செவ்வாய், 3 மார்ச், 2015

"முருகா" என்றால்...........................


"முருகா" என்றால்........................... வரும் மாசி பெளர்ணமியன்று மாசிமகத் திருநாளில் "முருகா" என்னும் திருநாமத்தை மனம் உருகி ஒருமுறை கூறினாேல போதும் அவன் மயிலேறி ஓடி வந்து மனிதர் தம் மனக் குறைகள் அனைத்தையும் நீக்கியரு்ள்கிறான். முருகு என்ற சொல்லுக்கு அழகு , மணம், இளமை, கடவுள் தன்மை என்னும் பொருள்கள் உண்டு. அந்தப் பொருள்களுக்கெல்லாம் இலக்கணமாய் திகழும் திருவுருவம் முருகப் பெருமானின் பேரழகு்த் திருவுருவம். பார்த்தவுடன் மனதுக்கு அமைதியைத் தரக் கூடியது முருகப் பெருமானின் கருணை ததும்பும் முகம். சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து ஞானத்தின் உருவாய் தோன்றியவர் முருகன். மனிதர் மனத்தில் தோன்றும் அறியாமை, அகந்தை, முதலிய இருளை போக்கும் ஞானப் பேரொளியே முருகன். உலகம் உய்வதற்காக சிவப் பரம்பொருளே முருகனாகத் தோன்றினார், அன்னை பராசக்தியே கந்தன் கையில் வேலாக இருக்கிறாள். ஆதலால் முருகன் சிவசக்தி ஐக்கிய சொரூபனாக இருக்கிறான். " முருகா" என்னும் திருநாமத்தை உள்ளம் உருக உருகினாலே போதும் உருகியவரின் மனக்கவலைகள் யாதும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இப்பிறப்பில் தேவையான அனைத்து அன்பங்களையும், இப் பிறவி முடிந்து விண்ணுலக இன்பங்களையும் அருள்கிறான். அதாவது இகபர சுகங்கைள அருள்வதில் நிகரில்லாதவன் முருகன். சிவனுக்கும் அம்பிகைக்கும் மைந்தனாக விளங்கும் முருகன் திருமாலுக்கும் மகாலட்சுமிக்கும் மருமகனாக விளங்குபவன். எனவே முருகனை வணங்குபவரகளுக்கு அவர்களும் எல்லா செல்வ வளங்களையும் வாரி வழங்கு கின்றனர், சூரபத்மனையும் அவன் கூட்டத்தினரையும் அழிப்பதற்காகவே முருகப் பெருமான் திருவ வதாரம் நிகழ்ந்தது. எனினும் இதன் மூலம் நாம் அறியும் உண்மை யொதெனில் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களை அழிப்பதற்காக தோன்றிய ஞானமே முருகன் என்பது. மேலும் முருகன் தமிழக் கடவுள் என்று அழைக்கப்படுவதன் காரணம் வள்ளி தெய்வானை என்ற தேவியா்களின் மகிமைகள் முருகனின் அடியார்களான நக்கீரர், ஆதிசங்கரர், குமரகுருபரர் ஆகியவர்களின் நூல்கள் வரலாற்றிலும் மருகனின் தனிப்பெரும் கருணையினை அறியலாம், ஞான சொரூபமான முருகனை வணங்குவோர்க்கு ஞானம், முக்தி, போன்ற கிடைத்தற்கறிய பேறுகள் அனைத்தும் கிடைக்கும், இந்த மாசி மகத் திருவிழா திருச் செந்தூர் மிகவும் சிறப்பு பெற்றது. மாசி மகத்தன்று பெருந்தேர் விழாவும், அதனை அடுத்து தெப்ப திருவிழாவும் சிறப்பு பெற்றது. கண்டு சுப்பிர மணி என்ற குமரபெருமான் அருள் பெற்றுய்ய் அன்புடன் வேண்டுகிறோம். http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக