செவ்வாய், 27 செப்டம்பர், 2016

சிகரம் தொட்ட நம் மண்ணின் மைந்தர்கள் (theni Anandham SK)


சிகரம் தொட்ட நம் மண்ணின் மைந்தர்கள்   (theni Anandham SK)







ஏழுர் சாலியர் சமுதாயத்தில் அவதரித்த ஸ்ரீவி. போத்தீஸ் நிறுவனத்திற்கு அடித்தபடியில் ஜவுளித்துறையில் வெற்றிகண்டவர்கள் தேனி ஆனந்தம் என்ற ஸ்தாபனத்தின் நிறுவனர் திரு, எஸ்கே என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் எஸ்.ஜி. நடராஜன் அவர்களும் மற்றும் அதன் பங்குதாரர்களான தர்மராஜ் மற்றும் செல்வராஜ் ஆகிய எம் மண்ணின் மைந்தர்களானவர்கள் தான் சிகரம் தொட்ட நம் மண்ணின் மைந்தர்கள்


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவி தாலுகா, சுந்தரபாண்டியத்தை சிறப்பு செய்யும் திரு நடராஜன் அவர்கள் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தாலும், இளவயதிலேயே வேளாண்மையிலும், வணிகத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு செய்யும் தொழிலே தெய்வம் என கொண்டு எத் தொழிலையும் சிறப்புடன் நடத்தும் பாங்கு அவருக்கு உண்டு, கல்வியிலும் எம். காம் படித்து அரசு வேலை வாய்ப்பிற்கு செல்லாமல் வணித்தில் நாட்டம் கொண்டு அவர்களுடைய மளிகைக்கடை, சுந்தரமகாலிங்கம் எண்டர்பிரைசஸ் என்ற உரக்கடை மற்றும் கற்பகம் டெக்டைல்ஸ் என்ற ஜவுளி நிறுவத்தினை அவர்களின் கூட்டுக் குடும்பத்துடன் சிறப்புடன் நடத்தி வெற்றிபெற்ற அனுபவம் கொண்டவர். எத்தொழில் செய்தாலும் அதில் ஒரு முத்திரை பதிக்கும் திறன் கொண்டவர் எஸ்கே. அவர்கள். உரக்கடை நடத்தும் போதும் சரி ஜவுளி வியாபாரத்திலும் சரி வாடிக்கையாளர்களை கவரும் மனப்பாங்கு அவருடைய தனி சிறப்பு, உரக்கடையில் வேளாண்மருந்து, உரம் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் அவர்களுடை திருப்தியே தனது திருப்தி என்று செயல்படும் தன்மை கொண்டவர் , வியாபாரம் முக்கியமல்ல என்பதை நன்கு உணர்ந்தவர், இதற்காக வேளாண் துறை அலுவலர்களிடம் தானே பயிற்சி கொண்டு செயல்படுவது அவரின் தனி சிறப்பு, இத்தன்மை கொண்டதால்தான் திரைகடல் ஒடி திரவியம் காண்பதுபோல் தேனி தனக்கு வியாபார தலமாக கொண்டு தேர்வு செய்து, தேனி ஆனந்தம் என்ற பட்டு ஜவுளி ஸ்தாபனம் அமைத்து முதல் சிகரம் தொட்டார்,

இதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் தனது மைத்துனர்களான தர்மராஜ் மற்றும் செல்வராஜ் அவர்கள்தான், இவர்கள் இருவரும் அந் நிறுவனத்தின் தூண்காளாக இருந்து தோள் கொடுத்தவர்கள்.

    தேனியில் வளர்ச்சி கண்டபோது தினமலர் நாளிதழ் க்கு பேட்டி கொடுத்த செய்தியையும் இங்கு வைத்துள்ளேன், அவர் அந்நாளில் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு கைத்தறி தொழில் நலிவுற்றபோது அரசு கஞ்சித்தொட்டியில் கஞ்சிவாங்கிக் குடித்த அனுபவத்தையும் காட்டியுள்ளார். தேனி நகரில் வளர்ச்சி கண்டபோது புதிய ஜவுளி ஷோரூம் திறப்பு விழாவிற்கு அமைச்சரர் திருமிகு பன்னீர்செல்வம் திறந்து சிறப்பு பெற்றதையும் காணலாம்,


அவரின் வளர்ச்சி சாலியர் சமுதாயத்தினரின் போத்தீஸ் நிறுவனத்திற்கு அடுத்த படிக்கல்லாக சிகரம் தொட்டு வருகிறார் என்பது மிகையாகாது, அதன் அடிப்படையில்தான் தற்போது காணும் திண்டுக்கல் புது ஜவுளி மாளிகை திறப்பு விழா



 வளரட்டும் அவ்வணிய வளாகம், அதன் அடிப்படையில் உயரட்டும் வேலை வாய்ப்பும் அதனைச்சார்ந்த சமுதாய வளர்ச்சியும்
தொகுப்பு : வை.பூமாலை, சுந்தரபாண்டியம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக