சனி, 3 டிசம்பர், 2016

தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் .... திருக்கோவலூர் வீரட்டம் அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று.

தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்  .... திருக்கோவலூர் வீரட்டம்
அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று.


இறைவர் திருப்பெயர்: வீரட்டேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: சிவானந்தவல்லி, பெரியநாயகி, பிருகந்நாயகி.
தல மரம்: வில்வம்.
தீர்த்தம் : தென் பெண்ணையாறு (தட்சிண பிநாகினி).
வழிபட்டோர்: மெய்ப்பொருள் நாயனார், நரசிங்கமுனையரையர் (சுந்தரரை வளர்த்தவர்), 1. சம்பந்தர் - படைகொள்

தல வரலாறு

ஊர் பெயர் திருக்கோவலூர்; தலத்தின் பெயர் வீரட்டம்.

திருக்கோவலூர் என்பது மருவி இன்று திருக்கோயிலூர் என்று வழங்குகின்றது.

இது, அந்தகாசூரனைச் சம்ஹரித்த தலம். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று.



தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - படைகொள் கூற்றம்.
  2. அப்பர்   - செத்தையேன் சிதம்பநாயேன்.


சிறப்புகள்

மெய்பொருள் நாயனார் அவதரித்து, குறுநில மன்னராக இருந்து ஆட்சி செய்த பதி. நாயனாரின் திருவுருவச் சிலை கோயில் உள்பிரகாரத்தில் உள்ளது.
அவதாரத் தலம் : திருக்கோவலூர்.
வழிபாடு : சங்கம வழிபாட்.
முத்தித் தலம்  : திருக்கோவலூர்.
குருபூசை நாள்  : கார்த்திகை - உத்திரம்


முதல் இருவர் பாடல் பெற்றத் தலம்.


சுந்தரமூர்த்தி சுவாமிகளை வளர்த்த பெருமையை உடைய நரசிங்கமுனையரையர் அவதரித்தத் தலம். (நரசிங்க முனையரைய நாயனார் வேறு.)


திருமுறை கண்ட இராஜராஜ சோழன் அவதரித்த பதி.

ஔவையார் இத்தல விநாயகரைப் பூஜித்து, அவரது தும்பிக்கையால் கயிலை அடைந்த பதி.

சோழர் காலக் கல்வெட்டுகள் 79 உள்ளன.

அமைவிடம் :  அ/மி. வீரட்டேசுவரர் திருக்கோயில், திருக்கோயிலூர் - 605 757. விழுப்புரம் மாவட்டம். தொலைபேசி : 04153 - 224036, +91-93448 79787. மாநிலம் : தமிழ் நாடு விழுப்புரம் - திருவண்ணாமலை இரயில் பாதையில் உள்ள நிலையம். நிலையத்திலிருந்து வடக்கே 5-கி.மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. பெண்ணையாற்றுப் பாலத்தைக் கடக்கவேண்டும். திருவண்ணாமலை, பண்ணுருட்டி தலங்களிலிருந்து, ஏராளமான பேருந்து வசதி உள்ளது.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக