புதன், 22 டிசம்பர், 2021

உயிர்கள் சார்ந்ததன் வண்ணம் ஆதல்( சைவ சித்தாந்த துளிகள்)

 உயிர்கள் சார்ந்ததன் வண்ணம் ஆதல்( சைவ சித்தாந்த துளிகள்)



  உயிர்கள் கேவல / சகல நிலையில் மும்மல / மாயா மலத்தோடு சேர்ந்து அறவு மயங்கி நிற்கும். முக்தி / சுத்த நிலையில் இறையைச் சார்ந்த வண்ணம் ஆகும்.

  இவ்விரு வகை சார்புகளுள் இறைச் சார்பே ேமலானது. ஏனென்றால் இறைச் சார்பு இன்பம் தருவது. உலக சார்பு / மாயா மலத்தின் சார்பு துன்பம் தருவது. உலக சார்பு உடைய உயிர்கள் அவற்றின் பற்றுக் கொண்டு அவ்வனுபவங்களை சுமை என்று உணராது சுகமெனக் கருதும். இப்பாரம் குறையக்குறைய இறைவனை அணையும் ஆசை மிகும். அதுவரை ஆணவத்தோடு ஒன்றித்து நின்று அறிவிழந்த உயிர் அதன் கண் உவர்ப்படைந்து விட்டு பின்னர் மெஞ்ஞானத்தை தாணுவினோடு ஒன்றித்து நிற்கத்தலைப்படும். இதனை காளத்தி மலையை கண்டு அதனை அணுகி செல்லும் தோறும் தம்மேல் உள்ள பாரம் குறைவது போல அனுபவம்உண்டானதாக கண்ணப்பர் (பெ,பு, 97) கூறுவதால் அறியலாம். கட்டு நிலையில் உயிர்கள் வினைகளை செய்யும் அதன் பலன்களையும் துய்க்கும்.இறைவனிடம் அன்பு கொள்ளும் ேபாது ( இறைவழிபாட்டில்) பாரம் குறைவது போல் உணர காரணமாவதை அறியலாம்.

 அவ் உயிர்களின் வினைகளையும் பலன்களையும் இறைவன் ஏற்றுக் கொள்வான். எனவே அவனை எடுத்து சுமப்பான் ( திருவருட்பா 65) என்பார் உமாபதி சிவம்.

   உயிர் சார்ந்ததன் வண்ணமாம் தன்மையுடையது என்பது சைவ சித்தாந்த கோட்பாடு. 

   அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்

  அன்பே சிவமாவது யாரும்அறிகிலார் ..... என்ற திருமந்திரம் கூறியபடி அன்புதான்

சிவம்/  சிவனைச் சார்ந்த சீவனான  உயிர்கள் அவனது உருவமாகிய அன்பு உருவ மானதை உணர்த்தும்.

திருச்சிற்றம்பலம்


திருமுறைகளை பாராயணம் செய்வோம்!

 திருமுறைகளை பாராயணம் செய்வோம்!   சிவன் அருள் பெறுவோம்!


சைவத்துக்கு பொதுநூல் ேவதம், சிறப்பு நூல் ஆகமம் எனவும் கொள்ளப்படுகின்றது. இவை இறைவனால் அருளப்பட்டவை. சைவத்தின் முழுமுதற்கடவுள் சிவ பெருமான். திருமுறைகள் தமிழ் வேதம் என போற்றப்படுகின்றன. சிவபெருமான் திரு அருளைப்பெற்ற திருவட் செல்வரகளால் சிவபெருமான் உள் நின்று உணர்த்திப் பாடப்பட்ட தெய்வத் திரு நூல்களே திருமுறைகளாக வகுக்கப்பெற்றுள்ளன. இத்திருமுறைகள் பன்னிரண்டாகும்.

  ஆலயங்களிலும், வீடுகளிலும், மற்ற இடங்களிலும் கடவுள் வழிபாட்டின் போது இத்திருமுறை பாடல்களைப் பாடி பரவுவது சைவ மரபாகும். பன்னிரு திருமுறைகளிலும் அடங்கும் தோத்திரப்பாடல்கள் பிரணவ மயமானவை. தமிழ் வேதமாக விளங்குகின்ற திருமுறைப்பாடல்களுடன் வேறு எந்த பாடல்களையும் ேசர்த்து பாடக்கூடாது என்பது சிவ பரம்பொருளின் திருவுள்ளக் கிடக்கை என ஆன்றோர் கருத்து.

   திருமுறை பாடல்களை பாட தொடங்கும் முன்னும், பாடி முடித்த பின்னும் திருச்சிற்றம்பலம் என்ற மந்திரம் ஓதப்படவேண்டும்.திருமுறைகளில் உள்ள அனைத்து பாடல்பதியங்களையும் பாட இயலாததால் தேவாரம் திருவாசகம், திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தொண்டர்புராணம் என்ற ஒழுங்கு முறையில் பஞ்சபுராணம் ஓதப்படுதல் வேண்டும்.

   திருமுறைப்பாடல்களை இறைவனை நினைந்து மனமுருகி , காதலாகி, கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் நன்னெறிக்கு இட்டுசெல்லப்படுவர் என்பது அனுபூதி மான்களின் முடிவு. திருமுறைகள் பண்ணாடும் பக்தியோடும் பாடப்படவேண்டும் என்பது அருளாளர்களின் கருத்து.

      பரம்பொருளாகிய சிவபெருமானை வாழ்த்தித் துதிப்பனவாகவும், அப்பெருமானின் பெருமை சிறப்பு என்பவற்றை போற்றுதல் செய்வனவாகும். சைவ சமய உண்மைகளை நிலை நிறுத்துவனவாகவும் பக்தியையும் தெய்வீகத்தையும் வளர்ப்பனவாகவும் ஓதி உஉணர்வர்களை உய்விப்பனவாகவும் மந்திரம், தந்திரம், மருந்து என மூன்றுமாய் விளங்கித் தீராத நோய் தீர்த்த தருளும் தன்மையானவை யாகவும் விளங்கும் அருள்நூல்கள் திருமுறைகள். 

        இறைவன் ஒருவனே, அந்த ஒருவன் சிவனே, அவனோடு ஒக்கும் தெய்வம் வேறொன்றும் இல்லை. சிவபெருமானே முழு முதற்கடவுள். அப்பெருமான் திருவருட் சக்தியுடன் இணைந்து ஒரு பொருளாகவே உள்ளான். அன்பு நீதி உண்மை, செம்மை, அருள், ஞானம் என்பவற்றை அதிட்டித் நிற்கும் சிவம்.  அவற்றின்றும் பிரிவிலா ஒரு பொருள் ஆக உள்ளது. எல்லா உயிர்கள் மீதும் அளப்பெரும் கருணை கொண்ட சிவபெருமான் அவைகளி்ன் ஈடேற்றத்தின் பொருட்டு ஐந்தொழில் செய்கிறான்.

  அப்பெருமானின் மறைமொழி திருவைந்தெழுத்தான நமசிவாய என்ற மந்திரமும். சிவ சின்னங்கள் திருநீறு, உருத்திராட்சமும், சிவனடியார் பெருமை சொல்லலும் பெரிதே. அப்பெருமானிடம் சேர்ப்பிக்கும்  நால்வகை நெறியான சரியை,, கிரியை, யோகம், ஞானம் என்ற நெறிகளை அறிவிப்பது திருமுறைகள் என்பதை நாம் அறிந்து மனிப்பிறப்பு எடுத்ததின் நோக்கமாகிய கடவுளைட வணங்கி முக்தி இன்பம் பெறுவதலுக்கு உறுதுணையாக விளங்குவது பக்தி இயக்கத்தினை வளர்ப்பதுமான சாதனமான திருமுறைகளை பாராணம் செய்து மீண்டும் பிறவா நெறி அடைந்து நல்வாழ்வு வாழ்வோமாக!

திருச்சிற்றம்பலம்




வெள்ளி, 17 டிசம்பர், 2021

திருவாதிரை நோன்பு

 திருவாதிரை


திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர்.

ஆருத்ரா தரிசனம்

மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் மற்றும் ஆரூர் கோயில் கொண்டருளிய நடராஜப் பெருமானைமற்றும் தியாகராஜர் பெருமான் தரிசக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.


மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்புகள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் மற்றும் திருவாரூர் நடப்பது மிகவும் சிறப்புடையது. திருவாதிரை தினத்தில்் தியாகராஜ சுவாமி வட பாத தரிசனம் காட்டப்படும். திருவாதிரை தினததில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.இதை ஆருத்ரா தரிசனம் செய்வதற்காக செல்வர். ஆருத்ரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல். இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க பிறநாடுகளில் இருந்து அடியார் கூட்டம் தொன்று தொட்டு இங்கு செல்வது வழக்கம். திருவாரூர் பஞ்சபூத தலத்தில்் பூமி தலமாக இருக்கிறது் பிறந்தாலும் பேசினாலும்் முக்தி தரும் தலம், சிதமபரம் பஞ்சபூதத தலஙகளில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முத்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.


சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. சைவர்களுக்கு மட்டுமல்லாமல் வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியதாகும். சுவர்க்க வாயிலில் ஏகாதசி விரதம் இம்மாத்திலேயே கடைப்பிடிக்கப்படுகின்றது. கண்ணன் கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று கூறியுள்ளார். ஆண்டாளும் தனது திருப்பாவையில் மார்கழி மாதத்து மதி நிறைந்த நன்னாள் என வர்ணிக்கின்றாள். இதனை சிறப்புடைய மார்கழி மாதத்து ஆதிரை நாள் என்று அழைக்கப்படும்.

மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் கடைப்பிடிப்பதால் திருவாதிரை திருவிழா என போற்றப்படுகின்றது. 2021 டிசம்பர் 19ஆம் தேதி திருவாதிரை நட்சத்திரம் தொடங்கி 20ஆம் தேதி இரவு 7.50 வரை நீடிக்கின்றது.


இதன் காரணமாக சிவாலயங்களில் உள்ள நடராஜருக்கு ஆருத்ரா அபிஷேகம் நடப்பெறும். ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.


இதை முன்னிட்டு உத்திரகோச மங்கை திருக்கோயிலில் இருக்கும் நடராஜருக்கு (மார்கழி 4) டிசம்பர் 19ஆம் தேதி சந்தன காப்பு களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மகா அபிஷேகமும், டிசம்பர் 20 காலை ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.

ஆருத்ரா தரிசன பலன்கள் :


ஈசனின் ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம். உத்திரகோசமங்கை திருத்தலத்தில் இருக்கும் மரகத நடராஜரை தரிசிக்க இம்மையிலும் நன்மை தருவார். பிறவிப்பிணி தீரும் என்பது நம்பிக்கை.


ஆருத்ரா தரிசனம் 2021: சிதம்பரம், உத்திரகோசமங்கை திருக்கோயிலில் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். 

சிவபெருமானின் ரூபத்தை பெரும்பாலான சிவாலயங்களில் சிவ லிங்கமாக தான் காட்சி தருவது வழக்கம். ஆனால் சில சிவாலயங்களில் இருக்கும் சிவனின் நடராஜர் ரூபம் மிக சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.




அப்படி நடராஜர் ஸ்வாமிக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை மட்டுமே சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படும். அந்த சிறப்பு வாய்ந்த நாளில் மிக முக்கிய நாளாக ஆருத்ரா அபிஷேப் பெருவிழா ஆண்டு தோறும் மார்கழி மாதம் கொண்டாடப்படுகின்றது.




சிவாலயங்களில் மிக முக்கியமாக பஞ்ச சபைகளான


1. திருவாலங்காடு -இரத்தின சபை


2. சிதம்பரம் - கனக சபை


3. மதுரை -ரஜித சபை (வெள்ளி அம்பலம்)


4. திருநெல்வேலி - தாமிர சபை


5. திருக்குற்றாலம் - சித்திர சபை


குறிப்பாக இந்த ஐந்து சபைகளில் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருவது வழக்கம்.

ஆனந்தத் தாண்டவமாடிய கனகசபை சிதம்பரம், திருஆலங்காடு திருத்தலத்தில் ஊர்த்துவத் தாண்டவமாடிய ரத்தினசபை, மதுரையில் பாண்டியனின் வேண்டுதலுக்காக இடக்கால் மாறி ஆடிய வெள்ளிசபை திருஆலவாய், நெல்லையில் தாமிர சபை , குற்றாலத்தில் சித்திர சபை ஆகிய பஞ்ச சபைகளிலும் ஆருத்ரா அபிஷேகம், தரிசனமும் வெகு சிறப்பாக நடைபெறும்.

திருவாதிரை நாளில் உளுந்து மாவினால் செய்த களி நெய்வேத்தியமாகப் படைக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்படுகிறது. 'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி ' என இதனை தென் தமிழகத்தின் சொலவடையில் பதிவு செய்துள்ளனர்

திருச்சிற்றம்பலம்