ஞாயிறு, 11 அக்டோபர், 2015

மாணிக்க வாசகர் அருளிய திரு வாசகம்


மாணிக்க வாசகர் அருளிய திரு வாசகம் உலகியல் மற்றும் அருளியல் கல்வி பெற தினமும் இதைப்பாடினால் மெய்ஞான அறிவு பெருகும். இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக் கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலிணைகள் ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம் பெருங்குதிரை ஆக்கியவா றன்றேஉன் பேரருளே பாடல் 1 அடங்கிய அலைகளையுடைய கங்கையின் நீர் ததும்புகின்ற சடையை உடையவனே! இரும்பு போன்ற வலிமையான நெஞ்சையுடையவனாகிய என்னைப் பலகாலும் உன் வசமாக இழுத்து என் எலும்பினை உருகும்படி செய்து உன் இரண்டு திருவடிகளில் கரும்பு தருகின்ற இனிமை போன்ற இனிமையை எனக்கு உண்டாக்கி யருளினாய். இத்தகைய உன்னுடைய பெருங்கருணை நரிகள் எல்லா வற்றையும் பெரிய குதிரைகளாக ஆக்கியது போன்றது அன்றோ கடைசி பாடல் பாடல் எண் : 10 நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் தேனாய்இன் அமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான் ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே.
 பொழிப்புரை : தேன்போன்றும், இனிமையான அமுதத்தைப் போன்றும் இனிக்கின்ற " சிவாய நம " என சிவபிரானானவன் தானே எழுந்தருளி வந்து, என் மனத்துள் புகுந்து உடம்போடு கூடிய உயிர் வாழ்க்கையை வெறுத்து நீக்கும்படி அடியேனாகிய எனக்கு அருள் புரிந்தான். அதனால் சூக்கும பஞ்சாக்கரத்தைச் சொல்லப் பெற்றேன். இப் பேற்றைப் பெறுவதற்கு நானோ முற்பிறப்பில் தவம் செய்தேன்?. உயிர் வாழ்க்கையை ஒறுத்து அன்றே வெறுத்திட அருள் செய்தான்; அதனால், சிவாயநம எனப் பெற்றேன்; அதற்கு அன்னதொரு தவத்தை நான் செய்தேனோ` என்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக