திங்கள், 30 ஜனவரி, 2017

சிவனடியார்கள் / அப்பூதி அடிகள் நாயன்மார்

சிவனடியார்கள் / அப்பூதி அடிகள் நாயன்மார்
குரு பூஜை நாள்: தை மாதம் சதயம் நட்சததிரம் (30/1,2017 திங்கட் கிழமை)

சோழமண்டலத்திலே, திங்களுரிலே பிராமணகுலத்திலே, பாவங்கள் என்று சொல்லப்பட்டவைகள் எல்லாவற்றையும் நீக்கினவரும், புண்ணியங்களென்று சொல்லப்படவைகளெல்லாவற்றையும் தாங்கினவரும், கிருகஸ்தாச்சிரமத்தையுடையவரும், சிவபத்தி அடியார்பத்திகளிற் சிறந்தவருமாகிய அப்பூதியடிகணாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவானுபூதிமானாகிய திருநாவுக்கரசுநாயனாருடைய மகிமையைக் கேள்வியுற்று, அவர்மேலே மிக அன்பு கூர்ந்து, தம்முடைய வீட்டினுள்ள அளவைகள் தராசுகள் பிள்ளைகள் பசுக்கள் எருமைகள் முதலிய எல்லாவற்றிற்கும் இந்நாயனாருடைய பெயரையே சொல்லிவருவார். இன்னும் அவர் மேலாசையினாலே, திருமடங்கள் தண்ணீர்ப்பந்தர்கள் குளங்கள் திருநந்தனவனங்கள் முதலியனவற்றை அந்நாயனார் பெயரினாற் செய்து கொண்டிருந்தார்.
இருக்குநாளிலே, அத்திருநாவுக்கரசு நாயனார் திருப்பழனமென்னும் ஸ்தலத்தை வணங்கிக்கொண்டு பிறதலங்களையும் வணங்கும்பொருட்டு, அந்தத் திங்களுருக்குச் சமீபமாகிய வழியிலே செல்லும்பொழுது, ஒரு தண்ணீர்ப்பந்தரை அடைந்து, திருநாவுக்கரசுநாயனார் என்னும் பெயர் எங்கும் எழுதப் பட்டிருத்தலைக் கண்டு, அங்கு நின்றவர்கள் சிலரை நோக்கி, "இந்தத் தண்ணீர்ப்பந்தரை இப்பெயரிட்டுச் செய்தவர்யாவர்" என்று வினாவ; அவர்கள் "இப்பந்தரைமாத்திரமன்று, இவ்விடத்தெங்கும் உள்ள அறச்சாலைகள், குளங்கள், திருநந்தனவனங்களெல்லாவற்றையும் அப்பூதியடிகணாயனாரென்பவர் இத்திருநாவுக்கரசுநாயனார் என்னும் பெயரலேயே செய்தனர்" என்றார்கள். அதைத் திருநாவுக்கரசு நாயனார் கேட்டு, "இங்ஙனஞ் செய்தற்குக் காரணம் யாதோ" என்று நினைந்து, அவர்களை நோக்கி, "அவர் எவ்விடத்தில், இருக்கின்றவர்" என்று வினாவ; "அவர் இவ்வூரவரே இப்பொழுதுதான் வீட்டுக்குப்போகின்றார், அவ்வீடும் தூரமன்று சமீபமே" என்றார்கள். உடனே திருநாவுக்கரசுநாயனார் அப்பூதியடிகணாயனாருடைய வீட்டுத்தலைக்கடைவாயிலிற் செல்ல, உள்ளிருந்த அப்பூதிநாயனார் சிவனடியார் ஒருவர் வாயிலில் வந்து நிற்கின்றார் என்று கேள்வியுற்று விரைந்து சென்று, அவருடைய திருவடிகளிலே நமஸ்கரிக்க; அவரும் வணங்கினார். அப்பூதிநாயனார் "சுவாமீ! தேவரீர் இவ்விடத்திற்கு எதுபற்றி எழுந்தருளினீர்" என்று வினாவ; திருநாவுக்கரசு நாயனார் 'நாம் திருப்பழனத்தை வணங்கிக்கொண்டு வரும்பொழுது, வழியிலே நீர் வைத்த தண்ணீர்ப்பந்தரைக் கண்டும் அப்படியே நீர் செய்திருக்கின்ற பிறதருமங்களைக்கேட்டும்' உம்மைக் காண விரும்பி, இங்கே வந்தோம்" என்று சொல்லி, பின்பு, "சிவனடியார்கள் பொருட்டு நீர் வைத்த தண்ணீர்ப்பந்தரிலே உம்முடைய பெயரை எழுதாது வேறொருபெயரை எழுதியதற்குக் காரணம் யாது" என்று வினாவ; அப்பூதிநாயனார் "நீர் நல்லவார்த்தை அருளிச்செய்திலீர், பாதகர்களாகிய சமணர்களோடு கூடிப் பல்லவராஜன் செய்த விக்கினங்களைச் சிவபத்தி வலிமையினாலே ஜயித்த பெருந்தொண்டரது திருப்பெயரோ வேறொருபெயர்" என்று கோபித்து, பின்னும், பரமசிவனுக்குத் திருத்தொண்டு செய்தலாலே இம்மையினும் பிழைக்கலாம் என்பதை என்போலும் அறிவிலிகளும் தெளியும் பொருட்டு அருள்புரிந்த திருநாவுக்கரசுநாயனாருடைய திருப்பெயரை நான் எழுத, நீர் இந்தக் கொடுஞ்சொல்லை நான் கேட்கும்படி சொன்னீர். கற்றோணியைக்கொண்டு கடல்கடந்த அந்த நாயனாருடைய மகிமையை இவ்வுலகத்திலே அறியாதார் யாருளர்! நீர் சிவவேடத்தோடு நின்று இவ்வார்த்தை பேசினீர். நீர் எங்கே இருக்கிறவர்? சொல்லும்" என்றார்.
திருநாவுக்கரசுநாயனார் அவ்வப்பூதியடிகளுடைய அன்பை அறிந்து, "ஆருகதசமயப் படுகுழியினின்றும் ஏறும் பொருட்டுப் பரமசிவன் சூலைநோயை வருவித்து ஆட்கொள்ளப்பெற்ற உணர்வில்லாத சிறுமையேன் யான்" என்று அருளிச்செய்தார். உடனே அப்பூதிநாயனார், இரண்டு கைகளும் சிரசின்மேலே குவிய, கண்ணீர் சொரிய, உரை தடுமாற, உரோமஞ்சிலிர்ப்ப, பூமியிலே விழுந்து திருநாவுக்கரசுநாயனாருடைய ஸ்ரீபாதாரவிந்தங்களைப் பூண்டார். திருநாவுக்கரசுநாயனார் அப்பூதியடிகளை எதிர்வணங்கி எடுத்தருள, அப்பூதியடிகள் மிகக் களிப்படைந்து கூத்தாடினார்; பாடினார்; சந்தோஷமேலீட்டினால் செய்வது இன்னது என்று அறியாமல், வீட்டினுள்ளே சென்று, மனைவியாருக்கும் பிள்ளைகளுக்கும், பிறசுற்றத்தார்களுக்கும் திருநாவுக்கரசுநாயனார் எழுந்தருளிவந்த சந்தோஷ சமாசாரத்தைச் சொல்லி, அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, நாயனாரை வணங்கும்படி செய்து, அவரை உள்ளே எழுந்தருளுவித்து, பாதப்பிரக்ஷாளனஞ் செய்தார். அங்ஙனம் செய்த தீர்த்தத்தை அவர்களெல்லாரும் தங்கண்மேலே தெளித்து, உள்ளும் பூரித்தார்கள். நாயனாரை ஆசனத்தில் இருத்தி, விதிப்படி அருச்சனை செய்து, "சுவாமீ, தேவரீர் இங்கே திருவமுது செய்தருளல் வேண்டும்" என்று பிரார்த்திக்க; அவரும் அதற்கு உடன்பட்டருளினார். அப்பூதிநாயனார் திருவமுது சமைப்பித்து, தங்கள் புத்திரராகிய மூத்ததிருநாவுக்கரசை வாழைக் குருத்து அரிந்துகொண்டு வரும்பொருட்டு அனுப்ப; அவர் விரைந்து தோட்டத்திற்சென்று, வாழைக் குருத்து அரியும்பொழுது, ஒரு பாம்பு அவருடைய கையிலே தீண்டி, அதனைச் சுற்றிக்கொண்டது. அவர் அதை உதறிவீழ்ந்து, பதைப்புடனே அது பற்றிய வேகத்தினாலே வீழுமுன் கொய்த குருத்தை வேகத்தோடு கொண்டோடி வந்து, விஷம் முறையே ஏறித்தலைக்கொண்ட ஏழாம்வேகத்தினாலே பல்லுங் கண்ணும் சரீரமும் கருகித் தீய்ந்து உரை குழறி மயங்கி, குருத்தைத் தாயார்கையில் நீட்டி, கீழே விழுந்து இறந்தார். அதுகண்டு, தந்தையாரும் தாயாரும் "ஐயோ! இது தெரிந்தால் இனி நாயனார் திருவமுது செய்யாரே" என்று துக்கித்து, சவத்தை வீட்டுப் புறத்து முற்றத்தின் ஓர்பக்கத்திலே பாயினால் மறைத்து வைத்துவிட்டு அப்பமூர்த்தியிடத்திற்சென்று "சுவாமி, எழுந்து வந்து திருவமுது செய்தருளவேண்டும்" என்று பிரார்த்தித்தார்கள் அப்பமூர்த்தி எழுந்து கைகால் சுத்தி செய்துகொண்டு, வேறோராசனத்தில் இருந்து, விபூதி தரித்து, அப்பூதிநாயனாருக்கும் அவர் மனைவியாருக்கும் விபூதி கொடுத்து; புதல்வர்களுக்கும் கொடுக்கும்போது, அப்பூதிநாயனாரை நோக்கி "நாம் இவர்களுக்கு முன்னே விபூதி சாத்தும்படி உம்முடைய சேட்டபுத்திரரை வருவியும்" என்றார். அப்பூதிநாயனார் "இப்போது அவன் இங்கே உதவான்" என்றார். அப்பமூர்த்தி அதைக் கேட்டவுடனே சிவபிரானுடைய திருவருளினாலே தம்முடைய திருவுள்ளத்திலே ஒரு தடுமாற்றத் தோன்ற, அப்பூதிநாயனாரை நோக்கி, "அவன் என்செய்தான்? உண்மை சொல்லும்" என்றார். அப்பூதிநாயனார் அஞ்சி நடுங்குற்று, வணங்கி நின்று, நிகழ்ந்த சமாசாரத்தை விண்ணப்பஞ்செய்தார். அப்பமூர்த்தி அதைக்கேட்டு, "நீர் செய்தது நன்றாயிருக்கின்றது; இப்படி வேறியார் செய்தார்" என்று சொல்லிக்கொண்டு எழுந்து, சிவாலயத்துக்குமுன் சென்று சவத்தை அங்கே கொணர்வித்து, விஷத்தை நீக்கியருளும் பொருட்டுப் பரமசிவன்மேலே திருப்பதிகம்பாடினார். உடனே அப்புத்திரர் உயிர்பெற்று எழுந்து; அப்பமூர்த்தியுடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரிக்க; அப்பமூர்த்தி விபூதி கொடுத்தருளினார். அப்பூதிநாயனாரும் மனைவியாரும் தங்கள் புத்திரா பிழைத்தமையைக் கண்டும் அதைக்குறித்துச் சந்தோஷியாமல், நாயனார் திருவமுதுசெய்யாதிருந்தமையைக் குறித்துச் சிந்தை நொந்தார்கள். அப்பமூர்த்தி அதனை அறிந்து, அவர்களோடும் வீட்டிற்சென்று, அப்பூதி நாயனாரோடும் அவர் புத்திரர்களோடும் ஒருங்கிருந்து திருவமுது செய்தருளினார். அப்படியே சிலநாள் அங்கிருந்து, பின் திருப்பழனத்திற்குப் போயினார்.
அப்பூதியடிகள் சைவசமயாசாரியராகிய திருநாவுக்கரச நாயனாருடைய திருவடிகளைத் துதித்தலே தமக்குப் பெருஞ் செல்வமெனக்கொண்டு வாழ்ந்திருந்து, சிலகாலஞ் சென்றபின் பரமசிவனுடைய திருவடிகளை அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்

சிவனடியார்கள் / அப்பூதி அடிகள் நாயன்மார்

சிவனடியார்கள் / அப்பூதி அடிகள் நாயன்மார்
குரு பூஜை நாள்: தை மாதம் சதயம் நட்சததிரம் (30/1,2017 திங்கட் கிழமை)

சோழமண்டலத்திலே, திங்களுரிலே பிராமணகுலத்திலே, பாவங்கள் என்று சொல்லப்பட்டவைகள் எல்லாவற்றையும் நீக்கினவரும், புண்ணியங்களென்று சொல்லப்படவைகளெல்லாவற்றையும் தாங்கினவரும், கிருகஸ்தாச்சிரமத்தையுடையவரும், சிவபத்தி அடியார்பத்திகளிற் சிறந்தவருமாகிய அப்பூதியடிகணாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவானுபூதிமானாகிய திருநாவுக்கரசுநாயனாருடைய மகிமையைக் கேள்வியுற்று, அவர்மேலே மிக அன்பு கூர்ந்து, தம்முடைய வீட்டினுள்ள அளவைகள் தராசுகள் பிள்ளைகள் பசுக்கள் எருமைகள் முதலிய எல்லாவற்றிற்கும் இந்நாயனாருடைய பெயரையே சொல்லிவருவார். இன்னும் அவர் மேலாசையினாலே, திருமடங்கள் தண்ணீர்ப்பந்தர்கள் குளங்கள் திருநந்தனவனங்கள் முதலியனவற்றை அந்நாயனார் பெயரினாற் செய்து கொண்டிருந்தார்.
இருக்குநாளிலே, அத்திருநாவுக்கரசு நாயனார் திருப்பழனமென்னும் ஸ்தலத்தை வணங்கிக்கொண்டு பிறதலங்களையும் வணங்கும்பொருட்டு, அந்தத் திங்களுருக்குச் சமீபமாகிய வழியிலே செல்லும்பொழுது, ஒரு தண்ணீர்ப்பந்தரை அடைந்து, திருநாவுக்கரசுநாயனார் என்னும் பெயர் எங்கும் எழுதப் பட்டிருத்தலைக் கண்டு, அங்கு நின்றவர்கள் சிலரை நோக்கி, "இந்தத் தண்ணீர்ப்பந்தரை இப்பெயரிட்டுச் செய்தவர்யாவர்" என்று வினாவ; அவர்கள் "இப்பந்தரைமாத்திரமன்று, இவ்விடத்தெங்கும் உள்ள அறச்சாலைகள், குளங்கள், திருநந்தனவனங்களெல்லாவற்றையும் அப்பூதியடிகணாயனாரென்பவர் இத்திருநாவுக்கரசுநாயனார் என்னும் பெயரலேயே செய்தனர்" என்றார்கள். அதைத் திருநாவுக்கரசு நாயனார் கேட்டு, "இங்ஙனஞ் செய்தற்குக் காரணம் யாதோ" என்று நினைந்து, அவர்களை நோக்கி, "அவர் எவ்விடத்தில், இருக்கின்றவர்" என்று வினாவ; "அவர் இவ்வூரவரே இப்பொழுதுதான் வீட்டுக்குப்போகின்றார், அவ்வீடும் தூரமன்று சமீபமே" என்றார்கள். உடனே திருநாவுக்கரசுநாயனார் அப்பூதியடிகணாயனாருடைய வீட்டுத்தலைக்கடைவாயிலிற் செல்ல, உள்ளிருந்த அப்பூதிநாயனார் சிவனடியார் ஒருவர் வாயிலில் வந்து நிற்கின்றார் என்று கேள்வியுற்று விரைந்து சென்று, அவருடைய திருவடிகளிலே நமஸ்கரிக்க; அவரும் வணங்கினார். அப்பூதிநாயனார் "சுவாமீ! தேவரீர் இவ்விடத்திற்கு எதுபற்றி எழுந்தருளினீர்" என்று வினாவ; திருநாவுக்கரசு நாயனார் 'நாம் திருப்பழனத்தை வணங்கிக்கொண்டு வரும்பொழுது, வழியிலே நீர் வைத்த தண்ணீர்ப்பந்தரைக் கண்டும் அப்படியே நீர் செய்திருக்கின்ற பிறதருமங்களைக்கேட்டும்' உம்மைக் காண விரும்பி, இங்கே வந்தோம்" என்று சொல்லி, பின்பு, "சிவனடியார்கள் பொருட்டு நீர் வைத்த தண்ணீர்ப்பந்தரிலே உம்முடைய பெயரை எழுதாது வேறொருபெயரை எழுதியதற்குக் காரணம் யாது" என்று வினாவ; அப்பூதிநாயனார் "நீர் நல்லவார்த்தை அருளிச்செய்திலீர், பாதகர்களாகிய சமணர்களோடு கூடிப் பல்லவராஜன் செய்த விக்கினங்களைச் சிவபத்தி வலிமையினாலே ஜயித்த பெருந்தொண்டரது திருப்பெயரோ வேறொருபெயர்" என்று கோபித்து, பின்னும், பரமசிவனுக்குத் திருத்தொண்டு செய்தலாலே இம்மையினும் பிழைக்கலாம் என்பதை என்போலும் அறிவிலிகளும் தெளியும் பொருட்டு அருள்புரிந்த திருநாவுக்கரசுநாயனாருடைய திருப்பெயரை நான் எழுத, நீர் இந்தக் கொடுஞ்சொல்லை நான் கேட்கும்படி சொன்னீர். கற்றோணியைக்கொண்டு கடல்கடந்த அந்த நாயனாருடைய மகிமையை இவ்வுலகத்திலே அறியாதார் யாருளர்! நீர் சிவவேடத்தோடு நின்று இவ்வார்த்தை பேசினீர். நீர் எங்கே இருக்கிறவர்? சொல்லும்" என்றார்.
திருநாவுக்கரசுநாயனார் அவ்வப்பூதியடிகளுடைய அன்பை அறிந்து, "ஆருகதசமயப் படுகுழியினின்றும் ஏறும் பொருட்டுப் பரமசிவன் சூலைநோயை வருவித்து ஆட்கொள்ளப்பெற்ற உணர்வில்லாத சிறுமையேன் யான்" என்று அருளிச்செய்தார். உடனே அப்பூதிநாயனார், இரண்டு கைகளும் சிரசின்மேலே குவிய, கண்ணீர் சொரிய, உரை தடுமாற, உரோமஞ்சிலிர்ப்ப, பூமியிலே விழுந்து திருநாவுக்கரசுநாயனாருடைய ஸ்ரீபாதாரவிந்தங்களைப் பூண்டார். திருநாவுக்கரசுநாயனார் அப்பூதியடிகளை எதிர்வணங்கி எடுத்தருள, அப்பூதியடிகள் மிகக் களிப்படைந்து கூத்தாடினார்; பாடினார்; சந்தோஷமேலீட்டினால் செய்வது இன்னது என்று அறியாமல், வீட்டினுள்ளே சென்று, மனைவியாருக்கும் பிள்ளைகளுக்கும், பிறசுற்றத்தார்களுக்கும் திருநாவுக்கரசுநாயனார் எழுந்தருளிவந்த சந்தோஷ சமாசாரத்தைச் சொல்லி, அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, நாயனாரை வணங்கும்படி செய்து, அவரை உள்ளே எழுந்தருளுவித்து, பாதப்பிரக்ஷாளனஞ் செய்தார். அங்ஙனம் செய்த தீர்த்தத்தை அவர்களெல்லாரும் தங்கண்மேலே தெளித்து, உள்ளும் பூரித்தார்கள். நாயனாரை ஆசனத்தில் இருத்தி, விதிப்படி அருச்சனை செய்து, "சுவாமீ, தேவரீர் இங்கே திருவமுது செய்தருளல் வேண்டும்" என்று பிரார்த்திக்க; அவரும் அதற்கு உடன்பட்டருளினார். அப்பூதிநாயனார் திருவமுது சமைப்பித்து, தங்கள் புத்திரராகிய மூத்ததிருநாவுக்கரசை வாழைக் குருத்து அரிந்துகொண்டு வரும்பொருட்டு அனுப்ப; அவர் விரைந்து தோட்டத்திற்சென்று, வாழைக் குருத்து அரியும்பொழுது, ஒரு பாம்பு அவருடைய கையிலே தீண்டி, அதனைச் சுற்றிக்கொண்டது. அவர் அதை உதறிவீழ்ந்து, பதைப்புடனே அது பற்றிய வேகத்தினாலே வீழுமுன் கொய்த குருத்தை வேகத்தோடு கொண்டோடி வந்து, விஷம் முறையே ஏறித்தலைக்கொண்ட ஏழாம்வேகத்தினாலே பல்லுங் கண்ணும் சரீரமும் கருகித் தீய்ந்து உரை குழறி மயங்கி, குருத்தைத் தாயார்கையில் நீட்டி, கீழே விழுந்து இறந்தார். அதுகண்டு, தந்தையாரும் தாயாரும் "ஐயோ! இது தெரிந்தால் இனி நாயனார் திருவமுது செய்யாரே" என்று துக்கித்து, சவத்தை வீட்டுப் புறத்து முற்றத்தின் ஓர்பக்கத்திலே பாயினால் மறைத்து வைத்துவிட்டு அப்பமூர்த்தியிடத்திற்சென்று "சுவாமி, எழுந்து வந்து திருவமுது செய்தருளவேண்டும்" என்று பிரார்த்தித்தார்கள் அப்பமூர்த்தி எழுந்து கைகால் சுத்தி செய்துகொண்டு, வேறோராசனத்தில் இருந்து, விபூதி தரித்து, அப்பூதிநாயனாருக்கும் அவர் மனைவியாருக்கும் விபூதி கொடுத்து; புதல்வர்களுக்கும் கொடுக்கும்போது, அப்பூதிநாயனாரை நோக்கி "நாம் இவர்களுக்கு முன்னே விபூதி சாத்தும்படி உம்முடைய சேட்டபுத்திரரை வருவியும்" என்றார். அப்பூதிநாயனார் "இப்போது அவன் இங்கே உதவான்" என்றார். அப்பமூர்த்தி அதைக் கேட்டவுடனே சிவபிரானுடைய திருவருளினாலே தம்முடைய திருவுள்ளத்திலே ஒரு தடுமாற்றத் தோன்ற, அப்பூதிநாயனாரை நோக்கி, "அவன் என்செய்தான்? உண்மை சொல்லும்" என்றார். அப்பூதிநாயனார் அஞ்சி நடுங்குற்று, வணங்கி நின்று, நிகழ்ந்த சமாசாரத்தை விண்ணப்பஞ்செய்தார். அப்பமூர்த்தி அதைக்கேட்டு, "நீர் செய்தது நன்றாயிருக்கின்றது; இப்படி வேறியார் செய்தார்" என்று சொல்லிக்கொண்டு எழுந்து, சிவாலயத்துக்குமுன் சென்று சவத்தை அங்கே கொணர்வித்து, விஷத்தை நீக்கியருளும் பொருட்டுப் பரமசிவன்மேலே திருப்பதிகம்பாடினார். உடனே அப்புத்திரர் உயிர்பெற்று எழுந்து; அப்பமூர்த்தியுடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரிக்க; அப்பமூர்த்தி விபூதி கொடுத்தருளினார். அப்பூதிநாயனாரும் மனைவியாரும் தங்கள் புத்திரா பிழைத்தமையைக் கண்டும் அதைக்குறித்துச் சந்தோஷியாமல், நாயனார் திருவமுதுசெய்யாதிருந்தமையைக் குறித்துச் சிந்தை நொந்தார்கள். அப்பமூர்த்தி அதனை அறிந்து, அவர்களோடும் வீட்டிற்சென்று, அப்பூதி நாயனாரோடும் அவர் புத்திரர்களோடும் ஒருங்கிருந்து திருவமுது செய்தருளினார். அப்படியே சிலநாள் அங்கிருந்து, பின் திருப்பழனத்திற்குப் போயினார்.
அப்பூதியடிகள் சைவசமயாசாரியராகிய திருநாவுக்கரச நாயனாருடைய திருவடிகளைத் துதித்தலே தமக்குப் பெருஞ் செல்வமெனக்கொண்டு வாழ்ந்திருந்து, சிலகாலஞ் சென்றபின் பரமசிவனுடைய திருவடிகளை அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்

சனி, 28 ஜனவரி, 2017

திருக்கோகர்ணம் (கோகர்ணா) கோயில்

தேவாரப் பாடல் பெற்றதிருத்தலங்கள்
திருக்கோகர்ணம் (கோகர்ணா) கோயில் 



ஸ்தல வரலாறு

திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில் பாடல் பெற்ற துளுவ நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் கைலையிலிருந்து இராவணன் கொண்டுவந்தது என்பது தொன்நம்பிக்கை. இராவணன் எடுக்க முயலும் போது அந்த சிவலிங்கம் பசுவின் காது போல குழைந்ததால் கோகர்ணம் என்ற பெயர் பெற்றது. ("கோ" = பசு, "கர்ணம்" = காது)

இறைவர் திருப்பெயர்: மகாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: கோகர்ணேஸ்வரி, தாம்ரகௌரி.
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்: இராவணன், பிரமன், அகத்தியர், காமதேனு, மார்க்கண்டேயர், சரஸ்வதி, வசிட்டர், நாகராசன் 

தல வரலாறு

கோ - பசு, கர்ணம் - காது. சுவாமி பசுவின் காதுபோலக் குழைந்து காணப்படுவதால் இத்தலம் இப்பெயரைப் பெற்றது. இதற்கு ருத்ரயோனி, வருணாவர்த்தம் முதலிய பெயர்களும் உண்டு.

இலங்கை வேந்தன் இராவணன் கயிலைமலை சென்று சிவபிரானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான். சிவபிரான் உமையம்மையோடு காட்சித்தந்து வேண்டுவன யாது, என வினவினார். இராவணன் இலங்கை அழியாதிருக்க அருளவேண்டும் என்றான். அதற்கிசைந்த பெருமான் இராவணன் கையில் பிராணலிங்கத்தைக் கொடுத்து இதனை இலங்கைக்கு எடுத்துச் சென்று பிரதிட்டை செய்து வழிபட்டு வந்தால் இலங்கை அழியாது; இச்சிவலிங்கத்தைத் தலையில் சுமந்து செல்லவேண்டும், வழியில் இதனைக் கீழே வைத்தால் எடுக்கவாராது என அருளி மறைந்தார். இராவணன் பிராணலிங்கத்தைச் சிரவில் சுமந்து இலங்கை நோக்கிச் சென்றான். நாரதர் மூலம் இதனை அறிந்த இந்திரன் பிராண லிங்கத்தை இராவணன் பிரதிட்டை செய்துவிட்டால் இராவணன் அழியான், தேவர்கள் துயர்நீங்காது என எண்ணித் தேவர்கள் புடைசூழ கயிலைமலை சென்று விநாயகரை வேண்டினான். இந்திரனின் வேண்டுகோளை ஏற்ற விநாயகர் இராவணன் கோகரணத்தை அடையும் வேளையில் அவன் வயிற்றில் நீர்சுரக்குமாறு செய்ய வருணனை ஏவிவிட்டு, ஒரு சிறுவன் போல அவன்முன் தோன்றி நின்றார். இராவணன் வந்த அந்தச் சிறுவனை நோக்கிச் சிவலிங்கத்தை அச்சிறுவன் கையில் கொடுத்துச் சிறுநீர் கழித்து வருமளவும் அதனைக் கையில் வைத்துக்கொண்டு நிற்குமாறு வேண்டினான். சிறுவனாக வந்த விநாயகர், இராவணனை நோக்கி என்னால் சுமைபொறுக்க இயலாத நேரத்தில் மூன்றுமுறை உன்னை அழைப்பேன் அதற்குள் வராவிட்டால் நிலத்தில் வைத்துவிடுவேன் என அருளினார். இராவணனும் இசைந்து சென்றான். நெடுநேரம் ஆகியும் அவன் வராதரால் மூன்றுமுறை, அழைத்து சிவலிங்கத்தைப் பூமியில் வைத்துவிட்டார். இராவணன் வந்து சிவலிங்கத்தை இருபது கரங்களாலும் எடுக்க முயன்றான். பெருமான் பசுவின் காதுபோலக் குழைந்து காட்டினார். இராவணன், மகாபலம் உடையவர் இவ்விறைவர் எனக் கூறி அந்த அந்தணச்சிறுவன் செய்த தவறுக்காக மூன்றுமுறை அவனது தலையில் குட்டினான். சிறுவனாக வந்த விநாயகர் தம் உண்மை வடிவை அவனுக்குக் காட்டிப் பந்துபோல அவனைத் தூக்கி எறிந்து விளையாடினார். இராவணன் பிழைபொறுக்க வேண்டினான். விநாயகர், உன் தலையில் இவ்வாறே மூன்றுமுறை குட்டிக்கொள் என்று கூறினார். இராவணன் தான் செய்த பிழைக்கு வருந்திக் குருதிசோரத் தலையில் குட்டிக் கொண்டு அவரை வழிபட்டு அருள் பெற்றான். விநாயகர் சினம் தணிந்து தலையில் குட்டிக்கொண்டு வழிபடுவோருக்கு வேண்டும் வரங்கள் தருவதாகக் கூறி இராவணனின் பிழைகளைப் பொறுத்து அவனுக்கு நல்வரங்கள் தந்தருனி£ர்.

தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - என்றுமரி யானயல வர்க். 
  2. அப்பர்   - சந்திரனுந் தண்புனலுஞ்.


சிறப்புகள்

இத்தலத்தை அப்பர், தாம் அருளிய திருஅங்கமாலையில் வைத்துப் பாடியுள்ளார்.

இத்தலத்தில் சிவலிங்கம் ஒரு கொட்டைப்பாக்கு அளவில் ஆவுடையாரில் அடங்கியிருப்பதைக் காணலாம்.

இத்தலத்து வழக்கப்படி மக்கள் திருமேனியைத் தொட்டி நீராடி மலர்சூட்டி வழிபடலாம்.

கோயிலமைப்பு, தமிழ்நாட்டு அமைப்பினின்றும் வேறானது; கோயில் கடற்கரைக்கு அருகில் உள்ளது.

மூலத்தானம் சிறிய அளவுடையது; நடுவிலுள்ள சதுரமேயில் வட்டமான பீடமுள்ளது, இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பொன்று உள்ளது; இதனைச் சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடமென்பர். இதன் நடுவிலுள்ள வெள்ளை நிறமான உள்ளங்கையளவுள்ள பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம் தென்படுகிறது. தொட்டுப்பார்த்து உணரலாம். பசுவின் காதுபோலக் குழைந்து தோற்றமளிக்கும் அருட்காட்சி நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது.

"துவிபுஜ" விநாயகர் - இவர்முடியில் யானைத் தலையில் இருப்பதுபோல இருபுறமும் மேடும் நடுவில் பள்ளமும் உள்ளது. இஃது இராவணன் குட்டியதால் ஏற்பட்ட பள்ளமென்கின்றனர்.

இத்தலத்தில் உள்ள கோகர்ப்பக்குகை கண்டுகளிக்கத்தக்கது. இங்கு 33 தீர்த்தங்கள் உள்ளன; அவற்றுள் கோகர்ண தீர்த்தம், தாம்ரகௌரிநதி, கோடிதீர்த்தம், பிரமகுண்ட தீர்த்தம் முதலியவை சிறப்புடையவை; இவற்றுள்ளும் சிறப்புடையது கோடி தீர்த்தமாகும்.

இத்தலத்திற்கு வருவோர் முதலில் கோடி தீர்த்தத்தில் நீராடி, பின்பு கடல் நீராடி, பிண்டதர்ப்பணம் செய்து, மீண்டும் நீராடி பிறகு மகாபலேஸ்வரரை வழிபட வேண்டும்.
அமைவிடம் மாநிலம் : கர்நாடகா கர்நாடக மாநிலம் - பெங்களூரிலிருந்தும், மங்களூரிலிருந்தும் பேருந்துகள் செல்கின்றன. சென்னையிலிருந்து இரயில் மூலம் செல்வதாயின், ஹூப்ளி சென்று அங்கிருந்து பேருந்தில் செல்ல வேண்டும்.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு; வை,பூமாலை, சுந்தரபாண்டியம்

ABIRAMI ANTHATHI

Thevaram Thirumurai song lyrics with Tamil Part 1

சிவன் கோவில் தரிசனம் செய்யும் முறை  !!!


 கோவில் என்றால் தரிசிக்கவும், கடவுளிடம் நம் குறைகளை கூறவும் அதானால் ஏற்ப்படும் மன நிறைவும்தான் முக்கியம். இதில் வழிபட ஒரு கட்டமைப்பும், ஒழுங்கு முறையும் நம் முன்னேர்களால் உருவாக்கப் பட்டுள்ளது. அதன்படிதான் ஆகம விதிப்படி கோவில்கள் பழங்காலத்தில் கட்டப் பட்டுள்ளது. அந்தக் கோவில்களை தரிசனம் செய்யும் முறையும் விளக்கப் பட்டுள்ளது. நாம் முதலில் சிவன் கோவில் தரிசனம் செய்யும் முறையை விரிவாக காண்போம். 

சிவன் கோவில் மட்டும் இல்லை எல்லாக் கோவில்களிலும் முதலில் வினாயகரைத்தான் வணங்க வேண்டும்(நம்ம தல இல்லையா). எந்த ஒரு காரியத்திற்கும் மூலமும், நாயகனும் அவரே. அவரின் அனுக்கிரகமும்,அருளும் இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. எனவே அவரின் ஆசியும் அருளும் பெற்று பின் திருக்கோவிலில் நுழையவேண்டும். நமது விக்கினங்களை போக்கும் அந்த விக்கினேஸ்வரனை வழிபட்டுப் பின் அவர் அருகில் இருக்கும் முருகரை வழிபட வேண்டும். வள்ளி தெய்வானை சமோதர முருகரை வழிபட்டு பின் அடைவது துர்கா தேவின் சன்னதி, தேவி துர்க்கை வெற்றிகளையும் நல்ல வாழ்க்கையும் அருளுவார். அவரை மனமார வேண்டிக் கொண்டு பின் அடைவது அம்மா லோகஸ்வரி, ஜகதாம்பா.ஜகன்மாதா பார்வதியின் சன்னதி(இடத்தின் காரணமாக பெயர் மாற்றப்ட்டிருந்தாலும்), அம்பாளை,சிவசக்தியை வணங்கி பின் மூலவரின் சன்னதி சேர வேண்டும் அங்கு கோவிலில் இடமிருந்து வலமாக பூமியின் சுழற்சி நியதியின் படி சுற்ற வேண்டும். முதலில் வருவது குரு பகவான் சன்னதி அல்லது சுவர் பக்கமாக இருக்கும் சிலையாக இருப்பார். அங்கு கல் ஆலமரத்தின் அடியில் சனகாதி முனிவர்களிக்கு தரிசனம் அளித்து மூலப் பொருளை உபதேசித்த கோலத்தில் கையில் சின் முத்திரை காட்டி தஷ்சனாமூர்த்தியாக குருபகவான் அமர்ந்து இருப்பார். நல்ல கல்வி,மனையாள், மணவாளன், நல்ல குடும்பம் அளித்த அவருக்கு மஞ்சள் ஆடை, கொண்டக்கடலை மாலை அளித்தும் வணங்கலாம், அல்லது மானசீகமாக வணங்கி பின் பின்னால் வந்தால் லிங்கோத்பவர் சன்னதியை காணலாம். அடி முடி காண பிரம்மாவிற்கும், விஷ்னுவிற்கும் ஈசன் விண்ணுக்கும் மண்ணுக்கும் நின்ற கோலம் இது. சற்று கூர்ந்து கவனித்தால் லிங்கோத்பரின் மேல் பகுதியில் இடப் பக்கத்தில் அன்னப் பறவையாய் பிரம்மாவையும், வலப்பகுதி கீழ் பகுதியில் வராகமாய் விஷ்னுவையும் காணலாம். இவ்வாறு மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்து பின் நாம் சண்டிகேஸ்வரை வந்துடைவேம். இங்கு ஒரு முக்கியமான விசயம் சொல்ல விரும்புகின்றேன். 

நம் மக்கள் சண்டிகேஸ்வரரின் முன்னால் கைதட்டியும் அல்லது விரலில் சொடக்கு போட்டும் கும்பிடுவார்கள். அதுக்கு அவர்கள் சொல்லும் காரணம் அவருக்கு காது கேக்காது என்ற வதந்தி. 
உண்மை அது இல்லை. சாதரனமாக நம்மை ஒருவர் கை தட்டியோ அல்லது சொடக்கு போட்டுக் கூப்பிட்டால் நாம் மரியாதைக் குறைவாக செயலாக கருதுவேம் அல்லவா, ஆனால் இங்கு கடவுளை அவ்வாறு செய்வது உசிதம் இல்லை அல்லவா. இது மாதிரி செய்வது தவறு. பின் என்ன செய்யவேண்டும் என்றால், சண்டிகேஸ்வரர் சிவனின் கருவூல அதிகாரி,கணக்காளர். சிவன் செத்து குல நாசம் என்பார்கள், ஆதலால் அவரிடம் சென்று நம் இரு கைகளையும் விரித்து கண்பித்து நான் இங்கிருந்து சிவபெருமான் அருள் அன்றி வேறு எதையும் எடுத்து செல்லவில்லை என்று மனதில் கூறி வணங்கி ஆலயத்தின் முன் பக்கம் வந்தால் ஆலயம் நுழையும் முன் சனிஸ்வரன் என்னும் சனிபகவான் வலப்பக்கத்தில் அமர்ந்து இருப்பார். அவரை பணிவுடன் பக்கவாட்டில் இருந்து வணங்க வேண்டும். சனிபகவானை மட்டும் நேருக்கு நேர் நின்று வணங்க கூடாது. சனியின் அருளைப் பெறாமல்,அல்லது அவரை வணங்காமல் ஈசனை வணங்கினால் பலன் இல்லை. இதற்கு ஒரு கதை உள்ளது(தனிப் பதிவு இடுகின்றேன்). அவரையும் வணங்கி விட்டு பார்த்தால் நந்திகேஸ்வரன் இருப்பார் நந்தியை நாம் வணங்கி ஈசனை தரிக்கும் உத்தரவை வாங்கி விட்டு பின் துவாரக பாலர்களை வணங்கி உள் சென்று நாம் ஈசனை தரிசனம் செய்யவேண்டும். பரமனை, முதற்பெருளை, அருளாளனை வணங்கி பின் அமைதியாய் ஆத்மார்த்தமாய் வணங்கி வெளியில் வந்தால் உற்சவ மூர்த்தி சிலையும், ஆடல் வல்லான் நடராஜர் சிலைகளும், அவருடன் அறுபத்தி மூன்று நாயன்மார்களின் சிலைகளும் இருக்கும் அவர்கள் அனைவரையும் வணங்கி பின் நவகிரங்களை சுற்றி வரவேண்டும். சுற்றுக்களை 1.2.3 என்று எண்ணாமல் ஒவ்வெறு கிரகத்திற்கும் ஒரு சுற்று வீதம் அவரின் திரு நாமத்தை கூறி சுற்றவேண்டும். உதாரனமாக சனிபகவானில் இருந்து ஆரம்பிக்க வேண்டும், சனி பகவானே போற்றி என்று கூறி ஆரம்பித்து பின் கேது,குரு,புதன்,சுக்கிரன்,சந்திரன்,செவ்வாய், இராகு என சுற்றிப் இறுதியாக சூரியனில் முடிக்கலாம். 

நவக்கிரகங்களை சுற்றிப் பின் தலவிருஷ்சத்தை வணங்கிப், ஆலமரத்தின் அடியில் இருக்கும் நாகர்கள், கன்னிமார்கள்களை வணங்கிப் பின் வெளியில் வரும்முன் சூரியன் மற்றும் பைரவர் சிலைகளை வணங்கி வெளியே வரவும். ஆகம விதிமுறைகளின் படி கட்டப் பட்டுள்ள கோவில்கள் அனைத்தும் இந்த முறையில் தான் இருக்கும். சரி அடுத்த பதிவில் விஷ்னு கோவில் வழிமுறைகளைப் பார்ப்போம். 

தென்னாடுடைய சிவனே போற்றி,
எந்னாட்டாருக்கும் இறைவா போற்றி,
ஆரூர் உறையும் அரசே போற்றி,
C:\Documents and Settings\Administrator\My Documents\My Videos\Thirumandiram.MSWMM
இமைப்பொழுதும் என்னெஞ்சில் அகலாதான் தாள் போற்றி, போற்றி. 

நன்றி.
C:\

வெள்ளி, 27 ஜனவரி, 2017

தமிழ் தேவாரப் பண் பாராயணம் – பிரச்சினைகள் நீங்க


ஆழ்க தீயதெல்லாம்!
சூழ்க அரன் நாமமே!

எண்ணிலா அற்புதங்கள் நிகழ்த்தியிருக்கும் இந்த அருட்பதிகங்களின் பாடல்கள் யாவும் பற்பல பிரச்சனைகளை நீக்க வல்லன,மேலும் ஞானசம்பந்தரின் பாடல்களில் கடைசி பாடலில் இப்பதிகத்தினை பாராயணம் செய்து நாளும் ஏத்தும் அன்பர்கள் ஏய்தும் பலன்களை தன் பாடல் வாயிலாகவும் என் வாக்குகள் யாவும் சிவனாரின் வாக்குகளே என்றும் கூறுவதையும் பாடல் வாயிலாகக் காணலாம்.

மானிடரின் இலவ்கிய வாழ்வில் தேவாரத் திருமறைகளின் பங்கு அளவிடற்கரியா....
திருமணம் மட்டுமா? காதல் கைகூட வேண்டிப் பாடுவதில் தொடங்கி, மக்கட்பேறு
வேண்டியும், பல்வகை நோய்கள் தீர்க்க வேண்டியும், செல்வம் கொழிக்கவும், அன்ன பிற உலகியல் இச்சை யாவும் தீர்த்த பின்னர் வீடுபேறு நல்கவும் பலப்பல பாடல்களை சைவக்குரவர்மார் அருளிச் செய்துள்ளனர். தமிழ்கூறும் நல்லுலகு இனியும் மேற்சொன்னவாறு மூடத்தனங்களை ஒழித்து அனைத்து நிகழ்வுகளுக்கும் ஏற்ற தமிழ்ப்பண்களைப் பாடி மீள வேண்டும் என்று ஆலவாய் அண்ணல் ஆவலைத் தூண்ட இதை எழுதுகிறேன்.

மேலும் ஒருவகையில் இது என் பிறவிக்கடனும் கூட. அடியேன் பிறந்த ஆண்டு 1962. அவ்வமயம் கோள்களின் சேர்க்கை காரணமாய் பல பாதிப்புகள் ஏற்படலாமென பீதி நிலவிக் கொண்டிருக்க, கருவுற்றிருந்த என் அன்னையார் காஞ்சிப் பெரியவர் அறிவுரைப்படி விடாமல் ஓதிக் கொண்டிருந்தது ஞானசம்பந்தப்பெருமான் அருளிய கோளறுபதிகமே. பின்னர் என்னையும் அறியாமல் அடியேன் திருமுறைகளில் ஆழத்தொடங்கிய காலத்தில் அவர் அடிக்கடி அதனை நினைவு கூர்வார்.

கோளறுபதிகத்தைப் போல் பல நிகழ்வுகளுக்கும் உள்ள பதிகங்களைக் கீழே தொகுத்திருக்கிறேன்.

குடியேற்றம் (வ.ஆ.மாவட்டம்) சிவநெறிச்செல்வர் ஆ.பக்தவத்சலம் அவர்கள் முன்னர் சிலவற்றைத் தொகுத்திருக்கிறார். அடியேன் மேலும் தேடித் தொகுத்துள்ள விரிவான பட்டியலிது.

1. தடைப்பட்டிருக்கும் திருமணம் நடைபெற ஆண் பெண் இருபாலரும் ஓதவேண்டிய பதிகம்:

திருமருகலில் ‘சடையாய் எனுமால் சரண்நீ எனுமால்’ என்று தொடங்கும்
ஞானசம்பந்தர் நல்கிய பதிகம்.

2. திருமணம், மணிவிழா போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கான மங்களப் பதிகம்:

ஞானசம்பந்தப் பெருமான் மதுரை வரை தேடிவந்த தம் தந்தையார் சிவபாதஇருதயரைக்
கண்டு நெகிழ்ந்து தம் பிறவிக்குக் காரணமான பெற்றோரை வணங்கிப் பாடிய
‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’ என்ற திருக்கழுமலர்ப் பதிகம்.

3. மலட்டுத் தன்மை நீங்கவும், குழந்தைச்செல்வம் வேண்டியும் பாடவேண்டிய பதிகங்கள்:

சம்பந்தப் பெருமான் ‘குறும்பை ஆண்பனை ஈனும்’ என்று பாடி
அதிசயம் நிகழ்த்திய திருவோத்தூர்ப் பதிகமும், மெய்கண்டதேவரின்
பெற்றோர் பாடிப் பேறுபெற்ற ஞானசம்பந்தரின் ‘கண்காட்டும் நுதலானும்’ என்ற
திருவெண்காட்டுப் பதிகமும்.

4. பிரசவம் நலமே நடைபெற வேண்டும் பதிகங்கள்:

சம்பந்தர் நல்கிய ‘நன்றுடையானைத் தீயதிலானை’ என்று தொடங்கும்
பதிகமும், அப்பர் பெருமான் நல்கிய ‘மட்டுவார் குழலாளடு’ என்ற
பதிகமும். சிராப்பள்ளியில் எழுந்தருளியிருக்கும் தாயுமானவரைப் பாடியவையிவை.

5. குழந்தைகளுக்கு வரும் இனம்புரியாத நோய்கள் நீங்கவும், வாதம், வலிப்பு
போன்ற நோய்கள் தாக்கினும் பாடவேண்டிய பதிகம்:

கொல்லிமழவனின் மகவின் முயலகன் என்னும் பிணி போக்க வேண்டி சம்பந்தர்
பாடியருளிய ‘துணிவளர் திங்கள்’ என்று தொடங்கும் திருப்பாச்சிலாசிரமப்
பதிகம். திருச்சி – கரூர் பாதையில் வரும் திருவாசி என்று பெயர் மருவிய
ஊரிது.

6. விடம் தீர்க்கும் பதிகம்:

அரவம் தீண்டி மாண்ட அப்பூதி அடிகளாரின் மகனை மீண்டும்
உயிர்ப்பித்தருள வேண்டி அவரில்லத்தில் எழுந்தருளியிருந்த அப்பர் பெருமான்
பாடிய பதிகம்.

7. கண்பார்வைக் குறை நீக்க வேண்டிப் பாடும் பதிகம்:

சுந்தரமூர்த்தி சுவாமிகள் கச்சியேகம்பத்தில் அழுது வேண்டிப் பார்வை மீண்ட
‘ஆலந்தான் உகந்து அமுது செய்தானை’ என்ற பதிகம்.

8. சொரி, படை, மேகம், அம்மை போன்ற வியாதிகள் நீங்க:

சுந்தரமூர்த்தியார் பாடி மீண்ட ‘மின்னுமா மேகங்கள்’ என்ற
வேள்விக்குடிப்பதிகம்.

9. ஊமை, திக்குவாய்க் குழந்தைகள் நலம் பெற:

மாணிக்கவாசகர் தில்லையில் நல்கிய ‘பூசுவதும் வெண்ணீறு’ என்று தொடங்கும்
திருச்சாழலெனும் பாடல்கள்.

10.புத்திரசோகத்திலிருந்து மீள:

சுந்தரமூர்த்தியார் திருப்புக்கொளியூரெனும் அவிநாசி அருகே மடுவொன்றில்
முதலை விழுங்கிய மதலையினை மீண்டும் உயிர்ப்பித்து மீட்ட பதிகம்
. சம்பந்தப் பெருமான் திருமயிலையில் பூம்பாவையை மீண்டுமெழுப்பிய பதிகமும்.

11. தீராத வயிற்றுவலியைப் போக்கும் பதிகம்:

அப்பர்பெருமானை மீண்டும் ஆட்கொண்டருளிய ‘கூற்றாயினவாறு விலக்ககலீர்’ என்று தொடங்கும் திருவதிகைப் பதிகம்.

12. குளிர்க்காய்ச்சல் நீங்க:

கொடிமாடச் செங்குன்றூரில் தங்கியிருந்த சம்பந்தர் அங்கு அடியார்களை வாட்டிய
குளிர்காய்ச்சலைப் போக்கியருளிய ‘அவ்வினைக்கு இவ்வினையாம்’ என்ற
திருநீலகண்டப் பதிகம்.

13. வெப்ப நோய்கள் நீங்க:

சம்பந்தப் பெருமான் மதுரை மன்னன் கூன்பாண்டியனின் வெப்புநோய் தீர்த்தருளிய
திருநீற்றுப்பதிகம். மற்றும் சுண்ணாம்புக் காளவாய்ச் சூட்டையும் குளிர்வித்த அப்பர்
பெருமானின் ‘மாசில் வீணையும்’ என்ற பதிகம்.

14. ஐயங்களும், அச்சங்களும் நீங்கித் தன்னம்பிக்கை வளர:

அப்பர் பெருமான், மகேந்திர பல்லவன் படையாட்களை அனுப்புகையில் பாடும்
‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்ற மறக்கவொண்ணா பதிகம். பின்னர் அவர் ‘சொற்றுணை வேதியன்’ என்று கல்லைத் தெப்பமாக்கி கரையேறிய பதிகமும்; ஆனை மிதிக்க வருகையிலும் ‘அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்ச வருவதுமில்லை’ என்ற பதிகமும்.

15. வழக்குகளில் வெற்றிபெற, தவற்றினை உணர்ந்து வேண்ட:

சம்பந்தர் குறைகொண்ட பொற்காசு கண்டு மனம் பொறுக்காமல் பாடிய ‘வாசிதீரவே காசு நல்குவீர்’ என்ற திருவீழிமிழலைப் பதிகம்.

16. நாளும் மலர்தூவி வழிபட:

அப்பர் பெருமான் அருளிய ‘வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி’ என்று தொடங்கும் கயிலைக் காட்சி கண்டு பாடிய பதிகம்.

17. ‘துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்’ நாளும் ஓதவேண்டிய பஞ்சாக்கரப் பதிகம். ஞானசம்பந்தப் பெருமான் தம் உபநயன நாளன்று பாடியருளியது. அப்படியே நாளுமோத வேண்டிய பதிகம் அப்பர் பெருமான் ஸ்ரீருத்ரத்தைத் தமிழிலாக்கிய உருத்திர திருத்தாண்டகமும்.

18. கோள்களின் பாதிப்பகல:

திருமறைக்காட்டிலிருந்து மதுரைக்குப் புறப்படும் சம்பந்தர் கோள்களின் பாதிப்பு நீங்கப் பாடிய கோளறு பதிகம்.

19. தொடங்கிய செயல் இனிதே முடிக்க:

மதுரையம்பதியில் சமணருடன் வாது செய்யுமுன் மாதொருபாகனின் திருவுளம்
வேண்டிப் பாடிய ஆலவாய்ப் பதிகம்.

20. சனிக்கிரகத்தின் பாதிப்பகல:

சம்பந்தப் பெருமான் திருநள்ளாற்றில் நல்கிய ‘போகமார்த்த பூண்முலையாள்’
என்று தொடங்கும் பதிகம். அனல்வாதின் போதும் எரியாமல் நின்ற பதிகமிது.

21. வறுமை நீங்கிச் செல்வம் கொழிக்க:

பல பதிகங்கள் உள்ளன. குறிப்பாய், சம்பந்தர் பொன்வேண்டிப் பாடிய திருவாவடுதுறைப் பதிகமும் (இடரினும் தளரினும்), சுந்தரமூர்த்தியார் ஓணகாந்தன் தளியில் பாடிய (நெய்யும் பாலும் என்று தொடங்கும்) பதிகமும், திருப்பாச்சிலாசிரமத்தில் ‘அடப்போய்யா ஒன்ன விட்டா வேற ஆளாயில்ல’ என்று மிரட்டிய (இவரலாதில்லையோ பிரானார்) பதிகமும் சுவையான கதைகளாய் விரிவன.

22. என்றும் உணவு கிடைத்திருக்க:

திருநாவுக்கரசர் அருளிய ‘அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்’ என்று தொடங்கும் பதிகம்.

23. களவுப் போன பொருள்கள் மீண்டும் கிடைக்க:

தம்பிரான் தோழரை கொங்கு நாட்டில் திருமுருகன்பூண்டியருகே களவாடி விளையாடியாண்ட கதை சொல்லும் பதிகம்.

24. மரணபயம் நீங்க:

அப்பர் பெருமான் நல்கிய ‘கண்டுகொள்ளரியானைக் கனிவித்து’ என்று தொடங்கும் காலபாசத்திருக்குறுந்தொகை.

25. சஞ்சிதவினையெனும் தொல்வினைகள் அழிந்தொழிய:

காஞ்சி அருகே திருமாகறலில் சம்பந்தர் நல்கிய ‘விங்குவிளை கழனிமிகு’ என்று தொடங்கும் பதிகம்.

26. பற்றிலான் தாள் பற்றிப் பற்றறுக்க:

‘காதலாகிக் கசிந்து’ என்று தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகம். சம்பந்தரிதைப் பாடியருளிய பின் சோதியில் மீண்டதைப் பின்னர் விரிப்போம்.

27. பிறவிப்பயன் பெற்றோங்க:

அப்பர் பெருமான் சீவன் குறுகிச் சிவமாக வேண்டும் ‘தலையே நீ வணங்காய்’ என்ற திருவங்கமாலை.

28. சிவஞானத் தெளிவடைந்து மீள:

ஞானசம்பந்தப் பெருமான் புனல்வாதின் போது பாடியருளிய திருப்பாசுரம். சமணமன்னன் கூன்பாண்டியனை நின்றசீர் நெடுமாறனாக்கிய பாசுரமிது.

விடுபட்ட பதிகங்கள் பல இருக்கலாம். சுட்டியருள வேண்டும். ‘செந்தமிழ்ப் பயன் அறிகிலா அந்தகர்’ (3.39.11) என்று தமிழ்விரகன் சம்பந்தப் பெருமான் சாடும் அவச்சொல் போக்கி மீள்வோம்.

‘பத்திமையால் பணிந்து அடியேன்தன்னைப் பன்னாள் பாமாலை பாடப் பயில்வித்தானை’
வணங்கி,

அன்புடன்,
வை, பூமாலை, சுந்தரபாண்டியம்

நன்றி ; தமிழ் இந்து சமயம்

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் .

சனி, 21 ஜனவரி, 2017

சிவபாத சேவை

சிவபாத சேவை


சிவனிடம் அடைக்கலம் புகுவதற்கு பல வழிகள் இருந்தாலும், அவற்றில் மிக முக்கியமானது சிவபாத சேவையே, ஏனென்றால் சிவபாதத்தை பற்றி சேவை புரிந்தவர்கள் நிறைய உண்டு. சிவபாத சேவை புரியாதவர்கள் மிக அரிதே. கோவில்களில் எல்லா கால பூஜைகளும் முடிந்த பிறகு இரவில் இறைவனுடைய திருப்பாதத்தை ஒரு பல்லாக்கில் வைப்பார்கள், அதை வைத்துத் தூக்கியபடி கோயிலைச் சுற்றி வருவார்கள், அந்த திருப்பாத சேவையைச் செய்வதற்கு பலர் அலைவார்கள். அந்த திருப்பாதம் சுற்றி வந்து இறுதியாக பள்ளியறைக்கு வந்து சேரும்.
இந்த சிவபாத சேவையை சாதிக்காமல் ( பார்க்காமல்) ஒருவரும் சிவன் கோயிலை விட்டு போகக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கின்றது, இது தெய்வ சட்டம். ஆனால் எத்தனை பேர் அதற்கு சிவபாத அனுக்கிரகத்தைப் பெற்று போகின்றனர் அதுவரை காத்திருந்து சிவபாத சேவையை புரிவர்கள் மிகவும்அரிதாகவே உள்ளது. சிவபாத ரகசியங்களில் இது மிகவும் முக்கியமானது. இதைப்பற்றி சிவபாத ஆனந்த யோகம் என்ற பெரிய கிரந்தமே இருக்கின்றது. நாம் கோவில் அருகில் குடியிருந்தாலும் கூட இந்த பள்ளியறை சேவைக்கு வருவது அரிதாகவே உள்ளது.
இந்த சிவபாத தரிசனத்தை ஒவ்வொருவரும் பெற்றுத்தான் தீர வேண்டும். இந்த சிவபாத சேவையானது அற்புதமான ஆனந்தத்தை தரும் என்று சாஸ்திரங்களும் கிரந்தங்களும் விளக்கமாக கூறியிருக்கின்றன,. பள்ளியறை பூசைக்கு செல்ல எங்களுக்கு நேரம் இல்லை, காலம் இல்லை மற்ற நேரங்களில் தான் தரிசிக்கின்றமே அது போதாதா? என்று சொல்லி விடக்கூடாது, ஏனென்றால் இது அவ்வளவு முக்கியம். இரவு நேரங்களில் வேண்டாத பொழுதுபோக்கு நிகழ்வுகளில் வீணே காலத்தை வீணடித்து காலத்தை விரயமாக்கிறோம், இதற்கெல்லாம் காரணம் சிவன் கோயிலில் சிவபாத ரகசியத்தை நாம் தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான். கலியுகத்தில் பாதுகாப்பின்மை, மக்களின் அசட்டை காரணமாக பல சிவன் கோயில்களில் இந்த வழீபாடு மறைந்து வருகிறது, பிரதோச கால பூசை புத்துயிர் பெற்று இருப்பதுபோல் இரவு நேர நித்ய சிவபாத பூசையும் நன்கு நடைபெற அனைவரும் அரும்பாடு பட வேண்டும். பல சற்குருமார்கள் மூலம் பல சத்சங்கங்களை உருவாக்கி சிவபாத பூசையின் மகிமையை பரப்புவது நம் அனைவரின் கடமையாகும்.
சிவபாத ரகசியம்
இரவு கால பூசை முடிந்த பிறகு இறைவனுடைய திருப்பாத்திற்கு அற்புதமாக அலங்காரம் செய்யப்படும். அந்த அலங்காரம் செய்த திருப்பாதத்தை பல்லாக்கில் ஏற்றி அந்த பல்லாக்கை கோயிலில் பிரதட்சணம் செய்யப்படும். அப்போது இறைவனுக்கு செய்ய வேண்டிய சேவைகளை நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு கோயில் பிரதட்சிணம் வருகையில் நாதஸ்வரம் சங்கு உடுக்கை, பேரிகை துந்துபி, மத்தளம் பஞ்ச வாத்தியமத் இவை எல்லாம் ஒலித்துக் கொண்டு வரவேண்டும். இந்த வாத்தியங்களை யார் ஒருவர் கூலி இல்லாமல் சேவையாக செய்கிறார்களோ அவர்கள் திருக்கைலாயத்தில் நாத கணங்களாக மாறுகின்றனர்.
பிரபஞ்ச படைப்புகளில் காலமானது இறைவனின் பாதங்களில் இருந்து தோன்றியதாகும். ஓவ்வொரு நாளிலும் சில நற்காரியங்களையாவது செய்து முடித்தோம் என்ற மன நிறைவோடு கழித்தலே காலதேவனுக்கு நாம் செய்யும் முறையான வழிபாடு.
அதோடு மட்டும் அல்லாமல் அந்தப்பாதத்திற்கு கந்தங்களும் சந்தனமும்,மலர்களும் தொடுத்துக் கொடுத்து அதற்கு பின்னால் பூரணமாக வேதங்களையும், ஓதி நான் மறைகளையும் ஓதுவதோடு அல்லாமல் தமிழ் மறைகளையும் ஓதியபடியே வலம் வந்து சிவபாத சேவைகளைச் செய்ய வேண்டும். சிவபாத பல்லக்கு கோயிலை வலம் வருகையில் ஸ்ரீகால பைரவரின் சன்னதி அருகே சற்றே நின்றிட ஸ்ரீகால பைரவருக்கு புனுகு சாற்றி பூசையும் நடைபெறும்.
சிவபாத பூசையில் பங்கு பெறுவது
சிவபாத பல்லாக்கு நம் தோள்களில் தாங்கி வலம் வருதல் பெறுதற்கரிய பாக்கியம்
சிவபாத சேவைக்கு இசைக்கருவிகள் வாசித்தல் இசை வல்லுநராக்கும்
பூசைக்குரிய பூச்சரங்கள் வழங்குதல்
பள்ளியறை பூசைக்கு பசும்பால் வழங்கி கைங்கர்யம் செய்தல்
சிவபாத பல்லாக்கு சேவைக்கு தீபந்தம் பிடித்தல் ஒளி விளக்குகள் அமைத்து கொடுத்தல்
இவ்வாறாக சிவபாத சேவையின் பல்வேறு கைங்கர்யங்களை நிறைவேற்றினால் அளப்பரிய புண்ணியத்தை எளிதில் பெறுவதோடு அரிய காலத்தை விரயம் செய்ததற்கு பரிகாரமாகவும் அமைகின்றது.

பலங்கள்
சிவபாத பூசையில் சேவை கண்டும் சேவை புரிந்தவர்களுக்கு அவரவர்கள் நட்சத்திரங்களுக்கு ஏற்றவாறு தோசங்கள் நீங்கி புண்ணிய பலன்கள் கிடைக்கும்
குறிப்பாக பெண்களுக்கு திருமண பாக்கியம், குழந்தை பேறு, திருமாங்கல்ய பலம் கிடைக்கும்.
சிவபாா சேவையில் கலந்தவர்கள் அனைத்து விதமான சித்திகளும் கனிந்து வரும்.
நாம் இழந்த கால விரையத்தை ஈடுசெய்ய சிவபாத சேவையில் கலந்து கால பைரவரின் அருள் பெற்று புண்ணியம் பெறலாம்

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்





வெள்ளி, 20 ஜனவரி, 2017

சிவ பெருமானாரை வழிபட்ட பிற தெய்வங்களும் தலங்களும்

சிவ பெருமானாரை வழிபட்ட பிற தெய்வங்களும் தலங்களும்

1, உமையம்மை வழிபட்ட தலங்கள் - திருவாடுதுறை, மயிலாப்பூர்,காஞ்சிபுரம், திருச்சத்திமுத்தம், திருவண்ணாமலை, திருவானைக்கா. இன்னும் பல
2. முருகன் வழிபட்ட தலங்கள் - பேணுபெருந்துறை, சேய்ஞ்ஞலூர், திருமுருகன்பூண்டி, குமரக்கோட்டம், இன்னும் பல
3. விநாயகர் வழிபட்ட தலங்கள் - செங்காட்டங்குடி, கச்சி அனேகதங்காவதம், இன்னும் பல
4, வீரபத்திரர் வழிபட்ட தலங்கள் - திருச்செம்பொன்பள்ளி
5. அனுமன் வழிபட்ட தலங்கள் - குரக்குக்கா, வலிதாயம் முதலியன
6, சூரியன் வழிபட்ட தலங்கள் - திருநீடுர், திருமறைக்காடு, திருப்புனவாசல், கருப்பறியலூர் முதலியன
7. திருமால் வழிபட்ட தலங்கள் - வாழ்கொளிபுத்தூர், குடமூக்கு, தலைச்சங்காடு, திருவீழிமிழலை, திருமாற்பேறு, சிவபுரம், வாஞ்சியம், சக்கரப்பள்ளி
8. பிரமன் வழிபட்ட தலங்கள் - திரு அண்ணாமலை, பிரமபுரம், திருப்பணந்தாள், திருப்பட்டூர்
9. குபேரன் வழிபட்ட தலங்கள் - வேதிகுடி, செம்பொன் பள்ளி, திருஅண்ணாமலை,
10, கலைமகள் வழிபட்ட தலங்கள் - நெய்த்தானம், கச்சபேசம் முதலியன
11. திருமகள் ( லட்சுமி) வழிபட்ட தலங்ள் - வேட்களம், திருநினறியூர் , தெங்கூர், திருப்பத்தூர் , காஞ்சி. காயாரோணம், முதலியன
12. ஆதிசேடன் வழிபட்ட தலங்கள் - வலஞ்சுழி , நாகேச்சரம், பாம்புரம், நாகைக்காரோணம்
13. தேவந்திரன் வழிபட்ட தலங்கள் - கண்ணார் கோவில், சீர்காழி, பென்னாகடம் முதலியன
ஆனால் சிவபெருமான் வழிபட்ட தலங்கள் என்று ஏதுமில்லை
நன்றி : தமிழ் வேதம்
தொகுப்பு : வை, பூமாலை, சுந்தரபாண்டியம்

திங்கள், 9 ஜனவரி, 2017

திருஎறும்பியூர் (திருவெறும்பூர்) தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள்

தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள்
திருஎறும்பியூர் (திருவெறும்பூர்)


(மார்கழி 24 ஆம்நாள் ஆனமீக சுற்றுலாவில் சென்ற இடம்)
இறைவர் திருப்பெயர்: பிப்பிலிகேஸ்வரர் (பிப்பிலி - எறும்பு), எறும்பீஸ்வரர், எறும்பீசர், மதுவனேஸ்வரர், மணிகூடாசலபதி, மாணிக்கநாகர்
இறைவியார் திருப்பெயர்: சௌந்தரநாயகி, மதுவனேஸ்வரி, நறுங்குழல் நாயகி (சுகந்த குழலேஸ்வரி), இரத்தினாம்பாள்.
தல மரம்: வில்வம்
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
வழிபட்டோர்: அப்பர்,திருமால், பிரமன், நைமிசாரண்ய ரிஷிகள், இந்திரன், தேவர்கள்.

தல வரலாறு

தற்போது மக்கள் வழக்கில் 'திருவெறும்பூர் ' என்றும் 'திருவரம்பூர் ' என்றும் வழங்குகிறது.



இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவங்கொண்டு வழிபட்ட தலமாதலின் இத்தலம் இப்பெயர் பெற்றது.



"தாருகாசூரனை" அழிக்கத் தேவர்கள் வழிகேட்டுப் பிரமனை அனுகினர். அவர் சொல்லியவண்ணம் இந்திரனும், தேவர்களும் தங்கள் உருவம் அசுரர்களுக்குத் தெரியக் கூடாதென்றெண்ணி, எறும்பு வடிவங்கொண்டு இத்தலத்திற்கு வந்து வழிபட்டனர். அவ்வாறு வழிபடும்போது சிவலிங்கத்தின் மீதிருந்த எண்ணெய்ப் பசையால் மேலேற முடியாது கஷ்டப்பட, சுவாமி புற்றாக மாறி, எறும்புகள் மேலேறிப் பூசை செய்வதற்கு வசதியாகச் சொரசொரப்பான திருமேனியுடையவரானார். அவர்கள் மேலேறுவதற்கு வசதியாகச் சாய்ந்தும் பூசையை ஏற்றுக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.



திரிசிரன் திருச்சியில் வழிபட்டதுபோல், அவனுடைய சகோதரன் 'கரன்' என்பவன் எறும்பு உருக்கொண்டு இங்கு வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தேவாரப் பாடல்கள் : அப்பர் - 1. விரும்பி யூறு விடேல்மட, 
  2. பன்னியசெந் தமிழறியேன்.


சிறப்புகள்

இக்கோயில் மலைமீது உள்ளது. மலைக்கோயில் புராணப்படி இதற்கு; பிப்பிலீச்சரம், மணிக்கூடம், இரத்தினக்கூடம், திருவெறும்பிபுரம், எறும்பீசம், பிரமபுரம், இலக்குமிபுரம், மதுவனபுரம் குமாரபுரம் எனப் பல பெயர்களுண்டு. தென் கயிலாயம் என்றும் இத்தலத்தைச் சொல்வர்.



கல்வெட்டில் இறைவனின் திருப்பெயர், 'திருமலையாழ்வார்' என்றும், 'திருவெறும்பியூர் உடைய நாயனார்' என்றும் குறிக்கப்பெற்றுள்ளது.



நவக்கிரக சந்நிதியில் சூரியன்  திருவுருவம் இருமனைவியரோடும் நடுவில் உள்ளது.



கருவறை கல்லாலான கட்டிடம்.


மூலலிங்கம் மண்புற்றாக மாறியிருப்பதால், நீர்படாமல் பாதுகாக்கப்படுகிறது. சிவலிங்கத்திருமேனி வடபால் சாய்ந்துள்ளது. மேற்புறம் சொரசொரப்பாக (தலபுராணம் தொடர்புடையது) உள்ளது. சிவலிங்கத்தின் மீது எறும்புகள் ஊர்ந்த அடையாளங்கள் உள்ளன.


கருவறையின் வெளிப்புறம் கல்வெட்டுக்கள் உள்ளன. 

கல்வெட்டில் இத்தலம் "ஸ்ரீ கண்டசதுர்வேதி மங்கலம்" என்று குறிக்கப்படுகிறது.

எறும்பியூர் தலபுராணம் உள்ளது.
இது ஒரு பரிகாரத் தலம், கல்வி வீரம் வேண்டுதல் பலிதமாகும்

(கி. பி. 1752-ல் ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரர்க்கும் நடந்த போரின்போது இவ்விடம் போர் வீரர்கள் தங்கும் ராணுவத் தளமாக விளங்கியது.)


அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருச்சியை அடுத்த இருப்புப் பாதை நிலையம், திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ளது. திருச்சியிலிருந்து அடிக்கடி நகரப்பேருந்துகள் உள்ளன. 
தொடர்பு : 09842957568

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை, பூமாலை சுந்தரபாண்டியம்

வெள்ளி, 6 ஜனவரி, 2017

தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள் / நெடுங்களம்

தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள் / நெடுங்களம்

திருநெடுங்களம்
இறைவர் திருப்பெயர்: நித்யசுந்தரேஸ்வரர், நெடுங்களநாதர்.
இறைவியார் திருப்பெயர்: மங்களநாயகி, ஒப்பிலா நாயகி.
தல மரம்: வில்வம்.
தீர்த்தம் : அகத்திய தீர்த்தம், சுந்தர தீர்த்தம்.
வழிபட்டோர்: அகத்தியர்,சம்பந்தர்

தல வரலாறு

மக்கள் கொச்சையாக பேசும்போது மட்டும் இத்தலத்தை 'திருநட்டாங்குளம்' என்கின்றனர்.



தவஞ்செய்த அம்பிகையை இறைவன் கள்ள உருவில் தோன்றிக் கைத்தலம் பற்ற, அச்சமுற்று அம்பிகை ஓடியொளிந்த இடம், ஒளிமதிச்சோலை என்று வழங்குகிறது.



தேவாரப் பாடல்கள்
: சம்பந்தர் - மறையுடையாய் தோலுடையாய்.




சிறப்புகள்

இங்குள்ள வெண்கலக்குதிரை விந்தையான அமைப்புடையது.

மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்காலக் கல்உரல் சிறந்த வேலைப்பாடமைந்தது.



நெடுங்களப் பதிகத்தில் வரும் பாடற் கருத்துக்கள் அனைத்தும் ராஜ கோபுரத்தில் முன்னும் பின்னும் சுதை சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.



மூலத்தானத்தின் மேல் இரு விமானங்கள் அமைந்து புதுமையாகக் காட்சியளிக்கின்றன.



இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் அமைப்பு அற்புதமானது - யோக தட்சிணாமூர்த்தி, சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறார்.



கல்வெட்டில் இத்தலம் "பாண்டிகுலாசினி வளநாட்டு வடவீர நாட்டு திருநெடுங்களம்" என்றும்; இறைவன் பெயர் "நெடுங்களத்து மகாதேவர் " என்றும் குறிக்கப்பட்டுள்ளது.



இத்தலத்தில் 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருச்சி - தஞ்சை சாலையில் வந்து துவாக்குடி என்னுமிடத்தில் பிரியும் சாலையில் 4 கி. மீ. சென்று நெடுங்களத்தையடையலாம். திருச்சி மெயின்கார்டு கேட்டிலிருந்து நகரப் பேருந்து செல்கின்றன. திருச்சி - மாங்காவனம், நகரப் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது. தொடர்பு : 0431 - 2520126

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

புதன், 4 ஜனவரி, 2017

சிவனாரின் (யோகேஸ்வரரர் ) பஞ்ச சக்திகள் / ஐந்து முகங்கள் காட்டும் பஞ்ச சக்திகள்

சிவனாரின் (யோகேஸ்வரரர் ) பஞ்ச சக்திகள் / 
ஐந்து முகங்கள் காட்டும் பஞ்ச சக்திகள்


இந்து சைவம் மற்றும் அண்டவியல் ஆய்வின்படி வெளியிட்ட (சிவனாரின் )தெய்வீக சக்திகள் ஐந்து முகங்கள் வழியாக நமக்கு உணர்த்துகிறது,
1) ஈஸனியம் 2, தடபுருஷா 3, அகோரா  4, வாமதேவா  5,சத்யோசதா
  இந்த ஐந்து முகங்கள் தத்துவ ரீதியான சக்திகள் கருணையின் வெளிப்பாடு, ஐம்புலங்களின் ஆற்றல், இவைகளை உணர்த்துகிறது, அவை படைத்தல் காத்தல்,  ஆசீர்வதித்தல். அழித்தல்.  மறைத்தல். சுழற்சியினைக் காட்டுகிறது, ஐந்து தலைகளின் மேல் உள்ள அரவம் ஞானம் பெறவும், சலனமற்ற கவனமுடன் இருக்க பகுத்தறிவு பெறும் தன்மையினைக் காட்டுகிறது, ஆயுதம் ஏந்திய கைகள் அழித்தல், முன்னோக்கி செல்ல எதிர் கொள்ளும் சக்தியையும், ஆற்றல் கஷ்டங்களை சமாளிக்கும் திறன் இவற்றை உணர்த்துகிறது, கருணை ெகாண்ட முகம் முன்னேறிச் செல்ல சக்தியை வெளிப்படுத்துகிறது, " அஞ்சேல் என்றும் அஞ்சினால் உன்னால் விடுதலை அடைய முடியாது " என்ற 
செய்தியினையும் கூறுவதாக உள்ளது அவரின் நான்கு முகங்கள் நான்கு வேதங்களையும் ஐந்தாவது முகம் ஆகமத்தையும் உணர்த்துகிறது. ஒவ்வொரு முகமும் வடிவியல் (ஜியோமெட்ரிக்) வடிவத்துடனும் நெற்றி இறைவனின் ஐந்து காரணிகளையும் பிரதிபலிக்கிறது, அவர் அணிந்துள்ள புலித்தோல் பூமியிலுள்ள பக்தர்களின் உலக அதிர்வுகளைக் காட்டுகிறது,

ஐந்து ( பஞ்ச சக்திகள் ) முகங்கள் Five Power of Sivan 



1. சத்ேயா சதா
   படைத்தல் (power of Creation) சக்தி
   பிரம்மாவை ஆட்சிக்கும் சக்தி
   திசை = மேற்கு நோக்கியது
  பஞ்ச பூத மண்டலங்களில் .. பூமி  மண்டலம்
  பஞ்சாட்சர மந்திரத்தில்  ... " ந"  அடையாளம்
  மானிட உடலின்  மணிப்பூரா இடம்
  ஆகம வண்ணம் / வெள்ளை நிறம்
  இச்சா சக்தியுடன் சேர்ந்தது
  திரிசூலத்தில் உள்ள உடுக்கை  படைத்தல் சக்தியைக் குறிக்கும்

2.  வாமதேவ ( கருணை கொண்டஆசீர்வாதம்) power of preservation

   சக்தி ... கருணையுடன் கொண்ட ஆசீர்வாதம் / காத்தல்
  விஷ்ணுவை நிரவகிக்கும் சக்தி
  திசை ... வடக்கு திசை கொண்டது
  பஞ்ச பூதங்களின் மண்டலம் ... நீர் ( ஜல மண்டலம்)
  பஞ்சாட்சர மந்திரத்தில்  ... " ம" அடையாளம்
  ஆகம வண்ணம்  ..  சிகப்பு நிறம்
  மானிட உடம்பில் அனாஹர சக்ரம்
 அடையாளம் ... கருணையுடன் ஆசீர்வதிக்கும் கை
  மாயா சக்தியுடன் இணைந்தது

3.  அகோரா 

   சக்தி  ... கலைப்பு சக்தி (அழித்தல்)power of dissolvution
  ருத்திரனை நிர்வகிக்கும் சக்தி
  திசை ... தெற்கு திசை நோக்கியது
  பஞ்ச பூதங்களின் மண்டலம் ... நெருப்பு மண்டலம்
  பஞ்சாட்சர மந்திரத்தில் ... "சி" அடையாளம்
  மானிட உடலிில்  சுவஸ்தான சக்கரம்
  ஆகம வண்ணம் ... கருமேக வண்ணம்
  ஞான சக்தியுடன் இணைந்தது
  அடையாளம் ... அக்னி ஏந்திய கை

4.  தத் புருஷ  ( உச்ச ஆன்மா) பரமாத்மா


சக்தி  ... மறைத்தல் Power of obscuration
மகேஸ்வரனை நிர்வகிக்கும் சக்தி
திசை ... கிழக்கு
பஞ்ச பூத மண்டலம் .... வாயு மண்டலம்
பஞ்சாட்சர மந்திரத்தில் ... " வ " அடையாளம்
ஆகம வண்ணம் ,,, பொன்நிறம்
மானிட உடலில்  ,,, மூலாதாரம்
கிரியா சக்தியுடன் இணைந்தது
அடையாளம் ...  ஊன்றிய கால்  கருணை அடையாளம்

5.  ஈஸான்யா  தேவன்

 சக்தி ... வெளிப்படுத்தும் சக்தி power of Revealment 
சதாசிவனை நிர்வகிக்கும் சக்தி
திசை ... ேமல் நோக்்கிய திசை
பஞ்ச பூத மண்டலம்... ஆகாய மண்டலம்
பஞ்சாட்சர மந்திரத்தில் ... "ய"  அடையாளம்
சித்தா ( பராசக்தியுடன் ) இணைந்தது
அடையாளம் ... திருவடி சிலம்பு கருணையின் அடையாளம்



திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

நன்றி ° Five Powers of Siva

திங்கள், 2 ஜனவரி, 2017

Deiveegam Karthic Raja: எனது பதிவுகள் 1000 எண்ணிக்கையை கடந்துஅன்புடையீர்எ...

Deiveegam Karthic Raja: எனது பதிவுகள் 1000 எண்ணிக்கையை கடந்துஅன்புடையீர்
எ...
: எனது பதிவுகள் 1000 எண்ணிக்கையை கடந்து அன்புடையீர் எல்லோருக்கும்எனது புத்தாண்டு வாழ்த்துக்களுடன் சென்ற ஆண்டுவரை எனது பதிவுகள் 1000 ...

எனது பதிவுகள் 1000 எண்ணிக்கையை கடந்து

அன்புடையீர்
எல்லோருக்கும்எனது புத்தாண்டு வாழ்த்துக்களுடன் சென்ற ஆண்டுவரை எனது பதிவுகள் 1000 எண்ணிக்கையை கடந்து விட்டது எனது வலைப்பதிவு வந்து எனக்கு புத்துயர் கொடுத்த பயனாளர்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் கலந்த நன்றியை தெரிவித்து என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்,
அன்புடன்.
 வை.பூமாலை சுந்தரபாண்டியம்