புதன், 19 பிப்ரவரி, 2014

திருஐந்தெழுத்தின் ஆற்றல்


திருஐந்தெழுத்தின் ஆற்றல் திருஐந்தெழுத்தின் ஆற்றல் " உறவாவார் உருத்ததிரபல் கணத்தி னோர்கள் உடுப்பன கோவணத்ெதாடு கீள்உளவாம் அன்றே செறுவாருஞ் செறமாட்டார் தீமை தானும் நன்மையாய்ச் சிறப்பதே பிறப்பிற் செல்லோம் நறவார்பொன் னிதழிநறுந் தாரோன் சீரார் நமச்சிவாயம் சொல்ல வல்லோம் நாவால் சுறவாருங் கொடியானைப் பொடியாக் கண்ட சுடர்நயன்ச சோதியையே தொடர்வுற் றோமே. நம்சிவாய மந்திரத்தை சொல்வதால் 1) மீன் கொடியுடைய மன்மதனை நெற்றிக்கண்ணால் பொடியாக்கி சோதி வடிவினராம் சிவபொருமானாருடைய அருள் கிடைக்கும் 2) சிவனருட் செல்வர்களின் நட்பு கிடைக்கும் 3) நம் மீது பகைமை கொள்பவரும் நண்பர்கள் ஆவார்கள் 4) நமக்கு வரவேண்டிய தீமையும் நன்மையாகவே முடியும். ஐந்தெழுத்தினை நாளும் தொடர்ந்து சொல்லி வந்தால் அறிவு வளரும், செல்வம் பெருகும், சான்றோர் நட்பு கிடைக்கும் பாவங்கள் தொலையும், தீமையும் நன்மையாக மாறும் ஓம் நமச்சிவாயம் நன்றி ; தமிழ் வேதம்

சித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி முறை .. ! நிச்சயம் உங்களுக்கு சித்த தரிசனம் பெற வைக்கும்,ஒரு எளிய பயிற்சி முறை .. ! மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் – சுமார் நாற்பது ஆண்டு காலம் ஆன்மீக ஆராய்ச்சி செஞ்சு , ஒரு சில முறைகளை செஞ்சு பார்க்க சொல்றார். அது சம்பந்தமா , நாம நிறைய பகிர்ந்துக்கப் போறோம்.. அதுலே , ஒரு விஷயம் இன்னைக்கு முக்கியமா… ! சித்தர்களை நாம எல்லோருமே நம்புறோம்.. சில விஷயங்கள் நாம் கேளிவிப்பட்டவரையில் மிகைப் படுத்துதல் போல தோன்றினாலும், அவங்க இருந்தாங்க.. இன்னும் பலப்பல வகையில், தன்னை நம்பியவர்களுக்கு சித்தர்கள் உதவி செய்யறாங்க. இதை நாமே எல்லோருமே ஓரளவுக்கு ஒப்புக்கொள்கிறோம். அவங்கள்ளே யாரையாவது நமக்கு தொடர்பு ஏற்படுத்திக்கிட்டா, நமக்கு கர்ம வினைகள் சுத்தமா அழிஞ்சிடுமே.. அவங்களோட வழிகாட்டுதல் பெற , அவங்களை சந்திச்சு தொடர்பு ஏற்படுத்திகிட ஒரு அற்புதமான முறையை சொல்லியிருக்கிறார். பதினெட்டு சித்தர்கள்ளே ஒருவர், நம் முன்னோர்களில் ஒருவராக இருக்க கூடும். இயல்பாக , உங்களுக்கு யார் மேல் ஈடுபாடு வருகிறது என்று பாருங்கள். இவர்தான் நீங்கள் சந்திக்கவிருக்கிற சித்தர். தியானத்தில் ஒரு நிலையை அடைந்த பிறகு, உங்களுக்கு இது தெரிய வரும். ஞானக் கோவை என்னும் சித்தர்கள் பாடலைப் படித்தால், உங்களுக்கு யாரேனும் ஒரு சித்தர் மேல் ஈடுபாடு வரும். அவர்தான் , உங்கள் ஜென்ம விமோச்சகர் . பதினெட்டு வயதுக்கு மேல் ஆனவர்கள் மட்டும், இந்த பயிற்சியை செய்யவும். ஒரு திருவிளக்கை எட்டடி தூரத்தில் வைக்க வேண்டும். தாமரை நூல் திரியிட்டு , பசு நெய் ஊற்றி விளக்கேற்றுங்கள். ஒரு சிறிய காசி செம்பில், சுத்தமான தண்ணீர் எடுத்து விளக்கு முன் வைக்கவும். ஆசனப் பலகை அல்லது , தரையில் – மஞ்சள் துணி விரிப்பு விரித்து , விளக்கு ஒளி எட்டு அடி தூரத்தில் – உங்கள் புருவ மத்திக்கு நேர் கோட்டில் இருக்கும்படி, அமர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் சந்திக்க விரும்பும் சித்தர் பெயரை , மனதுக்குள் நினைத்துக் கொள்ளுங்கள். பின்பு, ஓம் சிங் ரங் அங் சிங் என்ற மந்திரத்தை திருவிளக்கைப் பார்த்தபடி , மனதுக்குள் ஜெபித்து வாருங்கள். இந்த மந்திரம் தான் , விண்வெளியில் இருக்கும் சித்தரை , உங்கள் பக்கம் ஈர்க்க தேவையான அலைவரிசை ட்யூனர். நீங்கள் ஆரம்பிக்கும் தினம், அமாவாசை தினமாக இருக்கட்டும். தினமும் இடைவிடாமல் – தொண்ணூறு நாட்களுக்கு ஜெபிக்கவேண்டும். நீங்கள் பயிற்சி மேற்கொள்ளவேண்டிய நேரம் – இரவு எட்டிலிருந்து , ஒன்பது மணி வரை. இந்த ஒரு மணி நேரத்தில் உங்களால் எவ்வளவு ஜெபிக்க முடியுமோ, ஜெபிக்கவும். எண்ணிக்கை முக்கியமில்லை. ஜெபம் முடிந்த பிறகு, இரவு உணவாக படையல் செய்த பழங்களை உண்டு , பின் காசி செம்பிலுள்ள நீரை அருந்தவும். இரவு உணவாக பால் சாதம் சாப்பிடலாம். பயிற்சி மேற்கொள்ளும் மொத்த நாட்களில் – உப்பு ,புளி , காரம் குறைத்துக் கொள்வது நல்லது. அசைவ உணவு, புகை, மது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். இதனால் , உங்களுக்குமனபலம் கூடும். கண்டிப்பாக , தொண்ணூறு நாட்களுக்குள் உங்களுக்கு சித்தர் தரிசனம் கிட்டும். எதையோ, எங்கெங்கோ தேடி – முயற்சிகள் வீணடிப்பதைவிட, நேரடியாக சித்தரையே தரிசனம் செய்து விடுதல் நலம் இல்லையா…? ஒரு சாதாரண செடி வளர்வதே – அந்த இடத்தின், சூழல் , மண் வளம் என்று வேறுபடும்போது , நம் அனுபவும் இந்த பயிற்சியில் ஒருவருக்கொருவர் வேறுபடலாம். நம் உடல் அமைப்பு, கிரக அமைப்பு எல்லாம் நமக்கு ஒத்துழைக்க வேண்டும் இந்த பயிற்சிக்கு. விடா முயற்சியுடன், முயன்றால் , ஒரு அளப்பரிய தெய்வீக அனுபவம் கிட்டும்… எதெதையோ பேசிக்கொண்டு , விதண்டாவாதம் செய்வதைவிட – நாமே ஒரு சாதனை செய்ய முயன்று பார்ப்பதில் அர்த்தமுள்ளது.. நம்பிக்கையுடன் செயல்படுங்கள்….! மிக பிரமாதமான அனுபவம் உங்களுக்கு காத்திருக்கிறது..! பயிற்சி நாட்களில் ஏற்படும் அனுபவங்களை மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ளுங்கள்… Read more: http://www.livingextra.com/

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

ஆசை / கோவணத்திற்கு ஆசைப்பட்டு குடும்பம் வந்தது/ ஆன்மீகம் விலகியது


ஆசை / கோவணத்திற்கு ஆசைப்பட்டு குடும்பம் வந்தது/ ஆன்மீகம் விலகியது ஒரு ஊரில் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அன்றாடம் காலையில் எழுந்து குளித்து, திருவெண்ணீரு அணிந்து, பூக்கள் பறித்து மாலை தொடுத்து சிவாலயத்திற்கு சென்று சிவபூசை தவறாது செய்து பின் நண்பகல் 12 மணிக்கு நாலு வீடுகளில் யாசித்து கிடைத்த உணவை உண்டு திருப்தியுடன் வாழ்ந்து வந்தார். மாைலயில் தேவாரப்பாடல்கள் பாடி சிவபூைச செய்து வழிபாடு செய்து வந்தார். இரவு 8,00 மணிக்கு வீடுகளில் மறுபடியும் யாசித்து உண்பார்.இதனால் இவர் மேல் அந்த ஊர்மக்களுக்கு சிறந்த துறவியாகவே காணப்பட்டார். அவ்வேைளயில் அந்த ஊரில் உள்ள மடாலயத்திலுள்ள மடாதிபதி இயற்கை எய்தினார். இந்த துறவியை மடாதிபதி ஆக்கினார்கள் அந்த ஊர் மக்கள். ஒருநாள் இவருைடய கோவணம் எலியால் கடிக்கப்பெற்று சேதம் அைடந்து விட்டது. இதற்காக ஒரு பூனையை கொண்டு வந்து வளர்த்து எலியிடமிருந்து கோவணத்தின் சேதாரம் காப்பாற்றி வந்தார். பூனையை வளர்க்க அதற்கு பால் வேண்டும் என்பதற்காக ஒரு பசு மாட்டை வாங்கி வந்தார். அப்பசுமாட்டை பராமரிக்க ஒரு பெண்ைண வேலைக்கு வைத்தார். காலம் மாற்றங்களை தந்தது. வேலைக்கு வைத்த அம்மையாரை மணந்து கொண்டார் துறவி, தற்போது துறவி குடும்பஸ்தாராக மாறினார். குடும்பம் வந்த பிறகு பூத்தொண்டும் சிவாலய வழிபாடும் இல்லாமல் போய்விட்டது. இரண்டு பிள்ளைகள் ஆயிற்று. வாழ்க்கைக்கே நேரத்தை செலவிட வேண்டியதாயிற்று. இறைமையை பற்றி சிந்திக்கவே நேரமில்லாது போயிற்று. இதன் உட்கருத்து; ஒரு சிறிய பற்றினால் ஏற்பட்ட விளைவு ஆக்கைக்கே இரைதேடி அலமந்து காக்கைக்கு இரையாகிக் கழிய வேண்டியதாயிற்று ஒரு துறவிக்கு, எனவே பற்றற்ற நிலையே ஆன்மிகத்திற்கு வழிகாட்டி நன்றி ; தமிழ் வேதம்

திங்கள், 17 பிப்ரவரி, 2014

தமிழ் வேதங்கள் காட்டும் பக்தி / சிவவழிபாடு


தமிழ் வேதங்கள் காட்டும் பக்தி / சிவவழிபாடு இறைவர் நாம் தெரிந்தும் தெரியாமலும் முற்பிறவிகளில் செய்த தீவினைகளை நமக்கே ஊட்டுகிறார் இதுவும் நாம் திருந்த வேண்டும் என்னும் அளப்பருங்கருனையால்தான் இதை செய்கிறார் இறைவர். நாம் செய்த வினையால் நமக்கு துன்பங்கள் வருகின்றன. அப்படி வரும் பொழுது பலர் கடவுளை நிந்திக்கவும் செய்கிறார்கள் . சிவ வழிபாட்டிலிருந்து விலகிவிடுகிறார்கள் இப்படி இல்லாமல் அடிக்கும் தாயின் காலையே பற்றிக் கொள்ளும் குழந்தையைப் போல மேலும் மேலும் சிவபெருமானாரையே பற்ற வேண்டும் என்கிறார் காரைக்கால் அம்மையார் " இடர்களையா ரேனும் எமக்கு இரங்காரேனும் படரும் நெறிபணிணா ரேனும் ... சுடர் உருவில் என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்கு அன்பறாது என்நெஞ் சவர்க்கு .... அற்புதத் திரு அந்தாதி (எமக்கு வரக்கூடிய துன்பங்களை போக்கவில்லை என்றாலும் நற்கதி அடையும் வழியை அருளவில்லை என்றாலும், ஒளிவடிவினரான சிவபெருமானாைர மறவேன் ) இறைவழிபாடு என்பது வியாபாரம் இல்லை. ஒரு உயிர் தன்னைத் தான் கடைத்தேற்றிக் கொள்ள / மீண்டும் பிறவாமலிருக்க தானே எடுக்கும் அரிய முயற்சியே இறைவழிபாடு என்பது " கண்டு எந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல் அண்டம் பெறினும் அது வேண்டேன் " ....... அற்புத திரு அந்தாதி பயன்கருதாத இறைவழிபாட்டினை அம்மையார் கூறியுள்ளார். இறைவழிபாடு என்பது நற்குணங்களால் நிறைத்து நலம் பெறுவதாகும். வானுலகத்தை கொடுத்தால் கூட வேண்டாம் என்பது அம்மையாரின் கூற்று மனம் சிவபெருமானாரை நினைக்கவும், நாக்கு அவர் புகழைப் பாடவும், தலை அவரை வணங்கவும், கை அவரை தொழவும், காது அவர் புகழை கேட்கவும், மனம் அன்பால் இறைவரை இறத்தவும், உடல் அவரை நினைத்து அரும்பவும், வைத்தேன் என்பது அம்மையாரின் பாடல் " சிந்தனை செய்ய மனம் அமைத்தேன் செப்ப நா அமைத்தேன் வந்தனை செய்யத் தலை அமைத்தேன் கை தொழ அமைத்தேன் பந்தனை செய்வதற்கு அன்பமைத்தேன் மெய் அரும்பவைத்தேன் வெந்த வெண்ணீ றணி ஈசற்கு இவையான் விதித்தனவே. ....... பொன்வண்ணத் தந்தாதி

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): 120 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நெல்லையப்பர் “கோ”வலம்!!!

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): 120 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நெல்லையப்பர் “கோ”வலம்!!!

சிவமும் தமிழும்


சிவமும் தமிழும் சிவத்தலங்களில் நடு நாட்டு தலங்கள் 21, ஆவற்றுள் திருவாமாத்தூர் 21 வது தலம். சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற தலம். இைறவர் அபிராமேசர், மாதை நாதர், இறைவி அழகிய நாயகி. இத்தலத்திற்கு இரட்ைட புலவர்கள் பாடிய " ஆமாத்தூர் கலம்பகம் " பாடப்பட்ட வரலாற்றை சிந்திப்பதே இக் கட்டுரை. தமிழுலகில் அனைவராலும் போற்றப்படும் " திருவாமாத்தூர் கலம்பகம் " பாடிய இரட்ைடயர்களை பற்றி குறிப்புகள் திருவாடுதுைற ஆதின வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் வெளியிட்ட " இரட்ைடயர்கள் பிரபந்தங்கள் " என்னும் நூலில் காணமுடிகின்றன. இரட்டை புலவர்கள் பிறப்பிலேயே ஒருவர் குருடர், மற்றவர் முடவர். முடவர் குருடர் ேதாளில் ஏறிக்கொண்டும், குருடர் முடவரை சுந்து செல்வார். ேதாள்மீது அமர்ந்துள்ள முடவர் குருடருக்கு கண்போல வழிகாட்டுவார். இவர்கள் சோழநாட்டில் ஆடுதுைறக்கு அருகில் உள்ள இலந்துறை என்னும் ஊரில் பிறந்தவர்கள். பலபிறவி புண்ணியத்தால் சிவபெருமானார் மீது சாயாத அன்பு உைடயவர்களாகவும், கல்விச் செல்வம் மிகுந்தவரகளாகவும் விளங்கினர். ஆனால் வறுமை இருந்த போதிலும் சிவத்தல யாத்திரை செய்து இறைவரை தீந் தமிழால் பாடி மகிழ்ந்தனர். இப்படி இவர்கள் தில்ைலக்கு வந்த பொழுது தில்லைக் கலம்பகமும் காஞ்சிபுரம் வந்த போது " கச்சியூர்க் கலம்பகமும் " பாடி மகிழ்ந்தார்கள். இறையருள் செயல்படத் தொடங்கியது.இவ்வாறு சிவயாத்திரை நிகழ்கையில் திருமாத்தூர் சென்று " திருமாத்தூர் கலம்பகம் " அங்குள்ள கோவிலைப் பார்க்காமலேயே பாடி முடித்தனர். அப்பகுதியை ஆண்டுவந்த அச்சுதேவப் பல்லவ மன்னரின் அரண்மனை அைடந்தார்கள் இரட்டை புலவர்கள். ஆமாத்தூர் கலம்பகம் அரசவையில் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என இரட்டை புலவர்கள் வேண்டிக் கொண்டனர் அரசனும் சம்மதித்தான்.முடவர் படித்தார், பாடல்களின் அரிய கருத்துக்களை விளக்கிக் கூறினார் குருடர். பாடல்களின் சொற்சுவை, பொருட்சுவை ஆகியவற்றில் மன்னன் மூழ்கினான். இவ்வாறு அரங்கேற்றம் நடைெபற்றுக் கொண்டிருந்த போது மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு காரணம் ஆமாத்தூர் அடிகள் ( மாதை நாதர்) பம்பை என்னும் ஆற்றின் மேற்குக் கரையில் கோயில் கொண்டுள்ளார் என பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆகும். ஆனால் ஆற்றின் கீழக்கரையில்தான் ஆலயம் அமைந்துள்ளது. அறிந்த புலவர்கள் " எம் நாவிலுறை நாமகள் ( சரஸ்வதி) பொய் கூறாள் எனக் கூறி அரங்கேற்றத்தை அந்த அளவில் நிறுத்தினார்கள். எஞ்சியதை மறுநாள் அரங்கேற்றம் செய்வதாகக் கூறிமுடித்தார்ள். நேரே மாதைநாதர் ஆலயத்திற்கு சென்று உள்ளம் உருகி வழிபட்டார்கள். ஆமாத்தூர் பெருமானார் தெய்வப்புலவர்கள் பாடிய அருந்தமிழ் பாடல் பொய்யாகக் கூடாது என விரும்பினார். அன்றிரவு பெருமழை பெய்வித்தார் இதனால் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் பம்பை ஆறு நிலை மாறிவிட்டது. கோவில் மேல்கைரயில் காணப்பட்டது ( ஆறு கோவிலின் கீழ்புறமாக ஓடியது. மக்களும் மன்னனும் கண்டு அதிசயத்தார்கள். இரட்டை புலவர்களை தெய்வப் புலவர்கள் என்று போற்றி மகிழ்ந்தார்கள்.அரங்கேற்றமும் இனிதே நடந்தேறியது. கோவில் மேற்கரையில் அமையுமாறு பாடிய செந்தமிழ் பாடலுக்கு ஏற்ப ஆற்றை திசைமாறி ஓடச் செய்த சிவபெருமானார் விரும்புவது தமிழ் பாடல்களே என அறிந்து மனம் மகிழ்ந்தனர். திருச்சிற்றம்பலம் நன்றி தமிழ் வேதம்

வியாழன், 13 பிப்ரவரி, 2014

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): தினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள் பகுதி 16

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): தினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள் பகுதி 16

ஆன்மிகம்


ஆன்மிகம் ஆன்மிகம் ஆன்மாவைப் பற்றி அறிவது ஆன்மிகம்.ஆனால் தற்போது இறைவனை பற்றி அறிவதே ஆன்மிகம் எனப்படுகிறது. ஆன்மாவின் வழியில் தானே இறைவனை அறியவும் உணரவும் முடியும். உயிர், ஆன்மா, ஆத்மா மூன்றும் ஒன்றுதான். அனைத்தும் ஆத்மாக்களிலும் பெரிய ( எண்ணத்தால் உயர்ந்த) ஆத்மாவை மகாத்மா என்கிறோம்,நாமும் வாழ்ந்து நம்முடன் வாழும் உயிர்களையும் வாழவைக்கிறோம், அதன்வழியில் பெறுவது ஆன்மதிருப்தி, நம் ஆன்ம முன்னேற்றம் நாம் நம்மை அறியாமலேயே நம் உள்நோக்கிச் செல்கிறோம். அதுவே ஆன்மிகத்தின் முதல்படி பிறருக்கு சமயத்தில் உதவும்போதும், பசித்தோருக்கு அன்னதானம் செய்யும்போதும், பிறருக்கு விளங்காததை விளங்க விளக்கும்போதும், நாமும் மகிழ்ச்சி அடைகிறோம் நம்மால் அவர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர், அப்போது புண்ணியம் உயிர் வளரத் தொடங்கிறது. ஒன்றுக்கு ஆைச்படுவதும் அதை அனுபவிப்பதும் அதனால் பெருமைப்படுவதும் இன்ப துன்ப வேதனைப்படுவதும் உயிரன்றி வேறல்ல. அதனால் தான் எது அனுபவிக்கிறதோ , எது அறிகிறதோ அதுவே உயிர் என உணரவேண்டும். கோபம், காமம் வஞ்சம், பொறாமை நம் உயிரை கீழ்நோக்கி செலுத்துகின்றன. உயிர்வளர்ச்சி அங்கே தடைப்படுகிறது. மேலும் கல்வி, செல்வம் ஆகியவற்றால் ஆணவமே முதன்மையாகிறது. ஆகையால் அவற்றால் உயிர் முன்னேறுவதில்லை. பரந்த எண்ணத்தால் மட்டுமே உயிர் முன்னேற்றம் அடைகிறது. "தான்" என்ற எண்ணத்தை விடும் போதுதான் நம்உயிர் முன்னேற தொடங்கிறது. அங்குதான் உண்மையான இறைத்தேடல் ஆரம்பிக்கிறது. அப்போதுதான் இறைவன் உண்மையில் புலப்படத்தொடங்கிறது. எந்த உயிரும் மகிழ்வாக இருப்பதே ஆன்மதிருப்தி. ஆனால் " நம்மால் மற்ற உயிர்கள் மகிழ்கின்றன " என்று எண்ணினால் " நான்" என்ற ஆணவம் அங்கு புகுந்து விடுகிறது. ஆகவே இறைவனை உணர்ந்து மகிழும்போது தான் உண்மையான திருப்தி உண்டாகிறது. "நான்" என்ற உணர்வு அங்கு எழுவதில்லை அதுதான் உண்மையான ஆன்மதிருப்தி, அன்றுதான் உயிர் உண்மையாகத் தன்னை உணர்கிறது. அதன்பின்பே அது இறைவனை உண்மை யாகவும் முழுமையாகவும் உணரத்தொடங்கிறது. அதாவது தற்பேதம் இல்லாமல் உயிர் இறைவனை உணர ஆரம்பிக்கும். அதுவே தெய்விகம். ஆன்மா தன்னை முழுமையாக உணர்வதே ஆன்மிகம், ஆன்மா உலகை அனுவிப்பது லெளகியம். ஆன்மா தெய்வத்தை உணர்ந்து அதை அனுபவிப்பது தெய்விகம். தெய்விகமே ஆன்மிகத்தின் பயன்

வியாழன், 6 பிப்ரவரி, 2014

பிறவாமை பெறவதற்கு எளிய வழி


பிறவாமை பெறவதற்கு எளிய வழி வாழ்ந்து முடிவு பெறும் / வயதான ஒரு முதியவர் வாழ்வில் வெறுப்படைந்து ஒரு ஆன்மீக ஞானியிடம் வந்து ஐயா எனக்கு வாழ்வில் முத்தியடைய வழி கூறுங்கள் என்றார், அன்னாைர ஞானத்துறவி கேட்டார் " ஐயா தாங்கள் வாழ்வின் முதிர்வு நிலைக்கு வந்துவிட்டீர்கள் தாங்கள் இதுவரை நான் வினவும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக யாதேனும் இதுவரை செய்துள்ளீர்களா? என்று வினவினார். அவர் முதியவரிடம் கேட்டது; 1) இறைவருடைய திருநாமமாகிய திரு ஐந்தெழுத்தினை இதுவரை சொல்லிவந்துள்ளீர்களா? 2) இறைவனுைடய பெருைமகளை ஒருமுறையாவது பேசியுள்ளீர்களா? 3) சிவாலயத்தை ஒருமுறையாவது வலம் வந்துள்ளீர்களா? 4) உண்பதற்கு முன் இறைவருக்கு மலர் பறித்து இட்டு தொழுதுள்ளீர்களா? 5)சிவநாமத்தின் தோற்றமாக திகழும் திருெவண்ணீரு தினமும் அணிந்துள்ளீர்களா? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலாக முதியவர் எல்லாவற்றிக்கு "இல்லை" எனவும் யாதும் இதுவரை செய்யவில்லை என்றார் உடனே ஞானியார் இத்தனையுள் ஒன்று கூட ஒரு நாள் கூட செய்யாத உமக்கு எங்கே முத்தி கிடைக்கும் நீங்கள் மறுபடி மறுபடி பிறந்து உங்களுைடய பிறவி பிணி இன்னும் நீங்கா நிலையை தான் கொண்டுள்ளீர்கள் என்றார், வாழ்பவர்கள் நோய்களால் துன்புற்று இறப்பர், மீண்டும் பிறப்பர், அப்பிறவியிலும் பயனின்றி மீண்டும் இறப்பர், இதுவே இவர்களுக்கு தொழிலாகும், இறைவன் திருநாமம் ஐந்தெழுத்தை சொல்லாமலும், திருநீறு அணிணாமலும், இறைவன் புகழ் பாடமலும் பிறவி பெருங்கடல் நீந்தார், இதனை திருநாவுக்கரசர் தன் பாடலில் " திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில் தீவண்ணர் திறம்ஒருகால் பேசாராகில் ஒருகாலும் திருக்கோவில் சூழா ராகில் உண்பதன்முன் மலர் பறித்திட்டு உண்ணாராகில் அருநோய்கள் கெட வெண்ணீ றணயாராகில் அளியற்றார் பிறந்த வாறு ஏதே வென்னில் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் ெசத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே, நாவுக்கரசர் இதனையே திருமூலரும் யாவர்க்கும் ஆம்இறை வற்கொரு பச்சிலை யாவர்க்கும் ஆம்பசு வுக்கொரு வாய்உறை யாவர்ககும் ஆம்உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கும் ஆம்பிறர்க் கின்னுரை தானே, என்று இறைவனுக்கு அர்ச்சனை ெசய்ய பச்சிலை, பசுவுக்கு ஒருவாய் புல், அல்லது உண்ணும்போது பிறருக்கு ஒரு கவள கைப்பிடி அளவு உணவு அல்லது பிறர் முகம் சுளிக்காத அளவு இன்சொல் என்கிறார்

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

எங்கே நிம்மதி


மனமே ரீலேக்ஷ் எங்கே நிம்மதி ? சந்தோசம் நிம்மதி எங்கே எங்கே என்று தேட வேண்டாம், சந்தோசம் நிம்மதி எல்லாம் வெளியில் இல்லை அது எல்லோருடைய மனதில் தான் உள்ளது உண்மையற்ற செயல்கள்தான் உன் நிம்மதி - சந்தோசத்தை கெடுக்கும் அவற்றை உணர்ந்தால் இயல்பான நிம்மதி சந்தோசம் எளிதில் எட்டும நிலையில் உள்ளதை உணர்வீர்கள், தற்காலிக சந்தோசங்கள் எல்லாம் நிம்மதி அளிக்கா, அவை நிலையானது அல்ல, ஒருவன் தன் வாழ்க்கையில் வெறுப்படைந்து நிம்மதி இல்லை என்று எண்ணி , புகை, போதை, மது மங்கை என எல்லாவற்றிலும் அனுபவித்து அந்த தறகாலிக சுகங்களால் நிம்மதி இல்லை என்பதை உணர்ந்து, நிம்மதிக்காக அலைந்திருந்த நிலையில் தான் முற்றும் துறந்து துறவியாகிவிட எண்ணி, தன்னுடைய பணம், தங்க வைர-வைடுரியங்களை எல்லாம் எடுத்து மூட்டைகட்டிக் கொண்டு ஒரு முற்றும் துறந்த துறவியிடம் சென்று தன்னுடைய அத்தனை சொத்துக்களையும் ஒப்படைத்து விட எண்ணி அந்த துறவியிடம் தான் கொண்டுவந்த மூட்டையை ஒப்படைத்தான் அந்த துறவியோ அதனை சற்றும் அதன்மீது நாட்டம் இல்லாதது போல் நடந்துவிட்டு மூட்டையை பிரித்துப்பார்த்தார், அதில் அத்தனையும் தங்க வைர வைடுரியங்கள் இருப்பதைக் கண்டார் உடனே அத்துறவி அந்த மூட்டையை தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார், உடனே மூட்டையை ஒப்படைத்த நபருக்கோ உடல் பதறியது தான் தவறு செய்துவிட்டமே , நமது சொத்துக்களை எல்லாம் இழந்து ஏமாந்து விட்டாமே என்று உடல் பதைபதைத்து அத்துறவி பின்னாலே தானும் ஒடினார் அதனை மீள பெற எத்தணித்தார் ஆனாலும் துறவியை பின் தொடர்ந்து ஒட முடியவில்லை துறவி சந்துபொந்தெல்லாம் ஒடி கடைசியில் தான் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தார், மூட்டையை பறிகொடுத்தவரும் அங்கு வந்து சேர்ந்தவுடன் துறவியைக் கண்டுபிடித்துவிட்ட சற்று நிம்மதியோடு இருந்தவேளையில் துறவியும் அந்த பொன் மூட்டையை அவரிடமே மீண்டும் ஒப்படைத்தார், மூட்டையை இழந்தவருக்கு கிடைத்த மகிழ்ச்சிக்கோ அளவே இல்லை தான் இழந்த பொருள் மீண்டும் கிடைத்தது கண்டு பெருமகிழ்ச்சியுடன் பெருமூச்சி விட்டு அப்பாடி இப்போது தான் நிம்மதி வந்தது என தனது மனம் கூறியது கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்ததைக் கண்ட துறவி " ஐயா இதற்கு முன்னாலும் இதே பொருட்கள் தங்களிடம்தானே இருந்தது அப்போது இல்லாத மகிழ்ச்சி தற்போது எபபடிய்யா வந்தது " என கூறினார் எனவே மகிழ்ச்சி நிம்மதி என்பது வெளியிலிருந்து வராது அது உங்கள் மனத்தில்தான் உள்ளது எனவே இருப்பதை வைத்து போதுமென்ற மனதுடன் இதுவே சந்தோசம் நிம்மதி என்று எண்ணி திருப்திபட்டால் உனது மனம் நிம்மதி பெறும் என்பதை துறவி விளக்கினார்