வியாழன், 30 செப்டம்பர், 2021

சைவ தத்துவ சாஸ்திர சுருக்கம்

 சைவ தத்துவ சாஸ்திர சுருக்கம்

கடவுள் ஒன்றே, உயிர்கள் பல. உயிர்களின் அறிவாற்றல் ஆணவத்தினால் தடை உண்டுள்ளது. உயிர்கள் கன்மங்களை செய்து கர்ம பலன்களை அனுபவித்துவருவதன் மூலம் அத்தடை படிப்படியாக விலக்கப்படும்.
துன்பம் தவறான செயற்பலன் , இன்பம் சரியான செயற்பலன். ஆதல் இதுவே கர்ம நியதி.
ஒன்றும் தவறாமல் சகல உயிர்களும் சிவமாம் தன்மை பேரின்ப அனுபவம் பெறுவதற்குரியன. இதற்காக உயிர்கள் பல பிறப்பிற்கு உட்படுத்தப்படுகின்றன. மறுபிறப்பு உண்மை கோட்பாடு சைவ தத்துவ சாஸ்திரத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்று ஆணவ மறைப்பு.
உயிர்குயிர் தன் மறைப்பாற்றலில் வேறுபடுகின்றன. இந்நிலையானது உயிர்களின் சமத்துவமின்மையும் சிவமாம் தன்மை அடைவது வேறுபடுகிறது. லட்சக்கணக்கான உயிர்கள் இதுவரை சிவமாம் தன்மை எய்தியுள்ளது. லடசக்கணக்கானவை மேலும்எய்த உள்ளது.
உயிரினது பரிணாம வளர்ச்சி பேறு கடவுள் சந்நதியிலேயே வாய்க்கிறது. இதில் ஐவேறு கட்டங்கள் அமைகின்றன.
உயிரானது தான் கன்மம் இயற்றி ஆணவத் தடையிலிருந்து விடுபடுவதற்கு சாதனமான உடலை பெறுதல் முதற்கட்டம். இதுவே இறைவன் செயற்பாட்டில் "படைத்தல்" எனப்படும்.
இதன்மூலம் உயிர்பெறும் உடலானது அதன் பழவினையின் ஒருபகுதியானதும், இப்பிறப்பில் அனுபவிக்கும் தொழில்வரை குறித்த தேகம் பாதுகாக்கப்பட வேண்டியதாகிறது. இந்த கட்டம் " காத்தல்" எனப்படும்.
பிராப்த அனுபவ ஒழிவில் தேகம் அழிக்கப்படும் அது அழித்தல் எனப்படும்.
உயிரை இயல்பாகவே பற்றியிருந்த ஆணவ பிடியை பலமிழக்க செய்தல் " மறைத்தல் " எனப்படும்.
ஆணவத் தடை அடியோடு இல்லாமல் அகற்றப்படும் நிலையில் உயிருக்கு சிவமாம் தன்மை பெறுவாழ்வு கொடுக்கபடுதல் " அருளல் " எனப்படும்.
உயிர் பரிணாம விருத்தியடையவைக்கும் மகிமை மிக்க கடவுள் " சந்நதி சக்தி" எனப்படும்.

மேற்கண்ட ஐந்து கட்டங்களில்முதல் நான்கையும் அதிஷ்டித்து நடத்தும் சக்தி ஆதிசக்தி அல்லது திரோதன சக்தி எனப்படும்.
ஐந்தாவது கடடத்தை மேவி நின்று நடத்துஞ் சக்தி அருட் சக்தி எனப்படும். இவ்விரு சக்தியும்ஒன்றே , செயற்பாட்டால் பெயர் வேறுபாடு என்பதாகும்.
ஆணவம் , கன்மம், மாயை என்ற மூன்றும் பாசங்கள் எனப்படும்.
ஆணவ மலத்தை நீக்க இறைவனால் வழங்கப்பட்டதே கன்மம், மாயை , மாயை மூலம் உயிர்கள் அனுபவிக்க உலகம், உடம்பு கொடுத்து ஆணவ இருளை கன்மம் என்ற வினை அலலது செயலால் நீக்கி சிவமாம் தன்மை அடைவதே மானிடப் பிறப்பின் பயனாகும் என்பதை விரிவாக விளக்குவதே சைவ சித்தாந்தம்.
திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக