செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

சிவ பூசை

 சிவ பூசை



சிவ பூசை தோன்றி வகையினை கூறும் சேக்கிழார் பெருமான்

 " எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் வரும்பும் 

  உண்மையாவது பூசனை என உரைத்தருள

  அண்ணலார் தனை யர்ச்சனை புரிய அவதரித்தாள்

  பெண்ணின் நல்லவளாயின பெருந்தவக் கொழுந்தே "  பெரியபுராணம்

இவ்வாறு இறைவனை திருப்தி படுத்துவது சிவபூசையே என்பது வளிங்கும்

  நாம் முற்பிறப்பிற் செய்த புண்ணியக் காரணமாக பெறுதற்கரிய இம் மானுட தேகத்தை பராபர முதல்வன் பரமசிவன் நமக்கு தந்து வைதிக சைவ சித்தாந்த சமயத்திலே ஜனனமாக திருவருள் பாலித்தருனார். நமக்கு இம்மானுட தேகத்தை சிவ பெருமான் தந்தது சரியை, கிரியை, யோகம் என்னும் புண்ணியங்களைச் செய்து தம்மை வழிபட்டு சிவஞானத்தை தரும் பொருட்டேயாகும்.

   சரியை,கிரியை , யாேகம், ஞானம் என்னும் நான்கும் படிமுறையில் அரும்பும், பூவும், காயும், கனியும் போன்று ஒன்றுக்கொன்று தொடர்ச்சியும் ஏற்றமும் உடையன.

 அது, 

"விரும்புஞ் சரியை முதன் மெஞ்ஞான நான்கும் அரும்பு மலர் காய் கனி போன்றே பராபரமே"  என்னும்தாயுமான சுவாமிகள் திருவாக்காம்.

 அவற்றுள் சரியை யாவது புறத்தொழில் மாத்திரையான சிவபெருமானுடைய உருவத் திருமேனியை நோக்கி வழிபடுவதாம்.

  கிரியையாவது ஆசாரியரிடத்திலே விசேட தீட்சை பெற்று, அருவுருவத்திருமேனி ஆகிய சிவலிங்க பெருமானை ஏற்றி அகத்தொழில், புறத்ெதாழில் என்னும் இரண்டாலும் வழிபடுவதாம்.

  அது ஆணவமலத்தை நீக்கி பிறவியொழிந்து மோட்சத்தை தரும்படி தூபம் தீபம் சந்தனம், புஸ்பம் திருமஞ்சனம் முதலிய பூசோபகரங்களைக்கொண்டு பஞ்ச சுத்தி செய்து அகமும், புறமும்பூசித்து, அக்கினி காரியமும் பண்ணி சிவபெருமானுடய வரத அத்தத்தில்உடல் பொருள் ஆவி மூன்றையும் ஒப்பித்தாலாகிய சிவபூசையாம்.

  மந்திரம், கிரியை, பாவனைகளால் மனம், மொழி காயம் என்னும்மூன்றும் ஒருமித்து மெய்யன்போடு கிரியை ெசய்தல் வேண்டும். அன்பின்றி செய்யும் கிரியையால் பயனிலதாம்  அன்பு முக்கியம் என்பது

 "கோடி தீர்த்தம் கலந்து குளித்தவை

ஆடினாலும் அரனுக்கன்பில்லையேனில்

ஓடு நீரினை ஓட்டைக்குடத்தட்டி

மூடிவைத்திட்ட மூர்க்கனை யொக்குமே ,,,,,, என்றும்

   " நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும்  பொன்னார் சடைபுண்ணியன்

பொக்கமிக்கவர் பூவும் நீரும் கொண்டு நக்குநிற்பனவர் தம்மை நாணியே 

 என வரும்திருநாவுக்கரசர் திருத்தேவாரத்தால் உணரப்படும்

 பிறக்கும் பொழுதும் பின் இறக்கும் பொழுதும் அதற்கிடை காலத்திலும்அனுபவி்க்கும் துன்பத்தை ஒரு அறிஞன் சிந்தித்தால்பிறவாதிருத்தல் தவிர வேறு ஒன்றும்வேண்டவே வேண்டாமென்று முடிவிற்கே வரக்கூடும். 

    இருப்பினும் அப்பிறவிகளிலும் மானிடப்பிறவியே மேலான தென்று கருதப்படுகிறது. இப்பிறவி தப்பின் எப்பிறவி வாய்க்குமோ என்றனர் மேலோர்.

 ,,,,,,..... இனித்தமுடைய பொற்பாதம் காணப்பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே என்கிறார் அப்பரடிகள்

  மானிட பிறவி பெற்று பாசம் விடுவித்து பெறுவதற்கு கிடைத்த மானிட பிறவி கொண்டு சிவபூசை செய்வது ஒன்றே வழி

திருச்சிற்றம்பலம்

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

முக்தி பெற எளிய வழி

 முக்தி பெற எளிய வழி

அரிது அரிது மானிடராய் பிறத்தல் என்கிறார் அவ்வை. மனித பிறவி உயர்வானது, உண்ணதமானது. காரணம் வேறு எந்த பிறவியிலும் கிடைக்காத முக்தி என்ற மோட்சம் இந்த மனிதப்பிறவியில் நாம் அடையமுடியும், அதனால் தான் பல மகான்கள், சித்தர்கள், ஞானிகள் கிடைத்த இந்த மானிடப் பிறவியில் பக்தியாலும், இறைவழிபாட்டாலும் ஈடுபடுத்தி முக்தி என்ற பேரானந்தம் கண்டனர். ஐயா நான் சாதாரண மனிதன் எனக்கு குடும்பம் இருக்கிறது. வீடு இருக்கிறது, பிழைப்பு இருக்கு, நாம் எப்படி சதா காலமும் பக்தி செய்யமுடியும்? எப்படி இறைவனை நினைத்துக் கொண்டே இருக்க முடியும்? இப்படி பலர் கேட்பதும் வாழ்வியல் நியாயமே. இப்படிப்பட்டவர்களும் எளியதாக முக்தி பெறலாம். அதற்கு எளிய வழிகளை மகான்கள் கூறியுள்ளார்கள்.

      பஞ்ச பூத தலங்களில் ஆகாயத்தலமாக விளங்குவது சிதம்பரம். சிதம்பரம் என்னும் கனக சபாபதி தலம். இந்த சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை போன்ற நாட்களில் நடைபெறும் நடராஜ மூர்த்தியின் ஆனந்த தாண்டவத்தை பக்தியோடு மனம் குளிர தரிசனம் செய்து, எனக்கு மறு பிறவி இல்லாத முக்தியை தந்து அருள் புரிய வேண்டும் என்று நடராஜ மூர்த்தியிடம் பிராத்தித்துக் கொண்டால் , மறு பிறவி இல்லாத முக்தி கிடைத்து விடும்.

      2015 - 1 (2) (1).jpg திருவாரூர் தலத்தில் நல்ல உயர்ந்த தாய்தந்தையர்களுக்கு பிள்ளையாய் பிறவி எடுத்தால், திருவாரூரில் பிறக்கும் அனைத்து ஜீவன்களுக்கும் முக்தி கிடைக்கும். திருவாரூரில் பிறந்த அனவைருக்கும் முக்தி கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.

” காசியில் இறக்க முக்தி
திருவாரூரில் பிறக்க முக்தி
தில்லையில் தரிசிக்க முக்தி
(திரு) அண்ணாமலயைில் நினைக்க முக்தி ” என்கிறது சாஸ்திரம்

LOR17V
புண்ணிய நதி கங்கா நதி பெங்கி ஓடும் கைலாச வாசியான சிவன் தனது கணங்களுடன் விசுவநாதராக அன்னபூரணி உடன் எழுந்தருளியிருக்கும் தலமான உத்திரபிரதேச மாநில வாராணசி என்னும் காசி தலத்தில் உடலிருந்து ஜீவன் பிறியும் அனைத்து ஜீவன்களுக்கும்தாரக பிரம்ம மாகிய ஸ்ரீசீதா ராமச்சந்திர மூர்த்தியே நேரிடையாக அருள் வழங்கி மறுபிறவி அற்ற முக்தியை வழங்குகிறார். என்கிறது சாஸ்திரம், ஆகவே காசியில் இறக்க முக்தி என்கிறது சாஸ்திரம். ஒருவர் இறக்கும்சமயத்தில் அவனது மகன், இறப்பவரின்அருகில் இருந்து பணிவிடைகள் செய்தும் இறுதி காலத்தில் பெற்றோருக்கு வாயில் பால் விட்டு அவரை தன் வலது தொடையில் கிடத்தி வைத்துக் கொண்டு அவரது வலது காதில் கர்ண மந்திரங்களையும் , பகவான் நாமங்களையும் கூறி அவரை நல்ல நினைவுடன் இறக்கும்படி செய்தால், இறப்பவர் நிச்சயம் முக்தியை அடைவர் என்கிறது சாஸ்திரம்.

 f08d0-anmiga2bthuligal2b5

அடுத்ததாக இறைவன் ஆதியும் அந்தமும் இல்லாது தீப ஜோதியாய் காட்சி தந்த அண்ணாமலை என்னும்திருத்தலத்தில் இறைவன் ஜோதியாய் காட்சி தரும் கார்த்திகை தீபம் தரிசனம் கண்டோ, அல்லது அவனது திருவடியினை அனுதினமும் மனமார நிைத்து வணங்கினால் அந்த ஜீவனுக்கு அண்ணாமலையார் முக்தி அருள்கிறார் என்கிறது சாஸ்திரம்,
இந்த நான்கு வழிகளில் எது சிறந்தது எது எளியது என்பது தங்களுக்கே விளங்கும்
திருவாரூரில் பிறத்தல் என்பது நம்கையில் இல்லை, அது போல் காசியில் இறப்பது என்பது நம் கையில் இல்லை. பிறப்பும் இறப்பும் ஈசன் செயலாகும். மீதமுள்ள தரிசித்தல் – வழிபடுதல், எப்போதும் அவன் திருவடியே சரணம் என்று நினைத்தலும் மானிட பிறவி எடுத்த நம்மால் இயலும், எனவே தில்லை நடராஜ பெருமானை மனம் உருகி வழிபட்டும், அண்ணாமலையாரை அனுதினமும் சர்வ காலமும் அவன் திருத்தாள சரணடைய நினைத்தும் பிறவி இல்லா முக்தி அடைய வழி உள்ளது என்பதை காணலாம்.
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய ஓம்
தொகுப்பு: வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

பண்டார சாத்திரங் காட்டும் " தச காரியம் "

 பண்டார சாத்திரங் காட்டும் " தச காரியம் "



  சிவபுண்ணியங்களாகிய சரியை, கிரியை, யோகங்களை முற்றவித்தால் அவற்றின் பயனாக இருவினை ஒப்பு, மலபரிபாகம் நிகழ்ந்து, சக்திநிபாதம் உண்டாகும். சக்தி நிபாதம் ஏற்படும் போது அது காணும் திரோதன சக்தியாய் விளங்கிவந்த சிவ சக்தி அந் நிலையினின்று நீங்கி கருணை நிறைந்த அருட் சத்தியாக விளங்கும்.

   சிவாகம அறிஞர்கள் பொருள்களை பதி, பசு, பாசம் என்று மூன்றாக சொல்வார்கள்.  அவற்றினுள் பசுவாகிய ஆன்மா பாசத்தையோ, அல்லது பதியையோ சார்ந்து விளங்குமே அன்றி தன்மயமாக தனித்து விளங்கும் திறன்அற்றது. ஆன்மாவானது பாசத்தை சார்ந்த போது பாசமாகவும், பதியை சார்ந்தபோது பதியாகவும், விளங்கினாலும், பாசத்தை சார்ந்தபோது அந்த பாசமாகிய ஆணவ மலத்தால் மறைப்புண்டு நுணுகி கிடக்கும். பதி அருளால் மாயையின் சார்பற்று வினைக்கீடாய் பிறவிகளில் செல்லும். இத்துன்பத்தினின்றும் நீங்கும் பொருட்டு பதிக்கு கீழான கதி என்று மதிக்கத்தக்க அவத்தைகளை பத்தாக (தச காரியம் ) கூறப்படுகிறது.

 இந்த பத்து அவத்தை (படிநிலை) யே தசகாரியம் என்படும். தச (பத்து) காரியம் (நிலை) அந்த தச காரியங்களாவன;

  1.தத்துவ ரூபம், 2, தத்துவ தரிசனம், 3. தத்துவ சுத்தி

 4. ஆன்ம ரூபம், 5. ஆன்ம தரிசனம்,  6. ஆன்ம சுத்தி

 7. சிவரூபம்,  8. சிவ தரிசனம், 9. சிவயோகம், 10. சிவபோகம் என்பன

    பாசக் கருவியாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் பகுத்தறிந்து தனித்தனியே அவற்றின் தொழிலை அறிதல் - தத்துவ ரூபம்,

   ஆராய்ந்தால் அத்தத்துவங்களுக்கு ஒரு செயலும் இல்லை என உணர்தல் /  தத்துதரிசனம்

   அறிவுடைய ஆன்மா இவற்றின் இயலாமையையும் உணர்ந்து, தத்துவங்களில் பற்றற்று  நிற்றல் -  தத்துவ சுத்தி

  மலவலிகுன்றி ஆன்மா தன்னறிவாய் விளங்கி, முப்பொருள் உண்டென தோன்றும் நலையே - ஆன்ம ரூபம்

  திருவருள் விளக்கம் பெறுவதே தன்னறிவு என ஆன்மாவாகிய உன்னை உள்ளவாறு அறிதல் - ஆன்ம தரிசனம்.

  திருவருளை நினைந்து அதுவே எப்போதும்துணை நின்று காட்டுவது என தெளிந்து அருளில் அழுந்துதல்  - ஆன்ம சுத்தி

  ஆன்மா மூன்று விதமான ஞானங்களுள் ஆராய்ந்து மேலானதாக விளங்கும் சிவஞானத்தை உணர்ந்து நிற்றல் - சிவரூபம்

  சிவஞானத்தை உணர்ந்த அதன் வாயிலாக சிவமாகிய தன்னை ஆன்மாவுக்கு காட்டி நிற்றல் - சிவ தரிசனம்

  அவ்வான்மா மல வாதனையால் விளையும் பேத ஞானம் (திரிபுர உணர்வு) காணாதவாறு தன்னையே உணர்த்தி நிற்றல் - சிவயோகம்,

  சிவபோகத்தினை சிவம் காட்டும் உபகாரம், காணும்உபகாரம் எனும் இரண்டும் செய்து விளைவித்து நிற்றல் - சிவபோகம்.

 ( ஆன்மாவின் கண்போல காட்சியை காட்டி, அக்கண்ணோடு உடன  இயந்து காண்பது போல)

  ஞான ஒளிமயமான ஞாதிருவே திருமேனி தாங்கி எழுந்தருளி வந்த ஆசாரிய மூர்த்தி  உபதேசித்து அருளிய இப் பத்து அவத்தைகளையும் ஆன்மா தெளிவாக அறிந்து கொள்ளல்

  இவ்வாறு தசகாரியங்களையும் பயின்று மெய் பொருளாகிய சிவத்தினை பெற்றோர் இப்பிறப்பிலேயே பரமுத்தி அடைந்திடுவர். சாதனைகளில் நின்று வருவோர் உடல் பிரியும் காலத்தி்ல் முக்தி எய்துவர்.

திருச்சிற்றம்பலம்

நன்றி ; தட்சினாமூர்த்தி தேசிகர் அருளிய தசகாரியம் பாடல் 4- 10