சனி, 22 ஜனவரி, 2022

திருமுறைநாதர் வீதி உலா மற்றும் திருவாசக முற்றோதல் விழா

 சுந்தரபாண்டியத்தில் திருமுறைநாதர் வீதி உலா மற்றும் திருவாசக முற்றோதல் விழா


சுந்தரபாண்டியத்தில் அருள்பாலித்து வரும் அம்மன் அருள்மிகு வெயிலுகந்தம்மன் கோவில் புணரமைப்பு பணிகள் தொய்வு நிகழ்வை போக்கி, துரித சேவையின் மூலம் அஸ்டபந்தன கும்பாபிசேக விழாவை எதிர்நோக்கி, தீய சக்திகளை விரட்டி விலக்கவும், நாட்டில் கொடிய நோ ய்களின் தாக்கம் முற்றுப்பெறவும், எம்பெருமான் அருள் பெற்று கோயில் பணியினை துரிதப்படுத்தி விரைந்து நடக்கவும்,தொழில் வளம் சிறக்கவும் இவ்விரு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
நிகழ்வு நாள் தை மாதம் 13ம் நாள் ( 26.01.2022) புதன்கிழமை காலை சுமார் 8.00 மணி
அளவில் திருமுறைநாதர் வீதி உலாவும் அதனை தொடர்ந்து முற்றோதல் நிகழ்வும் நடை பெறும்.அருப்புக்கோட்டை சிவனேசர் சிவ. அமலனடிமை அவர்களின் கீழ் இயங்கும் பன்னிரு திருமுறை விண்ணப்பக்குழு.இடம்° அ.மி, வெயிலுகந்தம்மன் கோவில் வளாகம்
திருமுறைநாதர் வீதி உலா ;திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு மன்ற சிவனடியார்கள் (பன்னிரு திருமுறை தேவார திருவாச நூல்கள் அடங்கிய பேழை ) திருமுறைநாதரை சிரத்தில் சுமந்து நகர் முக்கிய வீதி உலா வருதல்
சுந்தரபாண்டியம் சுந்தரவிநாயகர் திருக்கோயிலிருந்து புறப்பட்டு அம்மன் கோவில் அடைதல்.திருமுறை நாதர் வீதி உலாவில் " கரிவலம்" சிவனடியார்களின் பஞ்சவாத்திய இசை என்ற கைலாய வாத்தியம் மற்றும் சிவனடியார்களின் சிவ நாமவளியுடன் தேவார திருவாசகப் பாடல்களுடன் ஊர்வலம்
அனைத்து இறை அன்பர்களும் சிவபக்தர்களும் அம்மன் கோயில் வழிபாட்டார்களும் கலந்து கொண்டு அம்மன் கோவில் புணரமைப்பு பணி சிறக்க வேண்டிடவும், நகரில் காெடிய நோ ய் தாக்குதல் தவிர்க்கவும், நாடு நகரம் தொழில் சிறக்க , பிராத்திக்கவும், எம்பெருமான் இறை அருள் பெற்றுய்யவும் விழாவில் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
நிகழ்ச்சி ஏற்பாடு
அ.மி. வெயிலுகந்தம்மன் கோவில் திருப்பணிக்குழு ,
பட்டுக்கோட்டை ராம்கோ பட்டு சென்டர்,
திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு மன்றம்.சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக