புதன், 1 மே, 2019

ஊடல் திருவிழா

ஊடல் திருவிழா












ஆடலில் மகிழும் மழலைப் பருவம்
ஓடலில் மகிழும் பிள்ளைப் பருவம்
தேடலில் மகிழும் குமரப் பருவம்
(ஊடலுக்கு பின்)
கூடலில்  மகிழும் வாலிப்பருவம்
ஆட்டத்தில்முடியும்முதுமைப் பருவம்

  கூடி மகிழும் இல்வாழ்வில் ஊடிப் பிணக்கு கொள்கிறாள் மனைவி. இந்த ஊடல் பற்றிய செய்ததிகள் சங்க இலக்கியங்கள் முதல், தெய்வீக இலக்கியம் வரை எல்லாதமிழ் ஆவணங்களிலும் சுவை பெற பதிவாகி யுள்ளது.

 ஊடல் என்றால் என்ன?
தமிழர் வாழ்வை இரண்டாக பகுத்தனர். காதல் வாழ்வை,அகம் என்ற அகப்பொருள், என்றும், மோதல் வீரத்தை புறம் என்று புறப்பொருள் என்றும் இலக்கணம் வகுத்தனர். வீரத்தின் விளை நிலமாக தமிழன் எதிரியை இமயம் வரை சென்றும், கடல் கடந்து சென்றும் அழித்தான் என்ற வரலாறுகள் இலக்கியங்கள் வாயிலாக நாம் கண்டோம்.
  ஆனால் வீட்டுக்குள் இருக்கும் மனைவியின் எதிர்ப்பை கண்டு அஞ்சி அவளை எதிர்த்து வீழ்த்த எண்ணாது பணிந்து துதித்தான். எதிரியை வீழ்த்தியவன் எதிரில் நிற்கும் மனைவியின் ஊடல் எதிர்ப்பில் விழுந்தான்.
  மனைவியின் சிறு மனக்குறைவே ஊடல், பொய் கோபம் கொண்டு பேசாது போவாள். அவள் ஊடல் போக்க மன்றாடி தாள் பணிவான் தலைவன். கெஞ்சியும் கொஞ்சியும் அஞ்சியும் பேசி மன்னிப்பு கேட்பான் , தூதும் அனுப்புவான்.
 கணவனே தெய்வம் என்றும், வேறு தெய்வம் எனக்கு தேவை யில்லை என்றும் தினமும் தொழுது எழுபவள் மனைவி, இத்தகு மனைவியை ஊடலில் கணவன் தொழுது எழுவான் கணவன் என்று தொல்காப்பியம் காட்டுகிறது.
  ஆற்று நீரை அப்படியே விட்டால் கடலில் கலந்து வீணாகும். அணையிட்டு தடுத்தால் மின்சாரம்உருவாகும். ஆசை வெள்ளம் கூடி மகிழவே ஓடும் அதை ஊடலால் தடுக்கும் போது உறவும், அன்பும் வலிமை பெறும்.
  தெய்வங்களின் ஊடல்
சிவபெருமான் மீது உமாதேவி கொண்ட ஊடல் பற்றி பல இலக்கியங்கள் பேசுகின்றன. வரலாறுகளில் இன்னும் திருவிழாக்களாக இன்றும் சிவலாயங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. மார்கழி மாதம் திருவாதிரை நாளில் நடராஜர் மீது சிவகாமி அம்மாள் காட்டும் ஊடல்  எல்லா சிவாலயங்களிலும் சிறப்பாக நடைபெறுகிறது.
 நடராஜர் சிவகாமி இருவருமாகஆலயத்தில் இருந்து புறப்படுவர். நான்கு மாட வீதியில் வலம் வருவர் கோயில் புகுமுன் சிவகாமி முந்திக் கொண்டு ஆலயத்துள் சென்று பெருங்கதவை மூடிக் கொள்வார். நடராஜர் வீதியில் தனியே நிற்பார்.உடனே சுந்தரமூர்த்தி சிவகாமிஅம்மையாளிடம் சென்று ஊடல் தீருமாறு வேண்டி திருமுறை பாடி, பின் ஊடல் தீர்ந்து நடராசருடன் சிவகாமி சேர்ந்த காட்சி தருவது ஊடல் திருவிழா ஆகும்.இதே திருவிழா திருவண்ணாமலையிலும் இன்றளவும் நடைபெற்று வருகிறது.
 ஊடல் காரணம் 
அம்பிகை சிவன் மேல் கொண்டதற்கான காரணங்கள் சுவாரஸ்யம் மிக்கதாகும். மகளிர்களின் ஊடல் காரணம் பெரும்பாலும் மற்றொரு பெண் தன் வாழ்வின் குறுக்கே வருவதுதான்.
  சிவபெருமான் சடையில் கங்கையை மறைத்து வைத்திருந்தார். இதனை அறிந்த உமாதேவி ஊடல் கொண்டார்.  
 பிருங்கி முனிவர் சக்தியை வணங்காது சிவனை மட்டுமே வழிபட்டார் இதனால் உமாதேவி ஊடல் கொண்டாள் என்னை வணங்காத முனிவருக்கு ஏன் காட்சி தந்தீர் என்று ஊடினாள்.
 ஊடல் தீர்த்த சிவன்
தன் மனைவி ஊடல் தீர்க்க சிவன் அலைந்தார், அந்த நன்றிக் கடனாக சுந்தரர் சிவனுக்கும் உமாதேவிக்கும் ஊடல் தூதுவராய் சென்றார்.
 திருவாரூரில் பரவையார் கொண்ட ஊடலைத்தீர்தது வைக்குமாறு சிவனை வேண்டினார் சுந்தரர், திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்ததால் பரவையார் சுந்தரரிடம் ஊடல் கொண்டு கதவை சாத்த அவரை வெளியே நிறுத்தினார். பரவையார் வீடுதேடி சிவனார் ஊடல் தீர்க்க இரண்டு முறை நடந்து சென்று ஊடல் தீர்க்க அலைந்தார் என்பதை திருமுறை வாயிலாக அறியலாம்
 இது பாேன்று சங்க இலக்கியங்களில் தசரதன்  கையேகி ஊடலாக இராமாயணத்ததிலும், சிலப்பதிகாரத்திலும் பாண்டியமன்னன் தன் மனைவியின் கால் சிலம்பிற்காக ஊடல் கொண்டதன் காரணத்தால் கண்ணகியின் கால் சிலம்பை தனதென்று தவறாக புரிந்து நடந்த வரலாறு ஊடல் காரணத்தால் என்பது தெளிவாகும்.
 உப்பின் அளவு மீறல் விருந்தை கெடுக்கும், ஊடலின் அளவு மீறல் வாழ்வைட கெடுத்து விடும். இதை உணர்த்தவே தெய்வங்கள் ஊடல் கொண்டும், பிறகு அதில் வெற்றி கண்டும் நமக்கு வழிகாட்டின.
 ஊடலின்உவகை மகிழ்வு உள்ளது. என்பதை கூறிதிருக்குறளின் இறுதியில் ஊடல் உவகை அதிகாரத்தை முடிக்கிறார் வள்ளுவர்
  " ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம்
     கூடி முயங்கப் பெறின் "
 தெய்வங்கள் காட்டிய வழியில்எல்லைக்குள் நின்று ஊடல் கொண்டு மீண்டு வர வேண்டும். ஏனெனில் ஊடல் உட்பகை ஆகியே விரிந்து விவாகரத்து செய்துவிடல் தமிழர் பண்பாடு அல்ல. ஊடலில் தோற்றவர் கூடலில் வெல்வர் என்கிறார் வள்ளுவர்
திருச்சிற்றம்பலம்
நன்றி திருக்கோயில் கட்டுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக