ஞாயிறு, 6 நவம்பர், 2022

திரு ஐந்தெழுத்தின் மகிமை

 திரு ஐந்தெழுத்தின் மகிமை



" வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்

பீடை கெடுப்பன பிள்ளை நாள்தொறம்

மாடு கொடுப்பன மன்னு மாநடம்

ஆடி உகப்பனஅஞ்செழுத்துமே. திரு ஞான சம்பந்தர்


அரிய நடனத்தை ஆடும் பெருமானார் விரும்பும் திருஐந்தெழுத்தினை விரும்பி / செபிப்பவர் / ஓதுபவர்களின் பிறப்பும் இறப்பும் இல்லாமல் போகும். இப்பிறவியில் வரக்கூடிய துன்பங்கள் அகன்றுவிடும், வேண்டிய செல்வங்களை அளித்துக்காப்பார் இறைவர்.

கடவுளை கண்ட திருஞான சம்பந்த பெருமானார் கூறுவதை தான்நாம் இறைவர் கூறியதாகவே கொள்ளவேண்டும். அறிவு கொண்டு இவற்றைச் ெசான்னாரில்லை. இறைவர் உள் நின்றுணர்த்த இவற்றை கூறினார்.

மந்திரத்தினை செபித்து (மனதில் உருவேற்றி) இறைவனை அடைவதற்குரிய சாதனமே மந்திரயோகமாகும். யோக சாதனையால் சாதகர் இறைவனை அகண்டமாகத் தியானித்துக் கண்டநிலை நீங்கி அகண்டமாய்த்த திகழ்வர். மந்திர செபத்தால் புறத்தே அமைந்த உருவத்தில் இறைவனை வழிபாடு செய்து தேவதா(இறைவடிவம்) வடிவம் பெறுவர். உருவ வழிபாட்டில் ஆசிரியர் சதாசிவ மூர்த்தியின் வழிபாட்டைச் சிறப்பித்துப் பேசுகிறார். இறைவனை அடசரவடிமாகச்(எழுத்து வடிமாக) சக்கரத்தில் எழுந்தருளியிருப்பதாகக் கருதி அங்கு வழிபடுவதும் புறவழிபாட்டைச் சேர்ந்த ஒன்றாகும். திருமூலர் திருவம்பலச் சக்கரம், சாம்பவிமண்டலச் சக்கரம், புவனாபதி சக்கரம், நவாக்கா¢சக்கரம் முதலியவற்றைச் சிறப்பாகக் கூறுகிறார்.

மந்திரம் என்றால் நினைப்பவனைக் காப்பது என்பது பொருளாகும். மந்திர யோகம் என்றால் நினைப்பவனைக் காத்து இறைவனோடு சேர்க்கும் நெறி என்று பொருள். இதற்கு உதாரணமாக அமைவதே

பஞ்சாட்சரமந்திரம். அதில் தூல பஞ்சாட்சரம், சூக்சும பஞ்சாட்சரம், அதி சூட்சும பஞ்சாட்சரம் என்ற பிரிவுகள் உள்ளடங்கும், அவற்றுள் நமசிவாய எ்னும் தூல பஞ்சாட்சரமும் சிவாய நம எனும சூட்சும பஞ்சாட்சரமும், சிவசிவ எனும் அதிசூட்சும பஞ்சாட்சரமும் அதன் அதன் தன்மைக்கேற்ற சிறப்பு ெபற்றது, இதில் எதனை ஓதினாலும் அதன் தன்மைக்கு எற்ப சிறப்புண்டு

  உலகியில் வாழ்வில் பெருவாழ்வு விரும்புவோர் நமச்சிவாய மந்திரத்தையும், முத்தி பேறு விரும்புவோர் சிவாய நம, அல்லது சிவசிவ என்ற மந்திரத்தையும் ஓதுவது மிக சிறப்பு.

                 மிக எளிய வழி "சிவாயநம " எனும் திருஐந்தெழுத்தினை ஓதுவது என்பது , நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லலாம். பிரயாணம் செய்யும் பொழுதெல்லாம் சொல்லலாம். பணம் காசு செலவு ெசய்ய வேண்டியதில்லை. இதைவிட எளிய வழிைய யார் சொல்லமுடியும்? திருஐந்தெழுத்தினை ஓதி, துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் பெறுவோமாக.

திருச்சிற்றம்பலம்

நன்றி; தமிழ் வேதம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக