சனி, 20 ஜனவரி, 2024

சைவ சித்தாந்த முத்துக்கள்

 


சைவ சித்தாந்த முத்துக்கள்

                             ஆன்மாவாகிய உயிர் வீடு பேறு உய்யும் முறை
  ஆன்மாவாகிய உயிர் இறைவனின் திருவடி பேறு அடைய  சரியை,கிரியை, யோகம் என்ற தவம் செய்து ஞான அறிவு தெளிிந்து, இச்சை என்னும் பக்தியால் அன்பு செய்தும்,செயல் என்னும் தொண்டினால் பணிந்து ஏத்தியும வழிபடுதல் வேண்டும் பணிதலால் பாசம் நீங்கி, பரவுவதால்  வீடுபேறு கிட்டும். கீழ்கண்ட ஐந்து வழிகளால் வீடு பேறு அடைய முடியும் என்கிறது மெய்கண்டாரின் சிவஞானபோதம்
 1.பிறவி துன்பத்தை உயிர்கள் உணர்தல். பல பிணிகளை உடைய உடலில் உள்ள உயிர் அதிலிருநது கொண்டு, மிகச் சிறிதாக உள்ள இன்பத்தை நுகர விரும்புகிறது. இதனை சம்பந்தர் தன் பாடல் வாயிலாக 
  செடி கொள் நோய் ஆக்கைஆம்
  பாம்பின்வாய் / தேரை / வாய் சிறு பறவை
  கடிகொள் பூந்தேன் சுவைத்து 
 இன்புறல் ஆம்  என்று கருதினாயே  "  என்கிறார் 
   2, மல பரிபாகம்
   உயிர்கள் பிறவியில் இருந்து நீங்க மலபரிபாகம் பெற வேண்டும், மல பரிபாகம் என்பது மலத்தின் ஆற்றல் தேய்தல் ஆகும். அதாவது ஆணவமலத்தின் காரியம் ஆகிய மோகம் என்று கூறப்படும் கெட்ட குணங்கள் ஆன்ம அறிவை விட்டு நீங்குதல் ஆகும்
  ஆன்மா வீபரீத உணர்வு / பொய்யை உண்மை என்றும், உண்மையை பொய் என்றும் திரியுணர்வை உண்மை என்றும் எண்ணிக்கொண்டும் இருப்பது. ஆக ஆணவம்(மலம் ) பரிபாகம் அடையாத போது பிறவியை துன்பம் என அறியாது அதில்உழலும். மலபரிபாகம் உயிரில் படிப்படியாக நிகழும்  அறிவு வளரும் முன்பு அறியாத துன்பத்தை அறியும் பிறவியிலிருந்துநீங்க விரும்பும்.
  3, சக்தி நிபாதம்
 சக்திநிபாதம் என்பது  திருவருட் சக்தி பதிதல் ஆகும். அதாவது சிவபெருமான் திருவடியை அடையவேண்டும் என்னும் நாட்டத்தால் ஆன்ம அறிவில் சிவசக்தி பதிதல்.
   சக்தி நிபாதம் என்னும் சொல்லுக்கு பொருள் சக்தியினது வீழ்ச்சி என்பதாகும். அதாவது ஒரு சபையில் ஒரு கல் வந்து வீழ்ந்தால்அந்த கல் அங்குள்ளவர்களை அந்த சபையிலிருந்து அங்குள்ளவர்களை அஞ்சி ஓட செய்தல் போல , ஆன்மாவிற்கு திருவடியை அடையவேண்டும் என்னும் சக்தி நிபாதம் நிகழ்ந்தால் அந்த சக்தி நிபாதம் அந்த ஆன்மாவை உலகப் பொருளிலிருந்து அஞ்சி ஓடி சற்குருவை தேடும்படி செய்யும்
  திரோதன சக்தியால் மலங்களை கூட்டி உயிர்களை பிறவித்துன்பத்தில் உழல்வித்து உயிர் நோயால் உள்ள ஆணவ மலம் வலிவிழந்து நீங்கும்நிலைமை ஏற்படும் போது திரோதன சக்தி அறக்குணமாக மாறும் அதுவே அருள் சக்தியாகி சக்தி நிபாதம் ஆகும். 
  4, இருவினை ஒப்பு 
ஒரு ஆன்மாவிற்கு சக்தி நிபாதம் ஏற்பட்டுவிட்டால் இருவினை ஒப்பு கிடைக்கும்
 இருவினை ஒப்பு என்பது நல்வினையின் பயனாக இன்பம்வரும் போது அதனை விரும்புதலும் தீவினையின் பயனாக துன்பம் வருங்கால்அதனை வெறுத்தலும், செய்யாமல் உணர்ச்சி வேறுபடாமல் அவ்விரண்டையும் ஒன்றுபோல நினைத்து பற்றின்றி நிற்கும் மனப்பான்மையே இருவினை ஒப்பு என்பது, ஓடும் செம்பொன்னும் ஒக்க வே நோக்குவர் என்கிறது பெரியபுராணம், இவ்வினை ஒப்பு முற்ற நிகழ்ந்த போதே இறைவன் குருவாய் வந்து ஞானத்தை அருள்வான். 
 5- பக்குவம்
   இருவினை ஒப்பு, மலபரிபாகம், சக்தி நிபாதம் இம்மூன்றும் ஒருங்கே நிகழும் நிலையில் பக்குவம் நிகழும், இதனைதான் ஆன்மா பக்குவம் அடையும் நிலை என்றும் பக்குவப்பட்ட ஆன்மா முக்தி நிலைக்கு தயாராகும் என்பர் அருளாளர்கள்
 6, உய்யும் நெறி °
   மந்த தரத்தி்ல் இறைவன் உயிருக்கு நிகழ்விப்பது உய்யும் நெறி,
 இதுவரை மறைப்பு சக்தியை (திரயோதன சக்தி) செலுத்திய இறைவர் உய்யும் பொருளாகிய அருள் சக்தியை செலுத்தி உய்வுக்குரிய நெறியில் செலுத்துவான் இறைவன்.
  சரயை, கிரியை, யோகம் ஆன தவ புண்ணியமாகிய சிவபுண்ணியம் தீட்சையால் தலைவர் சிவனார் என்னும் குருநாதர் மூலம் தீட்சை பெற்று சரியை, கிரியை, யோகங்களை செய்தல் 
 யோக நெறியில் அகபூசை செய்தல் 
 ஆக, உயிரில் நிகழும் பக்குவத்தை உயிருக்கு உயிராய் உள்ள இறைவன் அறிந்து அவரே ஞானாசிரியராக எழுந்தருளி ஞானத்தை வழங்குவார். இதுவே உயிர் வீடுபேறு உய்ய உள்ள வழிகள் 
திருச்சிற்றம்பலம்

வியாழன், 18 ஜனவரி, 2024

சைவ சித்தாந்தம் கூறும் சிறு விளக்கம்


 சைவ சித்தாந்தம் கூறும் சிறு விளக்கம்

1. உடலுக்கு வேறாக உயிர் என ஒரு பொருள் உண்டு.

2. அந்த உயிக்கு உள்ளாக இறைவன்  என்னும் மற்றொரு பொருள் உண்டு.

3. உயிர் பொருள்,உளளிருக்கும் இறைவன் உணர்த்துதல் வழியாகத்தான் தனது உடற் கருவிகளை இயக்கிக் கொண்டு இவ்வுலகில் வாழ்கிறது.

4. உயிரினை உலகியல் வாழ்வுக்கு உடந்தையாக ஆணவம், கன்மம், மாயை என்ற மும் மலங்கள் உள்ளன.

5. திருவருளால் இவற்றை ( மும் மலங்களை )சார்ந்து உயிர் வாழும் கட்டம் அவ்வளவும் பந்த நிலை, அல்லது பெத்த நிலை 

6.திருவருளால் இவற்றின் ெதாடர்பு நீங்கிச் சூட்சும உணர்வாகிய ஞான உணர்வினால் கடவுளை அடைந்து அனுபவிக்கும் நிலை மோட்ச நிலை (அல்லது ) சுந்த நிலை

7. இந்த சுத்த நிலை பேறு ஒவ்வாெரு உயிர்க்கும் உரியது. ஆனால் அதன் அதன் பக்குவ காலத்தில் மட்டும் அதற்தற்கு வாய்ப்பது

8. இவ்வகையில் சம்பந்தப்படும் பொருட்கள் மூன்று , அவை பதி,பசு, பாசம்

9. உண்மை அறிவியற் கோட்பாடுகளுக்கு முரண்படாத வகையில் இம் முப்பொருள் இயல்புகளை உரிய முறையில் கற்று கேட்டுத் தெரிபவர்கள் மெய்ஞானம் பெறுவர். அவர்களே மேல் கதிக்கும் வீடு பேற்றுக்கு உரியவர்.

10.வீடு பேறு என்பது உயிர் தன் சீவத் தன்னை கழிந்து, சிவத்தோடு ஏகமாய்நின்று அநுபவிக்கும் ஆராத ஓரு பேரின்ப நிலை.

திருச்சிற்றம்பலம்

சனி, 13 ஜனவரி, 2024

ஆன்மாவும் குருவும்

 


ஆன்மாவும் குருவும்

"சாதித்த தெல்லாம் தவமேனும்சற்குருவைப்

 பேதித்தால் எல்லாம் பிழையாகும்.   சித்தாந்த சிகாமணி (பண்டார சாஸ்திரம்)

  ஒருவன்பொறிகளை தன் வசப்படுத்திச் சாதித்தன எல்லாம்தவமாகவே இருப்பினும் உபதேசம் அருளும்ஞானாசிரியனை வேறாக கருதி முரண்பட்டால் அத்தவம் அனைத்தும் பிழைபடும். அரிய தவங்களை ஆன்மா சாதித்தாலும் தானாகவே சுதந்திரமாக சாதிக்கவில்லை,சிவபெருமான் தோன்றாத் துணையாக விளங்கித் தவநெறியினை அறிவித்து அந்நெறியில் ஆன்மாவைச் செலுத்துவான். அவன் அருளால் ஆன்மா தவத்தை படிமுறையில் இயற்றி முற்றுவிக்கிறது.இவ்வாறு தோன்றாத்துணையாக இருந்து ஆன்மா தவநெறியை முற்றுவிக்க அருள்செய்த முதல்வனே சற்குருவாக எழுந்தருளி ஞானத்தை உணர்த்துவான்,எனவே இந்நிலையில் மாணாக்கன் சற்குருவோடு முரண்பட்டு எதிர்த்தால் அது சிவபிரானையே எதிர்ப்பதாகும். யாரைத் தோன்றாத்துணையாக கொண்டு தவத்தை இயற்றினானோஅந்த முதல்வனையே எதிர்ப்பதால் செய்நன்றி கொன்ற குற்றம் பொருந்தி இயற்றிய தவம் அனைத்தும் பிழைபட்டு போகும். எனவே " சாதித்தது எல்லாம்தவமேனும் சற்குருவைப் பேதித்தால் எல்லாம் பிழையாகும்" எனப்படுகிறது

 சற்குருவை எதிர்த்தால் சிவபிரானை எதிர்த்தலே ஆகும் எனும் உண்மை இனிது விளங்கும் பொருட்டு சிவநிந்தை செய்த தக்கன் வரலாறு சான்றாக உள்ளதை அறியலாம்.

திருச்சிற்றம்பலம்

நன்றி பண்டார சாஸ்திரம் சித்தாந்த சிகாமணி பாடல் 1






வியாழன், 11 ஜனவரி, 2024

தலைவராகக் கொண்ட அமைப்பு இன்று 11.1.24 பதவி யேற்பு நிகழ்வு







 சுந்தரபாண்டியம் சாலியர் சமூக த்தின் புதிய தலைவராக தெற்கு கீழத்தெருவின் முறைமையின்படி திரு. சிவ.வை. பூமாலையை தலைவராகக் கொண்ட அமைப்பு இன்று 11.1.24 பதவி யேற்பு நிகழ்வு