வெள்ளி, 31 அக்டோபர், 2014

கீதை காட்டும் "யோகியின் அடையாளங்கள்"


கீதை காட்டும் "யோகியின் அடையாளங்கள்" எவன் எவ்வுயிரிடத்தும் பகைமை இல்லாதவனாய், நட்பு பூண்டவனாய், கருணை உடையவனாய், எல்லாம் என்னுடையது என்ற எண்ணம் இல்லாதவனாய், இன்பத்தையும் துன்பத்தையும் சமமாய் கருதுபவனாய், பொறுமை உடையவனாய், எப்போதும் மகிழ்ச்சி பெற்றிருப்பவனாய், யோகத்தில் விருப்பமுடையவனாய், அடங்கிய மனத்தினனாய், திடமான சித்தம் உடையவனாய், மனத்தையும் புத்தியையும் இறைவனிடம் அர்ப்பணம் செய்தவனாய் உள்ளவனாய், இருப்பவன் இறை பக்தி உள்ளவன், எவனிடமிருந்தும் உலகம் துன்பம் பெறுவதில்லையோ, எவன் மகிழ்ச்சி , சினம், அச்சம், மனக்கிளர்ச்சி, இவற்றினின்று விடுபட்டு விட்டவனோ, அவனே இறைவனுக்கு பிரியமானவன், எவன் எதையும் விரும்பாதவனாய், தூயவனாய், சுறுசுறுப்பு உடையவனாய், துன்பம் வரினும், இன்பம்வரினும் ஒரு போதும் துயரப்படாதவனாய், தனது நலனைப் பெருக்குவதற்கு முயற்சி விட்டவினாய், இகழ்ச்சியையும், புகழ்ச்சியையும், சமமாக கொள்பவனாய், மெளனியாகவும், ஆழ்ந்த சிந்தனை உடையவனாய், இருப்பவனாய், கிடைத்ததைக் கொண்டு திருப்தி பெற்று களிப்புடன் இருப்பவனாய், வீடுவாசல் இல்லாதவனாய், யாதும் தன் ஊரே, உலகமே தன் வீடு என்று நினைப்பவனாய், தன் கொள்கையில் திட சித்தம் உள்ளவனாய், இருக்கிறானோ அவனே எனக்கு (இறைவனுக்கு) பிரியமான பக்தன். இவ்வாறு கீதையில் கூறியபடி இவ்வகை மனிதனே யோகி ஆக தகுதியுள்ளவன் திருச்சிற்றம்பலம் மேலும் ஆன்மீக தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://vpoompalani05.blogspot.in/ http://www.vpoompalani05.weebly.com.

புதன், 29 அக்டோபர், 2014

மெய் அறிவே பேரின்பம்


மெய் அறிவே பேரின்பம் மனிதனாக பிறந்த எவனுக்கும் வினை விடாது பற்றும், அந்த வினைப்பயனை, துயரங்களை பிறவி யெடுக்க வைக்கும் வினை இந்த ஸ்தூல சரீரத்தினால் சாதனை புரிந்தால், சுட்சும சரீரத்தில் , பிறவி மறுபடியும் பிறக்காது செய்து விடும். சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்தவன் மனிதன், அப்படி சிந்திக்கத் தெரிந்த மனிதனின் சிந்தனை முழுவதும் செயலாவதில்லை. கோடிக்கணக்கான மக்களுள் சிலரது சிந்தனை வளம்தான் செயலாகிறது,அத்தகைய செயற்கரிய செயல்கள் புரிந்தவர்கள்தான் ஞானியர்களும் சித்தர்களும். இப்பிரபஞ்ச இயக்கத்தில் சிறந்தது வாயு ஆகும். இந்த வாயு நின்று விட்டால் உலக இயக்கமும் உயிர் வாழும் சீவராசிகளும் தாவர ஐங்கமங்களும் அழிந்து விடும். ஓடும் மனம் ஒடுங்கிவிட்டால் உள்ளம் அமுத கடலாகும். ஒடுங்குவது எங்ஙனம்? அலைபாயும் மனதை அலைய விடாது ஒருநிலைப்படுத்தும் சாதனை யோகமாகும். இதுவே நம்முள் தெய்வீகத் தன்மையை ஏற்படுத்தும். மனிதன் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாைசை ஆகிய மூன்று ஆசைகள் மீது பற்றுக் கொண்டவன். இந்த ஆசையே அவன் உணர்ந்த தெய்வீக அடைய தடையாகும், மண்ணாசை வளர்ந்தால் கொலையில் விழுகிறது. பொன்னாசை வளர்ந்தால் களவில் முடிகிறது, பெண்ணாசை வளர்ந்தால் பாபம் நிகழ்கிறது, மூன்று ஆசைகளையும் அற்றவர்கள் மனிதர்களில் குறைவே ஆகும், ஆகவேதான் பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதிக்கின்றது.ஆசையில் பற்று இல்லாதவனுக்கு மறுபிறவி இல்லை. அவன்தான் பிறவி பெருங்கடலை தாண்ட முடியும். எனவேதான் அருணகிரி நாதர் திருப்புகழில் மாவேழ் சன்னங்கெட மாயைவிடா மூவேவடனை " என்று பாடுகிறார், எனவே பிறந்து இந்த உலகில் வாழ்வதற்கு ஆசையே காரணமாகும். செல்வம் நிலையான காரணமாக துக்கத்தையே தருகின்றன. எனவே எதிலும் அளவுடன் சம்பாதித்து, அளவுடன் வாழக் கற்றுக் கொள்ளவேண்டும். நேர்மை, ஒழுக்கம், தெய்வ வழிபாடு, பெருந்தன்மை உயிர்களிடம்இரக்கம், போன்ற உத்தம குணங்களுடன் வாழ்பவனுக்கு துன்பம் ஏது? ஒழுக்கத்திலும், அறிவிலும், அன்பிலும் உயர்ந்த பெரியோர்கள் நட்பைப் பெறுவதும், செல்வம் வந்தபோது ெசெருக்கு அடையாமல் தெய்வ திருவருள் பெற்ற மெய் அன்பர்கள் நூல்களை ஆராய்ந்து அதன்படி நடப்பதும், மற்றவர்குளுக்கும் போதிப்பதும், தான் பெற்ற இன்பத்தை மற்றவர்களுக்கும் அளித்து பேரின்ப நலையை அடைய வேண்டும். உத்தம குணத்தவனாய் இருக்க வேண்டும். வீணாக வேண்டாத கேள்விகளை கேட்டு தெய்வத்தை பற்றி எதுவும் புரியாதவர்கள், விதண்டாவாதம் செய்து தானும் குழம்பி, நம்மையும் குழப்பிவிடும் மனிதர்களிடம் பழகாது இருக்க கற்றுக் கொள்ளவேண்டும். எல்லா சீவன்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும், சீவனிடம் கருனை வந்தால் ஈஸ்வரனிடம் பற்று உண்டாகும், ஈஸ்வரப் பற்றால் ஆசாபாசங்கள் தோசங்கள் அகன்று விடும். ஆசை முதலிய தோசங்கள் அகன்று விட்டால் நிராசை என்ற நிலைபெறும், சீவாத்மாவினை அறியும் தன்மை உண்டாகும். அறிவு வடிவமான பேரின்ப நிலையை அடைந்து துன்பம் ஒழிந்து இன்பம் பெறலாம். அருள் கடாட்சம் பெற்று பேரின்ப ம் அளித்து பேதமற்ற சொரூபமாமனந்தத்தில் அமருவர் என்பது விதியாகும். மனிதனுக்கு உயர்ந்த நிலை எய்த பல அறிவான வழிகள் உண்டு. அவை இசையறிவு, இயலறிவு, சுயஅறிவு, ஐயஅறிவு, உடலறிவு, உயிரறிவு, உலகறிவு முதலியன. இவற்றில் மேன்மையான மெய்அறிவை அறிபவனே அழியாத சீவமுத்தியைஅடைகின்றான். அந்த பேரின்ப பெரிய நிலை அடையவது எப்படி? என்று பக்தி மார்க்கத்தில்வாழ்நது முக்தியடைந்த நாயன்மார்கள் சித்தர்கள், ஆழ்வார்கள் வாழ்ந்து காட்டி நமக்கு வழிகாட்டி சென்றுள்ளார்கள். அந்த பக்தி மார்க்கமே முதல்படியாகும், மேன்மையடைய விரும்பும் மனிதனுக்கு சத்ஸங்கம் தேவார இசைப்பாடல்கள், பசனை போன்ற இறை வழிகளே முக்திக்கு வழி வகுக்கின்றன. பக்தியின்று முக்திக்கு வழிவகுக்காது. பரமார்த்திக்க மார்க்கத்தை கடைபிடித்து, பிறருக்கு போதித்து முக்தி அடைந்த சைவ சமய குரவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆவர்கள், இவர்களின் தேவார பண்ணிசையகளையும் பக்த சேவைகளையும் செய்து மேன்மையடைய வழிகோள வேண்டும். இறைவனுடைய அரிய, பெரிய திருவிளையாடல்களையும்,அடியார்களை ஆட்கொண்ட கதைகளையும் கூறி நம்மை பரவசப்படுத்தி அவ்வழி நடக்க வழிகோழியுள்ளார்கள். அவ்வழியே நடந்தவர்களுக்கு இறைவனே குருபகவானாக வந்து உபதேசித்தார்கள் என்பது உண்மை. இதுபோன்ற அதிசயங்கள் அனேகம் உண்டு. இறைவனின் கருணையால் பிறப்பது அருள், அன்பின்றி அருள் சுரக்காது. அருளினால் இம்மை மறுமை என்ற இரு பயனும் அடையலாம், ஞானம்பெற்ற மகான்கள் தமக்குரிய நாள் வரும் வரை நம்மோடு நடமாடி நல்ல வழிகாட்டியாக இருந்து பிறவிப் பயனை பெற வழி வகுப்பார்கள். அவர்களை இனம் கண்டு தரிசித்து அவர்களின் அன்பையும் ஆசியையும்இறையருளையும் பெற்றுய்வோம். திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://vpoompalani05.blogspot.in/ http://www.vpoompalani05.weebly.com.

வியாழன், 23 அக்டோபர், 2014


Sami Kumbida Theriyuma - Do you know the Methods of Praying God by api-3753376


பிள்ளையார் என்ற பெயர் எப்படி வந்ததென்று தெரியுமா? முதன்மைக் கடவுளான விநாயகரின் உண்மையான பெயர் தான் பிள்ளையார். அதன் பின்னர் வந்தது தான் விநாயகர், கணபதி, கணேஷ், விக்னேஷ்வரன், ஆனைமுகத்தோன் போன்ற பெயர்கள் எல்லாம். சரி, பிள்ளையார் பார்வதியால் உருவாக்கப்பட்டவர் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் பலருக்கு விநாயகர் எப்படி உருவாக்கப்பட்டார், எப்படி பிள்ளையார் என்ற பெயர் வந்தது என்ற உண்மையான கதை தெரியாது. குறிப்பாக இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது பார்வதி தேவி எப்படி விநாயகரை பெற்றெடுத்தார் என்றும், பிள்ளையார் என்ற பெயர் எப்படி வந்தது என்றும் பார்ப்போம். ஒரு முறை பார்வதி தேவி குளிக்க சென்றார். அப்போது காவல் காப்பதற்கு ஆட்களே இல்லை. ஆகவே பார்வதி தேவி, தன் உடம்பில் உள்ள அழுக்கால், ஒரு சிறுவன் உருவத்தை உருவாக்கி, அதற்கு உயிரையும் கொடுத்து, வெளியே காவல் காக்குமாறு உத்தரவிட்டார். அந்த சிறுவனும் வீட்டிற்கு வெளியே காவல் காத்தான். அப்போது சிவபெருமான் நீண்ட நாள் தியானத்திற்கு பின் கைலாய மலையில் இருந்து வீட்டிற்கு வந்தார். அப்போது ஒரு சிறுவன் வெளியே நின்றிருப்பதைப் பார்த்துவிட்டு, வீட்டின் உள்ளே செல்ல முயன்றார். அந்த சிறுவனோ, சிவபெருமானைத் தடுத்து உள்ளே செல்லக்கூடாது என்று சிவபெருமானை தடுத்து நிறுத்தினான். அதனால் கடுஞ்சினம் கொண்ட சிவபெருமான், தன் கையில் உள்ள சூலத்தால் அச்சிறுவனின் தலையை துண்டித்தார். பின்னர் தான் தெரியவந்தது, அச்சிறுவன் பார்வதியின் மகன் என்று. இதனால் அச்சமுற்ற சிவபெருமான், பார்வதி குளித்து வருவதற்கு முன்னர், தனது பூதகணங்களை அழைத்து, பூவுலகில் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து வருமாறு கட்டளையிட்டார். சிவபெருமானின் கட்டளைக்கேற்ப, பூதகணங்களும் முதலில் ஒரு யானையை பார்த்தார்கள். பின் அந்த யானையின் தலையை துண்டித்து கொண்டு சென்றார்கள். பின்பு சிவபெருமான் அந்த யானையின் தலையை அச்சிறுவனுக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். அந்நேரத்தில் குளித்து முடித்து வெளியே வந்த பார்வதி, யானை தலையுடன் கூடிய அச்சிறுவனைப் பார்த்து, இந்த பிள்ளை யார்? என்று கேட்டார். அப்படி பார்வதி கேட்ட கேள்வியை தான், சிவபெருமான் பார்வதியின் மகனுக்கு பிள்ளையார் என்ற பெயரைச் சூட்டி, குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் வந்த பெயர்கள் தான் விநாயகர், கணபதி, விக்னேஷ்வரன் போன்றவைகள். இந்த கதையின் காரணமாகவும், விநாயகர் சதுர்த்தி என்னும் பண்டிகை கொண்டாடப்படுவதாவும் நம்பிக்கை உள்ளது.

புதன், 22 அக்டோபர், 2014

இந்து சமய சம்பிராதயங்கள் 3


இந்து சமய சம்பிராதயங்கள் 3 இந்து சமய சம்பிராதயங்களில் பெண்கள் கவனிக்க வேண்டிய சில சாஸ்திர சம்பிரதாயங்களாக வழிமுறைகளை வகுத்துள்ளனர், இந்த சம்பிரதாயங்கள் யாவும் இன்றளவும் சில சைவ சமய வகுப்பினர்கள் கட்டாயம் இன்றளவும கையாண்டு கடைபிடித்து வருவதை நாம் காணலாம், இருப்பினும் இன்னும் இலைமறை காய்மறையாக உள்ள சிலவற்றை மங்கையர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டியது அவசியப்படுகிறது, 1) பெண்கள் கணவன் தூங்கிய பின்பு தூங்கி கணவன் விழிப்பதற்கு முன்பு எழுந்துவிட வேண்டும். 2, சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து முற்றத்தில் பெருக்கி பசுஞ் சாணந் தெளித்து கோலமிட வேண்டும். 3, கோலமிடுவதற்கு மஞ்சள் கலந்த அரிசிமாவு, பச்சிலைப் பொடி, குங்குமம் கலந்த அரிசி மாவு இவற்றால் கோலமிட வேண்டும், 4, சுபகாரியங்களுக்கு ஒரு கோடும், அசுப காரியங்களுக்கு இரண்டு கோடும் போட்டு கோலம் போடக்கூடாது. 5, பூஜை அறை, சமையறை, சாப்பிடுமிடத்தை நாள்தோறும் கழுவுதல் வேண்டும் 6, அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, மாதப்பிறப்பு வெள்ளிக்கிழமை, பிற விசேச தினங்களில் வீடு முழுவதும் கழுவ வேண்டும், 7. மண் பாண்டங்களை குளிக்கும் முன்பு தொடக்கூடாது. 8. தாமிரப் பாத்திரங்களை புளியினாலும், வெஙகலம் பித்தளை பாத்திரங்களை சாம்பலாலும் ஈயப் பாத்திரங்களை சாணத்தாலும், எவர் சில்வர் பீங்கான் பாத்திரத்தை அரப்பு பொடியினாலும் சுத்தப்படுத்தவேண்டும், 9. குளித்த பின்பு தான் குடிநீர் எடுக்க வேண்டும் 10. தண்ணீர் குடத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு வர வேண்டும் தோளிலும், தலையிலும் சுமக்கக் கூடாது. 11. சூரிய அஸ்தமன சமயங்களில் மாலை நேரங்களில் கைகால் கழுவி கட்டாயம் விளக்கேற்றி வைக்க வேண்டும் 12. உரல் ,அம்மி, முறம், வாசற்படி உலக்கை இவற்றின் மீது உட்காரக் கூடாது. 13, வீட்டுவிலக்கான முதல் 3 நாட்கள் வீட்டு வேலை ஒன்றும் செய்யக்கூடாது. 5வது நாளில் கணவனை வணங்கி விட்டு வீட்டுப் பணிகளில் ஈடுபடலாம், அன்று கணவனோடு சேர்வது சிறப்பு. 14. விருந்து மற்றும் விசேச நாட்கிளில் வாழையில் உணவு படைத்து பரிமாருதல் மிக சிறப்பு 15. வாழையிலையில் அடியில் சிறிது அரிந்துரிட்டு ( தடிமனான தண்டு) கழுவி விட்டு இலையை போட வேண்டும், சாப்பிடுவர்களின் வலதுபக்கம் இலையின் அடிப்பாகமும், இடக்பக்கம் இலையின் நுனிப்பாகம் இருக்கும்படி போட வேண்டும். 16, எதையும் கையால் படைக்கக் கூடாது. 17, சாதம், கறி, முதலியவற்றை மண்பாண்டத்தில்வைத்தோ, அல்லது அடுப்பில் வைத்த பாத்திரத்தை வைத்தோ படைத்தல் கூடாது. 18. வீட்டுக்கு வந்த புது மறுமகளையும், நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் இவர்களை முதலில் சாப்பிட சொல்ல வேண்டும் 19. சாப்பிடும் போது நீர் குடிக்கக் கூடாது. உண்ட பின் தான் குடிக்க வேண்டும். 20. உணவு அருந்திய பின் குளிக்க கூடாது, மிகவும் தேவைப்பட்டால் 5 நாழிகை (2மணி) கழித்து குளிக்கலாம் 21,ஒருவர் தலையில் முடிந்த பூவைத் தன்தலையில் வைக்கக் கூடாது. 22. தலையில் சூடிய மலரை தானே எடுத்தெரியக் கூடாது 23. கணவரோடு இருக்கும் பெண்கள் தனியாக தாங்கள் மட்டும்விரதம் இருக்கக் கூடாது, கணவரோடு சேர்ந்தே விரதம் இருக்க வேண்டும். 24. தர்ம சிந்தனை, ஆன்மீக ஆர்வம், தவம், வாய்மை, மன்னித்தல், கருணை, பிறர் பொருளை விரும்பாமை, இக்குணங்கள் பெண்கள் பெரிதும் பின்பற்ற வேண்டிய குணங்கள். 25. தீபம் ஏற்றுதல்: காலையில் உதய காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனதுக்கு முன்பும் வீட்டில் விளக்கேற்ற வேண்டும் விளக்கின் திரி 2 திரியினை இணைத்து ஏற்றுவது உத்தமம், தீபத்தை கிழக்கு முகமாக இருக்கும் படி வைத்து தீபமிடேண்டும். எக்காரணம் கொண்டும் தெற்கு பார்த்து தீபம் ஏற்றக்கூடாது. தீபம் ஏற்றுபவர் எப்போதும் கிழக்கு நோக்கியே இருக்க வேண்டும். தீபத்திரிகள் வகைகளும் குணங்களும் பஞ்சுத்திரி - மங்களம் வாழைத்தண்டு திரி - புத்திர பாக்கியம் பட்டு நூல்திரி - எல்லாவித சுபங்களும் தாமரை நூல் திரி - லட்சுமி கடாட்சம் எண்ணெய் வகைகள் நல்லெண்ணை - யமபயம் அகலும் தேங்காய் , இலுப்பை எண்ணெய் - தேக ஆரோக்கியம்,செல்வம் தரும் நெய் தீபம் - சகல செளபாக்கியம் விளக்கு வகை: வெங்கல விளக்கு - பாவம் தீரும் அகல் விளக்கு - சக்தி தரும் குத்து விளக்கு - சகல செளபாக்கியம் தீபம் ஏற்றிவிட்டு மூன்று சக்திகள் மற்றும் குலதெய்வங்களை மனதில் தியானித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தீபத்தை வாயால் ஊதி அணைக்காமல் , ஒரு பூவின் காம்பால் அணைக்க வேண்டும். சுப மங்கலம் திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://vpoompalani05.blogspot.in/ http://www.weebly.com/weebly/main.

செவ்வாய், 21 அக்டோபர், 2014

நம் உடலே ஆலயம்


நம் உடலே ஆலயம் " உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம் பாலயம் வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தோர்க்கச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் கான மணிவிளக்கே. " திருமூலர் திருமந்திரம், ஆலய அமைப்பு ஆண்டவன் இருப்பு யாவும் நம்உடலிலேயே உள என்பது இம்மந்திரக் கருத்து. இறைவன் ஆன்மாக்களின் பக்குவம் அறிந்து தேவைகளை கொடுத்து உதவுவதால் வள்ளல் எனப்பட்டான். களை என்னும் சொல்லுக்கு அழகு எனபது பொருள் அச்சொல் காள என ஈண்டு திரிந்தது, நமது மனமே கோவில் அக் கோவிலின் மூலட்டானம் தசையால் ஆன உடம்பு , இறைவருக்கு வாயே கோபுர வாசல், நன்கு அறிந்த ஞானிகட்குஆன்மாவே சிவலிங்கம், மனத்தை திருட்டு வழியில் இழுத்துச் செல்லும் ஐந்து புலன்களும் அழகிய விளக்காகும். பக்தியின் பெருக்கு பேரின்ப நிலை அந்த பேரின்பத்தை அடைந்த மகான்கள், தான் காண்பவைகளையெல்லாம் சிவ வடிவமாகவே காண்பார்கள். சேரமான் அரசர், தன் பரிவாரங்களுடன் யானை மீது ஏறி நகர்வலம் வரும்போது, சிவனடியார்களை காண நேரிடும்போது உடனே கீழே இறங்கி ஓடோடி சென்று வணங்கி வரவேற்பார், அப்படிப் பட்ட அரசர் தான் ஒரு மன்னன் என்பதையும் மறந்து உவர்மண் சுமந்து வரும் வண்ணான், மழையினால் நனைந்த , அவன் தலையிலிருந்து உவர்மண் மழைக்கு கரைந்து, தேகம் முழுவதும் விபூதி பூசியது போன்ற தோற்றம் கண்டு, யானை மீது வந்த அரசர், அடியார் தான் வருகின்றார் என்று யானையை விட்டு இறங்கி ஓடோடி சென்று அவரை வணங்கினார், அவ் வண்ணான் " ஐயா நான் ஒரு அடி வண்ணான் நீங்களே மன்னர் " என்று அலறி கூனிக் குறுகி நின்கின்றான், அம்மன்னன் தேவரீர் திரு நீற்று வடிவத்தை அடியேனுக்கு நினைப்பித்தீர்களே, " அடியேன் அடி சேரன் என்றார் அரசர். அவரின் பக்தியின் பேரின்பத்தை கண்ட பரிவாரங்களும் மந்திரிகளும் பேருவகை கொண்டார்கள். என்று பெரிய புராண வரலாறு கூறுகிறது. எந்த நிலையிலும் இறைவனை காணும் நிலைதான் பக்தி நிலையாகும்,அருணகிரியார் திருப்புகழில் தன்னை உருக்கி பாடுகின்றார், பக்தியால்யான் உன்னை பலகாலும் பற்றியே மா திருப்புகழைப் பாடியே உனைக் காண வேண்டும் என்கிறார். அந்த பக்தியே, முக்தி எனும் பிறவா நிலைகக்கு கொண்டு செல்லும், பிறவா நிலையினை அடைய சாதனை தத்துவம் தேவை, இந்த உடலையேஆலயமாக பரிமளிக்க வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்ற கிராமப்படி, இந்த திரேகத்தையும், அதனுள் ஒளிரும் ஆத்மாவையும் போற்ற வேண்டும் . எனவே தான் நம்முடன் வாழ்ந்த சித்தர்கள் அவ்வகையில் தன் மெய் அறிவினால் கற்பங்களை உண்டு பல்லாயிரக்கணக்கான, ஆண்டுகள் வாழ்ந்து இந் பிரபஞ்ச்ததுக்கும் வருங்கால சந்ததியார்க்கும் அரும்பெரும்அறிவு களஞ்சியங்களை பரம்பரையாக குரு சீடர் மூலமாகவோ பனை ஓலைகள் மூலமாகவோ தந்துவிட்டு போய் உள்ளார்கள். அவற்றின் உட்பொருளை அறிவின் திறன் கொண்டு ஆராய்ந்து, மற்றவர்களுக்கும் உபதேசித்தும், அறிவின் உட்பொருளை அறிய செய்ய வேண்டுமென்றும், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று கூறி வழிவகுத்து சென்றுள்ளார்கள். நம் உடம்பில் ஐம் புலங்களில் எது மூலசத்தியாக விளங்குகிறதோ அதுதான் ஆத்மா, ஒருவன் இறந்து விட்டால் இவை இயங்குவது இல்லை. எனவே சரீரத்தை போற்றி காத்து இந்த சரீரத்தின் மூலம்பல அரிய பெரிய சாதனைகள் புரிய வேண்டும், எனவே உடல் எந்தவிதமான உபாதைகளின்றம் பிணிகளிலிருந்தும்பாதுகாத்து வாழ்ந்து வந்துள்ளார்கள். இதைத்தான் திருமூலர் தனது திருமந்திரத்தில் " உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞானம்சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் " என்று உடலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கியுள்ளர். உடம்பும், உயிரும் மிகமிக இன்றியமையாதன ஆதலின் அவற்றின் சிறப்பு நோக்கி உடம்பையும் வளர்த்தேன் உயிரையும் வளர்த்தேன் என்கிறார். தேகத்திலுள்ள ஆத்மா வானது அழிவற்ற பொருள், தேகத்தோடு பிறந்த தேகம் நீங்கியவுடன் மறுபடியும் பஞ்ச பூத சக்திகளில் சம்பந்தப்பட வேண்டியுள்ளது. அதை தேகத்தோடு கலப்பிக்க வேண்டும். இது வித்தை போதிக்கும் தந்திரமாகும், அந்த கர்மத்தை செய்வதினால் தேகம் அழியாது, செத்தால் பிறக்க வேண்டும், பிறந்தால் இறக்க வேண்டும். உலக வழக்கத்தை சொற்கள் அறிந்து பிறந்த தேகத்தை, காப்பாற்ற வேண்டிய தந்திரங்கள் அறிவதே, ஆத்மாவை அறிந்து தேகத்தை லயிக்க செய்யும் கர்மமாகும்.அது முடியாவிட்டால் சாவது நிச்சயம், செத்தால் பிறக்க வேண்டும், அதை தடுப்பதற்கு தேகத்திலிருந்துதான் அந்த கர்மத்தை செய்யமுடியும், புழு , பூண்டு வடிவத்தில் இருந்தால் இந்த கர்ம வினைகளை செய்ய இயலாதல்லவா? அப்படி சாதனையால் செய்து இந்த சூச்சும தேககத்தை பிரிக்கும் தந்திரத்தை அறிய வேண்டும்.சித்தர்களும் ஞானிகளும் இதை கண்டு கொண்டு உலகத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவேதான் உடலையும் உள்ளத்தையும் கட்டுபாடுகளுடன் உட்படுத்தி தன்னை மேலான இயல்புடையவனாக மாற்ற வேண்டும், சிந்தையிலும் சொல்லிலும், செயலிலும் கோணல் இல்லாத தன்மையே நேர்மை அடைய வழிபிறக்கும், தேக சுகத்திற்கு வசப்பட்டு புற இச்சைகளையும் சாஸ்திரத்தின் ஆணை மீறி நடப்பவனுக்கும் ஏது மேன்மை? அவன் சுகம் பெற முடியாது, முக்தி என்னும் பேரின்பம் அடையமுடியாது. " உடம்பினை பெற்ற பயனாவதெல்லா முடம்பினிலுத்தமனைக் காண் " என்கிறார் அவ்வையார். தேகம் எடுத்ததின் பயன், புற இச்சைகளையும் மனை, மக்கள், காசு பணம், போன்ற சொத்துக்களை சம்பாதித்து அவற்றிலே மூழ்கி வயதான காலத்தில தள்ளாமையாலும், வியாதியினாலும் பிடிக்கப்பட்டு உழல்வதற்கல்ல, உன்னிலே ஒருவன் உள்ளான், அவனை நீ கண்டால் அறிவு சுடர் விட்டு, மூப்பு பிணி, சாக்காடு என்ற அவத்தை நீக்கி ஆணவம் கன்மை, மாயை நீக்கி பேரின்ப பெருவாழ்வு வாழலாம், என்கிறார், இந்த ஊன் உடம்பே ஆலயம் என்றாலும், அச்சரீரம் தன் அளவில் தேவ ஆலயம் ஆகிவிடாது, இந்த சரீரத்தை எப்படி மனிதன்பயன்படுத்துகின்றானோ அதை அனுசரித்து உடல் தேவ ஆலயமாக ஆகிறது. எனவே தான் உடம்புக்கு ஊறு வராது நேர்மைக்கு பங்கம் இலாது வாழ வேண்டும், எனவே உண்ணும்உணவு குடிக்கும்பானம் இவைகளை நெறிப்படுத்த வேண்டும். இந்த உடம்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டுமே யொழிய இந்த உடம்பை நினைக்க கூடாது. உடலில் உள்ள அபூர்வ செயல்கள், செயல் இழந்துவிட்டால் இந்த உடல் பயனற்றதாகிவிடும். ஆகவேதான் இந்த உடலை கொண்டே நாம் மேலான நிலையை அடைய வேண்டும். என்ற குறிக்கோளினைக் கொண்டு நல்ல சிந்தனையுடன் இந்த உடம்பை இயற்கை விதிகளுக்கு புறம்பாக ஓம்ப வேண்டும், உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்து, உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன் திருசிற்றம்பலம் ஒம் நமசிவாயம் மேலும் பல ஆன்மீக தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://vpoompalani05.blogspot.in/ http://www.weebly.com/weebly/main.

திங்கள், 20 அக்டோபர், 2014

இந்து தர்ம சாஸ்திரங்கள் கூறும் பயனுள்ள சம்பிரதாயங்கள்:2


இந்து தர்ம சாஸ்திரங்கள் கூறும் பயனுள்ள சம்பிரதாயங்கள்:2 இந்து தர்ம சாஸ்திரங்களில் நம் முன்னோர்களால் வகுத்தறியப்பட்டு சில சாஸ்திர சம்பிரதாயங்கள் இன்றளவும் நம்மால் பின்பற்றப்பட்டு வருகின்றன, இருப்பினும் நம் முன்னோர்களால் சாஸ்திர ரீதியாக கடைப்பிடிக்கப்பட்டவை தற்போது இக்கால சூழ்நிலைக்கு ஏற்ப சற்று ஏறக்குறையவும் இன்றளவும் நடைபெறுகிறது, சாஸ்திர முறைப்படி கூறப்பட்ட சம்பிரதாயங்களை அன்றாட வாழ்க்கைக்கு ஆன்மீக ரீதியாக கடைபிடிப்பது அவசியமாகிறது, "அரிது அரிது மானிடாய் பிறப்பது அரிது" என்கிறார் அவ்வைப் பிராட்டியார், ஆறறிவு பெற்ற மனிதனால் மட்டுமே சிந்தித்து செயல்பட்டு ஆன்மீக வழி நடந்து, பிறவிப் பெருங்கடலைக் கடக்க இயலும், மறுபிறவியில்லாத நிலையை அடைய உதவுவது இந்த மானிடப்பிறவியின் வாயிலாகத்தான் முடியும், சைவ சித்தாந்த பெரியோர்களும் முற்பிறவியில பெற்ற கர்ம வினைகளை தீர்க்க இந்த மானிடப் பிறவி நமக்கு அளிக்கப்பட்டுள்ளது, இந்த அரிய பிறவியில் ஆன்ம ஞானம்பெற்று வீடு பேறு என்ற பிறவா நிலையை அடையமுடியும், " கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடுவாராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும் சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலும் துன்பமில்லாத வாழ்வும் துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரோடு கூட்டு கண்டாய்", என்று அபிராமி பட்டர் பாடினார்,ஒவ்வொரு மனிதனும் தனக்கு கிடைக்க வேண்டுவதெல்லாம் அவர் கேட்ட இத்தனை வரங்களையெல்லாம் தான் இத்தனை இன்பங்களையும் செல்வங்களையும் பெற்று ஒரு மனிதன் ஆன்மீக நிலையை அடையவும் ஒழுக்க நெறி நடந்து, பிறர்க்கு சான்றாக நடந்து பின்வரும் தலைமுறைக்கு வழிகாட்டவும் தனது ஆன்மீக நிலையை மேம்படுத்தவும் வேத காலந் தொட்டு , நமது முன்னோர்களும் ரிசிகளும் சோதிட வல்லுநர்களும் சமயப் பெருந்தகைகளும் நமக்கு எத்தனையோ தத்துவங்களையும் உபதேசங்களையும் சாஸ்திரங்களையும் அருளி யிருக்கிறார்கள். ஒரு மனிதன் பிறந்தது முதல் பள்ளிக்கு சென்று வித்தை பயின்று திருமணம் புரிந்து காதல் விளையாடி, குழந்தை பெற்று , செல்வம் தேடி, ஆன்மீக பாதையில் சென்று மறுமையடையும் வரை, அவன் அன்றாடம் செய்யவேண்டிய கடமைகளையும் பின் பற்ற வேண்டிய நம் இந்து மத சம்பிரதாயங்கள் என்னென்ன வென்றும் எப்படி செய்ய வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்கள், இறந்தவுடன் அவனுடைய உடலுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் அவன் ஆத்மா சாந்தி அடைய வேண்டி செய்ய வேண்டிய சாஸ்திரங்களையும் தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். மனித உடல் உயிர் பிரியும தருவாயில் செய்யவேண்டிய சம்பிரதாயங்கள்: இறக்கும் தருணம் வந்துவிட்டால் மரணப்படுக்கையில் இருந்தால் அவனை கட்டிலில் படுக்க விடக் கூடாது, உள் வீட்டிலும் படுக்க வைக்க கூடாது, தரையில் தர்ப்பையை போட்டு அதன் மீது அவனை படுக்க வைக்க வேண்டும், கட்டிலில் படுத்து கொண்டே உயிரை விட்டால் நரகதி அடைவர், ஒரு மனிதன் பிறக்கும் போதும் இறக்கும் போதும் பூமாதேவியின் மடியிலேயே நடக்க வேண்டும், தற்காலத்தில் வசதிக்காக எளிதாக பிரசவம் பார்க்க பெரும்பாலும் பிரசவ விடுதிகளில் கட்டிலில் தான் பிரசவங்கள் நடக்கின்றன, இறக்கும் போகும் மனிதனுக்கு துளசி, சாளக்கிராமம் போன்ற உத்தம பொருட்களை கண்ணில் காட்டவும், சிவ நாமத்தை அவரது வலது காதில் ஓத வேண்டும், புண்ணிய சாலிகளுக்கு முகத்திலுள்ள துவாரங்கள் மூலமாகவும், சித்தர் ஞானிகளுக்கு சிரசு வழியாகவும், பாவிகளுக்கு மலஜல துவாரம் வழியாகவும் உயிர் பிரியும், உயிர் பிரிந்த பின் செய்ய வேண்டி சடங்குகள்: பிராணன் போன பின்பு, தலையை தெற்குப் புறமாக வைத்து படுக்க வைக்க வேண்டும், பெண்கள் தலையை விரித்துக் கொண்டு தெற்கு நோக்கி நமஸ்காரம் செய்ய வேண்டும், ஒருவன் இறந்தவுடன் ஒரு யாமம் (சுமார் 3 மணி நேரம்) கழிந்த பின்பு அப்புறப்படுத்த வேண்டும், இரவு 9 நாழிகைக்கு மேல் தகனம் செய்யக் கூடாது, இறந்த உடலுக்கு கொள்ளி வைப்பது யார்? பிறவியில் மூத்தவனே கொள்ளி வைக்க வேண்டும், அவன் இல்லாவிடில் இருப்பவர்களுள் மூத்தவன் கர்மஞ் செய்ய வேண்டும், எல்லா பிரேத காரியங்களிலும் ஈரத்துணியுடன் இருக்க வேண்டும், கொள்ளி வைப்பவர் அக்கினியை சட்டியில் எடுத்துக் கொண்டு முதலில் புறப்பட வேண்டும் அக்கினிக்கு பின் பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டும்,மற்றவர்கள் பிரேத்ததை தொடர்ந்து வரவேண்டும், பிள்ளைக்கு 2 வயதுக்குள் கர்மஞ் செய்ய நேரிட்டால் பக்கத்திலிருக்கும் வேறொருவர் செய்யலாம், 3 வயது முதல் 7 வயது வரை கொள்ளியை பையனே கொள்ளி வைக்க சொல்லி, பிற காரியங்களை நெருங்கிய உறவினர்கள் செய்யலாம், தகனம் செய்யுமிடத்தில் பிரேதத்தை தெற்குப்புறம் தலையிருக்கும்படி வைக்க வேண்டும், இதற்கான காரியம் செய்பவர்களும் அவருடைய தாயாதி வழியினரும் இறந்தவருக்கு வாய்கரிசி 3 முறை போட வேண்டும், சிதையின் கிழக்குப் புறத்தில் மேற்கு நோக்கி நின்று கொண்டு பிரேதத்தின் மார்பில் அக்கியை இட வேண்டும், பிறகு சிதையின் வடக்கு புறம் தெற்குநோக்கி நின்று கொண்டு அக்கினியை தொழுது மூன்று முறை ஓம் என் உச்சரிக்க வேண்டும், சிதைக்கு தீயிட்ட பின் திரும்பி பார்க்காது சென்று விட வேண்டும், பின் தலைமுழுகி ஸ்தானம் செய்ய வேண்டும், பின் உறவின்களுடன் வீட்டுக்கு செல்ல வேண்டும், பின் 10 வது நாள், அல்லது 16 வது நாள் கழித்து உரிய காரியங்களை செய்ய வேண்டும், காரியங்கள் செய்யும் வீட்டில் பசுஞ் சாணத்தால் மெழுகி புன்யாக வசனம் செய்யவும், சித்தி பெற்ற உடல், ஞானிகள் உடலை புதைக்கத்தான்வேண்டும், அதாவது சமாதி செய்தல் வேண்டும், சிறு குழந்தைகள் இறந்தாலும் புதைக்கத்தான் வேண்டும், தகனம் செய்தல் கூடாது, ஒருவனுக்கு பெற்ற தாய் தந்தை இறநதால் ஒரு வருடம் வரை தீட்டு உண்டு. மனைவி இறந்தால் 3 மாதமும் சகோதர்களுக்கு ஒன்றை மாதமும் தாயாதிகள் இறந்தால் ஒரு மாதமும் தீட்டு உண்டு, இந்த தீட்டு நாட்களில் கோவில்களுக்கு செல்லக் கூடாது, சுபகாரியம் செய்யக் கூடாது, நேர்த்திக் கடன் செலுத்தக் கூடாது, தீட்டுக்காலம் முடிந்த பின் சிராத்தம் செய்ய வேண்டும், சிரார்த்தின் போது மனைவியும் உடன் இருக்க வேண்டும், இறந்த திதியை கணக்கிட்டு சிரார்த்தம் வருடாவருடம் பித்தருக்களுக்கு செய்ய வேண்டும, பிதுர்தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் சிறிது எள்ளும் தண்ணீரும் விட்டு தர்ப்பணம் செய்ய வேண்டும், திருச்சிற்றம்பல் ஒம் நமசிவாயம் பிற ஆன்மீக தகவல்களுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://vpoompalani05.blogspot.in/ http://www.weebly.com/weebly/main.

இந்து தர்ம சாஸ்திரங்கள் கூறும் பயனுள்ள சம்பிரதாயங்கள்:


இந்து தர்ம சாஸ்திரங்கள் கூறும் பயனுள்ள சம்பிரதாயங்கள்: 1), கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது. 2, தனது இடது கையால் எண்ணெய் தேய்த்தல், இடது கையால் அன்னம் இடுதல், இடது கையால் படுக்கை விரித்தல் கூடாத பழக்கவழக்கம், 3, குரு, நோயாளி, கர்ப்பிணி,மருத்துவர் சந்நியாசி முதலியோர்களுக்கு ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவி செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும். 4,சகோதர, சகோதரிகள் தாழ்ந்த நிலையில் இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும். 5,பசு, தேர், நெய்குடம், அரசு, வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் குறுக்கிட்டால் அதனை வலது புறம் சுற்றி செல்ல வேண்டும், 6, குடும்பஸ்தன் ஒரு கையை தரையில் ஊன்றியக் கொண்டு உணவு உண்ணக் கூடாது. துணியில்லாமல் குளிக்கக் கூடாது, 7, கன்ளுக்குட்டியின் கயிறை தாண்டக்கூடாது,தண்ணீரில் தன் உருவத்தைப் பார்க்க கூடாது. 8, நெருப்பை வாயால் ஊதக்கூடாது, 9, குழந்தை யில்லாதவன், திருமணம் ஆகாமல் ஒரு பெண்ணுடன் வாழுபவன், மனைவியை இழந்தவன் இவர்களை சுப காரிய நிகழ்வுகளில் முன்னிறுத்தக் கூடாது, 10, சாப்பிடும் போது முதலில் இனிப்பு, உவர்ப்பு , புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு பின்பு நீர்அருந்த வேண்டும், 11, கணவன் சாப்பிட்ட பின்பே மனைவி சாப்பிட வேண்டும், திருமணத்திலும் பந்தியிலும், பிரயாணத்திலும் சேர்ந்து சாப்பிடலாம், 12, உள்ளாடை யின்றி வீட்டின் நிலைப்படியை தாண்டக்கூடாது, ஆன்மீக சடங்குகளில் கலந்து கொள்ளவோ, கோவிலுக்கு செல்லவோ கூடாது. 13, சாப்பிட்ட பின் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும், வெற்றிலையின் நுனி, நரம்பு, காம்பு கிள்ளி எறிந்து விட வேண்டும், 14, சுண்ணாம்பு இல்லாத வேற்றிலையோ, வெறும் பாக்கோ போடக்கூடாது, சுண்ணம்பு வெற்றிலையின் பின் பக்கம்தான் தடவ வேண்டும். 15, குரு,சோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இவற்றிக்கு செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது, 16, தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும், இரண்டு கையாலும் சொரிதல் கட்டாயம் கூடாது, 17, இருகையாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக் கூடாது, 18, வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும். 19, பேசும் போது துரும்பைக் கிள்ளக் கூடாது, பேசுவர் துண்டிப்பாதாக தோன்றும், 20, ஈரக்காலுடன் படுக்கக் கூடாது. 21, வடக்கிலும், கோணத்திசையிலும், தலைவைத்து படுக்கக் கூடாது, நடக்கும் போது முடியை உலர்த்தக் கூடாது, 22, குடும்பப் பெண்கள் தலைமுடியை விரித்து போட்டுக் கொண்டு வெளியில் செல்லவோ சுபகாரியங்களிலுக்கு செல்லவோ கூடாது, 23, ஒரு காலினால் இன்னொரு காலை தேய்த்துக் கழுவக்கூடாது, 24, சிகரெட், பீடி தீ துண்டுகளை அணைக்காமல் தரையில் போட்டு காலால் தேய்க்கக் கூடாது, 25, பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக்கூடாது, இவை அனைத்தும் கூடா நட்பு 26, பெற்றதாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறர்மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயசித்தமற்ற பாவங்கள் 27,அங்ககீனம் உள்ளவர்வரகள், வறுமையில் உள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்ட கூடாது, 28, பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை ஆசனம் இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது. 29, பிணப்புகை, இளவெயில் தீப நிழல் இவை நம்மீது படக்கூடாது. 30, பசுமாட்டினை காலால் உதைப்பது, அடிப்பது கூடாது, 31, பசு மாட்டிற்கு ( கோமாதா) பசும்புல் ஒரு கைப்படியாவது கொடுப்பது சிறந்தது, " யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை " திருமூலர் மந்திரம் 32, உண்ணும் போது பிறர் பார்த்திருக்க உண்ணக் கூடாது, " யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி" பிறருக்கு ஈந்து உண்ணல் வேண்டும், 33, பகலில் உறங்குவது , உடலுறவு கொள்வது கூடாது, 34, தூங்குபவரை தீடீரென்ற எழுப்பக் கூடாது, தூங்கும் குழந்தையை பார்த்து ரசிக்கக் கூடாது. 35,தலை, முகம் இவற்றின் முடியை காரணமில்லாமல் வளர்க்கக் கூடாது. 36, வீட்டிற்குள் நுழையும் போது வாசல் வழியாகத்தான் நுழைய வேண்டும் 37, கையால் மோரை குழப்பக் கூடாது. 38, தாம்பத்திய சுகம் அனுபவிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மனைவியுடைய மர்ம, உறுப்புக்களையும், பிற பெண்களுடையதையும்பார்க்க கூடாது. 39, நம்மை ஒருவர் கேட்காத வரையில் நாம் அவருக்கு ஆலோசனை கூறக்கூடாது, தொகுத்தவர் வை, பூமாலை, சுந்தரபாண்டியம் மேலும் ஆன்மீகச் செய்திகளுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://vpoompalani05.blogspot.in/ http://www.weebly.com/weebly/main.

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

Share (Copy of) THIYANAMVIVEGANANTHAR(OrathanaduKarthik.blogspot.com).pdf - 6 MB

Share (Copy of) THIYANAMVIVEGANANTHAR(OrathanaduKarthik.blogspot.com).pdf - 6 MB

aanmigam: நீக்கமற நிறைந்த சிவன்!

aanmigam: நீக்கமற நிறைந்த சிவன்!: சை வ சமயத்தவரால் முழு முதற் பரம்பொருளாகக் கொண்டு போற்றி வழிபடப் பெறும் எல்லாம் வல்ல இறைவனை "சிவன்' என்றும், "சிவம்' என்...

aanmigam: சமாதி என்பது

aanmigam: சமாதி என்பது: பதஞ்சலி மகரிஷியின் அட்டாங்க யோகக் கூற்றுப்படி சமாதி என்பது ஆதிக்கு சமமாதல் என் று   பொருள்படுகிறது.அதாவது பார்ப்பவன்,பார்க்கப்படும் ப...

சனி, 18 அக்டோபர், 2014


தமிழ் திருமறைகள் கூறும் வைத்தியம் தமிழ் திருமறைகள் மற்றும் தமிழ் பாசுரங்களையும், மந்திரங்களையும் அனுதினமும் ஜெபித்தும், மானிடர் படும் நோய் நொடி துன்பங்களிலிருந்து தங்களை விடுவித்து அதற்குரிய பலாபலன்கள் அடைந்துள்ளனர் நம்முன்னோர்கள், அவைகள் அக்காலத்திற்கு பொருந்துமா? என்பதை நினைப்பதை விட நடந்து அனுபவித்து கூறிய செய்திகள் உண்மையானவைகளாகவே நமக்கு தோன்றுகின்றன. அது மட்டுமன்றி தமிழ் மறைகள் மூலம் சித்தர் பெருமக்கள் அததற்கென மூலிகைகள் மூலம் சித்த வைத்திய முறைகளையும் கையாண்டது அகத்தியர் தொகுத்த சித்த வைத்திய முறைகளைக் கொண்டு அறியலாம். தமிழ் மறை நூல் ஆசிரியர் கள் தொகுத்துப் பாடி அடைந்த பலாபலன்கள் அவர்கள் கூற்றின் வாய்லாக நாம் அறியலாம், அபிராமி பட்டர் எழுதிய அபிராமி அந்தாதியை அனுதினமும் பாராயணம் செய்தால் சகல தோசங்களும் நீங்கி, சந்தோசமும் செல்வமும் மோட்சமும் சித்திக்கும், தீராத நோய்களும் தீர திருஞானசம்பந்தர் பாடிய திருநீற்றுப்பதிகப் பாடல்களை பாடி இந்து சமயத்தின் அடையாளமான திருநீற்றை நெற்றி யில் அணிந்து சகல நோய்களையும் தீர்ககலாம் என்கிறார் சம்பந்தர், பாண்டிய மன்னனுக்கு சூட்டுநோய் நீக்க திருநீற்றை பூசி அவரைக் குணப்படுத்தி " மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு " எனறு ஆரம்பித்து " ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயன் திருநீற்றைப் போற்றி பகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் தேற்றி த் தென்னன் உடல் உற்ற தீப்பிணியாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும வல்லவர் நல்லவர் தாமே, என்று எல்லா நோய்கள் தீரவும் இதனைப் பாடி இத்திருநீற்றை அணிந்தால் எல்லாப்பிணிகளும் தீரும் என்கிறார், முயலக நோய் என்னும் முடக்குவாத நோய் நீங்க ' துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச் சுடர் சடை சுற்றி " என்ற பாடலைப் பாடினால் அவர் கூற்றுப்படி " நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி நற்றமிழ் ஞானசம்பந்தன் தகைமலி தண்டமிழ் கொண்டவை ஏத்தச சாரகிலா வினைதானே", என்கிறார், அதுபோல் முன்வினைகள் நீங்கவும் எலும்பு முறிவு முதலியன குணமடையவும் ஒதவேண்டிய பதிகம் " விங்கவிளை கழனிமிகு கடைசியர்கள் ,,,,,,,,,,,, எனத் தொடங்கி " மடைகொள் புனலோடு வயல் கூடுபொழில் மாகறல் உளான் அடியையே உடைய தமிழ் பத்தும் உணர்வார்அவர்கள் தொல்வினைகள் ஒல்கும் உடனே" என்கிறார், அத்துடன் சொரி, படை, மேகம், அம்மை போன்ற பலவகை உடற்பிணிகள் அகல ஓதவேண்டிய பதிகம் " மின்னுமா மேகங்கள் பொழிந்து இழிந்து அருவி .............. என்று தொடங்கி " தங்கையால் தொழுது தம் நாவின் மேற்கொள்வார் தவநெறி சென்று அமருலகம் ஆள்பவரே. " என்று அருளியுள்ளார், அதுபோலவே திருநாவுக்கரசர் சுவாமிகள் பாம்பு கடியால் இறந்த குழந்தையை உயிர்பிக்க பாடிய பாடல் கொண்ட விடந்தீர்த்த திருப்பதிகம் " ஒன்றுகொலாம் என்ற பாடல் பாடி பாம்பு ( நஞ்சு) தீர்க்க பயன் பெறலாம், கண்பார்வை இழந்தபோது வன்தொண்டர் என்ற சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடிய " மீளா அடிமை உமக்கே ஆளாய் " என்ற பாடல் பதிகங்களைக் கொண்டு கண்சம்பந்தான நோய்களை குணமடைய செய்யலாம், ஊமை திக்குவாய் முதலியன நீங்கவும் நன்றாக பேசவும் உதவும் பதிகப் பாடல் திரு மாணிக்கவாசகர்அருளிய " பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் " என்ற பாடல் கொண்டு நல்ல பேச்சிதிறன் கொண்ட குழந்தைகள் அமையவும், ஊமை குழந்தைகள் பேச செய்யவும் இப்பாடல்ளை பாராணம் செய்தால் விரைவில் குணம் பெறலாம், நவக்கிரகங்களால் ஏற்படும் தோசம் நீங்க " மாசறு திங்கள் " என்ற கோளறு பதிகம் தினசரி பாடி பாராயணம் செய்யலாம், அருணகிரிநாதர் அருளிய " நாளென் செயும் வினைதான் என்செயுமென நாடிவந்த கோள் என்செயும் கொடுங் கூற்றென் செயும் குமரரே சரிரு தாளும் சிலம்பும் சதங்கையும தண்டையுஞ் சண்முகமும் தோளுங் கடம்புமெனக்கு முன்னே வந்து தோன்றிடினே, " என்ற கந்தர் அலங்காரப் பாடலைதினமும் பாடினால் துன்பங்கள் தவிர்க்கலாம் பூர்வ ஜென்ம பாவத்தால் வாழ்க்கையில் எப்போதும் கஸ்டத்தையே அனுபவிப்பவர்கள் " சேல்பட்டழிந்து செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின் " என்ற கந்தர்அலங்கார பாடலை பாராயணம் செய்யலாம், வாழ்க்கையில் வழிதெரியாமல் தவிக்கும் போதும் பிரயாணம் செல்லும் போதும் வழித் துணைக்காக பயம் நீங்க பாடும் பாடல் " விழிக்கு துணை திருமென் மலர்ப் பாதங்கள் ,,,,,,,,,,,,,,,,,,,, வழிக்குத் துணை வடிவேலுஞ் செங்கோடன் மயூரமுமே." என்ற பாடலை பாராயணம் செய்யலாம், இவ்வாறு ஏகப்பட்ட பாசுரங்களும் பாடல்களும், சுலோகங்களும் உள்ளன, இவற்றை பாராயணம் செய்வதால் சகலவித அனுகூலமும் கிட்டும், சிவகவசம், சக்தி கவசம், நமக்கு வாழ்வின் சிறந்த கவசமாக பாதுகாக்கும், சகலா வல்லி கல்வி மாலை பாடினால் சகல கலைகளும் தேர்ச்சி உண்டாகும், நவரத்தின மாலாவை பாடினால் செலவம் சேரும், கனகதாரா தோத்திரம் பாடினால் மகாலட்சுமி அருள் கிட்டும், செளந்தர்ய லகரி பாடினால் அற்புதமான சக்திகளும் அநேக நன்மைகளும் கிடைக்கும், எனவே அனுதினமும் ஏதேனும் ஒரு தோத்திரப் பாாடல் அல்லது சுலோகங்களை கூறி பாடி எல்லா வல்ல இறையருள் உய்து நலமுடன் வாழ்வோம், திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://vpoompalani05.blogspot.in/ http://www.weebly.com/weebly/main.

அர்த்தமுள்ள இந்து கலாச்சார நம்பிக்கை


அர்த்தமுள்ள இந்து கலாச்சார நம்பிக்கை இந்துமத்தில் சில கலாச்சாரங்கள் ஆன்மீக ரீதியாக கடைப்பிடிக்கப் படுகின்றன, இவைகள் ஆன்மீக ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் மனித வாழ்க்கையில் எவ்வாறு இன்றைய சூழலில் எப்படி பயன்படுகிறது என்பதை ஆன்மீக சிந்தனையாளர்களின் கருத்துக்கள் சில; இந்து பண்டிகை காலங்களில் அர்த்தமுள்ள இந்து கலாச்சார நம்பிக்கை இந்துமத்தில் சில கலாச்சாரங்கள் ஆன்மீக ரீதியாக கடைப்பிடிக்கப் படுகின்றன, இவைகள் ஆன்மீக ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் மனித வாழ்க்கையில் எவ்வாறு இன்றைய சூழலில் எப்படி பயன்படுகிறது என்பதை ஆன்மீக சிந்தனையாளர்களின் கருத்துக்கள் சில; இந்து பண்டிகை காலங்களில் 1) விரதம் ( உண்ணா நோன்பு ) இருத்தல் ஆன்மீக ரீதியாக; இறைவனை நினைந்து விரதம் இருப்பதால் அன்று விரதம் முடிக்கும் வரை இறைவனையே அல்லது இறைவிையையே நினக்க வழிபட வழிசெய்கிறது, இதனால் பக்தி நெறி கூடுகிறது, நாம் செய்த பாவ கர்ம வினைகளுக்கு ஒருநாள் உண்ணா விரதம் இருந்து எனது பாவச் ெசயலைக் கழிக்கிறேன் என்று நமக்கு நாமே தண்டனை கொடுத்துக் கொள்கிறோம், அறிவு ரீதியாக; இன்றைய சூழலில் உண்ணா விரதம் உடலுக்கு மிக ஊக்கமளிக்கும் ெசயலாக உள்ளது, மனித உடல் என்ற இயந்திரத்திற்கு ஓய்வு என அளித்து உடல் உறுப்புகள் தேய்மானம் மற்றும் ஜீரண அஜீரண செயலுக்கு மிக உகந்ததாக அமைகிறது, 2) கோவில்களில் பிரதாட்சனம் செய்தல் இது மூன்று வகைப் படும் அவை . அங்க பிரதட்சனம், அடி பிரதட்சனம் , வலம் வரும் பிரதட்சனம், (கோவிலை பல முறை சுற்றுதல் 9 முறை, 108 முறை, கிரிவலம் என பல முறை ) ஆன்மீ ரீதியாக; கோவிலை வலம் வரும் போது நம் எ்ண்ண அலைகள் இறைவனைப் பற்றி சிந்தனைகள் பிரதட்சனம் செய்யும் ேபாது இருந்து கொண்ட இருப்பதால் கருவறையை சுற்றும் ேபாது நமது எண்ணங்கள் மற்றும் இறைவனைப்பற்றி பாடும் பசனைப் பாடல்கள் மற்றும் இறைவனைப்பற்றி சுலோகங்களால் இறையருள் நமக்கு கிட்டும் நிலை ஏற்படுகிறது, மேலும் ந்ம் உடலை நாமே வருத்தும் நிலை யினால் ந்ம் கர்மா பாவத்திற்கு பாவ மன்னிப்பு ேகாறும் விதமாகவும் அமைகிறது, அறிவு ரீதியாக; நம் உடலால் நடக்கும் போதும் வலம் வருவதால் இன்றைய சக்கரை நோயலிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சியான நடைப்பயிற்சி, மற்றும் அங்கப்பிரதட்சனம் செய்வதால் உடல் பூமியில் உருளப்படுவதால் இன்றைய நவீன சிகிச்சையான அக்குப்ஞ்சர் சிகிச்சைக்கும் பிசியேதரபி என்ற உடல் பயிற்சி சிகிச்சைக்கும் இதுவே காரணமாகிறது, தொடர்ச்சி; பிரதட்சனம் முறைகளை பார்த்தோம் , அடுத்ததாக கோவில் தெய்வங்களு்க்கு தெய்வங்களுக்கு தகுந்தாற் போல் நேர்த்திக்கடன் என்று சொல்லப்படுகின்ற சில சம்பிரதாயங்கள் முடிகாணிக்கை ; இந்த முடிகாணிக்கை சிறு குழந்தைகள் பிறந்த ஒரு வயது க்குள் தனது குலதெய்வக் ேகாவில்களில் முதலில் வளர்ந்த முடியை அத்தெய்வத்திற்கு காணிக்கையாக்கி காதுகுத்து என்ற சடங்குகள் இந்து மதத்திலுள்ள எல்லா சமுத்தார்களிடமு்ம் செய்யும் சடங்காகும், இதனை ஆன்மீக ரீதியாக கவனித்தால் நம் குலதெய்வத்திற்கு அக்குழந்தையினை அறிமுகப்படுத்தி இறைவா இக்குழந்தை இந்த பிரபஞ்சத்தில் உதித்த உயிர் இதனை தீய குணங்களிலிருந்து காப்பாற்றவும், நல்ல பண்புக்ள வளர இறைவனிடம் வேண்டும் நோக்கத்தில் செய்யும் சடங்காகும், இதனை பெரியவர்கள் செய்யும் போது எனக்கு இந்த முடியினால் உண்டான அழகை இழக்கிறேன், என்னுடைய தவறை மன்னித்து எனக்கு நல்ல அருள் வேண்டுகின்றனா், தற்காலத்தில் இளம் வயது பெண்கள் கூட இந்த காணிக்கையை ெசய்து தனது நேர்த்திக் கடன் என்ற தனக்குரிய தண்டனையாக செய்து பாவம் விமோசனம் பெறுகிறார்கள், அறிவார்ந்த ரீதியாக பார்த்தால் சில தாவரங்களில் பயிரின் வளர்ச்சிையைக் துரிதப்படுத்த அல்லது மிகைப்படுத்த பாதிக்கப் பட்ட தொந்தரவுகளிலிருந்து விடுபட முடிகாணிக்கை என்ற சம்பிரதாயத்தால் அறிவார்ந்த நன்ைமயாகவும் ஆகிறது, இதனால் முடி வளரவும், தானே உதிரும் முடி நிற்கவும் இது ஆக்க பூர்வமான ந்ன்மையாகிறது, பூக்குழி இறங்குதல் ( தீ மிதித்தல், அக்கினிதட்டு எடுத்தல்), காவடி எடுத்தல் இது ஆன்மீக ரீதியாக; அம்மன் தெய்வத்தை வேண்டி தான் செய்த பாவச் செயல்களை மன்னித்து பட்ட துயரங்கள் இந்த அனல் போன்று சாம்பலாகி எனது இன்னல்கள் யாவும் இந்த தீயினால் வெந்திட வேண்டுதல், இதற்காக சிலர் சில தினங்கள் அம்மனை ேவண்டி விரதங்கள் இருப்பதும், ஒவ்வொரு பொழுதிலும் அந்த இறை நாமத்தை நினைத்துக் ெகாண்டே இருக்க செய்கிறது, இந்த விரத நாட்களில் குடும்பத்தில் கூடா நோன்பும் உணவு கட்டுப்பாடும், அசைவ உணவுகள் தவிர்ப்பதும் கையாளப்பட்டு இறை அன்பு பெருக வாய்ப்பு தருகிறது, அறிவார்ந்த ரீதியாக இந்நாளில் விரதம் இருப்பதால் சில நல்ல ஒழுக்க நெறிகள் கடைபிடிக்க வாய்ப்பளிக்கிறது, ஆன்களாயின் மது அருந்துவது புகைபிடிப்பது போன்ற தீய பழக்கங்கள் இந் நாளில் நிறுத்தப்படுவதால் உடல் நலம் காக்கப்படுகிறது, அன்னதானம் அளித்தல், அம்மனுக்கு கூழ்வார்த்தல் இதனால் ஆன்மீக ரீதியாக கண்டால் இதன் மூலம் எளிய ஏழைகளுக்கு உணவளித்து இறை ஆத்மா புண்ணியம் ெபறுகிறது, அறிவார்த்த ரீதியாக கண்டால் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மூலம் பசிபிணி நீக்கப்பட்டும், எல்லோருக்கும் ஒரே உணவு, எல்லோரும் சமம் என்ற கொள்கை வலுப்படுகிறது, இதுவே சமபந்தி போசனமும் அடங்கும், இதுபோல இன்னும் பல சம்பிரதாயங்கள் ஆத்ம, ஆன்மீக ரீதியாக , அறிவார்ந்த ரீதியாகவும் நவநாகரீக இவ்வாழ்க்கையில் இன்றளவும் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது இன்னும் தொடரும் திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://vpoompalani05.blogspot.in/ http://www.weebly.com/weebly/main

புதன், 15 அக்டோபர், 2014

உன் உள் இருக்கும் மாபெரும் சக்தி


உன் உள் இருக்கும் மாபெரும் சக்தி "ஓம்" " அ " காரா " உ" காரா " ம" காரம் அடங்கியதே ஓம் என்ற ஓங்கார மந்திரம், மூன்று மூலமந்திர சக்திகள் உண்டாகி இந்த பிரவணத்திலிருந்து ஐம் பூதங்கள் தோன்றின. இந்த பஞ்ச பூத கூட்டுறவிலிருந்தே அண்ட பகிரண்ட சராசங்களும், நவகிரங்களும், கோடான கோடி நட்சத்திரங்களும் மற்ற சகலும் உண்டாகின.இந்த பிரபஞ்சத்தின் உட்பொருளே நம்முள் உறைகின்றது, நம்மை நாம் அறிந்து கொள்வதாகும், ஆன்மீக ஒளி தெளிவாகப்புலப்பட ஐம்புலங்களையும் அடக்கி மனதில் நிலவி அறிவு ஒருமுனைப்பட்டு இருக்கும் போதுதான் இறைவன் கிருபை கிடைக்கிறது. முகத்தில் கண் கொண்டு பார்க்கும் மூடர்காள் அகத்தில் கண் கொண்டு பார்ப்பதே ஆனந்தம் மகளுக்கு தாய் தன்மணாளனோடு ஆடிய சுகத்தை சொல் என்றால் சொல்லுமாறு எங்ஙனே? ---- திருமூலர் எனவே தன்னுள் உறையும் இறைவனை தன் சாதனையால் கண்டு அந்த பேரின்பத்தை அனுபவித்தால் சிற்றின்பம், மற்றும் புறஇன்பங்களை எல்லாம் துச்சமாக மதிக்க தோன்றும். கண் காது முதலியன மூலம் இன்பம் அனுபவிக்க ஆதாரமாக உள்ளது ஆன்மா, இந்த ஆன்மா இன்ப வடிவமானது, இறைவனைத்தியானிக்கும் போது ஏற்படும் இன்பம் ஆன்மாவினால் தான் உணரமுடியும். கணமேனு நின் காரணந்தன்மையே கருத்தில் உண்டும் மாதவர்க்கு ஆனந்தம் உதவினை --- தாயுமானவர் இறைவனை மனமுருகி பிராத்தனை செய்வதும், அவனின் நாமங்களை எப்போதும் தியானம் செய்தும் மனத்திற்கு சாந்தமும் அருளும் கிட்டும், ஒருவன் எவ்வளவுதான் மனத்தாலும், உடலாலும் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஆனந்தம் அடைகின்றான், பக்தியின் பேரின்ப நிலையே அஞுபூதி நிலை பக்தி என்ற சொல்லுக்கு சேவை என்று பெயர், அதுவே அமிர்த சொரூபமாகும், பக்தி மனத்தால் செலுத்தலாம், வாயினால் பாடலாம், செயலால் காண்பிக்கலாம். தெய்வீக நிலை பெற்ற மகான்கள் நமக்கு இறைவழிபாட்டை முறையாக வழிபாடு செய்ய வழிவகுத்துள்ளார்கள். அபூர் தெய்வ சுலோகங்களையும் பீஜ அட்சரங்களையும் பூசை செய்யும் நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளார்கள். அவ்வரிய பொக்கிசங்களை நாமும் ஓதி உணர்ந்தும், பரவசப்பட்டும், பக்தியின் பேரின்ப நிலையை அடைய வேண்டும். அப்படி சக்தி வாய்ந்த சுலோகங்களை தெய்வ சந்நதியிலோ, பூசை அறையிலோ மனமுருகி பிராத்தனை செய்தால், இறைவனுடைய அணுக்கிரகம் பெற முடியும் உள்ளத்தையும், உடலையும் பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்லும் நிலை ஏற்படுகின்றது. என்னில் யாரும் எமக்கு இனியாரில்லை என்னிலும் இனியான் ஒருவன் உளன் என்னுள்ளே உயிர்பாய புறம்போந்து புக்கு என்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே. --- திரு நாவுக்கரசர் ஆத்மா - சரீரம் - மனம் இம்மூன்றும் வாய்க்கும் போதுதான் உண்மையான பக்தி உண்டாகும். பாவம் செய்யாதிருக்கவும், புண்ணியம் செய்யவும், நமக்கு இறைவன் வழிபாட்டை தவிர வேறு ஒன்றும்சாதனம் இல்லை. இக்கலியுகத்தில் மனிதன் இருக்கு உளநிலையில் அவன் எளிதில் கடைபிடிக்கும் மார்க்கம் பக்தி மார்க்கம் , பக்தி என்பது அறிவு அல்ல, அது ஒரு தனி அனுபவம், இறை உணர்ச்சியால் திழைக்கலாமேயொழிய கூற இயலாது, திருமூலர் கூற்றின்படி மனவி தன் கணவனிடம் கண்ட இன்பத்தை தன் மகளிடம் இயலாதுபோல் இந்த இறை உணர்வும் அப்படித்தான் என்கிறார் திருமூலர். இறைவனுடைய திருவுருவை கோவிலில் கண்டு தரிசித்து வழிபட்டு இன்புற்றால் மட்டுமே போதாது, அவன் உருவத்தை தரிசித்து, உள்ளத்தே வைத்து வழிபட வேண்டும். அவற்றின் வழிமுறைகள் நான்காகும் என்று ஆகம வழிகள் கூறுகின்றன. அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன 1, இறைவனுடைய கோவிலை தரிசித்தலும் வலம் வந்து பூசை கண்டு இன்புறுதலும் ஆகும் 2, அவனுடைய பிரதிமையை நாமே முறையான உபச்சாரங்களுடன் பூசிப்பது 3, நம்மில் அவனை காண விழைதல் யோகமாகும். 4, மெய் என்றும், பொய் என்றும் தேறி தெளிதல் ஞானமாகும். புறத்தே செய்யும் வழிபாட்டோடு நின்றுவிட்டால் இலைகள் தழைத்து மரம் பூக்காமல் இருப்பது போன்றதாகும். அல்லது அரும்பாகி பிறகு பூவாகி உதிர்ந்து விடுதல் போன்றதாகும். மேலே காயாகி, கனிந்தால்தான் முழுபயன் உண்டாகும், இந்த நான்கு நிலையினை அரும்பு, மலர், காய், கனி என தாயுமானவர் கூறுகின்றார், விரும்பும் சரியை முதல் மெய்ஞானம் நான்கும் அரும்பும் மலர், காய், கனி போல அன்றோ பராபரமே, ---- என்பது திருவாக்கு சரியையானன் பிறப்பு ஒராயிரம் பிறப்பு. கிரியைாளனுக்கு பிறப்பு நூறாகும், முற்றுகின்ற கிரியா யோகிக்கு ஒரு பிறப்பு. உண்மையான சிவயோகிக்கு இப்பிறப்பில் முக்தி . எனவே இறைவனை காண பக்தியில் திழைக்க, உத்தம குணங்களால் இறைவனை அர்ச்சித்தல் வேண்டும்,. அன்பு கருணை, பக்தி, அருள், பேரின்பம், முக்தி என்ற நிலையினை அடையவேண்டும். தன்னைப் போல் பிறரையும் அன்பால் நோக்குதல் அன்பினால் பெருக்கெடுத்து உதவிபுரிதல் உதவிபுரிவதால் பக்தி செலுத்துதல் பக்தி செலுத்தினால் அருள் உண்டாகும் அருளினால் சித்து என்னும் புற இன்பம் புற இன்பத்தால் அக இன்பம் காணுதல் புறநீக்கி அக இன்பமே பெரிதென முடிவாகுதல் முடிவான இடமே முக்தி என்றும் சத்து, சித்து, ஆனந்தம், இந்த நிலை அடைவதே பேரின்ப நிலை ஆகும். திருசிற்றம்பலம் மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://vpoompalani05.blogspot.in/ http://www.weebly.com/weebly/main.

சனி, 11 அக்டோபர், 2014

தமிழ் வேதங்களில் தனிமனித ஒழுக்கம்


தமிழ் வேதங்களில் தனிமனித ஒழுக்கம் "கூறுமின் ஈசனைச் செய்மின் குற்றேவல் குளிர்மின் கண்கள் தேறுமின் சித்தம் தெளிமின் சிவனைச் செறுமின் செற்றம் ஆறுமின் வேட்கை அறுமின் அவலம் இவை நெறியா ஏறுமின் வானத்து இருமின் விருந்தாய் இமையவர்க்கே, --- பொன் வண்ணத்து அந்தாதி (தமிழ் வேதம் 11 ) தனிமனிதர்களின் தொகுப்பு அல்லது கூட்டம் தான் சமுதாயம் என்பது. வானுலகில் இன்புற்றிருப்பதற்கு உரிய வழி பொருளற்ற சடங்குகளும் சம்பிரதாயங்களும் இப்பாடலில் சொல்லப்படவில்லை என்பதை நாம் தெளிவாக கொள்ள வேண்டும் சேரமான் பெருமாள் நாயனார் உடலுடன் கயிலையை அடைந்தவர். அவர் சொல்வதைத்தான் நாம் கொள்ள வேண்டும். அமெரிக்கா சென்றவர் சொல்லும் வழியைத்தான் அமெரிக்கா செல்ல இருப்பவர் கேட்க வேண்டும்.சமயக் கொள்கைகளை தங்களின் சுயலாபத்திற்காக வளைத்துக் கொண்டவர்களின் சொற்களை கேட்டு ஏமாந்து போகிறவர்கள் அப்பாவிகள். வளர்ந்த நாடுகளைவிட தமிழர்கள் ஆதிகாலம் தொட்டே உயர்ந்த பண்பாட்டுடனும், தனி மனித ஒழுக்கத்தை இறைவழிபாட்டுடன் இணைத்துக் கூறினார்கள் வாழ்ந்தும் காட்டினார்கள். காரணம் இறைவழிபாட்டினை மனித வாழ்விலிருந்து பிரித்து விடமுடியாது, இறையுணர்வு இல்லையானால் மனிதன் மிருகமாக வாழநேரிடும் என்பதை நன்கு உணர்ந்தவர்கள் நமது சிவஞானியர்கள். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேரமான் பெருமான் நாயனார் தமிழகத்தில் மூவேந்தர்களில் சேரர் குடியில் தோன்றி சிவ வழிபாடு செய்து வந்தவர், இவருடைய சிவபூசையின் முடிவில் நடராசப் பெருமான் சிலம்பொலி கேட்கச் செய்தார். ஆழ்ந்த இறைபக்தியுடைய இப்பெருமானார் அருளியுள்ள இப்பாடலில் பொதிந்துள்ள தனி மனித ஒழுக்க கோட்பாடுகளைக்காண்போம். 1,கூறுமின் ஈசனை: முழுமதற் பொருளாய் விளங்கும் சிவபெருமானாரைத் துதியுங்கள் பிற்ப்பும்,இறப்பும் இல்லா பெருந்தெய்வம் ஆகும். மற்றவையெல்லாம் சிறுதெய்வங்கள் எனப்படும், சிறு தெய்வங்கள் யாவும் பிறக்கும் இறக்கும் வேதனைப்படும் மேல்வினையும் செய்யும், ஒரு நாட்டிற்கு பிரதம மந்திர் இருப்பது போல அகில உலகங்களுக்கு எல்லாம் ஒரே கடவுள் தான். இரண்டு இல்லை, அந்த பிறப்பு இறப்பு இல்லாதவர் அவரே சிவம் என்கிறார், சிறுதெய்வ வழிபாடு மக்களிடையே பரவுமானால் உயர்ந்த பண்பாடு போய்விடும், சிறுதெய்வ வழிபாட்டால் உயிர்பலி இடுதல் போன்ற பண்பாடற்ற தலைதூக்கும் அதனாலேயே ஆரம்பத்திலேயே பெருந்தெய்வ வழிபாட்டைக் கூறியுள்ளார். 2, செய்மின் குற்றேவல்: சிறு சிறு தொண்டுகளைச் செய்யச் சொல்கிறார். சிவாலயத்தை தூய்மை செய்தல், மலர் எடுத்தல் வலம் வருதல் போன்ற சிறுசிறு தொண்டுகள் செய்வதால் மனத்தில் அன்பு வளரும் தன்னலம் குறையும் ஆணவம் மறையும். 3, குளிர்மின் கண்கள்: இறைவருடைய திருஉருவத்தைக் கண்டு கண்கள் குளிர வேண்டும் இதனால் நம்மிடம் உள்ள மிருகப் பண்பு குறையும் மனித நேயம் பெருகும். 4,தேறுமின் சித்தம்: மனத்தை ஒரு நிலையில் நிறுத்துங்கள் என்பதை கவனிக்க வேண்டும் நாம். மனம் போகும் போக்கில் அலையவிடக் கூடாது, மனம் தான்மனிதனுடைய எல்லா செயல்களுக்கும் காரணம். அதை நம்கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்கிறார், 5, தெளிமின் சிவனை: முழுமுதற் பொருள் எது என்பதில் ஒரு தெளிவு வேண்டும், பிறப்பும்இறப்பும் இல்லாதவரும் காலத்தை கடந்து நிற்பவரும் சிவபெருமானார்ஒருவரே என்பதில் தெளிவு வேண்டும். " சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடுஒப்பார் இங்கு யாவரும் இல்லை -- திருமூலர் " அயனும் புடையும் எம் ஆதியை நோக்கில் இயலும் பெருந்தெய்வம் யாதும் ஒன்றில்லை - திருமூலர் இந்த தெளிவு இல்லாத பாமர மக்கள் சிறுதெய்வ வழிபாட்டில் சிக்கித் தவிப்பதை போலி வேடதாரிகளை நம்பி மோசம் போவதையும் இன்றை சூழ்நிலை. பெருந்தெய்வமான சிவபெருமானாரால் முடியாத ஒரு செயலை சிறுதெய்வங்கள் செய்து விட முடியாது என்னும் தெளிவு நமக்கு வேண்டும். 6, செறுமின் செற்றம்: பகைமை உணர்வை நீக்க வேண்டும். பகைமை உணர்வுதான் இன்றைய காலத்தில் எல்லா கொடுமைகளுக்கும் காரணம் என்பதை நாம் அறிவோம். மனித இனம் மாதவ நிலையை அடைவதற்கு பெரும் தடையாக இருப்பது பகைமை உணர்வுதான். கணவன் மனைவியிடையே பிரிவு உற்றார் உறவினரிடையே சண்டை, சமுதாயத்தில் சண்டை மாநிலங்களுக்கிடையே சண்டை, மதவாதிகளிடையே சண்டை நாடுகளுக்கிடையே கடும் போர் ஆகிய யாவற்றிக்கும் காரணம் பகைமை உணர்வுதான்.ஆக சாதி,மதம்,மொழி, இனம் நாடு ஆகியவற்றால் மனித இனம் வேறபட காரணம் பகைமை உணர்வே. 7, ஆறுமின் வேட்கை : ஆசையை அடக்குங்கள் என்கிறார் நாயனார் ஆசையுடையவன் விலங்கு அன்புடையவன் மனிதன் அருள் உடையவன் தேவன் உரியது அல்லாதவற்றை விரும்புவது தான்மட்டும நலமாக வாழ வேண்டும் என எண்ணுவது ஆசையாகும், ஆசை வளர வளர மனித மனம் மிருகத்தன்மை அடையும் ஆசை மிகும் பொழுது நல்லது தீயது என்பதே தெரியாமல் போய்விடும். "ஈசனோடாயினும் ஆசையை அறுமின் - திருமூலர் இவ்வுலக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இறைவழிபாடு கூடாது என்கிறார் திருமூலர் பிறரை கெடுத்து தான் வாழ நினைக்க கூடாது இதனால் சமுதாய சீரழிவு ஏற்படும். இத்தகைய ஆசையை ஒழிக்க வேண்டும். 8, அறுமின் அவலம்: துன்பத்திலிருந்து நீங்க வேண்டும், துன்பத்தில் முழ்கிவிடக் கூடாது. இன்பமும் துன்பமும் காட்டாற்று வெள்ளம் போல் விரைவில் நீங்கிவிடும். துன்பப்படுவதால் உடலில் நோய் பெருகும் வாழும் நாள் குறையும், இறைமை என்ற பேரின்ப வெள்ளத்திலிருந்து பிரிந்து வந்த ஒரு துளிதான் நாம். நமக்கு உள்ளும் புறமும் வள்ளலாய் இறைவர் விளங்குகிறார். விரைவில் நலம் பெறுவோம் என்று உறுதியாக நம்பினால் துன்பத்திலிருந்து விடுபடுவது எளிதே ஆகும். இதுபோன்ற கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு மட்டுமா பொருந்தும்? உலகில் உள்ள எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தும், இத்தகைய கருத்துக்கள் சாதி,சமயம்,இனம், மொழி நாடு ஆகியவற்றை கடந்தவையல்லவா? திருசிற்றம்பலம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://vpoompalani05.blogspot.in/

வியாழன், 9 அக்டோபர், 2014

குறைவிலா நிறைவே கோதிலா அமுதே!


குறைவிலா நிறைவே கோதிலா அமுதே! "இறைவன் இன்பவடிவானவன் அவனுடைய உண்மையான சத்து சித்து நிலைகளை அறிந்து இறைவனுடைன் பொருந்தியவர்கள் இன்பமயமாகவே மனம் பொருந்தி விடுவதால் துன்பமான உலகின் ஆசாபாசங்களை நீங்கிவர்களாகி விடுகிறார்கள் - மாணிக்க வாசகர் மனித பிறவி என்பது மிக முக்கியமானது பிறவி எடுத்து ஆரோக்கியமாக வாழ வேண்டும். மனிதன் வாழ காற்று, அவசியம் அதுமட்டுமல்லாது சகல ஜீவராசிகளுக்கும் தாவர ஜங்கங்களுக்கும் காற்று அவசியம். இந்த பிரபஞ்சமே பஞ்ச பூத சக்தியால் இயங்குகிறது, நீர், நெருப்பு, காற்று ஆகாயம், மண் என்ற விகிதப்படி ஒன்றை ஒன்று சார்ந்து தன்னைத்தானே இயக்கி கொண்டுள்ளது. நம் திரேகம் பஞ்ச பூத தத்துவ்ப்படி இயங்குகிறது. மனிதன் வாழ காற்று எனும் பிராணன் உயிர் மூச்சாக இயங்குகிறது. இது நம் திரேகத்தில் ஒரு விகிதச்சாரப்படி உள்ளேயும் வெளியேயும், ஒரே சீராக இயங்குகிறது. இந்த பிராணான காற்று இயங்காவிட்டால்உடல் எந்த இயக்கமும் செயல்படாது. அதே போல் நீர், காற்று அக்கினி ஆகாயம் மண் போன்ற பஞ்ச பூதங்களால் நம் இயக்கி கொண்டுள்ளது, இவை சரியான விகிதாச்சாரப்படி இயங்கி,இந்த உடலை முறையாக இயக்கி கொண்டுள்ளது, நாம் பிராண வாயுவை வெளியிடுகிறோம், தாவரங்கள் பிராணவாயுவை வெளயிட்டு கரிமல வாயுவை உள்வாங்குகிறது, இது போன்றே உலகில் பஞ்சபூத சக்திகள் சமநிலை பெறுகிறது, இதில் ஒன்று குறைபட்டாலும் உடலுக்கும் உலகுக்கும் ஊறுவிளைவிக்கும் , வியாதி பற்றி பாதிப்பு உண்டாகும், இந்த தத்துவத்தை அறிந்த முனிவர்களும் ரிசிகளும் நீண்ட காலம் ஆரோக்கியமும், உடல் பாதிப்பின்றி உடல் வளமுடன் வாழுந்து வந்துள்ளார்கள், அதற்கான நெறிகளையும் நமக்கு போதித்து வந்துள்ளார்கள், அவற்றினை நம் அறிந்து அந்நெறிகளை பின்பற்றி வாழவேண்டும், மனித பிறவி மிகவும் அரியது, அறிவின தாயகிய ஒளவை பிராட்டியார் " அரிது, அரிது மானிடர் ஆதல் அரிது மானிடராயினும் கூன்குருடு செவிடு பேடு நீக்கி பிறத்தல் அரிது பேடு நிக்கி பிறந்தகாலையும் ஞானமும் கல்வியும நயத்தல் அரிது ஞானமும் கல்வியும நயந்த காலையும் தானமும் தவமும் தான் செயல் அரிது தானமும் தவமும் தான் செய்வார்ஆயின் வானவர் நாடு வழி திறந்திடுமே, என்கிறார் மேற்கண்ட வாறு மானிடராய் பிறப்பதன்றி எவ்வித குறைவின்றி பிறப்பது அரிது, அது மட்டுமல்லாது பிறந்த மானிட பிறவிக்கு ஞானமும் கல்வியும் சிறப்புறறிக்க வேண்டும், அப்போததான் மனிதப் பிறவிக்கு சிறப்பு அதிலும் பிறவி எடுத்ததன் சிறப்பு தானமும் தவமுடையோனாய் பிறத்தல் மிகச் சிறப்பாகும், இதனையே வள்ளுவரும் தானம் தவமும் தக்கார்க்கு ஏம முடைத்து என்கிறார் தானம் செய்யும் மனமுடையோனாயும் இறையருள் பெறவும் தன்னையறிய தவத்தினை உடையவனாய் இருப்பின் அவனுக்கு தேவர் உலகம் அதாவது வீடுபேறு வரவேற்க காத்திருக்கிறது, எனவே இந்த பிரபஞ்சத்தில் பிராணனாகிய உயிர் மூச்சை தன் சாதனையால் வசப்படுத்தி தன்னை அறியும் முயற்சியில் நாம் முயல வேண்டும், யோக சாஸ்திரத்தில் தெய்வீக குருவாகிய பதஞ்சலி முனிவர் திருமூலர் அகத்தியர் போகர் போன்ற சித்தர்கள் நமக்கு அறிய பொக்கிசங்களை வாரி வழங்கி சென்றுள்ளார்கள் இப்படி யோக தத்துவங்களையும், தெய்வீக சாதங்களையும் அறிய வேறு எந்த மதத்தினரும் இவ்வளவு விளக்கமாக போதித்ததில்லை. தற்காலத்திலும், யோக சாஸ்திரங்களை பற்றி எழுதியுள்ள ஆசிரிய பெருமக்களும் ஆங்காங்கே மேலெழுந்தவாறியாக எழுதியுள்ளார்கள். சரியை, கிரயை, யோகம், ஞானம் என்ற தத்துவப்படி அனுபவித்து எழுதியுள்ளார்கள், பிறவி எடுத்ததன் பயனை அறிய வேண்டும். இதற்கு வலுவான குரு அருளையும் தத்துவங்களையும் அவர்களிடம் பழகும் முறைகளையும் அவர்களிடம் இருந்து கற்று தேறவேண்டும், அஸ்டாங்க யோகத்தின் தத்துவஙகளையுமம்அவற்றின் வழி சாதனைகையுயம் அபூர்வ சக்திகளையும் பயன் பெற வேண்டும், இறையருள் பெற்ற சித்தர்கள் அவர்கள் பெற்ற அபூர்வ சித்திகளும் அவர்களுடைய உபதேசங்களையும் தங்கள் தத்துவங்களாக கூறியுள்ளார்கள், இந்த பிறப்பெடுத்த மனிதன் தன்னை அறிதலும் தன்னுள் தெய்வீக சகத்தியை உணர்ந்து ஒரு மாபெரும் சாதனை படைத்திட விளங்குவதே பிறப்பின் சாதனையாகும், திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மீக தேடலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://vpoompalani05.blogspot.in/ http://tamilnanbargal.com/node/58972

புதன், 8 அக்டோபர், 2014

திருவைந்தெழுத்து மந்திர பெருமை


திருவைந்தெழுத்து மந்திர பெருமை பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப் பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று பசியினால் மீதூரப் பட்டே யீட்டிப் பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார் வசியினா லகப்பட்டு வீழா முன்னம் வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக் கசிவினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. பொழிப்புரை : செந்நீர் வெண்ணீர் நிணம் முதலியவற்றின் கசிவோடு இணைக்கப்பட்டுப் புழுக்களை உள்ளே வைத்துத் தோலால் மூடப்பட்ட இழிந்த இந்தப் புலால் மயமான உடம்பு நிலையாக இருக்கும் என்று உறுதியாக எண்ணிப் பசிப் பிணியையும் பொறுத்துக் கொண்டு பொருளைச் சம்பாதித்து, அப்பொருளால் ஏழைகள் பலருக்கும் உதவுதலைவிடுத்து, பவளம்போன்ற வாயினை உடைய பெண்களிடம் வசப்பட்டு அழிவதன் முன்னம் தேவாதி தேவனுடைய திருநாமமாகிய திருவைந்தெழுத்தைச் சொல்லி உருக்கத்தோடு தொழும் அடியவருடைய நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம். திருதிமையால் ஐவரையுங் காவ லேவித் திகையாதே சிவாயநம வென்னுஞ் சிந்தைச் சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக் கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப் பரிதிதனைப் பற்பறித்த பாவ நாசா பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங் கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. பொழிப்புரை : மன உறுதியால் ஐம்பொறிகளையும் காவலில் வைத்து மனம் கலங்காமல், சூக்கும ஐந்தெழுத்தாகிய மானதமாகக் கணிக்கப்படும் மந்திரத்தைத் தியானித்தலால் மயக்கத்தைப் போக்கித் துன்பமாகிய வெள்ளம் நிறைந்த வாழ்க்கையாகிய கடலைக் கடந்து, முத்திநிலையாகிய கரைக்கு ஏறும் எண்ணமே மிக்கு, `சூரியன் ஒருவனுடைய பற்களை நீக்கிய பாவநாசனே! மேம்பட்ட ஒளியே! என்று துதித்து, நாள்தோறும் விரும்பி மிகத்தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

வியாழன், 2 அக்டோபர், 2014

விஜயதசமி நல்வாழ்த்துக்கள்


முகநூல் அன்பர்களுக்கு இன்றைய விஜயதசமி நல்வாழ்த்துக்கள் தங்களின் அன்றாட பணிகள் யாவும் வெற்றியடைய எங்களது வாழ்த்துக்கள் இன்றைய விஜயதசமி நன்னாளில் சில அர்த்தமுள்ள நம்பிக்கை சம்பிரதாயங்கள் இன்றைய நன்னாளில் மூன்று சக்திகளின் நாமங்களினால் சில சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லா இந்துக்களாலும் கொண்டாடப்படுகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக சரஸ்வதியின் நிமித்தமாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இன்னாளில் பள்ளி செல்லும் வயதுடைய குழந்ைதகளையும் சிறு குழந்தைகளுக்கும் தானியத்தில் ஓம்என்ற மந்திரம் எழுதி எழுதிக்கற்றுக் கொடுக் கிறார்கள், இளையர்கள் யாவரும் உபகல்வியான வற்றை தேர்வு செய்து தொழில் நட்பங்கள் பயில அரங்கேற்றலாம். மற்றும் பயிற்சி வகுப்பிலும் கலந்த கொள்ளலாம். லட்சமியின் நிமித்தமாக; வியாபார புதுக்கணக்குகள் ஆரம்பித்தல் , புதிய தொழிகள் ஆரம்பம் செய்ய உகந்த நாள். புதிய பணிகளில் சேர்வோர்களும் இந்நாளில் சேர்ந்து செல்வ வளத்தை பெருக்கலாம், மூன்றாவதாக சக்தியின் நிமித்தமாக வீரம் செறிந்த செயல்கள் தற்காப்பு பயிற்சிகள் பாதுகாப்பு பணிகள் அரங்கேற்றலாம், முன்பு அரச பரம்பரையில் உள்ள இளைஞர்களை சிலம்பாட்டம் வாள்பயிற்சி இன்னாளில் தான் பயிற்சி தொடங்கி நாட்டை காக்க போர்வீரர்களை தேர்வு செய்துள்ளனர், இவ்வாறு மூன்று சக்திகளின் பயனாக நன்னாளில் எல்லா வெற்றிகளையும் பெற்று சிறப்புடன்வாழ வாத்துகிறோம்