வெள்ளி, 1 செப்டம்பர், 2023

ஆவணிமாத மகா சங்கட கரசதுர்த்தி பூசை

 ஆவணிமாத மகா சங்கட கரசதுர்த்தி  பூசை

சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில் அருள்மிகு இராஜகணபதி விநாயகருக்கு  ஆன்மாக்களின் சங்கடங்களை தீர்த்தருள மகா சங்கட கரசதுர்த்தி பூசை



நாள்  03.9.2023ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 8.00 மணி அளவில் திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு மன்றத்தின் ஆன்மீகப்பணியின் தொடர்ச்சியாகவும் சக்தி பீட உபாசகர்களின் துணையயோடும்  ஆவணி  மாத மகா சங்கட கரசதுர்த்தி  பூசை , ஔவையார் அருளிய விநாயகர் அகவல் தோத்திரப் பாடல்களுடன், தமிழ்  அபிசேக ஆராதனையுடன் சிறப்பு பூசையும் அடியார்களின் கைங்கரியத்தால் நடைபெறவுள்ளது.. இங்கு நடைபெற உள்ள பூசைக்கு  அடியார்கள் தாங்களே அபிசேப் பொருட்களுடன் கலந்து கொள்வார்கள். இறைவனுக்கு தங்களே மனம் , மொழி , மெய்யால் பணிவிடை செய்து தாங்களே பூவும் இலையும் கொண்டு இறைவிடம் வேண்டி தமிழால் அர்ச்சனை செய்து வழிபட வுள்ளது. அவனை தீந்தமிழ் கொண்டு மனத்தால் நினைத்து, வாயால் அவன் புகழை போற்றி, மெய்யால் (கரங்களால்) பூ, இலை கொண்டு அர்ச்சித்து வணங்கி சங்கடங்கள் தீர கணபதி அருள் பெற  அன்புடன் வேண்டிக் கொள்கிறோம் 

திருச்சிற்றம்பலம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக