செவ்வாய், 12 மே, 2020

இறைவன் கோயில் கொள்ளும்உள்ளங்கள்

இறைவன் கோயில் கொள்ளும்உள்ளங்கள்



" அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்று
  ஐம்புலனும் அடக்கி ஞானம்
 புகலுடையோர் தம் உள்ளப் புண்டரீகத்து
 உள்ளிருக்கும் புராணர் ........ தி,மு1,132,6

போலிகளை கண்டு ஏமாறாமல் வாழ்வதற்கு இப்பாடல்  பெரிதும் உதவியாய் இருக்கும்.
சிவபெருமானார் ஒருவருடைய உள்ளத்தில் தங்க வேண்டுமானால் 
1) அவருடைய உள்ளத்தில் அன்பு நிறைந்திரு்க வேண்டும். அன்பு என்பதன் பொருள் சுயநலம் இல்லாமை என்பதும் ஆகும். ஒருவர் அன்புடையவர் என்றால் பிறர் நலத்திற்கு உதவும் பண்பு மிகுந்த காணப்பட வேண்டும்.இத கொள்ளத் தக்க குணங்கள்
2, காமம், குரோதம், லாேகம், பேராசை, பாேன்ற ேவண்டாத்தீய குணங்கள் இல்லாதிருக்க வேண்டும்.
3. மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலங்களையும் அவற்றின் போக்கில் செல்லவிடாமல் நல்ல வழிியில் செலுத்தும் பண்புடையவராய் இருத்தல் வேண்டும். வேண்டாதனவற்றை பார்க்கக் கூடாது. பிறருடைய இரகசியங்களை கேட்பதில் செவிடராய் இருத்தல் வேண்டும். உணவில் அதிவிருப்பம் கூடாது. வாயினால் தீய வார்த்தைகள் பேசுதல் கூடாது. மூக்கினால் மனதை திசை திருப்பும்நுகர்வுகளில் நுகர்தலும், உடம்பினால் மயக்கம் காெள்ளுதலும் கூடாது.
 இந்த ஐந்த பொறிகளை இறைவழிபாட்டிற்கே பயன்படுத்தும் பழக்கம் வேண்டும். சிவ சிந்தனையே மிகுந்திருக்க வேண்டும்.
சிந்தனை செய்ய மனம் அமைத்தாய்  .... திமு 11
சி்ந்தனை நின்தனக்கு ஆக்கி ........ திமு, 8
 இப்படியெல்லாம் மனதை திருத்தி அதனை தாமரை மலர் பாேல் ைவத்திருக்கும் சான்றோர்களின் 
( சிவஞானியர்களின் ) உள்ளத்தில் சிவம் விளங்கும் என்கிறார்கள் திருமுறை தந்த அருளாளர்கள். உள்ளக்கோயிலேயே இறைவனுக்கு திருக்கோயில் கட்டி இறைவனையே அங்கு எழுந்தருளச்செய்து குடமுழுக்கு செய்து  உள்ளக்கோயில் கட்டியவர் பூசலார் என்ற சிவஞானி.
 போலி வேடதாரிகளைக் கண்டு ஏமாந்து விடக்கூடாது என்பதற்கு அருளாளர்கள் தந்த விளக்கம் தான் அவர்கள் அருளிய திருமுறைகள்.
திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக