திருவாசகத்தின் பெருமை மற்றும் சிறப்பு
திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது பழமொழி
திருவாசகத்தின் பெருமை என்பது மாணிக்கவாசகர் இயற்றிய பக்தி இலக்கியம், சைவத் திருமுறைகளில் எட்டாவது திருமுறை, அதன் உருக வைக்கும் தன்மை மற்றும் பக்தியைப் பெருக்கும் சக்தி ஆகியவற்றைக் குறிக்கிறது. "திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்" என்ற பழமொழி அதன் மகத்துவத்தை உணர்த்துகிறது இது சிவனின் மேல் உள்ள பக்தி மற்றும் அனுபவ முறைகளை தெளிவாக விளக்கிறது.எனவே இது ஒரு பக்தி இலக்கியம்
இது சைவத் திருமுறைகளில் எட்டாவதாக இடம்பெற்றுள்ளது.
உருக வைக்கும் தன்மை: அதன் பாடல்கள் பக்தர்களின் உள்ளத்தை உருக்கி, சிவானுபவத்தில் திளைக்கச் செய்யும் தன்மை கொண்டவை. "திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்" என்ற பழமொழி இதைத் தெளிவுபடுத்துகிறது.
இது முற்பிறவி மற்றும் தற்போதைய வினைகளை நீக்குவதாகக் கூறப்படுகிறது.
டாக்டர் ஜி.யு. போப் போன்ற அறிஞர்கள் திருவாசகத்தின் மகத்துவத்தை உணர்ந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர்.
** செல்வாக்கு:** தாயுமானவர் மற்றும் இராமலிங்க அடிகளார் போன்ற பல பக்தி இலக்கியப் புலவர்களின் பாடல்கள் திருவாசகத்தின் அமைப்பைப் பின்பற்றி அமைந்துள்ளன, இது அதன் செல்வாக்கைக் காட்டுகிறது.
இதன் பெரும் சிறப்பு °
மாணிக்கவாசகரின் இந்நூலினைப் பல சமயத்தவரும் புகழ்ந்துள்ளனர்.
மாணிக்கவாசகர் எழுதி தில்லையில் இறைவனிடம் வைக்க அவரே கையெழுத்தினை இட்டதாகக் கூறுவர்.
தமிழில் திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் எனும் பழமொழி உள்ளது.
மனிதன் தெய்வத்திடம் கூறியது திருவாசகம்; மனிதன் (திருவள்ளுவர்) மனிதர்களுக்குக் கூறியது திருக்குறள் என்றொரு மூதுரையும் தமிழில் உள்ளது.
"பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் சிறப்புடையது. (10-ஆவது திருமுறை). ஆனால், அதைவிட சிறப்புடையதும் சிகரமானதும் திருவாசகமே' - என்கிறா் திருமுருக கிருபானந்த வாரியார்
இந்நூல், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள், அவற்றைக் களையும் முறைகள், இறையாகிய பரம்பொருளை நாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவற்றை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளல், அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல், இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல், அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறை பக்தியாக வடிவெடுத்தல், இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவற்றை முறையாகக் கூறுகிறது இது ஒரு அன்பு மறையையும் போற்றும் அன்பு மற்றும் அற நுால் இது திருவாசகத்தேன் என்று போற்றப்படுகிறது. தேன் மனித உடலில் உள்ள நோய்களுக்கு மருந்தாகுவது போல் இது மானிடரின் உடற்பிணிக்கு மருந்தாக ஆணவ மலத்தை போக்கும் அருமருந்தாகவும் அமைந்துள்ளது எனவே இதனை உயிர் பிணிக்கும் மருந்து என்கின்றனர் பெரியோர்.
தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறத்து ஆனந்தமாக்கியதே எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசம் என்னும் தேன்
இந்நூல் படிக்கும் தோறும் கேட்கும் தோறும் உள்ளத்தை உருகவைத்து மனத்தை அன்பு கசிய வைக்கும் தன்மை கொண்டதால் திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பதாகும்.
இதன் கருத்தினைக் கொண்டே சிவபிரகாச சுவாமிகள் தன் மாணிக்க வாசகரின் நான்மணி மாலையில்
" வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி
நெஞ்சு நெக்கு உருகி நிற்பவர்க் காண்கிலேம்
திருவாசகம் இங்கு ஒருகால் ஓதின்
கருங்கல் மனமும் கரைந்து உக கண்கள்
தொடுமணற் கேணியில் சுரந்து நீர்பாய
மெய்ம் மயிர் பொடிப்ப விதிரவிதிர்ப்பு எய்தி
அன்பர் ஆகுநர் அன்றி
மன்பதை உலகின் மற்றையர் இலரே என்கிறார்
இத்திருவாசகததை மாணிக்க வாசகர் தன் அறிவு கொண்டே புலமை கொண்டே பாடாமல் இறைவனுடைய அருளையே துணையாகக் கொண்டு தாம் ஒரு கருவியாக மட்டும் நின்று அவர் பாடிய திருவாசகப்பாடல் இறையனுவத்தின் பிழீவாகவே விளங்குகின்றன.
திருவாசகத்தின் சிறப்பினை திருகளிற்றுப்படியார் என்ற நூலு் பின்வருமாறு கூறுகிறது. "இறைவன் தமக்கு நல்கிய பரமானந்தப் பயனை அடிகளார்தமது திருவாயில் மலர்ந்த சொற்களால் வெளியிட்டார் அதனை ஓதிய அன்பரெல்லாம் கருவாதையிலிருந்து விடுபட்டார், திருப்பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம் மூழ்கி புனிதன் மொழிந்த வாசகமே திருவாசகம் என்று பாராட்ப்படுகிறது.
திருச்சிற்றம்பலம்