வியாழன், 12 மார்ச், 2015

திருஐந்தெழுத்தின் ஆற்றல்


திருஐந்தெழுத்தின் ஆற்றல் " நல்லவர் தீயர் எனாது நச்சினர் செல்லல் கெடச் சிவ முத்தி காட்டுவ கொல்ல நமன்தமர் கொண்டு போமிடத் (து) அல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே." - திரு ஞானசம்பந்தர் தேவாரம் 3 நல்லவர, தீயவர், என்பது இன்றி அன்புடன் விரும்பி திருஐந்தெழுத்தை செபிப்பவர்கள் யாராக இருப்பினும் அவர்கட்குச் சிவமுத்தியை (பிறவாமை) அளிக்கும் ஆற்றலுடையவன திருஐந்தெழுத்தாகும் ( சிவாயநம) எமதூதர்கள் உயிரைக் கொண்டு செல்லும் மரணத்தறுவாயில் உண்டாகும் துன்பத்தை போக்குவனவும் திருஐந்தெழுத்தே ஆகும். "ஆதி மந்திரம் ஐந்தெழுத்து" என்பார் சேக்கிழார் சுவாமிகள். எல்லா மந்திரங்கட்கும் மூலமாய மந்திரம் திருஐந்தெழுத்தே ஆகும். இம்மந்திரத்தைவிட உயர்ந்த மந்திரம் உலகில் வேறு இல்லை. இதைச் செபித்தால் மற்ற எல்லா மந்திரங்களையும் செபித்தது போல ஆகும். புண்ணியர்கள், பாவிகள், யாவரும் இம்மந்திரத்தை செபிக்கலாம். என்பது திருஞானசம்பந்தரின் திருவுள்ளமாகும். தீயவரையும் புண்ணியவானாக மாற்றும் அரும்பெரும் ஆற்றல் இம்மகாமந்திரத்திற்கு உண்டு என்பதை அவரவர் அனுபவத்தால் உணரலாம், மரணத்தின் போது ஏற்படும் துன்பத்தையும் இல்லாமல் செய்யும் வலிமை உடையன திருஐந்தெழுத்து ஆகும். காலை , நண்பகல், மாலை உறங்குவதற்கு முன் ஆகிய காலங்களில் 108 முறை செபித்தால் நல்ல பலன் பெறலாம். இது குறித்து ஞானசம்பந்தன் கூறிய கருத்துக்கு மறுப்பு ஏது இவ்வுலகில், திருச்சிற்றம்பலம், ஓம் நமசிவாய ஓம் நன்றி: தமிழ் வேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக