தது. வாயடைத்துப் போன ஞானயோகி, “இந்த மந்திரத்தின் பயன்தான் என்ன? இது அனைவரையும் கொல்வதற்காகத்தான் இருக்கிறது,” என்றார். அப்போது ஒரு தாய் தனக்குப் புதிதாகப் பிறந்த ஒரு பச்சிளம் குழந்தையுடன் சிவனின் அருள் பெறுவதற்காக அங்கே வந்தார். சிவா ஞானயோகியைப் பார்த்து, “இந்தக் குழந்தையைப் பார்த்து அந்த மந்திரத்தைச் சொல்லுங்கள்” என்றார். அதற்கு ஞானயோகி, “முடியாது. நான் இந்தக் குழந்தையைக் கொல்ல விரும்பவில்லை” என்று மறுத்தார். சிவா அவரை சொல்லுமாறு வற்புறுத்தவே, ஞானயோகி மிகுந்த தயக்கத்துடன் அந்தக் குழந்தையை அணுகி, சிவ ஷம்போ என்றார். உடனே அந்தக் குழந்தை எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தது. அது, “நான் வெறும் ஒரு புழுவாகத்தான் இருந்தேன். நீங்கள் சொன்ன ஒரு மந்திரத்தால் பட்டாம்பூச்சியாக மாறினேன். இன்னொரு மந்திரத்தால் நீங்கள் என்னை ஒரு மானாக மாற்றினீர்கள். மேலும் ஒரு மந்திரத்தால் ஒரு மனிதனாகவும் மாற்றிவிட்டீர்கள். தயவு செய்து இன்னும் ஒரே ஒரு முறை நீங்கள் அந்த மந்திரத்தை உச்சரியுங்கள்; நான் தெய்வீகத் தன்மையை அடைய விரும்புகிறேன்,” என்றது. இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே சக்திகளின் அதிர்வுகள்தான் என்று நவீன விஞ்ஞானம் தெள்ளத் தெளிவாக நிரூபித்துவிட்டது. எங்கு ஒரு அதிர்வு இருக்கிறதோ, அங்கு ஒரு ஒலியும் இருக்கவேண்டும். அதனால்தான் நாம் யோகாவில், இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒரே ஒரு ஒலிதான் என்று சொல்கிறோம். அது நாதப்பிரம்மம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒலியின் சிக்கலான கலவைகள் நிறைந்த முழுமையான படைப்பு. இந்த சிக்கலான ஒலிக் கலவைக்குள் சில ஒலிகள் மட்டும் முக்கியமான ஒலிகளாக இருக்கின்றன. இந்த முக்கியமான ஒலிகள்தான் மந்திரங்கள் என்று சொல்லப்படுகின்றன. உங்கள் வாழ்க்கை முழுக்க நீங்கள் ஒரே அறையில் அடைபட்டுக் கிடக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று அந்தக் கதவுக்கான சாவி உங்கள் கைகளில் கிடைத்தால்? சாவி கிடைத்த மாத்திரத்தில் அதை பிரயோகப்படுத்துவது எப்படி என்றும் உங்களுக்கு பிடிபட்டு போனால்? சிறிய அறையில் அடைபட்டுக் கிடந்த உங்களுக்கு புதிய உலகிற்கான கதவல்லவா திறக்கும்! அந்த சாவியை எங்கு போட்டு எப்படி திருகுவது என்று தெரியாமல், தரையிலும், கூரையிலும் போட்டு திருகிக் கொண்டிருந்தால், நீங்கள் எங்குதான் செல்ல முடியும்? சாவி, உலோகத்தால் ஆன ஒரு சிறிய பொருள்தான், ஆனால் அதை சரியாக பயன்படுத்த தெரிந்தால், அது உங்களுக்கு ஒரு புதிய உலகத்தையே திறந்து காட்டும். நீங்கள் அதுவரை கண்டிராத புதிய பிரபஞ்சமாக இருக்கும்.

திங்கள், 15 டிசம்பர், 2014

சிவ வழிபாடு முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள் பைரவர்


சிவ வழிபாடு முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள் பைரவர் சிவ வழிபாடு என்பது மிகப் பெரிய செயல் ஆகும். அதற்கு தடைகளும், இடையூறுகளும் வருவது இயற்கையே.இதற்கு காரணம் நமது கர்மவினைகளே. கர்மவினைகளை அழிக்க பல எளிய வழிகள் உண்டு. கர்மவினைகளை அழிக்கும் செயலே இயற்கைக்கு மாறான ஒன்றாகும். நாம் பிறந்த இந்த பூமியானது ஒரு கர்ம பூமி. இதில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் தம் கர்ம வினைகளை தொலைக்க பிறந்தவர்களே. இந்த கர்மவினைகள் இரண்டாகும்.அவை நல்வினை மற்றும் தீவினை ஆகும். நல்வினை மற்றும் தீவினை இவற்றை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். இது தான் விதி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் விதியை மதியால் வெல்லலாம். ஆம் மதி என்பது இங்கே முதலில் சந்திரனையும் பின்பு அதே சொல் நமது அறிவையும் குறிக்கிறது. ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் மதி என்கிற சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் அவர் தம் அறிவின் துணை கொண்டு விதியை வெல்லுவார் என்பது திண்ணம். சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருப்பது என்பது நல்ல நிலை என்று எடுத்துக்கொள்ள இயலாது. ஷட்பல நிர்ணயம் என்றொரு கணக்கீடு இருக்கிறது. அதன் படி சந்திரனின் பலம் நன்றாக இருந்தால் அவர் விதியை மதியால் வெல்லுவார். மதி என்கிற சந்திரனை சூடிய கடவுள்கள் வழிபாடு நமது கர்மவினைகளை போக்கக்கூடியது. பிறைசூடிய தெய்வங்கள் சிவபெருமானை பிரதிபலிக்கும் தெய்வங்கள் ஆகும். அவ்வாறு இருக்கும் தெய்வங்கள் சிவபெருமானின் அம்சம் பொருந்தியவையே. நமது சிவ வழிபாட்டில் வரும் தடைகளும், இடையூறுகளும் முதலில் நமது மனதை பாதிக்கக்கூடியவை. இவ்வாறு வரும் இடையூறுகளை களைந்து சிவ வழிபாடு முழுமை பெற இரண்டு சிவ வடிவங்களின் அருள் மிகவும் தேவை. முதலில் வரும் சிவ வடிவம் அமைதியே உருவான தென்முகக்கடவுள் (தட்சணாமூர்த்தி). இறுதியாக வரும் சிவ வடிவம் பைரவர். பைரவர் என்றால் எந்த பைரவர் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த இரண்டு சிவ வடிவங்களின் துணையின்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. இந்த இரண்டு சிவ வடிவங்கள் மொத்தம் உள்ள 64சிவ வடிவங்களிலும், வழிபாட்டிற்குரிய 25 சிவ வடிவங்களிலும் மிக மிக முக்கியமானவை. தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய இரு சிவ வடிவங்களும் ஒவ்வொரு சிவாலயங்களிலும் தனித்தனி சந்நிதி கொண்டு அருள் வழங்கும் வடிவங்கள் ஆகும். தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய சிவ வடிவங்களும் சென்னியில் பிறையை சூடியவர்கள். இவர்களது தலையில் மூன்றாம் பிறை சந்திரனை நாம் காணலாம். தட்சணாமூர்த்தி சிவபெருமானின் யோகவடிவம். ஞானகுரு என்றழைக்கப்படும் தட்சணாமூர்த்தி அமைதியே உருவானவர். சிவ வடிவங்களில் மிகவும் சிறப்பானவர். தென் திசையை நோக்குபவர். இவரை வழிபடுவது மிகவும் எளிது. இவரை வழிபட கடினமான வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. இவரை தொடர்ந்து வழிபட ஞானமும், செல்வமும், வெற்றியும் உண்டாகும். நமது கர்மவினைகள் படிப்படியாக நீங்கும். மந்திர செபம் செய்பவர்களுக்கு உகந்த கடவுள் இவரே. இவரை வழிபட மனம் அமைதி பெறும். இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும். மந்திர செபம் செய்பவர்களின் மந்திர செபங்களுக்கு சக்தியை தருபவரும் இவரே. மனநிம்மதியை தருபவரும் இவரே. “ஓம் நமோ பகவதே தக்ஷ்ணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா” மேற்கண்ட மந்திரம் தட்சணாமூர்த்தியின் சிறப்பான மந்திரம் ஆகும். இதற்கு பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.அசைவம் ஒன்று மட்டும் சாப்பிடக்கூடாது. மேற்கண்ட மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7மணிக்குள் 21 முறை சிவத்தலத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சந்நிதியில் செபிக்க வேண்டும். பின்பு வீடு வந்து இரவு8 மணிக்கு மேல் 9 மணிக்குள் 108 முறை செபிக்க வேண்டும். பின்பு தினமும் 108 முறை அல்லது 54 முறை அல்லது 27 முறை செபிக்க வேண்டும். இந்த மந்திரம் சகல தோஷங்களையும், சகல பாவங்களையும் நீக்க வல்லது. தட்சணாமூர்த்தியின் முன்பு எவ்வித தோஷமும், பாவமும் நில்லாது ஓடும். இவ்வாறு தொடர்ந்து செபித்து வர நமது கர்மவினைகள் முற்றிலுமாக நீங்கி 16 பேறுகளையும் பெறுவது திண்ணம். கடைசியாக வருபவர் கர்மவினைகளை தன் பார்வையாலே எரிக்கும் வல்லமை கொண்ட பைரவர் ஆவார். இவரே சிவத்தலத்தில் இறுதி சிவ வடிவம் ஆவார். பைரவர்களுள் சொர்ணபைரவரே வீட்டில் வைத்து வழிபாடு செய்யத்தக்கவர். மற்ற அனைத்து பைரவ வடிவங்கள் கோவிலிலோ அல்லது காடுகளிலோ அல்லது மலைகளிலோ வைத்து வழிபடத்தக்கன. பைரவ வடிவம் சிவ வழிபாட்டில் ஏற்படும் கர்மவினை பாதிப்புகளை நீக்க வல்ல வடிவம் ஆகும். பைரவரை தொடர்ந்து வழிபடுவதால் மட்டுமே நாம் செய்யும் சிவ வழிபாட்டின் பலனை அடையமுடியும்.பைரவரே நவக்கோள்களின் அதிபதி ஆவார். சிவ வழிபாட்டின் பலனை நமக்கு தருமாறு நவக்கோள்களுக்கு ஆணையிடும் தலைவரும் பைரவரே ஆவார். இவரை வழிபடாமல் இருந்தால் நமக்கு சிவ வழிபாட்டின் பலன் கிடைக்காது.பைரவரே காலத்தையும், காலனையும் வென்றவர். காலகாலர் என்ற பெயரை கொண்டவரும் பைரவரே ஆவார். தெற்கு திசை நோக்கும் பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். பைரவர் சிவபெருமானின் கோபமே உருவான ருத்ர வடிவம். பைரவர் நம்மை நவக்கோள்களின் பாதிப்பிலிருந்து காப்பார். கர்மவினைகளை வேரோடு சாய்ப்பார். இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும். சிவ வழிபாட்டின் இறுதி நிலையே பைரவர் வழிபாடு ஆகும்.எத்தனையோ பிறவிகளில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே பைரவர் வழிபாடு செய்கின்றனர். முதலில் காலபைரவரை வழிபாடு செய்யும் அனைவரும் படிப்படியாக சொர்ணபைரவர் வழிபாடும் செய்வார்கள். பின்பு இரண்டு வழிபாடுகளும் தொடர்ந்து செய்வார்கள். இறுதியில் சொர்ணபைரவர் வழிபாடு மட்டும் செய்வார்கள். இது தான் பைரவர் வழிபாட்டின் ரகசியம் ஆகும். தன் கர்ம வினைகளை முற்றிலும் நீக்கி பிறவியில்லா பெருநிலையை அடைய தகுதி படைத்தவர்களே பைரவர் வழிபாட்டை தொடர்ந்து செய்கிறார்கள். கர்மவினைகளை அழித்து முக்தியை அடைகிறார்கள். பைரவரை வழிபாடு செய்வது மிகவும் எளிது. “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சொர்ணபைரவாய ஹும் பட் ஸ்வாஹா” மேற்கண்ட மந்திரம் சொர்ணபைரவரின் சிறப்பான மந்திரம் ஆகும். இதற்கு பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.அசைவம் ஒன்று மட்டும் சாப்பிடக்கூடாது. மேற்கண்ட மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7மணிக்குள் 21 முறை சிவத்தலத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சந்நிதியில் செபிக்க வேண்டும். (ஆம் தட்சணாமூர்த்தி சந்நிதியில் தான் செபிக்க வேண்டும்). பின்பு வீடு வந்து இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் 108 முறை செபிக்க வேண்டும். பின்பு தினமும் 108 முறை அல்லது 54 முறை அல்லது 27 முறை செபிக்க வேண்டும். இந்த மந்திரம் சகல தோஷங்களையும், சகல பாவங்களையும் நீக்க வல்லது. சொர்ணபைரவரின் அருள் கிட்டினால் சகல தோஷங்களும், பாவங்களும் நில்லாது ஓடும். இவ்வாறு தொடர்ந்து செபித்து வர நமது கர்மவினைகள் முற்றிலுமாக நீங்கி 16 பேறுகளையும் பெறுவது திண்ணம். தென்னாடுடைய சிவனே போற்றி…! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!! ஓம் அண்ணாமலையே போற்றி…!!! ஓம் சிவ சிவ ஓம்

ஞாயிறு, 14 டிசம்பர், 2014


மாணிக்க வாசகர் கண்ட அதிசயம் உலகில் இறைவனைப்பற்றிய சிந்தனை இல்லாதவன் வறியவன் ஆகிறான். ஏழ்மையன் ஆகிறான். இந்த ஏழைமை எதனால் வருகிறது என்பதை இவ்வாறு நமக்கு மாணிக்க வாசகப் பெருமான் அழகாக விளக்குகிறார். நாமோ செல்வம் இல்லாதவன் மட்டுமே ஏழை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதனால்தான் ,திருஞான சம்பந்தரும் ,"செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே" என்று அருளினார். ஏழைமை என்பதற்கு அறியாமை என்று பொருள் கொள்வோரும் உளர். சிவபெருமானைப் பற்றிய எண்ணம் முதலில் அவன் அருளாலே நமக்கு ஏற்படவேண்டும். அதிலும் அவனது பஞ்சாக்ஷரத்தை எண்ணி எண்ணி அனுதினமும் ஜபம் செய்ய வேண்டும். வேதம் நான்கில் நடுநாயகமாய் , மெய்ப்பொருளாய், எல்லாத் தீங்கையும் நீக்கும் அரு மருந்தாய், பந்தபாசம் அறுக்க வல்லதாய், இயமன் தூதர்களையும் நெருங்க விடாமல் செய்வதாய் விளங்கும் சிவ பஞ்சாக்ஷரத்தை ஜபிக்க நமக்கு நல்வினைப்பயன் இருக்க வேண்டும். அத்தகைய பேறு தனக்கு இல்லையே என்று உருகுவார் மணிவாசகர். " எண்ணிலேன் திருநாம அஞ்சு எழுத்தும் என் ஏழைமை அதனாலே " என்பது அவ்வுயர்ந்த வரிகள் கலைகளைக் கற்பவர்கள் எல்லோரும் ஞானிகள் ஆகிவிட மாட்டார்கள். தாம் கற்ற அக்கலைகளை சிவார்ப்பணமாகச் செய்வோரே உண்மை ஞானிகள். " கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே; கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே." என்பது அப்பர் வாக்கு. ஆகவே கலைகளைக் கற்ற சிவ ஞானிகள் பால் அணுகினால் நமக்கும் அந்த ஞானிகளின் அருள் கிடைக்கும். அதற்கு நாம் நல்வினை செய்திருக்க வேண்டும் அல்லவா? இதைத்தான், " நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு நல்வினை நயவாதே " என்ற திருவாசக வரிகள் இந்தக் கருத்தை நமக்கு அறிவிக்கின்றன. உலகத்து உயிர்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும் உழல்பவை. உலக வாழ்க்கை முடிந்ததும் மண்ணோடு மண்ணாக ஆகும் தன்மை உடையவை. மீண்டும் பிறவா நெறி தர வல்ல கடவுளை சிந்திக்காமலும், கலைஞானிகளைச் சென்று அடையாமலும் வீணே காலத்தைக் கழிப்பவை. கடவுள் அருள் இருந்தால் மட்டுமே கரை ஏறக்கூடியவை. நமக்கும் அந்த அருள் கிடைக்குமா என்று ஒவ்வொரு நாளும் ஏங்குவோருக்கு நிச்சயம் சிவனருள் கிட்டும். பிறவிப் பிணி தீரும். இப்படி ஒன்றுக்கும் பற்றாத நமக்கும் அருள் வழங்கத் தயாராக இருப்பது அவனது வற்றாத மாப்பெருங் கருணையை அல்லவா காட்டுகிறது! இதை விட அதிசயம் ஒன்று இருக்க முடியுமா? கருணைக் கடலான கலாதரன் தன்னை ஆட்கொண்டதோடு, தனது உயர்ந்த பழைய அடியார் கூட்டத்தோடு சேர்த்து வைத்தது அதை விட அற்புதம் தானே என்று நெகிழ்கிறார் குருநாதர். " மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே." என்ற திருவாசக வரிகள் கல் நெஞ்சையும் உருக்குவதாக உள்ளன. முழுப்பாடல் இதோ: " எண்ணிலேன் திருநாம அஞ்செழுத்தும் என் ஏழைமை அதனாலே நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு நல்வினை நயவாதே மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே.

மதுரை கூன் பாண்டியனின் வெப்பு நோய் நீக்கியது


மதுரை கூன் பாண்டியனின் வெப்பு நோய் நீக்கியது ஞானசம்பந்தனின் திருநீற்றுப்பதிகம் தென்னாடுடைய சிவனே போற்றி என்று பதினென் திருமுறையில் போற்றி புகழப்படும் தென்பாண்டி நாட்டில் சைவ சமயம் வலிவிழந்து சமண சமயம் பரவி சமணர்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடிய நேரத்தில் பாண்டிய மன்னாக இருந்த கூன்பாண்டியன் சமண சமயத்தை தழுவிஇருந்த காரணத்தால் சமணர்களின் ஆதிக்கம் தழைத்தோங்கி நின்றதோடு, திருநீறு பூசிய சைவ சமயத்தை சார்ந்தவர்களைக் கண்டால் சமணர்கள் கண்டுமுட்டி என தீண்டத்தாகாதவர்களாக அவமரியாதை செய்து வந்தனர், அந்நிலையில் பாண்டிய மன்னனின் பட்டத்தரசி மங்கையர்கரசியாரும், அமைச்சராகிய குலச்சிறையாரும் சைவ நெறியில் நின்றார்கள், அத்தருணத்தில் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருமறைக்காட்டில் தங்கி இருந்தனர், அப்போது பாண்டியனின் பட்டத்தரசியும் அமைச்சரும் சமணர்களின் ஆதிக்கத்தை பொறுக்க முடியாமல் சைவ சமயத்தை தழைத்திட செய்ய தம் பணியாட்களை அவர்களின் பால் அனுப்பி பாண்டிய நாட்டிற்கு அழைத்து வரும்படி செய்தார்கள், அப்போது அப்பர் பெருமானும் ஞானசம்பந்தரிடம் பாண்டியநாட்டில் சைவம் மறைந்து தீவிர வாத சமணம் ஓங்கி வளர்ந்துள்ள நிலையில் சமணர்கள் எதையும் செய்வார்கள் எனவே நாளும் கோளும் அறிந்து சென்று சைவத்தை நிலைநிறுத்த வேண்டினார், அப்போது நாள் என்செய்யும் கோள் என்செய்யும் நமச்சிவாய என்பதற்கு என கூறி கோளாறு பதிகம் பாடி பணியாட்களிடம் மதுரையில் சைவத்தின் நிலையினையும் அறிந்த பின் பாண்டிய நாட்டு பணியாளர்களுடன் பாண்டியநாட்டு மதுரை சென்றார்,மங்கையர்கரசியாரும் குலச்சிறையாரும் மதுரை சொக்கநாதர் ஆலகயத்தில் சம்பந்தரின் வருகைக்காக காத்து இருந்தனர், ஞானசம்பந்தர் வருகைகண்டு இருவரும் கண்களில் நீர்பொழிய சம்பந்தரின் காலில் விழுந்து வணங்கினர் , பின் அவர்கள் இருவரையும் திருமடத்தில் தங்க வைத்தனர், இதை அறிந்த சமணர்கள் மன்னனிடம் ஒடோடி வந்து " மதுரைக்கு அந்தன சிறுவன் ஒருவன் சிவஞானம் பெற்றவனாம் அவன் சமண சமயத்தை அவதூறு செய்யும் நோக்கில் எங்களை வாதில் வெல்ல வந்துள்ளானாம் ' என வாய்க்கு வந்ததையெல்லாம் மன்னனிடம் கூறினார்கள், இதைக் கேட்ட மன்னன் மனம் கொதித்தது. அவனை வேரிலே கிள்ளியேறிய யாதாவது செய்யுங்கள் என சமண மதத்துறவிகளிடம் கூறினார், உடனே சமணர்கள் தங்கள் மந்திரத்தால் சம்பந்தர் தங்கிய மடம் தீ பிடிக்குமாறு மந்திரம் செபித்தனர், ஆனால் ஆதி மந்திரம் ஐந்தெழுத்து ஓதுவார் பார்க்கும் திசையில் கூட மற்ற மந்திரங்கள் வலிமை நிற்காதல்லவா? சமணர்களின் மந்திரம் பலிக்கமாற் போயிற்று, அடியார்கள் பலர் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் இரவோடு இரவாக அம்மடத்திற்கு ஆட்களைக் கொண்டு தீயிட்டார்கள், அப்பாதர்களின் செயலை அறிந்தார் சம்பந்தர், ஆ என்ன கொடுமை எனப்பதறினார், உடனே திரு ஆலவாய் மேவிய ஐயனை எண்ணித் துதித்தார், பைந்தமிழ் பதிகம் பாடினார். "செய்யனே திரு ஆலவாய் மேவிய ஐயனே அஞ்சலென்றருள் செய்யெனைப் பொய்ய ராம் அமணர் கொளுவுஞ்சுடர் பையவே சென்று பாண்டியற்காகவே - த, வேதம் 3 இதற்கெல்லாம் காரணம் பாண்டிய மன்னன் தான் என உணர்ந்தார் சமணர்கள் இட்ட தீ பையவே சென்று பாணடியற்காக என பாடிய உடனே பாண்டியனை வெப்பு நோய் பற்றியது, வெப்பு நோய்யால் மன்னன் உடல் கருகியது, அனல் பெருகியது, அருகில் எவரும் நெருங்க முடியவில்ைல், என்ன மருந்தும் பயனில்லை, சமணர்கள் மயிற் தொகையால் தடவியும் மந்திரங்கள் பல கூறியும் அரசரின் வெப்பு நோயினை குறைக்க முயற்சித்தார்கள் ஆனாலும் பயனின்றி வெப்பு நோய் கூடியது, நடந்த செய்தியெல்லாம் அறிந்து மிகவும் வேதனைப்பட்டார்கள் அரசியும் மந்திரியாரும், வேந்தனுக்கு வெப்பு நோய் வந்ததை கேட்டனர் பரிதவித்தனர், செய்வதறியாது திகைத்து மன்னனிடம் ஞான சம்பந்தரின் வரவும் அவரின் பெருமையினையும் பக்குவமாக எடுத்துரைத்தனர், அச்செய்தியை கேட்ட மாத்திரத்தில் மன்னனின் வெப்பு நோயின் தாக்கம் குறையும் தன்மையினை மன்னன் உணர்ந்தான், எனது வெப்பு நோயை நீக்குபவர் யாரோ அவர் பக்கம் சேர்வேன் என மன்னன் முடிவு செய்தான், அமைச்சரும் அரசியாரும் திருஞானசம்பந்தரிடம் சென்று விழுந்து வணங்கி " பெருமானே சமணர்கள் செய்த தீமை வெப்பு நோயாக மன்னனை பற்றிக் கொண்டது சமணர்களால் அந்நோயை தீர்க்க முடியவில்லை, தேவரீர் உடற் பிணியை அகற்றியருளல் வேண்டும் என கண்ணீர் மல்க விண்ணப்பம் செய்து மன்னனிடம் அழைத்து வந்தார்கள், மன்னரின் எதிரே இருந்த மணிப்பீடத்தில் அமர்ந்தார் சம்பந்தர், சிவஞானச் செல்வரின் பார்வை பட்ட மாத்திரத்தில் வெப்பு நோய் தீவிரம் அடங்கியது, மன்னரின் இடபக்கத்தில் உள்ள நோயை சமணர்களும் வலது பாகத்தில் உள்ள நோயை சம்பந்தரும் நீக்குவது என முடிவு செய்தார்கள், சமணர்கள் தமது மந்திரத்தை சொல்லி மயிற்பீலியால் தடவினார்கள், வெப்பு நோய் மேன்மேலும் வளர்ந்தது, சம்பந்தர் " மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செநதூர் வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே" எனும் பதிகம் பாடி திருநீற்றை மன்னின் வலப்பக்கத்தில் பூசினார் வெப்பு நோய் இருந்த இடம்தெரியாமல் நீங்கிற்று, இடப்புறத்தில் மேலும் அதிகமாயிற்று, மன்னனின் வேண்டு கோளின்படி இடப்பக்கத்திலும் திருநீற்றைப் பூசினார், மன்னன் உய்ந்தான், சமணர்கள் வெட்கி தலைகுனிந்தார்கள், கண்டுமுட்டி எனக்கூறும் சமணர்கள் திருநீற்றைக்கண்டதும் ஓடி ஒதுங்கினர்,மன்னரும், மங்கையர்கரசியாரும், அமைச்சரும் மனம் மகிழ்நதனர், பாண்டியநாட்டில் சமயம் தழைக்க இவ்வாறு நீர்விட்டு சமயம் தழைக்க செய்தனர், தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!! மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

திங்கள், 1 டிசம்பர், 2014

Sadhananda Swamigal: விபஸ்ஸனா - ஓர் அறிமுகம்

Sadhananda Swamigal: விபஸ்ஸனா - ஓர் அறிமுகம்: விபஸ்ஸனா என்றால் என்ன? விபஸ்ஸனா, உண்மையான மன-அமைதி அடைவதற்கும், மகிழ்ச்சி நிறைந்த உபயோகமான வாழ்க்கை வாழ்வதற்குமான எளிய, செயல்பூர்வமான...