புதன், 11 செப்டம்பர், 2013


திரு ஐந்தெழுத்தின் உயர்வு தீமைகள் வராமல் தடுக்கும் படைக்கலம் சைவ மதத்தின் மூல ஆதாரமான திரு ஐந்தெழுத்தின் மகத்துவம் சொல்லில் அடங்கா.சிவாயநம - நமசிவய - என்ற ஐந்தெழுத்து திரு நீறு, உருத்திராட்சம் ஆகியவை அணிவது தகவு எனும் வேலியாகும், இராணுவ வீரர்களுக்கு உரிய ஆடையை அணிந்த உடனே வீரவுணர்வு மேலிடுவது போல உணர்க, திரு அப்பர்பெருமானும் தனது பதியத்தில் படைக்கல மாகஉன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவிற் கொண்டேன் இடைக்கலம் அல்லேன் எழுயிறப் பும்உனக்கு ஆட்செய்கின்றேன் துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் தூநீறு அணிந்துள் அடைக்கலம் கண்டாய்அணிதில்லைச் சிற்றம்பலத்து அரனே - திருநாவுக்கரசர் பெருமான் எப்பொழுதும் மனதால் தொழுது வாயால் துதித்து, உடலால் வணங்கித் திருநீறு அணிந்து தங்களின் உடைமைப் பொருளாக உள்ளேன், காத்தருள் புரியுங்கள் சிற்றம்பலத்து பெருமானே. எல்லா வகையான தீமைகளிலிருந்தும் ந்ம்மைக் காப்பது திருஐந்தொழுத்து என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும், இதைவிட வேறு மந்திரம் வேண்டாம். வேறு உபாயமும் வேண்டாம் நமக்கு. இந்த ஐந்தொழுத்தைச் சொல்லிக் கடலில் கல்லையும் மிதக்கச் செய்து கரையேறியவர் திருநாவுக்கரசு சுவாமிகள். அவர் கூறிய இந்த ஐந்தொழுத்து மந்திரமான சிவாயநம என்பதே நமது படைக்கலமாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக