சனி, 28 ஜூலை, 2012


ஆழ் மனதின் அற்புதங்கள் - 2 ஆழ் மன சிந்தனைக்கு அதன் வெற்றிக்கு அடிப்படையாக அமைவது குறிக்கோளுடன் சேர்ந்த எண்ணமும் முக்கியத்துவம் பெறுகிறது, குறிக்கோளின் வலுவினை விளக்க கீழ்கண்ட எடுத்துக்காட்டு உதாரணமாக அமைகிறது, ஒரு தடவை அமெரிக்க ஜனதிபதி ஜான்கென்னடி ஒரு பள்ளியில் பள்ளி மாணவர்களுடன் சகசமான முறையில் உறையாடும் போது ஒரு மாணவனைப் பார்த்து புன்னகையுடன் - உன் எதிர்காலம் என்ன? - என்று கேட்டார் உடனே அவன் பளீரென்று இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்க வேண்டும் இது தான் என் லட்சியம் என்றான், உடனே ஜனதிபதியும் நன்று என்று வாழ்த்தி சென்றார், அந்த பள்ளி மாணவனின் லட்சியம் - குறிக்கோள் - எண்ணம் ஜனதிபதியாகவேண்டுமென்ற உயர்ந்தஆழ்மன சிந்தனை அவனை அமெரிக்க ஜனதிபதியாகவே ஆக்கியது, அது வேறுயாருமல்ல ..... அவன்தான் புகழ்பெற்ற பில்கிளிண்டன் எனவே தீர்ககமான தீர்மாணமே புகழின் உச்சிக்கும் தான் நினைத்த செயலுக்கு கால்கோளாக அமைகிறது,மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற பழமொழியும் இதனையே விளக்கிறது. எண்ணமே திண்ணமாகி அதுவே மனத்திரையில் ஆழமாக பதிந்து நம் எண்ண உணர்வுகளே - இந்தபிரபஞ்மென்ற வாயுமண்டலத்தில் எலக்ட்ரானிக் - அலைவரிசைகள் போல நம் மூளைியின் அலை வரிசைகளினால் தூண்டப்பட்டு அது வே செயலாக மாறுகிறது. ஒருவரின் எண்ணங்கள் முற்பிறவியில் தான் எதன்பால் மிகுந்த அன்பு செலுத்தி அதனையே சர்வ சதா காலமும் எண்ணிக்கொண்டவனின் எண்ணங்களே அடுத்த பிறவியில் அதுவாகவே பிறப்பான் என்பது மூததையர்கள் கண்ட உண்மை இதனையே விஜய் டிவி மகான்கள் என்ற நிகழ்ச்சியில் மான - மீன் கதையாக ஒரு ஆச்சாரியார் விளக்குவது ஒளிபரப்பட்டது, அதில் ஒரு மகா முனிவர் கடுமையாக தவங்கள் பெற்று காட்டில் தனியாக ஒரு ஆஸ்ரமத்தில் வாழ்ந்து வரும்போது அதிகாலையில் அருவியில் நீராட சென்றுள்ளார் அப்போது அவர் பார்வையில் அருவியின் அருகிலுள்ள சுனையில் நிறைமாத மான் ஒன்று நீர் அருந்திக் கொண்டிருந்தது இதனை ஒரு சிறுத்தை பார்த்து விட்டது அதனைக் கண்ட மான் உடனே உயிர் பதறி பாறையின் இடுக்குக்ள வழியாக தாவித்தாவி சென்றது, இதன் வேகத்திலும் பயத்திலும் தன் குட்டியை ஈன்றுவிட்டது பின்னும் ஓடும் போது தாய்மானை சிறுத்தை கடித்து உணவாக்கி விட்டது, இந்த நிகழ்வை கண்டு கொண்டிருந்த முனிவர் அனாதையாக உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் குட்டி மானை தானே எடுத்து வந்து ஆசிரமத்தில் வைத்து வளர்த்து வந்தார், தானே நேரிடையாக உணவழித்து அதனுடன் தன் வாழ்நாள் முழுவதும் அதனுடனயே கழித்து வந்தார், மான் வளர்ச்சி பெற்றது, முதிர்ச்சி பெற்ற முனிவரோ நமக்கு பின் இந்த மானின் கதி என்ன? என்பது பற்றி கவலையிலேயே தன் உயிர் பிரிந்தது, அன்னாரின் ஆழ்மனம் அந்த மான் மீதே இருந்ததால் அடுத்த பிறவியில் மானாகவே பிறந்தார் என கதையை சிந்தனையின் வழியே செயல் என்று கதையை முடித்தார், இது போன்று மீன் கதையை கூறுகையில் யோக ஆசனநிலை - தவ நிலை என்ற அடிப்படையில் ஒரு முனிவர் தன் ஆழ்மனதை உள்ளடக்கி நீருக்கு அடியில் தவம் செய்து கொண்டிருந்தார், அப்போது அவரின் எண்ண அலைகள் தனது ஞான உலகிலிருந்து பிரிந்து சுற்றுப்புறத்தின் பால் கவனம் ஈர்க்கப்பட்டது. அப்போது தனது உடலை சுற்றி ஒரு மீனின் சந்ததிகள் சுமார் ஆயிரக்கணக்கான மீன்கள் உணவை தேடுவதும், சந்தோசமாக அங்குமிங்கும் கூட்டமாக அலைவதைப் பார்த்து அந்த நிலை வாழ்க்கையின் பால் மனம் ஈர்க்கப்பட்டார். உடனே தான் செய்த தவத்தை விட்டுவிட்டு திருமணம் செய்யவேண்டுமென்ற எண்ணம் கொண்டு தான் பெற்ற தவ வலுமையால் இளமை உருவம் கொண்டு ஒரு மன்னனின் பெண்களான சுமார் 100 பேரை மனமுடித்து இல்லரத்தில் தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்து தான் எண்ணம் கொண்ட மீன் குஞ்சுகள் போல் சுமார் ஆயிரக்கணக்கான வம்சா வாரிசுகளை பெற்றார், எனவே இந்த தவ முனியின் எண்ணமும் சிந்தனையும் ஆழ்மன சிந்தனையின் செயலாகவே வெற்றி கண்டது. என்று விளக்கமளித்தார் ஆச்சாரியார், எனவே ஆழ்மனதின் சிந்தனைகள் குறிக்கோள்களாகவும்,குறிக்கோள்கள் சிந்தனை படலங்களாகவும் அதுவே காந்த அலைகளாகவும் மாறி உண்மை நிகழ்வுகளாகவே அமைய வழி செய்கிறது. எந்த காரியமும் என்னால் முடியும் அது நடந்தே தீரும் என நம்பிக்கை உண்டு என்று மீீண்டும் மீண்டும் கூறி ஆழ்மனதை திடப்படுத்தினால் அதுவே மந்திர சக்தியாக மாறி அற்புதமாக மாற்றிக் காட்டுகிறது, இந்த முன்னேற்ற பாதையில் பயணிக்க குறுக்கீடுகளாக மூன்று எதிரிகளை சந்திக்கலாம், அதில் ஒன்று உங்களது எதிர்மறையான சிந்தனைகள் - நன்மையையோ நோக்கி பயணிககையில் நன்மையான பயன்கள் எவ்வாறு உருவாகிறதோ அது போலவே உங்களின் எதிர்மறை ஆழ்மனச்சிந்தனையால் எதிர்மறை விளைவுகளையும் சந்திக்க முடியும், எனவே இதனை முறியடிப்பது உங்கள் சிந்தனையில்தான் உள்ளது. இதற்கு அடுத்தாற்போல் - அவ நம்பிக்கை - பொதுவாக மனிதர்கள் அவநம்பிக்கையில் - நம்பிக்கையுடையவர்களாகவும், நம்பிக்கையில் அவநம்பிக்கை யுடையவர்களாகவும் வாழ்கின்றனர், எனவே அவர்களின் தோல்விக்கு இதுவும் காரணமாகிறது. அடுத்து முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது - தன்பயம் - தன்பயம், மனிதன் உயர்ந்த குறிக்கோள் கொள்ளாமல் இருப்பதற்கும் பெரிய காரியங்கள் செய்யாமற் போவதற்கும் காரணம் அவன் உள்ளத்தில் புதைந்திருக்கும் அச்சமே. மற்றவர்களின் விமர்சனத்தால் நம் அச்ச உணர்வு மிகப்படுகிறது. இதுவே ஆழ்மன சிந்தனைக்கு தடைகல்லாகவும், உஙகள் மனக்கவலைக்கு ஆஸ்திவாரமாகவும் செயல்படுகிறது. இநத தடைகள் எல்லாம் மீறி எதனையும் என்னால் சாதிக்க முடியும் இறைவன் கருணை மிக்கவன் நாம் விரும்பியதை நிச்சயம் குறைவற்று கொடுப்பார் எனக்கு இறைவன் தந்த வலிமை இருக்கிறது என்ற உங்கள் கருத்தை ஆழ்மனக் கட்டளையாக கொடுத்து கொண்டே மனச்சித்திரத்தை ஒடவிட்டு நீங்கள் வணங்கும் இறைவனிடம் உங்கள் கனவை நிறைவேற்ற விண்ணப்பம் செய்யுங்கள். இரவில் உறங்குவதற்கு முன், படுக்கையில் அமர்ந்தவாறே கண்களை மூடி கவனத்தை உங்கள் மூச்சில் குவியுங்கள் சில நொடிகளில் உங்கள் எணண அலைகள் அடங்கி கவனம் ஒரிடத்தில் குவியும் இதுவே தியான நிலைக்கு வந்துவிட்டிர்கள் இந்நிலையில் எவ்வளவுக் கெவ்வளவு உணர்ச்சியோடு நிறைவேற போகிறது என்ற நம்பிக்கையோடு கட்டளை கொடுக்கிறீர்களே அவ்வளவு விரைவில் உங்களுக்கு தேவையான அறிவு,திறமை,ஆற்றல், வசதி, வாய்ப்பு முதலீடு போன்ற அனைத்தும் உங்களை தேடி வரும் அன்பன் வை,பூமாலை சுந்தரபாண்டியம்

வெள்ளி, 27 ஜூலை, 2012


சைவமும், சாலிய சமுதாயமும்
சைவ மதத்தின் தூண்கள் என்று போற்றப்படும் சமயக்குறவர்கள் வாழ்ந்த காலத்திலிருந்தே சாலியர் சமுதாயம் சைவ மதத்தில் வேறூண்றி தழைத்து, ஆன்மிகத்தில் - சிவத்தொண்டு செய்யும் சிவனாடியார்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர், சாலியர் சமுதாயத்தின் வம்சாவழி சாலிய மகரிஷி வழித்தோன்றவர்களே எனவே சாலியர்களின் கோத்திரம் சாலியமகிரிஷி கோத்திரம் என்று வழங்கப்பட்டு வருகிறது,இதன் வசம்சாவழியில் தான் சாலிய இனத்தை சேர்ந்தவரான 63 நாயன்மார்களில் ஒருவரான நேசநாயனாரும், இவரும் அக்காலத்தில் தற்போது சாலிய இனத்தவரின் குலத்தொழிலான நெசவு தொழிலையே செய்து சிவனாடியார்களுக்கு கோவனம் என்றளக்கப்படும் சிற்றடையை சிவனடியார்களுக்கு வழங்கி சிறப்புடன் சிவத்தொண்டு புரிந்து வந்துள்ளது பெரியபுராணம் காட்டுகிறது, இதன் மூலம் சாலியரின் சைவத் தன்மைக்கு முத்திரை பதிக்கப் பட்டுள்ளது. அந்நாள் முதல் இந்நாள் வரை சைவ மதத்தில் சாலியர் சமூகம் முக்கிய பங்கினைக் கொண்டு சிவனடியார்களுக்கு சிவத் தொண்டும், சிவன் கோவில்களையே அடிப்படையாகக் கொண்டே குல தெய்வங்களும் அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர், அக்காலத்தில் சாலிய சமூக முன்னோர்கள் சைவ மதத்தின் அடையாளங்களான ருத்ராட்சம் அணிதல், பூணுல் போடுதல் போன்ற சைவ அடையாளங்களுடன் வாழ்ந்து கொண்டு தேவாரம் திருவாசகம் இசையுடன் பஜனைப்பாடல்கள் பாடுவதற்கென்றே ஏழுர் சாலிய சமுதாய ஊர்களில் பஜனை மடங்களும் நாயன்மார்கள் பெயரில் திருச்சபை மன்றங்களும் இன்றளவும் இயங்கி வருவதை நாம் காண்கிறோம். இதற்கு உதாரணத்திற்கு கூற வேண்டுமானால் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணக்கவாசகர் திருச்சபை, முகவூரில் நாவுக்கரசர்-அப்பருக்கு மன்றமும், சுந்தரபாண்டியத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் திருசசபை, ஸ்ரீவி,மற்றும் சத்திரப்பட்டியில் தேவார- திருவாச பக்த சபா போன்றவை இன்றளவும் நடைபெற்றுக்கொண்டு வருகிறது, சாலிய சமுதாயத்தில் இன்றளவும் சிவ வழிபாட்டுத்தளங்களில் தேவார பாடகள் பாடும் ஓதுவார்கள் போன்று தேவார - திருவாசப்பாடல்களை இராஜபாளையம்,ஸ்ரீவி,சத்திரப்பட்டி, வ,புதுப்பட்டி, சுந்தரபாண்டியம் மற்றும் ஏழுர் சாலிய சமுதாய மக்களால் பாடப்பட்டு வருகிறது, இதற்கு தேவார இன்னிசை மாமணி திரு, புதுப்பட்டி மோகன் என்பவரே முன் உதாரணமாகும் அவருடைய தேவார இன்னிசையில் மயங்காதார் யார் உளர். சுந்தரபாண்டியம் சாலியர் சமூகமும்-சுந்தரமூர்த்தி நாயனாரும் இதன் அடிப்படையில் சுந்தரபாண்டியத்தில் சைவ மத சிவத் தொண்டாக பெரிய புராணத்தின் பாட்டுடைத்தலைவான சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருச்சபை என்ற அமைப்பு பாக்கியநாதசாமி கோவில் பஜனை மடத்தில் உருவாக்கப்பட்டு ஒரு நூற்றாண்டை நெருங்கி நடைபெற்று வருகிறது, இவ்விடத்தில் தான் சிவ ஆலய முக்கிய விழாக்களில் ஒன்றான மகளாய அமாவாசை கழித்த நவராத்திரி விழாவின் சதுரகிரி கொழுபூஜை விழாவின் அங்கமான சிவனடியார்கள் திருக்கூட்டம் சதுரகிரி மலைக்கு செல்லும் அங்கு கொழு பூஜை முடிந்து மலையிலிருந்து அடிவாரம் வந்தது முதல் சுமார் ஒரிரு மாதங்கள் வரை சாலிய சமுதாயம் அமைந்துள்ள ஏழுர் - மற்றும் அதைச்சார்ந்த சிற்றூர் மற்றும் அதன் ஒவ்வொரு பகுதியிலும் திருக்கூட்ட சிவனடியார் திருக்கூட்ட பூஜை சிற்ப்புடன் முடிந்து இவ்வூரில் தான் முடிவு பெறும், இந்நிகழ்ச்சி இன்றுவரை நடைபெறுகிறது ( தற்போது காளிமுத்து சுவாமிகள் ஆஸ்ரமத்தில் நடைபெறுகிறது) சதுரகிரி மலையிலும் ஒவ்வொரு நாளும் அங்கு தங்கியிருந்து சமையல் செய்து விரதம் இடுவோர் முதலில் திருக்கூட்டத்திற்கு சமையல் செய்த அன்னத்தின் ஒருபங்கு அன்னத்தை திருக்கூட்டத்திற்கு ( சுந்தரமூர்த்தி சுவாமி கோவிலுக்கு முன்பாக) வழங்கி விட்டுத்தான் தாங்கள் விரத நோண்பு மேற்கொள்வார்கள், இது போன்று சுந்தரபாண்டியத்தில் இந்த பஜனை மடத்தில் எப்போதும் சிவனடியார்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் இவர்களுக்கு சிவனடியார்களில் ஒரிருவர் தினமும் அந்திப்பொழுதில் அன்னக்காவடி எடுத்துச்சென்று சுந்தரபாண்டியம் சாலிய சமுதாய இல்லங்களில் அன்னம் பெற்று உடனிருக்கும் சிவனடியார்களுக்கும் வயதுமுதிர்ந்த இயலாதவர்களுக்கும் இந்த அன்னம் அன்னதானமாக வழங்கப்பட்டுவந்தது, அந்த அன்னக்காவடி எடுக்கும் சிவனடியார்கள் காவடியை சுமந்து கொண்டு ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமச்சிவாயத்தையும் சாம்போ சதா சிவ சாம்போ சிவ என்ற சிவநாமங்களை பாடிக்கொண்டு அன்னம் பெற்று வருவார்கள், அப்போது அநேக இல்லங்களில் அன்னக்காவடிக்கு உணவு போட்ட பின்தான் இரவு உணவு உண்பார்கள் அப்படி அன்னக்காவடி வர நேரம் ஆகிவிட்டலும் அந்த அன்னத்தை எடுத்து தனியாக வைத்து விட்டுத்தான் தாங்கள் உணவு உண்பார்கள்.அந்த அன்னக்காவடியின் மணியுடன் கூடிய தாண்டாயுதமும் அதன் குண்டாபாத்திரமும் இன்னும் சிவனடியார்கள் நினைவு சின்னமாக சுந்தரபாண்டியம் பஜனை மடத்தில் உள்ளது
,இவ்வாறு சிவனடியார்கள் சிவத்தொண்டு வளர்ந்து வரும் நாட்களில் தான் பெரியபுராணத்தின் பாட்டுடைத்தலைவன் என்று போற்றப்படும் சுந்தரருக்கு திருச்சபை நிருவி அவருக்கு வருடாவருடம் குருபூஜை நடத்த திருச்சபை முயன்றது, இதன் பொருட்டு சுந்தரரையே தனது குருவாக கொண்டு நேசித்து அவரையே தியானித்து தனது குருவான சுந்தர மூர்த்தி சிவபொருமானால் ஆட்கொள்ளப்படப்போகிறார் எனவே அவருக்கு முன்னரே தான் முத்தி பெற வேண்டுமென்று தனது தவவண்மையால் ஆடித்திங்கள் 10ம் நாள் சித்திரை நட்சத்திரத்தில் முத்தி பெற்ற பெருமிழலைக் குறும்ப நாயனாருக்கும், ஆடித்திங்கள் 11ம் நாள் சுவாதி நட்சத்திரத்தில் முத்திபெற்ற சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் அவருடைய ஆன்மீக நண்பரும் சிவத்தொண்டருமான சேரமான் பெருமாள் நாயனருக்கும்( சுந்தரரின் வேண்டுகோளின்படி சேரமான் பெருமானையும் சிவனிடம் ஆட்கொள்ளவேண்டியதின் பெயரில் முக்தி பெற்றவர்) ஆகிய மூவருக்கும் இவ்விரு நாட்களிலும் சுந்தரபாண்டியம் ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள் சபையின் திருமாடலாயத்தில் இத்துடன் கூறப்பட்ட அழைப்பிதழில் கண்டவாறு சிறப்பு பூஜைகளும் தேவார இன்னிசை நிகழ்ச்சியும், ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெற்றது, மேலே கூறப்பட்ட மூவருக்கும் இங்குதான் உற்சவ மூர்த்தி விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இரண்டாம் நிகழ்ச்சியில் அலங்கார சப்பரத்தில் சுந்தரபாண்டியம் திருவீதிகளில் ஊர்வலமாக திருவீதி உலா நடைபெறுகிறது, அன்னார்களின் திருவுருவ விக்ரங்களை இங்கு காணலாம் இந்த சிறப்பு வாய்ந்த சிவ விழா நூற்றாண்டை நோக்கி பயனிக்கிறது, வளரட்டும் சிவத்தொண்டு!பெறுவோம் சிவனருள்!!

திங்கள், 16 ஜூலை, 2012

சனி, 14 ஜூலை, 2012

Shimla Slideshow | TripAdvisor™

Shimla Slideshow | TripAdvisor™: TripAdvisor™ TripWow ★ Shimla Slideshow ★ Directory of 928 trips to Shimla, India by real travelers. Stunning free travel slideshows on TripAdvisor

May 6, 2012 Slideshow Slideshow

May 6, 2012 Slideshow Slideshow: TripAdvisor™ TripWow ★ May 6, 2012 Slideshow Slideshow ★ to srivilliputtur (near Loutolim) and Coimbatore. Stunning free travel slideshows on TripAdvisor

Myself Slideshow: Vpoompalani’s trip to Coimbatore, Tamil Nadu, India was created by TripAdvisor. See another Coimbatore slideshow. Create a free slideshow with music from your travel photos.

ஆழ் மனதின் அற்புத சக்திகள்


ஆழ் மனதின் அற்புத சக்திகள் நீங்கள் ஒரு தொழிலைச் செய்ய எண்ணும் போது என்ன மனப்பாண்மையில் ஈடுபடுகிறீர்களோ, அதற்கேற்ப உங்கள் செயல் வெற்றி - தோல்வியை அடைகிறது, வெற்றி மனப்பான்மையுடன் செயல் பட்டால் வெற்றியும், தோல்வி மானப்பான்மையுடன் தன்னம்பிக்கையற்று செயல்பட்டால் தோல்வியையும் அடைகிறீர்கள், ஆகவே வெற்றியும், தோல்வியும் உங்கள் மனப்பான்மையிலிருந்து உருவெடுக்கிறது, மன்ப்பான்மை என்பது, உங்கள் உள்ளத்தில் தொடர்ந்து நிலைபெறும் சிந்தனைதான் மனப்பான்மையாக மாறுகிறது, வெற்றி என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கும் மனச்சித்திரங்களே வெற்றி சிந்தனை , இது மீண்டும் மீண்டும் பதிவாகும் போது வெற்றி மனப்பான்மையாகமாறுகிறது, நீங்கள் விரும்பினால் மனச்சித்திரத்தை மாற்றி ஆழ் மனம் (இதனை சமயோசித அறிவாகக் கொள்ளலாம்) கட்டளை உஙகளுக்கு கைகொடுக்கும், ஆழ்மனக் கட்டளை மூலமும், மனச்சித்திரங்கள் மூலமும் வெற்றி மனோபாவத்தை உருவாக்கிட முடியும், நீங்கள் ஆழ்மனச்சக்தியை பெருக்கி கொண்டால் உழைப்பில் பத்தில் ஒருபங்கு குறைந்தாலும், விளைவு பத்து மடங்காக உயர்ந்திட முடியும், கடும் உழைப்பிற்கு ஈடு இணை இல்லை என்பதை ஆழ்மனத்திற்கு ஈடு இணை இல்லை என்ற புது பழமொழியை புரிந்து கொள்ளலாம், ஆழ்மனதை ஒரு தேவதை என்றே கூறலாம், அது ஆற்றல் மிக்க தேவதை, உங்களுக்கு விசுவாசமான தேவதை. நீங்கள் கேட்பதை பெற்றுத தரும் சக்தி உண்டு,ஆக அது தேவதையோ, அரக்கனோ என்பது நீங்கள் கொடுக்கும் கட்டளையைப் பொருத்தது. உங்கள் கட்டளையின் எண்ணம் முறன்பாடானால் கிடைப்பதும் முறன்பாடாகவே அமையும், உங்களின் ஆழ்மனச்சக்தி பெருகி விட்டால் நீங்கள் நினைத்ததை விரும்பியவாறு அடைய முடியும். இதன் கருத்தை கொண்டே ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு " Positive thinking always ever success Nagative thinking always never success" எவராயினும், எந்நிலையிலும், ஆழ்மனக்கட்டளையை நம்பிககையோடு கொடுத்து அடையப்போகிறோம் என்னும் விசுவாசத்தை வளர்த்து நினைத்ததை நினைத்தபடியே அடைய முடியும். வேண்டியதை விரும்பியபடியே பெற முடியும். ஒரு குறிக்கோளுக்கான கட்டளையை மட்டும் தேர்வு செய்து கொள்ள வேண்டும், மற்ற விருப்பு வெறுப்பு ஆசைகளை விலக்கி வைத்துவிட்டு, உறங்குவதற்கு முன் படுக்கையில் சம்மனமிட்டு - தியானத்திற்கு அமர்வது போன்று - சுவாசத்தில் ஆழ்மனதை முழுவதையும் கவனத்தில் குவித்தால் எண்ண அலைகள் அடங்கும், நீங்கள் தேர்ந்தெடுத்த ஆழ்மனக்கட்டளையை உணர்ச்சியுடன் , ஒலி நயத்துடன், உதட்டசைவுடன் உருவேற்றுக. உங்கள் குறிக்கோள் நிறைவேறி விட்டது போன்ற நிலையை மனச்சித்திரமாக கற்பனையில் காண்க. இதனை உறங்குவதற்கு முன்பும், உறங்கி எழுந்த பின்னும் தினமும் 30 நிமிடங்கள் கட்டளை கொடுத்தால், உங்கள் ஆழ்மனம் அற்புதமாக செயல்பட தொடங்கிவிடும். ஆழ்மனம் என்பது ஐம்புலங்களால் அறிய இயலாது ஆனால் அதன் விளைவை ஐம்புலங்களால் அறிய முடியும், நிறைவேற போகிறது என்ற நம்பிக்கையுடன் கட்டளை கொடுங்கள். அப்போது ஆழ்மனத்தின் அற்புத சக்தி வெளிப்படும். ஆழ்மனக்கட்டளையை குறிக்கேளுக்கும். தேவைக்கு தக்கபடி நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். உருவாக்கிய கட்டளைகளை உங்களை சுயகருத்தேற்றம் செய்யும் போது வெற்றி உங்களை அடையும். நம் வாழ்க்கை என்பது நம்எண்ணத்தால் உருவாக்கப்படுகிறது. எண்ணத்திற்கேற்ப வாழ்க்கை. எண்ணம் என்பது தொடர்மன சித்திரமே. எணணம் - செயல் ஆகிறது, செயல் - பழக்கம் ஆகிறது, பழக்கம் - வழக்கமாகிறது. வழக்கம் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. ஆழ்மனக்கட்டளை , மனச்சித்திரம் இவ்விரு உத்திகளையும் ஒரே சமயத்தில் தொடர்ந்து பயன்படுத்தும்போது உங்கள் மனோசக்தி பெருக்கம் அடைகிறது. சிந்தனையிலிருந்து - செயல் பிறக்கிறது. மனத்தின் எண்ணமே செயலுக்கு ஊக்கம் . எண்ணம் திண்ணம் பெறும்போது நிைன்த்ததை அடைய வெற்றியாக முடிகிறது. ஆழ்மனக்கட்டளையும. மனச்சித்திரமும் சேர்ந்தது தியானம் - தியானம் தவம் எனப்படுகிறது. தவ வலிமையால் நம் முன்னோர்கள் நம்ப வியலாத அற்புதமான சாதனைகளை செய்ததனர் என்பதை நாம் அறிவோம். ஆழ்மன கட்டளை கொடுக்கும்போதே அதற்கேற்ப மனச்சித்திரம் வரைவதன் மூலம் நீங்கள் அற்புதங்களை நிகழ்த்துபவராக மாறிவிடுகிறீர்கள். உங்களின் நீண்டகால குறிக்கோள்களான தியானம் செய்யும் போது உங்களது நம்பிக்கை ஒரு மந்திர சக்தியாகவே பெருக்கெடுக்கிறது. எனவே ஆழ்மன சிந்தனை - தியானம் மூலம் வெற்றி நிச்சயம்

வியாழன், 12 ஜூலை, 2012


ஸ்ரீ பகவத் கீதையில் தியான யோகம், தொடர்ச்சி 1)தியானத்தில் மனைத் கட்டுப்படுவத்து கடினம்,அது சலனமுடையது,ஐயமில்லை,ஆனால்பழக்கத்தாலும், பற்றின்மையாலும் கட்டி விடலாம் 2)சுயக்கட்டுபாடு இல்லாதவனுக்கு யோகம் அரிதென்று, ஆனால் கட்டுபாட்டுடன் இருப்பவனுக்கு முயற்சியால் அடைய வழி உண்டு 3) நம்பிக்ைகயுடையவன் முயற்சியுள்ளவன் யோகத்தினின்று ஒருபொழுதும் தோற்று்ப்போவது இல்லை, 4)யோகத்தில் தவறியவன் புண்ணியம் செய்வோரின் உலங்களை அடைந்து அங்கு கணக்கில்லா வருடங்கள் வாழ்ந்து தூய்மையுைடய செல்வந்தர்கள் வீட்டில் பிறக்கிறான் 5)யோகியனவன் யோகிகளின் குலத்திலேயே பிறக்கிறான்,இவ்வுலகில் இதுபோன்ற பிறவிகிைடப்பது அரிது, 6)அவ்வாறு பிறப்பவன் பூர்வ ஜன்மபுத்திைய பெறுகிறான், அவன் மறுபடியும் வெற்றிக்கு முயற்சி ெசய்கிறான் 7)தனது பழைய பழக்கத்தால் தன் வசமின்றி யோகப்பாதையில் ஈர்க்கப்படுகிறான், யோகத்ைத பயில ேவண்டுமென்ற ஆவலினால் அவன் வேகத்ைதயும்கடந்து செல்கிறான் 8) ஊக்கத்தோடு முயன்று, மனதை தன் வசப்படுத்தி பாவம் நீஙக பெற்ற யோகியானவன் அப்ேபாது பல பிறவிகளில் ெபற்ற பக்குவத்தால் மேலான நிலையை அைடகிறான் 9) தவஞ்செய்ேவாைரக்காட்டிலும் யோகி சிறந்தவன்,ஞானிகளிலும் அவன் சிறந்தோனாக கருத்ப்படுகிறான்,கருமிகளிலும் அவன் சிறந்தோன், 10) எவனொருவன் பரமாத்மாவில் நம்பிக்கை கொண்டு ேபாற்றுகிறானோ அவன் மிக மேலான யோகியாவான்

செவ்வாய், 10 ஜூலை, 2012

ஸ்ரீபகவத் கீதையில் தியான யோகம்


ஸ்ரீபகவத் கீதையில் தியான யோகம் -

 ஸ்ரீபகவத் கீதையில் தியான யோகம் பற்றி வழங்கப்பட்ட நெறிமுறைகளும் அதன்பயன்களும் 1) புத்தியால் அறியப்படுவதும், புலன்களைக் கடந்து நிற்பதுமாகிய, பேரின்பத்தை எங்கு காணப்படுமோ, அந்நிலை அறிந்த பின் இவன் உண்மையிலிருந்து வழுவுவதில்லை
 2) எந்த ஒரு பேரின்ப நிலையை அடைந்த பிறகு , அதைவிட அடைவதற்கு மேலான பேரின்பம் வேறொன்றும் இல்லை என எண்ணுகிறானோ, அப்பேரின்பத்தில் நிலைத்த பிறகு மிகப்பெரிய துக்கம் வந்தாலும் கலங்குவதில்லை
3) எண்ணங்களுக்கு ஆதாரமாக இருக்கும் ஆசைகள் அனைத்தையும் துறந்து மனதால் இந்திரியக் கூட்டத்தை எல்லா பக்கங்களிலும் வசப்படுத்தும்
4) உறுதி பூண்ட மதியால் மனதைமெதுவாக பரமாத்மாவில் பொருத்திய பின் வேறு எதைப் பற்றியும் சிந்தித்தல் கூடாது,
5) எங்கெங்கே மனம் சஞ்சலமாய் உறுதியின்றி உழலுகிறதோ, அங்கங்கே அதைக் கட்டுப்படுத்தி ஆத்மாவின் வசம் அழைத்துச் செல்க
 6) தியானத்தால் மனம் சாந்தமாகி ரஜோ குணம் அமைதி பெற்று, மாசு நீங்கி பிரம்மமேயாகி இந்த யோகிக்கு மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது,
 7) யோக நிலையில் பாபங்கள் நீங்கப் பெற்று ஆத்மாவில் நிலைபெற்று பிரம்ம சம்பந்தத்தால் உண்டாகும் உன்னதமான சுகம் எளிதில் கிடைக்கிறது
8) யோத்தில் கலந்தவன் எங்கும் சமப் பார்வையுடையவனாய், எல்லா உயர்களிடத்தும் தானிருப்பதையும் தன்னுள் எல்லா உயிர்களும் இருப்பதையும் காண்கிறான்,
9) எவனொருவன் தன்னை பரமாத்மாவிலும், பரமாத்மாவில் தன்னையும் காண்கிறானோ அவனை விட்டு பரமாத்மா ஒருபோதும் விலகுவதில்லை, அவனும் அதனை விட்டு விலகுவதில்லை
10) இன்பமாயினும், துன்பமாயினும் எதிலும் ஆத்ம சமத்துவம் மற்றும் சமப்பார்வை பெற்றவன் பரமயோகியாகக் கருதப்படுவான்
அதன்பயன்கள;
1)தியானத்தில் மனைத் கட்டுப்படுவத்து கடினம்,அது சலனமுடையது, ஐயமில்லை,ஆனால்பழக்கத்தாலும், பற்றின்மையாலும் கட்டி விடலாம்

2)சுயக்கட்டுபாடு இல்லாதவனுக்கு யோகம் அரிதென்று, ஆனால் கட்டுபாட்டுடன் இருப்பவனுக்கு முயற்சியால் அடைய வழி உண்டு

3) நம்பிக்ைகயுடையவன் முயற்சியுள்ளவன் யோகத்தினின்று ஒருபொழுதும் தோற்று்ப்போவது இல்லை,
4)யோகத்தில் தவறியவன் புண்ணியம் செய்வோரின் உலங்களை அடைந்து அங்கு கணக்கில்லா வருடங்கள் வாழ்ந்து தூய்மையுைடய செல்வந்தர்கள் வீட்டில் பிறக்கிறான்
5)யோகியனவன் யோகிகளின் குலத்திலேயே பிறக்கிறான்,இவ்வுலகில் இதுபோன்ற பிறவிகிைடப்பது அரிது,
 6)அவ்வாறு பிறப்பவன் பூர்வ ஜன்மபுத்திைய பெறுகிறான், அவன் மறுபடியும் வெற்றிக்கு முயற்சி ெசய்கிறான்
7)தனது பழைய பழக்கத்தால் தன் வசமின்றி யோகப்பாதையில் ஈர்க்கப்படுகிறான், யோகத்ைத பயில ேவண்டுமென்ற ஆவலினால் அவன் வேகத்ைதயும்கடந்து செல்கிறான்
8) ஊக்கத்தோடு முயன்று, மனதை தன் வசப்படுத்தி பாவம் நீஙக பெற்ற யோகியானவன் அப்ேபாது பல பிறவிகளில் ெபற்ற பக்குவத்தால் மேலான நிலையை அைடகிறான்
9) தவஞ்செய்ேவாைரக்காட்டிலும் யோகி சிறந்தவன்,ஞானிகளிலும் அவன் சிறந்தோனாக கருத்ப்படுகிறான்,கருமிகளிலும் அவன் சிறந்தோன்,
10) எவனொருவன் பரமாத்மாவில் நம்பிக்கை கொண்டு ேபாற்றுகிறானோ அவன் மிக மேலான யோகியாவான்

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

திங்கள், 9 ஜூலை, 2012

Thank you for your visiting our website


ஸ்ரீபகவத் கீதையில் தியானம்


ஸ்ரீபகவத் கீதையில் தியானம் 1) தனிமையான இடத்திலே அமர்ந்து, மனதையும், உடலையும், வசப்படுத்தியவனாய், ஆசையும், தேவைகளும் அற்று யோகியானவன் எப்போதும் மனதை பரம்பொருளில் லியக்கச் செய்தல் வேண்டும். 2) சுத்தமான இடத்தில், சமமான இடத்திலும், மான்தோல், தர்ப்பை , துணி இவற்றின் மீது தனக்கோர் உறுதியான ஆஸனம் அமைத்துக் கொண்டு அமர்தல் வேண்டும் 3)அங்கு அமர்ந்து மனதை ஒருமுகமாக்கி உள்ளத்தையும், புறச் செயல்களையும், நன்கு கட்டுப்படுத்தி ஆஸனத்தில் அமர்ந்து, மனம் நன்கு தூய்மையடைய யோகத்தைப் பயில வேண்டும் 4) உடம்பையும், தலையையும், கழுத்தையும், சமமாக அசைவின்றி வைத்துக் கொண்டு உறுதி உடையவனாய் மூக்கு நுனியைப் பார்ப்பதைப் போன்று திசைகளை நோக்காமல் கட்டுபாட்டுடன் ஒருநிலைப்படுத்த வேண்டும் 5) பேராமைதி உடையவனாய், அச்சத்தைப் போக்கி, பிரம்மச்சாரி விரத்தில் நிலை கொண்டு, மனதை வசப்படுத்தி, பரமாத்மாவிடம் சித்தத்தை இசைத்து, ஆத்மாவினை மேலாக்கி யோகியாய் அமர வேண்டும் 6)இங்ஙனம் எப்போதும், மனதை கட்டுப்படுத்தி ஆத்மாவில் யோகமுற்றிருக்கும்யோகி, பரமாத்மாவிலிருக்கும் பேரமைதியில் நிலைத்து, அதன் மூலம் மோக்ஷ நிலையை எய்த வேண்டும் 7)உணவு, புலன் நுகர்ச்சி இவற்றில் கட்டுப்பாடும், செயலில் தேவையான அளவுமட்டும் ஈடுபாடும் உறக்கம், விழத்தல், இவற்றில் ஒழுக்கம், உடையோனுக்கு யோக மார்க்கம் துயர் நீக்கும் சாதனமாகும், 8) எப்போதும் சித்தம் முழுவதும் உள்ளடக்கி பரமாத்மாவிலேயே நிலை பெறுகின்றதோ, அப்போது அனைத்து விருப்பங்களில் பற்றற்ற நிலை ஏற்படுகின்றது, அந்நிலை எய்ததியோர் யோகி என்பர் 9) சித்தத்தை அடக்கி, ஆத்மாவில் கலந்து நிற்கும், யோகிக்கு காற்றில்லாத இடத்தில் நிற்கும் விளக்கின் ஒளிக்கு உவமையாக கூறப்படுகின்றது, 10) சித்தத்தில் எழும் எண்ணங்கள் அனைத்தும், யோகப் பயிற்சியினால் முழுவதும் நிறுத்தப்படும் பொழுது, யோகி தன்னில் தன்னை அறிந்து சந்தோசப்படுகின்றான், தொடரும்......................

Oom Siva Oom


Jeeva Samathi valipadu


ஞாயிறு, 8 ஜூலை, 2012


தவயோகம் தவமும் - யோகமும் தியானத்தின் அங்கங்கள்தான் தவமும் யோகமும். ஜோதி வடிவான சிவத்தை அடைய மேற்கொள்ளும் வழிபாட்டு முறைகளே தியானம்,தவம் யோகம்.தியானத்தின் போது அபரீதமான சக்தியை பெற முடியும், தியானத்தின் மூலம் நமது ஆறாவது அறவின் கதவை திறக்கவும், விரிவடையும் செய்து ஆத்மாவின் பேரோளியை பெற தியானம் என்னும் திறவுகோல் உதவுகிறது, தியானத்தின் முதிர்ச்சியில் எண்ண அலைகள் குறையும், சுவாசத்தின் அளவு குறையும்,நம் புருவங்களுக்கிடையே ஒரு ஜோதி ஒளி தென்படும், இந் நிலையில் சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது, இந்நிலையில் தான் ரிஷிகள் தவத்தின் உச்ச நிலையைப் பெற்று ஒளியின் பிளம்பான சிவத்தை அடைந்து - முக்தி நிலை பெற்றார்கள், இந்த நிலையின் அடிப்படையான தியானத்தின் தொடர் நிலைகள்: முதல் நிலை: அடிப்படை நிலை - ஆன்மிக அறிவு உண்டாகும் நிலை - தியானத்தின் பயிற்சி நிலை எனலாம் இரண்டாம் நிலை: உடலில சக்ரா நிலை - உடலில் சக்தி மையமாக செயல்படுகின்றன - ஆத்ம சக்தி வளர்தல் மூன்றாம் நிலை: ஒளி (ஜோதி) நிலை - இந்நிலையில் 7 நிலைகள் உண்டு என்கின்றனர் யோகிகள். ஆத்மா வாயில் திறக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு, உயர்நிலை அடைகிறது, இதனால் அன்பு, அமைதி, ஆரோக்கியம் நேரிடையாக உண்டாகிறது. நான்காவது நிலை: அறிவொளி - யோக நிலை - முதிர்வு - முக்தி நிலை எனலாம்- இந்நிலையில் உடல், மனம், அறிவாற்றல், ஆகியவை விழிப்புணர்ச்சி எல்லையை அடைகிறது, நம் ஜீவ ஒளி - பேரோளியுடன் ஒன்றிணைந்து பேரோளியாக மாறுகிறது, இது வே ஆன்மீகத்தின் உச்ச நிலை, இதுவே யோகா ஆன்மீகம் ஒன்றிய ஐக்கிய நிலையாக ஆகிறது, தவ நிலையின் உச்சியில் யோகம் சிவத்துடன் ஒன்றி ஐக்கியமாகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த தவத்ததினை பின்கண்டவாறும் சிறப்புகளுடன் மூன்று வகையாக பிரித்துள்ளனர் ஆன்றோர்கள். மூவகை தவங்களாவன: 1) மானசம் - மனதால் செய்யும் தவம். 2) வாசிகம் - வாயினால் செய்யும் தவம். 3) காயிகம் - உடம்பால் செய்யும் தவம் மானசம்: உயிர்களிடத்தில் அன்பு, தான தருமங்களில் விருப்பம் கொள்ளுதல், பிறர் செய்த தீமையைப் பொறுத்தல், உண்மையில் நாட்டம் கொள்ளுதல், சிவத்தைச் சிந்தித்தல், புலங்களை அடக்குதல், உலகம் நலமாக இருக்க வேண்டுதல் வாசிகம்: உண்மை பேசுதல், தீய சொற்களையும் கடுஞ் சொற்களையும் பேசாதிருத்தல் ஐந்தெழுத்து (சிவாய நம) ஓதுதல், தோத்திரப் பாடல்கள் பாடுதல், நீதிகளை எடுத்துரைத்தல், நல்லனவற்றையே பேசுதல், திருமுறைப்பாடல்கள் மந்திர ஆற்றல் வாய்ந்தவை, அப்பாடல்களை வாய்விட்டுப் படிக்க ேவ்ண்டும், அவ்வாறு படிக்கும் பொழுது உண்டாகும் ஒலி அலைகள் நம்மை சுற்றிலும் ஒரு பாதுகாப்புச் சுவர் போல் அமையும், காயிகம்:சிவபெருமானாரைப் பூசித்தல், ஆலயம் வலம் வருதல், ஆலயத்தை தூய்மை செய்தல், சிவத்தலயாத்திரை செல்லுதல், மலர்மாலை தொடுத்தல், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தல், பிராணிகளுக்கு உதவுதல், சான்றோர்களையும், பெற்றோர்களையும் வணங்குதல். இத்தகைய நல்லனவற்றை அன்றாடம் செய்வதும் உண்மையான தவம் ஆகும் என்றும், போலி வேடம் கொண்டு காவி தரித்துக்கொண்டு உலகமக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பது தவமன்று, யோகம்: தவத்தின் உச்சி யோகம். யோகம் என்றால் ஒன்றுதல் என்று பொருள், ஜீவன் , சிவத்துடன் ஒன்றுவது யோகம் எனப்படுகிறது, யோகம் என்பதனை அகவழிபாட்டு முறைமூலம் தொடங்கி தவயோகத்தை பெறுதல் வேண்டும். வழிபாடு என்பது அகவழிபாடு, புறவழிபாடு என இரண்டாக பிரிக்கப்படுகிறது, கடவுளை தன்னின்றும், பிரியாத தன்மை கொண்டு வழிபடுவது அகவழிபாடு, கடவுளை தன்னின்று வேறுபடுத்தி வழிபடுவது புறவழிபாடு, ஒவ்வொருவரின் உடம்பில் உள்ள உயிரே சிவம்- ஆத்மாவே சிவம் - உடம்பே கோவில் . எனவே நம் உடம்பில் இருக்கும் ஆத்மா என்ற ஜீவ ஒளியான சிவத்தை அகவழிபாடாக வழிபடுதல் வேண்டும் புற வழிபாட்டின் நோக்கமே அகவழிபாட்டை அடைவதுதான், நாம் புறவழிபாட்டோடு நின்று விடுகிறோம், புறவழிபாட்டுடன் ஒன்றி அகவழிபாட்டின் மூலம் சிவம் என்ற ஜீவ ஒளியை தியானம் தவம் யோகம் என்ற வகையில் ஐக்கியமாகி ஒன்றிடுவோம்.

Pullankulal songs - Krishnan songs


சனி, 7 ஜூலை, 2012



Jeeva samathi





ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சதுரகிரிக்கு(வத்ராப்)ச் செல்லும் வழியில் இருக்கும் கிராமம் எஸ்.ராமச்சந்திராபுரம் ஆகும்.இந்த கிராமத்தில் கண்மாய்க்கு அருகில் அமைந்திருக்கும் சிவாலயமே சடையாண்டி கோவில் ஆகும்.இந்த சடையாண்டி கோவில் ஒரு ஜீவசமாதி ஆகும்.மிகவும் சக்தி வாய்ந்த,மிகவும் சிவ அருளாற்றல் மிக்க ஜீவசமாதியாக அமைந்திருக்கிறது. சடையாண்டி என்பவர் ஒரு பழுத்த சிவபக்தர் ஆவார்;இவர் 1700களின் இறுதியில் சதுரகிரியில் முக்தியடைந்தார்;அந்த முக்தியடைந்த இடத்துக்கு அவரது அடியார்கள் அமாவாசை தோறும் சென்று வழிபட்டு வந்தனர்;ஒரு கட்டத்தில் சதுரகிரியின் மலை மீது சென்று வழிபட முடியாத சூழ்நிலையில்,சடையாண்டி சாமிகளிடமே அவரது பக்தர்கள் ஆலோசனை கேட்டனர்;அதன்படி,அவர் சதுரகிரியில் முக்தி அடைந்த இடத்திலிருந்து பிடி மண் எடுத்துக்கொண்டு வந்து,எஸ்.ராமச்சந்திராபுரத்தில் கி.பி.1812 ஆம் ஆண்டில் சடையாண்டி கோவிலைக் கட்டினர்;அதே ஆண்டில் மேலும் விரிவாக இரண்டாவதாகவும் கட்டினர். நூறாண்டுகளுக்குப் பின்னர், கி.பி.1912 ஆம் ஆண்டில் கோவிலை புனர்நிர்மாணம் செய்யும் சூழ்நிலையில்,எஸ்.ராமச்சந்திராபுரத்தில் தெருவுக்குள் அவரது பிடிமண்ணைக் கொண்டு வந்து வழிபட்டனர்.இவ்வாறு வழிபட்டவர்கள் புலவர் வீட்டு வகையறாக்கள் ஆவர்.இவர்கள் காலப்போக்கில்,பிழைப்புக்காக சுந்தரபாண்டியம்,சக்கம்பட்டி என சில ஊர்களுக்குச் சென்றுவிட்டனர்.அவ்வாறு சென்றாலும் ஆண்டுக்கு ஒருமுறை இங்கு வந்து வழிபட்டனர்.கி.பி.1912 ஆம் ஆண்டில் கோவில் மறுநிர்மாணம் ஆனது;கி.பி.2002 இல் புதுப்பிப்புப் பணி நடைபெற்றது.தற்போது சடையாண்டி சாமிகளை வழிபடும் குடும்பங்கள் சக்கம்பட்டியில் சுமார் 100 குடும்பங்களும்,சுந்தரபாண்டியம் மற்றும் எஸ்.ராமச்சந்திராபுரத்தில் சுமார் 75 குடும்பங்களும், W.புதுப்பட்டியில் சுமார் 45 குடும்பங்களும் இருக்கின்றன.சடையாண்டி சுவாமிகளின் அருளாசி இந்தக் குடும்பங்களுக்கு பரிபூரணமாக இருப்பதால்,இவர்களின் குடும்பங்களில் பிறக்கும் முதல் குழந்தைக்கு சடையாண்டி என்ற பெயரையே சூட்டினர்.பெண் எனில்,சடைபாக்கியம் அல்லது சடையம்மாள் என்று சூட்டினர். எந்த ஒரு முக்கிய காரியமாக இருந்தாலும்,பூ கட்டி பார்ப்பது இந்த குடும்பங்களின் வழக்கம் ஆகும்.அப்படி பூகட்டிப் பார்த்ததில்,வெள்ளைப் பூ வந்தால்,சடையாண்டி சுவாமிகளின் அருளாசி இருப்பதாக அர்த்தம் ஆகும். சிவராத்திரியன்று நான்கு கால பூஜைகளும் ,அன்னதானமும் இங்கு நடைபெற்றுவருகிறது.ஒவ்வொரு மாதாந்திர வெள்ளிக்கிழமை மற்றும் கார்த்திகை நாட்களில் விரதம் இருப்பவர்களும் உண்டு.நாமும் இதே போல விரதம் இருந்து இவரை வழிபட்டால்,சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தின் அருளாசி கிடைக்க இவர் வழிகாட்டுவார். இந்த சடையாண்டி சுவாமிகளை வழிபட்டவர்கள்,மதுரையில் மஹால் வடம்போக்கித் தெருவில் சடையாண்டி டெக்ஸ் என்ற பெயரிலும்,ஜக்கம்பட்டியில் சடையாண்டி ஸ்டோர்ஸ் என்ற பெயரிலும் வர்த்தக நிறுவனங்கள் நடத்தியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் வரும் நவராத்திரி நிறைவடைந்ததும் வரும் கார்த்திகையன்று வருடாந்திரகுருபூஜை விழா நடைபெற்றுவருகிறது. சதுரகிரிக்குச் செல்லுவோர்,க்ருஷ்ணன் கோவிலில் இறங்கி வத்ராப் செல்லும் பேருந்தில் செல்வர்;அப்படிச் செல்லும்போது வரும் நான்காவது நிறுத்தமே எஸ்.ராமச்சந்திராபுரம் என்னும் பட்டியக்கல் ஆகும்.இந்த பஸ் நிறுத்தத்தில் இறங்கி,ஊருக்குள் சென்றால் இந்த ஜீவசமாதியை அடையலாம். ஓம்சிவசிவஓம்

ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும் ஓம் ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது.நமது உடலின் தன்மை,சமன்பாடு,நெகிழ்வுத் தன்மை,பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.இது வேகஸ் நரம்பு மூலமாக உள்காது,இதயம்,நுரையீரல்,வயிறு,கல்லீரல்,சிறுநீரகப்பை, சிறுநீரகங்கள்,சிறுகுடல்,பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புக்களையும் இணைத்து நன்மையை நல்குகிறது. இப்படி ஓமின் பெருமையை விஞ்ஞான ரீதியாக விளக்கிக் கொண்டே போகலாம்.அவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார் அனில் குர்ஜர்.அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார் அவரது பிரின்ஸிபல் சித்தார்த் லடாகே.இவர்களின் ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது.மந்திரங்களின் மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப் புதுமைகள் இன்னும் அதிகமாக வரவிருக்கின்றன. ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஆதாரம்: ஞான ஆலயம் பக்கங்கள்

20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன் மூளையிலும் நரம்புமண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக ஆராயப்பட்டன.இந்த ஆய்வின் முடிவில், 1.ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது. 2.எதன் மீதும் செய்யப்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கிறது. 3.ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம்,உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.

poomalai

poomalai

ஸ்ரீமத் பகவத் கீதையில் தியான யோகம் 1) கர்மத்தின் பலனை சாராது தனக்கு விதிக்கப்பட்ட கடமையை மட்டுமே செய்வன் துறவி, அவனே யோகி. வேள்வித் தீ வளர்க்காமல் இருப்பவனோ செயலை புறக்கணிப்பவனோ யோகி ஆகான் 2) எதனை சந்நியாசம் என்கிறார்களோ அதுவே யோகம் ஆசைகளை துறக்காதவன் ஒருபோதும் யோகி ஆகமாட்டான் 3) தியான யோகத்தில் முன்னேற முனிவனுக்கு கர்மம் உபாயமாகிறது, தியான சித்தியடைந்தவனுக்கோ செயலற்றிருப்பது உபாயமாகிறது, 4) ஒருவன் எப்பொழுது மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்தையும் புறக்கணித்து விட்டு இந்திரியப் பொருட்களிலும் கர்மத்திலும் பற்றுதலின்றி இருக்கின்றானோ அப்போது பூரண யோக நிலையை அடைந்து விட்டான் என்று சொல்லப்படுகிறது, 5) உன்னை நீயே உயர்த்திக் கொள். நீ உன்னை ஒருபோதும் தாழ்த்திக் கொள்ளாதே, உன் மனமே உனது நண்பன் . உன் மனமே உனது பகைவன். 6) எவனொருவன் தன் மனதை ஜெயித்து விட்டானோ அவனுக்கு அனுடைய மனமே நண்பனாகச் செயல்படுகின்றது. மனதை வெல்லாதவனுக்கு மனம் எப்போதும் பகைவன் போல் செயல்பட்டு கேடு விளைவிக்கின்றது, 7) தன்னை வென்று பேரமைதியில் நிலைபெற்று குளிர் வெப்பம் சுகம் துக்கம் மானம், அவமானம் இவற்றில் சமநிலை பெற்றவனிடம் பரமாத்மா ஒளிர்கின்றது. 8) சாஸ்திர அறிவிலும், அனுபவ அறிவிலும் திருப்தி கொண்டவனாய் அசைவுகளுக்கு அப்பாற்பட்டு புலன்களை ஜயித்து திருப்தி கொண்டவனாய் அசைவுகளுக்கு அப்பாற்பட்டு புலன்களை ஜெயித்து கல்லையும் மண்ணையும் பொன்னையும் ஒன்றுபோல் காணும் யோகியே, யோக நிலையுற்றான் எனப்படுவான். 9) தனிமையான இடத்தில் அமர்ந்து மனதையும் உடலையும் , வசப்படுத்தியவனாய் ஆசையும் தேவைகளும் அற்று யோகியானவன் எப்போதும் மனதை பரம்பொருளில் லயிக்கச் செய்தல் வேண்டும். 10) சுத்தமான இடத்திலும், சமமான இடத்திலும் துணி, மான்தோல், தர்ப்பை இவற்றின் மீது தன்கோர் உறுதியான ஆஸனம் அமைத்துக் கொண்டு மனதை ஒருநிலையில் குவிய வைத்தல் வேண்டும்

ஞாயிறு, 1 ஜூலை, 2012

மெடிடேஷன் குரு - தியானம் தமிழில்.


தியானம் மெடிடேஷன் குரு - தியானம் தமிழில். தியானம் தூக்கத்ன் பொழுது நம்ம அறியாமல் நாம் தியானத்தில் ஈடுபடுகிறோம். தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறங்குவது. உறக்கத்தின் பொழுத குறைந்த அளவுதான் பிரபஞ்ச சக்தியைப் பெறமுடிகிது. தியானத்தில் ஈடுபடும் போழுது அபரிதமான சக்தியைப் பெறமுடியும். இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பல மடங்கு விரிவடையச் சேய்கிறது. நம்முடைய "ஆறாவது அறிவின்" கதவைத் திறக்கவும் விரிவடையச் செய்யவும் இது உதவுகிறது. தியானத்தின் மூலம் நமக்கு கிடைக்கபெறும் அதீதமான சந்தி நம்மை சங்தோஷப்படுத்தும். நம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முழு மனநிறைவுடன் காணப்படுவொம். மேலும் பல சிகரங்களைத் தோடச்செய்யும். தியானம் என்பது ஒரு பயணம். தியானத்தின் போழுது, நாம் உணரும் வகையில் நம் உடலிலிருந்து மனதிற்கு பயணிப்போம். மனதிலிருந்து, அறிவாற்றலுக்கு அறிவாற்றலிலிருந்து நமக்குள் பின்பு அதையும்க தாண்டி Meditation "தியானம்" மேற்கொள்ள முதலில் நம் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட செயல்களை நிறுத்தவேண்டும் அதாவது உடல் அசைவுகளையும் பார்ப்பது, பேசுவது, யோசிப்ப்து போன்ற செயல்களையும். "தியானம்" செய்யும் முறையை நாம் தெரிந்து கொள்ளலாம். தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டூப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது. எந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம். நமக்கு சௌகரியமான முறையில். அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ண்து கொள்வது முக்கியம். தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற்கோள்ளலாம். நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம். வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள். கால்களை சம்மண மிட்டுக்கோள்ளுங்கள். இரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கோள்ளுங்கள். கண்களை மேதுவாக மூடுங்கள். அமைதியாக சகஜ நிலைக்கு வாருங்கள். உங்கள்க முழு உடலையும் இலக்காக்கி கொள்ளுங்கள். மனதையும் இலக்காக்கி கொள்ளுங்கள். கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது. கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம். மந்திர்ங்களை ஒதும பொழுதோ அல்லது முணுமுணுக்கும் பொழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது. ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும். நம்முடைய உடல் முறறிலும் சகஜநிலையில் இருக்கும்பொழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும். மனம் மறுற்ம் அறிவு நிலைக்கு. மனம் என்பது பல எண்ணங்களின் கலவை. மனத் தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்த வண்ணமே உள்ளன. நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனத்திற்குள் எழுந்தபடியே இருக்கும். மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்லவேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்கத் தூவங்க வேண்டும். கவனித்தால் என்பது நமக்கு இருக்கும் இயற்கையான குணம். இதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்கத் தூவங்கவேண்டும். மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணிச் சேய்யக்கூடாது. காற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்குத் தேரிந்து நடந்திடக்கூடாது. மூச்சுக்காற்றை சுவாசிப்பதும்,வெளியனுப்புவதும் தண்னிச்சையாக நடைபெற வேண்டும். நம்முடைய இயற்கையான சுவாசத்தைக் கவனித்தல் மட்டுமே போதுமானது. இதுதான் முக்கியம். இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்கச் சிறங்த வழி. எண்ணங்களுக்குப் பின் ஓடாதீர்கள். கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள். எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள். இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். சுவாசத்துடன் மட்டுமே இருங்கள். அப்பொழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும். இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளிகீற்றைப்போல் திடப்படுத்திக்கொள்ளும். இந்நிலையில் ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது. எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார். இந்த நிலையைத்தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது "எண்ணங்கள் அற்ற நிலை" என்றோ கூறுகிறோம். இதுதான் தியான நிலை. இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும். தியானம் அதிகமாகச் செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பேறும். பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாகப் பாயத் துவங்கும். இதைத் தேய்வீக வடிவம் என்றும் கூறலாம்.

மெடிடேஷன் குரு - தியானம் தமிழில்.


http://meditationguru.com/meditationtamil.html தியானம் மெடிடேஷன் குரு - தியானம் தமிழில். தியானம் தூக்கத்ன் பொழுது நம்ம அறியாமல் நாம் தியானத்தில் ஈடுபடுகிறோம். தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறங்குவது. உறக்கத்தின் பொழுத குறைந்த அளவுதான் பிரபஞ்ச சக்தியைப் பெறமுடிகிது. தியானத்தில் ஈடுபடும் போழுது அபரிதமான சக்தியைப் பெறமுடியும். இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பல மடங்கு விரிவடையச் சேய்கிறது. நம்முடைய "ஆறாவது அறிவின்" கதவைத் திறக்கவும் விரிவடையச் செய்யவும் இது உதவுகிறது. தியானத்தின் மூலம் நமக்கு கிடைக்கபெறும் அதீதமான சந்தி நம்மை சங்தோஷப்படுத்தும். நம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முழு மனநிறைவுடன் காணப்படுவொம். மேலும் பல சிகரங்களைத் தோடச்செய்யும். தியானம் என்பது ஒரு பயணம். தியானத்தின் போழுது, நாம் உணரும் வகையில் நம் உடலிலிருந்து மனதிற்கு பயணிப்போம். மனதிலிருந்து, அறிவாற்றலுக்கு அறிவாற்றலிலிருந்து நமக்குள் பின்பு அதையும்க தாண்டி Meditation "தியானம்" மேற்கொள்ள முதலில் நம் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட செயல்களை நிறுத்தவேண்டும் அதாவது உடல் அசைவுகளையும் பார்ப்பது, பேசுவது, யோசிப்ப்து போன்ற செயல்களையும். "தியானம்" செய்யும் முறையை நாம் தெரிந்து கொள்ளலாம். தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டூப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது. எந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம். நமக்கு சௌகரியமான முறையில். அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ண்து கொள்வது முக்கியம். தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற்கோள்ளலாம். நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம். வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள். கால்களை சம்மண மிட்டுக்கோள்ளுங்கள். இரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கோள்ளுங்கள். கண்களை மேதுவாக மூடுங்கள். அமைதியாக சகஜ நிலைக்கு வாருங்கள். உங்கள்க முழு உடலையும் இலக்காக்கி கொள்ளுங்கள். மனதையும் இலக்காக்கி கொள்ளுங்கள். கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது. கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம். மந்திர்ங்களை ஒதும பொழுதோ அல்லது முணுமுணுக்கும் பொழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது. ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும். நம்முடைய உடல் முறறிலும் சகஜநிலையில் இருக்கும்பொழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும். மனம் மறுற்ம் அறிவு நிலைக்கு. மனம் என்பது பல எண்ணங்களின் கலவை. மனத் தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்த வண்ணமே உள்ளன. நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனத்திற்குள் எழுந்தபடியே இருக்கும். மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்லவேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்கத் தூவங்க வேண்டும். கவனித்தால் என்பது நமக்கு இருக்கும் இயற்கையான குணம். இதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்கத் தூவங்கவேண்டும். மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணிச் சேய்யக்கூடாது. காற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்குத் தேரிந்து நடந்திடக்கூடாது. மூச்சுக்காற்றை சுவாசிப்பதும்,வெளியனுப்புவதும் தண்னிச்சையாக நடைபெற வேண்டும். நம்முடைய இயற்கையான சுவாசத்தைக் கவனித்தல் மட்டுமே போதுமானது. இதுதான் முக்கியம். இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்கச் சிறங்த வழி. எண்ணங்களுக்குப் பின் ஓடாதீர்கள். கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள். எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள். இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். சுவாசத்துடன் மட்டுமே இருங்கள். அப்பொழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும். இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளிகீற்றைப்போல் திடப்படுத்திக்கொள்ளும். இந்நிலையில் ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது. எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார். இந்த நிலையைத்தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது "எண்ணங்கள் அற்ற நிலை" என்றோ கூறுகிறோம். இதுதான் தியான நிலை. இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும். தியானம் அதிகமாகச் செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பேறும். பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாகப் பாயத் துவங்கும். இதைத் தேய்வீக வடிவம் என்றும் கூறலாம்


சாஸ்திர அறிவிலும், அனுபவ அறிவிலும் திருப்தி கொண்டவனாய், அசைவுகளுக்கு அப்பாற்பட்டு புலன்களை வென்று கல்லையும் மண்ணையும் பொன்னையும் ஒன்றுபோல் காணும் யோகியே யோக நிலையுற்றான் என்கிறது பகவத் கீதை (அத் -6) இந்த யோக நிலை கீழ்கண்டவாறு எட்டு நிலைகளை கொண்டது அவை: 1) யமா: அஹிம்சை, சத்யம், திருடாமை, பிரம்மச்சரியம் பேராசையின்மை 2) நியமா: சுத்தம்( உள்ளும் புறமும்), திருப்தி, தவம், சுயமாய் கற்றல், இறைவனிடம் சரணாகதி 3) ஆசனா: யோகாசங்கள் 4) ப்ராணயாமா : மூச்சுப்பயிற்சி மற்றும் மூச்சு கட்டுப்பாடு 5) ப்ரத்யாஹரா: மனதை கட்டுப்படுத்துல் 6) தாரணா: மனதை ஒரிடத்தில் குவித்தல் 7) தியானம்: தியானம் (மெடிட்டேஸன்) 8) சமாதி: முக்தி நிலை - இறைநிலையடைந்து ஐக்கியமாதல்