திங்கள், 19 ஆகஸ்ட், 2013

மயிலே தூது செல்லாயோ?


மயிலே தூது செல்லாயோ? மயிலே தூது செல்லாயோ - மால் மருகனிடம் சேதி சொல்லாயோ! உயிராய் என்னை உணர்ந்திருந்தான் - இந்த உலகம் தனைநான் மறந்திருந்தேன் ! இனிக்கவே பேசி எனக்கவர்ந்தான் - என்றன் எண்ண மெலாம் நிறைந்திருந்தான் ! கனிவாய் பேசிக் கவர்ந்திருந்தான் - அவன் நினைவால் நானு மறந்திருந்தேன் உண்ணவும் என்மனம் விரும்பவில்லை - இமை மூடினும் துயில்கொள்ள முடியவில்லை பண்ணும் எனக்கே இனிக்கவில்லை - ஆவின் பாலும் ஏனோ சுவைக்க வில்லை நடை தளர்ந்தேன் பண் பாடும்இழந்தேன் காண கண்ணும் தளர்ந்தேன் - உன்புகழ் கேட்கும் தயவிழந்தேன் தவிக்கிறேன் உன்தலைவனிடம் என்னிலை சொல்லோயோ

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

தென்பாண்டி நாட்டிலும் பஞ்ச பூதக் கோவில்கள்


பஞ்ச பூதக் கோவில்கள் சிறப்புமிகு ஐம்பெரும் பூதங்களையும் அவற்றின் தன்மைகளையும் சிறப்புகளையும் நாம் அறிவோம் இந்த ஐம்பெரும் பூதங்களின் தன்மையின் அடிப்படையில் ஆலங்கள் அமைத்துள்ளனர் நம் முன்னோர்கள் சிவலிங்கம் அகண்டமானது பிருதிவி ( மண்), அப்பு (நீர்), தேயு ( நெருப்பு) , வாயு ,ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களிலும் பரந்து விளங்குவதே சிவலிங்கம் ஆகும், இவ்வுண்மையை மக்கட்கு உணர்த்தும் பொருட்டு ஐம்பெரும் பூதங்களின் அடிப்படையில் ஐந்து தலங்களை அமைத்தனர், அவையாவன காஞ்சிபுரம், திருவாரூர் (மண்) , திருவானைக்கால் (நீர்) திருவண்ணாமலை (நெருப்பு), காளகஸ்தி (காற்று -வாயு) சிதம்பரம் ( வானம்) ஆகும், இவை அனைத்தும் தமிழ்நாட்டின் வடபகுதியில் அமைந்த ஆலங்கள் ஆகும், இவை போன்ற தென்பாண்டி நாட்டிலும் பஞ்ச பூதக் கோவில்கள் அமைந்துள்ளன, அவை சங்கரன்கோவில் - (மண்) தாருகாபுரம் - நீர் கரிவலம்வந்தநல்லூர் - நெருப்பு தென்மலை ( காற்று) இவை அனைத்துமே சிவன் கோவில்கள் ஆகும் சங்கரன்கோவில் ( மண் - பிருதிவி) இறைவன் : சங்கரலிங்கர் இறைவி : கோமதி அம்பாள் உயிர்கள் தோன்றுவதும் மறைவதும் மண்ணில்தான், மனிதன் நல்லவனாவதும் தீயவனாவதும் இம்மண்ணில்தான். இத்தகு மண்ணின் சிறப்பை உயர்த்த மண் தத்துவத்தில் கோவில்கள் அமைந்துள்ளன, இத்தத்துவத்திற்கிணங்க அமைந்ததுதான் சங்கரன்கோவில் என்ற சஙகரநயினர்கோவில் ஆகும், சங்கரரும், நாராயணரும் வேறுவேறு அல்லர், இருவரும் ஒருவரே என்பதை தேவிக்கு உணர்த்த மேற்கொண்ட வடிவமே சங்கரநாராயணர் வடிவம் ஆகும், இங்கு இறைவர் சிவன் பாதியாகவும், திருமால்(நாராயணன் ) பாதி உடம்பாகவும் மக்கட்கு காட்சி அளிக்கின்றனர், பாண்டிநாட்டின் அரசனான உக்கிரன் என்ற அரசனால் பாண்டியநாட்டின் தென்பகுதியில் அசிரீரி வாக்கு கேட்டு அம்மன்னன் புன்னவனக்காடாக இருந்தஇந்த இடத்தில் சிவாலயம் அமைத்து, அதற்கு ராஜகோபரமும், இறைவன் இறைவிக்கு தனித்தனி தேர்களும் உருவாக்கினான், இக்கோவிலில் ஒருநாள் தங்கினால் மோட்சம் அடைவர் என்றும் முற்பிறப்பு பாவம் நீங்கும் என்றும் மூன்று நாட்கள் தங்கினால் மறுபிறவி பாவங்களும் நீங்கும், இறைவியின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன் - விஷ்ணுவுடன் கூடியிருக்கும திருக்கோலத்தினை காட்டியருள வேண்டிக்கொண்டதன் பேரில் கோமதியம்மாள் பொதிகைமலை அருகில் ஒரிடத்தில் புண்னைமர வடிவில் தவமிருக்க வேண்டியதிற்கிணங்க ஆடித்தவசு கோலம் பூண்டு கடுந்தவம் புரிந்ததால் இறைவிக்கு சங்கரநாராயணனாக காட்சி அளித்து மறுபடியும் சிவ உருவத்தில் காட்சி அளிக்க வேண்டியதன் பெயரில் சங்கரலிங்கமாவும் காட்சி அளித்தார், இக்கோவிலில் ஆடித்தபசு திருவிழாவாகும் இவ்விழா ஆடித்திங்கள் பெளர்ணமியன்று நடைபெறும், இத்துடன் இங்கு சிறப்பாக நடைபெறும் விழா வசந்த உற்சவ திருவிழாவும் சிறப்பு பெறறது, தாருகாபுரம் - (நீர் - அப்பு) இறைவன் : மத்தியஸ்தநாதர், பிணக்கறுத்த பெருமான் இறைவி : அகிலாண்ட ஈஸ்வரி நீர் தத்துவத்தை உணர்த்தும் இத்திருக்கோவில் வாசுதேவநல்லூர் என்னும் ஊருக்கு தென்கிழக்கே சுமார் 6 கி,மீ. தூரத்தில் அமைந்துள்ளது,இங்குள்ள சிவலிங்கத்தின் அடியில் நீர் ஊற்று இருந்ததாகவும், அதனைக்கொண்டே இறைவனை திருமஞ்சன நீராட்டல் செய்தனர்என்றும் கூறப்படுகிறது, ஆனால் மீண்டும்மீண்டும் அந்நீரை திரும்ப திரும்ப பயன்படுத்துவது தகாது என அவ்வூற்றினை கல்கொண்டு மூடி விட்டனர், ஆயினும் இன்றும் இங்குள்ள கருவறை சுவர்கள் நீர்ப்பிடிப்புடனே தோன்றுகின்றன,இங்குள்ள தீர்த்தத்தில் கெளதமர், சனகாதியர் ,வசிட்டர், வால்மீகி அகத்தியர் போன்ற முனியவர்கள் தவம் புரிந்துள்ளனர் மூர்த்திகளில் மிகச் சிறப்புடையது அப்புலிங்கம் ஆகும், மத்தியஸ்தர் தென்னிந்தியாவை ஆட்சி செய்த சேர,சோழ பாண்டியர் நில வேட்கையால் ஒரு காலத்தில் மாறுபட்டனர் ஒருவருக்கொருவர் போரிட்டனர், அதைக் கண்ட இறைவன் இவர்களுக்குள் உடன்பாடு ஏற்படுத்த எண்ணி அகத்தியர் வடிவில் வந்து சேர நாடு, சோழநாடு, பாண்டியநாடு, எல்லைப்பகுதியினை வரையறுத்துக் கொடுத்து மத்தியஸ்தம் கொடுத்து பிணக்கினை தீர்த்தருளினார் இவ்வாலயம் தாருகாபுரத்திலிருந்து மேற்கே சமார் அரை கி,மீ, தூரத்தில் உள்ளது, இறைவர் பிணக்கறத்த பெருமாள் என்றும் காரணப்பெயர்களால் அழைக்கப்படுகிறது, இறைவி அகிலாணட ஈஸ்வரி தல விருட்சம் மா மரம் ஆகும், இது பழமைவாய்ந்த நில வருவாய் தவிர வேறு வருவாய் இல்லாத காரணத்தால் இக்கோவில் இன்னும் அபிவிருத்தி அடையவில்லை, இருகால பூசை மட்டுமே செய்யப்பட்டு வருகிறது, கரிவலம்வந்த நல்லூர் - (நெருப்பு) இறைவன் : பால்வண்ண நாதர் இறைவி : ஒப்பணையம்மாள் இக்கோவில் திருவண்ணாமலைக்கு நிகரானது, தென்பாண்டி நாட்டில் நிட்சேபநதி கிருபாநதி எனத்தெய்வத் திருநாமம் பெற்ற ஆறுகள் பாய்வதும் அரி, பரமன், தேவர், அகத்தியா, நாரதர், வசிட்டர் முதலியோர்களால் வழிபடப்பட்டதும், சிவபெருமான் நித்திய தாண்டவம் புரிய அம்பலமாகக் கொண்டதும் ஆன தலம் கரிவலம்வந்த நல்லூர் ஆகும, தென்பாண்டிய நாட்டில் இந்நகரில் ஆண்டு வந்த வரதுங்க பாண்டியன் என்பான் தனக்கு பத்திர பாக்கியம்இல்லாமை கண்டு மனம் மிக வருந்தினான், அப்பொழுது இறைவன் அவன் கனவில் தோன்றி மனக்கவலையை நீக்கும்படியும் தாமே அந்தியக்காலத்தில் அவனுக்கு செய்யவேண்டிய தகனக்கிரியைகளைச் செய்து முக்தி தருவதாக கூறி அதன்படி மன்னன் பால சந்நியாசியை ஞானாசிரியராகக் கொண்டு இல்லற ஞானியாய் விளங்கி , ஐந்தெழுத்து மந்திரத்தை உசசரித்து நிட்டை புரியலானான், அரசன் சோதியிற்கலந்தான் அப்போது அரசனுக்கு பிதுர்காரியம் செய்ய ஒருவரும் இல்லாத நிலை அறிந்து செய்வதறியாது திகைத்து நின்றனர், அப்போது பாலவண்ண நாதர் வயதோகிய பரம்மச்சாரி வேடத்தில் வந்து ஈமக்கிரிகளைச் செய்து மூன்று நாள் காரியமும் முடித்து கோவிலுள்ள கர்ப்ப கிரகத்திற்கு சென்று சிவலிங்கத்துடன் கலந்தார், இக்கோவில் சூரியன் பூசை புரிந்த இடம், அக்கினி பாவம் நீங்கப்பெற்ற இடம், அகத்தியர் பூசித்த தலம் போன்ற பெருமையுடையது, இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, இலங்கேசுவரர் ஆலயமும் உள்ளது, தல மரம் களாமரம், இங்கு காவடி திருவிழா மற்றும் அறுபத்துமூன்று நாயன்மார்கள் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, தேவதானம் ( வானம்) இறைவன் : நச்சாடைத் தவிர்த்தவர் இறைவி : தவம் பெற்ற நாயகி இத்தலம் சிதம்பரத்திற்கு நிகரானது, இறைவன் நச்சாடை தவிர்த்தவர், இறைவி தவம் பெற்ற நாயகி, இங்குள்ள சுவாமியை வேண்டி அம்பாள் தவம் புரிந்த இடம், திருக்கண்ணீஸ்வரரை வணங்கினால் முக்தி கிட்டும், பாண்டி சோழ மன்னர்களின் போர் நிகழ்வில் பாண்டியன் இறைவனை வேண்ட சோழன் தனது இரு கண்களையும் இழக்கவே, பின் சோழன் வேண்ட கண்பார்வை வழங்கி அருளினார், சோழன் பாண்டியனை வெல்லக்கருதிய போது அவனுடைய நச்சாடையை தவிர்த்து பாண்டியனை காத்தருளினார், ஐம்பூதக் கோவில்களில் இங்கு மட்டுமே கொடிமரத்ததின்கீழ் பெரிய ஆமை வடிவம் உள்ளது,சிவலிங்கம் மிக சிறியதாக அமைந்துள்ளது, இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது ,இக்கோவிலுக்கு சமீபத்தில் தான் அஸ்டபந்தன கும்பாபிசகம் நடைபெற்றது, தெனமலை - வாயு இறைவன் : திரிபுர நாதர் இறைவி : சிவபரிபூரணி இத்தலம் வாயுத்தலமாகும் காளகஸ்திக்கு நிகரனாது, இது கரிவலம் வந்த நல்லூருக்கு வடக்கே 5 கி,மீ, தூரத்தில் உள்ளது, இக்கோவில் மட்டும் கிழக்குக்கு மாறாக மேற்கு நோக்கி அமைந்துள்ளது, இங்கு அம்மன் சந்நிதி வாயில் தான் பிரதான வாயிலாக உள்ளது, முதலில் திரிபுரநாதரை வணங்கி பின் அம்பாள் சிவபரிபூரணியை வணங்க செல்ல வேண்டும், இங்குள்ள லிங்கமும் மாறுபட்டு காணப்படுகிறது, இங்குள்ள அகத்தியர் பீடத்தை வணங்கினால் தடைபெற்ற திருமணம் நடைபெறும் குழந்தை பேறு கிட்டும் பேறு பெற்றது, ஐம்பூதக் கோவில்களின் சிறப்பு: ஐம்பூதக்கோவில்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு பெற்றுவிளங்குகிறது, மகாசிவராத்திரி அன்று இவ்வைந்து கோவில்களுக்கும் சென்று வந்தால் அனைத்து நன்மைகளும் கிட்டும் ஒம் சிவ சிவ ஓம் - திருச்சிற்றம்பலம் வை.பூமாலை சுந்தரபாண்டியம்

புதன், 14 ஆகஸ்ட், 2013

பெரிய புராணத்தில் சுந்தரரும் தோழமையும்


பெரிய புராணத்தில் சுந்தரரும் தோழமையும் இளமைக்கே உரிய பண்புகள் பொருந்திய இளையரே சுந்தரரே பாட்டுடைத்தலைவனாக கொண்டது பெரிய புராணம், இது ஒரு பக்தி நூல்- அன்பு நூல் அன்பையே இறைவனாகக் கண்டார்கள் இந்துக்கள், அன்பின் நிறையுருவமாக இறைவனை சிவமாக கண்டார்கள் சைவர்கள், அன்பும் சிவமும் ஒன்றே - அன்பே சிவம் - என்கிறார் திருமூலர், அந்த அன்பின் நிறைவுருவமாக இறைவனை அன்பால் ஆராதித்த 63 நாயன்மார்களின் வரலாற்றை எடுத்துக் கூறும் ஓர் அன்பு காவியம் தான் பெரியபுராணம், இதில் கூறும் 63 பேரும் அன்பு வழி நின்ற சிவனடியார்கள், அந்த அன்பு கனிந்து முற்றி, பழுத்து - பக்தி -அன்பாக பர்ணமித்தருக்கிறது, இளமை காலத்தில் ஏற்பட்ட சோதனைகளை சாதனைகளாக மாற்றிவதை அடியார்களின் வாழ்வில் காணமுடிகிறது, சம்பந்தரின் இளமை துணிந்து நின்று சமண மதத்தை எதிர்த்து சைவத்தை பாண்டிய நாட்டில் தழைக்க செய்தது, பாட்டுடைத்தலைவனான சுந்தரரின் வாழ்ககையில் தன்னை கையாயத்தில் பரமனிடம் வேண்டிக்கொண்டதிற்கிணங்க ஆதிசிவன் பரமனும் இப்பூவுலகில் முதிய அந்தணர் வேடங்கொண்டு மணக்கோலத்திலிருந்த சுந்தரரிடம் நீ எனக்கு அடிமை என்று வழக்கு தொடுத்து சுந்தரரை ஆட்கொள்ள எண்ணிய பரமன் திருமணத்தை நிறத்தியோடு தன்னுடன் வழக்கு தொடுத்து அடிமைப்படுத்திய பரமனை தன்னுடைய செந்தமிழ் தோத்திர பாடல் களினால் பாடி அன்பு செலுத்தியதால் அந்த பரமனே சுந்தரரை தோழனாக ஏற்றுக்கொண்டார், நட்பின் மிகுதியால் தான் வேண்டுவன குறித்து வேண்டியும், துன்பம் வருங்கால் இடர் கலையார் என்றும் நீர் வாழ்ந்து போதிரே! என்று தயங்காமல் - கூறும் வன்தொண்டராக காண்கிறார், இறைவழிபாடானது வெறும் பூசித்தல், வாசித்தல், போற்றி பாடுதல், செபித்தல், ஆசையற்ற நல் தவம் மேற்கொளல் வாய்மை, அழுக்கின்மை ஆகியவற்றோடு வழிபட்டால் மற்றும் போதாது இறைவனை திருமூலர் கூற்றின்படி இறைவின் திருவருளை பெற பல வழிகள் உள்ளன, அவற்றுள் 1, சர்புத்திர மார்க்கம், - இறைவனை தந்தையாகவும் ஆன்மாவை புத்திரனாகவும் பாவித்து வழிபடுதல் - இது சம்பந்தர் வழி 2, தாச மார்க்கம் - இறைவனை ஏஜமானனகவும், உயிர்கள் பணியாளர்களாகவும் இருந்து வழிபடுதல் - இது நாவுக்கரசர் வழி 3. சக மார்க்கம் - இறைவனை தோழனாகக் கொண்டு வழிபடுதல் - இது சுந்தரர் வழி 4, - சன்மார்க்கம் - இறைவனை ஞானி - குருவாக கொண்டு ஆத்மா வை சீடனாக கொண்டு வழிபடுதல் - இது மாணிக்கவாசகர் வழி மேற்கண்ட வழிமுறைகளில் சுந்தரர் இறைவனை சமமார்க்கமான வழிமுறையில் உற்ற உயிர் தோழனாகவே கொண்டு அன்பின் வழியாக பக்தி கொண்டு, தனக்கு வேண்டுவனே கூறித்து வேண்டும் போதெல்லாம் வேண்டியும், வேண்டியனவற்றை பெற்றும், வழிபட்ட முறைகள் உற்ற நட்பிற்கு இலக்கணமாக அமைந்தது, தன்னை தடுத்தாட்கொள்வதற்காகவே வந்த அந்தணர் உருவிலான பரமனை நோக்கி தேவரீர்! பிராமண வடிவங் கொண்டு தமயேனை வழக்கினால் வெல்லுவதற்கு எழுந்தருளி வந்தமை அறியாத சிறியேனுக்கு பழைய அறிவைத் தந்து உலக வாழ்க்கையில் மயங்காமல் உய்யும்படி செய்தருளிய கடவுளே! அடியேன் உமது அநந்த குணங்களை எதையறியேன்? என்ன சொல்லி பாடுவேன்? என கேட்க அதன் பொருட்டு சிவனாரும் நீர் என்னை பித்தனென்று சொன்னயே எனவே பித்தனென்றே பாடுக! என்று சொல்லியருளியவுடன் சுந்தரரும் பித்தா பிறைசூடி பெருமானே என்று பாடியருளினார், பின் பல புண்ணிய யாத்திரியை மேற்கொண்டு விட்டு பரமனின் வேண்டுகோளின்படி திருவாரூர் வந்தடைந்தார், அவ்வண்ணம் திருவாரூரிலே குடிகொண்ட வன்மீகநாதர் தன் பக்தர்களிடம் நம்பியாரூரான் என் அழைப்பிற்கிணங்க இங்கு வருகின்றார் நீங்கள் அவனை எதிர் கொள்வீர் என பணிக்கிறார், இங்கு இறைவன் தனது பக்தன் தன்னை காண வந்தாலும் , இறைவர் சுந்தரரை தோழனாகவே கொண்டு தான் வரவேற்கும் முகமாக செயல் படுவதோடு வன்மீகநாதருடைய திருவருளினாலே நாம் உனக்கு தோழரானோம் என்று சுந்தரருககு கேட்கும்படியான அசிரீரி வாக்காகவே தெளிவாக்குகிறார், இதன் தன்மையாலேயே அன்றுமுதல் அடியார்கள் எல்லோரும் சுந்தரரை - தம்பிரான் தோழர் - என்று சொல்லிக் கொள்ளலானர் இறைவரும் பக்தரும், மனதால் கொண்ட அன்பின் மிகுதியால் வெளிப்படையாகவே தோழமை ஆகிவிட்டனர், இத்தருவாயில் கைலங்கிரியில் பார்வதி தேவியாரின் சேடியர்களில் ஒருவரான கமலினி என்ற மங்கை , பரவையாராக அவதரித்து பருவமங்கையராக, திருக்கோவிலியே தினசரி தரிசனம் பண்ணிவரும் பொழுது சுந்தரரும் பரவையாரும் எதிர் கொள்கின்றனர் இருவரும் முற்பிறவி அன்பு - காதல்- தொடர்பினால் காதல் வசப்படுகின்றனர் பரவையார் மேல் காதல் கொண்ட சுந்தரர் தனது காதலை வன்மீகநாதரிடம் பரவையாரை எனக்கு மணமுடித்து வைக்க வேண்டினார் அதன்படி தன் நண்பர் சுந்தரரின் வேண்டுகோளை ஏற்று தன் தொண்டர்கள் மூலம் மணமுடித்துவைத்து நட்பினை மிகைப்படுத்துகின்றனர் தோழர்கள் சுந்தரரின் காதலுக்கு தோள் கொடுத்த பரமன் - வன்மீகநாதர் பொருளாதார உதவிக்கும் உடன்படுகிறார், பரவையார் பங்குனி உத்திர திருவிழாவிற்கு சுந்தரரிடம் பணம் கேட்க, சுந்தரர் யாது செய்வதென அறியாது, சிவலாயங்கள் தோறும் பதிகம் பாடி வரும் காலத்தில் ஒரு திருக்கோவிலிலி துயில் கொள்ளும் போது தனக்கு தலையணையாக வைத்திருநத செங்கள் பொற்கற்களாக மாறியது இறைவன் அருளால் பெற்றது கண்டு மனம் மகிழ்கிறார், பரமன்பால் கொண்ட தோழமையால் தான் நொந்து உருகி வேண்டியதன் பலனாக நண்பரான பரமன் தனக்க பொற்கற்களை கொடுத்து பொருளுதவினார், அதுமட்டுமன்றி பின் திருமுதுகுன்றம் சென்று பதிகம் பாடி பன்னீராயிரம் பொன் பெற்று இதனை இறைவர் கூற்றுப்படி மணிமுத்த நதியிலிட்டு திருவாரூர் குளத்தில் போய் எடுத்துக் கொள் என்றபடி திருவாரூர் சென்று குளத்தில் தேடினார் நதியில் போட்டுவிட்டு குளத்தில் தேடினால் கிடைக்குமா? என்று ஏளன கோபம் கொண்டார் இருப்பினும் சுந்தரர் மனம் தளராது நண்பர் - இறைவரை வேண்டி மனமுறுகி பதிகம் பாடியதன் மூலம் பன்னீராயிரம் பொன்னும் கிடைக்கப் பெற்றார், பின் திருவொற்றியூர் சென்று சுவாமி தரிசனம் செய்யுங்காலத்தில் கைலங்கிரியில் அனிந்திதை என்ற மங்கை இங்கு சங்கிலியாராக தோன்றி, சுவாமிக்கு மலர் பணிவிடை செய்யும் வேளையில் சுந்தரர் சங்கிலியாரைக் கண்டார் சங்கிலியாரும் சுந்தரரின் ேம்ல் காதல் கொண்டார், இருவரும் சில சபதங்களுடன் மணமுடிக்கப்பெற்றனர் மணமுடித்து சிலகாலம் சங்கிலியாருடன் வாழ்ந்து வரும் காலத்தில் திருவாரூர் வன்மீகநாதர் சுவாமிகளை இவ்வளவு காலம் மறந்திருந்ததை நினைத்து மனமுருகி திருவாரூர் செல்ல முனைகையில் தனது சபத்தை மீறியமையால் சுந்தரர் கண்களை இழந்தார், இத்துடன் கொடிய நோய்களுடனும் அல்லல்கள் பல பட்டார், அப்போது தன் தோழர் வன்மீக நாதரை வேணடி என்னை மன்னித்து எனக்கு கண் தருவாயோ ! நீரோ முக்கண் கொண்டுள்ளீர் எனக்கு ஒரு கண்ணாவது தர உமக்கு மனம் வரவில்லையோ என தோழமையுணர்வுடன் கண்டிப்பது போன்று வேண்டினார் தோழன் அருளால் பார்வை கிடைத்தது,பின் பரவையாரை காண துடிக்கிறார் பரவையாரோ சுந்தரர் சங்கிலியாருடன் வாழந்ததையால் சுந்தரரை கணவராக ஏற்க மறுக்கிறார், எனவே சுந்தரர் தனது தோழனான பரமனை பரவையாரிடம் சென்று தன்னை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்காக பரவையாரிடம் தூதுவனாக செல்ல வேண்டுகிறார் தூது சென்றுவந்த பரமனும் பரவையார் தங்களை ஏற்க மறுக்கிறார் என்று கூறியவுடன் பரமனிடம் நானே சங்கிலியாரை ஊரறிய முறைப்படி மணம் முடித்துக்கொண்டவன் நீர் உமாதேவியாருடன் கங்கையை சடையில் மறைத்து வைத்திருக்கிறீர் இப்படி இருக்க நான் என்ன தவறிழைத்தேன் ஏன் என்னை பரவையாருடன் சேர்தது வைக்க முடியவில்லை என நண்பரோடு வாதம் செய்து அழுது புலம்பி தோழமையின் மிகுதியால் இருவரையும் பரமனே சேர்த்து வைக்கிறார், இவ்வாறு சகமார்க்கமாக இறைவனிடம் சுந்தரர் அன்புகொண்டு சுகவாழ்வு பெற்று முக்தியடைகிறார், இத்துடன் நட்பு பரமனிடம் இருந்தோடு இன்றி சேரமான் நாயனரையும் பரமன் மூலம் நட்பாகி இருவரும் பல புண்ணிய தலங்களுக்கு சென்று பின் தான் முக்தியடையும் காலத்தில் கைலியங்கிரியில் தன் நண்பரையும் சேர்த்து கைலாசம் சேர உதவினார், இதுவும் சுந்தரரின் தோழமை பாங்கிற்கு முத்தாய்ப்பாக அமைகிறது, திருசிற்றம்பலம்

திங்கள், 12 ஆகஸ்ட், 2013


திருநீறு தரும் பெருமை ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் ஏற்றனை ந்ந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே - திருமூலர் புலியோர்கோன் வெப்பொழித்த புகழியோர்கோன் கலல் போற்றி ஆழிமிசை கல்மிதப்பில் அமைந்தபிரான் அடிபோற்றி வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி ஊழிமலை திருவாதவூர் திருத்தாள் போற்றி - நால்வர் போற்றி உலககெலாம் உணர்ந்தோற் கரியவன் நிலவு லாகிய நீர்மலி வேணியன் அலகில ஜோதியன் அம்பலத்தாடுவான் மலர்சிலம்படி வாழ்த்தி வணங்கிடுவோம் - பெரியபுராணம் சேக்கிழார் திருச்சிற்றம்பலம் உலகலாவிய சமயங்களில் மிகவும் தொண்மைவாய்ந்தது இந்து சமயம் அதில் முதன்மையானது சைவமும் ஆகும், சைவமும் சிவமும் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டிருப்பது, சைவம் இல்லையேல் சிவம் இல்லை, இந்த சைவத்தின் முக்கிய ஆதார அடையாளமாக திகழ்பவை மூன்று அவை - 1) திருநீறு, 2) திரு ருத்திராட்சம், 3) திரு சடாமுடி இதில் திருநீறு என்பது எல்லோராலும் எளிதல் அணியக்கூடியது, அடுத்தது திரு ருத்திராட்சம் இது சற்று பக்குவம் அடைந்தவர்கள் மற்றும் சைவ மதத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள் மட்டும் அணிவதுண்டு, மூன்றாவதாக உள்ள சடைமுடி என்பது சைவத்தில் மிக பக்கவம் அடைந்தவர்கள் மற்றும் சித்தி யோக நிலையில் உள்ளவர்கள், மற்றும் துறவறம் பரிந்தவர்கள் தான் இதனை தரித்துள்ளனர் எனவே இது சிவயோக சித்தர்கள் ஞானிகள் மற்றும் எதிலும் பற்றற்ற நிலையில் உள்ளவர்கள் தான் இதனை கொண்டுள்ளனர் எனவே சைவத்தில் யாவராலும் எளிதில் அணியக்கூடியதும் எல்லோராலும் ஏற்று தினமும் புத்தம் புதியதாய் அணியக்கூடியதும் , திரு நீறு மட்டுமே, ஆடவருக்கு அழகு நெற்றியில் திருநீறு - மங்கையர்க்கு அழகு நெற்றியில் குங்கமும் ஆகும் இதனையே சுந்தரமூர்த்தி நாயனாரும் திருத்தொண்டத்தொகையிலும் மும்மையால் உலகயாண்ட மூர்த்திக்கும் அடிமை என்பதால் இந்த மூன்று அடையாளங்களுக்குள்ள பெருமை நன்கு விளங்கும், சைவ சமயத்தில் ஆண்டவனை துதிக்க தோத்திரப்பாடல்களால் தோத்திரம் செய்து வழிபாடுசெய்தல் என்பது முக்கியமானதாகும், இந்த தோத்திரபாடல்கள் தான் நம் நால்வர் தந்த தேவராம் திருவாசகம் திருமந்திரம் அடங்கிய பன்னிரண்டு திருமுறைகளாகும், இவற்றை முழுவதுமாக எல்லோராலும் பாட இயலாத நிலையில் இதனை சுருக்கி பஞ்சாட்சர மந்திரங்களால் இறைவனை துதிக்கப்படுகிறார்கள்,இதில் ஐந்தெழுத்து சிவமந்திரமான (ஒம்) நமசிவாய என்ற மந்திரமாகும், ஒம் என்பது பிரணவமந்திரமும் நமசிவாய என்பது சிவமந்திரமும் ஆகும், நமசிவய என்ற சிவமந்திரத்தில் தோன்றியது ஐந்து பஞ்சாட்சர மந்திரங்கள் நமசிவய, சிவயநம, யநமசிவ, மசிவயந,யநமசிவ, நமசிவய என்பது சூல பஞ்சார மந்திரம், சிவயநம என்பது சூட்சம மந்திரம், சிவசிவ என்பது அதி சூட்சம மந்திரம், இதில் எல்லாராலும் எளிதில் பயன்படுத்த தக்ககது சிவசிவ மந்திரமாகும் இதில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தைச்சேர்த்து ஒம் சிவசிவ ஓம் என்ற மந்திரம் ஒலித்து தோத்திரம் சொல்வது மிக்க நன்று, ஆகவே இறைவழிபாட்டில் தோத்திர மந்திரம் ஓதல், திருநீறு அணிதல் என்பன சைவத்தின் முக்கிய முதன்மை அடையாளமாக அமையும்,இந்த திருநீறு அணிதலில் திருநீரு பற்றி அதன் முக்கியத்துவத்திற்கும் அதன் பலன்கள் குறித்து திருஞான சம்பந்தர் பெருமான் அதற்கென ஒரு தனி பதிகமே பாடி திருநீருக்கு பெருமை சேர்த்துள்ளர்,ஞானசம்பந்தருக்கும் திருநீருக்கும் அவர் இளம்பருவத்திலிருந்தே அதன் பெருமை சிறப்படைந்துள்ளதை அவர்தம் வரலாற்று வழிமுறைகள் மூலம் அறியலாம், ஞானசம்பந்தர் சிறு கைக்குழந்தையாக இருந்தபோது அன்னாரின் தாயார் ஞான சம்பந்தருக்கு திருநீரு கொண்டு காப்புகட்டி தொல்லையிலிருந்து நீக்கம் பெற்றது அன்றார் கூறிய கூற்றின் வழியே அறியலாம், சிறுவயதில் சில நேரங்களில் பீீரிட்டு அழவதுண்டாம் ஆனால் உடனே அழகை நிறத்திவிடுமாம்,அண்ட அயலார் வீட்டில் உள்ளவர்கள் எங்கள் குழந்தைகள் யாவரும் அழும் போது அழுகை நிறத்தாமல் அழும் போது உங்கள் குழந்தைமட்டும் இதுமாதிரி இல்லாமல்உங்கள் குழந்தை மட்டும் இரவில் அழதாலும் உடனே நிறுத்திவிடுவதைக்கண்ட அண்டை அயலார் உங்கள் குழந்தைம்ட்டும் இரவில் அழதாலும் உடனே நிறுத்திவிடுகிறதே அதற்கு காரணம் யாது ? ஏதேனும் தாயத்து கட்டியுள்ளீர்களா? அல்லது மந்திரம் செய்துள்ளீர்களா? அல்து யாதனும் கயறு கட்டியுள்ளீர்களா?என்று வினவினார்களாம் அதற்கு பகவதியம்மையார் நான் எனது குழந்தைக்கு திருநீறு காப்பு அணிந்துள்ளேன் எனவேதான் குழந்தை அழதாலும் உடனே நிறுத்திவிடும் என்று திருநீற்றின் பெருமையினை அன்றே சிறப்பித்துள்ளார்கள். இதனையே சேக்கிழார் அவர்களும் தனது பெரிய புராணத்தில் திருநீறு காப்பு என்று பதிவுசெய்துள்ளார், திரு நீறு காப்பு பெருமை மற்றொரு வேளையில் திருஞானசம்பந்தர் சிவபெருமானிடம் முத்துக்களால் ஆன முத்துபல்லாக்கு, முத்துசிவிகை, முத்துஆபரணங்கள் பெற்று திருவாரூக்கு வருகை தந்தபோது, அங்குள்ள பெண்கள் எல்லாம் அவரை வரவேற்க நிறைகுடம் மணிவிளக்கு, மஞ்சள் குங்குமம் போன்ற மங்கல பொருட்களைக் கொண்டு வரவேற்க வந்தபோது, ஒரு பெண்மணி மட்டும் ஒரு தட்டில் நீறு கொண்டு வந்து சம்பந்தர் முன் வைத்தார்களாம் அவர் வேர் யாரும் அல்ல அன்னாரின் தாயரார் திலகவதியம்மார் தானாம், அப்போதும் ஞானசம்பந்தருக்கு திருநீறு மூலம் காப்பு கட்டு திருநீற்றின் பெருமையை பதிவு செய்தது வரலாறு கூறும், திருநீறு மந்திரமான பெருமை பாண்டியமன்னன் வெப்பு நோய் நீக்கி மருந்தாகிய பெருமை ஒருசமயம் பாண்டியநாட்டில் சமணமதம் வேரூன்றி சைவமதம் அழிந்துவரும் தருணத்தில்,சைவமதத்தினர் திருநீரு அணிந்தவர்களைக்கண்டாலே சமணர்கள் கண்டுமுட்டி என்றும் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கும் சமயத்தில்,இதனை மாற்றி சைவமதத்தை மறுபடியும் புத்துயிர் ஊட்ட சைவமத்தில் மாறா பற்றுடையவரான அந்நாட்டு அரசியார் மஙகையர்கரசியார் ஞானசம்பந்தரை பாண்டியநாட்டிற்கு வரவழைக்க ஏற்பாடு செய்தார், அதன் பொருட்டு ஞானசம்பந்தரும் பாண்டியநாட்டிற்கு புறப்பட்டு வந்தார், மதுரையம்பதியிலுள்ள ஒரு சிவமடலாயத்தில் தங்கியிருந்தார், இதையறிந்த சமணமதத்துறவிகள் ஞானசம்பந்தரை ஊரைவிட்டு விரட்டும் எண்ணத்தில் மந்திரங்கள் ஏவியும், பல இன்னாத வேளைகள் செய்தும் துண்பப்படுத்தினர், ஆனால் அவர்கள் ஏவிய மந்திரம் ஞானசம்பந்தரின் சிவபஞசத்திற்கு முன் பலிதம் ஆகவில்லை, எனவே சமணமத்தினர் வேறு வழியின்றி ஞானசம்பந்தர் தங்கியிருந்த சிவமடத்திற்கு தீ யிட்டனர், இதனால் அவருடன் இருந்த சிவனடிகள் பெரிதும் வெப்பு மிகுதியால் துண்புற்றனர் உடனே ஞானசம்பந்தரும் சிவமடத்திற்கு தீ யிட்டவர்களை விட்டுவிட்டு இதனையெல்லாம் கண்டுகொள்ளாதிருக்கும் மன்னர்தானே காரணம் என தாங்கள் படும் இந்த வெப்பின் கொடுமையை மன்னன் அனுபவிக்க வேண்டுமென மன்னனுக்கு வெப்புநோய் வர மந்திரம் ஏவினார், இதனால் மன்னன் அச்சனம் முதல் வெப்பு நோயால் துடிதுடித்தான் சமண அடியார்களை வரவழைத்து இதற்கு தீர்வு வேண்டினான், சமன துறவிகள் மன்னன் வெப்பு நோய் தீர மந்திர ஜபங்களை ஒதினர் ஆனால் யாதாலும் மன்னனின் வெப்பு நோய் பலிதம் ஆகவில்லை, உடனே மன்னனின் துணைவியார் மங்கையரசி மன்னனிடம் ஞானசம்பந்தர் என்ற சைவ சிவனடியார் வந்துள்ளார் அவரை அழைத்து இந் நோய்க்கு தீர்வுகாணலாம் என்று மன்னனிடம் வேண்டினார், மன்னரும் ஞானசம்பந்தரின் பெயரை கூறய உடனே தனக்கு நோய் தீர அறிகுறி தோன்றியது, எனவே ஞான சம்பந்தரை அரண்மனைக்கு வரவழைக்க உத்தரவிட்டார் இதனை சமணதுறவிகள் மிக எதிர்ப்பு தெரிவித்தனர், இருப்பினும் மன்னர் இதற்கு உடன்படாமல் வரவழைத்தார், ஞானசம்பந்தரும் வந்தார், மன்னனின் வெப்பு நோய்க்கு மருந்தாக திருநீறு பூச எண்ணினார் அப்போது மன்னரும் சமண மத்தினை சேர்ந்தவராகையால் சமணமத்தினர் திருநீரு பூச அனுமதிக்க வில்லை, எனவே மன்னர் எனது வெப்பு நோய் தீர வலபக்கம் சைவமதத்தின் மூலம் ஞானசம்பந்தரும், இடதுபக்கத்தினை சமண மததுறவிகள் மூலம் தீர்வு செய்ய வேண்டினார், சமண மத்தினரால் யாதும் செய்ய முடியவில்லை மன்னரின் வெப்பு நோயின் துன்பம் குறையவில்லை எனவே ஞானசம்பந்தரை வேண்டினார், உடனே சமணமதத்தினரால் திருநீறு பூச மறுக்கப்பட்டதால் உடனே மடப்பள்ளியிலுள்ள சாம்பலை பயன்படுத்தலாமா?என்று வினவ சமணமதத்தினர் அதற்கு சம்மதம் தெரிவிக்க உடனே மடப்பள்ளி சாம்பல கொண்டுவரப்பட்டு அந்த சாம்பலுக்கு திருநீற்று பதியம் பாடி சாம்பலுக்கு உரு ஏற்றி அந்த சாம்பலான திருநீற்றை மன்னனின் வலப்பக்கம் பூசினார், உடனே மன்னனின் வெப்பு நோய் வலப்பக்கம் பரிபூரண நிவாரணம் அடைந்தது, மன்னன் துன்பத்திலிருந்து விடுதை பெற்று, இடப்பக்கமும் திருநீறு பூச வேண்டி திருநீறு இடப்பக்கமும் அணிந்து முழு நிவாரணம் பெற்றான், இதிலிருந்து திருநீறு நோய் நீக்கும் மருந்தாக பெருமை கொண்டது, சமண சமயத்திற்கு சைவமத்திற்கு நடந்த போரட்டத்தில் வெற்றியும் கண்டது, ஞான சம்பந்தரின் திருநீற்று பதிகத்தின் மூலம் திருதரும் பெருமையினை காணலாம், மந்திரமாவது நீறு, வானவர் மேவது நீறு, சுந்தரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு, தந்திரமாவது நீறு, சமயத்தில் உள்ளது நீறு, வேத்தில் உள்ளது நீறு, வெந்துயர் நீக்குவது நீறு போகம் தருவது நீறு, புண்ணியமாவது நீறு ஒத தகுவது நீறு. உண்மை உள்ளது நீறு, முக்தி தருவது நீறு, முனிவர் அணிவது நீறு, சத்தியமாவது நீறு, கற்றோர் புகழ்வது நீறு பக்தி தருவது நீறு, பரவ இனியது நீறு. காண இனியது நீறு, கவினை தருவது நீறு, பேணி அணிவருக்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு, புண்ணியமாவது நீறு, மதியை தருவது நீறு இவ்வாறு திருஞானசம்பந்தர் திருநீற்றின் பெருமையை சிறப்பித்துள்ளார் திருநீரு அணிந்தால் சிவத்தின் அடிமை என்றும் திரு நீரே சிவமாக உள்ளதாக பெருமை பெருவது நீறு பாம்பாட்டி சித்தர் பாம்பன் சுவாமிகள் மூலம் பெருமை திருநீற்றின் பெருமையினை சிவத்திரு சித்தர் பாம்பன் சுவாமிகள் மூலம் பெருமையை அறியலாம், ஒருமுறை பாம்பாட்டி சித்தர் பாம்பன் சுவாமிகளின் குழந்தை இரவில இடைவிடாது அழுது கொண்டே இருப்பதை கண்ட அன்னாரின் துணைவியார் பாம்பன் சுவாமிகளிடம் தாங்கள்தான் முருக பக்தர்தானே இக்குழந்தை அழுவதை நிறத்த திருநீறு அணிய வேண்டினார் அதற்கு பாம்பன் சுவாமிகள் உடன்படவில்லை எனவே குழந்தையின் அழுகையும் தீரவில்லை இதனால் இருவரும் வேதனையுடன் இருக்கும் பட்சத்தில் சுவாமிகள் வெளியில் சென்ற சற்று நேரத்தில் ஒரு சிவனடியார் திடீரென வீட்டிற்கு வந்து ஏன் குழந்தை அழுதுகொண்டே உள்ளது ஏதேனும் உபயம் செய்ய வேண்டியதுதானே என்று வினவி விட்டு குழந்தை கொண்டு வருங்கள் நான் திருநீறு இடுகிறேன் என்று கூறி குழந்தைக்கு தான் கொண்டு வந்த திருநீற்றை குழந்தைக்கு அணிவித்துவிட்டு சென்று விட்டார், குழந்தையின் அழுகையும் நின்றுவிட்டது, அதன் பிறகு பாம்பன் சுவாமிகள் குழந்தையின் அழகை நின்றதை அறிந்து துணைவியாரிடம் காரணம் பற்றி வினவினார், அதற்கு துணைவியார் தாங்கள் திருநீறு இட மறுத்து சென்றபின் ஒரு சிவனடியார் வந்தார் குழந்தை அழுவதை கண்டு திருநீறு அணிவித்து சென்றார், குழந்தையின் அழுகையும் நின்றுவிட்டது என்றார், உடனே வந்து சென்ற சிவனடியார் யார் என்று அங்குமிங்கும் தேடினார் காணது கண்டு வியப்புற்று தான் திருநீறு பூச மறுத்தமையால் தனது முருகபெருமானே சிவனடியாராக வந்து திருநீறு அணிவித்து சென்றுள்ளார் என வியப்புற்றார், இதிலிருந்து குழந்தையின் அழுகைக்காக திருநீராக மருந்தாக முருகனே அணிவித்து சென்றது திரு நீறும் பெருமைபெற்றது, அறியலாம் நாயன்மார்கள் மூலம் பெறுமை பெற்றது திருநீறு அணிதல் என்பது எல்லா சிவனடியார்கள் எல்லாம் கையாண்டனர் என்றாலும் நெற்றிலில் பூசும் - பூசப்பட்ட திருநீறுக்காகவே தன் உயிர் நீத்த நாயன்மார்களை பார்க்கலாம், அதில ஒருவர் ஏனாதிநாத நாயனார் அன்னார் திருநீறு மேற் பக்தி மிகுதியால் திருநீறு அணிந்த சிவனடிகள்களை கண்டவுடன் சிவனையே கண்டதாகக் கொண்டு அன்னாருக்காக தனது உடல் பொருள் ஆவி தனது தன்மானம் என எதையும் தந்த உயிரை விட்டவர், சிவ சின்னமாகிய விபூதியை மெய்யன்போடு தரிப்பவர் சிவபதம் அடைவர் இதனை திருமூலர் தனது திருமந்திரத்தில் திருநீறு அணிந்திட எல்லாவினைகளும் தீர்ந்து சிவனடி சேர்வர் என்று " கங்காளன் பூசுங் கவிசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வாரே " என்ற பாடல் மூலம் திருநீற்றின் மகிமையை விளக்கிறார், இதன்படி நெற்றியில் பூசும் திருநீற்றின் மீது மிக பக்தி கொண்ட ஏனாதிநாத நாயினார் வாள் வித்தை பயிற்சி நடத்தும் தொழிலை கொண்டவர், இவரின் வளர்ச்சி பொறாமை கொண்ட இவர் ஒத்த தொழில் புரிந்த அதிசூரன் என்பான் இவர் மீது பொறாமை கொண்டு அவருடன் போர் செய்யக் கருதி கூட்டத்தோடும், தனியாகவும் இவருடன் பலமுறை போர் செய்து தோல்வியுற்றான் இருப்பினும் அவனது தனியாத எப்படியாவது போரிட்டு வஞ்சனையில் வெல்ல உபாயம் செய்தான், ஏனாதி நாயனார் விபூதியின் மேல் கொண்ட அபிரித பக்தியும் மரியாதையும் கொண்ட பண்பையும் விபூதி அணிந்தவரை எத்தருணத்திலும் எப்போதும் எந்த வித துன்பமும் செய்யமாட்டார் என்ற அரிய குணத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவரை தனியே போர் புரிய அழைத்தான் அவ்வாறே நாயனாரும் போர் புரிய சம்மதித்து யுத்தத்ததிற்கு ஆயத்தமாகி போர்களத்தில தயார் நிலைியில் இருந்தார், அப்போது வஞ்ச எண்ணங் கொண்ட அதிசூரன் தான் ஒரு பழத்த சிவனடியார் போல் நெற்றி நிறைய திருநீற்றை அணிந்து கொண்டு நாயனாருடன் போர் புரிய தனது வாளை எடுத்து போரிட தொடங்கினான், அப்போது எதிரியின் நெற்றியை கண்ட ஏனாதி நாயனார் உடனே திருநீர் அணிந்த சிவபெருமானே தன் எதிரில் இருப்பதாக கொண்டு தன்னிடம் இருந்த ஆயுதங்களை கீழே வீசி எறிந்து விட்டு நிராயுதபானியாக நின்றார் உடனே அதிசூரன் அவரை தன் வாளால் பதம் பார்த்து தனது வஞ்சகத்தை தீர்த்துக் கொண்டான்,இவ்வாறு விபூதியின் மேல் கொண்ட அதிபக்தியால் தனது உயிரையே விட்டவர் மற்றொரு நாயனார் மெய்பொருள் நாயனாராகும், இவர் மீது பொறாமை கொண்ட எதிரி நாட்டு அரசன் நாயனாரை வஞ்சகத்தால் கொல்ல நினைத்து திருநீறு அணிந்து சிவ உருவத்தில் வந்து அவருடைய அரன்மனைக்கே வந்து மறைமுகமாக சிவசாதனங்களை கொண்டுவருவதுபோல் அரண்மைன்க்கு வந்து நாயனாரின் படுக்கை அறையிலேயே நாயனாருக்க ஆத்ம உபதேசம் செய்வதாகக் கூறி தன்னுடை ஆயுதத்தால் மன்னரை - நாயன்ாரை கொண்டு விட்டான், நாயனார் தனது உயிர் போகும நிலையிலும் தன்னை கொலை செய்த எதிரியான போலி சிவனடியாரை சிவ வேடம் அணிந்து திருநீறு பூசியுள்ள காரணத்தால் அவரை எந்த வித தொந்தரவு செய்யக் கூடாது என்றும் அவருக்கு சரியான பாதுகாப்பு வழங்கி அன்னரை ஊர் எல்லை வர பாதுகாப்புடன் வெளியேற ஆனையிட்டு சிவ அடையாளத்திற்காக உயிரையும் துறந்து எதிரிக்கு பாதுகாப்பு வழங்கி திருநீற்றுக்கு பெருமை சேர்த்தவர் மெய்பொருள் நாயினார் வாரியார் சுவாமிகள் திறுநீறு பெருமை கூறியது வாரியார் சுவாமிகள் ஒருசமயம் ஆன்மிக சொற்பொழிவிற்காக வெளியூர் சென்றுவிட்டு மீழ் பயணத்திற்காக ஒரு புகைவண்டி நிலையத்தில் இழைப்பாரிக் கொண்டு இருந்தபோது அவரை கடந்து சென்ற மாணவ செல்வங்கள் சிலர் அன்னாரை கேலி செய்யும் நோக்கில் சுவாமிகளை பார்த்து தாங்கள் ஏன் உடல் முழுவதும் வெள்ளையடித்துள்ளீர்கள் என கிண்டலாக கேட்க அதற்கு வாரியார் சுவாமிகள் சற்றும் கோபம் கொள்ளாமல் சிவன் இருக்கும் வீட்டிற்கு தானப்பா வெள்ளையடிக்க வேண்டும் கட்டை மண் சுவருக்கு யாரப்பா வெள்ளையடிப்பார்கள் என் உடலின் உள்ளே சிவன் இருக்கிறான் அவன் குடியிருக்கும் இந்த உடல் துாய்மை பெற வெள்ளையடித்துள்ளேன் என்று மாணவர்களுக்கு அன்புடனே உபதேசபாணியில் பதில் அளித்ததைக் கண்ட மாணவர்கள் வெக்கத்தால் கூனிகுறுகி உடனே தங்களின் தவறுக்கு மன்னிப்பு வேண்டிக் கொண்டதோடு அவரிடமே திருநீறும் பூசி சென்று அன்றுமுதல் அவர்களும் தினமும் திருநீறு பூசி மகிழ்ந்துள்ளனர் உண்மை தருவது - இடர்களைவது நீறு ஒருமுறை தண்டபாணி தேசிகர் என்ற சிவனாடியார் கேரள மாநிலத்தில் ஆன்மிக தளங்கள் சென்றுவரும் தருணத்தில் ஒருநாள் அந்தி மறையும் போது அருகாமையில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்லும் முகத்தான் கடல்நீர் பின்வாங்கும் காலங்கரை நீரை கடந்து கோவிலுக்கு செல்ல படகு மூலம் செல்ல சென்ற போது அந்நீர் பரப்பை கடக்க உள்ள நபர்களுடன் தானும் படகில் ஏறிவிட்டார், ஏறிபின்தான் தெரிந்தது படகு ஒட்டுபவர் சரியான நிதானத்தில் இல்லாது படகை ஏறுக்குமாறு செலுத்தி சென்றது கண்டனர், எல்லோரும் பதைபதைத்து கொண்டிருந்த நேரத்தில் மேலும் சோதனை ஏற்பட்டது, படகில் சிறு துவாரத்தின் வழியாக நீர் கசிந்து படகில் நீர் பெருகிக் கொண்டிருந்தது எல்லோரும் பதைபதைத்து முனகலோடு இருந்தனர், தண்டபானி தேசிகரும் இன்றும் சலகண்டம் தான் இன்று உயிர் பிழைப்பது மறுபிறப்புதான் என்று எண்ணி தான் செல்லவிருக்கும் முருகனை உள்ளமுறுக வேண்டினார் உடனே தனது மனத்தில் ஒரு அசிரீ வாக்குபோல் திருநீற்றுக்கோவில் நான் இருக்கிறேன் பயம் வேண்டாம் என்ற யாரே கூறவது போல் உணர்வு ஏற்பட்டது, உடனே படகில் அதன் விளைவாக யாரோ ஒருவர் படகோட்டியை படகை இவ்வாறு செலுத்து இப்படிப்போ, அப்படிப்போ என்று ஒருவர் அதட்டிக் கொண்டிருந்தார் படகோட்டியும் சரியான திசையில் படகை செலுத்திக் கொண்டிருந்தார் மற்றவர்களும் படகில் கசிந்த நீரை கோப்பைகளின் மூலம வாரி வெளியேற்றிக் கொண்டிருந்தனர் ஒருவழியாக படகும் கரையை சேர்நத்து எல்லோரும் கரை வந்ததற்கு நிம்மதி பெருமூச்சிட்டுவிட்டனர், தண்டபாணி தேசிகரும் கரைவந்தமைக்கு முருகனுககு நன்றி தெரிவிக்கும் முறையாக திருநீற்றை எடுத்து பூச நினைத்த போதுதான் அந்த அசிரீ வாக்கு திருநீற்று கோவில் தான் இருப்பதாக கூறியது நினைவு வந்தது, எனவே திருநீரே ஆண்டவன் குடியிருக்கும் கோவிலாக நம் துயர் துடைக்கும் ஆலயமாக பயன்பட்டது கண்டு பெருமை கொண்டார்,வழிக்கு துணையாக இடர்களையும் ஆயுதமாக திருநீறு விளங்குகிறது, அருணகிரி நாதர் பெருமை சேர்த்தது அருணகிரிநாதர் ஒருநாள் திருவண்ணாமலையில் பெருமானை தரிசிக்க சென்ற போது கோவில் மூலஸ்தானத்தில் சுவாமியை வணங்கிவிட்டு பிரசாதமாக திருநீறு பெறுவதற்காக சுற்றுமுற்றும் பார்த்தவுடன் ஒரு ஆச்சாரியார் திடீரென வந்து திருநீறுவழங்கி சென்றார் திருநீரை அணிந்து விட்டு ஆச்சாரியாருக்கு நன்றி சொல்லும் விதமாக சுற்று பார்த்தபோது தனக்கு பிரசாத திருநீறு வழங்கிய ஆச்சாரியார் அங்குஇல்லை பின் சன்னதியை விட்டு திரும்பும் தருணத்தில் எதிரே அந்த ஆச்சாரியார் வேகமாக வந்து கொண்டிருந்தார் அவரை கண்டவுடன் அருணகிரியார் அவருக்கு திருநீறு வழங்கியதற்கு நன்றியை கூறினார் ஆனால் உடனே அந்த ஆச்சாரியார் நான் இப்போதுதானே வருகிறேன், தங்களுக்கு திருநீறு வழங்குவதற்காகத்தானே விரைந்து வந்து கொண்டிருக்கிறேன் ஆனால் தாங்கள் திரும்பிவிட்டீர்கள் என்ற கூற்றை கேட்டவுடன் அருணகிரியாருக்கு ஒன்றும் புரியவில்லை அப்படியானால் தன்ககு திருநீறு வழங்கியது யார்? என் பொருட்டு அண்ணாமலையார் தான் வழங்கினாரா? என்ற ஆச்சிரியத்தோடு திரும்பினார், இதிலிருந்து அண்ணாமலையாரே அருணகிரியாருக்கு திருநீறு வழங்கப்பெற்று சிறப்பு பெற்றது இதனால் அருணகிரிநாதர் திருநீரை வைத்தே பாடல்கள் பாடி அண்ணாமலையாரை அழைத்து சிறப்பித்தார் செல்வம் தருவது திருநீறு அணிவதால் செல்வம் கிடைக்கும் ஒரு ஏழை நெசவாளிக்கு திருநீறு அணிவதன் பயனை எடுத்துரைக்கும் முகமாக வாரியார் சொற்பொழிவு மூலம் ஒரு அடைந்த நிகழ்வு மூலம் அறியலாம், கடினமான உழைப்பே பிரதானமாக கொண்ட ஒரு நெசவாளி திருநீறு அணிவதோ தெய்வபக்தியோ இல்லாதவருக்கு அவர் துணைவியார் ஆன்மீக நெறிகளிலும் திருநீறு அணிவதிலும் மிக விரும்பம் கொண்டவர் தன் கணவரே இதற்கு எதிர்மறையானவர் இதன் பொருட்டு அவரை சைவநெறியில் கொண்டுவர முயன்று விரக்தியடைந்த நேரத்தில் ஒரு சித்தி பெற்ற சிவனடியாரை கண்டு இதற்கு வழிவேண்டினார் அவரும் தனது கணவரை தான் திருநீரு அணியாவிட்டாலும் தினமும் ஒரு திருநீறு அணிந்த சிவபக்தரை கண்டபின்தான் உணவு என்று கூறி அதன்படி செய் என்று கூறனார் அந்த அம்மையாரும் தன் கணவனிடம் இவ்வாறே கூறனார் அவரும் இதற்கு சம்மதித்து தன் வீட்டுககு அருகாமையில் உள்ள ஒரு சிவ பக்தரை அடையாளம் கண்டு கொண்டார் அன்னார் தினமும் மூக்கு பொடிபோடும் பழக்கம் உள்ளவரும் அந்த பொடியும் இவரிடமே பெறும் தன்மையுடையவர் எனவே இவருக்கு தினமும் அவரை உணவு உண்ணும் முன்பாக மூக்குபொடி பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார் இதன்படி இவருடைய பழக்கவழக்கங்கள் நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தபோது ஒருநாள் அந்த திருநீறு அணிந்த சிவபக்தர் வெகு நேரம் ஆகியும் வரவில்லை இவருக்கோ பசி அதிகமாயிற்று உடனே தானே அவருடை வீட்டிற்கு அவரை தேடிச் சென்றார், அவர் தனது தோட்டத்தில் சிறிய வேலையாக தோட்டத்தில் ஒரு குழி தோண்டிக்கொண்டிருந்தார் அப்போது அக்குழியில் ஒரு புதையல் இருப்பதை கண்டு வியப்புற்று பயத்துடன் புதையலை எடுத்துக் கொண்டிருந்தவேளையில் இவர் சிவபக்தரின் திருநீறு அணிந்த நெற்றியை சற்று தொலைவிலேயே பார்த்தவுடன் பார்த்துவிட்டேன் பார்த்துவிட்டேன் என்று கத்திக்கொண்டே ஒட ஆரம்பித்தார், அவரே தான் கண்ட புதையலைத்தான் பார்த்து விட்டார் என எண்ணி பதைபதைத்துக் கொண்டு அவரை பின் தொடர்ந்து ஒடி ஐயா பார்ததது தான் பார்த்தீர்கள் தயவுசெய்து பார்த்ததை யாரிடமும் கூறவிடாதீர்கள் உங்களுக்கும் பார்த்த புதையலில் பாதி பங்கு தருகிறேன் என்றார், இந்தநெசவாளிக்கோ திருநீறு நெற்றியை தினமும் பார்த்ததற்கே பாதி புதையல் பரிசு கிடைத்துவிட்டதே என மிக மகிழ்ச்சி கொண்டார் பார்த்தர்கே செல்வம் என்றால் இந்த திருநீரை தினமும் அணிந்தால் இன்னும் செல்வம் கூடுமே என்று மகிழ்ந்து அன்றிலிருந்து தினமும் திருநீறு அணிய ஆரம்பித்தார் திருமந்திரத்தில் திருநீற்றின் பெருமை திருமூலர் தனது திருமந்திரத்தில் திருநீற்றின் பெமையை தனது மந்திரத்தில் கூறியது கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழவரேயாமாகில் தங்கா வினைகளும் சாரும் சிவகதி சிங்காரமான திருவடி சேர்வாரே எலும்புகளை அணியும் இறைவன் பூசிக்கொள்வதும், உடலுக்கு கவசமாக விளங்கும் திருநீற்றை சிறிதும் தடையில்லாது உடலில் பூசிமகிழ்ந்தால் தீவினைகள் நீங்கும் மோட்சம் இன்பம் அடைய வழி உண்டாகும் இறைவனது அழகிய திருவடிகளை அடையலாம் இந்த மருத்துவ குணங்கள் கொண்ட திருநீறை யாரும் ஆகம விதிப்படி தயார் செய்து பயன் பெறலாம், திருநீறு தயாரிக்கும் முறை 2 கிலோ சாம்பல் கிடைக்கும் அளவிற்கான பசுஞ்சாணம், பசுஞ்சாணம் கீழே விழாமல் எடுத்து வரட்டியாக்கி பஸ்பமாக்கி சாம்பலாக்கி கொண்டு சலித்து 2கிலோ எடுத்துக் கொள்ளவேண்டும் இவற்றுடன் பஸ்பமாக்கிய - படிகாரம் 10கிராம், குங்கிலியம் ,சங்குபஸ்பம், ஆமைஒடு, பவளம்,சிராபஸ்பம், கிரஞ்சி பஸ்பம், முத்துசிப்பி, நத்தை ஒடு, ( எல்லாம் பஸ்பமாக்கியது 10கிராம்) வீதம் கலந்து ஒன்றாக்கி பித்தளை தாமபளத்தில் பரப்பி ஒம் சிவசிவ ஒம் ஒதி மண் குடுவைகளில் சேித்து வைத்துக்கொள்ளலாம் ,ஆலயத்தில் சுவாமிக்கு அபிசேகத்திற்ககு கொடுத்து அபிசேகம் செய்தும் சேமித்து வைத்துக்கொள்ளவும், இவ்வாறு தயார் செய்த மந்திர விபூதி எல்லாவற்றிக்கு சிறநதது, திருநீறு மருத்துவ குணமுடையது திரு நீறை நெற்றியில் நீரில் குழைத்து பூசினால் கபாலத்திலுள்ள நீர் குறைந்து கபால நீரால் வரும் வியாதிகள் தீரும் என்பது இன்றளவிலும் கண்ட உண்மை, வாதநோய் உள்ளவர்களுக்கு உடலில் பூசி வாதநோய் குணமடைவதை காணலாம், திருநாவுக்கரசர் சுவாமிகளுக்கு சூன்ம வயிற்று வலிக்கு அவரின் தமக்கையார் வயிற்றில் திருநீற்றை பூசி குணமடைந்த வரலாறு பெரியபுராணத்தில் காணலாம் இவ்வாறு திருநீற்றின் பெருமையை புராண காலம் தொட்டு இன்றுவரை அதன் சிறப்பு பெருமைகளை இன்றளவும் காணலாம் எனவே தோத்திரங்கள் ஓதி திருநீறு அணிந்து பெருவாழ்வு பெறுவோம், அன்புடன் சிவ, வை, பூமாலை சுந்தரபாண்டியம்

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

நமசிவாய


நமசிவாய சைவ சமயத்தின் மூல மந்திரம் ” நமசிவாய” எனும் திருவைந்தெழுத்து ஆகும். இது பஞ்சாட்சர மந்திரம் எனவும் அழைக்கப்படும். சிவாயநம எனவும் இதனைக் கொள்வர். வேதத்திலே நான்காவது காண்டத்திலே சிவ பிரானைப் போற்றும் உருத்திர மந்திரம் உள்ளது. அதில் சூத்திரம் 8-1 நமசிவாய எனும் ஐந்தெழுத்து பற்றிக் கூறுகிறது. வேத மந்திரத்தை முறைப்படி தீட்சை பெற்றுத்தான் ஓத வேண்டும் என்பது விதி. ஆனால் சதா காலமும் அனைவரும் ஓதக்கூடிய மந்திரமாக திருவைந்தெழுத்துக் கூறப்படுகிறது. திருவைந்தெழுத்தான் நமசிவாய இதில்லுள்ள ஒவ்வொரு அட்சரமும் தத்துவம் பொருளுடையவை * ந. திரோத மலத்தையும், * ம. ஆவண மலத்தையும், * சி. சிவமயமாயிருப்பதையும், * வா. திருவருள் சக்தியையும், * ய. ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன. இதன் உட்பொருள் உயிர்களில் உறைந்துள்ள ஆணவமும் மாயையும் விலகி சிவசக்தி சிவத்துடன் ஐக்கியமாவதே நமசிவாய என்பதன் பயன் என்பதாகும். ஆன்மாவுக்கு நற்றுணையாகவும் உயிர்த்துணையாகவும் அமைவது இம்மந்திரமாகும். வாழ்வில் துன்பங்களைப் போக்கவும் இன்பங்களை இயைபாக்கவும் திருவைந்தெழுத்தை உச்சரிப்பது சைவசமயிகளின் முடிபாகும்

சனி, 3 ஆகஸ்ட், 2013


இறைவனுடைய திருவருளை அடைவதற்கு வழிகள் பற்பல, அவற்றுள் சத்புத்திர மார்க்கம், தாசமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம், என்னும் நான்கும் அடங்கும், சத்புத்ர மார்க்கமாவது, இறைவனைத தந்தையாக எண்ணி ஆன்மா புத்திரனாக அமைந்து வழிபடும் வழிஆகும், திருஞானசமபந்தர் காட்டிய வழி இதுவே, தாசமர்க்கம் என்பது இறைவனை எசமானனாக பாவித்து உயிர்கள் பணியாளனாக இருந்து வழிபடும் நெறியாகும், இது திருநாவுக்கரசர் காட்டிய வழி, சகமார்க்கம் என்பது இறைவன் தன் தோழன் என்று கொண்டு சிவனை வழிபடும் வழியாகும்,இது சுந்தரர் காட்டிய வழி, சன்மார்க்கம் என்பது இறைவனை குருவாக - ஞானாசாரியனாகக் கொண்டு, ஆன்மா சீடனாக இருந்து வழிபடும் வழியாகும், இது மாணிக்கவாசகர் காட்டியவழி, அன்னம் பாலில் கலந்த நீரை நீக்கிப் பாலைத் தூய்மையாக்கிப் பருகுகிறது, அதுபோல ஆன்மா தியான வகையில் சக்தி செய்து கொள்ளல், தவம் என்பது காடுகள் வாழ்ந்து கனிகள் உண்டு வாழ்தல் மட்டும் அன்று, இறைவனை த் தியானம் செய்து கொண்டு தம்மால் எவ்வுயிருக்கும் தீங்குகினைச் செய்யாது இருத்தலும் ஆகும் - திரு மூலர் காட்டிய வழி

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

முப்பெரும் தேவியரே


முப்பெரும் தேவியரே ஆடி மாதம் உனக்கன்றோ ஆலயம் தோறும் உனது விழா ஆடித் தவசிருந்து ஆதிமூலனை ஆட்கொண்ட நாயகியே நவராத்திரி நல்விழாவில் நவ(9) நாளன்று உனக்கு பூசை களிப்புடன் கல்வி கேள்விதனை கனிவுடனே தந்திடுவாயே நங்கையர் போற்றும் நிலமகளே நாரா யணனை மணந்தவளே எங்கும் நிறைநது இருப்பவளே என்குறை நீக்கி அருள்வாயே வை.பூமாலை. சுந்தரபாண்டியம்