செவ்வாய், 18 மே, 2021

திருமுறைகளில் திருவேடச்சிறப்பு

 திருமுறைகளில் திருவேடச்சிறப்பு






திருநீறு, உத்திராட்சம், சடைமுடி, துவர் ஆடைமுதலியன சிவச்சின்னங்களாகும். இவற்றை அணிவதுடன் அணிந்து கொண்டுள்ள அன்பர்களை வணங்குவதும் வேண்டியன வாகும்,

சலைவத்தொழிலாளியின் உடம்பு உவர் மண்ணால் வெண்மை நிறமாக தெரிந்தது. சேரமான் பெருமான் நாயனார் கீழே விழுந்து வணங்கினார். காரணம் திருவேடம் நினைவிற்கு வந்தது.

 மெய்பொருள் நாயனாரும், ஏனாதிநாயனாரும், புகழ்சோழ நாயனாரும் திருவேடத்திற்காக உயிரை விட்டார்கள் என்பதை பெரியபுராணம் கூறுகிறது.

 " வேடம் பரவித் திரியுந் தொண்டர்

   ஏதப் படாவண்ணம் நின்றார் போலும் ..... நாவுக்கரசர் திருமுறை6


திருநீறு உத்திராட்சம் சடைமுடி, துவர் ஆடை முதலியனவற்றை அணிந்தவர்களை காணும் பொழுதெல்லாம் சிவபெருமானை நினைந்து வழிபடும்அன்பர்கள் துன்பப்படா வண்ணம் பெருமான் அருளுவார் என்கிறார் அப்பர் சுவாமிகள்

கூறுஞ் செனனக் குடில் நெடு

நாள் நுழை கூன் முழுவதும்

மாறும் படிக்கு மருந்துளதோ

சண்பை வாணர் கொண்ட

நீறும் திருவெழுந்தெழுத் தோரைந்தும்

 கண்டியும் நித்தம் நித்தம்

தேறும் பொருள் என்றுணராத

மாயச் செருக்கினர்க்கே.   ....... தி,மு. 11

 திருநீறும் உத்ததிராட்சமும், திருஐந்தெழுத்தும் நாம் உய்வடைவதற்கு உதவுவன என்று உணராத மாயச் செருக்கினர் பிறவா நெறியை அடைவது இல்லை. மீண்டும் மீண்டும் பிறந்த துன்பப்படுவார்கள். எனவே, திருவேடத்தை கண்ட அளவில் மனதில் சிவபெருமான் நினைவு தோன்ற வேண்டும்.

 மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை

 புரிந்த கேட்கப்படும் புண்ணியங்கள் இவை

 திருந்து தேவன்குடித் தேவர் தேவெய்தி

 அருந்தவத் தோர் தொழும் அடிகள் வேடங்களே   சம்பந்தர் தேவாரம் 3/25/1

1. சிிவபெருமானுடைய திருவேடமே பிறவி நோய்க்கு மருந்தாகும்

2. திருவேடமே மந்திரமாக நின்றுதவும்

3. திருவேடத்தை மனதால் நினைப்பதே மேலான சிவ புண்ணியமாகும். அருந்தவத்தோர்கள் எல்லாம் திருவேடத்தைக் தொழுவாரகள் என்கிறார் திருஞான சம்பந்தர்.

 மானம்ஆக்குவன மாசு நீ குவ்வன

 வானை உள்கச் செலும் வழிகள் காட்டுவன

தேனும் வண்டும் இசை பாடும்ேதவன்குடி

ஆனஞ்சாடும் முடி அடிகள் வேடங்களே  தி,மு. 3 பதி 25.பா. 3


1. மன்னுயிருக்கு பெருமை அளிப்பது

2.தீவினை எல்லாம் போக்குவது

3. வீட்டுலகை அளிப்பது

  மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் அரன் எனத் தொழுமே எனும் சிவஞானபோதச் செய்யுளும் இவ்விடத்தில் நினைவில் கொள்ளத் தக்கதாகும்


 திருவேடச் சிறப்புக்கூறும் கன்றாப்பூர் பதிகம்

எவரேனும் தாமாக விலாத்திட்ட

திருநீறும் சாதனமுங் கண்டால் உள்கி

உவராதே யவரவரைக் கண்டபோதே

உகந்தடிமைத்திறம்  நினைந்தங் குவந்து நோக்கி

இவர்  தேவர் அவர் தேவர் என்று சொல்லி

இரண்டாட்டா தொழிந்து ஈசன் திறமே பேணிக் 

கவராதே தொழுமடியார் நெஞ்சினுள்ளே

கன்றாப்பூர் நடுத்தறியைக் காணலாமே   திமு. 6/61/ 3


திருநீறும் உத்திராட்சமும் அணிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை வெறுக்காமலும் இவர் அவர் என்று வேறுபடுத்தாமலும் அவர்களை கண்ட பொழுதே உளம் மகிழ வேண்டும். அவர்களைச் சிவமாகளவே எண்ணி மனம் ஒன்றுபட்டு வணங்க வேண்டும். அப்படித் தொழும் அடியார்கள் நெஞ்சினுள்ளே நடுதறிப்பர் இனிதே விளங்குவார் என்கிறார் அப்பர் அடிகள்

சிவச் சின்னங்களை அணிவதாலும், சின்னங்கள் அணிந்தவர்களை வணங்குவதாலும் சிவபெருமான் மீது மனம் நீங்காது நிற்கும்.அவ்வாறு இரவும் பகலும்  நினைப்பவர் மனங்களையே கோயிலாகக் கொள்பவர் சிவபெருமான்,

 திருவேடத்தினை வணங்குவோம். வளம் பெறுவோம்

திருச்சிற்றம்பலம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக