ஞாயிறு, 15 மார்ச், 2015

உங்கள் சிந்தனைக்கு சில:


உங்கள் சிந்தனைக்கு சில: அலைகள் நிறைந்த கடலில் அல்லி தோன்றாது. ஆசைகள் அலைபாயும் மனத்தில் ஆண்டவன் தோன்றுவதில்லை. ஆசைகள் குறையகுறைய ஆண்டவனை நெருங்கலாம் மதம் என்பது மனத்தில் ஓழுக்கத்தை வளர்க்க ஏற்படுத்தப்பட்டவையே. சமரசம்தான் சமயத்தின் அடிப்படை அஞ்சாமை ஆயுளை வளர்க்கும் அச்சம் ஆயுளை குறைக்கும் நல்லவர்கள் ஒழுக்கசீலர்கள் எதை விரும்புகிறார்களோ அதையே நாம் செய்யவேண்டும் அவரவர் தகுதிக்கேற்ப தான தருமங்கள் செய்யவேண்டும். நம் மனச்சாட்சி என்ற கடவுள் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை ஒவ்வொரு செயல் செய்யும் போதும் எண்ண வேண்டும். கோபம் அன்பை அழிக்கின்றது. ஆணவம் அடக்கத்தை அழிக்கின்றது, நிதானமும் கடின உழைப்பும் வெற்றியின் வேர்கள் துன்பத்தை மறக்கலாம், ஆனால் அதன் மூலம் பெற்ற பாடத்தை மறக்கக் கூடாது. துன்பங்கள்நிறைந்த மனிதப்பிறவியை கடக்க இறைவனை செபித்துக்கொண்டே இருக்க வேண்டும் இறைவிடம் சரணடைந்தால் விதியே மாற்றப்பட்டு விடும் பிற உயிர்கள் நம்மால் எவ்விதத்திலும் துன்பப்படக்கூடாது பொது சொத்தில் ஆசை வைக்கவே கூடாது. எல்லாம் இறைவருடைய செயல் என்று கவலையின்றி வாழ்க்கை நடத்த வேண்டும். திருச்சிற்றம்பலம் நன்றி : தமிழ் வேதம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக