சனி, 31 ஜனவரி, 2015

சிவ சக்தியின் தத்துவங்கள்


சிவ சக்தியின் தத்துவங்கள் உலகம், உயிர்கள் என்று அனைத்துமே ஒரு மூலப்பொருளில் இருந்தே தோன்றியது. உலகப்பிலானே எல்லா உலகமுடைய ஒரு மூர்த்தி திருவாய்மொழி, அதுவே பரப்பிரம்மம் எனப்பட்டது. அது ஆன், பெண், என்ற பலவேறுபாடு அற்றது. "ஆணல்லன், பெண்ல்லள்" (திருவாய் மொழி 2-5-10), அந்தப் பிரப்பிரம்மமே சிவம் என்று பிறகு சுட்டப்பட்டது. அந்தப் பரப்பிரம்மம் உலகசிருஸ்டியை நினைத்து ஆண, பெண் என்று தன்னையே பிறப்பித்தது, "பெண்ணாகி ஆணாய்" - திருவாசகம் சிவம் என்ற மூலப்பொருள் சிவன் ஆனது. சக்தி பெண்வடிவமாக மாறியது, இந்த நிலையில் சிவத்துள் சக்தியும், சக்தியுள் சிவமும் ஒன்றை ஒன்று மருவி உலகின் படைப்பு ஆரம்பம் ஆனது. இந்த உலகம் முதல் அனைத்துமே சிவ-சக்தியின் தத்துவமே ஆகும், (கீதை 14-3-4) சிவசக்தி ஐக்கியத்தை குறிக்கும், அர்த்த நாரீசுவர வடிவம் சிவனின் ஒருகூறு. இதனை மாதொரு பிரான் - என்கிறார் திருவாசகம் மாணிக்கவாசகர் பெருமானார். சிவ சக்தியின் தத்துவத்தில் சிவனிடத்தில் சக்தி சமபங்காக அடங்கியுள்ளதாக காட்டுகிறது. இதைப் போலவே சக்தி தத்துவத்தில் யோகமாயைத் தத்துவம் , சக்திக்குள் சிவம் போலவே சக்தி தத்துவத்தில் யோகமாயைத் தத்துவம் சக்திக்குள் சிவன் அடங்கிய தத்துவமாக குறிக்கிறது. இதனை யோகமளை என்று குறிப்பது வழக்கம். "சிவ" என்ற சொல் சிவனையும், சக்தியையும் குறிக்கும், "சி" என்பது சிவனையும் "வ" என்பது சக்திையும் குறிக்கும், சி வலிமையானது, வ மென்மையானது. சிவ சொரூபம் அனைத்து பொருட்களிலும் காணப்படும், நமது சமய ஆலயங்களில் ஒரு நீண்ட வெள்ளைக்கோடும் ஒரு நீண்ட சிவப்புக்கோடும் கலந்தவாறு வர்ணம் பூசியிருப்பதை காணலாம் அல்லவா? அது இதன் தத்துவத்தைக் குறிப்பதே ஆகும். சிவம் சக்தி இன்றி உலகமும் உடலும் இல்லை என்பதே இதன் தத்துவம். முதலில் தாவம் பற்றி காண்போம், உலகில் ஒரே வடிவத்தில் ஆண் (சிவம்) இயல்பும், பெண் (சக்தி) இயல்பும் இரண்டுமே சேர்ந்திருக்கின்றன, ஒரே மலரிலும் ஆண்பாகம்,(மகரந்தம்) பெண்பாகம் (சூலகம்)இரண்டுமே கலந்து இருக்கிறது. இவ்விரண்டின் சரிபாதிக் கூட்டுறவால் புதிய விதை உண்டாகிறது, சங்கமங்களுள் ஒவ்வொரு உயிரும், அதனதன் தாய் தந்தையரின் பாதிப்பாதி அம்சத்தைப் பெற்றே உண்டாகிறது. சைத்தன்யம் - ஜடம் ஆகிய இரண்டு தத்துவங்களை உடையது. "உயிர்த்தத்துவம் சிவம், உடல் தத்துவம் சக்தி, உயிரும் , உடலும் சேர்ந்ததே இயற்கையின் திட்டத்தை அமைக்கின்றன என்பார் சுவாமி சித்பவானந்தர், ஆலயங்களின் சுவர்களில் மட்டும் வெள்ளையும் சிவப்பும் மாறி இருக்கவில்லையா? இல்லங்களில் இடப்படும் கோலங்களில் கூட வெள்ளைக் கோலத்துடன் காவி என்ற சிவப்பும் கலந்துதானே கோலம் போடுகின்றனர், கோலத்தில் முதலில் இடப்படும் புள்ளிகள் சிவதத்துவம் ஆகும், பிறகு இடப்படும் கோலமும் காவியும் சக்தி தத்துவமாகும். நம் உடலில் வெள்ளை அணுக்களும், சிவப்பு அணுக்களும் சேர்ந்ததே நமது உடல் இயக்கம், அதுமட்டுமா ஜீவ (சக்தி) பொருள் வெண்ணிறமான சுக்கிலம் என்பட்டன, பெண்மையில் கருப்பையில் உள்ள சுரோணிதம் சிவப்பு நிறம், இவை இணைந்தால் ஆலயத்தின் கர்ப்பக்கிருகத்தில் பரப்பரும்மம் உண்டாகிறது, (தாயின் கருவறையிலும் இதுதானே) இல்லறத்தில் கணவன் மனைவி இணைந்தால் ஒரு தாயின் கர்ப்பக்கிருகத்தில் (கர்ப்பத்தில்) ஆணு மற்ற பெண்ணுமற்ற பரப்பிரம்மம் உண்டாகிறது. பிறகுதான் ஆண் - பெண் என்ற நிலையை பெறுகிறது. சிவம் - சக்தி என்ற இரண்டு (இவையின் ) வடிவமே நம் உடலின் உறுப்புகள் ஆகும். நமது உடலில் ( சிவம் - உயிர், சக்தி - உடல்) சிவசக்தி செயல்கள் இரண்டு மூளை இரண்டு - பெருமூளை, சிறுமூளை கண் இரண்டு - இடது, வலது காது இரண்டு இமை இரண்டு - மேல் இமை, கீழ் இமை மூக்கு இரண்டு வலது, இடது கண்ணம் இரண்டு - வலது, இடது வாய் இரண்டு - மேல் வாய் கீழ்வாய் பல்வரிசை இரண்டு - மேல், கீழ் வரிசை நாக்கு இரண்டு - வெளிநாக்கு உள்நாக்கு தொண்டை குழாய் இரண்டு - உணவுக்கு, காற்றுக்கு நுரையீரல் இரண்டு - வலது இடது குடல் 2 - பெருங்குடல் , சிறுகுடல் கால்கள் இரண்டு - வலது, இடது தோல் இரண்டு - அகத்தோல் புறத்தோல் குருதி - வெள்ளை, சிவப்பு இதயம் 2 - வலது ஆரிக்கள், இடது ஆரிக்கள் இடது புறம் சக்தியின் இருப்பிடம், அதில் இருதயம் மண்ணீரல் முதலிய உறுப்புகளும் வலதுபுறத்தில் சிவபெருமானின் இருப்பிடம், இங்கு கல்லீரல், பித்தப்பை, குடல் வால், ஆகிய உறுப்புக்கள் இருப்பது இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதம், உடலில் இருக்க வேண்டிய உறுப்புக்ள் அனைத்துமே சரியாக இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும், இந்த புவியை கொஞ்சம் நோக்குவோம், தட்பமும், வெப்பமும் சேர்ந்து எங்கும் காணப்படுகிறது. இதுவும் சிவசக்தி தத்துவமாகும் தட்பவெப்ப நிலை ஒரு மலர் மலராக இருக்க வேண்டும் என்றால் குளிர்ச்சியும், சூடும் சமமாக இருக்க வேண்டும், மலர் வாடினால் குளிர்ச்சி ( சக்தி) குறைந்து விட்டது என்றும், மலர் அழுகிவிட்டால் சூடு (சிவம்) குறைந்துவிட்டது என்றும் அர்த்தம். எனவே சூடு ஆகிய சிவமும், குளிர்ச்சி ஆகிய சக்தியும், ஒன்றையொன்று விட்டுவிடாமல் கலந்து மலரில் இருந்தால்தான் மலர் அழகுடன் இருக்கும், என்பது சிவசக்தி தத்துவம். நமது சரீரத்தில் தட்பமும் ( சக்தியும்) வெப்பமும்( சிவனும்) அமைந்திருக்கின்றன, சூடு குறைந்தால் உயிர் உடம்பில் (சக்தியில்) நிலைபெறுவதில்லை. சூடு குறைய சிவமாகிய உயிர் சவமாகிவிடுவார், சூடும் குளிர்ச்சியும் எல்லையற்றிருக்குமானால் அங்கு உயிர்கள் தோன்றுவதில்லை. உதாரணமாக, சூடு (சிவம்) குறைந்த, வடதுருவப்பிரதேசங்களிலும், குளிர்ச்சி (சக்தி) குறைந்த சகாராவிலும் உயிர்கள் இடர்ப்பட்டுத்தான் வாழ்கின்றன, "பேதை ஒரு பால் திருமேனி ஒன்றல்லன்" - திருவாசம் 7-10, தட்பத்தின் சூக்கும ஆற்றல் சக்தி - வெப்பத்தின் சூக்கும ஆற்றல் சிவம், இந்த இரு பொருள்களும் ஒரே பொருளின் இரு பகுதிகள் ஆகும். உடலில் குளிர்ச்சி அதிகமானால், சளி சம்பந்தமான நோய்களும், சூடு அதிகமானால் சுரம், மஞ்சள் காமாலை, முதலிய நோய்களும் தோன்றும், ஆகவே சக்தியும சிவமும் சமமாக இருப்பதே ஆரோக்கியம் ஆகும். "எது ஒன்றுமில்லையோ அதுதான் உலகம்" " எது உலகமோ அது ஒன்றில்லை" என்பதே சிவசக்தியின் மூலத் தத்துவமாகும், இந்த வாக்கியம் வேதத்தின் சாரம் ஆகும், ஆயிரம் ஆயிரம் செலவு செய்து பலமணி நேரம் உழைத்து ஒரு திருமணம் நடக்கிறது, அதன் சாரன் என்ன? திருமாங்கல்யத்தின் மூன்று முடிச்சுக்களுக்குத்தான், அதை நினைத்துப்பார்த்தால் ஒருசில நிமிட உறவுதான், அந்த சில நிமிட உறவு இல்லை என்றால் உலகம்இல்லை. ஆனால் அதுவே வாழ்க்கையில்லை, சிவமும் சக்தியுமே உலகம் ஆகும். அரிசி - பொருள், உமி - ஒன்றுமில்லை இப்படி இருந்தாலும், அரிசியை விடடு உமி பிரித்துவிட்டால் அரிசியை நிலத்தில இட்டால் முளைப்பதில்லை, உமியும் முளைப்பதில்லை, உமியின் துணைகொண்டு அரிச முளையாகிறது, ஒன்றுக்கும் பற்றாத பூஜ்யத்தை ( சிவத்தை) துணை கொள்வதால் எண் ( சக்தி) வளர்ச்சியடைகின்றது, என்பார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். பல மணி நேர உழைப்பின் சாரம் சம்பளமே ஆகும், அது வடிவத்தில் சிறியது,மதிப்பு பெரியது. ஆண் , பெண் சமம்,பெண்ணுக்கு ஆண் சமம், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதே வாழ்வின் சாரம்சம், தனித்த நிலையில் சக்தியை வழிபடும் மரபு பண்டைய சைவ உலகில் காணப்படவில்லை. சிவபெருமானின் ஒரு கூறாகவே சக்தியை கொள்வார்கள். திருக்கயிலையில் சிவபெருமானின் அருகில் காளையும், பராசக்தியும் அருகில் சிங்கமும் அமர்ந்திருப்பதைக் காணலாம், சிறிது சிந்தித்துப் பார்த்தால் இதில் வினோதம் ஒன்று இருப்பது விளங்கும், அவற்றின் இயல்புகள் ஒன்றுக்கு ஒன்று முரன்பட்டவை, ஒரே உலகில் அவைகள் வாழ்கின்றன அல்லவா? இது கயிலையில் மட்டுமல்ல, காணும்இடம் எங்கும் இயற்கையில் இதே காட்சிதான், பகல்-இரவு, துன்பம்- இன்பம், உயர்வு-தாழ்வு, தட்பம்-வெப்பம், என்ற சிவசக்தி தத்துவமே உலகம் ஆகும். சிவத்திடம் சக்தியையும், சக்தியிடம் சிவத்தையும், ஒன்றாகவே உள்ள தத்துவத்தை தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருப்புகழ், கம்பராமாயணம், மற்றும் பல்வேறு திருமுறைகளில் இன்றும் காண முடிகிறது. ஆகவே நாமும், சிவ -சக்தியை வழிபட்டு தெய்வீக குணங்களை கடைப்பிடித்து ஞான ( சிவ-சக்தி) நிலை அடைவோம். திருச்சிற்றம்பலம் - ஒம் நமசிவாயம் மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

சிவ சக்தியின் தத்துவங்கள்


சிவ சக்தியின் தத்துவங்கள் உலகம், உயிர்கள் என்று அனைத்துமே ஒரு மூலப்பொருளில் இருந்தே தோன்றியது. உலகப்பிலானே எல்லா உலகமுடைய ஒரு மூர்த்தி திருவாய்மொழி, அதுவே பரப்பிரம்மம் எனப்பட்டது. அது ஆன், பெண், என்ற பலவேறுபாடு அற்றது. "ஆணல்லன், பெண்ல்லள்" (திருவாய் மொழி 2-5-10), அந்தப் பிரப்பிரம்மமே சிவம் என்று பிறகு சுட்டப்பட்டது. அந்தப் பரப்பிரம்மம் உலகசிருஸ்டியை நினைத்து ஆண, பெண் என்று தன்னையே பிறப்பித்தது, "பெண்ணாகி ஆணாய்" - திருவாசகம் சிவம் என்ற மூலப்பொருள் சிவன் ஆனது. சக்தி பெண்வடிவமாக மாறியது, இந்த நிலையில் சிவத்துள் சக்தியும், சக்தியுள் சிவமும் ஒன்றை ஒன்று மருவி உலகின் படைப்பு ஆரம்பம் ஆனது. இந்த உலகம் முதல் அனைத்துமே சிவ-சக்தியின் தத்துவமே ஆகும், (கீதை 14-3-4) சிவசக்தி ஐக்கியத்தை குறிக்கும், அர்த்த நாரீசுவர வடிவம் சிவனின் ஒருகூறு. இதனை மாதொரு பிரான் - என்கிறார் திருவாசகம் மாணிக்கவாசகர் பெருமானார். சிவ சக்தியின் தத்துவத்தில் சிவனிடத்தில் சக்தி சமபங்காக அடங்கியுள்ளதாக காட்டுகிறது. இதைப் போலவே சக்தி தத்துவத்தில் யோகமாயைத் தத்துவம் , சக்திக்குள் சிவம் போலவே சக்தி தத்துவத்தில் யோகமாயைத் தத்துவம் சக்திக்குள் சிவன் அடங்கிய தத்துவமாக குறிக்கிறது. இதனை யோகமளை என்று குறிப்பது வழக்கம். "சிவ" என்ற சொல் சிவனையும், சக்தியையும் குறிக்கும், "சி" என்பது சிவனையும் "வ" என்பது சக்திையும் குறிக்கும், சி வலிமையானது, வ மென்மையானது. சிவ சொரூபம் அனைத்து பொருட்களிலும் காணப்படும், நமது சமய ஆலயங்களில் ஒரு நீண்ட வெள்ளைக்கோடும் ஒரு நீண்ட சிவப்புக்கோடும் கலந்தவாறு வர்ணம் பூசியிருப்பதை காணலாம் அல்லவா? அது இதன் தத்துவத்தைக் குறிப்பதே ஆகும். சிவம் சக்தி இன்றி உலகமும் உடலும் இல்லை என்பதே இதன் தத்துவம். முதலில் தாவம் பற்றி காண்போம், உலகில் ஒரே வடிவத்தில் ஆண் (சிவம்) இயல்பும், பெண் (சக்தி) இயல்பும் இரண்டுமே சேர்ந்திருக்கின்றன, ஒரே மலரிலும் ஆண்பாகம்,(மகரந்தம்) பெண்பாகம் (சூலகம்)இரண்டுமே கலந்து இருக்கிறது. இவ்விரண்டின் சரிபாதிக் கூட்டுறவால் புதிய விதை உண்டாகிறது, சங்கமங்களுள் ஒவ்வொரு உயிரும், அதனதன் தாய் தந்தையரின் பாதிப்பாதி அம்சத்தைப் பெற்றே உண்டாகிறது. சைத்தன்யம் - ஜடம் ஆகிய இரண்டு தத்துவங்களை உடையது. "உயிர்த்தத்துவம் சிவம், உடல் தத்துவம் சக்தி, உயிரும் , உடலும் சேர்ந்ததே இயற்கையின் திட்டத்தை அமைக்கின்றன என்பார் சுவாமி சித்பவானந்தர், ஆலயங்களின் சுவர்களில் மட்டும் வெள்ளையும் சிவப்பும் மாறி இருக்கவில்லையா? இல்லங்களில் இடப்படும் கோலங்களில் கூட வெள்ளைக் கோலத்துடன் காவி என்ற சிவப்பும் கலந்துதானே கோலம் போடுகின்றனர், கோலத்தில் முதலில் இடப்படும் புள்ளிகள் சிவதத்துவம் ஆகும், பிறகு இடப்படும் கோலமும் காவியும் சக்தி தத்துவமாகும். நம் உடலில் வெள்ளை அணுக்களும், சிவப்பு அணுக்களும் சேர்ந்ததே நமது உடல் இயக்கம், அதுமட்டுமா ஜீவ (சக்தி) பொருள் வெண்ணிறமான சுக்கிலம் என்பட்டன, பெண்மையில் கருப்பையில் உள்ள சுரோணிதம் சிவப்பு நிறம், இவை இணைந்தால் ஆலயத்தின் கர்ப்பக்கிருகத்தில் பரப்பரும்மம் உண்டாகிறது, (தாயின் கருவறையிலும் இதுதானே) இல்லறத்தில் கணவன் மனைவி இணைந்தால் ஒரு தாயின் கர்ப்பக்கிருகத்தில் (கர்ப்பத்தில்) ஆணு மற்ற பெண்ணுமற்ற பரப்பிரம்மம் உண்டாகிறது. பிறகுதான் ஆண் - பெண் என்ற நிலையை பெறுகிறது. சிவம் - சக்தி என்ற இரண்டு (இவையின் ) வடிவமே நம் உடலின் உறுப்புகள் ஆகும். நமது உடலில் ( சிவம் - உயிர், சக்தி - உடல்) சிவசக்தி செயல்கள் இரண்டு மூளை இரண்டு - பெருமூளை, சிறுமூளை கண் இரண்டு - இடது, வலது காது இரண்டு இமை இரண்டு - மேல் இமை, கீழ் இமை மூக்கு இரண்டு வலது, இடது கண்ணம் இரண்டு - வலது, இடது வாய் இரண்டு - மேல் வாய் கீழ்வாய் பல்வரிசை இரண்டு - மேல், கீழ் வரிசை நாக்கு இரண்டு - வெளிநாக்கு உள்நாக்கு தொண்டை குழாய் இரண்டு - உணவுக்கு, காற்றுக்கு நுரையீரல் இரண்டு - வலது இடது குடல் 2 - பெருங்குடல் , சிறுகுடல் கால்கள் இரண்டு - வலது, இடது தோல் இரண்டு - அகத்தோல் புறத்தோல் குருதி - வெள்ளை, சிவப்பு இதயம் 2 - வலது ஆரிக்கள், இடது ஆரிக்கள் இடது புறம் சக்தியின் இருப்பிடம், அதில் இருதயம் மண்ணீரல் முதலிய உறுப்புகளும் வலதுபுறத்தில் சிவபெருமானின் இருப்பிடம், இங்கு கல்லீரல், பித்தப்பை, குடல் வால், ஆகிய உறுப்புக்கள் இருப்பது இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதம், உடலில் இருக்க வேண்டிய உறுப்புக்ள் அனைத்துமே சரியாக இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும், இந்த புவியை கொஞ்சம் நோக்குவோம், தட்பமும், வெப்பமும் சேர்ந்து எங்கும் காணப்படுகிறது. இதுவும் சிவசக்தி தத்துவமாகும் தட்பவெப்ப நிலை ஒரு மலர் மலராக இருக்க வேண்டும் என்றால் குளிர்ச்சியும், சூடும் சமமாக இருக்க வேண்டும், மலர் வாடினால் குளிர்ச்சி ( சக்தி) குறைந்து விட்டது என்றும், மலர் அழுகிவிட்டால் சூடு (சிவம்) குறைந்துவிட்டது என்றும் அர்த்தம். எனவே சூடு ஆகிய சிவமும், குளிர்ச்சி ஆகிய சக்தியும், ஒன்றையொன்று விட்டுவிடாமல் கலந்து மலரில் இருந்தால்தான் மலர் அழகுடன் இருக்கும், என்பது சிவசக்தி தத்துவம். நமது சரீரத்தில் தட்பமும் ( சக்தியும்) வெப்பமும்( சிவனும்) அமைந்திருக்கின்றன, சூடு குறைந்தால் உயிர் உடம்பில் (சக்தியில்) நிலைபெறுவதில்லை. சூடு குறைய சிவமாகிய உயிர் சவமாகிவிடுவார், சூடும் குளிர்ச்சியும் எல்லையற்றிருக்குமானால் அங்கு உயிர்கள் தோன்றுவதில்லை. உதாரணமாக, சூடு (சிவம்) குறைந்த, வடதுருவப்பிரதேசங்களிலும், குளிர்ச்சி (சக்தி) குறைந்த சகாராவிலும் உயிர்கள் இடர்ப்பட்டுத்தான் வாழ்கின்றன, "பேதை ஒரு பால் திருமேனி ஒன்றல்லன்" - திருவாசம் 7-10, தட்பத்தின் சூக்கும ஆற்றல் சக்தி - வெப்பத்தின் சூக்கும ஆற்றல் சிவம், இந்த இரு பொருள்களும் ஒரே பொருளின் இரு பகுதிகள் ஆகும். உடலில் குளிர்ச்சி அதிகமானால், சளி சம்பந்தமான நோய்களும், சூடு அதிகமானால் சுரம், மஞ்சள் காமாலை, முதலிய நோய்களும் தோன்றும், ஆகவே சக்தியும சிவமும் சமமாக இருப்பதே ஆரோக்கியம் ஆகும். "எது ஒன்றுமில்லையோ அதுதான் உலகம்" " எது உலகமோ அது ஒன்றில்லை" என்பதே சிவசக்தியின் மூலத் தத்துவமாகும், இந்த வாக்கியம் வேதத்தின் சாரம் ஆகும், ஆயிரம் ஆயிரம் செலவு செய்து பலமணி நேரம் உழைத்து ஒரு திருமணம் நடக்கிறது, அதன் சாரன் என்ன? திருமாங்கல்யத்தின் மூன்று முடிச்சுக்களுக்குத்தான், அதை நினைத்துப்பார்த்தால் ஒருசில நிமிட உறவுதான், அந்த சில நிமிட உறவு இல்லை என்றால் உலகம்இல்லை. ஆனால் அதுவே வாழ்க்கையில்லை, சிவமும் சக்தியுமே உலகம் ஆகும். அரிசி - பொருள், உமி - ஒன்றுமில்லை இப்படி இருந்தாலும், அரிசியை விடடு உமி பிரித்துவிட்டால் அரிசியை நிலத்தில இட்டால் முளைப்பதில்லை, உமியும் முளைப்பதில்லை, உமியின் துணைகொண்டு அரிச முளையாகிறது, ஒன்றுக்கும் பற்றாத பூஜ்யத்தை ( சிவத்தை) துணை கொள்வதால் எண் ( சக்தி) வளர்ச்சியடைகின்றது, என்பார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். பல மணி நேர உழைப்பின் சாரம் சம்பளமே ஆகும், அது வடிவத்தில் சிறியது,மதிப்பு பெரியது. ஆண் , பெண் சமம்,பெண்ணுக்கு ஆண் சமம், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதே வாழ்வின் சாரம்சம், தனித்த நிலையில் சக்தியை வழிபடும் மரபு பண்டைய சைவ உலகில் காணப்படவில்லை. சிவபெருமானின் ஒரு கூறாகவே சக்தியை கொள்வார்கள். திருக்கயிலையில் சிவபெருமானின் அருகில் காளையும், பராசக்தியும் அருகில் சிங்கமும் அமர்ந்திருப்பதைக் காணலாம், சிறிது சிந்தித்துப் பார்த்தால் இதில் வினோதம் ஒன்று இருப்பது விளங்கும், அவற்றின் இயல்புகள் ஒன்றுக்கு ஒன்று முரன்பட்டவை, ஒரே உலகில் அவைகள் வாழ்கின்றன அல்லவா? இது கயிலையில் மட்டுமல்ல, காணும்இடம் எங்கும் இயற்கையில் இதே காட்சிதான், பகல்-இரவு, துன்பம்- இன்பம், உயர்வு-தாழ்வு, தட்பம்-வெப்பம், என்ற சிவசக்தி தத்துவமே உலகம் ஆகும். சிவத்திடம் சக்தியையும், சக்தியிடம் சிவத்தையும், ஒன்றாகவே உள்ள தத்துவத்தை தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருப்புகழ், கம்பராமாயணம், மற்றும் பல்வேறு திருமுறைகளில் இன்றும் காண முடிகிறது. ஆகவே நாமும், சிவ -சக்தியை வழிபட்டு தெய்வீக குணங்களை கடைப்பிடித்து ஞான ( சிவ-சக்தி) நிலை அடைவோம். திருச்சிற்றம்பலம் - ஒம் நமசிவாயம் மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

வெள்ளி, 23 ஜனவரி, 2015

பூனையை வேதம் சொல்ல வைத்த சித்தர் போகர்


பூனையை வேதம் சொல்ல வைத்த சித்தர் போகர் பழனி முருகன் கோவிலில் உள்ள முருகன் சிலை நவ பாசானத்தால் ஆனது என்று நமக்கெல்லாம் தெரியும், ஆனால் அந்த சிலை யாரால் செய்யப்பட்டது என்பது தெரியாது. சதுரகிரி தலப்புராண நூலில் கூறப்பட்டுள்ள வரலாற்றை படித்துப் பார்த்தால் முருகன் சிலை போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது என்பது தெரிகிறது. சித்தர் போகர், இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரம் அறிந்தவர். உலோகங்களை ரசவாதத்தினால் பொன்னாக்கும் வித்தை அறிந்தவர், திருசெங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வர் நவபாசானத்தால் உருவாக்கியவர் போகரே. அவருடைய பூர்வீகம் சீன நாடு. தாய் தந்தையர் சலவைத் தொழிலாளிகள் என்றும் வரலாற்றில் காணலாம். எதனால் அப்படி குறிப்பிட்டு இஇருக்கிறார்கள் என்றால் அவர் எழுதியுள்ள தமிழ் மொழியில் எழுதியிருப்பதை விட சீன மொழியில் எழுதி இருப்பது அதிகம், போகர் எப்படி சித்தர் ஆனார் என்பதைப் பார்ப்போம். மேருமலையில் சுற்றி போகர் வந்து கொண்டு இருந்தபோது ஒன்பது சித்தர்கள் ஐயக்கியமாகி இருந்த இடம் கண்ணில் பட்டது, அவர் மனதில் ஏதோ தோன்ற அந்த சமாதிகளின் முன்பு அன்ன ஆகாரமின்றி அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி தவம் இருந்தார், சில காலம் கழித்து சமாதியில் இருந்து 9 சித்தர்களும் அவருக்கு தரிசனம் கொடுத்து இறந்தவர்களை பிழைக்க வைக்கும் காயகல்ப முறையை உபதேசம் செய்தார்கள். இந்த சஞ்சீவி மந்திரத்தை யாரால் மக்களுக்கு நன்மை கிடைக்குமோ அவர்களுக்கு மட்டுமே உபதேசம் செய் என்று கூறி மீண்டும் சமாதியில் ஐயக்கிமாகிவிட்டார்கள். பின் போகர் அங்கிருந்து கிளம்பி சிவலிங்கம் உள்ள தலங்களை தரிசித்து வந்துகொண்டிருந்தார். அடர்ந்த காட்டை கடந்து வரும்போது ஒரு புற்று கண்ணில் பட்டது புற்றின் அருகே சென்றபோது மூச்சுக் காற்று வருவதை உணர்ந்தார். புற்றின் முன்னே ஏன், எதற்கு என்று அறியாமலேயே மனத்தின் கட்டளைப்படி தியானத்தில் அமர்ந்தார். பல நாட்கள் தியான நிலையிலேயே அமர்ந்து இருந்தார். ஒருநாள் காலை பொழுதில் புற்றை உடைத்துக் கொண்டு ஒரு முனிவர் வந்து போகரின் தியானத்தை கலைத்தார். கண்களை கூசச் செய்யும் பிரகாசமான முகத்தையுடைய அந்த முனிவரைப் பார்த்ததும் போகர் வணங்கினார். அந்த முனிவர் " போகரே உன்னால் மக்களுக்கு நன்மை உண்டாகட்டும்" என்று கூறி அருகே இருந்த மரத்தை காட்டி மரத்திலுள்ள பழங்கள் பழுத்து குலுங்கி இருந்த நிலையைக் காட்டி அந்த பழத்தை சாப்பிட்டால் பசி என்பதே அணுகாது. நீ செய்யும் தவத்திற்கு பெரும் துணையாக இருக்கும் என்று கூறி பேசும் சிலை ஒன்றையும் கொடுத்து விட்டு மீண்டும் புற்றில் அமர்ந்து தியானத்தில் அமர்ந்தார். சிலையை கையில் வாங்கிக் கொண்ட போகர் அருகிலுள்ள முனிவர் காட்டிய மரத்தின் பழங்களை எடுத்து சாப்பிட்டார். மனம் மட்டுமல்ல, உடலும் இளமையாக மாறியது. கையில் இருந்த சிலை, இளமையான மாற்ற வைத்த பழத்தின் ரகசியத்தையும், மற்றும பல மூலிகைகளின் ரகசியத்தையும் கூறியது,ஆச்சிரயத்தில் ஆழ்ந்த போகர், சிலையை தரையில் வைத்து விடடு அருகே அமர்ந்தார், அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டு பள்ளத்தில் அந்த சிலை மறைந்தது. சிவன் சித்தத்தை தெளியவைத்தார், எனறு நினைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். அவர் பெரிய சித்தர் என்பதை அறியாமல் எதிரில் வந்த அந்தனர்கள் சிலர் போகரின் கோலத்தைக் கண்டு ஏளனம் செய்தனர், போகரோ அவர்களின் ஏழ்மையை போக்க எண்ணினார், ஞானத்தை உபதேசிக்க வேண்டும்என்று நினைத்தார், உடனே சற்று தூரத்தில் ஒரு பூனை ஒன்று கண்ணில் பட்டது, பூனை அருகே அமர்ந்து வேதத்தை அதன் காதில் ஓதி, பேசும் திறனை கொடுத்தார். பூனை வேத மந்திரங்களை வீதியில் அமர்ந்து கூறத் தொடங்கியது. இதைப் பார்த்த அந்தணர்கள் போகர் பித்தனல்ல. சித்தர் என்பதை புரிந்து கொண்டு எங்களை மன்னிக்க வேண்டும் என்று கூறி அவர்கள் போகரை தங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர், அவருக்கு அன்னமிட்டு மகிழ்வித்தனர். மனதில் சந்தோசத்துடன் அவர்கள் வீடுகளில் இருந்த உலோக பொருட்களை ரசவாதத்தினால் தங்கமாக மாற்றினார், அந்தணர்கள் சித்தரின் திறன் கண்டு அதிசயத்தினர். வேதங்களை உபதேசித்து எல்லோரையும் மேன்மையுறச் செய்தார். பழனிமலையில் தவம் செய்யும் போது முருகப் பெருமான் அவருக்கு காட்சி கொடுத்து என்னை விக்ரமாக செய்து இந்த இடத்தில் பிரதிஸ்டை செய் என்று கூறி மறைந்தார். அதன் படி நவபாசானம் என்ற ஒன்பது வித மூலிகை கலவையால் முருகனின் மூல விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார். அதன் பின் பழனி மலையிலேயே வாழ்ந்த சித்தர் அங்கேயே ஜீவ சமாதி ஆனார். இன்றும பழனி மலையில் உள்ள கோவிலின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் சித்தர் போகரின் ஜீவசமாதி உள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிரம்ப பெற்றவர் சித்தர் போகர், செவ்வாய் தோசம் உள்ளவர்கள் செவ்வாய் கிழமைகளில் இவரை வழிபட்டால் செவ்வாய் தோசம் நீங்கி நல்அருள் பெறுவர். திருசிற்றம்பலம்

புதன், 21 ஜனவரி, 2015

திருமுறைகளில் வாழ்வியல்


திருமுறைகளில் வாழ்வியல் இந்த உடம்பும் உலக வாழ்வும் நிலையில்லாதன என்பதை யாவரும் அறிவோம். பலப்பல நூல்களும் இதைச் சொல்கின்றன. பத்தாவது தமிழ்வேதமாகிய திருமந்திரமும் யாக்கை நிலையாமையைப் பற்றி கூறுகின்றது, ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கி பிணமென்று பேரிட்டு சூரையங் காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே. திருமந்திரம் நிலையில்லா இந்த உடம்பையும் உலகையும் இறைவர் நமக்கு அளித்துள்ளார் என்றால், அதில் ஒரு நோக்கம் கட்டாயம் இருக்கும், இறைவருடைய செயல் நமக்கு எப்பொழுதும் நன்மையையே அளிக்கும், நிலையில்லா இந்த உடம்பையும் உலகையும்பயன்படுத்தி நிலையான புண்ணியங்களை பெற்றிட வேண்டும். புண்ணியத்தின் பயனாக ஆன்மாக்கள் மேல் நிலை அடையும், இன்று கொல் அன்று கொல் என்றுகொல் என்னாது பின்றையே நின்றது கூற்றம் என்று எண்ணி ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால் மருவுமின் மாண்டார் அறம். இறப்பு இன்றுவரும் நாளைவரும் என்று எண்ணி இருக்க வேண்டாம், எமன் பின்புறத்திலேயே நின்று கொண்டிருக்கின்றார், என்று நினைத்துத் தீய செயல்களை விட்டு விலக வேண்டும், அவரவர் தகுதிக்கு ஏற்ப மாண்புடைய சான்றோர் போற்றிய தருமங்களை செய்ய வேண்டும். குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி நொந்து இருமி ஏங்கி நுரைத் தேறி - வந்துந்தி ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே ஐயாறு வாயால் அழை. ஐடிகள் காடவர்கோன் திருமுறை 11 கோழை (சளி) தொண்டையில் மிகுதியாகி அடைத்து வாய்வழியே வந்து உயிர் உடலைவிட்டு பிரிவதன் முன் திருவையாற்றில் எழுந்தருளியுள்ள சிவபொருமானாரை வழிபட்டு சிவபுண்ணியத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார் நாயனார், நிலையில்லா இந்த உடலைப் பெற்ற நாம் வாழும்வழி: எப்போதும் புண்ணியங்களையே செய்தல் வேண்டும் பாவங்களை செய்யாமலிருக்க வேண்டும் நல்லவர்களுடன் மட்டுமே சேர வேண்டும் நல்லவர் அல்லாதவர்களுடன் ஒருபோதும் சேரக்கூடாது அகந்தை இன்றி இருக்க வேண்டும் ஆடம்பரமின்றி இருத்தல் வேண்டும் இரவில் சுற்றுவதும் பகலில் தூங்குவதும் கூடாது ஐம்புலங்களையும் கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும் அதிக உணவு உட்கொள்ளல் உண்ணாமல் இருத்தல் கூடாது கொலை களவு கெட்ட பழக்கவழக்கங்கள் செய்யாதிருக்க வேண்டும் தற்புகழ்ச்சி கூடாது பிறரை நிந்தித்தல் கூடாது கிடைத்ததைக் கொண்டு மன நிறைவுடன் வாழ வேண்டும் தமிழ் வேதங்கள் அன்றாடம் ஓதுதல் வேண்டும் பிறருக்கு நன்மை தரக்கூடியதையே செய்தல் , பேசுதல் வேண்டும் எந்த உயிருக்கும் தீமை செய்யாதிருக்க வேண்டும் எல்லோரிடமும் எளிமையாக பழகுதல் வேண்டும் இனிமையாக பேச வேண்டும் உண்மையையே பேச வேண்டும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் வரும் துன்பங்களை நம் வினையால் வந்தவை என்ற தாங்கிக் கொள்ள வேண்டும் பிறரிடம் உள்ள நல்லனவற்றை மட்டுமே பார்க்க வேண்டும் யாரைக் கண்டும் பொறாமைப் படாமலிருக்க வேண்டும் பிறருக்கு தானம் கொடுக்கும் பொழுது , கர்வம் இல்லாமல் கொடுக்க வேண்டும் அன்னையை தெய்வமாக போற்ற வேண்டும் தந்தைத் தெய்வமாக போற்ற வேண்டும் குருஅல்லது ஆசிரியரை தெய்வமாக போற்ற வேண்டும் வீட்டிற்கு வரும் புதியவரை (எளியவர்) தெய்வமாக போற்ற வேண்டும் சிவ நாமத்தை( சிவாயநம) எப்போதும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் ஆவை அனைத்தும் தமிழ் வேதங்களில் ஆங்காங்கே கூறப்படும் கருத்துக்கள் அழியும் இவ்வுடம்பைக் கொண்டு அழியாத - உடன் வரும் புண்ணியங்களைச் செய்து பலப்பல நன்மைகளையும் இனி பிறா நிலையும் வீடு பேறும் அடையலாம், திருச் சிற்றம்பலம் - ஒம் நமசிவாய நம நன்றி: தமிழ் வேதம் மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

பாம்பாட்டிச் சித்தர் / வரலாறு தமிழகம் போற்றும் சித்தர் பெருமக்களில் பாம்பாட்டிச் சித்தரும் ஒருவர் ஆவார். பாம்புகளைப் பிடிப்பது, படமெடுத்து ஆட வைத்து வேடிக்கை காட்டுவது இவரது தொழிலாகும். எத்தகைய பெரிய, கொடிய பாம்பாக இருந்தாலும் அதனை இவர் வெகு எளிதாகப் பிடித்து விடும் ஆற்றல் பெற்றவர். பாம்பு விஷத்தை முறிக்கும் மூலிகைகள் பலவற்றை இவர் நன்கறிந்திருந்தார். இவர் கோவைக்கு அருகிலுள்ள மருதமலையில் அந்தக் காலத்திலேயே விஷமுறிவு வைத்தியம் மற்றும் ஆய்வுக் கூடம் ஒன்றை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.ஒரு நாள் மலை மீது பெரிய நாகப்பாம்பு ஒன்றைப் பிடிக்க வேண்டி விரைந்து சென்றபோது இவர் சட்டை முனியைக் கண்டார். இவ்விருவரின் சந்திப்பு பற்றி போக முனிவர் தம் போகர் 7000-ல், புற்றருகில் சென்றுமல்லோ சித்தர் தாமும் பனிதமுள்ள நவரத்தினப் பாம்பு தன்னை வெற்றியுடன் தான் பிடிக்கப் போகும்போது வேதாந்தச் சட்டைமுனி அங்கிருந்தார். என்று கூறுகிறார். மேலும் சட்டை முனி தாம் கண்ட பாம்பாட்டிக்கு உபதேசம் செய்தருளினார். இதனால் காடுகளில் கொடிய பாம்புகளை பிடித்து நாடு நகரங்களில் சென்று பாம்புகலை ஆட வைத்து வேடிக்கை காட்டிப் பிழைப்பு நடத்தி வந்த பாம்பாட்டி சட்டை முனியின் பேரருளால் மெய்ஞ்ஞானப் பாலூண்டு நானிலம் போற்றும் சித்தராக மாறினார். சிறிது காலத்துக்கு சமாதி நிலையில் இருந்த பாம்பாட்டிச் சித்தர் பின் வெளிவந்து சித்துக்கள் பல புரிந்தபடி தேச சஞ்சாரம் செய்து வந்தார். ஒருநாள் அந்நாட்டு மன்னர் இறந்து போனார். அது கண்ட இவர் அவனுடம்பில் கூடு விட்டு கூடு பாய்ந்து அவரது மனைவியுடன் இருந்தபோது செத்த பாம்பு ஒன்றை உயிர்ப்பித்து ஆட வைத்தார். அதனால் இவர் பாம்பாட்டிச் சித்தர் என்ற பெயரைப் பெற்றார் என்று கூறுவோரும் உண்டு. வேறு சிலர் இவர் மன்னரது மனைவியுடன் அதிக நாட்கள் தங்கி விட்டதால், இவரது சீடர்கள் பாம்பாட்டிகளைப் போன்று வேடமிட்டு அரண்மனைக்குள் புகுந்து பாம்புகளை ஆட வைத்துப் பாடிய பாடல்களைக் கேட்டுத் தாம் யார் என்ற உண்மையை உணர்ந்து தம் பழைய உடம்பினுள் பிரவேசித்தார் என்று கூறுகின்றனர். எது எப்படி என்றாலும் இவரது வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது என்றே கூறலாம். ஒரு சமயம் பாண்டிய நாட்டின் எல்லைப் பகுதியில் இருந்த காடு ஒன்றில் ஏராளமான கொடிய பாம்புகள் இருந்தன. அப்போது பயந் என்பதை அறியாத இளைஞன் ஒருவன் அக்காட்டு வழியே வந்தான். படமெடுத்து ஆடிய நாகம் ஒன்றினை அவன் வரும் வழியில் கண்டான். அதன் ஆட்டம் அவனை வெகுவாகக் கவர்ந்தது. வெகுவாக ரசித்துச் சிரித்தான். அப்போது அக்கொடிய நாகம் அவன் மீது சீறிப் பாய்ந்தது. அது கண்டு கலங்காத அவன் அதனைப் பிடித்துத் தரையில் ஓங்கியடித்தான். அதனால் அப்பாம்பு இறந்து போனது. ஊர் திரும்பியவன் தன் நண்பர்களிடம் காட்டில் நடந்ததைக் கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டான். அப்போது அவனது நண்பர்கள் மிரண்டு, “அடேய்! அந்தக் காட்டு வழியே இனிமேல் போகாதே! கொடிய விஷப் பாம்புகள் அங்கு ஏராளமாக உள்ளன” என்று எச்சரித்தனர். ஆனால் அவனோ அவர்களது கூற்றை அலட்சியம் செய்தான். அடுத்த நாள் அவன் மீண்டும் காட்டுக்குள் வந்தான். அவனெதிரே சில பாம்புகள் வந்தன. அவற்றையும் அவன் கொன்றான். காலப்போக்கில் அவன் பாம்புகளைக் கொல்வதைத் தன் பொழுது போக்காகவே கொண்டான். ஒருநாள் மருத்துவர்கள் சிலர் வந்து இவனைச் சந்தித்தனர். “தம்பி!! நவரத்தினம் போன்று ஜொலிக்கும் குட்டையான பாம்பு ஒன்றிருக்கிறது. அதன் தலைப்பகுதியுள் மாணிக்கம் இருக்கும். அப்பாம்பு இரவுப் பொழுதில் மட்டுமே நடமாடும். அதனுடைய விஷம் ஒரு மருந்துக்குத் தேவைப்படுகிறது. பாம்புகளை எளிதில் பிடிப்பவனான நீ அப்பாம்பைப் பிடித்துக் கொடு” என்றார். அதற்குச் சம்மதித்த இளைஞன் உடனே காட்டுக்கு விரைந்து சென்றான். கண்ணில் தென்பட்ட புற்றுகளை எல்லாம் இடித்து அப்பாம்பைத் தேடினான். ஆனால் அது அவனுக்குக் கிடைக்கவில்லை. அதனால் அப்பாம்பைத் தேடி மேலும் அவன் காட்டுக்குள் முன்னேறிச் சென்றான். சற்று நேரத்தில் எவரோ வாய் விட்டுச் சிரிக்கும் சிரிப்பொலி காடு முழுவதுமாக எதிரொலித்தது. அதுகேட்ட அவன், “யார் அது? சிரித்தது யார் ? எவராக இருந்தாலும் சரி…. என் முன்னே வா….. என்று உரக்கக் கத்தினான்.” அப்போது ஒளியுடம்போடு சித்தர் ஒருவர் அவன் முன்பாக வந்து நின்றார். தன் எதிரே வந்து நின்றவரைக் கண்டதும் இளைஞன் வியந்தான். “இப்படியும் ஓர் உடம்பு இருக்குமா? என்று எண்ணியவாறு, நீங்கள் யார்? எதற்காக நீங்கள் சிரித்தீர்கள்? என்று வினவினான். அதற்க்கு அவர் “இளைஞனே! நான் சித்தர் பரம்பரையில் வந்தவன்! எதற்கும் உதவாத உன் செயலைப் பார்த்தேன். சிரிக்கத் தோன்றியது சிரித்தேன்” என்றார். சித்தர் கூறியதைக் கேட்ட இளைஞன், ஐயா… மாணிக்கக் கல்லைக் கொண்ட பாம்பைத் தேடி அலைவது பயனற்ற செயலா? என்று கேட்டான். அதற்கு அச்சித்தர், இளைஞனே…. பயம் என்னவென்றே தெரியாதவன் நீ.. வீரனான நீ விவேகம் இல்லாது இருக்கலாமா? உல்லாசமான உயர்ந்த ஒரு பாம்பு உன் உடம்பில் குடியிருக்கிறது. மனித உடம்புள் இருக்கும் அப்பாம்பை எவருமே அறியவில்லை. உனக்கும் தெரிய வில்லை. அதை ஆட்டுவிப்பவனே அறிஞன் ஆவான். அப்பாம்பை அடக்கி ஆளும் சிறப்பைப் பெற்றவர்களே சித்தர்கள். மற்றவர்கள் எல்லாரும் அப்பாம்புக்கு அடிமைப்பட்ட பைத்தியங்களே… என்றுரைத்துச் சிரித்தார். பயம் என்றால் என்னவென்றே அறியாத அந்த இளைஞன், முதன் முதலாக அச்சம் கொண்டு சித்தர் பெருமானை நோக்கினான். நடுக்கமுடன் அவரை வணங்க முயற்சித்தும் அவனால் இயலவில்லை. சட்டென அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கியவன் “சுவாமி! எனக்குள் ஓர் பாம்பு உள்ளது என்ற தகவலை இன்றுதான் உங்களால் நான் அறிந்தேன். ஆனால் அது என்ன பாம்பு என்று எனக்குப் புரியவில்லை. தயவு கூர்ந்து எனக்கு அது பற்றி விளக்குவீர்களா?” என்று வேண்டினான் அவனது வேண்டுதலை ஏற்ற சித்தர் பெருமான், “மனித உடல் ஓர் அற்புதம்ப் படைப்பு! இவ்வுடம்புள் காலம் காலமாக ஓர் பாம்பு உறக்க நிலையில் மூலாதாரச் சக்கரத்தில் உள்ளது. அதனை குண்டலினி என்ரு கூறுவர். சிவத்தை உணர்வு நிலையில் வாழும் பண்பாளர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். சுவாசம் ஒடுங்கினால் குண்டலினி என்னும் அப்பாம்பு சீறி எழும். தியானத்தின் வாயிலாக அதனை ஆட்டிப் படைக்கலாம். இதனால் ஆன்மா சித்தி அடையும்” என்றார். “சுவாமி, மாபெரும் இரகசியத்தை நான் இன்று மாதவச் சீலரான தங்கள் மூலம் அறிந்து கொண்டேன். தாங்கல் காட்டியருளிய வழியை இனி நான் கடைப்பிடிப்பேன். இது சத்தியம்!” என்றான். “மகனே! அவ்வாறு செய்தாயானால் நீ வெற்றி பெறுவாய்!” என்றுரைத்த சித்தர் பெருமான் அருள் ஒளியை அந்த இளைஞன் மீது பாய்ச்சியருளிவிட்டு சட்டென மறைந்தருளினார். அந்த இளைஞன் சந்தித்த சித்தர் பெருமானே சட்டைமுனி ஆவார். சித்தர் பெருமான் சென்ற திசை நோக்கி வணங்கிய இளைஞன் அங்கிருந்த அத்தி மரத்தடியில் அமர்ந்து, சித்தர் பெருமான் உரைத்து அருளியபடி தியானத்தில் அமர்ந்தான். தியான முடிவில், குண்டலினி சக்தியை முற்றிலுமாக உணர்ந்து அனுபவித்தான். “ஆஹா! பரமானந்தம் அளிக்கும் இந்த மெய்ஞ்ஞான சுகத்தை இதுநாள் வரையில் நாம் அறியாது இருந்தோமே!” என்று வேதனைப்பட்டான். அப்போது அவனுக்கு உபதேசித்தருளிய சித்தர் பெருமானான சட்டைமுனி அவன் முன்பாகத் தோன்றி, “மகனே! நான் உனக்கு உபதேசம் செய்தருளினேனே தவிர உன் பெயரைக் கூட நான் தெரிந்து கொள்ளவில்லை! நீயாவது உன் பெயரைக் கூறியிருக்கலாமே?” என்றார். அதற்கு அவன் “சுவாமி! கொடிய பாம்புகளை மட்டுமே பிடித்து ஆட வைத்துக் கொண்டிருந்த நான் குண்டலினிச் சக்தியால் உலகையே என்னுள் காணும் சக்தியை உபதேசித் தருளியவர் தாங்கள்! தங்களிடம் என் பெயரை என்னவென்று நான் கூறுவது? முன்பும் (பாம்பு) இப்போதும் (குண்டலினிப் பாம்பு) பாம்பைத் தான் பிடித்து என் விருப்பப்படி ஆட்டுவிக்கிறேன். அதனால் சுவாமி! என் பெயர் பாம்பாட்டி என்றே வைத்துக் கொள்ளுங்கள்” என்றான். அது கேட்டுச் சிரித்த சட்டைமுனி “ஆஹா! நீ நல்ல பெயரைக் கூறினாய். நீ பாம்பாட்டிச் சித்தனே! நீ வாழ்வாயாக!” என்றுரைத்து மறைந்தருளினார். தம் குருதேவரான சட்டையின் அருளாசியால் பாம்பாட்டிச் சித்தர் தியானத்தில் மீண்டும் ஆழ்ந்தார். சிறகடித்துப் பறந்து வந்து சித்திகள் அவரிடம் இரண்டறக் கலந்தன. கண்களைத் திறந்தார். அவருள் இருந்த சித்திகள்யாவும் வெளிப்பட்டன. இரும்பு செம்பானது, செம்பு பொன் ஆனது, மணல் சுவை மிகுந்த சர்க்கரையானது. தன் கரங்களால் கூழாங்கற்களை எடுத்து உற்றுப் பார்த்தார். உடனே அவை ஒளி வீசும் நவரத்தினக் கற்களாக மாறின. அது கண்டு பாம்பாட்டிச் சித்தர் சிரித்தார். என்ன வாழ்க்கை இது… நவரத்தினக் கல் கொண்ட பாம்பைத் தேடி நான் அலைந்தேன். அது கிடைக்கவே இல்லை. இப்போது சாதாரண கூழாங்கற்களையே நவரத்தினக் கற்களாக மாற்றிடும் சித்து வேலை தானாக என்னிடம் வந்துள்ளது. இதுதான் காலத்தின் கோலம் போலும். ச்சே…. வேண்டவே வேண்டாம் இவை… என்று கூறி அக்கற்களை வீசியெறிந்தார். தான் சந்தித்த மானிடர்களுக்குப் பாம்பாட்டிச் சித்தர் உபதேசம் செய்தருளினார். ஆனால் அவரிடம் வந்தோர் அனைவரும் அவரிடம் நடித்துத் தங்களது வாழ்வை வளமாக்கிக் கொண்டார்களே தவிர, நல்லவற்றை கடைப்பிடிப்பதில் அவர்கள் முயலவில்லை. அது கண்டு பாம்பாட்டிச் சித்தர் பெரிதும் வேதனைப் பட்டார். என்ன மனிதர்கள் இவர்கள்…. வயிற்றுப் பசிக்கு மட்டுமே இவர்கள் அலைகிறார்களே ஒழிய ஆன்மா என்று ஒன்று உண்டு. அதன் பசியை போக்க வேண்டும் என்று எண்ணம் துளியளவு கூட இல்லாதிருக்கிறார்களே… என்று அவர் வருந்தினார். இரவு, பகல் என அலைந்து திரிந்தார். பலரின் வியாதிகளைப் போக்கியருளினார். வறுமையால் வாடித் துன்புறும் ஏழை எளியோருக்கு இரசவாதம் மூலம் பொன்னைச் செய்து அவர்களது வறுமையைப் பாம்பாட்டிச் சித்தர் போக்கியருளினார். மன்னர் ஒருவர் கீழ்மக்களது சேர்க்கையால் செய்யத் தகாதவற்றை எல்லாம் செய்தார். இதனால் அம்மன்னரது உடல் இளைத்து மெலிந்தது. அடையாளமே தெரியாதவாறு அவர் உடல் இளைத்ததால் மிகவும் அவதிப்பட்டார். ஒருநாள் அம்மன்னர் நடந்து செல்லும் போது, கால் இடறிக் கீழே விழுந்தார். விழுந்தவர் எழுந்திருக்கவில்லை. ஆம்… இவர் இறந்து போனார். கலைகள் பலவற்றைக் கற்றறிந்த உத்தமக் குல மகளான அரசி, ஐயோ, எவ்வளவோ சொல்லியும் நீங்கள் திருந்தவே இல்லையே, இப்போது என்னைத் தனியே தவிக்கவிட்டுவிட்டுச் சென்று விட்டீர்களே… என்று கதறி அழுதாள். அரசியின் துயரைக் கண்டு குடிமக்களும் அமைச்சர்களும் மிகவும் வருந்தினர். அரண்மனையில் இருந்து வெளிவந்த அழுகை ஒலி விண்ணை எட்டியது. பாம்பாட்டிச் சித்தரின் செவிகளில் இந்த அழுகை ஒலி விழுந்தது. உடனே அவர் விண்ணில் இருந்து பூமிக்கு வந்தார். பூமியை அடைந்ததும் அவர் தம் உடலை ஒருபுறமாக வைத்துவிட்டு, செத்த பாம்பு ஒன்றை எடுத்து இறந்த மன்னர் உடலைச் சுற்றி அழுது கொண்டிருந்தவர்களின் மத்தியில் வீசியெறிந்தார். தங்களிடையே விழுந்தது செத்த பாம்பு என்பதை அறியாது அனைவரும் அலறியடித்து ஓடினர். பாம்பாட்டிச் சித்தர் அருவமாக இறந்த மன்னர் உடலருகே வந்தார். உடனே மன்னர் உடம்பினுள் அவர் கூடு விட்டு கூடு பாயும் கலைப்படி புகுந்தார் உடனே இறந்த மன்னரின் உடம்பு உயிர் பெற்று மெல்ல அசைந்தது. கண்கள் சட்டெனத் திறந்தன. அரசர் எழுந்து அமர்ந்தார். அது கண்டு அரசியும், அமைச்சர்களும், கூடியிருந்தோரும், மன்னர் இறக்கவில்லை. உயிருடன்தான் உள்ளார், என்று மகிழ்ந்து கூவினர். அரசி தன் கழுத்தில் அணிந்திருந்த திருமாங்கல்யத்தை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள். மிகவும் மகிழ்ந்த அவள் அவரைத் தழுவிடத் தனது கரங்களை நீட்டினாள். அதுகண்டு சட்டென விலகிய மன்னர் அங்கு தரையில் கிடந்த உயிரற்ற பாம்பின் உடலைப் பார்த்து, எழு பாம்பே… நான் எழுந்து விட்டேன். நீயும் எழுந்திருக்கலாமே என்றார். உடனே செத்த பாம்பு உயிர் பெற்று மெல்ல நெளிந்து நகர்ந்தது. அனைவரும் அது கண்டு வியந்தனர். பாம்பு வெளியே செல்ல முற்படுவதைக் கண்ட மன்னர், பாம்பே… எங்கே போகிறாய் நீ.. என்ன அரவரம் உனக்கு உன் மனைவி, மக்கள் நினைவு வந்து விட்டதோ.. சீச்சீ…. செத்துப் போன நீ இப்போது உயிர் பெற்றுச் செல்கிறாய் ஏமாறாதே உருப்படும் வழியைப் பார் என்றார். அவரது கூற்று ஆடு பாம்பே, ஆடு பாம்பே… என்று முடியும் பாடல்களாகவே வெளி வந்தன. அரிய உபதேசங்களைக் கொண்ட அப்பாடல்களுக்கு ஏற்றபடி அப்பாம்பும் படமெடுத்து ஆடியது. மன்னரது பாடல்களையும் அவர் பாடியதற்கு ஏற்ப பாம்பு படமெடுத்து ஆடியதையும் கண்டு அனைவரும் வியந்தனர். மன்னர் உருவில் இருப்பவர் பாம்பாட்டிச் சித்தரே என்பதை உணராது அவர்கள் குழப்பம் அடைந்தனர். மன்னரது பாடல்களைக் கேட்ட அரசி, ஒரு நாட்டையே ஆளும் நம் மன்னர் செத்துப் பிழைத்த பின் தத்துவமழையாகப் பொழிகிறாரே… இது எப்படி. என்று புரியாது தவித்தாள். அரசியின் எண்ணத்தை உணர்ந்த மன்னர், செல்வத்தில் மூழ்கிச் சீர் கெட்டுப் போவதில் என்ன லாபம் உண்டாகப் போகிறது. பரமனையே நினை. பேரின்பம் கிட்டும். என்று பாடலாகப் பாடினார். என்ன விந்தை இது. நான் உள்ளத்தில் நினைத்ததைப் பாடலாகப் பாடுகிறாரே… எப்படி. பாலும், பழமும் உண்டு எந்நேரமும் பெண் மோகத்தில் மூழ்கிய இவர், பரமனை சிந்தையில் வை, என்று கூறுகிறாரே… என்று வியந்தாள் அரசி. உடனே மன்னர் உருவிலிருந்த சித்தர் பாலும், பழமும் விழுங்கிய வாய், உயிர் போன பின், மண்ணையும் விழுங்கும் இதனை நீ மறக்கலாகுமா. என்று பொருள்படுமாறு பாடினார். அதுகேட்டு அரசி ஓர் முடிவுக்கு வந்தவளாய், சுவாமி உண்மையை மறைக்காது கூறுங்கள் தாங்கள் எங்களின் மன்னர் தானா அல்லது உத்தமமான ஓர் ஆத்மா என் மன்னரின் உடம்புள் புகுந்துள்ளதா. என்று பணிவுடன் கேட்டாள். அதற்கு மன்னராக இருந்த சித்தர், அரசியை நீ ஒரு விவேகி, அதனாலேயே நீ உண்மையை உணர்ந்து கொண்டாய். அறிவு என்ற அங்குசம் கொண்டு கோபம் என்னும் மதயானையைக் கொன்றவர்கள் நாங்கள், உன் கணவன் இறந்ததால் அழுது கொண்டிருந்த உனது அவல நிலையை மாற்றவே யாம் இறந்த உன் மன்னரது உடம்புள் புகுந்தோம் எமது பெயர் பாம்பாட்டிச் சித்தன் என்பதாகும், என்று கூறினார். அதுகேட்டு அரசி மெய்சிலிர்த்து சுவாமி என் துயரத்தை போக்கியருள வந்த தெய்வம் தாங்கள், இனி இந்த என் அரசரின் உடலின் நிலை என்னவாகும். நான் உய்ய என்ன செய்ய வேண்டும். வழிகாட்டி அருளவேண்டும் என்று பணிவுடன் வேண்டினாள். மனம் என்னும் குதிரையை அறிவு என்ற கடிவாளம் கொண்டு அடக்கிடு கோபத்தை விட்டொழி தெளிவு உனக்கு தானாக வரும், என்று சித்தர் உபதேசித்தருளினார். அவர் உபதேசம் செய்து முடித்ததும் மன்னரது உடல் உயிரற்ற உடலாகச் சட்டெனக் கீழே விழுந்தது. மன்னரது உடம்புள் இருந்து நீங்கிய பாம்பாட்டிச் சித்தர் மீண்டும் தம் உடம்புள் புகுந்தார். அதுவரை படமெடுத்து ஆடிக் கொண்டிருந்த பாம்பும் அங்கிருந்து அகன்று சென்றது. அங்கிருந்த அனைவரும் பயத்துடனும், வியப்புடனும் நிகழ்ந்தவை அனைத்தையும் கண்டனர். சித்தர் உபதேசத்தைத் தன் சிந்தையில் வைத்த அரசி, முறைப்படி மன்னரின் இறுதிக் கடன்களைச் செய்து முடித்தாள். பின் சித்தரது வழியில் வாழ்ந்து முக்தியடைந்தாள். பாம்பாட்டிச் சித்தர் விருத்தாசலத்தில் சித்தி அடைந்தார் என்றும் துவாரகையில் சித்தியடைந்தார் என்றும் பல செய்திகள் கூறப்படுகின்றன. திருக்கோகா்ணத்தில் பிறந்த பாம்பாட்டி சித்தர் பாண்டிய நாட்டில் வாழ்ந்தார் என்றும் மருத மலையில் வாழ்ந்தார் என்றும் முரண்பட்ட பல தகவல்கள் உள்ளன. ஆனாலும் அவர் மருதமலையில் வாழ்ந்தவர்தான் என்பதற்கு ஆதாரமாக அங்கு பாம்பாட்டிச் சித்தர் குகை, சுனை முதலானைவை உள்ளன. திரு சிற்றம்பலம் நன்றி ; தமிழ் கடல் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

பாம்பாட்டிச் சித்தர் / வரலாறு தமிழகம் போற்றும் சித்தர் பெருமக்களில் பாம்பாட்டிச் சித்தரும் ஒருவர் ஆவார். பாம்புகளைப் பிடிப்பது, படமெடுத்து ஆட வைத்து வேடிக்கை காட்டுவது இவரது தொழிலாகும். எத்தகைய பெரிய, கொடிய பாம்பாக இருந்தாலும் அதனை இவர் வெகு எளிதாகப் பிடித்து விடும் ஆற்றல் பெற்றவர். பாம்பு விஷத்தை முறிக்கும் மூலிகைகள் பலவற்றை இவர் நன்கறிந்திருந்தார். இவர் கோவைக்கு அருகிலுள்ள மருதமலையில் அந்தக் காலத்திலேயே விஷமுறிவு வைத்தியம் மற்றும் ஆய்வுக் கூடம் ஒன்றை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.ஒரு நாள் மலை மீது பெரிய நாகப்பாம்பு ஒன்றைப் பிடிக்க வேண்டி விரைந்து சென்றபோது இவர் சட்டை முனியைக் கண்டார். இவ்விருவரின் சந்திப்பு பற்றி போக முனிவர் தம் போகர் 7000-ல், புற்றருகில் சென்றுமல்லோ சித்தர் தாமும் பனிதமுள்ள நவரத்தினப் பாம்பு தன்னை வெற்றியுடன் தான் பிடிக்கப் போகும்போது வேதாந்தச் சட்டைமுனி அங்கிருந்தார். என்று கூறுகிறார். மேலும் சட்டை முனி தாம் கண்ட பாம்பாட்டிக்கு உபதேசம் செய்தருளினார். இதனால் காடுகளில் கொடிய பாம்புகளை பிடித்து நாடு நகரங்களில் சென்று பாம்புகலை ஆட வைத்து வேடிக்கை காட்டிப் பிழைப்பு நடத்தி வந்த பாம்பாட்டி சட்டை முனியின் பேரருளால் மெய்ஞ்ஞானப் பாலூண்டு நானிலம் போற்றும் சித்தராக மாறினார். சிறிது காலத்துக்கு சமாதி நிலையில் இருந்த பாம்பாட்டிச் சித்தர் பின் வெளிவந்து சித்துக்கள் பல புரிந்தபடி தேச சஞ்சாரம் செய்து வந்தார். ஒருநாள் அந்நாட்டு மன்னர் இறந்து போனார். அது கண்ட இவர் அவனுடம்பில் கூடு விட்டு கூடு பாய்ந்து அவரது மனைவியுடன் இருந்தபோது செத்த பாம்பு ஒன்றை உயிர்ப்பித்து ஆட வைத்தார். அதனால் இவர் பாம்பாட்டிச் சித்தர் என்ற பெயரைப் பெற்றார் என்று கூறுவோரும் உண்டு. வேறு சிலர் இவர் மன்னரது மனைவியுடன் அதிக நாட்கள் தங்கி விட்டதால், இவரது சீடர்கள் பாம்பாட்டிகளைப் போன்று வேடமிட்டு அரண்மனைக்குள் புகுந்து பாம்புகளை ஆட வைத்துப் பாடிய பாடல்களைக் கேட்டுத் தாம் யார் என்ற உண்மையை உணர்ந்து தம் பழைய உடம்பினுள் பிரவேசித்தார் என்று கூறுகின்றனர். எது எப்படி என்றாலும் இவரது வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது என்றே கூறலாம். ஒரு சமயம் பாண்டிய நாட்டின் எல்லைப் பகுதியில் இருந்த காடு ஒன்றில் ஏராளமான கொடிய பாம்புகள் இருந்தன. அப்போது பயந் என்பதை அறியாத இளைஞன் ஒருவன் அக்காட்டு வழியே வந்தான். படமெடுத்து ஆடிய நாகம் ஒன்றினை அவன் வரும் வழியில் கண்டான். அதன் ஆட்டம் அவனை வெகுவாகக் கவர்ந்தது. வெகுவாக ரசித்துச் சிரித்தான். அப்போது அக்கொடிய நாகம் அவன் மீது சீறிப் பாய்ந்தது. அது கண்டு கலங்காத அவன் அதனைப் பிடித்துத் தரையில் ஓங்கியடித்தான். அதனால் அப்பாம்பு இறந்து போனது. ஊர் திரும்பியவன் தன் நண்பர்களிடம் காட்டில் நடந்ததைக் கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டான். அப்போது அவனது நண்பர்கள் மிரண்டு, “அடேய்! அந்தக் காட்டு வழியே இனிமேல் போகாதே! கொடிய விஷப் பாம்புகள் அங்கு ஏராளமாக உள்ளன” என்று எச்சரித்தனர். ஆனால் அவனோ அவர்களது கூற்றை அலட்சியம் செய்தான். அடுத்த நாள் அவன் மீண்டும் காட்டுக்குள் வந்தான். அவனெதிரே சில பாம்புகள் வந்தன. அவற்றையும் அவன் கொன்றான். காலப்போக்கில் அவன் பாம்புகளைக் கொல்வதைத் தன் பொழுது போக்காகவே கொண்டான். ஒருநாள் மருத்துவர்கள் சிலர் வந்து இவனைச் சந்தித்தனர். “தம்பி!! நவரத்தினம் போன்று ஜொலிக்கும் குட்டையான பாம்பு ஒன்றிருக்கிறது. அதன் தலைப்பகுதியுள் மாணிக்கம் இருக்கும். அப்பாம்பு இரவுப் பொழுதில் மட்டுமே நடமாடும். அதனுடைய விஷம் ஒரு மருந்துக்குத் தேவைப்படுகிறது. பாம்புகளை எளிதில் பிடிப்பவனான நீ அப்பாம்பைப் பிடித்துக் கொடு” என்றார். அதற்குச் சம்மதித்த இளைஞன் உடனே காட்டுக்கு விரைந்து சென்றான். கண்ணில் தென்பட்ட புற்றுகளை எல்லாம் இடித்து அப்பாம்பைத் தேடினான். ஆனால் அது அவனுக்குக் கிடைக்கவில்லை. அதனால் அப்பாம்பைத் தேடி மேலும் அவன் காட்டுக்குள் முன்னேறிச் சென்றான். சற்று நேரத்தில் எவரோ வாய் விட்டுச் சிரிக்கும் சிரிப்பொலி காடு முழுவதுமாக எதிரொலித்தது. அதுகேட்ட அவன், “யார் அது? சிரித்தது யார் ? எவராக இருந்தாலும் சரி…. என் முன்னே வா….. என்று உரக்கக் கத்தினான்.” அப்போது ஒளியுடம்போடு சித்தர் ஒருவர் அவன் முன்பாக வந்து நின்றார். தன் எதிரே வந்து நின்றவரைக் கண்டதும் இளைஞன் வியந்தான். “இப்படியும் ஓர் உடம்பு இருக்குமா? என்று எண்ணியவாறு, நீங்கள் யார்? எதற்காக நீங்கள் சிரித்தீர்கள்? என்று வினவினான். அதற்க்கு அவர் “இளைஞனே! நான் சித்தர் பரம்பரையில் வந்தவன்! எதற்கும் உதவாத உன் செயலைப் பார்த்தேன். சிரிக்கத் தோன்றியது சிரித்தேன்” என்றார். சித்தர் கூறியதைக் கேட்ட இளைஞன், ஐயா… மாணிக்கக் கல்லைக் கொண்ட பாம்பைத் தேடி அலைவது பயனற்ற செயலா? என்று கேட்டான். அதற்கு அச்சித்தர், இளைஞனே…. பயம் என்னவென்றே தெரியாதவன் நீ.. வீரனான நீ விவேகம் இல்லாது இருக்கலாமா? உல்லாசமான உயர்ந்த ஒரு பாம்பு உன் உடம்பில் குடியிருக்கிறது. மனித உடம்புள் இருக்கும் அப்பாம்பை எவருமே அறியவில்லை. உனக்கும் தெரிய வில்லை. அதை ஆட்டுவிப்பவனே அறிஞன் ஆவான். அப்பாம்பை அடக்கி ஆளும் சிறப்பைப் பெற்றவர்களே சித்தர்கள். மற்றவர்கள் எல்லாரும் அப்பாம்புக்கு அடிமைப்பட்ட பைத்தியங்களே… என்றுரைத்துச் சிரித்தார். பயம் என்றால் என்னவென்றே அறியாத அந்த இளைஞன், முதன் முதலாக அச்சம் கொண்டு சித்தர் பெருமானை நோக்கினான். நடுக்கமுடன் அவரை வணங்க முயற்சித்தும் அவனால் இயலவில்லை. சட்டென அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கியவன் “சுவாமி! எனக்குள் ஓர் பாம்பு உள்ளது என்ற தகவலை இன்றுதான் உங்களால் நான் அறிந்தேன். ஆனால் அது என்ன பாம்பு என்று எனக்குப் புரியவில்லை. தயவு கூர்ந்து எனக்கு அது பற்றி விளக்குவீர்களா?” என்று வேண்டினான் அவனது வேண்டுதலை ஏற்ற சித்தர் பெருமான், “மனித உடல் ஓர் அற்புதம்ப் படைப்பு! இவ்வுடம்புள் காலம் காலமாக ஓர் பாம்பு உறக்க நிலையில் மூலாதாரச் சக்கரத்தில் உள்ளது. அதனை குண்டலினி என்ரு கூறுவர். சிவத்தை உணர்வு நிலையில் வாழும் பண்பாளர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். சுவாசம் ஒடுங்கினால் குண்டலினி என்னும் அப்பாம்பு சீறி எழும். தியானத்தின் வாயிலாக அதனை ஆட்டிப் படைக்கலாம். இதனால் ஆன்மா சித்தி அடையும்” என்றார். “சுவாமி, மாபெரும் இரகசியத்தை நான் இன்று மாதவச் சீலரான தங்கள் மூலம் அறிந்து கொண்டேன். தாங்கல் காட்டியருளிய வழியை இனி நான் கடைப்பிடிப்பேன். இது சத்தியம்!” என்றான். “மகனே! அவ்வாறு செய்தாயானால் நீ வெற்றி பெறுவாய்!” என்றுரைத்த சித்தர் பெருமான் அருள் ஒளியை அந்த இளைஞன் மீது பாய்ச்சியருளிவிட்டு சட்டென மறைந்தருளினார். அந்த இளைஞன் சந்தித்த சித்தர் பெருமானே சட்டைமுனி ஆவார். சித்தர் பெருமான் சென்ற திசை நோக்கி வணங்கிய இளைஞன் அங்கிருந்த அத்தி மரத்தடியில் அமர்ந்து, சித்தர் பெருமான் உரைத்து அருளியபடி தியானத்தில் அமர்ந்தான். தியான முடிவில், குண்டலினி சக்தியை முற்றிலுமாக உணர்ந்து அனுபவித்தான். “ஆஹா! பரமானந்தம் அளிக்கும் இந்த மெய்ஞ்ஞான சுகத்தை இதுநாள் வரையில் நாம் அறியாது இருந்தோமே!” என்று வேதனைப்பட்டான். அப்போது அவனுக்கு உபதேசித்தருளிய சித்தர் பெருமானான சட்டைமுனி அவன் முன்பாகத் தோன்றி, “மகனே! நான் உனக்கு உபதேசம் செய்தருளினேனே தவிர உன் பெயரைக் கூட நான் தெரிந்து கொள்ளவில்லை! நீயாவது உன் பெயரைக் கூறியிருக்கலாமே?” என்றார். அதற்கு அவன் “சுவாமி! கொடிய பாம்புகளை மட்டுமே பிடித்து ஆட வைத்துக் கொண்டிருந்த நான் குண்டலினிச் சக்தியால் உலகையே என்னுள் காணும் சக்தியை உபதேசித் தருளியவர் தாங்கள்! தங்களிடம் என் பெயரை என்னவென்று நான் கூறுவது? முன்பும் (பாம்பு) இப்போதும் (குண்டலினிப் பாம்பு) பாம்பைத் தான் பிடித்து என் விருப்பப்படி ஆட்டுவிக்கிறேன். அதனால் சுவாமி! என் பெயர் பாம்பாட்டி என்றே வைத்துக் கொள்ளுங்கள்” என்றான். அது கேட்டுச் சிரித்த சட்டைமுனி “ஆஹா! நீ நல்ல பெயரைக் கூறினாய். நீ பாம்பாட்டிச் சித்தனே! நீ வாழ்வாயாக!” என்றுரைத்து மறைந்தருளினார். தம் குருதேவரான சட்டையின் அருளாசியால் பாம்பாட்டிச் சித்தர் தியானத்தில் மீண்டும் ஆழ்ந்தார். சிறகடித்துப் பறந்து வந்து சித்திகள் அவரிடம் இரண்டறக் கலந்தன. கண்களைத் திறந்தார். அவருள் இருந்த சித்திகள்யாவும் வெளிப்பட்டன. இரும்பு செம்பானது, செம்பு பொன் ஆனது, மணல் சுவை மிகுந்த சர்க்கரையானது. தன் கரங்களால் கூழாங்கற்களை எடுத்து உற்றுப் பார்த்தார். உடனே அவை ஒளி வீசும் நவரத்தினக் கற்களாக மாறின. அது கண்டு பாம்பாட்டிச் சித்தர் சிரித்தார். என்ன வாழ்க்கை இது… நவரத்தினக் கல் கொண்ட பாம்பைத் தேடி நான் அலைந்தேன். அது கிடைக்கவே இல்லை. இப்போது சாதாரண கூழாங்கற்களையே நவரத்தினக் கற்களாக மாற்றிடும் சித்து வேலை தானாக என்னிடம் வந்துள்ளது. இதுதான் காலத்தின் கோலம் போலும். ச்சே…. வேண்டவே வேண்டாம் இவை… என்று கூறி அக்கற்களை வீசியெறிந்தார். தான் சந்தித்த மானிடர்களுக்குப் பாம்பாட்டிச் சித்தர் உபதேசம் செய்தருளினார். ஆனால் அவரிடம் வந்தோர் அனைவரும் அவரிடம் நடித்துத் தங்களது வாழ்வை வளமாக்கிக் கொண்டார்களே தவிர, நல்லவற்றை கடைப்பிடிப்பதில் அவர்கள் முயலவில்லை. அது கண்டு பாம்பாட்டிச் சித்தர் பெரிதும் வேதனைப் பட்டார். என்ன மனிதர்கள் இவர்கள்…. வயிற்றுப் பசிக்கு மட்டுமே இவர்கள் அலைகிறார்களே ஒழிய ஆன்மா என்று ஒன்று உண்டு. அதன் பசியை போக்க வேண்டும் என்று எண்ணம் துளியளவு கூட இல்லாதிருக்கிறார்களே… என்று அவர் வருந்தினார். இரவு, பகல் என அலைந்து திரிந்தார். பலரின் வியாதிகளைப் போக்கியருளினார். வறுமையால் வாடித் துன்புறும் ஏழை எளியோருக்கு இரசவாதம் மூலம் பொன்னைச் செய்து அவர்களது வறுமையைப் பாம்பாட்டிச் சித்தர் போக்கியருளினார். மன்னர் ஒருவர் கீழ்மக்களது சேர்க்கையால் செய்யத் தகாதவற்றை எல்லாம் செய்தார். இதனால் அம்மன்னரது உடல் இளைத்து மெலிந்தது. அடையாளமே தெரியாதவாறு அவர் உடல் இளைத்ததால் மிகவும் அவதிப்பட்டார். ஒருநாள் அம்மன்னர் நடந்து செல்லும் போது, கால் இடறிக் கீழே விழுந்தார். விழுந்தவர் எழுந்திருக்கவில்லை. ஆம்… இவர் இறந்து போனார். கலைகள் பலவற்றைக் கற்றறிந்த உத்தமக் குல மகளான அரசி, ஐயோ, எவ்வளவோ சொல்லியும் நீங்கள் திருந்தவே இல்லையே, இப்போது என்னைத் தனியே தவிக்கவிட்டுவிட்டுச் சென்று விட்டீர்களே… என்று கதறி அழுதாள். அரசியின் துயரைக் கண்டு குடிமக்களும் அமைச்சர்களும் மிகவும் வருந்தினர். அரண்மனையில் இருந்து வெளிவந்த அழுகை ஒலி விண்ணை எட்டியது. பாம்பாட்டிச் சித்தரின் செவிகளில் இந்த அழுகை ஒலி விழுந்தது. உடனே அவர் விண்ணில் இருந்து பூமிக்கு வந்தார். பூமியை அடைந்ததும் அவர் தம் உடலை ஒருபுறமாக வைத்துவிட்டு, செத்த பாம்பு ஒன்றை எடுத்து இறந்த மன்னர் உடலைச் சுற்றி அழுது கொண்டிருந்தவர்களின் மத்தியில் வீசியெறிந்தார். தங்களிடையே விழுந்தது செத்த பாம்பு என்பதை அறியாது அனைவரும் அலறியடித்து ஓடினர். பாம்பாட்டிச் சித்தர் அருவமாக இறந்த மன்னர் உடலருகே வந்தார். உடனே மன்னர் உடம்பினுள் அவர் கூடு விட்டு கூடு பாயும் கலைப்படி புகுந்தார் உடனே இறந்த மன்னரின் உடம்பு உயிர் பெற்று மெல்ல அசைந்தது. கண்கள் சட்டெனத் திறந்தன. அரசர் எழுந்து அமர்ந்தார். அது கண்டு அரசியும், அமைச்சர்களும், கூடியிருந்தோரும், மன்னர் இறக்கவில்லை. உயிருடன்தான் உள்ளார், என்று மகிழ்ந்து கூவினர். அரசி தன் கழுத்தில் அணிந்திருந்த திருமாங்கல்யத்தை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள். மிகவும் மகிழ்ந்த அவள் அவரைத் தழுவிடத் தனது கரங்களை நீட்டினாள். அதுகண்டு சட்டென விலகிய மன்னர் அங்கு தரையில் கிடந்த உயிரற்ற பாம்பின் உடலைப் பார்த்து, எழு பாம்பே… நான் எழுந்து விட்டேன். நீயும் எழுந்திருக்கலாமே என்றார். உடனே செத்த பாம்பு உயிர் பெற்று மெல்ல நெளிந்து நகர்ந்தது. அனைவரும் அது கண்டு வியந்தனர். பாம்பு வெளியே செல்ல முற்படுவதைக் கண்ட மன்னர், பாம்பே… எங்கே போகிறாய் நீ.. என்ன அரவரம் உனக்கு உன் மனைவி, மக்கள் நினைவு வந்து விட்டதோ.. சீச்சீ…. செத்துப் போன நீ இப்போது உயிர் பெற்றுச் செல்கிறாய் ஏமாறாதே உருப்படும் வழியைப் பார் என்றார். அவரது கூற்று ஆடு பாம்பே, ஆடு பாம்பே… என்று முடியும் பாடல்களாகவே வெளி வந்தன. அரிய உபதேசங்களைக் கொண்ட அப்பாடல்களுக்கு ஏற்றபடி அப்பாம்பும் படமெடுத்து ஆடியது. மன்னரது பாடல்களையும் அவர் பாடியதற்கு ஏற்ப பாம்பு படமெடுத்து ஆடியதையும் கண்டு அனைவரும் வியந்தனர். மன்னர் உருவில் இருப்பவர் பாம்பாட்டிச் சித்தரே என்பதை உணராது அவர்கள் குழப்பம் அடைந்தனர். மன்னரது பாடல்களைக் கேட்ட அரசி, ஒரு நாட்டையே ஆளும் நம் மன்னர் செத்துப் பிழைத்த பின் தத்துவமழையாகப் பொழிகிறாரே… இது எப்படி. என்று புரியாது தவித்தாள். அரசியின் எண்ணத்தை உணர்ந்த மன்னர், செல்வத்தில் மூழ்கிச் சீர் கெட்டுப் போவதில் என்ன லாபம் உண்டாகப் போகிறது. பரமனையே நினை. பேரின்பம் கிட்டும். என்று பாடலாகப் பாடினார். என்ன விந்தை இது. நான் உள்ளத்தில் நினைத்ததைப் பாடலாகப் பாடுகிறாரே… எப்படி. பாலும், பழமும் உண்டு எந்நேரமும் பெண் மோகத்தில் மூழ்கிய இவர், பரமனை சிந்தையில் வை, என்று கூறுகிறாரே… என்று வியந்தாள் அரசி. உடனே மன்னர் உருவிலிருந்த சித்தர் பாலும், பழமும் விழுங்கிய வாய், உயிர் போன பின், மண்ணையும் விழுங்கும் இதனை நீ மறக்கலாகுமா. என்று பொருள்படுமாறு பாடினார். அதுகேட்டு அரசி ஓர் முடிவுக்கு வந்தவளாய், சுவாமி உண்மையை மறைக்காது கூறுங்கள் தாங்கள் எங்களின் மன்னர் தானா அல்லது உத்தமமான ஓர் ஆத்மா என் மன்னரின் உடம்புள் புகுந்துள்ளதா. என்று பணிவுடன் கேட்டாள். அதற்கு மன்னராக இருந்த சித்தர், அரசியை நீ ஒரு விவேகி, அதனாலேயே நீ உண்மையை உணர்ந்து கொண்டாய். அறிவு என்ற அங்குசம் கொண்டு கோபம் என்னும் மதயானையைக் கொன்றவர்கள் நாங்கள், உன் கணவன் இறந்ததால் அழுது கொண்டிருந்த உனது அவல நிலையை மாற்றவே யாம் இறந்த உன் மன்னரது உடம்புள் புகுந்தோம் எமது பெயர் பாம்பாட்டிச் சித்தன் என்பதாகும், என்று கூறினார். அதுகேட்டு அரசி மெய்சிலிர்த்து சுவாமி என் துயரத்தை போக்கியருள வந்த தெய்வம் தாங்கள், இனி இந்த என் அரசரின் உடலின் நிலை என்னவாகும். நான் உய்ய என்ன செய்ய வேண்டும். வழிகாட்டி அருளவேண்டும் என்று பணிவுடன் வேண்டினாள். மனம் என்னும் குதிரையை அறிவு என்ற கடிவாளம் கொண்டு அடக்கிடு கோபத்தை விட்டொழி தெளிவு உனக்கு தானாக வரும், என்று சித்தர் உபதேசித்தருளினார். அவர் உபதேசம் செய்து முடித்ததும் மன்னரது உடல் உயிரற்ற உடலாகச் சட்டெனக் கீழே விழுந்தது. மன்னரது உடம்புள் இருந்து நீங்கிய பாம்பாட்டிச் சித்தர் மீண்டும் தம் உடம்புள் புகுந்தார். அதுவரை படமெடுத்து ஆடிக் கொண்டிருந்த பாம்பும் அங்கிருந்து அகன்று சென்றது. அங்கிருந்த அனைவரும் பயத்துடனும், வியப்புடனும் நிகழ்ந்தவை அனைத்தையும் கண்டனர். சித்தர் உபதேசத்தைத் தன் சிந்தையில் வைத்த அரசி, முறைப்படி மன்னரின் இறுதிக் கடன்களைச் செய்து முடித்தாள். பின் சித்தரது வழியில் வாழ்ந்து முக்தியடைந்தாள். பாம்பாட்டிச் சித்தர் விருத்தாசலத்தில் சித்தி அடைந்தார் என்றும் துவாரகையில் சித்தியடைந்தார் என்றும் பல செய்திகள் கூறப்படுகின்றன. திருக்கோகா்ணத்தில் பிறந்த பாம்பாட்டி சித்தர் பாண்டிய நாட்டில் வாழ்ந்தார் என்றும் மருத மலையில் வாழ்ந்தார் என்றும் முரண்பட்ட பல தகவல்கள் உள்ளன. ஆனாலும் அவர் மருதமலையில் வாழ்ந்தவர்தான் என்பதற்கு ஆதாரமாக அங்கு பாம்பாட்டிச் சித்தர் குகை, சுனை முதலானைவை உள்ளன. திரு சிற்றம்பலம் நன்றி ; தமிழ் கடல் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

வெள்ளி, 16 ஜனவரி, 2015

உடல் ஒரு ஓட்டைப்பாண்டம்


உடல் ஒரு ஓட்டைப்பாண்டம் முக்தி அடைவதற்கு மூன்று வழிகள் உண்டு. அவை கர்ம யோகம், ஞானயோகம், பக்தியோகம் என்பன. கர்ம யோகத்தை உடலாலும்,ஞானயோகத்தை அறிவினாலும் பக்தியோகத்தை மனதினாலும் வசப்படுத்தலாம். சித்தர்கள் வாழும் காலத்திலேயே மனதாலும் உடலாலும் முக்தி அடைந்தார்கள், நாற்றம் பிடித்தஅழுக்கு உடம்பை ஆபாசக்கொட்டிலை மாமிசம் நிறைந்த ஓட்டைத்துருத்தியை சோறிட்டு அடைக்கம தோற்பை - தசவாயுக்களாலும் நிறையப்பெற்ற நிலையற்ற பாத்திரமாகிய உடம்பின் மேல் நேசம் கொண்டு இத்தனை காலம் சுமந்து திரிந்து விட்டேனே என்று நினைக்கும் சித்தர்கள் அகக்கண்ணால் இறைவனைக் காணும் வல்லமை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறக்கும் போது எதையும் கொண்டு போக முடியாது என்று உலகத்தை உணர்ந்தவர்கள் பக்தி மார்க்கத்தில் ஞானத்தை செலுத்தி துன்பவலை என்ற பாசக்கட்டை அறுத்தெறிந்து வாழக்கற்றுக்கொண்டாவர்கள் சித்தர்கள். ஐம்புலங்களால் நாம் அறியும் அறிவு ஐந்து. ஆத்ம அறிவைச் சேர்த்து ஆறறிவு. மிருகங்குளுக்கு நான்கு அறிவு. சீவனை சேர்த்தால் ஐந்து அறிவு. பறவைகளுக்கு அறிவு மூன்று. மார்பினால் நகரும் பிராணிகளுக்கு (ஊர்வன) இரண்டு அறிவு. தாவரங்களுக்கு ஒரு அறிவு.இப்படி அறிந்து தெளிந்து கூறியவர்கள் சித்தர்கள். ஒரு சித்தர் " இந்த உடல் ஓட்டைப் பாண்டம் ஒன்றுக்கும் உதவாது என்று நினைத்து இருந்தேன், ஆனால் இந்த உடம்புக்குள்ளே தான் இறைவன் இருக்கிறான் என்பதைக் கண்டு கொண்டேன் உடலே கோயில் சீவனே சீவன் என்பதை உணர்ந்து கொண்டேன் இந்த உடம்பு அழிந்து விட்டால் உயிரும் அழிந்து விடுமே அதன்பின் ஞானத்தை எங்கே உணரமுடியும் அதனோடு எப்படி சேர முடியும் என்று அரிய விளக்கத்தை கூறியிருக்கிறார் திருமூலர் திருமந்திரத்தில் "உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று உடம்பினையான் இருந்து ஓம்புகின்றேனே." என்கிறார் பித்தனைப் போல் வாழ்ந்த சித்தர் " இவ்வுலகில் நிலையாக வாழ்வாய் என்று நினைப்பது மாயை, நீ ஒரு நாள் இறக்கத்தான் போகிறாய் உடம்பு உன்னுடையது என்று வளர்த்து சந்தோசப்படுகிறாயே அது உன்னுடையதா? நாய் நரி, கழுகு ஆகியவை நம்முடையது என்று ஆனந்தப்படுகிறதே, நீ இறந்தபின் கொடிய கழுகுக் கூட்டம் பறந்து வந்து உன் உடம்பை சின்னா பின்னமாக்கி கொத்தி தின்னத்தானே போகிறது, 9 துவாரங்களுடைய தோல் பையாகிய இந்த உடம்பின் மீது ஆசை வைக்காதே" என்று கூறுகிறார், மேலும் கூறுகிறார் " காக்கை கவரில்என் கண்டார் பழிக்கில்என் பால்துளி பெய்யில்என் பல்லோர் பழிச்சில்என் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும் கூத்தன் புறப்பட்டு போனஇக் கூட்டையே". தோலால் ஆன இப்பையாம் இவ்வுடம்பினுள் உயிராகிய கூத்தன் இருந்துகொண்டு செய்ய வேண்டிய தொழில்களை செய்து முடித்து, வினைகளை அனுபவிக்குமாறு செய்கிறான், இப்படி செய்யும் உயிர் உடலை விட்டுப் போன பிறகு பிணமாக போன பின் அதனை காக்கை கவர்ந்தால் என்ன? பார்த்தவர்கள் பழித்துப் பேசினால் என்ன? பாலைத்துளியாகத் கொட்டினால் என்ன? பலரும் அப்பிணத்தை புகழ்ந்து பேசினால் என்ன? கழுகும் காக்கையும் மண்ணும் தின்னும் உடல்தானே அது. காலத்தை தனக்குள் கட்டுப்படுத்தி மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து காட்டியவர்கள் சித்தர்கள். இரும்தையே ரசவாதத்தினால் பொன்னாக்கினார்கள். கூடுவிட்டு கூடு பாய்ந்தார்கள். நவக்கிரங்களை மாற்றி அமைக்கும் சக்தி படைத்தார்கள் சித்தர்கள். இயற்கையின் சக்திக்கு மாறாக மூச்சடக்கி வானத்தில் பறந்த சித்தர்களும் தண்ணீர்மேல் நடந்தவர்களும் இருக்கிறார்கள். மக்களின் நன்மைக்காக இவைகளை பயன்படுத்தினார்களே தவிர, அவர்களுக்கு என்று எதையும் செய்யவில்லை, யோகம் ஞானம், வைத்திய சாஸ்திரங்களையும் நமக்காக அருளியிருக்கிறார்கள், சித்தர்கள் நம் நாட்டில் எத்தனையே பேர் இருந்திருக்கிறார்கள்,நாம் பதிென்ட்டு சித்தர்களை முதல் சித்தர்கள் என்று குறிப்பிடுகிறோம், அவர்களோடு நில்லாது அவர்களின் தீட்சத் - ஞான உபதேசம்பெற்று அவரகளின் சீடர்களாகவும் அறிய பல நிகழ்வுகளைச் செய்து சித்தி விளயாட்டுகள் பல புரிந்து ஜீவ சமாதி அடைந்த சித்தர்களும் ஏராளமானபேர்கள் உண்டு என்பதை பல வரலாறுகள் வழியாக அறியலாம். திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

வியாழன், 15 ஜனவரி, 2015

மனிதனிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி


மனிதனிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி◆◆ ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤ ★வித்து சக்தியை அஷ்வினி முத்திரை செய்து உச்சியில் ரசமணியாக கட்டினால் கூடு விட்டு கூடு பாய முடியும். மூலாதாரத்தில் ஐந்து சக்திகள் ஒடுங்கி இருக்கிறது. ★காந்த சக்தி( bio magnetic energy) ★மின் சக்தி (bio electrical energy) ★வெப்ப சக்தி ( bio heat energy) ★ஒலி சக்தி ( bio light energy?) ★ஒளி சக்தி ( bio atomic energy) ★ஐந்து சக்தி மூலாதாரத்தில் இருக்கிறது. இது முதுகு தண்டு வழியே மேலே ஏறும் போது bio magnetic energy அளவில் வித்து சக்தி இருந்தால் நமக்கு சில ஆசோதன சக்திகள் வரும். அதில் நாம் தேங்கிடுவோம். அதற்கு மேல் நாம் போக மாட்டோம். ★மக்கள் ஈர்ப்பு, ஜன வசியம், பூத வசியம், தேவதை வசியம். இந்த வசிய கலையை கற்றுக்கொண்டு மக்களுடன் நாம் இருந்துவிடுவோம். ★வித்து சக்தி மேலே ஏறும்போது bio electrical energy dominate செய்கிறது என்றால் உடம்பில் நல்ல vibration spread ஆகும். healing, நோய்களை குணப்படுத்துதல் போன்றவற்றை செய்யலாம். ★வித்து சக்தியில் bio heat energy அதிகமானால் யார் வினையையும் பஷ்பமாக எரித்து விட முடியும். ★நம் வினையையும் எரித்து விடலாம். அடுத்தவர் வினையையும் எரித்துவிடலாம். அதுவே bio light energy ஆக மாறினால் யாருடைய பிரச்சினையையும் தீர்த்து விடலாம். அந்த மாதிரி கண்ணிற்கு ஒலி வரும். ★நாம் எங்கு சென்றாலும் aura spread ஆகி கொண்டே செல்லும். புத்தர் இருக்கும் இடத்தில் 30km அளவிற்கு அந்த aura பரவிடும். aura பரவிவிட்டால் அங்கு இருக்கும் விலங்குகள் கூட சண்டை போடாது. பாம்பும் கீரியும் சண்டை போடாது. புலி அந்த இடத்தில் மானை விரட்டாது. எல்லாம் ஒற்றுமையின் இருக்கும். ★சூரியன் தேவையில்லை எந்த இடத்திலும் ஒலியை உருவாக்க முடியும். சுய பிரகாசம் உடையவர்கள் ரிஷிகள். வானத்தில் 27 நட்சத்திரம் எல்லாம் ரிஷிகள் தான். ரிஷி நிலையை அடையும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு நட்சத்திரமாக மாறிடுவார்கள். ★அதுவே அந்த வித்து சக்தி atomic energy வரைக்கும் சென்றுவிட்டால் எந்த இடத்திலும் தோன்றலாம் எந்த இடத்திலும் மறையலாம். கூடுவிட்டு கூடு பாய்வது போன்ற சித்துக்கள் செய்ய முடியும். அந்த நிலையை அடைவார்கள். ★அதே போல இங்கு இருக்கும் அணுக்களை பிரித்து எங்கும் வேண்டுமானாலும் கொண்டுசென்று சேர்ப்பது. இது atomic energy ஆக வித்து மாறும் போது ஒவ்வொரு மனிதனுக்கும் அந்த சக்தி வருகிறது. ★ஆன்மிகத்தில் எல்லா கீழ்நிலை சக்தியையும் மேல்நிலை சக்தியாக மாற்ற வேண்டும். தேகத்தை தங்கமாக மாற்ற வேண்டும் என்று வள்ளல் பெருமான் கூறுவார். ★ஆசன பயிற்சி செய்பவர்கள் சிரசாசனம், ஹாலாசனம், சர்வாங்காசனம் செய்யும் போது மூலபந்தம் செய்து செய்து வித்து சக்தியை தலை உச்சியை நோக்கி இழுக்கலாம். இது ஒரு வகை. ★சித்தாசனத்தில் உட்கார்ந்து குதிங்காலை மூலபந்தத்தில் அழுத்தி கொண்டு இழுப்பதன் மூலமாகவும் வித்து சக்தியை உச்சிக்கு கொண்டுவரலாம். அதை தியானமாக காலையில் 4;30 மகான்கள், சித்தர்கள் பெயரை சொல்லிக்கொண்டு குண்டலினியை மேலே எழுப்பலாம். ★ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி ★ஓம் அகப்பை சித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் அசுவினித் தேவர் திருவடிகள் போற்றி ★ஓம் அத்திரி மகரிஷி திருவடிகள் போற்றி ★ஒம் அனுமான் திருவடிகள் போற்றி ★ஓம் அம்பிகனந்தர் திருவடிகள் போற்றி ★ஓம் அருணகிரி நாதர் திருவடிகள் போற்றி ★ஓம் அருள் நந்தி சிவச்சாரியார் திருவடிகள் போற்றி ★ஓம் அல்லமா பிரபு திருவடிகள் போற்றி ★ஓம் அழுகண்ணிச் சித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி ★ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி ★ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி ★ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி ★ஓம் உமாபதியார் சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி ★ஓம் ஔவையார் திருவடிகள் போற்றி ★ஓம் கஞ்சமலைச் சித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் கடைபிள்ளைச் சித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் கடுவெளிச் சித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் கன்னானந்தர் திருவடிகள் போற்றி ★ஓம் கண்ணிசித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி ★ஓம் கணபதி தாசர் திருவடிகள் போற்றி ★ஓம் கதம்ப மகரிஷி திருவடிகள் போற்றி ★ஓம் கபிலர் திருவடிகள் போற்றி ★ஓம் கமல முனிவர் திருவடிகள் போற்றி ★ஓம் கருவர்தேவர் திருவடிகள் போற்றி ★ஓம் கல்லுளிச் சித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் கலைகோட்டு முனிவர் திருவடிகள் போற்றி ★ஓம் கவுபல சித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் கணராமர் திருவடிகள் போற்றி ★ஓம் ககபுஜண்டர் திருவடிகள் போற்றி ★ஓம் காசிபர் திருவடிகள் போற்றி ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி ★ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகள் போற்றி ★ஓம் குதம்பை சித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி ★ஓம் குரு தக்ஷினா மூ ர்த்தி திருவடிகள் போற்றி ★ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி ★ஓம் குறும்பை சித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் கூர்மானந்தர் சித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் கொங்கநேஸ்வரர் சித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி ★ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி ★ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி ★ஓம் சங்கமுனி சித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி ★ஓம் சங்கிலி சித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி. ★ உலகிலுள்ள கோடான கோடி சித்தர்கள் திருவடிகள் போற்றி போற்றி. ★இப்படி மகான்கள் பெயரை சொல்லும் போது மகான்கள் குண்டலினியை ஏற்ற உதவி செய்வார்கள். மகான்களை வசியம் செய்துவிடலாம். ★பாதரசத்தை சில மூலிகைகள் மூலம் பதப்படுத்தி மணியாக கட்டுவது ரசமணி . இதற்கு சில சக்திகள் உள்ளது. வெளியில் ரசமணி கட்டுவது ஒரு வகை. நமக்குள்ளே நமது வித்து சக்தியை ரசமணியாக கட்டுவது என்பது ஒரு வகை. ★இதுவே இருப்பதிலேயே உயர்ந்த நிலை. வெளியில் ஒரு கருவியின் வழியாக ஒரு செயலை செய்து பாதரசத்தை மணியாக கட்டுவது ரசமணி என்று பெயர் . நம் உடம்பிற்குள்ளேயே ரசமனியை உருவாக்குவது என்பது ஒரு வகை. ★வள்ளல் பெருமான் தனக்குள்ளேயே மணியை உருவாக்கியவர். அண்ட சராசரத்தை அரை கன பொழுதில் பார்க்கும் ஆற்றலை பெற்றவர் வள்ளலார். ★அந்த வகையில் கீழ் நிலையில் இரு க்கும் வித்து சக்தியை நமது முயற்சி மூலமாக மேல்நிலைக்கு ஏற்றி நாதத்தை பரதாதமாகவும், வித்துவை பரவித்துவாக மாற்றிவிட்டால் அட்டமா சித்துக்கள் வாய்க்கும்.

புதன், 14 ஜனவரி, 2015

திருவண்ணாமலை அதிசயம்


திருவண்ணாமலை அதிசயம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! ! திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன. மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம். நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் ! அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது. இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம். ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு. மூன்று இளையனார்! இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார். அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார். அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார். கோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது. காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான். ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான். அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான். ஒன்பது கோபுரங்கள்! கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் (81 அடி உயரம்); தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்). சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார். இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும். கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது. மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம். உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்! திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார். அதற்கு சிவபெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார். அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது ‘மலையை இடதுபுறமாக சுற்றிவா’ என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. மலையளவு பயன்! நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள். அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது. கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும். திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும். மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும். கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது. இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும். இதனால் குழந்தைப்பேறு கிட்டும்; கருப்பைக் கோளாறுகள் நீங்கும். மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன. இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும். பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்! கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம். திருஅண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோயிலுக்கு உள்ளே பே கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம். அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது. கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும். பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம். திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம். அவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சிமுனிவர், சேஷாத்ரி சுவாமிகள், இசக்கிசாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி, சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள். கார்த்திகை ஜோதி மகத்துவம்! அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம். தீபத் திருவிழா! உலகப் புகழ்பெற்ற தீபத்திருவிழா 12 நாட்களுக்கு திருவண்ணாமலையில் நடைபெறும். தினமும் காலையும், மாலையும் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் பலவகை வாகனங்களில் பவனி வருவார்கள். ஐந்தாம் நாள் வெள்ளி ரத உற்சவமும், ஏழாம் நாள் ரத உற்சவமும் சிறப்பாக நடைபெறும். பஞ்சமூர்த்திகளும் தனித்தனி தேர்களில் உலா வருவார்கள். சுவாமி தேர் பெரியது. அடுத்தது அம்மன் தேர். இதை பெண்களே வடம் பிடித்து இழுப்பார்கள். பரணி தீபம்! பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும். மகாதீபம்! மாலை 6.00 மணிக்கு இந்த பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்றுசேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். மக்கள் கோஷமாக "அண்ணாமலைக்கு அரோஹரா' எனக்கூறி தரிசனம் கண்டபின், இல்லம் சென்று வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதம் முடிப்பார்கள். ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3,000 கிலோ பசுநெய், 1,000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள். தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் ஆலயத்தில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கௌரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள். ஜலால தீப அடையாளம் கண்டபின் தீபம் ஏற்றி விடுவார்கள். இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும். திருப்புகழ் மண்டபம் ஆலயத்தில் அமைந் துள்ளது. இங்குதான் சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும். இவ்வாலயம் முழுவதும் சுற்றிப் பார்க்க மூன்று மணி நேரம் ஆகும். லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் அண்ணாமலையை தரிசிப்போம்! பிறவிப் பிணி நீங்கி நல்வாழ்வு பெறுவோம்! “தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

செவ்வாய், 13 ஜனவரி, 2015

...http:// senthillakshmi.blogspot.in/ ..

...http:// senthillakshmi.blogspot.in/ ..

சித்தர் திருமூலர்


சித்தர் திருமூலர் கூடுவிட்டு கூடுபாய்ந்த சித்தர்களுள் மிகவும் பிரசித்த பெற்று கூடு மாறிய உடம்புடன் கொண்ட பெயரினைக் கொண்டவர் திருமூலர் என்ற சித்தர், மூலக்குருவாம் தட்சினாமூர்த்தியிடம் ஞான உபதேசம் பெற்ற நந்திகள் நால்வருடன் சேர்த்து எண் சித்தர்களில் ஒருவர் சுந்தரர் என்ற ஞானசித்தர் திருமூலர், உடம்பை சுருக்கி சிறிய அணுவாக மாற்றும் அணிமா சக்தியை பெற்றவர் திருமூலர் என்ற சித்தர்,, பிற்காலத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்பட்டவர், கைலாயத்துக்கு சென்று சிவனை தரிசித்து பேற்றைப் பெற்றவர், சித்தர்களில் முதன்மையானவர், திருமூலர் மூவாயிரம் மந்திரங்களைச் செய்ததோடு முந்நூறு மந்திரம், முப்பது உபதேசம் என்னும் நூல்களை செய்தருளியுள்ளார், "மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ் மூலன் உரைசெய்தமுந்நூறு மந்திரம் மூலன் உரைசெய்த முப்பது பதேசம் மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றுமே, இந்நூல்களோடு இன்றி வைத்தியம் பற்றியும் இவரின் பாடல்களில் காணலாம், சிவத்தலங்களில் சிவபெருமானைப்பற்றி பாடி காலத்தை கழித்துக் கொண்டு மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார் என்று ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது,ஒருமுறை திருவாடுதுறைக் கடக்கும் போது , சாத்தனூர் என்னும்ஊரைக் கடக்கும் போது மாடு மேய்த்துக் கொண்டு இருந்த மூலன் என்ற இடையன்இறந்து கிடப்பதையும், அதனைக் கண்ட பசுக்கள் கண்களில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டு இருப்பதைக் கண்டார், பசுக்களுக்கு மூலனிடம் ஏற்பட்டு இருந்த தாய்ப்பாசத்தினை சித்தர் கண்டு மனம் இளகினார, பசுக்களின் மேல் இரக்கம் கொண்டு மாடுமேய்த்த மூலன் என்ற மாடு மேய்ப்பவனின் உடலுக்கு உயிர்ப்பிக்க முடிவு செய்தார், தனியாக ஒரிடத்ததில் தன் உடம்பில் உள்ள உயிரை கூடுவிட்டு கூடுபாய்ந்து மூலனின் உடம்பில் சேர்ந்து மூலனாக மாறினார், சித்தர், அன்றிலிருந்து சுந்தரர் என்ற சித்தர் திருமூலர் சித்தரானார், இறந்து கிடந்த இடையன் மூலன் தூக்கித்தில் எழுவதுபோல் எழுந்தான், மூலன் எழுந்ததால் மாடுகளும் கன்றுகளும் உற்சாகம் அடைந்து தங்கள் கால்ளைத் தூக்கி அன்பை வெளிப்படுத்தின, மாடுகள் வழிகாட்டிக் கொண்டு செல்ல மூலன் வீட்டை அடைந்தான், கொட்டிலில் மாடுகளை அடைத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்த மூலனுக்கு அதிர்ச்சி காத்ததிருந்தது. மூலனின் மனைவி கணவன் வீடு திரும்பி விட்டதால் சந்தோசத்துடன் தொடுவதற்கு முற்பட்டாள், மூலனின் உடலில் இருப்பது சித்தர் அல்லவா? எனவே அவர் ஒரடி பின்நோக்கி நகர்ந்து என்னை த் தொடதே நான் உன் கணவன் அல்ல என்று தெரிவித்தார்,கணவன் அல்ல என்று கணவனே கூறியதைக் கேட்ட மூலனின் மனைவி ஊர் பெரியோர்களிடம் தன் நிலை பற்றி கூறினார் மன்றாடினாள், பின் ஊர் பெரியவர்களிடம் சித்தர் தான் ஒரு சித்தர் எனவும் மாடுமேய்க்கும் இடையனான மூலன் இறந்து கிடந்தததையும் அதற்கு ஆவினங்களுக்காக மனம் இறங்கி இவ்வாறு செய்தததையும் ஊர் பெரியவர்களிடம் விவரித்தார் சித்தர், இதனை அறிந்த ஊர் பெரியவர்கள் மூலன் வடிவில் இருப்பது சித்தர் தான் என்பதை இடையனின் மனைவிக்கு உணர்த்தினார் மூலனாக இருந்த சித்தர் திருமூலர் உண்மையான சித்தர் என்பதை அறிந்து ஊர் பெரியவர்கள் அவரை வணங்கினார்கள், பின் திருமூலர் தன் உடல் இருந்த இடத்திற்கு சென்றார், அங்கே தன் உடல் காணப்படாதது கண்டு அதிர்ச்சியுற்றார், மிருகங்கள் தன் உடலை இழுத்து சென்றுவிட்டதோ? இல்லை மூலனின் உடலில் இருக்க வேண்டும் என்பது இறைவனின் சித்தம் போலும் என்று நினைத்த திருமூலர் திருவாடுதறை கோவிலுக்கு மேற்கே இருந்த அரசமரத்தடியில் தியான நிலையில் அமர்ந்தார், அங்கே பலகாலம் இருந்து திருமந்திரத்தை இயற்றினார், திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டதாக இருந்தது, மூலனின் உடம்பில் புகுந்ததால் திருமூலர் சித்தர் என்று அழைக்கப்பட்டார், அவர் பெருமையை வெளிப்படுத்த திருவாடுதுறையில் அவருக்கு ஒரு கோவில் ஏற்படுத்தப்பட்டது. சித்தர்கள் சராசரி மனிதர்கள் அல்ல, தாங்கள் அறிந்த ஆத்ம தத்துவங்களை யோக சாதனைகளையும் உலகில் அனுபவங்களையும் பாடியிருக்கிறார்கள், அப்பாடல்களை கேட்கும்போது ஏதோ ஒன்றுமறிாத பித்தன் பாடடியிருப்பது போல் தோன்றினாலும் அதன் உள்ளே சென்று பொருளை அறியும்போது வியப்பு ஏற்படுகிறது.. ஒரு சித்தர் பாடிய பாடலை மேலோட்டமாக பார்த்தால் ஏதோ டப்பாங்குத்து பாடல் போல் தோன்றினாலும் அதன் உள்பொருள் நமக்கு மெய் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது, "நந்தவனத்தில் ஒர்ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டுவந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தாண்டி." குயவனாக உருவகப்படுத்தப்படும் பிரம்மாவிடம் ஜீவன் என்னும் ஒரு ஆண்டி பத்து மாதமாக வேண்டி கருப்பையில் இருந்து , உடல் என்னும் தோண்டியைக் கொண்டு வந்து உலகத்தில் பலவாறாகவும் கூத்தாடிக் கடைசியில் அந்த உடலாகிய தோண்டிடைய போட்டு உடைக்கிறான் என்ற மாபெரும் தத்துவம் இந்த நான்கு வரிப்பாடல் வாய்லாக வெளிப்படுகிறது, இதனால் தானே இரண்டு வரிப்பாடல்களை இயற்றி திருவள்ளுவரும் சித்தராக வர்ணிக்கப்படுகிறார், சித்தர் திருமூலர் சிதம்பரம், திருவாடுதுறை ஆகிய தலங்களில் ஜீவசமாதியானதாக கூறப்படுகிறது, குருபகவானின் அருள் ஆதிக்கம் பெற்றவராக இருப்பதால் இவரை வியாழக்கிழமை தோறும் வழிபட்டால் குருபகவானின் அனுக்கிரகம் பெறமுடியும் குருவினால் ஏற்படும் தோசங்களிலிருந்து தப்பிக்க முடியும். திருச்சிற்றம்பலம் ஓம் நமச்சிவாய ஓம் மேலும்பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

திங்கள், 12 ஜனவரி, 2015

சித்தர்களின் ஜீவ சமாதிகள்


சித்தர்களின் ஜீவ சமாதிகள் சித்தர்கள் எத்தனையோ பேர் இருந்து இருக்கலாம், ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய சித்தர்களே வெளி உலகத்திற்கு அடையாளம் காணப்பட்டு அவர்களின் பெயர்களும் ஐக்கியமான தலங்களும் பிரபலமாகி நாம் இன்றளவும் அவர்களின் ஜீவ சமாதிகளுக்கு சென்று வழிபட்டால்அவர்களின் நல்ஆசி நமக்கு கிடைத்து ஒரு தெய்வீக உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது என்பதை நாம் அறியலாம், அதில் முக்கியமான ஜீவசமாதிகள் பழனி முருகன் கோவிலில் அமைந்துள்ள போகரின் ஜீவசமாதி, சிதம்பரம் திருமூலரின் சமாதி, மதுரையில் சுநதரானந்தர் சமாதி, திருப்பரங்குன்றம் மச்ச முனிவர்சமாதி, பாம்பாட்டி சித்தர் சங்கரங்கன்கோவில், கரூர் கரூர் சித்தர், போன்று சித்தர் ஐக்கியமான தலங்களில் உள்ள அவர்களது ஜீவ சமாதிகளை வழிபடும் போது நம் குறைகளை நிச்சயம் தீர்ப்பார்கள், என்று நம்பப்படுகிறது. மற்றவர்கள் கண்களுக்கு தெரியாமல் மறைந்துவிடும் ஆற்றல் பெற்ற சித்தர்கள் இரண்டு மூன்ற இடங்களில் சமாதியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதை ஆராய்ந்தால் அதற்கு விடை வருகிறது. சித்தர்கள் மூச்சை அடக்கி சிலகாலம் மண்ணுக்குள் தங்கிஇருந்து விட்டு வந்தால், அரிய சக்தி கிடைக்கும் என்று எண்ணினார்கள். இதனால் அவர்கள் பலமுறை அந்த நிலையை அடைந்து இருக்கிறார்கள், உதாரணமாக பாம்பாட்டி சித்தர் மருதமலை, சங்கரன்கோவில் விருத்தாசலம் ஆகிய இடங்களில் ஜீவசமாதியானதாக கூறுகிறார்கள், மூன்று முறை மண்ணுக்குள் இருந்த இடங்களே இந்த மூன்று சமாதிகளும், மண்ணில் பல ஆண்டுகள் தவம் இருக்கும் போது உடல் அழுகிவிடாதா? காடுகளில் தனியே தவம் இருக்கும்போது மமிருகங்கள் தின்றுவிடாதா? என்ற கேள்விகள் எழுவது இயற்கைதானே? மண்ணுக்குள் இருந்தாலும் மண் தீண்டாததால் உடல் அழுகாது, காட்டில் தவத்தில் இருக்கும் போது காட்டு தீ கொழுந்து விட்டு எரிந்தாலும் உடலில் சூடு ஏறாது, கொடிய விசப்பாம்புகள் தீண்டினாலும், உடலில் விசம் ஏறாது, காட்டாற்று வெள்ளம் வந்தாலும், தவம் செய்யும் சித்தர்களை விட்டு விலகி ஒடும், தவப்பயனால் சிவனை அறிந்து ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் என்றும் பதினாறு வயது தோற்றத்திலேயே காட்சி அளித்தார்கள் என்ற நூல்களில் கூறப்பட்டு உள்ளது. தசையும எலும்பும் நரம்பும் நோயினால் பாழ்பட்டு விட்டதே இதற்கு பரிகாரம் இல்லையா? என்று நினைக்கும் மனிதர்கள் இப்படிப்பட்ட மகான்களான சித்தர்களை வணங்கினால் வாழ்வில் திருப்பம் ஏற்படும், நாம் உலக வாழ்க்கையில் ஊறி கிடக்கும் சாதாராணமானவர்கள் , நம்மால் நம்மையே அறிய முடியவில்லையே! பஞ்ச பூதங்களை அறிந்து மனதில் நிறுத்தி தியானம் மூலமாகப் பார்த்தால் ஞானம் தோன்றும் அந்த ஞானத்தினால் இறைவன் கண்களுக்கு தென்படுவான், அத்தகைய ஞானத்தை அடைந்தவர்கள் சித்தர்கள் சித்தத்தை வென்றவர்கள் சித்தர்கள் என்று கூறலாம், அக்னியும் வாயும் இல்லாவிட்டால் உயிர் என்பதே இல்லை, உடல் இல்லாவிட்டால் உயிர் என்பதை எப்படி அடையாளம் காணமுடியும். உடலின் இயக்கங்கள் பஞ்ச பூதங்களால் ஏற்படுகிறது, காது கண், நாக்கு, மூக்கு தோல் இவைகள் வெளிப்படையாக செயல் படுவதில்லை, கண்களினால் நாம் பார்க்கிறோம், காதுகளினால் ஒலியை கேட்டும், நாக்கினால் சுவைத்தும், மூக்கினால் முகர்ந்தும் தொடுவதால் பரிச உணர்வைப் பெறுகிறோம், ஆகையால் இவைகள் ஞான இயந்திரங்கள் என்று அழைக்கப்படுகிறது. வெளிப்படையாக செயல்புரியும் இந்திரியங்களைக் கன்ம இந்திரங்கள் என்கிறோம், அவைகள் வாய், கால்,கை, குறி, குதம் என்பன ஆகும், மனம் புத்தி, அகங்காரம், சித்தம் ஆகியவை கரணங்கள் இவைகள் எல்லாம் ஆத்ம தத்துவங்களாகும், இவைகளை அறிந்தவர்களுக்கு வாசி சித்தயாகும் , வாசியின் உண்மையை புரிந்தவர்களுக்கு இணையானவர் யாரும் கிடையாது, காலம் நியதி, கலை, வித்தை, அராகம், மாயை என்பவை வித்தியாசமான தத்துவங்களாகும், காலம் என்பது சென்ற காலத்தின் எல்லையையும் நிகழ்காலத்தின் பலத்தையும் எதிர்காலத்தின் தன்மைகளையும் புரியச் செய்வது. நியதி என்பது கன்மத்தின் அளவை நிச்சயம் பண்ணி நிறுத்துவது கலை என்பது ஆணவத்தை குறைத்து ஆன்மாவை செயல்பட தூண்டுவது ஆகும் வித்தை என்பது ஆன்மாவுக்கு அறிவை கொடுப்பது. அராகம் என்பது அடைந்தவற்றை குறைவாகத் தோன்ற செய்து மேலும் அடையவேண்டும் என்று வேட்கையினைத் தூண்டுவது, மாயை என்பது சிந்திக்க விடாமல் மயக்கத்தை தருவது, வெட்ட வெளியிலே ஒன்றுமில்லா சூனியத்தை எங்கும் பரவி நிற்கும் இறைவடிவமாக பார்த்துகளிப்புறுபவர்கள், ஆத்ம தத்துவங்கள் மூலம் தன்னைத் தானே உணர்ந்தவர்கள் உடலில் இருந்து ஆத்மா பிரியும் நேரத்தை அறிந்தும் ஆத்மாவைத் தமக்குள் அடக்கி வைத்தும் ஜீவசமாதியானவர்களே சித்தர்கள். அதனால் தான் சித்தர்கள் ஐயக்கியமான இடங்களை ஜீவசமாதி என்று குறிப்பிடுகிறார்கள். ஜீவசமாதியை வழிபாடும்போது நம்மையறியாமல் ஒரு பத்துணர்ச்சி ஏற்படுகிறதே? நம்மிடம் ஏற்படும் புத்துணர்ச்சியின் - வைப்பிரேசன் - பொருள் என்ன என்று சிந்தித்தால் நமது உடம்பு தெய்வீக உணர்வுகளை உணர்வதே ஆகும், சித்தர்கள் நமக்கு அருள் பாலிக்கிறார்கள் என்றும் சொல்லலாம், தேவையில்லாத கற்பனைகளை நினைத்துக் கொண்டு வாழும் நம் மனதுக்கு ஆறுதலாக சித்தர்களின் சமாதிகள் அமைந்திருக்கின்றன என்றால் வியப்பில்லை. எல்லாம் அந்த சிவனின் அருள் பெற்று ஜீவசமாதியானவர்களின் நினைவு கொண்டு அவர்களின் தெய்வீக அருள்பெறுவோம், திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாயம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

சனி, 10 ஜனவரி, 2015

இடைக்காடர் என்ற சித்தர்.


சித்தர் இடைக்காடர் தாயின் அடிமைத் தளையை நீக்க அமிர்த்தைக் கொண்டுவர கருடன் பறந்த போது ஏற்பட்ட காற்றினால் கிரகங்களே இடம் மாறிச் சென்றுவிட்டன என்பது வரலாற்று சுவடிகள் பூலோகத்தில் மழை பொய்த்து விட்ட நிலையில் கிரகங்களை மாற்றி வைத்தார் ஒரு சித்தர், தொண்டை நாட்டில் பொதிகை மலைச்சாரலில் உள்ள இடைக்காடு என்ற ஊரில் இடையர் ஆடு மாடுகளை நேசித்து வளர்த்து வந்தார், ஊர்மக்கள் அவரை இடைக்காடர் என்று அழைத்து வந்தனர், மலைப்பகுதியில் இடைக்காடர் ஆடு மாடுகளை மேய்த்து கொண்டு இருந்த போது கந்தல் உடை கலைந்த தலைமுடியோடு எதையும் எதிர்பார்க்காத மனதை உடையவர் ஒருவர் அங்கே வந்தார், அவரை வரவேற்ற இடைக்காடர் தான் வைத்திருந்த உணவை கொடுத்து பசியாறக் கூறினார், ஜீவன் என்ற பசுவின் மடியில் இருந்து பாலைக் கறந்து கொடுத்து பருகச் சொன்னார், அவர் யார் என்று அறியாமலேயே அவரை நன்கு உபசரித்தார், அவர் சாதாரண மனிதரல்ல, சித்தர்களில் முதன்மையானவர், தனக்கு செய்த தொண்டால் மகிழ்ந்த அந்த சித்தர் இடைகாடருக்கு ஞான உபதேசம் செய்தார், இடைக்காடர் ஞான உபதேசம் பெற்று சித்தரானார், அவரை மக்கள் இடைக்காட்டு சித்தர் என அழைக்கலானர், சித்தர் ஆன பின் அவர் மனதில் நடக்கப்போகும் நிகழ்வுகள் தெரிந்தன. அந்த நாட்டில் பன்னிரண்டு ஆண்டு காலம் மழை பெய்யாமல் பஞ்சம் தலை விரித்தாடியது,மக்களும் கால்நடைகளும் அழிவார்கள் என்பதை அவர்மனது அவருக்கு முன்கூட்டியேகூறியது, அதை உணர்ந்த சித்தர், தன்னுடைய ஆடுகளுக்கு எருக்கிலை கொடுத்து பழக்கினார், எருக்லை குருவரகு என்ற தானியத்தை சேற்றோடு குழைத்து தன் குடிசையின் சுவற்றை உடைத்து விட்டு புதிய சுவர் எழுப்பினார், எருக்கிலை குருவரகு சேற்றுக் கலலையால் எழுப்பட்ட சுவர் உறுதியாக நின்றது. சித்தரின் மனதில் தோன்றியபடியே அந்த நாட்டில் மழை இல்லாமல் பஞ்சம் நீடித்தது, அதனால் மனிதர்களும் கால்நடைகளும் அழிய தொடங்கின. பூமியில் வெடிப்புகள் பாளங்கள் தோன்றின, ஆனால் சித்தருக்கோ அவரது ஆடுகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது, அவருடைய ஆடுகள் எருக்கிலையும் குருவரகு தானியத்தையும் சேற்றில்குழைத்து சுவர் எழுப்பி இருந்த சுவரில் எங்கும் மேய்ச்சலுக்கு செல்லமுடியாத ஆடுகள் அந்த சுவரில் உடம்பைத் தேய்த்து அப்போது சுவரிலிருந்து சிதறும் தானியங்களை அவரும் அவராது கால்நடைகளும் உண்டு பசியாறின. இந்த அதிசயத்தை காண நவக்கிரக நாயகர்கள் வந்தனர், அவர்களுக்கு ஆட்டுப்பாலில் குருவரகை பாகம் செய்து விருந்து கொடுத்தார், அதைச் சாப்பிட்டவுடன் நவக்கிர நாயகர்கள் மயங்கி உறங்க தொடங்கினர், அவர்கள் இடம் மாறி இருந்ததால்தானே மழை பொய்த்தது, பஞ்சத்தால் நாட்டைத் துடிக்க வைத்துக் கொண்டு இருக்கும் கிரகங்கள் இவர்கள் தானே மழை பெய்வதற்கு எப்படி கிரகங்கள் இருக்க வேண்டுமோ அவ்வாறு அக் கிரகங்களை அமைத்தார், கிரகங்கள் சரியான இடத்தில் அமைந்தவுடன் மழை பொழிய ஆரம்பித்தது, நவக்கிரக நாயகர்கள் வழித்தெழுந்தனர், சித்தர்கள் எதையும் சாதிக்க முடியும் என்று மழை பொய்த்து இருந்த நாட்டில் மழை பொழிய வைத்து நாட்டினை செழிக்க வைத்தார் இடைக்காடர் என்ற சித்தர். இடைக்காட்டு சித்தர் திருவண்ணாமலையில் ஐயக்கியமானர், என வரலாறு கூறுகிறது. நவக்கரகங்களில் புதன் பகவானின் அம்சமாக இருப்பவர் என்று அறியப்படுகிறது, இதனால் அவரை புதன் கிழமை வணங்கினால் புதன் பகவானால் ஏற்படக்கூடிய தோசங்கள் விலகும் என்று நம்பப்படுகிறது தென்னாடுடைய சிவனே போற்றி! ஒம் நமசிவாய நம! மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

வெள்ளி, 9 ஜனவரி, 2015

பஞ்ச பூதங்களால் ஆனது உடம்பு


பஞ்ச பூதங்களால் ஆனது உடம்பு அசுத்த மாயையிலிருந்து மெய்,வாய்,கண்,மூக்கு,செவி, ஆகிய ஐம்பொறிகளும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலங்களும் வாய், கை, கால், கருவாய்,எருவாய் என்ற ஐந் தொழில் உறுப்புகுளும் உடம்பு என்ற தத்துவத்தில் பிரதிபலிக்கிறது, சித்தமே அனைத்து தத்துவங்களின் தோற்றமாக இருக்கிறது. உடம்பின் உள்ளே ஓடி ஓடி கலந்துள்ள பரம்பொருளைத் தேடித்தேடி கிடைக்காமல் வாழ்வைத் தொலைத்தவர்கள் பலர். பரம்பொருள் எங்கேயும் இல்லை, உடம்பு என்ற கோவில்தான் உள்ளது, ஐம்புலங்களை வசப்படுத்தினால் பரம்பொருளை நாம் உணரமுடியும்.இதனை திருமந்திரத்தில் திருமூலர் " உள்ளம் பெருங்கோவில் ஊன்உடம் பாலயம் வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தோர்க்கு சீவன் சிவலிங்ம் கள்ளப் பலன் ஐந்தும் காள மணிவிளக்கே. " திருமூலர் நமது மனமே பெரிய கோவில் அக கோவிலின் மூலட்டானம் தசையால் ஆன உடம்பு அன்பர்கள் குறிப்பறிந்து கொடுத்தருளும் இறைவனுக்கு வாயே கோபுர வாசல், நன்கு அறிந்த ஞானிகட்கு ஆன்மாவே சிவலிங்கமாகும், மனத்தை திருட்டு வழியில் இழுத்துச் செல்லும் ஐந்து புலங்களும் அழகிய விளக்காகும்,ஆலய அமைப்பு ஆண்டவன் இருப்பு யாவும் நம் உடலிலேயே உள என்பதாகும், இறைவன் ஆன்மாக்கின் பக்குவம் அறிந்து தேவைகளை கொடுத்து உதவுவதால் வள்ளல் எனப்பட்டான், இதேபோல் இன்னும் ஒரு பாடல் மூலம் ஐம்பெரும் பூதங்களால் அமைந்ததே உடம்பு என திருமந்திர பாடல் " உரம் அடி மேதினி உந்தியில் அப்பாம் விரவிய தன்முலை மேவியகீழ் அங்கி கருமுலை மீமிசை கைக்கீழில் காலாம் விரவிய கந்தரம் மேல் வெளி ஆமே." உடம்பைத் தாங்கும் பாதங்கள் மண் ஆகும், பாதம் முதல் கொப்பூழ் வரை நீர் ஆகும், கொப்பூழிலிருந்து மார்பு வரை பொருந்ததியது தீயாகும், மார்பிலிருந்து தோள் வரை காற்றாகும், கழுத்துக்கு மேல் ஆகாயமாம், உலகம் மண், நீர்,தீ, காற்று, ஆகிய ஐந்து பொருட்களால் ஆனது அதுபோல உடலங்களும் ஐம்பெரும்பூதங்களால் ஆனவை. மனித உடலை ஞான சூத்திரம் என்ற நூலில் குறிப்பிட்டு இருப்பதைப் பார்ப்போம், மனிதனுடைய முதுகுத்தண்டு மகாமேரு மலை போன்றது,அதன் உச்சி என்பது இரு புருவங்களும் கூடும் இடமான நெற்றி நடுநிலையாகும், நடுநிலைக்கு நேராக உச்சி குழுயையும் உண்ணாக்கையும் இணைத்துக் கொண்டு ஒரு நுண்ணிய துவாரம் இருக்கிறது. அதற்கு பிரம்மரந்திரம் என்று பெயர், அந்த துவாரத்தின் உள்ளே நெற்றியில் இருந்து ஏழு திரைகளுக்கு அப்பால் அமுத கலைகள் நிறைந்தும் பகலும், இரவும் அற்றதும், சத்-சித்-ஆனந்த சிற்சக்தியான சிவலிங்க சொரூபமான ஜீவன் ஜோதியாக ஒளிர்கிறது, மனித இயக்கத்ததிற்கு சீவன் இதுவே. ஆதியும் அந்தமுமாய் விளங்கும் சிவலிங்கம் ஜோதியே இறைவன், நம் உடம்புக்குள் இருப்பதைக் காண முயற்சிக்க வேண்டும், இந்த முயற்சியில் வெற்றி கண்டவர்கள் சித்தர்கள். நெற்றி நடுநிலையில் இறைவனை தாம் தெளிவாக கண்டதாகவும் அதனால் நெற்றியில் திருநீறு குங்குமம், சந்தனம், கஷ்தூரி முதலியவைகளைஇட்டு கொண்டு இறைவனை வழிபடுவதாகவும் சித்தர் தன்வந்திரி ஒரு பாடல் மூலம் கூறியிருக்கிறார். நெற்றியில் திருநீறு குங்குமம், ஏன் இட்டு கொள்ள வேண்டும் என்பது புரிகிறது அல்லவா? சித்தர்களைப்போல ஞானப் பயிற்சியால் உடம்புக்குள்ளே இறைவனைக் கண்டு முத்தி பெறுவோம், நாம் நமது குடும்பம் என்பது சந்தோசமானது என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போதே மரணம் நம்மை ஆட்கொண்டு விடுகிறது, உடல் தரையில் கிடக்கிறது. ஆனால் உயிர் எங்கோ போய் விடுகிறது. வாழ்க்கை நிலையில்லாதது, என்று தினமும் கண்டு கொண்டு இருந்தாலும், வாழ்க்கை மாயை என்பதை உணர மறுக்கிறோம். பஞ்சபூதங்களால் உடம்பை நாம்அறிய முயற்சிக்காமல் பரம்பொருளைக் காண வேண்டி எங்கெங்கோ தேடினால் கிடைக்கமா? மனதைத் திறந்து தேடினால் பரம்பொருளைக் காண முடியும், யோகியர்கள் ஜீவாத்மா, பரமாத்மாவிடம் ஐக்கியம் அடைவதை யோகம் என்று கூறுகிறார்கள். யோகத்தை அடைய எட்டு வழிகள் என்றும்கூறி இருக்கிறார்கள். இயமம், ஆசனம், பிராணயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற நிலைகளாகும். இயமம்: இயமம் என்பது அகிம்சை, சத்தியம், களவின்மை, பிரம்மச்சரியம், சம்மார்க்கம், தயை, பொறுமை, துணிவுடைமை, மிதமான உணவு,செளசம், என்று பத்து அம்சங்களாக வரையறுக்கப்பட்டு உள்ளது. நியமம்: நியமம் என்பது தவம், மகிழ்ச்சி, தெய்வ நம்பிக்கை, நாணம், தானம், தேவபூசை, சித்தாந்த சிரவணம், புத்தி, ஜபம், ஹோமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசனம்: ஆசனம் என்பது பத்மாசனம், சுவஸ்திகாசனம், பத்ராசனம், வஜ்ராசனம், வீராசனம் என்று கூறப்பட்டுள்ளது. பிராணாயமம்: பிராணாயமம் என்பது பிராண வாயுவை கட்டுப்படுத்தி தன் முயற்சியால் இயங்க வைப்பது, அதில் இரண்டு வகை அடிக்கடி வெளியே செல்கிற காற்றை பதினாறு மாத்திரை கால அளவு ஜபத்தியானாதிகளோடு உள்ளே வாங்கி, ஜபத்தியானங்கள் செய்து சகர்ப்பம் என்று கூறப்படுகிறது, ஜபத்தியானங்கள் இல்லாமல் பிராணாயம பயிற்சிகளை பயிலும் போது உடல் வியர்க்குமானால் அதமம் என்றும், நடுங்கினால் மத்திமம் என்றும் தரையை விட்டு எழும்புமானால் உத்தமம் என்றும் கூறப்படுகிறது, அதற்கு விகர்ப்பம் என்று பெயர், பிரத்யாஹாரம்: பிரத்யாஹாரம் என்பது உத்தம குணங்கள் நிரம்பப் பெற்று தான் எண்ணிய விருப்பங்களை அடையும் வரையில் இந்திரயங்களை வெளியே செல்லவிடாமல் தடுத்து தன் வசப்படுத்திக் கொள்வதாகும், தாரணை: தாரணை என்பது பிராண வாயுவை கால் கட்டை விரல்கள், முழங்கால்கள் தொடைகள் மூலாதாரம், இருதயம் போன்ற இடங்களில் விதிமுறையாக நிறுத்துவது, தியானம்: தியானம் என்பது இறைவனோடு மனதை லயிக்க செய்து அசைவற்றிருக்கும் நிலையாகும். சமாதி: சமாதி என்பது ஜீவாத்மா ஆனவன் பரமாத்மாவில் இருந்து வேறுபட்டவன் அல்ல என்று சமத்துவ ஐக்கிய பாவனை செய்து கொண்டு எப்போதும் இருக்கும் நிலையாகும், இவைகளையே அஷ்டாங்க யோக லட்சணம் என்று யோகிகள் கூறுகிறார்கள், ஜீவாத்மாக்கள் இறைவனை காண முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள், அவர்களில் ஒரு சிலர் தங்களுடைய ஆத்ம சாதனைகளால் இறைவனைக் கண்டு கொள்கிறார்கள், பூலோகத்தில் அவர்களை சித்தர்கள் என்கிறோம், எட்டு வகையான பெரும் சக்திகள் அஷ்டமா சித்திகள் என்று அழைக்கப்படுகிறது. அவைகளாவன, அனிமா,மகிமா, இலகுமா, கரிமா, பிராப்தி, வசித்துவம், பிராகாமியம், ஈசத்துவம் என்பன, அனிமா என்றால் உடலை சுருக்கி சிறிய அணுவைப் போல் மாறுவது, மகிமா என்பது மேருமலையைப்போல உருவத்தை பெரியதாக்குவது இலகுமா என்பது உருவத்தின் எடையை காற்றைப்போல் இலேசாக்குவது கரிமா என்றால் எடையைப் பளுவாக்குவது பிராப்தி என்றால் எல்லாவற்றையும் ஆளுதல் வசித்துவம் என்றால் மற்றவர்களை வசப்படுத்தும் தன்மையை பெறுவது பிராகாமியம் என்றால் ஒரு உடம்பில் இருக்கும் ஜீவன் வேறு உடம்புக்குள் புகுவது (கூடுவிட்டு கூடு பாய்வது) ஈசத்துவம் விரும்பியதை அடைந்து அனுபவிப்பது இத்தனை சக்திகளை தமக்குள் கொண்டவர்கள் தங்கள் ஆத்ம சாதனைகளால்அழிவற்ற அமர நிலையை அடைந்தவரகளே சித்தர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஓம் நமச்சிவாயம் - திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

புதன், 7 ஜனவரி, 2015

பதஞ்சலி முனிவர்


பதஞ்சலி முனிவர் அத்திரி முனிவரின் மனைவி அனுசூயா தேவியின் கற்பைச் சோதித்திடவும் அவளின் சக்தியை அறிந்திடவும், விஷ்ணு, சிவன், பிரம்மா ஆகிய மூவரும் பூலோகம் வந்து அத்திரி மகிரிசியின் ஆசிரமத்திற்கு அனுசூயா தேவியின் கற்பைஅறிந்திடவும் முனிவர்கள் வேடம் தாங்கி சென்றார்கள்,அப்போது அத்திரி முனிவர் அந்த ஆசிரமத்தில் இல்லை,முனிவர்களை வரவேற்று உபசரித்து உணவளிப்பது இல்லாளின் பண்பு அல்லவா? எனவே அனுசூயா தேவியார் ஆசிரிமம் வந்த முனிவர்களை அன்புடன் வரவேற்று உணவருந்த உபசரித்தார்கள்,அப்போது அந்த முனிவர்கள் அவளது கற்புக்கு பங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கில் " நாங்கள் சரீரத்தில் பற்று கொண்டவர்களிடம் பிச்சை ஏற்க மாட்டோம், சரீரத்தில் பற்றற்றவளாக இருந்தால் நீ உடையணிந்திருக்க மாட்டாய், எனவே நாங்கள் இங்கு உணவருந்த மாட்டோம் என்று கூறி எழுந்திருக்க ஆரம்பித்தார்கள், அப்போது அனுசூயா தேவி " முனிவர்களே சற்று பொறுங்கள் " என்றாள்,பின் ஆசிரமத்தின் உள்ளே சென்று கையில் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு வந்தாள், மனத்துக்குள் " இவர்கள் கபட முனிவர்களாக இருந்தால் குழந்தைகளாக மாறக் கடவது " என்று சபித்து, தீர்த்தத்தை அவர்கள் மேல் தெளித்தாள், அவர்கள் மூவரும் பச்சிளம் குழந்தைகளாக உருமாறினர், உடனேஅக்குழந்தைகளுக்கு பாலூட்டி உணவூட்டினாள், பூலோகம் சென்ற தங்கள் கணவர்களை காணாத பார்வதி, லட்சுமி, சரஷ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்கள் பூலோகத்திலுள்ள அத்திரி முனிவரின் ஆசிரமத்திற்கு அனுசூயா தேவியை நாடி வந்தனர், வந்து தங்கள் கணவர்கள் எங்கே என வினவினர், அவர்களுக்கு குழந்தையாக இருந்த மூவரையும் அனுசூயா தேவி காட்டினாள், உடனே இவர்கள் மூவரும் கபட நாடகம் ஆடியதால் குழந்தைகளாக ஆனார்கள் என்பதை அனுசூயாதேவி விளக்கினாள், அப்போது குழந்தைகள் மூவரும் சுய உருவம் பெற்று தம்பதிசமேதராய் நின்று உன்னுடைய கற்பு போற்றுதலுக்குரியது, கற்பினால் எதையும் சாதிக்க முடியும் என்பதை செய்து காட்டினாய், என்று கூறி வாழ்த்தி மறைந்தார்கள், கற்புக்கரசி அனுசூயா தேவிக்கும் அத்திரி முனிவருக்கும் பிறந்தவர்தான் பதஞ்சலி முனிவர், தந்தைஅத்திரி முனிவர் மகன் பதஞ்சலி முனிவருக்கு மானிட உடல் ரகசியத்தைப் பற்றி உபதேசித்தார், அந்த யோக மார்க்கத்தை முதலில் அருளியவர் ஹிரண்யகர்ப்பர் என்ற முனிவர் ஆவார், ஒரு யோகி தன் உடல் உருவத்தின் மீது சம்யமம் செய்து பிறர் கண்களுக்கு புலப்படும் தன்மை உடலுக்கு இல்லாமல் செய்து மற்றவர் பார்வையில் படாமல் மறைந்து விடுவர்,அப்படிப்பட்ட சக்தியை யோக சூத்திரத்தின் மூலம் அருளியவர் பதஞ்சலி முனிவர், தில்லை யம்பலத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தான் இயற்றிய வியாகரண சூத்திரத்தை சீடர்களுக்கு உபதேசிக்க எண்ணம் கொண்டிருந்தார் பதஞ்சலி முனிவர்,எப்போதும் உடலை மறைத்துத்தான் சீடர்களுக்கு உபதேசம் செய்வார், அன்றைய தினம் ஆதிசேஷன் உருவில் அமர்ந்து சீடர்களுக்கு உபதேசம் செய்ய எண்ணி திரையால் தன்னை மறைத்துக்கொண்டு உபதேசம் செய்து கொண்டிருந்தார், அப்போது திரை மறைவில் இருந்து கடும் விஷம் போன்ற மூச்சுக்காற்று வெளிவர சூத்திரத்தை உபதேசித்துக் கொண்டிருந்தார், இதுவரை மறைந்து உபதேசித்த குரு திரைமறைவில் இருந்தாலும், அருகே இருந்து உபதேசம் செய்கிறாரே என்ற சந்தோசத்தில் சீடர்கள் அடைந்தார்கள், அப்போது ஒரு சீடர் இன்பம்,துன்பம் இல்லாத நிலை எப்போது ஏற்படும்? என்றார், அதற்கு குருவான பதஞ்சலி முனிவர் " அஷ்டமா சித்திகளை அடையாளம் கண்டு கொண்டுஐம்புலங்களையும் வசப்படுத்தினால், இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாக பார்க்கும் நிலை ஏற்படும் என்றார் திரைமறைவில் இருந்த குரு பதஞ்சலி முனிவர், அப்போது ஒரு சீடர் இதுவரை நாம் குருவை பார்த்ததில்லையே அருகே இருக்கும் திரையை அகற்றினால் குருவின் தரிசனம்கிடைத்து விடுமே என்ற பேராவில் திரையை விலக்கினார், அடுத்த வினாடி ஆதிசேஷனின் கடுமையான விஷக்காற்று பட்டு சீடர்கள் அனைவரும் எரிந்து சாம்பலானார்கள், வருத்தமடைந்த பதஞ்சலி முனிவர் அரூபமாக மாறினார், அப்போது வெளியில் சென்றிருந்த கெளடபாதர் என்ற சீடர் உள்ளே வந்து சீடர்கள் எல்லாம் சாம்பலாகி இருப்பதை அறிந்து கதறினார், அப்போது குரு பதஞ்சலி முனிவர் அசரீரியான குரலில் கெளடபாதரே கவலைப்படாதே இது குருவைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால் ஏற்பட்ட விபரீதமே, இந்த சூழ்நிலையில் தியானம் தான் உனக்கு தேவை தியானத்தில் அமர்ந்து நடந்தவைகளை மறந்து மனத்தைக் கட்டுப்படுத்து என்று உபதேசித்தார், கெளடபாதர் மனதைக் கட்டுபடுத்தி தெளிந்த மனத்தில் தியானித்தார், அவருக்கு பதஞ்சலி முனிவர் தான் கற்ற வித்தைகளளையும் வியாகரண சூத்திரத்தையும் கற்றுக்கொடுத்தார், ஒருநாள் யோக சூத்திரத்தில் உள் ஆழ்ந்த மூலாதாரத்தில் கனலை எழுப்பி யோக சாதனையல் ஈடுபட்டபோது கெளடபாதருக்கு பதஞ்சலி முனிவர் தரிசனம் கொடுத்ததாகக் கூற்ப்படுகிறது, அதன்பின் பதஞ்சலி முனிவர் ராமேஷ்வரத்தில் ஜீவ சமாதி ஆனார், பதஞ்சலி முனிவர் வியாழ பகவானின் ஆதிக்கம் பெற்றவராக இருக்கிறார், அதனால் பதஞ்சலி முனிவரை வியாழக்கிழமை வழிபட்டால் குருதோச நிவர்த்தியைப் பெறலாம், ஓம் நமசிவாய நம! மேலும்பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

உயிர்கள் அனைத்துமே விருப்பமுடன் எதிர்நோக்கும் ஒரே விஷயம், ஆனந்தம். எறும்பு முதல் நான் முகன் வரை எப்போதும் நாடுவது ஆனந்தத்தையே! ஆனால் அது எளிதில் வாய்ப்பதாக இல்லை. துன்பங்களே அனைவர் வாழ்விலும் மிகுந்து காணப்படுகின்றன. இதற்குக் காரணத்தைத் தேடி எங்கும் அலையத் தேவையில்லை." ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்று அனைத்து அருளாளர்களும் உரைத்துள்ளனர். அந்த ஆசைகள் நீங்காதவரை" ஆனந்தம்' என்பதை அனுபவிக்கவே முடியாது. மண், பெண், பொன்னின் மூலம் இன்பம் கிடைப்பதாகப் பலர் எண்ணுகிறோம். ஆனால் இந்த இன்பங்கள் நிலைப்பதில்லை. காலச்சக்கரத்தின் சுழற்சியில், இன்பங்களாக நாம் கருதிய விஷயங்கள்பல, நீர்மேல் குமிழ்களாக மறைந்து விடுகின்றன. மேலும் மரணம் என்பது ஆண்டியென்றோ,அரசனென்றோ வேறுபாடு பார்க்காமல் எந்தப் பொழுதிலும் தீண்டிவிடும். மரணத்துக்குப் பின் நாம் செய்த புண்ணிய - பாவங்களைத் தவிர வேறு எதுவுமே நம்மோடு வரப் போவதில்லை. இந்த இரண்டும், நமது மறுபிறவிக்கும் காரணமாய் அமைகின்றன. இதனால்தான் உலகியல் இன்பங்களைச் "சிற்றின்பம்' என்றிகழ்கின்றனர் மேலோர். எனவே அழியாத ஆனந்தத்தை அடைய வேண்டியது அவசியம். அந்த நிலைத்த ஆனந்தம் எதிலுள்ளது...?அது' பரமாத்மாவை அடைவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும்' என்பதே அருளாளர்களின் அறிவுரை. பரமாத்மாவை அடைவது மட்டுமல்ல, அதற்காகச் செல்லும் பாதையே ஆனந்தகரமானதுதான்! "ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்ற மகான்கள், ஆண்டவன் மீது ஆசை வைப்பதை மட்டும் வலுவாக ஆதரிக்கின்றனர்.”ஹேசிஹேசிமாஜஆஸ! ஜன்மஜன்மீம்துஜாதாஸ' என்று பாடுகின்றார் துகாராம் சுவாமிகள். "எனக்கு ஒரேயொரு ஆசைதான் எப்போதும் உள்ளது; உன் பக்தனாக எல்லாப் பிறவிகளிலும் நான் பிறக்க வேண்டுமென்பதே அது 'என்பது அவ்வரிகளின் பொருள். பாருங்கள்! "பிறவாமை' என்ற நிலையை அடைவது மட்டுமே ஆன்மீகத்தின் உச்சம் என்பது உண்மைதான் என்றாலும்,"இறையடியாராகப் பிறக்க முடியுமெனில் எத்தனை ஜன்மங்கள் வேண்டுமானாலும் மண்ணில் பிறக்க விரும்புகின்றோம்' என்பதே பக்தர்களின் இதயநாதமாக இருக்கின்றது. ஸ்ரீநடராஜப்பெருமானின் குனித்தபுருவத்தையும், கொவ்வைச் செவ்வாயையும், பனித்த சடையையும், பவளம்போல் மேனியில் பால் வெண்ணீற்றையும், இனித்த முடைய எடுத்த பொற்பாதத்தையும் பார்த்துப் பார்த்து உருகிய அப்பர் பெருமான், "மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே' என்று அடித்துச் சொல்கின்றார். பிறவாமை எனும் வரத்தினை, ஊர்த்துவ தாண்டவமாடும் பரமேஸ்வரனிடம் யாசித்த காரைக்கால் அம்மையார், "ஒருவேளை நான் மறுபடி பிறக்க வேண்டுமெனில், உன்தாளிணைகளை மறவாமல் இருக்க வேண்டும்' என்று இறைஞ்சுகிறார். உண்மையான பக்தர்கள், பிறப்பெடுப்பதைக்கூட" ஆனந்த அனுபவமாகவே' கருதுகின்றனர். 'மனித்தப்பிறவி' என்று வலியுறுத்திய அதே அப்பரடிகள்,"புழுவாய்பிறக்கினும் புண்ணியா! உன்னடி என் மனத்தேவழுவாதிருக்கவரம் தரவேண்டும்' என்றுபாடி, சிவபெருமான்மீது, தான் வைத்துள்ள பேரன்பை வெளிப்படுத்துகிறார். "எனக்கு நரஜன்மம் வாய்க்காமல், புழுஜன்மம் கிடைத்தாலும் பரவாயில்லை; ஈசனே! உனது திருவடிகளை மறவாத புழுவாக நான் இருந்தால் போதும் 'என்கிற போது அப்ப ரடிகளின் அன்புள்ளம் இமயமாய் உயர்ந்திருப்பதை உணரமுடிகிறதல்லவா? "ஹேசிமஜகடோஜன் மஜன்மாந்தரீம்! மாகணே ஸ்ரீஹரிநாமதுஜே' என்று பாடியுள்ளார் நாமதேவசுவாமிகள். ""இறைவனே! எனக்கு எத்தனைப் பிறவிகளை வேண்டுமானாலும் கொடு! ஆனால் எல்லாப் பிறவிகளிலும் உன் திருநாமங்களைச் சொல்பவனாகவே ஆக்கு''என்பதே அவர் கேட்கின்ற ஒரேவரம். எது இந்த அடியார்களை இப்படியெல்லாம் ஏங்க வைக்கிறது...? வேறொன்றுமில்லை! சாதாரண மனிதர்கள், புலன்களால் கட்டுண்டு கிடக்கின்றனர். அந்தப் புலன்களால் நுகரப்படும் விஷயங்களே இன்பம் என எண்ணி, "மாயை'யினால் தடுமாறுகின்றனர். அந்த இன்பங்களோ கழுவப்படும் மீன்களில் நழுவிப் போகும் மீன்கள் போல் துள்ளி மறைகின்றன. அப்போது," ஏன்பிறந்தோம்?' என்று நொந்து, நொந்து, நோயில் விழுந்து, பாயில்படுத்து, துவைத்தெடுக்கப்பட்டு சவமாகிப் போகின்றனர். பரிதாபம்! ஆனால் மகான்களோ புலன்களை சிற்றின்பத்தின் பாதையில் செல்ல விடுவதேயில்லை. அவர்கள், தங்கள் மனதால் இறைவனையே சிந்திக்கின்றனர்! கண்களால் அவனுடைய திருமேனி அழகை ரசிக்கின்றனர்! காதுகளால் அவனது திவ்விய சரிதங்களைக் கேட்டு மகிழ்கின்றனர்! நாவினால் அவன் திருநாமங்களைச் சொல்லி இனிக்கின்றனர்! கரங்களால் ஈசனது ஆலயங்களில் உழவாரப்பணி செய்து உவகை கொள்கின்றனர்!" சேர்ந்தறியாக்கையானை' நோக்கிக் கை கூப்பி நெகிழ்கின்றனர்! கால்களால் அவனது ஆலயத்தை வலம் வருகின்றனர்...இப்படி ஈசனுக்காகவே ஐம்புலன்களையும் அர்ப்பணித்துவிட்டதால், முக்தியில் கிடைக்கும் இன்பத்தை இங்கேயே அனுபவித்து,"ஜீவன் முக்தர்களாக' வலம் வருகின்றனர். அதனால் இந்த உலகம் நமக்குத் தெரிவதுபோல நரகமாக அவர்களுக்குத் தெரிவதில்லை; ஆனந்தபுவனமாகவே அகிலத்தைக் காண்கின்றனர். யாருக்கு எந்த நதியைப் பார்த்தாலும் பரமேஸ்வரனின் சடையிலிருந்து பெருகும் கங்கையாகவே தோன்றுகிறதோ, மலைகள் எல்லாம் கயிலையாகத் தெரிகின்றதோ, மேகங்கள் வெண்ணீற்றை நினைவுபடுத்துகின்றதோ, நீலவானம் நீலகண்டத்தை நினைவூட்டுகின்றதோ, பசுக்களைப் பார்க்கும்போது பசுபதி நாதனின் கருணை புலப்படுகின்றதோ.. அட..! சுடுகாட்டைப் பார்த்தாலும்," பேய் வாழ்காட்டகத்தாடும் பிரானின்' மீது அன்பு மேலிடுகிறதோ அவர்களுக்கு "மோட்சபூமி' என்ற ஒன்று தனியே தேவைப்படவாபோகின்றது? எறும்பைக் கண்டால் எறும்பியூர்! மதகஜத்தைக் கண்டாலும - சிலந்தியை கண்டாலும் ஆனைக்கா! நாரையை பார்த்தால் திருநாரையூர்! மயிலைப்பார்த்தால் மாயூரம்! வராகத்தை பார்த்தால் திருவண்ணாமலை! பாம்பு தட்டுப்பாட்டால் திருப்பாம்புரம்! ஈக்களைக் கண்டால் ஈங்கோய்மலை! புலியைப்பார்த்தால் பெரும்பற்றப் புலியூர், அல்லது திருப்புலிவனம்! சிங்கத்தைக் கண்டால் திரிபுவனம் சரபேஸ்வரர்! மாடுகளை நோக்கினால் திருவாவடுதுறை! ஆடுகளைக் கண்டால் திருவாடானை....!இப்படி எதைக் கண்டாலும் திருத்தலங்களின் நினைவுகளில் மூழ்கிப் போகிறவர்களுக்கு சரீரம் விழுந்த பிறகுதானா முக்தி நிலைவாய்க்கிறது? இல்லவேயில்லை! அப்போதைக்கு இப்போதே அந்த ஆனந்தம் வந்து விடுகிறதே! எனவே புலன்களால் உந்தப்பட்டு எழுகின்ற ஆசை மட்டுமே அபாயகரமானது! அந்த ஆசையைக் கொல்ல வேண்டும். மாறாக, புனிதர்க்கெல்லாம் புனிதரும், தேவர்களுக்கெல்லாம் தேவருமான மஹா தேவனாகிய சிவபெருமானின் மீது ஆசை வைத்து, அப்பர் பாடிய "திருஅங்க மாலை'யில் கூறப்படுவதுபோல் எல்லா அவயவங்களையும் அரனாருக்கே அர்ப்பணிக்கும் ஆசையை அளவுக் கதிகமாய்க் கொள்ளவேண்டும். அதில் மட்டும் நிரந்தர ஆனந்தம் கிடைக்கும். எவ்வாறு மலத்திலுள்ள புழுக்களுக்கு சந்தனத்தின் அருமை தெரியாதோ, அதேபோல் புலனின் பங்களில் மூழ்கிய புல்லர்களுக்கு அடியார்கள் அனுபவிக்கும் ஆனந்தம் விளங்கிக் கொள்ள முடியாதவிஷயமே! "மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்' என்று பாடுகிறாள், திருமாலின் பக்தையான ஆண்டாள். காமம் உள்ளிட்ட அறுவகை துர்குணங்களை அப்பர் பெருமான் போல் பல அடியார்கள் கண்டித்துள்ளனர். புலனின்பமே மனிதனை நரகத்தில் வீழ்த்துகிறது! ஆயின்புலன்களை வெல்வதும் கடினம்தான்! இந்நிலையில் தப்பிக்க என்னவழி? அதையும் அடியார்களே சொல்லித் தருகின்றனர். "அதே புலன்களை ஆண்டவன் பக்கம் திருப்பி விட்டால் ஆனந்தம் என்பது என்ன வென்று அக்கணமே புரிந்துவிடும்' என்று உபதேசிக்கின்றனர். ஆண்டவன் மீது வைக்கின்ற ஆசை, நாசத்தை உண்டு பண்ணாது என்பதைஅவர்கள்அறிவார்கள். அதனால்தான், ""பவளத்திருவாயால்" அஞ்சேல்' என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே'' என்றும்,""ஆசையெலாம் அடியார் அடியோ மெனும் அத்தனை ஆகாதே'' என்றும் மாணிக்கவாசகர் முழங்குகின்றார். "இப்படிப்பட்ட மேன்மை உணர்வு எளிதில் எல்லோர்க்கும் வாய்த்துவிடுமா?' என்று எவருமே மலைக்கத் தேவையில்லை."மாயை' என்னும் அம்பறாத் தூணி, மன்மத பாணங்களை ஏவி, நம்மைக் கவிழ்க்கத்தான் முயற்சிக்கும். அது வெறும் மலரம்புதானே? சிவநாமம் என்பதோ "பாசுபத' அஸ்திரம்! நாம் அந்த அஸ்திரத்தை புலன்களுக்கும், வினைப்பயன்களுக்கும் எதிராக வீசத் தொடங்கிவிட்டால் வெற்றி நிச்சயம்."வித்தக நீறணி வார்வினைப்பகைக்கு அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே' என்று பாடுகிறார் சிவ பக்தப்படையின் தளபதியாய் நிற்கும் ஆளுடைய பிள்ளையார். பிறகும் ஏன் அச்சம்? ஐந்தெழுத்தால் ஆகாதது அவனியில் ஏதும் உண்டா? எனவே உலக இன்பங்களாக நாம் கருதும் துக்கங்களை உடனடியாக விட்டொழிப்போம். ஐந்தெழுத்தின் துணைகொண்டு, பீளை உடைக் கண்களால் சிற்றம் பலத்து அரன் ஆடல்காண்போம்! அது ஆனந்தத்தாண்டவம்! தேடிப் பார்த்தாலும் இவ்வுலகினில், வேறெந்த விஷயத்தாலும் நிலைத்த ஆனந்தம் ஏற்படாது! ஆயின், திருநாவுக்கரசர் பாடியது போல," சிற்றம்பலவன் திருவடியைக் கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே?' என்று இருந்துவிட்டால் தினம் தினம் ஆனந்தமே! அந்த நிலையை அடைந்து விடின் அன்றாடம் ஆதிரை திருவிழாதான்! நம் மனமென்ற பொன்னம்பலத்தை, ஆனந்தமா நடராஜ பெருமான் ஆடுகின்ற களமாக ஆக்கிக் கொண்டால் எல்லா மாதங்களுமே "மார்கழி' யாகி, உள்ளம் குளிர்ந்து உகப்படையலாம். இந்தப்புரிதலே" ஆருத்ரா தரிசன' வைபவத்துள் அடங்கியுள்ள" சிதம்பர' ரகசியம்.

உஜ்ஜயினி காலபைரவர் சிவபெருமானின் உக்ர வடிவங்களுள் ஒன்றாக விளங்குகிறது பைரவர் திருக்கோலம். அந்தகாசுரனை அழிக்கும்பொருட்டு சிவபெருமான் தன்னிலிருந்து காலபைரவரைத் தோற்றுவித்தார். பஞ்சாக்னி நடுவே பலகாலம் கடுந்தவம் செய்து சிவபெருமானிடம் அரிய பல வரங்களைப் பெற்றான் அந்தகாசுரன்.அந்த ஆணவத்தால் வானோர்க்கு பல இன்னல்கள் புரிந்தான். அவனை வெல்ல பிரம்மா, தேவேந்திரன் முதலான யாராலும் இயலவில்லை. வேறு வழியின்றி அவர்கள் அந்தகாசுரனிடமே சென்று, உங்கள் கட்டளையை ஏற்று நடக்கிறோம். காத்தருள வேண்டும் என்று சரணடைந்தனர். போரிடுவதில் ஆண்சிங்கம் போன்றவன் நானொருவனே. எனவே நீங்களனைவரும் பெண்கள்போல் வளையலணிந்து, கண்களில் மைதீட்டி, சேலையுடுத்தி வாழவேண்டும். யாரேனும் ஆண்போல் உடையணிந்தால் அழித்துவிடுவேன் என்றான் அந்தகாசுரன். தேவர்கள் வேறு வழியின்றி அதற்குக் கட்டுப்பட்டனர். பின்னர் மந்தர மலையையடைந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்தனர். அவர்களுக்கு காட்சிகொடுத்த சிவபெருமான், அந்தகாசுரனின் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதாகக் கூறினார். அதன்படி தனது அம்சமாக பைரவரை உருவாக்கி அனுப்பினார். கடுங்கோபத்துடன் சென்ற பைரவர் அந்தகாசுரனின் சேனைகள் அனைத்தையும் அழித்து, முடிவில் அவனை தன் சூலத்தால் குத்தித் தூக்கினார். இவ்வாறு பல பைரவர்களை சிவபெருமான் தோற்றுவித்ததாகச் சொல்வர். பிரம்மனின் அகந்தையை அடக்க அவரது ஒரு தலையைக் கிள்ளியதும் பைரவ சொரூபமே. இவர் கொடுமையை அழிப்பதில் எவ்வளவு கோபம் கொள்கிறாரோ அதேபோன்று கருணை புரிவதிலும் இணையற்றவர். பக்தர்களின் பயத்தைப் போக்கி வெற்றியைத் தேடித்தருபவர் பைரவர். கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் நிகழ்ந்ததாக சத்ருத்ர சம்ஹிதாவின் 8-ஆவது அத்தியாயம் குறிப்பிடுகிறது. அனைத்து சிவாலயங்களிலும் பைரவர் சந்நிதி இருப்பதைக் காணலாம். இவரே அனைத்திற்கும் காவல் தெய்வமாக விளங்குகிறார். இவர் தனி ஆலயங்களில் பிரசித்தி பெற்று விளங்கும் தலங்களும் உண்டு. அவற்றிலொன்று உஜ்ஜயினி காலபைரவர் ஆலயம். மகாராஷ்டிர மாநிலம், ஜெய்ப்பூர் நகருக்கு அருகேயுள்ள உஜ்ஜயினி காலபைரவர் ஆலயம் உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்களை தன்பால் இழுக்கிறது. இவ்வாலயத்தில் அஷ்டமி திதியில் பைரவ பூஜை செய்தால் எதிரிகள் அழிவர்; எத்தகைய நோயும் குணமாகும்; இழந்தவற்றை மீண்டும் பெறலாம் என்று நம்பிக்கையோடு கூறுகின்றனர். இவ்வாலயத்தில் விசித்திரமான ஒரு வழக்கம் உள்ளது. மதுவை சமர்ப்பிக்கும் வழக்கமும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு கிண்ணத்தில் மதுவை நிரப்பி பைரவரின் வாயருகில் வைக்கிறார் பூசாரி. என்ன ஆச்சரியம். மெல்ல மெல்ல அந்த மது பாதிக் கிண்ணம் அளவுக்கு குறைந்து விடுகிறது. பக்கத்தில் எங்கும் வழிவதில்லை. பல ஆய்வாளர்கள் இந்த பீடத்தை சோதித்தும் பார்த்துவிட்டனர். மது உறிஞ்சப்படும் மாயம்தான் தெரியவில்லை. இதைக் காணவே பல வெளிநாட்டினர் இங்கு வருகிறார்கள். இவ்வாலயத்துக்குப் பின்னால் குகைக்குள் பாதாள பைரவி சந்நிதி இருக்கிறது. இங்கே தந்திர பூஜைகள் செய்யப்படுகின்றன. கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும், இங்கே வழிபடுபவர்களின் பிரச்சினைகள் நிச்சயம் அகலுகின்றன என்கிறார்கள் பக்தர்கள்.