ஞாயிறு, 25 மே, 2025

ஞான வெற்றி திருஉந்தியார்

 

 திருவாசகம் தந்த (எட்டாம் திருமுறை) மாணிக்கவாசகர் பெற்ற ஞான வெற்றி
 திருஉந்தியார் என்ற பதிகம் இது தில்லையில் அருளி செய்யப்பட்டது அதனுள் சிவபெருமானது வெற்றியே கூறப்படதலின் அவ்வெற்றி அப்பெருமானே முதற் பொருள் என்று உணறும் ஞானத்தினது என்பதால் இதனை ஞான வெற்றி என்று குறிப்புரைத்துள்ளனர் சான்றோர்.
  மகளிர் விளையாட்டு வகைகளுள் உந்தி என்று ஒன்று உண்டு, இவ்விளையாட்டினை செய்யும் மகளி்ர் அவ்விளையாட்டின் உந்தி என்னும் புனைப்பெயரை உடையவராய் இருப்பர். 
`அடியார்க்கு நல்லார் காட்டினர்` என மேற்குறித்த சூத்திரத்துள்ளும், `உந்தி` என்பது ஒன்று காணப்படுவதால், இது பல்வரிக்கூத்துள் ஒன்று என்பதும் அறியலாகும். இப்பகுதியுள் வரும் ``உந்தீ பற`` என்ற தொடர்களில் உள்ள, `உந்தீ` என்பது, `உந்தி` என்னும் பெயர் விளியேற்று நின்ற தாகவே கொள்ளக்கிடப்பதால், இவ்விளையாட்டினைச் செய்யும் மகளிர் அவ்விளையாட்டில், `உந்தி` என்னும் புனைபெயரை உடையராய் இருப்பர் எனக் கொள்ளவேண்டியுள்ளது. இதன்கண் ஓரிடத்து, `ஏடி, உந்தி` என வருதலும், அடியார்க்கு நல்லார் காட்டிய சூத்திரத்துள் வரும் சில வரிக்கூத்துக்கள், இதுவும், `உந்தியார்` என ஆர்விகுதி பெற்று நின்றது போலும்! இது, `உந்தி` என்னும் பெயராலும், பறத்தல் தொழிலோடு இயைத்துச் சொல்லப்படுவதாலும், இதனை ஆடும் மகளிர், பறவைபோல நிலத்தில் இருபாதங்கள் மட்டும் படிய, இருகைகளையும் முடக்கி இருந்து, பின் விரைந்தெழுந்து, இருகைகளையும் இருபக்கங்களில் சிறகுபோல நீட்டிப் பறவைகள் பறப்பதுபோலப் பாவனை செய்து ஓடி வேறோர் இடத்தில் முன் போல அமர்ந்து, பின்னும் அவ்வாறே ஆடுவர் என்று கொள்ளல் பொருந்தும். இவ்வாறு ஆடுதல் மகளிர்க்கு நல்லதோர் உடற்பயிற்சியாயும் அமையும். இவ்வுந்தியார் என்பது, `உந்தீ, என ஒருமையாக விளித்து, `பற` என்னும் ஒருமை ஏவலாலே முடிக்கப்படுகின்றது. அதனால், ஒருவர்க்கொருவர் தோழியராய் ஒத்த நிலையில் உள்ள மகளிர் தம்மில் இவ்வாறு விளித்தும், ஏவியும் பாடி ஆடுவர் என்பது பெறப்படும். ஏனைய விளையாட்டுப் பாடல்கள்போல இவ்விளை யாட்டுப் பாடலும், `உந்திப் பாட்டு` எனப்படும் எனக் கொள்க. இப்பாடல்களின் கருத்துடன் இறைவன்புகழ்பாடும் திறனும் ஆன்மாக்களின் வினையினை போக்கி உயிர்கள் ஞான வெற்றி பெற உதவும் பதிகமாக தச்சன் வேள்வியை அழித்து வெற்றி கண்டதை கருத்தாக கொண்டு அமைந்துள்ளது எனவே இப்பதிகத்தை பாடும் அடியார்களின் வினைப்பயன் நீக்கப்பட்டு இறைவனை உய்ய வழிவகுக்க அடிகளார் நமக்கு தந்த மந்திர பாடல் இதனை அவரது பாடல் வரிகளால் விரித்து காண்போம்
   இறைவனது வில் வளைந்தது, அதனால் அசுரருடைய ேபார் மூண்டது இதனால் முப்புரம் ஒருமிக்க வெந்து நீராயின இதனால்திரிபுரம் அழிந்தது இதனை அழிக்்க
   இறைவன் கையில் உள்ள ஒரு அம்பே அதிகமானது அதுமட்டுமல்ல இந்த அம்பு கூட தேவையில்லை இறைவனின் புன் சிரிப்பே அழித்துவிடும்தன்மையானது.
   தேவர்கள் அழகுபட செய்த தேரில் இறைவனின் திருவடியை வைத்தவுடனே தேரின் அச்சு முறிந்தது முப்புரங்கள் அழிந்தன.
  பிழைக்க வல்லவராயிருந்த சுதன்மன், சுசீலன்,சுபுத்தி என்னும் திரிபுரத்தில் வாழ்ந்த அசுரர்கள் இறைவனால் திரிபுரம் அழிக்கப்பட்டபோது அவர்கள் அழியாது பிழைக்க வைத்து அவர்களை பெருமானது வாயில் காவலாராயினர்
  இறைவனின் இச்செய்கையால் தக்கனது யாகம் குலைதலும், ேதவர்கள் ஓடி ஒழிந்தனர்
   பிரமனின் தந்தையான திருமால் தக்கன் வேள்வியின் அவியுணவைக் கொண்டு இருந்தபடியால் அந்நாளில் வீரபத்திரரால் தண்டாயுத்தால் தாக்கப்பட்டு உயிர்ஒன்று மட்டும் உடையவனாய் மூர்ச்சையுற்று கிடந்தான்
  அவி உணவை உஉண்ண வந்த கொடியவனான அக்கினி தேவனின் கையினை வெடடினான் இதனால் யாகம் கலங்கிற்று
  பார்வதி தேவியை பகைத்து பேசின தக்கனை / குற்றம் செய்தவனை ஒறுத்தல் அரசருக்கு முறையாகா என்றபடியால் அவனை உயிரோடு விட்டவர் ஈசனே
   தக்கன் வேள்வியில் வீரபத்திரருக்கு அஞ்சி இந்திரன் குயில் உருவம் கொண்டு ஓடி ஒளிந்துவிட்டடான்
  கடுஞ்சினத்தால் தொடங்கிய தச்சன் யாகதது அதி தேவதைகளின் தலை அற்றது  இதனால் ஆட்டின் தலையினை பொருத்திக்கொண்டான்.
  அவிர்பாகத்தை உண்ண வந்த பகனது கண்ணைபறிக்கப்பட்டது
 வீரபுத்திரரால் நாமகள் மூக்கு இழந்தும், பிரம்மன்தலை யிழந்ததும் சந்திரன் தேய்க்கப்பட்டதுமான பங்கம் செய்யப்பட்டது.
  அவி உணவை பெறுவோர் தேவலோக முதல்வனாகிய இந்திரன்பயந்து குயிலாகவும் பின் அவன் தோள் நெறித்து மனவலியிழந்துஓடினான்்
   சூரியனது பற்களை தகர்த்தப்பட்டது 
  தக்கன் இறந்தமையால் பின்னர் வேள்வி அவன் மக்களே சூழந்து நின்றேபாேதும் வேள்வி மடிந்தது
  பிரமனது சிரம் சிவபெருமானால் அரியப்பட்டது. இதுவரை கொடியவனான தக்கனை வீழ்த்தியதும் வேள்வியை அழித்ததும் மான செயல்களால் இறைவன் புகழ் கூறி பாடப்படுகிறது. 
பாலுக்கு பாலகன் அழததற்காகஅவனுக்காக பாற்கடலையே தந்த பிரான் இறைவன்
 தன் தேரை நிறுத்தி கைலாய மலையினை தூக்கும் இராவணது பத்து தலைகளையும் இருபது கைகளையும் நெறித்த இறைவன்திறன் என்னவெண்பது?
  ஆகாயத்திலும் அதற்கப்பாலும் உள்ள முனிவர்கள் அழிந்து போகாமல் காவல் செய்தவர் இறைவனே
  என்று அவன் புகழை புகழ்ந்து பாடி உந்தி பற என்று ஆடிப்பாடி மகளிரை அழைக்கின்றார் அடிகளார்
  திருச்சிற்றம்பலம்   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக