புதன், 30 ஏப்ரல், 2014

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ருத்ராட்சம்

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ருத்ராட்சம்: நம் நாடு ஆன்மீக பாரம்பரியங்களின் வேர்கள் என்பதை விளக்குவதற்கான சந்தர்ப்பங்களை இறைவன் எப்போதுமே நிருபிக்கிறார்.நமது மண்ணின் விதைகளாய் இருக்க...

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சகஸ்ரவடுகர்

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சகஸ்ரவடுகர்: சகஸ்ரவடுகர் 25 ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக இருந்து,பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் நிம்மதி ஒளியேற்றியவர் நமது ஆன்மீக குரு...

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): தீபம் - சகஸ்ரவடுகர்.

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): தீபம் - சகஸ்ரவடுகர்.: அனைவருக்கும் வணக்கம், உலகில் உருவாகும் கலைநிலைகளில் இருவகைப்படும். அவை இருள் மற்றும் வெளிச்சம். இந்த இரண்டு காரணிகளை இயக்கும் சக்திகள...

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): அட்சய திரிதியையின் சிறப்புகள

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): அட்சய திரிதியையின் சிறப்புகள: ஒவ்வொரு ஆண்டின் முதல் மாதம் சித்திரை ஆகும்;சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திதியில் மூன்றாம் நாளை அட்சயத் திரிதியையாக நாம் பல நூற்றாண்டு...

திரு ஐந்தெழுத்தை ஓத நெறி முறை


திரு ஐந்தெழுத்தை ஓத நெறி முறை இந்து சைவ மதத்தின் முக்கிய அடையாளங்களில் , திரு நீறு அணிதல், ருத்திராட்சம் அணிதல், சடாமுடி ,இவற்றுடன் முக்கிய பங்கு வைக்கும் திரு ஐந்தெழுத்து மந்திரம் ஓதுதல் ஆகும், எல்லாமந்திரங்களும் தோன்றுவதற்கு காரணமாவது திரு ஐந்தெழுத்து மந்திரமே என சமயக்குறவர்கள் ஞான சம்பந்தரும், அப்பர் பெருமானும், சுந்தரர் பெருமானும் இதற்கென தனி பதிகங்களாக நமச்சிவாய பதிகம் ஏற்றி பெருமை சேர்த்துள்ளனர். வேத மறையாளர்கள் ஓதிவரும் மந்திரங்களுக்கெல்லாம் தலையாயது திருஐந்தெழுத்து மந்திரமென்பர், " செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே" என்கிறார், ஞானசம்பந்தர், இபபதிக பாடல்களை பக்தியுடன் உள்ள முருக வேண்டினால் தீவினையும், தீரா பிணியும், நீங்கி வளமும், இன்ப வாழ்வும் அடைவார்கள், என்பது அருளாளர்களின் வாக்கு, நாவுக்கரசர் பெருமானை அமணர்கள் கல்லுடன் பூட்டி கடலில் பாய்ச்சியபோதும், அது, தொப்பமாக மிதந்தது, " கற்றுணைப் பூட்டியோர் கடலின் பாச்சினும், நற்றுணை யாவது நமச்சிவாயவே" என்கிறார் அப்பர் பெருமான், இறைவனின் திருநாமங்களை உச்சரிப்பவர்கள் மனங்களில் உறைபவர் இறைவராக இருந்த போதிலும், அதனை ஓதும் மாந்தர்கள் நெறிஉடைவர்களாக இருக்க வேண்டும், இல்லையெனின் இவ்வைந்தெழுத்து மந்திரம் ஓதினாலும் இறைவர் விலகி இருப்பார், என்கிறார் நாவுக்கரசர் சுவாமிகள்.வேதமந்திரங்களுக்கெல்லாம் சிறப்பு வாய்ந்த மந்திரமான திரு ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுவதற்கு உரிய நெறியின்றி , வஞ்சனையுடைய மாந்தர்கள் " சிவாயநம" நமச்சிவாய " என ஓதினாலும் அவர்களை விட்டு விலகி தொலைவில் இருப்பார் இறைவர், வஞ்சனை மாந்தரை மறந்து விடுவர் அப்பெருமானார், வஞ்சனையும், சூதும் வாதும் உடையவர் மனத்தினில் தங்கார் திருவீழி மிழலையான் (இறைவர்) என்கிறார் அப்பர் சுவாமிகள், " தூயானைச் சுடர்வளச் சோதி யானைத் தோன்றிய எவ்வுயிர்க்குத் துணையாய் நின்ற தாயானைச் சக்கரமாற்கு ஈந்தான் தன்னைச் சங்கரனைச் சந்தோக சாமம் ஓதும் வாயானை மந்திரப்பார் மனத்து ளானை வஞ்சனையால் அஞசெழுத்தும் வழுத்து வார்க்குச் சேயானைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே, அதனால் தான் உண்மை அடியார்களுடன் ஆலயவழிபாடு செய்வது, நலம் பயக்கும், தீயவர்களுடன் செல்லும் பொழுது இறைவர் விலகி இருப்பார், எனவே " தூய மனத்துடன் திருஐந்தெழுத்தை ஓதுதல் வேண்டும். தீய குணங்களை விட்டு ஒழிக்க வேண்டும், எல்லா தீமைகளையும்செய்து கொண்டு ஐந்தெழுத்து மந்திரம் ஓதுவது நலல்தன்று, தூய்மையான உள்ளம் உடையவர்கள் தூயானை எளிதில்உணர்ந்து விடுகிறார்கள் திருச்சிற்றம்பல் - " ஓம் நமசிவாய ஓம்"

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

"அடியாருக்கு அடியவன்"


"அடியாருக்கு அடியவன்" பசுவினிடம் பால் பெற வேண்டுமானால் கன்றுக்குட்டி அவசியமாகிறது, அதுபோல் இறையருள் பெறுவதற்கு குருவருள் அவசியமாகிறது, குருவானவர் நமது கண் போன்றவர், கல்லையையும் முள்ளையும் காட்டுவதும், வழியை யும் குழியையும் உணர்த்துவதும் கண், இதைப்போலவே நன்மை தீமைகளை உணர்ததுபவர் குருநாதர், இந்த பிறவியில் அளிக்கும் ஞானம் எடுக்கின்ற பிறவிகள் தோறும் தொடரும், பல பிறவிகளல் இறைவரை வேண்டி அந்த நிலையை அடந்தவர் குருநாதர், இறைவருடைய பரம கருணைக்கு பாத்திரமானவர் குருநாதர், அதனால் தான் சான்றோர்கள் இறைவருக்கு அடுத்த நிலையில் குருவை வைத்து போற்றினார்கள், குரு பக்தியே கோடி நன்மை தரும், குருவின் அடிபணிந்து கூடுவது அல்லாருக்கு அருவமாய் இருக்கும் சிவம் , இதனையே திருமந்திரத்தில் திருமூலரும் தனது பாடலில் " குருவே சிவம்" இறைவன் கட்புலனுக்கு காணப்படாததோர் பொருள் கட்புலனுக்கு காணப்படும் பொருள் குருவே, அதனால் அவனையே இறைவனாக தம் தலைவனாகக் கொள்ளவேண்டும் , குரு தான் இறைவனாய் எவர்க்கும் எவற்றிக்கும் தலைவனாய் இருப்பவன் , என்கிறார், இவர்கூற்றின் படி சைவ சமய குறவர்களில் சிவனடியார்களையே அடியாருக்கு அடியேன் என போற்றி தனது குருவையே இறைவனாகக் கண்டவர் இருவர், ஓருவர் அப்பர் (திருநாவுக்கரசர்) பிராணை குருவாக போற்றி இறைவனாகக் கண்டவர் அப்பூதிகடிகள் மற்றொருவர் பெருமிழலைக் குறும்ப நாயனார், குறும்ப நாயனார் குருபக்தியால் திருவருளைப் பெற்றவர், இவர் புதுக்கோட்டைக்கு வடக்கே சுமார் நான்கு கல் தொலைவில் வெள்ளாற்றின் தென்கரையில் உள்ள தலம் பெருமிழலை ஏன்னும் ஊர், இவ்வூர் பெயரே இவரின் பெயருக்கு அடைமொழீயாகவும் தோன்றியது, எனவே இவரை பெருமிழலைக் குறும்ப நாயனார் ஆனார், இவ்வூரில் குறுநில மன்னராகிய பெருமிழலைக் குறும்பனார் என்ற பெரியார் இருந்தார், இந்த மரபில் வந்தவர் நாயனார், சிவனடியார்கட்டு ஏற்ற தொண்டுகளை யெல்லாம் குறிப்பறிந்து உள்ளன்போடு செய்து வந்தார், மங்கைபங்கருடைய ( சிவபெருமான்) மலரடிகளில் மாறாத அன்பு கொண்டவர், குருவின் திருவடிகளால் ஏற்படும் நன்மை இன்னது என்று அறிந்தபின், அவரது திருவுருவம், திருவார்த்தை திருநாமம் , திரு உடல் இவற்றை நல் மாணவர்கள் முறையே சிந்தனை செய்து கொண்டு கேட்டுக் கொண்டும், இருப்பதை திருமந்திரத்தில் திருமூலர் வாக்குப்படி " தெளிவு குருவின் திருமேனி காண்டல், தெளிவு குருவின் திருநாமம் செப்பல், தெளிவு குருவின் திருவார்ததை கேட்டல், தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே, " என்றபடி குருபக்தி கொண்டவர் பெருமமிழலை குறுப்பர், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருவடிகளை மனம் வாக்கு காயங்களால் சிந்தித்து துதித்து வணங்கி வந்தார், இதுவே இறைவரின் திருவடிகளை அடைவதற்கு ஏற்ற நெறியெனக் கொண்டார், இவ்விதமே நாள்தோறும் சுந்தரமூர்த்தி நாயனாரரின் திருநாமத்தை நவின்று வந்தார், இப்புண்ணியத்தின் பயனாக அணிமா, மகிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம் ஈசத்துவம், வசித்துவம் என்னும் அட்டாமா சித்திகள் யாவும் கைவரப் பெற்றார், இதன் பிறகு திரு ஐந்தெழுத்தினையே பற்றுக் கோடாக கொண்டவர், இதையே சேக்கிழார் பெருமானார் தனது பெரியபுராணத்தில் கூறய படி " நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே ஆளும் படியால் அணிமாதி சித்தியான அணைநதற்பின் மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமசத தஞ்செழுத்தும் கேளும பொருளும் உணர்வுமாம் பரிசுவாய்ப்பக் கெழுமினார் " பெரிய புராணம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் " திருஅஞ்சைக்களம் " என்னும் தலத்திற்கு சென்று பெருமானை வணங்கி திருப்பதிகம் பாடிக் கயிலாயம் செல்ல இருக்கின்றார் என்பதை முன்கூட்டியே தனது யோக வலிமையால் உணர்ந்து கொண்டார் பெருமிழலைக் குறும்பர், " வன்தொண்டர் சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கயிலாயம் அடையவும், கண்ணையிழந்து வாழ்வார் போல நான் அவரை பிரிந்து வாழமாட்டேன் என்று எண்ணி " யோக நெறியில் மூலம் கபாலத்ததினைத் திறந்து ஒளி வடிவமாக திருக்கயிலாயம் சேர்ந்தார், இப்புணித வரலாற்றை படிக்கும் நமக்கு குருபத்தியின் மேன்மையை அதன் பயன்பாட்டை சீர்தூக்கலாம், திரு ஐந்தெழுத்து மந்திரத்தின் - சிவயநம - நம் உயிர் மூச்சாகக் கொண்டு எல்லா நலன்களும் பெற்று பொருளற்ற சடங்குகளில் சம்பிரதாயங்களில் கருத்தை செலுத்தி பிறப்பை பயனற்றதாக்க வேண்டாம் நாம் குருபத்தி கொண்டு அடியார்க்கு அடியானாக வாழ்ந்து இறையருளை பெறுவோம், திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவாய நம - நன்றி : கருத்து வடிவம் - தமிழ் வேதம்

கொண்டு வருவதும் கொண்டுபோவதும் "எதை கொண்டு வந்தாய்? எதை நீ இழப்பதற்கு? எது உண்டையது? அதுவே நாளை வேறு ஒருவருடையது " என்ற கீதையின் வாக்கிற்கு ஏற்ப ஒரு ஊரில் சாதாரண குடும்பத்ததில் பிறந்த ஒருவன் முற்பிறவியில் செய்த நல்வினைப் பயனால் தான் ஏழையாக இருந்தபோதிலும், தனது உழைப்பினால் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது, நிறைய சம்பாதித்தார், நல்ல மனைவி மக்களையும் பெற்றார், நிற்க நேரம் இல்லாமல் வியாபாரம் செய்து பெரும் பொருள் ஈட்டினார், சில நேரங்களில் சாப்பிடாமல் கூட தொழிலில் ஈடுபட்டிருந்தார், பல கோடிகளுக்கு அதிபதி ஆனார், நிலபுலங்கள் வேலையாட்கள், பெரிய வீடு, வண்டிவாகனம் என்று எல்லாம் பெற்றிருந்தார். பெற்ற பொருட்கள் எல்லாம் தனது உழைப்பின்காரணமாகத்தானே கிடைத்தது, என்ற ஆணவமும் சற்று இருக்க தவறவில்லை, எல்லாம் அவன் செயலாலேயே வந்தது என்பதையும், தனது பூர்விக புண்ணிய கருமங்களால் தான் கிடைத்ததென்பதையும் மறந்திருந்தார், பொருளை அருளாக மாற்றி கொள்ள வேண்டும் என்பது மட்டும் அவருக்கு தெரியாமால் போயிற்று, பெரும் செல்வமிருந்தால் போதும் என்று வாழ்ந்தார். இல்லாதவர்க்கு கொடுத்து உதவும் பழக்கம் அவரிடம் எள்ளளவும் இல்லை. ஆதலால் யாரும் அவரிடம் எதை வேண்டியும் செல்லவும் இல்லை. இவ்வாறு செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்த நாளில் ஒருநாள், திடீரென்று மாரடைப்பினால் உயிர் பிரிந்தது எமன் தூதர்கள் அவனுடைய உயிரைப் பற்றிச்சென்றனர், அங்கே எமன் கேட்டார் " கோடி கோடியாக இறைவர் உனக்கு கொடுத்த செல்வத்தை கொடுத்தாரே எதையாவது கொண்டுவந்தாயா? வெறுங்கையுடன் வந்திருக்கிறாயே? அடுத்த பிறப்பில் கனவில் கூட காசை பார்க்க முடியாத ஏழையாகத்தான் பிறக்க வேண்டும் நீ" என்றார், அதற்கு அவனோ நான் பிறக்கும் போது வெறுங்கையுடன் தான் பிறந்தேன், வெறுங்கையுடன் தான் வந்துள்ளேன்" என்றான், அதற்கு எமன் " நீ கூறுவது தவறு, எல்லோரும் நல்வினை, தீவினை என்ற இரண்டையும் இருகை நிறைய கொண்டு போகிறார்கள், அதைப்போலவே இருகை நிறைய நல்வினை தீவினை கைநிறைய கொண்டு வருகிறார்கள், நீயே நல்வினை இல்லாமல் தீவினையுடன் மட்டும் வந்துள்ளாய் என்று கூறினார் எமன்.வேலை உழைப்பு என்று எப்போதும் காலம் கழித்தாய், ஆனால் சிறு பொழுதேயாயினும் இறைவனை நினைத்தாயா? பெரும் செல்வம் இருந்தும் சிறு துளியாவது மற்றொருவருக்கு - ஏழைகளுக்கு தருமமாக கொடுத்தாயா? நல்வினை யை - இறையருளை மட்டும் தேட மறந்து விட்டாய்? என்றார், அவரின் கூற்றுப்படி திருமூலர் வாக்கின்படி " யாவருக்கும் ஆம் இறைவற்கொரு பச்சிலை, யாவர்க்கும் ஆம்பசுவுக்கொரு வாய்உறை, யாவர்க்கு ஆம் உண்ணும்போது கைப்பிடி, யாவர்க்கும் ஆம் பிறர்க் கின்னுரை தானே" என்ற படி நல்வினை என்ற இறையருளை சற்றேனும் இல்லாது தீவினைகளைமட்டும் கொண்டு சேர்ந்தான், இதனையே அப்பர் பெருமானார்," இரப்பவர்க்கு ஈய வைத்தார், ஈயவர்க்கு அருளும் வைத்தார், கரப்பவர் தங்கட்கெல்லாம் கடு நரகங்கள் வைத்தார் " என்கிறார், நல்வினை தீவினைகளைக் கொண்டு வருகிறோம், அவற்றுடன் செல்கிறோம், இரண்டையும் விட்டால் பிறப்பில்லாமல் ஒழியும் உயிர்க்குத் துணையாய் வருவது நாம் செய்யும் தான தருமங்களே ஆகும், அதிகமான பொருளை நம்மிடம் கொடுப்பதின் நோக்கமே இல்லாத எளியவர்களுக்கு கொடுக்கும் புண்ணியவானுக்கு இறைவர் தம்முடைய அருளை பூரணமாய் அளிக்கின்றார், கொலை, கொள்ளை , திருடுதல், போன்ற தவறுகளை செய்பவரை அரசாங்கம் சிறையில் அடைத்து தண்டிக்கிறது, ஆனாலும் அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் யாவும் அளிக்கிறது. இதைப்போல கடந்த பிறவிகளில் பாவங்களைச் செய்தவர்கள் இப்பிறவியில் பரம ஏழையாக பிறக்கின்றனர், ஆடை உணவு, இருப்பிடம் ஆகியவற்றுக்கு திண்டாடுகின்றனர், தவறு செய்த தண்டனை கைதிகளும் நலமாக இருக்க வேண்டும் என்று இந்த அரசு நினைக்கிறது. பரம கருணை நிறைந்த இறைவர், பாவம் ெசெய்து ஏழைகளாக பிறந்துள்ளவர்களுக்குநலமாக வாழ வேண்டும் என்ற எண்ணுகிறார், இறைவரும் ஏழைகளுக்கு உதவ வேண்டி, கடந்த பிறவிகளில் புண்ணியம் செய்தவர்களிடம் தேவைககு மேல் செல்வத்தை அளித்து ஏழைகளுக்கு கொடுக்க , செல்வந்தர்கள் கடவுளின் பிரதிநிதிகளாக செயல்பட வேண்டும் அவர்களும் நலம் பெற செல்வந்தர்கள் மூலம் அருளச் செய்கிறார், எனவே இறையருள் பெற்றால் பரம ஏழைக்கும் இறைவரின் பிரதிநிதியான செல்வர்களுக்கும் இறையருளை கொடுத்து தான தர்மம் செய்தபடியால் அவர்களுக்கும நல்வினை என்ற இறையருளை வாரி வழங்குகிறார் இறைவர், திருச்சிற்றம்பலம், - ஒம் நமச்சிவாயம், நன்றி : படித்ததில் பிடித்த கருத்து : தமிழ் வேதம்

திங்கள், 28 ஏப்ரல், 2014

Vallalar Video (+playlist)

ஞானம்


ஞானம் படித்தறிவு என்பது வேறு அறிவு என்பது உலக பொது அறிவையையும் அறிவானந்த ஆற்றலையும் வளர்க்க வல்லது, அறிவு வேறு,ஞானம் வேறு, பலகைகளுடன் தலைவிரி கோலத்தில் சிவனே வந்து நின்றாலும் " இது சிவன்தானா? " என ஆராய்ந்தால் சிவன் போய் விடுவார் ஞானம் எழும் இடத்தில் அறிவுக்கு வேலை இல்லை. ஆராய்வது அறிவு. உள்ளதை உள்ளபடி உணர்வது ஞானம். நாம் படிப்பது அனைத்தும் அறிவு, அது பண வரவை அதிகரித்து நம் உடலை வளரச்செய்யும், அன்ற வேலைக் கல்வி என்றால் மருத்துவம், பொறியியல், சட்டம், எல்லாம், சில. இன்றோ நூற்றுக்கணக்கான படிப்புகள் எல்லாம் பணம் தருவன. நம் உடலை வளர்ப்பன. ஆனால் ஞானம் ஒன்றே உயிரை வளர்க்கும், உயிருக்குஇன்பம் தரும். ஞானம் என்றால் மெய்யறிவு, உண்மையறிவு. பொருட்கள் மூன்று அவை இறை, உயிர், உலகு இதைனையே திருமந்திரத்தில் திருமூலர் பதி, பசு, பாசம் என்கிறார், இவற்றின் இயல்பை உள்ளதை உள்ளபடி உணர்வது ஒன்றே ஞானம், நாம் ஆடம்பரமாக இருந்தாலும், ஆராய்ச்சியில் இருந்தாலும், உள்ளதை உள்ளபடி உணரமாட்டோம், நம் தோதுக்கே பதில் சொல்வோம், ஆகவே தான் இத்தனை மதங்கள், சமயங்கள், தோன்றின. அவை அனைத்தும் அறிவுக்கு வேலை கொடுத்தள்ளன, அவரவர் அறிவுக்கு எட்டிய உரைகள் மதங்கள், ஞானம் பெற நிரம்பிய அறிவு வேண்டியதில்லை, நம்மிடம் உள்ள அறிவே போதுமானது, அதுவே ஞானமாக மாறுகிறது. அறிவின் முதிர்ச்சி ஞானமாகிறது, ஒருவரைப் பார்க்கும் போது, இவர் சிரமப்படுகிறார் என்பது அன்பு, " சிரமத்தை அனுபவிப்பதும் ஒர் உயிர்" என்று உணர்வது ஞானம், மாறாக " அவர் நம் இனத்தவர், நமக்கு வேண்டியவர், பணக்காரர், பின்பு பயன்படுவார், நாமும் பழகிக் கொள்வோம்" என எண்ண வைப்பது அறிவு, நம் போன்றோருக்கு பின்னதே முந்தும், அறிவே எழும், ஞானம் எழாது, ஏனெனில் நாம் உலகப் பயன்களை எதிர்பார்தது வாழ்கிறோம், அதை ஆக்கித் தருவது அறிவுதானே, நட்ட கம்பை சிவனாக உணர்ந்தார் ஒருவர், உவர்மண்ணை திருநீராக கண்டார் ஒருவர், கல்லை பூவாக எறிந்தார் ஒருவர், அங்கெல்லாம் அறிவு எழவில்லை, சிவலிங்கத்திற்கு கண்களில் இரத்தம் வழிந்தது அங்கும் அறிவு எழவில்லை, ஞானமே எழுந்தது. அறிவே ஞானமாக பழுத்துள்ளது. முதிர்ந்துள்ளது. ஆணவம் இல்லாத அறிவில் தெளிந்த நிலையில் ஞானம் உண்டாகும், அந்நிலையில் தான் அருளாளர்கள் அவனை கண்டிருக்கின்றனர், தனக்கு கிடைத்த ஞானக் காட்சியைக் கண்டு வியக்கிறார், அப்பர், " கண்டேன் கண்டாறியாதன கண்டேன்" என்கிறார் அவர், அவரே திருபுவணத்தில் "வடிவேறு திரி சூலம் தோன்றும் தோன்றும்" எனத் தான் கண்டதை வருணிக்கிறார், நாமும் உலகியலைப் புறந்தள்ளுவோம், உள்ளதை உள்ளபடி உணர்வோம், பின் நமக்குள்ளும் ஞானம் பிறக்கும், திருச்சிற்றம்பலம் - ஓம நமச்சிவாயம்

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014


உள்ளத் துறவு ஒருவருக்கு உடம்பில் சக்கரைச் சத்து அதிகமாக இருக்கும்போது, சக்கரை யற்ற காபி அருந்துவது, அல்லது காபியே அருந்தாமல் துறப்பது உள்ளத்துவன்று, நம்மனதில் ஆசையை வைத்துக்கொண்டு உடல் பாதுகாப்பிற்காக உணவின் பழக்கங்களை துறப்பது உள்ளத்துறவு ஆகாது, நாமே ஒன்றை விரும்பாது, நாடாது, பற்றாது இருக்க வேண்டும். நமது தேச தந்தை மகாத்மா காந்தியடிகள் நம்நாட்டு விடுதலைக்காக பாடுபட்டார். அவர் விடுதலைக்கு பின் எந்த பதவியும் வகிக்க வில்லை, அவர் உள்ளத்தால் ஆைச்பட வில்லை, அது உள்ளத் துறவு. உலகப் பொருட்கள் அனைத்தும் நம் உடனேயே இருக்கும், அருகிலேயே இருக்கும், நாம் அதைவிட்டு எங்கு ஒடி ஒளிந் கொள்ள இயலாது. காவி உடுத்தி காட்டுக்கு போக சைவம் சொல்லவில்லை. நாம் நம் உள்ளத்தால் எதையும் நாடாதிருப்பதே உள்ளத் துறவு. இதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நாவுக்கரசர். அழகிய பெண்களை அவர் முன் நடனமாட விடுகிறார் இறைவன். அவர்களை அவர் கண்டுகொள்ளவே இல்லை. நவ ரத்திங்களை அவர்முன் பெய்கிறார் இறைவர் அவற்றையும் குப்பையோடு குப்பையாகத் தள்ளிவிடுகிறார். நம் நிலையைத் தாண்டியவரல்லவா அவர்! அவரிடம் ஆசை என்பது அறவே இல்லை. பற்று இல்லாத வாழ்வு அது. இவையெல்லாம் நமக்காக இறைவன் நடத்திக்காட்டிய நாடகம். இதனை சேக்கிழார் , " ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்" என்கிறார். இதை உணர்ந்து நாம் ஆசைகளை துறந்து வாழ முயல வேண்டும், அதாவது எதற்கும் ஆசைப்படாமல் இருக்க வேண்டும், அனைத்து துன்பங்களுக்கும் ஆசையே காரணம், மண்,பொன், பெண் ஆகியவற்றின் மேல் ஆசை வைப்பதால் பல பாவங்களை செய்யும் மனிதன், விட்டில் பூச்சியைப்போல், மகுடிக்கு மயங்கும் பாம்பு போல, தூண்டில் விழும் மீன்போல சிக்கி சுகங்களில் மனதை வைத்து தனது வாழ் நாட்களை வீணாக்கிறான். ஆயுட்காலம் முடிந்த பின் தன் ஆசையால் சேர்த் அத்தனையும் விட்டு செல்கிறான். உலகப் பொருட்களில் பற்றில்லாது வாழ்வதே உள்ளத்துறவாகும். புளிய்ங்காயில் தோலும் சதையும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும் ஆனால் அதுவே பழுத்த பின் ஓடு வேறு, பழம் வேறு என ஒன்றை ஒன்று பற்றாது இருக்கும், இதை "புளியம்பழம் ஒத்திருந்தேன்" என்கிறார் மாணிக்கவாசகர். இதையே உலகியலை நோக்கி, " யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்" என்கிறார் வள்ளுவர், எந்த ஒன்றிலும் விலகியிருந்தால் அதன் வழியான துன்பங்கள் நம்மை அணுகா என்கிறார் அவர், இந்த குறளை படிக்கும் போது நம் உதடுகள் ஒன்டோன்று ஒட்டா, இது போல நாம் எதிலும் ஒட்டாதும் பற்றில்லாதும் வாழ வேண்டும். ( நோதல் என்றால் வருத்துதல்) எதிலும் பற்றவைக்காதும் அனைத்தும் உள்ளத்தால் துறந்தால் வாழ பழக வேண்டும். " பற்றுக பற்றாற்றான் பற்றினை " என்கிறார் வள்ளுவர். ஆனால் இன்றைய உலகில் உள்ளம் வேறு, வெளித் தோற்ம் வேறு, நாம் உள்ளத்தில் பற்று வைத்து, வெளியில் பற்றில்லாதவர் போல் நடிக்கிறோம், உள்ளமும் புறத்தோற்றமும் ஒத்துப்போகிறவர் ஆயிரத்தில் ஒருவர் தேறலாம், அவர் அமைதியாக ஆராவரமின்றி இருப்பார், அவரையே நாம் முன்மாதிரியாக கொள்ளவேண்டும், திருச்சிற்றம்பலம் - ஓம் நமச்சிவாயம்

உள்ளத் துறவு ஒருவருக்கு உடம்பில் சக்கரைச் சத்து அதிகமாக இருக்கும்போது, சக்கரை யற்ற காபி அருந்துவது, அல்லது காபியே அருந்தாமல் துறப்பது உள்ளத்துவன்று, நம்மனதில் ஆசையை வைத்துக்கொண்டு உடல் பாதுகாப்பிற்காக உணவின் பழக்கங்களை துறப்பது உள்ளத்துறவு ஆகாது, நாமே ஒன்றை விரும்பாது, நாடாது, பற்றாது இருக்க வேண்டும். நமது தேச தந்தை மகாத்மா காந்தியடிகள் நம்நாட்டு விடுதலைக்காக பாடுபட்டார். அவர் விடுதலைக்கு பின் எந்த பதவியும் வகிக்க வில்லை, அவர் உள்ளத்தால் ஆைச்பட வில்லை, அது உள்ளத் துறவு. உலகப் பொருட்கள் அனைத்தும் நம் உடனேயே இருக்கும், அருகிலேயே இருக்கும், நாம் அதைவிட்டு எங்கு ஒடி ஒளிந் கொள்ள இயலாது. காவி உடுத்தி காட்டுக்கு போக சைவம் சொல்லவில்லை. நாம் நம் உள்ளத்தால் எதையும் நாடாதிருப்பதே உள்ளத் துறவு. இதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நாவுக்கரசர். அழகிய பெண்களை அவர் முன் நடனமாட விடுகிறார் இறைவன். அவர்களை அவர் கண்டுகொள்ளவே இல்லை. நவ ரத்திங்களை அவர்முன் பெய்கிறார் இறைவர் அவற்றையும் குப்பையோடு குப்பையாகத் தள்ளிவிடுகிறார். நம் நிலையைத் தாண்டியவரல்லவா அவர்! அவரிடம் ஆசை என்பது அறவே இல்லை. பற்று இல்லாத வாழ்வு அது. இவையெல்லாம் நமக்காக இறைவன் நடத்திக்காட்டிய நாடகம். இதனை சேக்கிழார் , " ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்" என்கிறார். இதை உணர்ந்து நாம் ஆசைகளை துறந்து வாழ முயல வேண்டும், அதாவது எதற்கும் ஆசைப்படாமல் இருக்க வேண்டும், அனைத்து துன்பங்களுக்கும் ஆசையே காரணம், மண்,பொன், பெண் ஆகியவற்றின் மேல் ஆசை வைப்பதால் பல பாவங்களை செய்யும் மனிதன், விட்டில் பூச்சியைப்போல், மகுடிக்கு மயங்கும் பாம்பு போல, தூண்டில் விழும் மீன்போல சிக்கி சுகங்களில் மனதை வைத்து தனது வாழ் நாட்களை வீணாக்கிறான். ஆயுட்காலம் முடிந்த பின் தன் ஆசையால் சேர்த் அத்தனையும் விட்டு செல்கிறான். உலகப் பொருட்களில் பற்றில்லாது வாழ்வதே உள்ளத்துறவாகும். புளிய்ங்காயில் தோலும் சதையும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும் ஆனால் அதுவே பழுத்த பின் ஓடு வேறு, பழம் வேறு என ஒன்றை ஒன்று பற்றாது இருக்கும், இதை "புளியம்பழம் ஒத்திருந்தேன்" என்கிறார் மாணிக்கவாசகர். இதையே உலகியலை நோக்கி, " யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்" என்கிறார் வள்ளுவர், எந்த ஒன்றிலும் விலகியிருந்தால் அதன் வழியான துன்பங்கள் நம்மை அணுகா என்கிறார் அவர், இந்த குறளை படிக்கும் போது நம் உதடுகள் ஒன்டோன்று ஒட்டா, இது போல நாம் எதிலும் ஒட்டாதும் பற்றில்லாதும் வாழ வேண்டும். ( நோதல் என்றால் வருத்துதல்) எதிலும் பற்றவைக்காதும் அனைத்தும் உள்ளத்தால் துறந்தால் வாழ பழக வேண்டும். " பற்றுக பற்றாற்றான் பற்றினை " என்கிறார் வள்ளுவர். ஆனால் இன்றைய உலகில் உள்ளம் வேறு, வெளித் தோற்ம் வேறு, நாம் உள்ளத்தில் பற்று வைத்து, வெளியில் பற்றில்லாதவர் போல் நடிக்கிறோம், உள்ளமும் புறத்தோற்றமும் ஒத்துப்போகிறவர் ஆயிரத்தில் ஒருவர் தேறலாம், அவர் அமைதியாக ஆராவரமின்றி இருப்பார், அவரையே நாம் முன்மாதிரியாக கொள்ளவேண்டும், திருச்சிற்றம்பலம் - ஓம் நமச்சிவாயம்

சனி, 26 ஏப்ரல், 2014


புண்ணியம் நாம் பல புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வோம் அங்குள்ள இறைவரை வணங்கிவிட்டு கோவிலைவிட்டு வெளியில் வந்தவுடன் கோவில் வாசலில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு நம்மால்இயன்ற காசுகளை போடும் பழக்கம் இன்றளவும் உள்ளது.இதை " போகும் வழிக்கு புண்ணியம் தேடுவது " என்பர். இதற்கும் புண்ணியம் உண்டு. " பிச்சை இடுவது நான், பெறுவது பிச்சைக்காரர் " என இறுமாந்து போட்டால் அது உயிர் நல்வினை. பசு புண்ணியம், "பசு" என்றால் உயிர் , மாறாக " கொடுத்ததும் சிவன், பெறுவதும் சிவன், ( பிச்சை ஏந்தி இருப்பதும் சிவன்) எனப் பணிந்து , இட்டால் அது பதி புண்ணியம் ( இறை நல்வினை) , புண்ணியமே யானாலும் பசு புண்ணியத்திற்கு பிறவி உண்டு, நல்ல பிறவி வாய்க்கும், அனுபவித்தே அதையும் கழிக்க வேண்டும், பதி புண்ணியம் பெற்றால் அதனால் தேவராயும், சிவகணங்களாயும் பிறக்க வைக்கும். கோவில்கள் கட்டுவதும், அங்கு அபிசேக ஆராதனைக்ள் எல்லாம் நம் செலவிலே செய்வதும், எந்த ஒரு செயலுக்கும் தன்னுடைய பெயரை விளம்பரப்படுத்துவதும், பசு புண்ணியமே ஆகும், ஏன் தேங்காய் உடைத்து நம் பெயரிலே அல்லது நம் குடும்ப உறவின் பெயரிலோ அர்ச்சனை செய்வதும் அதுவும் பசு புண்ணியமே ஆகும். கோவில்களில் முடியிறக்கி காதுகுத்து நிகழ்வுகளின் போது அன்னதானம் நம் சொந்தபந்தங்களை அழைத்து அன்னதானம் இடுவதும் பசு புண்ணியமே ஆகும். நாம் எதிர்பாராது வரும் வழிப்போக்கர் அல்லது யாத்திரியர்கள், ஏழை எளியயோர் நம் அழைப்பின்றியே வந்து உணவருந்தி செல்வோர்க்கு வழங்கும் புண்ணியமே பதி புண்ணியமாகும், அதற்கு பெயர்தான் அன்னதானம், சொந்த பந்தம் நண்பர்களுக்கு வழங்கும் உணவு அன்னதானமாகாது, அது பசு புண்ணியமே ஆகும். ஒருவர் நம்மிடம் பொருளோ பணமோ வேண்டி உதவி கேட்டு வருகிறார் , அப்போது நாம் இராசத ( இரஜோ ) குணத்தில் இருந்தால் நம் தன்முனைப்பு என்ற ஆணவம் எழும்,நம்மிடம் வந்து கேட்டதற்கே நாம் பெருமைப்படுவோம். பணம் கொடுத்து வாழ்த்துவோம், நம் உயிருக்கு நல்வினையாகிறது. உயிர் நல்வினை நம் புத்தியில் இது பதிகிறது. நற்பயனை பின் அனுபவிப்போம். அப்போது சாத்வீக குணத்தில் நாமிருந்தால், " இது இறைவன் செயல்" என்று எண்ணுவோம், பணம் இருந்தால் " இறைவன் கொடுத்தது," என எண்ணி கொடுப்போம். " பெறுவதும் சிவன், கொடுப்பதும் சிவன் " என்றெண்ணிக் போற்றுவோம், இது இறை நல்வினை. இறை சிந்தனையிலேயே இருப்பவருக்குத்தான் இந்த சாத்வீக குண உணர்வைத்தரும். இது தான் பதி புண்ணியம் ( இறைவன் தந்தது, இறைவனுக்கே) என்று உணர்வோம். எது எப்படியானாலும், நாம் செய்த பாவத்தை புண்ணியத்தையும் நாம் அனுபவித்தே கழிக்க வேண்டும். இது ஒரு நிலை. அதற்கு மேனிலையாக எவ்வேண்டுதலும் இல்லாத வழிபாடு ஒன்று உண்டு, எந்த வேண்டுதலும் இல்லாது, அதாவது "நான்" என்ற எண்ணமும் இல்லாது, திருக்கோயிலைச் சுத்தம் செய்தல், கோலமிடல், கோவிலையும், இறைவரையும் அழகுபடுத்துத்ல அபிசேக ஆராதனைகள் செய்தல், அவன் அழகில் அருளில் மெய்மறத்தல், தேவார, திருவாசக் கருத்துக்களை தெளித்த்ல், மந்திரம் ஒதுதல், தியானித்தல், ஆகியவை இது ஒரு உயர்ந்த நிலை. இதனால் மட்டுமே மறுபடி பிறவாமை எய்த முடியும், இதற்குத்தான் முத்தி என்னும் வீடுபேறு உண்டு. எதனையும் வேண்டாது அவன் அருளைமட்டும் நாடவேண்டும், நமக்கு எந்த நேரத்ததில் எதை தரவேண்டும் என்பது அவனுக்கு தான் தெரியும், இதனை மாணிக்க வாசகர் தனது பாடலில் உயிர்களுககு தேவையானது இது என அறிவோய் நீ. மேலும் அவ்வுயிர்கள எவ்வற்றை வேண்டினாலும், அதனை அருளுபவனும் நீயே, உன்னை காண விரும்பி பிரம்மா, திருமால் ஆகியவோருக்கு காட்சி அளித்தவனும் நீயே, நீயாவே என்னை விரும்பி பணிகொண்டாய் என்பொருட்டு நீ விரும்பி அருள் செய்தனை , அதனையே நானாக விரும்புகின்ற பொருள் ஒன்று உண்டெனில் அதுவும் நான் உன்னிடத்தில் வைக்கின்ற அன்புதானே என்று கீழ்கண்டவாறு பாடுகின்றார், "வேண்டத்தக்கது அறிவாய் நீ வேண்ட முழுதுந் தருவோய் நீ வேண்டும் அயன் மாய் கரியோய் நீ வேண்டி என்னை பணிகொண்டாய் வேண்டி நீயாதருள் செய்தாய் யானும் அதுவே வேண்டினல்லால் ேவ்ணடும் பரிசொன்றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே" மாணிக்கவாசகர் இதனையே வள்ளுவரும் " வேண்டங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும்." என்கிறார், இனி நாமும் எதனையும் வேண்டாது அவனருளை மட்டும் வேண்டுவோம், இறைவனே நாம் வேண்டுவன அறிவான் அருளுவான், திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...: ...

மாயை மாயை என்ற சொல் ஞான மார்க்கத்தில் அதிகம் சொல்லப்படுகிறது. உலகமே மாயை என்று ஞானிகள் சொல்வர். மாயையை நாம் தினந்தோறும் காண்கிறோம், உறக்கத்தில் நாம் காணும் கணவும் ஒருவகை மாயைதான். உறக்கத்தில் நாம் கனவு காணும் நேரம் சில நிமிடங்களே அந்த சில நிமிடக் கனவில் நீண்ட காலத்தில் நடப்பது போன்று நிறைய நிகழ்வுகள் நடக்கின்றன. அதில் நாம் பங்கு கொண்டு நிஜமாகவே சுகத்தையும், துக்கத்தையும், பயத்தையும், உணர்கிறோம். உறக்கம் கலையும் வரை நிஜமாகவும், விழித்த பின் நிஜமல்ல கனவு என்று உணர்கிறோம், நம்மிடம் பணம் இருந்தால் மனம் மகிழ்கிறது. இல்லையென்றால் கலங்கிறது.பணத்குள்ளேயே நம் வாழ்க்கை கழிகிறதே! ஆக பணம் மனிதனைமயக்கும்மாயை. திரைப்படத்தில் அதில் வருபவர் தீயவரும் நல்லவராகவும், நல்லவர் தீயவராக நடிப்பவரே தீயவராகவும் நம் கண்ணுக்கு தெரிவர், திரையில் உண்மையென நம்பிவிதே காரணம். மாயை நம்மை மயக்கிவிடுகிறது. இவைபோன்றே கல்வி, அழகு, பொருள், பதவி, புகழ், இவையும் நம்மை அதிலேயே ஆழ்த்திவிடும், நமக்கு எது பலமோ, அதுவே பலவீனம், அது மாயை என்று உணர்ந்து மீளவேண்டும். மாயை என்றால் முற்றிலும் பொய்யானது என்பதாக பலரும் நினைக்கிறார்கள், மாயை என்பது தற்காலிக தோற்றம், உதாராணத்திற்கு கானல் நீரைச் சொல்லலாம், கானல் நீர் கண்ணுக்கு தெரிவது நிஜம், அது காண்பவரின் கற்பனை அல்ல. ஆனாலும், அது நீர் பொருளாக பெற முடியாது, கண்ட காட்சி நிஜம். தாகத்திற்காகக அனுகினால் அதைப்பருக நினைப்பது ஏமாற்றம், அது காணல் நீராக உணர்வது தான் ஞானம்.- அறிவு - '" மா" என்றால் ஒடுக்குதல் , "ஆ" என்றால் வருவித்தல், அனைத்தையும் தன்னுள் ஒடுக்கியும், மீண்டும் வருவிக்கவும் செய்யும் சூக்குமப் பொருளை மாயை என்கிறோம். தமிழில் இது மருள் எனப்படுகிறது. நம்மை இது மயக்குகிறது. இது நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என ஐந்தாக விரிகிறது. அவை நம் உடலாகவும், உலகாகவும், உலகப் பொருளாகவும், மாறுகின்றன. ஆணவ வழியில் நாம் இதனுள் அழுந்தி, உணர்ந்து, திருந்தவே மாயை வழிக் காரியங்கள் வருவிக்கப் பட்டன. ஆகவே இது நம் வாழ்வில் சிறிய ஒளிபோல் நம்மைத் திருத்த வந்தது. அதனுள் வீழும் நாம் உணர்ந்து திருந்தவும், திருவருள் துணை வேண்டும். ஆம் மாயை என்று உணர்வதற்கே இறையருள் துணை வேண்டும். ஒன்று மாயை பொருள் என்று விளங்கும் போது அதைப் பெற ஆணவ வழியில் நாம் எவ்வளவு தூரம் பயணப்பட்டுள்ளோம் என்பதையும் உணர முடியும். ஏனென்றால் இறைவனது அருள் மறைப்பு சக்தியாகவும், வந்து நம்மை மயக்கியுள்ளது. ஆக முன்பு நம்மை மயக்கியதும், பின்பு நமக்கு உணர்த்தியதும் இறைவனது கருணை என்பதும் பினனர் தெரியும், தவறு செய்வது மனித இயற்கை என்பர், மாயை நம்மை மயக்கித் தவறுசெய்யத் தூண்டும். தவறு உடலை வளர்க்கும், அது தவறு என உணரும்போது இறையருள் புரியும், இறையருளை உணரும் போது உயிர் வளரும், ஆகவே மாயை நம்மைத் திருத்த வந்தது. திருச்சிற்றம்பலம்

வியாழன், 17 ஏப்ரல், 2014

மதுரமொழி: திருப்பள்ளியெழுச்சி - 3

மதுரமொழி: திருப்பள்ளியெழுச்சி - 3: திருச்சிற்றம்பலம் எல்லோரும் அறிவதற்கு அரியவன், எமக்கோ எளியவன்! கூவின பூங்குயில்; கூவின கோழி குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்; ஓவின த...

திருநீறு என்று அழைக்கப்படும் விபூதியானது நம் கலாச்சாரத்தில் மிக முக்கியமான ஒரு பொருளாக கருதப்படுகிறது. இதன் மகத்துவம் விபூதியை நாம் பயன்படுத்துவதற்கு பல காரணங்கள் உள்ளன. மிக முக்கியமாக, விபூதி என்பது சக்தியை வழங்குவதற்கு ஏதுவான சாதனம். அதுமட்டுமல்லாமல், நம் உடலின் சக்தி ஓட்டத்தை வழிநடத்தவும், கட்டுப்படுத்தவும் நாம் விபூதியை பயன்படுத்த முடியும். இது தவிர, இதை நம் உடலில் வைத்துக் கொள்வது, நம் நிலையற்ற தன்மையை நமக்கு தொடர்ந்து நினைவூட்டுவதாகவும் இருக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் நாம் இறக்க நேரிடும். இறந்துவிட்டால், இந்தச் சாம்பல் தான் மிஞ்சும் என்று தொடர்ந்து நம் நினைவில் இருக்கச் செய்யும். யோகிகள் எப்போதும் சுடுகாட்டிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பலைத் தான் பயன்படுத்துவார்கள். யோகிகள் எப்போதும் சுடுகாட்டிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பலைத் தான் பயன்படுத்துவார்கள். அப்படிப் பயன்படுத்த முடியாது என்றால், அதற்கு ஒரு மாற்றாக பசுவின் சாணத்தை உபயோகிக்கலாம். அத்துடன் வேறு சிலவற்றையும் கலந்து தான் விபூதி செய்வோம் என்றாலும், அடிப்படைப் பொருள் பசுவின் சாணம் தான். இந்த சாம்பலையும் உபயோகிக்க முடியவில்லை என்றால், அடுத்ததாக அரிசியின் உமியைக் கொண்டு தயாரித்த விபூதியை பயன்படுத்தலாம். இது, உடல் என்பது பிரதானம் அல்ல, அது வெறும் உமி என்பதை குறிக்கும். நாம் ஏன் விபூதி பயன்படுத்த வேண்டும்? துரதிருஷ்டவசமாக, பல இடங்களில் போலியான விபூதி வியாபாரம் தலைதூக்கிவிட்டது. விபூதியை சரியாகத் தயாரிக்காமல், ஏதோ வெள்ளைக் கல்லை பொடியாக அரைத்து, அதை விபூதி என்ற பெயரில் வியாபாரம் செய்கிறார்கள். விபூதியை முறையாகத் தயாரித்து, அதை உடலில் வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால், விபூதி உங்கள் உள்வாங்கும் தன்மையை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், இதை உங்கள் உடலில் நீங்கள் எங்கு வைக்கிறீர்களோ, அவ்விடத்தின் கிரகிக்கும் திறன் அதிகரித்து, நீங்கள் உயர்ந்த பரிமாணத்தை நோக்கிச் செல்ல வழிசெய்கிறது. அதனால், காலையில் நீங்கள் வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன், விபூதியை உங்கள் உடலின் குறிப்பிட்ட சில இடங்களில் பூசிக் கொண்டால், அது, உங்களை சுற்றி இருக்கும் தெய்வீக சக்தியை நீங்கள் உள்வாங்கக் கை கொடுக்கும்; தீயவற்றை அல்ல. விபூதியை எடுக்க உங்கள் மோதிர விரலையும் கட்டைவிரலையும் பயன்படுத்த வேண்டும். வாழ்வை நாம் ஏழு பரிமாணங்களில் உணர முடியும். இந்த ஏழு பரிமாணங்களைக் குறிக்கும் விதத்தில் நம் உடலின் சக்திநிலையில் ஏழு சக்கரங்கள் அமைந்துள்ளன. இந்த சக்கரங்கள், நம் சக்தி உடலின் சந்திப்பு மையங்கள். இவை மிகவும் சூட்சுமமானவை. இவை கண்களுக்கு புலப்படாது. அனுபவப்பூர்வமாக இந்தச் சக்கரங்களை நாம் உணர முடியுமே தவிர, உடலை இரண்டாக வெட்டி பார்த்தால் இவற்றைப் பார்க்க முடியாது. உங்கள் சக்தி மேன்மேலும் தீவிரமாகும் போது, இயற்கையாகவே உங்கள் சக்தி ஒரு சக்கரத்திலிருந்து அடுத்த சக்கரத்திற்கு உயரும். சக்தியின் தீவிரத்தைப் பொறுத்து தான் நாம் வாழ்வை உணரும் விதம் அமைகிறது. உயர்நிலை சக்கரங்கள் வழியே நாம் வாழ்வை உணர்வதற்கும், அடிநிலை சக்கரம் வழியே வாழ்வை உணர்வதற்கும், சூழ்நிலை ஒன்றாகவே இருந்தாலும், நம் அனுபவம் பெரிதும் வித்தியாசப்படும். விபூதியை எப்படி பூசிக்கொள்வது? விபூதியை எடுக்க உங்கள் மோதிர விரலையும் கட்டைவிரலையும் பயன்படுத்த வேண்டும். இதற்குக் காரணம், உங்கள் உடலில் உண்மையிலேயே மிக முக்கியமான பகுதி என்று சொன்னால், அது உங்கள் மோதிர விரல்தான். அதிகபட்ச நன்மைகளைப் பெற, விபூதியை நீங்கள் உங்கள் உடலில் இட்டுக்கொள்ள வேண்டிய இடங்கள், புருவமத்தி, தொண்டைக்குழி, விலா எலும்புகள் சேரும் மார்புப் பகுதி. இவ்விடங்களில் விபூதி பூசிக்கொள்ள வேண்டும் என்பதை காலம்காலமாக இந்தியாவில் அறிந்திருக்கிறார்கள். இவ்விடங்களில் விபூதி இட்டால், இவ்விடங்களின் உள்வாங்கும் திறன் அதிகரிக்கும். இதனால் கிடைக்கும் பலன்கள்: 1. அனாஹத சக்கரம் (விலா எலும்புகள் சேருமிடத்தில், நெஞ்சுக்குழியில்) – இவ்விடத்தில் விபூதி அணிந்தால், வாழ்வை அன்பாக உணர முடியும். 2. விசுத்தி சக்கரம் (தொண்டைக் குழி) – இவ்விடத்தில் விபூதியை பூசுவது உங்களை சக்திமிக்கவராக மாற்றும். சக்தி என்றால் உடலளவிலோ, யோசிக்கும் திறத்திலோ அல்ல. பல்வேறு வழிகளில் ஒரு மனிதன் சக்திசாலியாக இருக்க முடியும். உங்கள் சக்தி உறுதி பெறும்போது, மிக வலிமையாக இருக்கும்போது, நீங்கள் இருப்பதே ஒரு சூழ்நிலையை மாற்றும் வல்லமை கொண்டிருக்கும். நீங்கள் ஏதும் செய்யவோ பேசவோ கூடத் தேவையிராது. நீங்கள் சும்மா அமர்ந்திருந்தாலே அந்த சூழ்நிலை மாறிவிடும். இதுபோன்ற சக்தியாய் நீங்கள் வாழ்வை உணர, தொண்டைக்குழியில் விபூதி வைக்க வேண்டும். 3. ஆக்ஞா சக்கரம் (புருவமத்தி): – வாழ்வை ஞானமாகப் பெறுவதற்கு ஆக்ஞா சக்கரத்தில் விபூதி இட வேண்டும். 4. இது தவிர, இரண்டு காதுமடல்களுக்குப் பின்னும் உள்ள எலும்பின் கீழ் இருக்கும், சிறு குழியிலும் விபூதி வைக்கலாம். 5. ஆண்கள் விபூதியை உங்கள் வலது கால் பெருவிரலிலும் வைக்கலாம். பெண்கள் விபூதியை உங்கள் இடது கால் பெருவிரலில் வைக்கலாம். விபூதியைப் பயன்படுத்துவது ஒரு ஆழமான விஞ்ஞானம். ஆனால் இன்றோ, அதன் பின்னணியைப் புரிந்து கொள்ளாமல், நெற்றியில் வெறுமனே பட்டையிட்டுக் கொள்கிறோம். இது போதாதென்று, ஒரு வகையில் பூசிக் கொள்பவன், வேறு விதத்தில் பூசிக் கொள்பவனுடன் ஒத்துப்போக மாட்டான். இது முட்டாள்த்தனம். விபூதியை சிவனோ, இந்தக் கடவுளோ, அந்தக் கடவுளோ கொடுத்ததல்ல. இது மூடநம்பிக்கையும் அல்ல. நம் இந்தியக் கலாச்சாரத்தில், ஒரு மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கு விபூதியை ஒரு கருவியாகப் பார்த்தார்கள். இந்த விஞ்ஞானத்தை மீண்டும் உயிர்பெறச் செய்து, நாம் பயன்பெறுவோமாக.

வினை - கர்மா " காவலர் மகன் திருடனாக பிறப்பான். ஆசிரியர் மகன் மக்காக பிறப்பான்", எல்லாம் வினை " என்பர். வினை என்பது வடமொழியில் கன்மம் , கரமம், ( செயல்) எனப்படும். நாம் செய்த வினையின் பயனை நாம்தானே அனுபவிக்க வேண்டும். அனுபவித்தே முன்வினையைக் கழிக்க வேண்டும். அதனால் தான் " தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்றார் கணியன் பூங்குன்றனார். " நீயான சுகதுக்கம் " என்கிறது உண்மை விளக்கம். நாம் செய்த தீவினையின் பயனை மட்டும் " கர்மம், கர்மம், என்கிறோம். நம்முடைய பிறவியே நாம் செய்த வினை (கர்மா) தானே. நாம் இப்பொழுது அனுபவிப்பன ( நன்மையும் தீமையும் ) ஏற்கனவே நாம் விதைத்தன. பிறர் வெறும் கருவிகள் தான். நாம் ஏற்கனவே செய்த வினையின் பயனை பிறர்வழி இறைவன் ஊட்டுகிறான். ஆகவே பிறர் நமக்கு நன்மையும் தீமையும் செய்யவில்லை. அவர்களை பாராட்டுவதாலும் நோவதாலும் பயனில்லை. நாம் வஞ்சமாக ஒருவரை அழித்திட எண்ணலாம். அதற்காக அடுத்தடுத்து நாம் செய்யும் தீவினை அவரைப் பக்குவப்படுத்திவிடும். அதன்வழி அவரது நல்வினை வளர அது வழிவகுக்கும். மாறாக நாம் பிறருக்கு செய்யும் நல்வினை அவரகது ஆணவத்தை கூட்டும். அதன்வழி அவரது தீவினை புகுந்து விளையாடும். ஆகவே அவரவர் வினைப்பயனை அவரவரே அனுபவிக்கின்றனர். இறைவன் நம்வழி அதனை ஊட்டுகிறான். ஆக நம்மை ஒரு கருவியாக அவன் பயன்படுத்துகிறான். ஒரு நாய்மீது கல் எறிந்தால் நாய் நம்மைப பார்த்து குரைக்கும் கல்லை பார்த்து குரைக்காது. எறிந்தது நாம்தானே. கல் ஒரு கருவிதான் அதுபோல பாவபுண்ணியம் செய்தது நாம், பிறர் வழி இறைவன் அதன் பயனை ஊட்டுகிறான். பிறர் வெறும் கருவிதான். வினைகள் நல்வினை, தீவினை எனும் இரண்டு. நல்வினை நல்லூழ், புண்ணியம் எனவும், தீவினை தீயுழ் பாவம் எனவும் சொல்லப்படுகிறது. ஒருவனை உயர்த்துவதும் அழிப்பதும் நம்மால் இயலாது. அதற்கு அவனது ஊழ் துணைநிற்க வேண்டும். ஆனால் எண்ணம் நமது தானே, ஒருவனை உயர்த்தவோ, தாழ்த்தவோ நாம் எண்ணலாம் அல்லவா? ஆக நம் எண்ணமே முதல்வினை ஆகிறது. ஒரு பெண்ணை பார்க்கிறோம். அவளை தாயாகவோ, மகளாகவோ, அன்றி தமக்கையாகவோ எண்ணலாம். தவறாகவும் எண்ணலாம், நம் எண்ணமே நாம் செய்யும் முதல்வினை. இதனை வள்ளுவரும் " உள்ளத்தால் உள்ளலும் தீதே" என்றும், உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்" என்றும், கூறுகிறார். அதுமட்டுமல்ல " வினைப்பகை வீயாது பின்சென்று அடும்" என்கிறார். நாம் எங்கு ஓடிச் சென்றாலும் நாம் செய்த வினையின் பயன் நம்மை நிழல்போல பின் தொடர்ந்து வந்து தாக்கும் " என்கிறார் அவர். ஒருவன் மற்றெருவனை கொல்ல முயல்கிறான். இருவருக்கும் அதுவே ஊழென்றால் அது நிறைவேறும். இல்லையேல் எண்ணமும் முயற்சியும் முன்னவனது தீவினைதானே? அது அவனது புத்திதத்துவத்தில் சூக்குமமாகப் பதிகின்றது. இதுபோல நாம் செய்த பாவ, புண்ணிய செயல்கள் அனைத்தும், நம் புத்தி தத்துவத்தில் பதிகின்றன, அதனால் நம் புத்திவழியில் ஒரு செயலைச் சரியாகவும் தவறாகவும் அவசரமாகவும் , பிடிவாதமாகவும் செயல்படுத்துகிறோம், ஆகவே ஒரே செயல் ஒருவருக்கு வெற்றி தருகிறது, ஒருவருக்கு தோல்வி தருகிறது. " கெடுவான் கேடு நினைப்பான் " என்கிறோம். அல்லவா? கெடப்போகிறவன் புத்தி பிறருக்கு கெடுதல் நினைக்கும். அவன் தன் முன்வினையின் ( தீவனை ) வழி பிறருக்கு கேடு எண்ணுகிறான். நாம் முன் செய்த வினையின் பயன் நம் பெற்றோர் வழியிலும் மனைவி மக்கள் ,உறவு நட்பு, பகை, எனும் வழியிலும் ஊட்டப்படுகிறது. ஆக அவர்கள் அனைவரும் வெறும் கருவிதான், விதைத்தது நாம் தானே. நாம் செய்த நல்வினை தீவினை கூடித் தொகுப்பு வினை ( சஞ்சிதம்) என உள்ளது. அதில் ஒரு பகுதிமட்டும் தற்போது நிகழ்வுக்கு வருகிறது. அது நிகழ்வினை, வருவினை ( பிராப்தம், பிராரத்தம் ) என்படுகிறது. நிகழ்வினையை நாம் கழிக்கும் போதே ஆணவப்பட்டு புது வினையை ஈட்டிக் கொள்கிறோம். அது ஏறுவினை ஈட்டுவினை ( ஆகாமமியம் ) எனப் பழைய தொகுப்பு வினையோடு கூடிக்கொள்கிறது. இப்படியே நம் வாழ்நாள் கழிகிறது. நல்ல எண்ணமே நல்வினையைத்தரும். நல்வினையே நிம்மதி தரும். நிம்மதி மட்டுமே நிறைவைத் தரும். ஆக நல்லதையே நாம் எண்ணுவோம், நல்லதையே செய்வோம். திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய

புதன், 16 ஏப்ரல், 2014

மணிராஜ்: முத்திரை பதிக்கும் சித்திரை தமிழ்புத்தாண்டு

மணிராஜ்: முத்திரை பதிக்கும் சித்திரை தமிழ்புத்தாண்டு

அருள்மிகு சிவசைலநாத சுவாமி திருக்கோவில் / சிவசைலம் தென்மாவட்ட சிவ தலங்களில் மிகவும் பழைமையான இயற்கைவளமும் தெய்வீக மனமும் கொண்ட அழகுமிகு திருக்கோவில் சகலவரம் தரும் பரமகல்யாணி உடனுறை சிவசைலநாத சுவாமி திருக்கோவில். ஐந்துநிலை கொண்ட கோபுர அமைப்புடன் கெடனா ஆற்றங்கரையில் சுவாமி மேற்கு நோக்கி அமைந்த கோவில். இங்குள்ள நந்தீஸ்வரர் மிகவும் சிறப்புடையது, அசல் காளையான விடை தத்தருப அமைப்புடையது, சிற்பியால் செதுக்கியதற்கான சிறு துளி அடையாளமும் இன்றி நந்தி பழபழ அமைப்புடன் அமையப்ெபற்றது, மூலவர் ; சிவசைல நாதர் / சுயம்பு லிங்கம் அம்மன்; பரமகல்யாணி ஈஸ்வரி ஸ்தல சிறப்பு ; பிருகு முனி, அத்திரி முனி ஆகியவர்களுக்கு காட்சி தந்த தலம், அத்திரி முனியவரால் அப்பக்திலுள்ள மலையில் சுமார் 1500அடி உயரத்திலுள்ள உயரத்தில் அத்திரி தீர்த்தம் உண்டாக்கப்பட்ட சிறப்புைடயது.வெள்ளிமைல, மேற்குதொடர்ச்சி மலை, முள்ளிமலை ஆகிய மூன்று மலைகளால் சூழப்பட்ட இயற்கை வளமிக்க திருக்ேகாவில். இக்ேகாவிலில் ஆடிவெள்ளி, மற்றும் பங்குனி உத்திரத்தின்ேபாது இக்கோவிலில் திருத்தேர் விழா சிறப்புடன் நடைபெறும். சிவசைலத்திலுள்ள உற்சவர் ஆழ்வார்குறிச்சியில் எழுந்தருளி இங்குதான் தேர்திருவிழா சிறப்புடன் நடைெபறுகிறது. இதனை சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான கிராமமக்கள் ஒன்று கூடி ஆடவரும் பெண்டிரும் தேர் வடம்பிடித்து இழுக்கின்றனர். அம்மை பரமகல்யாணி ஈஸ்வரிக்கு தனித்தேர் இதனை பெண்டீர் மட்டுமே இழுக்கின்றனர். பங்குனி உற்சவ கமிட்டியாக ஸ்பென்சர் நிறுவனம் இதி்ல் முக்கிய பங்கு வைத்து சிறப்புடன் விழாவினை நடத்துகின்றனர். இங்குமட்டும் தான் மூலவர் சிவசைலதிருக்ேகாவிலும், தேர் திருவிழா ஆழ்வார்குறிச்சியிலும் நடைபெறுகிறது. இம் மூலவரின் பெயரிலேயே இவ்வூர் பெயர் அமைந்துள்ளது. எங்கும் பசுமையுடன் காணப்படும் இச்சிற்றூர்,சைவ, தான தருமங்களில் சிறப்புடன் விளங்குகிறது. இவ்வூரில் அமைந்துள்ள அவ்வை ஆசிரமமும், அருள்ஜோதி ஆசிரமமும் இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அவ்வை ஆசிரமம் காந்தி கிராம தொண்டு நிறுவனத்தின் மூலமும் அருள்சோதி ஆசிரமம் சர்குரு குருதேவர் வள்ளலார் அவர்களின் வழிச் சுவட்டில் அவர்களின் வழிகாட்டியாக மகான் ஜீவஜோதி சுப்பிரமணிய சுவாமி அறக்கட்டளை மூலம் வெகு சிறப்புடன் நடைபெற்றுவருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்தன்று அவ்வை ஆசிரமத்திலுள்ள சீரார்கள் வாய்பேசாத, காதுகேட்காத, மனவளர்ச்சி குன்றிய சீரார்கள் மற்றும் அனாதை சீரார்கள் சுமார் 300 சீரார்களுக்கு அன்னதானம் இன்றுவரை சுமார் 30 ஆண்டுகளாக சிறப்புடன் செய்யப்பட்டு வருகிறது என்பது மிகவும் பெருமை சேர்க்கிறது. அருள்பெரும் ஜோதி தனிப்பெருங்கருனை திருச்சிற்றம்பலம் ஓம் சிவசிவ ஓம்

சனி, 12 ஏப்ரல், 2014


ருத்ராட்சை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!!! Read more at: http://tamil.boldsky.com/insync/life/2014/interesting-facts-about-rudraksha-005498.html ருத்ராட்சையை பற்றி நீங்கள் கண்டிப்பாக கேள்விப்பட்டிருப்பீர்கள். ப்ரவுன் நிற மணிகளான இவைகளை, சிவபெருமானின் பக்தர்கள் கழுத்தில் அல்லது கையில் அணிவார்கள். ருத்ராக்ஷா என்ற வார்த்தையில் இருந்து ருட்ராட்சை அதன் பெயரை பெற்றது. ருத்ராக்ஷா என்பது 'ருத்ரா' (சிவன் என்று பொருள்) மற்றும் 'அக்ஷா' (கண்கள் என்று பொருள்) என்ற வார்த்தைகளில் இருந்து உருவாக்கப்பட்டதாகும். சிவபெருமானின் கண்ணீரில் இருந்து உருவானதே ருத்ராட்சை மரம் என்று நம்பப்படுகிறது. அதனால் தான் அது ருத்ராட்சை என்ற பெயரை பெற்றது. இமயமலை வட்டாரத்தில் இந்த ருத்ராட்சை மரங்கள் அதிகமாக காணப்படும். இந்த மரம் நீடித்து வாழ, குறைந்த தட்பவெப்ப நிலையும் மாசற்ற சுற்று சூழலும் இருந்தாக வேண்டும். அதனால் தான் நேபால் மற்றும் ஹிமாசல பிரதேச மலை வட்டாரங்களில் மட்டுமே இது காணப்படும். இந்த ருத்ராட்சை மரம் 100 ஆண்டு காலம் வரை நீடித்து நிற்கும். சிவபுராணத்தின் படி ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!! ருத்ராட்ச மணிகளை மாலையாய் கோர்த்து தொடர்ச்சியான வழிபாடுக்கு அதனை பயன்படுத்தலாம். இந்த ருத்ராட்சை மணிகள் ஒரு முகம் முதல் 21 முகங்கள் வரை கொண்டுள்ளதாகும். இருப்பினும் 1-14 முகங்கள் கொண்ட ருத்ராட்சையை மட்டுமே மனிதர்கள் அணிகிறார்கள். ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உள்ளது. அதற்கு வியக்கத்தக்க சக்திகளும் உள்ளது. ருத்ராட்சை அணிவதால் பல வகையான நோய்கள் குணமடைந்து ஒருவரின் வாழ்க்கையில் நேர்மறையான ஆற்றலை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. ருத்ராட்சை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள். Read more at: http://tamil.boldsky.com/insync/life/2014/interesting-facts-about-rudraksha-005498.html

சிவபெருமானின் 19 அவதாரங்கள்!!! பலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்!!! விஷ்ணு பெருமானின் தசாவதாரம் அல்லது 10 அவதாரங்களை பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் சிவபெருமானுக்கும் அவதாரங்கள் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? சொல்லப்போனால் சிவபெருமான் 19 அவதாரங்களை கொண்டுள்ளார். அவதாரம் என்றால் கடவுள் வேண்டுமென்றே பூமியில் மனிதனாக அவதரிப்பது. மனிதர்களை காப்பாற்ற தீமையை அழிக்கவே அவதாரம் எடுப்பதன் முக்கிய நோக்கமாகும். சிவபெருமானை பற்றி பார்க்கையில், வெகு சிலருக்கே அவரின் 19 அவதாரங்கள் பற்றி தெரியும். சிவபெருமானின் ஒவ்வொரு அவதாரமும் சிறப்பு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. அவரின் இந்த 19 அவதாரங்களுக்கும் குறிப்பிட்ட காரணங்கள் இருந்தது. அதன் உட்சபட்ச நோக்கம் மனித இனத்தின் நலனே. சிவபெருமானின் 19 அவதாரங்களை பற்றி தெரிய வேண்டுமானால் மேலும் படிக்கவும். பிப்லாட் அவதாரம் தாதிச்சி துறவியின் வீட்டில் பிப்லாட்டாக பிறந்தார் சிவபெருமான். ஆனால் பிப்லாட் பிறப்பதற்கு முன்பாகவே அத்துறவி அவர் வீட்டை விட்டு சென்றார். சனி திசையின் இருக்கை நிலை சரியில்லாமல் இருந்ததால் தன் தந்தை வீட்டை விட்டு வெளியேறினார் என்பதை பிப்லாட் வளரும் போது தெரிந்து கொண்டான். அதனால் சனியை பிப்லாட் சபித்து, தன் விண்ணக இருப்பிடத்தில் இருந்து சனி கிரகத்தை விழச் செய்தான். பின்னர் 16 வயது ஆவதற்கு முன்பாக யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு சனியை மன்னித்தான். அதனால் பிப்லாட் வடிவிலான சிவபெருமானை தரிசித்தால் நம்மை பிடித்த சனி தோஷம் நீங்கும் என்று நம்பப்படுகிறது. நந்தி அவதாரம் நந்தி என்ற பெரிய காளை தான் சிவபெருமானின் ஏற்றமாகும். சிவபெருமானை நந்தி வடிவில் இந்தியாவில் பல இடங்களில் தரிசித்து வருகின்றனர். மந்தைகளின் பாதுகாவலனாக சிவபெருமானின் நந்தி அவதாரம் பார்க்கப்படுகிறது. நான்கு கைகளை கொண்ட காளையாக அவர் தீட்டப்பட்டுள்ளார். கோடரி மற்றும் மானை இரண்டு கைகள் கொண்டிருக்கும். மற்ற இரண்டா கைகள் ஒன்றாக சேர்த்திருக்கும். வீரபத்திர அவதாரம் டக்ஷ்ணா யாகத்தில் சதி தேவி தன்னை பலியாக்கி கொண்டதால், சிவபெருமான் கடும் கோபத்திற்கு ஆளானார். தன் தலையில் இருந்து சிறிது முடியை எடுத்து அதனை தரையில் போட்டார். அதிலிருந்து பிறந்தவர்கள் தான் வீரபத்திரர் மற்றும் ருத்ரகாளி. சிவபெருமானின் கடுமையான அவதாரம் இதுவே. மூன்று கடுஞ்சின கண்களோடு, எலும்பு கூடு மாலை அணிந்து பயங்கரமான ஆயுதங்களை கொண்டிருக்கும் கருமையான கடவுளாக அவர் சித்தரிக்கப்பட்டுள்ளார். சிவபெருமானின் இந்த அவதாரம், யாகத்தில் டக்ஷ்ணாவின் வெட்டுண்ட தலையை கொண்டிருக்கும். பைரவ அவதாரம் பிரம்மனுக்கும் விஷ்ணுவிற்கும் யார் சிறந்தவர்கள் என்ற சண்டை எழுந்த போது, சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார். தன் உயர்வானநிலையை பிரம்மன் மறைத்த போது, சிவபெருமான் பைரவ வடிவத்தை எடுத்து பிரம்மனின் ஐந்தாவது தலையை துண்டித்தான். துண்டித்த பிரம்மனின் தலை பார்த்த போது, ஒரு பிராமணனை கொன்ற குற்ற உணர்வு சிவபெருமானுக்கு ஏற்பட்டது. அதனால் 12 வருடத்திற்கு ஒரு பிக்ஷாடனாவாக, பிரம்மனின் மண்டை ஓட்டை சுமந்து அவர் அவர் சுற்றி திரிய வேண்டி இருந்தது. இந்த வடிவத்தில் அனைத்து சக்தி பீடத்தையும் சிவபெருமான் காத்து வந்தார் என்று நம்பப்படுகிறது. அஸ்வத்ஹமா பாற்கடலை கடைந்த போது, சிவபெருமான் கொடிய நஞ்சை உட்கொண்ட நேரத்திகுள்நேரத்தில், அந்த நஞ்சு அவர் தொண்டையில் எரியத் தொடங்கியது. சிவபெருமானின் உள்ளிருந்த விஷ் புருஷ் வெளிவந்தது. அதற்கு கடவுள் ஒரு வரத்தையும் அளித்தார். அதன் படி, பூமியில் துரோணரின் மகனாக பிறந்து எதிர்த்து நின்ற அனைத்து சத்ரியர்களையும் கொள்வான் விஷ் புருஷ். அதனால் அஸ்வத்ஹமாவாக பிறந்தான் விஷ் புருஷ். ஷரபா அவதாரம் ஷரபா வடிவத்திலான சிவபெருமான் பாதி பறவையாகவும் பாதி சிங்கமாகவும் இருப்பார். சிவ புராணத்தின் படி, விஷ்ணுவின் பாதி சிங்க அவதாரமான நரசிம்மரை அடக்க ஷரபா வடிவத்தை எடுத்தார் சிவபெருமான். க்ரஹபதி அவதாரம் விஸ்வனார் என்ற பிராமணரின் வீட்டில் அவரது மகனாக பிறந்தார் சிவபெருமான். அவருக்கு க்ரஹபதி என பெயரிட்டார் விஸ்வனார். க்ரஹபதிக்கு 9 வயதான போது, அவர் இறக்க போகிறார் என்று அவரது பெற்றோரிடம் தெரிவித்தார் நாரதர். அதனால் மரணத்தை ஜெயித்திட காசிக்கு சென்றான் க்ரஹபதி. அங்கே சிவபெருமானிடம் ஆசி பெற்றதால் மரணத்தை ஜெயித்தான் க்ரஹபதி. துர்வாசா அண்ட சராசரத்தில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க இந்த வடிவத்தை எடுத்தார் சிவபெருமான். துர்வாசா என்பவர் முன் கோபத்திற்கு பெயர் போன மிகப்பெரிய துறவியாவார். அனுமான் குரங்கு கடவுளான அனுமானும் கூட சிவபெருமானின் ஒரு அவதாரமாகும். ராமர் வடிவில் இருந்த விஷ்ணுவிற்கு சேவை புரிந்திடவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்துள்ளார். ரிஷப அவதாரம் பாற்கடல் கடைதலுக்கு பிறகு, கீழோகத்திற்கு சென்றார் விஷ்ணு பகவான். அங்கே ஒரு அழகிய பெண்ணின் பார்த்து மயங்கினார். அங்கே தங்கியிருந்த போது விஷ்ணு பகவானுக்கு பல மகன்கள் பிறந்தனர். ஆனால் அவரின் அனைத்து குழந்தைகளும் அசுரத்தனத்துடன் கொடியவர்களாக இருந்தனர். அனைத்து கடவுள்களையும் மனிதர்களையும் ஒரே மாதிரியான தொல்லைகளை அளித்து வந்தனர். அப்போது சிவபெருமான் காளை அல்லது ரிஷப வடிவத்தை எடுத்து விஷ்ணு பகவானின் அனைத்து கொடிய மகன்களையும் கொன்றார். காளையுடன் சண்டையிட விஷ்ணு பகவான் வந்த போது அது சிவபெருமானின் அவதாரம் என்பதை அவர் உணர்ந்து அவர் இடத்திற்கே சென்று விட்டார். Show Thumbnail யாதிநாத் அவதாரம் ஒரு முறை ஆஹுக் என்று பழங்குடியை சேர்ந்த ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனும் அவன் மனைவியும் தீவிர சிவ பக்தர்கள் ஆவார்கள். ஒரு முறை யாதிநாத் வடிவில் சிவபெருமான் அவர்களை சந்தித்தார். இரண்டு பேர் மட்டுமே இருக்க கூடிய சின்ன குடிசையில் அவர்கள் இருந்ததால், விருந்தாளியை உள்ளே தங்க வைத்து தான் வெளியே படுக்க தீர்மானித்தான் ஆஹுக். ஆனால் துரதிஷ்டவசமாக அன்று இரவு ஒரு வனவிலங்கால் கொல்லப்பட்டான் ஆஹுக். மறுநாள் காலை, ஆஹுக் இறந்திருப்பதை கண்டு அவன் மனைவியும் சாக நினைத்தால். அப்போது தன் உண்மையான ரூபத்தை வெளிக்காட்டிய சிவபெருமான் அவளுக்கு ஒரு வரமளித்தார். அதன் படி, அவளும் அவள் கணவனும் நளன் மற்றும் தமயந்தியாக மீண்டும் பிறப்பார்கள். அவர்களை சிவபெருமானே சேர்த்து வைப்பார். கிருஷ்ண தர்ஷன் அவதாரம் ஒருவர் வாழ்க்கையில் யாகம் மற்றும் சடங்குகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார். பிக்ஷுவர்யா அவதாரம் அனைத்து விதமான ஆபத்துகளில் இருந்து மனித இனத்தை காக்கவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார். சுரேஷ்வர் அவதாரம் தன் பக்தர்களை சோதிக்க இந்திரன் வடிவை ஒரு முறை எடுத்தார் சிவபெருமான். அதனால் தான் அவரை சுரேஷ்வர் என்று அழைக்கிறோம். கீரத் அவதாரம் அர்ஜுனன் தவத்தில் இருந்த போது கீரத் அல்லது வேட்டைக்காரன் வடிவை எடுத்தார் சிவபெருமான். அர்ஜுனனை கொல்ல மூக்கா என்ற அரக்கனை அனுப்பி வைத்தார் துரியோதனன். காட்டுப்பன்றி போல் தன்னை மாற்றிக்கொண்டான் மூக்கா. ஆழ்ந்த தியானத்தில் இருந்த அர்ஜுனனின் கவனம் ஒரு பெரிய சத்தத்தால் சிதறியது. அவன் கண்ணை திறந்து மூக்காவை பார்த்தான். அந்த காட்டுப்பன்றியை அர்ஜுனனும் கீரத்தும் தங்களின் அம்புகளால் வீழ்த்தினார்கள். பின் யார் அந்த காட்டுப்பன்றியை முதலில் வீழ்த்தியது என்ற சண்டை கீரத்திற்கும் அர்ஜுனனுக்கும் பிறந்தது. கீரத் வடிவில் இருந்த சிவபெருமானை சண்டைக்கு வரச்சொல்லி சவால் விசுத்தான் அர்ஜுனன். அர்ஜுனின் வீரத்தை கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு தன்னுடைய பஷுபதா ஆயுதத்தை பரிசளித்தார். சுண்டன்டர்கா அவதாரம் திருமணத்தின் போது பார்வதி தேவியின் தந்தை ஹிமாலயாவிடம் பார்வதியின் கரத்தை பிடிக்க அவர் இந்த அவதாரத்தை எடுத்தார். பிரமச்சாரி அவதாரம் சிவபெருமானை கணவனாக அடைய சிவனை பிரார்த்தனை செய்த பார்வதி தேவியை சோதிக்க இந்த அவதாரத்தை எடுத்தார் சிவபெருமான். யக்சேஷ்வர் அவதாரம் கடவுள்கள் மனதில் குடிகொண்டிருந்த போலியான அகங்காரத்தை ஒழிக்கவே இந்த அவதாரத்தை எடுத்தார் சிவபெருமான். அவதுட் அவதாரம் இந்திரனின் இறுமாப்பை அழிக்கவே இந்த அவதாரத்தை எடுத்தார் சிவபெருமான் நன்றி; http://spiritualaffairs.blogspot.in/

வியாழன், 10 ஏப்ரல், 2014

மணிராஜ்: நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்

மணிராஜ்: நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்

மணிராஜ்: கலங்காமல் காக்கும் கஜசம்ஹாரமூர்த்தி

மணிராஜ்: கலங்காமல் காக்கும் கஜசம்ஹாரமூர்த்தி

மணிராஜ்: இஷ்ட வரம் தரும் அஷ்டவிதார்ச்சனை..!

மணிராஜ்: இஷ்ட வரம் தரும் அஷ்டவிதார்ச்சனை..!

நெற்றிக்கண் நமது இரண்டு கண்களுக்கும், மூக்கின் மேல் சுழி முனைக்கும், புருவங்களின் இடைநடுவே, சிறு ஊசித்துவாரத்தில் பத்தில் ஒரு பாக அளவில் மிக நுட்பமாக இருக்கும் துவாரத்திற்கு "நெற்றிக்கண்" என்று பெயர். இதை மிக இலேசாக சவ்வு மூடிக்கொண்டிருக்கிறது. இடுப்புக்குக் கீழ்ச் சிறுநீர் துவாரத்திற்கும், மலத்துவாரத்திற்கும் இடையேயுள்ள மூலாதாரத்தில் ஊரும் விந்தாகிய குண்டலினி சக்தியை முதுகுத்தண்டு எலும்புக்குள் மிகச் சிறிய துவாரத்தின் உள்ளே கூடிப் பிடரிப் பின்புறத்திலிருந்து "நெருப்பாறு மயிர்ப்பாலம்" என்றும் ரம்பப் பற்களைப் போல் சேர்ந்துள்ள சிரசின் நடு உச்சி மண்டை ஓட்டுக்குள் உள் வழியாகக் குருவின் பரிச உணர்ச்சியிலும், நுட்ப விவேகத் திறமையாலும், குண்டலினியை எழுப்பிக் கொண்டு வந்தால் நெற்றிக்கண் திறக்கப்படுகிறது. நெற்றிக்கண்ணைத் திறப்பதற்கு, அறிந்த ஞானாசிரியரோடு இருபது வயதிற்குமேல் அறிவோடு, விந்தும், தன் ஞாபகமும் கலந்தால்தான் முடிகிறது.இந்தக்கண் திறந்திருந்தால் அறிவிற்கு உணர்ச்சி நன்றாய்த் தெரியும். இதை வாசி [பிராணயாமம்] என்ற மூச்சுப் பயிற்சியாலும், மற்ற யோகங்களாலும் திறக்க முடியாது. நெற்றிக்கண் திறந்தபின் பிடரிக்கண்ணிலும் உச்சிக்கண்ணிலுமுள்ள வலம்புரிச் சுற்றும் ஆறாதாரத்தின் அறிவுப் பெருக்கமும் சோம வட்டமும் நன்றாய் தெரியும். நெற்றிக் கண்ணால் பல விஷயங்களை உணர முடியும், பின் அதை அணுபோகத்தாலேயே அறிய முடியும். நெற்றிக்கண்ணை வணங்காதவர்கள் யாருமே இல்லை. இந்த இடத்தை வணங்குகிறோமென்று அவர்களுக்கு தெரியாமலேயே 'சலாம்' என்றும், 'வந்தனம்' என்றும், 'நமஸ்காரம்' என்றும், 'கும்பிடுகின்றேன்' என்றும் சொல்லியும் தங்கள், தங்கள் மத ஆசாரங்களுக்குத்தக்கபடி பொட்டிட்டும், விபூதி அணிந்தும், நாமம் இட்டும், தங்கள் தங்கள் கையையும், சைகைகளையும், நோக்கங்களையும் காட்டுகின்றனர். அரசாங்கத் தன்மை பிறப்பதும், தடுக்க முடியாத வீரமும், கோபமும், ஏற்படும் போது தத்தம் மூக்கு முனையைப் பார்த்தால் சாந்தம் ஏற்பட்டுவிடும். ஒரு மனிதனிற்கு உடம்பில் சூடு இல்லாமற் போனால் முன் சொன்னபடி நெற்றிக்கண்ணை ஞாபகத்தில் நினைத்தால் சூட்டை உற்பத்தி செய்து கொள்ளலாம். இந்த இடத்தில் பிறக்கும் சொற்கள் சமீப காலத்தில் பலித்தே தீரும். மிகப் பொல்லாதவனையும் அவன் நல்லவனாக வேண்டும் என்று அந்த இடத்திலிருந்து நினைத்தால் அவன் அப்பொழுதோ, அண்மைக் காலத்திலோ நல்லவனாகித் தீருவான் என்பது திண்ணம். ஆகையால் தான் இந்த இடத்திற்கு ஆக்கினை ஸ்தானம் என்று பெயர். ஆணவமழிவதற்கும், ஆணவம் உண்டாவதற்கும் உரிய இந்த இடத்தை நல்ல நினைவுகளுக்கு உபயோகித்துக் கொள்ளுங்கள். நெற்றிக்கண் பயன்கள்: பாலகனாயிருக்கும் போது பக்தியைத் தேடவும், வாலிப காலத்தில் யோகத்தில் ஈடுபடவும், வாலிபங்கடந்து முதியவராகும் போது நாஸ்திக ஞான அறிவு விளக்கம் பெறவும், மனிதன் ம்யற்சிக்க வேண்டும். எட்டாதே என்று ஒரு ஏமாளி சொல்வானானால் எட்டும் என்று வைராக்கிய தீரன் சொல்லுவான். நெற்றிக்கண் திறப்பது என்பது தற்கலத்தில் உள்ள வெல்டிங் வேலையைப் போன்று அறுக்கவோ, ஒட்ட வைக்கவோ முடியாததைப் போல் ஒப்பிடப்படுகிறது. ஒரு அரசனுக்கு ஞானமானது கிடைத்துவிட்டால் அது உலகத்துக்கே பயன்படுகிறது. ஒரு யுத்தத் தலைவனுக்குக் கிடைத்தாலோ அது வேகத்தோடு பரவுகிறது. ஒரு குடும்பத்தலைவன் பெற்றகாலத்து ஒழுக்கத்தையும் குடும்பவாழ்க்கையில் ஒரு நிம்மதியையும் கொடுக்கிறது. மனிதன் ஆண்டவனை அறியவோ, ஆண்டவனாகப் போவதோ நெற்றிக்கண் உணர்வால் பெறப்படும். உடம்பில் பல வியாதியின் காரணமாக ஏற்படும் வலியை நெற்றிக்கண்ணில் நாட்டம் வைத்து அந்த உணர்ச்சியோடு உறங்கிவிட வியாதியனைத்தும் தீரும். "கடத்திலோர் இடத்தில் கறந்த ஞானப்பாலை கனலான மூலக்கனலால் மூட்டி மூட்டிக் கம்ப நுனிவழியாய்க் கண்மூக்கு மத்தியில் ஊட்டி ஊட்டிக் கருத்திற்கிசைந்த சுவையைக் கபாலம் ஏற்றி ஏற்றித் தன்மணிபோல ரசமணி திரள திரளக் கண்ணுக்கு தெரியாத திரை ஆறும் தன் திறமையால் திறக்கத் திறக்கத் தன் காரணத்தைத் தானே தெரியலாமே." "என் சொல்லை நெஞ்சால் கேளுங்கள், மிக தைரியசாலிகள் ஆவீர்கள் நெற்றியால் கேளுங்கள், மரணபயத்தை நீக்கிக் கொள்வீர்கள் தலையால் கேளுங்கள், அறிவாய் பிரகாசிப்பீர்கள் துரித நிதானத்தோடு நிதானியுங்கள், உங்களில் நீங்கள் எல்லாம் அறிவீர்கள்." நன்றி - Paranjothi

புதன், 2 ஏப்ரல், 2014

" பொருளல்லவற்றை பொருளென்று உணர்தல்"


" பொருளல்லவற்றை பொருளென்று உணர்தல்" நிலையில்லாத பொருளை நிலைத்த பொருள் என எண்ணி அதன்பொருட்டு தனது வாழும் நாளில் பல இன்னல்கள் பட்டு வாழ்ந்து வருகின்றோம். " காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே " என்னும் பட்டிணத்தடிகள் கூற்றின்படி எந்த பொருளும் நாம் மானிடராய் வரும்போது வந்ததும் இல்லை, நாம் செல்லும் போது நம்முடன் வருவதுமில்லை. இந்த நிலையற்ற பொருளுக்கு நாம் நம்முள் இருக்கும் இறையையும் மறந்து இல்லாததும் பொல்லாததும் ஆன செயல்கள் செய்து பாவங்களை நம்முடன் சேர்த்துக்கொள்கிறோம். நிலையற்றதென அறிந்து தெளிந்தால் மும்மலங்கள் அற்று பிறாநிலையை பெற்று வீடுபேற்றை அடையலாம். நம் தலைமுடி ஒரு பொருளா? அனைவரும் அதனை சீராட்டுகின்றனர். பேணிப் பாராட்டுகின்றனர் விதவிதமான நிறப்பூச்சும் வாசனை திரவியங்களும் பூசுகின்றனர். அது எப்பொழுது வேண்டுமானாலும் உதிரும் இயல்புடையது. நம்முடியே நாம் உண்ணும் உணவில் விழுந்துவிட்டால் அது அருவருக்கத்தக்காகி விடுகிறது. அது ஒரு பொருளே அன்று, " தலையின் இழிந்த மயிரையர் " என்கிறார் வள்ளுவர் தலையை விட்டு நீங்கிய முடிக்கு மதிப்பில்லை. அது நிலையாத பொருள் என இது உணர்த்துகிறது. தலைமுடி மறுபாலரை ஈர்க்கிறது, என்பதால் தலைமுடியை மழித்து விடுகின்றனர் புத்தமதத்துறைவிகள். எனவே இருக்கும் இடத்தில் இருக்கும் வரை மரியாதையுடன் இருக்கும் பொருளே அது இருந்த இடத்தைவிட்டு விலகும்- விழும்போது அதன் மதிப்பு அறுவருக்கத்தக்கதாகிறது. நாம் அழகுக்காக பேணி காக்கும் உடம்பும் அதுபோலத்தானே. அதினின்று உயிர் பிரிந்து விட்டால் அதனை பிணம் - என்றுதானே கூறுகிறோம். எனவே இவையெல்லாமே பொருளற்ற பொருளாகவே கருதுகின்றனர் அறிஞர்கள். இதனையே வள்ளுவரும் " பொருளலலவற்றைப் பொருளென்று உணரும்" என்கிறார். இப்படி பொருள் அல்லாத வற்றை பொருள் என மதித்து நாம் வாழ்கிறோம். நாம் மதிக்கும் உலகப் பொருள் எதுவும் நிலையத்த பொருள் அன்று. ஆயினும் நம்கூட வரவேண்டும் என நாம் விரும்புகிறோம. எப்பொருளும் நம் வாழ்வில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் அப்பொருளுக்காக நாம் வாழலாகாது, அதனால் தான் துறவிகள் யாசித்து உண்டு, வாழ்ந்தார்கள். உலகப் பொருளுக்காக அவர்கள் வாழவில்லை. அவர்கள் தேடியது மெய்பொருளை, மெய் என்றால் உண்மை. இறை ஒன்றே உண்மையான பொருள். என்றும் நிலைத்த பொருள். அது வேறெங்கும் இல்லை. நம்முடனேயே உள்ளது. அந்த மெய்ப் பொருளை " என்னுளே தேடிக் கண்டு கொண்டேன் " என்கிறார் அப்பர் சுவாமிகள். அந்த ஒன்றே பரம்பொருள் என்று போற்றப்படுகிறது. ஆகையால் மாணிக்க வாசகரும் அவன் ஒருவனையே பொருள் என்கிறார். " பொருளே தமியேன் புகலிடமே " எனவும் " தேடும் பொருளும் சிவன்கழலே " எனவும் பாடுகிறார். இறை ஒன்றே நிலைத்த பொருள். அதுவே நமக்கு புகலிடம் ஏனைய அனைத்தும் பொருள் அல்ல. இறை சார்ந்தார்க்கு அவை பொருட்டல்ல. ஓம் நமசிவாயம் திருசிற்றம்பலம்