வியாழன், 24 நவம்பர், 2022

ஆன்மாவின் முத்தி - வீடு பேறு உய்ய அகப்பூசை

 

ஆன்மாவின் முத்தி - வீடு பேறு உய்ய அகப்பூசை

ஒரு ஆன்மாவானது தன் உலக வாழ்வை முடித்து வீடு பேறு அடைய தவம் அதாவது சரியை, கிரியை, யோகம் ெசய்து பின் அதன் ஞானம் அடைந்து வீடுபேறு அடைய புறபூசை செய்வதும், அதனால் குருவே ஞானாசிிரியராக வந்து முத்தி பேறு அருள்வதும் உண்டு, இத்துடன் அவ்வான்மா  அகப்பூசையும் செய்து நிட்டைகூடி சிவப்பேறு பெறுவதும் உண்டு. புறப்பூசையால் இறைவனை அடைய சாதா வண்டியில் சென்றால் அகப்பூசையும் செய்தால் விரைவு வண்டியில் செல்வதுபோல் நிச்சிய முத்தி பேறு கிடைக்கும்.அகப்பூசை செ்ய்து முத்தியடைந்த நாயனார் பூசலார்

அகப்பூசை என்பது உள் முகமாய் செய்யும் வழிபாடு, அந்தரியாகம் என்றும் வழங்கப்படும்.

 அகப்பூசையின் போது அபிசேகம், அலங்காரம், தூபம், தீபம் நைவேத்திியம் திருவமுது முதலிய பூசா திரவியங்களை மனத்தால் செய்து, ஆன்மாவின் இடத்ததில் சிவபெருமானை ஞானத்தால்அர்ச்சித்தல், ஓமித்தல், தியானித்தல் ஆகியவற்றை செய்தல், அவ்வாறு செய்யும் போது கண்ணாடிக்கு பொடியிட்டு துலக்கும் போது மாசு நீங்கி ஒளி மேலிடுவது போல அச்சிவம் உள்ளத்தில் மேலிட்டு விளங்கித் தோன்றி மலப்பற்று கழியும். அவ்வாறு கழிவது ஆன்ம சுத்திக்கு ஏதுவாகும். மலம் கழிவது ஆகிய ஆன்ம சுத்திக்கு அந்த அந்தரியாக பூசை அவசியம் இந்த பூசையை முத்திக்கு சிறந்த சாதனம் என அநுபவம் உடைய அருளாளர்கள் அறுதியிட்டு கூறியுள்ளார்கள்.

  இதனேயே திருமூல நாயனாரும்

 காயமே கோயிலாக கடிமனம் அடிமையாக

 வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக

நேயமே நெய்யும்பாலா நிறையநீரமையவாட்டிப்

பூசனைஈசனார்க்கு போற்றிவிக் காட்டினோமே.   திருமந்திரப்பாடல்

   இவ்வுடம்பை கோயலாகவும், நல்ல நினைவுகளை உடைய மனத்தை அடிமையாகவும் கொண்டு  வாய்மையை தூய்மையாகவும், வைத்து மனத்திறகுள் ரத்தினம் போல ஜொலிக்கும் ஆன்மாவை இலிங்கமாக பாவித்து அன்பை நெய்யும் பாலுமாக நிறைய வைத்து பூசித்து இறைவனை போற்றினேன். என்கிறார் அகப்பூசையை பற்றி.

  இதில் கோயில் மனம், விளக்கு மெய்ஞானம் சிவதான் என்ற உணர்வு, திருமஞ்சன நீராட்டு மாறிலா இன்பம், திருஅமுது அன்பு, அர்ச்சனை ஐந்தெழுத்து,

  அகப்பூசை செய்யவது மூன்று திறத்தது, 

1, நாபி ( உந்தி) இதுவே வேள்வி செய்யும் இடம்,

    நாேக்கம்; ஈசனாடு பிரிப்பின்றி ஒன்றாய் இருத்தி, சிவஞானத்தீயினை உணர்வால் எழுப்புதல்

 2, இதயம் 

  உணர்வார் பூவும் நீரும் கொண்டு அர்ச்சனை செய்யும் இடம் 

  நோக்கம் ;ஈசனை ஆண்டானாவும் தன்னை அடிமையாகவும் கொண்டு வேண்டுதல்

  இதயத்தில் தில்லை கூத்தரை காண முயலுதல்

3, நெற்றி நடு, தியானம் செய்யும் இடம் திருவருளோடு உடனாய்  இருப்பதன் பாவனை

நாேக்கம் ; ஞானபரம ஆச்சாரியார் திருஉரு காணும் உண்மை பாவனை குரு கருடன் உருவம் கருதும் பாவனை கொண்டு திரிமலம் தீர்ந்தது என செய்தல்

  இதன் பொருட்டு பூசை பொருட்கள்

 மறாவாத நினைப்பு, பிறழாத செய்கை, இறவாத இன்ப அன்பு

 பூசா மந்திரம் -  திருவைந்தெழுத்து

பூசா பலன்  ஆன்மபோதம் அற்று உயிர் சிவமாதல்

  அகபூசையால் உயிராகிய தன்னை சிவமாகவே காண முற்படும் சாதனமே மலமாகி நின்ற உயிரைச் சிவமாக்கி, பிறப்பிலிருந்து விடுபட செய்யும்் முயற்சி

  சிவனாருக்குரிய எட்டு குணங்களும் உயிரின மாட்டு வந்து படிவதால் பசுத்துவத்தோடு கூடி பசுவாய் நின்ற உயிர் சிவத்தோடு கூடி சிவம் என நிற்கும்.

திருச்சிற்றம்பலம்


ஞாயிறு, 6 நவம்பர், 2022

திரு ஐந்தெழுத்தின் மகிமை

 திரு ஐந்தெழுத்தின் மகிமை



" வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்

பீடை கெடுப்பன பிள்ளை நாள்தொறம்

மாடு கொடுப்பன மன்னு மாநடம்

ஆடி உகப்பனஅஞ்செழுத்துமே. திரு ஞான சம்பந்தர்


அரிய நடனத்தை ஆடும் பெருமானார் விரும்பும் திருஐந்தெழுத்தினை விரும்பி / செபிப்பவர் / ஓதுபவர்களின் பிறப்பும் இறப்பும் இல்லாமல் போகும். இப்பிறவியில் வரக்கூடிய துன்பங்கள் அகன்றுவிடும், வேண்டிய செல்வங்களை அளித்துக்காப்பார் இறைவர்.

கடவுளை கண்ட திருஞான சம்பந்த பெருமானார் கூறுவதை தான்நாம் இறைவர் கூறியதாகவே கொள்ளவேண்டும். அறிவு கொண்டு இவற்றைச் ெசான்னாரில்லை. இறைவர் உள் நின்றுணர்த்த இவற்றை கூறினார்.

மந்திரத்தினை செபித்து (மனதில் உருவேற்றி) இறைவனை அடைவதற்குரிய சாதனமே மந்திரயோகமாகும். யோக சாதனையால் சாதகர் இறைவனை அகண்டமாகத் தியானித்துக் கண்டநிலை நீங்கி அகண்டமாய்த்த திகழ்வர். மந்திர செபத்தால் புறத்தே அமைந்த உருவத்தில் இறைவனை வழிபாடு செய்து தேவதா(இறைவடிவம்) வடிவம் பெறுவர். உருவ வழிபாட்டில் ஆசிரியர் சதாசிவ மூர்த்தியின் வழிபாட்டைச் சிறப்பித்துப் பேசுகிறார். இறைவனை அடசரவடிமாகச்(எழுத்து வடிமாக) சக்கரத்தில் எழுந்தருளியிருப்பதாகக் கருதி அங்கு வழிபடுவதும் புறவழிபாட்டைச் சேர்ந்த ஒன்றாகும். திருமூலர் திருவம்பலச் சக்கரம், சாம்பவிமண்டலச் சக்கரம், புவனாபதி சக்கரம், நவாக்கா¢சக்கரம் முதலியவற்றைச் சிறப்பாகக் கூறுகிறார்.

மந்திரம் என்றால் நினைப்பவனைக் காப்பது என்பது பொருளாகும். மந்திர யோகம் என்றால் நினைப்பவனைக் காத்து இறைவனோடு சேர்க்கும் நெறி என்று பொருள். இதற்கு உதாரணமாக அமைவதே

பஞ்சாட்சரமந்திரம். அதில் தூல பஞ்சாட்சரம், சூக்சும பஞ்சாட்சரம், அதி சூட்சும பஞ்சாட்சரம் என்ற பிரிவுகள் உள்ளடங்கும், அவற்றுள் நமசிவாய எ்னும் தூல பஞ்சாட்சரமும் சிவாய நம எனும சூட்சும பஞ்சாட்சரமும், சிவசிவ எனும் அதிசூட்சும பஞ்சாட்சரமும் அதன் அதன் தன்மைக்கேற்ற சிறப்பு ெபற்றது, இதில் எதனை ஓதினாலும் அதன் தன்மைக்கு எற்ப சிறப்புண்டு

  உலகியில் வாழ்வில் பெருவாழ்வு விரும்புவோர் நமச்சிவாய மந்திரத்தையும், முத்தி பேறு விரும்புவோர் சிவாய நம, அல்லது சிவசிவ என்ற மந்திரத்தையும் ஓதுவது மிக சிறப்பு.

                 மிக எளிய வழி "சிவாயநம " எனும் திருஐந்தெழுத்தினை ஓதுவது என்பது , நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லலாம். பிரயாணம் செய்யும் பொழுதெல்லாம் சொல்லலாம். பணம் காசு செலவு ெசய்ய வேண்டியதில்லை. இதைவிட எளிய வழிைய யார் சொல்லமுடியும்? திருஐந்தெழுத்தினை ஓதி, துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் பெறுவோமாக.

திருச்சிற்றம்பலம்

நன்றி; தமிழ் வேதம்


சனி, 5 நவம்பர், 2022

பிறவியினை அறுக்க வழி

 பிறவியினை அறுக்க வழி



பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது போன்று துன்பமானது என்று அருளாளர் பெருமக்கள் குறிப்பிடுவர். “பிறவி அலை ஆற்றினில் புகுதாதே, பிரகிருதி மார்க்கமுற்று அலையாதே” என்று அருணகிரிப்பெருமான் பிறவி வேண்டாம் என்று கந்தவேளை வேண்டிப்பாடுவார். துன்பமான பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டுமானால் இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பதனைப், 

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், 

இறைவன் அடி சேராதார்”   ///         என்று வள்ளுவப் பேரசான் குறிப்பிடுவார்.

பற்பல இன்ப துன்ப நுகர்வுகளைப் பல்வேறு செயல்கள் செய்வதன் மூலம் நுகர வேண்டி இருப்பதனாலும் மூப்பு, பிணி, பசி, இறப்பு என்ற துன்பங்களுக்கு ஆளாவதனாலும்தான் பிறவியைப் பெருங்கடல் எனவும், துன்பமானது எனவும்  குறிப்பிடுவர். ஆகவே, பிறந்து இறந்து – பிறந்து இறந்து துன்பப்படும் இச்சுழற்சியிலிருந்து விடுபடுவதே உயிர் வாழ்க்கையின் இலக்கு என்பது பைந்தமிழர் சமயமான சைவ சமயத்தின் துணிபு.

முடிவில்லாத இன்பம் தரக்கூடிய பெருமானின் திருவடியில் நிலையான இன்பம் துய்த்துக் கொண்டிருத்தலையே உயிர்களின் முடிந்த நிலையாகச் சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இதனாலேயே, இறைவன் காரைக்கால் அம்மை முன் வெளிப்பட்டுத் தோன்றி, “எம்மைப் பேணும் அம்மையே உமக்கு வேண்டுவனக் கேள்” என்ற போது அவ்வம்மையார், “இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார், பிறவாமை வேண்டும்” என்று கேட்டமையாய்த் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். எனவே பிறவாமையும் பெருமானிடத்து உள்ள நிலைத்த இன்பமுமே உயிர்கள் பெருமானிடத்தில் வேண்டிப்பெற வேண்டியது என்பது தெளிவாகிறது.

பிறவித் துன்பம் நீங்குவதற்குத் தாண்டக வேந்தர் என போற்றப் பெறும் திருநாவுக்கரசு அடிகள் எளிய வழியினைக் குறிப்பிடுகின்றார். “அன்னம் பாலிக்கும்” என்று தொடங்கும் ஐந்தாம் திருமுறைப் பாடலில், “என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே” என்று தெளிவுபடுத்துகின்றார். பிறவி வராமல் இருப்பதற்குத் தாம் ஒரு வழியைக் கண்டு பிடித்து விட்டதாகவும் அதனால் இனி தமக்குப் பிறவி வராது என்றும் உறுதியாகக் கூறுகின்றார். அவர் உள்ளத்திலே அன்பு பெருக்கு எடுக்கின்ற வழியினைக் கண்டு கொண்டுவிட்டமையால் இனி தமக்குப் பிறவி வாய்க்காது என்று திண்ணமாகக் கூறுகின்றார்.

இறைவன் திருவடியை அடைய வேண்டும், பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்று பல்வேறு கிரியைகளையும் நம்பிக்கைகளையும் கொண்டுச் செயல்படும் நமக்கு எளிய வழிபாட்டினைத் திருநாவுக்கரசு பெருமான் காட்டுகின்றார். அதாவது பெருமானிடத்திலும், பெருமான் உள்ளிருந்து செலுத்துகின்ற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டுவதே இறைவனை அடைதற்கும் பிறவி அறுவதற்குமான வழி என்கின்றார். இதனையே, “அன்பே சிவம்” என்பார் திருமூலர்.

இறைவனிடத்திலே எப்படி அன்பு காட்டுவது என்பதற்கு எளிய பதிலை மற்றொரு பாடலிலும் திருநாவுக்கரசுப்பெருமான் அருளுகின்றார். பற்றி நின்ற பாவங்களை அழிக்க வேண்டுமாயின், பரகதிக்குச் செல்ல ஒரு வழி வேண்டுமாயின், நம்மை சுற்றி இருக்கின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டுமாயின், “எனக்கு உற்றாரும் உற்ற துணையும் நீயே என்றும் உன்னையல்லால் வேறு ஒரு தெய்வத்தை வழிபடமாட்டேன்” என்றும் தெளிவும் உறுதியும் கொள்ளவேண்டும் என்று திருவாரூர் திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.


பிறவித் துயர் தீர்வதற்குப் பெருமானின் தொண்டன் ஆகி சிவத் தொண்டுகள் செய்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகும் என்கின்றார். எத்தகைய சிவத்தொண்டு செய்வது என்பதனை அவரே விளக்குகின்றார். ஒவ்வொரு நாளும் தவறாது இல்லத்திலேயோ ஆலயத்திலேயோ இறைவனை நன்றியினால் வழிபாடு செய்தல் வேண்டும் என்கின்றார். அப்பெருமானின் பூசனை அறையையோ, திருக்கோயிலையோ தினமும் தவறாது கூட்டி, மெழுகி சுத்தம் செய்தல் வேண்டும் என்கின்றார். பின்பு கடமையாக எண்ணாது அன்போடு மாலை தொடுத்து அதனைப் பெருமானுக்கு அணிவித்து அழகு பார்க்க வேண்டும் என்கின்றார்.

..... ..... நித்தலும்எம்பெருமான் கோயில்புக்கு

    விடிவதன் முன் அலகிட்டு மெழுக்கும் இட்டு

    பூமாலை புணர்ந்தேத்தி, புகழ்ந்து பாடி, 

    தலையார கூம்பிட்டு கூத்துமாடி 

    சங்கர ஜெய ஜெய போற்றி ,,,,,,  என்கிறார்


பெருமானிடத்தில் அன்பு ஏற்பட நாளும் அவனைத் திருக்கோவிலிலோ இல்லத்திலோ பொருள் விளங்கும் திருமுறைகளால் போற்றி உருகிப் பாட வேண்டும் என்கின்றார். பின்பு நம் தலைக் கணம் குறையுமாறு பல முறையும் தலையாலும் கைகளாலும் வணங்கி மகிழ வேண்டும் என்கின்றார். “பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்று மணிவாசகர் குறிப்பிடுவதனைப் போன்று எதைச் செய்தாலும் உண்பதற்கு முன்னும் உறங்குவற்கு முன்னும் எதையும் செய்வதற்கு முன்னும் அப்பெருமானின் அரிய பெயரான “நமசிவய” மந்திரத்தையோ “சிவசிவ” என்ற அதன் சுருக்கத்தினையோ சொல்லியே செய்தல் வேண்டும் என்கின்றார். நாளும் “சிவயநம” என திருநீறு அணிந்து மேற் கூறியவற்றைச் செய்து வந்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகி நம் பிறவியினை அறுக்க வழி பிறக்கும் என்பது திருநாவுக்கரசு பெருமான் வாழ்ந்து காட்டிய வழியாகும். 

திருச்சிற்றம்பலம்


வியாழன், 3 நவம்பர், 2022

அன்னாபிசேக பூசை

 சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில் நிகழும் ஐப்பசி மாதம் 22ம் நாள்




( 08.11.2022 ) செவ்வாய்க் கிழமை காலை சுமார் 10.00 மணி அளவில் திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு  மன்றம்  மற்றும் சக்திபீட வழிபாட்டு மன்றம் மற்றும் சுந்தரபாண்டியம் ஸ்ரீலிங்கா பில்டர்ஸ் (ப.பசும்பொன் இன்சினியர்) ஆகியோரின் ஆன்மீகப் பணியின் தொடர்ச்சியாக  ஐப்பசி மாத பௌர்ணமி பூசையுடன்   அன்று  சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில் அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்மிகு கைலாய நாதருக்கு அன்னாபிசேக பூசையும்,  சக்திபீடத்தில் அமைந்துள்ள அம்மனுக்கும், அருள்மிகு இராஜகணபதிக்கும், பௌர்ணமி பூசையுடன்,  ஐப்பசி மாத மகா அன்னாபிசேக பூசை வெகு சிறப்பாக இவ்வாண்டு தேவாரப் பாடல்களுடன், தமிழ்  அபிசேக ஆராதனையுடன் சிறப்பு பூசையாக,  அடியார்களின் கைங்கரியத்தால் நடைபெற உள்ளது.

அன்னபிஷேகத்தை கண்டவர்களுக்கு தான் சொர்க்கம் கிடைக்கும் என்பதை உணர்த்தும் வகையில் தான், ‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்ற பழமொழி கூறப்படுகிறது.

அன்னபிஷேகத்தை கண்டால் தொழில், வியாபார பிரச்னைகள் தீர்ந்து நல்ல லாபம் கிடைக்கும்.அன்னபிஷேக பிரசாதம் உண்டால் மங்காத தோற்றப்பொழிவு கிடைக்கும்

அன்னத்தை நிந்தனை செய்யக் கூடாது.

அன்னமே இறை வடிவம். மஹேஸ்வரப் பெருமானே அன்னத்தின் வடிவத்தில் இருக்கின்றார். அன்னமே தானாக இருக்கின்றேன் என்று வேதநாயகனே கூறுவதாக வேதங்கள் விளக்குகின்றன.

அன்னமே இறை வடிவம். மஹேஸ்வரப் பெருமானே அன்னத்தின் வடிவத்தில் இருக்கின்றார். அன்னமே தானாக இருக்கின்றேன் என்று வேதநாயகனே கூறுவதாக வேதங்கள் விளக்குகின்றன.


தெய்வங்களுக்குச் செய்யப்படும் யாகத்தில் அன்னம் மிகப் பெரும் பங்கு வகிக்கும். அந்த அன்னம் மட்டுமே ஹவிர் பாகமாக – தெய்வத்திற்கு உணவாக, பெரும் மரியாதையாக செய்யப்படுவது.

இறை வடிவம் கொண்ட அன்னத்தினை அன்னலாருக்கு அபிஷேகம் செய்து காண்பது அளவிற்கடந்த புண்ணியங்களைத் தரவல்லது.


தானத்திலும் மிக உயர்ந்ததாகக் கூறப்படுவது அன்ன தானம் மட்டுமே. உண்டி (உணவு) கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று புறநானூறும், மணிமேகலையும் அன்னதானத்தின் மகிமையைக் கூறுகின்றன.

சிவலிங்க வடிவம் ஓர் ஒப்பற்ற வடிவம். ELLIPTICAL எனும் நீள்வட்ட வடிவம் கொண்ட சிவ வடிவம் எண்ணற்ற அர்த்தங்களை நமக்குத் தருகின்றது. சிவ லிங்க வடிவம் எல்லையற்ற ஒன்றைக் குறிப்பிடுகின்றது. பிரபஞ்சத்தின் சக்தியைக் குறிக்கக் கூடியது.

ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று சிவாலயங்களில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறும்.


அன்னாபிஷேக பிரஸாதமாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் அனைத்தும் அனைவருக்கும் அன்னப்பிரசாதமாக  அளிக்கப்படும்


      இங்கு நடைபெறும் பூசையில் அடியார்கள் தாங்களே அபிசேப் பொருட்களுடன் கலந்து பூசையின் முடிவில் அர்ச்சனை செய்து  கொள்ளுதல் மிக சிறப்பு.  இறைவனுக்கு தாங்களே மனம் , மொழி , மெய்யால் பணிவிடை செய்து தாங்களே பூவும் இலையும் கொண்டு இறைவிடம் வேண்டி தமிழால் அர்ச்சனை செய்யலாம். அவனை தீந்தமிழ் கொண்டு மனத்தால் நினைத்து, வாயால் அவன் புகழை போற்றி, மெய்யால் (கரங்களால்) பூ, இலை கொண்டு அர்ச்சித்து வணங்கி அருள் பெறலாம்.அவன் அருள் இருந்தால் தான் அவன் தாள் வணங்கி பூசையில் பங்கு கொள்ள முடியும். புண்ணியம் செய்தோரே  இதற்கு வாய்ப்பு கிடைக்கும்,

திருச்சிற்றம்பலம்

இந்த சிறப்பு பூசையில் அடியார்கள் யாவரும் கலந்து சிவபுண்ணியம் பெற்று உய்ய அன்புடன் அழைக்கிறோம்

திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு மன்றம்

சக்திபீடம் வழிபாட்டு உபாசகர்கள்

ஸ்ரீலிங்கா பில்டர்ஸ் சுந்தரபாண்டியம்

செவ்வாய், 1 நவம்பர், 2022

சைவ சித்தாந்த சிந்தனைகள் - பதி பரமே

 சைவ சித்தாந்த சிந்தனைகள் -  பதி பரமே



பதி பரமே என்னும் விதிப்பொருளும் பிற ஏதும் பரமில்லை பதியே மேலான பரம் பொருள் பிற ஏதும்மேலான பரம்பொருள் இல்லை என்பதை இது உணர்த்துகிறது.பதியாக பரம் உரு, அரு, இன்றி இருந்தாலும்  ஒரு செயலை செய்வதற்கு உருவம்  இன்றியமையாதது ஏனெனில் உடம்பில்லாமல் எந்த தொழிலும் இயற்ற முடியாது.  எனவே இறைவனுக்கு உருவம் வேண்டும். உருவம் என்று இருந்தாலும், எல்லாவகை தொழில்களையும் செய்ய வாய்ப்பில்லாமல் போய்விடும் உதாரணமாக உருவம் பறப்பதற்கு உருவம் தடையாக இருக்கும் எனவே இறைவன் அருவம், உருவம், எனும் இருவகை வடிவுமன்றி தன் சக்தியால் சுத்த மாயையைக் கொண்ட நாதம் தோற்றுவித்து, பின் தன் இச்சா சக்தியால் வேண்டும் வடிவ திருமேனி கொள்வான். இதனால் இவன் எந்த செயலையும் அவன் சங்கற்ப மாத்திரையான் செய்வான் அதுவே நினைத்த அளவில் அது அதுவாகுதல் இதனை பதியின்சங்கற்பம் என்பர்

   காரிய நிலையில் தோன்றுகிற உருவம் காரண நிலையில் கண்ணுக்கு புலனாகாது நிற்பதே அருவம் எனப்படும். அருவம் ஒரு வகையான உருவமே அதாவது கண்ணு்க்கு தெரியாத சூக்கும வடிவமாகும். ஆகையால் பரம்பொருளுக்க உருவம் கிடையாது. இதுவே இறைவனின் சொரூப நிலையாகும்.

  பதியின் தடத்த நிிலை

 சொரூப நிலையில் தான் இறைவனை பரமசிவன், சொரூபசிவனை, சுத்த சிவன் என்றும் இதனையே அருவம் என்றும் கூறுவர். இந்நிலை நீங்கி இறைவன் உலகத்தை நோக்குங்கால் சக்தி என்றழைக்கப்படுவான். வானத்தல் உள்ள சூரியனின் ஒளிக் கதிர்கள்  மண்ணில் வியாபித்திருப்பது போல் இறைவன் உலகத்தில் வியாபிப்பது சக்தியினால்தான் இதுவேசக்திஎன்கின்றனர்.

  முதல்வனாகிய இறைவனுக்கு அவன் சக்தியும் பொருளால் ஒன்றே செயற்பாட்டால் இரு திறப்பட்டு நிிற்கும். சிவமும் சக்தியும் உடனியைந்து செயல்களை இயற்றி நிற்பதால் சிவமும் சக்தியுமாய் தோற்றம் அளிக்கும். சக்தி ஒன்றே செயலால் பல வகைப்படும் இது எவ்வாறெனில் மின் சக்தி ஒன்றால் ஒளிர்தலும், சுடுதல் குளிர்வித்தல் இயக்குதல் போன்ற பல செயல்களை செய்தல் போன்றதாகும் 

   இறைவனி்ன் மேலான நிலையில் உள்ள பராசக்தி என்ற சக்தி அவன் உலகத்தை  நோக்க தொடங்குங்கால் ஆதி சக்தி என்றும்.மறைப்பாற்றல் உள்ள திரோதன சக்தி என்றும் கூறப்படும் உலகத்தை ஒடுக்கும் காலத்தில் அச்சக்தி அருவநிலையை அடையும், இனி உலகத்தை உய்விக்க விரும்பி இறைவன் அச்சக்தியை இச்சாசக்தி, ஞானசக்தி, கிரயா சக்தி என பிரிந்து செயல்படும். பரந்த பராபரை யான பராசக்தி ஆன்மாக்களுக்கு அருளும் நேசமாய் இச்சா சக்தியாகவும், அது வேணடியவற்றை அறியும் அறிவாகிய ஞான சக்தியாகவும், அவற்றை சங்கற்பத்ததால் செயல் படுத்த கிரியா சக்தியாகவும் விளங்கும். இதன் மூலம் ஆன்மாக்களுக்கு இச்சை,ஞானம், கிரியை என்னும் மூன்றையும் நோக்கியும், கருதியும், இலயம், போகம், அதிகாரம் என்னும்மூன்று நிலைகளை அடைகிறது. 

 உலகத்ததை ஒடுக்கிய நிலை இலயம் என்றும், உலகத்தை தோற்றி காக்கும் நிலை, போகம் என்றும், உயிர்களுக்கு போகத்தை ஊட்டும் நில் அதிகாரம் என்ற வகையில் செயல்படும்.இத்தொழில்களை செய்யும் போது இறைவன் ஆனந்ததாண்டவம் ஞான தாண்டவம் கொண்டு ஐந்தொழில் செய்கிறார்.  இத்தொழில்களை சீராக நடத்த அதற்கென அதிபர்களாக பிரம்மா,விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன்,ஈசுவர் நியமிக்கிறார்.

  உலகத்தை செயற்படுத்த தனது சக்தி நிலையில் சிவன் திருமேனிகளை கொள்வான் இச்செயல் தன் பொருட்டன்று இது அவனுக்காக செய்வதில்லை, ஆன்மாக்களுக்கவே வேண்டிய உருவம் கொண்டு செயல்படுகிறான்.இறைவன் ஆன்மாக்கள் உய்யும் வண்ணம் உருவமும் அருவமும் கலந்த அருஉருவாக சதாசிவ மூர்த்தியாகவும் தோன்றுவார்.

  உயிர்கள்மலமுடையனவாகலின் அவற்றிக்கு மலத்தின் வகையாகிய மாயா உருவம் உளதாகும். இறைவன் நின்மலன், மலத்தின் வகையாகிய மாயையிடம் யாதும் தொடர்பு இல்லை, அவனுக்கு அவனது சக்தியே உருவமாய் அமையும் அச்சக்தியே அருளேயாதலின் அவனது திருமேனியும் அருள் திருமேனியே யாகும்.

  எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்

  அவ்வுருவாய்த் தோன்றி அருள் கொடுப்பான் -  சேரமான் பெருமான் பொன்வண்ணத்து அந்தாதியில் கூறியுள்ளார்.

தகவல் உமாபதியாரின் சைவ சித்தந்த  சிவப்பிரகாசம்

திருச்சிற்றம்பலம்