வெள்ளி, 25 ஜூன், 2021

கடவுளை விட குருவே உயர்வானவர்

 

கடவுளை விட குருவே உயர்வானவர்

கடவுளை விட குருவே உயர்வானவர் என்பதை விளக்கும் ஆன்மிக கதையை படியுங்கள்.


கடவுளை விட குருவே உயர்வானவர்

ஒரு சீடனின் வீட்டுக்கு கடவுளும் சீடனின் குருவும் வருகை தந்தனர். கடவுளையும், குருவினையும் ஒன்றாகப் பார்த்த சீடன் உடனடியாக கடவுளின் அருகில் சென்று அவரின் பாதத்தை தொட்டு வணங்கச் சென்றான்.

உடனே கடவுள் அவனைத் தடுத்து, “முதலில் நீ உன் குருவை வணங்கு” என்றுச் சொன்னார்.


சீடன் குருவினை பணியச் சென்ற போது, “சீடனே, நான் உன் வீட்டுக்கு கடவுளை அழைத்து வந்திருக்கிறேன், அதனால் நீ கடவுளைத்தான் முதலில் வணங்க வேண்டும்” என்றுச் சொன்னார்.


குருவின் உபதேசத்தைக் கேட்ட சீடன் மீண்டும் கடவுளின் அருகில் சென்று அவர் பாதம் பணிய முயன்றான்.


”அப்பனே, உன் வாழ்க்கையில் கடவுளை கொண்டு வந்தவர் உன் குருதான். அவர் தான் என்னை அடைவதற்கு உரிய வழியைக் காட்டி உனக்கு அருளினார், ஆகையால் அவரையே நீ முதலில் வணங்க வேண்டும், ஆகவே நீ அவரிடம் சென்று அவரின் ஆசியைப் பெறுவாயாக “ என்றார் கடவுள்.


சீடன் மீண்டும் குருவிடம் சென்றான்.


“சீடனே ! நான் தான் கடவுளை அடைய வழி காட்டினேன் என்றாலும், அவர் தான் அனைத்துக்கும் பொறுப்பானவர், ஆகவே நீ முதலில் கடவுளிடம் ஆசி பெறுவதுதான் சிறந்தது” என்றார் குரு.


மீண்டும் கடவுளிடம் சென்றான் சீடன்“அப்பனே, அவர் சொல்வது எல்லாம் சரிதான். கடவுள் யார்? குரு என்பவர் யார்? என்று உனக்குச் சொல்ல விரும்புகிறேன்.


ஒவ்வொருவர் செய்யும் செயலுக்கேற்ற கர்ம வினைகளைப் பொறுத்து எந்த வித பாரபட்சமும் இல்லாமல் நான் மனிதர்களுக்கு சந்தோஷத்தையோ துக்கத்தையோ அளிக்கிறேன். நான் யாருக்கும் தீமையோ அல்லது நன்மையோ செய்வதில்லை. அவரவர் செய்யும் கர்மபலனைத்தான் அவரவர்களுக்கு வழங்குவேன்.


ஆனால் குரு என்பவர் அப்படியல்ல. அவர் தூய்மையானவர். எளிமையானவர். அன்பானவர். குருவினைத்தேடிச் செல்லும் சீடனை அவர் அப்படியே ஏற்றுக் கொள்கிறார். என்னை அடைய அவனுக்கு வழி காட்டி அருள்வார். அவன் எப்படி இருந்தாலும் அவனை அவர் நெறிப்படுத்தி விடுவார். சீடனின் கர்மபலன் அவனைப் பாதிக்காமல் காப்பார். அவனுடன் கூடவே இருந்து அவனுக்கு வழிகாட்டி அருள்வார். ஆனால் நான் அதைச் செய்வதே இல்லை. ஆகவே கடவுளை விட குருவே உயர்வானவர்” என்றார் கடவுள்.

அரசனும் முனியும்

அரசனும் முனியும்



திருச்சிராப்பள்ளியில் அரசு புரிந்த விஜயரங்க சொக்கலிங்கமென்னும் அரசன், தாயுமானவருக்கு, காஷ்மீரத்திலிருந்து வரவழைத்த விலையுயர்ந்த ஒரு சால்வையைப் பரிசளித்தான். தாயுமானவர் அதைப்பெற்று அரசனை ஆசீர்வதித்தார்.


ஒரு நாள் அவர் வீதி வழியே செல்லுகையில் பரஸ்திரீ ஒருத்தி கந்தைத் துணிகளைத் தரித்துக் கொண்டு குளிரினால் நடுங்கப்பெற்று வருந்தினாள். கண்ணுற்றதும் தாயுமானவர் மனம் அனலின்கண் மெழுகேபோல் உருகிற்று. தன்னிடமிருந்த சால்வையை அம்மாதுக்களிக்க, அப்பரத்தை அதை வாங்கிக் கொள்ள சிறிது அச்சமுற்றாள். ஆனால் தாயுமானவர் மிகவும் வணக்கமாய்ச் சால்வையைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்ட, அவளும் அதை வாங்கிக் கொண்டாள்.


இச்செய்தி அரசனுக்குத் தெரியவந்தது. மன்னன் கோபாக்கினியால் எரிக்கப்பட்டு “அளவற்ற விலை பெற்ற சால்வை யான் அளிக்க, அதைச் சிறிதும் அஞ்சாது தெருவின் கண் நின்ற ஒரு இழிய பரஸ்திரீக்குக் கொடுத்து என்னை மானபங்கம் செய்த காரணம் பற்றி தாயுமானவரை, கால்களையும், கரங்களையும் இறுகக்கட்டி என் முன் கொண்டு வருக” என ஆஞ்ஞாபித்தன்.


தாயுமானவர் தாம் எவ்வளவு மனக்களிப்புடன் சால்வையைக் கொடுத்தனரோ அவ்வளவு மகிழ்ச்சியுடன் அரசன் சமுகத்திற்கு வந்து நின்றார். உடனே மன்னன் கேட்டதாவது “உனக்குப் பரிசுகொடுத்த சால்வை எங்கே இப்பொழுது காணோமே” என்றான்.


தாயுமானவர் “நான் இவ்வண்டத்திற்கு மாதாவாகிய அகிலாண்டேஸ்வரிக்குச் சம்ர்ப்பித்தேன். அவளும் அதற்காகத் தங்களுக்கு க்ஷேமமே உண்டாகும்படி அநுக்கிரகித்தாள்.” என்றார். அரசன் உடனே தலை குனிந்து மானமடைந்து எதிரில் நின்ற முனியின் காலில் வீழ்ந்து மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டான்.


ஆதலால் யோகிகளுக்குக் கண்டனவெல்லாம் தெய்வமே. செய்யும் செய்கைகளெல்லாவற்றிலும் கடவுளையே காண்பார்கள்


குருவே தெய்வம்



நமக்கு வழிகாட்டுகின்ற நாம் வழிபடுகின்ற மதிப்பிற்குரியவராய் திகழ்பவர் குரு ஆவர், மானிடர் வாழ்வில் குருவின்படி நிலை மூன்று வகையாக பிரிக்கலாம். மானிடர் லௌவீக வாழ்வில் மானிடப்பிறப்பெடுத்த உயிருக்கு நல் வழிகாட்டியாக அமைவது ஒன்று தாய் தந்தையாகவோ, அல்லது மனைவியாகவோ அல்லது உடன்பிறந்தவர் களாகவோ இருக்கலாம். இவரும் இவ்வுயிருக்கு வாழ்க்கைக்கு வழிகாட்டும் குருவாகவே திகழ்வார்கள். அடுத்து கல்வி கற்பிக்கும் வித்தயா குரு என்ற ஆசான். இவரும் அவ்வுயிருக்கு குருவாகவே இருந்து அறிவுக்கலை வழங்கி குருவாக அமைவார்கள் ஆனாலும் அவர் ஞானத்தை பெறவிரும்பும் தருனத்தில் அக்குருவால் நமக்கு பயன்கிடைக்குமா? என்பது ஆதாரமற்றதே. நாம் ஞானம் அறிய விரும்பும் தருணத்தில் அமைவதே ஆத்மார்த்த தெய்வீக குரு. இவரே நாம் வழிபடும் குருவாக அமைவார். குரு என்னும் பதம் கு+ரு = குரு, கு என்றால் இருள், ரு என்றால் அருள், அதாவது கு என்னும் அசுத்தாவத்தையில் நின்ற உயிரினை "ரு " என்ற சுத்தாவித்தையில் நிலுத்துபவர் குரு. இதை செய்கிறவர் இறைவர், தெளிவினை கொடுத்து பிரகாசிக்கச் செய்பவர் எவரோ அவரே தெய்வீக குரு.

  குரு பிரம்மா, குரு விஷ்ணு, குருதேவா, குரு மகேஸ்வரா என்று தட்சிணாமூர்த்தியை விழிப்பது குருவே சிவமாகும் என்பதாகும். அவரே மானிட உருவம் தாங்கி உயிரின் ஆணவ மலத்தை நீக்கி, உயிரை இறையோடு கூட்டிவிப்பவரும் குருவே. இறைவழிபாட்டில் குரு, லிங்க, சங்கம, வழிபாட்டில் குரு வழிபாடு முதன்மையாகவே கொள்ளப்படுகிறது. குரு என்பவர் ஒரு ஆன்மாவிற்கு வழிபாட்டும் குருவாகவும். வத்தியா (கல்வி) குருவாகவும், தீட்சா குருாகவும் இருந்து ஆன்மாவிற்கு வழிபாட்டுகிறார்.

  கந்தர் அனுபூதியில் " குருவாய் வருவாய், அருள்வாய், குகனே" என வேண்டுகிறார். பன்னரும் வேதங்கள் படித்து உணர்ந்தாலும், குருவருள் இன்றேல் திருவருள் இல்லை  என்பது உறுதி, கேட்டுக் கல்லாத கல்வி சூட்டாலும் வராது என்பது முதுமொழி.

  பாலலினுள் வெண்ணெய் நெய், மோர் அடங்கி உள்ளன அவற்றை பாலிலிருந்து பெற வேண்டுமானால் உறை என்ற மோர் தேவை. பால் மனம்படைத்த சீடனுக்கு குரு மூர்த்தி  உறையாக இருக்கிறார். குரு ஆசியினால் சீடன் பாலில் தயிர் நெய், வெண்ணெய் பொங்கி வெளி வருவது போன்று அனைத்து ஞானங்களும் பெறுகிறான்.

  குருவை பின்பற்றி பரிபூரணமாய் சரணடைவதின் மூலம் சீடன் துன்பங்களின் அடிப்படை அகந்தையை நசுக்கி விடலாம் என்றுபகவான் ரமணர் கூறியுள்ளார்.

  குருவும், சீடனும்  பொருளால் வேறுபட்டு தத்துவத்தால் இருவரும் ஒன்றாகி குரு தன் சக்தியால் சீடனின்  " நான்" என்ற அகங்கார உணர்வை அழிக்க முனைகிறார். " "நான் " அழியத் தோன்றுவான் ஈசன்.

    தட்சணா மூர்த்தி முன் ஜனகாதி சீடர்கள் நால்வரும் அமர்ந்தனர். குரு தட்சண மூர்த்தி சின்முத்திரை காட்டி மௌனியாகவே இருந்தார். சீடர்கள் அதன் தெளிவை

 உணரப் பெற்றார்கள். தம்மை உணர்ந்ததை மானசரீதியாக  ஜீவாத்மா  பரமாத்மாவை கண்டு கொண்டது. 

   நம்மை நாமே உணர்ந்து கொண்டால் கடவுளை உணர்ந்தவர்களாவோம்.


 சிறியதில் பெரியது தோன்றல் / குருவே சீடனை குருவாக வணங்குதல்


  சீடன் மடியில் தலை வைத்து கண்ணயர்ந்தார் குரு. அவ்வேளை மானச ரீதியாக வழிபாட்டுக் கொண்டிருந்த சீடன் அவரது (குருவினது) தலையை மெதுவாக மடியில் இறக்கி திடீரென்று எழுந்து நின்று தன்உடையை சிவ சிவா என்று கசக்கி, விம்மி விம்மி அழுதார் பின் சரியாகி விட்டது என்று சொல்லி முன் போல் அமர்ந்தார்.  குரு திடீரென அதிர்ச்சி யுற்று நடந்ததை வினவ, சிதம்பரத்தில் ஆரூத்தர தரிசனம் நடக்கும்வேளை தீபத்தை சிதம்பரேசனின்  அன்மையில் வைத்து விட்டார் அர்ச்சகர். பெருமானின் ஆடையில் தீ பற்றிக் கொண்டதைக் கண்டேன் அதை என்கைகளால் கசக்கி தணிித்து விட்டேன் என்று சொல்லி குதூகலித்தார், குரு திகைப்புற்று இதன் உண்மையை அறிய ஒருவரை அனுப்பி நடந்தது உண்மைதான்என்பதை அறிந்தவுடன் குரு,  சீடன் பாதத்தில் விழுந்து வணங்கி நீர்தான் என்குரு என்றார். இதுவே சிறியது பெரியதாகிவிட்டது. சீடன் குருவானார்.

    உமாபதி சிவாச்சாரியார் குருவால் ஆட்கொள்ளப்படுமுன் ஆலயத்திலிருந்து பகலில் ஒருவர் தீப்பந்தம்ஏந்தி வர பல்லாக்கில் வந்தார். அதை கவனித்த மறைஞான சம்பந்தர்  " அதோ பட்ட கட்டையில்  பகல் குருடு போகிறது " என்று ஏழனமாய் கூறியது  உமாபதி சிவாச்சாரியார் ஞானத்தை தொட்டது. மறுகணமே பல்லாக்கிலிருந்து குதித்த உமாபதியார் மறைஞான சம்பந்தரின் காலில் விழுந்து  பணிந்து நீங்கள் என்குரு என்று கூறி குருவாய்ஏற்றார்.  இவரே கொடிக்கவி பாடி சிதம்பரத்தில் உற்சவ கொடி ஏறச் செய்தவர்.

  இறைவன் திருப்பெருந்துறையில் குருந்த மர நிழலில் எழுந்தருளி ,மாணிக்க வாசகருக்கு நயன தீட்சை கொடுத்து குரு அருளும், திரு அருளும் அருளினார். ஞானாசிரியர் வேடம் கொண்டு அடிகளாரை அடிமையாக்கவே இவ்வாறு மானிட உருவில் வந்தார்.

 இதுபோன்றே நரேந்திரரிின்  மலத்தை நீக்கி சுவாமி விவேகாந்தர் என்ற பெயருடன் இலங்கு குரு அருளும் திருவருளும் நல்கினார் இராமகிருஷ்ணர்.

   சீடர்களின் இன்னல்கள்,இடுக்கண்கள்,  நாேய்கள் , இவைகளை தாமே ஏற்று குணப்படுத்திய குரு நாதர் பலர் இப்புண்ணிய பூமியில் வாழ்ந்துள்ளார்கள். சித்த சுத்தியும், சுத்த புத்தியும், குரு காட்டிய வழியை பின்பற்ற வழிவகுக்கும்.

   அடியவர் வழிபாடும் அதன்வழி தோன்றலான குருவின் வழிபாடும் உண்மையில் பரம்பொருள் வழிபாடே.

  குருவே சிவனெக் கூறினான் நந்தி

 குருவே சிவனென்பது குறித் தோரார்

 குருவே சிவனுமாய் காேனுமாய் நிற்கும்   ....... திருமந்திரம்


எனவே இறைவனே குருவாக வந்து பதி, பசு , பாசம் இவைகளின் நிலையை க் காட்டி அதை நீீக்கி அருள் புரிவார்.


எல்லோருமே வீடுபேற்றை அடையலாம். அதற்கு குரு காட்டிய வழியில் செல்வது அவசியம். எல்லோரும் குருவாகி விடமுடியாது. சச்சிதானந்தமே குரு.


ஒருவனது தாய் உண்மையில் பிரம்மத்தின் வடிவம்தான். அவள் பிரம்ம மயமானவள். அவளே குரு.


ஒரே ஒருவர் தான் குரு.அவரே சச்சிதானந்தம்.


எல்லோருமே குருவாக இருக்க விரும்புகிறார்களே தவிர, சீடராக இருப்பதற்கு யார் விரும்புகிறார்கள்?


தூயமனம், தூயபக்தி, பிரார்த்தனை, குருவின் உபதேசம் முதலியவை பக்திக்கு மிகவும் அவசியமானவை.

சத்குரு ஒருவர் கிடைப்பாரானால் சீடனின் அகங்காரம் விரைவில் அடங்கிவிடும்.


பக்குவப்படாத குருவாக இருந்தால் குருவுக்கும் வேதனை; சீடனுக்கும் வேதனை.


பக்குவப்படாத குருவிடம் அகப்பட்டுக் கொண்டால் சீடன் முக்தனாக மாட்டான்.


குரு யாரோ அவரே இஷ்டதெய்வம். குருவே இஷ்ட தெய்வத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.


குரு சீடனின் கையைப் பிடித்து இறைவனைக் காணும் வழியில் சீடனை அழைத்து செல்கிறார்.

ஒருவனுக்கு குருவின் அருள் கிடைத்து விட்டால், அவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.

‘இந்தக்காரியங்களை செய். இவற்றை செய்யாதே’ என்று குரு உபதேசம் செய்கிறார். பிறகு அவரே பயன் கருதாமல் சில காரியங்களை செய்யும்படி உபதேசிக்கிறார்.


சீடன் சிறிதேனும் ஞானசாதனை பழகினால், குரு அவனுக்கு ஒவ்வொன்றையும் தானே விளக்குவார்.


குருவின் அருளால் மெய் ஞானம் பெற்ற பிறகும், ஒருவன் உலக வாழ்க்கையில் இருந்தபடியே ஜீவன்முக்தனாக வாழ முடியும்.


குரு, சாது, மகாத்மாக்கள் ஆகியவர்களைப் பார்க்க செல்லும் போது வெறும்கையோடு போகக்கூடாது என சாஸ்திரம் விதித்துள்ளது.


பலருக்கு குருஅவசியம். அதைவிட இன்றியமையாதது குருவின் வார்த்தையில் நம்பிக்கை.


குருவைக் கடவுளாகக் காண்பவன் வெற்றி அடைவான்.

எட்டு பந்தங்களான வெட்கம், வெறுப்பு, பயம், சாதிப்பெருமை, குலப்பெருமை, ஆணவம், துன்பம், இழிவுஆகியவற்றை குருவின் துணையில்லாமல் அவிழ்க்க இயலாது.


குருவின் உபதேசத்தைக் கேட்டதும் உண்மையான பக்தனின் மனம் சலனமின்றி ஒரே நிலையில் நிற்கும்.

உண்மையான பக்தன் குருவின் மொழியை நன்கு புரிந்து கொண்டு, அதை வாழ்க்கையில் கடைப்பிடித்து ஆற்றல் பெற்றிருப்பான்.


குருவிடம் இறைவனை அடையும் மார்க்கத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்.

தீட்சை தரும் குருவை சாதாரண மனிதனாக நினைக்கக்கூடாது. அவரை ஈசுவரனாகவே, இறைவனின் பிரதிநிதியாகவே நினைக்க வேண்டும்.


மனமுருகி இறைவனை அழைக்க வேண்டும். ‘என்ன செய்தால் இறைவனை அடையலாம்’ என்று குருவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.


குரு பூரண ஞானியாக இருந்தால்தான் சீடனுக்கு வழிகாட்ட முடியும்.

– ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகளிலிருந்து


திருச்சிற்றம்பலம் 


x

சிவபெருமானும் மாணிக்கவாசகரும்

  •  சிவபெருமானும் மாணிக்கவாசகரும்

  • சிவபெருமானும் மாணிக்கவாசகரும்

  • உயர்ந்த தத்துவங்களை எளிய உவமைகள் மூலம் விளக்குவதில் மாணிக்கவாசகர் வல்லவர். அவர் ஓர் அழகான கதை சொல்கிறார்:
  • எளிதில் உணவுப் பண்டங்கள் கிடைக்கின்றனவே என ஒரு கப்பலில் தங்கிவிடுகின்றன பறவைகள். உணவு கிடைக்காத சில சமயத்தில் வெகு தூரத்தில் பசுமையான மரங்கள் அடர்ந்த ஒரு கடற்கரை தென்பட்டால் அவற்றுக்கு எப்படி இருக்கும்? பசியையும் சோர்வையும் மறந்து ஆனந்தமாகக் கடற்கரையை நோக்கிப் பறக்கும் அல்லவா? இந்த நிலையை மாணிக்கவாசகர் வர்ணிக்கிறார்:

  • உரை மாண்ட உள்ளொளி உத்தமன் வந்துளம் புகலும்
  • கரை மாண்ட காமப் பெருங்கடலைக் கடத்தலுமே
  • இரை மாண்ட இந்திரியப் பறவை இரிந்தோடத்
  • துரை மாண்டவா பாடித் தோணோக்கம் ஆடாமோ. (பாடல் 326)

  • வர்ணிக்க முடியாத ஒரு பேரொளியாக இறைவன் என் உள்ளத்தில் வந்து அமர்ந்ததுமே, காமம் எனும் பெருங்கடலைக் கடந்துவிட்டேன். உடனே ‘இனி இங்கு நமக்கு உணவில்லை’ என இந்திரியங்களாகிய பறவைகள் என்னைவிட்டு ஓடிவிட்டன’ என்கிறார்.

  • *** உங்களுக்குப் பண்டமாற்றுமுறை தெரிந்திருக்கும். மாணிக்கவாசகப் பெருமான் தாம் ஒரு மோசடி வியாபாரம் செய்ததாகப் பெருமையடித்துக் கொள்கிறார்! அதுவும், இவர் யாரை ஏமாற்றினாரோ, அவரிடமே பெருமையடித்துக் கொள்கிறார்.
  • பயனற்ற பொருளை உன்னிடம் தந்து
  • விட்டு மிக உயர்ந்த பொருளைப் பெற்றுக் கொண்டுவிட்டேன். நான் எத்தகைய சாமர்த்தியசாலி!” என்கிறார்.

  • தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச்
  • சங்கரா ஆர் கொலோ சதுரர்
  • அந்த மொன்றில்லா ஆனந்தம் பெற்றேன்
  • யாதுநீ பெற்றதொன் றென்பால்
  • சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான்
  • திருப்பெருந்துறை உறை சிவனே
  • எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
  • யானிதற் கிலன் ஓர் கைம்மாறே. (395)

  • *** மாணிக்கவாசகரின் கற்பனை வளமும் நகைச்சுவையும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. ஓர் உதாரணம்: ‘நாம் ஏன் திருநீறு பூசிக் கொள்கிறோம்? நம் உடல், உள்ளம் இரண்டும் தூய்மை பெற்று சிவபெருமானின் அருளைப் பெறுவ
  • தற்காகத்தான். ஆனால் சிவபெருமான் எதற்காகத் தன்னுடல் முழுவதும் திருநீறு பூசிக் கொள்ள வேண்டும்? மாணிக்கவாசகர் காரணம் கூறுகிறார்:
  • ரசாயனப் பொருள்கள் எல்லாம் வருவதற்கு முன், சிறிது சாம்பலால் ஒளியிழந்த பொன் நகைகளை அழுத்தித் தேய்த்தால் அவை ஒளிரும். அதனால் நீதான் பொன்னார் மேனியன் ஆயிற்றே! உன் பொன்மேனிக்கு மேலும் மெருகூட்டுவதற்காகச் சாம்பலைப் பூசிக் கொண்டாய் போலும்!” என்கிறார்.

  • மாறுபட்டஞ்சென்னை வஞ்சிப்ப யானுன் மணிமலர்த் தாள்
  • வேறுபட்டேனை விடுதி கண்டாய் வினையேன் மனத்தே
  • ஊறு மட்டே மன்னும் உத்தர கோச மங்கைக் கரசே
  • நீறு பட்டேயொளி காட்டும் பொன் மேனி நெடுந்தகையே (114)

  • *** இன்னும் ஒரு கற்பனை. சிவபெருமான் தலையில் பிறைச்சந்திரனும் பக்கத்திலேயே கங்கையும் உள்ளன. அந்தக் கங்கையில் சந்திர பிம்பம் தெரிகிறது. இது ஈசனின் கழுத்திலுள்ள பாம்பைப் பார்த்துச் சந்திரன் பயந்து போய் நீருக்குள் ஒளிந்து கொண்டதுபோல் இருக்கிறதாம்!

  • கதியடியேற்குன் கழல் தந்தருளவும் ஊன் கழியா
  • விதியடியேனை விடுதி கண்டாய் வெண்தலை முழையிற்
  • பதியுடை வாளரப் பார்த்திறை பைத்துச்சுருங்க அஞ்சி
  • மதிநெடு நீரிற் குளித்தொளிக்கும் சடை மன்னவனே (146)

  • நீரில் ஒளிந்து கொண்டாலும் தன் ஒளி தன்னைக் காட்டிக் கொடுத்துவிடும் என்பது சந்திரனுக்குத் தெரியவில்லை. அதுதான் குறைமதியாயிற்றே!
  • இந்த இரு பாடல்களும் ‘நீத்தல் விண்ணப்பம்’ என்ற தொகுதியில் காணப்படுகின்றன. இந்தத் தொகுதியில் ஐம்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் அவர் சொல்வது இதுதான்! இறைவா, நான் உன்னை நம்பி விட்டேன். என்னைக் கைவிட்டுவிடாதே!” முதலில் பல பாடல்களில் ‘என்னை விட்டுவிடாதே!’ என்று கெஞ்சுகிறார். பிறகு மிரட்டுகிறார். எப்படி?

  • நாம் சொல்வதில்லையா ‘ஏய் தணிகாசலம், வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுக்காவிட்டால், நடுத்தெருவில் நின்று கொண்டு உன்னைக் கண்டபடி பேசிப்புடுவேன்’ என்று, அதே போல் மிரட்டுகிறார். ‘உன்னைக் குணமிலி – மானிடன் – தேய் மதியன்’ என்பேன்.
  • இது மட்டுமா? ‘நான் விந்தையாக எல்லோரும் சிரிக்கும்படி நடந்து கொள்வேன். ஊரார் என்னைப் பார்த்து ‘நீ யாருடைய ஆளப்பா?’ என்று கேட்டால், ‘நான் சிவனின் ஆள்’ என்பேன். அவர்கள் உன்னையும் பரிகசிப்பார்கள். உனக்கு இது தேவையா?’ என்கிறார்.

  • தாரகை போலும் தலைத்தலை மாலை தழலரப்பூண்
  • வீரவென் றன்னை விடுதிகண்டாய் விடிலென்னை மிக்கார்
  • ஆரடியானென்னின் உத்தர கோச மங்கைக்கரசின்
  • சீரடியாரடி யானென்று நின்னைச் சிரிப்பிப்பனே (152)

  • *** இன்னும் சொல்கிறார்: ‘நீ பித்தனல்லவா? கைலாச மலை எவ்வளவு தூய்மையாக வருடம் முழுவதும் ‘ஏர்
  • கண்டிஷன்’ செய்யப்பட்டு இருக்கிறது. அங்கேயே இருக்கக் கூடாதா? சுடுகாட்டின் நாற்றத்தில், எரியும் பிணங்களுக்கு நடுவே ஆடிக் கொண்டிருக்க வேண்டுமா? நீ நினைத்தால் விலையுயர்ந்த பட்டாடைகளை அணிய முடியாதா? யானை, புலித்தோலையும் அணிகிறாயே! அமுதை விட்டு நஞ்சை உண்டாயே!

  • சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பைத்
  • தொழும்பையும் ஈசற்கென்று
  • விரிப்பிப்பன் என்னை விடுதி கண்டாய்
  • விடின் வெங்கரியின்
  • உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன்
  • நஞ்சூண் பிச்சன் ஊர்ச்சுடுகாட்டு
  • எரிப்பிச்சன் என்னையும் ஆளுடைப்
  • பிச்சன் என்றேசுவனே. (153)

  • இவ்வளவு கடுமையாக இறைவனை ஏசியதும் அவருக்கு ஒரு பச்சாதாப உணர்ச்சி வந்துவிடுகிறது. உன்னையா நான் இப்படி ஏசினேன்! எனக்குத் தெரியாதா? நீ உலகையெல்லாம் காப்பதற்காக அல்லவா நஞ்சுண்டாய்? நான் ஏசினாலும், புகழ்ந்தாலும், உன்னையன்றி எனக்கு யார் உள்ளார்? என்னைக் கைவிட்டு விடாதேயப்பா!” என்கிறார்.

  • ஏசினும் யானுன்னை யேத்தினும் என்பிழைக்கே குழைந்து
  • வேசறுவேனை விடுதி கண்டாய் செம்பவள வெற்பின்
  • தேசுடையாயென்னை ஆளுடையாம் சிற்றுயிர்க்கிரங்கி
  • காய்சின ஆலமுண்டாய் அமுதுண்ணக் கடையவனே (154)

  • இந்தப் பகுதி மாணிக்கவாசகர் பக்தியின் ஆரம்ப நிலையில் இருந்தபோது பாடப்பட்டது. இந்த நிலையில் ‘என்னை விட்டு விடாதேயப்பா!’ என்று கெஞ்சுபவர், பக்தி முற்றிய நிலையில் என்ன கூறுகிறார் தெரியுமா? ‘நான் உன்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிட்டேன். என்னை விட்டுவிட்டு உன்னால் திமிறிக் கொண்டு ஓட முடியுமா?’ என்று சவால் விடுகிறார். ‘பிடித்த பத்து’ என்ற இந்தப் பதிகத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பாடல் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
  • பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
  • ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய
  • தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே
  • யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவதினியே (542)

  • பக்தி நிலையின் ஆரம்ப கட்டத்தில் தொண்டன் இறைவனுக்கு அடிமையாக இருக்கின்றான். இறுதியில் இறைவன் தொண்டன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வருகிறான்.

  • ஒருவரை மரியாதைக்கு வீட்டிற்கு அழைத்தால், அவர் மிகவும் சொந்தம் கொண்டாடிக் கொண்டு நம் இல்லத்திற்கு வந்து தங்கிக் கொண்டு நம்மைச் சிரமப்படுத்தினால் நமக்கு எப்படி இருக்கும்?
  • இதே நிலை – வாழ்க்கையே வெறுத்துப் போகும் நிலை – தனக்கும் ஏற்பட்டது என்கிறார் மணிவாசகர்.

  • நானேயோ தவஞ் செய்தேன் சிவாய நம எனப் பெற்றேன்
  • தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்
  • தானே வந்தெனதுள்ளம் புகுந்தடியேற்கருள் செய்தரன்
  • ஊனாரும் உயிர் வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே. (553)

  • ‘நான் ஒன்றும் பெரிதாகத் தவம் செய்யவில்லை. ஏதோ ‘நமசிவாய’ என்றேன். அந்த ஆள் என்னடாவென்றால், என் உள்ளத்தின் நடுவில் வந்து அமர்ந்துவிட்டான்: அது முதல் எனக்கு உலக வாழ்க்கையே வெறுத்துவிட்டது’ என்கிறார். ‘வாழ்க்கை வெறுத்துவிட்டது’ என்றால், நாம் முன் சொன்ன பொருளில் அல்ல.

  • ஒருவனுக்கு மிகவும் சிறந்த பொருள் ஒன்று கிடைக்கும்போது, அதற்கு முன் அவனிடமிருந்த சாதாரணமான பொருள்கள் எல்லாம் வெறுத்துப் போகின்றன அல்லவா? கந்தல் ஆடைகளே அணிந்து வருபவனுக்கு விலையுயர்ந்த புத்தாடைகள் கிடைத்தால் பழைய துணிகளை வெறுத்து ஒதுக்குவதில்லையா அது போல.
  • ஒரு கடை வாசலில் ஓர் அறிவிப்புப் பலகை. ‘இங்கு பொன்னும், வைரமும், முத்தும், பவளமும் மலை மலையாகக் கொட்டிக் கிடக்கின்றன. உங்களுக்குத் தேவையானவற்றை அள்ளிச் செல்லுங்கள். பதிலுக்கு நீங்கள் ஒன்றும் தர வேண்டாம். இங்கு வந்து வரிசையில் நின்றால் போதும்’ என்று எழுதி வைத்திருக்கிறது.

  • புத்திசாலிகள் முதலில் எந்தக் கடைக்குச் செல்வார்கள்? ‘மற்றதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். எல்லாப் பொருள்களையும் வாங்குவதற்குத் தேவையான பொன்
  • னும், மணியும் இங்கு ‘சும்மா’ கிடைக்கிறதே! அதனால் இதை முதலில் பெற்றுக் கொள்வோம்’ என்றுதானே நினைப்பார்கள்! மாணிக்கவாசகர் கூறுகிறார்:

  • காலமுண்டாகவே காதல் செய்துய்ம்மின் கருதரிய
  • ஞாலமுண்டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய
  • ஆலமுண்டான் எங்கள் பாண்டிப் பிரான் தன் அடியவர்க்கு
  • மூல பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமின்னே. (528)

  • ‘பண்டாரம்’ என்றால் பொக்கிஷம் என்று பொருள். இந்தப் பொக்கிஷம் எப்போதும் காலியாவதில்லை. ஆனால் – சீக்கிரம் வந்து வரிசையில் நின்றால் சீக்கிரமே வேண்டியதைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பலாம்.

  • *** இறைவனை அடைவதற்கு கர்ம, பக்தி, ஞான யோகங்கள் என மூன்று வழிகள் உள்ளன என்கிறது கீதை. மாணிக்கவாசகரின் வாழ்க்கையை இந்த மூன்று யோகங்களின் சங்கமம் எனலாம். வாழ்க்கையில் முதல் கட்டத்தில் அவர் மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்தார். அது கர்ம யோகம்.
  • மனிதனாகப் பிறந்தவர் ஒவ்வொருவரும் தம் கடமையைச் செவ்வனே, பயனில் நாட்டமில்லாமல் செய்தால் இறைவன் அருளைப் பெற முடியும். அந்நிலையில் இருந்த மாணிக்க
  • வாசகருக்கு முக்தி கிடைத்திருக்கும். ஆனால் இறைவனுக்கு அதில் உடன்பாடில்லை. அவர் திருவாசகம் என்னும் நூலை இயற்ற வேண்டும். அதனால் பல்லாயிரக்கணக்கானோர் உய்ய வேண்டும் என்பது இறைவனின் திருவுள்ளம். அதன் பொருட்டு விளைந்த ஈசனின் திருவிளையாடல்கள்தான்
  • ‘பிட்டுக்கு மண் சுமந்ததும்’ – ‘நரியைப் பரியாக்கியதும்’.

  • பக்திநிலை முற்றி ஞானநிலையை அடைந்ததும், ஞான க்ஷேத்திரமாகிய சிதம்பரத்துக்குச் சென்று தம் வாழ்
  • நாட்களின் கடைசிப் பகுதியை அங்கே கழித்தார் மணிவாசகப் பெருமான். அங்கும் சிதம்பரேசனைத் துதித்துப் பல பாடல்கள் இயற்றினார்.

  • ஒரு நாள் மாணிக்கவாசகரின் இல்லத்துக்கு வந்த இளைஞன் ஒருவன் அவரிடம், ‘ஐயா! நீங்கள் சிவபெருமானைப் பற்றி இனிமையான பல பாடல்கள் பாடியிருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். அவற்றையெல்லாம் தொகுத்து வைத்துக் கொண்டால் வருங்கால சந்ததியினருக்குப் பயன்படும் அல்லவா?’ என்றான்.

  • மாணிக்கவாசகர், அதற்கெல்லாம் எனக்கு எங்கே நேரம்?” என்று சொல்ல, வந்தவன் விடாமல் நீங்கள் சொல்லச் சொல்ல எல்லாப் பாடல்களையும் எழுதிக் கொள்கிறேன்” என்றான்.

  • அந்த இளைஞன் மாணிக்கவாசகரிடமே சில நாட்கள் தங்கி, திருவாசகம் முழுவதும் எழுதிக் கொண்டான். கிட்டத்தட்ட 660 பாடல்கள். பணி முடிந்ததும் அவரிடம் சொல்லிக் கொள்ளாமலேயே ஏட்டுக்கட்டையும் எடுத்துக் கொண்டு மறைந்துவிட்டான்.

  • மறுநாள் காலையில் நடராஜரின் சந்நிதிக் கதவைத் திறந்த தீட்சிதர்கள் பஞ்சாட்சரப் படியில் ஏட்டுக்கட்டு இருப்பதைக் கண்டார்கள். அதைப் பிரித்துப் பார்க்க, திருவாசகம் முழுவதும் அதில் எழுதியிருந்ததைப் படித்து மகிழ்ந்தார்கள். முடிவில் ‘மாணிக்கவாசகர் சொல்ல, அழகிய சிற்றம்பலக் கூத்தன் எழுதியது’ என ஒப்பமிடப்பட்டிருந்தது.
  • மாணிக்கவாசகரும் செய்தியறிந்து இறைவனின் கருணையில் திளைத்தார்.

  • பின்னொரு நாள் சிதம்பரத்திலுள்ள தீட்சிதர்கள் மாணிக்கவாசகரிடம் சென்று, ஐயா! திருவாசகம் முழுவதும் நாங்கள் மீண்டும் மீண்டும் படித்து இன்புற்றோம். அதன் வெளிப்பொருளை நன்கு உணர்ந்தோம். ஆனால், இத்தகைய தெய்விக நூலுக்கு நிச்சயம் ஓர் உட்பொருள் இருக்க வேண்டுமே! அதை எங்களுக்கு விளக்குங்கள்’ என்றனர். மாணிக்கவாசகர், ‘ஆம்! உட்பொருள் உண்டு. அதை உங்களுக்குக் காட்டுகிறேன். ஆனால், இப்போது அல்ல. உரிய நேரம் வரும்போது நானே உங்களை அழைத்துக் காட்டுகிறேன்’ என்றார்.

  • பல நாட்கள் சென்றன. மறுநாள் ஆனி மகம். முதல் நாள் மாலை மாணிக்கவாசகர் தீட்சிதர்களை அழைத்து ‘நாளை காலை தில்லையம்பலத்தானுக்கு வழிபாடு நடக்கும்போது கோயிலுக்கு வாருங்கள்’ என்றார். அதன்படியே அவர்கள் அனைவரும் சென்றனர்.

  • வழிபாடு முடிந்து ஆரத்தி காட்டும்போது மாணிக்கவாசகர் இறைவன் திருவுருவைக் காட்டி, ‘அதோ, கற்பூர சோதியுடன் சோதியாகக் கலந்து நிற்கிறானே. அவன்தான் திருவாசகத்தின் உட்பொருள்’ என்று கூறி, அக்கணமே அந்தச் சோதியில் கலந்து மறைந்துவிட்டார்







புதன், 23 ஜூன், 2021

குருவே தெய்வம்

 குருவே தெய்வம்

நமக்கு வழிகாட்டுகின்



ற நாம் வழிபடுகின்ற மதிப்பிற்குரியவராய் திகழ்பவர் குரு ஆவர், மானிடர் வாழ்வில் குருவின்படி நிலை மூன்று வகையாக பிரிக்கலாம். மானிடர் லௌவீக வாழ்வில் மானிடப்பிறப்பெடுத்த உயிருக்கு நல் வழிகாட்டியாக அமைவது ஒன்று தாய் தந்தையாகவோ, அல்லது மனைவியாகவோ அல்லது உடன்பிறந்தவர் களாகவோ இருக்கலாம். இவரும் இவ்வுயிருக்கு வாழ்க்கைக்கு வழிகாட்டும் குருவாகவே திகழ்வார்கள். அடுத்து கல்வி கற்பிக்கும் வித்தயா குரு என்ற ஆசான். இவரும் அவ்வுயிருக்கு குருவாகவே இருந்து அறிவுக்கலை வழங்கி குருவாக அமைவார்கள் ஆனாலும் அவர் ஞானத்தை பெறவிரும்பும் தருனத்தில் அக்குருவால் நமக்கு பயன்கிடைக்குமா? என்பது ஆதாரமற்றதே. நாம் ஞானம் அறிய விரும்பும் தருணத்தில் அமைவதே ஆத்மார்த்த தெய்வீக குரு. இவரே நாம் வழிபடும் குருவாக அமைவார். குரு என்னும் பதம் கு+ரு = குரு, கு என்றால் இருள், ரு என்றால் அருள், அதாவது கு என்னும் அசுத்தாவத்தையில் நின்ற உயிரினை "ரு " என்ற சுத்தாவித்தையில் நிலுத்துபவர் குரு. இதை செய்கிறவர் இறைவர், தெளிவினை கொடுத்து பிரகாசிக்கச் செய்பவர் எவரோ அவரே தெய்வீக குரு.

  குரு பிரம்மா, குரு விஷ்ணு, குருதேவா, குரு மகேஸ்வரா என்று தட்சிணாமூர்த்தியை விழிப்பது குருவே சிவமாகும் என்பதாகும். அவரே மானிட உருவம் தாங்கி உயிரின் ஆணவ மலத்தை நீக்கி, உயிரை இறையோடு கூட்டிவிப்பவரும் குருவே. இறைவழிபாட்டில் குரு, லிங்க, சங்கம, வழிபாட்டில் குரு வழிபாடு முதன்மையாகவே கொள்ளப்படுகிறது. குரு என்பவர் ஒரு ஆன்மாவிற்கு வழிபாட்டும் குருவாகவும். வத்தியா (கல்வி) குருவாகவும், தீட்சா குருாகவும் இருந்து ஆன்மாவிற்கு வழிபாட்டுகிறார்.

  கந்தர் அனுபூதியில் " குருவாய் வருவாய், அருள்வாய், குகனே" என வேண்டுகிறார். பன்னரும் வேதங்கள் படித்து உணர்ந்தாலும், குருவருள் இன்றேல் திருவருள் இல்லை  என்பது உறுதி, கேட்டுக் கல்லாத கல்வி சூட்டாலும் வராது என்பது முதுமொழி.

  பாலலினுள் வெண்ணெய் நெய், மோர் அடங்கி உள்ளன அவற்றை பாலிலிருந்து பெற வேண்டுமானால் உறை என்ற மோர் தேவை. பால் மனம்படைத்த சீடனுக்கு குரு மூர்த்தி  உறையாக இருக்கிறார். குரு ஆசியினால் சீடன் பாலில் தயிர் நெய், வெண்ணெய் பொங்கி வெளி வருவது போன்று அனைத்து ஞானங்களும் பெறுகிறான்.

  குருவை பின்பற்றி பரிபூரணமாய் சரணடைவதின் மூலம் சீடன் துன்பங்களின் அடிப்படை அகந்தையை நசுக்கி விடலாம் என்றுபகவான் ரமணர் கூறியுள்ளார்.

  குருவும், சீடனும்  பொருளால் வேறுபட்டு தத்துவத்தால் இருவரும் ஒன்றாகி குரு தன் சக்தியால் சீடனின்  " நான்" என்ற அகங்கார உணர்வை அழிக்க முனைகிறார். " "நான் " அழியத் தோன்றுவான் ஈசன்.



    தட்சணா மூர்த்தி முன் ஜனகாதி சீடர்கள் நால்வரும் அமர்ந்தனர். குரு தட்சண மூர்த்தி சின்முத்திரை காட்டி மௌனியாகவே இருந்தார். சீடர்கள் அதன் தெளிவை

 உணரப் பெற்றார்கள். தம்மை உணர்ந்ததை மானசரீதியாக  ஜீவாத்மா  பரமாத்மாவை கண்டு கொண்டது. 

   நம்மை நாமே உணர்ந்து கொண்டால் கடவுளை உணர்ந்தவர்களாவோம்.


 சிறியதில் பெரியது தோன்றல் / குருவே சீடனை குருவாக வணங்குதல்


  சீடன் மடியில் தலை வைத்து கண்ணயர்ந்தார் குரு. அவ்வேளை மானச ரீதியாக வழிபாட்டுக் கொண்டிருந்த சீடன் அவரது (குருவினது) தலையை மெதுவாக மடியில் இறக்கி திடீரென்று எழுந்து நின்று தன்உடையை சிவ சிவா என்று கசக்கி, விம்மி விம்மி அழுதார் பின் சரியாகி விட்டது என்று சொல்லி முன் போல் அமர்ந்தார்.  குரு திடீரென அதிர்ச்சி யுற்று நடந்ததை வினவ, சிதம்பரத்தில் ஆரூத்தர தரிசனம் நடக்கும்வேளை தீபத்தை சிதம்பரேசனின்  அன்மையில் வைத்து விட்டார் அர்ச்சகர். பெருமானின் ஆடையில் தீ பற்றிக் கொண்டதைக் கண்டேன் அதை என்கைகளால் கசக்கி தணிித்து விட்டேன் என்று சொல்லி குதூகலித்தார், குரு திகைப்புற்று இதன் உண்மையை அறிய ஒருவரை அனுப்பி நடந்தது உண்மைதான்என்பதை அறிந்தவுடன் குரு,  சீடன் பாதத்தில் விழுந்து வணங்கி நீர்தான் என்குரு என்றார். இதுவே சிறியது பெரியதாகிவிட்டது. சீடன் குருவானார்.

    உமாபதி சிவாச்சாரியார் குருவால் ஆட்கொள்ளப்படுமுன் ஆலயத்திலிருந்து பகலில் ஒருவர் தீப்பந்தம்ஏந்தி வர பல்லாக்கில் வந்தார். அதை கவனித்த மறைஞான சம்பந்தர்  " அதோ பட்ட கட்டையில்  பகல் குருடு போகிறது " என்று ஏழனமாய் கூறியது  உமாபதி சிவாச்சாரியார் ஞானத்தை தொட்டது. மறுகணமே பல்லாக்கிலிருந்து குதித்த உமாபதியார் மறைஞான சம்பந்தரின் காலில் விழுந்து  பணிந்து நீங்கள் என்குரு என்று கூறி குருவாய்ஏற்றார்.  இவரே கொடிக்கவி பாடி சிதம்பரத்தில் உற்சவ கொடி ஏறச் செய்தவர்.

  இறைவன் திருப்பெருந்துறையில் குருந்த மர நிழலில் எழுந்தருளி ,மாணிக்க வாசகருக்கு நயன தீட்சை கொடுத்து குரு அருளும், திரு அருளும் அருளினார். ஞானாசிரியர் வேடம் கொண்டு அடிகளாரை அடிமையாக்கவே இவ்வாறு மானிட உருவில் வந்தார்.

 இதுபோன்றே நரேந்திரரிின்  மலத்தை நீக்கி சுவாமி விவேகாந்தர் என்ற பெயருடன் இலங்கு குரு அருளும் திருவருளும் நல்கினார் இராமகிருஷ்ணர்.

   சீடர்களின் இன்னல்கள்,இடுக்கண்கள்,  நாேய்கள் , இவைகளை தாமே ஏற்று குணப்படுத்திய குரு நாதர் பலர் இப்புண்ணிய பூமியில் வாழ்ந்துள்ளார்கள். சித்த சுத்தியும், சுத்த புத்தியும், குரு காட்டிய வழியை பின்பற்ற வழிவகுக்கும்.

   அடியவர் வழிபாடும் அதன்வழி தோன்றலான குருவின் வழிபாடும் உண்மையில் பரம்பொருள் வழிபாடே.

  குருவே சிவனெக் கூறினான் நந்தி

 குருவே சிவனென்பது குறித் தோரார்

 குருவே சிவனுமாய் காேனுமாய் நிற்கும்   ....... திருமந்திரம்


எனவே இறைவனே குருவாக வந்து பதி, பசு , பாசம் இவைகளின் நிலையை க் காட்டி அதை நீீக்கி அருள் புரிவார்.

திருச்சிற்றம்பலம்