"அஞ்சேல் "என்று அருளுவான்
நாம் மானிடப்பிறப்பு எடுத்ததின் பலனே நம் வினைப்பயனை நீக்கி இறைவன் தாள் அடைவதுதான், அதன் பொருட்டே நாம் வினைகள் தீரும் வரை இறப்பும் பிறப்பும் நடந்து கொண்டே தான் இருக்கும். நல்வினையால் புண்ணியமும், இன்பமும், தீவினையால் பாவமும், துன்பமும் நம் வாழும் போது அனுபவிக்கிறோம், இந்நிலையில் நாம் வாழும் வாழ்வில் முதுமையில் படும் அவஸ்தை கொடிது கொடிது, அந்நிலையில் அதைத் தாங்கும் சக்தியும் நம்மிடம் இருக்காது, நம் பொருட்டு உதவும் ஜீவனும் இருக்காது, உற்றாரும் உறவினர்களும் இருக்கமாட்டார்கள். அதனால் தான் பட்டிணத்துஅடிகள் நம்முடன் கூட வருவது நாம் சேர்த்த செல்வமோ, உறவோ வருவதில்ைல நாம் செய்த புண்ணிய பாவங்கள் தான் நம்முடன் வரும் என்றார். எனவே தான் தனக்கு இன்னும் ஒர் கருப்பை ஊர் வராது ஆக்கு என்று வேண்டுவார்.
நம் வினையின் பயனால் நாம் முதுமையில் படும் துயரத்தை அருளாளர்கள் யாவரும் எனக்கு மரண அவஸ்தை இன்றி உன் திருவடியை தா என்று வேண்டினார்கள், அத்துடன் அந்நிலையில் எனக்கு அஞ்சேல் என்று அருள் தர வேண்டிய தேவாரப்பாடல்கள் ஏராளம் உள்ளன, இதனை உணர்ந்து தன் இளம்பருவத்திலேயே ஞானசம்பந்த பெருமான் திருவையாற்று பதிகத்தில் ஒரு பாடலில்
புலனைந்தும்பொறிகலங்கி நெறி மயங்கி
அறிவழிந்திட்டு ஐம்ேமல்உந்தி
அலமந்த போதாக அஞ்சேல் என்று
அருள்ெசய்வான் அமரும் கோயில்
என்று இந்த ஊன் உடம்பில் உள்ள பொறிகள் எல்லாம் செயல் இழந்த நிலையில் எனக்கு அஞ்ேசல் என்று அருள் தர வேண்டும் பாடலாக அமைந்துள்ளது.
மேலும் மரண அவஸ்தை பற்றி ஐயடிகள் காடவர்கோன்
குந்தி நடந்து குனிந்தொரு கைகோல் ஊன்றி
நாெந்து இருமி ஏங்கி நுரைதேறி வந்து உந்தி
ஐயாறு வாயாறு பாயா முன் ெநஞ்சே
ஐயாறு வாயால் அழை என்கிறார்
ஐயாறப்பரை நீ அழைத்தால் உனக்கு அஞ்சேல் என்ற அருள் கிடைக்கும் என்கிறார்.
மரண அவஸ்தையை உணர்த்த வள்ளல் பெருமான் அவர்கள்
"படமுடியாது அரசே இனித்துயரம் படமுடியாது அரசே
பட்டதெல்லாமம் போதும் ,,,,,,,,,,
என் உடல் பொருள் ஆவி எல்லாம்
நீ எடுத்துக்கொண்டு உன் உடல் ஆவியை
உவந்து எனக்கு அருள்" என்று வேண்டுவார்.
3ம் திருமுறை தேவாரப்பாடலில் சம்பந்த பெருமானார்
.....பத்தியாற் பாடிடப் பரிந்தவர்க்கு அருள்ெசய்யும் அந்தனார் உறைவிடம்
என்று மழப்பாடி இறைவன் பெருமையை அருள் செய்யும் கோயிலாக காட்டுகிறார்.
மாணிக்க வாசக பெருமான் அருள் செய்வாய் என்பது குறித்து ஒரு பதிகமே பாடியுள்ளார்.
மேலும் அடியனாகிய நான் உன்னை பேரன்பால் ஆதரி்த்து அழைத்தால் அருளாமல் விடுவது ஞாயமோ என்றும்
அவரது அச்சோப் பதிகத்தில்
" சித்தமலம் அறிவித்து சிவம் ஆக்கி எனை ஆண்ட
அத்தன் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே " என்கிறார்
திரு வேசறவு பதிகத்தில்
தானே வந்து எனது உள்ளம் பகுந்து அடியேற்கு அருள் செய்தான் " என்கிறார்
அருள் பத்து பதிகத்தில்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்று அருளாயே " என்கிறார்
தேவாரம் தந்த அப்பர் அடிகள் தனது திருவையாற்று பதிகத்தில்
இரப்பவருக்கு ஈய வைத்தார் ஈபவருக்கு அருளும் வைத்தார்
----------
அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயனையாறனாறே " என்று யார் யாருக்கு ஈசன் அருள் செய்தார் என்கிறார்
எட்டாம் திருமுறை தந்த மாணிக்கவாசகர் அருள் பத்து என்று ஒரு பதிகம் பாடியுள்ளார், இறைவனது அருளை வேண்டும் பத்துப் பாடல்களின் தொகுதி அருட்பத்து. இதன் எட்டாம் திருப்பாடலில், `பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுப்பவன் இறைவன்` இப்பதிக பாடல்களில் அருள் புரிய வேண்டி----,
"அடியேனாகிய நான், உன்னை விரும்பி அழைத்தால், அதென்ன? என்று கேட்டு அருள் புரிவாயாக!.
என் அழைப்புக் காரணம் உடையதே எனக் கருதி எனக்கு அருள் செய்`
தொண்ட னாகிய நான் அன்புடன் அழைத்தால், அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!.
அடியேனாகிய நான் அன்புடன் அழைத்தால் அஞ்சாதே என்று அருள் புரிவாயாக!.
அடியே னாகிய நான் அன்பொடு அழைத்தால் அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!. என்று தனது பத்துப்பாடல்களிலும் இறைவனின் பேருமையை கூறி இதன் பொருட்டு எனக்கு அருளாமல் இருந்துவிடுவாயே அடியனாகிய நான் உன்னை பேரன்பால் ஆதரி்த்து அழைத்தால் அருளாமல் விடுவது ஞாயமோ என்று கேட்கிறார்.என்று கூறி தன்பொருட்டு அடியார்களுக்கும் அருள் செய்வேண்டி பாடியுள்ளார்
மேலும் அடியனாகிய நான் உன்னை பேரன்பால் ஆதரி்த்து அழைத்தால் அருளாமல் விடுவது ஞாயமோ என்று கேட்கிறார்.
திருச்சிற்றம்பலம்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக