செவ்வாய், 10 செப்டம்பர், 2013

Thirumandiram perumai


வேத(தேவ) மந்திரம் என்ற திருமந்திரம் தேவமொழிகளில் உள்ள ஆகமங்களின் தமிழ் மொழிபெயர்ப்புதான் திருமந்திரம், திருமூலர் அருளிய திருமந்திரம் எத்தனையோ காலம் கடந்து நாம் இன்னும் படிக்கும்படி இருப்பது என்பதே மிகப்பெரிய சான்று, இது இறைவன் கருனையால் இயற்றப்பட்டது.திருமந்திரத்திற்கு மறு மந்திரம் இல்லை என்பர் பெரியவர்கள், அது மகத்தான உண்மை. திருமந்திரம் சைவ சித்தானந்தம், சிவநெறி ஆகியவைகளை கடந்து தமிழ் மொழிக்கு கிடைத்த பொக்கிசம் என்றால் மிகையாகது. திருமூலர் அருளிய பல தத்துவங்களை நாம் தற்போது நடைமுறையில் நமக்கு அருளியது திருமந்திரம் என்று தெரியாமலே இன்றளவும் பயன் படுத்துகிறோம். உதாரணமாக. " அன்பே சிவம்" "தத்துவம்சி நீ அதுவானாய்" " ஒன்றே குலம் ஒருவனே தேவன்" " நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" " சீவன் (ஆத்மா) சிவனோடு கலத்தல்" " உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்" " யார்க்கும் இடுமின் அவர்இவர் என்னன்மின்" " பசுவுக்கு ஒர் வாய்உைற" " உண்ணும் போது ஒரு கைப்பிடி" ..... போன்றன. எம்பெருமான் கருனை பெற யாகமோ, பெருந்தவமோ, சாதாரண மக்களுக்கு தேைவயில்லை, தண்ணீரும், பூவும், பச்சிலை, (வில்வ இைல) போதும் என்கிறது திருமந்திரம், அத்துடன் துணிந்தவர்களுக்கு யோகம், குண்டலினி போன்ற கடுைமயான பயிற்சி முறைகளையும் கூறுகிறது. இன்றைய அறிவியலில் ஆராய்ந்து அறிந்த உண்ைமகளையும் அன்றே திருமந்திரத்தில் கூற்ப்பட்டுள்ளது. இதயம் இடப்பக்கம் உள்ளது பற்றியும், வயிற்றில் வளரும் கரு ஆணா, பெண்ணா, திருநங்கையா,என்பதையும், கர்ப்பம் தரிப்பது, ஊணமான குழந்தைக்கு காரணம், மற்றும் மனிதனின் முதிர்வு இறப்பின் இரகசியங்களையும் அதன் பிரணய சுவாசத்தின் மூலம் கணக்கிட்டு கூற்படுகிறது. அறநெறி நல்லொதழுக்கம், பற்றியும், தான சிறப்பு, பிறா் மனை நோக்கா, மது, அைசவ உணவு நெறி, என்பனவும், கொலை, களவு, வட்டி வாங்கல், போன்ற படுபாதக செயல்கள் பற்றியும், அரசனின் கடமை, கோவில் அைமப்பு, அந்தணர் வாழ்வு, ஒழுக்கம், போலிசாமியார் , செல்வ நிைல, மகளிர் ஒழுக்கம், அறம் போன்ற எல்லா மனித சமுதாயத்திற்கு தேவையான அனைத்து விசயங்களையும் காணலாம், திருமூலர் திருமந்திரம் சைவ நெறி, சிவனை அைடதல் என்பன தவிர்த்து, அதாவது ஒரு குறிப்பிட்ட மதத்தினை வலியுறுத்துவது மட்டுமன்றி அவற்றையெல்லாம் கடந்து, பொது மறையான திருக்குறளையும் தாண்டும் அளவிற்கு உலக மக்களுக்கு வாழ்க்கையின் அறநெறி ஒழுக்கம், ஒப்புறவு ஈதல், போன்ற அனைத்தும் உள்ளடக்கி உள்ளது திருமந்திரம், திருமூலரின் திருமந்திரத்தை படித்து, அறிந்து, கொள்வார்களாயின், மகாதவம் செய்த புண்ணியமும், ஈசனின் திருவடியை காண அருள் பெற்றவர்களாவார்கள், என்பது அசைக்கமுடியாத உறுதி. " திரு மூலரின் திருவடி போற்றி" " திருமந்திரத்தின் மேன்மை போற்றி" " ஓம் சிவ சிவ ஓம்" அன்புடன் சிவனடிமை சிவ, வை,பூமாலை, சுந்தரபாண்டியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக