வியாழன், 23 மே, 2013

தினமும் ஒரு மந்திரம்


தமிழ் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை மந்திரமாக இருப்பது திருமுலரின் திருமந்திரமாகும் அம்மந்திரத்திலிருந்து தினமும் ஒரு மந்திரமாக நம் வலைபதிவில் வெளியிட விரும்பி இச்செயலில் முனைகிேறன் தெய்வ நெறி தமிழ் மண்ணில் தளைத்தோங்க இக் கலியுகத்தில் பக்தி சிந்தனை பெருக அன்பர்கள் கண்டு பயன் பெற அன்புடன் வேண்டுகிேறன், அன்பன் வை,பூமாலை, சுந்தரபாண்டியம் தினமும் ஒரு மந்திரம் திருமந்திரத்தில் முதல் பாடலாக விநாயகர் வணக்கமாக அமைந்த பாடல் நால்வர்கள் பாடிய தேவார திருமுறைகளில் விநாயகர் துதி இல்லை என்பதை உணரவும், சங்க நூற்களில் மற்றும் திருவாசகத்திலும் விநாயகப் பெருமானை பற்றிய தொடர்களோ பாடல்களோ இல்லாமையை உணரலாம் ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே, விளக்கம்,- ஐந்து கைகளையும் யானை முகத்தையும் இளம் பிறைச்சந்திரனைப் போன்ற வளைந்த தந்தத்தையும் உடைய சிவபெருமானின் திருமகனும், அறிவுக கொழுநதாக உள்ளவனுமான விநாயகனை உள்ளத்தில் வைத்து, அவன் திருவடிகளையும் பேர்ற்றி கின்றேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக