சனி, 25 பிப்ரவரி, 2023

சிவப்பிரகாசம் கூறும் சைவ சித்தாந்த முத்தி

 சிவப்பிரகாசம் கூறும் சைவ சித்தாந்த முத்தி



 இவ்வுலகில் வாழ்கின்ற உயிர்கள் இன்பத்திலும துன்பத்திலும் மாறிமாறி  உழன்று வருவதால் இவ்வுலக வாழ்வு குறை உடையது என்பதை எலலாச்சமயங்களும் சுட்டிக் காட்டுகின்றன. எனவே இவ்வுலக வாழ்வின் கட்டிலிருந்து விடுபட்டு நீங்கிப் பேரின்ப வாழ°வேனும் வீடுபேற்றை உயிர்கள் எய்த வேண்டும் என்னும் பொதுமைக் கொள்கையில் எல்லா சமயங்களும் ஒன்றுபடுகின்றன.

  ஒவ்வொரு சமயமும் அதன் கொள்கைகளை விளக்கி அவற்றை உள்ளவாறு உணர்தலே ஞானம் என்றும், அந்த ஞானத்தை அடைவிக்கும் செயல்களே தவம் என்றும் அத்தகைய தவத்தை மேற்கொண்டால் தான் வீடுபேறு அல்லது முத்தி அடைய முடியும் என்றும் கூறுகின்றன. அம்முத்திநிலை எத்தகைய தன்மையுடையது என்று விளக்குவதில தான் சமயங்கள் வேறுபடுகின்றன.

   இங்ஙனம் பல்வகையிலும் ேவறுபட்ட கொள்கைகளை உடைய சமயங்கள் கூறுகின்ற முத்தி நிலைகளை கூறி, அவற்றின் மேம்பட்ட சைவ சித்தாந்தத்தின் முத்தி நிலைக் கொள்கையே சிறந்தது என்று சிவப்பிரகாசம் எடுத்துக்காட்டுகிறது.

  மக்களிடத்துத் துய்க்கும் இன்பமே முத்தி என்பது உலகாயதர் கொள்கை, உருவம் முதலிய ஐந்து கந்தகங்களும் கெடுவதே முத்தி என்பது நான்கு வகை பெளத்தர்கள் கொள்கை. முக்குணங்களும் கெடுவதே முத்தி என்பது சமணரின் கொள்கை. வினைகள் கெடுவதே முத்தி என்பது பிராபகர சமத்தின் கொள்கை, ஆணவ மலம் முற்றும் அழிந்து போவதே முத்தி என்பது அகச்சமயமான பேதவாதம் கூறும். இவ்வுடல் முத்தி நிலையிலும் அழியாது நிலை பெற்றிருக்கும் என்பது சிவசமய வாதிகளின் கொள்கை, ஆன்மா என்ற ஒன்றே அழிந்து போவது முத்தியாகும் என்பது பாற்கரமியவாதத்தின் கொள்கை. உயிர் பசு கரணம் கொட்டுச் சிவ கரணம் பெறுவதே முத்தி என்பது அகச் சமயமான சிவ சங்கிராந்த வாதிகளின் கொள்கை, உயிர் ஒன்றையும் அறியாமல் கல்லைப்போல கிடக்கும் நிலையே முத்தி என்பது பாடாணவாதத்தின் கொள்கை. இவ்வாறு பத்து வகையாக சொல்லப்பட்ட முத்திகள் குற்றமுடையன.

   ஆணவம், கனமம், மாயை ஆகிய மும்மலங்களிலிருந்தும் விடுதலை பெற்று உயிர் அருளோடு கூடி, சிவ பரம்பாெருளோடு பேரின்பத்தை எய்துவே சித்தாந்தத்தின் முத்தி கொள்கையாகும். இதுவே முத்தி பற்றிய சிறந்த கொள்கையாகும்.

   மும் மலங்களோடு அவற்றின் விளைவுகளாகக் கூறபட்ட ஏனைய காரியங்களோடு பொருந்துவதனால் ஆன்மா தனக்கென ஒரு செயல் இன்றி பாசத்தினால் ஈர்க்கப்பட்டு பாச மயமாய நிற்கும். ஆன்மா மேற்கொள்ளும் இடையறாத உண்மை ஞான யோகங்களின் முன் இம் மும் பமலங்களின் குண பேதங்கள் தீ முன்னர் பஞ்சத் துய்ப் போலும்ஆகும். இந்நிலையே திரி மலம் அகலும் நிலை ஆகும். இவ்வாறு திரி மலமும் அகன்ற நிலையில் ஆன்மா அருளோடுங் கூடின இடமே முத்தியாகும். அதாவது ஆன்மாக்கள் சிவனைப் பெறுமிடத்து சிவனுடைய அருட் சத்தியினடமாகச சென்று பெற வேண்டும். இது பற்றிய திருவாசகம் சிவபுராணம் அவனருளாலே அவன்தாள் வணங்கி என்று கூறும். 

  பிறவி பிணயை தருவதாகிய வினைப் போகங்கள் அறவே அழியுமாறு அவச் செயலை போக்கும் தவச் செயல்களை மேற்கொண்டு அருட் சத்தியைவழியிடமாகக் கொண்டு சிவமாம் பேற்றை சார்ந்து சிவபோகமாகிய முத்தி பேற்றை அடைவர் இதுவே அருள்சேர் முத்தி என்பதாகும்

 ஆன்மா பாசத்தில் அழுந்திருக்கும் நிலை கட்டு நிலை, பதியில் அழுந்திருக்கும் நிலை வீட்டு நிலை அல்லது முத்தி நிலை எனப்படும். கட்டு நிலையில் பாசமே தானாய் நின்ற ஆன்மா முத்திநிலையில் பாசத்திற்கு செல்லாது பதியே தானாய்  நிற்கும். அதாவது வீட்டு நிலையில் ஆன்மா திரிமலம் ஆகிய பாசத்தினின்று அகன்று திருவருள் பெற்று, அறிபவனாகிய தன்னையும், தனது அறிவையும் அறியாது சிவம் ஒன்றே அறிந்து அதனுடன் இரண்டறக் கலந்து நிற்கும் நிலையே சித்தாந்த முத்தி நிலையாகும். இம்முத்தி நிலையே இவ்வுலகத்திற்கு மீண்டும் வாராத நிலை என்றும் இன்பத்தில் இருக்கும் நிலை எல்லாப் பேறுகளிலும் மேலான பேறு பெற்ற நிலையாகும். 

சித்தாந்த முத்தயே நன் முத்தி ஏனைய முத்தி யெல்லாம் முத்தியல்ல என்பதனை சிவஞான சித்தியாரும் கூறுகிறது. சிவனது திருவருளே திருவடியாக சொல்லப் படுமாதலால் அடிசேர் முத்தி என்று சித்தியார் கூறுகிறது. 

  நண்ணரிய சிவாந்த ஞான வடிவமாகி

  அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்திருந்தார்  என்று திருநாவுக்கரசர் சிவத்துவம் பெற்றதை சேக்கிழார் பெருமான் அருளிச் செய்வர். எனவே நம் சிவகாம தோத்திர சாஸ்திரங்கள் புராணங்கள் அனைத்தும் சைவ சித்தாந்த முத்திப்பேறே முத்தி பேறு என்பதை அறியலாம்,.

  இங்ங்னம் முப்பொருள்கான பதி, பசு பாசம் பற்றிய இருப்பையும், அவைகளின் இலக்கணங்களையும் சிவப்பிரகாசம் விரிவாக விளக்கி காட்டுகிறது. ஆன்மா அடையும் கேவல, சகல நிலைகளையும் பின் திரிமலம் அறுத்து ஞானம் பெற்று இறைவன் திருவடி அடையும் சுத்தநிலையையும் அவத்தைகள் மூலமாக எடுத்துரைக்கிறது, எனவே சைவ சித்தாந்த முத்தியே ஞான முத்தி சிவனருள் முத்தி

திருச்சிற்றம்பலம்

நன்றி உமாபதியாரின் சிவப்பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக