சனி, 10 செப்டம்பர், 2011

Alayam

ஆ " என்பது ஆன்மாவையும : "லயம்" என்பது ஆன்மா உறையும் இடம்
கோவில் என்பது "கோ" என்பது கடவுளையும் " வில்" என்பது உறையும்இடத்தையும் குறிக்கும்

கோபுரம்: - கோபுர தரிசனம் கோடி புண்ணியம் கோவிலின் சின்னத்தை எடுத்துக் காட்ட கோபுரம் அமைத்து சிறப்பு செய்துள்ளனர் இதில் ஒன்றடுக்கு முதல் கோபுரத்தின் உயரத்திற்கு ஏற்ப அதன் ஆகம விதிகளுக்கு ஏற்ப அடுக்குகள் அமைத்துள்ளனர்,அதனை அழகுபடுத்த வரலாற்று கதைகளை கூறும் கதைகளுக்கு ஏற்ப சி ற்பங்கள் வேலைப்பாடுகளுடன் அமைத்துள்ளனர்,
கொடிமரம்:- அசுரர்களை அகற்றவும் சிவகணங்களையும் தேவர்களையும் அழைக்கவும் பக்தர்களை பாதுகாக்கவும் கொடிமரம் நிறுவப்படுகிறது,
கொடிமரத்தின் அடிப்பாகம் பிரம்மாகவும் நடுப்பகுதி விஷ்ணுவாகவும் மேல்பகுதி ருத்ரனாகவும் கருதப்படுகி றது,
சிவன் கோவில் கொடிமரத்தின் மேல் நந்தியும் பெருமாள் கோவில் கோவிலில் கருடனையும் சக்தி கோவிலில் சிங்கத்தையும் விநாயகர் கோவிலில் மூஷகத்தையும் முருகன் கோவிலில் மயிலையும் கொடிமரத்தின் மேல் கா ணலாம்
பலிபீடம்: - கொடிமரத்தை தொடர்ந்து பலிபீடம் காணப்படும் பலிபீடத்தில் நமது ஆசைகளை பலியிட்ட பின்னரே உள்ளே செல்லவேண்டும்
கர்ப்பகிரகம்:- ஆலயங்களில் உள்ள கர்ப்பகிரகம் இறைவனின் உறைவிடமாகும், மனித உறுப்புகளில் சிரசு எவ்வளவு முக்கி யமானதோ அதே முக்கியத்துவம் கர்ப்பகிரகத்திற்கு உண்டு, ஆதலால் இறைவனின் உறைவிடமான கர்ப்பகிரக ஆவரணம் மிக நுணமை வாய்ந்த
ஸ்தல விருட்சம் :- ஆதி காலத்தில் மஹரிஷிகள் இந்த தல மரங்களின் அடியில்தான் தியானம் செய்து சித்தி பெற்றனர் எனவே ஸ்தல விருட்சம் புனிதமானது,
நைவேத்யம்:- தினமும் இறைவனுக்கு நைவேத்யம் செய்துவிட்டு தான் சாப்பிட வேண்டும் . வீடுகளில் சாப்பி டும் போதும் சாப்பாட்டிற்கு முன் இறைவனுக்கு மனதில் நன்றி சொல்லி சாப்பிட வேண்டும், முடிந்தவரை ஏழைகளுக்கு அன்னதா னம் இட்டு சாப்பிடுவது சாலச்சிறந்தது,
அபிஷேக பொருட்கள்;- மஞ்சள்.நீர்.சந்தனம். பஞ்சாமிர்தம். பால். தயிர். எண்ணெய். திரவியப் பொடி. மாப்பொ டி, பஞ்சகா வியம். நெய். பழச்சாறு. தேன். இளநீர். பன்னீர். அன்னம், விபூதி,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக