சனி, 31 மே, 2014

மணிராஜ்: திருமயிலை திருத்தலம்

மணிராஜ்: திருமயிலை திருத்தலம்

மெய்ஞானம் கூறும் விஞ்ஞானம். மெய்ஞானமா விஞ்ஞானமா என்று சிலர் பட்டி மன்றம், வெட்டி மன்றம் நடத்தி கொண்டு இருக்கின்றனர். இது எவ்வாறு இருக்கிறது என்றால் ஆறு, நதி இரண்டில் எது சிறந்தது என்று சிலர் வாதம் செய்தால் எப்‌படி இருக்குமோ அதை போல் தான் இருக்கிறது. ஆறு என்றாலும் நதி என்றாலும் அது ஒரே பொருளையே குறிக்கும். அதுபோலவே மெய்ஞானம் என்றாலும் விஞ்ஞானம் என்றாலும் அது ஒன்றே. ஆனால் அதே சமயம் எந்த கருவியும் இல்லாமல் வெறும் கண்ணாலேயே விண்ணை ஆராய முடியுமா. இதற்க்கு விஞ்ஞானம் கூறும் பதில் முடியாது. ஆனால்? ஆரியபட்டா, பஸ்கராசார்யா போன்ற நமது நாட்டு விஞ்ஞானிகள் வெறும் கண்ணாலேயே விண்ணை ஆறாய்ந்தனர். அதற்க்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் இலக்கியங்கள். அதற்க்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன் தோன்றிய வேதங்களில் கணக்கில் அடங்கா விஞ்ஞான தகவல்கள் இருக்கிறது. வெறும் கண்ணால் விண்ணை ஆராயமுடியும் என்பது விஞ்ஞானததால் நிரூபிக்கப்பட்டது அல்ல. ஆனால் ஆரியபட்டா போன்ற நமது நாட்டு விஞ்ஞானிகள் நிரூபித்ததை பொய் என்று விஞ்ஞானததால் நிரூபிக்கமுடியவில்லை. இலக்கியங்களில் உள்ள, வேதங்களில் உள்ள விஞ்ஞான தகவல்களும் நம்பமுடியாத உண்மையாக இருக்கிறது. . நமது நாட்டவர்கள் மற்றும் சீன, ஈஜிப்ட், பாபிலோன், சுமேறியா, கிரேக்க நாட்டை சேர்ந்தவர்கள் எவ்வாறு அதை செய்தார்கள். அனைத்து மெய்ஞனிகளுக்கும் தெரியும். மெய்ஞானமும், விஞ்ஞானமும் ஒன்று என்று. ஆனால். அனைத்து விஞ்ஞானிகளும் மெய்ஞானமும் விஞ்ஞானமும் ஒன்று என்பதை உணரவில்லை. ஆனால். எந்த கருவியும் இல்லாது பலகோடி மைல் தள்ளி உள்ள கிரகங்களை, அதன் குணங்களை மனித சக்தியை கொண்டு சொல்ல முடியாது. அதற்க்கும் மேற்பட்ட சக்தியால் தான் முடியும் என்பதை வேறு வழி இல்லாமல் விஞ்ஞானம் ஒப்பு கொண்டு உள்ளது. எனக்கு தெரிந்த மெய்ஞானம் கூறும் மேன்மையான விஞ்ஞான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். முதலில் தமிழ் இலக்கியங்களில் மிக பழமையான தொல்காப்பியதாலேயே போற்றப்பட்ட வேதத்தில் இருந்து அதில் முதன்மையான ரிக் வேதத்தை நாம் பார்ப்போம். 01.மித்ரோ ததாரா ப்ரதவி முட்டாத்யம் மித்ர க்ரிஷ்டிஸ் (ரிக் வேதம் 3:55:91) இதன் பொருள்: தனது ஈர்ப்பு சக்தியால் சூரியன் பூமியையும் வேறு கோள்களையும் தாங்கிப்பிடித்த வண்ணம் உள்ளது. 02.த்ரின பிகா க்ரமஜார்மனர்வம் யெனிமா விஸ்வ பூவா னானி டஸ்தூ(ரிக்வேதம் 1:16:41) இதன் பொருள் எல்லா கிரகங்களும் விடுவதை கொண்ட ஓர் சுற்றுவட்டத்தில் சுற்றுகின்றன 03.அயம் கவ் பிர்ஸ்னிரக்ராமிட் அசடன்மட்டராம் புரா பிடரம் க பிரயந்ஸ்வா (ரிக்வேதம் 10:16:91) இதன் பொருள் சந்திரன் பூமிக்கு துணைக்கோள். பூமி சந்திரன் , சூரியன் இரண்டையும் சுற்றுகிறது. சில நாட்டவர்கள் அன்று சூரியன் பூமியை சுற்றுவதாகவும் பூமி தட்டை என்றும் நம்பினர். நமது நாட்டின் பொக்கிஷமான சதுர் வேதங்களில் சொல்லப்பட்டவை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல. சத்தியத்தை, உண்மையை அடிப்படையாக கொண்டு. வேத வாக்கு என்றும் பொய் ஆகாது.

Dance Holiwood



அத்திரி மகரிஷி மலை அத்திரி மகரிஷி மலை பயணம் செல்ல தென்காசியிலிருந்து ஆழ்வார்குறிச்சி சென்றால் அங்கிருந்து மினிபஸ் கடனாநதி அணைக்கு இரண்டு கிலோமீட்டர் முன்பு வரை செல்கிறது. அங்கிருந்து நடந்து செல்லவேண்டும், அல்லது ஆழ்வார்குறிச்சியிலிருந்து ஆட்டோவசதி உள்ளது. ஆட்டோவில் சென்றால் நபர் ஒன்றுக்கு 25 ரூபாய் பெற்றுக்கொண்டு 5 அல்லது 6 பேரை ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள். ஆட்டோவைபேசினால் 150 ரூபாய் அல்லது 200 ரூபாய் என பலிக்கும் அளவுக்கு பெற்றுக்கொண்டு கடனாநதி அணைக்கட்டு வரை கொண்டுசெல்கிறார்கள். இதை ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி கவணித்து கட்டணத்தை முறைப்படித்தினால் நன்றாக இருக்கும். மேலும் பத்தர்கள் திரும்பி வருவதற்க்கு, போகும் பொழுதே ஆட்டோ டிரைவர் போன் நம்பரை வாங்கிவைத்துக்கொண்டால் நாம் மலை இறங்க ஆரம்பிக்கும் பொழுது போன்செய்து அழைத்தால் ஆட்டோ நமக்காக அணையில் வந்து காத்திருக்கிறார்கள். மலைமேல் விசேசநாட்களில் மட்டுமே மதியம் அன்னதான உணவு கிடைக்கும், காலை உணவை ஆழ்வார் குறிச்சியில் முடித்துக்கொள்ளவேண்டும், அல்லது பார்சல் வாங்கி கொண்டு அணைக்கட்டில் அல்லது மலைக்குள் சாப்பிட்டுக் கொள்ளலாம், ஆனால் மலைக்குள் பிளாஸ்டிக்பைகள் அனுமதி கண்டிப்பாக இல்லை எனவே தகுந்தாற்ப்போல் செய்துகொள்ளவேண்டும். அணைகட்டில் வாகனத்திலிருந்து இறங்கியவுடன் பெரிய புலியின் படத்தை போட்டு ப்லிகளின் சரணாலயம் என்றும் நம்மை விழிப்புடன் பயணம் செல்ல அறிவுறுத்துகிறார்கள். மேலும் பயணத்தின் தொடக்கத்திலேயே வனத்துறையினர் நம்மை சோதனை செய்த பின்பே பயணத்திற்க்கு ஒரு நோட்டில் கையெழுத்தை பெற்றுக்கொண்டு அனுமதிக்கிறார்கள். கடனா நதி நீர்த்தேக்கப்பகுதியில் தண்ணீர் குறைவாக ஊள்ளதால் மக்கள் அதை குறுக்கு பாதையாக பயண்படுத்துகிறார்கள். மலைக்குள் நடந்து செல்லும் குறுகலான பாதை கோவில் வரை பாறைகள் இல்லாத பாதை நடப்பதற்க்கு எளிதாக உள்ளது. கோவில் அருகில் செல்லும் பொழுது மட்டுமே ஒரு பதினைந்து நிமிட ஏற்றமுள்ள பாதை உள்ளது. அந்த ஏற்றமும் பாறைகள் இல்லாத மண்பாதையாகவே உள்ளது, எனவே மழை காலங்களில் வழுக்கும்படியாக உள்ளது. அதன் அருகில் பெரியபாறை ஒன்றில் குகை ஒன்று உள்ளது. அதனுள் சித்தர்கள் தவமிருப்பதாக கூறுகிறார்கள். எனவே பக்தர்கள் அந்த குகையுள் தீபமேற்றி வழிபடுகிறார்கள். கருவறையின் முன் மண்டபம், அதன் வாசல் நிலை போல் இருபுறமும் புளியமரங்கள் வளர்ந்தோங்கி நிற்கின்றன அருள்மிகு அனுசுயாதேவி அருள்மிகு அத்திரிமகரிஷி இருவரும் கோவில் கருவறையில் லிங்கவடிவில் காட்சியளிக்கின்றனர். இங்கு அனுசூயாதேவி அம்மன் அட்டமாசித்திகளை குறிக்கும்படியாக எட்டுபட்டையான லிங்க வடிவில் உள்ளார்.அதன் முன்பக்க பட்டையில் திரிசூலமும் செதுக்கப்பட்டுள்ளது. இந்த லிங்க அமைப்பு வேறெங்கிலும் இல்லை. இதை தரிசிக்க சுவாமிகள் அலங்காரத்தில் இல்லாதபோது மட்டுமே முடியும்.அனுசுயா தேவியும், அத்திரி மகரிஷியும் அருள் பாலிக்கிற கோயில், யாரிவர்கள்? புராணத்திற்குள் நுழைவுதற்கு முன், ஒரு செய்தி அவர்கள் தமிழகத்து ரிஷிகள். நமது ''சுசீந்திரம்'' அத்திரி மகரிஷியின் பூர்வீகம் என்கிறார்கள் அருள்மிகு கங்காதேவி சிறிய கிணற்றினுள் அமைக்கப்பட்டுள்ளார். கிணற்று அடிபகுதியிலிருந்து நீரூற்று புனித தீர்த்தமாக உற்பத்தியாகி வருகிறது, இந்த தீர்த்தத்தில் குளிப்பதாலும், குடிப்பதாலும் உடலிலுள்ள வியாதிகள் நீங்கி குணமடைகிறார்கள். அகத்திய முனியும், அத்திரி முனியும் அத்திரி மகரிஷி தியானபீடம், அத்திரி மகரிஷி, அனுசுயாதேவி புராணம். ஒரு சமயம் முப்பெரும்தேவியரான சரஸ்வதி, பராசக்தி, லட்சுமி மூவருக்கும் கற்பில் சிறந்தவர் யாறென கேள்வி எழுந்தது. சந்தேகத்தை தீர்க்க நாரதமுனியிடம் வினாவினார்கள், அதற்கு நாரதர் அனுஷயா தேவியை காட்டினார் அதனால் தேவியர் மூவருக்கும் தங்களை கூறாது அனுசுயாதேவியை கூறியதால். அனுசுயா தேவி மேல் பொறாமையும், கோபமும் கொண்டனர், அதை சோதிக்க தங்கள் நாயகர்களை, அனுஷ்யா தேவி வசித்து வந்த குடிசைக்கு அனுப்பி வைத்தார்கள். மனைவி சொல்லைத் தட்டாத மூவரும் துறவி வேடம்பூண்டு கதவைத் தட்டினர். அந்த வேளை, அத்திரி மகரிஷி நீராடச் சென்றிருந்தார். அனுஷ்யா தேவி, வந்தவர்களை வரவேற்றார். வந்தவர்கள் பசி என்றனர். பசிப்பிணி தீர்த்தலை கடமையாகக் கொண்டிருந்த ரிஷி பத்தினி உணவு படைக்கத் தயாரானார். சாப்பிடும் முன்பு, மூவரும் ஒரு நிபந்தனை என்றனர். ‘என்ன?’ என்றார் அனுசுயாதேவி, ஏற்ப்பாயா? ஏற்றபின் மீறக்கூடாது என்று அடுத்தடுத்துக் கேட்டனர். ‘சரி’ என்றார் ரிஷி தேவி. நிர்வாண நிலையில் உணவு படையுங்கள்’ என்றனர். தன் தவ வலிமையால் வந்தவர் யாரெனவும், வந்த நோக்கமும் உணர்ந்த அந்தத் தாய், கணநேரத்தில் சரியெனச் சொன்னார். ஒரு கணம் கணவனை வணங்கினார். பின்பு கணவரின் பாதங்களை கழுவிய நீரை எடுத்து அவர்கள் மீது தெளித்தார் அடுத்த நொடியே துறவிகள் மூவரும் பச்சிளங்குழந்தைகளாய் மாறிப்போயினர். பிறகென்ன,நிர்வாணமாய் அமுது படைத்தார் அந்த உத்தமப் பெண்மணி. மூவரும் குழந்தைகள் ஆனதால் பிரபஞ்ச இயக்கமே ஸ்தம்பித்தது. தேவியர் மூவரும் தத்தம் சக்தியை இழந்தனர். நாரதரைக் கெஞ்சி, அனுஷ்யா தேவி காலடி வந்து வணங்கி நின்றனர். தங்கள் கணவரை மீட்க வழி கேட்டனர். அழுது புரண்டனர். அந்த வேளையில் அத்திரி மகரிஷியும் வந்து சேர்ந்தார். மீண்டும் குழந்தைகள் சிவ, விஷ்μ, பிரம்மாவாகினர். இந்தப் புராணக் கதையின் பின் கதையும் உண்டு. மூன்று குழந்தைகளின் ஒருமித்த வடிவே, அத்திரி மகரிஷி, அனுஷ்யா தேவி தம்பதியினரின் மகனான தத்தாத்ரேயர் எனும் யுகப் புருஷர் ஆவார்.

அத்திரி மகரிஷி மலை அத்திரி மகரிஷி மலை பயணம் செல்ல தென்காசியிலிருந்து ஆழ்வார்குறிச்சி சென்றால் அங்கிருந்து மினிபஸ் கடனாநதி அணைக்கு இரண்டு கிலோமீட்டர் முன்பு வரை செல்கிறது. அங்கிருந்து நடந்து செல்லவேண்டும், அல்லது ஆழ்வார்குறிச்சியிலிருந்து ஆட்டோவசதி உள்ளது. ஆட்டோவில் சென்றால் நபர் ஒன்றுக்கு 25 ரூபாய் பெற்றுக்கொண்டு 5 அல்லது 6 பேரை ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள். ஆட்டோவைபேசினால் 150 ரூபாய் அல்லது 200 ரூபாய் என பலிக்கும் அளவுக்கு பெற்றுக்கொண்டு கடனாநதி அணைக்கட்டு வரை கொண்டுசெல்கிறார்கள். இதை ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி கவணித்து கட்டணத்தை முறைப்படித்தினால் நன்றாக இருக்கும். மேலும் பத்தர்கள் திரும்பி வருவதற்க்கு, போகும் பொழுதே ஆட்டோ டிரைவர் போன் நம்பரை வாங்கிவைத்துக்கொண்டால் நாம் மலை இறங்க ஆரம்பிக்கும் பொழுது போன்செய்து அழைத்தால் ஆட்டோ நமக்காக அணையில் வந்து காத்திருக்கிறார்கள். மலைமேல் விசேசநாட்களில் மட்டுமே மதியம் அன்னதான உணவு கிடைக்கும், காலை உணவை ஆழ்வார் குறிச்சியில் முடித்துக்கொள்ளவேண்டும், அல்லது பார்சல் வாங்கி கொண்டு அணைக்கட்டில் அல்லது மலைக்குள் சாப்பிட்டுக் கொள்ளலாம், ஆனால் மலைக்குள் பிளாஸ்டிக்பைகள் அனுமதி கண்டிப்பாக இல்லை எனவே தகுந்தாற்ப்போல் செய்துகொள்ளவேண்டும். அணைகட்டில் வாகனத்திலிருந்து இறங்கியவுடன் பெரிய புலியின் படத்தை போட்டு ப்லிகளின் சரணாலயம் என்றும் நம்மை விழிப்புடன் பயணம் செல்ல அறிவுறுத்துகிறார்கள். மேலும் பயணத்தின் தொடக்கத்திலேயே வனத்துறையினர் நம்மை சோதனை செய்த பின்பே பயணத்திற்க்கு ஒரு நோட்டில் கையெழுத்தை பெற்றுக்கொண்டு அனுமதிக்கிறார்கள். கடனா நதி நீர்த்தேக்கப்பகுதியில் தண்ணீர் குறைவாக ஊள்ளதால் மக்கள் அதை குறுக்கு பாதையாக பயண்படுத்துகிறார்கள். மலைக்குள் நடந்து செல்லும் குறுகலான பாதை கோவில் வரை பாறைகள் இல்லாத பாதை நடப்பதற்க்கு எளிதாக உள்ளது. கோவில் அருகில் செல்லும் பொழுது மட்டுமே ஒரு பதினைந்து நிமிட ஏற்றமுள்ள பாதை உள்ளது. அந்த ஏற்றமும் பாறைகள் இல்லாத மண்பாதையாகவே உள்ளது, எனவே மழை காலங்களில் வழுக்கும்படியாக உள்ளது. அதன் அருகில் பெரியபாறை ஒன்றில் குகை ஒன்று உள்ளது. அதனுள் சித்தர்கள் தவமிருப்பதாக கூறுகிறார்கள். எனவே பக்தர்கள் அந்த குகையுள் தீபமேற்றி வழிபடுகிறார்கள். கருவறையின் முன் மண்டபம், அதன் வாசல் நிலை போல் இருபுறமும் புளியமரங்கள் வளர்ந்தோங்கி நிற்கின்றன அருள்மிகு அனுசுயாதேவி அருள்மிகு அத்திரிமகரிஷி இருவரும் கோவில் கருவறையில் லிங்கவடிவில் காட்சியளிக்கின்றனர். இங்கு அனுசூயாதேவி அம்மன் அட்டமாசித்திகளை குறிக்கும்படியாக எட்டுபட்டையான லிங்க வடிவில் உள்ளார்.அதன் முன்பக்க பட்டையில் திரிசூலமும் செதுக்கப்பட்டுள்ளது. இந்த லிங்க அமைப்பு வேறெங்கிலும் இல்லை. இதை தரிசிக்க சுவாமிகள் அலங்காரத்தில் இல்லாதபோது மட்டுமே முடியும்.அனுசுயா தேவியும், அத்திரி மகரிஷியும் அருள் பாலிக்கிற கோயில், யாரிவர்கள்? புராணத்திற்குள் நுழைவுதற்கு முன், ஒரு செய்தி அவர்கள் தமிழகத்து ரிஷிகள். நமது ''சுசீந்திரம்'' அத்திரி மகரிஷியின் பூர்வீகம் என்கிறார்கள் அருள்மிகு கங்காதேவி சிறிய கிணற்றினுள் அமைக்கப்பட்டுள்ளார். கிணற்று அடிபகுதியிலிருந்து நீரூற்று புனித தீர்த்தமாக உற்பத்தியாகி வருகிறது, இந்த தீர்த்தத்தில் குளிப்பதாலும், குடிப்பதாலும் உடலிலுள்ள வியாதிகள் நீங்கி குணமடைகிறார்கள். அகத்திய முனியும், அத்திரி முனியும் அத்திரி மகரிஷி தியானபீடம், அத்திரி மகரிஷி, அனுசுயாதேவி புராணம். ஒரு சமயம் முப்பெரும்தேவியரான சரஸ்வதி, பராசக்தி, லட்சுமி மூவருக்கும் கற்பில் சிறந்தவர் யாறென கேள்வி எழுந்தது. சந்தேகத்தை தீர்க்க நாரதமுனியிடம் வினாவினார்கள், அதற்கு நாரதர் அனுஷயா தேவியை காட்டினார் அதனால் தேவியர் மூவருக்கும் தங்களை கூறாது அனுசுயாதேவியை கூறியதால். அனுசுயா தேவி மேல் பொறாமையும், கோபமும் கொண்டனர், அதை சோதிக்க தங்கள் நாயகர்களை, அனுஷ்யா தேவி வசித்து வந்த குடிசைக்கு அனுப்பி வைத்தார்கள். மனைவி சொல்லைத் தட்டாத மூவரும் துறவி வேடம்பூண்டு கதவைத் தட்டினர். அந்த வேளை, அத்திரி மகரிஷி நீராடச் சென்றிருந்தார். அனுஷ்யா தேவி, வந்தவர்களை வரவேற்றார். வந்தவர்கள் பசி என்றனர். பசிப்பிணி தீர்த்தலை கடமையாகக் கொண்டிருந்த ரிஷி பத்தினி உணவு படைக்கத் தயாரானார். சாப்பிடும் முன்பு, மூவரும் ஒரு நிபந்தனை என்றனர். ‘என்ன?’ என்றார் அனுசுயாதேவி, ஏற்ப்பாயா? ஏற்றபின் மீறக்கூடாது என்று அடுத்தடுத்துக் கேட்டனர். ‘சரி’ என்றார் ரிஷி தேவி. நிர்வாண நிலையில் உணவு படையுங்கள்’ என்றனர். தன் தவ வலிமையால் வந்தவர் யாரெனவும், வந்த நோக்கமும் உணர்ந்த அந்தத் தாய், கணநேரத்தில் சரியெனச் சொன்னார். ஒரு கணம் கணவனை வணங்கினார். பின்பு கணவரின் பாதங்களை கழுவிய நீரை எடுத்து அவர்கள் மீது தெளித்தார் அடுத்த நொடியே துறவிகள் மூவரும் பச்சிளங்குழந்தைகளாய் மாறிப்போயினர். பிறகென்ன,நிர்வாணமாய் அமுது படைத்தார் அந்த உத்தமப் பெண்மணி. மூவரும் குழந்தைகள் ஆனதால் பிரபஞ்ச இயக்கமே ஸ்தம்பித்தது. தேவியர் மூவரும் தத்தம் சக்தியை இழந்தனர். நாரதரைக் கெஞ்சி, அனுஷ்யா தேவி காலடி வந்து வணங்கி நின்றனர். தங்கள் கணவரை மீட்க வழி கேட்டனர். அழுது புரண்டனர். அந்த வேளையில் அத்திரி மகரிஷியும் வந்து சேர்ந்தார். மீண்டும் குழந்தைகள் சிவ, விஷ்μ, பிரம்மாவாகினர். இந்தப் புராணக் கதையின் பின் கதையும் உண்டு. மூன்று குழந்தைகளின் ஒருமித்த வடிவே, அத்திரி மகரிஷி, அனுஷ்யா தேவி தம்பதியினரின் மகனான தத்தாத்ரேயர் எனும் யுகப் புருஷர் ஆவார்.

அத்திரி மகரிஷி மலை அத்திரி மகரிஷி மலை பயணம் செல்ல தென்காசியிலிருந்து ஆழ்வார்குறிச்சி சென்றால் அங்கிருந்து மினிபஸ் கடனாநதி அணைக்கு இரண்டு கிலோமீட்டர் முன்பு வரை செல்கிறது. அங்கிருந்து நடந்து செல்லவேண்டும், அல்லது ஆழ்வார்குறிச்சியிலிருந்து ஆட்டோவசதி உள்ளது. ஆட்டோவில் சென்றால் நபர் ஒன்றுக்கு 25 ரூபாய் பெற்றுக்கொண்டு 5 அல்லது 6 பேரை ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள். ஆட்டோவைபேசினால் 150 ரூபாய் அல்லது 200 ரூபாய் என பலிக்கும் அளவுக்கு பெற்றுக்கொண்டு கடனாநதி அணைக்கட்டு வரை கொண்டுசெல்கிறார்கள். இதை ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி கவணித்து கட்டணத்தை முறைப்படித்தினால் நன்றாக இருக்கும். மேலும் பத்தர்கள் திரும்பி வருவதற்க்கு, போகும் பொழுதே ஆட்டோ டிரைவர் போன் நம்பரை வாங்கிவைத்துக்கொண்டால் நாம் மலை இறங்க ஆரம்பிக்கும் பொழுது போன்செய்து அழைத்தால் ஆட்டோ நமக்காக அணையில் வந்து காத்திருக்கிறார்கள். மலைமேல் விசேசநாட்களில் மட்டுமே மதியம் அன்னதான உணவு கிடைக்கும், காலை உணவை ஆழ்வார் குறிச்சியில் முடித்துக்கொள்ளவேண்டும், அல்லது பார்சல் வாங்கி கொண்டு அணைக்கட்டில் அல்லது மலைக்குள் சாப்பிட்டுக் கொள்ளலாம், ஆனால் மலைக்குள் பிளாஸ்டிக்பைகள் அனுமதி கண்டிப்பாக இல்லை எனவே தகுந்தாற்ப்போல் செய்துகொள்ளவேண்டும். அணைகட்டில் வாகனத்திலிருந்து இறங்கியவுடன் பெரிய புலியின் படத்தை போட்டு ப்லிகளின் சரணாலயம் என்றும் நம்மை விழிப்புடன் பயணம் செல்ல அறிவுறுத்துகிறார்கள். மேலும் பயணத்தின் தொடக்கத்திலேயே வனத்துறையினர் நம்மை சோதனை செய்த பின்பே பயணத்திற்க்கு ஒரு நோட்டில் கையெழுத்தை பெற்றுக்கொண்டு அனுமதிக்கிறார்கள். கடனா நதி நீர்த்தேக்கப்பகுதியில் தண்ணீர் குறைவாக ஊள்ளதால் மக்கள் அதை குறுக்கு பாதையாக பயண்படுத்துகிறார்கள். மலைக்குள் நடந்து செல்லும் குறுகலான பாதை கோவில் வரை பாறைகள் இல்லாத பாதை நடப்பதற்க்கு எளிதாக உள்ளது. கோவில் அருகில் செல்லும் பொழுது மட்டுமே ஒரு பதினைந்து நிமிட ஏற்றமுள்ள பாதை உள்ளது. அந்த ஏற்றமும் பாறைகள் இல்லாத மண்பாதையாகவே உள்ளது, எனவே மழை காலங்களில் வழுக்கும்படியாக உள்ளது. அதன் அருகில் பெரியபாறை ஒன்றில் குகை ஒன்று உள்ளது. அதனுள் சித்தர்கள் தவமிருப்பதாக கூறுகிறார்கள். எனவே பக்தர்கள் அந்த குகையுள் தீபமேற்றி வழிபடுகிறார்கள். கருவறையின் முன் மண்டபம், அதன் வாசல் நிலை போல் இருபுறமும் புளியமரங்கள் வளர்ந்தோங்கி நிற்கின்றன அருள்மிகு அனுசுயாதேவி அருள்மிகு அத்திரிமகரிஷி இருவரும் கோவில் கருவறையில் லிங்கவடிவில் காட்சியளிக்கின்றனர். இங்கு அனுசூயாதேவி அம்மன் அட்டமாசித்திகளை குறிக்கும்படியாக எட்டுபட்டையான லிங்க வடிவில் உள்ளார்.அதன் முன்பக்க பட்டையில் திரிசூலமும் செதுக்கப்பட்டுள்ளது. இந்த லிங்க அமைப்பு வேறெங்கிலும் இல்லை. இதை தரிசிக்க சுவாமிகள் அலங்காரத்தில் இல்லாதபோது மட்டுமே முடியும்.அனுசுயா தேவியும், அத்திரி மகரிஷியும் அருள் பாலிக்கிற கோயில், யாரிவர்கள்? புராணத்திற்குள் நுழைவுதற்கு முன், ஒரு செய்தி அவர்கள் தமிழகத்து ரிஷிகள். நமது ''சுசீந்திரம்'' அத்திரி மகரிஷியின் பூர்வீகம் என்கிறார்கள் அருள்மிகு கங்காதேவி சிறிய கிணற்றினுள் அமைக்கப்பட்டுள்ளார். கிணற்று அடிபகுதியிலிருந்து நீரூற்று புனித தீர்த்தமாக உற்பத்தியாகி வருகிறது, இந்த தீர்த்தத்தில் குளிப்பதாலும், குடிப்பதாலும் உடலிலுள்ள வியாதிகள் நீங்கி குணமடைகிறார்கள். அகத்திய முனியும், அத்திரி முனியும் அத்திரி மகரிஷி தியானபீடம், அத்திரி மகரிஷி, அனுசுயாதேவி புராணம். ஒரு சமயம் முப்பெரும்தேவியரான சரஸ்வதி, பராசக்தி, லட்சுமி மூவருக்கும் கற்பில் சிறந்தவர் யாறென கேள்வி எழுந்தது. சந்தேகத்தை தீர்க்க நாரதமுனியிடம் வினாவினார்கள், அதற்கு நாரதர் அனுஷயா தேவியை காட்டினார் அதனால் தேவியர் மூவருக்கும் தங்களை கூறாது அனுசுயாதேவியை கூறியதால். அனுசுயா தேவி மேல் பொறாமையும், கோபமும் கொண்டனர், அதை சோதிக்க தங்கள் நாயகர்களை, அனுஷ்யா தேவி வசித்து வந்த குடிசைக்கு அனுப்பி வைத்தார்கள். மனைவி சொல்லைத் தட்டாத மூவரும் துறவி வேடம்பூண்டு கதவைத் தட்டினர். அந்த வேளை, அத்திரி மகரிஷி நீராடச் சென்றிருந்தார். அனுஷ்யா தேவி, வந்தவர்களை வரவேற்றார். வந்தவர்கள் பசி என்றனர். பசிப்பிணி தீர்த்தலை கடமையாகக் கொண்டிருந்த ரிஷி பத்தினி உணவு படைக்கத் தயாரானார். சாப்பிடும் முன்பு, மூவரும் ஒரு நிபந்தனை என்றனர். ‘என்ன?’ என்றார் அனுசுயாதேவி, ஏற்ப்பாயா? ஏற்றபின் மீறக்கூடாது என்று அடுத்தடுத்துக் கேட்டனர். ‘சரி’ என்றார் ரிஷி தேவி. நிர்வாண நிலையில் உணவு படையுங்கள்’ என்றனர். தன் தவ வலிமையால் வந்தவர் யாரெனவும், வந்த நோக்கமும் உணர்ந்த அந்தத் தாய், கணநேரத்தில் சரியெனச் சொன்னார். ஒரு கணம் கணவனை வணங்கினார். பின்பு கணவரின் பாதங்களை கழுவிய நீரை எடுத்து அவர்கள் மீது தெளித்தார் அடுத்த நொடியே துறவிகள் மூவரும் பச்சிளங்குழந்தைகளாய் மாறிப்போயினர். பிறகென்ன,நிர்வாணமாய் அமுது படைத்தார் அந்த உத்தமப் பெண்மணி. மூவரும் குழந்தைகள் ஆனதால் பிரபஞ்ச இயக்கமே ஸ்தம்பித்தது. தேவியர் மூவரும் தத்தம் சக்தியை இழந்தனர். நாரதரைக் கெஞ்சி, அனுஷ்யா தேவி காலடி வந்து வணங்கி நின்றனர். தங்கள் கணவரை மீட்க வழி கேட்டனர். அழுது புரண்டனர். அந்த வேளையில் அத்திரி மகரிஷியும் வந்து சேர்ந்தார். மீண்டும் குழந்தைகள் சிவ, விஷ்μ, பிரம்மாவாகினர். இந்தப் புராணக் கதையின் பின் கதையும் உண்டு. மூன்று குழந்தைகளின் ஒருமித்த வடிவே, அத்திரி மகரிஷி, அனுஷ்யா தேவி தம்பதியினரின் மகனான தத்தாத்ரேயர் எனும் யுகப் புருஷர் ஆவார்.

உங்கள் தலையெழுத்தை மாற்றி அருளும் பிரம்மா! திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம்… பலன் தரும் பரிகாரத் தலங்கள் ‘ஹூம்… எல்லாம் என் தலையெழுத்து. பிரம்மா எழுதின தலையெழுத்தை யாரால மாத்த முடியும்?’ என்று அலுத்துக் கொள்கிற சராசரி மனிதர்கள்தானே நாம்! கவலைப்படாதீர்கள். நாம் சீரும் சிறப்புமாக வாழ்வதற்கு, நம் தலையெழுத்தை மாற்றி அருளத் தயாராக இருக்கிறார் பிரம்மா. இந்த அற்புதத் தலத்தை அறிவதற்கு முன்பு சிறியதொரு கதை! ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா!’ என்பது சத்தியமான வார்த்தை! நம் தீவினை நமக்குள்ளேயேதான் உள்ளது. அது… கர்வம்! ‘நான்’ என்பதை அழிக்க, முனிவர்களும் ஞானிகளும் தெளிவுற வலியுறுத்தியுள்ளனர். கர்வத்தால் துயரத்தைச் சந்தித்த இன்னொருவரும், ‘கர்வம் கூடாது; தலைக்கனம் வேண்டாம்’ என அறிவுறுத்தியுள்ளார்; கர்வத்தால் தன் தலையையே இழந்த அவர்- பிரம்மா! தலையை இழந்தார்; பதவியை இழந்தார்; பணியை இழந்தார்; வெறுமனே இருந்தார். ‘சிவபெருமானுக்கு நிகரானவன் நான்; அவருக்கும் தலைகள் ஐந்து; எனக்கும் ஐந்து தலைகள்’ என்று ஆணவம் கொண்டிருக்க… பிரம்மாவின் தலையில் ஒன்றைக் கொய்தார் சிவபெருமான். இழந்த ஆற்றலைப் பெறுவதற்காக சிவனாரையே பூஜித்து, வரம் பெற்றார்! பிரம்மா வணங்கியதால் சிவனாருக்கு பிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம் உண்டானது! ஆனால், வரம் கொடுத்த சிவனார், கூடவே நிபந்தனை ஒன்றும் விதித்தார். நிபந்தனையா? அதென்ன…? ‘இழந்த ஆற்றலையும் தேஜஸையும் வழங்குங்கள் ஸ்வாமி’ என சிவனாரை நோக்கி கடும் தவம் இருந்த பிரம்மாவின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ‘நீ இழந்தவற்றை திரும்பப் பெற வேண்டுமெனில், ‘கர்ம விதியால் அவதியுறும் பக்தர்கள், இந்தத் தலத்துக்கு வரும் வேளையில், ‘விதி இருப்பின் விதி கூட்டி அருள்க!’ என்றார். அதாவது முன்பு எழுதிய விதியைத் திருத்தி, செம்மையாகவும் சிறப்பாகவும் விதியை மாற்றி எழுதச் சொன்னார் சிவபெருமான்! பிரம்மாவும் ஏற்றார்; வரம் பெற்றார்; இழந்த ஆற்றலைப் பெற்றார். பக்தர்களுக்கு விதியை மாற்றி, தலையெழுத்தை திருத்தி அருள்கிறார் பிரம்மா! திருச்சி சமயபுரத்தை அடுத்து, சிறுகனூருக்கு அருகில் உள்ளது திருப்பட்டூர் கிராமம். இந்த ஊரில், பிரமாண்ட ஆலயத்தில், பிரம்மா தனிச் சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார். இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு… பிரம்ம புரீஸ்வரர், பழமலைநாதர், பாதாளலிங்கேஸ்வரர், தாயு மானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணா சலேஸ்வரர், கயிலாசநாதர், ஜம்புகேஸ்வரர், களத்திர நாதர், சப்தரிஷீஸ்வரர், சுத்த ரத்னேஸ்வரர் என சிவபெருமான், 12 லிங்கத் திரு மேனியாக, தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார். எனவே இங்கே வந்து தரிசித்தால், 12 தலங்களை தரிசித்த புண்ணியம் கிட்டுமாம்! தலத்தின் நாயகி- கருணைக் கடலான ஸ்ரீபிரம்ம சம்பத் கௌரி! சிவபெருமானுடன் சேர்ந்து பிரம்மனுக்கு அருளிய தால், பிரம்ம சம்பத் கௌரி எனும் திருநாமம் இவளுக்கு! பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள், சிவனாரின் சந்நிதியில் விழும் சூரிய ஒளி, அம்பாளின் திருப் பாதங்களிலும் விழுமாம்! குருர் பிரம்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மகேஸ்வர: குருசாட்சாத் பர பிரம்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம: என்பதற்கு ஏற்ப, ஆலயத்துள்… சிவ சந்நிதியின் கோஷ்டத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி, அடுத்து அருகில் தனிச்சந்நிதியில் ஸ்ரீபிரம்மா, கோஷ்டத்தில் ஸ்ரீவிஷ்ணு, அடுத்து மூலவரான ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் என காட்சி தருவது விசேஷம் என்கின்றனர் பக்தர்கள். ஆரம்பத்தில், திருப்படையூர் என அழைக்கப்பட்டதாம்! முருகப்பெருமான், அசுரர்களை அழிப்பதற்காக இங்கே… சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, அதன் பிறகு படை திரட்டிச் சென்றாராம். இதனால் இந்த ஊர் திருப்படையூர் எனப்பட்டு திருப்பட்டூர் என்றானதாகச் சொல்கிறது தல வரலாறு! இங்குள்ள ஸ்ரீகந்தபுரீஸ்வரரை வணங்கினால், சகல நலனும் பெறலாம். இன்னொரு விஷயம்… பதஞ்சலி மகரிஷி ஐக்கியமான… அதாவது முக்தி அடைந்த தலங்களாக, ராமேஸ்வரம் முதலான பத்து தலங்களைச் சொல்வர். இவற்றுள், திருப்பட்டூர் தலமும் ஒன்று! இங்கு, சிவபெருமானுடன் பதஞ்சலி மகரிஷி ஐக்கியமான இடத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர். சித்தர் பாடலில் ‘பதஞ்சலி பிடவூர்’ என இந்தத் தலம் சிறப்பிக்கப்படுகிறது. இப்போது இந்தப் பகுதியையே தியான மண்டபமாக அமைத்துள்ளனர். யோக நிலையை அடைய விரும்புபவர்கள், மனதில் அமைதி இன்றி தவிப்பவர்கள், இங்கே வந்து பதஞ்சலி மகரிஷி சமாதிக்கு எதிரே அமர்ந்து தியானம் செய்து வழிபட்டால், நன்மை உண்டு என்கின்றனர் பக்தர்கள்! வைகாசி சதய நாளில், குரு பூஜை விசேஷம். தவிர, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் எண்ணற்ற பக்தர்கள், மகரிஷியை வணங்குகின்றனர். இதோ… ஆங்கிலப் புத்தாண்டு நெருங்கி விட்டது; 2010-ஆம் வருடத்தை வரவேற்கவும் உறவுகளுக்கும் தோழமைகளுக்கும் வாழ்த்துகளைப் பரிமாறவும் தயாராகி விட்டோம். இந்த வேளையில்… நம் புத்தியில் அகந்தை அகன்று, புதுவாழ்க்கை மலர, பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்துக்கு வந்து, பிரம்மாவை தலை வணங்கி வேண்டுங்கள்; நம் தலையெழுத்தை திருத்தி அருளுவார், பிரம்மா! மஞ்சள் காப்பு… புளியோதரை! வாழ்வில் துன்பம், கடன் தொல்லை, நிலையான வேலையின்மை, குழந்தை பாக்கியம் ஆகியன கிடைக்கப் பெறாதவர்கள், இங்கே வந்து பிரம்மாவுக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை நைவேத்தியம் செய்து வழிபட, விரைவில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்; தொட்டில் சத்தம் கேட்கும்! வியாழக்கிழமை காலை 6 மணி; மற்ற நாளில் 8 மணிக்கு பிரம்மாவுக்கு அபிஷேகம் நடைபெறும்! 7ஆம் தேதி பிறந்தவரா? ஏழு நிலை ராஜகோபுரத்துடன் கூடிய ஆலயம்! இந்த ஏழு நிலைகளைக் கடந்து, சுமார் 300 அடி தூரத்தில் மூலவரான பிரம்மபுரீஸ்வரரின் சந்நிதியில், பங்குனியில், சூரிய பகவான் தனது வெளிச்சக் கதிர்களால் சிவனாரை வழிபடுகிறார். ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் ஏறி, ஏழு நிலை கோபுரத்தைக் கடந்து, ஏழு நிமிடங்கள்… சிவனாரின் மீது சூரிய ஒளி படும். ஆகவே 7-ஆம் தேதி பிறந்தவர்கள் இங்கு வந்து வழிபட, நினைத்தது நிறைவேறும் என்பர். அதுமட்டுமா? ஜாதகத்தில் 7-ஆம் இடத்தைப் பொறுத்தே ஒருவருக்கு நல்ல மனைவி மற்றும் நல்ல நண்பர்கள் அமைவார்கள். எனவே தோஷ நிவர்த்திக்காகவும் பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பிரம்மாவை வழிபடுகின்றனர். ஷென்ம நட்சத்திர நாளில் தரிசிப்பது விசேஷம்! மாதந்தோறும் வருகிற… உங்களின் ஜென்ம நட்சத்திர நாளில், பிரம்மாவை தரிசித்தால், செல்வம் பெருகும்; ஐஸ்வரியம் கொழிக்கும்; இழந்ததைப் பெறுவீர்கள்! எங்கே இருக்கிறது? திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் உண்டு; ஆனாலும் குறைவுதான்! சமயபுரத்தில் இருந்து சிறுகனூர் வரை பேருந்து வசதி நிறையவே உண்டு. இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர். ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ வசதி உண்டு.

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 9 கள்ளும் சிவானந்த தேனும் கள்ளை உண்டால் அறிவு மயங்கும், சிவானந்த தேன் பருகினால் சிந்தை தெளிவாகும், ஆனால் உலக மக்களோ கள்ளுண்டு உணர்விழக்கவே விரும்புகின்றனர். இதனை திருமூலர் " கழுநீர் பசுப்பெறில் கயந்தொறும் தேரா.............. ) என்ற பாடல் வழியாக " பசுவினம் கழுநீர் உண்டு பசியாறும், அது பழக்கமாகிப் பின் தாமமெடுத்தாலும், குளத்து நீரைத தேடி அவை செல்வதில்லை. சிவானந்த தேன் பருகிக் களிப்பவர்கள் சிந்தையைக் கலங்க செய்யும் மதுவகையில் நாட்டம் வைப்பதில்லை தாம் கொண்ட நெறியில் நிற்பதையே அவர்கள் விரும்புவர்", என்கிறார்,சிவானந்தத் தேன் அன்பு, அறிவு, ஆற்றல்களை விளக்கம் பெறச் செய்யும். கள்ளோ உடலையும் உணர்வையும் சுருக்கும் போதிய அளவு கழுநீர் பருகிய பசு, குளத்து நீரைத் தேடிப் போகாது, வாழ்வை வளப்படுத்த விரும்புகிறவர் சிவானந்தத் தேன் பருகக் காத்திருப்பாரேயின்றி கள்ளுண்டு களிக்க மாட்டார், அறமுறையும் அருள்நெறியும் இல்லாமல் பாவத்தில் உழல்பவர்களே கள்ளின் மீது நாட்டம் வைப்பார்கள் என்கிறார் திருமூலர், தீய செயல்களில் சிந்தை வைப்பவர்தாம் காமத்தையும் கள்ளையும் வடிகாலாய் கொள்வது , ஆனால் மேலோர்களோ இறைவனின் திருவடி பற்றி ஆன்ந்தத் தேன்பருகுவர், அதற்கான் பாடல் : காமமும் கள்ளும் கலகட்கேயாகும் ........................ ) கள்ளுண்டு களிப்பவர் கண்ணேதிரே தெரிவது சிற்றின்பம் தான், கள்ளானது கருத்தையழிக்கும் மெய்ப் பொருளை காணவொட்டாமல் தடுக்கும் கள்ளுண்பவர் தீராப் பெருந்துன்பம் அடையவர், கலக்கமுற்று கவலைக்குள்ளாவர், பாடல் : மயங்கும் தியங்கும் கள்வாய்மை அழிக்கும் ................................ ) கள்ளில் மோகம் வைப்பவர்கள் மூடர்கள் என்கிறார், " இராப்பகல் அற்ற இடத்தே இருந்து பராக்கற ஆனந்தத் தேறல் பருகார் இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து இராப்பகல் மாயை இரண்டிடத் தேனே" என்பது திருமந்திரம் " மறப்பும் நினைப்பும் பாவமும் புண்ணியமும் இராப்பகல் என உருவகிக்கபட்டது, இறைவனின் திருவளோ இராப்பகலற்ற இடத்தே உள்ளுணர்வாய் திகழ்வது , கள்ளுண்டு களிப்பவர் சிவானந்த தேனின் இனிமையை உணர்வதில்லை, இறைவனின் திருவடி வழங்கும் இணையற்ற இன்பத்தை அவர்கள் உணரவேண்டும், " இது பாடலின் கருத்து. நிலையான இன்பம் எதுவென்று உணரவேண்டும், உண்மையான ஞானத்தில் ஆனந்தம் பெறவேண்டும், கள் என்பது வெறியூட்டி உணர்வை மறைக்கும் பொருள் என்கிறார் வள்ளுவர் அறிவுடையோர் உங்களை மனிதனாய் மதிக்க வேண்டும் என்று விரும்பினால் கள்ளை விலக்குங்கள் எனக்கு கள் மீதுதான் விருப்பம் என்பீர்கள்ாயின் விலங்கினும் கேடாய் இருந்து விட்டு போங்கள் " என்கிறது குறள் "உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரால் எண்ணப்பட வேண்டா தார்,"

புதன், 28 மே, 2014

திருமூலரும் திருமந்திரமும் / உபதேசம் 8 கற்றதனாலாய பயன்


திருமூலரும் திருமந்திரமும் / உபதேசம் 8 கற்றதனாலாய பயன் கல்வி கற்பதன் பயன் ஒருபதவியை அடைவது என பலரும் கொள்பர் உயரிய நோக்கம் உடைய பெரியோர் தனம்அறிவுத்திறததால் தாம் அறந்த உண்ைமகளை மற்றவர்க்கும் உணர்த்தி அவர்களுடைய அறிைவயும மேம்படுத்துவர். ஞானக் கண்ணால் காணமுடிந்தவர் மற்றவர்களிடத்தும் தான் கண்ட அைடந்த ஞானக்கண் மற்றவர்களுக்கும் உண்டாகுமாற செய்யவேண்டும் என்கிறார் திருமூலர், கற்றறி வாளர் கருதிய காலத்துக் கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங் கற்றறி காட்டக் கயலுள வாக்குமே. கல்வியைக் கற்ற அறிவினையுடையோர் அவ் வறிவால் கருதியுணருங் காலத்து, கல்வியைக் கற்ற அறிவினை உடையோர் பலரது உள்ளத்திலும் சிறப்பாக ஒரு கண் இருத்தல் புலனாகும். இனி அக்கற்ற அறிவினையுடையோர் ஆராய்ந்து சொல்லு கின்ற கல்வியறிவுரை, பாலை நிலத்திலே கயல்மீனைப் பிறழச் செய்தாற் போலும் நன்மையைப் பயக்கும். ``பாம்பறியும் பாம்பினகால்`` (பழமொழி நானூறு) என்றபடி, கற்றாரது நிலைமையைக் கற்றவரே உணர்வரல்லது மற்றவர் உணர மாட்டார் ஆதலின், ``கற்றறிவாளர் கருதிய காலத்து ... ... ... கண்ணுண்டு`` என்றார். `கற்றாரைக் கற்றாரே காமுறுவர்` (மூதுரை) என ஔவையாரும் கூறினார். ``ஓர் கண்`` என்றது, பலர்க்கும் முகத்தின்கண் உள்ள ஊனக் கண்ணல்லாத வேறொருவகைக்கண் என்றவாறு. அது ஞானக்கண். ஞானக்கண்ணே சிறப்புடைத்தாதலை, கண்ணுடையர் என்பவர் கற்றோர்; முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். -குறள், 393 எனத் திருவள்ளுவரும் குறித்தருளினார். நான்கிடத்தும், `கற்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயின. கற்ற அறிவு - கற்றதனால் உண்டாகிய அறிவு; ``கற்றறி`` என்பதில் அறி, அறிவு; முதனிலைத் தொழிற்பெயர். காடு, இங்குப் பாலை நிலம், ``அக்கயல்`` என்பதில், சுட்டுப்பண்டறி சுட்டாய், `நீரினுள் வசிக்கும் அத்தன்மை உடைய` என அதன் இயல்பை விதந்தவாறாய், நீர் நிறைந்து நிற்றலைச் சுட்டுங் குறிப்பாயிற்று. `காட்டில்` என ஓதுதலும் ஆம். `பாலையை மருதம் ஆக்கினாற்போல, அறியாமையாற் பாழ்பட்டுக் கிடக்கும் உள்ளத்தை அறிவுடையதாய் நலனுறச் செய்யும்` என்பதாம். `கற்ற அறிவு கயலை உளவாக்கும்` என்க. எனவே, `அவர் சொல் கேட்கத்தக்கது` என்பதும் குறிக்கப்பட்டதாம். இதனால், கல்வியின் சிறப்பும், அது, தன்னை உடையார்க்கே யன்றிப் பிறர்க்கும் பயன் தருதலும் கூறப்பட்டன. இங்கே வாழும் காலத்திலேயே வாழ்வின் நிைலயாமையை உணர்ந்து ெகாள்ளுங்கள் உயிருக்கு உறுதி தரும் சாசுவதப்பொருளான இறைஞானத்தை பெற முயற்சி செய்யுங்கள் அவ்விதமாய் உங்கள பாவங்களை நீக்கி கொள்ளுஙகள் என்கிறார் இந்த பாடல் மூலமாக நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல் கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள் சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின் மற்றொன் றிலாத மணிவிளக் காமே. பொழிப்புரை : இளமை உள்ள பொழுதே என்றும் ஒரு பெற்றி யனாய் நிற்கின்ற சிவபெருமானது திருவடிச்சிறப்பைத் தெளிவிக் கின்ற நூல்களைக் கற்கின்ற செயல்களைத் தப்பாது செய்யுங்கள்; அவ்வாறு கற்றலானே பாவங்கள் பற்றறக்கழியும்; பின்பு அக்கல்விகள் வெறுங்கல்வியாய் ஒழியாதவாறு அத்திருவடிகளை வணங்குங்கள்; வணங்கினால் அவை, தன்னை ஆக்குதற்கும், தூண்டுதற்கும் பிறிதொன்றனை வேண்டாது இயல்பாகவே என்றும் ஒளிவீசி நிற்கும் மணிவிளக்குப் போல நின்று உங்கட்கு உதவுவனவாம். குறிப்புரை : கற்றற்கு வேண்டுவது இளமைக் காலமே யாதலின், அஃது இங்கு ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. இளமை முதலிய நிலை யாமையுடையார்க்கு நிலைபேறாவது இறைவன் திருவடியே என்றற்கு, `நிலையுடையான் கழல்` என்றும், `அதனை விளக்கும் கல்வியே கல்வி` என்றற்கு, ``கழல் கற்கின்ற செய்மின்`` என்றும், `அக்கல்வியால் வினைமாசு, நீங்கும்` என்பதுபற்றி ``கழிந்தறும் பாவங்கள்`` என்றும், கற்க கசடறக் கற்பவை; கற்றபின் நிற்க அதற்குத் தக. குறள்,391 என்றவாறு, கற்றவண்ணம் நில்லாதபொழுது கற்றலாற் பயனில்லை யாகலானும், கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅ ரெனின். -குறள்,2 என்பவாகலின், கல்வியின் உண்மைப் பயன் இறைவன் திருவடியைத் தொழுதலேயாகலானும், ``சொற்குன்றல் இன்றித் தொழுமின்`` என்றும், திருவடிக் கல்வியால் வினை நீங்கப்பெற்றார் அத்திருவடியைத் தொழுவாராயின் அதனைப் பெற்று - இன்புறுவ ராகலின், ``தொழுதபின் மணி விளக்காம்`` என்றும் கூறினார். `திருவடிக் கல்வியே கல்வி` என்பதனை, `சிவமுயன் றடையும் தெய்வக் கலைபல திருந்த ஓதி` -தி.12 பெ. பு. மனுநீதி, 18 எனவும், ``உள்ளம்நிறை கலைத்துறைகள் ஒழிவின்றிப்பயின்றவற்றால் தெள்ளிவடித் தறிந்தபொருள் சிவன்கழலிற் செறிவு`` -தி.12 பெ. பு. சிறுத்தொண்டர், 4 எனவும் சேக்கிழார் குறிப்பிடுதல் காண்க. ``கற்றதனாலாய பயன் என்கொல்`` என மேற்காட்டிய திருக்குறளைக் கூறிய திருவள்ளு வனார்க்கும் இதுவே கருத்தாதல் உணர்க. வினைமாசினை அறுக்கும் திருவடிக்கல்வியை, ``சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் (ஆகிய) உவமையிலாக் கலைஞானம்`` -தி.12 பெ. பு. திருஞான. 70 எனவும், இறைவன் திருவடியைப் பலவாற்றானும் தொழுது அடைத லாகிய அனுபவத்தை, அதே பாட்டில், ``பவம் அதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் (ஆகிய) உணர்வரிய மெய்ஞ்ஞானம்`` திருமறை .12 ஞான. 70 எனவும் சேக்கிழார் விரித்தமை காண்க. சொல் - சொல்வடிவாகிய கல்வி. இதனை, `வாசக ஞானம்` என்றல் அறிக. குன்றல் - பயனின்றிக் கெடுதல். இதனால், `உண்மைக் கல்வியாவது இது` என்பது, அதன் பயன்களும் தெரித்துக் கூறப்பட்டன. கல்வியில் "உலகியல் கல்வி வேறு, உண்ைமயான கல்வி வேறு" என்கிறார் திருமூலர், உண்மையான கல்வி குண்டலியின் ஆற்றைலப் பெருக்குவது பிரணவ நெறியில் நிற்பதுமே என்கிறார் அவர், வீடுபேற்றை அளிப்பது பிரணவ அறிவு, இறைவனை வழீபடுவோர்க்கு தூய்மையான சோதி துணை வரும், சிவனார் பெருமை உணர்ந்தவர்கள் அவனையே தங்கள் வழித்துைணயாய் கொள்வார்கள், இறைவனையே பற்றுக் கோடாய் கொள்வது ஞானியர் துணையில் சாத்தியமாகும்,கல்லாதாைர துணை கொள்ளக்கூடாது என்கிறது திருமந்திரம் வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன் கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும் வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே. பொழிப்புரை : வானுலகமும், பிற உலகங்களுமாய் நின்று எல்லா உயிர்கட்கும் எவ்விடத்தும் துணையாய் நிற்கும் பேராற்றலும், பேரருளும் உடையவனாகிய இறைவன், கல்வியால் யாவர்க்கும் நன் னெறித் துணையாயும், அமுதமாயும் நிற்கின்றவர்கட்கே விளங்கித் தோன்றிப் பெருந்துணையாய் நிற்பன். கல்வி இல்லாதவர்க்கு அவர் உள்ளம் தன்னை நீங்குதற்கே துணையாவன். (அறியாமையை மிகுவிப்பன் என்பதாம்) குறிப்புரை : வழித்துணையாதலும், `யாண்டு பலவாயினும் நரையிலவாக்கி` அமுதமாதலும் கற்றார்க்கன்றிக் கூடாமையின், `கல்வியால்` என்பது ஆற்றலால் விளங்கிற்று. இதனாலும் கல்வியது சிறப்புக் குறிக்கப்பட்டது. `கழிதுணை, ஒழிதுணை` என்பன எதுகை நோக்கி விரித்தல் பெற்றன. கழி, உரிச்சொல். ``கற்றல் கேட்டல் உடையார் பெரியார்`` (தி.1 ப.1 பா.2) ``கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன்`` (தி.3 ப.40 பா.3) என்பன திருஞானசம்பந்தர் வாக்காதல் அறிக. இதனால், `திருவருள் பெறுதல் கல்வியானே ஆவது` என்பது கூறப்பட்டது. கண்ணப்பர் முதலாயினார் கல்வி இன்றியும் திருவருள் பெற்றாரால் எனின், அவரெல்லாம் முற்பிறப்பிற் கற்று இப்பிறப்பில் அதன் பயனை எய்தினார் என்பதனை, ``கலிமலிந்த சீர்நம்பி கண்ணப்பன்`` -தி.7 ப.39 பா.2 என்பது முதலிய அருட்டிருமொழிகளான் அறிந்துகொள்க. இது பற்றியன்றே திருவள்ளுவர், ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற் கெழுமையும் ஏமாப் புடைத்து. -குறள், 298 எனவும், யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு. -குறள், 297 எனவும் ஓதுவாராயினர் என்க. பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின் முற்றது எல்லாம் முதல்வன் அருள்பெறில் கிற்ற விரகிற் கிளரொளி வானவர் கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே. பொழிப்புரை : யாதொரு செயலாயினும் அது முற்றுப் பெறுகின்ற அந்நிலைமையெல்லாம் முதற்கடவுளது திருவருள் பெற்றவழியே ஆவதாம். `எல்லாவற்றையும் முடிக்க வல்ல வன்மையை உடை யோம்` எனத் தம்மை மதித்துக்கொள்கின்ற தேவரேயாயினும், அவனது இயல்பை உணர்த்தும் நூல்களைக் கற்றவரே அவனது பேரின்பத்தை அடைந்தனர்; ஏனையோர் அடைந்திலர். அதனால், நீவிர் நல்லதொரு துணையைப் பற்றவேண்டின், சிவபெருமானையே அறிந்து பற்றுதல் வேண்டும். http://poompalani.weebly.com http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in,

செவ்வாய், 27 மே, 2014

திருமூலரும் திருமந்திரமும் உபதேசம் 7 ஏழ்மை


திருமூலரும் திருமந்திரமும் உபதேசம் 7 ஏழ்மை திருமூலரும் திருமந்திரமும் உபதேசம் 7 ஏழ்மை துன்பத்தில் மிகப் பெரியது வறுமையால் உண்டாகிற துன்பம், " கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை " அவ்வையார் வறுமை ஒருவனை எப்படியெல்லாம் துன்புறுத்தும் அவனுடைய வாழ்க்கையை மாற்றிப்போடும என்பதை வெகு எளிமையாக சொல்கிறார் திருமந்திரத்தில் திருமூலர் புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை அடையப்பட் டார்களும் அன்பில ரானார் கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே" என்கிறது திருமந்திரம் உடுத்திய ஆடை கிழிந்தபின் பயன்படாது , வறுமையுற்றவர் வாழ்க்கையும் அதுபோல் பயனற்றதுதான், நெருங்கியிருந்த உறுவுகள் அன்பில்லாது விலகிப்போகும் கொடுக்கல் வாங்கல், நின்றுவிடும், அன்பில்லாது விலகிப் போகிவிடும். குதூகலம் மறைந்து விடும், ஏழ்மையின் காரணமாக ஊரார் நடுவே நிமிர்ந்து நடக்கும் கம்பீரம் இல்லாது போகும், இது பாடலின் கருத்து " வறுமையிலும் செம்மையாய் வாழும் வழியிது என்கிறது நாலடியார், " " மறுமையும் இம்மையும் நோக்கியொருவருக்கு உறுமாலியைவ கொடுத்தல் - வறமையால் ஈதல் இசையாதெனினும் இரவாமை ஈதல் இரட்டியுறும், வறுமை காரணமாய் ஒருவர்க்கு வழங்கும் திறன் இல்லாது போனாலும், அவர் இராதிருந்தாலே சிறப்புதான், இரவாதிருக்கும் தன்மை கொடுப்பதைக் காட்டிலும் இருமடங்கு உறுதியை உடையது, இக்கருத்தினையே புறநானூற்று பாடலிலும் ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர் ஈயேன் என்றல் அதனிலும் இழிந்தன்று கொள் என கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்நதன்று " என்று இரத்தல் கொடுத்தல் குறத்து அதன் இழிவு உயர்வுகளை கூறப்படுகிறது வறுமை குறித்து நல்குரவு அதிகாரத்தில் வள்ளுவர் " நன்மையற்ற நிலையைக் குறிக்கும் சொல் நல்குரவு" ஒருவன் வறுமையடைய எத்தனையோ காரணங்கள் - செல்வமில்லாதிருப்பது பெற்றோரின் ஆதரவின்றி வாழ நேரிடுவது, உழைக்கத் தவறுவது, அறிவுத்திறன் இல்லாதிருப்பது, பொருளின் மீது பற்றற்று போவது, பிறரால் சொத்து அபகரிக்கப்படுவது, என்று தீய பழக்கங்களும் ( மது,மாது, மாமிசம்) கூட அவனுடைய வறுமைக்கு காரணமாக அமையலாம்,. வறுமையைப்போல் துன்பம் தருவது " வறுமையின்றி வேறில்லை " என்கிறார் வள்ளுவர் இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது" - குறள் ஒருவனுடைய பண்பையும் பரம்பரைப் பெருமையையும் வறுமை அழித்துவிடும், வறுமை என்கிற ஒரு துன்பம் தனித்து வராது, கூடவே பல துன்பங்களையும் கூட்டி வரும். ஏழைசொல் அம்பலமேறாது என்கிறது சொலவடை நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் - நலகூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும், " என்கிற குறளை பின்பற்றி எழுந்தாதாயிருக்கும், நீங்கள் சொல்லின் பொருளறிந்து விளக்கமாகவும் இனிதாகவும் எடுத்துச் சொல்லக்கூடும் ஆனால் நீங்கள் பொருளற்றவராயின் (வறியவர் ) உங்கள் சொல்லும் பொருளற்றதாகிவிடும்,வறியோரின் சொல் உரையேறா என்பர் , இரந்து பொருள் பெறுவதைக் காட்டிலும் இறந்து போவதே சிறப்பு என்பது வள்ளுவர் கருத்து கொடிய வினைகளால் துன்புறுகிறவன் அவற்றில்இருநது விடுதலை பெற என்ன வழி? சொல்கிறார் திருமூலர் " சிவனார் திருவடிகளை வேண்டி நின்றால் வறுமை நீங்கி வாழ்க்கையில் சுகப்பட முடியும் என்கிறார் ( பாடல் : அறுத்தன ஆறினும் ஆனின மேவி................ ) திருச்சிற்றம்பல் - ஓம் நமசிவாயம் - http://poompalani.weebly.com http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in,

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): நமது தலையெழுத்தையே மாற்றும் ஆன்மீக முயற்சிகள்!!!

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): நமது தலையெழுத்தையே மாற்றும் ஆன்மீக முயற்சிகள்!!!: விதியை மதியால் வெல்லலாம் என்பது ஜோதிடப் பழமொழி! மனிதன் நாகரீகமடையத் துவங்கி,சுமாராக 5,00,00,000 ஆண்டுகள் ஆகிவிட்டன;ஒவ்வொரு தலைமுறையிலும்(ஒரு...

ஞாயிறு, 25 மே, 2014

பைரவர் பிறப்பு :


பைரவர் பிறப்பு : பைரவர் பிறப்பு : அபிதான சிந்தாமணி என்ற நூலில் பைரவர் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. தாருகாசுரன் என்பவன் இறவா வரம் வேண்டும் என சிவனிடம் வரம் கேட்டான். உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் சொன்னார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம். பல அட்டூழியங்கள் செய்த அவன் அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவனிடம் முறையிட் டனர். உடனே, பார்வதிதேவி சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தின் கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர் ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. "காளம்' என்ற விஷம்படிந்த அந்த பெண்ணுக்கு "காளி' என பெயர் சூட்டினாள் பார்வதி. காளிதேவி கடும் கோபத் துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம் கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின்னர் அந்தக் கனலை காளிதேவி ஒரு குழந்தையாக மாற்றி அதற்கு பாலூட்டினாள். அதன்பிறகு சிவபெருமான் காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுக்குள் புகச்செய்தார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன் குழந்தைக்கு "பைரவர்' என்று பெயர் வைத்தார். நாய் வாகனம்: தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல வளர்ப்பார்கள். சிலர் நாயை தெருவில் கண்டாலே கல்லெறிவார்கள். இதுபோல், வாழ்க்கையில் வரும் துன்பத்தையும், இன்பத்தையும் இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என்றே வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாகவே நாய் வாகனம் கருதப் படுகிறது. நாய்க்கு "வேதஞாளி' என்ற பெயரும் இருப்பது குறிப்பிட தக்கது. ஸ்ரீ மஹா பைரவர் ஸ்ரீ மஹா பைரவர் மிக சக்திவாய்ந்த ஒரு கடவுள். ஒரு மிக உக்கிரமான அதிக ஆற்றல் வாய்ந்த ஒரு சக்திமிக்க அலை வடிவம். சிவபெருமானின் பூத கணங்களில் மிக முக்கியமானவர். ஸ்ரீ மஹா பைரவரை வணங்கினால் 100% பலன் கைகூடும் என்பார்கள். தேய் பிறையில் வரும் அஷ்டமியில் ஸ்ரீ மஹா பைரவரை வணங்குவது மிகுந்த விஷேசம். மணி,மந்திரம்,ஔஸதம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஸ்ரீ மஹா பைரவரின் அருள் இன்றி அறிந்து கொள்ள முடியாது என்பார்கள். சித்தர்கள் பாதையில் இந்த மணி,மந்திரம்,ஔஸதம் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. ஒரு சிறிய மந்திரமாகட்டும் அல்லது ஔஸதமாகட்டும் அது சித்தி பெற வேண்டும் என்றால் ஸ்ரீ மஹா பைரவர் அருளாசி இன்றி முழுமைபெறாத. அனுகிரகம் வேண்டும். ஒட்டக்கூத்தர் புலவரால் இயற்றப்பட்ட ஒரு மிக மிக பழமையான பாடல் ... உரக கங்கணம் தருவன பணமணி உலகடங்கலும் துயிலெழ வெயிலெழ உடை தவிர்ந்ததன் திரு அரை உடை மணி உலவி ஒன்றோடொன்று அலமார விலகிய கரதலம் தரும் தமருக சதிபொதி கழல் புனைந்த செம்பரிபுர ஒலியொடு கலகலன் கலன்கலன் என வருமொரு கரிய கஞ்சுகள் கழலினை கருதுவாம். ஸ்ரீ மஹா பைரவர் தன் கைகளில் கங்கணமாகக் கட்டி இருக்கிற பாம்பு கக்கும் மாணிக்கக் கற்களால் உலகம் முழுவதும் துயிலெழ வெயிலெழ. உடை தவிர்ந்த தன் இடுப்பினில் கட்டப்பட்டுள்ள மணிகள் ஒன்றோடு ஒன்று மோதி ஒலி எழுப்ப, கையில் உள்ள தமருகம் என்னும் உடுக்கை எழுப்பும் தாள ஓசையும்,சிவந்த சிலம்பின் ஒலியும் சேர்ந்து கலன்,கலன் என்னும் இனிய நாதம் உண்டாகுமாம். இப்படி காட்சி தரும் கரிய ஆடை அணிந்த பைரவர் பாதம் பணிந்து வணங்குவோம்.

சனி, 24 மே, 2014

அன்பே சிவம்


அன்பே சிவம்

சீ(ஸ்ரீ)தேவியும் மூதேவியும்


சீ(ஸ்ரீ)தேவியும் மூதேவியும் ( கேட்டலில் பிடித்தது ) சிங்கப்பூரில் சிவ, சு,சோம, அவர்கள் ஆற்றி ஆன்மீக சொற்பொழிவில் பிடித்த நிகழ்வுகள் நடைமுறை பேச்சு வழக்கில் சீதேவி என்றால் செல்வம் தரும் திருமகள் என்ற அதிர்ஷ்ட தேவியையும், மூதேவி என்றால் அபசகுணத்திற்கு எப்போது அதிர்ஷ்டம் இல்லாத எப்போதும் தூங்கி வழியும் தேவியையும் அதிர்ஷ்டமில்லாத தேவியையும் குறிப்பது நடைமுறையில் உள்ளது, துரதிஷ்டம் பிடித்த வீட்டை மூதேவி குடிகொள்ளும் வீடு என்று கூறுவது நமது மரபு, இது ஏளமான வார்த்தையாக எல்லாராலும் கூறப்படுவது, ஒரு ஆன்மீக சொற்பொழிவு நடைபெறும் கூட்டத்தில் சிலர் பாதி தூக்கக்கலக்த்தில் இருப்பதை அறிந்த சொற்பொழிவாளர் இங்குள்ள ஆன்மீக பெரியோர்கள் இறையருள் சம்பந்தமாக ஆன்மீகத்தை மிகவும் கவனமாக கேட்டுக்கொண்டுள்ளவர்கள் பக்கத்தில் - உங்களிடம் செல்ம் தரும் சீதேவி உடனிருக்கிறாள், ஆனால் இதை கவனமின்றி கேட்காத பாதி தூக்கித்தில் உள்ளவர்களிடம் மூதேவி உடன் இருக்கிறாள், நீங்கள் இந்த ஆன்மீக உரையை கேட்டு முடித்தபின் வீட்டிற்கு செல்லும் போது தங்களுடன் உடனிருந்த சீதேவி அல்லது மூதேவிதான் உங்களுடன் வீடுவரை வருவாள் உங்களுக்கு சீதேவி வேண்டுமா? அல்லது மூதேவி வேண்டுமா? என்ற வினா எழுப்பியவுடன் தூக்கத்திலிருந்தவர்கள் அனைவரும் விழிப்படைந்து அவரின் கவனத்திற்கு திருப்பபட்டனர், இதேபோன்று தவத்திரு வாரியார் சுவாமிகள் ஒரு ஆன்மீகக் கூட்டத்தில் சீதேவி, மற்றும் மூதேவியைப்பற்றி உருவக்கதையை கூறினார், ஒரு தடவை நாரத முனியவர் இந்த சீதேவி , மூதேவி இவர்களிடம் சிக்கிக்கொண்டார், அவர்கள் தங்கள் நம்மில் அதிக அழகு என்பது போன்று கர்வம் கொண்டு நாரதரிடம் எங்களில் யார் மிகுந்த அழகு என்ற வினாவினை தொடுத்தார்கள், இதைக்கண்ட நாரதர் முனிவர் நாம் எல்லோருக்கும் சிக்கலை உண்டுபண்ணுவதுதான் வழக்கம், இப்போது நமக்கே இந்த மிகப்பெரிய சிக்கலைச் சந்திக்க வேண்டியதுள்ளதே என்று தயங்கியபோது தனக்கு உபாயம் செய்தார், நான் யார் மிக அழகென்று கூறுகிறேன் தாங்கள் நான் சொல்வது போன்று செய்தால் என்றார், உடனே இருவரும் என்ன செய்யவேண்டுமென கேட்டனர், உடனே நாரதர் சற்று விலகி இருந்து கொண்டு , மூதேவியிடம் தேவி தாங்கள் தற்போது முன்னோக்கி திரும்பி செல்லுங்கள் என்றார், உடனே மூதேவி பின்நோக்கி நடந்து சென்றார் அப்போது தேவி தாங்கள் பின்நோக்கி செல்லும் போது தங்களின் பின்னழகு மிக அழகுஎன்றார், எனவே தாங்கள் சென்றுகொண்டே இருங்கள் அப்போதுதான் இந்த அழகு உங்களிடம் தொடர்ந்து இருக்குமென கூறி மூதேவியை அங்கிருந்து அனுப்பிவிட்டார், பின் சீதேவியிடம் தாங்கள் முன்நோக்கி வருங்கள் என்றார் உடனே சீதேவியிடம் தாங்களின் முன்அழகு மிகமிக நன்று என்று கூறி முன்நோக்கி வர கூறி தன்பால் சீதேவி அருளைப் பெற்றார், இவ்வாறு சமயமறிந்து பேசி திருமகள் சீதேவியின் அருளை பெற்ற கதையை வாரியார் விளக்கினர்ர்,

அகத்தியர் ஜீவ நாடி - தஞ்சாவூர் மற்றும் மேட்டுபாளையம் கோயம்புதூர் | தேடி தேடி படித்த முக்கியமான விஷயங்கள் இங்கே

அகத்தியர் ஜீவ நாடி - தஞ்சாவூர் மற்றும் மேட்டுபாளையம் கோயம்புதூர் | தேடி தேடி படித்த முக்கியமான விஷயங்கள் இங்கே

வெள்ளி, 23 மே, 2014

தேடி தேடி படித்த முக்கியமான விஷயங்கள் இங்கே: பைரவர் மூலமந்திரப் பலன்கள், 27 நட்சத்திரங்களுக்கு...

தேடி தேடி படித்த முக்கியமான விஷயங்கள் இங்கே: பைரவர் மூலமந்திரப் பலன்கள், 27 நட்சத்திரங்களுக்கு...: பைரவர் மூலமந்திரப் பலன்கள் மிகப் பிரபல நாளேடான தினத்தந்தி வெள்ளிமலரில் 150 வாரங்களுக்கும் மேலாக அகத்தியர் அருள்வாக்கு எனும் ...

தேடி தேடி படித்த முக்கியமான விஷயங்கள் இங்கே: அருள்மிகு பைரவர் திருக்கோயில் தகட்டூர் நாகபட்டி...

தேடி தேடி படித்த முக்கியமான விஷயங்கள் இங்கே: அருள்மிகு பைரவர் திருக்கோயில் தகட்டூர் நாகபட்டி...: அருள்மிகு பைரவர் திருக்கோயில் இங்கு பைரவர் மூலவராக அருபாலிக்கிறார். மூலவர் : பைரவர்  1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது  ...

வியாழன், 22 மே, 2014


திருமூலரும் திருமந்திரமும் உபதேசம் -5 பிறன்மனை விரும்பாப் பேராண்மை பேராண்மை என்பது வீரம் பேராண்மை மிக்கவர்கள் அரிய செயல்களை செய்வார்கள், அடுத்தவன் மனைவியை ஏறெடுத்தும் பாராமல், அவளுடைய அழகில் மனதைப் பறிகொடுக்காமல் இருப்பதும் பேராண்மை, ஆண்மைக்கு அழகு வலிமை மட்டும் அல்ல, மனவலிமையும் தான், மனம் சலனமடைந்தாலுமும், சபலப்பட்டாலும், அது நல்லதல்ல. அடுத்தவன் மனைவி மீது ஆசை வைப்பவர் தன் செயலின் விளைவுகளை ஆராய்வதில்லை, அவன் அழகான பெண்டாட்டி வீட்டில் இருக்க, அக்கரைப் பச்சையை நாடி போகிறான், அவனுடைய நிலைகறித்து திருமூலர் கூறுவது " அவன் முட்டாள தன் வீட்டுத் தோட்டத்தில் காய்த்திருக்கும் பலாப்பழத்தைச் சுவைத்து மகிழாமல் காட்டில் பழுத்த ஈச்சம் பழத்தை பெறத் துன்பப்படுகிறான், "ஆத்த மனையாள் அகத்தே இருக்க காத்த மனையாளைக் காமுறும் காளையர் காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே," என்கிறார், காமம் கண்ணை மறைத்து, கருத்தையும் மறக்கிறது, அயலான் மனைவியை விரும்பும் காரியம் அறியாமையால் நிகழ்வது " தன் வீட்டில் கிளிபோல் பெண்டாட்டி இருந்தாலும் குருங்குபோல ைவ்ப்பாட்டி வைத்துள்ளான் என்பது கிராமத்து பழமொழி "தன் செயலின் விளைவறிந்தால் அவன் தவறு செய்யத் துணியமாட்டான், திருமூலர் மேலுமு கூறகிறார், சிலர் இனித்திடும் மாங்கனியை இருட்டறையில் ஒளித்துவிட்டு, தகுதியற்ற புளியங்கனிக்காக மரமேறி உயிர் வருத்தம் கொள்கிறார்கள், அருமையான மனைவி வீட்டில் இருக்க மாற்றான் மனைவியை தேடி செல்பவரின் நிலையிது, கெடுவது இவர் மட்டுமா? இவருடைய குடும்பமுந்தான் என்கிறார், இதற்கான பாடல் : திருத்தி வளர்த்ததோர் தேமாங்கனியை ........................... ) பேராண்மையுடையவன் பெண்ணின் அழகில் பிரமமிப்பதில்லை, அவளிடத்தில் பூவிருக்கும், காயிருக்கும் ,கனியிருக்கும், ஆனால் அவனுடைய கண்களுக்கோ, அவை எட்டிக்காய்தான், அந்தக் காய்கள் பழுத்தாலும் அழகிய நிறத்துடன் கவர்ச்சி காட்டி அழைத்தாலும், அவனுடைய மனம் அவற்றில் ஈடுபடாது, எட்டிப்பழம் உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணும் என்பதை அவன் அறிவான், " ஏ, மனக்குரங்கே நீ அடங்கு "என்ற தன் மனதை கடிந்து கொள்வான்" என்கிறார் திருமூலர், பாடல்: இலைநில ஆயினும் எட்டிப் பழுத்தால் ......................... ) கொழுவிய மார்பகம் படைத்த பெண்ணின் கவர்ச்சியில் அவர்தம் புன்னகையில் மனஉறுதியை இழந்து விடக்கூடாது, அவர்பால் செல்லும் மனதை அடக்கி நன்னெறியில் நடத்தல் வேண்டும் என்கிறது திருமந்திரம் "பிறன்னை நயத்தல் பெருந்தீது " என்பதை வெகு அழகாய் சொல்கிறது நாலடியார், " புக்கஇடத் தச்சம் போதருமு போதச்சந் துய்ககும் இடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம் எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ உட்கான் பிறனில் புகல்" அடுத்தவன் வீட்டிக்குள் நுழையும் போதும் நடுக்கம், அங்கிருந்து வெளியேறும் போதும் நடுக்கம், அயலான் மனைவியை அனுபவிக்கம போதும்அச்சம், ஒவ்வொரு கண்த்திலும் அஞ்சி நடுங்கும் படி இருக்கும் யார் பார்த்திடுவாரோ எங்கே மாட்டிக் கெர்ணடு விடுவோமோ " என்ற கருத்தைக்கூறுகிறது இப்பாடல் தேவர்களுக்கெல்லாம் தலைவன் தான் இந்திரன் ஆனால் கவுதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசைகொண்டு அறிவிழந்தான், அவன் முனிவர அதிகாலையில் நீராடச் செல்லும் வழக்கத்தை இந்திரன் அறிவான், நடுச்சாமத்தில் சேவலைப்போல் கூவி வஞ்சனையில் ஈடுபட்டு முனிவர் ஆசிரமத்தில் இருந்து வெளிச் சென்றதும் அகலிகையுடன் புணர்ச்சி நடத்துகிறான், ஆனால் அங்கிருந்து வெளியேறு முன் கவுதமரிடம் அகப்பட்டு அவருடைய சாபத்திற்குள்ளாகிறான், அவன் அடைந்த சுகத்தை விட அவனுடைய அச்சம் பெரியது, அவனுக்கு கிடைத்த சாபம் அதைவிட பெரியது, ஒழுக்த்தில் சிறந்தவரே ஆண்மை மிக்கவர் அவர் காம மயக்த்தில் தனக்கு உரிமையில்லாத பெண்ணுடன் உறவு கொள்ளத் துடிப்பதில்லை, அடுத்தவன் மனைவியை விரும்புவது பேதை யின் செயல் என்கிறார் வள்ளுவர், அது அறத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட காரியம் - பாவம் ஆகும், அவர் அறநெறியில் இருந்து விலகி, பொருளையும் இழக்கிறார், அதைவிட பெரிதான கவுரவத்தையுந்தான், இயல்பான புண்ர்ச்சி யில்உள்ள இன்பமும் அவருக்கு கிடைப்பதில்லை அதனால் தான் - "அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்" என்கிறது திருக்குறள் "பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு" என்கிறார் வள்ளுவர் காமத்தை அடக்குதல் பேராண்மை, பிறன்மனை நோக்காமை பிறருக்கு சிறந்த அறமெனலாம், சான்றோருக்கோ அதுவே இயல்பான ஒழுக்கம் என்பது கருத்து இக்கூற்றின் படி பிறன் மனை நோக்கா ஒழுக்கத்தை கடைபிடித்து சான்றோர் ஆகுவோம். திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவாயம் ஓம் மேலும் பல காண: http://poompalani.weebly.com http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in,

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? நம்மில் பலர் இந்த பிரம்மஹத்தி தோஷம் என்ற வார்த்தை கேட்டிருக்கலாம். பிராமணரை (பிரம்மத்தினை உணர்ந்தவரை) கொலை செய்வதாலோ, பிரம்மத்தினை உணர்ந்தவருக்கு தொல்லைகள் கொடுத்தாலோ, பிரம்மத்தினை உணர்ந்தவரை பழித்து பேசினாலோ உண்டாகும் தோஷம் பிரம்மஹத்தி தோஷம் ஆகும். கொடுமையான தோஷங்களில் இந்த பிரம்மஹத்தி தோஷமும் ஒன்று. பிராமணர் என்பவர் பிறப்பால் ஏற்படும் உயர்வு நிலை ஆகாது. பிரம்மம் ஆகிய கடவுளை உணர்ந்தவர் எவரோ அவரே பிராமணர் ஆவார். பிறரின் வாழ்க்கைத்துணையுடன் முறையற்ற உறவு கொள்ளுதலும், கர்ப்பிணிப் பெண்ணை வற்புறுத்தி உடலுறவு கொள்ளுதலும், பண மோசடி செய்தலும், ஊரை அடித்து உலையில் போடுதலும் பிரம்மஹத்தி தோஷமாக வெளிப்படும். பிரம்மத்தினை உணர்ந்த ஒருவரை கொல்வது மிகப் பெரிய பாவம் ஆகும். எந்த ஒரு உயிரைக் கொன்றாலும் அது பெரிய பாவமே. ஏனெனில் உயிர்கள் அனைத்தும் பிரம்மனின் படைப்பே. அவற்றினை அழிக்க நமக்கு உரிமையில்லை. அந்தந்த உயிர்களின் ஆயுட்காலம் முடிந்தவுடன் அவற்றின் உயிர்களை கவரும் வேலையை எமதர்மராசாவுக்கு இறைவன் அளித்துள்ளார். கொலைக்கு புனிதமான காரணங்கள் இருந்தாலும் அது தோஷத்தினையே தரும். ராவணனை ராமபிரான் கொன்றதால் ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதே போல் எந்த ஒரு உயிருக்கும் தொல்லைகள் தரவும் நமக்கு உரிமை கிடையாது. அவ்வாறு நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்யும் பாவங்கள் அனைத்தும் தோஷமாக மாறும் என்பது திண்ணம். பிரம்மஹத்தி தோஷத்தினை எவ்வாறு அறியலாம்? ஒருவருடைய பாவ புண்ணிய கணக்கினை அறிந்து கொள்ள உதவும் காலக்கண்ணாடி அவரவர் ஜாதகம் ஆகும். முறையாக – துல்லியமாக கணிக்கப்பட்ட ஜாதகத்தில் ஒருவரின் பாவம் மற்றும் புண்ணிய கணக்கினை எளிதாக கண்டறியலாம். மேலும் யோகங்களையும், தோஷங்களையும் கண்டறியலாம். எது எப்படி இருந்தாலும் தோஷங்கள் நீங்காமல் யோகங்கள் பலன் தராது என்பதே எமது அனுபவம். ஒருவரின் ஜாதகத்தில் குரு மற்றும் சனி கோள்கள் சேர்க்கை பெற்றாலும், குரு பகவானை சனி பகவான் எங்கிருந்து நோக்கினாலும், குருவின் சாரத்தில் சனியும் – சனியின் சாரத்தில் குருவும் இருத்தலும், குரு மற்றும் சனி கோள்கள் ஒன்றையொன்று நோக்கினாலும் பிரம்மஹத்தி தோஷம் உள்ள ஜாதகம் ஆகும். உண்மையில் தோஷமில்லாத ஜாதகம் என்பது உலகில் இல்லை. பிரம்மஹத்தி தோஷத்தினால் வரும் துன்பங்கள் என்ன? பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்டவர்கள் வாழ்வில் நிம்மதி என்பதே இருக்காது. ஒருவர் கொலை செய்து விட்டால் அவரது மனம் எப்படி அவரை உறுத்துமோ அதே போன்ற உறுத்தல் கண்டிப்பாக இருக்கும். இந்த தோஷத்தினால் கல்வி, வேலை, திருமணம், குழந்தைப்பேறு இவற்றில் தீராத பிரச்சனைகள் உண்டாகும். தீராத கடனும் பகையும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியே இருக்காது. தீராத வறுமை உண்டாகும். இந்த தோஷம் ஆண் – பெண் இருபாலருக்கும் வருவது உண்டு. தோஷங்களுக்கு ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது. இதே போன்ற பிரச்சனைகள் மற்ற தோஷங்களினாலும் வரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பொதுவாக எந்த வகையான தோஷம் என்பதை தெளிவாக அறிந்த பின்னரே அதற்கான பரிகாரத்தினை முறையாக செய்திடல் வேண்டும். பிரம்மஹத்தி தோஷத்தினை போக்கும் பரிகாரங்கள்: பொதுவாக தோஷங்களை போக்கும் கடவுள் சிவ பெருமான் ஆவார். அவரை முறைப்படி வணங்கிடில் எந்த ஒரு தோஷமும் விலகி ஓடும். சிவ பெருமானை வணங்கினால் அவர் நமது கர்மவினைகளை அழிப்பார். நமது பாவங்கள் நீங்கினால் தானாகவே நமது தோஷங்களும் நீங்கி விடும். ராமபிரானும் சிவ பெருமானை வணங்கியே பிரம்மஹத்தி தோஷத்தினை போக்கிக் கொண்டார் என்பதை ராமாயணம் கூறும். இந்திரன் மற்றும் வரகுண பாண்டியன் போன்றோரும் சிவ பெருமானை வணங்கியே தங்களின் பிரம்மஹத்தி தோஷத்தினை நீக்கிக் கொண்டனர் என்பதை புராணங்கள் தெளிவாக உரைக்கின்றன. இந்த தோஷத்தினை போக்க உகந்த நாள் அமாவாசை தினம் ஆகும். அமாவாசை தினத்தில் முன்னோர் கடனை தீர்த்த பின்பு பசுமாட்டிற்கு உணவளித்தல் வேண்டும். அதன் பின்னர் மாலையில் அருகில் உள்ள சிவத்தலம் சென்று எல்லா சந்திதிகளிலும் ஐந்து எண்ணெய் (நல்லெண்ணெய் + விளக்கெண்ணெய் + இலுப்பெண்ணெய் + வேப்பெண்ணெய் + நெய் ஆகியன சம அளவில் கலந்தது) கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும். பின்பு அம்பிகை மற்றும் இறைவன் சந்நிதிகளில் அர்ச்சனை செய்ய வேண்டும். அதன் பின்னர் 9 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். பின்னர் 9 பேருக்கு ஆடைகள் தானம் செய்ய வேண்டும். அதன் பின்பு எந்த கோவிலுக்கும் செல்லாமல் அவரவர் வீடு திரும்ப வேண்டும். இவ்வாறு 9 அமாவாசைகள் செய்ய வேண்டும். இதன் மூலம் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி நிம்மதியான வாழ்வு கிட்டும். இதனை பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் செய்தால் பலன் விரைவில் கிட்டும். சிவபுராணத்தின் கூற்றுப்படி ஒரு முக ருத்ராட்சத்தினை கண்டாலே பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆனால் நாம் காணும் ஒரு முக ருத்ராட்சம் உண்மையானதாகவும், முறைப்படி மந்திர உரு ஏற்றப்பட்டு பூசையில் வைக்கப்பட்டு பூசிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். தற்போது ஒரு முக ருத்ராட்சம் என்ற பெயரில் போலிகள் தான் விற்கப்படுகின்றன என்பதே உண்மை. சிவபுராணத்தின் கூற்றுப்படி ஆறுமுக ருத்ராட்சத்தினை அணிந்து கொண்டாலும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆனால் நாம் வாங்கி அணியும் ருத்ராட்சம் உண்மையானதாகவும், முறைப்படி மந்திர உரு ஏற்றப்பட்டு பூசையில் வைக்கப்பட்டு பூசிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். கடையில் கிடைக்கும் ஆறுமுக ருத்ராட்சத்தினை வாங்கி அப்படியே அணிதல் கூடாது. சாளக்கிராமங்களை முறைப்படி பூசித்து வந்தால் இறைவன் அருளால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆனால் சாளக்கிராம வழிபாட்டு முறைகளை தகுந்த குருவினை நாடி தெரிந்து கொண்ட பின்னரே பூசித்து வர வேண்டும். சாளக்கிராமங்களில் பல வகைகள் உண்டு. அவரவருக்கு பிடித்தமான சாளக்கிராம வழிபாடு மிகவும் சிறந்தது. பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தலங்கள்: பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலங்கள் பல உண்டு. காசி காஞ்சிபுரம் திருவண்ணாமலை இராமேஸ்வரம் மதுரை திருவாஞ்சியம் பிரம்மதேசம் மேல்மலையனூர் ஆகியன முக்கியமானவை ஆகும்

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? நம்மில் பலர் இந்த பிரம்மஹத்தி தோஷம் என்ற வார்த்தை கேட்டிருக்கலாம். பிராமணரை (பிரம்மத்தினை உணர்ந்தவரை) கொலை செய்வதாலோ, பிரம்மத்தினை உணர்ந்தவருக்கு தொல்லைகள் கொடுத்தாலோ, பிரம்மத்தினை உணர்ந்தவரை பழித்து பேசினாலோ உண்டாகும் தோஷம் பிரம்மஹத்தி தோஷம் ஆகும். கொடுமையான தோஷங்களில் இந்த பிரம்மஹத்தி தோஷமும் ஒன்று. பிராமணர் என்பவர் பிறப்பால் ஏற்படும் உயர்வு நிலை ஆகாது. பிரம்மம் ஆகிய கடவுளை உணர்ந்தவர் எவரோ அவரே பிராமணர் ஆவார். பிறரின் வாழ்க்கைத்துணையுடன் முறையற்ற உறவு கொள்ளுதலும், கர்ப்பிணிப் பெண்ணை வற்புறுத்தி உடலுறவு கொள்ளுதலும், பண மோசடி செய்தலும், ஊரை அடித்து உலையில் போடுதலும் பிரம்மஹத்தி தோஷமாக வெளிப்படும். பிரம்மத்தினை உணர்ந்த ஒருவரை கொல்வது மிகப் பெரிய பாவம் ஆகும். எந்த ஒரு உயிரைக் கொன்றாலும் அது பெரிய பாவமே. ஏனெனில் உயிர்கள் அனைத்தும் பிரம்மனின் படைப்பே. அவற்றினை அழிக்க நமக்கு உரிமையில்லை. அந்தந்த உயிர்களின் ஆயுட்காலம் முடிந்தவுடன் அவற்றின் உயிர்களை கவரும் வேலையை எமதர்மராசாவுக்கு இறைவன் அளித்துள்ளார். கொலைக்கு புனிதமான காரணங்கள் இருந்தாலும் அது தோஷத்தினையே தரும். ராவணனை ராமபிரான் கொன்றதால் ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதே போல் எந்த ஒரு உயிருக்கும் தொல்லைகள் தரவும் நமக்கு உரிமை கிடையாது. அவ்வாறு நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்யும் பாவங்கள் அனைத்தும் தோஷமாக மாறும் என்பது திண்ணம். பிரம்மஹத்தி தோஷத்தினை எவ்வாறு அறியலாம்? ஒருவருடைய பாவ புண்ணிய கணக்கினை அறிந்து கொள்ள உதவும் காலக்கண்ணாடி அவரவர் ஜாதகம் ஆகும். முறையாக – துல்லியமாக கணிக்கப்பட்ட ஜாதகத்தில் ஒருவரின் பாவம் மற்றும் புண்ணிய கணக்கினை எளிதாக கண்டறியலாம். மேலும் யோகங்களையும், தோஷங்களையும் கண்டறியலாம். எது எப்படி இருந்தாலும் தோஷங்கள் நீங்காமல் யோகங்கள் பலன் தராது என்பதே எமது அனுபவம். ஒருவரின் ஜாதகத்தில் குரு மற்றும் சனி கோள்கள் சேர்க்கை பெற்றாலும், குரு பகவானை சனி பகவான் எங்கிருந்து நோக்கினாலும், குருவின் சாரத்தில் சனியும் – சனியின் சாரத்தில் குருவும் இருத்தலும், குரு மற்றும் சனி கோள்கள் ஒன்றையொன்று நோக்கினாலும் பிரம்மஹத்தி தோஷம் உள்ள ஜாதகம் ஆகும். உண்மையில் தோஷமில்லாத ஜாதகம் என்பது உலகில் இல்லை. பிரம்மஹத்தி தோஷத்தினால் வரும் துன்பங்கள் என்ன? பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்டவர்கள் வாழ்வில் நிம்மதி என்பதே இருக்காது. ஒருவர் கொலை செய்து விட்டால் அவரது மனம் எப்படி அவரை உறுத்துமோ அதே போன்ற உறுத்தல் கண்டிப்பாக இருக்கும். இந்த தோஷத்தினால் கல்வி, வேலை, திருமணம், குழந்தைப்பேறு இவற்றில் தீராத பிரச்சனைகள் உண்டாகும். தீராத கடனும் பகையும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியே இருக்காது. தீராத வறுமை உண்டாகும். இந்த தோஷம் ஆண் – பெண் இருபாலருக்கும் வருவது உண்டு. தோஷங்களுக்கு ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது. இதே போன்ற பிரச்சனைகள் மற்ற தோஷங்களினாலும் வரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பொதுவாக எந்த வகையான தோஷம் என்பதை தெளிவாக அறிந்த பின்னரே அதற்கான பரிகாரத்தினை முறையாக செய்திடல் வேண்டும். பிரம்மஹத்தி தோஷத்தினை போக்கும் பரிகாரங்கள்: பொதுவாக தோஷங்களை போக்கும் கடவுள் சிவ பெருமான் ஆவார். அவரை முறைப்படி வணங்கிடில் எந்த ஒரு தோஷமும் விலகி ஓடும். சிவ பெருமானை வணங்கினால் அவர் நமது கர்மவினைகளை அழிப்பார். நமது பாவங்கள் நீங்கினால் தானாகவே நமது தோஷங்களும் நீங்கி விடும். ராமபிரானும் சிவ பெருமானை வணங்கியே பிரம்மஹத்தி தோஷத்தினை போக்கிக் கொண்டார் என்பதை ராமாயணம் கூறும். இந்திரன் மற்றும் வரகுண பாண்டியன் போன்றோரும் சிவ பெருமானை வணங்கியே தங்களின் பிரம்மஹத்தி தோஷத்தினை நீக்கிக் கொண்டனர் என்பதை புராணங்கள் தெளிவாக உரைக்கின்றன. இந்த தோஷத்தினை போக்க உகந்த நாள் அமாவாசை தினம் ஆகும். அமாவாசை தினத்தில் முன்னோர் கடனை தீர்த்த பின்பு பசுமாட்டிற்கு உணவளித்தல் வேண்டும். அதன் பின்னர் மாலையில் அருகில் உள்ள சிவத்தலம் சென்று எல்லா சந்திதிகளிலும் ஐந்து எண்ணெய் (நல்லெண்ணெய் + விளக்கெண்ணெய் + இலுப்பெண்ணெய் + வேப்பெண்ணெய் + நெய் ஆகியன சம அளவில் கலந்தது) கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும். பின்பு அம்பிகை மற்றும் இறைவன் சந்நிதிகளில் அர்ச்சனை செய்ய வேண்டும். அதன் பின்னர் 9 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். பின்னர் 9 பேருக்கு ஆடைகள் தானம் செய்ய வேண்டும். அதன் பின்பு எந்த கோவிலுக்கும் செல்லாமல் அவரவர் வீடு திரும்ப வேண்டும். இவ்வாறு 9 அமாவாசைகள் செய்ய வேண்டும். இதன் மூலம் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி நிம்மதியான வாழ்வு கிட்டும். இதனை பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் செய்தால் பலன் விரைவில் கிட்டும். சிவபுராணத்தின் கூற்றுப்படி ஒரு முக ருத்ராட்சத்தினை கண்டாலே பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆனால் நாம் காணும் ஒரு முக ருத்ராட்சம் உண்மையானதாகவும், முறைப்படி மந்திர உரு ஏற்றப்பட்டு பூசையில் வைக்கப்பட்டு பூசிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். தற்போது ஒரு முக ருத்ராட்சம் என்ற பெயரில் போலிகள் தான் விற்கப்படுகின்றன என்பதே உண்மை. சிவபுராணத்தின் கூற்றுப்படி ஆறுமுக ருத்ராட்சத்தினை அணிந்து கொண்டாலும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆனால் நாம் வாங்கி அணியும் ருத்ராட்சம் உண்மையானதாகவும், முறைப்படி மந்திர உரு ஏற்றப்பட்டு பூசையில் வைக்கப்பட்டு பூசிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். கடையில் கிடைக்கும் ஆறுமுக ருத்ராட்சத்தினை வாங்கி அப்படியே அணிதல் கூடாது. சாளக்கிராமங்களை முறைப்படி பூசித்து வந்தால் இறைவன் அருளால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆனால் சாளக்கிராம வழிபாட்டு முறைகளை தகுந்த குருவினை நாடி தெரிந்து கொண்ட பின்னரே பூசித்து வர வேண்டும். சாளக்கிராமங்களில் பல வகைகள் உண்டு. அவரவருக்கு பிடித்தமான சாளக்கிராம வழிபாடு மிகவும் சிறந்தது. பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தலங்கள்: பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலங்கள் பல உண்டு. காசி காஞ்சிபுரம் திருவண்ணாமலை இராமேஸ்வரம் மதுரை திருவாஞ்சியம் பிரம்மதேசம் மேல்மலையனூர் ஆகியன முக்கியமானவை ஆகும்

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? நம்மில் பலர் இந்த பிரம்மஹத்தி தோஷம் என்ற வார்த்தை கேட்டிருக்கலாம். பிராமணரை (பிரம்மத்தினை உணர்ந்தவரை) கொலை செய்வதாலோ, பிரம்மத்தினை உணர்ந்தவருக்கு தொல்லைகள் கொடுத்தாலோ, பிரம்மத்தினை உணர்ந்தவரை பழித்து பேசினாலோ உண்டாகும் தோஷம் பிரம்மஹத்தி தோஷம் ஆகும். கொடுமையான தோஷங்களில் இந்த பிரம்மஹத்தி தோஷமும் ஒன்று. பிராமணர் என்பவர் பிறப்பால் ஏற்படும் உயர்வு நிலை ஆகாது. பிரம்மம் ஆகிய கடவுளை உணர்ந்தவர் எவரோ அவரே பிராமணர் ஆவார். பிறரின் வாழ்க்கைத்துணையுடன் முறையற்ற உறவு கொள்ளுதலும், கர்ப்பிணிப் பெண்ணை வற்புறுத்தி உடலுறவு கொள்ளுதலும், பண மோசடி செய்தலும், ஊரை அடித்து உலையில் போடுதலும் பிரம்மஹத்தி தோஷமாக வெளிப்படும். பிரம்மத்தினை உணர்ந்த ஒருவரை கொல்வது மிகப் பெரிய பாவம் ஆகும். எந்த ஒரு உயிரைக் கொன்றாலும் அது பெரிய பாவமே. ஏனெனில் உயிர்கள் அனைத்தும் பிரம்மனின் படைப்பே. அவற்றினை அழிக்க நமக்கு உரிமையில்லை. அந்தந்த உயிர்களின் ஆயுட்காலம் முடிந்தவுடன் அவற்றின் உயிர்களை கவரும் வேலையை எமதர்மராசாவுக்கு இறைவன் அளித்துள்ளார். கொலைக்கு புனிதமான காரணங்கள் இருந்தாலும் அது தோஷத்தினையே தரும். ராவணனை ராமபிரான் கொன்றதால் ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதே போல் எந்த ஒரு உயிருக்கும் தொல்லைகள் தரவும் நமக்கு உரிமை கிடையாது. அவ்வாறு நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்யும் பாவங்கள் அனைத்தும் தோஷமாக மாறும் என்பது திண்ணம். பிரம்மஹத்தி தோஷத்தினை எவ்வாறு அறியலாம்? ஒருவருடைய பாவ புண்ணிய கணக்கினை அறிந்து கொள்ள உதவும் காலக்கண்ணாடி அவரவர் ஜாதகம் ஆகும். முறையாக – துல்லியமாக கணிக்கப்பட்ட ஜாதகத்தில் ஒருவரின் பாவம் மற்றும் புண்ணிய கணக்கினை எளிதாக கண்டறியலாம். மேலும் யோகங்களையும், தோஷங்களையும் கண்டறியலாம். எது எப்படி இருந்தாலும் தோஷங்கள் நீங்காமல் யோகங்கள் பலன் தராது என்பதே எமது அனுபவம். ஒருவரின் ஜாதகத்தில் குரு மற்றும் சனி கோள்கள் சேர்க்கை பெற்றாலும், குரு பகவானை சனி பகவான் எங்கிருந்து நோக்கினாலும், குருவின் சாரத்தில் சனியும் – சனியின் சாரத்தில் குருவும் இருத்தலும், குரு மற்றும் சனி கோள்கள் ஒன்றையொன்று நோக்கினாலும் பிரம்மஹத்தி தோஷம் உள்ள ஜாதகம் ஆகும். உண்மையில் தோஷமில்லாத ஜாதகம் என்பது உலகில் இல்லை. பிரம்மஹத்தி தோஷத்தினால் வரும் துன்பங்கள் என்ன? பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்டவர்கள் வாழ்வில் நிம்மதி என்பதே இருக்காது. ஒருவர் கொலை செய்து விட்டால் அவரது மனம் எப்படி அவரை உறுத்துமோ அதே போன்ற உறுத்தல் கண்டிப்பாக இருக்கும். இந்த தோஷத்தினால் கல்வி, வேலை, திருமணம், குழந்தைப்பேறு இவற்றில் தீராத பிரச்சனைகள் உண்டாகும். தீராத கடனும் பகையும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியே இருக்காது. தீராத வறுமை உண்டாகும். இந்த தோஷம் ஆண் – பெண் இருபாலருக்கும் வருவது உண்டு. தோஷங்களுக்கு ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது. இதே போன்ற பிரச்சனைகள் மற்ற தோஷங்களினாலும் வரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பொதுவாக எந்த வகையான தோஷம் என்பதை தெளிவாக அறிந்த பின்னரே அதற்கான பரிகாரத்தினை முறையாக செய்திடல் வேண்டும். பிரம்மஹத்தி தோஷத்தினை போக்கும் பரிகாரங்கள்: பொதுவாக தோஷங்களை போக்கும் கடவுள் சிவ பெருமான் ஆவார். அவரை முறைப்படி வணங்கிடில் எந்த ஒரு தோஷமும் விலகி ஓடும். சிவ பெருமானை வணங்கினால் அவர் நமது கர்மவினைகளை அழிப்பார். நமது பாவங்கள் நீங்கினால் தானாகவே நமது தோஷங்களும் நீங்கி விடும். ராமபிரானும் சிவ பெருமானை வணங்கியே பிரம்மஹத்தி தோஷத்தினை போக்கிக் கொண்டார் என்பதை ராமாயணம் கூறும். இந்திரன் மற்றும் வரகுண பாண்டியன் போன்றோரும் சிவ பெருமானை வணங்கியே தங்களின் பிரம்மஹத்தி தோஷத்தினை நீக்கிக் கொண்டனர் என்பதை புராணங்கள் தெளிவாக உரைக்கின்றன. இந்த தோஷத்தினை போக்க உகந்த நாள் அமாவாசை தினம் ஆகும். அமாவாசை தினத்தில் முன்னோர் கடனை தீர்த்த பின்பு பசுமாட்டிற்கு உணவளித்தல் வேண்டும். அதன் பின்னர் மாலையில் அருகில் உள்ள சிவத்தலம் சென்று எல்லா சந்திதிகளிலும் ஐந்து எண்ணெய் (நல்லெண்ணெய் + விளக்கெண்ணெய் + இலுப்பெண்ணெய் + வேப்பெண்ணெய் + நெய் ஆகியன சம அளவில் கலந்தது) கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும். பின்பு அம்பிகை மற்றும் இறைவன் சந்நிதிகளில் அர்ச்சனை செய்ய வேண்டும். அதன் பின்னர் 9 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். பின்னர் 9 பேருக்கு ஆடைகள் தானம் செய்ய வேண்டும். அதன் பின்பு எந்த கோவிலுக்கும் செல்லாமல் அவரவர் வீடு திரும்ப வேண்டும். இவ்வாறு 9 அமாவாசைகள் செய்ய வேண்டும். இதன் மூலம் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி நிம்மதியான வாழ்வு கிட்டும். இதனை பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் செய்தால் பலன் விரைவில் கிட்டும். சிவபுராணத்தின் கூற்றுப்படி ஒரு முக ருத்ராட்சத்தினை கண்டாலே பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆனால் நாம் காணும் ஒரு முக ருத்ராட்சம் உண்மையானதாகவும், முறைப்படி மந்திர உரு ஏற்றப்பட்டு பூசையில் வைக்கப்பட்டு பூசிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். தற்போது ஒரு முக ருத்ராட்சம் என்ற பெயரில் போலிகள் தான் விற்கப்படுகின்றன என்பதே உண்மை. சிவபுராணத்தின் கூற்றுப்படி ஆறுமுக ருத்ராட்சத்தினை அணிந்து கொண்டாலும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆனால் நாம் வாங்கி அணியும் ருத்ராட்சம் உண்மையானதாகவும், முறைப்படி மந்திர உரு ஏற்றப்பட்டு பூசையில் வைக்கப்பட்டு பூசிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். கடையில் கிடைக்கும் ஆறுமுக ருத்ராட்சத்தினை வாங்கி அப்படியே அணிதல் கூடாது. சாளக்கிராமங்களை முறைப்படி பூசித்து வந்தால் இறைவன் அருளால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆனால் சாளக்கிராம வழிபாட்டு முறைகளை தகுந்த குருவினை நாடி தெரிந்து கொண்ட பின்னரே பூசித்து வர வேண்டும். சாளக்கிராமங்களில் பல வகைகள் உண்டு. அவரவருக்கு பிடித்தமான சாளக்கிராம வழிபாடு மிகவும் சிறந்தது. பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தலங்கள்: பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலங்கள் பல உண்டு. காசி காஞ்சிபுரம் திருவண்ணாமலை இராமேஸ்வரம் மதுரை திருவாஞ்சியம் பிரம்மதேசம் மேல்மலையனூர் ஆகியன முக்கியமானவை ஆகும்

சதுரகிரி கஞ்சிமட ஸ்ரீலஸ்ரீ காளிமுத்து சுவாமிகள் சைவ மதத்தில் வேறூண்றி வளர்ந்த நம் சாலிய சமுதாயத்தில் பல சித்த மகான்கள் சத்குரு இராஜபாளையம் குருசாமி, சத்குரு ஞானியார் சுவாமிகள், ஜக்கம்பட்டி கருப்பஞானியார் மற்றும் அருப்புக்கோட்டையில் பல மகான்களும் தோன்றி ஜீவசோதி அடைந்து இன்னும் ஆங்காங்க சைவ மதத்திற்கும் சிவதொண்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர், அவர்களின் பின் தோன்றலாக அவதாரம் செய்து சதுரகிரியில் அன்னதான சக்கரவர்த்தி என்ற பெயரில் கஞ்சிமட காளிமுத்து சுவாமிகள் வரலாறு நம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கூட அறிந்திலர் அவர்களும் சைவ வழி தொண்டர்களும் அறிந்திட அன்னாரின் வரலாற்று குறிப்பினை இத்துடன் சமர்ப்பணம் செய்கிறேன், திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாயம் ஓம் http://poompalani.weebly.com http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in,

புதன், 21 மே, 2014


பன்னிரு திருமுறைகளில் கல்வி / உலகியல் கல்வி பெற நால்வர் பதியங்கள் கல்வி என்பது இரண்டு வகைப்படும், 1) அருளியல்கல்வி 2) உலகியல் கல்வி உலகியல் கல்வி உலகாயதத்திற்கு மட்டுமே (இம்மைக்கு மட்டுமே ) பயன்படு்ம் ஆனால் அருளியல் கல்வி இம்மைக்கும் மறுமைக்கும் பயயன்படும், இதனையே வள்ளுவர்பெருமான் " ஒருைமக்கண் தான்கற்ற கல்வி ஒருவருக்கு எழுமையும் ஏமாப்புடைத்து," என்றும் "கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்" என்றும் கல்வியின் சிறப்பை இம்மைக்கும மறுமைக்கும் சிறப்பு தரும் என்றார் , இதனையே அப்பர் சுவாமிகள் " நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்" என்று அருளிகிறார், எனவே கல்வியின் பயன் இறைவன் திருவடியை வணங்குதலே என்பது பெறப்படும் இறைவனது திருவடியை உணரப் பயன்படும் ஐநதெழுத்து மந்திரமே உண்மைக் கல்வி ஆகும்,இதனை சம்பந்தர் பஞ்சாக்கரத் திருப்பதிகம் பாடினார் " துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் நெஞ்சலம் நைந்து நினைமின் நாள்தோறும் வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே," வீடு பிறப்பை அறுத்து மெச்சினர் பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும் மாடு கொடுப்பன மன்னு மாநடம் ஆடி உகப்பன அஞ்செழுத்துமே" விளக்கம்;துஞ்சலும் துஞ்சல் இலாதபோழ்தினும் - தூங்கும் போதும் விழித்துக்கொண்டிருக்கும்போதும் ; போழ்தின் என்ற சொல்லைத் துஞ்சல் என்பதினோடுங் கூட்டித் துஞ்சல் பொழுதினும் , துஞ்சுதல் இல்லாத போழ்தினும் என்க . நெஞ்சகம் - மனம் . நைந்து - உருகி . நாள்தோறும் மாந்தரீர் நினைப்பீர்களாக . வஞ்சகம் இன்றிச் சிவபெருமான் திருவடியை மார்க்கண்டேயர் வாழ்த்தி வழிபட அவர் வாழ்நாள்மேல் வந்த யமன் அஞ்சும்படி உதைத்தன திருஐந்தெழுத்துமே . வஞ்சகமாவது , இறைவன் மேற் படரும் சிந்தையை இடையே மாற்றி வினையைப் பிறவிடங்களிற் செலுத்தி வஞ்சித்தல் . இதனை ` நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே வஞ்சமே செய்தியாலோ ` என்ற திருநேரிசையால் அறிக . திருஐந்தெழுத்தை ஓதுவார் எமவாதை நீங்குவார் என்பது இதனாற் பெற்றாம் மந்திர நான்மறை யாகி வானவர் சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க் கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே. மந்திரங்களாகவும் , நான்கு வேதங்களாகவும் ஆகித் தேவர்களுடைய சிந்தையினுள்ளும் நின்று அவர்களை ஆட்கொண்டு நன்னெறி பயப்பது திருவைந்தெழுத்தே ஆகும் . செந்நிற அழலோம்பிச் செம்மை நெறியில் நிற்கும் வேதியர்க்கும் காலை , நண்பகல் , மாலை என்ற மூன்று சந்தியா காலங்களிலும் செபிக்க வேண்டிய மந்திரம் திருஐந்தெழுத்தேயாகும் . நல்லவர் தீயர் எனாது நச்சினர் செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ கொல்ல நமன்றமர் கொண்டு போமிடத் தல்லல் கெடுப்பன அஞ்செ ழுத்துமே. பொழிப்புரை : புண்ணியர் , பாவிகள் என்ற பாகுபாடு இன்றி விரும்பிச் செபிப்பவர்கள் யாவரேயாயினும் அவர்களுடைய மலங்களை நீக்கிச் சிவமுத்தி காட்டும் ஆற்றலுடையன திருவைந்தெழுத்தாகும் . எமதூதர்கள் வந்து உயிரைக் கொண்டு செல்லும் காலத்தும் , மரணத்தறுவாயில் ஏற்படக் கூடிய துன்பத்தைப் போக்குவனவும் திருவைந்தெழுத்தேயாகும் . தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும் வெம்மை நரகம் விளைந்த போழ்தினும் இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும் அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே. பொழிப்புரை : தும்மல் , இருமல் தொடர்ந்து வந்த பொழுதும் , கொடிய நரகத் துன்பத்தை அனுபவிக்க நேரும் பொழுதும் , முற்பிறப்புக்களில் செய்த வினை இப்பிறவியில் வந்து வருத்தும் பொழுதும் , இப்பிறவியில் நாள்தோறும் ஓதிவந்ததன் பயனால் மறுபிறவியிலும் வந்து துணையாவது திருவைந்தெழுத்தேயாகும் . வீடு பிறப்பை அறுத்து மெச்சினர் பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும் மாடு கொடுப்பன மன்னு மாநடம் ஆடிஉ கப்பன அஞ்செ ழுத்துமே. பொழிப்புரை : இறப்பு , பிறப்பு இவற்றை அறுத்து இத்திரு மந்திரத்தைப் பாராட்டிச் செபிப்பவர்களின் துன்பங்களை நீக்குவன . தினந்தோறும் செல்வங்கள் யாவும் கொடுப்பன . நிலைபெற்ற நடனத்தையாடும் சிவபெருமான் மகிழ்வன திருவைந்தெழுத்தே யாகும் . திருச்சிற்றம்பலம் . ஓம் நமசிவாயம், http://poompalani.weebly.com http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in,

செவ்வாய், 20 மே, 2014

thirupaattur temple


AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சைவ அடியார் :திருநாவுக்கரசரின் வாழ்க்கை பகுதி 1

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சைவ அடியார் :திருநாவுக்கரசரின் வாழ்க்கை பகுதி 1: சிவலோகத்தில் சிவபெருமானுக்கு உறுதுணையாக இருந்து வந்த சிவகணங்களில் ஒருவர் வாகீசர். ராவணன் இன்றைய மீரட்டில் பிராமண வம்சத்தில் பிறந்தவன்;மனிதர்...

பக்தி யுகம்: பாபநாசம் அருள்மிகு கோடி லிங்க ஆலயம்

பக்தி யுகம்: பாபநாசம் அருள்மிகு கோடி லிங்க ஆலயம்: பாபநாசம்  சிவன்  கோவில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 52 k .m   தொலைவில் அமைந்துள்ளள்ளது. இது  நவ கயிலாயத்தில் முதல் ஸ்தலமான சூரிய ஸ்தலம...

திங்கள், 19 மே, 2014


காரைக்காலம்மையார் காரைக்காலம்மையார் வரலாறு சோழவள நாட்டில் கடற்றுறைப் பட்டினமாக விளங்கிய காரைக்கால் என்னும் பதியில் வணிகர் குலத்தில் தனதத்தன் என்பா னுக்கு அரும் பெறற் புதல்வியாய் திருமகள் போன்ற பேரழகோடு அம்மையார் தோன்றினார். பெற்றோர் புனிதவதி எனப் பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தனர். புனிதவதியார் பிறந்து மொழி பயிலும் காலத்திலேயே சிவபெருமான் திருவடிகளுக்குத் தொண்டு பூண்டு, சிவன் அடியார்களைக் கண்டால் சிவன் எனவே தெரிந்து வழிபடும் திறம் வாய்க்கப் பெற்றவராய் வளர்ந்து திருமணப் பருவம் அடைந்தார். திருமணம் நாகப்பட்டினத்தில் வாழ்ந்த நிதிபதி என்ற வணிகன் தன் மகன் பரமதத்தனுக்குப் புனிதவதியாரை மணம் செய்விக்க விரும்பி முதியோர் சிலரைத் தனதத்தன்பால் அனுப்பினான். இருமுது குரவர் இசைவினால் புனிதவதியார்க்கும் பரமதத்தனுக்கும் திருமணம் நிகழ்ந்தது. தனதத்தன் தனக்கு வேறு பிள்ளைப்பேறு இல்லாமையால் காரைக்காலிலேயே தன் மருகன் பொன் வாணிபம் புரியவும் தனியே மனையறம் நடத்தவும் வகை செய்து கொடுத்தான். மனைத்தக்க மாண்பு பரமதத்தன் தன் மாமனார் அமைத்துத் தந்த வாணிபத்தைப் பன்மடங்காகப் பெருக்கிச் சிறப்புற வாழ்ந்து வந்தான். புனிதவதியார் மனைத்தக்க மாண்புடன் இல்லறம் இயற்றியதோடு சிவபெருமான் மீது கொண்ட பக்தியிலும் மேம்பட்டுச் சிவனடியார்களுக்குத் திரு அமுதளித்தல், வேண்டும் பொருள்களை அவ்வப்போது கொடுத்தல் முதலான சிவபுண்ணியங்களிலும் சிறந்து விளங்கினார். அடியவர்க்கு அமுது ஒருநாள் பரமதத்தனை வாணிபம் செய்யுமிடத்தில் காண வந்த சிலர் இரண்டு சுவையான மாங்கனிகளை அவனிடம் அளித்து உரையாடிச் சென்றனர். பரமதத்தன் அவர்களை வழியனுப்பியபின் அவர்கள் தந்து சென்ற மாங்கனிகள் இரண்டையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தான். புனிதவதியார் அக்கனிகளை வாங்கித் தன் கணவன் உணவுண்ண வரும்போது படைக்கலாம் என அடுக்களை அறையில் வைத்திருந்தார். அவ்வேளையில் சிவனடியார் ஒருவர் பசியால் மிக இளைத்தவராயப் புனிதவதியார் இல்லத்திற்கு வந்தார். அம்மையார் திருஅமுது (சோறு) மட்டும் சமைத்திருந்த நிலையில் ஏனைய கறியமுது முதலியவற்றை விரைந்து செய்தளிக்க எண்ணினார். வந்த அடியவரோ மிக்க பசியோடு இருத்தலைக் கண்ணுற்றுத் தன் கணவன் அனுப்பிய மாங்கனிகளுள் ஒன்றை இலையில் படைத்து அடியவர்க்குத் திருஅமுது படைத்து மகிழ்வோடு வழியனுப்பி வைத்தார். சிறிது நேரங்கழித்துப் பரமதத்தன் வழக்கம்போல் நண்பகல் உணவு அருந்தத் தன் இல்லம் அடைந்தான். புனிதவதியார் இன்முகத்தோடு தன் கணவனுக்குத் திருஅமுது கறியமுது முதலியவற்றைப் படைத்ததுடன் அவன் அனுப்பியிருந்த மாங்கனிகளுள் ஒன்றை இலையில் வைத்து உண்ணச் செய்தார். திரு அமுதுடன் அப்பழத்தைத்தின்ற பரமதத்தன் அதன் இனிய சுவையில் மயங்கியவனாய்ப் பிறிதொன்றையும் இடுவாயாக என்றான். அதிமதுரக்கனி கணவன் சொற்பிழையாத புனிதவதியார் அவனது சுவை உணர்வைக் கெடுத்தல் கூடாது என்னும் கருத்தோடு தான் அப் பழத்தை அடியவர்க்களித்த செய்தியைக் கூறாது பழத்தை எடுத்து வருபவர்போல அடுக்களையினுள் வந்து வருந்தி இறைவனை வேண்டி நின்றார். அவ்வளவில் இறையருளால் அவர் தம் கையகத்தே மிக்க சுவையுடைய அதிமதுரக்கனி ஒன்று வந்தது. உடனே அக் கனியைக் கொண்டு வந்து தன் கணவர் உண்ணும் இலையில் இட்டார். அதனை உண்ட பரமதத்தன் அக்கனியின் சுவை முன்னுண்ட கனிச் சுவையின் வேறுபட்டதாய்த் தேவர் அமிழ்தினும் மேம்பட்டதாய் இருத்தலை உணர்ந்து புனிதவதியாரை நோக்கி மூவுலகிலும் பெறுதற் கரியதான இக்கனியை நீ எங்குப் பெற்றாய் என வினவினான். புனிதவதியார் இறைவன் தனக்கு வழங்கிய கருணையைப் பிறர்க்கு உரைத்தல் கூடாதாயினும் தன் கணவன் சொல்வழி ஒழுகுதலே கடன் எனத்துணிந்து நடந்தவற்றைக் கூறினார். மாங்கனியின் மாயம் அவற்றைக் கேட்ட பரமதத்தன் இக்கனி சிவபெருமான் உனக்குத் தந்தது உண்மையாயின் பிறிதொரு கனியையும் இவ்வாறே வருவித்து எனக்கு அளிப்பாயாக எனக் கேட்டனன். புனிதவதியார் அவ்விடத்தை விட்டுத் தனியே சென்று இறையருள் எனத் தான் கூறிய வார்த்தை பொய்யாதிருக்கப் பிறிதொரு மாங்கனி அருள வேண்டு மெனச் சிவபெருமானை இறைஞ்சி நின்றார். இறையருளால் மற்று மொரு மாங்கனி அம்மையார் கைக்கு வந்தது. பரமதத்தன் அக்கனியைத் தன் கையில் வாங்கினான். வாங்கிய அளவில் அக்கனி மாயமாய் மறைந்தது. அதனைக் கண்டு அஞ்சிய பரமதத்தன் தன் மனைவியாக வந்த அம்மையாரைத் தெய்வமென மதித்து அவரோடு சேர்ந்து வாழ்ந்தபோதும் உறவுத்தொடர்பு இன்றி ஒழுகி வந்தான். மறுமணம் இவ்வாறு ஒழுகும் நாளில் ஒருநாள் கடல் கடந்து வாணிபம் செய்து மீள்வேன் என உறவினர்களிடம் கூறி அரிய பல பொருள்களை மரக்கலத்தில் ஏற்றிக் கொண்டு கடல் கடந்து சென்று பெரும் பொருள் ஈட்டிக் கொண்டு மீண்டவன் பாண்டி நாட்டு மதுரையை அடைந்து அங்கே இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் புரிந்து வாழ்ந்து வந்தான். அம்மனைவிக்குப் பிறந்த பெண் குழந்தைக்குத் தான் தெய்வமென மதிக்கும் புனிதவதியாரின் பெயரைச்சூட்டி மகிழ்ந்துறைந்தான். புனிதவதியார் சந்திப்பு இதனை அறிந்த புனிதவதியாரின் சுற்றத்தினர் அம்மையாரை அவர் தம் கணவர்பால் சேர்ப்பிக்கும் கருத்துடன் அவரைப் பல்லக்கில் ஏற்றிக்கொண்டு பாண்டி நாடடைந்து அவன் வாழும் ஊர் எல்லையை அணுகினார்கள். அவர்கள் வருகையை அறிந்த பரமதத்தன், அச்சம் உடையவனாய், இரண்டாவதாகத் தான் மணந்த மனைவியோடும் மகளோடும் புறப்பட்டு ஊர் எல்லையை அடைந்தான். அவன் வருகையை அறிந்த உறவினர் பல்லக்கை நிறுத்தினர். பரமதத்தன் அம்மையாரிடம் `அடியேன் உம் அருளால் வாழ்கிறேன். இவ்விளங் குழவிக்கு உமது பெயரையே சூட்டியுள்ளேன்` என்று கூறி அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். அதனைக் கண்ட புனிதவதியார் அச்சத்தோடு சுற்றத்தார் பால் ஓதுங்கி நின்றார். சுற்றத்தினர் பரமதத்தனை நோக்கி `நீ உன் மனைவியை வணங்கக் காரணம் யாது` எனக் கேட்க அவன் அவர்களை நோக்கி ` இவர் நம் போன்றவர் அல்லர் தெய்வத்தன்மை வாய்ந்தவர் நீவிரும் இவரை வழிபடுவீராக` என்றான். பேய் வடிவம் சுற்றத்தவர் `ஈதென்ன வியப்பு` எனத் திகைத்து நிற்கப் புனிதவதியார் சிவபிரான் திருவடிகளைச் சிந்தித்து `தன் கணவர் கருத்து இதுவாயின் அவர் பொருட்டு அமைந்த எனது தசைப்பொதியைக் கழித்து நீக்கி நின் திருவடிகளைப் போற்றி நிற்கும் கணங்களில் ஒன்றாகும் பேய் வடிவினை எனக்குத் தந்தருளுக` என இறைவனை வேண்டி நின்றார். அந்நிலையில் பெருமான் அருளால் வானுலகும் மண்ணுலகும் போற்றும் பேய் வடிவம் அவருக்கு வாய்த்தது. சுற்றத்தவர் அஞ்சி அகன்றனர். புனிதவதியார் சிவனடியே சிந்திக்கும் சிவஞானம் உடையவராய் அற்புதத் திருஅந்தாதியால் இறைவனைப் போற்றினார்.இமயவல்லியின் அருட்பார்வை அம்மையார் மீது விழுந்தது. இவர் யார் என வினவினர், ஈசன் ” வரும் இவள்நம்மை பேணும் அம்மை காண்.ஈசன் அம்மையே எனப் பரிவுடன் அழைத்தார் அவருக்கு மகிழ்ச்சி பொங்க அப்பா என அலறித் திருவடியில் விழ்ந்தனள். இறைவர் நம்மிடம் வேண்டும் வரம் யாது எனக் கேட்க அதற்கு அம்மை அய்யனே என்று்ம மாறாத அன்பு வேண்டும், பிறாவாைம வேண்டும் பிறப்பு உண்டேனில் உம்மை என்றும் மாறாமை ேவண்டும், மேலும் நீர் ஆனந்தமாக கூத்தாடும் போது நாம் மகிழந்து பாடி அடியின் கீழ் இருக்க வரம் வேண்டினார். சிவபெருமான் திருவாலங்ககாடு எனும் தலத்தில் நாம் புரியும் திருநடனம் கண்டு களித்து, நீங்காது விளங்குவாய் என அருள்புரரிந்தார். அம்ைமயார் திருவாலங்காடு அைடந்து அண்டமுற நிமிர்ந்தாடும் ஐயன் திருவடி நீழலில் இனிது அமர்ந்தார். பெருமாைன இரண்டு மூத்த திருப்பதிகங்களால் பாடி பரவினார். திருச்சிற்றம்பலம் / ஓம் நமசிவாய ஓம் / தகவல் ; தமிழ்வேதம் இன்னும் பல காண; http://poompalani.weebly.com http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in,

சான்றோக்குதல் தந்தைக் கடன் " இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக வன்சொல் களைகட்டு வாய்மை எருஅட்டி அன்பு நீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றது ஓர் பைங்கூழ் சிறுகாலைச் செய்" ............அறநெறிச்சாரம் பாடலின் கருத்து; இனிய வார்த்தை என்னும் விளைநிலத்தில் ஈகை என்னும் விதையை விதைக்க வேண்டும், கடுஞ்சசால் என்னும் களையை எடுக்க வேண்டும், உண்மை என்னும் எருவை இடவேண்டும், அன்பு என்னும நீைரப் பாய்ச்சேவண்டும், அறம் என்னும் விளைவைத்தருகின்ற பசுைமயான பயிரை இளமையிலேயே செய்ய வேண்டும். குழந்தைகளை வளர்க்கும் பொழுதே மேலே கண்டவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும், முன்மாதிரயாக பெற்றோர்கள் வாழ்ந்து காட்ட வேண்டும், ஒவ்வொரு ெபற்றோரும் இப்படிச் செய்தால் உலகம் நலமாக இருக்கும், நீதிமன்றங்களும் காவல் நிலையங்களும் இல்லாமல் போகும், இனிய சொற்களை பேசப்பழக்க வேண்டும், கடும் சொல் பேச வேண்டாம், சந்தர்ப்பம் வாய்க்கும் பொழுதெல்லாம் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறி வரவேண்டும், ஏழை களுக்கு உதவும் நல்ல பழககத்தை சிறுவயதிலேயே கற்றுத்தர வேண்டும், நற்குணங்கள் பதிவதற்கு இளமைதான் சிறந்தது. உண்ைமயும், அன்பும், இருக்ண்கள் எனக் கூறிவருதல் வேண்டும், இப்படி இளைமயிலேயே பழக்கிவிட்டால் குடும்பமும் நாடும் செழிப்புடன் திகழும், செல்வம் சேர்த்து ைவப்பது மட்டும்தான் பெற்றோர்கள் கடமையாகாது. இளைய தலைமுறை சீர்கெட்டு வருகின்றது கடமையைச் செய்வதும் கடவுள் வழிபாடு ஆகும். திருச்சிற்றம்பலம் / ஓம் நமசிவாய ஓம் / இன்னும் பல காண; http://poompalani.weebly.com http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in,

ஞாயிறு, 18 மே, 2014


பக்தியும் ஞானமும் (4) - சிவன் தரிசித்தளவில் முக்தி பெறலாம் - புலியூரனை தரிசித்தளவில் முக்தி பெறலாம். - முத்துத்தாண்டவர் மறை நான்கின் அடிமுடியும் நீ ... பிறவும் நீ ஒருவன் நீயே பேதாதி பேதம் நீ பாதாதி கேசம் நீ பெற்ற தாய் தந்தை நீயே. -நடராஜப் பத்து. சிவன் அருவம், உருவம், அரு உருவம் என்ற மூன்று வழிகளிலும் துதிக்கப்படுவது சிறப்பாகக் குறிக்கப்பட வேண்டியதாகும். அருவம் என்பது, உருவமேயில்லாமல், ஞானிகள் தமது யோக மகிமையால் அகக்தில் பரம் என்னும் பேரானந்த நிலையை அடைந்துத் தெளிவது. உருவம் என்பது, உடல் உருப்புகள் கூடிய நடராஜப் பெருமான் போன்றதொரு வடிவம். அரு உருவம் என்பது தெளிவான உருவமில்லாமலும், அருவமாக இல்லாமலும் இருக்கும் லிங்க வடிவம். இப்படி மூன்று நிலைகளிலும் துதிக்கப்படுபவர் சிவ பெருமான். (என்ன இவ்வளவு பெரிய படம் போட்டுட்டேன்னு பார்க்குறீங்களா! இந்த படத்துக்கோ, நீளம் - அகலம் என்ற அளவுகள் உண்டு. அலகிலா ஜோதியனுக்கு அது போன்ற எல்லைகளில்லை. இந்தப் படத்தைக் காட்டுவதற்குப் போதுமானது, இரண்டு பரிணாமங்கள். ஆனால் எத்தனை பரிணாமங்கள் இருப்பினும் அத்தனையானாலும் முழுதுமாய் விளக்க இயலாதது பரம சொருபம். அதுவென்றே, அதுவொன்றே என அடங்காதவரை.) சிவன் தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம் என்கிற ஐந்து முகங்களைக் கொண்டவர். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்கிற ஐந்து தொழில்களையும் செய்பவர். திருநீறு, ருத்ராக்ஷம், பஞ்சாக்ஷரம் ஆகிரயவற்றில் விருப்பமுடையவர். ருத்ரம், சமகம் முதலான மகாமந்திரகளால் மனம் மகிழ்பவர். கோபமான வடிவில் ருத்ரனாகவும், சாந்தமான வடிவில் தக்ஷிணாமூர்த்தியாகவும் திகழ்பவர். சிவனுக்கு அவதாரங்கள் இல்லை என்றாலும், காரியார்த்த காரணமாக உருவங்களைக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இவற்றில் தக்ஷனை கொல்வதற்காக வீரபத்திரர்; தாருகவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்க பிட்சாடண மூர்த்தி; மார்க்கண்டேயனுக்காக யமனைக் கொல்ல காலசம்ஹாரமூர்த்தி; பிரம்மாவைத் தண்டிக்க பைரவர்; ஞான வடிவாக அம்பலம் தன்னில் ஆனந்த நடமாடும் தில்லைக் கூத்தன் நடராஜ வடிவம் - இப்படியாக பல வடிவங்களில் சிவனை தரிசித்து மகிழ்ந்திட ஏதுவாகிறது. பதஞ்சலி முதலான முனிவர்கள் தரிசித்து மகிந்த குஞ்சித பாதம் தில்லை சிற்சபேசனின் பொற்பாதமன்றோ! இதய ஆகாசம் - அதை தகராகாசம் என்பார்கள் - வெளியே வான்வெளி ஆகாசம் போலவே விரிந்து பரந்தது இந்த இதய ஆகாசமும். பரமாகாச சொரூபியான பரமன், ஆன்ம சிற்றணுவிலும் தகராகாத்திலும் திகழ்கிறார். "த்" என உச்சரிக்கையில், நுனிநாக்கு மேற்பல் அடியைத் தீண்டி நிற்பதுபோல, அகமதில் இறையதை உணர்த்தப்பெறும் இடம் தகராகாசம் ஆகும். "த"கரம் எனும் மெய்யெழுத்து, தமிழ் நெடுங்கணக்கில் ஏழாவது வரிசையில் இருப்பதுபோல், ஆறறிவுக்கும் மேற்பட்ட ஏழாவது அறிவு - மெய்யறிவு இந்த தகராகாசத்தில் சித்தியாகின்றதோ! தகரகன நடனபதி என்றும் தகராலய மூர்த்தி என்றும் வழங்கப்படுபவன் நதிப்புனை ஈசன். ஈசனின் திருவருளால் வள்ளாலாரெனும் அருட்கொடைவள்ளல் பெருமான் அருட்பெரும்ஜோதி அகவலதில் தான் பெற்ற காட்சியனுபவத்தை "உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டிய அபய சிற்சபையில் அருட்பெரும்ஜோதி" எனப்பாடி மகிழ்கின்றார்.

பக்தியும் ஞானமும் - பகுதி 1 பொதுவாக எல்லோருக்கும் ஞான மார்க்கம் என்பது பக்தி அல்லாத வழி என்கிற ஒரு எண்ணம் இருக்கிறது. ஞான மார்க்கமும் பக்தி மார்க்கமும் முக்தி அடைவதற்கான இரண்டு தனித்தனி வழிகளாக தொன்றுதொட்டு முன் வைக்கப்பட்டவை, என்றாலும், 'முக்தியானது ஞானத்தால் மட்டுமே கிட்டும்' என்பது ஆதி சங்கரரின் முடிபு. அதே சமயம், பலரும் ஞான மார்க்கத்தில் பக்திக்கு இடமில்லை என்கிற தவறான கண்ணோட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அத்வைதத்தில் பக்திக்கு இடம் உண்டு - மிக முக்கியமான பங்குண்டு என்பதையும் உணர வேண்டும். ஆதி சங்கரர் இந்து சமயப்பிரிவுகளான 'சைவம்', 'சாக்தம்', 'வைணவம்', 'கணாபத்யம்', 'கௌமாரம்' மற்றும் 'சௌரம்' ஆகிய ஆறினையும் ஒன்று சேர்த்து சண்மதம் என்று பெயரிட்டு, ஒன்று பட்ட இந்து மதத்திற்கு அடி கோலினார். அதற்குக் காரணமென்ன என்று பார்த்தால், ஞானம் பெறுவதற்கு பக்தியானது முக்கியமான சாதனம் என்பது தெளிவாகும். நாம் எல்லோராலும் எளிதாகப் பயன்படுத்தக் கூடிய கருவி பக்தியாகும். தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்.(குறள் 249) ஞானம் என்பது என்ன? ஞானம் என்பது வெற்று கற்பதனால் வரும் அறிவில்லை. அது புதிதாகக் கற்கும் வெளியறிவும் இல்லை. அது தன்னறிவு. தான் உண்மையில் மெய்ப்பொருள் எனத் தெளியும் மெய்யறிவு. பக்தி இல்லாமல் எத்தனை கற்றாலும், அது வெறும் ஏட்டறிவாக இருப்பதனால், படிப்பது மட்டும் பயன் தருவதில்லை. பக்தியில்லாமல் ஞானமில்லை. ஞானமில்லாமல் முக்தியில்லை. பக்தி, ஞானம் - இவ்விரண்டிலும் உயர்வென்றும் தாழ்வென்றும் நிலையில்லை. ஞானம் பெற பக்தி கருவி என்றால், பக்திக்கு கருவிகள் யாது? பக்தி பண்ண ஒன்பது வழிகள் இருக்கின்றன - இதனை நவவிதபக்தி என்பார்கள் - சிரவணம் முதலான (சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதனம்) ஒன்பது வழிகளைச் சொல்கிறார்கள். இவற்றில் நமக்குப் பிடித்த 'கீர்த்தனம்' என்கிற வழியில் இந்தத் தொடரில் அவன் பரப்பி வைத்த மூர்த்திகளைப் பாடிப் பணிந்து பக்தி பண்ணும் பாடல்களைப் பார்க்கப் போகிறோம், இந்தத் தொடரில். வணங்கும் துறைகள் பலப்பல ஆக்கி மதி விகற்பால் பிணங்கும் சமயம் பலப்பல ஆக்கி அவை அவைதோறும் அணங்கும் பலப்பல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய் இணங்கு நின்னோரை இல்லாய் நின்கண் வேட்கை எழுவிப்பனே! - நம்மாழ்வார் வேதாந்தம் எல்லாவற்றுக்கும் மேலான மிக உயர்ந்த இறை நிலையை 'பிரம்மம்' எனச் சொல்கிறது. ஆனால் அது எப்படி இருக்கும் என எந்தப் படத்திலும் பார்த்ததில்லையே. பின் அதை எப்படிப் பாடுவது. 'சிவன்' என்றால் 'பித்தா, பிறைசூடி' எனலாம். 'திருமால்' என்றால், 'நெடியோனே, வேங்கடவா' எனலாம். பிரம்மம் எப்படி இருக்கும் என கண்டவர் யார், விண்டவர் யார்? யாரிடம் கேட்பது? வேதாந்தத்தில் 'பிரம்மம்' இரண்டு நிலைகளில் விளக்கப்படுகிறது. முதலாவது, 'நிர்குண பிரம்மம்' - அதாவது, குணங்கள் இல்லாத பிரம்மம் குணங்கள் இல்லாததால் - அது கருப்பா, சிவப்பா என்று சொல்ல முடியாது. ஆனால் அதனில் இல்லாத நிறமில்லை. அது நெட்டையா, குட்டையா எனச் சொல்ல முடியாது. இடத்தாலோ, காலத்தாலோ அல்லது வேறு எந்த வரையுறைக்கு உட்படுத்தப்பட்டு குறிக்கிட இயலாதது. அதை உபநிடதங்கள் - "சத்யம், ஞானம், அனந்தம்" என்றும் "சத், சித், ஆனந்தம்" என்றும் பேசுகின்றன. இந்த நிர்குண பிரம்மத்துடன் மாயை சேரும்போது - அது "சகுண பிரம்மம்" என வழங்கப்படுகிறது - அதாவது குணங்கள் கூடிய பிரம்மம். இந்த நிலையில் சகுண பிரம்மத்தினை - சிவனாகவோ, திருமாலாகவோ அல்லது வேறு ஒரு இஷ்ட தெய்வமாகவோ போற்றிப் பாடிட வழி வகுக்கிறது. நம்மால் போற்ற, ஆடிப்பாடி பக்தி செய்ய ஏதுவானதொரு கருணை பொழியும் வதனமாகத் திகழ்கிறது. மாயையுடன் சேர்ந்ததால் சகுண பிரம்மமாக - வழிபாட்டுக்கு உரியதொரு தெய்வம் என்னும் நிலை பெற்று, நாம் அருள் பெற வழி வகுக்கிறது. மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட சொரூபம் தான் இந்த தெய்வங்களாக இருக்க, அந்த தெய்வங்களையே போற்றிப் பாடி, வணங்கி, அவர்களது அருளால் ஜீவனாக இருந்தது, தனது உண்மையான நிலையினை உணரச் செய்திட, மெய்ஞானம் பெற ஏதுவாகிறது. உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம். -பெரியபுராணம். பெரிய புராணத்தின் இந்த துவக்கச் செய்யுளைப் பார்த்தோமேயானால்: முதல் வரியில் : ஓதற்கு அரியவன் - அது நிர்குண பிரம்மத்தினை குறிப்பது. அடுத்த வரியில் : நிலவை அணிந்தவன் - குணங்களைக் கொண்ட சகுண பிரம்மத்தினைக் குறிப்பது. அதற்கு அடுத்த வரியில் : அலகிலாதவன் - மீண்டும் நிர்குண பிரம்மம். இப்படியாக, மாற்றி மாற்றி இவன் இரண்டுமாய் இருப்பவன் என்பதை சுட்டிக் காட்டுகிறார் சேக்கிழார் பெருமான்

திருஐந்தெழுத்தின் மகிமை உடல்நோயும் உயிர்நோயும் தீரும்


திருஐந்தெழுத்தின் மகிமை உடல்நோயும் உயிர்நோயும் தீரும் "வருந்தவன்காண் மனமுருகி நினையா தார்க்க வஞ்சன்காண் அஞ்செழுத்து நனைவார்க்கு என்றும் மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம் வானகமும் மண்ணகமும் மற்றுமாகிப் பரந்தவன்காண் பட்சைட யெட்டுைடயான் தான்காண் பங்கயத்தோன் தன்சிரத்ைத யேந்தி யூரூர் இநந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன்என் எண்ணத் தானே." திருநாவுக்கரசர் தன்னை மனம் உருகி நினையாதாருக்கு வஞ்சனாய் , அஞ்செழுத்தை விருப்புற்று நினைப்பவர்களுக்கு என்றும் அவர்களுடைய பெரிய பிணிகளைத் தீர்க்கும் மருந்தானவனாய் , தேவருலகும் மண்ணுலகும் மற்ற உலகங்களுமாகப் பரவியவனாய் , நடுச்சடையை விடுத்துத் திசைக்கு ஒன்றாக ஆடும் எட்டுச்சடைகளை உடையவனாய் , பிரமனுடைய மண்டையோட்டைக் கையில் ஏந்தி , ஊர் ஊராகப் பிச்சை எடுத்தவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே . இறைவரை மனம் உருகி நனைக்க வேண்டும் , மனம் உருகி நினைக்காதவர்கள் இறைமையை உணர முடியாது , உலோகங்கள் உருகும் பொழுது அவற்றில் உள்ள மாசுகள் அகலும், அைதப்போல, உள்ளம் உருகினால் மனம் மாசுகள் அகலும், உருகிய தங்கத்தில் கல் பதியுமாறு, உருகிய மனத்தில் இறைவர் பதிவார், இறைவழிபாடு பயனுைடயதாகும், இைறவருடைய மேன்மையையும் நம்முடைய கீழ்மையையும் நினைத்தால் உள்ளம் உருகும், இவற்றை கூறும் அரிய தமிழ் வேதப் பாடல்கள் வாய் விட்டு பாடினால் உள்ளம் உருகும், "சிவாயநம" எனும் திருஐந்தெழுத்ைத இடைவிடாது நினைப்பவர்களுைடய நோய்க்கு மருந்தாய் இறைவர் விளங்குவார், உடலுக்கு வரக்கூடிய நோய்களும், உயிருக்கு ஏற்படும் இறப்பாகிய நோயும் திருஐந்தெழுத்ைத ஒதுவதால் ஒழியும், மந்திரங்களில் எல்லாம் மிக உயர்ந்த மளந்திரம் திருஐந்தெழுத்தே ஆகும், ( சிவாயநம) இைடவிடாது சொல்லி நலம் பெறுவோம் திருசிற்றம்பலம் - ஓம் நமசிவாய ஓம் - இன்னும் பலகாண http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://vpoompalani05.blogspot.in

திருமூலரும் திருமந்திரமும் உபதேசம் 4 கொல்லாமை


திருமூலரும் திருமந்திரமும் உபதேசம் 4 கொல்லாமை துடிக்கத் துடிக்க உயிர்களை கொல்வது பாவம், உடலின்றி உயிரைப்பறிப்பது கொலை, ஈ,எறும்புக்கு செய்கிற தீங்கும் கொலைதான், கொடியில் இருந்து பூக்களை பறிப்பது இரக்கமற்ற செய்கைதான் என்கிறார் திருமூலர் "பற்றுஆய ந்ற்குரு பூசைக்கும் பன்மலர் மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர் நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும் உற்று ஆரும் ஆவி அமர்ந்து இடமே உச்சியே." சிற்றுயிரைக் கொல்லாதிருப்பதே சிவகுருவிற்கு உகந்த மாலையாகும், பொறுமை இரக்கம், நல்லறிவு மெய்த்தவம், அன்பு புலனடக்கம், இவை ஒளிபொருந்திய மலர்களாகும், அசைவற்ற மனமே சிறந்த தீபமாகும், இவற்றை கொண்டு செய்வதே உயர்ந்த வழிபாடு என்பது இப்பாடலின் பொருள். திருவள்ளுவரும் கொல்லாமை அதிகாரத்தில் இப்படி கூறுகின்றார், "அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும்" உயிர்களுக்கு தீங்கு செய்யாமல் இருங்கள், அதுவே முழுமையான அறம், நூறு தீயசெயல்களின் பலனை உயிர்க்கொலை என்கிற ஒரு பாவமே தந்து விடும், உங்கள் நல்வினைப் பயன்கள் அனைததையும் அது அழித்து விடும், அத்தகைய கொடுஞ் செயலைச் செய்யாதிருங்கள் என்கிறார் வள்ளுவர், மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வேறுபாடு குணம் செயல் இவற்றால் அமைவதுதான், " கொல்லென்றம், எறியென்றும், குத்து யென்றும் மிருகத்தைப்போல் வன்முறையை மேற்கொள்ளும் மனிதர்களை நரகத்தில் தள்ளு என்பனராம் எமதூதர்கள், இதன் பாடல் : கொல்லிடு, குத்தென்ற கூறிய மாக்களை.............) எவ்வுயிரையும் கொல்லாதிரு, அதுவே பேரின்ப வீடு பேற்றை பெற்றுத்தரும் வழி என்கிறார் வள்ளுவர் " நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றம் கொல்லாமை சூழும் நெறி " என்பது தான் அந்த குறள், பஞ்சமா பாதகங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை என்பர் பெரியோர், தர்ம சாஷ்திரங்களும் அதே கருத்தை வலியுறுத்தும் பாலம் என்பது அக்கிரமம் , அது அடுத்தவருக்கு ஒருவர் செய்யும் அநீதி, கொடியவர் செய்யும் ஒழுங்கற்ற காரியம், களவு , கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை, பொய் இவை பஞ்சாமாபாதகம் என்கிறது அற நூல்கள் புலால் உண்பதும் கொலையே என்கிறார் திருமூலர் "கொலையே களவு கள்காமம் பொய்கூறல் மலைவான பாதகமாம் அவை நீக்கித் தலையாம் சிவனடி சார்ந்து இன்பம் சார்ந்தோருகக்கு இலையாம் இவை ஞனானநதத்து இருத்தலே " ஐம்பெரும் பாவங்களை விலக்கி, இறைவனின் திருவடியைச் சிரமீது சூடியவர்கள் துன்பங்ள் நீங்கப் பெற்று இன்பத்தில் திளைத்திருப்பர் என்பது இதன் பொருள் புலால் உண்பது மட்டுமா பாவம் புலால் விரும்பாதவரை வற்புறத்தி உண்ணச் செய்வதும் கொடுமை என்கிறார் திருமூலர் திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவாய ஓம் இன்னும் பல காண : http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://vpoompalani05.blogspot.in

சனி, 17 மே, 2014


திருமூலரும் திருமந்திரமும் உபதேசம் 3 அறம் செய்ய விரும்பு ( தொடர்ச்சி) அறம்செய்ய விரும்பு என்பதன் தொடர்ச்சியாக திருமூலரின் கருத்துக்களை உங்களுடன்பகிர்கிறேன், அறம் செய்கிறவன் இறையென்னும் தோணியேறி வினையென்னும் கடலைக் கடக்கிறான், அவன் வாழ்வை மேன்மைப்படுத்தும் வழியறிந்தவன் ஆவான்,அறம் செய்யாதவனின் தன்மை எத்தகையது என்பதையும் திருமூலர் கூறுகிறார் " எட்டி பழுத்தன இருங்கனி வீழந்தன ஓட்டிய நல்லநம செய்யாதவர் செல்வம் வட்டிகொண்டு ஈட்டியே மண்ணில் முகந்திடும் பட்டிப் பதகர் பயனறி யாரே!" எட்டி மரம் பழுக்கும், ஏறிட்டு யாரும் அதைப் பார்ப்பதில்லை, காரணம் அது புசிக்கத்தக்கதல்ல, சீண்டப் படாமல் கிடக்கிற எட்டிக்கனி போலத்தான் நல்லறம் செய்யாதவனின் செல்வமும் பயனற்று போகிறது, பொருளாசையால் கடும் வட்டி வாங்குவதோடு வஞ்சனையால் பிறர் பொருளைக் கவரும் பாதகர் தாம் செய்ய வேண்டிய அறத்தினை உணர்வதில்லை, செல்வத்தின் பயனே ஈதல் என்பதையும அவர்கள் அறிவதில்லை, என்பது பொருள். மனிதனின் பிறப்பிற்க்கும் இறப்பிற்கும் இடையே உள்ள காலப்பகுதி ஒன்றும் நீண்டதல்ல, அது கண்மூடித்திறக்கும் நேரத்தில் முடிந்து விடுகிறது, அவன் தனக்குள் வளர்த்த ஆயிரமாயிரம் கற்பனைகளும் சிதைந்து போகின்றன, அவனுடைய சரீரம் தனது வனப்பையிழந்து சாறற்ற சக்கையாகி விடுகிறது, பயனற்றதாகி விடுகிறது, அவனது உடலைப் போலவே வாழ்க்கையும் அறத்தின் அவசியத்தையும் உணராதிருக்கிறான் என வருந்துகிறார் திருமூலர் ( பாடல் : ஒழிந்தன காலங்கள் , ஊழியும் போயின .......... ) தம்மை யாசிப்பவர்க்கு தாய் மனதோடு உதவுகிறவனே இறைவனுக்கு உகந்தவன், பொருள் மீது பற்று வைத்து நல்லறம் செய்யத் தவறியவர்கள் காலனின் சினத்திற்கு ஆளாக நேரிடும், ( பாடல்: கனிந்தவர் ஈசன் ஆளாக நேரிடும் ............... ) நீஙகள் நல்லது செய்தால் நன்மை உண்டு, தீயது செய்தால் தீங்கே விளையும் இதுதான் இயற்கையின் நியதி, இதைத்தான் தலைவித என்கிறார்கள், இன்பமும் துன்பமும் உங்கள் செயலின் விளைவேயாகும், நாம் நல்லது செய்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்பது மனிதனுக்கு தெரியாமல் இல்லை ஆனால் அவனுடைய அன்பற்ற மனம் அவனை அறம் செய்யாமல் தடுத்து விடுகிறது, ( பாடல் ; இன்பம் இடர், என்று இரண்டு உறவைத்து .................. ) எனவே நேர்மையற்ற செயலகளை செய்கிற ஒருவன் நிம்மதியாக வாழமுடியுமா? இறைவன் அவனைக் கவலைப் பட அனுமதிப்பானா? தேவைப்படுகிறவர்களுக்கு கொடுங்கள் தகுதியறிந்து கொடுங்கள் அடுத்தவரை துன்புறுத்தும் மிருகச் செயலை ஒருபோதும செய்யாதீர்கள் என்கிறது திருமந்திரம், ( பாடல்: கெடுவதும், ஆவதும் கேடில் புகழோன் ..................... ) இதன் கருத்தின் தொடர்ச்சியாக திருமூலர் யோகம் நியமம் இல்லார்க்கு ஈதல் தவறு என்றும் வலியுறுத்திகிறார், "ஈவது யோக இயம நியமங்கள் சார்வது அறிந்தன்பு தங்கும் அவர்க்கன்றி ஆவ தறிந்தன்பு தங்காதவர்களுக்கு ஈவது பெரும் பிழை என்றுகொள்வீரே" உலகீரே, யோக உறுப்புகளான இயம நியமங்களின் சார்புகளை உணர்ந்து அன்பு தங்கப்பெற்றவர்களுக்கே அல்லாமல், அன்பில்லாதவர்கட்கு ஒன்றை தருவது பெரும் தவறாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள், அதாவது பாத்திரம் அறிந்து பிச்சை இடுதல் வேண்டும் என்பதை இம்மந்திரம் கூறுகிறது, இயமமாவது, கொலை, களவு, பொய, காமம் முதலான தீய குணங்களை அகற்றி ஐம்புலங்களை அடக்கி இருத்தலாகும் எனவே யோக நியமம் இல்லாருக்கு ஈதல் கூடாது, இதுபோன்றே சீலம் இலார்க்கம் ஈதல் சிறிதும் பயன் இல்லை என்றும் கூறுகிறார், பாடல் : கோல வறட்டைக் குனிந்து கிட்டுப் பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும் சீலமும் றோன்பும் இலாதவர்க்கு ஈந்தது காலம் கழிந்து பயிரது ஆகுமே" ஒழுக்கமும் நோமபும் இல்லார்க்கு ஒன்றை ஈவது, அழகான வறட்டு பசுவிற்கு குனிந்து பசுந்தழைகளை இட்டு பாலை கறந்து குடிப்பது போலாகும் இது போன்றது மட்டும் அன்று, பருவம் தவறிச் செய்த பயிரையும் போன்றதாகும், சில செடிகள் பருவம் கடந்து பயிர்செய்தால் அப்பயிர் செழித்து வளரும் ஆனால் பலன் தந்து அறுவடைக்கு வராது, அதுபோலத்தான் என்கிறார், தகுதியற்ற ஞானிகட்கு ஒன்றை ஈவதால் பயன் இல்லை என்பதை இரண்டு உதாரணங்களால் காட்டுகிறார், திருக்குறளில் அறம் செய்வது பற்றி பல அதிகாரப் பாடல்கள் இருக்கின்றதை நாம் அறியலாம் " ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாம் செயல்" என்ற பாடல் மூலம் " உன்னால் முடிந்த வகையில் எல்லாம் அறத்ததினை இடைவிடாமல் செய்து கொண்டிரு " என்கிறார் வள்ளுவர், நான் இப்போது இளைஞன் அறம் செய்ய இன்னும் காலம் இருக்கு இன்னும் நிறைய சம்பாதித்து விட்டு அறம் செய்வோம் என்று தள்ளிப் போடாமல் இன்றே நல்லது செய் என்கிறார் வள்ளுவர், எனவே நன்றே செய் அதுவும்இன்றே செய் என்பது பழமொழி திருச்சிற்றம்பலம் - ஒம் நமசிவாய ஒம் எமது தொடர்புக்கு உள்ள வலைதளங்கள்: http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://vpoompalani05.blogspot.in

திருமூலரும் திருமந்திரமும் உபதேசம் 3 அறம் செய விரும்பு


திருமூலரும் திருமந்திரமும் உபதேசம் 3 அறம் செய விரும்பு திருமூலரின் கூற்றே அவ்வையாரின் மூதுஉரையின் தலைப்பாக உள்ளது வாழ்க்கை மிகக் குறுகியது. இங்கே வாழுங்காலத்தை அர்த்தமுடையதாக்கிக் கொள்ள வேண்டும், எது மனதுக்கு அமைதியையும் ஆனந்தத்தையும் தருமோ அந்த வழியைத் தேர்ந்திட வேண்டும், ஒழுக்கத்துடன் வாழும் வாழ்க்கையே உயர்வுகளை பெற்றுத்தரும், அறிநெறியில் நிற்க வேண்டும், அதுவே ஆன்மாவை ஒளிரச் செய்யும், " உன்னதம் பெற விரும்புகிறவர் அறத்தை போற்ற வேண்டும், அறவொழுக்கம் என்பது அடுத்தவர் சொத்துக்கு ஆைச்ப்படாமல் இருப்பது , பொய் பேசாமல் இருப்பதும், பொய் பேசுகிறவர் தவறு செய்ய தயங்குவதில்லை, பொய்யர்கள் எதிராளியை நம்பிக்கை மோசம் செய்கிறவர்கள்? இக்கருத்தினை " அவ்வியம் பேசி அறங்கெட நில்லன் மின் ............. " என்ற பாடல் மூலம் சித்தர் வலியுறத்துகிறார், ( முதல் தந்திரம் - உயிர் நிலையாமை பாடல்) அறங்களில் அனைத்தையும் கைக் கொள்ள முடியாவிட்டாலும் ஒழுக்கம் தவறாமல் உண்மை வழி நிற்பது பெரிய அறம், அறம் என்பது தன்னையறிவதில் தொடங்கி, தன்னை யறிந்தவரிடமே அறப்பண்பு அமையும் என்கிறார், பண்புடையவர் அறம் செய்வதில் பாரபட்சம் பார்க்க மாட்டார், இவர் நல்லவர் கெட்டவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்றெல்லாம் அவர் இனம் பிரிப்பதில்லை. வகைப்படுத்துவதும் இல்லை. அவர்தனது பாடலில் இக்கருத்தை வலியுறுத்தி எல்லோருக்கம் கொடுங்கள் சாப்பிடவதற்கு முன் யாரேனும் விருந்தாளி வருகின்றாரா? என்று எதிர்பார்த்து உண்ணவேண்டும், காக்கைகளை பார்த்து அதன் குணங்களை அறிந்து அது மற்ற காக்கைகளை அழைத்து உண்பதுபோல் கிடைத்த உணவினை பகிர்ந்து உண்ணும் பழக்கத்தினை அதனிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்கறார். " ஆர்க்கும் இடுமின் அவரிவர்என்னன்மின் பார்த்திருந்துஉண்மின் பழம்பொருள் போற்றன்மின் வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின் காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே." இதுபோல மற்றொரு பாடலில்மூலம் நீங்கள் உண்பதற்கு முன் இறைவனை வணங்கி உண்ணுங்கள் என்கிறார், அதன்படி அவரது பாடலில் " யாவர்க்குமாம் இறைவருக்கொரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுரை யாவர்க்குமாம் உண்ணும்போது ஒருகைப்பிடி யாவர்க்குமாம் பிறருக்கு இன்சொல்தானே" இதன் மூலம் இறைவனுக்கு வில்லவ இலையான பச்சையிலையால் அர்ச்சித்து விட்டு, பசுவுக்கு ஒரு வாய்அளவிலான பசும்புல்லும், தான் உண்ணும் உணவில் மற்ற வர்களுக்கு ஒரு கைப்பிடி உணவும் வழங்குங்கள் இதுவும் முடியாத போது தாங்கள் பேசும் பேச்சிலாவது பிறரிடம் அன்பாக பேசுங்கள் என்ற கருத்தை வலியுறுத்திகறார் மிக எளிமையான பாடல்வரிகள் மூலம். உங்கள் மனம் செய்கிற முக்குற்றங்களை ( காமம், வெகுளி, மயக்கம்) அகற்றி அறிவை பெருக்கும் காரியத்தை நீங்கள் செய்யவில்லை, செல்வம், குவிந்த நிலையிலும் உங்களிடம் அறச்சிந்தை இல்லாமல் போனது, தர்மம், செய்யாதவர் சேர்த்து வைத்தவை என்னவாகும் எண்ணிப்பாருங்கள் என்கிறார் கீழ்கண்ட பாடல்கள்மூலம் " அழுக்கினை ஒட்டி அறிவை நிறையீர்......................... " ஆணவ அழுக்கை அகற்றி இறையுணர்வு பெறவேண்டும் பொருளின் மீதான பற்று குறைந்தால் பாவக் கொடுவினைகள் குறையும், நீங்கள் புண்ணியம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, பாவம் செய்யாமல் இருந்தாலே புண்ணியம் கிடைக்கும் உன்னிடம் அறச்சிந்தனை இல்லாவிட்டாலும் இறைச்சிந்தனை மட்டும் எப்படி இருக்கும் உன் போக்கிற்கு இறைவனின் துணை உனக்கு கிடைக்காதல்லவா? என்கிறார் திருமூலர், அறமே சிறந்த தவம், அதுவே உங்களை வினை என்கிற கடலில் இருந்து கரை சேர்ப்பது இறைவழி நிற்பது போன்றதே இல்லறத்தான் தனக்குரிய கடமைகளைச் செய்வதும் ( பாடல் : திளைக்கும் வினைக்கடல்......... ) தொடரும்,,,,,,,,,

வெள்ளி, 16 மே, 2014

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): நவக்கிரக நாயகர்களை மாற்றியமைத்த திருவண்ணாமலை இடைக்காடர்

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): நவக்கிரக நாயகர்களை மாற்றியமைத்த திருவண்ணாமலை இடைக்காடர்

தமிழ் வேதம் காட்டும் இறை வழிபாடு அனுதினமும் இறைவழிபாடு எவ்வாறு செய்யவேண்டும் என்று திருமுறைகள் - தமிழ் வேதங்கள் காட்டும் வழிமுறைகளை திருநாவுக்கரசர் சுவாமிகள் வாயிலாக தனனு பாடல் வழியாக கூறுகின்றார், " பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி அரும்பொடு மலர்கள் கொண்டு ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல்லார்க்குக் கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே," நாவுக்கரசர் தேவாரம் பதிகம் 31 மனிதாகப் பிறந்துள்ள நாம் அதிகாலையில் எழுதல் வேண்டும், எழுந்து ஐந்து நிமிடம் சிவபெருமானாரை நினைத்து துதித்திடல் வேண்டும், " இன்றைய பொழுது நல்ல பொழுதாக கழிய வேண்டும் பாவங்கள் செய்யாமல் இருக்க வேண்டும், புண்ணியங்கள் செய்ய வேண்டும், என்னால் எந்த உயிருக்கும் துன்பம் நேரிடாமல் இருக்க வேண்டும், நாட்டில் அமைதி நிலவ வேண்டும்." என்று பிராத்தனை செய்தல் வேண்டும். பிறகு 108 முறை சிவாயநம " என்று சிந்தித்தல் வேண்டும், பிறகு குளித்து வெண்ணீரு அணிய வேண்டும்., சிவத் தொண்டில் ஈடுபடவேண்டும், என்று மன மிகழ்ச்சியுடன் அன்றலர்ந்த மலர்களை எடுக்க வேண்டும், சிவாலயம் சென்று மலர்களை அருச்சனைக்கு அளிக்க வேண்டும். ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும், காலை நேரம் இப்படிக் கழிந்தால் நம் மனமும் இன்பத்தில் மூழ்கும், இந்த சிவபுண்ணியத்தால் வீடும் பேறும் செல்வச் செழிப்பும் கிடைக்கும், அன்றைய பொழுது பயனுள்ளதாக புண்ணியத்தில் கழியும், வீண் பேச்சு பேசுவதற்கும், வேண்டாதவற்றை பார்ப்பதற்கும் வழியில்லாமல் போகும், சமுதாயமும், நலம் பெறும், தனிமனிதர்களின் கூட்டம் தானே சமுதாயம் என்பது. திருசிற்றம்பலம் " ஓம் நமசிவாய " நன்றி : தமிழ் வேதம் http://poomalai-karthicraja.blogspot.in,

வியாழன், 15 மே, 2014

டெலிபதிகிரிதர்பாபா: கோரக்க சித்தர் தியான முறை

டெலிபதிகிரிதர்பாபா: கோரக்க சித்தர் தியான முறை: தியானம் பிரணவத்தைப் பொருளோடு திரும்பத் திரும்பக் கூறுவதே தியானம் என்கிறது பதஞ்சலி சூத்திரம் (யோக தந்தை பதஞ்சலி சித்தர்) ஒம்காரத்...

அத்ரிமலை யாத்திரை 34 அத்ரி கங்கையில் வெள்ளை ஆமையை பல பக்தர்கள் பார்த்திருக்கிறார்கள். பொதுவாகவே ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பார்கள். 15 வருடங்களுக்கு முன்னால் அத்ரி பக்தர்களும் இதேபோலப் பேசிக்கொண்டார்கள். ‘‘அத்ரி கங்கையில் ஆமையா! ஆமை இருந்தால் கோயில் எப்படி உருப்படும்?’’ என்று பரவலாகப் பேசத் தொடங்கினர். எனவே ஆமையை பிடித்துக் கொண்டு போய் வெளியே விட்டுவிட முடிவு செய்தனர். ஆனால், பகவான் அந்த ஆமையின் மகிமையை பக்தர்களுக்குத் தெரியப்படுத்த வி ரும்பினார் போலும்! திட்டமிட்டபடி வெள்ளை ஆமையை ஒரு சாக்கு மூட்டைக்குள் போட்டுக் கொண்டு, தோளில் சுமந்து மலையடிவாரத் திலுள்ள கல்லாற்றில் கொண்டுபோய் விட்டனர். அணைக்கட்டுக்குள் ஆமை சென்று விட்டதை உறுதி செய்து கொண்டு அந்த இடத்தைவிட்டு அகன்றனர். ஆனால், மறுநாள் அத்ரி கங்கையில் போய் பார்த்தால் வெள்ளை ஆமை சுவாதீனமாக நீந்திக் கொண்டிருந்தது! எப்படி? இது வேறு ஆமையோ என்று குழப்பமடைந்தார்கள். ஏற்கெனவே அந்த ஆமையைப் பார்த்திருந்தவர்கள், இது அதுதான் என்று உறுதி செய்தார்கள். பிறகு மெல்ல, இதுவும் அத்ரி ஈசனின் அருள் விளையாடல்தான் என்று அமைதியானார்கள். இந்த ஆமையைப் பார்த்தால் தொழிற் போட்டியாளர்கள், விரோதிகளெ ல்லோரும் நம்மை விட்டு விலகுவர்; தொழிலும் சிறப்பாக நடக்கும் என்கிறார்கள். ஆனால், இந்த வெள்ளை ஆமையை பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது என்பதுதான் இதன் சிறப்பு! விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் கூர்ம அவதாரம் மிக முக்கியமானதல்லவா? அதனால்தான் வடநாட்டில் மிகப் பெரிய தொழில் அதிபர்களெ ல்லோரும் ஆமை என்னும் கூர்மத்தினை தங்களின் வியாபார தலத்தில் வைத்து பூஜித்து வருகிறார்கள். தங்களது பணப் பெட்டியின் அருகே கூர்ம அடையாளம் எதையாவது வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இந்த கங்கை ஊற்று கால்சியம் சத்து நிறைந்தது. மருத்துவ குணம் வாய்ந்தது. அதை நிரூபிக்கும் வண்ணம் அத்ரி மலையில் ஒரு சம்பவம் நடந்தது. பத்து வருடங்களுக்கு முன்பு, சிவகாசியிலிருந்து அழுக்கு வேஷ்டி சுவாமி என்பவர் அத்ரிமலைக்கு வந்திருக்கிறார். ஆனால், தற்போது அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. இவர் மிக அதிகமான சோடா பாட்டில் மூடிகளை அத்ரிக்கு கொண்டு வருவார். அதைச் சிவலிங்கம்போல வடிவமைப்பார். அவற்றில் சின்னச் சின்ன திரி போட்டு விளக்கேற்றி வணங்குவார். இதை பல பக்தர்கள் பரவசத்தோடு கண்டுகளித்திருக்கிறார்கள். அமாவாசை தோறும் இரவு சிவவிளக்கு பூஜை நடைபெறும். அந்த பூஜையில் கலந்துகொள்ள ஒரு குடும்பம் வந்திருந்தது. அப்போது அந்த குடும்ப த்திலிருந்த சிறு குழந்தை வயிற்று வலியால் துடித்தது. இதுபோன்று அந்தக் குழந்தைக்கு அடிக்கடி வருமாம். அதற்கு மருத்துவரிடம் மருந்தும் வாங்கி வைத்திருந்திருப்பார்களாம். ஆனால், மலைக்கு வந்த அன்று அவர்களிடம் குறிப்பிட்ட மருந்து இல்லை. அச்சமயம் அங்கு வந்த அழுக்கு வேஷ்டி சுவாமி, ‘‘எல்லாவற்றையும் தீர்க்கும் பெரிய மருந்து அத்ரியிடம் உள்ளது’’ என்றார். அபிஷேக விபூதியையும், அத்ரி கங்கையையும் ஒன்றாக குழைத்து குழந்தைக்குக் கொடுத்தார். மறுநிமிடமே குழந்தை அழுகையை நிறுத்திவிட்டது. அதற்குப் பிறகு குழந்தைக்கு வயிற்றுவலியே வரவில்லை. கோரக்கரின் சந்நிதானம் திறந்திருக்கும்போது சிட்டுக்குருவி ஒன்று சந்தோஷத்துடன் சிறகடித்து கர்ப்ப கிரகத்திற்குள் செல்கிறது; அதன் பிறகு அந்த குருவி வெளியே வருவது இல்லை. ஏன்? சிவனோடு ஐக்கியமான அந்த சிட்டுக்குருவியும் ஒரு சித்தர்தானோ? பங்குனி மாதத்து கடைசி ஐந்து நாட்களும், சித்திரை மாதத்து முதல் ஐந்து நாட்களும் அமிர்தவர்ஷினி மரத்திலிருந்து பெய்யும் சந்தன மழை நம்மீது விழுவதோடு, நம்மைச் சுற்றிலும் ஒருவித நறுமணம் கமழ்கிறதே, இது யாருடைய செயல்? அத்ரிமலைக்கு ஏறும்போது, பாதை மாறிவிட்டால், அப்படித் தவித்து நிற்பவர்களை நாய் ஒன்று வந்து அழைத்துச் சென்று மலை உச்சிக்கு கூட்டிக்கொண்டு செல்கிறதே, அந்த நாயாக வருபவர் யார்? ஓங்கார சத்தம், சில் வண்டுகள் கூச்சல், ஆங்காங்கே திடீரென்று தோன்றி மாயமாய் மறையும் சில மிருகங்கள் இவையெல்லாம் நமக்கு உணர்த்துவது என்ன? எல்லாமே இங்கு வாழும் சித்தர்களின் மாற்று உருவங்கள்தானோ? அவர்கள் அங்கே வாழ்வதால்தான் இங்கு வரும் பக்தர்களுக்கு எந் தவொரு தீங்கும் விளைவதில்லை என்கிறார்கள். உண்மைதான். சில வேளைகளில் கோரக்கர் குகைக்குள் ஒரு சித்தர் இருப்பது போல சிலருக்கு தென்பட்டிருக்கிறது. சிறிது நேரம் கழித்து மீண்டும் போய்ப் பார்த்தால் அங்கு யாரும் இல்லை. அதுவரை அங்கே இருந்தவர் ஒரு சித்தர்தானா அல்லது வேறு யாராவதா? அதனால்தான் அத்ரிமலை முழுவதுமே அதிசயமாக உள்ளது. அடுத்து கங்கா ஊற்றிலும் அதிசயம்தான். மழை எவ்வளவு பெய்தாலும் ஊற்று நீர் பொங்கி வெளியேறாது. அதேநேரம் எவ்வளவு வெயிலானாலும் அந்த நீர் சூடாகாது. எவ்வளவுதான் குளிர் அடித்தாலும் நீர் அளவுக்கு அதிகமாக சில்லிடாது. தட்பவெப்ப நிலையில் எப்போதுமே மாற்றம் இல்லாத ஊற்றாக இந்த கங்கை உள்ளது. கொஞ்ச காலத்திற்கு முன்னாலிலிருந்து இந்தப் பகுதியில் மழை பெய்யவில்லை எ ன்றால் இங்குள்ள நந்தியை கங்கைக்குள் எடுத்துச் சென்று பூஜை செய்வார்கள். உடனே மழை பெய்து விடும். கங்கையின் வலதுபுறம் வேல் உள்ளது. திருமணத் தடை நீங்க வேண்டுமெனில் இந்த வேலுக்கு அபிஷேகத்தை செய்வார்கள். கங்கா தேவிக்கு அருகிலிருக்கும் வேலுக்கே இந்தச் சிறப்பு என்றால் இங்கிருக்கும் கங்கா தேவியின் சிறப்பு எத்தனை மகத்தானது?