புதன், 24 மே, 2023

 சிவபோக சாரம் ( சைவ சித்தாந்த துளிகள்) 

உலகப் பற்றினை விடுவதற்கு குரு கூறும் உபாயம் 

“துரத்தி யுன்னை ஆசை தொடராமல் என்றும் விரத்தியினர் ஆங்கவற்றைவிட்டு / பரத்திலன்பு செய்யடா செய்யடா சேரப்ரபஞ்ச மெலாம்பொய்யடா பொய்யடா பொய் ” 


 பாடல் 107 ஸ்ரீ குருஞானசம்பந்தரின் சிவபோக சாரம்இப் பிரபஞ்ச மெல்லாம் ஒருசேர பொய் பொய் என்று உணர்ந்து அவற்றின்ேமல் உள்ள ஆசை உன்னைத் துரத்தித் தொடராத வண்ணம் அவற்றை உவர்த்து நீக்க, என்பெருமானிடத்து என்றும் நீங்காத அன்பை வைப்பாயாக, குருவின் உபதேசமாக அமைந்துள்ளது இந்தப் பாடல். இறைமீது வைக்கின்ற அன்பும் வழிபாடுமே பற்றை விடுவதற்கு வழி என்பதை வலியுறுத்துகிறார். பிரபஞ்சம் என்றால் உலகம், இந்த உலகமெல்லாம் ஒருசேரப் பொய் என்கிறார். பொய் என்றால்இல்லாதது என்று அர்த்தமன்று. பொருளின் நிலையற்ற தன்மையையே பொய் என்கிறது சைவ சித்தாந்தம். அதாவதுமாறுதலுக்கு உட்பபட்டதாய், ஐம்பொறிகளால் சுட்டி அறியப்படுவதாய் கால எல்லைக்கு உட்பட்டதாய் உள்ள அனைத்தும் பொய் என காட்டப்படுகிறது. அவை தோன்றி, நின்று, அழியும் தன்மையுடயது. இந்த பொய்யான பிரபஞ்சத்தை பற்றிக் கொண்டுதானே நாம் வாழ முடியும், அப்படி பற்றிக் கொ ள்வதால் அதுவே ேமலும் மேலும் நமக்கு ஆசை ஏற்படுகிறது. அந்த ஆசையே வினைத் துன்பமாக நம்மைத் துரத்தி துரத்தி தொ டர்வதற்கு காரணமாகிறது. யான் எனது என்னும் இருவகைப் பற்றினால் இந்த பிரபஞ்சத்தை இறுகப்பற்றிக் கொண்டு விடாதவர்களை துன்பமும்இறுகப்பற்றிக் கொண்டு விடாத என்கிறார். நம் உடம்போடு நம் உடமைகளோடும் எளிதல் பிரிக்க முடியாதபடி அவ்வளவு பற்றுக் கொண்டிருக்கும் நமக்கு விரத்தியோ நிறைவோ எளிதில்வராது. எனவே நம் எண்ணத்தை இறைவன் பால் நாம் திருப்பி விட வேண்டும், இறைவனது கருணையை நினைக்க நினைக்க அவன் மீது அன்பு மிகுந்து இறைபத்தியின் மூலம் இப் பிரபஞ்ச இன்பம் மிக மிக சிறுமையானதாக புலப்படும். பத்தி நெறியில் சிவத்தை நினைந்து நினைந்து நெஞ்சம் நெகிழ்ந்து உள்ளம் உருகும் அன்பே பிரபஞ்ச பற்று விட காரணமாக அமையும் என்று தேவார திருவாசக அருளாளர்கள் அனுபவித்து பாடியுள்ளதை பார்க்கிறோம். தாயின் அன்பைப்போன்றே இறை அன்பு என்று உணர்த்தும் அப்பர் அடிகளைப் போல ஸ்ரீகுருஞானசம்பந்தரும்உபதேசமாக பரத்தில் அன்பு செய்யடா செய்யடா இந்த பிரபஞ்சமெல்லாம் பொய்யடா பொயயடா பொய் என்று வலியுறுத்தியுள்ளார் ஆக குருவுபேசத்தின் வழியாக இறைவனிடத்து அன்பு செய்யச் செய்ய இப்பிரபஞ்சம் நிலையானது என்றும் உண்மை புரியவரும். அதனால் அவற்றின் உவர்ப்பு வர ஆசையும் துன்பமும் துரத்தி தொடராது என்று இறையின்பத்தினை வலியுறுத்துகிறார் குருநாதர்.

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக