சனி, 30 அக்டோபர், 2021

திருக்குறளில் முப்பொருள் உண்மை

 https://www.youtube.com/watch?v=3JGDQoGzIJ0...



சைவ சித்தாந்தம் கூறும் சிறு விளக்கம்

1. உடலுக்கு வேறாக உயிர் என ஒரு பொருள் உண்டு.

2. அந்த உயிக்கு உள்ளாக இறைவன்  என்னும் மற்றொரு பொருள் உண்டு.

3. உயிர் பொருள்,உளளிருக்கும் இறைவன் உணர்த்துதல் வழியாகத்தான் தனது உடற் கருவிகளை இயக்கிக் கொண்டு இவ்வுலகில் வாழ்கிறது.

4. உயிரினை உலகியல் வாழ்வுக்கு உடந்தையாக ஆணவம், கன்மம், மாயை என்ற மும் மலங்கள் உள்ளன.

5. திருவருளால் இவற்றை ( மும் மலங்களை )சார்ந்து உயிர் வாழும் கட்டம் அவ்வளவும் பந்த நிலை, அல்லது பெத்த நிலை 

6.திருவருளால் இவற்றின் ெதாடர்பு நீங்கிச் சூட்சும உணர்வாகிய ஞான உணர்வினால் கடவுளை அடைந்து அனுபவிக்கும் நிலை மோட்ச நிலை (அல்லது ) சுந்த நிலை

7. இந்த சுத்த நிலை பேறு ஒவ்வாெரு உயிர்க்கும் உரியது. ஆனால் அதன் அதன் பக்குவ காலத்தில் மட்டும் அதற்தற்கு வாய்ப்பது

8. இவ்வகையில் சம்பந்தப்படும் பொருட்கள் மூன்று , அவை பதி,பசு, பாசம்

9. உண்மை அறிவியற் கோட்பாடுகளுக்கு முரண்படாத வகையில் இம் முப்பொருள் இயல்புகளை உரிய முறையில் கற்று கேட்டுத் தெரிபவர்கள் மெய்ஞானம் பெறுவர். அவர்களே மேல் கதிக்கும் வீடு பேற்றுக்கு உரியவர்.

10.வீடு பேறு என்பது உயிர் தன் சீவத் தன்னை கழிந்து, சிவத்தோடு ஏகமாய்நின்று அநுபவிக்கும் ஆராத ஓரு பேரின்ப நிலை.

திருச்சிற்றம்பலம்

விளக்கு வழிபாட்டு தீபாராதணையும் சைவ சித்தாந்தமும்

 விளக்கு வழிபாட்டு தீபாராதணையும் சைவ சித்தாந்தமும்

இறைவனைப் பூஜிக்கும் முறைகளில் தீபாராதனை சிறப்பான இடத்தைப் பெறுகிறது. இறைவனே தீப வடிவில் விளங்குகிறார்.இறைவன் முருகனை அருணகிரிநாதர், “தீப மங்கள ஜோதி நமோ நம”என்று போற்றுகிறார்.
மாணிக்கவாசகப் பெருமானும் இறைவனை “ஒளி வளர் விளக்கே”என்றும்; “சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே” என்றும் பலவாறு போற்றியுள்ளார். ஒளி வடிவமான இறைவனை தீபங்களால் ஆராதனை செய்வதே தீபாராதனை என வழங்கப்படுகிறது.
விளக்கு வழிபாடு தமிழகத்தில் மிகப்பழங்காலந்தொட்டு நடைபெற்று வருகின்றது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே விளக்கு வழிபாடு நடைபெற்றிருக்கின்றது. பெருங்கற்சின்னம், முதுமக்கள் தாழி முதலிய அகழ்வாய்வுப் பொருள்களில் பலவகையான விளக்குகள் கிடைத்துள்ளன. எனவே, அக்காலத்தில் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வழிபாட்டுக் குரியனவாக இருந்துள்ளன.
திருமுறைகளில் விளக்கு வைத்து வழிபாடு செய்தல் விரிவாகப் பேசப் பெறுகின்றன. திருஞானசம்பந்தர் காலத்திலேயே கார்த்திகை மாத விளக்கு வழிபாடு தொன்மையானது எனக் கூறப்பட்டுள்ளது. ‘தொல் கார்த்திகை நாள்… தையலார் கொண்டாடும் விளக்கீடு’ என்பது அவர் வாக்கு.
1. வீடுகளில் விளக்கு வழிபாடு 2. பொது இடங்களான மண்டபங்கள், கோவில் மண்டபங்கள் முதலிய இடங்களில் பலர் கூடி விளக்கேற்றி வழிபடுதல், 3. கோவில்களில் விளக்கு இடுதல், 4. பூசை நேரங்களில் பலவகையான அலங்கார தீபங்கள் காட்டுதல்-என்று விளக்கு வழிபாட்டை வகைப்படுத்திக் கொள்ளலாம்.
1. வீடுகளில் மாலைநேரம், சிறப்பு நாட்கள் முதலிய காலங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்தல் நல்லது. வீட்டுக்கு மங்கலம், எட்டுத் திருமகளிரும் (அஷ்ட லக்ஷ்மிகள்) அருள் செய்வர்.
2. கூட்டு வழிபாட்டைப் பலரும் ஒரே தன்மையான விளக்குகளை வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றிப் பற்றவைத்து குங்குமம் அல்லது மலர்களால் அருச்சனை செய்து வழிபடலாம். ‘விளக்குப் போற்றி’ என்று நூல்கள் வந்துள்ளன. ஒருவர் போற்றி சொல்ல மற்றவர் பிந்தொடர்ந்து சொல்லி நிறைவின் போது படையலிட்டுக் கற்பூரங்காட்டி வழிபடலாம். பலரும் ஒன்று சேர்வது சமுதாய ஒற்றுமைக்குக் காரணமாக அமையும். ஐந்து திரியிட்டுச் சுடரேற்றி வழிபடும் விளக்கில் மலைமகள், கலைமகள், அலைமகள் மூவரும் அமர்ந்து அருள் செய்வர்.
3. திருக்கோவில்களில் விளக்கு வைப்பது புண்ணியமாக முன்பு கருதப்பட்டது. திருமறைக்காட்டில் எலி ஒன்று கோவிலில் எரிந்து கொண்டிருந்த விளக்கில் நெய் உண்ணப் புகுந்த்து. சுடர் மூக்கைச் சுடர் திரியை எலி தூண்டியது. அணையும் விளக்கு நன்றாக எரியத் தொடங்கிற்று. இந்தப் புண்ணியத்தால் எலி அடுத்த பிறப்பில் மூன்று உலகங்களையும் ஆளுகின்ற மாவலிச்சக்கரவர்த்தியாக ஆயிற்று.
“நிறை மறைக்காடு தன்னில் நீண்டுஎரி தீபம் தன்னைக்
கறைநிறத்து எலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவான் உலகம் எல்லாம்
குறைவறக் கொடுப்பர்போலும் குறுக்கைவீரட்டனாரே”
என்பது திருநாவுக்கரசர் தேவாரப் பாடல் ஆகும்.
நாயன்மார்களில் கலியநாயனார் நமிநந்தியடிகள், கணம்புல்ல நாயனார் ஆகியோர்கள் கோவிலில் விளக்கு எரித்து இறைவன் திருவருள் பெற்றவர்கள் ஆவர். கோவில்களில் வைக்கப்பெறும் விளக்கினை நந்தியா தீபம், சந்தியா தீபம் எனக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. அணையாமல் எரியும் தீபம் நந்தியா தீபம், நந்தா தீபம், நுந்தா தீபம் எனப் பலவாறாக வழங்கப்பெறும். பூசை வேளைகளான காலை, நண்பகல், மாலை, இரவு முதலிய சந்திகளில் வைக்கப் பெறும் தீபம் சந்தியா தீபம் ஆகும்.
பூசைகளின்போது கோவில்களில் கடவுளரின் திருவுருவத்தின் முன் பலவித அலங்கார தீபங்கள் காட்டப்பெறுகின்றன. அவை அனைத்தும் ஆழமான பொருள் உடையன. தத்துவம் உடையன. கோவில் கருவறையில் வழிபாட்டுக்கு உரிய திருவுருவங்கள் அமைந்திருக்கும். கருவறையின் முன் உள்ள மண்டபம் ஒன்றில் வாகனம் அமைந்திருக்கும். வாகனம் மூலமூர்த்தியை நோக்கியே பார்த்துக் கொண்டிருக்கும். வாகனத்திற்குப் பின் பலிபீடம் இருக்கும். சிவன் கோவிலாக இருந்தால் மூலமூர்த்தியாகிய சிவலிங்கம் பதி, வாகனமாகிய எருது பசு, பலிபீடம் பாசம்,
“ஆய பதிதான் அருட்சிவ லிங்கம்
ஆய பசுவும் அடல்ஏறு எனநிற்கும்
ஆய பலிபீடம் ஆகும்நல் பாசமாம்
ஆய அரன் நிலைஆய்ந்து கொள்வார்கட்கே”
என்பது திருமூலர் திருமந்திரப் பாடலாகும்.
பிறகோவில்களிலும் இவ்வாறே மூலமூர்த்தியைப் பதியாகவும் வாகனத்தைப் பசுவாகவும், பலிபீட்த்தைப் பாசமாகவும் கொள்ள வேண்டும்.
பூசைக் காலங்களில் முதலில் திரை போடப்பெறும், பின் அலங்காரதீபம் காட்டும் போது திரை நீக்கப்பெறும், தீபம் காட்டும் அருச்சகர் பலவித அலங்கார தீபங்களை முறையாகக் காட்டுவார். ஆன்மாவின் பிரதிநிதியாகிய வாகனம், மூலமூர்த்தியைக் காணமுடியாமல் ஒரு மறைப்பு. திரோதானம் உண்டாக்குகிறது; அது ஆணவ மலம் எனும் தடையாகும். ஆணவ மலம் எனும் தடை நீங்கினால் – திரைநீங்கினால் மூலமூர்த்தியைக் காணலாம். அதுவும் நன்றாக காணமுடியாது. அருச்சகர் தீபம் காட்டினால் நன்றாகக் காணமுடியும். அருச்சகர் ஞானாச்சாரியரைக் குறிக்கும். விளக்கு ஞானத்தைக் குறிக்கும். மலம் நீங்க-ஞானாச்சாரியர் ஞானத்தைக் கொடுக்க – இறைவனைக் காணலாம்.
உலகத்தில் வெளிச்சம் வருதலும் இருள் நீங்குதலும் ஒரே சமயத்தில் நடைபெறும். அதுபோல ஞானாச்சாரியரால் ஞானம் வருதலும் மலம் நீங்கலும் ஒரேசமயத்தில் நடைபெறும். கோவிலில் திரை நீங்குதலும் அருச்சகர் அலங்கார தீபம் காட்டுதலும் ஒரேசமயத்தில் நடைபெறும். எனவே, விளக்கு ஞானத்தின் அறிகுறியாகும்.
“ஞான விளக்கை ஏற்றி வெளியாக உள்ள கடவுளை அறிந்து கொள்க, ஞானமாகிய விளக்கினால் முன்பு இருந்த துன்பங்கள் நீங்கும். இவ்வாறு ஞானமாகிய விளக்கின் தன்மையை அறிந்து கொண்டவர்களே வாழ்க்கையில் விளக்கம் பெற்றவர், ஞான விளக்கில் விளங்கித் தோன்றும் விளக்காக மாறுவார்கள்’ என்ற பொருளில்;
“விளக்கினை ஏற்றி வெளியை அறமின்
விளக்கினின் முன்னை வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!”
என்று திருமூலர் பாடியுள்ளார். ‘விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்’ என்று திருநாவுக்கரசரும் பாடியுள்ளார். எனவே, கோவிலில் காட்டப்பெறும் அலங்கார தீபம் ஞானத்தின் அறிகுறியாகும்.
பதினாறு வகை உபசாரங்களில் ஒன்று தீபாராதனை. பூசைக் காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன. தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனைத் தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு. பல அடுக்குகளைக் கொண்ட நட்சத்திர தீபம் முதல் பல தீபங்கள் காட்டப் பெறுகின்றன.
நட்சத்திரங்கள் இறைவனை வழிபட்டு ஒளி பெறுகின்றன என்ற கருத்தில் நட்சத்திர தீபம் காட்டப் பெறுகின்றது. ஒன்பது தீபங்கள் நவசக்திகளைக் குறிக்கும்.
ஏழு தீபங்கள் சப்தமாதர்களைக் குறிக்கும். ஐந்து தீபம் – நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தி அதீதகலை என்ற ஐந்து கலைகளைக் குறிக்கும். மூன்று தீபம் சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று ஒளிகளைக் குறிக்கும். ஒற்றைத் தீபம் சரசுவதியையும், சுவாகாதேவியையும் சுட்டும்.
ஐந்து தட்டுக்களில் தீபம் ஏற்றி நான்கு திசைகளில் நான்கு, நடுவில் ஒன்று என்ற முறையில் அமைத்த – அவ்வமைப்புக்கு ஒற்றை விளக்குக் காட்டிப் பின் நடுத்தட்டு முதலாக ஐந்து தட்டுகளையும் தீபத்துடன் காட்டப் பெறும். ஐந்தும் இறைவனுடைய ஐந்து முகங்களைக் குறிக்கும். மந்திரங்களுள் பஞ்சப்பிரம மந்திரங்கள் சிறப்புடையன.
1. ஈசானம் 2. தத்புருடம் 3. அகோரம் 4. வாமதேவம் 5. சத்யோசாதம் என்ற ஐந்தும் பஞ்சப்பிரம மந்திரங்கள் எனப்படும். ஏனைய மந்திரங்களுக்கு முன்னே தோன்றியதாலும், ஏனைய மந்திரங்களுக்குக் காரணமாக இருப்பதாலும் பஞ்சப் பிரம மந்திரங்கள் சிறந்தன என்று சிவஞானசித்தியார் குறிப்பிடுகின்றது. அந்தந்த மந்திரங்களால் அந்தந்த முகத்தைத் தரிசிப்பது என்ற முறையில் ஐந்து தட்டுத் தீபங்கள் காண்பிக்கப்படுகின்றன. இறுதியாக கும்ப தீபம் காண்பிக்கப் பெறும்.
கும்ப தீபம் சதாசிவ தத்துவத்தை குறிக்கும். அனைத்தும் சதாசிவத்துள் ஒடுங்கும் என்ற முறையில் அமைந்த்து. விரிவாகப் பலவாறாக இருக்கும் தீபங்கள் முதல் கும்பதீபம் இறுதியாகக் புருட தீபம், மிருக தீபம், பட்ச தீபம், வார தீபம், ருத்ர தீபம் முதலிய தீபங்களும் விரிவாகக் காட்டும்போது காட்டப் பெறுவதுண்டு. அந்தந்தத் தீபத்திற்குரியவர்கள் அந்தந்த உருவில் வந்து இறைவனை வழிபடுகிறார்கள் என்பது கருத்து.
தீபாராதனை செய்யும்போது மூன்று முறை காட்டவேண்டும். முதன் முறை காட்டுவது உலக நலங்கருதியது. இரண்டாம் முறை கோவில் உள்ள ஊர்மக்கள் நலங்கருதியது. மூன்றாம் முறை ஐம்பெரும் பூதங்களால் இடையூரின்றி நலம் பயக்க வேண்டும் என்பது கருதியது. காட்டும்போது இடப்பக்கத் திருவடியில் தொடங்கி இடை, மார்பு, கழுத்து, நெற்றி, உச்சி என்ற முறையில் உயர்த்தி வட்டமாக வலப்பக்கம் தோள், மார்பு, இடை, பாதம் என்ற அளவில் ‘ஓம்’ என்னும் பிரணவ வடிவில் காட்ட வேண்டும். மூர்த்தி பேதங்களுக்குக்கேற்பத் தீபாராதனை முறையில் வேறுபாடு உண்டு. தீபாராதனைக்குப்பின் கற்பூரம் காட்ட வேண்டும்.
தூய கற்பூரம் எரிந்தபின் எஞ்சியிருப்பது ஒன்றும் இல்லை. அதுபோல ஆன்மா-பாச ஞானம், பசு ஞானம் நீங்கி இறைவனின் திருவடியில் இரண்டறக் கலந்து இன்பம் துய்த்தல் வேண்டும்.
“தீது அணையாக் கர்ப்பூரதீபம் என நான் கண்ட
சோதியுடன் ஒன்றித் துரிசு அறுவது எந்நாளோ?”
என்று தாயுமானவர் இதனையே பாடியுள்ளார்.
அறியாமை நீங்கி இறையருள் பெறுவதே விளக்கு வழிபாட்டின் அடிப்படையாகும்.
“ஆதிப்பிரானே! என் அல்லல் இருள் அகலச்சோதிப்
பிரகாசமாய்த் தோற்றுவித்தால் ஆகாதோ?
ஏதும் தெரியாது எனைமறைத்த வல்இருளை
நாத! நீ நீக்கஒரு ஞானவிளக்கு இல்லையோ ?” (தாயுமானவர்).
–திருச்சிற்றம்பலம்–
No photo description available.
Muruga Perumal, Sundaramoorthy S and 3 others
2 comments
1 share
Like
Comment
Share

*சிவோபதேச ஞான சிவதீட்சை விழா.*

 *நமசிவாய வாழ்க.*

*கூனம்பட்டி கல்யாண புரி ஆதீனம் ஸ்ரீ மூலாம்நாய பீடப்ரஸ்தான ஸ்ரீ மாணிக்கவாசகர் மடாலயத்தின் 57 வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ இராஜ. சரவண மாணிக்க வாசக சுவாமிகள்* அருளாணையின் வண்ணம்,
*சிவோபதேச ஞான சிவ தீட்சை விழா.*
அநேக அடியார்கள், அன்பர்களின் கோரிக்கைக்கிணங்க, நமது *கூனம்பட்டி ஸ்ரீ மாணிக்கவாசகர் திருமடத்தில், கார்த்திகை மாதம் 27ம் நாள். நான்காவது சோமவாரம் 13-12-2021. திங்கட்கிழமை.*
*சிவோபதேச ஞான சிவதீட்சை விழா.*
*சமய தீட்சை, விஷேட தீட்சை, நிர்வாண தீட்சை மற்றும் ஆச்சார்ய அபிஷேகம்* என அனைத்து படிநிலைகள் சிவ தீட்சை பெறவும்,
*சிவராஜயோக நிலையில், அடியார்களுக்கு சிவமாகவே, அருளும் சிவகுரு தரிசனம்.*
சிவ தீட்சை (சமய, விஷேட, சிவபூஜை, நிர்வாண தீட்சை ஆச்சார்ய அபிஷேகம்) பெற விரும்பும் அடியார்கள், அன்பர்கள் கண்டிப்பாக, முன் பதிவு செய்ய வேண்டும்.
*சமய தீட்சை பெறவுள்ளவர்கள், பஞ்ச பாத்திரம், புது வஸ்த்திரம், உபநயனம் செய்ய பூணூல் மற்றவர்கள் புது வஸ்த்திரம் கொண்டு வர வேண்டும்.*
*முன்பதிவு செய்ய:*
சமய, விஷேட தீட்சை நிர்வாண தீட்சை, ஆச்சார்ய அபிஷேகம் பெற விரும்புபவர்கள், ஸ்ரீநிதி சிவா +918870841903 அவர்களிடம் முன் பதிவு செய்யவும்.
*நமசிவாய வாழ்க.*

செவ்வாய், 12 அக்டோபர், 2021

அன்னதானம்

 திருமுறைகளில் காணும் பசி பிணியை நீக்கும் அன்னதானம்

பசி என்பது ஒரு வகை பிணி (நோய்) என்பது பெரியோர் வாக்கு. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்ற பழமொழியும் பசிப்பிணியை கருத்தில் கொண்டே வழக்கில் உள்ளது. நம் வாழ்வில் என்றும் உணவு கிடைத்து பசியி்ல்லாமல் இருக்க வழிபட வேண்டிய தலங்கள் பல உண்டு. தன்மீது அன்பு கொண்ட அடியார்கள் பசிப் பிணியால் துன்புறும் போது இறைவனே தானே முன்வந்தும், தன் அடியார்களைக்கொண்டும் பசியையும் போக்கிய அன்னம் பாலிப்பு என்னும் அன்னதானம் கண்ட தலங்கள் பல உண்டு. இதனை நம் திருமுறைகள் வாய்லாக காணலாம்.

 பண்டைய காலத்தில் திருக்கோயில் தலயாத்திரையாக செல்பவர்களுக்கு ஆலயங்களில் உணவளிக்கப்பட்டது இதனை சட்டி சோறு என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. திருமங்கை மன்னன், இளையான்குடி நாயனார், அமர்நீதி நாயனார்,அப்பூதியடிகள், மூர்க்க நாயனார், கலிகம்ப நாயனார் இடங்கழி நாயனார் ஆகியோர் அடியார்களுக்கு அன்னம் படைத்து இறைவனருள் பெற்றவர்கள். அடிகாயர்களுக்கு அன்னம் பாலிப்பதில் தன் குழந்தையைக் கூட உணவாக்கி கொடுத்தவர் சிறுத்தொண்டர் நாயனார்.

  திருவீழிமிழலை யில் ஒரு சமயம் பஞ்சம் ஏற்பட்ட போது இறையருளால் பலிபீடத்தில் அனுதினமும் பொற்காசு வைத்து, அப்பர் அடிகளையும், திருஞானசம்பந்த பெருமானையும் பசியால் வருந்தும் அடியார்களுக்கும் மக்களுக்கும் அமுது படைத்ததை திருவீழிமிழலை வரலாறும் நாயன்மார்கள் வரலாற்றிலும் காணலாம்.

  அனைத்து உயிர்களுக்கும்அமுதளிக்கும் இறைவனுக்கே அமுது படைத்து மங்காப் புகழ் பெற்றவரகள் காரைக்கால் அம்மையார்,கண்ணப்பர்,சிறுத்தொண்டர் மற்றம் அரிவட்ட நாயன்மார்கள் ஆவார்கள்.

 திருப்பைஞ்ஞலி 

 தனது அடியவர்கள் பசியால் துன்பப்பட்ட போது இறைவன் தானே உணவு வழங்கிய வரலாறும் உண்டு. அதில் ஒன்று திருப்பைஞ்ஞலி, இந்த தலத்தில் நாவுக்கரசர் சிவபெருமானுக்கு இறைவரே உணவு பெற்று வந்து உணவளித்தார் என்பது வரலாறு.

  திருக்குருகாவூரில் சுந்தரருக்கு இறைவன் அமுதும் நீரும் அளித்த தால் அவரைப்  " பாடுவார் பசி திர்ப்பார் பரவுவார் பிணி களைவாய் "என்று திருப்பதிகம் பாடி போற்றியுள்ளார்,

  திருக்கச்சூர்  என்ற இத்தலத்திற்கு திருக்கழுக்குன்றத்திலிருந்து வந்த சுந்தரர் இத்தலத்திற்கு வெகு தூரத்திலிருந்து நடந்து வந்த காரணத்தால் இளைப்பும், அதனுடன் பசியும்ேசர்ந்த  தள்ளாடிய படி கோவிலின் வெளியே உள்ள மண்டபத்தில் படுத்து கண்களை மூடுகிறார். அவருடன் வந்த பரிசனங்கள் இன்னும் வந்து சேரவி்ல்லை என்பதால் அப்படியேபசியுடன்  மண்டபத்தில் படுத்து விடடார். சுந்தரரின் நிலையைக் கண்ட இறைவன் கச்சபேஸ்வரர் ஓர் அந்தணர் உருவில் சுந்தரரின் தோளைத்தட்டி எழுப்பி, உட்காரச் சொல்லி வாழையிலை விரித்து அன்னம் பரிமாறி , குடிக்க நீரும் காெடுக்கிறார். அன்னம் பலவித வண்ணங்களில் வலவகை சுவையுடன் இருப்பதைக் கண்ட சு்ந்தரர் காரணம் கேட்கிறார். அதற்கு அந்த அந்தணர் சமைத்து உணவு கொண்டுவர நேரம் இல்லாததால் பல வீடுகளில் பிச்சை பெற்று வந்து உணவு கொடுத்ததாக கூறினார் அந்த அந்தணர். அந்தணரின் செயலில் நெகிழ்ந்து போன சுந்தரர் எதிரே இருந்த குளத்தில் கைகழுவிட்டு திரும்பி வந்து பார்த்தார் தனக்கு உணவு வழங்கி அந்தணர் இல்லை மாயமாய் மறைந்து விட்டார் , இதன் மூலம் இறைவனே தனக்காக நடந்து திருக்கச்சூர் வீதிகளில் தமது திருவடிகள் பதிய நடந்து சென்று பிச்சை பெற்று அன்னமிட்டதை நினைத்து இறைவன் கருணையை எண்ணி மனம் உருகி வியந்து " முதுவாய் ஒரு கதற " என்ற பதிகம் பாடினார்.

  குண்டையூரில் சுந்தரருக்கு நெல் கொடுத்தது. திருவாரூரில் பறைவையார் அடிகார்களுக்கு அன்னம் பாலிக்கவும், இல்லாதவர்களுக்கு உணவுக்காக நெல் வழங்கவும், இறைவரே குண்டையூரில் மலை மலையாக நெல்லை குவித்து, பின் சுந்தரர் வேண்டுகோளின்படி தனது சிவபூதங்களால் அந்த நெல் அனைத்தையும் திருவாரூரில் கொண்டுபோய் சேர்த்ததும் வரலாறு உண்டு.

  குருகாவூர் கட்டுச் சோறு சுந்தரருக்கு வழங்கியது , சுந்தரர் சீர்காழியிலிருந்து குருகாவூர் செல்லும் போது, பசி தாகங்களால் வருந்தி இருந்தபோது, சிவபெருமான் சுந்தரரும் அவர்கள் அடியார்களும் செல்லும் வழியில் ஒரிடத்தில் நீர் நிலையினையும், அமைத்து, அதில் இளைப்பார அமரச் செய்து கட்டுச் சோறும், நீரும், நிழலும் கொடுத்து மறைந்தார் என்பது வரலாறு.

  பசிப்பிணியை போக்க இவ்வாறு அடியார்களுக்கு உணவு அளிக்க இறைவனே தானே பிச்சை பெற்றும், பொருள் வழங்கியும், அன்னதானம் செய்ததையும் திருமுறைகளிலும், நாயன்மார்கள் சரித்திரத்திலும் புராணங்களிலும் காணலாம்.

திருச்சிற்றம்பலம்

அன்னாபிசேக பூசை

 அன்னாபிசேக பூசை



ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது. அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்தமாக சமைக்கப்பட்ட சாதத்தால் இறைவனை அலங்கரிப்பது இதன் சிறப்பம்சமாகும்.

பிரசாதத்தின் பெருமை “அன்னம் பரப்பிரம்மம்" என்பர். உணவை இறைவனாகப் பார்க்கிறது ஆன்மிகம். உடலை வளர்ப்பதுடன், உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம் தான். இதனால் தான், ஐப்பசி பவுர்ணமி அன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப் படுகிறது. பிரசாதத்தை “ப்ர+சாதம்" என சொல்ல வேண்டும். “சாதம்" சாதாரண உணவு; “ப்ர" என்றால், கடவுள். அதுவே கடவுளுக்கு படைக்கப்பட்டு விட்டால், அதிலுள்ள தோஷங்கள் விலகி, “பிரசாதம்" ஆகி விடுகிறது. இதனால் தான், சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தி, உணவளித் தனர்.

               தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் தமிழ்நாட்டில் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அன்னாபிஷேகம் பிரசித்தி பெற்றது. அங்குள்ள பெருவுடையாருக்கு நூறு மூடை அரிசி சமைத்து அபிஷேகம் செய்தனர். ஐப்பசி சதயத்தில் தான், ராஜராஜ சோழனுக்கு பிறந்தநாள் வருகிறது. அதை முன்னிட்டு, இந்த தர்மத்துக்கு அவன் ஏற்பாடு செய்திருக்கலாம். கால வெள்ளத்தில், இது எல்லா சிவாலயங்களுக்கும் பரவியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. கங்கை கொண்ட சோழபுரம் ராஜராஜசோழனின் மகனான ராஜேந்திர சோழனும் தன் தந்தையைப் போன்றே கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரம்மாண்டமான சிவாலயத்தை கட்டியுள்ளான். இங்குள்ள இறைவனுக்கும் பிரகதீஸ்வரர் என்ற நாமத்தையே சூட்டினான். இங்கு சோழர் காலத்தில் சிறப்பாக நடைபெற்ற அன்னாபிஷேகம், காலப்போக்கில் மறைந்து போனது. தற்போது, காஞ்சிப்பெரியவர் வழிகாட்டுதலின்படி மீண்டும் அன்னாபிஷேகம் நடந்து வருகிறது. சுமார் பதின்மூன்றரை அடி உயரமும் அறுபது அடி சுற்றளவும் கொண்ட இந்த சிவலிங்கத் திருமேனிக்கு, 108 மூட்டை அரிசி அன்னமாக சமைக்கப்பட்டு அன்னா பிஷேகம் நடைபெற்றது. பின்னர் இறைவனுக்குப் படைக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது. கங்கை கொண்ட சோழபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் கூடி அன்னாபிஷேகத்தை தரிசித்து மகிழ்ந்தனர். இந்த அன்னாபிஷேக நாளன்று இறைவனைத் தரிசித்து பிரசாதத்தை உட்கொண்டால் உணவுக்கு பஞ்சம் ஏற்படாது என்பது அனைவரின் நம்பிக்கை.

     அன்னபிஷேகத்தை கண்டவர்களுக்கு தான் சொர்க்கம் கிடைக்கும் என்பதை உணர்த்தும் வகையில் தான், ‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்ற பழமொழி கூறப்படுகிறது.


அன்னபிஷேகத்தை கண்டால் தொழில், வியாபார பிரச்னைகள் தீர்ந்து நல்ல லாபம் கிடைக்கும்.அன்னபிஷேக பிரசாதம் உண்டால் மங்காத தோற்றப்பொழிவு கிடைக்கும்.இந்த அன்னாபிஷேக அன்னம் இரண்டு நாழிகை அதாவது ஒன்றரை மணி நேரம் அப்படியே வைத்திருப்பார்கள். அந்த நேரத்தில் யஜுர் வேத பாராயணம், ருத்திரம், சமகம் ஆகியவை பாராயணம் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.


இந்த நேரத்தில் மிகவும் கதிர்வீச்சு இருக்கும் என்பதால் அந்த அன்னத்தை கோயில் குளத்தில் அல்லது ஆற்றில் கரைத்துவிடுவர். அது நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாகி விடும்.

   சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில் நிகழும் ஐப்பசி மாதம் 3ம் நாள்

( 20.10.2021 )புதன் கிழமை காலை சுமார் 10.00 மணி அளவில் திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு  மன்றம் மற்றும் சக்திபீட வழிபாட்டு மன்றத்தின் ஆன்மீகப்பணியின் தொடர்ச்சியாக  ஐப்பசி மாத பௌர்ணமி  அன்று  சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில் அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்மிகு இராஜகணபதிக்கும்,  அருள்மிகு கைலாய நாதருக்கு அன்னாபிசேக பூசையும்,  சக்திபீடத்தில் அமைந்துள்ள அம்மனுக்கும் பௌ ர்ணமி பூசையும் ,  ஐப்பசி மாத மகா அன்னாபிசேக பூசை வெகு சிறப்பாக இவ்வாண்டு தேவாரப் பாடல்களுடன், தமிழ்  அபிசேக ஆராதனையுடன் சிறப்பு பூசையாக,  அடியார்களின் கைங்கரியத்தால் நடைபெற உள்ளது.. 

      இங்கு நடைபெறும் பூசையில் அடியார்கள் தாங்களே அபிசேப் பொருட்களுடன் கலந்து பூசையின் முடிவில் அர்ச்சனை செய்து  கொள்ளுதல் மிக சிறப்பு.  இறைவனுக்கு தாங்களே மனம் , மொழி , மெய்யால் பணிவிடை செய்து தாங்களே பூவும் இலையும் கொண்டு இறைவிடம் வேண்டி தமிழால் அர்ச்சனை செய்யலாம். அவனை தீந்தமிழ் கொண்டு மனத்தால் நினைத்து, வாயால் அவன் புகழை போற்றி, மெய்யால் (கரங்களால்) பூ, இலை கொண்டு அர்ச்சித்து வணங்கி அருள் பெறலாம்.அவன் அருள் இருந்தால் தான் அவன் தாள் வணங்கி பூசையில் பங்கு கொள்ள முடியும். புண்ணியம் செய்தோரே  இதற்கு வாய்ப்பு கிடைக்கும்,

அன்னத்தின் பெருமை

 அன்னத்தின் பெருமை 



முனிவர் ஒருவர், ஒரு தேசத்தின் ராஜாவைச் சந்தித்தார். அவரை வரவேற்ற அவன், தனியறையில் தங்க வைத்து, சகல வசதிகளையும் செய்து கொடுத்து, சாப்பிட்டு விட்டுப் போகும்படி கட்டாயப்படுத்தினான்; முனிவர் மறுத்தார். இருப்பினும், நியமத்துடன் சமைத்துப் போடுவதாக வாக்களித்து, சமையலுக்கும் தனியாட்களை ஏற்பாடு செய்தான்; முனிவரும் சாப்பிட்டார். பலவகை உணவுகளால் வயிறு மந்தமாயிற்று; தூக்கம் வந்தது. சற்று நேரம் தூங்கி, பின் விழித்ததும், கண் எதிரே இருந்த சுவரில் ஒரு முத்துமாலை தொங்கியதைப் பார்த்தார். உள்ளே சென்ற உணவின் தாக்கமோ என்னவோ… அதை எடுத்து வைத்துக் கொண்டால் என்ன என்று முனிவருக்கு தோன்றியது. அதையெடுத்து தன் வஸ்திரத்தில் முடிந்து வைத்துக் கொண்டார். சற்று நேரம் கழித்து, ராஜாவிடம் விடைபெற்று, தன் ஆசிரமத்துக்குப் போய் விட்டார். அவர் சென்ற பிறகு தான், மாலை காணாமல் போன விஷயம் வெளிப்பட்டது. அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்தனர். அந்த அறைக்கு வந்து போன அப்பாவிகளுக்கெல்லாம் உதை விழுந்தது; ஆனால், அவர்களோ ஒரேயடியாக மறுத்தனர். முனிவர் மீது சந்தேகம் என்ற சிந்தனை கூட யாருக்கும் வரவில்லை. அவர் முற்றும் துறந்தவர் என்பதில் எல்லாருக்கும் முழு நம்பிக்கை. அன்றிரவு, முனிவருக்கு வயிறு, “கடமுடா" என்றது; கடும் பேதி. வயிறு குறைய, குறைய மனசும் பழைய நிலைக்கு வந்து விட்டது. “அவசரப்பட்டு தப்பு செய்து விட்டோமே… விசாரணையில் அப்பாவிகளெல்லாம் அடி வாங்கியிருப்பரே… என்ன நடந்தாலும் பரவாயில்லை. ராஜாவிடம் இதை ஒப்படைத்து, கொடுக்கிற தண்டனையைப் பெற்றுக் கொள்வோம்" என்று சென்றார். ராஜாவிடம் உண்மையைச் சொல்லி, மாலையை ஒப்படைத்தார் . “யாரோ ஒருவன் இதைத் திருடி உங்களிடம் ஒப்படைத்திருக்கிறான். அவனைக் காப்பாற்ற நீங்கள் திருடியது போல் நாடகமாடுகிறீர்கள். நீங்களாவது, திருடுவதாவது…இதைக் கேட்கவே மனம் சகிக்கவில்லை…" என்றான் ராஜா. அவ்வளவு நம்பிக்கை! முனிவரோ, தன் கருத்தில் விடாப்பிடியாய் நின்றார். ராஜா அவரிடம், “நீங்கள் சொல்வது உண்மையாயினும், அதற்கும் ஒரு காரணம் இருந்திருக்க வேண்டுமே… அதுபற்றி ஏதாவது உங்கள் பேரறிவுக்கு புலப்படுகிறதா?" எனக் கேட்டான். “மன்னா… நேற்றைய உணவை சமைத்தது யார்? அதற்கு பயன்படுத்திய பொருட்கள் எந்த வழியில் வந்தன என சொல்…" என்றார். “சுவாமி… திருடன் ஒருவன் ஒரு அரிசிக் கடையை உடைத்து மூடையை தூக்கிச் சென்ற போது, பறிமுதல் செய்த அரிசி அது. அரிசிக்குரியவர் உரிய ஆவணம் தராததால், அரண்மனை கிட்டங்கியில் சேர்க்கப்பட்டது…" என்றான். “பார்த்தாயா… திருட்டு அரிசியை சாப்பிட்டதால், திருட்டு புத்தி வந்துள்ளது…" என்றார் முனிவர். “அப்படியே இருந்தாலும் கூட, அப்படி ஒரு அரிசியை சமைக்க காரணமான நான் தான் குற்றவாளி…" என்ற ராஜா, முனிவரை அனுப்பி விட்டான். உணவு பயிரிடும் விதம், பயிரிடுபவர், சமைப்பவர் இவற்றைப் பொறுத்தே சாப்பாட்டின் தரம் அமையும். அதைச் சாப்பிடும் போது, அந்த குணநலன்கள் மனிதனை தாக்கும். அதனால் தான், இறைவனுக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகிறோம். பயிரிடும் போதும், சமைக்கும் போதும், சாப்பிடும் போதும் நல்லதையே சிந்தித்தால், நாம் உண்ணும் உணவே பிரசாதம் ஆகிவிடும்

சனி, 2 அக்டோபர், 2021

திருநீறு

 
திருநீறு


சைவ சமயத்தின் அடையாளங்களில் முதன்மையானதும் முக்கியமானதும், எளிமையானதும் திருநீறு ஆகும். இது தன்னவர்களுக்கு வழங்கியுள்ள மிக உயர்ந்தும் எளிமையானதும் ஆன பொதுக் கொடை திருநீறு என்ற விபூதியாகும. இறைவன் கருணையாகிய பராசக்தியின் வடிவம் இது ஆதலின் இது நமக்கு உயர் பெருங்கொடையாக உள்ளது. எங்கும் எப்போதும் ஒன்றும் கொடுக்காமலேயே இலகுவிற் பெறக் கூடியதாய் இருத்தலின் இது எளிமையானது, சைவசமயத்தவர் என்றுளள ஒவ்வொருவரும் தராதர வேறுபாடின்றி தம் உடைமையாக கொள்வதற்கு உரியது. ஆதலின் இது அனைவருக்கும் பொது உடைமையாக உள்ளது. இதனை ஏற்று அணிந்து கொள்ளாத எவருந் சைவர் ஆகார்.
திருஞான சம்பந்தரின் திருநீற்றுப் பதிகமும் அகத்தியர் தேவாரத்திரட்டில் பதிவாக முக்கிய இடத்தை பெற்ற பதிகம் இப்பதிகத்திலிருந்து திருநீறு பராசக்தியின் வரலாறு கண்டறிப்படுகிறது.
சம்பந்தர் இப்பதிகத்தில் திருநீற்றினை சிறப்பியல்புகளாக ஐம்பத்திநான்க குறிப்பிடுகிறார். அவற்றில் அதிக பாகங்களானவை சிவசக்தியின் குணங்களாகும். சம்பந்தர் திருநீற்றை மந்திரமாகஇனங்கண்டுள்ளார். சிவசக்தி தானே பிரேரித்து தானே அதிட்டித்து கொண்டிருக்கிறது. அதாவது அதனை தனது பூரண கட்டுப்பாட்டில் அல்லது செல்வாக்கில் இயங்க வைத்திருக்கின்றது என்று அறியப்படும்.
முத்தி தருவது திருநீறு, போதந் தருவது திருநீறு என்பனவும் நோக்கத்தகும். வீடு -பேறு போதம்- ஞானம் இரண்டும் சிவசக்தி ஒன்றால் அன்றி வழங்கப்படுமாறில்லை.
ஆகையால் நாம் திருநீறு அணிகிறோம் எனில் சிவனருளாயே சிவசக்தியை அணிகிறோம் என்பதே அதன் தாற்பறியமாகும். எங்கள் நெற்றி முதலாம் உறுப்புகளில் திருநீறு அணிவதால் அவ்வுறுப்புக்கள் சிவசக்தி உறையும் பரிசுத்த நிலையங்களாக்கப்படுகிறது. திருநீற்றை அணிகையில் சிவ சிவ என்ற மகா மந்திரத்தை உச்சரிக்கிறோம் இம் மந்திரம் சிவ சக்தியை ஆவாஹனம் செய்வதற்கான மந்திரமாகும். இதனால் சக்தி பிரசன்னமாதல் என்பது தயிரில் நெய் போல நீற்றில் விளங்கி தோன்றுதல் என்பதாம்.
நாம் விபூதி அணியும் இடங்களில் நெற்றி - நமது சிந்தனைக்கும் , நெஞ்சு - உணர்வுகளுக்கும் இடமாகிறது.
சைவ அனுஸ்டான விதிப்படி திருநீறு அணிதல் அதில் சிவசக்தி பிரசன்னமாக உதவுகின்றது. அத்துடன் நீறே சிவ சக்தி என்ற ஒருமைப்பாட்டை உறுதி செய்யும்நடைமுறை ஆகிறது. இதனால் அமையும் அம்சங்கள்
1, கையிற் கொண்ட திருநீற்றில் சங்கிதா மந்திரம் உச்சரிக்கப்படுவதால் மந்திரசக்தி பிரசன்னமாகிறது.
2. குழைக்கப்பட்ட விபூதி உச்சி, நெற்றி என16 இடங்களில் அணியப்படுவதால் சிவசக்தி சிவானந்தம் அருளி, ஆணவ மலம் அழித்து பிறப்பொழிவின் இளைப்பாற வைத்து காத்து, படைத்தல் நிலைகளை நிர்வகிக்கிறது.
இவ் விபூதி முக்குறியயாக அணியப்படுகிறது. இம்மூன்றும் முறையே கிரியா சக்தி, இச்சா சக்தி, ஞானசக்தி குறிக்கிறது. இது பராசக்தியின் குறிகளே. இதனால் நமது அன்னை உமாதேவி நம்மில் பிரசன்னமாயிருப்பதாக உணரப்படுகிறது. இதனால் நம்மின் மீது தீய சக்திகள் தொடரா வண்ணம் எதிர் சக்தியை விளைவிக்கும்.
சிவலிங்கத்தில் விபூதி அபிசேகம் செய்த விபூதி தெய்வீக தன்மையும், மெஞ்ஞானிகள் கையால் வழங்குப்படும் திருநீறும் இம் மகிமை பெறும். திலகவதியார் திருநாவுக்கரசருக்கு அணிவித்த விபூதி இதற்கு சான்றாகும். இது போன்றே ஆலய பூசகர் கையால் கொண்டிருந்த காலமும் உண்டு.
நமது சமயாசாரியர்ஒவ்வொரு வரும் திருநீற்றின் மகிமையை போற்றிப்பாடி அதனை பக்தி பூர்வமாக ஏற்றி அணியும் படி நம்மை உற்சாகப்படுத்தியுள்ளனர்.
" பூசில்தான் திருநீறே நிறையபூசி" என மாணிக்கவாசகர் கூறியுள்ளார் இதனை பூசாதிருப்பது இதன் மேல் ள்ள வேண்டா வெறுப்பு நிலையை காட்டுவதாகும். இது பராசக்தியின் இருப்பிடமென்பதை அறியாத மடமை யாகும். திருநீறும் சிவாலயமும் உள்ளத்துட் செற்ற புலையர் பாற் செல்லாதே என உமாபதி சிவம் அறிவுறுத்திகிறார்
திருநீற்றுக்கும் சிவலாயத்திற்கும் நெஞ்சில் உரிய இடம் அளிக்காதோர் தூய்மையற்றவர்,பாபகாரிகள் என்பது கருத்து.
மாணிக்க வாசகர்இதன் பொருளில் "வெண்ணீறு அணிகிலாதவரை கண்டா லம்மாநாமஞ்சுமாரே, " என்று அருளி செய்துள்ளார். பொதுவாக சகலராலும் அஞ்சப்படுவது நச்சுப்பாம்பு , கொடியகூரம்பு என்பதற்கு தாம் அஞ்சாதாராயினும் திருநீறு பூசத் தவறுஞ் சைவர்களைக் காண நாம் அஞ்சுவதாக இருக்கிறது.
சைவ உலகில் திருநீறு எங்கும் கிடைக்கத்தக்கது. இது எம்மார் வழிபட்டு வரும் பசுவின் சாணத்தை சுட்டெடுக்கும் நீறாகும். சைவர்கள் குடியிருக்கும் எல்லா இடங்களிலும் பசுக்கள் உள்ளன. இருந்தும் அதிர்ஸ்ட வசமாகவோ, துர்திர்ஸ்ட வசமாகவோ எங்கெங்கும் இது விலைக்கு விற்கப்படும் பொருளாய் விட்டது.
" ஆற்றல் அடர்விடை யேறும் ஆலவாயான் திருநீற்றை போற்றிபுகலி நிலாவும் பூசுரன் ....... வல்லவர் நல்லவர் தாமே " என்கிறார் நம் சம்பந்தர் சுவாமிகள்
திருச்சிற்றம்பலம்

எவ்வெவ் தெய்வம் வழிபடினும அருள் செய்பவர் சிவனே !


 எவ்வெவ் தெய்வம் வழிபடினும அருள் செய்பவர் சிவனே !



" யாதெரு தெய்வங் கொண்டீர்அத்தெய்வ மாகியாங்கே

மாதொரு பாகனார்தாம் வருவர் மற்றத் தெய்வங்கள்

வேதனைப் படும் இறக்கும்பிறக்குமேல் வினையுஞ் செய்யும்

ஆதலான் இவையிலாதான் அறிந்தருள் செய்வன் அன்றே ,,,,...... சிவஞான சித்தியார்


" ஈறிலாதவன் ஈசன் ஒருவனே " என்கிறார் திருநாவுக்கரசர்


நல்வினையுள்ளுஞ் சிறந்தது தெய்வ வழிபாடு, அது எவ்வாறு எனில் ஒழுக்கம் முதலிய நன்மைகளை உடையவராய் , தத்தம் மதத்திற் கேற்றவாறு, எவ்வெவ் வடிவாய், எவ்வெவ் வண்ணமாய் , எவவெவ் பெயர் கொண்டு, எவ்வெவ் தெய்வத்தை வழிபடினும் அவ்வெவ் வடிவாய், எவ்வெவ் வண்ணமாய் , எவவெவ் பெயர் கொண்டு , அவ்வெவ் தெய்வத்தை தமது சக்தியால்( இறைவி) அதிட்டி நின்று அவ்வெவ் வழிபாடு கண்டு, அதனை ஏற்று அனுகிரகிப்பவர், முன்னைப்பழம் பொருட்டு,முன்னைப் பொருளாகிய சிவபெருமான்ஒருவரே,

எவ்விடத்து யாதொரு தெய்வத்தை பொருளாகக் கொள்ளினும், அவ்விடத்து அவ் வழிபாட்டை அறிந்து உயிர்களுக்கு பலனை கூட்டுபவர். அச் சிவபெருமானர் ஒருவரே,ஏனைய தெய்வங்கள் சுதந்திர அறிவின்மையால் தாமே பலன் கொடுக்க மாடடா. எத்தெய்வத்தை வழிபடினும் அவ் வழிபாட்டிற்கு சிவபெருமானே பலன் தருவார்.

அவ்வாறாயின், பிற தெய்வ வழிபட்டவர்க்கு அவ்வத் தெய்வமே எதர் தோன்றி நின்று பலன் கொடுத்ததே என நூல்களிற் கூறப்படுகின்றதே யெனின் அன்றுஅரசன் ஆணையே மந்திரி முதலாயினோர் மாட்டு நின்று பிறர்க்கு பலன் கொடுக்குமாறு போல சிவபெருமானே தமது ஆணையை தம்ஏவர் வழி நிற்கும். அவ்வவ் கடவுள் மாட்டு , அவரோடு நின்று பலன் கொடுப்பார். அங்ஙன மின்றி அக்கடவுள் பிறருக்கு பலன் கொடுத்தல் ஒருபோதும் பொருந்தாது. அது அரசர் ஆணையை மீறியது போன்றே.

பிற தெய்ங்கள் அனைத்தும் பிறப்பு இறப்புக்குஉட்பட்டவை யாதலால் அது பசுவர்க்கமாகும். எனவே அவ் வழிபாட்டால் கிடைப்பது பசு (உயிர்) புண்ணியமே, பதி புண்ணியமன்று, பதியாகிய சிவனை நோக்கி வழிபாடே பதி புண்ணியம். எனவே ஏணைத் தெய்வங்களை யே முழுமுதற் கடவுள் என்று எண்ணி செய்யும் பசு புண்ணியம் சிவ புண்ணியமாகாது. எனவே ஏனை சிறு தெய்வ வழிபாடுகளையும் சிவபெருமானே ஏற்றுக் கொண்டு பலன் தருவார். என்பதால் நேரிடையாக சிவபெருமான் திருவடியை வழிபடுதலே நல்ல அறமாம்.மற்றவை வீண் செயலாகும்.

தொகுப்பு : சிவ, பூமாலை, திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு மன்றம்

திருச்சிற்றம்பலம்