செவ்வாய், 1 நவம்பர், 2022

சைவ சித்தாந்த சிந்தனைகள் - பதி பரமே

 சைவ சித்தாந்த சிந்தனைகள் -  பதி பரமே



பதி பரமே என்னும் விதிப்பொருளும் பிற ஏதும் பரமில்லை பதியே மேலான பரம் பொருள் பிற ஏதும்மேலான பரம்பொருள் இல்லை என்பதை இது உணர்த்துகிறது.பதியாக பரம் உரு, அரு, இன்றி இருந்தாலும்  ஒரு செயலை செய்வதற்கு உருவம்  இன்றியமையாதது ஏனெனில் உடம்பில்லாமல் எந்த தொழிலும் இயற்ற முடியாது.  எனவே இறைவனுக்கு உருவம் வேண்டும். உருவம் என்று இருந்தாலும், எல்லாவகை தொழில்களையும் செய்ய வாய்ப்பில்லாமல் போய்விடும் உதாரணமாக உருவம் பறப்பதற்கு உருவம் தடையாக இருக்கும் எனவே இறைவன் அருவம், உருவம், எனும் இருவகை வடிவுமன்றி தன் சக்தியால் சுத்த மாயையைக் கொண்ட நாதம் தோற்றுவித்து, பின் தன் இச்சா சக்தியால் வேண்டும் வடிவ திருமேனி கொள்வான். இதனால் இவன் எந்த செயலையும் அவன் சங்கற்ப மாத்திரையான் செய்வான் அதுவே நினைத்த அளவில் அது அதுவாகுதல் இதனை பதியின்சங்கற்பம் என்பர்

   காரிய நிலையில் தோன்றுகிற உருவம் காரண நிலையில் கண்ணுக்கு புலனாகாது நிற்பதே அருவம் எனப்படும். அருவம் ஒரு வகையான உருவமே அதாவது கண்ணு்க்கு தெரியாத சூக்கும வடிவமாகும். ஆகையால் பரம்பொருளுக்க உருவம் கிடையாது. இதுவே இறைவனின் சொரூப நிலையாகும்.

  பதியின் தடத்த நிிலை

 சொரூப நிலையில் தான் இறைவனை பரமசிவன், சொரூபசிவனை, சுத்த சிவன் என்றும் இதனையே அருவம் என்றும் கூறுவர். இந்நிலை நீங்கி இறைவன் உலகத்தை நோக்குங்கால் சக்தி என்றழைக்கப்படுவான். வானத்தல் உள்ள சூரியனின் ஒளிக் கதிர்கள்  மண்ணில் வியாபித்திருப்பது போல் இறைவன் உலகத்தில் வியாபிப்பது சக்தியினால்தான் இதுவேசக்திஎன்கின்றனர்.

  முதல்வனாகிய இறைவனுக்கு அவன் சக்தியும் பொருளால் ஒன்றே செயற்பாட்டால் இரு திறப்பட்டு நிிற்கும். சிவமும் சக்தியும் உடனியைந்து செயல்களை இயற்றி நிற்பதால் சிவமும் சக்தியுமாய் தோற்றம் அளிக்கும். சக்தி ஒன்றே செயலால் பல வகைப்படும் இது எவ்வாறெனில் மின் சக்தி ஒன்றால் ஒளிர்தலும், சுடுதல் குளிர்வித்தல் இயக்குதல் போன்ற பல செயல்களை செய்தல் போன்றதாகும் 

   இறைவனி்ன் மேலான நிலையில் உள்ள பராசக்தி என்ற சக்தி அவன் உலகத்தை  நோக்க தொடங்குங்கால் ஆதி சக்தி என்றும்.மறைப்பாற்றல் உள்ள திரோதன சக்தி என்றும் கூறப்படும் உலகத்தை ஒடுக்கும் காலத்தில் அச்சக்தி அருவநிலையை அடையும், இனி உலகத்தை உய்விக்க விரும்பி இறைவன் அச்சக்தியை இச்சாசக்தி, ஞானசக்தி, கிரயா சக்தி என பிரிந்து செயல்படும். பரந்த பராபரை யான பராசக்தி ஆன்மாக்களுக்கு அருளும் நேசமாய் இச்சா சக்தியாகவும், அது வேணடியவற்றை அறியும் அறிவாகிய ஞான சக்தியாகவும், அவற்றை சங்கற்பத்ததால் செயல் படுத்த கிரியா சக்தியாகவும் விளங்கும். இதன் மூலம் ஆன்மாக்களுக்கு இச்சை,ஞானம், கிரியை என்னும் மூன்றையும் நோக்கியும், கருதியும், இலயம், போகம், அதிகாரம் என்னும்மூன்று நிலைகளை அடைகிறது. 

 உலகத்ததை ஒடுக்கிய நிலை இலயம் என்றும், உலகத்தை தோற்றி காக்கும் நிலை, போகம் என்றும், உயிர்களுக்கு போகத்தை ஊட்டும் நில் அதிகாரம் என்ற வகையில் செயல்படும்.இத்தொழில்களை செய்யும் போது இறைவன் ஆனந்ததாண்டவம் ஞான தாண்டவம் கொண்டு ஐந்தொழில் செய்கிறார்.  இத்தொழில்களை சீராக நடத்த அதற்கென அதிபர்களாக பிரம்மா,விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன்,ஈசுவர் நியமிக்கிறார்.

  உலகத்தை செயற்படுத்த தனது சக்தி நிலையில் சிவன் திருமேனிகளை கொள்வான் இச்செயல் தன் பொருட்டன்று இது அவனுக்காக செய்வதில்லை, ஆன்மாக்களுக்கவே வேண்டிய உருவம் கொண்டு செயல்படுகிறான்.இறைவன் ஆன்மாக்கள் உய்யும் வண்ணம் உருவமும் அருவமும் கலந்த அருஉருவாக சதாசிவ மூர்த்தியாகவும் தோன்றுவார்.

  உயிர்கள்மலமுடையனவாகலின் அவற்றிக்கு மலத்தின் வகையாகிய மாயா உருவம் உளதாகும். இறைவன் நின்மலன், மலத்தின் வகையாகிய மாயையிடம் யாதும் தொடர்பு இல்லை, அவனுக்கு அவனது சக்தியே உருவமாய் அமையும் அச்சக்தியே அருளேயாதலின் அவனது திருமேனியும் அருள் திருமேனியே யாகும்.

  எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்

  அவ்வுருவாய்த் தோன்றி அருள் கொடுப்பான் -  சேரமான் பெருமான் பொன்வண்ணத்து அந்தாதியில் கூறியுள்ளார்.

தகவல் உமாபதியாரின் சைவ சித்தந்த  சிவப்பிரகாசம்

திருச்சிற்றம்பலம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக