புதன், 31 ஜூலை, 2013

சத்குரு சோமப்பர் சுவாமி ஜீவசாதி


சத்குரு சோமப்பர் சுவாமி ஜீவசாதி இந்து மரபியலில் ஜீவ சமாதியின் முக்கியத்துவம் தெளிவாக வரையறுத்து கூறப்பட்டுள்ளது,எல்லா சமய, மதத்தினற்கும் பொதுவான நிலை ஆகும், ஞானத்தின் உச்ச நிலை எய்திய ஒருவரை ஜீவ சமாதி என்கிறோம் ஞானியரின் ஜீவசமாதியில் ஒரு விளக்கேற்றி வைத்து மனதை ஒருமுகப் படுத்தி தியானத்தில் அமர்ந்திருந்தால் அவர்களின் அருளுக்கு பாத்தியமாக முடியும், ஜீவ சமாதிகள் அருளாளர்களினால் போற்றிப் பாதுகாப்புடனும் சிறப்புடனும் நடத்தப்பட்டு வரப்படும், ஒரு உயிர் ஒட்டமுள்ள ஜீவசமாதியே மதுரை காகபுஜண்டர் - கூடல்மலை - மலையில் அமைந்துள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் சீடாரான அதன் அறக்கட்டளையுடன் இணைந்து பாமரிக்கப்பட்டு வரும் ஒரு ஜீவ சமாதிதான் சித்தர் சோமப்பர் சுவாமி சமாதி, சத்குரு சோமப்பர் சுவாமிகள் காலங்காலமாக காடுமேடெல்லாம் நடந்து,கடந்து உரண்டு திரண்டு கட்டிக்குளம் சூட்டுக்கோல் சித்தர் மாயாண்டி சுவாமிகளால் அடையாளம் காணப்பட்டு அவரிடம் வந்து சேர்ந்தார், பின் அன்னாரின் முக்கிய சீடாராகி சித்தர் மாயாண்டி சுவாமிகளின் ஆன்மீக பணிகளில் தானும் பங்கு கொண்டு அவர் தொடரும் பணிகளையும், அவர் விட்டு சென்ற பணிகளையும் அன்னாரின் ஆன்மீக கனவுகளையும் நிறைவேற்றி வைக்க் உறுதுணையாக இருந்தவர்,எங்கேயோ ஞானியாக சுற்றித்திரிந்த சோமப்பா சுவாமிகளை திருக்கூடல் மலைக்கு வரவழைத்ததே சித்தர் மாயாண்டி சுவாமிகள் தான், சோமப்பரை அடையாளம் கண்டு கொண்ட மாயாண்டி சுவாமிகள் தன் உபசீடர்களிடம் சோமப்பா சுவாமிகளை இவர் மிகப் பெரிய சித்த பருசர் என்று அறிமுகம் செய்து வைத்து, தன்னை எவ்வாறு பேணுகிறீகர்களோ அவ்வாறே அவரையும் கவனிக்க வேண்டுமேன பணித்தார்,சோமப்பாவைக் காணும் போதெல்லாம், மனம் இளகி அவருடன் உரையாடுவார் குருஜி, சோமப்பா சுவாமிகளும்,மாயாண்டி சுவாமிகளும் ஒரே காலத்தில் திருக்கூடல் மலையில் இருந்து ஆன்மீகப் பணிகளை ஆற்றி பக்தர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்தனர், மாயாண்டி சுவாமிகள் காலத்திற்கு பிறகு அவர் விட்ட பணிகளை சோமப்பர் தொடர்ந்து செய்து வந்தார், உயர் அந்தஸ்தில் உள்ள சிலர் அவரை கவரும் பொருட்டு சுய எண்ணங்கள் கொண்டோரைக் கண்டால் அவருக்கு பிடிக்காது அன்னார் கொண்டுவந்த பொருட்களை எட்டி உதைத்துவிடுவார், ஆனாலும் தன்னிடம் பக்திகொண்ட அன்பர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்தும், அன்னாருக்கு வரும் சாபக்கேடு மற்றும் துன்பங்களை முன்கூட்டியே மறைமுக வார்த்தைகளால் கூறிவிடுவார், மாயாண்டி சுவாமிகளைப் போலவே தானும் திருச்சமாதி ஆகும் தினத்தையும் நேரத்தையும் முன்கூட்டியே சொல்லி விட்டுத்தான் சமாதி ஆனார், ஆயிரக்கண்க்கான பக்தர்கள் கூடி இருக்க இவரது திருச்சமாதி நிகழ்வு நடந்தது, சோமப்பா சுவாமிகள் 1968ம் ஆண்டு ஆனி மாதம் மிருகசீரிட நட்சத்திரத்தில் ஆயிரக்கணக்கான அன்பர்கள் முன்னிலையில் சமாதியடைந்தார், அந்நாளிலேயே இன்றளவும் அன்னருக்கு குருபூசை சிறப்பாக நடைபெற்று வருகிறது, அமாவாசை மற்றும் பிரதோச பூசைகளும் அன்னார் சமாதியில் நடந்து வருகிறது, தூய உள்ளமும் நற்சிந்தனையும் இருப்பவர்களை இன்றைக்கும் சோமப்பா தன் ஜீவ சமாதிக்கு வரவழைத்து அருள் புரிகிறார், சித்தர்களை தரிசிப்பதில் ஆர்வம் உள்ள ஒவ்வொரும் அவசியம் தரிசிக்கவேண்டிய திருச்சமாதி இது, அமைதியான சுற்று சூழல் கொண்ட இயற்கையான அமைவிடம், இருப்பிடம்: மதுரையில் அமைந்திருக்கும் திருப்பரங்குன்றம் மலையின் எதிரில் அமைந்துள்ள திருக்கூடல மலை என்ற காகபுசண்டர் மலை தியாகராஜர் பொறியியல் கல்லூரி செல்லும் வழியில சூட்டுகோல் மயாண்டி ஜீவ சமாதி அடுத்து மலையில் ஏறும் வழியில் சோமப்பா சமாதி அமைந்துள்ளது, நன்றி அருள்மிகு சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கையேடு. சூட்டுக்கோல் இராமலிங்க விலாசம், மதுரை 05 மேலும் விபரம்: Web; www. soottukkole.org.

செவ்வாய், 30 ஜூலை, 2013

வாழ்த்துவேன் ஏற்றிடுவாய்


வாழ்த்துவேன் ஏற்றிடுவாய் ஐந்தொழில் புரிவனே ஐங்கரனின் அய்யனே இயமயத்தில் வாழ்வனே இதயத்தில் இருப்பவனே உமையவளுக்கு பாதியனே உண்மையின் பொருளோனே கங்கையினை கொண்டவனே கங்காதரன ஆனவனே நோயின்றி வாழ்ந்திடவே நூல்கள்பல செய்திடவே தாய்போல் பேணிடவே தகையெனுக்கு தந்திடவே பஞ்சாட்சர நாயகனே பரஞ்ஜோதியாய் ஆனவனே வாழ்த்துகிறேன் உன்னை ஏற்றிடுவாய் தயவுடனே வை, பூமாலை. சுந்தரபாண்டியம்

சனி, 27 ஜூலை, 2013

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்றும் சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதி.


கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்றும் சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதி. சித்தர்களை அறிவோம்: மகா சித்தர் கட்டிக்குளம் ஸ்ரீ சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் காகபுசுண்டர் மலை (திருக்கூடல்மலை) திருப்பரங்குன்றம், மதுரை...... மதுரைக்கு அருகில் இருக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் ஒரு மகத்துவம் உண்டு. பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவராகவும், காலங்களைக் கடந்து வாழ்ந்து வந்தவருமான காகபுசுண்டரின் (காகபுஜண்டர் என்றும் சொல்லப்படுவதுண்டு) பெயரிலேயே இங்கு ஒரு மலை அமைந்துள்ளது. ஆம்! அந்த மலையை காகபுசுண்டர் மலை என்றும் புசுண்டர் மலை என்றும் ஆன்மிக அன்பர்கள் தொன்றுதொட்டு அழைத்து வருகிறார்கள். மதுரையின் பெயரைத் தாங்கி, திருக்கூடல்மலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 300 அடி உயரம் கொண்டது இந்த மலை. இந்த காகபுசுண்டர் மலையில் அடிவாரத்தில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் சமாதி திருக்கோயிலும், மலைக்குச் செல்லும் வழியில் மாயாண்டி சுவாமிகளின் சீடரான சோமப்பா சுவாமிகளின் திருச்சமாதியும் அமைந்துள்ளது. தவிர வேலம்மாள், இருளப்பக் கோனார், மூக்கையா சுவாமிகள் இப்படி சுமார் பத்துக்கும் மேற்பட்ட சமாதிகள் இந்த காகபுசுண்டர் மலைப் பகுதியில் அமைந்துள்ளன. இந்த மலையின் புராணப் பெருமைகளை உணர்ந்த கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், இதைத் தன் தவப் பணிக்குத் தேர்ந்தெடுத்து இங்கே அமர்ந்தார். ‘காகபுசுண்டர் மலை, பழநிமலையைப் போன்றது’ என்றே மாயாண்டி சுவாமிகள் அடிக்கடி குறிப்பிடுவாராம். ‘குன்றக்குடியில் வெள்ளி ரதம் ஓடுவது போல் காகபுசுண்டர் மலையிலும் வெள்ளி ரதம் ஓடப் போகுது’ என்று சுவாமிகள் தன் காலத்தில் பக்தர்களிடம் அடிக்கடி கூறி வந்தாராம். சுவாமிகளின் திருவாக்கு மெய்யாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது அவரது பக்தர்களின் நம்பிக்கை. காகபுசுண்டர்மலையில் - என்னென்ன திருப்பணிகள் நடக்க வேண்டும் என்று மாயாண்டி சுவாமிகள் திட்டமிட்டாரோ, அவை அனைத்தும் இப்போது மெள்ள மெள்ளப் பூர்த்தி ஆகி வருகின்றன. மாயாண்டி சுவாமிகள் ஜீவ சமாதி திருக்கோயிலையும், காகபுசுண்டர் மலையையும் தற்போது நிர்வகித்து வருகிறது ‘சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம்’. இதன் செயலாளராக இருந்து வருபவர் இரா. தட்சிணாமூர்த்தி. மாயாண்டி சுவாமிகளுடன் உடன் இருந்து அவர் இட்ட திருப்பணிகளை எல்லாம் செய்து முடித்த இருளப்பக் கோனாரின் கொள்ளுப் பேரன் இவர். மலைக்கு மேல் ஸ்ரீதண்டாயுதபாணி ஸ்வாமி ஆலயம் கல் திருப்பணியாக நடந்து வருகிறது. மலை மேல் நடந்து செல்வதற்குப் படிகள் அமைத்திருக்கிறோம். விரைவில் கும்பாபிஷேகம் காண இருக்கிறது இந்த தண்டபாணி திருக்கோயில். மலை ஏறும்போது ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய ஸ்ரீநிவாசப் பெருமாள், ஆஞ்சநேயர் ஆகிய திருச்சந்நிதிகளைத் தரிசிக்கலாம். மலை உச்சியில் தனிச் சந்நிதியில் கோலாகலமாக வீற்றிருக்கிறார் ஸ்ரீதண்டபாணி. தவிர ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமீனாட்சி- சுந்தரேஸ்வரர், பள்ளிகொண்ட பெருமாள் ஆகியோருக்கும் இங்கே சந்நிதிகள் உண்டு. இதை எல்லாம் செய்வது நாங்கள்தான் என்றால், அது உண்மை அல்ல. சுவாமிகள் எங்களுடன் இருந்து ஒவ்வொரு பணியையும் நிறைவேற்றிக் கொள்கிறார் என்றே சொல்ல வேண்டும்” என்றார் அடக்கத்தோடு. எங்கே இருக்கிறது காகபுசுண்டர் மலை? சோமசுந்தரப் பெருமானும் அன்னை மீனாட்சியும் அருளும் மதுரை மாநகரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றத்தில் அமைந்திருக்கிறது காகபுசுண்டர் மலை. திருப்பரங்குன்றத்துக்குள் வந்து விட்டால், மலை மேல் இருக்கும் ஸ்ரீதண்டபாணி பெருமான் திருக்கோயிலை எங்கிருந்து வேண்டுமானாலும், காண முடியும். தியாகராஜர் பொறியியற் கல்லூரியில் இருந்து சுமார் பத்து நிமிட நடை தூரம். காகபுசுண்டர் மலை உச்சியில் ஸ்ரீதண்டபாணியைத் தரிசிக்கச் சென்றால், அறுபடை வீடுகளுள் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆலயத்தில் பூஜைக்கான மணி ஓசை ஒலிப்பதைத் துல்லியமாகக் கேட்க முடிகிறது. ஆனந்தமான சூழல். ரம்மியமான காட்சிகள். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் அனைத்துக் கோபுரங்களையும், காகபுசுண்டர் மலையின் உச்சியில் இருந்து தரிசிக்க முடியும். மதுரையில் இருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கிறது திருப்பாச்சேத்தி. இங்கிருந்து தென்புறம் சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அழகிய கிராமம் கட்டிக்குளம். பல ஞானியர் இங்கே சமாதி கொண்டுள்ளனர். அந்தக் காலத்தில் - அதாவது போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் நடையாத்திரையாக ராமேஸ்வரம் செல்லும் சாதுக்களும் ஆன்மிக அன்பர்களும் தங்கிச் செல்வதற்கு திருமடங்கள் கட்டிக்குளத்தில் இருந்தன. உணவருந்தவும், ஓய்வெடுக்கவும் இந்தத் திருமடங்களை சாதுக்களும் யாத்ரீகர்களும் பயன்படுத்தி வந்தனர். கட்டிக்குளத்தில் அப்போது இருந்து வந்தவர் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் எனும் சித்த புருஷர். இவர் கையில் வைத்திருக்கும் சூட்டுக்கோல் நல்லவர்களுக்கு நன்மை தருவதாகவும், தீயவர்களுக்குத் தண்டனை தருவதாகவும் இருந்தது. ராமலிங்க சுவாமிகளின் காலத்துக்குப் பிறகு இந்த சூட்டுக்கோல் அவரது சீடரான செல்லப்ப சுவாமிகளிடமும், அதன் பின் அவரது சீடரான மாயாண்டி சுவாமிகளிடமும் வந்தது. இன்றைக்கும் இந்த சூட்டுக்கோலை மாயாண்டி சுவாமிகளின் சமாதியில் தரிசிக்கலாம். மாயாண்டி சுவாமிகளின் அவதா-ரத்துக்கு வருவோம். கட்டிக்குளத்தில் குப்பமுத்து வேளாளர் - கூத்தாயி அம்மாள் தம்பதியர் வசித்து வந்தனர். மண்பாண்டம் செய்வது இவர்கள் தொழில். தவிர, உள்ளூரில் இருந்த ஐயனார் கோயிலில் பூசாரியாகவும் இருந்தார் குப்பமுத்து. சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் பக்தர்களாக இருந்தனர் இந்தத் தம்பதியர். அவ்வப்போது சுவாமிகளின் தரிசனம் பெற்று வந்தனர். ஒரு முறை ராமலிங்க சுவாமிகளிடம் திருவருட் பிரசாதம் பெற்ற பாக்கியத்தால், கூத்தாயி அம்மாளுக்கு காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரன்று (1858 ஜூலை) ஆண் குழந்தை பிறந்தது. அகிலத்தையே ஆளப் பிறந்த அந்த மகவுக்கு ‘மாயாண்டி’ எனப் பெயரிட்டனர். இளம் வயதிலேயே இறை ஞானம் கிடைக்கப் பெற்றது மாயாண்டிக்கு. பெற்றோரும் இதை உணரும் சம்பவம் ஒன்றும் விரைவிலேயே நடந்தது. தான் பூஜை செய்யும் உள்ளூர் ஐயனார் கோயிலுக்கு சிறுவனான மாயாண்டியையும் கூட்டிச் செல்வது குப்பமுத்துவின் வழக்கம். அப்படி ஒரு நாள் கூட்டிச் சென்றபோது மகனை வெளிக் கூடத்தில் அமர்த்தி வைத்து விட்டு, ஐயனார் பூஜைக்காகக் கருவறைக்குள் சென்றார் குப்பமுத்து. ஐயனாரின் திருமந்திரங்களைச் சொல்லி அவருக்கு அபிஷேக ஆராதனைகளை முடித்து விட்டு வியர்வை சொட்ட வெளியே வந்த குப்பமுத்து அதிர்ந்தார். அவர் கண்ட காட்சி பதற வைத்தது. குத்துக்காலிட்டுத் தியானத்தில் அமர்ந்திருந்த சிறுவன் மாயாண்டியின் தலைக்கு மேலே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடாமல் அசையாமல் இருந்தது. அதன் உடற் பகுதியும் வால் பகுதியும் சிறுவனின் உடலைச் சுற்றி இருந்தன. கடும் விஷம் உள்ள நாகம் மகனைக் கொத்திவிடப் போகிறதோ என்கிற பீதியில், “ஐயனாரப்பா... எம் மகனைக் காப்பாத்து” என்று கருவறையை நோக்கி ஓங்கிக் குரல் கொடுத்தார் குப்பமுத்து. பிஞ்சு மகனைப் பார்க்க வாஞ்சையுடனும் பயத்துடனும் திரும்பினார். என்னே அதிசயம்! நாகத்தைக் காணோம். தியானத்தில் இருந்து அப்போதுதான் மீண்டிருந்தான் மாயாண்டி. ‘மகனிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருக்கிறது’ என்பதை அப்போது உணர்ந்து கொண்ட குப்பமுத்து, அவனை அப்படியே வாரி அணைத்துக் கொண்டார். இதே போன்ற சம்பவங்கள் பின்வந்த நாட்களிலும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் விஷயம் ஊருக்குள் பரவி, மாயாண்டியை ஒரு தெய்வ சக்தியாகவே அனைவரும் பார்க்க ஆரம்பித்தனர். பள்ளிப் படிப்பு ஒரு பக்கம்; ஆன்மிகத் தேடல் மறுபக்கம் என இருந்தார் மாயாண்டி. தன் வீட்டில் இருந்த பரம்பரைச் சொத்தான வைத்தியச் சுவடிகளையும், சித்தர் நூல் தொகுதிகளையும் தூசி தட்டி எடுத்துப் படித்தார். வியந்தார். அவ்வப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று அதிகாலை பூஜையையும், அர்த்தஜாம பூஜையையும் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டார் மாயாண்டி. இந்தக் காலத்தில் பெற்றோரின் வற்புறுத்தலால், புளியங்குடியைச் சேர்ந்த மீனாட்சி எனும் உறவுக்காரப் பெண்மணி, இவருக்கு மனைவியாக வாய்த்தாள். இல்லற வாழ்க்கையில் ஒரு மகனும் மகளும் உண்டு. ஒரு முறை பழநி யாத்திரைக்குச் செல்லக் கையில் பணம் இல்லாததால், மனைவி அணிந்திருந்த தங்க ஆபரணங்களை விற்று, யாத்திரையை மேற்கொண்டார். மாயாண்டியின் ஆன்மிகத் தேடுதல்களுக்கு எந்தத் தடையும் போட்டதில்லை அவரது மனைவி. தவிர, தன் கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு ராமேஸ்வரம் செல்லும் சாதுக்களுக்கு அவ்வப்போது உணவளித்தும் மகிழ்ந்தார் மாயாண்டி. மாயாண்டி சுவாமிகளை இறைவன் எந்தப் பணிக்காக அனுப்பி இருக்கிறான் என்பது, அவனுக்கு மட்டும்தானே தெரியும்?! இல்லறத்திலேயே இவன் இருந்து விட்டால், எதிர்கால சமுதாயத்துக்கு என்ன பயனை செய்து விட முடியும்? மாயாண்டியை இறைவன் ஆட்கொண்டான். விளைவு - இல்லறம் இனிக்கவில்லை. தவத்திலும் யோகத்திலும் காலத்தை ஓட்டினார். சிட்டாய்ப் பறக்க விரும்பினார். தவத்திலும் சமாதி நிலையில் உடல் கூட வேண்டும் என்று விரும்பினார். அதற்கு முன் தீட்சை பெற வேண்டுமே! உபதேசம் செய்வதற்கு ஒரு குரு வேண்டுமே! இந்த வேளையில்தான் ராமேஸ்வரத்துக்கு யாத்திரை சென்று கொண்டிருந்த தஞ்சாக்கூர் செல்லப்ப சுவாமிகள் என்பவர், கட்டிக்குளம் வந்தார். அவரைச் சந்தித்துத் தன்னை சீடனாக்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். செல்லப்ப சுவாமிகளும் மாயாண்டியை அரவணைத்து அவருக்கு உபதேசம் செய்து வைத்தார். துறவறத்துக்கான திறவுகோல் கிடைத்தாகி விட்டது. ஆனால், இல்லறத்தில் இருக்கும் மனைவி மற்றும் பெற்றோர் ஆகியோர் இந்த முடிவுக்கு உடன்படுவார்களா? இல்லையே! துறவறம் ஏற்று வீட்டை விட்டுப் புறப்படும் முடிவில் இருந்த மாயாண்டியை எவ்வளவோ தடுத்து நிறுத்தப் பார்த்தார்கள் பெற்றோரும், மனைவியும். ஆனால், மாயாண்டி சுவாமிகள் மசியவில்லை. தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து, கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார். சித்தமெல்லாம் சிவ மயம்! கன்யாகுமரி, கோட்டாறு, சுசீந்திரம், பொதியமலை, ராமநாதபுரம், ராமேஸ்வரம், உத்தரகோசமங்கை உட்பட பல திருத்தலங்களைத் தரிசித்தார். ஆங்காங்கே சமாதி நிலையில் கூடினார். மதுரை மீனாட்சி அம்மனும், திருப்பரங்குன்ற முருகனும் அவரை ஈர்த்தனர். இறுதியாக, அவர் வந்து சேர்ந்தது திருக்கூடல்மலை எனப்படும் காகபுசுண்டர் மலைக்கு. இந்த மலையில் உலவும் சித்தர்களோடு கலந்து பேசினார். அரூப நிலையில் இருக்கும் சித்தர்களும் மாயாண்டி சுவாமிகளுக்கு ஆசி வழங்கினர். காகபுசுண்டர் மலையைத் தன் நிரந்தர வாசஸ்தலமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அவருக்குள் ஒரு அருள் வாக்கு எழுந்தது. சௌமிய வருடம் பங்குனி மாதம் சஷ்டி தினத்தன்று இரவு ஒன்பது மணிக்கு விளாச்சேரி பெரியசாமி சிவாச்சார்யர், விராட்டிப்பத்து பொன்னையா சுவாமிகள் மற்றும் சில அடியார்களோடு திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்றார். தரிசனம் செய்தார். அன்றைய இரவுப் பொழுதை சரவணப் பொய்கையில் கழிக்க விரும்பினார். ஈசான்ய மூலையில் உள்ள படித்துறையில் தங்கி, விடிந்ததும் முருகப் பெருமானை தியானித்து குளத்தில் மூழ்கினார். மண் எடுத்தார். அதை ஒரு சிவலிங்கமாகப் பிடித்து, காகபுசுண்டர் மலையின் மேல் பக்கம் தான் தங்கும் குகையில் பிரதிஷ்டை செய்தார். காகபுசுண்டர் மலை அன்றைய தினத்தில் இருந்து மேலும் புனிதத்தைப் பெற்றது. மாயாண்டி சுவாமிகள் ஸித்து விளையாட்டுகள் துவங்கின. தரிசனம் செய்ய வாருங்கள்!தலம்: திருப்பரங்குன்றம் காகபுசுண்டர் மலை எனும் திருக்கூடல்மலை. சிறப்பு: கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்றும் சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதி. எங்கே இருக்கிறது?: மதுரை மாநகரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றத்தில் அமைந்திருக்கிறது காகபுசுண்டர் மலை. எப்படிப் போவது?: மதுரையில் அமைந்திருக்கும் பெரியார் பேருந்து நிலையம், மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து திருப்பரங்குன்றத்துக்குப் பேருந்து வசதி அடிக்கடி உண்டு. திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டு, அங்கிருந்து பத்து நிமிடங்கள் நடந்தால், காகபுசுண்டர் மலை வந்து விடும்

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்றும் சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதி.


சித்தர்களை அறிவோம்: மகா சித்தர் கட்டிக்குளம் ஸ்ரீ சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் காகபுசுண்டர் மலை (திருக்கூடல்மலை) திருப்பரங்குன்றம், மதுரை...... மதுரைக்கு அருகில் இருக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் ஒரு மகத்துவம் உண்டு. பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவராகவும், காலங்களைக் கடந்து வாழ்ந்து வந்தவருமான காகபுசுண்டரின் (காகபுஜண்டர் என்றும் சொல்லப்படுவதுண்டு) பெயரிலேயே இங்கு ஒரு மலை அமைந்துள்ளது. ஆம்! அந்த மலையை காகபுசுண்டர் மலை என்றும் புசுண்டர் மலை என்றும் ஆன்மிக அன்பர்கள் தொன்றுதொட்டு அழைத்து வருகிறார்கள். மதுரையின் பெயரைத் தாங்கி, திருக்கூடல்மலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 300 அடி உயரம் கொண்டது இந்த மலை. இந்த காகபுசுண்டர் மலையில் அடிவாரத்தில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் சமாதி திருக்கோயிலும், மலைக்குச் செல்லும் வழியில் மாயாண்டி சுவாமிகளின் சீடரான சோமப்பா சுவாமிகளின் திருச்சமாதியும் அமைந்துள்ளது. தவிர வேலம்மாள், இருளப்பக் கோனார், மூக்கையா சுவாமிகள் இப்படி சுமார் பத்துக்கும் மேற்பட்ட சமாதிகள் இந்த காகபுசுண்டர் மலைப் பகுதியில் அமைந்துள்ளன. இந்த மலையின் புராணப் பெருமைகளை உணர்ந்த கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், இதைத் தன் தவப் பணிக்குத் தேர்ந்தெடுத்து இங்கே அமர்ந்தார். ‘காகபுசுண்டர் மலை, பழநிமலையைப் போன்றது’ என்றே மாயாண்டி சுவாமிகள் அடிக்கடி குறிப்பிடுவாராம். ‘குன்றக்குடியில் வெள்ளி ரதம் ஓடுவது போல் காகபுசுண்டர் மலையிலும் வெள்ளி ரதம் ஓடப் போகுது’ என்று சுவாமிகள் தன் காலத்தில் பக்தர்களிடம் அடிக்கடி கூறி வந்தாராம். சுவாமிகளின் திருவாக்கு மெய்யாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது அவரது பக்தர்களின் நம்பிக்கை. காகபுசுண்டர்மலையில் - என்னென்ன திருப்பணிகள் நடக்க வேண்டும் என்று மாயாண்டி சுவாமிகள் திட்டமிட்டாரோ, அவை அனைத்தும் இப்போது மெள்ள மெள்ளப் பூர்த்தி ஆகி வருகின்றன. மாயாண்டி சுவாமிகள் ஜீவ சமாதி திருக்கோயிலையும், காகபுசுண்டர் மலையையும் தற்போது நிர்வகித்து வருகிறது ‘சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம்’. இதன் செயலாளராக இருந்து வருபவர் இரா. தட்சிணாமூர்த்தி. மாயாண்டி சுவாமிகளுடன் உடன் இருந்து அவர் இட்ட திருப்பணிகளை எல்லாம் செய்து முடித்த இருளப்பக் கோனாரின் கொள்ளுப் பேரன் இவர். மலைக்கு மேல் ஸ்ரீதண்டாயுதபாணி ஸ்வாமி ஆலயம் கல் திருப்பணியாக நடந்து வருகிறது. மலை மேல் நடந்து செல்வதற்குப் படிகள் அமைத்திருக்கிறோம். விரைவில் கும்பாபிஷேகம் காண இருக்கிறது இந்த தண்டபாணி திருக்கோயில். மலை ஏறும்போது ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய ஸ்ரீநிவாசப் பெருமாள், ஆஞ்சநேயர் ஆகிய திருச்சந்நிதிகளைத் தரிசிக்கலாம். மலை உச்சியில் தனிச் சந்நிதியில் கோலாகலமாக வீற்றிருக்கிறார் ஸ்ரீதண்டபாணி. தவிர ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமீனாட்சி- சுந்தரேஸ்வரர், பள்ளிகொண்ட பெருமாள் ஆகியோருக்கும் இங்கே சந்நிதிகள் உண்டு. இதை எல்லாம் செய்வது நாங்கள்தான் என்றால், அது உண்மை அல்ல. சுவாமிகள் எங்களுடன் இருந்து ஒவ்வொரு பணியையும் நிறைவேற்றிக் கொள்கிறார் என்றே சொல்ல வேண்டும்” என்றார் அடக்கத்தோடு. எங்கே இருக்கிறது காகபுசுண்டர் மலை? சோமசுந்தரப் பெருமானும் அன்னை மீனாட்சியும் அருளும் மதுரை மாநகரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றத்தில் அமைந்திருக்கிறது காகபுசுண்டர் மலை. திருப்பரங்குன்றத்துக்குள் வந்து விட்டால், மலை மேல் இருக்கும் ஸ்ரீதண்டபாணி பெருமான் திருக்கோயிலை எங்கிருந்து வேண்டுமானாலும், காண முடியும். தியாகராஜர் பொறியியற் கல்லூரியில் இருந்து சுமார் பத்து நிமிட நடை தூரம். காகபுசுண்டர் மலை உச்சியில் ஸ்ரீதண்டபாணியைத் தரிசிக்கச் சென்றால், அறுபடை வீடுகளுள் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆலயத்தில் பூஜைக்கான மணி ஓசை ஒலிப்பதைத் துல்லியமாகக் கேட்க முடிகிறது. ஆனந்தமான சூழல். ரம்மியமான காட்சிகள். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் அனைத்துக் கோபுரங்களையும், காகபுசுண்டர் மலையின் உச்சியில் இருந்து தரிசிக்க முடியும். மதுரையில் இருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கிறது திருப்பாச்சேத்தி. இங்கிருந்து தென்புறம் சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அழகிய கிராமம் கட்டிக்குளம். பல ஞானியர் இங்கே சமாதி கொண்டுள்ளனர். அந்தக் காலத்தில் - அதாவது போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் நடையாத்திரையாக ராமேஸ்வரம் செல்லும் சாதுக்களும் ஆன்மிக அன்பர்களும் தங்கிச் செல்வதற்கு திருமடங்கள் கட்டிக்குளத்தில் இருந்தன. உணவருந்தவும், ஓய்வெடுக்கவும் இந்தத் திருமடங்களை சாதுக்களும் யாத்ரீகர்களும் பயன்படுத்தி வந்தனர். கட்டிக்குளத்தில் அப்போது இருந்து வந்தவர் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் எனும் சித்த புருஷர். இவர் கையில் வைத்திருக்கும் சூட்டுக்கோல் நல்லவர்களுக்கு நன்மை தருவதாகவும், தீயவர்களுக்குத் தண்டனை தருவதாகவும் இருந்தது. ராமலிங்க சுவாமிகளின் காலத்துக்குப் பிறகு இந்த சூட்டுக்கோல் அவரது சீடரான செல்லப்ப சுவாமிகளிடமும், அதன் பின் அவரது சீடரான மாயாண்டி சுவாமிகளிடமும் வந்தது. இன்றைக்கும் இந்த சூட்டுக்கோலை மாயாண்டி சுவாமிகளின் சமாதியில் தரிசிக்கலாம். மாயாண்டி சுவாமிகளின் அவதா-ரத்துக்கு வருவோம். கட்டிக்குளத்தில் குப்பமுத்து வேளாளர் - கூத்தாயி அம்மாள் தம்பதியர் வசித்து வந்தனர். மண்பாண்டம் செய்வது இவர்கள் தொழில். தவிர, உள்ளூரில் இருந்த ஐயனார் கோயிலில் பூசாரியாகவும் இருந்தார் குப்பமுத்து. சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் பக்தர்களாக இருந்தனர் இந்தத் தம்பதியர். அவ்வப்போது சுவாமிகளின் தரிசனம் பெற்று வந்தனர். ஒரு முறை ராமலிங்க சுவாமிகளிடம் திருவருட் பிரசாதம் பெற்ற பாக்கியத்தால், கூத்தாயி அம்மாளுக்கு காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரன்று (1858 ஜூலை) ஆண் குழந்தை பிறந்தது. அகிலத்தையே ஆளப் பிறந்த அந்த மகவுக்கு ‘மாயாண்டி’ எனப் பெயரிட்டனர். இளம் வயதிலேயே இறை ஞானம் கிடைக்கப் பெற்றது மாயாண்டிக்கு. பெற்றோரும் இதை உணரும் சம்பவம் ஒன்றும் விரைவிலேயே நடந்தது. தான் பூஜை செய்யும் உள்ளூர் ஐயனார் கோயிலுக்கு சிறுவனான மாயாண்டியையும் கூட்டிச் செல்வது குப்பமுத்துவின் வழக்கம். அப்படி ஒரு நாள் கூட்டிச் சென்றபோது மகனை வெளிக் கூடத்தில் அமர்த்தி வைத்து விட்டு, ஐயனார் பூஜைக்காகக் கருவறைக்குள் சென்றார் குப்பமுத்து. ஐயனாரின் திருமந்திரங்களைச் சொல்லி அவருக்கு அபிஷேக ஆராதனைகளை முடித்து விட்டு வியர்வை சொட்ட வெளியே வந்த குப்பமுத்து அதிர்ந்தார். அவர் கண்ட காட்சி பதற வைத்தது. குத்துக்காலிட்டுத் தியானத்தில் அமர்ந்திருந்த சிறுவன் மாயாண்டியின் தலைக்கு மேலே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடாமல் அசையாமல் இருந்தது. அதன் உடற் பகுதியும் வால் பகுதியும் சிறுவனின் உடலைச் சுற்றி இருந்தன. கடும் விஷம் உள்ள நாகம் மகனைக் கொத்திவிடப் போகிறதோ என்கிற பீதியில், “ஐயனாரப்பா... எம் மகனைக் காப்பாத்து” என்று கருவறையை நோக்கி ஓங்கிக் குரல் கொடுத்தார் குப்பமுத்து. பிஞ்சு மகனைப் பார்க்க வாஞ்சையுடனும் பயத்துடனும் திரும்பினார். என்னே அதிசயம்! நாகத்தைக் காணோம். தியானத்தில் இருந்து அப்போதுதான் மீண்டிருந்தான் மாயாண்டி. ‘மகனிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருக்கிறது’ என்பதை அப்போது உணர்ந்து கொண்ட குப்பமுத்து, அவனை அப்படியே வாரி அணைத்துக் கொண்டார். இதே போன்ற சம்பவங்கள் பின்வந்த நாட்களிலும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் விஷயம் ஊருக்குள் பரவி, மாயாண்டியை ஒரு தெய்வ சக்தியாகவே அனைவரும் பார்க்க ஆரம்பித்தனர். பள்ளிப் படிப்பு ஒரு பக்கம்; ஆன்மிகத் தேடல் மறுபக்கம் என இருந்தார் மாயாண்டி. தன் வீட்டில் இருந்த பரம்பரைச் சொத்தான வைத்தியச் சுவடிகளையும், சித்தர் நூல் தொகுதிகளையும் தூசி தட்டி எடுத்துப் படித்தார். வியந்தார். அவ்வப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று அதிகாலை பூஜையையும், அர்த்தஜாம பூஜையையும் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டார் மாயாண்டி. இந்தக் காலத்தில் பெற்றோரின் வற்புறுத்தலால், புளியங்குடியைச் சேர்ந்த மீனாட்சி எனும் உறவுக்காரப் பெண்மணி, இவருக்கு மனைவியாக வாய்த்தாள். இல்லற வாழ்க்கையில் ஒரு மகனும் மகளும் உண்டு. ஒரு முறை பழநி யாத்திரைக்குச் செல்லக் கையில் பணம் இல்லாததால், மனைவி அணிந்திருந்த தங்க ஆபரணங்களை விற்று, யாத்திரையை மேற்கொண்டார். மாயாண்டியின் ஆன்மிகத் தேடுதல்களுக்கு எந்தத் தடையும் போட்டதில்லை அவரது மனைவி. தவிர, தன் கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு ராமேஸ்வரம் செல்லும் சாதுக்களுக்கு அவ்வப்போது உணவளித்தும் மகிழ்ந்தார் மாயாண்டி. மாயாண்டி சுவாமிகளை இறைவன் எந்தப் பணிக்காக அனுப்பி இருக்கிறான் என்பது, அவனுக்கு மட்டும்தானே தெரியும்?! இல்லறத்திலேயே இவன் இருந்து விட்டால், எதிர்கால சமுதாயத்துக்கு என்ன பயனை செய்து விட முடியும்? மாயாண்டியை இறைவன் ஆட்கொண்டான். விளைவு - இல்லறம் இனிக்கவில்லை. தவத்திலும் யோகத்திலும் காலத்தை ஓட்டினார். சிட்டாய்ப் பறக்க விரும்பினார். தவத்திலும் சமாதி நிலையில் உடல் கூட வேண்டும் என்று விரும்பினார். அதற்கு முன் தீட்சை பெற வேண்டுமே! உபதேசம் செய்வதற்கு ஒரு குரு வேண்டுமே! இந்த வேளையில்தான் ராமேஸ்வரத்துக்கு யாத்திரை சென்று கொண்டிருந்த தஞ்சாக்கூர் செல்லப்ப சுவாமிகள் என்பவர், கட்டிக்குளம் வந்தார். அவரைச் சந்தித்துத் தன்னை சீடனாக்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். செல்லப்ப சுவாமிகளும் மாயாண்டியை அரவணைத்து அவருக்கு உபதேசம் செய்து வைத்தார். துறவறத்துக்கான திறவுகோல் கிடைத்தாகி விட்டது. ஆனால், இல்லறத்தில் இருக்கும் மனைவி மற்றும் பெற்றோர் ஆகியோர் இந்த முடிவுக்கு உடன்படுவார்களா? இல்லையே! துறவறம் ஏற்று வீட்டை விட்டுப் புறப்படும் முடிவில் இருந்த மாயாண்டியை எவ்வளவோ தடுத்து நிறுத்தப் பார்த்தார்கள் பெற்றோரும், மனைவியும். ஆனால், மாயாண்டி சுவாமிகள் மசியவில்லை. தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து, கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார். சித்தமெல்லாம் சிவ மயம்! கன்யாகுமரி, கோட்டாறு, சுசீந்திரம், பொதியமலை, ராமநாதபுரம், ராமேஸ்வரம், உத்தரகோசமங்கை உட்பட பல திருத்தலங்களைத் தரிசித்தார். ஆங்காங்கே சமாதி நிலையில் கூடினார். மதுரை மீனாட்சி அம்மனும், திருப்பரங்குன்ற முருகனும் அவரை ஈர்த்தனர். இறுதியாக, அவர் வந்து சேர்ந்தது திருக்கூடல்மலை எனப்படும் காகபுசுண்டர் மலைக்கு. இந்த மலையில் உலவும் சித்தர்களோடு கலந்து பேசினார். அரூப நிலையில் இருக்கும் சித்தர்களும் மாயாண்டி சுவாமிகளுக்கு ஆசி வழங்கினர். காகபுசுண்டர் மலையைத் தன் நிரந்தர வாசஸ்தலமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அவருக்குள் ஒரு அருள் வாக்கு எழுந்தது. சௌமிய வருடம் பங்குனி மாதம் சஷ்டி தினத்தன்று இரவு ஒன்பது மணிக்கு விளாச்சேரி பெரியசாமி சிவாச்சார்யர், விராட்டிப்பத்து பொன்னையா சுவாமிகள் மற்றும் சில அடியார்களோடு திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்றார். தரிசனம் செய்தார். அன்றைய இரவுப் பொழுதை சரவணப் பொய்கையில் கழிக்க விரும்பினார். ஈசான்ய மூலையில் உள்ள படித்துறையில் தங்கி, விடிந்ததும் முருகப் பெருமானை தியானித்து குளத்தில் மூழ்கினார். மண் எடுத்தார். அதை ஒரு சிவலிங்கமாகப் பிடித்து, காகபுசுண்டர் மலையின் மேல் பக்கம் தான் தங்கும் குகையில் பிரதிஷ்டை செய்தார். காகபுசுண்டர் மலை அன்றைய தினத்தில் இருந்து மேலும் புனிதத்தைப் பெற்றது. மாயாண்டி சுவாமிகள் ஸித்து விளையாட்டுகள் துவங்கின. தரிசனம் செய்ய வாருங்கள்!தலம்: திருப்பரங்குன்றம் காகபுசுண்டர் மலை எனும் திருக்கூடல்மலை. சிறப்பு: கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்றும் சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதி. எங்கே இருக்கிறது?: மதுரை மாநகரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றத்தில் அமைந்திருக்கிறது காகபுசுண்டர் மலை. எப்படிப் போவது?: மதுரையில் அமைந்திருக்கும் பெரியார் பேருந்து நிலையம், மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து திருப்பரங்குன்றத்துக்குப் பேருந்து வசதி அடிக்கடி உண்டு. திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டு, அங்கிருந்து பத்து நிமிடங்கள் நடந்தால், காகபுசுண்டர் மலை வந்து விடும்

செவ்வாய், 23 ஜூலை, 2013

திருமூலரின் திருமந்திரத்தில் சித்த வைத்தியம்


திருமூலரின் திருமந்திரத்தில் சித்த வைத்தியம் மேகரோகம் தீர வழி மேகநோய் இருபத்தொன்றும், அபிரேகமாம் செந்தூரத்தில் சீந்தில் சக்கரையும், அன்றே கடைந்தெடுத்த வெண்ணெயையும், சேர்த்து உண்டால் மேகநோய் தீரும் பாடல் பார்த்திடும் மேகம் பகர்இருபத்தொன்றும் போற்றிடும் அப்பிரகம் பொலிவான சிந்தூரம் சேர்த்திடும் சீந்தில் செவ்வாய் சருக்கரை மாற்றிடு வெண்ணெயில் மாமேகம் போகுமே ,,, திருமூலர்

புதன், 17 ஜூலை, 2013


அம்மன் கோவில் ஆண்டின் ஆடிமாதம் என்றாலே அம்மன் கோவில்களில் விசேசம்தான், சங்கரன்கோவில் சங்கரநாயினார் கோவிலில் அருள்மிகு கோமதி அம்மை ஈஸ்வரனை வேண்டி தவமிருந்த ஆடி தவசு நாளும் இம் ஆடி மாதத்தில்தான். கோதை பிறந்த ஊர் கோவிந்த வாழ்ந்த ஊரான வில்லிபுத்தூரில் சூடிக் கொடுத்த சூடர்ளெகொடிஆண்டாள் பள்ளிகொண்ட எம்பெருமான் ரெங்கமன்னரை ஈர்த்து சூடிக்கொண்ட ஆடிப்பூரம் இம்மாதத்தில்தான்,மழை தரும் அன்னை மாரியம்மன் இருக்கண்குடியில் உள்ள மாரிக்கும் இம்மாத வெள்ளிக்கிழமைகளில்தான் மிக சிறப்பு நாளாகும், அதே போலவே சுந்தரபாண்டியம் கோவநேரி கண்மாயின் வடகரை அருகில் அமைந்து சுந்தரபாண்டியத்தின் காவல் தெய்வமாகவும், கிராம தேவதையாகவும் இருந்து தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கெல்லாம் வேண்டிய வரம் - அருள் தந்து காத்திடும் தெய்வம் கல்யாணி அம்மன் என்று நம்மால் செல்லமாக அழைக்கப்படும் வெயிலுகந்தம்மன் அன்னைக்கும் இந்த ஆடி வெள்ளிக்கிழமைகளே உகந்தனவாகும், இம்மாத வெள்ளிக்கிழமைகளில் அன்னை அலங்கார , ஓங்கார ஜோதியாக காட்சி தந்து தன்னை வேண்டிவரும் பக்தர்களுக்கு கண்ணொளி, மழலைச் செல்வங்கள் வேண்டுவோருக்கு மழலை செல்வம் தந்தும், உற்ற நோய் நீக்கும் வெயிலுகந்த அம்மனாகவும் மேல் கூரையின்றி, சூரியனின் ஒளிக்கதிர்களையே தனது ஆபரணங்களாகக் கொண்டு விளங்கும் அன்னை பராசக்தி வெயிலுகந்தம்மன் இம்மாத வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகளில் பங்கு கொண்டு அம்மன் அருள் பெறலாம், ஓம் சக்தி ,,, அதுவே பராசக்தி ,,,,,, கல்யாணி அம்மனின் ஒளி சக்தி அன்புடன் வை, பூமாலை சுந்தரபாண்டியம்

சனி, 13 ஜூலை, 2013

ஆடல்வல்லான் நடராஜர்


ஆடல்வல்லான் நடராஜர் இடைவிடாது நடனமாடி படைத்தல்,காத்தல்,அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழில்களால் உலகத்தை இயக்குகிறார், அவரது வலக்கையில் இருக்கும் உடுக்கை படைத்தலையும், அபயகரம் காத்தலையும், இடக்கை நெருப்பு அழித்தலையும், ஊன்றிய திருவடி மறைத்தலையும், தூக்கிய திருவடி அருளலையும் குறிக்கும், நடராஜருக்கு ஆண்டு தோறும் 6 முறை அபிேசகம் நடைபெறும் அதில் சிறப்பு வாய்ந்தது மார்கழி திருவாதிைரயும் ஆனி உத்திரம் நட்சத்தில் நடைபெறும ஆனி திருமஞ்சனமாகும்

வியாழன், 11 ஜூலை, 2013

திருநீற்றின் பெருமை


திருநீறு தரும் பெருமை

திருநீறறுப்பதிகம்
மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு, சமயத்திலுள்ளது நீறு
செந்தூர்வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே " ஞானசம்பந்தர்


உலகலாவிய சமயங்களில் மிகவும் தொண்மைவாய்ந்தது இந்து சமயம் அதில் முதன்மையானது சைவமும் ஆகும், சைவமும் சிவமும் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டிருப்பது, சைவம் இல்லையேல் சிவம் இல்லை, இந்த சைவத்தின் முக்கிய ஆதார அடையாளமாக திகழ்பவை மூன்று
அவை - 1) திருநீறு, 2) திரு ருத்திராட்சம், 3) திரு சடாமுடி
இதில் திருநீறு என்பது எல்லோராலும் எளிதல் அணியக்கூடியது,
அடுத்தது திரு ருத்திராட்சம் இது சற்று பக்குவம் அடைந்தவர்கள் மற்றும் சைவ மதத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள் மட்டும் அணிவதுண்டு, மூன்றாவதாக உள்ள சடைமுடி என்பது சைவத்தில் மிக பக்கவம் அடைந்தவர்கள் மற்றும் சித்தி யோக நிலையில் உள்ளவர்கள், மற்றும் துறவறம் பரிந்தவர்கள் தான் இதனை தரித்துள்ளனர் எனவே இது சிவயோக சித்தர்கள் ஞானிகள் மற்றும் எதிலும் பற்றற்ற நிலையில் உள்ளவர்கள் தான் இதனை கொண்டுள்ளனர் எனவே சைவத்தில் யாவராலும் எளிதில் அணியக்கூடியதும் எல்லோராலும் ஏற்று தினமும் புத்தம் புதியதாய் அணியக்கூடியதும் , திரு நீறு மட்டுமே,
       ஆடவருக்கு அழகு நெற்றியில் திருநீறு - மங்கையர்க்கு அழகு நெற்றியில் குங்கமும் ஆகும் இதனையே சுந்தரமூர்த்தி நாயனாரும் திருத்தொண்டத் தொகையிலும் மும்மையால் உலகயாண்ட மூர்த்திக்கும் அடிமை என்பதால் இந்த மூன்று அடையாளங்களுக்குள்ள பெருமை நன்கு விளங்கும், சைவ சமயத்தில் ஆண்டவனை துதிக்க தோத்திரப்பாடல்களால் தோத்திரம் செய்து வழிபாடுசெய்தல் என்பது முக்கியமானதாகும், இந்த தோத்திரபாடல்கள் தான் நம் நால்வர் தந்த தேவராம், திருவாசகம், திருமந்திரம் அடங்கிய பன்னிரண்டு திருமுறைகளாகும், இவற்றை முழுவதுமாக எல்லோராலும் பாட இயலாத நிலையில் இதனை சுருக்கி பஞ்சாட்சர மந்திரங்களால் இறைவனை துதிக்கப்படுகிறார்கள்,இதில் ஐந்தெழுத்து சிவமந்திரமான  ஒம் நமசிவாய என்ற மந்திரமாகும், ஒம் என்பது பிரணவமந்திரமும் நமசிவாய என்பது சிவமந்திரமும் ஆகும், "நமசிவய "என்ற சிவமந்திரத்தில் தோன்றியது ஐந்து பஞ்சாட்சர மந்திரங்கள் நமசிவய, சிவயநம, யநமசிவ, மசிவயந,யநமசிவ, நமசிவய என்பது சூல பஞ்சார மந்திரம், சிவயநம என்பது சூட்சம மந்திரம், சிவசிவ என்பது அதி சூட்சம மந்திரம், இதில் எல்லாராலும் எளிதில் பயன்படுத்த தக்ககது சிவசிவ மந்திரமாகும் இதில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தைச்சேர்த்து ஒம் சிவசிவ ஓம் என்ற மந்திரம் ஒலித்து தோத்திரம் சொல்வது மிக்க நன்று, ஆகவே இறைவழிபாட்டில் தோத்திர மந்திரம் ஓதல், திருநீறு அணிதல் என்பன சைவத்தின் முக்கிய முதன்மை அடையாளமாக அமையும்,
  இந்த திருநீறு அணிதலில் திருநீரு பற்றி அதன் முக்கியத்துவத்திற்கும் அதன் பலன்கள் குறித்து திருஞான சம்பந்தர் பெருமான் அதற்கென ஒரு தனி பதிகமே பாடி திருநீருக்கு பெருமை சேர்த்துள்ளர்,ஞானசம்பந்தருக்கும் திருநீருக்கும் அவர் இளம்பருவத்திலிருந்தே அதன் பெருமை சிறப்படைந்துள்ளதை அவர்தம் வரலாற்று வழிமுறைகள் மூலம் அறியலாம், ஞானசம்பந்தர் சிறு கைக்குழந்தையாக இருந்தபோது அன்னாரின் தாயார் ஞான சம்பந்தருக்கு திருநீரு கொண்டு காப்புகட்டி தொல்லையிலிருந்து நீக்கம் பெற்றது அன்றார் கூறிய கூற்றின் வழியே அறியலாம், சிறுவயதில் சில நேரங்களில் பீீரிட்டு அழவதுண்டாம் ஆனால் உடனே அழகை நிறத்திவிடுமாம்,அண்ட அயலார் வீட்டில் உள்ளவர்கள் எங்கள் குழந்தைகள் யாவரும் அழும் போது அழுகை நிறத்தாமல் அழும் போது உங்கள் குழந்தைமட்டும் இதுமாதிரி இல்லாமல்உங்கள் குழந்தை மட்டும் இரவில் அழதாலும் உடனே நிறுத்திவிடுவதைக்கண்ட அண்டை அயலார் உங்கள் குழந்தைம்ட்டும் இரவில் அழதாலும் உடனே நிறுத்திவிடுகிறதே அதற்கு காரணம் யாது ? ஏதேனும் தாயத்து கட்டியுள்ளீர்களா? அல்லது மந்திரம் செய்துள்ளீர்களா? அல்து யாதனும் கயறு கட்டியுள்ளீர்களா?என்று வினவினார்களாம் அதற்கு பகவதியம்மையார் நான் எனது குழந்தைக்கு திருநீறு காப்பு அணிந்துள்ளேன் எனவேதான் குழந்தை அழதாலும் உடனே நிறுத்திவிடும் என்று திருநீற்றின் பெருமையினை அன்றே சிறப்பித் துள்ளார்கள். இதனையே சேக்கிழார் அவர்களும் தனது பெரிய புராணத்தில் "திருநீறு காப்பு" என்று பதிவுசெய்துள்ளார், திரு நீறு காப்பு பெருமை மற்றொரு வேளையில் திருஞானசம்பந்தர் சிவபெருமானிடம் முத்துக்களால் ஆன முத்துபல்லாக்கு, முத்துசிவிகை, முத்துஆபரணங்கள் பெற்று திருவாரூக்கு வருகை தந்தபோது, அங்குள்ள பெண்கள் எல்லாம் அவரை வரவேற்க நிறைகுடம் மணிவிளக்கு, மஞ்சள் குங்குமம் போன்ற மங்கல பொருட்களைக் கொண்டு வரவேற்க வந்தபோது, ஒரு பெண்மணி மட்டும் ஒரு தட்டில் நீறு கொண்டு வந்து சம்பந்தர் முன் வைத்தார்களாம் அவர் வேர் யாரும் அல்ல அன்னாரின் தாயரார் திலகவதியம்மார் தானாம், அப்போதும் ஞானசம்பந்தருக்கு திருநீறு மூலம் காப்பு கட்டு திருநீற்றின் பெருமையை பதிவு செய்தது வரலாறு கூறும்,

பேணி அணிவருக்கு பெருமை சேர்ப்பது

கேரள நாட்டிலுள்ள கழற்றறிவார் நாயனார் என்ற சேரமான்பெருமான், ஒரு நாள் நகர் வலம் வரும் போது , எதிரில் ஒரு சலவைத் தொழிலாளி தனக்கு வேண்டிய உவர் மண்ணை அள்ளிக்கொண்டு வரும்போது அவரது உழைப்பின் மிகுதியால் வேர்வையால் உவர்மண் கரைந்து உடலெல்லாம் வெண்ணீறு அணிந்தது போன்று காட்சியுடன் மன்னர் முன்னிலையில் வந்துகொண்டிருந்தார் எதிரில் வந்த மன்னர் சலவைத் தொழிலாளியைக்கண்டு திருநீறுபூசிய சிவனடியார் என்று எண்ணி குதிரையிலிருந்து இறங்கி சிவனடியார் போன்றிருந்தவரை வணங்கினார் , அந்த தொழிலாளியோ அரசே நான் சிவனடியார் இல்லை, நான் ஒரு வண்ணான் என்று கூறியும் அவரை மதித்து வணங்கினார். எனவே திருநீறு அணிந்தவர்களை சிவனடியார்களை திருநீறு அணிவதற்கான மதிப்பு மரியாதையை இங்கு கண்டோம்.



திருநீறு மந்திரமான பெருமை: பாண்டியமன்னன் வெப்பு நோய் நீக்கி மருந்தாகிய பெருமை

ஒருசமயம் பாண்டியநாட்டில் சமணமதம் வேரூன்றி சைவமதம் அழிந்துவரும் தருணத்தில்,சைவமதத்தினர் திருநீரு அணிந்தவர்களைக் கண்டாலே சமணர்கள் "கண்டுமுட்டி" என்றும் தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கும் சமயத்தில், இதனை மாற்றி சைவமதத்தை மறுபடியும் புத்துயிர் ஊட்ட சைவமத்தில் மாறா பற்றுடையவரான அந்நாட்டு அரசியார் மஙகையர்கரசியார் ஞானசம்பந்தரை பாண்டியநாட்டிற்கு வரவழைக்க ஏற்பாடு செய்தார், அதன் பொருட்டு ஞானசம்பந்தரும் பாண்டியநாட்டிற்கு புறப்பட்டு வந்தார், மதுரையம்பதியிலுள்ள ஒரு சிவமடலாயத்தில் தங்கியிருந்தார், இதையறிந்த சமணமதத்துறவிகள் ஞானசம்பந்தரை ஊரைவிட்டு விரட்டும் எண்ணத்தில் மந்திரங்கள் ஏவியும், பல இன்னாத வேளைகள் செய்தும் துண்பப்படுத்தினர், ஆனால் அவர்கள் ஏவிய மந்திரம் ஞானசம்பந்தரின் சிவபஞசத்திற்கு முன் பலிதம் ஆகவில்லை, எனவே சமணமத்தினர் வேறு வழியின்றி ஞானசம்பந்தர் தங்கியிருந்த சிவமடத்திற்கு தீ யிட்டனர், இதனால் அவருடன் இருந்த சிவனடிகள் பெரிதும் வெப்பு மிகுதியால் துண்புற்றனர் உடனே ஞானசம்பந்தரும் சிவமடத்திற்கு தீ யிட்டவர்களை விட்டுவிட்டு இதனையெல்லாம் கண்டுகொள்ளாதிருக்கும் மன்னர்தானே காரணம் என தாங்கள் படும் இந்த வெப்பின் கொடுமையை மன்னன் அனுபவிக்க வேண்டுமென மன்னனுக்கு வெப்புநோய் வர மந்திரம் ஏவினார், இதனால் மன்னன் அச்சனம் முதல் வெப்பு நோயால் துடிதுடித்தான் சமண அடியார்களை வரவழைத்து இதற்கு தீர்வு வேண்டினான், சமன துறவிகள் மன்னன் வெப்பு நோய் தீர மந்திர ஜபங்களை ஒதினர் ஆனால் யாதாலும் மன்னனின் வெப்பு நோய் பலிதம் ஆகவில்லை, உடனே மன்னனின் துணைவியார் மங்கையரசி மன்னனிடம் ஞானசம்பந்தர் என்ற சைவ சிவனடியார் வந்துள்ளார் அவரை அழைத்து இந் நோய்க்கு தீர்வுகாணலாம் என்று மன்னனிடம் வேண்டினார், மன்னரும் ஞானசம்பந்தரின் பெயரை கூறய உடனே தனக்கு நோய் தீர அறிகுறி தோன்றியது, எனவே ஞான சம்பந்தரை அரண்மனைக்கு வரவழைக்க உத்தரவிட்டார் இதனை சமணதுறவிகள் மிக எதிர்ப்பு தெரிவித்தனர், இருப்பினும் மன்னர் இதற்கு உடன்படாமல் வரவழைத்தார், ஞானசம்பந்தரும் வந்தார், மன்னனின் வெப்பு நோய்க்கு மருந்தாக திருநீறு பூச எண்ணினார் அப்போது மன்னரும் சமண மத்தினை சேர்ந்தவராகையால் சமணமத்தினர் திருநீரு பூச அனுமதிக்க வில்லை, எனவே மன்னர் எனது வெப்பு நோய் தீர வலபக்கம் சைவமதத்தின் மூலம் ஞானசம்பந்தரும், இடதுபக்கத்தினை சமண மததுறவிகள் மூலம் தீர்வு செய்ய வேண்டினார், சமண மத்தினரால் யாதும் செய்ய முடியவில்லை மன்னரின் வெப்பு நோயின் துன்பம் குறையவில்லை எனவே ஞானசம்பந்தரை வேண்டினார், உடனே சமணமதத்தினரால் திருநீறு பூச மறுக்கப்பட்டதால் உடனே மடப்பள்ளியிலுள்ள சாம்பலை பயன்படுத்தலாமா?என்று வினவ சமணமதத்தினர் அதற்கு சம்மதம் தெரிவிக்க உடனே மடப்பள்ளி சாம்பல கொண்டுவரப்பட்டு அந்த சாம்பலுக்கு "திருநீற்று பதியம் " பாடி சாம்பலுக்கு உரு ஏற்றி அந்த சாம்பலான திருநீற்றை மன்னனின் வலப்பக்கம் பூசினார், உடனே மன்னனின் வெப்பு நோய் வலப்பக்கம் பரிபூரண நிவாரணம் அடைந்தது, மன்னன் துன்பத்திலிருந்து விடுதை பெற்று, இடப்பக்கமும் திருநீறு பூச வேண்டி திருநீறு இடப்பக்கமும் அணிந்து முழு நிவாரணம் பெற்றான், இதிலிருந்து திருநீறு நோய் நீக்கும் மருந்தாக பெருமை கொண்டது, சமண சமயத்திற்கு சைவமத்திற்கு நடந்த போரட்டத்தில் வெற்றியும் கண்டது, ஞான சம்பந்தரின் திருநீற்று பதிகத்தின் மூலம் திருதரும் பெருமையினை காணலாம்,

" மந்திரமாவது நீறு, வானவர் மேவது நீறு,
சுந்தரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு,
தந்திரமாவது நீறு, சமயத்தில் உள்ளது நீறு,
வேத்தில் உள்ளது நீறு, வெந்துயர் நீக்குவது நீறு
போகம் தருவது நீறு, புண்ணியமாவது நீறு
ஒத தகுவது நீறு. உண்மை உள்ளது நீறு,
 முக்தி தருவது நீறு, முனிவர் அணிவது நீறு,
 சத்தியமாவது நீறு, கற்றோர் புகழ்வது நீறு
பக்தி தருவது நீறு, பரவ இனியது நீறு.
காண இனியது நீறு, கவினை தருவது நீறு,
பேணி அணிவருக்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு,
புண்ணியமாவது நீறு, மதியை தருவது நீறு "


         இவ்வாறு திருஞானசம்பந்தர் திருநீற்றின் பெருமையை சிறப்பித்துள்ளார்

திரு நீறு தரும் பெருமை:
திருநீரு அணிந்தால் சிவத்தின் அடிமை என்றும் திரு நீரே சிவமாக உள்ளதாக பெருமை பெருவது நீறு பாம்பாட்டி சித்தர் பாம்பன் சுவாமிகள் மூலம் பெருமை திருநீற்றின் பெருமையினை சிவத்திரு சித்தர் பாம்பன் சுவாமிகள் மூலம் பெருமையை அறியலாம், ஒருமுறை பாம்பாட்டி சித்தர் பாம்பன் சுவாமிகளின் குழந்தை இரவில இடைவிடாது அழுது கொண்டே இருப்பதை கண்ட அன்னாரின் துணைவியார் பாம்பன் சுவாமிகளிடம் தாங்கள்தான் முருக பக்தர்தானே இக்குழந்தை அழுவதை நிறத்த திருநீறு அணிய வேண்டினார் அதற்கு பாம்பன் சுவாமிகள் உடன்படவில்லை எனவே குழந்தையின் அழுகையும் தீரவில்லை இதனால் இருவரும் வேதனையுடன் இருக்கும் பட்சத்தில் சுவாமிகள் வெளியில் சென்ற சற்று நேரத்தில் ஒரு சிவனடியார் திடீரென வீட்டிற்கு வந்து ஏன் குழந்தை அழுதுகொண்டே உள்ளது ஏதேனும் உபயம் செய்ய வேண்டியதுதானே என்று வினவி விட்டு குழந்தை கொண்டு வருங்கள் நான் திருநீறு இடுகிறேன் என்று கூறி குழந்தைக்கு தான் கொண்டு வந்த திருநீற்றை குழந்தைக்கு அணிவித்துவிட்டு சென்று விட்டார், குழந்தையின் அழுகையும் நின்றுவிட்டது, அதன் பிறகு பாம்பன் சுவாமிகள் குழந்தையின் அழகை நின்றதை அறிந்து துணைவியாரிடம் காரணம் பற்றி வினவினார், அதற்கு துணைவியார் தாங்கள் திருநீறு இட மறுத்து சென்றபின் ஒரு சிவனடியார் வந்தார் குழந்தை அழுவதை கண்டு திருநீறு அணிவித்து சென்றார், குழந்தையின் அழுகையும் நின்றுவிட்டது என்றார், உடனே வந்து சென்ற சிவனடியார் யார் என்று அங்குமிங்கும் தேடினார் காணது கண்டு வியப்புற்று தான் திருநீறு பூச மறுத்தமையால் தனது முருகபெருமானே சிவனடியாராக வந்து திருநீறு அணிவித்து சென்றுள்ளார் என வியப்புற்றார், இதிலிருந்து குழந்தையின் அழுகைக்காக திருநீராக மருந்தாக முருகனே அணிவித்து சென்றது திரு நீறும் பெருமைபெற்றது, அறியலாம்.

ஏனாதிநாத நாயனார் :

     நாயன்மார்கள் மூலம் பெறுமை பெற்றது திருநீறு அணிதல் என்பது எல்லா சிவனடியார்கள் எல்லாம் கையாண்டனர் என்றாலும் நெற்றிலில் பூசும் - பூசப்பட்ட திருநீறுக்காகவே தன் உயிர் நீத்த நாயன்மார்களை பார்க்கலாம், அதில ஒருவர் ஏனாதிநாத நாயனார் அன்னார் திருநீறு மேற் பக்தி மிகுதியால் திருநீறு அணிந்த சிவனடிகள்களை கண்டவுடன் சிவனையே கண்டதாகக் கொண்டு அன்னாருக்காக தனது உடல் பொருள் ஆவி தனது தன்மானம் என எதையும் தந்த உயிரை விட்டவர், சிவ சின்னமாகிய விபூதியை மெய்யன்போடு தரிப்பவர் சிவபதம் அடைவர் இதனை திருமூலர் தனது திருமந்திரத்தில் திருநீறு அணிந்திட எல்லாவினைகளும் தீர்ந்து சிவனடி சேர்வர் என்று " கங்காளன் பூசுங் கவிசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வாரே " என்ற பாடல் மூலம் திருநீற்றின் மகிமையை விளக்கிறார், இதன்படி நெற்றியில் பூசும் திருநீற்றின் மீது மிக பக்தி கொண்ட ஏனாதிநாத நாயினார் வாள் வித்தை பயிற்சி நடத்தும் தொழிலை கொண்டவர், இவரின் வளர்ச்சி பொறாமை கொண்ட இவர் ஒத்த தொழில் புரிந்த அதிசூரன் என்பான் இவர் மீது பொறாமை கொண்டு அவருடன் போர் செய்யக் கருதி கூட்டத்தோடும், தனியாகவும் இவருடன் பலமுறை போர் செய்து தோல்வியுற்றான் இருப்பினும் அவனது தனியாத எப்படியாவது போரிட்டு வஞ்சனையில் வெல்ல உபாயம் செய்தான், ஏனாதி நாயனார் விபூதியின் மேல் கொண்ட அபிரித பக்தியும் மரியாதையும் கொண்ட பண்பையும் விபூதி அணிந்தவரை எத்தருணத்திலும் எப்போதும் எந்த வித துன்பமும் செய்யமாட்டார் என்ற அரிய குணத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவரை தனியே போர் புரிய அழைத்தான் அவ்வாறே நாயனாரும் போர் புரிய சம்மதித்து யுத்தத்ததிற்கு ஆயத்தமாகி போர்களத்தில தயார் நிலைியில் இருந்தார், அப்போது வஞ்ச எண்ணங் கொண்ட அதிசூரன் தான் ஒரு பழத்த சிவனடியார் போல் நெற்றி நிறைய திருநீற்றை அணிந்து கொண்டு நாயனாருடன் போர் புரிய தனது வாளை எடுத்து போரிட தொடங்கினான், அப்போது எதிரியின் நெற்றியை கண்ட ஏனாதி நாயனார் உடனே திருநீர் அணிந்த சிவபெருமானே தன் எதிரில் இருப்பதாக கொண்டு தன்னிடம் இருந்த ஆயுதங்களை கீழே வீசி எறிந்து விட்டு நிராயுதபானியாக நின்றார் உடனே அதிசூரன் அவரை தன் வாளால் பதம் பார்த்து தனது வஞ்சகத்தை தீர்த்துக் கொண்டான்,இவ்வாறு விபூதியின் மேல் கொண்ட அதிபக்தியால் தனது உயிரையே விட்டவர் மற்றொரு நாயனார் மெய்பொருள் நாயனாராகும், இவர் மீது பொறாமை கொண்ட எதிரி நாட்டு அரசன் நாயனாரை வஞ்சகத்தால் கொல்ல நினைத்து திருநீறு அணிந்து சிவ உருவத்தில் வந்து அவருடைய அரன்மனைக்கே வந்து மறைமுகமாக சிவசாதனங்களை கொண்டுவருவது போல் அரண்மைன்க்கு வந்து நாயனாரின் படுக்கை அறையிலேயே நாயனாருக்க ஆத்ம உபதேசம் செய்வதாகக் கூறி தன்னுடை ஆயுதத்தால் மன்னரை - நாயன்ாரை கொண்டு விட்டான், நாயனார் தனது உயிர் போகும நிலையிலும் தன்னை கொலை செய்த எதிரியான போலி சிவனடியாரை சிவ வேடம் அணிந்து திருநீறு பூசியுள்ள காரணத்தால் அவரை எந்த வித தொந்தரவு செய்யக் கூடாது என்றும் அவருக்கு சரியான பாதுகாப்பு வழங்கி அன்னரை ஊர் எல்லை வர பாதுகாப்புடன் வெளியேற ஆனையிட்டு சிவ அடையாளத்திற்காக உயிரையும் துறந்து எதிரிக்கு பாதுகாப்பு வழங்கி திருநீற்றுக்கு பெருமை சேர்த்தவர் மெய்பொருள் நாயினார் .

வாரியார் சுவாமிகள் திறுநீறு பெருமை கூறியது

வாரியார் சுவாமிகள் ஒருசமயம் ஆன்மிக சொற்பொழிவிற்காக வெளியூர் சென்றுவிட்டு மீழ் பயணத்திற்காக ஒரு புகைவண்டி நிலையத்தில் இழைப்பாரிக் கொண்டு இருந்தபோது அவரை கடந்து சென்ற மாணவ செல்வங்கள் சிலர் அன்னாரை கேலி செய்யும் நோக்கில் சுவாமிகளை பார்த்து தாங்கள் ஏன் உடல் முழுவதும் வெள்ளையடித்துள்ளீர்கள் என கிண்டலாக கேட்க அதற்கு வாரியார் சுவாமிகள் சற்றும் கோபம் கொள்ளாமல் சிவன் இருக்கும் வீட்டிற்கு தானப்பா வெள்ளையடிக்க வேண்டும் கட்டை மண் சுவருக்கு யாரப்பா வெள்ளையடிப்பார்கள் என் உடலின் உள்ளே சிவன் இருக்கிறான் அவன் குடியிருக்கும் இந்த உடல் துாய்மை பெற வெள்ளை யடித்துள்ளேன் என்று மாணவர்களுக்கு அன்புடனே உபதேசபாணியில் பதில் அளித்ததைக் கண்ட மாணவர்கள் வெக்கத்தால் கூனிகுறுகி உடனே தங்களின் தவறுக்கு மன்னிப்பு வேண்டிக் கொண்டதோடு அவரிடமே திருநீறும் பூசி சென்று அன்றுமுதல் அவர்களும் தினமும் திருநீறு பூசி மகிழ்ந்துள்ளனர்.

  உண்மை தருவது - இடர்களைவது நீறு 
ஒருமுறை தண்டபாணி தேசிகர் என்ற சிவனாடியார் கேரள மாநிலத்தில் ஆன்மிக தளங்கள் சென்றுவரும் தருணத்தில் ஒருநாள் அந்தி மறையும் போது அருகாமையில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்லும் முகத்தான் கடல்நீர் பின்வாங்கும் காலங்கரை நீரை கடந்து கோவிலுக்கு செல்ல படகு மூலம் செல்ல சென்ற போது அந்நீர் பரப்பை கடக்க உள்ள நபர்களுடன் தானும் படகில் ஏறிவிட்டார், ஏறிபின்தான் தெரிந்தது படகு ஒட்டுபவர் சரியான நிதானத்தில் இல்லாது படகை ஏறுக்குமாறு செலுத்தி சென்றது கண்டனர், எல்லோரும் பதைபதைத்து கொண்டிருந்த நேரத்தில் மேலும் சோதனை ஏற்பட்டது, படகில் சிறு துவாரத்தின் வழியாக நீர் கசிந்து படகில் நீர் பெருகிக் கொண்டிருந்தது எல்லோரும் பதைபதைத்து முனகலோடு இருந்தனர், தண்டபானி தேசிகரும் இன்றும் சலகண்டம் தான் இன்று உயிர் பிழைப்பது மறுபிறப்புதான் என்று எண்ணி தான் செல்லவிருக்கும் முருகனை உள்ளமுறுக வேண்டினார் உடனே தனது மனத்தில் ஒரு அசிரீ வாக்குபோல் திருநீற்றுக்கோவில் நான் இருக்கிறேன் பயம் வேண்டாம் என்ற யாரே கூறவது போல் உணர்வு ஏற்பட்டது, உடனே படகில் அதன் விளைவாக யாரோ ஒருவர் படகோட்டியை படகை இவ்வாறு செலுத்து இப்படிப் போ, அப்படிப் போ என்று ஒருவர் அதட்டிக் கொண்டிருந்தார் படகோட்டியும் சரியான திசையில் படகை செலுத்திக் கொண்டிருந்தார் மற்றவர்களும் படகில் கசிந்த நீரை கோப்பைகளின் மூலம வாரி வெளியேற்றிக் கொண்டிருந்தனர் ஒருவழியாக படகும் கரையை சேர்நத்து எல்லோரும் கரை வந்ததற்கு நிம்மதி பெருமூச்சிட்டுவிட்டனர், தண்டபாணி தேசிகரும் கரைவந்தமைக்கு முருகனுககு நன்றி தெரிவிக்கும் முறையாக திருநீற்றை எடுத்து பூச நினைத்த போதுதான் அந்த அசிரீ வாக்கு திருநீற்று கோவில் தான் இருப்பதாக கூறியது நினைவு வந்தது, எனவே திருநீரே ஆண்டவன் குடியிருக்கும் கோவிலாக நம் துயர் துடைக்கும் ஆலயமாக பயன்பட்டது கண்டு பெருமை கொண்டார்,வழிக்கு துணையாக இடர்களையும் ஆயுதமாக திருநீறு விளங்குகிறது,

 அருணகிரி நாதர் பெருமை சேர்த்தது

அருணகிரிநாதர் ஒருநாள் திருவண்ணாமலையில் பெருமானை தரிசிக்க சென்ற போது கோவில் மூலஸ்தானத்தில் சுவாமியை வணங்கிவிட்டு பிரசாதமாக திருநீறு பெறுவதற்காக சுற்றுமுற்றும் பார்த்தவுடன் ஒரு ஆச்சாரியார் திடீரென வந்து திருநீறுவழங்கி சென்றார் திருநீரை அணிந்து விட்டு ஆச்சாரியாருக்கு நன்றி சொல்லும் விதமாக சுற்று பார்த்தபோது தனக்கு பிரசாத திருநீறு வழங்கிய ஆச்சாரியார் அங்குஇல்லை பின் சன்னதியை விட்டு திரும்பும் தருணத்தில் எதிரே அந்த ஆச்சாரியார் வேகமாக வந்து கொண்டிருந்தார் அவரை கண்டவுடன் அருணகிரியார் அவருக்கு திருநீறு வழங்கியதற்கு நன்றியை கூறினார் ஆனால் உடனே அந்த ஆச்சாரியார் நான் இப்போதுதானே வருகிறேன், தங்களுக்கு திருநீறு வழங்குவதற்காகத்தானே விரைந்து வந்து கொண்டிருக்கிறேன் ஆனால் தாங்கள் திரும்பிவிட்டீர்கள் என்ற கூற்றை கேட்டவுடன் அருணகிரியாருக்கு ஒன்றும் புரியவில்லை அப்படியானால் தன்ககு திருநீறு வழங்கியது யார்? என் பொருட்டு அண்ணாமலையார் தான் வழங்கினாரா? என்ற ஆச்சிரியத்தோடு திரும்பினார், இதிலிருந்து அண்ணாமலையாரே அருணகிரியாருக்கு திருநீறு வழங்கப்பெற்று சிறப்பு பெற்றது இதனால் அருணகிரிநாதர் திருநீரை வைத்தே பாடல்கள் பாடி அண்ணாமலையாரை அழைத்து சிறப்பித்தார்

 செல்வம் தருவது திருநீறு 

அணிவதால் செல்வம் கிடைக்கும் ஒரு ஏழை நெசவாளிக்கு திருநீறு அணிவதன் பயனை எடுத்துரைக்கும் முகமாக வாரியார் சொற்பொழிவு மூலம் ஒரு அடைந்த நிகழ்வு மூலம் அறியலாம், கடினமான உழைப்பே பிரதானமாக கொண்ட ஒரு நெசவாளி திருநீறு அணிவதோ தெய்வபக்தியோ இல்லாதவருக்கு அவர் துணைவியார் ஆன்மீக நெறிகளிலும் திருநீறு அணிவதிலும் மிக விரும்பம் கொண்டவர் தன் கணவரே இதற்கு எதிர்மறையானவர் இதன் பொருட்டு அவரை சைவநெறியில் கொண்டுவர முயன்று விரக்தியடைந்த நேரத்தில் ஒரு சித்தி பெற்ற சிவனடியாரை கண்டு இதற்கு வழிவேண்டினார் அவரும் தனது கணவரை தான் திருநீரு அணியாவிட்டாலும் தினமும் ஒரு திருநீறு அணிந்த சிவபக்தரை கண்டபின்தான் உணவு என்று கூறி அதன்படி செய் என்று கூறனார் அந்த அம்மையாரும் தன் கணவனிடம் இவ்வாறே கூறனார் அவரும் இதற்கு சம்மதித்து தன் வீட்டுககு அருகாமையில் உள்ள ஒரு சிவ பக்தரை அடையாளம் கண்டு கொண்டார் அன்னார் தினமும் மூக்கு பொடிபோடும் பழக்கம் உள்ளவரும் அந்த பொடியும் இவரிடமே பெறும் தன்மையுடையவர் எனவே இவருக்கு தினமும் அவரை உணவு உண்ணும் முன்பாக மூக்குபொடி பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார் இதன்படி இவருடைய பழக்கவழக்கங்கள் நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தபோது ஒருநாள் அந்த திருநீறு அணிந்த சிவபக்தர் வெகு நேரம் ஆகியும் வரவில்லை இவருக்கோ பசி அதிகமாயிற்று உடனே தானே அவருடை வீட்டிற்கு அவரை தேடிச் சென்றார், அவர் தனது தோட்டத்தில் சிறிய வேலையாக தோட்டத்தில் ஒரு குழி தோண்டிக்கொண்டிருந்தார் அப்போது அக்குழியில் ஒரு புதையல் இருப்பதை கண்டு வியப்புற்று பயத்துடன் புதையலை எடுத்துக் கொண்டிருந்தவேளையில் இவர் சிவபக்தரின் திருநீறு அணிந்த நெற்றியை சற்று தொலைவிலேயே பார்த்தவுடன் பார்த்துவிட்டேன் பார்த்துவிட்டேன் என்று கத்திக்கொண்டே ஒட ஆரம்பித்தார், அவரே தான் கண்ட புதையலைத்தான் பார்த்து விட்டார் என எண்ணி பதைபதைத்துக் கொண்டு அவரை பின் தொடர்ந்து ஒடி ஐயா பார்ததது தான் பார்த்தீர்கள் தயவுசெய்து பார்த்ததை யாரிடமும் கூறவிடாதீர்கள் உங்களுக்கும் பார்த்த புதையலில் பாதி பங்கு தருகிறேன் என்றார், இந்தநெசவாளிக்கோ திருநீறு நெற்றியை தினமும் பார்த்ததற்கே பாதி புதையல் பரிசு கிடைத்துவிட்டதே என மிக மகிழ்ச்சி கொண்டார் பார்த்தர்கே செல்வம் என்றால் இந்த திருநீரை தினமும் அணிந்தால் இன்னும் செல்வம் கூடுமே என்று மகிழ்ந்து அன்றிலிருந்து தினமும் திருநீறு அணிய ஆரம்பித்தார் திருமந்திரத்தில் திருநீற்றின் பெருமை திருமூலர் தனது திருமந்திரத்தில் திருநீற்றின் பெமையை தனது மந்திரத்தில் கூறியது
" கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழவரேயாமாகில் தங்கா வினைகளும் சாரும் சிவகதி சிங்காரமான திருவடி சேர்வாரே"
  எலும்புகளை அணியும் இறைவன் பூசிக்கொள்வதும், உடலுக்கு கவசமாக விளங்கும் திருநீற்றை சிறிதும் தடையில்லாது உடலில் பூசிமகிழ்ந்தால் தீவினைகள் நீங்கும் மோட்சம் இன்பம் அடைய வழி உண்டாகும் இறைவனது அழகிய திருவடிகளை அடையலாம் இந்த மருத்துவ குணங்கள் கொண்ட திருநீறை யாரும் ஆகம விதிப்படி தயார் செய்து பயன் பெறலாம், திருநீறு தயாரிக்கும் முறை 2 கிலோ சாம்பல் கிடைக்கும் அளவிற்கான பசுஞ்சாணம், பசுஞ்சாணம் கீழே விழாமல் எடுத்து வரட்டியாக்கி பஸ்பமாக்கி சாம்பலாக்கி கொண்டு சலித்து 2கிலோ எடுத்துக் கொள்ளவேண்டும் இவற்றுடன் பஸ்பமாக்கிய - படிகாரம் 10கிராம், குங்கிலியம் ,சங்குபஸ்பம், ஆமைஒடு, பவளம்,சிராபஸ்பம், கிரஞ்சி பஸ்பம், முத்துசிப்பி, நத்தை ஒடு, ( எல்லாம் பஸ்பமாக்கியது 10கிராம்) வீதம் கலந்து ஒன்றாக்கி பித்தளை தாம்பளத்தில் பரப்பி ஒம் சிவசிவ ஒம் ஒதி மண் குடுவைகளில் சேமித்து வைத்துக் கொள்ளலாம் ,ஆலயத்தில் சுவாமிக்கு அபிசேகத்திற்ககு கொடுத்து அபிசேகம் செய்தும் சேமித்து வைத்துக்கொள்ளவும், இவ்வாறு தயார் செய்த மந்திர விபூதி எல்லாவற்றிக்கு சிறநதது,

 திருநீறு மருத்துவ குணமுடையது

 திரு நீறை நெற்றியில் நீரில் குழைத்து பூசினால் கபாலத்திலுள்ள நீர் குறைந்து கபால நீரால் வரும் வியாதிகள் தீரும் என்பது இன்றளவிலும் கண்ட உண்மை, வாதநோய் உள்ளவர்களுக்கு உடலில் பூசி வாதநோய் குணமடைவதை காணலாம், திருநாவுக்கரசர் சுவாமிகளுக்கு சூன்ம வயிற்று வலிக்கு அவரின் தமக்கையார் வயிற்றில் திருநீற்றை பூசி குணமடைந்த வரலாறு பெரியபுராணத்தில் காணலாம் இவ்வாறு திருநீற்றின் பெருமையை புராண காலம் தொட்டு இன்றுவரை அதன் சிறப்பு பெருமைகளை இன்றளவும் காணலாம் எனவே தோத்திரங்கள் ஓதி திருநீறு அணிந்து பெருவாழ்வு பெறுவோம்,

திருச்சிற்றம்பலம்
அன்புடன் சிவ, வை, பூமாலை சுந்தரபாண்டியம்