திங்கள், 19 செப்டம்பர், 2016

திருநாமத்தின் மகிமை


திருநாமத்தின் மகிமை
இறைவனும் அவனுடைய திருநாமமும் வெவ்வேறல்ல, திருநாமம் என்பதே இறைவன்தான். இறைவனுடைய திருநாமம் மனதில் நிரம்பியவுடன் உள்ளம் இறைவனின் சன்னதியாகி விடுகிறது. நமது சிந்தனைகளை இறைவன்பால் நிறுத்த அவருடைய திருநாமத்தை இடையாமல் நினைவு கூர்வது எளிமையான வழி. திருநாமத்தின் மீது உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்தி நெறிக்கு கூட்டு விப்பது திருநாமம். காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமக்கு நன்னறிக்கு உய்ப்பதும், வேதம் நான்கிலும் மெய்பொருள் ஆவதும் நாதன் நாமம் நமசிவாயவே " என்கிறார் திரு ஞானசம்பந்தர். அது நான்கு வேதங்களின் உண்மை பொருளாக விளங்குபவனாகிய சிவபெருமானரின் திருநாமமான நமசிவாய என்ற திருவைந்தெழுத்தாகும். இம் மந்திரம் அனைத்து உயிர்களின் துன்பங்களையும் சொன்ன மாத்திரத்தில் நீக்கவல்ல அற்புத மந்திரமாகும் என்கிறார் சம்பந்தர். 
நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க என்று தொடங்கி சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கே என்கிறார் மாணிக்க வாசகர். இம்மந்திரத்தை பொருள் உணர்ந்தோ அல்லது உணராமலோ எப்படி சொல்லினும் உயர்வு உறுதி. அவர் திருநாமம் ஒருவனை ஆன்மீக வாழ்வின் உச்சத்திற்கு இட்டுச் செல்கிறது. இருளில் மூழ்கிய குருட்டு ஜீவனுக்கு வெளிச்சமாக இருக்கிறது. திரு நாமத்தின் சக்தி வெல்ல முடியாது.மனதில் திருநாமம் நிறையும் போது மனம் பணிவு, இறக்கம், இளக்கம் மடையும் நிலை ஏற்படுகிறது. நாம மகிமையால் மனமே இறைவனாக மாறுகிறது. திரு நாமதத்தில் தஞ்சம் அடைவதால் பல அதிசயங்கள் ஆற்ற முடியும். நீங்கள் எந்த இனம் , சாதி கொள்கை கொண்டவராயினும், இறைவனின் திருநாமத்தின் இனிய உறவை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் நாமம் என்னும் நதியில் நாளும் மூழ்கும் உங்கள் ஆத்மா தூய்மை அடைவதோடு யாவும் அறிந்த எங்கும் நிறைந்த இறைவனின் அருளாலும், அன்பினாலும் ஈர்க்கப்படும் என்பது உறுதி , திருநாமம் ஓதும் பழக்கத்தால் ஆசா பாசங்களில் அலையும் மனது கட்டுப்படும் திருநாமத்துடன் தியானம் செய்யும் போது முகமும் உடலும் ஒரு அசாதாரண ஒளியுடன் பிரகாசிக்கும். இமைப்பொழுதும் நீங்காமல் திருநாமத்தை சொல்லமுடியாவிட்டாலும், காலையில் தூங்கி எழும்போதும், இரவில் படுக்குக் செல்லும் போதும் மற்றும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லிவந்தாலே இறைவன் அருள் பெறமுடியும் என்பது உறுதி, பிறந்த பிறப்பின் மகிமை அடைய நாவுக்கரசர் பெருமான் இவ்வாறு கூறுகிறார். " திருநாமம் ஐந்தெழுத்தை செப்பாராகில், தீவண்ணர் திரம்ஓருகாலும் பேசாராகில் ஒருகாலும் திருக்கோவில் செல்லராகில், உண்பதன் முன் மலர் பறித்திட்டு உண்ணாராகின், அருநோய்கள் கெட வெண்ணீறு அணியாராகில் பெருநோய்கள் மிகநலிய வந்து செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே " என்கிறார். எனவே பிறந்த பிறப்பின் பயன் பெற திருநாமத்தை கூறி பயன் பெற்று வீடு பேறு அடைவோம், 
"ஓம் நமசிவாய"
தொகுப்பு : வை. பூமாலை சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக