வியாழன், 2 செப்டம்பர், 2021

சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில்அமாவாசை பூசை

 அமாவாசை பூசை 

சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில் நிகழும் ஆவணி மாதம் 21ம் நாள் 06.08.2021 )திங்கட் கிழமை காலை சுமார் 9.00 மணி அளவில் திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு மன்றத்தின் ஆன்மீகப்பணியின் தொடர்ச்சியாக  வைகாசி மாத அமாவாசை, அன்று  சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில் அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்மிகு இராஜகணபதிக்கும்,  அருள்மிகு கைலாய நாதருக்கும்,  அமாவாசை பூசை , தேவாரப் பாடல்களுடன், தமிழ்  அபிசேக ஆராதனையுடன் சிறப்பு பூசையும்,  அடியார்களின் கைங்கரியத்தால் நடைபெற உள்ளது.. இங்கு நடைபெறும் பூசையில் அடியார்கள் தாங்களே அபிசேப் பொருட்களுடன் கலந்து பூசையின் முடிவில் அர்ச்சனை செய்து  கொள்ளுதல் மிக சிறப்பு.  இறைவனுக்கு தாங்களே மனம் , மொழி , மெய்யால் பணிவிடை செய்து தாங்களே பூவும் இலையும் கொண்டு இறைவிடம் வேண்டி தமிழால் அர்ச்சனை செய்யலாம். அவனை தீந்தமிழ் கொண்டு மனத்தால் நினைத்து, வாயால் அவன் புகழை போற்றி, மெய்யால் (கரங்களால்) பூ, இலை கொண்டு அர்ச்சித்து வணங்கி அருள் பெறலாம்.அவன் அருள் இருந்தால் தான் அவன் தாள் வணங்கி பூசையில் பங்கு கொள்ள முடியும். புண்ணியம் செய்தோரே  இதற்கு வாய்ப்பு கிடைக்கும்

திருச்சிற்றம்பலம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக