ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

யார் பெரியவர்? யார் சிறியவர்?

யார் பெரியவர்? 
யார் சிறியவர்?

Image result for பெரியோர் எல்லாம் பெரியவர் அல்ல!

மன்னரை மதிக்காதவர்கள், உண்மையை மதிப்பவர்கள் நாட்டில் இருக்கக் கூடுமோ?
இவ்வாறு அரசர் ஒருவருக்கு ஐயப்பாடு உண்டாயிற்று
தமது சேவகனையை கூப்பிட்டார். 
நாளை காலை உன் கண்ணில் முதன் முதலாக தென்படும் மூவரை நீ அழைத்து வா என்றார் அரசர்
சேவகனை அரசரின் உத்தரவுப்படி ராஜவீதியில் வந்த மூன்று நபர்களை ராஜாவின் பிடித்துக் கொண்டு வந்தான்
அவர்களில் ஒருவர் பாண்டியத்துவம் நிறைந்த புலவர் ஒருவர், கோவில் பூசை செய்யும் பரமவைதீக சிகாமணி ஒருவர், தன்னை விற்கும் விலைமகள் ஒருத்தி, மூவரையும் அரசர் முன் கூட்டிவந்து நிறுத்தினார். அவர்களை தனித்தனியாக சந்தித்தார் அரசர்
 பாண்டியத்துவம் பெற்ற புலவரிடம் புலவரே " சகலசாஸ்திரம் படித்த பண்டிதரே கோயில் பூசை தேர் திருவிழா முதலானவை நடப்பதைறீவீர் இதனால் மக்களுக்கு பயனில்லை என்று யாம் நினைக்கிறேன். தங்கள் கருத்து என்ன? என்று கேட்டார் அரசர்
  படித்த மேதாவி சில விநாடிகள் யோசித்து விட்டு முடிவைக் இவ்வாறு கூறினார்.
 அரசர் பெருமானே ஆலயத்தால் யாருக்கு என்ன பயன்? ஆலய வழிபாடு பயனற்றது என்பதற்கு என்னால் மேற்கோள் சொல்ல முடியும் என்றார்,
 ஆலய வழீபாட்டால் பயன் உண்டா இல்லையா? என்றதற்கு இல்ைல என தீர்மானமாக கூறிவிட்டார் பண்டிதர் எனவே அவரை ஆசனத்தில் உட்கார வைத்துவிட்டனர்
 அடுத்து கோயில் குருக்கள் வந்தார். அவரது திருமேனியில் வழிபாட்டு சின்னங்கள் முத்திரைகள் யாவும் விளங்கின, அவரிடமும் இக்கேள்வி கேட்கப்பட்டது
 ஆலய வழிபாட்டால் நன்மை உண்டா? என்றார் மன்னர்
அரசர் பெருமானே என் போன்று ஆலயத்தில் சேவஞ் செய்பவர்களுக்கு ஆலயத்தின் மூலம் வயிறு நிறைகிறது. ஆலயம்  இல்லாது போனாலும் என் போன்றவர்கள் உண்ண முடியும் ஆலய வழிபாடு தேவை இல்லை என்பது என் கருத்து சொல்லி விட்டு அவரும் ஆசனத்தில் அமர்ந்தார்
  அடுத்து விலைமகள் வந்தாள். பழைய கேள்வியே அவளிடமும் கேட்கப்பட்டது
 அரசர் பெருமானே நான் படித்த பண்டிதர் அல்ல. பூசை செய்யும் குருக்களும் அல்ல, அறிவும், அனுபவமும் இல்லாதவள். ஆண்டவன் இல்லையென்று முடிவு செய்வதும் ஆலயத்தை வழிபாடு செய்யாமலும் என்னால் இருக்க முடியாது. அரசர் சொன்னார் என்பதற்காக தலையாட்டும் துணிச்சல் இல்லாத பேதை. ஆண்டவன் என்ற தத்துவத்தால் மனதில் நிம்மதி, பிறருக்கு இரக்கப்படும் சமுதாயப் பண்பாடு, பணப்பங்கீடு யாவும் நடக்கின்றன. ஆண்டவனை சுற்றி ஊர், அமைகிற மாதிரி உள்ளங்களும் அமைதல்வேண்டும். தங்கள் கருத்துக்கு எதிரான கருத்தை கூறியதால் எனக்கு என்ன தண்டனை தந்தாலும், அது ஆண்டவன் கருணை என்று ஏற்றுக் கொள்கிறேன்.
 பண்டிதரும், கோயில் குருவும் சிரித்தனர்.
அரசர் பெருமான் எழுந்து " தாயே ஆண்டவனின் தன்மையை அரச பதவியுற்றவன் சாெல்லுக்காக ஏற்காது மறுக்கும் அளவு நெஞ்சத் துணிவுடன் கூறும் தன்மை உங்களுக்கு இருக்கிறது. பக்தர்கள்  எவருக்கும் பயப்பட மாட்டார்கள், பக்தியை பற்றி படிப்பவர்கள், பகவானின் அருகில் நின்று பயன் அடைவார்கள் சந்தர்ப்ப வாதிகள்! தாங்களோ உண்மையின் வாரிசு கடவுளுக்கு அஞ்சுபவர் என் வணக்கததிற்கு உரியவர் தாங்களே என்று விழுந்து வணங்கினான்.
 படித்த மேதாவிகள், பக்தி மார்க்கம் கைங்கரியம் செய்கிறவர்களும் எப்படி சாய்வார்கள் பாமர்கள் உறுதிப்பாட்டுடன் இருப்பாா்கள்.
 பெருயோர் எல்லாம் பெரியவர் அல்ல!
 சிறியோர் எல்லாம் சிறியவர் அல்ல!!
திருச்சிற்றம்பலம்
நன்றி ; திருக்கோயில் இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக