செவ்வாய், 12 மே, 2020

இறைவன் கோயில் கொள்ளும்உள்ளங்கள்

இறைவன் கோயில் கொள்ளும்உள்ளங்கள்



" அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்று
  ஐம்புலனும் அடக்கி ஞானம்
 புகலுடையோர் தம் உள்ளப் புண்டரீகத்து
 உள்ளிருக்கும் புராணர் ........ தி,மு1,132,6

போலிகளை கண்டு ஏமாறாமல் வாழ்வதற்கு இப்பாடல்  பெரிதும் உதவியாய் இருக்கும்.
சிவபெருமானார் ஒருவருடைய உள்ளத்தில் தங்க வேண்டுமானால் 
1) அவருடைய உள்ளத்தில் அன்பு நிறைந்திரு்க வேண்டும். அன்பு என்பதன் பொருள் சுயநலம் இல்லாமை என்பதும் ஆகும். ஒருவர் அன்புடையவர் என்றால் பிறர் நலத்திற்கு உதவும் பண்பு மிகுந்த காணப்பட வேண்டும்.இத கொள்ளத் தக்க குணங்கள்
2, காமம், குரோதம், லாேகம், பேராசை, பாேன்ற ேவண்டாத்தீய குணங்கள் இல்லாதிருக்க வேண்டும்.
3. மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலங்களையும் அவற்றின் போக்கில் செல்லவிடாமல் நல்ல வழிியில் செலுத்தும் பண்புடையவராய் இருத்தல் வேண்டும். வேண்டாதனவற்றை பார்க்கக் கூடாது. பிறருடைய இரகசியங்களை கேட்பதில் செவிடராய் இருத்தல் வேண்டும். உணவில் அதிவிருப்பம் கூடாது. வாயினால் தீய வார்த்தைகள் பேசுதல் கூடாது. மூக்கினால் மனதை திசை திருப்பும்நுகர்வுகளில் நுகர்தலும், உடம்பினால் மயக்கம் காெள்ளுதலும் கூடாது.
 இந்த ஐந்த பொறிகளை இறைவழிபாட்டிற்கே பயன்படுத்தும் பழக்கம் வேண்டும். சிவ சிந்தனையே மிகுந்திருக்க வேண்டும்.
சிந்தனை செய்ய மனம் அமைத்தாய்  .... திமு 11
சி்ந்தனை நின்தனக்கு ஆக்கி ........ திமு, 8
 இப்படியெல்லாம் மனதை திருத்தி அதனை தாமரை மலர் பாேல் ைவத்திருக்கும் சான்றோர்களின் 
( சிவஞானியர்களின் ) உள்ளத்தில் சிவம் விளங்கும் என்கிறார்கள் திருமுறை தந்த அருளாளர்கள். உள்ளக்கோயிலேயே இறைவனுக்கு திருக்கோயில் கட்டி இறைவனையே அங்கு எழுந்தருளச்செய்து குடமுழுக்கு செய்து  உள்ளக்கோயில் கட்டியவர் பூசலார் என்ற சிவஞானி.
 போலி வேடதாரிகளைக் கண்டு ஏமாந்து விடக்கூடாது என்பதற்கு அருளாளர்கள் தந்த விளக்கம் தான் அவர்கள் அருளிய திருமுறைகள்.
திருச்சிற்றம்பலம்

திங்கள், 11 மே, 2020

இறைவழிபாட்டில் தமிழின் பெருமை

இறைவழிபாட்டில் தமிழின் பெருமை

சுமார் 7ம் நூற்றாண்டு வாக்கில் தமிழ் மொழியின் நிலை கேட்போர் இல்லாத நிலையில் திருஞானசம்பந்தர் மற்றும் சைவ சமய நால்வர் மற்றும் திருமுறை ஆசிரிய பெருமக்களால் ஏற்றம் கண்டது தமிழ். தமிழால் சைவமும், சைவத்தால் தமிழையும் வளர்த்த பெருமை இவ்வாசிரிய பெருமக்களுககே தகும். இறைவனேயே தமிழாகவும், திருமந்திர தேவாரப்பாடல்களே மந்திர மொழியாகவும் ஏற்றம்  பெறச் செய்தனர்.

“ஆறு அது ஏறும் சடையான் அருள்மேவ அவனியர்க்கு, வீறு அது ஏறும் தமிழால் வழிகண்டவன்” என்று திருஞானசம்பந்தரைத் திருத்தொண்டர் திருவந்தாதி அருளிய நம்பியாண்டார் நம்பி புகழ்வார். அதாவது தலையில் கங்கையை அணிந்துள்ள சிவபெருமானின் அருளைப் பெறுவதற்கு உலகத்தவர்க்கு உயர்வு தரும் தமிழால் வழிகண்டவர் திருஞானசம்பந்தர் என்று குறிப்பிடுகின்றார். பதிகப் பெருவழியாகிய இறையன்பு நெறியை நமக்கு அளித்தவர் திருஞானசம்பந்தர். தெரிந்த, எளிய, அன்னைத் தமிழிலேயே இறைவனைப் பாடி அடையலாம் என்பதே இதன் கருத்து. இதனையே தமிழர் வழிபடு மரபாகச் சேக்கிழார் தமிழர் வாழ்வியல் பெட்டகமான பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார்.

 அடியார்கள் பெருமையை எவ்வாறு, என்னசொல்லிப் பாடுவது என்று சேக்கிழார் இறைவனை உள்கி நின்றபோது, “உலகெலாம்” என்று இறைவன் அன்னைத் தமிழில் அடியெடுத்துக் கொடுத்தார். பெருமானின் சிவஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தர் திருநெறிய தமிழில்தான்  இறைவனைப் பாடினார். சிவஞானபால் தமிழ்ஞானம் ஊட்டியதை என்னுகையில் சிந்தை குளிர்கின்றது. சூலை நோயால் துடிதுடித்துத் தமக்கைத் திலகவதியாரிடம் திரு நீறு பெற்று, அதிகை வீரட்டானத்து இறைவனைச் “சலம்பூவோடு தூபம் மறந்தறியேன், தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்” என்று அழகு தமிழில் பாடியே சூலை நோய் நீக்கினார் திருநாவுக்கு அரசர்” என்று இறைவனால் அழைக்கப்பெற்ற அப்பர் பெருமான்.

 பெரிய புராணத்தின் முதல் சருக்கமான திருமலைச் சருக்கத்தில் சுந்தரர் பெருமானின் வரலாறு இடம்பெற்றிருக்கின்றது. இவ்வரலாற்றில் இறைவன் தமிழை விரும்பிக் கேட்டதாக சேக்கிழார் குறிப்பிடுகின்றார். தூய மறையினைப் பாடும் இறைவன், “நமக்கும் அன்பின் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக” என்று கூறியதாய்ச் சேக்கிழார்பெரிய புராணத்தில் பதித்துள்ளார். இதன் வழி இறைவனுக்குச் சிறந்த அர்ச்சனை பாடுதலே ஆகும் என்று தெளிவாகிறது. பெருமான் விரும்பிக் கேட்ட உயர் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள தமிழர்கள் பெருமானைத் தமிழிலேயே போற்றிப் புகழ்ந்து, அகங்குழைந்து, கண்ணீர் மல்கி வழிபடலாம் என்று புலனாகிறது. பெருமானால் ஆட்கொள்ளப் பெற்ற சுந்தரரும், “பித்தா” என்ற தமிழ்ச்சொல்லைக் கொண்டே பெருமானை முதலில் வழுத்தி வழிபடுகின்றார். இறைவனைத் தமிழில் வழிபடுவதே தமிழர் வழக்கு என்பதனைச் சேக்கிழார் பெரிய புராணம் நெடுகிலும் பதிக்கின்றார். தமிழ்ஞானசம்பந்தர் பிறப்பினைப் பற்றி குறிப்பிடும் சேக்கிழார், “திசைஅனைத்தின் பெருமைஎலாம் தென்திசையே வென்றுஏற, மிசை உலகும் பிற உலகும் மேதினியே தனிவெல்ல, அசைவில் செழும் தமிழ் வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல, இசைமுழுதும் மெய்யறிவும் இடங்கொள்ளும் நிலைபெருக” என்று குறிப்பிடுகின்றார்.

   தமிழர்கள் தங்கள் அன்னைத் தமிழின் பெருமையை மறந்த நிலையினையும் தமிழர்களின் இறைவழிபாட்டில் திருநீராட்டு, குடமுழுக்கு, பூசனை, ஓதல் அனைத்தும் தமிழில் இடம்பெற வேண்டும் என்பதனைச் சேக்கிழார் சுட்டிக் காட்டுகின்றார். தமிழர்கள் வாழும் தென்திசையின் பெருமை உலக முழுமைக்கும் சிறக்கவும், தமிழர் மரபாகிய சிவ நெறியும் தமிழ் மொழியும்,, தமிழர்தம் வழக்கங்களும், தமிழர் இசையும், மெய்யறிவும் மற்ற வழக்குகளைக் காட்டிலும் சிறக்கத் திருஞானசம்பந்தர் தோன்றினார் என்கிறார். திருஞானசம்பந்தர் கால கட்டத்திலேயே தமிழர்கள் தங்கள் தமிழ் வழக்கங்களைத் தொலைத்து விட்டிருந்திருக்கிறார்கள் என்றும் இதில் புலப்படுகின்றது.

 அருளாளர்கள் அன்னைத் தமிழில் பாடிய திருமுறைகள் தமிழ் மந்திரங்கள். அவை இறைவழிபாட்டிற்கு உரியவை என்பதனை, “பன்னு தமிழ்மறையாம் பதிகம் பாடி” சேக்கிழார் குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் இன்னும் திருமுறைகள் பாடிய நாயன்மார்களின் பதிகங்களுக்குச் சேக்கிழார் பல அரிய அடை மொழிகளைத் தந்து குறிப்பிடுகின்றார். பெருமானிடம் நம்மைச் சேர்ப்பிக்கும் தமிழ் மந்திரங்களைச் சேக்கிழார், “உரைத்தமிழ்மாலை, கோதில் திருப்பதிகம், தேமாலை செந்தமிழ், அருந்தமிழ், தூமொழி, நற்றமிழ் மாலை, விருத்தத் திருமொழி, அருஞ்சோல்வளத்தமிழ் மாலை, நாவார் பதிகம், சொன்மாலை, எழுது மறை, ஒப்பரிய தமிழ், அஞ்ஞான செந்தமிழ்ப்பதிகம்” என்று பலவாறாகப் போற்றுகின்றார்.

 பெருமானின் அருள்பெற்றுப் பெருமானை முழுக்க-முழுக்கத் தமிழிலேயே அருளாளர்கள் பாடி, பெருமானின் திருவடி நிழலை அடந்து காட்டியும் நம் போன்ற தமிழர்களுக்கு இன்னும் அதில் நம்பிக்கை ஏற்படவில்லை! திருக்கோயில்களில் நம் அடியவர் பெருமக்கள் ஓதி இறைவனை வழிபட்ட தமிழ் மந்திரங்கள் இறப்பு வீடுகளில் மட்டும் ஓதப்பெறுவதும், அங்கு ஓதுவதற்கு மட்டுமே தகுதியுடையது என்று எண்னுவதும் நம் அறியாமையே.

சீர்மிகு செந்தமிழரின் அன்னை மொழியாகிய அருந்தமிழ் பெருமான் விரும்பிக் கேட்டது என்று கண்டோம். பெருமானின் அருள்பெற்ற அருளாளர்கள் அன்னைத் தமிழிலேயே பெருமானைப் பாடி வழிப்பட்டார்கள். இதற்குச் சான்று இறையன்பும் நெகிழ்வும் குழைவும் மிக்க பன்னிரண்டு திருமுறைகளும், பிற்காலத்து அடியார்களின் இறையன்புப் பனுவல்களும் ஆகும். பதினேழாயிரம் பாடல்களுக்கு மேற்பட்ட தமிழ் மந்திரங்களான திருமுறைப் பாடல்கள் பெருமானைத் தமிழில் போற்றி வழிபட பாடப்பெற்றவையே!

 ‘நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையாது ஒரு போதும் இருந்தறியேன்” என்று பாடுகின்ற பாடலின் பொருள் தெரிந்து உள்ளம் உருகிப் பெருமானை வழிபடுகின்றப் போது இறைவனிடத்திலே அன்பு பெருகுகிறது. உள்ளம் கசிகின்றது. கண்ணீர் மல்குகின்றது. நம் உளச் சுமைகளெல்லாம் குறைகின்றது. ஊன் உருகுகின்றது. உயிர் உருகுகின்றது. உவட்டாத இன்பம் சிந்தையில் கொப்பளிக்கின்றது. உள்ளத்து இருள் நீங்கி உள் ஒளி பெருகுகின்றது. வழிபாடுகளில் இடம் பெரும் கிரியைகள் அல்லது செயற்பாடுகள் உயிர் அறிவுபெறுவதற்குத் தேவையான செய்திகளைச் செயற்பாடுகள் மூலம் உணர்த்துவனவாகும். பூசனைகல் இடம் பெறும் செயற்பாடுகள் இறைவனின் பெருமைகளையும் பெருங்கருணையையும் உணர்த்துவன. இதனை உணர்ந்து நம் அறியாமையினைப் போக்கி, அன்புப் பிழம்பாய் மாறி நற்சிந்தனை, நற்செயல், நல்ல சொற்கள் பேசி உயிர் விளக்கம் பெற்று வாழ்வதே இறை நெறிக்கு நம்மை இட்டுச் செல்லும் என்பதனை உணர்த்துவதற்கே இக்கிரியைகள் செய்யப்படுகின்றன.

 உயிர் அறிவு பெறுவதற்கு இறைவனிடத்திலும் இறை வாழும் பிற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டுவதே சிறந்த வழி என்பதனை அன்பே சிவம் என்று திருமூலர் குறிப்பிடுவார். இறைவனிடத்தில் அன்பு ஏற்படுவதற்கு இறைவனைப் புரிந்த மொழியில் வழிபட வேண்டி இருக்கின்றது. இறைவனைப் பற்றிய உண்மைகளையும், உயிரைப் பற்றிய உண்மைகளையும், உலகைப் பற்றிய உண்மைகளையும், முழுமையாகவும்,தெளிவாகவும், தமிழர் தம் பண்பாட்டிற்கும் மரபிற்கும் உட்பட்டு, விளங்கும் மொழியில் நமக்கு அறிவிப்பது அன்னைத் தமிழில் உள்ள திருமுறைகளே!
 “இரும்பு மனத்து என்னை உருக்கி, நின் கரும்பு சுவை எனக்குக் காட்டினை” என்று மணிவாசகர்   நைந்து உருகிப் பாடியது, வழிபட்டது அன்னைத் தமிழில்தான்.

இறைவன் தான் தன்னைத் தமிழில் பாட வைத்தான் என்பதனைத், “தன்னார் தமிழ் அளிக்கும் தன் பாண்டி நாட்டானை” என்று மணிவாசகர் குறிப்பிடுவார்.

பெருமான் தமிழ் வழிபாட்டினைக் கேட்டு இரங்குவான் என்பதனை, “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு, உலகவர் முன்தாளம் ஈந்து, அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை, கோளிலிப் பெருங்கோயில் உளானை, கோலக்காவில் கண்டு கொண்டேனே” என்று சுந்தரர் பாடுகின்றார்.

 தமிழ் மந்திரங்களான திருமுறைகள் இறைவனை இரங்க வைக்கக் கூடியவை என்னும் தமிழிலேயே இறைவனைப் பாடி அடையலாம் என்பதனைச் சம்பந்தர், அப்பர், சுந்தரர், காரைக்கால் அம்மையார், திருமூலர், சேரமான் பெருமான் நாயனார், பொய்யடிமை இல்லாத புலவர்கள் போன்றோரின் வரலாறுகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் தெளிவுற விளக்குகின்றார்.

 உண்மையான வழிபாட்டு முறைகளையும் உண்மையான சிவநெறிக் கொள்கைகளையும் உண்மையான இறையன்பு மீதூறும் நெறிமுறைகளையும் நமக்குத் தமிழில் உணர்த்தும் தமிழ் மந்திரங்களான திருமுறைகள் பல அருள் நிழக்வுகளை அடியார்கள் வாழ்வில் ஏற்படுத்தியுள்ளமையைப் பெரிய புராணத்தில் சேக்கிழார் காட்டுகின்றார்.
   தமிழால் இறைவனை வழுத்திப் பாடி தமிழ்ஞானசம்பந்தர் ஆண் பனையைப் பெண்பனை ஆக்கியதும்,
சாம்பலை மறுபடியும் பெண்ணாக்கியதும், பாம்பு தீண்டி இறந்த வனிகனை மறுபடியும் உயிர்ப்பித்ததும்,
நீரில் திருமுறை எழுதிய ஓலை எதிர்த்து சென்றதும், தீயில் திருமுறை எழுதிய ஓலை வேகாமல் பச்சையாய் நின்றதும்தமிழ் வழிப்பாட்டினால்தான்.
தமிழ் ஓதி முத்துப் பல்லக்குப் பெற்றதும் , பொன் தாளம் பெற்றதும்,முத்துப் பந்தல் பெற்றதும், பொற்காசு பெற்றதும், குளிர் நோய் போக்கியதும், கடும் வெப்பு நோயைப் போக்கியதும் தமிழால்தான்.

 திருநாவுக்கரசு அடிகள் கல்லில் கடலில் மிதந்ததும், நீற்றறையில் உயிர் பிழைத்ததும், மதங்கொண்ட யானையை அடக்கியதும், சூலக்குறியும் இடபக்குறியும் பொறிக்கப் பெற்றதும், இறைவன் திருவடி தம்மேல் சூட்டப் பெற்றதும் தமிழில் வழிபட்டுத்தான்!

சுந்தரர் பெருமான் தம்பிரான் தோழர் நிலைமையை அடையப் பெற்றதும், பொன் பெற்றதும், பொதி சோறு பெற்றதும், முதலை உண்ட பாலகனை மீட்டுத் தந்ததும், திருவடி சூட்டப் பெற்றதும், இழந்த கண்னொளியை மீளவும் பெறப் பெற்றதும் தமிழ் வழிபாட்டினால் தான் என்பதனைச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார்.

   தமிழில் பாடி இறைவனை வழிபடும் வாழுங்காலத்திலேயே பலமுறை இறைக்காட்சியைக் கானும் பேறுபெற்ற இப்பெருமக்கள் தமிழில் வழிபட்டால் இறைவனை அடையளாம் என்றுதிருஞானசம்பந்தர் பெருமண நல்லூரிலும், அப்பர் பூம்புகலூரிலும், சுந்தரர் திருவஞ்சைக் களத்திலும், காரைகால் அம்மையார் திருவாலங்காட்டிலும் அடைந்துகாட்டினர். தமிழில் இறைவனை வழிபட்ட நம் மரபினைச் சீர்மிகு செந்தமிழர் சிந்தையில் கொண்டு வழிபடும் நால் எந்நாளோ!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி
திருச்சிற்றம்பலம்

சனி, 9 மே, 2020

பக்தி

இறைவனை குழந்தையாக பாவனை செய்தல் எனும் வாத்சல்யம் பஞ்ச பூதத்தில் அக்னியை குறிக்கும். இறைவனை நண்பனாக பாவனை எனும் சகியம் பஞ்ச பூதத்தில் ஆகாயத்தை குறிக்கும்.  இறைவனை முதலாளியாக்கி நம்மை அடிமையாக பாவனை செய்தல் எனும் தாசியம் பஞ்ச பூதத்தில் பூமியை குறிக்கும்.

இறைவனை , காக்கும் தந்தையாக பாவனை செய்தல் எனும் சாந்தம் பஞ்ச பூதத்தில் காற்றை குறிக்கும்.  இறைவனை காதலனாக பாவனை செய்தல் எனும் மதுரம் பஞ்ச பூதத்தில் நீர் தன்மையை குறிக்கும். இந்த பக்தி வழிமுறையையும் பஞ்ச பூத தன்மையையும் ஆழ்ந்து ஒப்பிட்டால் பக்தி செயல்படும் முறையும் அதன் அவசியமும் தெரிய துவங்கும்.
நம் உடல் மற்றும் மனம் பஞ்ச பூத தொகுப்பால் உருவாகி இருக்கிறது அத்தகைய பஞ்ச பூதத்தின் தொகுப்பால் உருவாகிய நாம் ஏதேனும் ஒன்றின் ஆதிக்கத்தில் இருப்போம்.  உதாரணமாக பஞ்ச பூதத்தில் பூமியின் ஆதிக்கத்தில் செயல்பட்டு நெருப்பு, நீர், காற்று மற்றும் ஆகாயத்தின் தன்மையை பின்னுக்கு தள்ளிய நிலையில் இருந்தால் நீங்கள் பக்தி செய்ய வேண்டிய தன்மை தாசியம் எனும் அடிமை தன்மை ஆகும். இது போன்று உங்கள் பஞ்சபூதத்தின் தன்மை ஆதிக்கம் தெரிந்து பக்தி வழியை தேர்வு செய்யலாம். 
பஞ்சபூதங்களின் அடிப்படையில் பக்தி வகைகள் இருக்கிறது என பார்த்தோம். பஞ்சபூதங்கள் நிலைபடுத்த வேண்டுமானால் அதற்கு பராமரிப்பு தேவை. முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் தற்கால வாழ்க்கை முறையில் பஞ்ச பூதத்தில் அனைத்தும் மாசு அடைகிறது என்பதை பார்க்கிறோம். ஆகவே தற்காலத்தில் பக்தியை உங்களுக்குள் நிலை நிறுத்தவும் பக்தி மாசடையாமல் இருக்கவும் பாதுகாப்பது அவசியமாகிறது.

உதாரணமாக தண்ணீரை தேக்கி வைக்கிறீர்கள் என்றால் அடிக்கடி அதை சுத்திகரித்து பராமரிக்க வேண்டும் அப்பொழுது தான் அதன் தன்மை குறையாமல் நாம் பயன்படுத்த முடியும். அது போலவே பக்தியை நாம் பாதுகாக்க ஒன்பது வழிகள் உண்டு.  ஐவகை பக்தியில் நீங்கள் எதை தேர்ந்து எடுத்தாலும் இந்த ஒன்பது வழிகள் பக்தியை மேம்படுத்த உதவும். நீங்கள் எப்படிப்பட்ட பக்தி செய்தாலும் இந்த ஒன்பது வழிகளின் அனைத்து வழிகளையோ அல்லது ஒன்பதில் அதிக பட்ச வழிகளையோ பின்பற்றினால் தான் அது பரிசுத்த
பக்தி என்ற நிலைக்கு உயர்வடையும்.
1) ஷ்ரவணம் - காதுகளால் இறைவனை பற்றி கேட்டல் சத்சங்கம் முதலியவை
2)கிர்த்தனம் - இறை நாமத்தை பாடுதல்
3)ஸ்மரணம் - இறை உணர்வுடன் இறைவனை பற்றி சிந்தித்தல், இறை விஷயங்களை படித்தல்
4) பாதசேவனம் - இறைவனின் அடியார்களுக்கு சேவை செய்தல்
5)அர்ச்சனம் - இறைவனை மலர்களாலும் நம் கலாச்சார அடிப்படையிலும் பூஜை செய்தல்
6) வந்தனம் - இறைவனை வணங்குதல்
7) தாஸ்னம் - இறைவனுக்கு அடிமையாக இருக்கும் விழிப்புணர்வுடனே இருத்தல்
8) சகியம் - இறைவனை தோழமையுடன் உணர்வது
9) ஆத்ம நிவேதனம் - தன்னை இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணித்துவிடுதல். இறை செய்தி உணர்ந்தே செயல்படுதல்.

ஒன்பது வழிகளை திரும்ப திரும்ப செயல்படுத்துவதாலும் அத்துடன் இணைந்து இருப்பதாலும் பக்தி வலுவடைந்து மாசுபடாமல் வளர்கிறது. இந்த ஒன்பது வழிகளும் நவக்கிரகங்களின் செயலுடன் இணையாக வருவதால் ஜோதிட சாஸ்திரம் வாயிலாக ஒருவர் எப்படிப்பட்ட பக்தி செய்வார் என்பதையும் எத்தகைய வழியில் ஈடுபாடு இருக்கும் என்பதையும் அறியும் முறைகள் முற்காலத்தில் இருந்தது.

பக்தி யோகத்தை பற்றி விவரிக்கும் பொழுது பக்தியில் சிறந்தவர்களை பற்றிய கதைகள் மற்றும் இதிகாசங்களை தொடர்புபடுத்தி விளக்கி பெரிய வடிவத்தில் சொல்லலாம். பக்தியோகத்தை எளிமையாகவும் அதன் கருப்பொருளையும் கொடுக்கவே இவ்வாறு குறுகிய வடிவில் எழுதி உள்ளேன். இதனை வாசிப்பவர்கள் பக்தியோகத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்து கொண்டால் போதுமானது.
நன்றி : தமிழ் வேதம்
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

திங்கள், 6 ஏப்ரல், 2020

பேரின்பத்தை பெற்றய்யும் வழி


பேரின்பத்தை பெற்றய்யும் வழி

பெறுதற்கரிய மனித பிறப்பினை உடையவர்களாய், மெய்நூல்களாகிய தேவ, சிவகாமங்கள் வழங்கும் புண்ணிய பூமியாகி இப்பரத கண்டத்தில் தவஞ்செய் சாதியிலே, சைவ மரபிலே பிறந்தும, அநேகர் இவைகளின் அருமை சிறிதும் அறியாமலும், கருணைநிதியாகிய சிவபெருமானாரின் மகிமையையும், புண்ணிய பாவங்களையும் பலன்களையும் கற்றாயினும், கேட்டாயினும், அறியாதும், பாவங்களை வெறுத்து புண்ணியங்களை செய்யாதும், தனது வாழ்நாளை வீணாக கழித்து எரிவாய் நரகத்திற்கு இரையாகின்றனர். சிலர் ஒரே புண்ணியங்களை செய்யப் பகுந்தும் அவைகள் செய்யும் முறைசிறிதும் அறியாமல் குளிக்க போய் சேறுபூசிக்கொள்வது போல பாவத்தையே ஈடடிக் கொள்கிறார்கள். இப்படி கெட்டு போகாது, நமது சைவ சமயிகள் இந்த மனித பிறப்பு பெறுதற்கரிய என்பதையும் இப்பிறப்பு மீண்டும் மீண்டும் பிறவாது இ்ருக்க வழிகளையும் சைவ நெறி அருளாளர்கள் வகுத்துதந்த நெறிமுறைகளை தெரிந்தறியாமல் பாவங்களை வெறுத்து, சிவபெருமானானுடைய திருவடிகளை தங்கள் மனம் வாக்கு மெய்களால் விதிப்படி மெய்யன்போடு வழிபட்டு, நித்தியமாகிய ேபரின்பத்தை பெற்றய்யக்கடவார்கள்.
 இறைவன் நமக்கு அவன் கருணையினால் உகந்தளித்த தனு, கரண, புவனங்களை நாம்அனுபவிக்கவும், அவன் கருணையினால் அவன் அளித்தவை அவனுக்கு பணிவிடை செய்யவும், அவனை மனத்தால் நினைக்கவும், மெய்யால் அவனை வழிபடவும் நாம் மட்டும்அனுபவிக்க வேண்டும்என்ற குறுகிய எண்ணத்தாலும், அவனை மறந்து தன் விளம்பரத்திற்காக இறைத்தொண்டு என்ற பெயரில் புண்ணியத்திற்கு பதில் பாவங்களை மேலும் மேலும் சேர்த்துக் கொண்டு வருகிறோம். அவன் அருளாலே அவன் தாள வணங்காது அதனை மறந்து இப்புவனத்தை நாமே நமக்கென்று அனுபவித்து வருகிறோம். அவன் கருணையினால் கொடுத்த இந்த தனு, கரண, புவனங்கள் அவனுக்கே என்றும் நாம் செய்யும் செய்யும் செயல்கள் அத்தனையும் அவன் அருளாலே நடக்கின்றது என்ற உண்மையையும்உணர்ந்து வினைகளை நல்வினைக்கே பயன்படுத்தி பேரின்ப வாழ்வு பெற வேண்டும்.
  இதன் கருத்தில் தான் அப்பர் அடிகள் திருஅங்கமாலை என்ற பதிகத்தில் நம் அவயவங்கள் அத்தனையும் இறைவனுக்கே அவனை நினைக்கவும்  பணிசெய்வதற்கும் என்கிறார்
தலையே நீவணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்.
கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோள் வீசிநின் றாடும்பி ரான்றன்னைக்
கண்காள் காண்மின்களோ.

செவிகாள் கேண்மின்களோ - சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்திற மெப்போதும்
செவிகாள் கேண்மின்களோ.

மூக்கே நீமுரலாய் - முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கைம ணாளனை
மூக்கே நீமுரலாய்.

வாயே வாழ்த்துகண்டாய் - மத
யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும்பி ரான்றன்னை
வாயே வாழ்த்துகண்டாய்.

நெஞ்சே நீநினையாய் - நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
நெஞ்சே நீநினையாய்.

கைகாள் கூப்பித்தொழீர் - கடி
மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
கைகாள் கூப்பித்தொழீர்.

ஆக்கை யாற்பயனென் - அரன்
கோயில் வலம்வந்து
பூக்கையா லட்டிப் போற்றியென் னாதஇவ்
ஆக்கை யாற்பயனென்.

கால்க ளாற்பயனென் - கறைக்
கண்ட னுறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்
கால்க ளாற்பயனென்.

உற்றா ராருளரோ - வுயிர்
கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்
குற்றா ராருளரோ.

எங்கும் நிறைந்த பொருள் உடற்குள் இருக்கும் உயிர்க்குள்ளும் அகலாதுஇருந்து, அதனை அவ்வப்பொழுது துன்பத்தினின்றும் தடுத்தாட்கொண்டு வருகின்றது. முடிவான துன்பமாகிய இரப்பினின்றும் காத்து அருள்வது.

திருச்சிற்றம்பலம்

செவ்வாய், 31 மார்ச், 2020

சிவபெருமான் பஞ்ச பூதங்களாக உள்ள தலங்களும் அதன் சிறப்புகளும்!!

பஞ்ச பூத தலங்கள் தென்னிந்தியவில் மட்டுமே காணப்படுகின்றன. அதில் ஒன்று மட்டும் ஆந்திராவிலும் மற்ற நான்கு தலங்கள் தமிழ்நாட்டிலும் காணப்படுகின்றன. சிவபெருமானே பஞ்ச பூதங்களாகவும் உள்ள தலங்கள் இவை:
1,காற்று- ஸ்ரீ காளஹஸ்தி -ஆந்திரா
ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற தலங்களில் ஒன்று ஸ்ரீ காளஹஸ்தி. சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் இது வாயுத் தலமாக போற்றப்படுகிறது. சிவபெருமான் காற்றாக எழுந்தருளியிருக்கும் தலம். இங்கு வழிபட்டால் ராகு-கேது தோஷம் உள்பட சகல தோஷமும் விலகும். காளத்தி நாதரான சிவலிங்கத்திற்கு கண்ணப்ப நாயனார் கண் தானம் செய்த இடமும், அவர் முக்தியடைந்த இடமும் இதுவே. இங்குள்ள கருவறையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் தீபம் காற்றால் அசைவதைப் போலவே அசைந்துக் கொண்டிருக்கும். காற்றே இல்லாத கருவறையில் காற்று வீசுவதைப் போல தீபம் எந்நேரமும் அசைவது அதிசயமே. காட்டு வேடரான திண்ணன்
( கண்ணப்ப நாயனாரின் இயற்பெயர்) முதல் வேட்டைக்குப் போகும் பொழுது காட்டுப்பன்றியைத் துரத்திக்கொண்டு, ஓடிய மலை கோயிலின் அருகிலேயே உள்ளது. காட்டுப்பன்றியைத் துரத்திய திண்ணன், சிவலிங்கத்தைக் கண்டு ஈர்க்கப்பட்ட இடம் இம் மலையே.
2,நிலம்- ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் –தமிழ்நாடு.
இங்குள்ள சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும்.
சிவலிங்கத்தின் மீது தைமாதம் இரதசப்தமி தினத்தில் சூரிய ஒளி விழும். இந்த கோயிலின் அருகேயுள்ள மாமரம் 5000- ஆண்டு பழமையானது ஆகும். இங்கு சிவலிங்கத்தை, அம்மனே மணலால் பிடித்து வைத்து வழிபட்டார். அப்பொழுது கம்பா நதி பெருக்கெடுத்து வர தண்ணிரிலிருந்து சிவலிங்கத்தை பாதுகாக்க அம்பாள் கட்டியணைத்தார். அதன் அடையாளம் இன்றும் சிவலிங்கத்தில் உள்ளது. இதனால் சிவபெருமான் தழுவக் குழைந்த நாதர் எனப் பெயர் பெற்றார்; அம்மன் ஏலவார் குழலி அம்மன்.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. மாமரமே இங்கு தல விருட்சம். அம்பிகைச் சிவனாரை மணந்தக் கோலத்தில் முகத்தில் நாணத்துடன் காட்சியளிப்பது தெய்விகமான,அருமையான காட்சி. சிவனாரைச் சாட்சியாக வைத்து வாக்குக் கொடுத்தச் சுந்தரர், அதை மீறியதால் இரு கண்களிலும் பார்வையை இழந்தார். பின்னர் இத்தலத்தில் வந்து சிவனாரை வழிபட்டு இடக்கண் பார்வையைப் பெற்றார்.
3,நீர் -திருவானைக்காவல் ஜம்புகேஷ்வரர் திருக்கோயில்- திருச்சி.

ஜம்பு என்றால் நாவல் மரம். முற்காலத்தில் நாவல் காடாக இருந்த இடமிது. இங்குள்ள சிவலிங்கமானது தரைமட்டத்திற்கு கீழே இருக்கும். இங்கு தண்ணீராக சிவபெருமான், இருப்பதால் எப்பொழுதும் கருவறையில் தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்கும். சிவலிங்கமே தண்ணீரில் மூழ்கிவிடுமளவு நீர் சுரப்பதுண்டு. அவ்வப்போது தண்ணீர் இறைக்கும் பம்புகள் மூலம் நீரை இறைத்து கோயிலுள் இருக்கும் ஒரு கிணற்றில் விட்டு விட்டே பூசாரிகள் பூஜைகளைச் செய்வர்.
நாவல் மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தைக் காக்க ஒரு சிலந்தி வலையமைக்க, யானையொன்று அதைச் சுத்தப்படுத்தி வழிபட்டு வந்தது. இதனால் கோபமான சிலந்தி யானையின் துதிக்கையினுள் நுழைந்து கடித்துவிட இரண்டும் இறந்தன. சிவபெருமான் யானைக்கு முக்தியையும், சிலந்திக்கு மறுபிறப்பில் சோழவம்சத்தில் பிறந்து, நிறைய சிவாலயங்களைக் கட்டும் பாக்கியத்தையும் அளித்தார். அவரே யானை ஏறாத மாடக் கோயில்களாகக் காவிரியோரமாக 96 சிவாலயங்களைக் கட்டிய சோழன் கோச்செங்கணான்.
4.நெருப்பு- அண்ணாமலையார் திருக்கோயில் -திருவண்ணாமலை.

பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் அடிமுடி தெரியாதவாறு அக்னிப் பிழம்பாகச் சிவபெருமான் நின்ற தலம் இது. அந்த அக்னியே குளிர்ந்து மலையானது என்பர். எனவே திருவண்ணாமலையையே சிவபெருமானாக வழிபடுவர். இதற்கேற்ப ஆராய்ச்சியாளர்களும் இம்மலை முற்காலத்தில் எரிமலையாக இருந்தது குளிர்ந்ததே! என்கின்றனர்.
இந்த கோயிலை கட்டி முடிக்க ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது, இந்த தகவல் கோயில் கல்வெட்டுகளிலும் உள்ளது. இங்குள்ள கல்வெட்டுகளில் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் உள்ளது.
இங்கு பங்குனி உத்திரம் நாளில் இரண்டு முறை திருக்கல்யாணம் நடக்கும். முதலில் மூலவரான அண்ணாமலையாருக்கும், அதன்பின் உற்சவரான பெரிய நாயகருக்கும் நடக்கும் இந்நிகழ்வு திருவண்ணாமலை கோயிலில் மட்டுமே நடக்கும் வைபவமாகும்.
5,ஆகாயம்- ஶ்ரீநடராஜர் திருக்கோயில் -சிதம்பரம்.
தில்லை என முற்காலத்தில் வழங்கப்பட்ட இத்தலம் சிவபெருமான் ஆகாயமாக இருக்கும் தலம். பதஞ்சலி, வியாக்ரபாதர் ஏன்ற இரு முனிவர்களுக்கும் சிவபெருமான் அருளிய இடம். இங்குள்ள தல விருட்சம் தில்லை மரம். இங்குள்ள கோயிலும், மனித உடலின் அமைப்பும் ஒன்றாக கருதப்படுகிறது. சிதம்பரத்தைப் பொன்னம்பலம் என்பர். சிதம்பர ரகசியம் என்ற இரகசியம் இங்கு வெகு பிரசித்தம்.
சித்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில், அங்குள்ள திரை அகற்றபட்டு தீபாராதனை காட்டபடும். அங்கு திருவுருவம் இல்லாது, தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடபட்டிருக்கும். இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதே! சிதம்பர ரகசியம் எனப்படுகிறது. ஆகாயத்துக்கு ஆரம்பமும் ,முடிவும் கிடையாது , அதை உணரத்தான் முடியும் என்பதை இதை உணர்த்துவதாகும்.
ஆடலரசன் என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார். வலது புற மேல் கையில் உடுக்கையை கொண்டிருப்பது இந்த உலகம் ஒலியின் மூலம் துவங்கியது என்பதைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. இன்றைய அறிவியல் அறிஞர்கள் இதை தான் பெரு வெடிப்புக் கொள்கை (BIG BANG THEORY) என்று அழைக்கின்றனர். இடது புற மேல் கையில் உள்ள நெருப்பு எந்நேரமும் அழித்து விடுவேன்! என்ற எச்சரிக்கையை கொடுக்கின்றது. வலது புற கீழ் கையில் காப்பாற்றுவதை குறிப்பதை போன்று, பயப்படாதே நான் இருக்கிறேன்! என்பதைக் காட்டுகிறது. இடது புற கீழ் கையால், உயர்த்தி இருக்கும் காலைக் காட்டி, தன்னை வணக்கும் பக்தர்களுக்கு ஆபயமளிக்கும் இடம் இது என உணர்த்துகிறது. இந்த நடனத்தில் ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற அணுவின் இயற்பியல் விதியின் அனைத்து செயல்களோடும் ஒத்துப்போகின்றது.
“கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை. அன்று தான் தில்லையில் நடராஜர் வியாகரபாத முனிவருக்கு நடராஜராகத் தரிசனம் தந்தார்.

ஆருத்ரா என்பது, திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜரின் திருநடனம் கண்டால், பிறவிப்பிணித் தீரும். அவர் இடது காலை, தூக்கி ஆடல் அரசனாகக் காட்சித்தரும் கோலம் அனைவரையும் மயக்கும். அவரது கால் விரலின் கீழே தான் உலகின் மொத்த காந்தப் புலத்தின் மையப்புள்ளி உள்ளதாம். எண்ணற்ற அதிசயங்கள் கொண்ட தலமிது. நந்தனார் என்ற திருநாளைப்போவார் இறைவனோடு கலந்த தலம் இது. சைவக் குரவர்கள் நால்வராலும் பாடப் பெற்ற பூலோகக் கைலாயம் இது.
கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.

சிவபெருமான் பஞ்ச பூதங்களாக உள்ள தலங்களும் அதன் சிறப்புகளும்!!

பஞ்ச பூத தலங்கள் தென்னிந்தியவில் மட்டுமே காணப்படுகின்றன. அதில் ஒன்று மட்டும் ஆந்திராவிலும் மற்ற நான்கு தலங்கள் தமிழ்நாட்டிலும் காணப்படுகின்றன. சிவபெருமானே பஞ்ச பூதங்களாகவும் உள்ள தலங்கள் இவை:
1,காற்று- ஸ்ரீ காளஹஸ்தி -ஆந்திரா
ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற தலங்களில் ஒன்று ஸ்ரீ காளஹஸ்தி. சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் இது வாயுத் தலமாக போற்றப்படுகிறது. சிவபெருமான் காற்றாக எழுந்தருளியிருக்கும் தலம். இங்கு வழிபட்டால் ராகு-கேது தோஷம் உள்பட சகல தோஷமும் விலகும். காளத்தி நாதரான சிவலிங்கத்திற்கு கண்ணப்ப நாயனார் கண் தானம் செய்த இடமும், அவர் முக்தியடைந்த இடமும் இதுவே. இங்குள்ள கருவறையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் தீபம் காற்றால் அசைவதைப் போலவே அசைந்துக் கொண்டிருக்கும். காற்றே இல்லாத கருவறையில் காற்று வீசுவதைப் போல தீபம் எந்நேரமும் அசைவது அதிசயமே. காட்டு வேடரான திண்ணன்
( கண்ணப்ப நாயனாரின் இயற்பெயர்) முதல் வேட்டைக்குப் போகும் பொழுது காட்டுப்பன்றியைத் துரத்திக்கொண்டு, ஓடிய மலை கோயிலின் அருகிலேயே உள்ளது. காட்டுப்பன்றியைத் துரத்திய திண்ணன், சிவலிங்கத்தைக் கண்டு ஈர்க்கப்பட்ட இடம் இம் மலையே.
2,நிலம்- ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் –தமிழ்நாடு.
இங்குள்ள சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும்.
சிவலிங்கத்தின் மீது தைமாதம் இரதசப்தமி தினத்தில் சூரிய ஒளி விழும். இந்த கோயிலின் அருகேயுள்ள மாமரம் 5000- ஆண்டு பழமையானது ஆகும். இங்கு சிவலிங்கத்தை, அம்மனே மணலால் பிடித்து வைத்து வழிபட்டார். அப்பொழுது கம்பா நதி பெருக்கெடுத்து வர தண்ணிரிலிருந்து சிவலிங்கத்தை பாதுகாக்க அம்பாள் கட்டியணைத்தார். அதன் அடையாளம் இன்றும் சிவலிங்கத்தில் உள்ளது. இதனால் சிவபெருமான் தழுவக் குழைந்த நாதர் எனப் பெயர் பெற்றார்; அம்மன் ஏலவார் குழலி அம்மன்.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. மாமரமே இங்கு தல விருட்சம். அம்பிகைச் சிவனாரை மணந்தக் கோலத்தில் முகத்தில் நாணத்துடன் காட்சியளிப்பது தெய்விகமான,அருமையான காட்சி. சிவனாரைச் சாட்சியாக வைத்து வாக்குக் கொடுத்தச் சுந்தரர், அதை மீறியதால் இரு கண்களிலும் பார்வையை இழந்தார். பின்னர் இத்தலத்தில் வந்து சிவனாரை வழிபட்டு இடக்கண் பார்வையைப் பெற்றார்.
3,நீர் -திருவானைக்காவல் ஜம்புகேஷ்வரர் திருக்கோயில்- திருச்சி.

ஜம்பு என்றால் நாவல் மரம். முற்காலத்தில் நாவல் காடாக இருந்த இடமிது. இங்குள்ள சிவலிங்கமானது தரைமட்டத்திற்கு கீழே இருக்கும். இங்கு தண்ணீராக சிவபெருமான், இருப்பதால் எப்பொழுதும் கருவறையில் தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்கும். சிவலிங்கமே தண்ணீரில் மூழ்கிவிடுமளவு நீர் சுரப்பதுண்டு. அவ்வப்போது தண்ணீர் இறைக்கும் பம்புகள் மூலம் நீரை இறைத்து கோயிலுள் இருக்கும் ஒரு கிணற்றில் விட்டு விட்டே பூசாரிகள் பூஜைகளைச் செய்வர்.
நாவல் மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தைக் காக்க ஒரு சிலந்தி வலையமைக்க, யானையொன்று அதைச் சுத்தப்படுத்தி வழிபட்டு வந்தது. இதனால் கோபமான சிலந்தி யானையின் துதிக்கையினுள் நுழைந்து கடித்துவிட இரண்டும் இறந்தன. சிவபெருமான் யானைக்கு முக்தியையும், சிலந்திக்கு மறுபிறப்பில் சோழவம்சத்தில் பிறந்து, நிறைய சிவாலயங்களைக் கட்டும் பாக்கியத்தையும் அளித்தார். அவரே யானை ஏறாத மாடக் கோயில்களாகக் காவிரியோரமாக 96 சிவாலயங்களைக் கட்டிய சோழன் கோச்செங்கணான்.
4.நெருப்பு- அண்ணாமலையார் திருக்கோயில் -திருவண்ணாமலை.

பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் அடிமுடி தெரியாதவாறு அக்னிப் பிழம்பாகச் சிவபெருமான் நின்ற தலம் இது. அந்த அக்னியே குளிர்ந்து மலையானது என்பர். எனவே திருவண்ணாமலையையே சிவபெருமானாக வழிபடுவர். இதற்கேற்ப ஆராய்ச்சியாளர்களும் இம்மலை முற்காலத்தில் எரிமலையாக இருந்தது குளிர்ந்ததே! என்கின்றனர்.
இந்த கோயிலை கட்டி முடிக்க ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது, இந்த தகவல் கோயில் கல்வெட்டுகளிலும் உள்ளது. இங்குள்ள கல்வெட்டுகளில் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் உள்ளது.
இங்கு பங்குனி உத்திரம் நாளில் இரண்டு முறை திருக்கல்யாணம் நடக்கும். முதலில் மூலவரான அண்ணாமலையாருக்கும், அதன்பின் உற்சவரான பெரிய நாயகருக்கும் நடக்கும் இந்நிகழ்வு திருவண்ணாமலை கோயிலில் மட்டுமே நடக்கும் வைபவமாகும்.
5,ஆகாயம்- ஶ்ரீநடராஜர் திருக்கோயில் -சிதம்பரம்.
தில்லை என முற்காலத்தில் வழங்கப்பட்ட இத்தலம் சிவபெருமான் ஆகாயமாக இருக்கும் தலம். பதஞ்சலி, வியாக்ரபாதர் ஏன்ற இரு முனிவர்களுக்கும் சிவபெருமான் அருளிய இடம். இங்குள்ள தல விருட்சம் தில்லை மரம். இங்குள்ள கோயிலும், மனித உடலின் அமைப்பும் ஒன்றாக கருதப்படுகிறது. சிதம்பரத்தைப் பொன்னம்பலம் என்பர். சிதம்பர ரகசியம் என்ற இரகசியம் இங்கு வெகு பிரசித்தம்.
சித்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில், அங்குள்ள திரை அகற்றபட்டு தீபாராதனை காட்டபடும். அங்கு திருவுருவம் இல்லாது, தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடபட்டிருக்கும். இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதே! சிதம்பர ரகசியம் எனப்படுகிறது. ஆகாயத்துக்கு ஆரம்பமும் ,முடிவும் கிடையாது , அதை உணரத்தான் முடியும் என்பதை இதை உணர்த்துவதாகும்.
ஆடலரசன் என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார். வலது புற மேல் கையில் உடுக்கையை கொண்டிருப்பது இந்த உலகம் ஒலியின் மூலம் துவங்கியது என்பதைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. இன்றைய அறிவியல் அறிஞர்கள் இதை தான் பெரு வெடிப்புக் கொள்கை (BIG BANG THEORY) என்று அழைக்கின்றனர். இடது புற மேல் கையில் உள்ள நெருப்பு எந்நேரமும் அழித்து விடுவேன்! என்ற எச்சரிக்கையை கொடுக்கின்றது. வலது புற கீழ் கையில் காப்பாற்றுவதை குறிப்பதை போன்று, பயப்படாதே நான் இருக்கிறேன்! என்பதைக் காட்டுகிறது. இடது புற கீழ் கையால், உயர்த்தி இருக்கும் காலைக் காட்டி, தன்னை வணக்கும் பக்தர்களுக்கு ஆபயமளிக்கும் இடம் இது என உணர்த்துகிறது. இந்த நடனத்தில் ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற அணுவின் இயற்பியல் விதியின் அனைத்து செயல்களோடும் ஒத்துப்போகின்றது.
“கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை. அன்று தான் தில்லையில் நடராஜர் வியாகரபாத முனிவருக்கு நடராஜராகத் தரிசனம் தந்தார்.

ஆருத்ரா என்பது, திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜரின் திருநடனம் கண்டால், பிறவிப்பிணித் தீரும். அவர் இடது காலை, தூக்கி ஆடல் அரசனாகக் காட்சித்தரும் கோலம் அனைவரையும் மயக்கும். அவரது கால் விரலின் கீழே தான் உலகின் மொத்த காந்தப் புலத்தின் மையப்புள்ளி உள்ளதாம். எண்ணற்ற அதிசயங்கள் கொண்ட தலமிது. நந்தனார் என்ற திருநாளைப்போவார் இறைவனோடு கலந்த தலம் இது. சைவக் குரவர்கள் நால்வராலும் பாடப் பெற்ற பூலோகக் கைலாயம் இது.
கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.